திங்கள், 24 மார்ச், 2014

உலகின் மகா வில்லாதி வில்லன்! - தேவராஜன்


உலகின் மகா வில்லாதி வில்லன்! - தேவராஜன் -------------------------------------------------------19-------------------------------------------------- உலகில் எத்தனையோ குற்றங்கள் நடைபெறுகின்றன. குற்றங்கள் செய்பவர்கள் குற்றவாளிகள் என்று அழைக்கப்படுகின்றனர். சட்டத்துக்கு புறம்பாக சமுதாயத்தில் செய்யப்படும் செயல்கள் குற்றங்களாக கருதப்படுகிறது. இந்தச் செயல்களைச் செய்பவர்களை குற்றவாளிகள் என்று கருதி, காவல் துறையினர் அவர்களை கைது செய்து, விசாரணை செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி, சட்டப்படி தண்டனை வாங்கி தருவது வழக்கமாக இருந்து வருகிறது. சில குற்றங்கள் நடைபெற்று, அந்தக்குற்றங்களைச் செய்தவர் யார்? எதற்காக செய்யப்பட்டது? ஏன் செய்யப்பட்டது போன்று தகவல்கள் தெரியாமலே போனதும் உண்டு. காவல் துறையினர் எத்தனையோ வழிகளில் துப்பறிந்தும், விசாரணை செய்தும், தேடியும், எந்த தடயமும் கிடைக்காமல் போனதும் உண்டு. குறிப்பாக தமிழகத்தில் சில அரசியல் பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டதற்கான காரணமோ, குற்றவாளியின் அடையாளமோ இதுவரை தெரியாமலே இருக்கிறது. இப்படி அடையாளம் தெரியாத குற்றவாளிகள் உலகில் பலர் இருக்கிறார்கள்! இந்த வரிசையில் போலீசுக்கு தண்ணி காட்டிய, எமகாதகன், மகா வில்லாதி வில்லன் ஒருவன் இருக்கிறான்! அவன் எப்படி இருப்பான் குள்ளமா? நெட்டையா? கருப்பா? சிகப்பா? அவன் என்ன மொழி பேசுவான்? எங்கே இருப்பவன்? அவன் ஏன் பல குற்றங்கள் செய்தான்? யாருக்காக செய்தான்? அவன் நோக்கம் என்ன? இப்படி பல கேள்விகளுக்கு பதில்கள் ஒன்றைக் கூட லண்டன் போலீசாரால் கண்டுபிடிக்க இயலவில்லை! கிழக்கு லண்டன் நாட்டில் ஒயிட் சேபல் வட்டத்தில் ஹை ஸ்டீட் என்ற ஒரு தெரு இருக்கிறது. 1888ம் ஆண்டுகளில்இங்கு பல குற்றங்கள் நடைபெற்றுள்ளன. பல கொலைகள் நடந்துள்ளன. இந்த குற்றங்கள், கொலைகள் செய்த மர்ம நபருக்கு ஜேக் ரிப்பர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கொலையுண்டவர்கள் 36 அதிகமான பெண்கள் (விபசாரிகள்). இந்தத் தொடர் கொலைகள் புரிந்த அந்த மர்ம நபரை பல ஆண்டுகளாக மிக தீவிர போலீஸ் துப்பு தேடியும் கண்டு பிடிக்கவில்லை. அந்த நபர் குறித்து இன்றுவரை, புத்தகம், சினிமா, தொலைகாட்சி மூலமாக யார் அவர் என பல வதந்திகள் பரவி வருகின்றன. கிழக்கு லண்டனின் ஒயிட் சேப்பல் வட்டத்தில் உள்ள ஒரு தெருவில், ஜேக் ரிப்பர் என்று கருதப்படும் மர்ம நபரால் பலியானவர் பலர். அவற்றில் சில முக்கியமானவர்களின் பட்டியல் இது: மேரி ஆன் நிகல்ஸ் வயது:43 கொலை 31-8-1888 அன்னீ சேப்மன் வயது:47 கொலை 8-9-1888 எலிசபெத் ஸ்ட்ரைட் வயது:45 கொலை 30-9-1888 காதரின் எட்டோஸ் வயது:46 கொலை 30-9-1888 மேரி ஜேன் கெல்லி வயது:25 கொலை 9-11-1888 1888ம் ஆண்டுகளில் மற்றும் 30-40 பெண் கொலை வழக்குகள் அது தொடர்பான குற்றவாளிகள் அடையாளம் காணப்படாமல் உள்ளன. மேலே சொன்ன குற்றங்கள் பல ஜேக் ரிப்பர் என்ற மர்ம நபர் செய்திருக்கலாம் என ஒரு சாரார் சொல்கிறனர். இந்த கொடூர குற்றங்கள் நடைபெற்று 126 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது விஞ்ஞான முன்னேற்றத்தால் புலனாய்வு நுட்ப முறைகள் அதிவேகமாய் வளர்ந்துவிட்டன. குற்றம் நடந்து, அந்தக் குற்றத்தை செய்தது யார் என்பது பற்றிய விசாரணை என்பது சாட்சிகளை பேச வைப்பது, சாட்சிகள் கொடுக்கும் தகவலிலிருந்து கொலையாளி ஓரளவு எப்படியிருப்பார் என படம் வரைந்து மேலும் துப்பு தேடுவது , டி.என்.ஏ. அடையாளம் காட்டுவது போன்ற துப்பறியும் நுட்பங்கள் அப்போது இருந்திருக்கவில்லை. இந்தத் தொடர் கொலைகள் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆயிரக்கணக்கான கடிதங்கள், மொட்டை கடிதங்கள் காவல்துறைத் துப்பு குழுவிற்கு வந்தன. அதில் பல கடிதங்கள் ஜேக் ரிப்பரை எப்படி பிடிப்பது என காவல்துறைக்கு ஆலோசனைகள் சொல்லியிருந்தன. ஜேக் ரிப்பர் குற்ற வழக்கை புலனாய்வு செய்த காவல்துறையினரின் குறிப்பில் 6 பேர் மேல் சந்தேகம் இருந்தது. இவர்கள் முக்கியமாக சிறிய குற்றங்களை செய்து, சிறையில் காலம் கடத்தியவர்கள். இவர்களைத் தவிர, இன்னும் 4 பேர் மேலும் ஐயமிருந்தது. பிற்காலத்து எழுத்தாளர்கள் இன்னும் 19 பேரை சந்தேகிக்கிறனர். அப்படி சந்தேகிக்கப் பட்டவர்களில் முக்கியமானர்கள் இங்கிலாந்து அரச குடும்பத்தை சார்ந்த ஆல்பெர்ட் விக்டர், விக்டோ ரியா அரசியின் மருத்துவர் டாக்டர் ஜான் வில்லியம்ஸ், ஆல்பெர்ட் விக்டரின் ஆசிரியர் ஜேம்ஸ் ஸ்டீவன். இப்படி சிலர் மீது சந்தேகம் எழுப்பியதுதான் மிச்சம். கடைசி வரை காவல் துறையால் இவர்தான் இத்தகைய குற்றத்தை செய்தார் என்று நிரூபிக்கப்படவே இல்லை! *** பாக்ஸ் செய்தி: கொலைகள் நடந்து 126 ஆண்டுகள் ஆகியும் இலக்கியத்திலும், சினிமா, தொலைகாட்சியிலும் ஜேக் ரிப்பர் பற்றி கதைகள் சுவாரசியமாக சொல்லப்படுகின்றன. மக்களும் அதை ரசிக்கின்றனர். 2006ல் நடந்த பி.பி.சி.யின். ‘எல்லோரையும் விட மோசமான பிரிட்டிஷ்காரர் யார்?’ என்ற வாக்கெடுப்பில், முதலாக வந்தவர் ஜேக் ரிப்பர் தான்! *************************************************

நாய்களின் தற்கொலை பாலம்! - தேவராஜன்


நாய்களின் தற்கொலை பாலம்! - தேவராஜன் --------..........................................................18........................................ ஸ்காட்லாந்து நாட்டின் மேற்கு டன்பர்ட்டன்ஷைர் நகரத்தில் இருக்கும் ஓவர்டவுன் எஸ்டேட்டில் ஒரு பாலம் இருக்கிறது. இது ஒரு மர்மமான பாலம்! ஓவர்டவுன் எஸ்டேட்டுக்கும், அதில் அமைந்திருக்கும் மேன்சனுக்கும், சுற்றியிருக்கும் அழகான தோட்டத்துக்கும் 100 ஆண்டு கால வரலாறு உண்டு. 1893ல் இந்த எஸ்டேட்டை வாங்கினார் லார்ட் ஓவர்டவுன் என்பவர். அந்த எஸ்டேட்டை கிழக்கு, மேற்கு என பிரித்து விரிவுபடுத்தினார். இடைப்பட்ட பகுதியில் ஓர் அருவி விழுந்து நீரோடையாக ஓடியது. பாறைகளால் நிரம்பிய அந்தப் பகுதியில் நீரோடையைக் கடக்க ஒரு பாலம் கட்டினார். கருங்கற்களாலும் கிரானைட்டாலும் உருவாக்கப்பட்ட இந்தப் பாலம் அதிக அகலமோ, நீளமோ கிடையாது. 2 அடி உயரம். தடிமனான கைப்பிடிச் சுவர். சுவரின் குறிப்பிட்ட இடைவெளிகளில் பாலத்திலிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருப்பதாக அரைவட்ட வளைவுகள். இருபக்கமும் சேர்த்து மொத்தம் எட்டு வளைவுகள். பாலத்தைக் கடந்தால் அந்தப் பக்கம் மேன்சன். ஒரு நாயின் தற்கொலை ஒரு நாய் தன் பின்னங்கால்களைத் தரையில் ஊன்றி, முன்னங்கால்களை பாலத்தின் கட்டைச் சுவர் மேலே வைத்துக்கொண்டு, கீழே ஓடும் நீரோட்டத்தை ரசிக்கும்படி பாலம் அமைந்திருந்தது. பாலத்திற்கும் தரைப்பகுதிக்கு இடைபட்ட ஆழம் 50 அடி இருக்கும். ஒரு நாள் பென் என்ற நாய் இந்த எஸ்டேட்டுக்கு வந்தது. நீண்ட மூக்கும் புசுபுசு முடியும் கொண்ட பெண் நாய் அது. அந்த ஊருக்கு வந்திருந்த டோனா தன் கணவருடனும், இரண்டு வயது மகனுடனும் செல்ல நாய் பென்னுடனும் வாக்கிங் சென்றாள். ஓவர்டவுன் பாலத்துக்கு அருகில் வந்தார்கள். அப்போது பென் துள்ளலோடு ஓடி,பாதி பாலத்தைத் தாண்டி, வலதுபுறமுள்ள கடைசி இரு வளைவுகளுக்கு இடையே,சட்டென கைப்பிடிச் சுவர் தாண்டி கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டுவிட்டது! ‘ஓ மை காட்!’ அலறோடு அவர்கள், பாலத்தின் கீழே பார்க்க, பாறைகளின் மேல் விழுந்து அலங்கோலமாகக் கிடந்தது பென். டோனாவின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல கென்னத் என்பவர் தனது செல்ல நாயுடன் வந்திருந்தார். ‘இவன்கூட இப்படித்தான். போன வருடம் ஒருநாள் அந்தப் பாலத்தின் மீதிருந்து குதித்துவிட்டான். நீங்கள் சொன்ன அதே இடத்தில்தான். நல்லவேளை மிகவும் பாதுகாப்பாக ஒரு புதர்மேல் விழுந்திருந்தான். அடி பலமில்லை. ஓரிரு நாள்கள் பயந்ததுபோலஇருந்தான். எதுவும் சாப்பிடவில்லை. பிறகு சரியாகிவிட்டான்.நாங்கள் இப்போது இவனை அழைத்துக் கொண்டு அந்தப் பாலத்தின்மீது செல்வதில்லை.’- என்று கென்னத்தும் தன் நாய் பற்றிய சம்பவத்தை சொன்னார். டோனாவுக்கு அதிர்ச்சி. ‘நிஜமாகத்தான் சொல்கிறீர்களா?’ ‘நீங்கள் மட்டுமல்ல, இந்நகரில் வசிக்கும் பலரும் தங்கள் செல்ல நாய்களை அங்கே பறிகொடுத்திருக்கிறார்கள். நாய்களோடு அங்கே செல்லவே எல்லோரும் பயப்படுகிறார்கள். அதை நாய்கள் தற்கொலை செய்துகொள்ளும் இடம் என்றுதான் அறிவித்திருக்கிறார்கள்.’- என்றார் அவர். சென்ற நூற்றாண்டிலிருந்து இன்றைய தேதி வரை நூற்றுக்கணக்கான நாய்கள், ஓவர்டவுன் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்திருக்கின்றன. 1950-லிருந்து வருடத்துக்கு குறைந்தது டஜன் நாய்களாவது இங்கே தற்கொலை செய்து கொள்கின்றன. பாலத்தில் அப்படி என்னதான் மர்மம் இருக்கிறது? சென்ற நூற்றாண்டின் மத்தியில் உலகத்தின் கவனம் இந்தப் பாலத்தின் மேல் குவிந்தது. விதவிதமான ஆராய்ச்சிகள் ஆரம்பித்தன. நாய்கள் குதிக்கும் நாள்களில் வானம் தெளிவாக இருக்கிறது. வெயில் அடிக்கிறது. இரவுகளில் நாய்கள் குதித்ததாகத் தெரியவில்லை. நீண்ட மூக்குகள் கொண்ட நாய்கள் மட்டுமே குதிக்கின்றன. ஆதி ஐரோப்பியர்களின் ஓர் இனமான செல்ட் மக்களின் நம்பிக்கைப்படி,அந்த இடத்தில்தான் உலகத்தின் சொர்க்கமும் நரகமும் சந்திக்கின்றன. ஏதோ அமானுஷ்ய சக்தி, அந்தப் பாலத்தில் இருக்கிறது. அதுவே நாய்களைத் தூண்டி விடுகிறது அல்லது மிரளச் செய்கிறது என்று ஆய்வுகள் தொடர்ந்தன. மனநல மருத்துவரான டேவிட் சான்ஸும் தனது கிழட்டு நாய் ஹென்றிக்ஸை வைத்து சோதனை செய்தார். ‘நான் அதைப் பிடிக்கவில்லை. அது சுதந்தரமாக பாலத்தின் மேல் நடந்துபோனது. வலதுபுறத்தின் அந்த இடம் வந்ததும், ஒருமாதிரி ஆகிவிட்டது. கட்டைச் சுவரின் மேல் கால்களால் பிராண்ட ஆரம்பித்துவிட்டது. வயதான காரணத்தினால் அதனால் எம்பிக் குதிக்க முடியவில்லை. அந்த இடத்தில் தான் நாய் ஏதையோ கண்டு, அல்லது கேட்டு, அல்லது ஏதோ வாசனையால் ஈர்க்கப்பட்டதால் அப்படிச் செய்துள்ளது. அது எதனால் என்று தெளிவாகக் கண்டறிய வேண்டும் என்றார். நாய்களைப் பயமுறுத்தும் விதமாக தோற்றத்தைக் கொண்ட எந்தப் பொருளும் அங்கில்லை. நாய்களை மிரளச் செய்யும் விதமான ஒலிகளும் அங்கே கேட்பதில்லை. எனவே ஏதோ வாசனைதான் காரணம் என்றார் டேவிட். இப்போது வரை ஓவர்டவுன் பாலத்தின் நாய்களின் தற்கொலை மர்மம் தொடர்கிறது. அந்த மர்மம் தெரிய வேண்டும் என்றால் நாமே நாயாக மாறி, ஓவர்டவுன் பாலத்துக்குச் சென்று குதிக்க வேண்டுமோ என்னவோ? ****************************************

சனி, 15 மார்ச், 2014

ஆதி மனிதனின் காலடி தடங்கள்... - தேவராஜன்


ஆதி மனிதனின் காலடி தடங்கள்... - தேவராஜன் ******************************************************************* குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பது டார்வின் கோட்பாடு. டார்வின் கோட்பாட்டை கேள்வி குறி ஆக்கிவிட்டது சமீபத்திய தொல்பொருள் ஆராய்ச்சி! குரங்கு இனம் இருந்ததற்கு முன்னாதாகவே மனித இனம் இருந்திருக்கிறது என்பதை மெய்ப்பிக்கும் ஆதி மனிதனின் காலடி தடங்களை இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்! எட்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் மூதாதையர்களின் காலடித் தடங்களை இங்கிலாந்தின்நார்போக்கில் உள்ள ஹப்பிஸ் பர்க் கடல் பகுதியின் கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் காலடி தடங்கள் வடக்கு ஐரோப்பிய பகுதியில் வாழ்ந்தபழங்குடிகளின் காலடித் தடம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இதுவரை ஹப்பிஸ் பர்க் கடல் பகுதியின் கரையில் விலங்குகளின் எலும்புகளும், கல் ஆயுதங்களும்தான் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. ஆனால், இப்போதுதான் முதன்முறையாக மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம்கிடைத்துள்ளது. இப்போது இருக்கும் இங்கிலாந்து பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய கண்டத்துடன் நிலப்பரப்பில் இணைந்து இருந்துள்ளது. அதன் பிறகே கடல் இடையில் புகுந்து இங்கிலாந்தை, ஐரோப்பாவில் இருந்து துண்டாக்கி விட்டது. இங்கிலாந்தில் வாழ்ந்த பூர்வகுடிகள், முகத்துவாரமாக இருந்த இந்தப் பகுதி வழியாக ஐரோப்பிய கண்டத்துக்கு குடி பெயர்ந்திருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இவர்கள் 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹோமோ ஆன்டஸர் இனத்தை சேர்ந்தவர்கள். 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த இனம் அழிந்து விட் டது” என்கிறார் பிரிட்டன் அருங்காட் சியக ஆராய்சியாளர் ஆஸ்டன். இங்கு அகழாய்வில் கிடைக்கப் பெற்ற மொத்தம் 50 காலடித் தடங்கள். 2 ஆண்கள், 2 பெண்கள், 3 அல்லது 4 குழந்தைகளின் காலடித் தடங்கள். கடல் நீர் பின்வாங்கியதால், இந்தக் காலடித் தடங்கள் வெளியே தெரிய வந்துள்ளன. இவற்றை பிரிட்டன் அருங்காட்சியக ஆய்வளர்கள் முப்பரிமாண (3டி) படங்களாக ஆவணப்படுத்தி உள்ளனர். ‘ஹோமோ அன்டஸர்’ குரங்கில் இருந்து மனிதன் உருவானபோது, வாழ்ந்த இனம் இது. ஏறக்குறைய 12 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த ஆதி மனிதர்களின் உயரம் 5.5 அடி முதல் 6 அடி வரை. எடை 90 கிலோ வரை. இவர்களின் மூளைதான் சற்று சிறியதாக இருந்திருக்கிறது. நமக்கு சராசரியாக 1,350 கியூபிக் செ.மீ. ஆனால் ஹோமோ அன்டஸர் மக்களுக்கு 1000 முதல் 1150 கியூபிக் செ.மீ. வரைதான் இருந்திருக்கிறது. நம்மை போலவே வலதுகை பழக்கம் கொண்டிருந்திருக்கிறார்கள். இதுதான் மனிதக் குரங்கில் இருந்து இவர்களை வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறது. சைகை மொழியை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஐரோப்பாவில் 6 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹோமோ ஹெய்டல் பெர்ஜென்சிஸ் இனத்தவரும் இவர்களும் ஒன்றுதான் என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். நதிக்கரையோரம் காட்டுப் பகுதிகளில் விலங்கோடு விலங்காக ஹோமோ அன்டஸர் இனம் வாழ்ந்திருக்கிறது. குதிரை, யானை, மான், காட்டெருமை, நீர்யானை, காண்டா மிருகம், எலி மற்றும் சில வித்தியாசமான விலங்குகளுடன் வாழ்ந்திருக்கிறான் ஆதி மனிதன். அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ள ஆதாரங்கள் மூலம் இது தெரிய வந்துள்ளது. மம்மத் எனப்படும் மெகாசைஸ் யானைகள், குதிரைகளின் எலும்புகள் இங்கு கிடைத்துள்ளன. கல் ஆயுதங்கள் மற்றும் கூர்மையான மரக் குச்சிகள் மூலம் விலங்குகளை வேட்டையாடி பசியை போக்கி வாழ்ந்திருக்கிறார்கள். மரம், செடி, கொடிகளின் மிச்சங்கள், கிழங்குகள், காய், கனிகள் போன்ற தாவர உணவுப் பழக்கம் இருந்ததை காட்டுகிறது. லிவர்பூல் ஜான்மூர் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் காலடித் தடம் சென்ற வழியை பார்க்கும்போது, அவர்கள் ஐரோப்பிய கண்டத்தை நோக்கி சென்றிருக்கலாம் என்கிறார் அவர். அகழ்வு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளைப் பார்த்தால், ‘கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி’ என்று தமிழில் சொல்லப்படும் ஒரு சொல் வழக்கு உண்மையாக இருக்குமோ? * பாக்ஸ் செய்தி *தன்ஸானியாவின் லாட்டோலி என்ற இடத்தில் கிடைத்த காலடித் தடங்கள் 35 இலட்சம் ஆண்டுகள் பழமையானவை. *கென்யாவில் கூபி போராவில் கிடைத்தவை 15 லட்சம் ஆண்டு பழமையானவை. களிமண் பூமியாக இருந்து பாறையாக மாறிய பகுதி இது. இதனால் மனித காலடித் தடங்கள் தெளிவாக உள்ளன. *மெக்ஸிகோவின் வடகிழக்கு பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த காலடிகள், 10,500 ஆண்டுகள் பழமையானவை. ஆனால் ஆபிரிக்காவுக்கு வெளியே, கண்டறியப்பட்ட காலடித் தடங்களில் இங்கிலாந்தில் இப்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த தடங்கள்தான் மிகவும் பழமையானவை. ******************** ***********************

ANGAMPAKKAM -SRI AMBALAVAANESWARAR TEMPLE - DEVARAJAN SHANMUGAM (அங்கம்பாக்கம் அம்பலவாணச்சுவரர் கோயில்)


அங்கம்பாக்கம் அம்பலவாணச்சுவரர் கோயில் - தேவராஜன் சண்முகம். *********************************************************************************************** அங்கம் பாக்கம் அழகிய கிராமம். அமைதியான ஊர். பாலாற்றங்கரையில் அமைந்திருக்கும் இந்த ஊருக்கு எப்போதும் குளிர் காற்றை இலவசமாக தந்து கொண்டிருக்கிறது பாலாறு. முதன் முதலாக இந்த ஊருக்கு 2010ம் ஆண்டில் ஓர் நாள் வந்தேன். அதுவும் எனக்கு பொண்ணு பார்க்க. பொண்ணு வீட்டுக்கு வருவதற்கு முன்னதாகவே எனக்கு காட்சி கொடுத்தது இந்த ஈஸ்வரன் கோயில் கோபுரம் தான்! மூலவரை பார்க்காமலேயே மானசீகமாக வழிபாடு செய்து கொண்டேன்! ஏனோ பார்த்த மாத்திரத்திலேயே இந்தக்கோயில் எனக்கு பிடித்து விட்டது. கோயிலுக்கு முன்பாக உள்ள குறுக்குத் தெருவில் வசிக்கும் ஏ.எஸ். வெங்கடேச முதலியார் பெண்ணை தான் பார்க்க போகிறேன். பெண் பார்க்கும் படலம், திருமணம் என நடந்த சம்பவங்களை விவரித்தால் கட்டுரை நீண்டுவிடும் அல்லது அலுப்பு தட்டிவிடலாம்! அதலால் கோயில் பற்றி தெரிந்து கொள்ளலாமா? கோயிலின் முகப்பில் இருக்கும் நாகலிங்க மரம் பாலாற்று காற்றுக்கு ‘சிவ சிவ’ என்று தலையாட்டியபடியே இருந்தது. நாகலிங்க பூ வாசம் நம்மை பின் தொடர்ந்து அதுவும் அம்பலவாணரைத் தரிசிக்க நம் கைப்பிடித்து வருவது போல இருந்தது. மொட்டை கோபுரம். பெரிய கனமான மரக்கதவு. இதைக்கடந்தால் பலிபீடம். பக்கத்தில் பெரிய கம்பீரமான கொடி மரம். அதை அடுத்து நந்தி. நந்தி முன்பாக சிறிய கல் மண்டபம். வலபக்கம் சித்தி விநாயகர். இடது பக்கம் சித்தி முருகன் நமக்கு முதலில் அருள் பாலிக்கிறார்கள். கல் மண்டபம் கடந்தால் நேரே அம்பலவாணர் சந்நிதி. கம்பீரமான துவார பாலகர்கள். வலது பக்கம் அம்பாள் சந்நிதி.அம்பாள் திருநாமம் ஸ்ரீ சிவகாமி. மூலவர் இருக்கும் சந்நிதியில் நடராஜர், சமயகுரவர்கள் மற்றும் சில தெய்வச் சிலைகள் பாதுகாப்பாக இருக்கின்றன. உள் பிரகாரம். கோஷ்டா தெய்வங்களாக விநாயகர், தெட்சிணாமூர்த்தி இருக்கிறார்கள். காசி விஸ்வநாதர்,வள்ளி தேவசேனா சமேத முருகன், திருமால், துர்க்கை, சண்டீகேஸ்வரர், சூரியன்,நவகிரகம் மற்றும் நால்வர் சன்னதிகள் உள்ளன. இந்த ஸ்தலம் உத்திர சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலம் வாலாஜாபாத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இரண்டு பிரகாரத்துடன் கூடிய இந்த ஆலயத்தில் ஸ்ரீ அம்பலவாநீச்வரர் சதுர வடிவ ஆவுடையாரில் சிறிய பாணமாக காட்சி அளிக்கிறார். தல விருட்சம் வன்னி, நாகலிங்கம். தலவரலாறு ஒரு அந்தணன் தன் தந்தையின் அஸ்தியை காசியில் கரைக்க வேண்டி, யாத்திரை மேற்கொண்டபோது இத்தலத்தில் தங்கி வழிபட்டபின் அஸ்தி கலசத்தை பார்க்கும்போது எல்லாம் மணம் வீசும் மல்லிகை பூக்களாக மலர்ந்தன. இறைவன் அருளால் அங்கம் பூவாக மாறியதால் இத்தலம் அங்கம்பாக்கம் என்ற பெயர் பெற்றது. தல சிறப்பு இத்தலத்தில் மூதாதயார்க்கு செய்யப்படும் தர்ப்பணம், திதி காசியில் செய்வதற்கு சமானமாக கருதப்படுகிறது. சிதம்பரம் போன்று இங்குள்ள ஸ்ரீ நடராஜர் மிகவும் விசேஷம். வருடத்தில் நடராஜருக்கு 6 அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. சிவாலயத்தில் நடக்கும் எல்லா உற்சவங்களும் நடைபெறுகின்றன. ************** தொடர்புக்கு: கிருபாசேகரன்- 9976592940 சந்திராமணி தேவராஜன்- 8883727365 ***************************** ஆலயத்தை செல்லும் வழி: காஞ்சிபுரம்-&அங்கம்பாக்கம் (69ஏ) பேருந்து காலை மற்றும் மாலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்துச் செல்கிறது. வாலாஜாபாத்திலிருந்து ஆட்டோ வசதி உள்ளது. கட்டணம் ரூ.150 **************************

ANGAMPAKKAM -SRI ABALAVANESWARAR TEMPLE - DEVARAJAN SHANMUGAM


அங்கம்பாக்கம் அம்பலவாணச்சுவரர் கோயில் - தேவராஜன் சண்முகம். அங்கம் பாக்கம் அழகிய கிராமம். அமைதியான ஊர். பாலாற்றங்கரையில் அமைந்திருக்கும் இந்த ஊருக்கு எப்போதும் குளிர் காற்றை இலவசமாக தந்து கொண்டிருக்கிறது பாலாறு. முதன் முதலாக இந்த ஊருக்கு 2010ம் ஆண்டில் ஓர் நாள் வந்தேன். அதுவும் எனக்கு பொண்ணு பார்க்க. பொண்ணு வீட்டுக்கு வருவதற்கு முன்னதாகவே எனக்கு காட்சி கொடுத்தது இந்த ஈஸ்வரன் கோயில் கோபுரம் தான்! மூலவரை பார்க்காமலேயே மானசீகமாக வழிபாடு செய்து கொண்டேன்! ஏனோ பார்த்த மாத்திரத்திலேயே இந்தக்கோயில் எனக்கு பிடித்து விட்டது. கோயிலுக்கு முன்பாக உள்ள குறுக்குத் தெருவில் வசிக்கும் ஏ.எஸ். வெங்கடேச முதலியார் பெண்ணை தான் பார்க்க போகிறேன். பெண் பார்க்கும் படலம், திருமணம் என நடந்த சம்பவங்களை விவரித்தால் கட்டுரை நீண்டுவிடும் அல்லது அலுப்பு தட்டிவிடலாம்! அதலால் கோயில் பற்றி தெரிந்து கொள்ளலாமா? கோயிலின் முகப்பில் இருக்கும் நாகலிங்க மரம் பாலாற்று காற்றுக்கு ‘சிவ சிவ’ என்று தலையாட்டியபடியே இருந்தது. நாகலிங்க பூ வாசம் நம்மை பின் தொடர்ந்து அதுவும் அம்பலவாணரைத் தரிசிக்க நம் கைப்பிடித்து வருவது போல இருந்தது. மொட்டை கோபுரம். பெரிய கனமான மரக்கதவு. இதைக்கடந்தால் பலிபீடம். பக்கத்தில் பெரிய கம்பீரமான கொடி மரம். அதை அடுத்து நந்தி. நந்தி முன்பாக சிறிய கல் மண்டபம். வலபக்கம் சித்தி விநாயகர். இடது பக்கம் சித்தி முருகன் நமக்கு முதலில் அருள் பாலிக்கிறார்கள். கல் மண்டபம் கடந்தால் நேரே அம்பலவாணர் சந்நிதி. கம்பீரமான துவார பாலகர்கள். வலது பக்கம் அம்பாள் சந்நிதி.அம்பாள் திருநாமம் ஸ்ரீ சிவகாமி. மூலவர் இருக்கும் சந்நிதியில் நடராஜர், சமயகுரவர்கள் மற்றும் சில தெய்வச் சிலைகள் பாதுகாப்பாக இருக்கின்றன. உள் பிரகாரம். கோஷ்டா தெய்வங்களாக விநாயகர், தெட்சிணாமூர்த்தி இருக்கிறார்கள். காசி விஸ்வநாதர்,வள்ளி தேவசேனா சமேத முருகன், திருமால், துர்க்கை, சண்டீகேஸ்வரர், சூரியன்,நவகிரகம் மற்றும் நால்வர் சன்னதிகள் உள்ளன. இந்த ஸ்தலம் உத்திர சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலம் வாலாஜாபாத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இரண்டு பிரகாரத்துடன் கூடிய இந்த ஆலயத்தில் ஸ்ரீ அம்பலவாநீச்வரர் சதுர வடிவ ஆவுடையாரில் சிறிய பாணமாக காட்சி அளிக்கிறார். தல விருட்சம் வன்னி, நாகலிங்கம். தலவரலாறு ஒரு அந்தணன் தன் தந்தையின் அஸ்தியை காசியில் கரைக்க வேண்டி, யாத்திரை மேற்கொண்டபோது இத்தலத்தில் தங்கி வழிபட்டபின் அஸ்தி கலசத்தை பார்க்கும்போது எல்லாம் மணம் வீசும் மல்லிகை பூக்களாக மலர்ந்தன. இறைவன் அருளால் அங்கம் பூவாக மாறியதால் இத்தலம் அங்கம்பாக்கம் என்ற பெயர் பெற்றது. தல சிறப்பு இத்தலத்தில் மூதாதயார்க்கு செய்யப்படும் தர்ப்பணம், திதி காசியில் செய்வதற்கு சமானமாக கருதப்படுகிறது. சிதம்பரம் போன்று இங்குள்ள ஸ்ரீ நடராஜர் மிகவும் விசேஷம். வருடத்தில் நடராஜருக்கு 6 அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. சிவாலயத்தில் நடக்கும் எல்லா உற்சவங்களும் நடைபெறுகின்றன. தொடர்புக்கு: கிருபாசேகரன்- 9976592940 சந்திராமணி தேவராஜன்- 8883727365 ஆலயத்தை செல்லும் வழி: காஞ்சிபுரம்-&அங்கம்பாக்கம் (69ஏ) பேருந்து காலை மற்றும் மாலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்துச் செல்கிறது. வாலாஜாபாத்திலிருந்து ஆட்டோ வசதி உள்ளது. கட்டணம் ரூ.150 **************************

அங்கம்பாக்கம் அம்பலவாணச்சுவரர் கோயில்


அங்கம்பாக்கம் அம்பலவாணச்சுவரர் கோயில் - தேவராஜன் சண்முகம். அங்கம் பாக்கம் அழகிய கிராமம். அமைதியான ஊர். பாலாற்றங்கரையில் அமைந்திருக்கும் இந்த ஊருக்கு எப்போதும் குளிர் காற்றை இலவசமாக தந்து கொண்டிருக்கிறது பாலாறு. முதன் முதலாக இந்த ஊருக்கு 2010ம் ஆண்டில் ஓர் நாள் வந்தேன். அதுவும் எனக்கு பொண்ணு பார்க்க. பொண்ணு வீட்டுக்கு வருவதற்கு முன்னதாகவே எனக்கு காட்சி கொடுத்தது இந்த ஈஸ்வரன் கோயில் கோபுரம் தான்! மூலவரை பார்க்காமலேயே மானசீகமாக வழிபாடு செய்து கொண்டேன்! ஏனோ பார்த்த மாத்திரத்திலேயே இந்தக்கோயில் எனக்கு பிடித்து விட்டது. கோயிலுக்கு முன்பாக உள்ள குறுக்குத் தெருவில் வசிக்கும் ஏ.எஸ். வெங்கடேச முதலியார் பெண்ணை தான் பார்க்க போகிறேன். பெண் பார்க்கும் படலம், திருமணம் என நடந்த சம்பவங்களை விவரித்தால் கட்டுரை நீண்டுவிடும் அல்லது அலுப்பு தட்டிவிடலாம்! அதலால் கோயில் பற்றி தெரிந்து கொள்ளலாமா? கோயிலின் முகப்பில் இருக்கும் நாகலிங்க மரம் பாலாற்று காற்றுக்கு ‘சிவ சிவ’ என்று தலையாட்டியபடியே இருந்தது. நாகலிங்க பூ வாசம் நம்மை பின் தொடர்ந்து அதுவும் அம்பலவாணரைத் தரிசிக்க நம் கைப்பிடித்து வருவது போல இருந்தது. மொட்டை கோபுரம். பெரிய கனமான மரக்கதவு. இதைக்கடந்தால் பலிபீடம். பக்கத்தில் பெரிய கம்பீரமான கொடி மரம். அதை அடுத்து நந்தி. நந்தி முன்பாக சிறிய கல் மண்டபம். வலபக்கம் சித்தி விநாயகர். இடது பக்கம் சித்தி முருகன் நமக்கு முதலில் அருள் பாலிக்கிறார்கள். கல் மண்டபம் கடந்தால் நேரே அம்பலவாணர் சந்நிதி. கம்பீரமான துவார பாலகர்கள். வலது பக்கம் அம்பாள் சந்நிதி.அம்பாள் திருநாமம் ஸ்ரீ சிவகாமி. மூலவர் இருக்கும் சந்நிதியில் நடராஜர், சமயகுரவர்கள் மற்றும் சில தெய்வச் சிலைகள் பாதுகாப்பாக இருக்கின்றன. உள் பிரகாரம். கோஷ்டா தெய்வங்களாக விநாயகர், தெட்சிணாமூர்த்தி இருக்கிறார்கள். காசி விஸ்வநாதர்,வள்ளி தேவசேனா சமேத முருகன், திருமால், துர்க்கை, சண்டீகேஸ்வரர், சூரியன்,நவகிரகம் மற்றும் நால்வர் சன்னதிகள் உள்ளன. இந்த ஸ்தலம் உத்திர சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலம் வாலாஜாபாத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இரண்டு பிரகாரத்துடன் கூடிய இந்த ஆலயத்தில் ஸ்ரீ அம்பலவாநீச்வரர் சதுர வடிவ ஆவுடையாரில் சிறிய பாணமாக காட்சி அளிக்கிறார். தல விருட்சம் வன்னி, நாகலிங்கம். தலவரலாறு ஒரு அந்தணன் தன் தந்தையின் அஸ்தியை காசியில் கரைக்க வேண்டி, யாத்திரை மேற்கொண்டபோது இத்தலத்தில் தங்கி வழிபட்டபின் அஸ்தி கலசத்தை பார்க்கும்போது எல்லாம் மணம் வீசும் மல்லிகை பூக்களாக மலர்ந்தன. இறைவன் அருளால் அங்கம் பூவாக மாறியதால் இத்தலம் அங்கம்பாக்கம் என்ற பெயர் பெற்றது. தல சிறப்பு இத்தலத்தில் மூதாதயார்க்கு செய்யப்படும் தர்ப்பணம், திதி காசியில் செய்வதற்கு சமானமாக கருதப்படுகிறது. சிதம்பரம் போன்று இங்குள்ள ஸ்ரீ நடராஜர் மிகவும் விசேஷம். வருடத்தில் நடராஜருக்கு 6 அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. சிவாலயத்தில் நடக்கும் எல்லா உற்சவங்களும் நடைபெறுகின்றன. தொடர்புக்கு: கிருபாசேகரன்- 9976592940 சந்திராமணி தேவராஜன்- 8883727365 ஆலயத்தை செல்லும் வழி: காஞ்சிபுரம்-&அங்கம்பாக்கம் (69ஏ) பேருந்து காலை மற்றும் மாலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்துச் செல்கிறது. வாலாஜாபாத்திலிருந்து ஆட்டோ வசதி உள்ளது. கட்டணம் ரூ.150 **************************

வெள்ளி, 7 மார்ச், 2014

நூறு ஆண்டுகள் சூரியன் பார்க்காத நகரம்! - தேவராஜன்


நூறு ஆண்டுகள் சூரியன் பார்க்காத நகரம்! - தேவராஜன் -------------------------------------------------16------------------------------------------- ************************************************************************************ இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு எத்தனையோ கிராமங்கள் மின்சார வசதியில்லாமல் இருந்தது உண்டு. இப்போதும் சில மலைக்கிராமங்களில் குக்கிராமங்களில் மின்வசதியோ சாலை வசதியோ இருப்பதில்லை. இது ஜனநாயக சாபம்! ஒரு நகரம் முழுதும் சூரிய வெளிச்சமே படாமல் இருக்குமா? அதுவும் நூறாண்டுகளாக? கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? கடந்த நூறாண்டுகளாக சூரிய ஒளியைக்காணாத நகரத்தில் வசிக்கும் மக்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள்? வியப்பாக இருக்கிறதல்லவா? ஐரோப்பிய நாடான நார்வே, கனிமம் மற்றும் பெட்ரோல் வளமிக்க நாடாகும். இங்கு மழை பொழிவும் அதிகம். இந்த நார்வே நாட்டின் தென்பகுதியில் அடர்ந்த மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்குகள் நிறைய இருக்கின்றன. அப்படி ஒரு பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ளது மிக அழகான, பசுமையான, அமைதியான எழில் மிகும் கிராமம் ஒன்று இருக்கிறது. அந்தக் கிராமத்தின் பெயர் ரூஜூக்கான். இந்தப் பள்ளத்தாக்கு கிராமத்தில் சொல்லும்படி பெரிய வசதிகள் ஏதுமில்லைதான்! இந்தக் கிராமத்தில் உள்ள நீராதாரத்தை அடிப்படையாக கொண்டு ஓர் உரத் தொழிற்சாலையும் ரெயில் பாதையும் மட்டும் உண்டு. இந்த உரத்தொழிற்சாலையை நம்பியும் இப்பகுதியில் வளமான மண் வளம் உள்ளதால் விவசாயம் செய்து பிழைத்து கொள்ளலாம் என நம்பி 1900ம் ஆண்டு வாக்கில் கிட்டதட்ட 300 பேர் இங்கு வந்து குடியேறினார். இப்போது கிட்டதட்ட 3500 அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். இந்த கிராமம் ஆண்டில் 6 மாதங்கள் (மழை மற்றும் குளிர் காலம்) சூரியனோ சூரிய ஒளியோ துளிக்கூட படமாமல் இருக்கும். காரணம் இந்த கிராமத்திதைச் சுற்றிலும் உள்ள மலை முகடுகள் தடைக்கற்களாக இருந்து, சூரிய ஒளிக்கதிர்களை நுழையவிடமால் தடுத்துவிடும். இங்குள்ள மக்களின் உடலில் சூரியனின் கதிர்கள் விழ வேண்டும் என்றால் பல மைல்களுக்கு அப்பால் மலையை கடந்து செல்ல வேண்டும். இப்படித்தான் சூரிய வெளிச்சத்தை பார்க்க இயலாமல் இந்தக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் நூறாண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்தக்கிராம மக்களின் சோகத்தை,கவலை போக்க ஒருவர் வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் பாரிசில் இருந்த இங்கு வந்த அவர் பெயர் மார்ட்டின் ஆண்டர்சன். அவர் இந்த கிராமத்தை கவ்வியிருந்த இருளை போக்க ஒரு வழியை கண்டுபிடிக்க தீவிரமாக முயன்றார். அதற்கு இப்போதுள்ள தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாமா என்று யோசித்தார். இந்நகரத்திற்கு சூரிய ஒளியை கொண்டு வருவது குறித்து பலவாறாகதிட்டமிடப்பட்டு வந்தநிலையில் தற்போது சரியான ஒரு தீர்வு கண்டறியப்பட்டுள்ளது. சூரிய காந்தி பூவைப் போல் சூரியன் போகும் திசையில் எல்லாம் அதை பின்தொடர்ந்து செல்லும் தொழில்நுட்பத்துடன் கூடிய கம்ப்யூட்டர்களின் உதவியுடன் இயங்கும் ராட்சத நிலைக் கண்ணாடிகளை மலைகளின் வடக்கு பகுதி உச்சியில் அமைக்க தீர்மானித்தார் மார்ட்டின் ஆண்டர்சன். அதன் படி, அருகில் உள்ள மலையில் 450 மீட்டர் உயரத்தில் மூன்று பெரிய கண்ணாடிகளைப் பொருத்தியுள்ளனர். அக்கண்ணாடிகளில் படும் சூரியவெளிச்சம் எதிரொளிப்பதன் மூலம் நகரின் மத்தியப்பகுதியில் சூரிய வெளிச்சம்படுகின்றது. 8 .5 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்ட இந்த நிலைக்கண்ணாடிகள் மூலமாக இந்த கிராமத்தின் மையப் பகுதியான சுமார் 600 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட மார்க்கெட் பகுதி ஆண்டின் 365 நாட்களிலும் சூரிய ஒளியால் பிரகாசிக்கிறது. கிட்டதட்ட நூறு ஆண்டுகள்சூரிய ஒளியே படாமல் கடந்து விட்ட நார்வேயின் ருஜூகான் நகரம், தற்போது கண்ணாடியை கொண்டு சூரிய வெளிச்சத்தைப்பெற இருக்கிறது. பாக்ஸ் செய்தி *கடந்த 1907ம் ஆண்டு நோர்ஸ்க் ஹைட்ரோ என்ற தொழில் நிறுவனத்தின் இணை இயக்குனரான சாம் அய்டு என்பவரால் ருஜூகான் நகரம் உருவானது. *இந்நகரம் குறுக்கலானபள்ளதாக்கில் அமைந்துள்ளதால், இங்கு சூரிய வெளிச்சம்இயற்கையாக விழுவதற்குவாய்ப்பே இல்லை. ஆகவே, இங்குள்ளமக்கள் குளிர்காலத்தில்கேபிள் கார் மூலம் அருகில் உள்ள மலை உச்சிக்கு சென்றுசூரிய வெளிச்சத்தை அனுபவித்துத் திரும்புவதை வாடிக்கையாகக்கொண்டிருந்தனர். *ரூஜூகான்போஷன் எனும் அழகிய பெரிய நீர்வீழ்ச்சி இந்த மலை நகரத்தில் இருக்கிறது. இது 104 மீட்டர் நீளமான நீர்வீழ்ச்சி. இங்கு இந்த நீர்வீழ்ச்சி மூலமாக மின்சாரம் அதிக அளவில் உருவாக்கப்படுகிறது.

சனி, 1 மார்ச், 2014

கிருஷ்ணன் உருவாக்கிய அழகிய நகரம்! - தேவராஜன்


கிருஷ்ணன் உருவாக்கிய அழகிய நகரம்! - தேவராஜன் *********************************************************************************** துவாரகை அல்லது துவாரகா இந்தியாவின் குஜராத்து மாநிலத்தின் தேவபூமி துவாரகை மாவட்டத்தில் உள்ள ஒரு நகராகும். துவாரகை இந்திய நாட்டின் ஏழு மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகும். யதுகுல அரசர்கள் ஆண்ட ஆனர்த்தா நாட்டின் தலைநகராக விளங்கிய துவாரகையை, ஸ்ரீகிருஷ்ணர் புதிதாக அமைத்ததாக நம்பப்படுகின்றது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆட்சி செய்தார் என்று சொல்லப்படுகின்ற துவாரகை நகரம் சுமார் 12000 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்நகரம் ஆழிப் பேரலை அழிக்கப்பட்டு, ஒருசிலபகுதிகள் கடலுக்குள் மூழ்கி கிடந்திருக்கிறது. இந்திய தேசிய கடல் நீர் ஆராய்ச்சி கழகம் மிக நீண்ட காலமாக மேற்கொண்டு வந்த ஆய்வில் இந்நகரம் கடலுக்கு அடியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. நகரின் அமைப்பு துவாரகை நகரின் நிர்மாணம் மிகவும் வியப்புக்கு உரியதாகும். இந்த நகரம் அமைக்க கடலரசனை வேண்டிக் கொண்டு நிலம் பெறப் பட்டதாய் ஐதீகம். சௌராஷ்டிர மேற்குக் கடலில் இருந்து, கடல் விலகிச் சென்ற நிலத்தைப் பெற்றுக் கொண்டு, நகரம் ஒரு அற்புதமான திட்டமிடலுடம் கட்டப் பட்டது. இங்கு ஓடும் முக்கிய புண்ணிய நதி கோமதி ஆகும். இந்த நகரம் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறையப் பெற்றிருந்தது. நீர்வளம் கொண்ட பகுதிகளில் குடி இருப்புகள், வியாபாரத் தலங்கள் இருந்தன. நகரில் அகன்ற சாலைகள், பொதுமக்களின் பயன்பாட்டுக்கான, சாலைகள், பொது நிகழ்ச்சிகள் நடக்கும் பொது அரங்கங்கள் எல்லாம் இருந்தன. மேலும் கடற்கரையில் பெரிய துறைமுகம் ஒன்றும் அங்கே இருந்துள்ளதாய் அகழ்வாராய்ச்சியாளர் எஸ்.ஆர்.ராவ் தெரிவிக்கின்றார். இந்த நகரின் சுவர் கல் 3600 ஆண்டுகள் பழமையானதாக இருக்கின்றன. கடலில் மூழ்கிய இந்நகரம் வடக்கு நோக்கி விரிவடைந்திருக்கிறது.இப்படி விரிவாக்கமான பகுதி ‘பெட் துவாரகை’ என்றழைக்கப்படுகிறது.இந்த தீவுப்பகுதி கிருஷ்ணர் மற்றும் அவர் மனைவியரான சத்யபாமா மற்றும் ஜாம்பவதிக்கான பொழுதுபோக்கு தலமாகவும் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது. மஹாபாரத யுத்தம் நடந்து முப்பத்தாறு ஆண்டுகளுக்குப் பின்னர் துவாரகையைக் கடல் கொண்டது. ஸ்ரீவாசுதேவ கிருஷ்ணனின் வேண்டுகோளுக்கிணங்கி விலகிச் சென்று நிலத்தை அளித்த கடலரசன், துர்வாசரின் சாபத்தால் மீண்டும் அந்த நிலத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டான். இதை முன் கூட்டியே அறிந்த ஸ்ரீகிருஷ்ண வாசுதேவன், யாதவர்களைக் காக்க எண்ணி ப்ரபாஸ க்ஷேத்திரத்துக்கு (சோம்நாத்) அழைத்துச் செல்ல நினைத்தான். விதியை வெல்ல முடியாத யாதவர்கள் தங்களுக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டு அடியோடு அழிந்து போக, ஸ்ரீகிருஷ்ணனும், வேடன் ஒருவனின் அம்பால், குதிகாலில் அடிபட்டுத் தன்னுயிரை இழந்தார். விராவல் என்னும் ஊரில் அடிபட்ட கிருஷ்ணனை, அர்ஜுனனும், பலராமனும், மெல்ல, மெல்ல சோம்நாத்துக்குக் கொண்டு வந்ததாகவும், அங்கே பலராமன் தன் சுய உருவை அடைந்து ஆதிசேஷனாய் பாதாளம் வழியே வைகுந்தம் சென்றதாகவும், ஸ்ரீகிருஷ்ணர் அங்கேயே அப்படியே ஆழ்ந்த மயக்கத்தில் ஆழ்ந்து தன் இன்னுயிரைத் தானே போக்கிக் கொண்டதாகவும், அர்ஜுனன் கலங்கிப் போய்த் திரும்பியதாகவும் சொல்கின்றனர். துவாரகை அழிந்த காட்சி துவாரகை எப்படி அழிந்தது என்பதை மஹாபாரதம் அர்ஜுனன் மூலம் வர்ணிக்கிறது. அந்தக்காட்சி: ‘அன்று வரையிலும் ஸ்ரீவாசுதேவ கிருஷ்ணனுக்குப் பணிந்து அடங்கி, ஒடுங்கி இருந்த கடலரசன், தன் அலைக்கரங்களால், அந்தப் பூமியைத் தொட்டுத் தொட்டுச் சென்று கொண்டிருந்தான். ஊறு ஏதும் விளைவிக்காமல் இருந்த கடலரசன், திடீரென வேகம் கொண்டு, பெரும் ஆவேசத்துடனேயே, துவாரகை நகருக்குள்ளே புகுந்தான். அவன் வேகம் தாங்க மாட்டாமல் அந்த அழகிய நகரின் மூலை, முடுக்குகள் எல்லாம் கடல் நீரால் நிறைந்தது. அர்ஜுனன் பார்த்துக் கொண்டு இருந்த போதே, மாட, மாளிகைகள் அனைத்தும் நீரில் மூழ்கின. ஸ்ரீகிருஷ்ணரின் அழகிய மாளிகை நீருக்குள் மூழ்கிப் போய், விரைவில் கண்மூடித் திறக்கும் முன்னர் துவாரகை என்பது ஓர் அழகிய முன் ஜன்மத்துக் கனவாகிப் போனது.’- என்று விவரிக்கிறது இக்காட்சியை. ************** பாக்ஸ் செய்தி இந்திய தேசிய கடல் ஆராய்ச்சிக் கழகம் 1983 முதல் 1990 வரை 18 ஆராய்ச்சிகளை மேற்கொண்டது.ஆராய்ச்சிக்குழுவின் தலைவரான எஸ்.ஆர்.ராவ் தனது ஆராய்ச்சி முடிவுகளை ஒருபுத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். * ஹைதராபாத்தில் உள்ள பிர்லா ம்யூசியத்தில் கடல் அகழ்வாராய்ச்சியினர் மேற்கொண்ட தேடுதலில் கிடைத்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்து ஒரு மாதிரி துவாரகை நகரை உருவாக்கி அங்கே காட்சிப் பொருளாக வைத்திருக்கின்றனர். ஸ்ரீகிருஷ்ணரின் காலத்தில் துவாரகை நகர் இப்படித் தான் இருந்திருக்கும் என அதன் மூலம் அனுமானிக்கின்றனர். ********************