வியாழன், 10 ஜனவரி, 2013

மனப் பொங்கல்!

மனப் பொங்கல்! *தை முதல் நாள் தமிழர் திருநாள் தமிழர் நெஞ்சங்களில் அன்பை அறுவடை செய்யும் இனிய நாள். *கவலைகளை அறுத்து ஏமாற்றங்களை அடித்து பகைமையை துõற்றி மானுட நெல்விதையை முத்து முத்தாய் எடுப்போம். *<நம்மை இந்நாளில் புதிதாய் புதுப்பித்து நேற்றை துயரங்களை போகியில் பொசுக்கிடுவோம். *சுற்றங்கள் கூடி ஏற்றங்கள் காண சூரிய பொங்கல் வைப்போம் அதில் கனவுகள் அரிசியாய் சேர்ப்போம் ஆசைகள் பால் வார்ப்போம் நம்பிக்கைகள் எனும் வெல்லாம் கலப்போம் எல்லாம் சேர்ந்து மன பானையில் சந்தோஷமாய் பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கட்டும்! < <*வாயில்லா ஜீவனுக்கும் பொங்கல் வைப்போம் மாடுகள் பசியாற பசுமை எங்கும் காப்போம்! பசுமையோடு இத்திருநாள் நினைவுகள் மனதில் தங்க சந்தோஷமாய் பொங்கிலிடுவோமே! - தே.ச. சிவசண்முகம், திருக்கண்ணபுரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக