வியாழன், 20 ஜனவரி, 2011

நாடு மாறியும் மரபு மாறலே!

என் படைப்புகளின் தொகுப்பு2



நாடு மாறியும் மரபு மாறலே!
தென்னாப்பிரிக்கத்தமிழர் மோர்கன் ஏகாம்பரம்
( 26.12.2010 தினமலர் வாரமலரில் பிரசுரமாகிய என் கட்டுரை)
மரத்தின் கிளைகள் வானளாவிப் பரந்து விரிந்தாலும், அதன் வேர்கள் இருப்பது தரையில்தான். வேரை மறப்பதில்லை கிளைகள்... வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் அப்படியே! தலைமுறைகள் கடந்த பிறகும் அவர்களுக்கு தாய்த்தமிழகத்தின் மீது பாசமும் மதிப்பும் இம்மியளவும் குறைந்துவிடவில்லை!
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், ஏன் வாய்ப்புகளை உருவாக்கியபடி கூட, அவ்வப்போது தமிழகத்திற்கு வந்து சென்று பரவசப்படும் வெளிநாடுவாழ் தமிழர்கள் அநேகர். அவர்களில் ஒருவர்தான் தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் மோர்கன் ஏகாம்பரம். சமீபத்தில் தமிழகம் வந்த அவரைச் சந்தித்தபோது, ஆர்வத்துடன் பல கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்.
இதோ அவரது பேட்டி...

* உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

என் பெயர் மோர்கன் ஏகாம்பரம். வயது 53. நான்காம் தலைமுறையைச் சேர்ந்த தென்னாப்பிரிக்கத் தமிழர் குடும்பத்தைச் சேர்ந்தவன். என் குடும்பம் பெரியது. நான்கு சகோதரர்கள், 2 சகோதரிகள்.
டர்பனில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக இருந்து வருகிறேன். 20 ஆண்டுகளாக சைவ சித்தாந்த சங்கத்தின் சர்ச்வேர்ட் கிளையின் தலைவராகப் பொறுப்பு வகித்துவருகிறேன். நான் சமய ஈடுபாட்டில் கவனம் செலுத்தி வந்ததால் திருமணம் செய்துகொள்ளவில்லை.

* தமிழகத்திற்கு அடிக்கடி வந்து செல்கிறீர்களா?

ஆண்டுதோறும் திருவண்ணாமலை மகா கார்த்திகை தீபம் தரிசிக்க இங்கு வந்துசெல்கிறேன். இதுபோல ஒரு ஆன்மிக வழிபாட்டுவிழாவை எங்கேயும் நான் கண்டதில்லை. என்ன பிரமாண்ட தீபம், எத்தனை லட்சம் பக்தர்கள், எவ்வளவு அன்னதானம்!
ஆண்டுதோறும் சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம் செய்யவும் வரவேண்டும் என்ற ஆவலும் உள்ளது.
இங்கு வரும்போதெல்லாம், திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம் எஜமான் தம்பிரான் குருமார்களைத் தரிசித்து ஆசி வாங்குவது எனது வழக்கம்.

* தமிழகத் தமிழர்கள், தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் பற்றிய உங்கள் கருத்து?

நாம் ஒரே இனம் என்பது பெருமிதமான விஷயம். தென்னாப்பிரிக்காவில் 6 லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். உணவு, உடை, வழிபாடு, சடங்கு, பண்டிகை என இங்குள்ள பண்பாட்டு கலாசாரம் எல்லாமே எங்களால் பின்பற்றப்படுகிறது. அங்கே சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள்தான் மிக அதிகம்.
தமிழகத்தில் வழிபாடு தொடர்பானவை எல்லாமே நேர்த்தியாக உள்ளது. தென்னாப்பிரிக்காவில் கொஞ்சம் அந்நாட்டு கலாசாரமும் கலந்துள்ளது. அங்குள்ள கோயில்கள் இங்குள்ளவைபோல் ஆகமவிதிப்படி அமைக்கப்பட்டவை அல்ல. இங்குள்ள கோயில் சிற்பக்கலை அழகும் அங்கு இல்லை.

* அங்கே குடும்ப சடங்குகளை எப்படி நடத்துகிறீர்கள்?

எல்லாமே தமிழக வழக்கப்படிதான்! குழந்தை பிறந்த 9ஆம் நாள் பிரார்த்னை வைபவம் நடத்தப்பட்டு பெயர் சூட்டல் விழா; பெண் குழந்தைகளுக்கு பருவம் எய்துதல் விழா; திருமணத்தில் ஹோமம் வளர்த்து, புரோகிதர் வைத்து மந்திரம் ஓதித் தாலி கட்டுதல், மோதிரம், மெட்டி அணிதல், அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல், நலங்கு என எல்லாமே இங்குள்ளவை போலவே நடத்திவருகிறோம்.

* என்னென்ன பண்டிகைகளைக் கொண்டாடுகிறீர்கள்?

பொங்கல், தீபாவளி, கார்த்திகை தீபம், புரட்டாசி அமாவாசை, கந்தசஷ்டி, காவடி எடுத்தல், சிவராத்திரி, நவராத்திரி என நமது பாரம்பரியப் பண்டிகைகள் அனைத்தும் அங்கும் உண்டு.

* அங்கு நமது பாரம்பரியக் கலைகளின் நிலவரம் எப்படி?

கர்நாடக இசை, பரத நாட்டியம், தேவாரம் திருவாசகம் ஓதுதல், பஜனைகள், நாம சங்கீர்த்தனம் எல்லாமே இங்கு போலவே நடத்துகிறோம்.

* அங்கு தமிழ்மொழி வளர்ச்சி, சமய வளர்ச்சி எந்த அளவில் உள்ளது?

நான்காவது தலைமுறையைச் சேர்ந்த நானே ஓரளவு தமிழ் பேசுகிறேன் என்பதிலிருந்தே மொழி நிலவரம் பற்றி அறிந்துகொள்ளலாமே! தென்னாப்பிரிக்காவில் பள்ளிகளில் தமிழ்மொழியை ஒரு பாடமாக எடுத்துப்படிக்கும் உரிமையை அரசு செய்துகொடுத்து உள்ளது. இருப்பினும், தலைமுறைகள் கடந்து விட்டதால் தமிழ் பேச, எழுத சிரமப்படவே செய்கிறோம். தமிழை எழுதவும் புரிந்துகொள்ளவும் ஆங்கிலத்தையேப் பயன்படுத்தி வருகிறோம்.
சமய வளர்ச்சி என்று சொல்லவந்தால், தமிழகத்தில் வழிகாட்டும் பல குருமார்கள் போல அங்கு யாருமில்லை. நாங்கள் சைவசித்தாந்த சங்கத்தின் தலைவர்களையும், ராமகிருஷ்ண மிஷனின் குருமார்களையும் குருவாக ஏற்றுக்கொண்டு ஆன்மிகத்தில் முன்னேறுகிறோம்.
கோயில்களில், சைவ சித்தாந்த மன்றங்களில் பஜன், திருமுறை ஓதுதல் முதலியன சொல்லித்தரப்படுகின்றன. தமிழில் உள்ள நுõல்களை ஆங்கிலத்தில் ஒலி பெயர்ப்பு (டிரான்ஸ்லிட்டரேசன்) செய்து அனைவரும் படிக்க உதவி அளிக்கப்பட்டு வருகிறது.
சித்தானந்த பாரதி, ஸ்ரீகாசிமட எஜமான் தம்பிரான் சுவாமிகள் இங்கு சமயவளர்ச்சிக்கு பெரிதும் உதவி வருகின்றனர். திருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லுõரி முன்னாள் முதல்வர் கே.எம்.வேங்கடராமையா டிரான்ஸ்லிட்டரேசன் முறையில் எழுதித் தந்த "சிவன் அருள் திரட்டு' நுõல் 1974ல் அங்கு இலவசமாக வழங்கப்பட்டது. அதில் சமயம் பற்றிய விரிவான விளக்கங்கள் இருக்கின்றன.

* சைவ சிந்தாந்த சங்கம் மூலம் நீங்கள் என்னென்ன சேவைகளில் ஈடுபட்டுள்ளீர்கள்?

அங்குள்ளவர்களுக்குத் தமிழ், வழிபாட்டு முறைகள், தியானம், யோகாசனம் சொல்லிக் கொடுத்து வருகிறேன். சமயம் தொடர்பான 20 நுõல்கள் வெளியீட்டு இருக்கிறேன். ஜி.யு.போப் எழுதிய திருக்குறள் உரை, சிவஞான போதம், பேராசிரியர் கே.எம்.வேங்கடராமையரின் சைவத் துறவியரின் கதைகள், குழந்தைகளுக்கான சைவ சித்தாந்தம், ராமலிங்க சுவாமிகளின் திருஅருட்பா, திருமந்திரத்திரட்டு உள்பட நுõல்களைப் பதிப்பித்துச் சமய வளர்ச்சிக்கு உதவிவருகிறேன்.
பேட்டி : தேவராஜன். படம் : சிதம்பரம்.


ரயில் குடும்பம்...
( பெண்கள் மலரில் இடம் பெற்ற என் கட்டுரை)
ஜில் கெல்லி மணமொத்த தம்பதிங்க! இவங்க கல்யாணத்துக்கு வந்த, யாரோ ஒரு மகராசன் ஒரு பேச்சுக்கு""பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழ்க!'' ன்னு வாழ்த்திருக்காரு. அந்த புண்ணியவானின் வாக்கு அப்படியே பலிச்சுட்டுபோல. இந்த தம்பதியினருக்கு பதினாறு இல்லீங்க 18 குழந்தைகள்!
அட, என்று மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப்பட்டு, "இது எப்படி சாத்தியம்?' என்று கேட்டால், ரொம்ப கூலாக, சிரித்தப்படி, "" எல்லாம் அந்த ஆண்டவன் கொடுத்தது!'' என்று ஆகாயத்தைக் காட்டுகிறார் ஜில்!
ஜில் இப்படி சொன்னதும், அவர் முதுகு புறத்தில் நின்று கொண்டு அம்மணி கெல்லி வெட்கத்துடன்," அய்யாவுக்கு வயசு இருக்கு; அம்மாவுக்கு மனசு இருக்கு' என்று முணுமுணுத்துக்கொண்டே,"" எனக்கு பெரீய்ய ஆசை ஒன்னு இருக்கு. அது உலகத்திலேயே பெரிய பேமிலி எங்களதுதான்னு சொல்ற அளவுக்கு டஜன் டஜனாக பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளணுங்க! முடிஞ்சாகின்னஸ் ரெக்கார்டும் பண்ணலாம்னு நினைப்பு இருக்கு'' என்கிறார்.
அமெரிக்காவில் டென்சீ நகரத்தில் வசிக்கும் இந்தசூப்பர் தம்பதியினர்.
சவுத் கரோலினாவில் உள்ள ஒரு கல்லுõரியில் படித்த போது 1986ல் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இவர்களின் நட்பு, காதலாகி 1987ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இப்போது, ஜில்லுக்கு 45 வயது. கெல்லிக்கு 43 வயசு. ஜில் மரவாடி தொழில் செய்து வருகிறார்.
இவங்களுக்கு 2010, செப்டம்பர் மாதம் 15ம் தேதி 18 வது குழந்தைப் பிறந்தது. புதுவாரிசுக்கு விழா கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள் பிள்ளைகளைப் பெற்ற மகராசிகள்!
இந்தகுடும்பத்தின் உறுப்பினர்களின் அத்தனைப் பெயரையும் சொல்லி முடிப்பதற்குள் யாருக்குமே கீழ் மூச்சு மேல் மூச்சு வாங்கும். வரிசைப்படுத்தினால் அது ரயில் போல் நீண்டு இருக்கும். அந்த பட்டியல்...
ஜாச் 21, மிச்சேலா20, எரின்18, லாசன்17, நாதன்16, அலீசா15, டோரி14, டிரேஸ்13, கார்லின்12, ஜோஸீ11, கெய்ட்10, ஜாக்சன்8, வார்டன்7, இஸஸா5,அட்டாலீ4, எல்லீ3, கேல்லீ அனா1, வாட் ஒரு மாதக் கை குழந்தை! இதில் 8 ஆண் வாரிசுகள், 10 பெண் வாரிசுகள்.
இந்தப்பட்டியலில் அம்மணி நான் ஸ்டாப்பாக கல்யாணம் ஆன ஆண்டிலிருந்து தொடர்ந்து 15 ஆண்டுகள் எப்போதுமே வாயும் வயிறுமாக இருந்துஆண்டுக்கு ஒன்னுன்னு குழந்தைப் பெற்று எடுத்திருக்காங்க.
"இவ்வளவு குழந்தைகளை சமாளிக்க முடிகிறதா', என்றால் ""அதெல்லாம் பெரிய விஷயமா என்ன? எனக்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் வீட்டில், குடும்பத்தில் பெரிய சந்தோஷத்தை கூடவே கூட்டி வருதுன்னு'' கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் சொல்கிறார் கில்லி.
இவங்களோட பெரிய குடும்பத்தில் இருக்கும் சில சுவாரஸ்யங்களைப் பார்க்கலாமா?
அப்பா மரவாடிக்கு போய்டுவார். வீட்டில் பெரிய பிரத்யேக வகுப்பறையில் அம்மாவும் மூத்தமகனும் குழந்தைகளுக்கு பாடம் நடத்துவாங்க.
இவங்களோட காலை டிபனுக்கு 48 முட்டை, 4 பேக் பெகான், 40 ஸ்கோன்ஸ் 2 பெரிய லோவஸ் பிரட் பெரிய நீண்ட டைனிங் ஹாலில் வைக்கப்படும். இதன் மதிப்பு 5 ஆயிரம் டாலர். இவங்க எல்லாரும் சேர்ந்து சாப்பிடறதைப் பார்த்தால் ஒரு பங்ஷனுக்கு வந்தவங்க சாப்பிடற மாதிரி இருக்குமாம்.
வீட்டில் ஐந்து படுக்கை அறைகள், எட்டு பாத்ரூம், இரண்டு சமையல் அறை, இரண்டு டைனில் ஹால், நர்சரி பள்ளி,வகுப்பறைகள், விளையாடுவதற்கு பிளே கிரவுண்டு இருக்காம்.
பெண்ணுக்கு ஒவ்வொரு பிரசவம் மறுபிறவிமாதிரி என்பார்களே! உங்களுக்கு அந்த அச்சம் வந்ததில்லையா என்ற கேள்விக்கு, " 11வது குழந்தை பிரசவத்தின் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம். "இனிமேல் குழந்தைப் பெற்றுக்கொள்வது ஆபத்து. அதற்கான உடல்நிலை உங்களுக்கு இல்லை' என்று மருத்துவர் எச்சரித்தப்பிறகும் மீண்டும் மீண்டும் குழந்தைப் பெற்றவள் கெல்லி என்கிறார் ஜில்.

தேவராஜன்


மருந்து, மாத்திரை இல்லாத சிகிச்சை
டாக்டர். வி. சிவக்குமார்
( பெண்கள் மலரில் இடம் பெற்ற என் கட்டுரை)
விபத்து, முதுமை, வேலைப்பளு முதலியகாரணங்களால் எலும்புகள் தேய்மானமாக வாய்ப்பு அதிகம். அதனால்முதுகு, மூட்டு, கழுத்து, இடுப்பு வலி ஏற்படுகிறது. இவற்றைஇந்தியாவில் ஆபரேஷன்,மருந்து, ஷாக் ட்ரீட் இவற்றின் மூலம் குணப்படுத்துகிறார்கள்.
மேலே சொன்ன வலி ப்பிரச்னைகளுக்கு மருந்தோ, ஆபரேஷனோ இல்லாமல், குறைந்த கட்டணத்தில் மேனுவல் தெரபி மூலம் குணப்படுத்த முடியும் என்கிறார், டாக்டர். வி. சிவகுமார். இவர், லண்டன், ஹாலந்து நாடுகளில் பிஸியோதெரபி படித்தவர்.
இது எப்படிச் சாத்தியமாகும் என்பது பற்றி விளக்குகிறார்...

உங்களைப்பற்றி அறிமுகம்?

என் பெயர் சிவக்குமார். சென்னை சொந்த ஊர். நுங்கம் பாக்கத்தில் தான் பிஸியோ தெரபி படித்தேன். அண்ணன்கள் இருவர் அமெரிக்காவில் இருக்கிறார்கள். நான் லண்டனிலும், ஹாலந்திலும் பிசிக்கல் மேனுவல் தெரபி படிப்புகளைப் படித்தேன். ஹாலந்தில் 2 ஆண்டுகளுக்கு மேலாக ப்பணிபுரிந்திருக்கிறேன். சென்னையில் கீழ்பாக்கத்திலும், மேற்கு மாம்பலத்திலும் கிளினிக் வைத்து, குறைந்த கட்டணத்தில் மேனுவல் தெரபி சிகிச்சையளித்து வருகிறேன்.

பிஸியோ தெரபி படிக்க வேண்டும் என்னும் விருப்பம் எதனால் வந்தது?

அப்போது எனக்கு 14 வயது. லாரி விபத்தில் காலில் பயங்கரமாக அடிப்பட்டுவிட்டது. அதற்கு சிகிச்சையளிக்க வந்த டாக்டரின் சிகிச்சை முறைகளைப் பார்த்து எனக்குள் அப்போதே இது தொடர்பாக தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. அடுத்ததாக, என் அண்ணனுக்கு முதுகு தண்டுவடத்தில் அடிப்பட்டு மிகவும் சிரமப்பட்டார். அதற்கு சிகிச்சையளிக்க வந்த டாக்டரின் சிகிச்சை முறைகளைப் பார்த்தும் இது தொடர்பாக படிக்க வேண்டும் என்கிற உந்துதலை ஏற்படுத்திவிட்டது.

இந்தியாவில் வழங்கப்படும் பிஸியோரெபி சிக்கிச்சைக்கும், நீங்கள் கொடுக்கும் சிகிச்சை முறை வித்தியாசத்தை விளக்கமாக சொல்லுங்க?

முதுமை காரணமாக எலும்பு த்தேய்மானம், உடல் பருமன் காரணமாக எலும்பு தேய்மானம் ஏற்படுவதால் முதுகு, கழுத்து, இடுப்பு, மூட்டு வலி ஏற்படுகிறது. இதற்கு இந்தியாவில் மருந்துகள் மூலமாகவும், ஷாக் ட்ரீட்மென்ட், ஆபரேஷன் மூலமாகவும் சிகிச்சையளிக்கிறார்கள். இதற்குச்செலவும் அதிகம். இந்த சிகிச்சைக்குப்பின் அவர்கள் முன்போல இயல்பாக அமரவோ, உட்காரவோ இயலாமல் போகும் வாய்ப்பும் உண்டு.
மேனுவல் பிஸியோதெரபி மருந்து, ஆபரேஷன் இல்லாமல் சில உடற்பயிற்சி, வாழ்கை முறை பழக்கங்களை கொஞ்சம் மாற்றிக்கொள்ள ப்பரிந்துரைப்பதன் மூலம் குணப்படுத்த முடியும். மேலும் இந்த சிகிச்சையின் மூலம் பாதிக்கப்பட்டவர் முற்றிலுமாக குணமடைகிறார் முன்பு போலவே இயல்பான வாழ்க்கையைத் தொடரலாம்.

இந்தியாவில் மேனுவல் தெரபிஸ்ட் படிப்பு இல்லையா?

இல்லை. அதற்கு க்காரணம் உள்ளது.
லண்டன் மற்றும் ஹாலந்து நாடுகளில் பிசிக்கல் மற்றும் மேனுவல் தெரபிஸ்ட் படிப்பான Mககூ(ட்தண்.ண்டுடூ),Mஐஅக., இஏகூ., இஎகூ படிப்புகளில் மருந்து, ஆபரேஷன் இல்லாமல் குணப்படுத்தும் முறைகளை கற்பிக்கிறார்கள். வெளிநாடுகளில் அங்குள்ள குடிமக்களுக்கு சிகிச்சைகளுக்கு ஆகும் செலவுகளை அரசாங்கமே ஏற்றுக்கொள்வதால், அரசாங்கம் குறைந்த கட்டணத்தில் சிகிச்சையளித்து நோய்களை குணப்படுத்தவே விரும்பும். அதனால், வெளிநாடுகளில் மேனுவல் தெரபிஸ்ட் படிப்புகள் உள்ளன. இந்தியாவில் சிகிச்சைப்பெறும் நபரே கட்டணம் செலுத்துவதால் இங்கு குறைந்த செலவில் சிகிச்சையளிக்கவேண்டிய கட்டாயமில்லை. அதனால் இந்த வகை படிப்புகள் இந்தியாவில் இல்லை.

மேனுவல் தெரபி சிகிச்சைப் பற்றி விளக்குங்களேன்?

கழுத்து , தோள், முதுகு, மூட்டு வலிக்களுக்குக்காரணமாக இருப்பது எலும்புத் தேய்மானம். இந்த தேய்மானத்தை எப்படி நிறுத்துவது, ஆரம்ப நிலையில் எப்படித் தவிர்ப்பது பற்றி கருத்தில் கொள்ளப்படும். 50 வயதுக்கு மேல் ஆனவர்களுக்கு கால்சியம், புரதசத்து குறைவினால் எலும்பு தேய்மானம் வரும். பொதுவாக ஒருவரின் உடல் எடையை தசைகளும், எலும்புமே சுமக்கின்றன. இளம் வயதில் இருப்பவர்களுக்கு உடல் எடையில் 10 சதவீதத்தை எலும்பு சுமக்கும். மீதியை தசைகள் சுமக்கும். வயதானவர்களுக்கு உடல் எடையை த்தசைகள் 10 சதவீதம் தான் சுமக்கும். மீதியை எலும்புதான் சுமக்க வேண்டும். இதனால் எலும்பு தேய்மானம் அடைகிறது. அதனால் வலி ஏற்படுகிறது. இதை மேனுவல் தெரபி மூலம் எலும்பு மூட்டுகள் உராயாமல் இருக்க மூட்டுகளின் இடை வெளியை அதிகப்படுத்துகிறோம். தசை நார்கள் இறுகச் செய்ய சில பயிற்சி த்தருகிறோம். அமருதல், எழுந்திருத்தல், நடத்தல் செயல்களில் சிலமாற்றங்களை கடைப்பிடிக்கச் சொல்கிறோம். இவற்றின் மூலமாக ச்சிகிச்சையளித்து குணப்படுத்துகிறோம். முதுகு வலிக்கு தண்டு வடத்தில் சவ்வு விலகிவிடுவதையும், நரம்புகளின் அழுத்தத்தையும் குறைத்து, அதற்கான சில பயிற்சிகளையும் தந்து குணப்படுத்துகிறோம்.

மேனுவல் தெரபி மூலம் வேறென்ன சிகிச்சையளிக்க முடியும்?

கை, கால் செயல் இழப்பு, பக்கவாதம், மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான உடல் வளர்ச்சிக்கு த்தசை, நரம்பு வலுவாக்கும் சிகிச்சை அளித்து சீக்கிரம் குணப்படுத்த முடியும். வயோதிகர்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மான வலிகள், உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஏற்படும் இணைப்பு வலிகள், பிரசவத்திற்குப் பின் வயிறு பருமன் ஆகுவதை த்தடுக்கும் சிகிச்சைகள் என உள்ளது.
தொழில் நிறுவனங்களில் பணியும் புரியும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் உடல் வலிகளைப் போக்கவும், கம்ப்யூட்டரில் தொடர்ந்து பணிசெய்பவர்களுக்கு ஏற்படும் முதுகு வலியை போக்கவும் மேனுவல் முறை சிகிச்சை உள்ளன. இந்தச் சிகிச்சை எல்லாமே மருந்து, மாத்திரை, அறுவைசிகிச்சை தேவைப்படாத சிகிச்சை முறைகளாகும்.
தொடர்புக்கு: டாக்டர். வி. சிவகுமார் 9840303156
பேட்டி: ச. தேவராஜன்
படங்கள்: ராஜன்


இந்து டீச்சர்!
( தீபாவளி மலருக்கு பாலுமகேந்திரா தந்த கதை)
பிறந்த ஊரையும், விடலை பருவத்தையும் எப்போது நினைத்தாலும் அப்போதே மனதில் மயிலிறகாய் தென்றல் வருடிவிடுவது போன்று ஒரு சுகம் பொங்கி நிறையும்.
சில்லென்னெ மழைத்துõறலிட்ட மாலையில்,பளீச் வெள்ளை மாளிகையில் சூடான தேநீருடன் சுகமான தன் விடலைப் பருவத்தின் மறத்தற்கரிய ஞாபகங்களை சொல்லி சிலிர்க்க வைக்கிறார்.
ஐந்தாம் வகுப்பில் தனது ஆசிரியை மீது மையல் கொண்ட அந்தப் பத்துவயது குட்டிப்பையன்தான் பிற்காலத்தில், தமிழ் சினிமாவை உலக உயரங்களுக்கு எடுத்துச் செல்ல முனைந்த முன்னோடிகளில் முதன்மையானவர் என்று கருதப்படும் அவர்,
இந்து டீச்சரின் ஞாபகங்களோடு எடுக்கப்பட்ட படம்தான் "அழியாத கோலங்கள்' பாலுமகேந்திராவின் முதல் தமிழ்ப்படம்.
இனி அவர் ஞாபகங்களை அப்படியே பதிவு செய்கிறேன்...
""நல்லா ஞாபகமிருக்கு... அப்ப எனக்குப் பத்து வயசு. அஞ்சாப்பு படிச்சிக்கிட்டிருந்தேன். அஞ்சாப்புக்கு இந்து மிஸ் தான் கிளாஸ் டீச்சர்...
எங்க எல்லாருக்கும் இந்து மிஸ்சென்னாப் புடிக்கும். எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும். அம்மன் கோயில் மாரியாத்தா செல மாதிரி, பெரிய பெரிய கண்ணும் அதுவுமா அழகா இருப்பாங்க. சிரிச்சாங்கெண்ணாக் கேக்கவே வேணாம்... பாத்துக்கிட்டே இருக்கலாம்.
தொலைவில கேக்கற குயில் சத்தம் மாதிரி. கோயில் மூலஸ்தானத்தில சாமிக்கு ஆரத்தி எடுக்கறப்போ பூசாரி கிலுக்கற மணிச்சத்தம் மாதிரி, அப்படியொரு குரல் எங்க மிஸ்சுக்கு...
பக்கத்தில் போய் நின்னா, கமகமன்னு நல்ல வாசனையா இருக்கும். சந்தன சோப்பும் அவங்க போட்டுக்கற பவுடரும் சேர்ந்து மூக்கத் தொளைக்கும். மதியத்துக்கு மேல, இது ரெண்டோடயும் அவங்க வேர் வாசனகூடச் சேந்துக்கும். அது இன்னும் கிறக்கமா இருக்கும்.
மிஸ் பக்கத்தில் போய் நின்னு அவங்க வாசனைய நெஞ்சு நெறய இழுத்து, கொஞ்சம் நேரம் அத அப்படியே நெஞ்சுக்குள்ள வெச்சிருந்து, கொஞ்சம் கொஞ்சமா வெளியே விடறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கும். இதுக்காவே ஏதாவது சாக்கு வெச்சுக்கிட்டு இந்து மிஸ் பக்கத்தில் போய் ஒட்டினாப்பல நின்னுக்கிறது...
""எதுக்கிடா சும்மா சும்மா எம்பக்கத்தில் வந்து ஒரசிக்கிட்டு நிக்கறே?'' மிஸ் சிரிச்சுக்கிட்டே கேப்பாங்க. நா பதில் எதுவும் சொல்லாம கொடுப்புக்குள்ள சிரிப்பேன்...
ஒரு நா இப்படிதான் நா கிட்டப் போய் நின்னப்ப அதே கேள்வியக் கேட்டாங்க...
ஊர்ல உள்ள தைரியத்தயெல்லாம் எனக்குள்ள சேத்துட்டு அவுங்களுக்கு மட்டும் கேக்கறமாதிரி சொன்னேன் "" உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும் மிஸ்...'' அவங்க மொகத்தில குப்பென்னு ஒரு செகப்பு.
""ஐய... மூஞ்சிப்பாரு!'' சிரிச்சுக்கிட்டே என் கன்னத்தை லேசா கிள்ளினாங்க. ஒரு மாதிரியாயிட்டேன். ""சரி போ... போய் உட்காரு'' போய் உக்காந்தேன். அதுக்கப்பறம் ரெண்டு மூணு வாட்டி மிஸ் என்னயப் பாத்த மாதிரி ஒரு நெனப்பு.
இன்னொரு நா அப்படித்தான். வேணும்ன்னே அவங்க கிட்டப் போய் ஒரசிக்கிட்டு நின்னேன். "" என்ன வேணும் பாலு?'' அவுங்க கொரல்ல லேசான ஒரு கண்டிப்பு. ""ஒண்ணுல்ல மிஸ்'' மொகத்த தேமேன்னு வெச்சுக்கிட்டு சொன்னேன். "" போய் உக்காந்து படி போ...'' அதே கண்டிப்போட மிஸ் சொன்னாங்க. போய் உக்காந்து பொஸ்தகத்தைப் பொரட்டினேன். ஏன்னு தெரியல... அழணும்போல இருந்திச்சு...
இது நடந்து 30 35 ஆண்டுகளுக்குப் பின்...
ஒரு தடவை ஊருக்குப் போயிருந்தேன். இந்து டீச்சர் ஊருக்கு வந்திருப்பதாகச் சொன்னார்கள். பாக்க வேண்டும் போல் இருந்தது.
முற்றிலும் நரைத்த முடியோடு 60 65 வயது மதிக்கத்தக்க கண்ணாடியணிந்த ஒரு மூதாட்டி வெளியே வந்தார்.
அவர்தான் என் இந்து டீச்சர் என்று புரிந்துகொள்ள எனக்குக் கொஞ்சம் அவகாசம் வேண்டியிருந்தது.
உட்கார்ந்து பேசிவிட்டுத் திரும்பி வரும்போது ஏன் என்று தெரியவில்லை. அழவேண்டும்போல் இருந்தது.''

தேவராஜன்


நாகரீக நரகாசூரர்கள்!

பண்டிகைகளும் விழாக்களும் மனிதன் கொண்டாட காரணம் அவன் தன்னை சந்தோஷபடுத்திக்கொள்ளத்தான். புராணங்கள் ஆயிரம் காரணம் சொல்லட்டும். அதை கொஞ்சம் தள்ளிவைப்போம். கண்ணப் பிரான் காலத்தில் ஒரு நரகாசூரன் தான் இருந்தான். இன்றைய கம்யூட்டர்க் காலத்தில் நாகரீக நரகாசூரன்கள் பலர். நாகரீக நரகாசூரர்களை வதம் செய்ய "நான் சிரித்தால் தீபாவளி என்பதை விட, பிறர் சிரித்தால் தீபாவளி' என்ற புது ஆயுதத்தை எடுத்து, சுயநல போரில் மனித நேயத்தை வென்றெடுக்க வேண்டும்.
தீபாவளி என்றாலே வானெங்கும் வாணவேடிக்கை, தரை எல்லாம் பட்டாசு சப்தங்கள், வீதிகளில் வீடுகளில் மத்தாப்பூ ஒளித்தோரணங்கள் தான் ஞாபகத்துக்கு வரும்.
உண்மையில் தெருவோரம் வசிக்கும் மனிதர்களுக்கு தீபாவளி தித்திக்காது. அதை கொண்டாட அவர்களுக்கு வசதி இருக்காது. பொருளற்ற வாழ்க்கையில் பொருள் தேடித்திரிபவர்கள் பணத்தைக் கட்டுகட்டாக சம்பாதித்பதை தான் தீபாவளியாக மகிழ்வர்.
அதிகம் இருப்பவனுக்கும் எதுவும் இல்லாதவனுக்கும் தீபாவளி சந்தோஷம் கொடுப்பதில்லை. எல்லாரும் மகிழ்ச்சியாக தீபாவளியை க்கொண்டாடுவது எப்படி?
சில நொடிகளோ நிமிடங்களோ வெடித்தும், எரித்தும் கரைக்கும் பணத்தை தெருவோர
வாசிகளுக்கோ, ஆதரவற்றர் இல்லங்களுக்கோ, ஏழைகளுக்கோ கொஞ்சம் பட்டாசு, இனிப்பு, புத்தாடை கொடுங்கள்! அங்கே ஏழையின் சிரிப்பில் வறுமை எனும் நரகாசூரன் அழிவான்!
பணம் பணம் என்று அலையும் மனிதர்கள் வீடு, உறவு, நட்பு என்ற மென்மையான உலகத்தில் கொஞ்சம் மகிழ்ச்சி, சிரிப்பு, பேச்சு என நேரத்தை செலவிடுங்கள். அங்கே புன்னகை பூப்பூத்து பிஸி என்கிற நரகாசூரனை வதம் செய்யும்!
வீட்டில் செய்யும் பலகாரங்களை அறிமுகமே இல்லாதவர்களிடம் பகிர்ந்து கொண்டு இன்ப அதிர்ச்சி தாருங்கள்! அங்கே தித்திக்கும் நட்பு மலர்ந்து வேண்டாத பகை நரகாசூரனை தாக்கும்!
தீபாவளி பண்டிகை நமக்கே நமக்கானது என்று அந்த நாளின் ஒவ்வொரு வினாடி, நிமிடங்களை உங்கள் வீட்டிலும், உறவிலும், நட்பிலும் மட்டுமே செலவிடுங்கள். டி.வி.யில் அழுது, சிரிக்கும் அரிதார முஞ்சிகளையும், ஏனைய பொழுது போக்கு நிகழ்ச்சிகளையும் பார்க்க மாட்டேன் என்று டி.வியை ஆப் செய்துவிடுங்கள். அங்கே தொலைக்காட்சி தொல்லையனாகி நரகாசூரன் உங்கள் நேரத்தை கொள்ளையடிக்க முடியாமல் ஓரங்கட்டப்படுவான்!
நீண்ட நாட்களாக சந்திக்க முடியாத நண்பர்களை, உறவினர்களை உங்கள் வீட்டுக்கு அழையுங்கள்! அல்லது அவர்களிடம் தெரிவித்துவிட்டு நீங்கள் சென்று அன்பை பரிமாறிக்கொள்ளுங்கள்! தெருவில் யாரிடமாவது சண்டை போட்டிருந்தால் அவர்களிடம் நேரே சென்று இனிப்பு கொடுத்து மன்னிப்பு கேளுங்கள். பிரிந்தவர்கள் இன்று மீண்டும் உறவை புதுப்பித்துக்கொள்ள தீபாவளியை கருவியாக்கிக்கொள்ளுங்கள். இதெல்லாம் செய்யும் போது நீங்கள் இழந்தது என்ன? பெற்றது என்ன என்பதை அனுபவம் உணர்த்தி, தித்திக்கும் இந்த புதிய தீபாவளி மாற்றங்கள் கசப்பான பழைய நினைவு நரகாசூரனை துரத்தியடிக்கும்!
பட்டாசுகளால் புகையும் கரியும் துõசுகளும் எழுப்பி சுற்றுப்புறத்தை மாசுபடுத்துவதுதான் மகிழ்ச்சி என்றெண்ணாமல், சுற்றுப்புறத்தை துõய்மையாக வைத்துக்கொள்வதுதான் மகிழ்ச்சி என்று கொண்டாடினால் சுகாதாரம் விறுகொண்டு மாசு நரகாசூரனை மாய்க்கும்!
தனிமனித சுகத்தைத் தருவது மட்டுமே பண்டிகைகளின் எல்லை இல்லை. அது மனித நேயம் வளர்க்க செய்தால் மட்டுமே அது சிறப்பானதாய் இருக்கமுடியும்!
தேவராஜன்

அன்புத் தோழியே,
(பெண்கள் மலரில் இடம் பெறும் பொறுப்பாசிரியர் கடிதப்பகுதியில் இடம் பெற்ற என்னுடைய கடிதக்கட்டுரை)
வணக்கம். அன்றாட வாழ்க்கையில், நல்லது கெட்டது காரியங்களில் ஒரு சொல் இசகுபிசகாக வெளிவந்து, பெரிய களேபரத்தையே ஏற்படுத்திவிடுவதைப் பார்க்கிறோம். நட்பு, உறவு, அலுவலகம், அக்கம் பக்கம் என நம்மைச் சுற்றியிருக்கும் சக மனிதர்களுக்கு கொடுக்க வேண்டிய சாதாரண வார்த்தையளவில் மரியாதையை நாம் கொடுக்க தவறவிடும்பட்சத்தில் ஏற்படும் பிரச்னைகள் பல. "ப்பூ!' இதுக்குபோய் மூஞ்சியை துõக்கி வைச்சிக்கிட்டியாக்கும் என்று பிறர் காதுபட சொல்லும் போது தான் நம் சுயகவுரவம் தலைதுõக்கி நர்த்தனமாடியது புரிய ஆரம்பிக்கும்.
"ஒருபிச்சைகாரரிடம் உன்னிடம் பணம் இருக்கிறதா? வசதி இருக்கிறதா? இப்படி எது கேட்டாலும் இல்லை என்று சொல்ல அவர் தயங்குவதில்லை. ஆனால், உனக்கு அறிவு இருக்கா என்று கேட்டுப்பாருங்கள்! அந்த நொடியே மூக்கின் மீது கோபம் கொப்பளித்துவிடும் அவருக்கு.
எந்த மனிதர்களும் முதலில் மரியாதையை எதிர்பார்க்கிறார்கள் என்ற உண்மை தெரிந்தும், நாம் அதை பிறருக்கு செய்ய தவறவிடுகிறோம். யாராக இருந்தாலும் மதித்தல் என்ற பண்பு பெற்றிருந்தால் தான் மனிதர் என்று நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும். இல்லை என்றால், நம் முதுகுப் பின்னாலோ, காதுபடவோ "" தரங்கெட்டவள்... மரியாதை தெரியாதவள்...' போன்ற சுடுச்சொற்களை சுமக்க வேண்டியதிருக்கும்.
வீடுதான் யாருக்கும் முதல் பள்ளிக்கூடம். அம்மா தான் முதல் ஆசிரியை. அதனால் தான் இந்த பண்புப் பயிற்சிகளை இல்லத்தரசிகளிடம் கொண்டுசேர்க்க விரும்புகிறேன்.
கொடுத்து பெறுதல் என்பது தான் மரியாதையின் இலக்கணமாக சொல்லப்பட்டிருக்கிறது. மதித்தல், மரியாதை தருதல் என்று பண்பை முதலில் வீட்டிலிருந்தே பழகுவோம்.
நாம் பெற்ற பிள்ளைகளே ஆனாலும், பிறர் முன்னிலையில் அவன், அவள் அது என்று ஒருமையில் சொல்லாமல் என் மகன் வங்கியில் வேலைப் பார்க்கிறார். இளைய மகள் கல்லுõரியில் படித்துக்கொண்டிருக்காங்க இப்படி பிறருக்கு நம் பிள்ளைகளை மரியாதையோடு அறிமுகப்படுத்த பழகுவோம்.
வீட்டில் கணவரை வந்துச்சு, போனுச்சு.. இப்படி அஃறிணையில் சொல்வதை தவிர்க்க பழகுவோம்.
கணவர்மார்கள் தங்களை வாடி... போடி... என்று அழைப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு அன்புடன் சுட்டிகாட்டுவோம்.
நாம் எப்படி பிறரால் மதிக்கப்படவேண்டும் விரும்புகிறோமோ, அதை நாம் பிறருக்கும் தரவேண்டும் என்கிற சிந்தனையை நம் பிள்ளைகளுக்கு, உறவினர்களுக்கு, சுற்றத்தாருக்கு விதைப்போம். அந்த விதை முளைத்து விருட்சம் ஆவதை கண்கூடாகவே பார்க்கலாம். நம்மைப் பார்த்துத்தான் பிள்ளைகள் வளர்கிறார்கள். நம் சொல், செயல், பழக்கம் எல்லாம் அவர்களை ஊடுருவும், பிரதிபலிக்கும்.
சமீபத்தில்ஒரு மாலையில் ஒரு உணவகத்தில் இலங்கை தமிழர் உணவருந்திக்கொண்டிருப்பதை கவனித்தேன். அவர் சர்வரிடம் வார்த்தைக்கு வார்த்தை மரியாதையோடு பேசுவதைக் கேட்டு சிலிர்த்துப்போனேன். பிறகு, அவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு சிறிது நேரம் உரையாடி மகிழ்ந்தேன். அந்த இலங்கை தமிழரின் பேர், ஊர்கூட எனக்கு முழுமையாக தெரியாது. இருந்தும் அவரை ஞாபகம் வைத்துக்கொள்ளவும், உங்களிடம் அவரைப்பற்றி சொல்லவும் காரணமாக இருந்தது அவர் பேசிய கண்ணியமான, மரியாதையான பேச்சுதான்! நீங்களும் வார்த்தைகளில் கண்ணியத்தையும், மரியாதையையும் கடைபிடிக்கும் போது யாரோ யாரிடமோ உங்களைப் பற்றி பெருமையாக சொல்லிக்கொண்டிருக்கலாம்!



பெண்கள் மலர் பேனா முனையில் பேசுவோம் கடிதப்பகுதியில் இடம் பெற்ற என்னுடைய கடிதக்கட்டுரை)
தோழிகள் அனைவரும் நலமா?
கோலப் போட்டி முடிவுகள் எப்போது வரும் என ஆர்வமாய் காத்திருப்பதாக நிறைய கடிதங்கள் வந்துள்ளன. காத்திருத்தலிலும் ஒரு சுகம் இருப்பதை நீங்கள் அனுபவிக்க விடுகிறேன். வந்த கடிதங்களில் ஒன்றுக்கு பதில் தர எப்போதோ படித்த ஒரு ஜென் கதையை அவசியம் வேண்டி சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் கதை யாருக்குப் புரிகிறதோ இல்லையோ, நிச்சயம் ரமணி என்கிற வாசகிக்கு புரியவேண்டும்.
சுஸூகி ரோஷி என்ற ஜென் குருநாதரிடம் பல சீடர்கள் கல்வி கற்றுக்கொண்டிருந்தனர்.
அந்தச் சுஸூகியின் ஆசிரமத்தில் தேனீர் கோப்பைகள் அனைத்தும் மிகவும் மெல்லியவையாகவே இருந்தன. அவற்றைக் கொஞ்சம் கவனமாகக் கையாளாவிட்டால் கீழே விழுந்து உடைந்து சிதறி விடும்.
இதைப் பார்த்த சீடன், குருநாதரிடம் சென்றான். "நீங்கள் ஏன் மோசமான டீ கோப்பைகளை வாங்கி வைத்திருக்கிறீர்கள்' என்று கேட்டான்.
""மோசமான டீ கோப்பைகளா, என்னப்பா சொல்கிறாய்?'
"ஆமாம். இங்கே வந்த ஒரு மாதத்தில் நான் ஏழு டீ கோப்பைகளை உடைத்து விட்டேன்.' என்றான். அந்தச்சீடன். "கொஞ்சம் காசு செலவானாலும் பரவாயில்லை என்று நல்ல,கனமான கோப்பைகளாகப் பார்த்து வாங்கி வைக்கக்கூடாதா?'
அப்படி சிஷ்யன் சொன்னதும், சுஸூகி ரோஷி சிரித்தார். "கோப்பைகளை உடைத்தது நீ. ஆனால் குற்றம் சொல்வது அவற்றின் மீது. நல்ல நியாயம்மப்பா' என்றார். "நான் பதினெட்டு ஆண்டுகளாக ஒரே டீ கோப்பையைத்தான் பயன்படுத்துகிறேன்' என்றதும்
சீடன் அதிர்ந்து போய் நின்றான். குருநாதர் தொடர்ந்து சொன்னார். " கோப்பைகளை எப்படிக் கையாள வேண்டும் என்று பழகிக்கொள்ள வேண்டியது உன்னுடைய தேவை; வேலை. அது உன்னால் முடியாவிட்டால் அதற்காகக் கோப்பைகளை மாற்றிவிடவேண்டும் என்று நினைக்காதே. மனிதன்தான் சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொள்ள வேண்டும். அவனுக்கு ஏற்பச் சூழ்நிலை மாறும் என்று எதிர்பார்த்துக்காத்திருக்கக்கூடாது.' என்றார்.
இந்தக் குட்டிக் கதை சொல்லும் நீதி: சூழ்நிலையை நாம் மாற்ற முடியாது. ஆனால், சூழ்நிலைக்கு ஏற்ப நாம் மாறிக்கொள்ள முடியும் என்பது.
அவசரத்திலோ, பதட்டத்திலோ கடகடவென தன் பிரச்னைகளை அடுக்கிவிட்டு, தன் முகவரியைக்கூட எழுதவிட்ட துறையூர் ரமணி என்கிற வாசகிக்குத்தான் இந்தக் குட்டிகதையை சொன்னேன். புரிந்ததா, ரமணி!
" காலமும் கடவுளும் என் பக்கம் இல்லை. இருந்திருந்தால் எனக்கா இப்படி எல்லாம் நடக்கும்? நான் வாய் திறந்தாலே குத்தம் குறை சொல்கிறார்கள். என்னை யாரும் புரிந்துகொள்ள வில்லையே, எனக்கு நடப்பதெல்லாம் எனக்கு எதிராகவே இருக்கிறதே! ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் விரும்பத்தகாதவைகளை சகித்துக் கொண்டு சூழ்நிலை கைதியாகி இருக்கிறேன்' என்பதுதான் கடிதத்தில் நீங்கள் சொல்ல வந்தது. உங்களை யாரும் புரிந்து கொள்ளவில்லையே என்று வருந்துவதைவிட, பிறரை நீங்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்து, அதற்கு ஏற்ப உங்களை கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள். உங்களைச்சுற்றிய இருள் விலகி, வெளிச்சம் வரும். அதைவிட்டு, கைதியாக ஏன் இருந்து புழுங்கி கொண்டிருக்க வேண்டும்? விட்டு விடுதலையாகி வெளியாக வாங்க.வானம் திறந்து தான் கிடக்கிறது.
அன்புடன்
ஸ்ரீ



வெள்ளை மாளிகையின் முதல் சமையல் ராணி!
( தினமலர் பெண்கள் மலரில் பிரசுரமான என் கட்டுரை)
நளபாகம் செய்வதில் பேர் எடுத்தவர் நளன்! அந்தப் பட்டத்தை சூட்டிக்கொள்ள தகுதியானவர் என்று ஒருவர் இருக்கிறார். அவர் பிலிபினோ. இவர் சிறந்த சமையல் கலைஞர். இவர் கைபக்குவதில் ருசிகண்டு பசியாறிய உலகத்தலைவர்கள் பலர். இவர் எங்கே ஓட்டல் வைத்து இருக்கிறார் சொல்லுங்கள் நாங்களும் ஒருபிடிபிடிக்கிறோம் என்று கேட்கிறீர்கள்தானே!
பிலிபினோ ஓட்டல் எல்லாம் நடத்தவில்லை. அவர் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் சமையல் கலைஞராக இருக்கிறார். வெள்ளை மாளிகையின் முதல் பெண் சமையல் கலைஞர் என்று பெருமை பெற்ற இவருக்கு உலக நாடுகளின் உணவு வகைகள் எல்லாம் அத்துப்படியாம்!
மெக்சிகன் நாட்டு ஜனாதிபதி பெலிப் கால்டேரான், இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல நாடுகளின் தலைவர்கள் இவரது சமையல் ருசியை ருசித்தவர்கள்.
சமீபத்தில் வெள்ளை மாளிகையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றிற்காக வந்த 300 க்கும் அதிகமான விருந்தினர்களுக்கு விருந்து படைத்தது இந்த அம்மணியின் கரங்கள்தானாம்.
48 வயதாகும் இவர், எதையும் நேர்த்தியாக செய்பவர். அதே சமயம் ரொம்பவும் பணிவானவராக இருக்கிறார். "வெள்ளை மாளிகையின் அதிபருக்கும், அவரது பிள்ளைகளுக்கும் ருசியான, ஆரோக்கியமான உணவு தந்து பராமரிப்பதுதான் என் மேலான கடமை' என்கிறார் பிலிபினோ.
***
சபாஷ் எலின்!

சமீபகாலமாய் மீடியாக்களுக்குத் தீனி போட்டு வந்தவர்கள் டைகர்உட் எலின் காதல் ஜோடி!
டைகர்உட் நல்ல கோல்ப் வீரர். எலின் ஒரு மாடல் அழகி. இருவரும் காதலித்து மணம் செய்துகொண்டவர்கள். மணவாழ்க்கையில் சாம், சார்லி என இரு குழந்தைகள். சாமுக்கு 3 வயது. சார்லிக்கு 9 மாதம்.
இந்த நிலையில் டைகர்உட் வேறு பெண்களுடன் தொடர்பு கொண்டிருக்க, வெகுண்ட எலின், மனதிலிருந்து டைகரை துõக்கி எறிந்தார். சட்டப்படி மணமுறிவு பெற்றதும், " காதல் வாழ்க்கை முடிவுக்கு வந்தவிட்டது. பெற்ற இழப்பும் துயரமும் மறந்து இனி ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழத்துவங்க உள்ளேன். இனி இரு பெண்குழந்தைகளையும் நன்கு வளர்த்து, படிக்க வைத்து அவர்களை வளர்ப்பதுதான் என் முன் இருக்கும் முதல் பொறுப்பாக உள்ளது. மேலும் சைக்காலஜி பட்டப்படிப்பை படித்துக்கொண்டிருக்கிறேன். அந்தப் படிப்பு எனக்கு மனதைரியத்தையும், வாழ்க்கைப்பற்றிய புரிதலையும், நம்பிக்கையும் கொடுத்திருக்கிறது. இந்த தைரியத்தில் தான் டைகரை உதறி தள்ளிவிட்டு, என் வாழ்க்கை, என் குழந்தைகள் என்ற புதிய சூழலில் பயணிக்கிறேன்' என்கிறார் மாடல் அழகி எலின்.
***

ஒரு நடிகையின் கேன்சர் அனுபவம்!

வாழ்க்கையில் ஒவ்வொருத்தருக்கும் ஏதோ ஒரு சம்பவம் வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டுவிடும். கேன்சர் நோய் ஒருவரின் வாழ்க்கையை அப்படியே தலைகீழாக மாற்றிபோட்டிருக்கிறது.
அவர் நடிகை லிசா ராய்! மாடலிங்கில் புகழ் பெற்ற இவர் தமிழ், ஹிந்தி, பெங்காலி படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
கடந்த ஆண்டு கேன்சர் நோய்வாய்ப்பட்டு உயிர் போராட்டம் நடத்திய லிசா,அந்த நோயிலிருந்து இப்போது மீண்டுவிட்டார். கேன்சர் நோயிலிருந்து விடுபட அவர் மேற்கொண்ட மன தைரியம், நம்பிக்கை மருத்துவர்களை ஆச்சரியப்படவைத்துவிட்டது. கேன்சர் அவருக்குத் தந்த அனுபவம் பற்றி அவர் கூறுகிறார். " கேன்சர் நோயிலிருந்து மீண்ட நான் அதை கடந்த பாதை நினைத்த போது வியந்தேன். நான் உயிர் பிழைப்பேன் என்று கற்பனைக்கூட செய்திருக்கவில்லை. கேன்சருடன் நான் போராடிய உறுதி, நம்பிக்கை, மனதைரியம் தான் என்னை பிழைக்க வைத்திருக்கிறது என்று நம்புகிறேன். இதன் மூலம் கேன்சர் நோய் எனக்குத் தந்த அனுபவம் என் முழுவாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிட்டது.' என்கிறார்.
***

பாட்டாலே புத்தி சொல்லும் ஜோடி!

பாட்டாலே பக்தி சொல்லலாம். புத்தி சொல்லலாம். அந்த அபூர்வ சக்தி பாட்டுக்கு உள்ளது என்பதை சமீபகாலமாக பெங்காலில் நிரூபித்து வருகிறார் 39 வயதான ராதா ராணி என்கிற பாடகி. பெங்கால் பாடகியான இவர் நாட்டு மக்களுக்கு பாட்டாலே பாடம் நடத்திவருகிறார். பெங்காலில் இருந்து வரும் மூடநம்பிக்கைகள், ஏற்ற தாழ்வுகள். சாதி வேறுபாடுகள், சுற்றுச்சூழல், மீன்வளம் குன்றல், குழந்தைகள் கல்வி, போலியோ, எய்ட்ஸ் நோய் பாதுகாப்பு பற்றி எல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நகரம், கிராமம், வீதிகள் தோறும் பாட்டு பாடி மக்களை சிந்திக்க வைக்கிறார்.
ராதா ராணியின் கணவர் ராபி தாஸ் நல்ல கவிஞர்; பாடகரும்கூட. "" நாங்க பாடுற பாட்டும், கூத்தும் இந்த சமுதாயத்துக்கு ஒரு படிப்பினையைத் தரும் '' என்று நம்புகின்றனர்.
***

"பிரசவ' பாதுகாப்பு

இவர் ஜீல் ஷெப்பில்டு. 61 வயதான இந்தப்பெண்மணி நல்ல கல்வியாளர்; வழக்கறிஞர். இவர் பிரசவ காலத்தில் பெண்களின் பிறப்பு,இறப்பு பற்றி விழிப்புணர்வு அமைப்பை நடத்தி வருபவர். இந்த அமைப்பின் வழியாக பெண் பிரசவ காலத்தில் இறப்பு சதவீதத்தை குறைக்கவும், அதற்குண்டான வழிமுறைகளையும் எடுக்கப்பட வேண்டிய செயல்களை உலகுக்கு சொல்லிக்கொண்டிருப்பவர்.
பிரசவ பேறு காலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையின் உயிர் போராட்ட காலம் என்று சொல்லும் இவர், பிரசவ பேறு காலத்தில் பெண்ணுக்குஒரு பாதுகாப்பு வளையத்தை நவீன நுட்பம் மூலம் தரக்கூடிய வழிமுறைகள் பற்றியும், பெண்களுக்கான சமூக பாது காப்பு, பெண் உரிமை இவைகள் பற்றி உலகின் பார்வைக்கு கொண்டு செல்பவராக இருக்கும் ஜில்லை பெண்குலம் வாயார வாழ்த்துகிறது.
தேவராஜன்

அன்புத் தோழியே,
( தினமலர பெண்கள் மலரில் வெளியாகும் பொறுப்பாசிரியர் கடிதப்பகுதியில் இடம் பெற்ற என்னுடைய கடிதக்கட்டுரை)
வணக்கம். தீபாவளி கொண்டாடிய சந்தோஷங்களோடு இருக்கும் உங்களிடம் ஒரு தித்திப்பான பண்பு பயிற்சியை கொண்டு சேர்க்கிறேன். இந்தப் பயிற்சியை நாம் பழகிக் கொண்டால் நம் வாழ்க்கை மட்டுமல்ல; நம்மை சுற்றி இருப்பவர்கள் வாழ்க்கையும் இனிக்கும்.
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக, நாகப்பட்டினத்திற்கு பஸ் பயணம். என் இருக்கை பக்கம் அமர்ந்தவர் 50 வயதை தொட்டுவிட்ட பெண்மணி. அவர் மயிலாடுதுறைக்கு பயணிக்கிறார். எங்களுக்குள் முன்பின் அறிமுகமில்லை; பழக்கமில்லை. இருந்தும் ஆசை ஆசையாய் பேசினார். நல்ல புத்தகங்கள்,கவிதைகள், ருசிகரமான தகவல்கள், அவர் சென்று வந்த வெளிநாடுகள் பற்றி பேசிக்கொண்டே வந்தார். அவர் பேச்சில் இருந்த இனிமை, வார்த்தைக்கு வார்த்தை சிரித்த முகம்... இதெல்லாம் அவர் பேச்சை மேலும் கேட்க என்னை துõண்டியது.
பஸ் பாண்டிச்சேரியை கடந்துவிட்டிருந்தது. சாலையில் "ஙொய்ய்ய... ஙொய்ய்ய்...' சைரன் ஒலி. ஆப்புலன்ஸ் ஒன்று கடந்து சென்றது. அந்தகணம் என் பக்கத்தில் இருந்த பெண்மணி, கண்ணை மூடிக்கொண்டு, உதடுகள் அசைய ஏதோ முணுமுணுத்துக்கொண்டிருந்தார். ஓரிரு நிமிடம் கடந்ததும் கண்விழித்தார்.
"" என்ன செய்தீர்கள்?'' என்றேன்.
"" ஆபுலன்ஸ்சில் யாரோ நம்மை போல் ஒருவர் உயிர்போராட்டத்தில் இருக்கலாம். அவர் உயிர் ஆபத்து நீங்க வேண்டும். பூரண குணமடைய வேண்டும்! என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன். சகமனிதனுக்கு இந்த பிரார்த்தனை உதவிக்கூடவா செய்வது கடினம்?'' என்றார்.
இதைக்கேட்டு அந்த நொடியே நான் திகைத்தேன்!
"" என் தாத்தா சொல்லித்தந்த பழக்கம் இது. நம் முன் கஷ்டப்படுகிறவர்கள், ஆபத்தில் இருப்பவர்களைப் பார்த்தால் நம்மால் முடிந்த சிறிய உதவியாவது செய்யணும். அப்படி முடியலைன்னாகூட, கடவுளிடமாவது இவருக்கு என்னால் எதுவும் உதவுமுடியலை. கடவுளே நீ அவர்களுக்கு உதவுன்னு பிரார்த்தனையாவது செய்யணும். இறந்தவர்கள் வீட்டிற்குச் சென்றால், சாலையில் இறுதி ஊர்வலம் செல்வதைக்கண்டால் நாம் கடவுளிடம் அந்த ஆத்மா சாந்தியடையணும்னு பிரார்த்தனை செய்யணும். இப்படி செய்யற இந்த சின்ன விஷயங்கள் தான் நாம் மனிதர்களாக பிறந்ததுக்கு அர்த்தம்!'' என்றார்.
இப்படி அவர் சொல்லி முடித்ததும், "" அந்த சிந்தனை எனக்குத் தோணலையே!'' என்றேன்.
"" நம் பாரத பூமியின் கலாசாரம் தானே இது? அவசர உலகத்தில் நாம் இதை எல்லாம் மறந்துவிட்டிருக்கிறோம். "வாடிய பயிரை கண்டே மனம் வாடிய வள்ளலார் பிறந்த மண்ணில் பிறந்த நமக்கு, நல்லது செய்ய சொல்லிக்கொடுக்கவேண்டியிருக்கு'' என்று வருத்தப்பட்டார்.
"" வாஸ்தவம் தான். இனி,அந்த தாத்தா சொன்ன அந்த எளிய பண்புப் பயிற்சி அந்த பெண்மணிக்கு மட்டுமல்ல; எனக்கும்,உங்களுக்கும் தான்! இந்தப் பண்பு பயிற்சியைப் பழகுவோம்! மனித நேயம் வளர்ப்போம்!
ஸ்நேகங்களுடன்,
பொ. ஆ!

பாகம்4
41 . "" நேற்று நாங்க அவதார் படம் பார்த்தோம். அது 3டி படம்னு சொல்றாங்க. 3டி படம்ன்னா என்ன தாத்தா?'' என்று சந்தேகம் கேட்டாள், அனுஷா.
"" நீங்க சாதாரண படமும் பார்த்திருக்கீங்க. இப்ப 3டி படமான அவதார் பார்த்திருகீங்க. ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் தெரிஞ்சுது?'' என்றார் தாத்தா.
"" சாதாரணமான படங்களை கண்ணாடி போடாம பார்த்தோம். ஆனால் 3டி படத்துக்கு ஸ்பெஷல் கண்ணாடி போட்டுக்கிட்டு பார்த்தோம். கண்ணாடி போட்டுக்கிட்டுப் பார்க்கும் போது, நாங்க எல்லாம் அந்தந்தக் காட்சிகளில் நடிக்கும் நடிகர்கள் கூட வே இருக்கிறமாதிரி இருந்தது'' என்றாள் சாயிபிவித்ரா.
"" கரெட்! சாயி சொன்னது மாதிரி 3டி படம் என்பது மற்றபடங்களில் இருந்து வேறுபட்டதுதான்!
தியேட்டர் இருக்கையில் இருந்து சினிமா பார்க்கும் ரசிகனை திரையில் காட்சி நடக்கும் அந்த இடத்திலேயே தானும் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் டெக்னிக் உள்ள படத்தைத்தான் 3டி படம்ன்னு சொல்றாங்க.இதை திரி டைமன்சன் (முப்பரிமாணம்)படங்கள் என்றும் ஸ்டீரியோகிராபி என்றும் சொல்வாங்க'' என்றார் தாத்தா.
"" 3டி என்றால் என்ன தாத்தா? அந்தப் படம் எப்படி எடுக்கறாங்க?'' என்றாள் திவ்யா.
"" 3டி என்றால் மூன்று கோணங்கள் சேர்ந்த பிம்பம்ன்னு அர்த்தம். சாதாரணமாக ஒரு காட்சியை ஏதோ ஒரு கோணத்தில் எடுப்பாங்க. ஆனால் 3டி படம் என்றால், ஒரு காட்சியை இருவெவ்வேறு கோணங்களில் படம் பிடித்து அதில் கிடைக்கும் காட்சியை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் இணைத்தால் முப்பரிமாணம் உள்ள காட்சியாக கிடைக்கும் இது தான் 3டி டெக்னிக்!'' என்றார் தாத்தா.
"" முப்பரிமாண காட்சியை சாதாரணமாக கண்களால் பார்க்க முடியாதா, கண்ணாடி போட்டுக்கிட்டுத்தான் பார்க்கணுமா?'' என்றான் மூர்த்தி.
"" கண்ணாடி போட்டுக்கிட்டுத்தான் பார்க்கணும். அதுவும் சாதாரண கண்ணாடி இல்ல. அதுக்குன்னு ஸ்பெஷலா குறிப்பிட்ட நிறத்தில் வடிமைக்கப்பட்டக் கண்ணாடியிலதான் பார்க்கணும்'' என்றார் தாத்தா.
"" முதல் 3டி படம் எப்ப தாத்தா வந்தது?''
""முதல் 3டி படம் உலக அளவில் வெளிவந்து 88 ஆண்டுகள் ஆகிறது.
லாஸ் ஏஞ்சலில் உள்ள அம்பாசிடர் ஓட்டல் திரையரங்கில் 1922ம்ஆண்டு செப்டம்பர் 22ல் திரையிடப்பட்ட " பவர் ஆப் லவ்' முதல் 3டி படம்.அதுதான் முதல் முயற்சி. அப்புறம்
1952ல் முழுமையான " பவனா டெவில்' 3டி படம் வெளிவந்தது.நம் நம்ம நாட்டில் 1984ம் ஆண்டில்
தமிழில் வெளியானமுதல் 3டி படம் மைடியர் குட்டிச்சாத்தான். இப்ப
வால்ட் டிஸ்னி நிறுவனம் குழந்தைகளுக்கான நிறைய கார்ட்டூன் 3டி படங்களைத் தயாரித்து வருகின்றனர். நீங்க தான் நிறைய பார்க்கிறீங்களே!'' என்றார் தாத்தா.
குட்டீஸ் கதை படிச்சாச்சு. 2 கேள்விக்கு பதில் சொல்றீங்களா?
1. 3டி என்றால் என்ன அர்த்தம்?
2. தமிழில் வந்த முதல் 3டி படம் எது?
விடை: 1.முப்பரிமாணம், 2. மைடியர் குட்டிச்சாத்தான்


42 . தாத்தா நாளிதழ் படித்துக்கொண்டிருந்தார். மேஜைவிரிப்பில் இடது பக்கம் ஓரத்தில் அழகான ஒரு பொம்மை இருந்தது. அதை உற்று கவனித்தாள் அனுஷா.
""தாத்தா, இந்த பொம்மை இவ்வளவு அழகா, அசல் குழந்தைப் போலவே இருக்கே!'' ஆச்சரியமாய் கேட்டாள்.
"" இந்த பொம்மைக்குப் பேரு பார்பி. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவங்களுக்கு இந்த பொம்மை மீது அலாதி பிரியம்.'' என்றார்.
"" பெயரே வித்தியாசமாக இருக்கே! இந்த பொம்மை பற்றி விளக்கமாக சொல்லுங்க தாத்தா'' என்றாள் சாயிபவித்ரா.
""அமெரிக்கன் டாய் கம்பெனி மெட்டல் என்கிற நிறுவனம் 1959ல் இந்த பொம்மையை உருவாக்கியது. இந்த பார்பியை வடிவமைத்தவர் ரூத் ஹேண்டர் என்ற பெண்மணி'' என்றார்.
"" இந்த பார்பி பொம்மை உருவானதற்கு ஏதாவது ருசிகரமான சம்பவம் இருக்குமே! அதை சொல்லுங்க தாத்தா'' என்றாள் திவ்யா.
"" ஒரு முறை வீட்டில் ரூத் ஹேண்ட்லர் தன் மகள் பார்பரா வுடன் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது தன் மகள் காகிதத்தில் பொம்மை வடிவம் செய்து சந்தோஷமாக விளையாடிபடிருந்தாள். இதை கவனித்த ரூத், குழந்தைகள் பொம்மைகளின் உலகத்தில்தான் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று உணர்ந்தார். அந்த சமயம் குடும்பத்தோடு 1956ல் ஐரோப்பாவுக்குச் சென்றார். அங்கே ஒரு கடையில்ஜெர்மன் பொம்மையான பில்ட் லில்லியைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.
அந்த லில்லி பொம்மை அன்றைய டை பில்ட் ஜிட்ஜங் என்ற இதழில் வந்த ஒருகாமிக்ஸ் கதையின் கதபாத்திரமாக இருந்தது. அந்த பொம்மையை வாங்கி வந்து, அவர் கற்பனையில் அதை வடிவம் மாற்றி செய்து பார்த்தார். வித்தியாசமாக வந்தது. தன் மகளுக்கு அந்த பொம்மை ரொம்பவும் பிடித்து விட்டது.
அடுத்தடுத்து பல புதிய வடிவங்கள் கொடுத்து உருவாக்கிய பொம்மைக்கு ரூத், தன்மகள்பார்பரா பெயரில் பார்பி என்று பெயரிட்டு, நியார்க்கில் மார்ச் 9, 1959 ல் அமெரிக்கன் இன்டர்நேஷனல் பொம்மை கண்காட்சியில்அறிமுகபடுத்தினார். இந்த நாள் தான் பார்பியின் பிறந்த நாளும் கூட'' என்றார் தாத்தா.
"" பார்பி பொம்மை உலகம் முழுவதும் விற்கபடுகிறதா?'' என்றான் மூர்த்தி.
"" ஆமாம். பார்பி பொம்மை 150 நாடுகளில் லட்சக்கணக்கில் வாங்கப்படுகிறது'' என்றார்.
""பார்பியை வைச்சு காமிக்ஸ் கதை வந்திருக்கிறதா?'' என்றாள் பிரியா.
""பார்பியை வைத்து அனிமேஷன் படங்கள், வீடியோ கேம், டாய் ஸ்டோரி வந்திருக்கிறது'' என்றார்.
""பார்பிக்கு இப்போ வயசு என்ன தாத்தா?'' என்றான் அருண்.
2009 மார்ச் 9ம் தேதி பார்பிக்கு 50வது பிறந்த நாள். இப்போது பார்பிக்கு வயசு 51'' என்றார் தாத்தா.
குட்டீஸ் கதை வாசிச்சாச்சு. இதில் 2 கேள்விக்கு நீங்க பதில் சொல்லுங்க.
1. பார்பியின் ரோல் மாடல் பொம்மை எது?
2. பார்பிக்கு இப்ப வயசு என்ன?
விடை: 1.பில்ட் லில்லி 2. 51 வயசு
43 .
""இது மழைக்காலம். எல்லாரும் குடை கொண்டு போறாங்க. குடை வெயிலுக்காகவா, மழைக்காகவா தாத்தா?'' சந்தேகம் எழுப்பினாள் அனுஷா.
"" இரண்டுக்கும்தான். ஆனால், மழை என்றால் குடை தான் ஞாபகத்துக்கு வரும்!'' என்றார் தாத்தா.
"" இந்தக் குடைய கண்டுபிடிச்சது யாரு தாத்தா?'' என்றாள் சாயிபவித்ரா.
""குடையை முதலில் கண்டுபிடித்தவர்கள் யாரென்று தெரியவில்லை. பொதுவாக எல்லாரும் இப்ப பயன்படுத்தும் குடையும் ஒரு சீன கண்டுபிடிப்பே என்று நம்பப்படுகிறது.'' என்றார் தாத்தா.
"" நம்ம இந்தியாவுல எப்ப குடை பயன்படுத்த ஆரம்பிச்சாங்க?'' தாத்தாவிடம் கேட்டாள் திவ்யா.
""குடையும் செருப்பும் இல்லாமல் மாடுமேய்க்க கண்ணனை அனுப்பிவிட்டேனே என்று யசோதை வருந்துவதாக ஒரு பாடல் பெரியாழ்வார் திருமொழியில் வருகிறது. இதிலிருந்து குடை துவாபரயுகத்திலிருந்தே இருப்பது புலனாகிறது. வாமன அவதாரத்துக்குழந்தை தாழங்குடையுடன் வருவதாக சிற்பங்களும் ஓவியங்களும் இருக்கின்றன.
புராணங்களில் வெண்கொற்றக்குடையின் கீழ் இருந்து அரசாண்ட மன்னர்களைப்பற்றி எல்லாம் விவரிக்கப்பட்டுள்ளது.'' என்றார் தாத்தா.
"" அப்படினா நாம தான் குடைக்கு முன்னோடியா?'' என்றான் ஆர்வமாய் மூர்த்தி.
""15ம் நுõற்றாண்டிலிருந்து எகிப்து, அசீரியா, கிரீஸ், சீன மக்கள் குடையைப் பயன்படுத்தியதாக வரலாற்று குறிப்புண்டு.16ம் நுõற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் குடை பிரபலமடைந்து, அதற்கு அம்ப்ரெல்லா என்ற பெயர் உருவானது. அம்ப்ரா என்ற லத்தின் வார்த்தைக்கு நிழல் என்று பொருள்.'' என்றார் தாத்தா.
"" முதலில் குடைகள் எப்படி உருவாக்கினாங்க?'' என்று கேட்டாள் ப்ரியா.
"" சீனாவில் குடைகள் முதலில் பட்டினாலும் பின், காகிதம், தாளில் செய்யப்பட்டன. தாளில் தண்ணீர் ஒட்டாமலிருக்க மெழுகையும் எண்ணையும் ஊற்றி வைத்தனர். பிறகு, குடைகள் கம்பிகள், ஆதரக்கோல் , கைப்பிடி முதலியவை மரத்துண்டுகள், மூங்கில் ஆகியவற்றால் செய்தனர்'' என்றார் தாத்தா.
"" குடை பற்றி விந்தையான தகவல் ஏதாவது உண்டா?'' என்றான் அருண்.
""அரச குடும்பத்தினர் செந்நிறம், மஞ்சள் நிறம் கொண்ட குடைகளை பயன்படுத்தினர். சாதாரண மக்கள் நீலநிற குடையை பயன்படுத்தினர். முதலில் செய்யப்பட்ட குடைகள் மடக்க முடியாத குடைகளாக இருந்தன.
1830ம் ஆண்டில் துவங்கப்பட்ட ஜேம்ஸ் ஸ்மித் அண்ட் சன்ஸ் என்ற கடைதான் குடைக்கான முதல் கடை.
குடைகளில் பல வகையுண்டு. கம்பி மற்றும் பிரம்பில் கறுப்புத்துணியால் போர்த்தப்பட்ட துணி குடை, தாழங்குடை, சம்பங்குடை, பனங் குடை என உள்ளது. கேரளாவில் தாழங்குடை அதிகம். திருநெல்வேலியில் பனங்குடை அதிகம்.'' என்றார் தாத்தா.
குட்டீஸ் கதை படிச்சிங்கள? இப்ப, 2 கேள்விக்கு பதில் சொல்றீங்களா?
1. அம்ப்ரா என்பது என்ன மொழி வார்த்தை? அதன் பொருள் என்ன?
2. அரச குடும்பத்தினர் என்ன நிற குடைகள் பயன்படுத்தினார்கள்?
விடை: 1. லத்தீன் சொல்.பொருள்: நிழல் 2. செந்நிறம், மஞ்சள் நிறம்.


43. ஒரு கடிதத்தை தன் பேரப்பிள்ளைகளிடம் கொடுத்து, தபால் பெட்டியில் போட்டுவருமாறு சொன்னார். கடிதத்தை தபால் பெட்டில் போட்டுவிட்டு வந்தனர் பேரப்பிள்ளைகள்.
"" தாத்தா, எங்க பார்த்தாலும் தபால் பெட்டி சிவப்பு நிறத்திலேயே இருக்கே. சிவப்பு நிறத்தில்தான் இருக்கணும்னு எதாவது விதி முறை இருக்கா?'' என்றாள் அனுஷா.
"" அப்படி எல்லாம் எதுவும் கிடையாது.
ஆரம்ப காலத்தில் தபால் பெட்டி எல்லாமே பச்சை நிறத்திலேதான் வெச்சிருந்தாங்க. அப்புறம் தான் 1874ல் சிவப்பு நிறத்தில் இருக்கட்டும்னு லண்டன்லே முடிவு செய்தாங்க. அதை செயல்படுத்தினாங்க.'' என்றார் தாத்தா.
"" இந்தியாவில் சிவப்பு நிறத்தில் தபால் பெட்டி இருக்கு. மற்ற நாடுகளில் எல்லாம் எந்தெந்த நிறத்தில் இருக்கிறது தாத்தா?'' என்றாள் சாயிபவித்ரா.
""உலகத்தை ஒரு ரவுண்டு சுத்திட்டு வந்தா, எல்லா விதமான நிற தபால் பெட்டிகளைப் பார்த்திடலாம்.சீனா, ஹாங்காங் தைவான் இர்லேண்ட் நாடுகளில் பச்சை நிறமும்,
ஜெர்மணி, இத்தாலி, சுவீடன், ரஷ்யா நாடுகளில் நீல நிறமும்,
ஆஸ்திரேலியா, பிரேசில் கிரீஸ், மலேசியா, நார்வே நாடுகளில் மஞ்சள் நிறமும்,
அர்ஜென்டினா, கனடா, இந்தியா, ஜப்பான், பெல்ஜியம் நாடுகளில் சிவப்பு நிறமும், இந்தோனிஷியா, நெதர்லாந்தில் ஆரஞ்சு நிறமும், சான் மரினோவில் வெள்ளை நிறமும், பிலிப்பைன்ஸ் நாட்டில் கிரே நிறமும் தபால் பெட்டிக்கு நிறமாக பயன்படுத்துறாங்க'' என்றார் தாத்தா.
"" முதன்முதலா தபால் பெட்டி பயன்பாட்டை எப்போ, எந்த நாட்டில் ஆரம்பிச்சாங்க?'' என்றாள் திவ்யா.
""முதல் தபால் பெட்டி பாரீஸ்ல 1653ல அறிமுகம் செய்யபட்டதாம். அப்புறம் பிரான்ஸ்லே 1829ல செயல்படுத்தினாங்க. பில்லர் போஸ்டை பிரிட்டீஷ்காரங்க 1874ல அறிமுகம் செய்ததும் அது பிரபலமானது.'' என்றார் தாத்தா.
"" தாத்தா, தபால் பெட்டியில் சில அடையாள குறியீடு எல்லாம் போட்டிருக்கே. எல்லா நாட்டுக்கும் ஒரே குறியீடுதானா?'' என்றான் மூர்த்தி.
""ஆஸ்திரேலியா "பி' என்றும்,கனடா பறவை பறப்பது போன்றும்,
ஐரோப்பா தபால் காரர் வருவது போலவும், ஐயர்லாந்து "எஸ் ஈ' என்றும்,
ரஷ்யா ரஷ்யன் போஸ்ட் என்றும் நீலம் மற்றும் கறுப்பு மஞ்சள் நிறத்தில் எழுதப்பட்டிருக்கும்,ஜப்பான் "டி' என்றும், யுனிடேட் ஸ்டேட் கழுகு படமும் தபால் பெட்டிகளில் அடையாள குறியீடாக பொறித்திருக்காங்க'' என்றார் தாத்தா.
"" எல்லா நாட்டிலும் போஸ்ட் பாக்ஸ்ன்னுதான் பெயரா?'' என்றான் அருண்.
"" கலெக்ஷன் பாக்ஸ், மெயில் பாக்ஸ், டிராப் பாக்ஸ் லெட்டர் பாக்ஸ் என்றும்,
லேம் பாக்ஸ், பில்லர் பாக்ஸ், வால் பாக்ஸ்,லட்லோ வால் பாக்ஸ் என்றும் சொல்லப்படுகிறது.'' என்றார் தாத்தா.
குட்டீஸ் கதை படிசாச்சு. இப்ப 2 கேள்விக்கு பதில் சொல்றீங்களா?
1. கனடா நாட்டு தபால் பெட்டியின் அடையாள குறியீடு என்ன?
2. தபால் பெட்டிக்கு வெள்ளை நிறம் தந்திருக்கும் நாடு எது?
விடை: 1.பறவை பறப்பது 2. சான் மரினோ

கதைவாசி விடையோசி

44 . "" தாத்தா, நாளைக்கு கிறிஸ்துமஸ் பண்டிகைதானே! கிறிஸ்துவர்கள் வீட்டில் எல்லாம் பெரிசு பெரிசாஅழகான நட்சத்திரங்கள் கலர் கலரா செய்து, அதில் லைட்டிங் எல்லாம் வைச்சிருக்கிறாங்க. பார்க்கிறதுக்கே ரொம்ப அழகா இருக்கு! எதுக்கு நட்சத்திர வடிவத்தை வீட்டில் தொங்கவிட்டிருக்காங்க?'' என்று சந்தேகம் கேட்டாள், அனுஷா.
"" நல்ல சந்தேகம்தான் உனக்கு வந்திருக்கு. ஏசு கிறிஸ்து பிறந்திருக்கும் இடத்தை மக்களுக்குத் தெரிவிக்க வானில் தோன்றிய நட்சத்திரம் நகர்ந்து ஏசு பிறந்த இடத்தைச் சுட்டிக்காட்டியதால் ஏசுவின் பிறப்பை நட்சத்திர அடையாள சின்னமாக கிறிஸ்துவர்கள் நினைக்கிறாங்க'' என்றார் தாத்தா.
"" சிலர் வீடுகளில் அழகா மரங்களைப் போல செட் செய்து அதில் லைட்டிங், நட்சத்திரம், கலர் பேப்பர் எல்லாம் ஒட்டி வைச்சிருக்காங்களே, அது எதுக்கு தாத்தா?'' என்றாள் சாயிபவித்ரா.
"" இதுவும் ஒரு ஞாபகச்சின்னம்தான். இந்த கிறிஸ்துமஸ் மரம் வைக்கிற பழக்கம் 16ம் நுõற்றாண்டில் இருந்து இருக்கு. ஜெர்மன், லிவோனியாவில் கிறிஸ்துமஸ் மரம் வைச்சி கொண்டாடி இருக்காங்க.
மார்டின் லுõதர் என்ற மன்னர் நிறுவிய கிறிஸ்துமஸ் மரத்துக்கு அவர் சொன்ன அர்த்தம் என்னவென்றால் "மரம் என்றால் வாழ்க்கை என்றும் மரங்கள் நிறைந்த ஏதேன் கார்டனை குறிப்பது என்றும் மரத்தில் இருக்கும் நட்சத்திரம் பெத்லேகத்தை குறிப்பதுன்னு சொல்லியிருக்கார். அதனால்தான் கிறிஸ்துவர்கள் ஒவ்வொருத்தரும் ஏதேன் கார்டனை தங்கள் வீட்டில் கொண்டு வந்ததாக நினைச்சி இந்த கிறிஸ்துமஸ் மரம் வைச்சு கொண்டாடுறாங்க'' என்றார் தாத்தா.
"" இந்த கிறிஸ்துமஸ் மரம் எப்ப வைக்கணும், எப்ப எடுத்துவிடணும்னு ஏதாவது கணக்கு இருக்கா தாத்தா?'' என்றாள் திவ்யா.
"" டிசம்பர் மாதம் 24ம் தேதி வைத்து அதில் இருந்து 12 இரவுகள் கழித்து அதாவது ஜனவரி மாதம் 6ம் தேதி எடுத்துவிடனும் என்பது பொதுவான வழக்கம். ஆனால் சில நாடுகளில் இந்த நாள் கணக்கு வித்தியாசப்படறதும் <உண்டு'' என்றார் தாத்தா.
"" டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வந்து சில வீடுகளில் குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களைக்கொடுக்கிறாரே, ஏன்?'' என்றான் மூர்த்தி.
"" நிக்கோலஸ் என்ற ஒரு கிறிஸ்துவத் துறவி கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் விதமாக ஏழைகளுக்கும், நல்ல குழந்தைகளுக்கும் பரிசுப் பொருட்களைக் கொடுப்பதை வழக்க வைச்சிருந்தார்.அவர சன்டா க்ளஸ் என்றும் சொல்றதுண்டு.அவருடை அந்த நல்லக்குணத்தை பின்பற்றி கிறிஸ்துவர்கள் டிசம்பர் 6ம் தேதியை அவர் நினைவாக கிறிஸ்துமஸ் தாத்தா விழாவாக கடைபிடிக்கிறாங்க. அந்த நாளில் தாத்தா வேஷம் போட்டு சிவப்பு அங்கி அணிந்துகொண்டு குழந்தைகளோடு ஆடி, பாடி பரிசு தந்து மகிழ்வாங்க'' என்றார் தாத்தா.
குட்டீஸ் கதை படிச்சிட்டீங்களா? கதையில் இருந்து 2 கேள்விக்கு பதில் சொல்றீங்களா?
1. கிறிஸ்துமஸ் தாத்தாவின் முன்னோடி யார்?
2. கிறிஸ்துமஸ் மரம் எத்தனை இரவுகள் வைத்திருக்க வேண்டும்?
விடை: 1.நிக்கோலஸ், 2. 12 இரவுகள்


45 . "" தாத்தா, வகுப்பில் பாடம் சொல்லித் தந்த அறிவியல் ஆசிரியர் சென்னையில் இருக்கும் அருங்காட்சியகத்தைப் பற்றி சொன்னார். அவர் சொன்ன சில விஷயங்கள் ஆச்சரியம் தந்தது. ஆமாம், தாத்தா நீங்க அந்த அருங்காட்சியகத்திற்குப் போயிருக்கீங்களா?'' என்று கேட்டாள் அனுஷா.
"" ஓ! போயிருக்கேனே!'' என்றார் தாத்தா.
"" அப்படின்னா அருங்காட்சியத்தைப் பற்றி எங்களுக்கு சொல்றீங்களா?'' என்றாள் சாயிபவித்ரா.
""படிக்கும் மாணவர்களுக்கு பொழுதுள்ள பொழுது போக்கு கல்விச்சுற்றுலா. உங்களைப் போன்ற படிக்கும் பிள்ளைகள் விடுமுறையில்
சென்னை எழும்பூரில் அமைந்திருக்கும் அருங்காட்சியகத்திற்குச் சென்று பார்ப்பது மனதுக்கு மகிழ்ச்சியையும், அறிவு வளர்ச்சியையும் தரக்கூடியது.'' என்றார் தாத்தா.
"" அங்கே அப்படி என்னத்தான் இருக்கு தாத்தா?'' என்றாள் திவ்யா.
"" அங்கிருக்கும் பொருட்கள் நம் வரலாறு, பண்பாடு,நாகரீகத்தை கண்கூடாக காட்சிப்படுத்தி சொல்லித்தருகிறது.'' என்றார் தாத்தா.
"" அருங்காட்சியகம் எப்போ தொடங்கினாங்க?'' கேள்வி எழுப்பினான் மூர்த்தி.
""1851ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அரசு அருங்காட்சியகத்தில் 80 ஆயிரத்திற்கு மேலான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நாட்டின் பல இடங்களில் அகழ்வராய்ச்சியின் போது கிடைத்த பொருட்கள், கற்சிலைகள், ஆபரணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.'' என்றார் தாத்தா.
"" அது என்னென்ன பொருட்கள் தாத்தா?'' என்றான் அருண்.
""சிந்துசமவெளி நாகரீகத்தின் எச்சமாக இருக்கும் மொகஞ்சதாரோவில் எடுக்கப்பட்ட தானிய தாழிகள், அணிகலங்கள், தாமிரம், பஞ்சலோகத்தினால் ஆன சிலைகள்,
பல மாநிலங்களின் உடை, பண்பாட்டை எடுத்துக்காட்டும் பொம்மை கண்காட்சி, அறிவியல் கண்டுபிடிப்புகள் அவற்றின் செயற்பாடுகளை விளக்கி காட்டும் அறிவியல் அரங்கம்,
ரவிவர்மா உட்பட பல ஓவியர்களின் நிஜ ஓவியங்கள் எல்லாம் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.'' என்றார் தாத்தா.
"" அட, ஆச்சரியமாக இருக்கே இவ்வளவு பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கா, வேறென்ன தாத்தா நீங்க பார்த்திங்க?'' என்றாள் பிரியா.
""திமிங்கலத்தின் எலும்புகூடு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 60 அடி. யானை, குதிரை, புலி, சிங்கம், மான் என பலவகை விலங்குகளுடன் மனித எலும்புகூடும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
பாம்பு, ஓணான், பல்லி, ஆமை, புலி,வாத்து, கொக்கு, குருவி போன்ற பறவை, விலங்கினங்களை அப்படியே பதப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இன்னொரு அதிசயப் பொருள் 200 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மரமாக இருந்து கல்லாக மாறிய கல்மரம் துண்டு ஒன்றும் இருக்கு.'' என்றார் தாத்தா.
குட்டீஸ் கதை படிச்சாச்சு. 2 கேள்விக்கு பதில் தர்றீங்களா?
1. அருங்காட்சியகம் எப்போ தொடங்கப்பட்டது?

2. அருங்காட்சியகத்தில் உள்ள கல்மரத்துண்டின் காலம் எவ்வளவு?
விடை: 1. 1851, 2. 200 லட்சம் ஆண்டுகள் பழமையானது.

46 . ""தாத்தா, எனக்கு பிரண்ட்ஸ்ங்க "ஹேப்பி நியூ இயர்' வாழ்த்து அட்டை அனுப்பி இருக்காங்க. ஆங்கிலேயர் தானே ஆங்கிலப்புத்தாண்டை கொண்டாடுனும் நாம் ஏன் கொண்டானும்?'' என்று கேள்வி எழுப்பினாள் அனுஷா.
"" நல்ல கேள்வி கேட்டிருக்க. உலகம் முழுவதும் பல வகையான புது ஆண்டுகள் பிறப்பு நடைமுறையில் உள்ளன. பொதுவாக உலகில் பல நாடுகள் ஆங்கில புத்தாண்டை கொண்டாடுறாங்க.'' என்றார் தாத்தா.
"" ஆங்கில புத்தாண்டு எப்படி வந்தது தாத்தா?'' என்று ஆர்வமாய் கேட்டாள் சாயிபவித்ரா.
""ஆங்கில புத்தாண்டு பிறப்பு என்பது கிறிஸ்துவின் பிறப்பை வைத்து கிரிகேரியன் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. அந்தக் காலண்டரில் ஏசு பிறந்த டிசம்பர் 25 ம் தேதியை கிறிஸ்துமஸ் தினம் என்றும், ஏசு பிறந்த 8வது நாள் அவருடைய பெற்றோர்களால் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு அவர் ஞானஸ்தானம் பெற்ற நாளையே ஆண்டின் முதன்நாளாக ஆரம்பிக்க வேண்டும் என்ற கருத்தில் ஜனவரி1 தேதியை குறிப்பிட்டார்.
கிரிகேரியன் பழகத்தை வலியுறுத்தும் கிரிகேரியன் காலண்டரை உலகஅளவில் பிரிட்டிஷ்காரர்கள் பரப்பிவிட்டனர். இதனால் உலக அளவில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடுவது வழக்கமாக உள்ளது'' என்றார் தாத்தா.
"" ஜனவரி முதல் தேதி அல்லாத ஆண்டுபிறப்புகள் கொண்டாடும் நாடுகள் உண்டா?'' என்றாள் திவ்யா.
""பழங்காலத்தில் எகிப்து மக்கள் நைல் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் நாளைபுத்தாண்டாக கொண்டாடினர்.இது செப்டம்பர் மாத இறுதியில் வரும்.
பாபிலோனியர்கள் வசந்த காலத்தை புத்தாண்டாக கொண்டாடி வந்தனர். ரோமானியர்கள் புத்தாண்டை மார்ச் மாதத்தொடக்கத்திலேயே கொண்டாடி வந்தனர்.
சீனா மற்றும் வியட்நாம் நாடுகள் தங்கள் புத்தாண்டை ஜனவரி 21ம் தேதியில் கொண்டாடி வருகின்றனர்.
பிப்ரவரியை திபெத்திலும், ஈரானில் மார்ச் மாதத்திலும் புத்தாண்டு கொண்டாடுகின்றனர்.
ஏப்ரல் மாதத்தில் தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, விஷூ(கேரளா), பெங்காலி, சிங்களர் புத்தாண்டு கொண்டாடி வருகின்றனர்.
அக்டோபர், நவம்பரில் வரும் தீபாவளி தினத்தை குஜராத்திகளுக்கு புத்தாண்டு. இது தவிர, ஹிஜிரி எனப்படும் இஸ்லாமிய ஆண்டு மொகரம் மாதத்தில் துவங்கும்.
ஐரோப்பியர், சீனர், ஜப்பானியர், கொரியர், மங்கோலியர்கள் தங்களுடைய புத்தாண்டைஇளவேனில் காலமான ஜனவரியிலேயே ஆரம்பிக்கின்றனர்.'' என்றார்.
"" தமிழர்களுக்கு எது புத்தாண்டு பிறப்பு?'' என்றான் மூர்த்தி
"" சித்திரை முதல் தேதியை தமிழ்வருடப்பிறப்பாக கொண்டாடிவந்தது மரபாக இருந்தது. தை முதல் தேதியை தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாட வேண்டும் என்று ஜன.29, 2008ல் தமிழக அரசு ஆணைப்பிறப்பித்துள்ளது. அதிகாரப்பூர்வமா தை முதல் தேதிதான் தமிழ் வருடப்பிறப்பு.'' என்று சொல்லி முடித்தார் தாத்தா.
குட்டீஸ் கதை கேட்டாச்சு. இப்ப 2 கேள்விக்கு பதில் சொல்றீங்களா?
கேள்வி: 1. ஜனவரி முதல் தேதி ஆண்டுபிறப்பாக வலியுறுத்தும் காலண்டரை வடிவமைத்தவர்யார்?
2. அரசு அறிவித்துள்ள தமிழ்ப்புத்தாண்டு தினம்எது?
விடை: 1. கிரிகேரியன், 2. தை முதல்தேதி.

47. ""தாத்தா, மார்கழி மாதம் வந்தாலே கோயில்களில், சபாக்களில் கர்நாடக இசைக் கச்சேரி நடக்கிறதே, ஏன்?'' என்று கேட்டாள் அனுஷா.
""மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கிருஷ்ணர் சொல்லியிருக்கார் இல்லையா? அதனால், இந்த மாதத்தில் பக்தி பாடல்கள் கேட்டால் புண்ணியம் என்று கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்துறாங்க'' என்றார் தாத்தா.
"" கர்நாடக இசை என்பது என்ன?'' என்றாள் சாயிபவித்ரா.
""கர்நாடகம் என்றால் பழமைன்னு அர்த்தம். இந்த இசை தென்னிந்திய இசை வடிவமாகும்'' என்றார் தாத்தா.
""தென்னிந்தியாவின் இசை கர்நாடக இசை என்றால், வட இந்தியாவின் இசை எது?'' என்று கேட்டாள் திவ்யா.
"" வட இந்தியர்களின் பாரம்பரிய இசை இந்துஸ்தானி'' என்றார் தாத்தா.
"" கர்நாடக இசையைப்பற்றி கொஞ்சம் விவரமாச் சொல்லுங்க தாத்தா?'' என்று ஆசையாய் கேட்டான் மூர்த்தி.
""தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோரை சங்கீத மும்மூர்த்திகள் என்பார்கள். இவர்கள் ஆயிரக்கணக்கான கீர்த்தனைகளை எழுதியுள்ளனர்... இவர்களைப்போல் முத்துத் தாண்டவர், அருணாசலகவிராயர், மாரிமுத்துபிள்ளை ஆகியோரை தமிழிசை மும்மூர்த்திகள் என்பார்கள். இவர்கள் மூவரும் எழுதிய தமிழிசைப் பாடல்களும் மிகவும் பிரபலமானவை'' என்றார் தாத்தா.
""ராகங்களின் அடிப்படை ஏழு ஸ்வரங்கள் என்கிறார்களே, அப்படின்னா என்ன?'' என்றாள் பிரியா.
""ஷட்ஜமம்,ரிஷபம், காந்தாரம், மத்திமம்,பஞ்சமம், தைவதம், நிஷாதம் ஆகிய ஏழு ஸ்வரங்கள்தான் கர்நாடக இசையின் அடிப்படை. இவற்றை அவற்றின் முதல் எழுத்துக்களை வைத்து சுருக்கமாக சரிகமபதநி என்று குறிப்பிடுவார்கள். இந்த ஏழு ஸ்வரங்களையும் விதவிதமாக இணைக்கும்போது விதவிதமான ராகங்கள் உருவாகின்றன!'' என்றார் தாத்தா.
""பக்க வாத்தியம்னு சொல்றாங்களே, அதென்ன?'' என்றாள் அனுஷா.
""இசைக்கருவிகளில் இசைப்பது பக்க வாத்தியம். கர்நாடகப் பாட்டுக் கச்சேரிகளில் புல்லாங்குழல், கொட்டுவடயம், ஆர்மோனியம், வீணை, மிருதங்கம், கஞ்சிரா, கடம், வயலின் உள்ளிட்ட கருவிகளை பக்கவாத்தியமாகப் பயன்படுத்துறாங்க. இந்தக் கருவிகளைத் தனியாகப் பயன்படுத்தி தனிக் கச்சேரியும் நடத்துவாங்க'' என்றார்தாத்தா.
""புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடகர்கள் யார் யார் தாத்தா?'' என்றாள் திவ்யா.
""நிறைய பேர் இருக்காங்க! செம்மங்குடி சீனிவாசய்யர், எம்.எஸ். சுப்புலட்சுமி, டி.கே.பட்டம்மாள், பாலமுரளி கிருஷ்ணால்லாம் சர்வதேசப் புகழ்பெற்ற இசைமேதைகள்... ஐ.நா.சபையிலே கூட எம். எஸ். சுப்புலட்சுமி பாடியிருக்காங்க!'' என்றார் தாத்தா.
குட்டீஸ் கதை படிச்சிட்டீங்க... இப்ப 2 கேள்விக்குப் பதில் சொல்லுங்க:
1. சங்கீத மும்மூர்த்திகள் யார்?
2. ஏழு சுரங்கள் எவை?
விடை:
1.தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சதர், சியாமா சாஸ்திரிகள். 2. ச, ரி, க, ம, ப, த, நி.
.............



கதைகேளு விடையோசி

47 . "" தாத்தா,அடுத்த வாரம் குடியரசு தினம் வருதே... குடியரசுன்னா என்ன?'' என்றாள் அனுஷா.
"" குடியரசு என்றால் குடிமக்களின் அரசு அதாவது மக்களாட்சி என்று பொருள். மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் மூலம் தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் மூலம் ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதற்குப் பெயர்தான் குடியரசு முறை... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எப்படி ஆட்சி செய்யவேண்டும் என்பதை நிர்ணயிப்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இது 1950ம் ஆண்டு ஜனவரி 26ல் அமலாக்கப்பட்டது. அதனால் இந்த நாளை நாம் குடியரசு தினமாக கொண்டாடி மகிழ்கிறோம்'' என்றார் தாத்தா.
""அரசியல் சட்டத்தை யாரு உருவாக்கினாங்க தாத்தா?'' என்றான் மூர்த்தி
""முதலில் சச்சிதானந்த சின்காங்கற தலைவர் தலைமையில் அரசியல்சட்டப் பேரவையை அமைச்சாங்க. அதில் நேரு, பட்டேல், ராஜேந்திரபிரசாத், ராஜாஜி, சரோஜினிநாயுடு, அம்பேத்கர், அபுல்கலாம் ஆசாத், சியாம் பிரசாத் முகர்ஜின்னு நிறைய தலைவர்கள் உறுப்பினர்களா இருந்தாங்க. பிறகு அந்தப் பேரவைக்கு ராஜேந்திரபிரசாத்தைத் தலைவராகத் தேர்வு செய்தாங்க. அரசியல்சட்டத்தை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்த தலைவர், அம்பேத்கர்!'' என்றார் தாத்தா.
""நமக்கு சுதந்திர தினம் முக்கியமா, குடியரசு தினம் முக்கியமா?'' என்று கேட்டாள் சாயிபவித்ரா.
"" இரண்டுமே முக்கியமானவைதான். பிரிட்டிஷ் காலனியாட்சி நீங்கிய 1947 ஆகஸ்டு 15ம் தேதி... அதாவது நம்ம சுதந்திர தினத்தை முக்கியமில்லேன்னு சொல்ல முடியாதே! சுதந்திர தினம், நாம யாருக்கும் அடிமை இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது; குடியரசு தினம், நாமே நம்மை ஆட்சி செய்கிறோம் என்பதை வெளிப்படுத்துகிறது!'' என்றார் தாத்தா.
""சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தமிழகத் தியாகிகள் யார்,யார்?'' என்றாள் திவ்யா.
""வ.உ.சிதம்பரனார், பாரதியார், வ.வே.சு. ஐயர், சுப்ரமண்ய சிவா, வீரவாஞ்சி, கொடிகாத்தகுமரன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ஜீவானந்தம், ராஜாஜி, காமராஜர்... இன்னும் எத்தனையோ லட்சக்கணக்கான தியாகிகள் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டிருக்கிறார்கள்'' என்றார் தாத்தா.
""வட இந்தியாவிலும் இப்படி நிறைய தியாகிகள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடினாங்கள்லே?'' என்றான் மூர்த்தி.
""கோபாலகிருஷ்ண கோகலே, திலகர், லாலா லஜபதி ராய், தாதாபாய் நவ்ரோஜி, காந்திஜி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் பட்டேல், நேரு, ஆச்சர்ய வினோபா பாவே, சித்ரஞ்சன்தாஸ் என்று இந்தத் தலைவர்களின் பட்டியலும் நீண்டுகொண்டே போகும்! சுதந்திரம் வாங்கறதுக்கும், குடியரசு ஆட்சியைத் தொடங்குவதற்கும் எவ்வளவு கஷ்டப்பட்டுருக்காங்க? சுதந்திரத்தையும் மக்களாட்சி முறையையும் பாதுகாக்கறது நம்ம கடமை!'' என்றார் தாத்தா.
குட்டீஸ் கதை படிச்சிட்டீங்களா? இப்ப 2 கேள்விக்கு பதில் சொல்லுங்க:
1. குடியரசு என்றால் என்ன பொருள்?
2. தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள் 3 பேரின் பெயர்களைக் கூறு?
விடை: 1.மக்களாட்சி; 2. வ.உ.சி., பாரதி, சுப்ரமணியசிவா.

48.
"" தாத்தா, ஜல்லிக்கட்டு விளையாடுறாங்களே, அது ஆபத்தான விளையாட்டா?'' என்றாள் அனுஷா.
"" ஆமாம்! ஆனாலும் அது தமிழர்களின்வீர விளையாட்டு.'' என்றார் தாத்தா.
"" ஜல்லிக்கட்டுன்னு எதுக்கு பெயர் வந்தது?'' என்றாள் சாயிபவித்ரா.
"" பண்டைக்காலத்தில் ஏறுதழுவுதல் என்றுதான் இருந்தது. இருப்பினும் ஏறுகோள், மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.'' என்றார் தாத்தா.
"" ஜல்லிக்கட்டு பற்றி இலக்கியங்களில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது தாத்தா?'' என்றான் மூர்த்தி
""காடும் காடுசார்ந்த நிலம்முல்லை. இந்த நில மக்களின் திருமணத்துடன் தொடர்புடையதாக இந்த வீர விளையாட்டு பண்டைக்காலத்தில் இருந்தது. இன்று தென்தமிழகத்தின் மதுரை மாவட்டம் சார்ந்த பகுதிகளில் இவ்விளையாட்டு ஆர்வமாக நிகழ்த்தப்படுகிறது.
தமிழர்களின் பண்பாட்டு, சமயம்சார்ந்த திருவிழாவாகவும், இளைஞர்களின் வீர உணர்வை நினைவுகூரும் விழாவாக இலக்கியங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது.'' என்றார் தாத்தா.
"" எந்த இலக்கியங்களில், என்ன சொல்லப்பட்டிருக்கிறது தாத்தா?'' என்றாள் திவ்யா.
""கலித்தொகையில் முல்லைக்கலி, மலைபடுகடாம், பட்டினப்பாலை, சிலப்பதிகாரம் இவற்றில் ஏறுதழுவுதல் பற்றிய குறிப்புகள் உள்ளன.
ஏறுதழுவுதலுக்கு முதல்நாள் அல்லது அன்றைய நாளில் குரவைக்கூத்து நடைபெறும். முதல்நாள் நடந்தால் பெண்கள் ஏறுதழுவுதல் வீரன் வெற்றிபெற வேண்டிபாடுவர், ஏறுதழுவுதலின் நாளின் மாலையில் குரவை க்கூத்து நடைபெற்றால் வெற்றிபெற்ற வீரனின் வெற்றியைப்புகழ்ந்துபாடுவர்.
முல்லைக்கலியில் மாடுகளின் நிறம், மாடுகளின் வகை, மாடுகளின் வீரம், அதனை அடக்கும் வீரனின் செயல், பரண்மீது அமர்ந்துபார்க்கும் பெண்களின் பேச்சுகள், பெண்களைப் பெற்ற பெற்றோரின் இயல்பு சிறப்பாக சொல்லப்பட்டுள்ளன.'' என்றார் தாத்தா.
"" ஜல்லிக்கட்டுக்கு இத்தனை சிறப்புகளா!'' என்று வியந்த அருண்,"" இன்னும் வேறு சிறப்புகள் இருந்தா சொல்லுங்க தாத்தா'' என்றான்.
""ஏறுதழுவுதலுக்கு முன்பாக இளைஞர்கள் நீர்த்துறையிலும், ஆலமரத்தின் கீழும், மாமரத்தின்கீழும் உள்ள தெய்வங்களை வணங்கி முறைப்படி காளைகளை அடக்க புறப்படுவார்கள்.
காலப் பழமையால் பல மாற்றங்களுடன், சமூக நிலைகளுக்கு ஏற்பவும் இவ்வீர விளையாட்டு நிகழ்த்தப்பட்டாலும்கூட, இது தொன்மை யும், மக்களின் பண்பாடும் சார்ந்தது. பண்டைய தமிழர்களின் எஞ்சியிருக்கும் பண்பாட்டு கூறுகளுள் ஒன்று ஏறுதழுவுதல். இது தமிழனின் அடுத்தடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கப்படணும் என்பது ஒரு சாரார் கருத்து. உயிர் பலி, விலங்குகளை வதை செய்யும் விளையாட்டிதை தடை செய்யப்படவேண்டும் என்று சொல்லும் சாராரும் உண்டு'' என்றார் தாத்தா.
குட்டீஸ் கதைப்படிச்சாச்சு. இப்ப 2 கேள்விக்கு விடை சொல்லுங்க.
1. ஜல்லிக்கட்டின் வேறு பெயர்கள் என்ன?
2. ஜல்லிக்கட்டின் சிறப்புகள் கூறும் இலக்கியங்கள் எது?
விடை: 1. ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல்.
2. முல்லைக்கலி, பட்டினப்பாலை, சிலப்பதிகாரம்







மேஜிக் மேஜிக்
56 . மாயமாய் வந்து போகும் ஒயர்!

தேவையான பொருட்கள்: சிறிய ஒயர் துண்டு, செல்லோ டேப்

செய்முறை: இந்த மேஜிக் செய்வது மிக சுலபம். ஆனால், பார்வையாளர்களை தந்திரமாக ஏமாற்றுவது ரொம்ப கடினம். ஆதலால் மேஜிக் சீக்ரெட்டை தந்திரமாக கையாள வேண்டும்.
பார்வையாளர்களிடம் உங்கள் வலது கை உள்ளங்கையை படத்தில் இருப்பது போல காட்டுங்கள். ""கையில் ஏதாவது இருக்கிறதா?'' என்று கேளுங்கள். பார்வையாளர்களிடமிருந்து ""இல்லை!'' என்று பதில். அடுத்து மின்னல் வேகத்தில் விரல்களை குவியுங்கள். குவித்த விரல்களுக்கு இடையில் ஒரு ஒயர் நீண்டு இருக்கும். அதைப் பார்த்து பார்வையாளர்கள் வியந்துகொண்டிருக்கும் போது, மீண்டும் சட்டென்று குவித்த விரல்களை விரியுங்கள். இப்போது அந்த மாயமாய் மறைந்து இருக்கும். அதைப் பார்த்து பார்வையாளர்கள் வியப்பின் உச்சத்துக்குப் போவார்கள்!
சீக்ரெட்:
படத்தில் இருப்பது போல வலது புறங்கை கட்டை விரல் நகப் பகுதியில் துண்டு ஒயரை செல்லோ டேப்பால் ஒட்டிக் கொள்ளவும். புறங்கை பக்கம் இருப்பதால் உள்ளங்கைப் பக்கம் தெரியாது. விரலை குவிக்கும் போது கட்டை விரலில் உள்ள ஒயர் செங்குத்தாக தெரியும். விரல்களை விரிக்கும் போது கட்டை விரலில் உள்ள ஒயர் புறங்கை பக்கம் இருப்பதால் பார்வையாளர்களுக்கு ஒயர் மாயமாய் மறைந்தது போன்ற பிரம்மையை ஏற்படுத்தும்.

57 . கண்ணை ஏமாற்றும் பூமாராங்!

தேவையான பொருட்கள்: அட்டை, காம்பஸ், பென்சில், கத்தரிக்கோல், கலர் ஸ்கெட்ச் பென்.
செய்முறை:
சற்று தடிமனான இரு அட்டையை எடுத்து, ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கவும். பிறகு, காம்பஸ் உதவியுடன் பென்சிலால் ஒரு ஆர்க் வரையவும். அடுத்து, ஒரு செ.மீ கீழ் நோக்கி இன்னொரு ஆர்க் வரையவும். ஆர்க் கோடு மீது கத்தரி வைத்து நறுக்கிக்கொள்ளவும். நறுக்கிய ஆர்க் பகுதியை தனியே எடுத்தால் அது படத்தில் காட்டியுள்ளவாறு இருக்கும். மேலே உள்ள அட்டைக்கு சிகப்பு வண்ணமும், கீழே உள்ள அட்டைக்கு மஞ்சள் வண்ணமும் பூசவும்.
வண்ணம் பூசப்பட்ட அட்டை களை படத்தில் காட்டியவாறு ஒரு டேபிளில் முதலில் சிகப்பு அட்டையும் அதன் கீழ் மஞ்சள் அட்டையை வைக்கவும். பார்வையாளர்களிடம் ""இந்த சிவப்பு மற்றும் மஞ்சள் அட்டையில் எது பெரியது?'' என்று கேளுங்கள். பார்வையாளர்கள் சிகப்பு அட்டைதான் பெரியது என்பர். பின்னர், மஞ்சள் அட்டைய மேலே வைத்து அதன் கீழ் சிவப்பு அட்டையை வைத்து, "" இப்போது எந்த அட்டை பெரியது?'' என்று கேளுங்கள். பார்வையாளர்களிடமிருந்து ""மஞ்சள் அட்டை'' என்று பதில் வரும். முடிவில் இரண்டு அட்டையையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து அதை பார்வையாளர்களிடம் காட்டிவிட்டு, இரண்டு ஒரே அளவு உள்ள அட்டை தான் என்று சொல்லுங்கள். பார்வையாளர்கள் தங்கள் கண்களை ஏமாற்றிய பூமாராங் அட்டையை நினைத்து ஆச்சரியப்படுவார்கள்!

சீக்ரெட்: சம அளவு உள்ள அட்டை என்ற போதிலும் ஒன்றன்கீழ் ஒன்றாக வைக்கும் போது பார்ப்பவர்கள் கண்கள் மேலே உள்ள அட்டையின் உள் வட்டத்தோடு கீழே உள்ள அட்டையின் வெளி விட்டத்தை ஒப்பீடு செய்வதால் தோன்றும் மாயபிம்பம் தான் பெரிது, சிறிது என்று சொல்ல வைக்கும்

58 .மேஜிக் மேஜிக்
தானாக பாட்டிலுக்குள் செல்லும் காசு!
தேவையான பொருட்கள்: கண்ணாடி பாட்டில், பேப்பர், காசு

செய்முறை: கொஞ்சம் அகன்ற வாய் ( பாட்டில் காசு நுழையும் அளவு) உள்ள பாட்டில் எடுத்துக்கொள்ளவும். பாட்டிலின் வாய் புறத்தின் மேல் மெல்லிய பேப்பரை படத்தில் காட்டியவாறு வைக்கவும். அதன் மீது காசு வைக்கவும்.
பிறகு, பார்வையாளர்களைப் பார்த்து, "இப்போது பாட்டிலின் மேல் இருக்கும் காசு அதுவாக பாட்டிலுக்குள் விழும்' என்று சொல்லி விட்டு பாட்டிலுக்கு மிக அருகில் முகத்தை வைத்துக்கொண்டு, கண்களால் பாட்டில் மேல் உள்ள காசை உற்று நோக்கவும். சில நிமிடங்களில் திடீர் என்று காசு பாட்டிலுக்குள் சென்றுவிடும். இதைக்கண்டு பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்.
மேஜிக் சீக்ரெட்: இந்த மேஜிக் செய்து காட்டுவது மிக சுலபம். ஆனால், பாட்டிலில் பேப்பரை வைத்து அதன் மேல் காசு வைப்பதில் தான் கொஞ்சம் கவனம் வேண்டும். சிறு அசைவு ஏற்பட்டாலே பேப்பர் நகரும் படி அது இருக்க வேண்டும். மேஜிக் செய்யும் போது, பாட்டிலின் அருகே முகத்தை கொண்டுச் செல்லும் போது பேப்பரின் அடிபாகத்தில் படுமாறு மெல்ல அதே சமயம் தொடர்ந்து சீராக வாயினால் காற்றை ஊதிக்கொண்டே இருக்க வேண்டும். பேப்பர் மீது காற்று பட பட பேப்பர் மெல்ல மெல்ல நகரும். பாட்டிலின் வாய்புறத்தில் சற்று பேப்பர் நகர்ந்தாலே கனமான காசு பாட்டிலின் கீழ்நோக்கி சென்று விடும். இதில் நாம் வாயினால் காற்றை ஊதுவதை பார்வையாளர்கள் உணர்ந்து
கொள்ளாதபடி செய்வதுதான் சீக்ரெட்!

மேஜிக் மேஜிக்

59 . கண் பார்வையில் வளையும் ஸ்பூன்!

தேவையான பொருட்கள்: ஒரு ஸ்பூன், நிக்கல் வில்லை அல்லது 25 காசு

செய்முறை: நேராக இருக்கும் ஒரு ஸ்பூனை எடுத்து பார்வையாளர்களிடம் காட்டவும். அதை டேபிளில் செங்குத்தாக குத்தி அது வளைக்க முடியாதபடி தடிமனாக இருப்பதை உணர்த்துங்கள். பிறகு, ஸ் பூனை படத்தில் காட்டியபடி உள்ளங்கையில் வைத்துக்கொள்ளவும். உள்ளங்கையில் இருக்கும் ஸ்பூனை கொஞ்ச நேரம் அப்படியே உற்றுப் பார்த்துக்கொண்டே, "" இந்த ஸ்பூனை என் கண் பார்வையால் வளைத்துக்காட்டுகிறேன்'' என்று சொல்லி உள்ளங்கையை படம்2, படம் 3 ல் காட்டியபடி திருப்புங்கள். இப்போது ஸ்பூன் வளைந்த தோற்றத்தில் இருப்பதைப் பார்த்து பார்வையாளர்கள் வியந்து போவார்கள்.
மேஜிக் சீக்ரட்:
தந்திரமாக ஏமாற்றும் வித்தை தான் இந்த மேஜிக்! ஸ்பூனை உள்ளங்கையில் வைக்கும் போது கட்டை விரல் முனை,ஆள்காட்டி விரல் முனையில் நிக்கல் வில்லை அல்லது 25 காசை படத்தில் இருப்பது போல வைத்துக்கொள்ளவும். இது பார்வையாளர்களுக்கு ஸ்பூனின் காம்பு முனை போல தோன்றும்.
பிறகு, ஸ்பூனின் காம்பை கொஞ்சம் கொஞ்சமாக சுண்டு விரல் இடத்திலிருந்து சாய்வாக நகர்த்திக்கொண்டே கட்டை விரல் பக்கம் கொண்டு வந்து கை மணிக்கட்டை சாய்வு கோணத்தில் திருப்பினால், ஸ்பூன் தலைப்பகுதி வளைந்து இருப்பது போல தோன்றும். இதில் ஸ்பூனை உள்ளங்கøயில் சாய்வாக நகர்த்துவதுதான் மேஜிக் சீக்ரட்!

60 . மேக்னெட்டிக் கை
தேவையான பொருட்கள்: பிளேயிங் கார்டு 10, கத்தரிக்கோல், பசை
செய்முறை: படம் 1 ல் காட்டப்பட்டது போல கார்டுகளை டேபிளில் பரப்பி வைத்து கொள்ளவும். அந்த கார்டுகளின் மீது உள்ளங்கையை அழுத்தவும். பின்னர், பார்வையாளர்களிடம், "" இப்போ, இதில் ஒரு கார்டு மூலம் இன்னொரு கார்டை என் கை மேக்னெட்டிக் சக்தியில் எடுத்துக்காட்டு கிறேன்'' என்றுö சால்லி ஒரு கார்டை படம் 5 காட்டி உள்ளது போல எடுத்துக்காட்டினால் ஒரு கார்டு இன்னொரு கார்டை இழுத்துப்பிடித்துக்கொண்டிருக்கும். அந்த கார்டை கொஞ்ச நேரம் கையில் வைத்து கொண்டுவிட்டு, அந்த கார்டை "இப்பூ' ஊதுங்கள் கார்டு கீழே விழுந்து விடும். இதை பார்த்து பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்!
மேஜிக் சீக்ரெட்!
இந்த மேஜிக் செய்வதற்கு முன் படத்தில் காட்டியுள்ள வாறு ஒரு கார்டில் மத்தியில் ஒரு சதுர செ.மீ அளவுக்கு வெட்டிக் கொள்ளவும். இன்னொரு கார்டை எடுத்து அதன் மத்தியில் குறுக்கு வசத்தில் ஒரு செ.மீட்டருக்கு கொஞ்சம் அதிகமாக ஒரு கோடு கிழித்தது போல் வெட்டிக்கொள்ளவும். பிறகு படத்தில் காட்டியவாறு அந்த கோட்டு இடைவெளியில் இன்னொரு கார்டின் வெட்டிய கதவு போன்ற பகுதியை நுழைத்து பசையால் ஒட்டிக்கொள்ளவும். இந்த ஏற்பட்டினை செய்துக்கொண்டப்பின், மேஜிக் செய்யும் போது கார்டின் கதவுப் பகுதியை நடுவிரல் மற்றும் மோதிர விரலுக்கு மத்தியில் இறுக பிடித்துக்கொண்டு மெல்ல மேலே துõக்கினால் அதன் கீழ் ஒரு கார்டு ஒட்டிக் கொண்டிருப்பது போல தோன்றும். பின்னர், கார்டை ஊதும் போது நடுவிரல் மற்றும் மோதிரவிரல் பிடித்துள்ள கதவு பகுதியை உள்ளங்கை பக்கம் திரும்பிக்கொண்டு, புறங்கை பக்க வழியாக விட்டு விட்டால் கார்டு கீழே விழுந்து விடும். அந்த கார்டில் மத்தியில் கிழிக்கப்பட்டக் கோடு சட்டென்று பார்வையாளர்களுக்குத் தெரியாது. இது தான் மேஜிக் சீக்ரெட்!

61 . மேஜிக் மேஜிக்
மேஜிக் பந்து!
தேவையான பொருட்கள்: மூடிதிறக்கும் பிளாஸ்டிக் பந்து அல்லது ஐ கிரீம் பால், ஸ்டீல் குண்டு, தேன், அட்டை.
செய்முறை:
ஒரு அட்டை அல்லது பலகையை படத்தில் காட்டியுள்ளது போல் சாய்வுதளமாக பொருத்திக் கொள்ளவும். பின்னர், பிளாஸ்டிக் பாலை எடுத்து அந்த சாய்வு பலகையில் மேல் தளத்தில் வைக்கவும். பிறகு, பார்வையாளர்களைப் பார்த்து, "" சாய்வுகாக உள்ள இந்தப் பலகையில் உருண்டை வடிவ எந்தப் பொருளை வைத்தாலும் அது தானாகவே ஒரு சில நொடிகளில் மேலிருந்து கீழ் நோக்கி வந்துவிடும். அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இப்போது, இந்தப் பாலை பலகையின் மேல் தளத்தில் வைத்திருக்கிறேன். இப்போது பாலிலிருந்து கையை எடுத்து விடுகிறேன்'' என்று சொல்லி கையை எடுத்து விடவும். பலகையின் மேல் தளத்தில் இருந்து பால் சர்ரென்று கீழ் நோக்கி வராமல் மெல்ல மெல்ல அசைந்து அசைந்து மெதுவாக கீழ் நோக்கிவரும். இந்த செயல்பாட்டை பார்த்து பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்!
மேஜிக் சீக்ரெட்:
மேஜிக் செய்வதற்கு முன்பாக, பிளாஸ்டிக் பாலில் படத்தில் காட்டியுள்ளது போல் அதைதிறந்து அதில் ஸ்டீல் குண்டை உள்ளே விடவும். பிறகு, தேன் எடுத்து பால் நிரம்பும் வரை ஊற்றி மூடிவிடவும். ஸ்டீல் குண்டு, தேன் நிரப்பப்பட்ட பாலை மேஜிக் பயன்படுத்தவும்.
பொதுவாக உள்வெற்றிடமாக உள்ள பால் சாய்வுபலகையில் மேலே வைத்தால் வைத்தவுடனேயே சர்ர்ர்... என்று கீழே வந்துவிடும். ஆனால், மேஜிக் பாலில் தேனும் இரும்பு குண்டும் இருப்பதால், பலகையில் பால் கீழ்நோக்கி உருளும் போது பாலின் முன்புறத்தில் இரும்பு குண்டு வரும். அதே சமயம் பின்புறம் உள்ள பாலின் உள் வெற்றிடத்தை தேன் நிரம்பிக்கொள்ளும். இதனால் பாலின் நிலைப்பு நிலை சமமாக இருக்கும். இதனால்தான் பால் மெல்ல மெல்ல உருண்டு கீழ் நோக்கி வரும்.
மேஜிக்! மேஜிக்!

62 . தண்ணீரில் வட்டமடிக்கும் சோப்பு டப்பா!

தேவையானப் பொருட்கள்: சோப்பு பாக்ஸ், சூடம்,ஒரு அகல பாத்திரம்.
செய்முறை:
தண்ணீரில் நிரம்பியஒரு அகல பாத்திரத்தில் படத்தில் காட்டியுள்ளவாறு சோப்பு டப்பாவை மிதக்க விடவும். தண்ணீரில் சோப்பு மிதக்கும். ஆனால், ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கும்.
பின்னர், பார்வையாளர்களைப் பார்த்து, " இப்போ இந்த சோப் டப்பா இந்தப் பாத்திரத்தில் தானாகவே ரவுண்டு அடிக்க வைக்கிறேன் பாருங்கள்!' என்று சொல்லி ஒரு தீக் குச்சியை கொளுத்தி சோப்பு டப்பாவில் போட்டு விட்டு,உங்கள் கையை சோப்பு டப்பா மேலே சில விநாடிகள் வைத்து பின்னர் எடுத்து விடுங்கள். சில நிமிடங்களில் அந்த சோப்பு டப்பா தண்ணீரில் வட்டமடிக்கும்! இதைப் பார்த்து, பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்!
மேஜிக் சீக்ரெட்! :
மேஜிக் செய்வதற்கு முன்பு, நீங்கள் சோப்பு டப்பாவில் சூடத்தை திணித்துக்கொள்ளவும்.தண்ணீரில் சோப்பு டப்பாவை போட்டதும் சூடம் தண்ணீரில் கரைந்து கொண்டிருக்கும். தண்ணீரும் சோப்பு டப்பாவில் ஊடுருவிக்கொண்டிருக்கும்.அந்த தண்ணீரில் நீங்கள் கொளுத்திப் போட்ட தீக்குச்சி விழுந்ததும், சூடத்தில் பற்றி, சூடு ஆக, ஆக தண்ணீர் ஆவியாகி அது வெளியேறும் போது அந்த சோப்பு டப்பா தண்ணீரில் வட்டமடிக்கும்!
63. தண்ணீரில் எரியும் விளக்கு!

தேவையான பொருட்கள்: புது பேட்டரி2, சூடம், நுõல், அகல் விளக்கு
செய்முறை: பார்வையாளர்கள் முன்பாக ஒரு அகல் விளக்கில் தண்ணீரை ஊற்றவும். பின்னர், அதில் ஒரு திரி நுõல் போடவும். அடுத்து, தீப்பெட்டியிலிருந்து தீக்குச்சி எடுத்து பற்ற வைத்து, "" இப்போது இந்த அகல் விளக்கில் இருக்கும் தண்ணீரில் தீபம் எரியும் பாருங்கள்'' என்று சொல்லி, விளக்கில் இருக்கும் திரி நுõலில் பற்றவைக்கவும். பற்ற வைத்து சில நிமிடங்கள் தண்ணீரில் தீபம் எரியும். அதைப் பார்த்து பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்.
மேஜிக் சீக்ரெட்:
இந்த மேஜிக் செய்யும் முன்பு தண்ணீரில் இரண்டு புது பேட்டரிகளை போட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அடுத்து, சூடத்தை பவுடராக்கி அதில் திரி நுõலை புரட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். மேஜிக் செய்யும் போது பேட்டரி ஊற வைத்த தண்ணீரை அகலில் விட வேண்டும். இந்த தண்ணீர் சாதாரண தண்ணீர் போலதான் இருக்கும். எந்த வேறு வாசனையும் இருக்காது. அதனால் பார்வையாளர்களுக்கு எந்த சந்தேகமும் வராது. திரிநுõலில் சூடப்பவுடர் ஒட்டிக் கொண்டிருப்பதால் பற்ற வைத்தவுடன் திரி நுõல் எரிய ஆரம்பிக்கும். பேட்டரியின் எரிசக்தி தண்ணீரில் கலந்து இருப்பதால் திரி சிறிது நேரம் எரியும். இதை டெக்னிக் பின்புலத்தில் தண்ணீரில் எரியும் தீபம் என்று"கப்சா' விட்டு சாமாளிப்பது உங்கள் சாமர்த்தியம்!

64 . வானவில் குளிர்பானம்!

தேவையான பொருட்கள்.

5 கண்ணாடி கோப்பை, ஜீனி, ஸ்பூன், குளிர்ந்த நீர், உணவு கலர் பவுடர்

செய்முறை: 5 கண்ணாடி கோப்பைகளை டேபிளில் வரிசையாக வைக்கவும். அந்தக் கோப்பைகளில் குளிர்ந்த நீரை ஒவ்வொன்றிலும் கால் பங்கு ஊற்றவும்.
பிறகு, 1ம் கோப்பையில் ஒரு ஸ்பூன் ஜீனியும், 2ம் கோப்பையில் 2 ஸ்பூன் ஜீனியும், 3ம் கோப்பையில் 3 ஸ்பூன் ஜீனியும், 4ம் கோப்பையில் 4 ஸ்பூன் ஜீனியும் போட்டு, ஸ்பூனால் ஒவ்வொரு கோப்பை தண்ணீரையும் நன்கு கலக்கவும்.
பின்னர், ஒவ்வொரு கோப்பையிலும் ஒவ்வொரு கலர் பவுடரை சேர்க்கவும். பிறகு, நன்கு கலக்கவும். இந்த ஏற்பாட்டை செய்தப்பின் பார்வையாளர்களிடம்,
"" இப்போது இந்த நான்கு கலரும் சேர்ந்து வானவில் வண்ணத்தில் குளிர் பானமாக மாறும் பாருங்கள்'' என்று கூறிவிட்டு, 5ம் கோப்பையில் முதல் கோப்பையிலிருந்து ஒரு கலர் தண்ணீரை ஒரு ஸ்பூன் எடுத்துவிடவும்.
அடுத்து, 2ம் கோப்பையிலிருந்து ஒரு ஸ்பூன் கலர் தண்ணீரும், 3ம் கோப்பையில் இருந்து ஒரு ஸ்பூன் தண்ணீரும், 4ம் கோப்பையிலிருந்து ஒரு ஸ்பூன் கலர் தண்ணீரும் எடுத்து வரிசைப்படி ஐந்தாவது கோப்பையில் விடவும்.
இப்போது 5வது கோப்பையில் அடுக்கடுக்காக வண்ணத்தில் தண்ணீர் இருக்கும். இது வானவில் வண்ணத்தில் இருக்கும். இந்தக் கோப்பையில் இருந்து தண்ணீரை பருகும் போது ஒவ்வொரு கலராக படிப்படியாக குறைவதை பார்வையாளர்கள் ரசிப்பார்கள்!
மேஜிக் சீக்ரட்!
நான்கு கோப்பை தண்ணீரிலும் சம அளவு ஜீனியை கலந்திருந்தால் ஐந்தாவது கோப்பையில் விடும் போது எல்லாக் கலரும் ஒன்றாக கலந்துவிடும். ஆனால், ஒவ்வொரு கோப்பையிலும் கூடுதலாக ஜீனி கலந்திருப்பதால் தண்ணீரின் அடர்த்தி, பாகு நிலை அதிகரித்திருக்கும். இதனால் ஒரு கலர் தண்ணீர் அடுக்கிலிருந்து இன்னொரு கலர் தண்ணீர் அடுக்கிற்கு சவ்வூடு பரவல் எளிதில் நடக்காது.இதன்காரணமாக ஒன்றோடு ஒன்று கலக்காமல் தனித்தனியாக இருக்கும். இது தான் மேஜிக் சீக்ரட்!

65 . தண்ணீரில் கலக்காத கோகோகோலா

தேவையான பொருட்கள்:

தண்ணீர்த்ö தாட்டி, கண்ணாடி டம்ளர், கோகோகோலா டின்

செய்முறை:
ஒரு தண்ணீர்த் தொட்டியை எடுத்து கொள்ளவும். அதில் ஒரு கோகோலா மற்றும் ஒரு கண்ணாடி டம்ளரை வைக்கவும். பின்னர் அதில் தண்ணீர் நிரப்பவும். பார்வையாளர்களைப் பார்த்து, ""பொதுவாக தண்ணீரில் எந்த நீர்மப் பொருளை ஊற்றினாலும் தண்ணீரோடு அந்த நீர்மம் பொருள் ஒன்றாக கலந்து விடும். ஆனால், இப்போது தண்ணீருக்குள் தண்ணீர் நிரம்பி இருக்கும் கண்ணாடி டம்ளரில் கோகோகோலாவை ஊற்றுகிறேன். அது தண்ணீரோடு கலக்காமல் இருக்கும் பாருங்கள்'' என்று சொல்லிவிட்டு, தொட்டியில் கையை விட்டு கோகோகோலா டின்னை திறந்து அதை அப்படியே நீருக்குள் நீர் நிரம்பி இருக்கும் கண்ணாடி டம்ளரில் ஊற்றுங்கள். கோகோகோலா டம்ளரில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றி, அந்த டம்ளரில் கோகோகோலா நிரம்பி இருக்கும்! ஆ! இது எப்படி சாத்தியம் என்று பார்வையாளர்கள் வியந்து போவார்கள்! பிறகு, டம்ளரை தண்ணீருக்கும் கவிழ்த்தால் கண்ணாடி டம்ளரில் இருக்கும் கோகோகோலா தண்ணீரோடு கலந்து விடும்.
மேஜிக் சீக்ரட்:
தண்ணீருக்குள் மிக கவனமாக செய்ய வேண்டிய மேஜிக் இது! தண்ணீருக்குள் தண்ணீரை கலக்கிவிடமாமல் பொறுமையாக கையை விட்டு, கோகோகோலா டின்னை மிக மிக மெதுவாக திறக்கவும். பின்னர் இன்னொரு கையை தண்ணீருக்குள் நுழைத்து தண்ணீர் நிரம்பியிருக்கும் கண்ணாடி டம்ளரை அலுங்காமல் குலுங்காமல் எடுத்து 45டிகிரி சாய்த்துக்கொண்டு, மெதுவாக அதில் கோகோகோலாவை ஒரே சீராக ஊற்றவேண்டும்.இது தான் முதல் மேஜிக் சீக்ரட். இரண்டாவது சீக்ரட் தண்ணீரைவிட கோகோகோல அடர்த்தி அதிகம் உள்ளது. அதனால் டம்ளரில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றி கோகோகோலா டம்ளரில் நிரம்பிவிடும். இந்த மேஜிக் ஒரு சில நிமிடங்களுக்கு மேல் தொடரக்கூடாது. அது உங்கள் சாமர்த்தியம்!

மேஜிக்

66 . மேஜிக் தீக்குச்சி!

தேவையான பொருட்கள்: தீப்பெட்டி, மெழுகு வர்த்தி, ஸ்கெட்ச் பென், கட்டர்.
செய்முறை: ஏற்கெனவே எரிந்து ஒரு தீக்குச்சியை எடுத்து, அதை பார்வையாளர்களிடம் காட்டி, "" இது ஏற்கெனவே பற்றவைக்கப்பட்ட தீக்குச்சி. இந்தக்குச்சியை தீப்பெட்டியில் மீண்டும் உராய்ந்தால் எரியும் பாருங்கள்!'' என்று கூறி, அந்தக் குச்சியை மெழுகில் தோய்த்து எடுத்து, பின்னர், அந்தக் குச்சியை தீப்பெட்டியில் உரசுங்கள் சட்டென்று அது எரியும். இதெப்படி சாத்தியம்? எரிந்த குச்சி மீண்டும் எரிகிறதே! என்று ஆச்சரியப்படுவார்கள்!
மேஜிக் சீக்ரட்!
இது பார்வையாளர்களை ஏமாற்றும் தந்திரவகை மேஜிக்! இந்த மேஜிக்கை சாமார்த்தியமாக செய்யவேண்டும்.
மேஜிக் செய்வதற்கு முன்பாக, தீக்குச்சிகளை எடுத்து, படத்தில் காட்டியபடி தீக்குச்சியின் கந்தக தொப்பிக்கு கீழே ஒரு சென்டி மீட்டர் நீளம் சுற்றிலும் கட்டரால் சீவிக் கொள்ள வேண்டும். அதாவது எரிந்த தீக்குச்சி முனை எப்படி மெல்லியதாகவும், அடிபாகம் தடிமனாக இருப்பது போல சீவிக்கொள்ள வேண்டும். பின்னர் கந்தகத் தொப்பியில் இருந்து சீவிய நீளம் வரை கறுப்பு ஸ்கெட் பென்னால் கறுப்பு வண்ணம் தீட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தப்பின் தீக்குச்சியைப் பார்த்தால் எரிந்த தீக்குச்சி போலவே தோற்றமளிக்கும். இந்தக்குச்சியை தீப்பெட்டியில் உரசும்போது தீக்குச்சியில் இருக்கும் கந்தகம் எரியும். பார்வையாளர்களை குழப்புவதற்குத் தான் மெழுகு தோய்த்துக்கொள்ளவேண்டும்.
இடம் மாறும் தண்ணீர்!

67. தேவையான பொருட்கள்: கார்டுபோர்ட் அட்டை, இரண்டு கண்ணாடி பாட்டில், சுடு நீர், குளிர்ந்த நீர், கலர் இங்க்.
செய்முறை:
இரண்டு காலி கண்ணாடி பாட்டிலை எடுத்து டேபிளில் வைக்கவும். முதல் பாட்டிலில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றவும். அதில் சிவப்பு இங்க் கொஞ்சம் கலக்கவும். இரண்டாவது பாட்டிலில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றவும். பிறகு, படத்தில் காட்டியபடி சிவப்புகலர் தண்ணீர் உள்ள பாட்டிலின் வாயில் கார்டு போர்டு அட்டையை வைக்கவும். அதன் மேல் இன்னொரு பாட்டிலை கவிழ்த்து வைக்கவும். இப்போது பார்வையாளர்களைப் பார்த்து, ""இப்போது கீழே இருக்கும் இந்த பாட்டிலில் உள்ள சிவப்பு தண்ணீர் அதுவாக மேலே இருக்கும் பாட்டிலுக்குள் செல்லும்'' என்று சொல்லி, மெதுவாக பாட்டிலின் வாயில் இருந்த அட்டையை எடுத்துவிடவும். அட்டை எடுத்த சில நிமிடங்களில் மேலே இருக்கும் பாட்டிலில் உள்ள கலர் கலக்காத தண்ணீர் கீழ் பாட்டிலுக்கும், கீழே இருக்கும் சிவப்பு கலர் தண்ணீர் மேல் பாட்டிலுக்கும் இடம் பெயர்ச்சி ஆகும் பாருங்கள்'' என்று சொல்லவும். சில நிமிடங்களில் சிவப்புகலர் தண்ணீர் மேலே இருக்கும் பாட்டிலுக்கு இடப்பெயர்ச்சியாகும்.
மேஜிக் சீக்ரட்:
மேஜிக் செய்வதற்கு முன்பு ஒரு கிளாசில் சுடு நீரும், இன்னொரு கிளாசில் குளிரிந்த நீரும் எடுத்துக்கொள்ள வேண்டும். சுடு நீரில் சிவப்பு இங்க் கலந்து கொள்ள வேண்டும். இரண்டு பாட்டிலுக்கு இடையில் இருக்கும் கார்டு போர்டு அட்டையை எடுத்தவுடன் சுடு நீரைவிட அழுத்தம் அதிகம் உள்ள குளிர்ந்த நீர் கீழ் நோக்கி பாயும். கீழே இருக்கும் அழுத்தம் குறைவான சுடு நீர் மேல் நோக்கிச் செல்லும். இதில் குளிர்ந்த நீர் கனமானது. சுடு நீர் லேசானது என்ற அறிவியில் கோட்பாடுதான் மேஜிக் சீக்ரட்!


ஆஞ்ச நேயருக்குசாற்றும் மாலைகள்,
அபிஷேகளுக்கான பலன்கள்

அபிஷேகம் செய்வதால் பெறும் பலன்கள்:

நல்லெண்ணைய் அபிஷேகம் பலன்:
திருமால் தன்னுடைய வியர்வை துளிகளை எடுத்து தெளித்தவுடன் அது கருநீல நிறம் பெற்று எள் தானியமாக விளைகிறது. திருமால் சரீரத்தில் கருநீலம் போன்று உள்ள சனிபகவான் எள் தானியத்தை தனக்குப் பிரியமாக எடுத்துக்கொள்கிறார். நவ நாயகர்களில் சனிபகவான் உள்ளதால், ஆஞ்சநேயருக்கு எள் எண்ணைய் அபிஷேகம் செய்வதால் பித்ரு தோஷமும், சனி தோஷமும் நீங்கப்பெறும்.

பஞ்சாமிர்தம் அபிஷேக பலன்:
நம்முடைய கண், காது, வாய், மூக்கு, பிறப்புறுப்பு ஆகிய ஐந்து விதமான இந்திரியசக்திகள் வாழ்நாள் முழுவதும் செம்மையாக இயங்க, ஆரோக்கியமாக இருக்கவும், நாம் எண்ணிய காரியங்கள் நிறைவேறவும் ஆஞ்சநேயருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வதால் கிடைக்கப்பெறும்.

சீயக்காய் அபிஷேகப் பலன்:
ஆஞ்சநேயருக்கு சீயக்காய் அபிஷேகம்ö சய்வதால் கிடைக்கப் பெறும் பலன்களாக இருப்பவை மனோரீதியான பொறாமை, இல்லாமை, கல்லாமை, இயலாமை முதலிய மன அழுக்குகள் நீங்கி நல்ல மனோதிடம் பெறலாம்.

பால் அபிஷேக பலன்:
பருவம் தவறாத மழை பெய்யவும், தாய்மார்களுக்கு தாய்பால் சக்தி கிடைக்கவும், பால் பொருட்கள் பெருகவும்,பசுக்கள் நிறைந்த பால் சொரியவும், நீர்நிலைகளில் வற்றாத ஊற்று வரவும்,யாகம், பூஜைகள் தவறாத நிகழவும் ஆஞ்சேநயருக்கு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

தயிர் அபிஷேக பலன்:
நாம்பெற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள், பெற்றோர்கள் பெற்ற பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள் இவைகள் அனைத்தும், செம்மையாக நடைபெற வேண்டுமானால் ஆஞ்சேநயருக்கு பால் அபிஷேகம் செய்யவேண்டும்.

மஞ்சள் அபிஷேக பலன்:
பெண்கள் சுமங்கலி பாக்கியம் பெறவும், உலகமெங்கும் அமங்கலமான செயல்கள் தவிர்க்கவும், நோயற்ற வாழ்வேண்டி மஞ்சள் அபிஷேகம் செய்யப்படுகிறது.

சந்தன அபிஷேக பலன்:
மகா லட்சுமி பிறந்தது சந்தனம் மற்றும் வாசனைப் பொருட்கள் நிறைந்த இடம் என்பதால் வீரலட்சுமியின் அம்சமான ஆஞ்சநேயருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் செல்வச்செழிப்பு பெறலாம். ஏழ்மைநிலை நீங்கும்.

ஸ்வர்ணா அபிஷேக பலன்:
பூர்ணத்துவமான ஆயுள் சக்தியை பெற ஆஞ்சேநயருக்கு தங்க தீர்த்தத்தை அபிஷேகம் செய்யவேண்டும். நம்மால் இயன்ற தங்க ஆபரணங்களை புனித மந்திரங்களைச் சொல்லி உருவேற்றிய குடத்திற்குள் போட்டு அந்த தீர்த்தத்தை அபிஷேகம் செய்துவந்தால் பூர்ண ஆயுள் பெறலாம். மேலும் நம்முடைய வீடுகளில் வற்றாத தங்க ஆபரணங்களை அடையலாம்!

மாலை சாற்றுவதால் பெறும் பலன்கள்:
வடை மாலை பலன்:
ஆஞ்சநேயருக்கும் சாத்தப்படும் மாலைகளில் முதன்மையானது வடை மாலை என்று சொல்லலாம்.
ஸ்ரீ அனுமன் குழந்தையாக இருந்தபோது சூரியனை பழம் என்று நினைத்து பறித்துவிட்டார். இதனால் ராகு அனுமனிடம் போரிட்டு தோற்றான். இந்திரனும் அனுமனிடம் போரிட்டு தோற்றான். இறுதியில் ராகு, அனுமனிடம் ""உளுந்து தானியங்களால் என்னுடைய சரீரம் போல் வடை மாலை சமர்ப்பணம் செய்பவர்களுக்கு ராகு சம்பந்தப்பட்ட அனைத்து தோஷங்களும் நிவர்த்தியாக்கி நல்வாழ்வு பெற உதவுகிறேன் என்று அனுமனிடம் கூறுகிறார். ஆதலால் அனுமனுக்கு வடை மாலை சாற்றி பிரார்த்தனை செய்தால் ராகு தோஷம் நீங்கும்.
துளசி மாலை பலன்:
அசாத்தியமான காரியங்களை செய்து அசத்தும் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாத்துவதால் ஸ்ரீராமப்பிரானின் அருளையும், கல்வி ,செல்வம் ஆகியவற்றை நிரந்தரமாக பெறலாம்.
வெற்றிலை மாலை பலன்:
இலங்கையில் அசோகவனத்தில் இருந்த சீதையை அனுமன் சந்தித்து ஸ்ரீராமனின் நிலையை எடுத்துக்கூறியபோது, அதைக்கேட்டு சந்தோஷமடைந்த சீதை அனுமனை ஆசீர்வதிக்க, அருகில் இருந்த கொடியில் இருந்து இலைகளைக் கிள்ளி, "உமக்கு வெற்றி உண்டாகட்டும்' என்று ஆசீர்வதிக்கிறார். அதனால் அது வெற்றிலையாயிற்று. ஆகையால் பக்தர்கள் தன் வேண்டுதல் எக்காரியாக இருந்தாலும், வெற்றியடையவேண்டும் என்ற காரணத்தினால் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வருதல் நலம்.
எலுமிச்ச பழம் மாலை பலன்:
சம்ஹார தொழில் செய்யும் கடவுள்களுக்கு மிகவும் பிடித்தப் பழம் எலுமிச்ச பழம். நரசிம்மன், வராகம், கருடன் ஆகிய சக்திகள் அனுமனிடத்தில் ஒருங்கே அமைந்து உள்ளதாலும், ஈஸ்வரனின் அம்சமாக இருப்பதாலும் ஆஞ்சநேயருக்கு எலுமிச்ச மாலை சாற்றி வழிபடுவோருக்கு வாழ்வில் எதிர்ப்பற்ற தன்மைகள், எதிரிகளால் உண்டாகும் தீமைகள், திருஷ்டி தோஷங்கள் நீங்கி, நன்மையடைவர்.


மலேசியா பொங்கல்!
மலரும் நினைவில் மலேசியவாசுதேவன்
( 15.01. 2011 தினமலர் பொங்கல் மலரில் பிரசுரமான என்னுடை பேட்டி கட்டுரை)

மலேசியாவில் தான் கழித்த பால்யகால நினைவுகளையும், மலேசியாவில் கொண்டாடப்படும் தமிழர் பொங்கல் பண்டிகையின் சிறப்பு பற்றியும் சொல்கிறார், மலேசியா வாசுதேவன்.
இனி அவர் பேட்டி...

மலேசியாவில் இருந்த வாசுதேவனைப்பற்றி சொல்லுங்கள்?
ஒரு காலத்தில் பிழைப்புக்காக இந்தியாவிலிருந்து கப்பலில் மலேசியாவுக்குக்குடியேறியவர்கள் மலேசிய தமிழர்கள். அப்படிதான் என்குடும்பமும் கிளாங்கில் குடியேறியது. அப்பா சாத்துநாயர், அம்மா அம்மாளு அம்மை. என் உடன் பிறந்தவர்கள் 5 சகோதரர்கள், 2 சகோதரிகள். ஒரு ரப்பர் தோட்டத்தில் தகப்பனார் வேலை செய்தார். குழந்தைப்பருவத்தையும், பள்ளிப்பருவத்தையும் ரப்பர் எஸ்டேட்டில்தான் கழித்தேன்.
உங்கள் இளமைக்காலம் எப்படி இருந்தது?
என் அப்பாவுக்கு நல்ல இசைஞானம் உண்டு. அவர் ஆர்மோனியத்தை வைத்துக்கொண்டு நன்றாக பாடுவார். அப்போது நான் எட்டு வயதுசிறுவன். ஆர்மோனியத்திற்கு பெல்லோஸ் தள்ளிவிடுவேன். அப்போதே என்னுடைய கலையார்வத்துக்கு பிள்ளையார்சுழி போட்டு விட்டார் அவர். பிற்பாடு பள்ளிப்படிப்பில் கவனம் செல்லவில்லை. கலையில்தான் மனம் லயத்தது.
தமிழகத்தைப்போலவே மலேசியாவிலும் அதிகளவு நாடகக்கலை வளர்ந்துவந்த காலக்கட்டம் அது. நானும் என் சகோதரர்களும் நாடகக்குழுவில் சேர்ந்து ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வந்தோம்.
முரளிமோகன ஞான சபா, தேவர் நாடக கம்பெனி, ஆர்.பி.எஸ் .மணியம்நாடக கம்பெனி, முபன் புரடக்ஷன் நாடக கம்பெனிகள் இருந்தன. இவைகள் எல்லாம் எங்களை ஊக்கப்படுத்தின.
பின்னர் நானும் சகோதரர்களும் சேர்ந்து "எம்.எஸ்.வி' நாடகக்குழு மற்றும் இசைக்குழு நடத்திவந்தோம். மலேசியா முழுவதும் நாடகம் மற்றும் இசைக்கச்சேரி நடத்தி வந்தோம்.
மலேசியாவில் பொங்கல் பண்டிகை எப்படி கொண்டாடப்படுகிறது?
தமிழகத்தில் உள்ள பண்பாடு ,கலாசாரம், பழக்க வழக்க சடங்குகளைத்தான் மலேசிய தமிழர்களும் பின்பற்றுகிறார்கள். மலேசியாவில் தமிழர்களுக்கு பொங்கல் பண்டிகை என்றால் கொள்ளைப்பிரியம். பொதுவாக பொங்கல் பண்டிகை என்றால் விவசாயிகள், உழவர்கள் கொண்டாடக்கூடியவிழா. தமிழகத்தைப் போல் மலேசியாவில் விவசாயமோ, உழவர்களோ அதிகம் கிடையாது.அவர்கள் தமிழக உழவர்களை மனதில் வைத்துதான் கொண்டாடுகிறார்கள். தமிழகத்தில் குடும்பத்துக்குள் கொண்டுகிறார்கள். கிராமத்தில் அதிகம் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, ஏனோ பட்டணங்களில் அவ்வளவு விமர்சையாகக்கொண்டாடப்படுவதில்லை. ஆனால், மலேசியாவில் பட்டணத்தில்தான் அதிகம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஊர்மக்கள் எல்லாம் ஒரு பொது இடத்தில் ஒன்று கூடி பொங்கல் வைத்து கூட்டாக மகிழ்சியாக சேர்ந்து கொண்டாடுவார்கள். அன்று விருந்து, உபச்சாரம், புத்தாடைகள் என தடபுடலாக இருக்கும். மலேசியாவில் பொங்களை தமிழர் பண்டிகையாகத்தான் கொண்டாடுகிறார்கள். நான் சிறுவயதில் கொண்டாடிய பொங்கல் திருநாளைப் போல் ஒரு நாள் எங்கும் கண்டதில்லை. அந்தப் பூரிப்பான பொங்கல் பண்டிகை சந்தோஷங்கள் இன்றும் என் நெஞ்சில் பசுமையாக இருக்கிறது. மலேசிய பொங்களைப் போல் தமிழகத்தில் மட்டுமல்ல எங்கும் கண்டதில்லை. காணப்போவதுமில்லை.
தமிழகத்திற்கு வந்தது எப்படி?
எனக்குள் தீரா ஆசை ஒன்று இருந்தது. தமிழ் சினிமாவில் ஒரு பாடலாவது பாட வேண்டும் என்று.
1968ல் முபன் புரடக்ஷன் நாடகக்குழு தமிழகத்தில் அண்ணாத்துரை தலைமையில் நாடகம் நடத்தவும்,"ரத்தபேய்' என்ற படம் எடுக்கவும் தமிழகத்துக்கு வந்தது. ரத்தப் பேயில் நானும் நடித்தேன். அந்தப்படத்தில் ஜி.கே. வெங்கடேஷ் இசையில் "பொல்லாத உலகில் போராட்டம்' என்று ஒருபாடலும் பாடினேன். அதுதான் என் சினிமாவுக்கான முதல்பாடல். அந்தப்படம் அப்போது எதிர்ப்பார்த்தளவு போகவில்லை.
அதன் பின்னர் 10 ஆண்டுகள் சிரமப்பட்டேன். இளையராஜா, கங்கைஅமரன், பாஸ்கர் இசைக்குழுவில் பாடிவந்தேன். ஆரம்பகட்டத்தில் இளையராஜாதான் ஒவ்வொரு கம்பெனியாக எனக்கு வாய்ப்பு வாங்கிதந்தார். எம்.எஸ்.வி., சங்கர் கணேஷ் ஆகியோர் எனக்குப் பெரிதும் உதவினர்.
சினிமாத்துறையில் உங்கள் பங்கு?
5 ஆயிரம் பாடல்களுக்கு மேல் சினிமாவில் பாடியிருக்கேன்,6 படங்களுக்குமேல் இசையமைத்து இருக்கேன். " நீ சிரித்தால் தீபாவளி' என்றஒருபடத்தை கதை,வசனம் எழுதி, இயக்கி இருக்கேன். 85 படங்களுக்கு மேல் நடித்து இருக்கேன்." எண்ணம் தோன்றியது எழுத்த துõண்டியது' கவிதை நுõல் எழுதியிருக்கேன்.
மறக்க முடியாத அனுபவம்?
என்றும் மறக்க முடியாத சில அனுபவங்கள் எனக்கும் உண்டு. அது 1970ம் ஆண்டு. அப்ப நான் சினிமாவில் ஒரே ஒரு பாட்டுத்தான் பாடியிருக்கேன். இசைக்குழுவில் பாடிவந்த காலம். ஒரு நாள் மயிலாப்பூரில் ஒரு இசைக்கச்சேரி. நானும் கங்கை அமரன் குழுவும் ரிகர்சல் பார்த்துக்கிட்டு இருந்தோம். மாலை ஆறுமணிக்கு கச்சேரிக்கு போகணும். ரூமுக்கு வந்து குளித்து, உடையணிந்து வெளியே வந்ததுபோது என் பெயருக்கு ஒரு தந்தி வந்தது. வாங்கிப்பார்த்தேன். என்னை பெற்ற அம்மா காலமாகிவிட்டார் என்று இருந்தது. என்ன செய்வது என்று புரியவில்லை. கச்சேரிக்கும் என்னைவிட்டால் வேறு ஆள் இல்லை. தந்தியை வாங்கி மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு கச்சேரியில் பாடப்போனேன். கச்சேரி முடிந்ததும் கங்கை அமரனிடம் தந்தியைக்காட்டி விவரம் சொல்லியழுதேன். கங்கை அமரன், "" இவ்வளவு பெரிய துக்கத்தை சுமந்துக்கொண்டு எப்படி பாடினாய்?'' என்று வாரியணைத்து அழுதார். உடனே மலேசியா சென்று அம்மாவைப் பார்க்கும் சூழ்நிலைஇல்லை. அதுபோல் மலேசியாவில் இருக்கும் என் சகோதரர்கள் இறப்பு ஒன்றுக்குக் கூட போனதில்லை. இந்த துயரம் இன்னமும் என் நெஞ்சில் நீங்காதமனப்புண்ணாய் இருக்கிறது.
இன்னொரு சம்பவம் மலேசியாவில் நடந்தது. ஒரு மேடையில் நான் பாடிக்கொண்டிருந்தேன். சகோதரர்கள் ஆர்மோனியமும், மிருதங்கமும் வாசித்துக்கொண்டிருந்தார்கள். பாடும் போது ஒருவரியில் தாளம் தவறிபாடிவிட்டேன். என் அண்ணன் எழுந்து வந்து மேடையிலேயே விட்டார் கன்னத்தில் ஒரு அறை. அந்த அறைதான் இன்று என்னை இந்தளவுக்கு உயர்த்திருக்கிறது. அந்த சம்பவம் என்னால் மறக்க முடியாதவை.
உங்கள் குடும்பம் பற்றி?
வாத நோய் வந்து படுத்தப்படுக்கையில் இருந்தபோது ஒரு குழந்தையாக என்னைப் பார்த்துக்கொண்ட அன்பு மனைவி உஷா. எங்கள் இருவருக்கும் பிறந்த இரு மகள்; ஒரு மகன். பெரியவள் மலேசியாவில். சின்னவள் என் இசையின் அடுத்தவாரிசு. மகனும் சினிமா, டி.வி என்று கலைத்துறையில் முன்னேறிகொண்டிருக்கிறார்.
உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் சொல்லிக்கொள்ள விரும்புவது?
என்னை பெற்றது மலேசியா. தத்து எடுத்தது தமிழகம். வாழவைத்தது தமிழ் மொழி. என்னை இந்தளவுக்கு இசை ஏணியில் உயர்த்திய தமிழர்களை வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் நினைத்துக்கொண்டேயிருப்பேன். எல்லோருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!
தேவராஜன்