வெள்ளி, 30 ஜூலை, 2010

நிஜத்தை தொட்ட நிழல்கள் ( தினமலர் வாரமலரில் வந்த தொடர்)

நிஜத்தை தொட்ட நிழல்கள் ( தினமலர் வாரமலரில் வந்த தொடர்)
நடிகர் ராஜேஷ் மனதில் எம்ஜிஆர்
(ஸ்டில் சித்ரா சுவாமி நாதன் பேட்டி : தேவராஜன்)
பாரதிராஜாவின் நெருங்கிய நண்பர்தான் உபால்டு. பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே படத்தில்கூட ஓவியம், கலை எல்லாமே உபால்டுதான். அந்தப் படத்தை தயாரித்தது எஸ்.ஏ.ராஜ்கண்ணு.
அந்த நேரத்தில் உபால்டுடன் எனக்கு நெருங்கிய பழக்கம் இருந்ததால், அவர் என்னையும் எஸ்.ஏ.ராஜ்கண்ணு ஆபீசுக்கு அழைத்துச் செல்வார். அங்குதான் எனக்கு நடிகர் ராஜேஷ் பழக்கமானார். சென்னையில் நடைபெறும் ராஜேஷின் பட பிடிப்புகளை போய் பார்த்து இருக்கிறேன். அவர் சம்பந்தமான விழாக்கள், அவர் நடித்த படங்களின் வெற்றி விழாக்களை எல்லாம் நான் போட்டோ எடுத்திருக்கிறேன்.
அன்று ஆரம்பித்த ராஜேஷûடனான என் பழக்கம், இன்று நடைப்பயிற்சி வரை தொடர்கிறது. நடிகர் ராஜேஷைப் பற்றி சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது.
பட்டுக்கோட்டை அருகிலுள்ள அணைக்காடுதான் அவருடைய சொந்த ஊர். அவருடைய தந்தை பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன் சினிமாவில் சேரும் ஆசையோடு 1968ம் ஆண்டு சென்னைக்கு வந்தார் ராஜேஷ். வேலை கிடைக்கவில்லை. சினிமாவிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சரி இப்படியே இருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்று நினைத்து டீச்சர் டிரைனிங்கில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார்.
அப்போதெல்லாம் ஆசிரியப் பணிக்கு அந்தளவிற்கு பெரிய அளவில் ஊதியம் கிடையாது. 1969ம் ஆண்டு மார்ச் மாதம் அண்ணா இறந்ததும், முதல்வராக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பதவிக்கு வந்ததும், ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்தார். அவர் அறிவித்த ஊதிய உயர்வின், முதல் ஊதியத்தை முதல் மாத சம்பளமாக செயின்ட் பால் பள்ளியில் ஆசிரியராக பணிக்குச் சேர்ந்ததும் பெற்றார் ராஜேஷ்.
அதற்குப் பிறகு கண்ணப்பனாயினார் பள்ளியிலும், 1979ம் ஆண்டு திருவல்லிகேணி கலட் உயர்நிலைப் பள்ளியிலும் ஆசிரியராக பணி செய்துகொண்டே பச்சையப்பன் கல்லுõரியில் மாலைநேர வகுப்பில் பி.ஏ. படிக்க ஆரம்பித்தார். அந்த கால கட்டத்தில்தான் மறுபடியும் சினிமா வாய்ப்புத் தேடி ராஜேஷ் அலைந்தார். எல்லா பெரிய டைரக்டர்களையும் பார்த்து வாய்ப்பு கேட்டார். அப்போது "16 வயதினிலே' படம் முடியும் தருவாயில் இருந்தது. அந்தப் படத்தை எஸ்.ஏ.ராஜ்கண்ணுதான் தயாரித்தார். அடிக்கடி அவரை சந்தித்து வாய்ப்புக் கேட்டு ராஜேஷ் தொந்தரவு செய்ய, அவரோ "படம் முடிந்து விட்டது. ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள், அடுத்தப் படம் எடுக்கும்போது பார்க்கலாம்' என்று சொல்லி அனுப்பிவிட்டார். ஆனால், அவர் விடவில்லை. தொடர்ந்து வாய்ப்பு கேட்டு அலைந்தார்.
ஆனால், எஸ்.ஏ.ராஜ்கண்ணு சொன்ன வாக்கை காப்பாற்றினார். தான் தயாரிக்கும் அடுத்தப் படத்தில் ராஜேஷிற்கு வாய்ப்புக் கொடுத்தார். அந்தப் படம் "கண்ணிப் பருவத்திலே' ராஜேஷ் கதாநாயகனாக நடித்த முதல் படம்.
அந்தப் படத்தை இயக்கியது பாலகுரு (இவர் எம்.ஆர்.ராதா நாடக குழுவில் நகைச்சுவை நடிகராக இருந்தவர்). படம் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படம் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றதற்கு பெரும்பங்கு இயக்குனர் பாலகுருவோடு அவரது உதவி இயக்குனர் கே. பாக்யராஜிற்கும் உண்டு.
"கண்ணி பருவத்திலே' படம் சென்னையில் 25 வாரமும், மதுரையில் 35 வாரங்களும் ஓடி எல்லா வெற்றி விழாக்களையும் கண்டது. அடுத்து அடுத்து பல வெற்றிப் படங்களை கொடுத்தார் ராஜேஷ். தொடர்ந்து நிறைய படங்கள் வந்ததால், தொடர்ந்து அவரால் பட்டப்படிப்பை தொடர முடியவில்லை. படிப்பை பாதியில் நிறுத்தினாலும், ராஜேஷிடம் பேசும்போது டபுள் எம்.ஏ. படித்தவர் போல் பல விஷயங்களைப் பேசுவார்.
இவரின் திருமணம் 1983ம் ஆண்டு நடைபெற்றது. எல்லா தலைவர்களுக்கும், கலைத் துறையினருக்கும், முக்கியஸ்தர்களுக்கும் அழைப்பு வைத்திருந்தார். ஆனால் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முதல் ஆளாக கலந்து கொண்டது, கருணாநிதிதான்.
அது முதல் நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று யார் பத்திரிகை கொடுத்தாலும் முதல் ஆளாய் போய் நிற்பார் ராஜேஷ். இது கருணாநிதியிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது என்று அடிக்கடி என்னிடம் சொல்வார்.
அதேபோல் எம்.ஜி.ஆரையும் ராஜேஷிற்கு ரொம்ப பிடிக்கும். எதனால் எம்.ஜி.ஆரை ராஜேஷிற்கு ரொம்ப பிடிக்கும் என்பது பற்றி, எனக்குத் தெரிந்த சில விஷயங்களை உங்களுக்குச் சொல்கிறேன்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த நேரம். அந்த சமயத்தில் ராஜேஷ் புதிதாக வீடு ஒன்று கட்டியிருந்தார். அதன் கிரஹப்பிரவேச பத்திரிகையை திரைத்துறையினர், முக்கியப் பிரமுகர்கள் எல்லாருக்கும் கொடுத்துவிட்டு, எம்.ஜி.ஆரிடம் நேரில் கொண்டு கொடுப்பதற்காக அவரைப் பார்க்க வந்திருக்கிறார். ராஜேஷ், தான் வந்திருக்கும் விஷயத்தை எம்.ஜி.ஆரின் உதவியாளரிடம் கூறிவிட்டு வெளியில் காத்திருந்திருக்கிறார். சுமார் 2 மணிநேரம் கடந்திருக்கும். ராஜேஷிற்கு பின் வந்தவர்கள் எல்லாரும் எம்.ஜி.ஆரை வந்து பார்த்துவிட்டு செல்லும்போது, ராஜேஷை மட்டும் எம்.ஜி.ஆர். அழைக்கவே இல்லை.
ஒரு பெரிய வி.ஐ.பி. கடைசியாக பேசிவிட்டு ஒரு கட்டட திறப்புவிழாவிற்கு அழைப்பு கொடுத்து விட்டுச் சென்றார். அதற்பிறகு 10.35 மணிக்கு ராஜேஷை உள்ளே அழைத்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
அவர் அறையில் ராஜேஷ் நுழைவதற்கு முன்பாகவே, எம்.ஜி.ஆர். ராஜேஷைப் பார்த்து கை கூப்பி வணக்கம் செலுத்தி நின்று கொண்டிருந்தார். இதைப் பார்த்ததும் ஒரு கணம் ராஜேஷிற்கு ஆச்சர்யம். அதிசயமாக எம்.ஜி.ஆரை பார்த்திருக்கிறார். இவர் ஆச்சர்யப்பட்டுப்போனதை உணர்ந்துகொண்ட எம்.ஜி.ஆர். ""என்ன... வணக்கம் செய்தபடி நிற்கிறேன் என்றுதானே பார்க்கிறே. வணக்கம் செலுத்துவதிலும், வாழ்த்துவதிலும் முதல்வனாக இருக்க வேண்டும் என்பது இஸ்லாமிய கொள்கை. அந்த கொள்கையை நான் கடைபிடித்து வருபவன்'' என்று சொல்லியிருக்கிறார். அதோடு அந்த கிரஹப் பிரவேசத்திற்கு எம்.ஜி.ஆர். வந்து சிறப்பு செய்தாராம்.
ஒரு பத்து நாள் கழிந்த பின்னர்தான், தான் காக்க வைக்கப்பட்டிருந்ததற்கான காரணம் ராஜேஷின் காதிற்கு எட்டியிருக்கிறது. அது என்ன காரணம் தெரியுமா... 9 10.30 ராகு காலமாம். அதனால்தான் ராஜேஷை வெளியே காத்திருக்குமாறு எம்.ஜி.ஆர். சொல்லியிருக்கிறார்.
இது சம்பந்தமாக எம்.ஜி.ஆர். உதவியாளர் அவரிடம், "ஐயா ராகு காலம் என்பதற்காக ராஜேஷை 2 மணி நேரம் காத்திருக்க வச்சீங்க... ஆனா, தன்னுடைய கட்டட திறப்புவிழாவுக்கு ஒரு பெரியவர் வந்திருக்கார்னு சொன்னதும், அவரை முதல்ல வரவழைச்சீங்களே' என்று கேட்டுள்ளார்.
அதற்கு எம்.ஜி.ஆரோ... "பதில், உன் கேள்வியிலேயே இருக்கிறது. அவர் ஒரு பெரியவர் என்று நீயே சொல்கிறாய். பெரியவர் வாழ்ந்து முடித்துவிட்டார். ஆனால், ராஜேஷோ இனிமேல்தான் வாழ ஆரம்பிக்கப் போகிறான் அதனால்தான் அவனிடம் ராகு காலத்தில் பத்திரிகை வாங்கவில்லை' என்று விளக்கம் சொல்லியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

1984ம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலகட்டம். அந்த காலக்கட்டத்தில் அரசியல்வாதிகளை தவராக சித்தரித்து நிறைய படங்கள் வெளியானது. ராஜேஷ் நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு படமும் அதே வகையராவைச் சேர்ந்ததுதான். சட்டசபை சபாநாயகராக பி.எச். பாண்டியன் இருந்தபோது ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது, அரசியல்வாதிகளை கொச்சைப்படுத்தி தமிழ்படம் வெளிவந்தால், அந்தப் படத்தை திரையிடும் திரையரங்கத்தின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும், இதுதான் தீர்மானம்.
இந்த தீர்மானத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் பெரிய அளவில் உண்ணாவிரதம் நடந்தது. அதில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், டி.ராஜேந்தர், ராஜேஷ் என்று பலர் அரசின் இந்த தீர்மானத்தை எதிர்த்து பகிரங்கமாக பேசினார்கள்.
அதேபோல் இன்னொரு சம்பவம்.. ஊதிய கோரிக்கையை வலியுறுத்தி, அரசை எதிர்த்து ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் மாபெரும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. அந்தப் பேரணியை ராஜேஷ்தான் தொடக்கி வைத்தார். அடிப்படையில் ராஜேஷûம் ஒரு ஆசிரியர்தானே. இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் அனைவரையும், காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், சிறைக்குச் சென்று சிறையில் அடைப்பட்டு கிடந்தவர்களுக்கு தேவையான உதவிகளை ராஜேஷ்தான் செய்தார்.

இந்தப் பிரச்னைகளுக்குப் பிறகு சகோதரியின் திருமண நிகழ்ச்சிக்காக எம்.ஜி.ஆரை நேரில் சென்று அழைப்பதற்காக பத்திரிகை கொண்டு சென்றார் ராஜேஷ். ஆனால், எம்.ஜி.ஆருக்கு எதிராக இரண்டு முறை போராட்டத்தில் கலந்து கொண்டபடியால் அவரை நேரடியாக சந்திப்பதில் லேசான தடுமாற்றம் ராஜேஷிற்கு. ஆனால், நடந்ததோ முற்றிலும் தலைகீழ். இவர் வந்திருக்கிறார் என்று தெரிந்ததும், உடனடியாக உள்ளே அழைத்திருக்கிறார் எம்.ஜி.ஆர். உள்ளே வந்ததும், வழக்கம்போல் தன்னுடைய உற்சாகத்தில் இருந்து கொஞ்சமும் மாறாமல் ராஜேஷிடம் பேசியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
பேச்சில் அவ்வளவு ஒரு கணிவு, அவ்வளவு ஒரு அக்கறை. போராட்டத்தில் தன்னை எதிர்த்துப் பேசியதற்கான வருத்தத்தையோ, கோபத்தையோ எம்ஜிஆர் காட்டிக்கொள்ளவே இல்லையாம். இது ராஜேஷிற்கு பிரமிப்பாக இருந்திருக்கிறது.
பத்திரிகை கொடுக்கப்பட்டாலும், நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர். வருவாரோ வரமாட்டாரோ என்று ராஜேஷிற்கு குழப்பம். ஆனால், அந்த திருமணத்தை எம்.ஜி.ஆரே முன்னின்று நடத்திக் கொடுத்ததோடு, அந்த நிகழ்ச்சியில் 58 நிமிஷம் இருந்து விட்டுப் போனாராம். அந்த நினைவலைகளை இப்போதும் கூட என்னிடம் கூறி நெகிழ்ந்திருக்கிறார் ராஜேஷ்.
பேட்டி: தேவராஜன்

நிஜத்தை தொட்ட நிழல்கள் (தினமலர் வாரமலரில் வந்த தொடர்)

நிஜத்தை தொட்ட நிழல்கள் (தினமலர் வாரமலரில் வந்த தொடர்)

டி.ராஜேந்தர் மனித நேயசிக்க மனிதர்!
( ஸ்டில் சித்ரா சுவாமிநாதன் பேட்டி : தேவராஜன்)

ஓவியர் உபால்டு நண்பர் மதிதான் என்னை டி.ராஜேந்தரிடம் அறிமுகப்படுத்தினார். அது 1983ம் ஆண்டு. அப்போது டி.ஆர். தன் முதல்படமான "ஒரு தலை ராகம்' படம் எடுத்துக்கொண்டிருந்த சமயம். டி.ஆரிடம், "இவர் என் நண்பர். நல்ல போட்டோகிராபர்' என்று அறிமுகப்படுத்தியதிலிருந்து இன்று வரை டி.ஆரிடம் அன்புடன் பழகிவருகிறேன்.
டி.ஆரின் வீட்டு விஷேசங்கள், அவர் சம்பந்தமான விழாக்கள், அவர் நடித்த படங்களின் வெற்றிவிழாக்களை எல்லாம் போட்டோ எடுத்திருக்கிறேன். டி.ஆர். பற்றி சொல்ல எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. என் மனதில் இருப்பதை எல்லாம் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
டி.ராஜேந்தர் தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர். மயிலாடுதுறை பக்கம் உள்ள வடகரை அவர் பிறந்த கிராமம்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
அப்போதே கல்லுõரிகளில் நாடகங்கள் போட்டு அசத்துவது அவருக்கு கைவந்த கலையாக இருந்திருக்கிறது. அவருடைய திறமைகளைப்பார்த்த நண்பர் எல்லாம்,"" ராஜேந்தார், நீ சென்னைக்குப் போய் சினிமா படம் எடு. நீ நிச்சயம் ஜெயிப்பே!'' என்று நம்பிக்கைத் தந்தனர். நண்பர் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைப் பார்த்து, சினிமாவுக்குத் தேவையான நுட்பங்களை எல்லாம் படித்து தெரிந்து கொண்டார்.
சென்னைக்கு வந்தப்பிறகு, பல போராட்டங்களுக்குப் பிறகு, இஎம். இப்ராஹிம் தயாரிக்க, டி.ஆரின் கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள், இசை, இயக்கம் என சகலமும் முதல் படத்திலேயே துணிச்சலாக செய்தார்.
இந்தப் படத்திற்கு தேவையான அனைத்து பாடல்களும் எழுதிய டி.ஆர்., சில பாடல்களை டி.எம்.எஸ். பாடினால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணி, டி.எம்.எஸ். வீட்டிற்குச் சென்றார்.
துரும்பாக இளைத்து, பரட்டை தலை, தாடியுடன் புதுமுக இயக்குனர் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட டி.ஆரை ஏற இறங்க பார்த்திருக்கிறார் டி.ஏம்.எஸ்.
"" என்னப்பா நீ புதுமுக இயக்குனரா? உன் படத்துக்கு நான் தான் பாடணுமா? சரி, கதையைச் சொல்லு!'' என்றிருக்கிறார்.
டி.ஆரும் உடனே கதையை நடித்தே காட்டிருக்கிறார். கதைப்பிடித்திருந்ததால், ""சரி, எங்கே ரெக்கார்டிங் வைத்திருக்கேன்னு சொல்லு நான் வந்துடுறேன்.'' என்று டி.எம். எஸ். சொல்லி அனுப்பிவைத்துள்ளார்.
ஓரிரு நாள் கழித்து தேதி கொடுத்த நாளில் ரெக்கார்டிங் தியேட்டருக்குப் போயிருந்தார் டி.எம்.எஸ். "" நான் பாட வேண்டி பாட்டைக் காட்டப்பா!'' என்று கேட்டார்.
டி.ஆர். தான் எழுதி "நான் ஒரு ராசியில்லா ராஜா' என்ற பாடலைக் காட்டினார். அதைப்படித்த டி.எம்.எஸ் அப்படியே ஆடிபோய்விட்டார்.
"" என்னப்பா இது! உனக்கு முதல் படம் என்கிற, முதல் பாட்டுங்கற. இப்படி எழுதி இருக்கீயே? பாட்டு நல்லா இருக்கு ஆனா, முதல் இரண்டு வரியை மாத்தி எழுது பாடறேன்'' என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் டி.எம்.எஸ்.
மீண்டும் டி.ஆர்., டி.எம்.எஸ் வீட்டிற்குச் சென்று, படத்தின் கதைக்குப் பொருத்தமான பாட்டு அது. வரிகளே கதையைச் சொல்லும். அதனால், வரிகளை மாற்ற இயலாது. ஐயா, நீங்க தான் அந்தப் பாட்டை பாடணும்'' என்று டி.ஆர்.கோரிக்கை வைத்தார்.
""ஏம்பா, இப்பதான் பல புது பாடகர்கள் இருக்காங்களே! எஸ்.பி.பி., மலேசியா வாசுதேவன் இவங்களை வைத்துப் பாட வைக்கக்கூடாதா?'' என்று தட்டிக்கழிக்கப் பார்த்தார் டி.எம்.எஸ். இருந்தாலும், மனம் தளராமல் டி.ஆர். "" ஐயா, நீங்கதான் பாடணும்'' என்று அடம்பிடித்திருக்கிறார்.
டி.ஆரின் பிடிவாதத்தையும், விடாமுயற்சியையும் பார்த்த டி.எம்.எஸ். "" சரி, வந்து பாடித் தருகிறேன்'' என்று ஒப்புக்கொண்டார்.
மீண்டும் ரெக்கார்டிங் தியேட்டர் வந்தார் டி.எம்.எஸ்.
டி. ஆரை அழைத்து,"" என்ன இருந்தாலும் நீயும் புதுமுக இயக்குனர். உன் முன்னேற்றம் என்னால் கெட்டுபோய்விடக்கூடாது. சரி, நீ சொன்ன "நான் ஒரு ராசியில்லா ராஜா' பாடலை கடைசியாக பாடறேன். அடுத்தப் பாடலைக்காட்டு, அதைப் பாடறேன்'' என்றார்.
உடனே, டி.ஆர். ஞூடுத்தப்பாடலைக் காட்டி இது தான் சார் நீங்க பாட வேண்டிய பாடல்'' என்று அந்தப்பாடலை டி.எம்.எஸ். கையில் கொடுத்தார் டி.ஆர்.
அந்தப் பாடலைப் படித்ததும் டி.எம்.எஸ். பயங்கர அதிர்ச்சியடைந்து விட்டார். "" என்னப்பா... முதல் உள்ள பாட்டே தேவலாம் போலிருக்கே. இந்த பாட்டில் " என் கதை முடியும் நேரம் இது என்பதை சொல்லும் ராகமிது' எழுதியிருக்கியே. இந்தப் பாட்டை நான் பாடினால் எனக்கு என்ன ஆகும்? உனக்கு என்னாகுமோ! தெரியலையப்பா... பாட்டு வரியை மாற்ற முடியாதா?'' என்று டி.எம்.எஸ் மிரண்டு போய் கேட்க, பழையபடி மீண்டும் டி.ஆர். மாற்ற முடியாது என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தார்.
அப்படியே கொஞ்ச நேரம் தீவிர யோசனையில் இருந்த டி.எம்.எஸ். "சரி, நடப்பது நடக்கட்டும். பாவம் இந்த தம்பிக்கு இது முதல் படம் வேறு. நாம் பாட மறுத்துவிட்டால், ஒருவேளை வேறு யாராவது பாடி, அந்தப் பாடல் எடுபடவில்லை என்றால், இந்த தம்பி வாழ்க்கை வீணாகப் போய்விடுமே! நம்மால் ஒருத்தர் வாழ்க்கை கெடக்கூடாது' என்று ஒரு தீர்மானத்துக்கு வந்தவர், "" தம்பி, இங்கே வாப்பா... நானே பாடறேன். சீக்கிரம் வேலையை ஆரம்பி...'' என்று சொன்னதுமே, டி.ஆர். முகத்தில் முதல்முறையாக தாடியை மீறி சந்தோஷம் பளீச்சிட்டது. மிகதுரிதமாக வேலைகள் ஆரம்பிக்க, டி.எம்.எஸ். பாடலை அவரது வெண்கல குரலில் பிரமாதமாக பாடி அசத்திருந்தார்.
ஆனால், ஆடியோ ஏஜென்ட்கள் இந்தப்படத்தில் பெண் குரலே இல்லையே! எல்லாம் ஆண் குரலாகவே இருக்கே. இந்த பட கேசட் விற்குமா? என்று சொல்லி டி.ஆரை மனம்முடைய செய்தனர். டி.ஆர். என்ன செய்தார்?
பேட்டி: தேவராஜன்
தொடரும்.

டி.ராஜேந்தர் பற்றி சித்ரா சுவாமிநாதன் : பேட்டி: தேவராஜன்

ஒருதலை ராகம் படத்திற்காக "நான் ஒரு ராசியில்லா ராஜா' என்ற பாடலும், "என் கதை முடியும் நேரமிது' என்ற பாடலையும் அபசகுனமாக நினைத்த டி.எம்.எஸ். அப்பாடல்களை பாட மறுத்தார். பின்னர், டி.ஆரின் தொடர் முயற்சிகளுக்குப்பின் ஒருவழியாக சம்மதித்து அப்பாடல்களைப் பாடிதந்தார். மற்ற பாடல்களை இளம்பாடகர்கள் பாடி இருந்தனர்.
சூபடத்தின் அனைத்து பாடல்களும் பதிவுசெய்யப்பட்டு, ஆடியோ ரிலீசுக்குத் தயாரானது. படத்தின் பாடல்களைக் கேட்ட ஆடியோ ரைட்ஸ் வாங்கும் உரிமையாளர்கள்" இதென்ன படத்தில் ஒரு டூயட் பாட்டுக்கூட இல்லை. ஒரு பெண் குரல் பாடலும் இல்லை. எல்லாமே ஆண் குரலாகவே இருக்கே. எப்படி விலைபோகும்?' என்று ஆடியோ உரிமை கேட்டவர்கள் முதலில் வாங்க மறுத்து விட்டனர். மீண்டும் டி.ஆரின் தொடர் போராட்டத்தின் காரணமாக ஒருதலை ராகம் பட கேசட் ரிலீஸ் ஆனது. கேசட் ரிலீஸ் ஆன நாள் முதலாய் கேசட் விற்பனை படிப்படியாக உயர்ந்தது. கடைசியில் அமோக விற்பனை சாதனை புரிந்தது. டி.எம்.எஸ் பாடி அந்த இருபாடல்களும் மற்ற பாடகர்கள் பாடிய பாடல்களும் பட்டி,தொட்டி, சிட்டி களில் ஒலித்தது. எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. டி.எம்.எஸ்சுக்கு அந்தப் பாடல்கள் நல்ல பெயரை பெற்று தந்தது.
படப்பாடல்கள் ப்பர் ஹிட் ஆனதால் படம் ரிலீஸ் ஆன நாள் முதல் நல்ல வரவேற்பு கிடைத்தது. திரையிட்ட தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக ஒருதலை ராகம் படம் 100 நாள் கண்டது.
படத்தின் 100 நாளில் வெற்றிவிழா எடுக்கப்பட்டது. படத்தில் நடித்த நடிகர், நடிகைகள்,இதர தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லாம் கவுரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு நினைவு கேடயம் வழங்கப்பட்டது. ஆனால், ஒரு தலை ராகம் படைத்த பிரம்மாவான டி.ஆருக்கு அந்த விழாவில் அமர ஒரு சீட்கூட கிடைக்கவில்லை. அவரது திறமையை கவுரபடுத்த ஒரு சீல்டும் வழங்கப்படவில்லை. தெரிந்தே, டி.ஆர். புறக்கணிக்கப்பட்டார். அதுமட்டுமல்ல; படத்தின் கதை, வசனம், பாடல், இசை, இயக்கம் எல்லாம் டி.ஆர். தான். இருந்தும் அப்படத்தின் இயக்கம் என்று பட தயாரிப்பாளர் இஎம். இப்ராஹீம் தன் பெயரைப் போட்டுக்கொண்டார்.
இப்படி முதல்படத்திலேயே பல அவமானங்களை,புறக்கணிப்புகளை,ஏமாற்றுகளைக் கண்ட டி.ஆர். சோர்ந்துவிட வில்லை. அவரின் தன்னம்பிக்கை மேலும் ஜெயிக்க வேண்டும் என்று தான் போராட துõண்டியது.
ஒரு தலை ராகம் சூப்பர் ஹிட் ஆனப்பிறகு, துõர்தர்சன் தொலைக்காட்சியில் இருந்து டி.ஆரை பேட்டி டுத்தார்கள். ஆனால், அந்தப் பேட்டியை என்னக் காரணத்தாலோ என்னவோ ஒளிப்பரப்பவே இல்லை. டி.ஆருக்கு மீடியாவிலும் முதல் புறக்கணிப்பு ஏற்பட்டது. இருந்தும் மனம் தளராமல் அடுத்தப் படத்திற்கு வாய்ப்புத் தேட ஆரம்பித்தார்.
நாட்கள் பல கடந்தன. டி.ஆரின் திறமையை அறிந்த ஜே.பி.ஆர். தான் எழுதி வைத்திருந்த கதையை படமாக எடுத்து தருமாறு டி.ஆரிடம் கொடுத்தார். அந்தப் படத்திற்கு ஜே.பி.ஆர் தான் தயாரிப்பாளர். இரண்டாவது வாய்ப்பு கிடைத்ததில் பூரித்துப் போன டி.ஆர். உடனே ஜே.பி.ஆரின் கதைக்கு திரைகதை, வசனம், பாடல்கள் எழுதினார். படத்திற்கு "வசந்த அழைப்புகள்' என்று பெயரிட்டு படம் எடுத்து வந்தார். இரண்டாவது படமான வசந்த அழைப்புகள் டி.ஆருக்கு எந்தப்பிரச்னையையும் கொடுக்கவில்லை. தடைகளும் ஏற்படுத்த வில்லை. திட்டமிட்டப்படி படத்தை குறிப்பிட்ட காலத்திலேயே எடுத்து முடித்தார். படம் ரிலீஸ் ஆனது. வசந்த அழைப்புகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
மூன்றாது படம் பண்ணும வாய்ப்பும் டி.ஆருக்கு வந்தது. மயிலை குருபாதம் என்பவர் தான் ஒரு படம் தாயாரிக்கப் போவதாகவும், அதை நீ தான் கதை எழுதி, இயக்க வேண்டும் என்று டி.ஆரிடம் சொன்னார். டி.ஆர். முழுமூச்சாக மூன்றாவது படவேலையில் ஈடுபட்டார். படத்திற்கு "ரயில் பயணங்களில்' என்று பெயரிட்டார். அந்தப்படத்தின் கதை மிக அருமையான காதல் கதை. டி.ஆர். எழுதிய அத்தனைப்பாடல்களும் மிக அருமையாக இருந்தன. இந்தப்படம் ரிலீஸ் ஆனால் வெற்றி விழா காணும் என்பதில் மிகுந்த நம்பிக்கையில் இருந்தார் டி.ஆர். படம் கிடுகிடுவென எடுக்கப்பட படம் வளர்ந்தது. என்னவோ திடீரென்று தயாரிப்பாளர் குஞ்சிதபாதத்திற்கு பண நெருக்கடி ஏற்பட்டது. படத்திற்கு பைனான்ஸ் பண்ண முடியாமல் தவித்தார். படம் அப்படியே நின்றுபோனது. தயாரிப்பாளர் குஞ்சிதபாதம் இடிந்துபோனார். ஆனால், டி.ஆர். எப்படியும் இந்த படத்தை எடுத்து ரிலீஸ் செய்வேன் என்று தீர்மானமாக இருந்தார். அந்த நேரத்தில் டி.ஆருக்கு தங்குவதற்கு கூட ஒரு இடம் இல்லை. சாப்பாட்டிற்கும் வழியில்லை. இருந்தும் ரயில் பயணங்களில் படம் டிராப் ஆகிவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.
அப்போது முருகேச கவுண்டர் என்ற பிரபல பிரமுகர் ரயில் பயணங்களில் படத்தை தொடர்ந்து எடுக்க நிதி உதவி செய்வதாக வாக்குத் தந்தார். இது போதாதா டி.ஆர. வீறுகொண்டு எழ?
நின்று போன அந்தப் படம் மீண்டும் முருகேச கவுண்டர் நிதியுதவியால் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றது. ஒருவழியாய் படம் முழுமையாக எடுக்கப்பட்டு முடிவடைந்தது.
படத்தின் கதை, பாடல்கள், இசை எல்லாம் நன்றாக அமைந்ததால் படம் நன்றாக ஓடும் என்று எல்லாருக்கும் நம்பிக்கை ஏற்பட்டது. படம் ரிலீஸ் ஆனது. எதிர்பார்த்ததைவிட படம் மிக அதிக நாட்கள் ஓடி சாதனை செய்தது. இந்த படத்தின் வெற்றியின் மூலம் பல பட வாய்ப்புகள் டி.ஆரைத் தேடி வந்தன.
பேட்டி: தேவராஜன்
தொடரும்.
டி.ஆர். 3
பாலகிருஷ்ணனுக்கு ராகம் தேடும் பல்லவி படமும், கே.ஆர்.ஜிக்கு நெஞ்சில் ஓர் ராகம் படம் செய்து கொடுத்தார். அந்தப் படத்தில் சரிதா, தியாகராஜன், ராஜிவ் இவர்களை அறிமுகப்படுத்தினார்.
"உயிர் உள்ளவரை உஷா' என்ற படத்தின் மூலம் டி.ஆர். தயாரிப்பாளர் ஆனார். சொந்த கம்பெனிக்கு தன் பெயரையோ, அம்மா, அப்பா, மனைவி, பிள்ளைகள் பெயரைத்தான் எல்லாரும் வைக்க விரும்புவார்கள். டி.ஆர். தன்னுடை பிறந்த மண்ணின் மாவட்டமான தஞ்சையை பெருமைபடுத்தும் விதமாக"தஞ்சை சினி ஆர்ட்ஸ்' என்று பெயர் வைத்தார். எம்மதமும் தனக்கு சம்மதம் என்பதை விளக்கும் விதமாக இந்து கோயில் கோபுரம், பிறை, சிலுவை சேர்த்து டி.சி.எ. என்ற லோகோவை வடிவமைத்திருந்தார்.
உயிருள்ளவரை உஷாவில் இவர் நடித்தப் பிறகு இவருக்கென்று ரசிகர்கள் வளர ஆரம்பித்தார்கள்.
டி. ஆர். நல்ல படைப்பாளர், நடிகர் மட்டுமல்ல நல்ல மனிதர். இரக்க குணமும், உதவும் தன்மையும் கொண்டவர். அதற்கு பல உதாரணங்கள் என் நினைவில் பதிந்திருக்கிறது.
டி.ஆர். தன்னுடை ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் ஏழை எளிய மக்களுக்கு பல லட்சங்கள் உதவி செய்வார். அன்னதானம் செய்வார். 1987ம் ஆண்டு. வடபழனி விஜயசேஷமகாலில் பிறந்தநாள் கொண்டாடினார். அன்று அவர் ஏழைகளுக்கு செய்த உதவி கொஞ்ச நஞ்சமல்ல. திருவண்ணாமலை, திருச்சி, ராஜபாளையம், குற்றாலம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த நான்கு ஜோடிகளுக்கு முழுக்க முழுக்க தன் சொந்த செலவினில் திருமணம் செய்து வைத்தார். அதை நேரில் பார்த்து நான் பிரமித்துப் போனேன்.
இன்னொரு சம்பவம் இப்போதும் கூட அந்த நிகழ்ச்சி என் கண்ணில் நிழலாடுகிறது. அதுவும் டி.ஆரின் ஒரு பிறந்த நாள் விழா. பிறந்த நாளுக்கு முதல் நாள் இரவு. டி.ஆரின் பிறந்த நாள் போஸ்டர்கள் அச்சடிக்கப்பட்டு இரவு முழுவதும் சென்னையில் ஆங்காங்கே ஒட்டப்பட்டுக்கொண்டிருந்தன.
அந்த இரவில் டி.ஆரின் போஸ்டரை ஒட்டிய ஒருத்தர் தவறி மேலே இருந்து விழுந்து விட்டார். அவருக்கு பலத்த அடி, காயம் ஏற்பட்டது. அவரை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்து அட்மிட் செய்தனர்.
இந்த தகவல் எப்படியோ டி.ஆருக்கு காலையில் போய் சேர்ந்து விட்டது. அந்தத் தகவலை கேட்டதும் டி.ஆர் துடித்துப்போனார்; கண்ணீர் விட்டு கலங்கினார். பிறந்த நாளுக்கு பெரிய பெரிய பிரமுகர்கள் எல்லாம் வாழ்த்த வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.
இதை எல்லாம் அப்படியே விட்டு, காரை எடுத்துக்கொண்டு நேராக அரசு பொது மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கே போய் போஸ்டர் ஒட்டும் போது தவறி விழுந்து அடிப்பட்டவரை சந்தித்து, ஆறுதல் கூறிய டி.ஆர். அவருக்கு அந்த மருத்துவமனையில் முதல்உதவி சிகிச்சை மட்டும் செய்து விட்டு, உடனே அங்கிருந்து அவரை டிஸ்சார்ஜ் பண்ணி, தன் காரிலேயே அழைத்துக்கொண்டு தியாகராயர் நகரில் இருக்கும் பிரபலமான ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்து, உயர்ரக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். அதுமட்டுமல்ல, அங்கிருக்கும் டாக்டர்களிடம் ஒரு பிளாங் செக் கொடுத்து விட்டு எவ்வளவு செலவு ஆனாலும் பராவாயில்லை. இவர் பூரண குணமடைய வேண்டும் கோரிக்கை வைத்து விட்டு தான், தன்னுடை பிறந்த நாள் கொண்டாடும் விஜய சேஷமகாலுக்கு வந்தார்.
இவரை வாழ்த்த எத்தனையோ முக்கிய பிரமுகர்கள் வந்து காத்திருந்தும் கூட, தனக்காக ஒருத்தர் வேலை செய்து அடிப்பட்டாரே என்ற கவலைதான் டி.ஆர் நெஞ்சில் நெறுஞ்சியாய் குத்தியது.
அவர் நினைத்திருந்தால் தன் உதவியாளரை அழைத்து, அவரிடம் பணம் கொடுத்து அடிப்பட்டவரை பார்த்துக்கொள் என்று சொல்லி விட்டு, தன் பிறந்த நாளை ரசிகர்கள், பிரமுகர்கள் மத்தியில் கொண்டாடியிருக்கலாம். அப்படி நினைக்காத டி.ஆர். என் மனதில் உயர்ந்து நிற்கும் மாமனிதராக இருக்கிறார்.
தன்னுடை பிறந்த நாளுக்கு வாழ்த்த வரும் ரசிகர்களுக்கு சென்னையில் தங்கும் வசதி செய்து, அவர்களுக்கு உணவு கொடுத்து கவுரவமாக நடத்தி தான் அனுப்பி வைப்பது டி.ஆரின் வழக்கம். தன் ரசிகர் இரவில் பயணம் செய்தால் ஏதாவது அசம்பாவிதனம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே யாரையும் இரவில் ஊர் திரும்ப கூடாது என்று கட்டளையிடுவார்.
ஒரு முறை திருவண்ணாமலையில் இருந்து டி.ஆரின் ரசிகர்கள் டி.ஆருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற வேனில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர். வரும் வழியில் வேன் சிறு விபத்துக்குள்ளானது.நல்ல வேளை ரசிகர்களுக்கு எதுவும் ஆகவில்லை. இந்த தகவல் டி.ஆர். காதுக்கு எட்டியதுமே, பதறியவர், உடனே தன் உதவியாளரிடம் ரூபாய் அறுபதாயிரம் கொடுத்து வேனை நல்ல மெக்கானிக்கிடம் கொடுத்து பழுது பார்த்த, சரிசெய்து என் ரசிகர்களிடம் கொடு. என்னைப் பார்க்க வந்தவர்களுக்கு என்னால் சிறு நஷ்டம் கூட ஏற்படக்கூடாது என்று சொல்லி அனுப்பிவைத்தார்.
தான் ஒழுக்காமானவர் என்பதை நிஜவாழ்க்கையிலும் சரி, சினிமாவில் நடிப்பதாக இருந்தாலும் சரி ஒருபோதும் டி.ஆர். தன்கொள்கையை விட்டுகொடுக்க மாட்டார். உதாரணம் சொல்வதென்றால் அவர் நடித்த எந்தப் படத்திலும் எந்த நடிகையும் அவர் தொட்டு நடித்ததே இல்லை.
தன் மூத்த மகன் சிம்புவின் பெயரில் "சிம்பு சினி ஆர்ட்ஸ்' என்ற பெயரில் ஒரு தாயின் சபதம் படத்திலிருந்து வீராசாமி முதற்கொண்டு அந்த பேனரில்தான் படம் எடுத்து வருகிறார்.
டி.ஆரின் முதல் படத்திலிருந்து இன்று வரை அவருடைய படத்தின் விழாக்களுக்கு நான் தான் புகைபடம் எடுத்து வருகிறேன். நான் கலைமாமணி விருது வாங்கியதும், முதலில் என்னை கவுரவித்து, பேட்டி எடுத்து அதை குறள் இணையதள டி.வியில் ஒளிபரப்பி என்னை பெருமைபடுத்தியதும் டி.ஆர். தான்!
இப்படி, டி.ஆர். தான் கடந்து வந்த பழைய நினைவுகளை என்னுடன் அடிக்கடி பகிர்ந்து நெகிழ்வதுண்டு.
பேட்டி : தேவராஜன்
நினைவுகள் தொடரும்

நிஜத்தை தொட்ட நிழல்கள் ( தினமலர் வாரமலரில் வந்த தொடர்)

நிஜத்தை தொட்ட நிழல்கள் ( தினமலர் வாரமலரில் வந்த தொடர்)

ரஜினி காந்த் மிக உயர்ந்த மனிதர்!
( ஸ்டில் சித்ரா சுவாமிநாதன் : பேட்டி : தேவராஜன்)
என்னுடைய 50 ஆண்டுகால திரைப்படதுறையில் நான் சந்தித்து, பழகிய எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், விஜயகாந்த் இப்படி பல நடிகர்களுடன் பழகி இருக்கிறேன். இவர்களில் வித்தியாசமானவர், என் நெஞ்சைத் தொட்டவர் ரஜினிகாந்த். என் அனுபவத்தில் சொல்கிறேன் கிட்டதட்ட எம்.ஜி.ஆர். போல வாழ்பவர் ரஜினி.
எம்.ஜி.ஆர். கண்டியில் பிறந்தாலும், தமிழ்நாடுதான் என்நாடு. என் சொந்தம் தமிழ் மக்கள் என்று வாழ்ந்தவர். ரஜினியும் அப்படித்தான். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், தன்னை ஒரு தமிழன் என்று சொல்லிக்கொள்ளவே விரும்புவார். எம்.ஜி.ஆரைப்போலவே சத்தமில்லாமல், விளம்பரமில்லாமல் பலருக்கு உதவிவருபவர்.
ரஜினி ஆரம்ப கால சினிமா வாழ்க்கையை துவக்கிய காலத்தில் இருந்தே எனக்கு நன்றாக அவரைப் பற்றித் தெரியும். அப்போது நான் எலிகண்ட் விளம்பர நிறுவனத்தில் பணியில் இருந்தேன். நானும் ஓவியர் பரணியும் அடிக்கடி கே.பி(கே. பாலசந்தர்) அலுவலகத்திற்கு செல்வது வழக்கம். கே.பி. சார் தான் ரஜினியை "அபூர்வ ராகங்கள்' படத்தில் அறிமுகம் செய்தார். ரஜினியை கே.பி. சார் அலுவலகத்தில் பலமுறை பார்ப்பேன். வணக்கம் சொல்வேன். அவரும் சிரித்தப்படியே வணக்கம் சொல்வார். ரஜினியின் முதல் படம் வெளியானது. பிறகு, கே.பி. இயக்கத்தில் "மூன்று முடிச்சு நடித்தார். படிப்படியாக ரஜினி முன்னுக்கு வந்த சமயம் அது. ரஜினி புதுப்பேட்டையில் மேன்சனில் வசித்துவந்தார்.
நான் எழும்பூரிலிருந்து எலிகண்ட அலுவலகத்திற்கு செல்ல மியூசியம் வழியாக வந்து, ஆர்ட்ஸ் காலேஜ் வழியாக மவுண்ட் ரோடு கடந்துதான் அலுவலகம் செல்ல வேண்டும். ஒருமுறை ரஜினி ஒயிட் அண்ட் ஒயிட்டில் ஸ்கூட்டரில் அண்ணாசாலை கலில் மேன்சன் அருகே போய்கொண்டிருந்தார். நான் எதிரே சைக்கிளில் வந்து கொண்டிருந்தேன். ரஜினியைப் பார்த்ததும், "வணக்கம்' சொன்னேன். அவரும் ஸ்கூட்டரை நிறுத்தி வணக்கம் சொன்னார். பிறகு, அவரை கே.பி. சார் அலுவலகத்தில் அடிக்கடி பார்த்திருப்பதை சொன்னேன். அவர் நடித்த இரண்டு படங்களைப்பற்றிவிமர்சனம் செய்தேன்.
""சரி, வாங்க பேசிக்கொண்டே போகலாம்'' என்றவர், ""நீங்க என்ன செய்கிறீங்க?'' என்று கேட்டார்.
நான், ""எலிகண்டில் வேலை செய்கிறேன்'' என்றேன்.
இப்படி பேசிக்கொண்டே சென்றோம். இதுபோல சாலை சந்திப்பு அடிக்கடி நிகழ்ந்தது. இந்தப் பழக்கத்தின் மூலம் ரஜினி வீட்டிற்கு சென்றேன். எப்போதுமே ரஜினி வீட்டில் ரசிகர்கள் கூட்டம் இருக்கும். அப்போதெல்லாம் ரஜினி காலை 7 மணி முதல் 8 மணிவரை ரசிகர்களைப் பார்த்து, அவர்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது பழக்கம். ரசிகர்களை சந்தித்து விட்டுதான் சூட்டிங்கிற்கு போவார்.
தினமும் காலையில் ரஜினி வீட்டிற்குச் சென்று ரசிகர்களை ரஜினியுடன் படம்பிடித்து, அந்தப் போட்டோக்களை ரசிகர்களுக்கு கொடுத்து வந்தேன். ஏற்கெனவே ரஜினி வீட்டிற்கு வரும் ரசிகர்களைப் படம்பிடிக்க ஒரு இளைஞர் இருந்தார். அவரும் ரசிகர்களை ரஜினியுடன் படம்பிடித்து வந்தார்.
நான் போட்டோ எடுப்பதை ரஜினியோ, அவருடைய உதவியாளரோ தடுக்கவில்லை. கண்டிக்கவில்லை. என்னக்காரணமோ அந்த இளைஞர் மறுநாளில் இருந்து படம் பிடிக்க ரஜினி வீட்டிற்கு வரவில்லை. ரஜினி எப்போதுமே தன் ரசிகர்களோடு சிரித்தபடி, அணைத்தபடி தான் அதிகமா போஸ் கொடுப்பார். ரசிகர்கள் மீது ரஜினிக்கு எப்போதுமே பிரியம், மரியாதை எல்லாம் உண்டு. அதனால் தான் தன் ரசிகர்களை "வாழவைக்கும் தெய்வங்களே' என்று சொல்வார். அது தான் அவரது வளர்சிக்கு காரணமாக அமைந்தது.
தினமும் 30 இருந்து 50 பேருக்கு போட்டோ எடுத்து கொடுப்பேன். மற்றவர்களை வீட்டிற்குச் சென்று நாளை வாங்க என்பேன். அதுவும் வெளியூரில் இருந்து வரும் ரசிகர்களுக்கு முதலில் போட்டோ எடுத்துக்கொடுத்துவிடுவேன். சிலருக்கு தபாலில் போட்டோவை அனுப்பி வைப்பேன்.
ஒருசமயம் ரஜினி என்னிடம் வந்து."" எனக்காகவோ. ரசிகர்களுக்காகவோ எப்போதுமே இலவசமாக படம் எடுத்து தரவேண்டாம். அதற்குரிய பணத்தைப் பெற்றுகொள்ளுங்கள்'' என்று அன்பு கட்டளையிட்டார்.
ரசிகர்களின் போட்டோக்களை தபாலில் அனுப்ப அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்துக்கு அடிக்கடி செல்வேன். அப்படி வந்து போகும் போது தபால் அலுவலக வாசலில் செருப்பு தைக்கும் ஒரு தொழிலாளி தொழில் செய்து வந்தார். அவர் அருகில் தான் என் சைக்கிளை விட்டச் செல்வது வழக்கம். அந்த தொழிலாயின் கடையில் நாளிதழில் வெளிவந்த ரஜினியின் படங்களை ஒட்டி வைத்திருந்தார். அதை கவனித்த நான் அவரிடம், "" நான் தினமும் ரஜினி வீட்டில் ரஜினியை பல ஸ்டைல்களில் படம் பிடித்து வருகிறேன். உனக்கு நாளை ரஜினியின் ஒரிஜினல் ஸ்டில்லை தருகிறேன்'' என்றேன். அவரும் ரொம்ப சந்தோஷப்பட்டார். சொன்னபடி மறுநாள் ரஜினியை நான் எடுத்த போட்டோக்களை அவரிடம் கொடுத்தேன். அவரும் அதை அப்படியே பிரேம் செய்து கடையில் மாட்டிவைத்தார்.
ஒருமுறை அந்தத் தொழிலாலிழை ரஜினி வீட்டிற்கு அழைத்துச் சென்று, ரஜினியிடம் அறிமுகப்படுத்தி, அவரை ரஜினியோடு சேர்த்து போட்டோ எடுத்தேன். பின்னர் அந்தத் தொழிலாளிபற்றி ரஜினியிடம் சொன்னேன். அதைக்கேட்டதும், ""அவரை கொஞ்சநேரம் இருக்கச் சொல்லுங்கள்'' என்ற ரஜினி சில நிமிடங்களில் திரும்பி வந்து, அந்த தொழிலாளிக்கு 1000 ரூபாயை கவரில் வைத்து கொடுத்தார். அந்த தொழிலாளி சடாரென்று ரஜினி காலில் விழுந்து விட்டார். இந்தச் செயலைக்கண்டு ரஜினி அவரிடம் மிகவும் கோபித்துக்கொண்டு, "" இப்படி எல்லாம் இனிமேல் நீங்கள் யார் காலிலும் விழக்கூடாது. தாய், தகப்பன் காலில் விழுந்து தான் ஆசீர்வாதம் வாங்க வேண்டும்.'' என்று அறிவுரை கூறி , அனுப்பி வைத்தார்.
பேட்டி : தேவராஜன்
தொடரும்.

ரஜினி 2

ரஜினிக்கு பந்தா, பகட்டு எல்லாம் பிடிக்காது...
பிறர் தன் காலில் விழுவது, கார் கதவைத் திறந்துவிடுவது, உதவியாளர் என்ற பெயரில் ரசிகர்களை தள்ளிவிடுவது எல்லாம் அவருக்கு சுத்தமாகப் பிடிக்காது.
ரஜினிக்கு பெருந்தன்மை அதிகம். ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது...
அது, ரஜினி நடித்த "மூன்று முடிச்சு' சக்கைபோடு போட்ட வேளை. அந்தப் படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் பாலகிருஷ்ணன் தான் எடுக்கப்போகும் "இறைவன் தந்த வரம்' படத்திற்கு ரஜினியை மிகச் சிறிய சம்பளத்தொகைக்கு புக் செய்தார். அந்தப் படத்தில் சீனியரான ஸ்ரீகாந்த்தும், விஜயகுமாரும் நடிக்க இருந்தனர். படத்தை பீம்சிங் இயக்க இருந்தார்.
படப்பிடிப்பு கொஞ்ச நாள் நடைபெற்றது. பிறகு நிதிநெருக்கடியால் படப்பிடிப்பு அவ்வப்போது தடைபட்டு வந்தது.
இந்நிலையில், ரஜினி மற்ற தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுத்து நடித்து வந்தார். அப்படி அவர் நடித்த "பைரவி' படம் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது.
மீண்டும் " இறைவன் தந்த வரம்' படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்தது. ரஜினி நடித்து கொடுத்தார். படமும் ரீலீஸ் ஆனது.
புதுப்பேட்டையில் மேன்சனில் தங்கியிருந்த ரஜினியிடம் "இறைவன் தந்த வரம்' படத்தில் நடித்ததற்கான மீதி சம்பளத்தொகையை கொடுக்கச் சென்றார், பாலகிருஷ்ணன்.
ரஜினியை புக் செய்யும் போது இருந்த அவரின் மார்க்கெட் நிலை, பைரவி பட ஹிட்டிற்குப் பிறகு ஜெட் வேகத்தில் எகிறியிருந்தது...
இதனால், பேசிய சம்பளத்தொகையைவிட கூடுதலாக ஒருதொகை செக்காக ரஜினியிடம் கொடுத்தார், பாலகிருஷ்ணன்.
செக்கை வாங்கிப் பார்த்த ரஜினி, ""இது அதிகமா இருக்கே? முன்னால் நீங்கள் பேசிய சம்பளமே போதும்... அதுக்கு நானும் சம்மதிச்சேனே? பேசின பேச்சை ஏன் மாற்றணும்? எப்பவுமே வாக்குறுதியை நான் மீறிப் பேசறதில்லே... இப்ப திடீர்னு எதுக்கு அதிகத் தொகை? நீங்கள் எனக்கு என்ன தொகை சம்பளமாகத் தருகிறேன் என்றீர்களோ அதை மட்டும் கொடுங்க...'' என்று வற்புறுத்தி பழைய சம்பளத்தைத்தான் ரஜினி பெற்றுக்கொண்டார். இதை பாலகிருஷ்ணன் என்னிடம் பகிர்ந்து கொண்டு ரஜினியின் பெருந்தன்மையை பெரிதாக சிலாகித்தார்!

*
பெரிய நடிகர், சின்ன நடிகர், ஏழை, பணக்காரன் என்றெல்லாம் ரஜினி ஒருபோதும் "அந்தஸ்து' பாரபட்சம் பார்ப்பதில்லை. இதற்கு உதாரணமாக என் நினைவில் நிறைந்துள்ள ஒரு சம்பவம்...
வேணுசெட்டியாரின் ஆனந்தி பிலிம்ஸ் தயாரித்த "முள்ளும் மலரும்' படத்தின் 100 வதுநாள் வெற்றிவிழா சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடந்தது.
விழா முடிந்ததும் விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். படத்தில் பணிசெய்த அத்தனை பேருக்கும், கல்யாண மண்டபத்தின் முதல் மாடி ஏசி அறையில் விருந்து...
ரஜினி சாப்பிடுவதை படம் எடுக்க, நான் கேமராவுடன் சென்றேன். அவர் சாப்பிடுவதை போக்கஸ் செய்தேன். என்னைக் கூப்பிட்டு, ""நீங்க முதலில் சாப்பிடுங்கள். பிறகு, படம் எடுக்கலாம்!'' என்று அன்புக் கட்டளையிட்டு, அவர் அருகில் காலியாக உள்ள நாற்காலியிலேயே என்னை அமர வைத்து சாப்பிட வைத்தார். இந்த சம்பவம், நான் வாழ்நாளில் மறக்கவே முடியாதது!
*
ஆரம்ப காலத்திலிருந்தே ரஜினியிடம் பழக்கம் இருந்ததால்,1993ம் ஆண்டு என்னுடைய மூத்த மகள் திருமணப்பத்திரிகையை அவர் வீட்டுக்குச் சென்று கொடுத்தேன். திருமணத்திற்கு வந்து வாழ்த்துமாறு கேட்டுக்கொண்டேன்...
அழைப்பிதழை வாங்கிய உடனே வாய்நிறைய வாழ்த்தி, இனிப்புடன் ஒரு பெரிய தொகையை கொடுத்து அனுப்பி வைத்தார்.
என் 2வது மகன் திருமணப் பத்திரிகையை ஒரு விழாவில் ரஜினியைப் பார்த்தபோது கொடுத்தேன். அவர், "நாளை வீட்டிற்கு வாங்க' என்றார்.
மறுநாள் வீட்டிற்குப் போனேன்.
அப்போது ஏதோ அவசரவேலையாக ரஜினி வெளியில் சென்றிருந்தார். வீட்டில் அவர மனைவி லதா மேடம்தான் இருந்தார். அவர் என்னைப் பார்த்ததும் முகம் நிறைந்த புன்னகையுடன் வரவேற்றார்.
நான் வணக்கம் சொல்லி, "அம்மா... என்னை சார் வரச் சொல்லியிருந்தாங்க' என்று தகவல் சொன்னேன். "அவர் அவசரமா வெளியே போய்ருக்காரு... நீங்க வருவீங்கன்னு சொல்லியிருந்தார்'' என்று சொன்ன லதா, எனக்கு காபி கொடுத்து உபசரித்தார். ஒருபெரிய தட்டில் இனிப்பு, பழவகைகளுடன் ஒரு கவரில் பணம் வைத்து கொடுத்து வாழ்த்து சொன்னார். அன்பிலும் பாசத்திலும் பெருந்தன்மையிலும் ரஜினியைப் போலவே அவரது மனைவியும் இருக்கக்கண்டு நெகிழ்ந்து போனேன்.
*
"ரஜினி25' என்ற பிரமாண்ட விழாவை எம்ஜிஆர் பிலிம் சிட்டியில் நடத்தினார்கள்...
அந்த நிகழ்ச்சி முழுவதையும் புகைப்படங்கள் எடுக்க எனக்கு வாய்ப்பளித்தார்கள். நானும் அந்த பணியை நேர்த்தியாக செய்து கொடுத்தேன்.
நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்களை ஆல்பம் தயாரித்து, லதா மேடத்திடம் கொடுத்தேன். ஆர்வமாகப் படங்களைப் பார்த்து பாராட்டியதோடு, அந்த ஆல்பத்திற்கான செலவுத்தொகையைவிட அதிகமாகப் பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.
என் கடைசி மகள் சித்ராவின் திருமணம் 2006ம் ஆண்டு நடந்தது. ரஜினி வீட்டிற்குச் சென்று அழைப்பிதழ் தந்து, "" நீங்கள் என் மகள் திருமணத்திற்கு வந்து ஆசீர்வதிக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டேன்.
""தப்பா நினைச்சுக்காதீங்க... இப்போது கொஞ்சம் பிஸி... திருமணத்தை நல்லபடியா நடத்துங்க. திருமணம் முடிந்ததும் ஒரு நாளில் மணமக்களை இங்கே அழைத்து வாங்களேன்...'' என்றார்.
நானும் சரி என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன்.
என் மகளுக்குத் திருமணம் முடிந்து நாட்கள் கடந்தது. மகளும் மருமகனும் ரஜினி சாரை நேரில் பார்க்க ரொம்பவும் ஆசை ஆசையாகக் காத்திருந்தனர்.
அந்த நேரத்தில் ரஜினி படப்பிடிப்பில் ரொம்ப பிஸியாக இருந்தார். "நிச்சயம் இப்போது அவருக்கு நேரமும் கிடையாது. அவரை சந்திக்கும் வாய்ப்பும் கிட்டாது' என்று எண்ணியிருந்தேன்.
ஒரு மாதம் ஓடிவிட்டது. ஒரு நாள், "இனிமேலா ரஜினி மணமக்களை தன் வீட்டிற்கு கூப்பிட்டு ஆசீர்வதிப்பார்?' என்று திடீரென ஒரு நினைப்பு வந்தது...
அந்த வேளையில் ஒரு போன் அழைப்பு. யாராக இருக்கும் என்று நினைத்தபடியே ரிஸீவரைக் காதில் வைத்தேன். பேசியவர்..?
பேட்டி : தேவராஜன்
தொடரும்.

ரஜினி 3

"" ரஜினிசார் உங்க போன் நம்பரைக்கேட்டார். கொடுத்திருக்கேன். ஓரிருநாளில் ரஜினி வீட்டிலிருந்து உங்களுக்கு அழைப்புவரும். எங்கும் சென்றுவிடாதீர்கள். ஆயத்தமாக இருங்கள்'' என்று பி.ஆர்.ஓ. நிகில் போனில் தகவல் சொன்னதும், நான் சந்தோஷமானேன்.
2 நாள் கழித்து, என் மகளையும் மருமகனையும் அழைத்து வருமாறு ரஜினி யிடமிருந்து போன் வந்தது. நானும் உடனே அழைத்துச் சென்றேன்.
மணமக்களை வாழ்த்தி, ஆசீர்வதித்து, விருந்துகொடுத்தார் ரஜினி. முடிவில் இனிப்பு, பழங்களுடன் 10 ஆயிரம் ரூபாய் தந்து அனுப்பிவைத்தார்.
இதற்கு முன்னதாக ஒரு போட்டோவை ரஜினியிடம் காட்டினேன். அதைப்பார்த்து அப்படியே வாயில் கை வைத்து வியந்து,"" இது... இது... எப்போ, எப்டி எடுத்தது?'' ஆர்வமாய் என்னிடம் ரஜினி கேட்டார்.
அந்தப்போட்டோவின் சுவாரஸ்ய பின்னணியை சொல்கிறேன்...
அது 1983ம் ஆண்டு. விஜயகாந்த் நடிக்க, தாணு தயாரிக்கும் "கூலிகாரன்' பட பூஜை விழா பிரசாத் ஸ்டூடியோவில் நடந்தது. நான் பூஜையை படம்பிடிக்க என்னுடை 3வயது மகள் சித்ராவையும் அழைத்து சென்றிருந்தேன். பட பூஜையை எடுப்பதில் லயத்திருந்த நான், என் மகளை அழைத்து வந்ததையே மறந்துவிட்டேன். திடீரென்று மகள் ஞாபகம் வர மகளைத் தேடினேன்.
அப்போது ரஜினி, "" உங்க மகள் என்கிட்டத்தான் இருக்கிறாள். பயப்படாமல் உங்கள் வேலையைப்பாருங்கள்'' என்றார் சிரித்தபடி. அந்த சமயத்தில் ரஜினி மடியில் என் மகள் சித்ரா அமர்ந்திருந்தாள். ரஜினி பக்கத்தில் ஏவிஎம் முருகன், நாகேஷ் போன்றவர்கள் அமர்ந்திருந்தார்கள். நான் அந்தக் காட்சியை அப்படியே படம்பிடித்தேன். ரஜினி மடியில் 3 வயதில் இருந்த என் மகள் போட்டோவைத்தான் ரஜினியிடம் காட்டி,"" இவள் தான் இப்போது உங்களிடம் ஆசிவாங்க வந்திருக்கிறாள்'' என்றேன். இதைகேட்டு, போட்டோவைப் பார்த்ததும் ரஜினி வியந்து போனார்.
எந்த விழாவுக்கு படம் எடுக்க சென்றாலும், எனக்கு பழக்கமான நடிகர், நடிகைகளுக்கு நெற்றியில் சிலுவை எழுதி ஆசீர்வதிப்பது என் பழக்கம். இன்றும் சினிமா விழாக்களில் நடிகர்கள் விக்ரம், ஸ்ரீகாந்த், ஷாம், பிரசன்னா, கருணாஸ் நடிகைகள் மீனா, திரிஷா, சினேகா, நமீதா என்னிடம் வந்து ஆசீர்வாதம் பெறுவார்கள்.
ஒருபட விழாவில் ரஜினி சிறப்பு விருந்தினராக வந்து அமர்ந்திருந்தார். நான் திரிஷாவின் நெற்றியில் சிலுவை எழுதி ஆசீர்வாதம் செய்தேன். அருகில் இருந்த ரஜினி என்னைப்பார்த்து சிரித்தார். உடனே நான் அவர் நெற்றியிலும் சிலுவை எழுதினேன். அவரும் பவ்யமாக கண்ணைமூடி இருந்தார். பின்னர் ஆசீர்வாதம் செய்தேன்.
ரஜினி ராகவேந்திரர் பக்தர் . நான் சிலுவை எழுதி, ஆசீர்வதிப்பதை ஏற்றுக்கொள்வாரோ மாட்டாரோ என்று சந்தேகத்தினால் அவருக்கு இதற்கு முன்பு செய்யாமல் இருந்தேன். ஆனால், ரஜினி அதை ஏற்றுக்கொண்டதைப் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன்.
ஒருமுறை ரஜினி அலுவலகத்திற்குச் சென்றபோது அங்கு ஜீசஸ் படமும் இருந்ததை கவனித்தேன். இவ்வளவு காலம் அவரிடம் பழகியும் அவர் மனதில் ஜீசஸ் இருக்கிறார் என்பதை அறியாமல் இருந்தேனே என்று என்னை நானே கடிந்துகொண்டேன்.
ஒருமுறை கோடம்பாக்கத்தில் இருக்கும் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் இருந்து எனக்கு போன் வந்தது.
""ரஜினி சார், உங்களை வரச் சொன்னார். உடனே ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்துடுங்க'' என்ற அந்த தகவல் கேட்டு,அவசரமாக 12 மணியளவில் ராகவேந்திரா கல்யாண மண்டபம் சென்றேன்.
15 நிமிடம் வரவேற்பறையில் காத்திருந்தேன்.
சர்ர்ர் என்று ரஜினியின் கார் மண்டபத்தில் நுழைந்தது. கார்டிரைவர் மண்பத்தின் பின்புறம் காரை நிறுத்தினார்.
சிறிது நேரத்தில் அவரின் உதவியாளர்,"" உங்களுக்குகாகத்தான் சார் வெயிட் பண்றார். உடனே போங்க'' என்றார்.
"" கொஞ்ச நேரம் ஆகட்டுமே. இப்ப தானே சார் வந்திருக்கார். கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகட்டும்'' என்றேன் நான்.
ரஜினி ரூமில் இருந்து வந்த கார் டிரைவர் காளியப்பா,
"" சார் லன்ஞ்ச் சாப்பிட்டுகிட்டு இருக்கார். பரவாயில்ல. நீங்க போய் பாருங்க. இல்லேன்னா உங்களை காக்க வைத்ததற்கு என் மீது கோபப்படுவார்'' என்றார்.
நான் ரஜினி அறைக்குச் சென்றேன். பளீர் வெள்ளை ஜிப்பா, பேண்டில் இருந்தார். ஒரு கப் அளவு தயிர்சாதம் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
"" வாங்க, உட்காருங்க'' என்றார் சிரித்தபடி.
"" இருக்கட்டும். நான் நிற்கிறேன்!'' என்றேன்.
"" இப்ப நீங்க உட்காரீங்களா, இல்ல நான் எழுந்து நின்று சாப்பிடட்டுமா?'' என்று அதட்டினார்.
நான் அவர் எதிரில் அமர்ந்து விட்டேன்!
பிறரை மதிப்பதிலும் மரியாதைக்கொடுப்பதிலும் ரஜினிக்கு ரஜினி தான் நிகர்! என்பதை அறிந்து சிலிர்த்துபோனேன்.
"" கொஞ்சம் சாப்பிடுங்க'' என்று கேட்டார்.
""நான் இப்பதான் சாப்பிட்டு வர்றேன்'' என்று சொல்லிவிட்டு, "" இவ்வளவு கொஞ்சமா சாப்பிடுறீங்களே! சூப்பர் ஸ்டாரின் மதிய உணவு ஒருகப் தயிர் சாதம் மட்டும் தானா?உங்க உணமுறை இவ்வளவு எளிமையானதா?'' என்று வியந்து கேட்டேன்.
அவருக்கே உரித்த ஸ்டைலில் சிரித்துக்கொண்டு, அவர் சொன்னதைக்கேட்டு, சரியான சாப்பாட்டு ராமனான நான் வெட்கி தலைகுனிந்து நின்றேன்; அந்த நொடியில் இருந்து திருந்தினேன். ரஜினி அப்படி என்ன என்னிடம் சொன்னார் தெரியுமா?...
பேட்டி : தேவராஜன்
தொடரும்

ரஜினி 4
"" மனுஷனுக்கு ஆகார கட்டுப்பாடு இருந்தா ஆரோக்கியம் தன்னால வந்துடும். சாப்பாட்டு விஷயத்தில் ரொம்ப கண்டிப்பாக இருந்துக்கணும். எப்போதுமே அளவாகதான் சாப்பிடணும். சாப்பாட நாமதான் சாப்பிடணும். அது நம்மள சாப்பிட்டுவிடக்கூடாது. அதனால தான் நான் எப்போதுமே சாப்பாட்டு விஷயத்தில் கவனம் செலுத்துகிறேன். வயது ஏற ஏற சாப்பாட்டு அளவு குறையணும். இன்னொன்னும் கேட்டுக்க, நாம் வாழ்றதுக்குதான் சாப்பிடணும். சாப்பிடறதுக்காகவே வாழக்கூடாது. வயசு 40 தாண்டிட்டாலேயே வெள்ளையாக இருக்கிற எந்த உணவுப்பொருளையும் சாப்பிடறதை தவிர்க்கணும்.'' என்று அவருக்கே உரித்த ஸ்டைலில் கடகடவென சொல்லிவிட்டு என்னைப்பார்த்து சிரித்தார்.
இதை கேட்டதும் சாப்பாட்டு ராமனாக இருந்த நான் வயிறுபுடைக்க, மூக்குகொட்ட சாப்பிடும் பழக்கத்தை மாற்றிக்கொண்டேன்." கோடிகளின் அதிபதியே ஒருகப் தயிர் சாதம் தான் சாப்பிடறார். நாம் எதுக்கு அதிபதி? நமக்கு எது சட்டிநிறைய சாப்பாடு?' என்று என் உள்மனசு உணர்த்தியது.
ரஜினி அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்று நாடே எதிர்பார்த்துக்கொண்டிருந்த சமயம். எனக்கும் ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? என்று தெரிந்துகொள்ள ஆசை ஏற்பட்டது. அதை ஒருமுறை ரஜினியை பார்த்தப்போது கேட்டுவிட்டேன்.
"" எனக்கு அரசியலில் எல்லாம் நாட்டமில்லை. அரசியலில் இருந்து என்ன செய்ய முடியுமோ அதை இப்பவே செய்துகிட்டேதானே இருக்கேன்? இதை அங்கே போய் செய்தால் என்ன? இங்கேயே செய்தால் என்ன? அரசியலில் இருந்தால் அதுவெல்லாம் விளம்பரமாகும். எனக்கு விளம்பரம் பிடிக்காது.
வாழ்க்கை என்பது இறைவன் கொடுத்த வரம். நாம எல்லாம் 1000 ஆண்டுகாலமா வாழப்போகிறோம்? வாழ்கிற காலத்தில் எங்க இருந்தாலும் நல்லது செய்யணும். நம்மை அனுப்பி வைத்த இறைவன் எப்ப நம்ம அழைச்சுக்குவார்ன்னு யாருக்குத் தெரியும்? மனுஷ வாழ்க்கை நிலையில்லாதது. அது என்னவோ நிலையானது பலர் நினைச்சுக்கிட்டு இருக்காங்க. எது, என்ன, எப்ப நடக்கணும் ஆண்டவன் தீர்மானிச்சு வைச்சுருப்பான். அது அது அப்பப்ப அதுவாகவே நடக்கும். இதான் உண்மை. நான் அரசியலுக்கு வருவேனா என்பது என் கையில் இல்லை. வரணும்னு இருந்தா நான் என்ன செய்ய முடியும்?''' ரொம்ப விரிவாகவே பேசினார்.
இதை கேட்டதும் அவருடைய எண்ணம் எனக்குப் புரிந்தது. அவருடைய வாழ்க்கை நோக்கமும் தெரிந்தது. அதன் பிறகு,ரஜினியிடம் அரசியல் பற்றி நான் பேசியதே இல்லை.
ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி சொன்னதுமே எனக்கு ரஜினி நடித்த படம் ஒன்றில் நடந்த சம்பவம்தான் ஞாபகத்துக்கு வருகிறது.
"காசேதான் கடவுளடா' படத்திற்குப் பிறகு சில ஆண்டுகள் ஏவி.எம். நிறுவனம் படம் தயாரிக்காமல் இருந்தது. அப்பச்சி அவர்கள் சரவணனை அழைத்து, இப்ப ஒரு படம் பண்ணலாமே என்றார். உடனே ஏவி.எம் சரவணனும் சரி என்று சொல்லிவிட்டு, எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினியை வைத்து "முரட்டுகாளை' ன்ற பெயரில் படஎடுக்க துவங்கினார்.
அந்தப் படத்தில் ரஜினி ஒரு காட்சியில் கிருஷ்ணன் வேடத்தில் நடக்கவேண்டியிருந்தது. ரஜினிக்கு கிருஷ்ணன் வேட ஒப்பனை போட ஆள் தேவைப்பட்டது. கிருஷ்ணன் வேட ஒப்பனையை செய்வதில் ஒப்பனை கலைஞர்களில் மிகப்பெரிய ஜாம்பவான் இந்தியாவில் ஒருத்தர்தான் உண்டு. அவர் பீதாம்பரம். (பீதாம்பரத்தின் மகன் தான் இயக்குனர் பி. வாசு.)
அவரை அணுகி, ரஜினிக்கு கிருஷ்ணன் வேடம் போட வேண்டிய காட்சி இருக்கிறது. நீங்கள் வந்து உதவவேண்டும் என்று கேட்டனர்.
அதற்கு அவர், "" நான் கிருஷ்ணன் மேக்கப்போட்ட என்.டி.ஆரும், எம்.ஜி. ஆரும் அவரவர்கள் இருந்த மாநிலத்தில் முதல்அமைச்சர்களாகிவிட்டனர். அவர்களுக்கு கிருஷ்ணன் மேக்கப் போட்ட இந்த கையால் இனிமேல் அந்த மேக்கப்பை யாருக்கும் என் கையால் போட மாட்டேன்'' என்று மறுத்துவிட்டார் பீதாம்பரம்.
இதைக்கேட்ட ஏவி.எம். சரவணனும், எஸ்.பி. முத்துராமனும் ஒன்றும் புரியாமல் குழப்பத்தில் இருந்தனர். பீதாம்பரம் மேக்கப் போட்டால் ரஜினிக்கு பாந்தமாக இருக்கும். ஆனால், இவர் முடியாது என்கிறாரே என்று எண்ணி, என்ன செய்வது என்று எஸ்.பி. முத்துராமனிடம் கிசுகிசுத்தார் ஏவி.எம். சரவணன்.
அந்த நேரத்தில் சட்டென்று எஸ்.பி. முத்துராமன் ஒரு ஐடியா பண்ணினார்.
பீதாம்பரத்துக்கு அப்பச்சி என்றால் ஏக மரியாதை. அவர் சொல்லிவிட்டால் எதையும் தட்டமாட்டார் பீதாம்பரம். இந்த லாஜிக்கை பயன்படுத்தி, "" அப்பச்சிதான் உங்களை ரஜினிக்கு கிருஷ்ணன் மேக்கப் போடச் சொன்னார். வேறு யாரும் இந்த மேக்கப் போடக்கூடாது என்று கண்டிஷனாக சொல்லிவிட்டார். அது மட்டுமல்ல; கிருஷ்ணன் மேக்கப்பை பீதாம்பரம் போடவிட்டால், அந்த வேடமோ, காட்சியோ படத்திற்கே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்'' என்று நிதானமாக எஸ்.பி. முத்துராமன் பீதாம்பரத்திடம் சொன்னார்.
இப்படி எஸ்.பி. முத்துராமன் சொன்னதும்ல சற்று அதிர்ந்த பீதாம்பரம், சிறிது யோசனைக்குப் பிறகு, அப்பச்சி மீது வைத்திருக்கும் மரியாதை காரணமாக ரஜினிக்கு கிருஷ்ணன் மேக்கப் பண்ணித் தருவதாக ஒப்புக்கொண்டார்.
பின்னர், முரட்டுகாளை படத்தில் கிருஷ்ணன் வேடத்தில் ரஜினி நடிக்கவேண்டிய சமயத்தில் ரஜினிக்கு பீதாம்பரம் மிக நேர்த்தியாக, அருமையாக கிருஷ்ணன் மேக்கப் போட்டுவிட்டார். அந்தக் காட்சி நன்றாகவும் படம்பிடிக்கப்பட்டது.
பின்னர், என்ன காரணத்தாலோ அந்த காட்சி முரட்டு காளை படத்தில் இடம் பெறாமல் போய்விட்டது. ஒருவேளை அந்தக் காட்சி இடம் பெற்றிருந்தால் ரஜினி அரசியலுக்கு வந்து முதல்வர் ஆகியிருக்கலாமோ?
பேட்டி : தேவராஜன்
தொடரும்
ரஜினி 5
ரஜினி தன்னுடைய சொந்தக் விருப்பு, வெறுப்புகளை பிறர்மீது திணிக்க மாட்டார். இப்படி ஒரு குணம் அவருக்கு இருப்பதை ஒரு சமயத்தில் அனுபவபூர்வமாக தெரிந்து கொண்டேன். அந்த சம்பவம் இன்றும் என் நெஞ்சில் பசுமையாகவே பதிந்திருக்கிறது.
அதை உங்களுக்காக இங்கே விவரிக்கிறேன்:
அருணாசலம் என்ற படம் ரீலீஸ் சமயம். அந்தப்படத்திற்கான விளம்பர டிசைன்களை உபால்டுவின் உதவியாளர் மேக்ஸ்தான் பொறுப்பேற்று செய்து கொண்டிருந்தார்.
அருணசலம் படத்திற்கான விளம்பர ஸ்டில்களை எடுத்துக்கொண்டு ரஜினியைப் பார்க்கப்போனார். அவருடன் நானும், ரவிராஜாவும் கூடவே சென்றிருந்தோம்.
செய்திதாள்களுக்கு விளம்பரமாக கொடுக்கக்கூடிய ஸ்டில்களை எல்லாம் ரஜினியிடம் காட்டினார் மேக்ஸ்.
மேக்ஸ் கொடுத்த விளம்பர ஸ்டில்களைப் பார்த்து ரசித்த ரஜினி, விளம்பர ஸ்டில்கள் எல்லாம் நல்லா இருக்கு என்றார்.
உடனே மேக்ஸ், "" இன்னைக்கே பேப்பருக்கு எல்லாம் விளம்பரம் கொடுத்திடட்டுமா?'' என்றார்.
"" இன்னைக்கா கொடுக்கணும்? நாளைக்குக் கொடுக்கலாமே. நாளைக்கு கொடுத்தால் நல்லதுன்னு நான் நினைக்கிறேன்'' என்றார் ரஜினி.
இப்படி ரஜினி சொன்னதுமே, கூட இருந்த ரவிராஜா,"" சார் சொல்றது சரி தான்! இன்னைக்கு செவ்வாய்க் கிழமை. நாளைக்கு புதன் கிழமை. பொண்ணு கிடைத்தாலும் புதன் கிடைக்காதுன்னு சொல்வாங்க'' என்றார்.
அப்படி ரவிராஜா சொன்னதும் "ஹாஹாஹா...' என்று சத்தமாக சிரித்தார் ரஜினி.
ரஜினி ஏன் இப்படி சிரிக்கிறார் என்று குழப்பமாக அவரைப் பார்த்தோம் நானும் மேக்ஸ்சும்.
சற்று யோசனைக்குப்பிறகு, "" நான் உழைப்பையும், உண்மையையும் நம்புகிறவன். நல்ல நேரம், கெட்ட நேரம், நாள் கிழமை மூடநம்பிக்கை எல்லாம் எனக்குக்கிடையாது'' என்றவர் தொடர்ந்து பேசினார்.
"" நான் செவ்வாய்க்கிழமை விளம்பரம் கொடுக்க வேண்டாம் என்று சொன்னது நல்ல நாள் கெட்டநாள் என்பதற்காக அல்ல. பொதுவாக பேப்பரை கிராமம், நகரத்தில் இருப்பவர்கள், பேப்பர் வாங்க வசதியில்லாதவர்கள் சலுõன்களில் தான் அதிகம் படிப்பார்கள். எங்குமே செவ்வாய்க்கிழமைகளில் சலுõன் விடுமுறை என்பதால் அன்று விளம்பரம் கொடுத்தால் பலர் பார்க்காமல் போவதற்கும் வாய்ப்புண்டு. அதே புதன் கிழமைவிளம்பரம் கொடுத்தால் பேப்பரை எல்லாரும் படிப்பார்கள். தகவல் எல்லாருக்கும் பரவலாக போய் சேரும். அதனால் தான் அப்படி சொன்னேன்'' என்று சிரித்தார்.
அடுத்து ஸ்டிக்கர் ஸ்டில்களை எடுத்துக்காட்டினார் மேக்ஸ். அதில் ரஜினி கதர்வேட்டி, கதர் சட்டையில் நெற்றியில் விபூதி பட்டையும், கழுத்தில் ருத்ராட்சமும் அணிந்து வணங்கியபடி அந்த ஸ்டில் இருந்தது. அந்த ஸ்டிக்கரை உற்று பார்த்தவர் கொஞ்சம் யோசனையில் இருந்தார்.
பிறகு, "" இந்த ஸ்டில் போஸ் வேண்டாமே'' என்றார் ரஜினி.
"" சார், இந்த போஸ் ரொம்ப பிரமாதமாக இருக்கே. கதர் வேட்டி, சட்டை, துண்டு, விபூதிபட்டை, ருத்ராட்சம் என நல்ல பவ்யமாதானே இருக்கீங்க. இந்த ஸ்டில்லை உங்க ரசிகர் ரொம்ப விரும்புவாங்க சார்'' என்றார் மேக்ஸ்.
"" இல்ல. இல்ல... இந்த போஸ் வேண்டாம். இந்த ஸ்டிலில் நான் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவன்னு சொல்லும்படியாக அமைந்திருக்கு. என்னுடைய ரசிகர்கள் எல்லா மதத்திலேயும் இருக்காங்க. ஒரு மதத்தின் அடையாளத்தை சுமந்திருக்கும் ஸ்டில்லை விளம்பரம் செய்தால் மாற்று மதத்தை சேர்ந்த சிலர் ரசிகர்க ள் வருத்தபடுவாங்க. என் படம் போட்ட ஸ்டிக்கரை சிலர் ஆட்டோவில், வீட்டில் என ஒட்டிவைத்துகொள்வார்கள். அதனால் தான் சொல்றேன் இப்படி வேண்டாம். எல்லாருக்கும் பொதுவானவனாக கோட்டு போட்டிருக்கும் இந்த ஸ்டில்லை ஸ்டிக்கரா செய்து விளம்பரம் செய்யுங்க'' என்றார்.
அந்த ஸ்டில்லில் ரஜினி கோட் அணிந்து கொண்டு ஒரு கை வானத்தை நோக்கி நீண்டபடியும் இன்னொருகை அவர் நெஞ்சை தொட்டப்படியும் இருந்தார்.
அந்த ஸ்டில்லை மேக்ஸிடம் காட்டி, "" இதில் ஒருகை வானத்தை நோக்கி இருக்குதுல அது அந்த ஆண்டவன் சொல்றான் என்பதையும், இன்னொரு கை நெஞ்சை நோக்கி இருக்கிறது அது அருணாசலம் செய்றான். அதாவது அந்த ஆண்டவன் சொல்றான் இந்த அருணாசலம் செய்றான் என்பதன் அ
ர்த்தமாக இருக்கும்'' என்று பட விளக்கமும் கொடுத்தார் ரஜினி.
ரஜினி சாதாரணமானவர்களைக்கூட மதிக்கக்கூடியவர். அன்புபாராட்டக்கூடியவர். அதை உணரும் சந்தர்ப்பமும் எனக்கு கிடைத்தது.
என் பேரன் சிறுவனாக இருந்தபோது, ""தாத்தா,நீ சினிமா நடிகர்களை எல்லாம் போட்டோ எடுப்பீயாமே. உனக்கு ரஜினியைத் தெரியுமா?''' என்று கேட்டான்.
""தெரியும். ரஜினி எனக்கு நண்பர்'' என்றேன். அவன் நம்பவேமாட்டேன் என்றார்.
ரஜினிக்கு போன் செய்து பேரன் கேட்டதை சொன்னேன். அதைக்கேட்டு சிரித்தவர், ""சரி, பேரனை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வாங்க'' என்றார்.
நானும் பேரனை அழைத்துக்கொண்டு சென்றேன். ரஜினி அவனைத்துõக்கி கொஞ்சியவர். "" உன்னோட தாத்தா, எனக்கு நண்பர்தான்'' என்று சொல்லி அவனை கேலி செய்தார். பிறகு பூஜையறையிருந்து ஒரு பழத்தை எடுத்து அவனுக்குக்கொடுத்தார்.
ஒருமுறை என்னை அழைத்து குடும்பம் பற்றி விசாரித்தார். இனிமே சம்பாதிப்பதை சிக்கனமா செலவுசெய்து உனக்குன்னு கொஞ்சம் சேர்த்துவை'' என்று அட்வைஸ் செய்தார்.
குபேரன் பட டப்பிங் போது 80 ஆயிரம் மதிப்பு நவீன கேமிராவை எனக்கு அன்பளிப்பாக தந்தார். என் எதிர்காலத்திற்காக ஒரு பெரிய தொகையை கொடுத்து இதை வங்கியில் பிக்ஸட் டெபாசிட்டாக போட்டு வை என்று அக்கறையோடு எனக்கு உதவியதை என்றென்றும் மறக்க மாட்டேன்.
பேட்டி : தேவராஜன்

வியாழன், 29 ஜூலை, 2010

மருத்துவக் கட்டுரைகள் பாகம் 2. தொகுப்பு: தேவராஜன்

©¸zxÁU PmkøµPÒ £õP®& 2. öuõS¨¦: ÷uÁµõáß

18 . ^µn® u¸® öPõzx ©À¼

öPõzx©À¼. Cx GÀ»õ¸US® |ßS AÔ•P©õÚ EnĨö£õ¸Ò. BÚõÀ, Cuß ©¸zxÁ Snzøu |õ® AÔ¯õuuõÀ, EnÂÀ AvP® ÷\ºzxUöPõÒÁvÀø»! |® •ß÷ÚõºPÒ \ø©¯¼À Tmk, \õ®£õº, ö£õ›¯À BQ¯øÁ ©nUP ÷Ásk® GߣuØPõP ©mk® EnÂÀ ÷\ºUP ÷Ásk® GÚ uÁÓõP P¸v, Esq® ÷£õx Cø»°À Kµ©õP JxUQÂkQ÷Óõ®. Cuß £¯øÚ Â›ÁõP AÔ¯»õ®:
E¸Ò A›], uÛ¯õ GÚ AøÇUP¨£k® öPõzx©À¼ ]Ö ö\i ÁøPø¯a \õº¢ux. Cx ÷©ØS B]¯õÂøÚa ÷\º¢ux. £søh¯ Põ»® öuõm÷h ÁͺUP¨£mk Á¸® •UQ¯ ©¸zxÁ uõÁµ[PÎÀ JßÖ öPõzx©À¼!
B]¯õ, Áh B¨¤›UPõ ©ØÖ® I÷µõ¨£õ BQ¯ Ch[PÎÀ 2 B°µ® BskPÍõP÷Á £¯ß£kzu¨£mk Á¸QÓx.
100 Q öPõzx©À¼ Cø»°À EÒÍ \zx ö£õ¸mPÒ:
Âmhªß ]& 160 ª.Q.
Âmhªß H & 12 ª.Q.
Âmhªß ¤12 & 60 ª.Q.
|õºa\zx & 3 ª.Q.
¦µu \zx & 2 ª.Q.
Põº÷£õøím÷µm& 1 ª.Q
öPõʨ¦a \zx & 0.5 ª.Q.
PõÀ]¯® & 0.172%
ö£õmhõ]¯®, ö©UÜ]¯®, £õ죵ì, ÷\õi¯® ÷£õßÓ uõx E¨¦PÒ öPõzx ©À¼ Cø»°¾®, Âøu°¾® Põn¨£kQÓx. ÷©¾® ©õ[PÛ_, PõÀ]¯® Âøu ©ØÖ® Cø»°À EÒÍx.
öPõzx©À¼ ö\´øP:
£]zxõsi, APmkÁõ¯PØÔ, öÁ¨£•shõUQ, EhÀ ÷uØÔ, ]Ö}º¨ö£¸UQ.
£]zxõsi: A^µn®, Á°ØÖ E¨¦\® ÷£õUQ, £]ø¯ AvP¨£kzx®.
APmk Áõ¯PØÔ: APk GßÓøÇUP¨£k® Á°ØÔÀ EÒÍ Áõ²øÁ APØÔ Á°ØÖ ö£õ¸©ø» Sn¨£kzx®.
]Ö}º¨ ö£¸UQ: ]Ö}øµ¨ ö£¸UQ Eh¼À EÒÍ ¤zuzøu uoUS®.

ö£õx Sn®:
_øÁ°ßø© wºUS®, ¤zu`møh SøÓUS®, EhÀ Áßø©, £õ¾nºøÁ AvP›US®.
©¸zxÁ £¯ß£õk:
^µn ÷PõÍõÖUS öPõzx©À¼ \õÖ 1&2 ÷uUPµsi ÷©õ›À P»¢x A¸¢u A^µn®, S©mhÀ, PÈa\À, Á°ØÖ Á¼ Sn©õS®.
uø»Á¼ wµ öPõzx ©À¼ \õØøÓ ö|ØÔ°À £ØÔh uø»Á¼, uø»£õµ® Sn©õS®.
•P¨£¸, P¸Áøͯ® }[P, öPõzx ©À¼ \õÖhß ©g\Ò ÷\ºzx •PzvÀ §\ £¸, uÊ®¦ ©õÖ®.
÷|õ´ Gvº¨¦ \UvUS 100Qµõ® öPõzx ©À¼ \õØøÓ A¸¢u Eh¾USz ÷uøÁ¯õÚ AøÚzx E°ºa\zxPøÍ ö£¸UQ, ÷|õ´ Gvº¨¦ \Uvø¯ AvP›US®.
öPõzx ©À¼ Âøu:
öPõzx ©À¼ Âøu EhÀ `møh uoUS®. SκUPõ´a\À ÷£õUS®. Áõ¢vø¯¨ ÷£õUS®. ÂUPÀ, uõP® wºUS®. ]Ö}›À ¢x ÷£õuÀ Sn¨£kzx®.
©¸zxÁ £¯ßPÒ:
Áõ²øÁ APØÖ®. _µzøu uoUS®. JØøÓ uø»Á¼ Sn©õS®. ‰øÍUS ¦zxnºa] u¸®. £umh® SøÓUS®. uø\ CÖUP®, Áõu Á¼ Sn©õS®. ©õº¦ \Îø¯ APØÖ®.
£¯ß£kzx® •øÓ:
uÛ¯õøÁ ÁÖzx ö£õizx J¸ ì§ß ÷©õ›À P»¢x £¸P»õ®.
uÛ¯õ ö£õi,C¢x¨¦, ^µPzxõÒ \© AÍÂÀ P»¢x 3 |õmPÒ öÁ¢}›À A¸¢u Áõ²U÷PõÍõÖ, A^µn® }[S®.
uÛ¯õ ö£õiø¯, \õu® Áizu Pg]°À P»¢x A¸¢u ©õuÂhõ´ Evµ¨÷£õUøP Pmk¨£kzx®.
125 Qµõ® uÛ¯õ ö£õiø¯ 125 Qµõ® \ºUPøµU P»¢x 500ªÀ¼ usp›À öPõvUP øÁzx, £õPõP Põ´a] A¸¢u öhßåß, SǨ£® }[S®.
øí¤µ\º, öPõ»ìiµõÀ }[P, ÁÖzu uÛ¯õ ö£õi²hß, ÁÖzu ^µP® P»¢x usp›À ÷£õmk öPõvUP øÁzu J¸ ©õuPõ»® A¸¢v Áµ ÷©÷» ö\õßÚ SøÓ£õmøh Pmk£õmiÀ øÁzxUöPõÒÍ»õ®.
öPõzx©À¼ Âøu Gsøn´:
C¢u Gsøn Áõu Á¼ø¯¨ ÷£õUS®. PÀ½µø» £õxPõUS®. ¦ØÖ÷|õ´ ö\ÀPøÍ AÈUS®. öPõʨø£UPøµUS®. µzuUSÇõ´ Aøh¨ø£ PøµUS®. ShÀ ¦s, uø\¨¤i¨¦, Á°ØÖÁ¼ ÷£õUS®.
& öuõS¨¦: ÷uÁµõáß
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

19 . \ºUPøµUS EP¢ux öÁ¢u¯®

Cx Røµ ÁøPø¯a ÷\º¢ux. Põ諺, £g\õ¨, ÷©À P[øP \©öÁÎPÎÀ AvP©õP £°›h¨£kQÓx. ö\ßøÚ°À Ãmk E£÷¯õPzvØPõP Ãmøha\õº¢u Põ¼ ©øÚPÎÀ £°›h¨£kQÓx.
öÁ¢u¯®& ö©¢v¯®, ÷©v, öÁ¢øu GßÓ ö£¯ºPÍõ¾® AøÇUP¨£kQÓx.
öÁ¢u¯zvß Cø», Âøu ©¸zxÁUSn® Eøh¯øÁ. Cx P\¨¦ _øÁ Eøh¯x.
ö\´øP:
Røµ: Sκa] EshõUQ, ©»ªÍUQ
Âøu: Eµ©õUQ, ]Ö}º ö£¸UQ, EÒÍÇ»õØÔ, xÁº¨¤, ÁÓm]¯PØÔ, Põ©® ö£¸UQ, APmkÁõ¯PØÔ.
öÁ¢u¯zv¾ÒÍ Fmha\zxUPÒ:
Aª÷Úõ Aª»[PÒ, öPõʨ¦ Aª»[PÒ
PõÀ]¯®, C¸®¦ \zx, ö©UÜ]¯®, ©õ[PÜ_, £õ죵ì, ö£õmhõ]¯®, ö\¼Û¯®, Âmhªß ¤1,¤2,¤3 ©ØÖ® Âmhªß ], xzu|õP® CøÁ²hß ¥m£õ P÷µõmjß, \¨÷£õÛß, PÝ©õ›ß, ö»]vß, «zøuÀAø©ß, h¯õìöáÛß,¤&ø\m÷hõ쥵õÀ, ¾õmi÷¯õ¼ß GÚ öÁ¢u¯zvÀ E°º ÁõÇ CßÔ¯ø©¯õu uõx E¨¦UPÒ, E¯º\zxUPÒ AvP AÍÂÀ Põn¨£kQÓx.

©¸zxÁ Sn®:
Røµ: Á°ØÖ¨ ö£õ¸©À, ©¢u®, ÁõuªSv, P£®, C¸©À, _øÁ°ßø© CøÁPøÍ Sn¨£kzx®.
Âøu: SÇ¢øuPÐUS HØ£k® PnUPõ´a\À,÷£v,^u÷£v Sn©õS®. ÷©P® GßÓøÇUP¨£k® öÁÒøÍ ÷|õø¯ Sn¨£kzx®.
÷©¾®, S¸v¯ÇÀ,Pn®,Azv_µ®,Av÷ÁmøP,÷ÁP C¸©À,P¯®,Bsø©°ßø© Sn¨£kzx®.
öÁ¢u¯Røµ £¯ß£kzx® •øÓ:
* öÁ¢u¯zxhß £¸¨¦ ÷\ºzx ªÍS,^µP®,SÇ®£õP Esn A^µn®, Á°ØÖ ö£õ¸©À Sn©õS®.
*öÁ¢u¯zøu ö£õ›¯À,Tmk, xøÁ¯À GÚ Esn ¤zu® }[Q, EhÀ Sκa] Aøh²®.
* ö£sPÐUS ©õuõ¢vµ §¨¦_ÇØ]&©õuÂhõ´ Põ»zvÀ HØ£k® Á°ØÖÁ¼ SøÓ¯ J¸ ÷uUPµsi öÁ¢u¯zøu 100 ªÀ¼ ÷©õ¸hß P»¢x EmöPõÒÍ Á°ØÖ Á¼ SøÓ²®.
* öÁ¢u¯®, PÔ÷Á¨¤ø» \© AÍÄ Gkzx E»ºzv ö£õizx öPõsk vÚ•® Põø»°À öÁÖ® Á°ØÔÀ J¸ ÷uUPµsi Ãu® EmöPõÒÍ \ºUPøµ ÷|õ´ ©mk£k®.
*vÚ•® J¸ ¼mhº }›À J¸ ÷uUPµsi öPõzx©À¼,Aøµ ÷uUPµsi öÁ¢u¯®,Aøµ ÷uUPµsi ^µP® ÷\ºzx öPõvUP øÁzx ÁiPmi £¸P S¸v AÊzu® Pmk¨£õmiÀ C¸US®.
* JÊ[PØÓ ©õuÂhõ´, ©õuÂhõ°À AvPAÍÄ S¸v÷£õUS Eøh¯ ©Pκ öÁ¢uPÎ(öÁ¢u¯®+EТx+µõQ) ÷\ºzx \ø©zx Esn ©õuÂhõ´ ÷PõÍõÖ }[S®. Cx Pº¨£¨ø£ø¯ £»¨£kzx®. öÁ¢u¯zvÀ Dìm÷µõáß C¸¨£uõÀ Cx ö£sPÐUS ]Ó¢u EnÄ.
* öÁ¢u¯URøµø¯ £¸¨¦hß ÷\ºzx \ø©zx ö|´²hß ÷\ºzx Esn EhÀ`k uo²®. EhÀ GøhTk®. ÷uõø\°À öÁ¢u¯® AvPAÍÂÀ ÷\ºzx Esn EhÀ £¸©ß AvP›US®.
* öÁ¢u¯®, öPõÒÐ Cµsøh²® \©AÍÄ Gkzx ÷ÁP øÁzx vÚ•® Esn Eh¼À EÒÍ AvP©õÚ öPõʨ¦\zx SøÓ¢x EhÀ Gøh SøÓ²®.
*öÁ¢u¯URøµ²hß ÷PõÈ •møh, ÷u[Põ´ ÷\ºzx ö|´°À \ø©zx Esn Ck¨¦Á¼ w¸®.
* öÁ¢u¯URøµø¯ ÷ÁPøÁzx ÷ußÂmk Pøh¢x Esn C¸©À, ©õº¦Á¼, ‰»® Sn©õS®.
*öÁ¢u¯URøµ²hß ^ø©¨¦Î, Azv£Ç®, vµõmø\ ÷\ºzx Si}›mk ÷uß ]Ôx P»¢x \õ¨¤h ‰a\øh¨¦, ©õº¦Á¼ w¸®.
*Røµ²hß Áõxø©* £¸¨¦,P\P\õ, ÷Põxø©£õÀ, ö|´,£õÀ, \ºUPøµ ÷\ºzx Qsi EmöPõÒÍ EhÀ Áßø© AvP›US®. Bsø© ö£¸S®.
* öÁ¢u¯® 15 Qµõ® £a\›] 300Qµõ® ÷\ºzx ö£õ[Q \õ¨¤h S¸v ö£¸S®.
* öÁ¢u¯®, EТx, A›]÷\ºzx Pg]¯õP Põ´a] Esn £õÀ_µ¨¦ AvP›US®.
*öÁ¢u¯zøu £õ¼À ÷\ºzx Aøµzx uø»°À uhÂ, SÎzx Á¢uõÀ,ö£õkS }[S®, •i EvºÁx SøÓ²®,•i ªÝªÝUS®.
* öÁ¢u¯®, ©g\Ò,PkS, Põ¯® ÷\ºzx ö£õizx ö|´Âmk P»¢x ÷»Q¯©õUQ *vÚ•® öÁ¢u¯zøu J¸ ÷uUPµsi EnÂÀ ÷\ºzxUöPõshõÀ, |õm£mh Á°ØÖÁ¼ Sn©õS®.
* öÁ¢u¯zøu EÍÓøÁzx, vµõmø\²hß ÷\ºzx Esn ©»a]UPÀ w¸®,
*öÁ¢u¯® ÁÖzx ö£õizx PÔ÷Á¨¤ø» ÷\ºzx ÷©õ›À £¸P |õm£mh ÷£v, PÈa\À Sn©õS®.
* öÁ¢u¯URøµ Aøµzx _mh¨¦soÀ Pmh ¦s BÖ®.
CÆÁÍÄ ©¸zxÁUSn® EÒÍ öÁ¢u¯zøu |õ® ÃmiÀ vÚ•® \õ®£õº,µ\®,Tmk, ö£õ›¯À, GÚ GÀ»õÁØÔ¾® ÷\ºzxUöPõshõÀ B÷µõUQ¯©õP ÁõÇ»õ®.
& öuõS¨¦: ÷uÁµõáß
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
20 .÷uõÀ ÷|õ´US PÁ\® ©g\Ò

©[PÍPµ©õÚ ö£õ¸mPÎÀ JßÖ ©g\Ò. ©UPÒ ©g\ÐUS u¸® ©v¨¦ ö£›¯x. AuÝøh¯ ©PzxÁ® AÔ¢÷u •ß÷ÚõºPÒ Aøu ©v¨£õÚ ChzvÀ øÁzv¸UQÓõºPÒ. ©g\Ðøh¯ ©¸zx £¯ß£õmøh ›ÁõPz öu›¢x öPõÒÍ»õ®.
Cx QÇ[S ÁøPø¯a ÷\º¢u uõÁµ®. C¢v¯õ, ^Úõ, C»[øP, øuÁõß, Bìv÷µ¼¯õ •u¼¯ |õkPÎÀ £°›h¨£kQÓx. C¢v¯õÂÀ öÁ¨£©õÚ £SvPÎÀ £°›h¨£kQÓx. ©g\Ò uøµ¯i usk ‰»® ÁͺUP¨£kQÓx.
©g\ÐUS A›\Ú®, Põß\Û, {], ¥u®, íõÀi, ©ßÚõÀ, {åõ, í›iµõ GÚ £»ÁõÖ JÆöÁõ¸ ö©õÈ°¾® AøÇUP¨£kQÓx.
©g\ÐUS J¸Âu ©n•sk. ©g\Ò P¨¦ ©g\Ò, PÔ ©g\Ò GÚ C¸ÁøP¨£k®.
P¨¦ ©g\Ò QÇ[Qß ö£¸®£õP[PøÍ Gkzx E»ºzv, |Àö»søn°À £USÁ® ö\´¯¨£kQÓx. PÔ ©g\Ò QÇ[Qß £UP[PÎÀ QøÍUS®.
©g\Ò Põº¨¦, øP¨¦ _øÁ Eøh¯x. ußø©& öÁ¨£®.
ö\´øP: APmk Áõ²ÁPØÔ, öÁ¨£ •shõUQ, DµÀ ÷uØÔ, ©n‰mi.
©g\Îß ö£õxSn®:
©g\øÍ Eh¼À §] SÎUP Eh¾US ö£õßÛÓ® u¸®. ¦»õÀ |õØÓzøu }US®. BsPÎß ©Úzøu PÁµa ö\´²®. £]ø¯ EshõUS®. Áõ¢vø¯ ÷£õUS®. ¤zu®, Áõu®, P£zøu ÷£õUS®.
uø»Á¼, ÃUP®, ÁskPi, ö£¸®¦s Sn©õS®. ¯ºøÁ }[S®. PØÓõøÇ |õØÓ•®, •Pzv¾shõQÓ ÷|õ´PЮ w¸®.
©g\ÎÀ EÒÍ ÷Áv¨ö£õ¸ÒPÒ:
¦µu®& 6.3%, öPõʨ¦ \zx& 5%, PÛ©[PÒ& 3.5%, Põº÷£õøím÷µm& 69.4%, Dµ¨£u®& 13.1%, B¯õS® Gsøn& 5.8%, ¤Íõßi›ß&1%, ]Û÷¯õÀ&1%, ÷£õºÛÚõÀ& 0.5%.
©¸zxÁ¨ £¯ßPÒ:
Eh¼À EÒÍ PÈĨö£õ¸mPøÍ öÁÎ÷¯ØÖQÓx.
Á°ØÖ Á¼ø¯ ÷£õUSQÓx.
÷uõÀ ÷|õ´PÍõÚ •P¨£¸, JÆÁõø©, Pµ¨£õß, £øhø¯¨ ÷£õUS®.
Áõu ÷|õ´PÍõÚ µzuÁõu®, RÀÁõu®, uø\¤i¨¦PøÍ Sn©õUS®.
£]°ßø©ø¯ Sn©õUS®.
¦ØÖ÷|õø¯ JÈUS®
PÀ½µø»¨ £õxPõzx £»¨£kzx®.
ÃUP[Pøͨ ÷£õUS®.
©g\ξÒÍ PºSªß GÝ® ö£õ¸Ò £õUi›¯ Gv›¯õP ö\¯À£kQÓx.
¤zu }º _µ¨¤øÚ E»ºUSÂUPUTi¯x.
Áõ¢v, ©¯UPzvøÚ ukUS®.
B²º÷Áu® ©ØÖ® ^Ú ©¸zxÁzvÀ ©g\Ò Põ©õø», ãµn ÷PõÍõÖPÒ, Á°ØÔß Aª»® BQ¯ÁØøÓ ÷£õUP¨ £¯ß£kQÓx.
‰» ÷|õ°À ©»UShÀ öÁÎÁ¸ÁuõÀ HØ£k® ÷|õ°øÚ¨ ÷£õUP Pή¦ u¯õ›UP £¯ß£kQÓx.
öPõ»õìiµõÀ AÍÂøÚU SøÓUS® vÓß öPõsi¸UQÓx.
¦ØÖ ÷|õ´ ö\ÀPøÍ ukUS® AµnõP EÒÍx.
ShÀ ¦ÊUPøÍ JÈUS®.
©»a]UPø» Sn¨£kzx®.
£¯ß£kzx® •øÓPÒ:
©g\Ò ö£õi°À 520 ªQ & 650 ªQ AÍÄ Em¦Pmh Á°ØÖ¨ö£õ¸©À, Á°ØÖ Á¼, _µ® ÷£õUS®. Shø» £kzx®.
©g\Ò }øµ A¸¢u Põ©õø» Sn©õS®.
©g\Ò Aøµ¨¦hß _snõ®¦, ö£õmi¾¨¦ Tmi _høÁzx _ÐUS, Ai¨£mh ¦s CøÁPÐUS¨ §\»õ®.
£aø\ ©g\Ò µ\zøu §\ AmøhUPi, |g_, Põ¯¨¦s, ¦sÃUP® CøÁ ÷£õS®.
÷Á¨¤ø»²hß ©g\øÍ ÷\ºzuøµzx A®ø© öPõ¨¦Ízvß «x §\, AøÁPÒ £ÊzxøhÁxhß GÎvÀ BÔ¨÷£õS®.
©g\øÍ ö£õizx ¦sPÒ «x xõÁ AøÁPÒ BÖ®.
©g\Ðhß Bhõöuõøh°ø» ÷\ºzx, £_Âß }øµÂmhøµzx §\ ö\õÔ, ]µ[S, |ø©a\À £øhPÒ w¸®.
©g\Ò £ø\²hß G¾ªaø\ \õÖ ÷\ºzx _ÐUS ©ØÖ® ]µõ´¨¦ Põ¯[PÐUS §\¨£kQÓx.
©g\øÍ Aøµzx J¸ öÁÒøÍzxo°À §] {ǼÀ E»ºzv, A¢uzxo°À Psxøhzx Á¢uõÀ Ps]P¨¦, PsÁ¼, PsoÀ }ºU÷PõºzuÀ, PsÁ¼ ÷£õßÓøÁ uo²®.
& ©g\Ò ©Qø© Akzu Áõµ•® Á¸®.

©g\Ю •UQ¯ ÷|õ´PЮ:

^µn ÷PõÍõÖPÒ:
C¢v¯ºPÒ ©g\mö£õi J¸ ]miøP GÀ»õÁøP PÔÁøPPÎÀ £¯ß£kzxQßÓÚº. CuØS •UQ¯ Põµn® ©g\Ò ]Ó¢u Q¸ª|õ]Û ÷©¾® Cx APmkÁõ´Ä APØÔ¯õP ö\¯À£k®. GÚ÷Á EnÄ ö£õ¸mPÎÀ EÒÍ ©¢u ußø©ø¯ ÷£õUS®. Áõ²øÁ ukUS®. Á°ØÖ ö£õ¸©ø» Sn©õUS®.
EnÄ EshÄhß J¸ ]»¸US HØ£k® EhØ÷\õºøÁ ©g\Ò ÷£õUS®.
_Áõ\ ÷|õ´PÒ:
©g\Ò ö£õiø¯ ªÍS xõÒ, £øÚ öÁÀ»® ÷\ºzx £õ¼À vÚ® J¸ ÷ÁøÍ A¸¢u C¸©À, \Î, Bìx©õ w¸®.
J¸ jì§ß ©g\Ò ö£õi²hß PõÀ jì§ß ^µPzxõÒ, ÷uß ÷\ºzx _k}›À £¸P |õm£mh C¸©À, ‰a_ vnÓÀ, ÁÓmk C¸©À Sn©õS®.
}›ÈÄ:
J¸ jì§ß ©g\Ò ö£õiø¯ ö|À¼UPõ´ \õØÔÀ P»¢x vÚ•® £¸P ÷Ásk®. Cx µzuzvÀ EÒÍ \ºUPøµ AÍøÁ Pmk¨£õmiÀ øÁzv¸US®.
öPõ»ìjµõÀ SøÓ¯:
©g\Ò PÀ½µ¼ß ö\ÀPÐhß ö\¯À£mk öPmh öPõʨø£ Eh¼¼¸¢x APØÖ®. ÷©¾® ©g\ÎÀ SºSªß C¸¨£uõÀ AvÀ EÒÍ Âmhªß ¤6 öPõ»ìjµõÀ BUêPµnzøu ukzx Cu¯zvÀ öPõʨ¦ £iÁøu ukUQÓx. CuÚõÀ ©õµøh¨¦, £UPÁõu® Áµõ©À uØPõzxUöPõÒÍ»õ®.
Áõu ÷|õ´PÒ:
µzu Áõu® Sn¨£kzx®. Eh¼À ÃUP®, Á¼ø¯ HØ£kzx® ¦µuzøu ©g\Ò ukUQÓx. vÚ•® EnÂÀ ©g\øÍ uÁÓõ©À ÷\ºzxUöPõshõÀ ‰mkUPÎß ÃUP® Sn©õS®.
EhÀ £¸©ß SøÓ¯:
©g\Ò ¤zu }º _µ¨ø£ AvP›US®. Cx PÀ½µ¼À ¤zu }º _µ¨ø£ AvP›zx ¤zu¨ø£°À ¤zu}øµ Aݨ¦QÓx. CuÚõÀ EnÂÀ EÒÍ öPõʨ¦ •ÊÁx® EøhUP¨£mk ^µoUP¨£kQÓx. CuÚõÀ,AvP EhÀ £¸©ß SøÓQÓx.
•P¨£¸ }[P:
÷uõ¼À Gsøn¨ £ø\ HØ£k® ì÷£® AvPÍÄ _µ¨£øu ©g\Ò ukUQÓx. ©g\Ò ö£õiø¯ EmöPõsk, öÁΤµ÷¯õP©õP £¯ß£kzu ©g\Îß Q¸ª|õ]Û SnzuõÀ •P¨£¸ Sn©õS®.
J¸ ]miøP ©g\Ò ö£õiø¯ ÷u[Põ´ Gsøn AÀ»x £õ¾hß P»¢x £ØÔh •P¨£¸ Sn©õS®. ÷©¾®, •P¨£¸ÁõÀ HØ£k® uÊ®¦PЮ Sn©õS®. C¢v¯ºPÒ u[PÒ ÷uõø» £õxPõUPÄ®, ÷uøÁ°À»õu ÷µõ©[PøÍ APØÓÄ®, Eh¼À ¯ºøÁ |õØÓ® }[PÄ®, |Ö©n® P©ÇÄ®, ÷uõÀ ÷|õ´PÒ Áµõ©À ukUPÄ® |® |õmk ö£sPÒ vÚ•® ©g\Ò §] }µõkQßÓÚº.
öÁs£øh:
©g\Ò ö£õiø¯ PkS Gsøn²hß P»¢x £¯ß£kzu öÁs£øh Sn©õS®.
500 Qµõ® E»º¢u ©g\Ò ÷Áøµ ö£õizx 8 ¼mhº }›À J¸ CµÄ •ÊÁx® FµøÁUPÄ®. ¤ß ©Ö|õÒ Aøu öPõvUP øÁzx 8À 1 £[PõP ÁØÔ¯Ähß Aøu ÁiPmi 500 ªÀ¼ PkS Gsøn²hß ÷\ºzx ÁiPmi A¢u Gsønø¯ vÚ•® 2 ÷ÁøÍ öÁs£øh EÒÍ Ch[PÎÀ uhÂÁµÄ®. 3 ©õu® öuõhº¢x E£÷¯õQUP |À» £»øÚ¨ ö£Ó»õ®.
Á¯x •vº¢÷uõº vÚ•® EnÂÀ uÁÓõ©À ©g\øÍ £¯ß£kzvÚõÀ |µ®¦ ÷PõÍõÖ, ‰øÍ £õv¨¦, {øÚÄ uk©õÓÀ, bõ£P©Óv £õv¨¦ CÁØÔ¼¸¢x Âk£h»õ®.
Põ¯[PÒ:
C¢v¯õÂÀ AvPAÍÄ Ai¨£mh Põ¯[PÐUS® µzu P]Ä Põ¯[PÐUS® ©g\Ò ö£õi uhÁ¨£kQÓx.
Á°ØÖ ¦ÊUPÒ }[P:
©g\Ò ö£õiø¯ PÔ÷Á¨¤ø» Cø»²hß ÷\ºzx vÚ•® Esn ShÀ Q¸ªPÒ AȲ®.
÷uõÀ A›¨¦ }[P:
©g\Ò ö£õi²hß ÷Á¨¤ø», xÍ] ÷\ºzx vÚ•® Esn ÷uõÀ A›¨¦ }[S®.
¦ØÖ ÷|õ´PÒ:
£» ©¸zxÁ B´Ä Pmkøµ°ß •iÄPÎߣi ©g\Ò, ©õº£P, ~øµ±µÀ, ¦µìu÷PõÍ ¦ØÖ ÷|õ´PøÍ Sn¨£kzxÁuõP TÓ¨£mkÒÍx. ©g\Ò ¦ØÖ ÷|õ´ HØ£kÁøu ukUQÓx. ÷©¾® ¦ØÖ ¤Ó Ch[PÎÀ £µÄÁøu ©g\Ò ukUQÓx. ö£¸S® ¦ØÖ ÷|õ´ Q¸ªPøÍ AÈzx, ¤Ó EÖ¨¦PÎÀ £µÁõ©À PõUQÓx. GÚ÷Á. ¦ØÖ ÷|õ´ £õvzuÁºPÒ AvP AÍÄ ©g\øÍ EnÂÀ ÷\ºzxUöPõÒÍ ÷Ásk®.
©g\Ò ]» _Áµõì¯ uPÁÀPÒ:

C¢v¯õÂÀ D÷µõmiÀ uõß E»Q÷»÷¯ AvP AÍÄ ©g\Ò EØ£zv ö\´¯¨£kQÓx. AuÚõÀ uõß D÷µõmiØS ©g\Ò |Pº GßÓ ]Ó¨¦ ö£¯¸® Esk.
J¸ |õøÍUS ©g\Ò 100 Qµõ® Áøµ EnÂÀ ÷\ºzxUöPõÒÍ»õ®. C¢v¯ºPÒ J¸ |õøÍUS 80&200 Qµõ® ©g\øÍ £¯ß£kzx QßÓÚº.
C¢v¯õÂÀ J¸ BsiØS 480,000 hß ©g\Ò £¯ß£kzu¨£kQÓx. C¢v¯õÂÀ Bsk JßÔØS 600,000 hß ©g\Ò EØ£zv ö\´¯¨£kQÓx. Cx E»PzvÀ ö\´¯¨£k® ©g\Ò EØ£zv°À 75 \uÃu®.
©g\Ò SÔzx 1730 B´Ä PmkøµPÒ öÁίõQ EÒÍÚ. AÁØÔÀ 599 PmkøµPÒ ¦ØÖ ÷|õ´ SÔzx®, 23 PmkøµPÒ Bºv›mjì £ØÔ²®, 16 PmkøµPÒAÀß«º ÷|õ´£ØÔ²®, 78 PmkøµPÒ }›ÈÄ £ØÔ¯x©õS®.
& öuõS¨¦: ÷uÁµõáß
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
21 . Põ¯® PõUS® öÁ[Põ¯®!

©ÛuºPÒ B÷µõUQ¯©õP, {®©v¯õP C¸UP"h¯m, öPõ¯m, ö©º]' C¢u ‰ßøÓ²® ¤ß£ØÓ ÷Ásk® Gߣx J¸ B[Q» £Çö©õÈ. h¯m Cß öíÀz GߣõºPÒ |À En÷Á |À©¸¢uõS®.
BP÷Á, |® B÷µõUQ¯zøuU PõUP, AßÓõh ÁõÌUøP •øÓ°À GkzxUöPõÒÍ ÷Ási¯ EnÄ •øÓ ©ØÖ® EnÄ ÁøPPÒ GøÁ GøÁ Gߣøu Áº©õ S¸S»® ^¨hõUhº ÷ÁÀÂÈ "En÷Á ©¸¢x' GßÓ Czöuõh›À ö£sPÒ ©»º Áõ\QPÐUS ›ÁõP ö\õÀ» C¸UQÓõº.



öÁ[Põ¯zøu uªÈÀ D¸ÒÎ Gߣº. B[Q»zvÀ BÛ¯ß GßQÓõºPÒ. Cx ³Û÷¯õ GßÓ »zwß Áõºzøu°¼¸¢x Á¢uuõS®. CuØS ö£›¯ •zx GßÖ Aºzu®. öÁ[Põ¯zvÀ ¦µua\zxUPÒ, uõx E¨¦PÒ, ÂmhªßPÒ EÒÍÚ. GÚ÷Á, öÁ[Põ¯® |® Eh®¦USz ÷uøÁ¯õÚ Fmha\zøuz u¸QÓx. £» |õkPÎÀ öÁ[Põ¯zøu ©¸¢x¨ö£õ¸ÍõP¨ £¯ß£kzxQÓõºPÒ. C¢v¯õÂÀ £õmi øÁzv¯zv¾®, öÁ[Põ¯® •UQ¯ Ch®¤izv¸UQÓx.
öÁ[Põ¯zvß Põµzußø©USU Põµn® AvÀ Aø»À ¦÷µõ¨ø£À øh \Àø£k GßÓ Gsøn Põµn©õS®. Cx÷Á öÁ[Põ¯zvß ö|iUS®, PsPÎÀ Pspº ÁµÄ® Põµn©õP C¸UQÓx.
]Ô¯ öÁ[Põ¯®, ö£À»õ› öÁ[Põ¯® Cµsk® J÷µ ußø©ø¯ Eøh¯Ú. J÷µ £»øÚzuõß u¸QßÓÚ. \›, CÛ öÁ[Põ¯zøu G¨£i £¯ß£kzvÚõÀ, GßÚ £»ß QøhUS® Gߣøu¨ £õºUP»õ®.
öÁ[Põ¯zvÀ P¢uP\zx, }º \zx, A¾ª÷ÚõUøék, íõº÷£õøím÷µm BQ¯Ú Ah[Q EÒÍÚ.
öÁ[Põ¯zvß £Sv EÖ¨¦PÍõP C¸¨£øÁ §, uõÒ, QÇ[S, Âøu BS®.
öÁ[Põ¯zvß Ai¨£øh ©¸zxÁ Sn[PÍõP C¸¨£øÁ öÁ¨£•shõUQ, ]Ö}º¨ö£¸UQ, `uP•shõUQ, Põ©® ö£¸UQ, ÷PõøͯPØÔ BS®.
öÁ[Põ¯zøu ÂÛP¸hß ÷\ºzx \ø©zxsn Põ©õø», DµÀ Áͺa] SøÓ²®.
öÁ[Põ¯zxhß 2&3 ªÍS ÷\ºzxsn Á°ØÖ Á¼, öhßåß SøÓ²®.
|õø»¢x öÁ[Põ¯zøu ÷uõø» E›zx A÷uõk ]Ôx öÁÀ»zøua ÷\ºzx Aøµzx \õ¨¤h ¤zu® SøÓ²®. ¤zu H¨£® ©øÓ²®.
öÁ[Põ¯a \õØøÓ²®, öÁ¢}øµ²® P»¢x Áõ´ öPõ¨£Îzx, öÁÖ® \õøÓ £g]À |øÚzx £À DÖPÎÀ uhÂÁµ £ÀÁ¼, DÖÁ¼ SøÓ²®.
öÁ[Põ¯zøu ÁuUQa \õ¨¤h EènzuõÀ HØ£k® B\ÚU Pk¨¦ }[S®.
öÁ[Põ¯a \õÖ ]» Á°ØÖU ÷PõÍõÖPøÍ }US®. Cøu ÷©õ›À ÂmkU SiUP C¸©À SøÓ²®. öÁ[Põ¯zøu AÂzx, ÷uß,PØPsk ÷\ºzx \õ¨¤h EhÀ £»©õS®.
öÁ[Põ¯zøu ÁuUQ öÁÖ® Á°ØÔÀ \õ¨¤mkÁµ |µ®¦ uͺa] Sn©õS®.
öÁ[Põ¯ µ\zøu }º P»¢x SiUP |ßS xõUP® Á¸®.
öÁ[Põ¯a \õØ÷Óõk ]Ôx E¨¦ P»¢x AiUPi \õ¨¤mkÁµ, ©õø»UPs ÷|õ´ \›¯õS®.
öÁ[Põ¯a \õØÖhß, PkS Gsøn P»¢x RÀ Áõ² Põµn©õP ‰mkPÎÀ HØ£k® ÷|µzvÀ uh Áµ Á¼ }[S®.
öÁ[Põ¯zøu Ahµzx öuõsøh°À ¦ØÖ¨÷£õh HØ£k® öuõsøh Á¼ SøÓ²®.
BÖ öÁ[Põ¯zøu Aøµ ¼mhº }›¼mk £¸QÚõÀ ]Ö}º Pk¨¦, G›a\À }[S®.
öÁ[Põ¯a \õ÷Óõk \ºUPøµ ÷\ºzxUSiUP ‰»÷|õ´ Sn©õS®. Áõu ÷|õ´ Sn©õS®.
öÁ[Põ¯z÷uõk, öÁØÔø» Aøµzx |P_zvUS ÷£õmk Á¢uõÀ |P_zv Sn©õS®.
]Ô¯ öÁ[Põ¯zvÀ Cß_¼ß EÒÍx. }›ÈÄ ÷|õ¯õÎPÒ Cøu AvP©õP £¯ß£kzu ÷Ásk®.
öÁ[Põ¯zøu ÂÍUöPsøn°À ÁuUQa \õ¨¤h ©»a]UPÀ }[S®.

ö£sPÐUS EØÓ ÷uõÈ öÁ[Põ¯®:

öÁ[Põ¯zvÀ öPõʨø£USøÓUS® Sn® C¸¨£uõÀ SshõP C¸¨£ÁºPÒ öuõhº¢x EnÂÀ öÁ[Põ¯zøu¨ £¯ß£kzvÚõÀ ö©¼¯»õ®.
|ÖUQ¯ öÁ[Põ¯zøu •P¨£¸ EÒÍ ChzvÀ ÷u´zuõÀ •P¨£¸ }[Q, •PzvÀ AÇS®, ö£õ¼Ä® EshõS®.
uø»°À EÒÍ ö£õk }[P, •i EvºÁøu ukUP, •i Á͵, •i ÷£õ_UShß £Îa]h öÁ[Põ¯zøu Aøµzx uø»US §] Áµ÷Ásk®.
vÚ•® ‰ßÖ öÁ[Põ¯® \õ¨¤mk Áµ ö£sPÐUS HØ£k® Evµa]UPÀ }[S®.
öÁ[Põ¯zvÀ `uP•shõUQ ö\´øP C¸¨£uõÀ CuøÚ Á¯uõQ²® ¸xÁõPõu ö£sPÒ, ©õuÂhõ´ ÷PõÍõÖ Eøh¯ ö£sPÒ öÁ[Põ¯zøu £aø\¯õP \õ¨¤h ©õuÂhõø¯ xõsk®.
SÇ¢øu°À»õu ö£sPÐUS öÁ[Põ¯zvÀ EÒÍ P¢uP \zx Pº¨£¨ø£ ¦ÊøÁ }US®, ©»mkußø©ø¯ }US®.
öÁÎ E£÷¯õP®:
Põ¯®, ¦s, ^Ì CøÁPÐUS öÁ[Põ¯zøu ©g\Ò, ÷Á¨¤ø»²hßAøµzx uh Áµ ÂøµÂÀ Põ¯® }[S®.
öÁ[Põ¯ \õÖ PõxPÎÀ ÂmhõÀ Põx Á¼ }[S®.
÷u©À, £øh, ö\õ› CøÁPÐUS öÁ[Põ¯ \õÖ §]Á¢uõÀ Sn©õS®.
ö£õxÁõP öÁ[Põ¯® Áõu ÷|õ´, ‰» ÷|õ´, Sß© ÷|õ´, Cu¯÷|õ´,AÀ\º ©»mk ußø©, ©õuÂhõ´ •u¼¯ ÷|õ´PÐUS öÁ[Põ¯® ES¢u ©¸¢x ö£õ¸ÍõS®.
GÚ÷Á, vÚ\› EnÂÀ öÁ[Põ¯zøu µ\®, SÇ®¦, \õ®£õº, ö£õ›¯À, ÁzuÀ,\mÛ CøÁPξ® ÷uõø\, Aøh,Áøh GÚ £» ÁøPÎÀ EnÂÀ öÁ[Põ¯zøua ÷\ºzx Á¢uõÀ En÷Á ©¸¢uõS®!
& öuõS¨¦: ÷uÁµõáß
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
22 . ©õuÂhõ´ Á¼ }US® ¦vÚõ!

"A¸] ö¯õkÁõ¢v ¯UQÛ ©¢u[
S¸v ¯ÊUS©»U öPõmh& ›²¢
xv¯ußÖ ÷\õÔÓ[S¢ öuõÀ¾»QÀ |õЮ
¦v¯ÚÀ ‰¼ ¦PÀ'& APzv¯º SnÁõPh®
¦vÚõÂß ö£¸ø© £ØÔ TÖ® £õhÀ Cx. C¢u¨ £õh¼ß ö£õ¸Ò ¦vÚõ, £]°ßø©, Áõ¢v, Á°ØÖ©¢u®, ö\›¯õø©, S¸v¯ÊUS •u¼¯ ÷|õ´PÒ wºUS® GߣuõS®.

¦vÚõ ]Öö\i ÁøPø¯a ÷\º¢ux. Cx C©õ»¯zøua ÷\º¢u ÷©ØS \õµÀ |õkPξ®, öußÛ¢v¯õ, Á[PõÍ® •u¼¯ Ch[Pξ® £°›h¨£kQÓx. ¦vÚõÂß Røµ, Cø» GÚ •Êø©²® ©¸zxÁ® Sn® öPõshøÁ. ¦vÚõÂß _øÁ Põº¨¦, xÁº¨¦.
¦vÚõÂÀ EÒÍ ÷Áv¨ö£õ¸mPÒ:
AìPõº¤U Aª»®
›÷£õ¤ÍÂß
øu¯ªß
Aª÷Úõ Aª»[PÒ ©ØÖ®
ö©ßuõÀ
I÷\õö©ß÷uõß
ö©ßøuÀ A]m÷hm
ö©ß÷uõ ¤²µõß •u¼¯Ú ¦vÚõÂÀ C¸UQÓx.
ö\´øP:
£]zxõsi& Á°ØÔÀ A^µnzøu ÷£õUQ £]ø¯ AvP¨£kzx®. ]Ö}º¨ö£¸UQ& }º¨ö£¸UQ ö\´øP C¸¨£uõÀ PÀ»øh¨¦ ÷|õ°Úº £¯ß£kzu»õ®.
öÁ¨£•shõUQ& Eh¼À µzu Kmhzøu AvP›zx öÁ¨£zøu EshõUS®.
APmkÁõ¯PØÔ& Á°ØÖ ö£õ¸©ø» }UQ Áõ²øÁ APØÖ®.
C]ÁPØÔ& Á°ØÖÁ¼ø¯ ÷£õUS®.
©¸zxÁ £¯ßPÒ:
Põ©õø» ÷|õ´US:
CuøÚ E»ºzv Si}›mk 30 ªÀ¼ •uÀ 60 ªÀ¼ Ãu® öPõkUP Põ©õø» Sn©õS®.
Áõ¢vUS:
¦vÚõ Cø», ^µP®, K©® CÁØøÓ J¸ ÷uUPµsi AÍÄ Gkzx Aøµzx, ÷©õ›À A¸¢vÁµ Áõ¢v Sn©õS®.
`uPUPmk }[P:
¦vÚõ Cø»²hß ö£¸[Põ¯zøu ÷\ºzx Aøµzx ÂÊuõUQ J¸ ©õu® öuõhº¢x Esn `uPPmk GßÖ ö\õÀ»¨£kQßÓ ©õuÂhõ´ ÷PõÍõÖ Sn©õS®.
xõUPzxUS:
¦vÚõ Cø», Pاµ¨¦À Cµsk® \© AÍÄ Gkzx Si }›mk A¸¢u |À» xõUP® HØ£k®.
Áõ´xº|õØÓ®:
¦vÚõ Cø», xÍ] Cø», H»®, Qµõ®¦ CøÁ \©AÍÄ Gkzx ö£õizx }›À P»¢x J¸ Áõµ® A¸¢u Áõ´xº|õØÓ® }[S®.
÷uõÀ ÷|õ´ }[P:
A¸P®¦À, ¦vÚõ, Cø», ÷Á®¦ Cø», xÍ] CøÁ 5 Qµõ® Ãu® Gkzx 5 ªÍS CÁØÖhß 100ªÀ¼ }¸hß ÷\ºzx, 10 {ªh® öPõvUP øÁzx ÁiPmi J¸ ©õu® öÁÖ® Á°ØÔÀ A¸¢v Áµ µzuzvÀ AÇUS C¸¨£uõÀ HØ£k® ÷uõÀ A›¨¦, £øh •u¼¯Ú }[S®. µzu _zvUS Cx ]Ó¢ux.
C¸©À, \Î Sn©õP:
¦vÚõ Cø», Bhõ÷uõøh Cø» Cµsk® P\õ¯©õUQ J¸ ]miøP ©g\Ò ÷\ºzx 3 |õmPÒ A¸¢u C¸©À \Î Sn©õS®.
Á°ØÖ Á¼ }[P:
¦vÚõ Cø», K©®, ^µP® ÷\ºzx P\õ¯©õUQ Sizx Áµ 30 {ªhzvÀ Á°Ö Á¼ }[S®. Cx ©õuÂhõ´ Põ»zvÀ Á¸® Á°ØÖ Á¼US® ªPa]Ó¢ux. HöÚÛÀ, CvÀ EÒÍ ¦vÚõ, K©® Cµsk÷© ]Ó¢u C]ÁPØÔ.
•P¨£¸ }[P:
P¸Áøͯ®, £¸ }[P ¦vÚõ Cø»ø¯ £õ¼À P\P\õÄhß ÷\ºzx Aøµzx öuõhº¢x £ØÔmk Aøµ©o÷|µ® PÈzx •Pzøu _zu©õÚ }›À PÊÁÄ®.
¦vÚõøÁ EnÂÀ £¯ß£kzx® •øÓ:
¦vÚõøÁ Røµ¯õP \ø©zx Esn»õ®. Cm¼, ÷uõø\ •u¼¯ÁØÖUS \mÛ¯õP £¯ß£kzu»õ®. ÷©¾® FÖPõ´, xøÁ¯À ö\´x EnÂÀ ÷\ºzxUöPõÒÍ»õ®. Cm¼ö£õi, £¸¨¦ö£õi,PÔ÷Á¨¤ø» ö£õi²hß ¦vÚõøÁ ö£õizx CÁØÖhß ÷\ºUP»õ®. SÇ¢øu¨ £¸ÁzvÀ C¸¢÷u ¦vÚõøÁ öPõkzx Á¢uõÀ Á°Ö öuõhº£õÚ ÷|õ´PÒ Áµõ©À PõUP»õ®.
¦vÚõ ]Ó¢u Q¸ª |õ]Û GÚ÷Á, \ø©¯¼À \õ®£õº, µ\®, GÀ»õ ÁøP ö£õ›¯À, Tmk öPõzu©À¼²hß £¯ß£kzv ÷|õ°ßÔ |»©õP ÁõÇ»õ®.
Põ¤,j A¸¢xÁuØS £vÀ ªßm j A¸¢u ‰øÍ ¦zxnºa] ö£Ö®. bõ£P\Uv²® ö£¸S®.
¦vÚõ Gsøn:
¦vÚõ¼¸¢x ©nªUP øu»® GkUP¨£kQÓx. CvÀ ö©ßzuõÀ {øÓ¢v¸US®. C¢u Gsøn uø»Á¼ø¯ Sn©õUS®. |µ®¦ Á¼, Ck¨¦ Áõu ÷|õ´, RÀ Áõu ÷|õ´PøÍ Sn©õUS®.
¦vÚõ Gsøn uÛ¯õP÷Áõ AÀ»x ³P¼¨hì øu»® ©ØÖ® Pاµ®, £õµ¤ß •u¼¯ÁØ÷Óõk ÷\ºzx uø»Á¼, ‰mkÁ¼US uhÁ»õ®.
_µ®,x®©À }[P ¦vÚõ Gsønø¯ öÁ¢}›À ÷£õmk B ¤iUP»õ®.
& öuõS¨¦: ÷uÁµõáß
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
23 . C¸©À,\Î }US® G¾ªaø\

G¾ªaø\ GßÖ {øÚzuõ÷» |õÂÀ Ga]À FÖ®; EhÀ ¦Î¨¦nºÂÀ ]¼ºUS®. AÖ_øÁ°À JßÖ ¦Î¨¦. EnÂÀ \©a^º _øÁ C¸UP ÷Ásk®. ¦Î¨¦ _øÁø¯G¾ªaø\ u¸QÓx.G¾ªa\® FÖPõ´ Esn ¤iUPõ ©À C¸¢uõ¾® J¸¤iEnøÁ²® \õ¨¤h øÁUS®. GÚ÷Á,AßÓõh EnÂÀ ¦Î¨¦ _øÁ ÷\ºUP G¾ªaø\ ÷\ºzxUöPõÒÍ ÷Ásk®.
Áõ¢v,¤zu®,_µ® GßÓõ÷» J¸ xsk G¾ªaø\ø¯ \õ¨¤k. uõP©õ,Eh®¦ `kuoUP ÷Ásk©õ J¸ QÍõì ö»©ß áüì Si Gߣx £õmi øÁzv¯®.

G¾ªaø\ öÁ¨£©sh» £SvPÎÀ ÂøͯUTi¯ J¸ £°ºÁøP. Cx C¢v¯õÂÀ öÁ¨£©sh»¨£SvPÎÀ Põn¨£kQÓx. SÔ¨£õP, ÷©ØS Á[PõÍ®,Ezvµ¨¤µ÷u\®,£g\õ¨,©zv¯¤µ÷u\®,©Põµõèiµ®,Pº|õhP®,B¢vµõ ©ØÖ® uªÇPzvÀ AvP® £°›h¨£kQÓx.
G¾ªaø\ Cø»,Põ´,£Ç®,£Çµ\®,Gsøn ©¸zxÁ Sn® öPõshøÁ. Cø» ¦Î¨¦ _øÁ öPõshx. Cx Sκa] EshõUQ¯õP ö\¯À£kQÓx.
Põ´,£Ç® ¦Î¨¦ _øÁ öPõshøÁ. CxÄ® Sκa] EshõUQ.
÷uõÀ £Î¨¦ _øÁ Eøh¯x. Cx ui¨¦shõUQ,APmkÁõ¯PØÔ.
G¾ªaø\°À EÒÍ \zx¨ ö£õ¸mPÒ:
100Qµõ® £ÇzvÀ, 28 P÷»õ›,}º\zx& 90%,¦µu\zx&0.8Qµõ®,öPõʨ¦\zx&0.5 Qµõ®,Põº÷£õøím÷µm&8.2 Qµõ®,|õºa\zx&0.6 Qµõ®,\õ®£À \zx&5.4 Qµõ®.
uõx E¨¦UPÒ:
PõÀ]¯®&33ª.Q.,£õ죵ì&15ª.Q.,C¸®¦\zx&0.5ª.Q., ö©UÜ]¯®&0,÷\õi¯®&3ª.Q.,ö£õmhõ]¯®&137ª.Q.
E°º\zxUPÒ:
ÂmhªßG&12ª.Q.,Âmhªß¤1&0.5ª.Q.,Âmhªß¤2&0.02ª.Q.,Âmhªß]&52ª.Q.,{¯õ]ß&0.1ª.Q. ÷©¾®, CvÀ 30US® ÷©Ø£mh GÎvÀ B¯õS® GsønPЮ C¸UQÓx.
BÀPíõÀPÒ,BÀiøíkPÒ,AìhºPÒ,øím÷µõPõº£ß,Rm÷£õßPÒ,]m›U Aª»®,]mµõÀ,öhº¤ÚõÀPÒ EÒÍÚ. £Ça\õØÔÀ ]m›U Aª»® AvP® Põn¨£kQÓx.
ö£õx Sn®:
APzv¯º SnÁõPh® £õhÀ ‰»® G¾ªaø\°À Cx •USØÓzøu ÷£õUS®,`ø» GÚö\õÀ»¨£kQßÓ öPõi¯ Á¼ø¯²®,ÁõuP£ `ø»ø¯²® Sn©õUS®.
Áõ¢vø¯ ÷£õUS®. Sß©® GßQÓ Á°ØÖÁ¼, AÀ\øµ Sn©õUS®. ©¸¢wk GßÓøÇUP¨£k® Dk©¸¢øu ÷£õUS®.
AÇÀ&¤zuöÁ¨¦ uoUS®.
G¾ªa\® £ÇzvÚõÀ, uõP®,©¯UP®,Áõ¢v,Áõ´S©mhÀ,}º÷ÁmøP,öÁÔ÷|õ´,Ps÷|õ´,Põx Á¼,|Pa_ØøÓ BQ¯øÁ Sn©õS®.
G¾ªa\® £Çzøu µ\•®,FÖPõ²©õP EnÂÀ £¯ß£kzvÁµ,vøµ,¤i¨¦.ö£¸Á°Ö,£UP`ø»,•h®,öÁÔ÷|õ´,©¯UP®,©Ú÷\õºÄ }[S®.
©¸zxÁ £¯ßPÒ:
1. Âmhªß ] SøÓÁõÀ Á¸® ìPºÂ ÷|õø¯ ÷£õUS®. ÷©¾® Áµõ©À ukUP Cx ]Ó¢u uk¨¦ ©¸¢x. PÛPÎß \õØÔ¾ÒÍ ]m›U Aª»® ìPºÂ ÷|õø¯ ÷£õUS®.
2.£]ø¯ xõsk®.
3.Á°ØÖ Á¼ø¯ ÷£õUS®.
4.Áõ¢vø¯,¤zuzøu {Özx®.
5.Áõ´¦søn }US®.
6.Pønø¯ ö£¸UP ÷|õ´PÐUS ]Ó¢ux.
7.~øµ±µÀ ÷|õ´PøÍ ÷£õUS®.
£¯ß£kzx® •øÓPÒ:
C¸©À,\Î Sn©õP: G¾ªa\ £Ça\õØÔÀ, ÷uß ÷\ºzx öÁ¢}›À A¸¢u C¸©À,\Îø¯ ÷£õUS®.
Áõ¢v }[P: G<¾ªa\® £Ça\õØÔÀ }º,E¨¦ ÷\ºzx £¸P Áõ¢v Sn©õS®.
Bìx©õøÁ ÷£õUP:
G¾ªaø\ £Ç\õÖ,Bhõ÷uõøh Cø»,xÍ] Cø»,Cg] ÷\ºzx j¯õP öPõvUP øÁzx £¸P Bìx©õ,‰UPøh¨¦ Sn©õS®.
|õm£mh PÈa\À wµ:
^µPzøu ÷ußÂmk ÁÖzx AuÝhß £Ç\õÖ ÷\ºzx }ºÂmk Põ´a] uµ PÈa\À ,Áõ¢v Sn©õS®.
£ØPÎß DÖ£»©øh¯:
G¾ªa\® £Ç\õØÔÀ }º,E¨¦ ÷\ºzx öPõ¨¦ÎUP £ØPÎß DÖ £»¨£kÁ÷uõk DÖPÎÀ S¸vP]uÀ {ØS®.
•P® ö£õ¼Ä ö£Ó:
G¾ªa\® £Ça\õØÔÀ ]Ôx ÷uß ÷\ºzx uhÂ,Aøµ ©o÷|µ® PÈzx Sκ¢u }›À PÊÁ •PzvÀ Gsøn ÁiuÀ,P¸®¦ÒÎPÒ ©øÓ²®. Áõµ® J¸ •øÓ ö\´uõÀTh ÷£õx®.
}º ÷ÁmøP uo¯:
}›ÈÄ ÷|õ¯õÎPÐUS HØ£k® uõPzøu ÷£õUP G¾ªa\® £Ça\õØÔÀ E¨¦ ÷\ºzx uµ»õ®.
Cu¯£h£h¨¦ }[P:
vÚ•® 10 ªÀ¼ G¾ªa\®£Ça\õÖ £¸P Cu¯ £h£h¨¦ }[S®.
Áõu ÷|õ´PÐUS:
G¾ªa\® \õÖ& Áõu÷|õ´,|µ®¦ Á¼PÐUS ]Ó¢ux.
ö£õkS }[P:
G¾ªa\ £Ç\õØøÓ uø»°À FÓøÁzx ¤ß uø»‰ÌP ö£õkS }[SÁxhß EhÀ öÁ¨£•® uo²®.
BP÷Á, Ãmkz÷uõmhzvÀ J¸ G¾ªaø\ ©µ® C¸¢uõ÷», A¢uUSk®£zvÀ B÷µõUQ¯® ö£¸S®.G¾ªaø\ ©µ® ÷uõmhzvÀ CÀ»õuÁºPÒ ©¼Ä Âø»°À QøhUS® ÷£õx G¾ªaø\ø¯ Áõ[Q FÖPõ´ ÷£õmk øÁzxUöPõÒÍ»õ®. G¨£i÷¯õ ÁõµzvÀ J¸ |õÍõÁx G¾ªa\® £Çzøu EnÂÀ ÷\ºzxUöPõÒЮ £ÇUPzøu HØ£kzvUöPõshõÀ ÷£õx® öuõmhxUöPÀ»õ® ©õzvøµ \õ¨¤kÁøu uºUP»õ®.
& öuõS¨¦: ÷uÁµõáß
-------------&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
24 . bõ£P \Uvø¯ AvP¨£kzx®
öÁsøhUPõ´!


"öÁsøhUPõ´ \õ¨¤mhõÀ ‰øÍ Á͸®' GßÖ J¸ ÷£a_US SÇ¢øuPÎh® ö\õÀ÷Áõ®. öÁsøhUPõø¯ £aø\¯õPU Th \õ¨¤h»õ®. Cx øP µÀ ÷£õ» }sk C¸¨£uõÀ B[Q»zvÀ ÷»iì ¤[Pº GßÓøÇUQßÓÚº. C¢v°À ¤si GßÖ®, \©ìQ¸uzvÀ ÷PõâÁõíõ GßÖ® TÓ¨£kQÓx.
öÁsøhUPõ°ß Cø», Põ´, Âøu GÀ»õ® ©¸zxÁSn® öPõshøÁ¯õS®.
"Psh Qµõo Ái¯ Av\õµ®
ÂshöÁs ^uµzu® ÷©Ä[Põs& Jsöhõi÷¯
ÁshØPõ® öÁ´¯P£ ÁõuªS® Áõ´USnÁõ®
öÁsøhUPõ´ Es£õºUS ÂÒ'
GßÓ C¢u ]zuº £õhÀ, |õm£mh PÈa\À, ö£¸[PÈa\À, S¸vPÈa\À, Áõu•®, P£•® Sn©õS® GßÖ TÖQÓx.
Fmha\zxUPÒ:
öÁsøhUPõ°À Âmhªß ]2, Âmhªß H, Âmhªß ¤ AvPÍÄ EÒÍx.
÷©¾® CvÀ C¸®¦a\zx, PõÀ]¯® EÒÍx. ©ØÖ® öÁsøhUPõ°À |õº \zx AvP©õP C¸UQÓx.
©¸zxÁ £¯ß:
}ºa_¸US Sn©õP:
öÁsøhUPõø¯ E»ºzv ÁØÓ¼mk, Påõ¯©õUQ SiUP }º G›a\À Sn©õS®.
öÁÒøÍ ÷|õ´US:
ö£sPÐUS AvP EhÀ `miÚõÀ HØ£k® öÁÒøÍ £kuø» Sn©õUP, öÁsøhUPõ°ß ÁÊÁʨ£õÚ \ÆÄhß ÷\õØÖPØÓõøÇ ÷\ºzx Cµsøh²® \©AÍÂÀ Aøµzx J¸ ÷uUPµsi ÷©õ¸hß ö£›¯ ö|À¼UPõ´ Ãu® J¸ ©õu® öuõhº¢x Esn EhÀ `k uo²®. öÁÒøÍ ÷|õ´ Sn©õS®.
EhÀ `k uo¯:
öÁsøhUPõ´ Âøuø¯ ö£õizx ^µPzxõÐhß ÷\ºzx Esn EhÀ `k uo²®. Ps G›a\À Sn©õS®.
|õm£mh PÈa\À Sn©õP:
öÁsøhUPõ°ß ÁÊÁʨ£õÚ \ÆøÁ ©õxÍ®£Ç® \õØÔÀ J¸ ÷uUPµsi öÁ¢u¯xõÒ ÷\ºzx A¸¢u HÊ |õÎÀ |õm£mh PÈa\À •ÊÁx©õP Sn©õQÂk®.
£õÀÂøÚ ÷|õ´US:
BsPÐUS HØ£k® £õÀÂøÚ ÷|õ´PÍõÚ ]¤Îì, ÷Põn›÷¯õÄUS ¤g_ öÁsøhUPõ´ ]Ó¢ux. öÁsøhUPõ´ ¤gø\ `¨£õP øÁzx £¸P }ºuõøµ G›a\À Sn©õS®.
÷uõÀ ÁÓm] }[P:
öÁsøhUPõø¯ Áõµ® 3 ÷ÁøÍ EnÂÀ \ø©zx Esn ÷uõÀ ÁÓm], ÷uõÀ öÁi¨¦ }[S®. ÷uõ¾US |À» {Ó•shõS®.
|µ®ø£ Á¾¨£kzu:
öÁsøhPõø¯ ÁØÓ¼mk FÖPõ¯õP £õP® ö\´x Esn |µ®ø£ Á¾¨£kzx®. bõ£P\Uvø¯ AvP¨£kzx®.
bõ£P \Uvø¯ AvP›UP:
öÁsøhPõ´, ]ÖRøµ, •Ö[øP Røµ CøÁ •øÓ÷¯ JÆöÁõ¸ |õÍõP \ø©zx Esn bõ£P\Uvø¯ AvP¨£kzx®. ‰øÍUS AvP S¸vø¯ £õ¯aö\´x ‰øÍø¯ ¦zxnºa]¯õP øÁzv¸US®.
£õ¾nºÄ AvP›UP:
öÁsøhPõø¯ Bs, ö£s C¸£õ»¸® ö£õ›¯À, \õ®£õµõP EnÂÀ AvP® ÷\ºzxUöPõÒÍ EhÀ`møh SøÓzx £õ¾nºøÁ AvP›US®.
& öuõS¨¦: ÷uÁµõáß
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

25 . |g_ •ÔUS® xÍ]!

xÍ]ø¯ J¸ öu´ÃP ]ßÚ©õP Gso ÁÈ£k® ÁÇUP® |©US Esk. |® ‰uõøu¯ºPÒ xÍ]°À Gsn›¯ £¯ß£õkPÒ EÒÍøu AÔ¢uuõÀuõß Aøu ©øÓ•P©õP öu´ÃP ]ßÚ©õP E¸ÁP¨£kzv |©US ö\õÀ»õ©À ]» Aºzu[PøÍ ö\õÀ¼a ö\ßÔ¸UQÓõºPÒ. ÃmkUS J¸ xÍ] ö\i C¸¢uõ÷» Ax, J¸ ªÛ £õº©]US DhõQk®.
Cx |õk •ÊÁx® £°µõS® J¸ ©n•ÒÍ ö\i. CuØS Põµ•®, ©n•® Esk. A›, µõ©xÍ], Q¸ènxÍ], v¸¢xÍõ´, ÁÚ®, ¸¢u®, ©õ»»[PÀ, xÇõ´ GßÖ® xÍ] AøÇUP¨£kQÓx. xÍ]°À |ØÖÍ], P¸¢xÍ], ö\¢xÍ], {»zxÍ], PÀxÍ], |õ´zxÍ], •ÒxÍ] GÚ £»ÁøP²sk.
xÍ] Cø», Âøu öPõsh •ÊuõÁµ®. Cuß _øÁ Põº¨¦.
ö\´øP:
Cø»: öÁ¨£•shõUQ, ÷PõøǯPØÔ, ¯ºøÁ ö£¸UQ
Âøu: EÒøÇ»õØÔ
÷Áv¨ ö£õ¸mPÒ: Pاµ®, ¤.÷P›÷¯õ¤À½ß, ]Û÷¯õÀ, öh]À BÀiøík, ³âÚõÀ, £õÀªiU Aª»®, ìi¯õ›U Aª»®, AìPõº¤U Aª»®, Põ®¥ß, J›¯õßiÀ ©ØÖ® Cø»PÎÀ Eº÷\õ¼U Aª»® EÒÍx.
xÍ]°ß ö£õx ©¸zxÁ Sn®:
xÍ]ø¯ EmöPõÒÍ, AxöÁÔ÷|õø¯ ÷£õUS®. ‰UQ¼¸¢x }º£õ²®(¥Û\) ÷|õø¯ ukUS®. Eh¼ß öÁ¨£zøu APØÖ®. xÍ] Cø» µ\zuõÀ _µ÷|õ´ ÷£õS®. Áõu® öuõhº£õÚ ÷|õ´PøÍ APØÖ®.
|ØxÍ]:
P£zøu ÷£õUS®. Á°ØÖ Á¼ Sn©õS®. Azv_µ® SøÓ²®. uõPzøu }US®. ©¢uzøu }US®. _øÁ°ßø©ø¯ ÷£õUS®. Eh¾US öÁ¨£zøu u¢x P£zøu ÷£õUS®.
{»zxÍ]:
uõ´¨£õ»õÀ SÇ¢øuPÐUS Á¸® ©õ¢uzøu ÷£õUS®. Pna`k }US®. P£_µ®, ¤zu _µ®, Sκ _µzøu ÷£õUS®.
|õ´ xÍ]:
P£zøu }US®. Szv¸©À, \ßÛ ÷|õ´ ÷£õUS®. xÍ]°ß µ\®, PØ£® CøÁPøÍ EmöPõshõ¾®, ÷Á›ß µ\zøu |Àö»søn²hß Tmi øu»©õ´ E£÷¯õQzuõ¾® £°zv¯®, Áõu¨¤o, P£¨¤Î, \ßÛ •u¼¯Ú }[S®.
PÀ xÍ]:
Cx wa_µ®, Pmi, ÁskPi, PõnõUPi, ÷PõøÇø¯z uÒÐQßÓ I¯_µzøu ÷£õUS®.
•Ò xÍ]:
G¼ |g_, öÁmk¨¦s, P£® CøÁPÐUS •ÒxÎ] ©¸¢uõS®.
ö\¢xÍ]:
Âåzøu wºUS®. P£zøu ÷£õUS®. ø\Úø\ ÷£õUS®.
P¸¢xÍ]:
C¸©À, Cøµ¨¦ Sn©õS®. ö\¸©À }[S®. Á°ØÖ¦Ê }[S®. ©õº¦\Î, `ø» Sn©õS®.
xÍ]°ß ©¸zxÁ £¯ßPÒ:
xÍ]°ß Cø» _Áõ\¨ £õøu°À EÒÍ öuõØÖ ÷|õ´ Q¸ªPøÍ AÈUQÓx.
A»ºâ°ÚõÀ Á¸® JÆÁõø©ø¯ }USQÓx.
~øµ±µø»¨ £»¨£kzxQÓx.
µzuzvÀ EÒÍ \ºUPøµ AÍøÁ Pmk¨£õmiÀ øÁUP EuÄQÓx.
Á°ØÖ Á¼ø¯ ÷£õUSQÓx. AvS¸v AÊzu® SøÓ¯ EuÄQÓx. C¸©À, Bìx©õ E£õøuUS wºÁõP C¸UQÓx. ©ÚAÊzu®, AÀ\º, ÷uõÀ ÷|õ´PÒ, •P® ö£õ¼ÂǨ¦ CøÁPÒ }[P EuÄQÓx.
_µzøu ÷£õUS® Aئu ‰¼øP xÍ].
£¯ß£kzx® •øÓ:
xÍ] \õÖ, Cg] \õÖ \© AÍÄ Gkzx, AuÝhß ªÍS xõÒ J¸ ]miøP ÷\ºzx ÷uÛÀ A¸¢u ‰UPøh¨¦, x®©À, ö|g_ \Î Sn©õS®.
Bìx©õ Sn©øh¯ vÚ•® xÍ] \õÖ 15 ªÀ¼, J¸ ÷uUPµsi ÷uÝhß A¸¢u _Áõ\¨ £õøu°À EÒÍ Aøh¨¦PøÍ }UQ _Áõ\® |ßS HØ£h EuÄ®. xÍ] Âøuø¯ £ÄhµõUQ £õ¼À A¸¢u EhÀ Eµ©øh²®. £õ®¦ Pi, ÷uÒ PiUS xÍ] \õÖhß ÷Á¨£® Cø» \õÖ, ªÍS ÷\ºzx A¸¢v, PiÁõ°À §\ |g_ •ÔÄ HØ£k®.
xÍ], _US, £øÚ öÁÀ»®, £õÀ ÷\ºzx u¯õ›UP¨£k® jø¯ A¸¢u ÷\õºÄ }[S®, ‰øÍø¯ _Ö_Ö¨£õUS®. xÍ] ÷Áøµ ö£õizx ö|´÷¯õk P»¢x A¸¢u Bsø© AvP›US®.
©Ú÷\õºÄ }[P vÚ•® Põø»°À 15 xÍ] Cø», 3 £õuõ® £¸¨¦hß ÷\ºzx A¸¢u ©Ú÷\õºÄ }[Q EhÀ,EÒÍ® £»©øh²®. B Ì¢u EÓUP® HØ£k®. xÍ]ø¯ £õ¼mk Põ´a] Esn P£® }[S®.
xÍ] Cø»ø¯ }º ÷\ºzx Põ´a] B ¤iUP _µ® }[S®. Âøuø¯ }›À Aøµzx Esn Szv¸©À, ö£sPÐUS HØ£k® öÁÒøÍ ÷|õø¯ ÷£õUS®. öPõ_UPÒ JÈUP xÍ] ¦øP ]Ó¢ux
xÍ] Cø» Påõ¯® ©÷»›¯õÄUS ]Ó¢ux.
& öuõS¨¦: ÷uÁµõáß
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
26 . ¤zuzøu ÷£õUS® ö|À¼UPõ´!

ö|À¼UPÛ GßÓx÷© ©ßÚº Av¯©õß, AÆøÁ¯õº |m¤ß ö£¸ø© |® {øÚÄUS Á¢xÂk®. AÆøÁ¯õº }kÈ ÁõÇ ÷Ásk® ößÖ Bø\¨£mh ©ßÚº Av¯©õß AÆøÁ¯õ¸US £›\õP ö|À¼UPÛø¯U öPõkzuõº. Cuß ‰»÷© B÷µõUQ¯zxhß }sh Põ»® ÁõÇ ö|À¼UPÛ EuÄ® Gߣx®,ö|À¼UPÛ EÒÍzxUS ©mk©À»; Eh¾US® B÷µõUQ¯©õÚx GßÖ® ¦›²®. J¸ B¨¤ÎÀ C¸US® \zx J¸ ö|À¼UPÛ°À C¸UQÓx GßÖ TÖÁõºPÒ ©¸zxÁºPÒ.
ö|À¼UPÛ°ß uõ¯P® C¢v¯õ GßÓ÷£õv¾®, Cx ^Úõ ©ØÖ® öußQÇUS B]¯ |õkPÎÀ ÁͺUP¨£kQÓx.
ö|À¼UPÛUS B©»P®, B®£À, ªÖx£»õ, uõzuõ›, A©»õ GßÓ ]Ó¨¦ ö£¯ºPЮ Esk.
©¸zxÁ £¯ß£õkøh¯ £õP[PÒ:
Cø», §, £møh, ÷Áº, Põ´, Âøu GÀ»õ® JÆöÁõ¸ ©¸zxÁ Sn® öPõshøÁ¯õS®.
Cuß ¦Î¨¦, xÁº¨¦, CÛ¨¦ _øÁ £» Âu[PÎÀ Eh¾US B÷µõUQ¯zøuU öPõkUQÓx.
Cø», £møh, £Ç® xÁº¨¦ _øÁU öPõshøÁ.
§: Sκa] EshõUQ, ©»ªÍUQ.
ö|À¼UPÛ°À EÒÍ ÷Áv¨ö£õ¸mPÒ:
£õ¼¨¤ÚõÀ, ÷hÛßPÒ, ¤÷ÍÁÚõ´kPÒ, B¯õS® ©ØÖ® B¯õPõu Gsøn \zxUPÒ, P÷µõiß, {÷PõiÛU Aª»®, ›÷£õ¤÷ÍÂß, i& SÐU÷Põì, ö£Uiß BQ¯øÁ Ah[Q°¸UQßÓÚ.
ö|À¼UPÛ¯õÀ Sn©õS® ÷|õ´PÒ:
¤zu®, ¥Û\®, Áõ´}ºPµ¨¦, Áõ¢v, ©¯UP® •u¼¯Ú w¸®. ÷©¾® ö|À¼UPÛ°À EÒÍ CÛ¨¦ _øÁ¯õÀ ¤zu® }[S®. ¦Î¨¦ _øÁ¯õÀ Áõu® }[S®, xÁº¨¦ _øÁ¯õÀ P£® Sn©õS®. Cx©mk©À»õ©À ÷©P ÷|õ´PÍõÚ ©x÷©P®, \ºUPøµ ÷|õ´ Sn©õS®.
ö|À¼UPÛ ÷Áº: ö|À¼©µ ÷Áº Áõ¢v, _øÁ°ßø©ø¯ }US®.
ö|À¼ •ÒÎ: E»º¢u ö|À¼UPõ´US ö|À¼ •ÒÎ GßÖ ö£¯º. CuÚõÀ EhÀ `k, ¤zu Áõ¢v Sn©õS®.
Gߦ¸UQ, Cøͨ¦ ÷|õ´, ¢x |èh® Sn©õS®.
©¸zxÁ £¯ßPÒ:
* µzuzvÀ EÒÍ AvP \ºUPøµ AÍøÁU SøÓUS®.
*öPõʨø£ SøÓUS®
*PÀ½µø» FUSÂzx £»¨£kzx®.
* ö\›©õÚ \Uvø¯ AvP¨£kzv £]ø¯ xõsk®
*µzuzvÀ EÒÍ ]Á¨£qUPÒ, öÁÒøͯqUPÒ GsoUøPø¯ AvP¨£kzx®
*©»a]UPø» ÷£õUS®
*Sκa]ø¯z u¸®
*‰øÍø¯ £»¨£kzv AÔøÁ ö£¸US®
*C¸©À, \Î, Bìx©õøÁ Sn¨£kzx®
*Cu¯zxUS Cu©õÚx
*uø»•i Áͺa]ø¯ AvP›US®
*÷uõÀ ÁÓm]ø¯ }US®
*¦ØÖ÷|õ´ Áµõ©À ukUS®
* £ØPÒ, G¾®¦PøÍ £»¨£kzx®
*_µzøu ÷£õUS®
£¯ß£kzx® •øÓ:
Ps£õºøÁ AvP›UP: vÚ•® Põø»°À J¸ ö|À¼UPÛø¯ Esk, CµÄ ö|À¼UPõ´ £Ähº J¸ ÷uUPµsi Esn Ps£õºøÁ AvP›US®.
Ps G›a\À }[P: ö|À¼UPÛø¯ £aø\¯õP Aøµzx uø»°À ÷u´zx, FÓøÁzx ¤ß uø» SÎUP Ps G›a\À, uø»£õµ® }[S®.
Aãµn® }[P: 2 ì§ß ö|À¼a \õØÔÀ 30 ªÀ¼ ^µP uspº ÷\ºzx 10 |õmPÒ £¸P Aãµn® }[Q, £] AvP©õS®.
C¸©À, \Î }[P: ö|À¼a\õØÔÀ ÷uß ÷\ºzx 2 ÷ÁøÍ A¸¢u P£® w¸®.
EhÀÁÓm] }[P: j°À ö|À¼UPÛ J¸ xsk Cg] ÷\ºzx öPõvUP øÁzx \ºUPøµ, £õÀ ÷\ºzx vÚ•® J¸ ÷ÁøÍ A¸¢u EhÀÁÓm] }[S®.
‰»® }[P: ö|À¼ ÁØÓÀ, _søh ÁØÓÀ E»ºzv ö£õi ö\´x vÚ•® EÓ[S •ß 2 ì§ß öÁ¢}›À A¸¢u ‰»®, ©»a]UPÀ Sn©õS®.
µzu _zvUS: vÚ•® £aø\ ö|À¼UPõ´ \õØøÓ 15 ªÀ¼ 100 ªÀ¼ £õ¼À J¸ ©õu® £¸P µzu® _zv¯õS®.
©õuÂhõ´ Á°ØÖ Á¼ Sn©õP: ö|À¼UPõø¯ ÷ÁPøÁzx Aøµzx AuÝhß ÷uß ÷\ºzx £¸P Á°ØÖ Á¼ }[S®.
\ºUPøµ ÷|õ´ Sn©õP: ö|À¼UPõ´ ÁØÓø» öÁ¢u¯® ÷\ºzx vÚ•® 2 ì§ß öÁÖ® Á°ØÔÀ Esn Pøn¯® £»¨£k®. \ºUPøµ AÍÄ SøÓ²®.
÷©¾®, ö|À¼UPõø¯ xøÁ¯»õP Esn ©¯UP® w¸®. ö|À¼ Cø»öPõÊ¢øu Aøµzx ÷©õ›À £¸P, PÈa\À }[S®. ö|À¼ ÁØÓø» Si}º ö\´x, \ºUPøµ, £õÀ ÷\ºzx \õ¨¤h Áõ¢v,¤Ó¨¦Ö¨¦ s, `k w¸®.
ö|À¼a\õØøÓ £õ¾hÝ® ÷uÝhÝ® P»¢x £¸P EhÀ Gøh AvP›US®.
& öuõS¨¦: ÷uÁµõáß
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

27 . öuõÊ÷|õø¯ Sn¨£kzx® ÁÀ»õøµ!

ÁÀ»õøµ RøµUS "÷¯õ\øÚ ÁÀ¼' GßÓ ]Ó¨¦ ö£¯¸® Esk. Cx |®|õmiÀ }º{ø»Pξ®, ÷uõmh[Pξ® AvP® Põn¨£k®. Cx §sk ÁøPø¯ ÷\º¢ux.
Cuß Cø» ÁiÁ©õÚx ‰øÍ, Cu¯®, ]Ö}µPzvß ÁiøÁ Jzx Põn¨£k®. Cuß Aø©¨¤¼¸¢÷u Cuß ©¸zxÁ¨£¯øÚ AÔ¯»õ®. ‰øÍ ÁiÂÀ C¸¨£uõÀ {øÚÁõØÓÀ, AÔøÁ ö£¸US®. Cu¯ ÁiÂÀ C¸¨£uõÀ Cu¯zøu £»¨£kzv µzu AÊzuzøuU SøÓUS®. ]Ö}µP ÁiÂÀ C¸¨£uõÀ AvP ³›¯õ, £õì÷£m E¨¦PøÍ öÁÎ÷¯ØÔ ]Ö}µP £õv¨ø£ ukUS®.

ö£õxÁõÚ ©¸zxÁ Sn®:
Áõ´¨¦s, PÈa\À, µzuPÈa\À, Á°ØÖUPk¨¦ •u¼¯ÚÁØøÓ Sn©õUS® \Uvø¯U öPõsi¸¨£x ÁÀ»õøµ°ß A®\©õS®.

©¸zxÁ £¯ß Eøh¯ £SvPÒ:
Cø», usk, ÂøuPÒ AøÚzx® ©¸zxÁ £¯ß Eøh¯x.

ö\´øP:
EhÀ÷uØÔ, EhÀ Eµ©õUQ, ]Ö}º ö£¸UQ, öÁ¨£•shõUQ, |µ®¦µ©õUQ

©¸zxÁ £¯ßPÒ:
‰øÍ ©ØÖ® |µ®¦ ©sh»®:
‰øÍ°ß ö\¯ÀvÓøÚ AvP›zx, |µ®¦PøÍ xõsi {øÚÁõØÓÀ, BÐø©zvÓøÚ AvP›UQÓx. ÷©¾® öhßåß, ©Ú EøÍa\À, xõUPªßø© BQ¯ÁØøÓ ukzx ¦zxnºa]ø¯ u¸QÓx.
Cu¯® ©ØÖ® µzu Kmh®:
µzu AqUPÎß EØ£zvø¯ AvP›zx Cu¯zøu £»¨£kzx®. Cu¯ £h¨£k¨¦, AvP µzu AÊzu® ©ØÖ® öPõ»ìiµõø» ÷£õUS®.
Á°Ö ©ØÖ® PÀ½µÀ:
£]ø¯zxõsi PÀ½µø» x›u¨£kzv ^µnzøu AvP›US®.
÷uõÀ, |P® •i:
Cx ÷uõÀPÎÀ EÒÍ PÈøÁ APØÔ, ÷uõø» £»¨£kzxQÓx. Cøu öuõhº¢x Esn Pµ¨£õß, PõÍõg\P¨£øh Áµõ©À ukUP»õ®. Á¯x •vºa] Aøh¯õuÁõÖ ukUQÓx. |P® ©ØÖ® •i Áͺa]ø¯ AvP¨£kzx®.
Põ¯PØ£®:
Cx J¸ Põ¯PØ£®. Cx Ehø» B÷µõUQ¯©õP øÁzx, |øµ,vøµ,¤o,‰¨¦ CßÔ }shPõ»® ÁõÇaö\´QÓx.

£¯ß£kzx® •øÓPÒ:
*_µ® }[P ÁÀ»õøµ Cø», xÎ] Cø», ªÍS \©AÍÄ Gkzx Aøµzx, ªÍS AÍÄ E¸mi Põø»,©õø» Esn GÀ»õ ÁøP¯õÚ _µ®, Bìx©õ Sn©õS®.
* Á°ØÖ ÷|õ´, |µ®¦ ÷|õ´ }[P ÁÀ»õøµ Cø»a \õÖ, £_ÂߣõÀ, Av©xµzxõÒ ÷\ºzx öPõkUP £»ßQøhUS®.
*÷PõøhUPõ»zvÀ EshõS® ¯ºUS¸,öPõ¨¦Í® wµ ÁÀ»õøµ Cø»²hß, P¸g^µP®, ÷u[Põ´ Gsøn ÷\ºzx §\ öPõ¨¦Í® ©øÓ²®.
* bõ£P \Uvø¯ AvP›UP ÁÀ»õøµ Cø»ø¯ {ǼÀ E»ºzv, ö£õizx 300 ªÀ¼ £_®£õ¼À P»¢x öPõkUP ©Ú SǨ£®, öhßåß SøÓ¢x |À» EÓUP® QøhUS®. |À» {øÚÁõØÓÀ Á¸®.
* Pµ¨£õß, PõÍõg\P£øh, ©x÷©P ¦s, £kUøP ¦s, Ai¨£mh ¦s Sn©õP ÁÀ»õøµ Cø»ø¯ Aøµzx, AuÝhß ©g\Ò ÷\ºzx, |Àö»søn²hß uhÁ»õ®. Cx öuõÊ÷|õ´US |À ©¸¢x.
*¦ØÖ÷|õ´ Áµõ©À ukUP ÁÀ»õøµ Røµø¯ Áõµ® 3 •øÓ EnÂÀ ö£õ›¯»õP, SÇ®£õP ÷\ºzx öPõÒÍ»õ®.
*BÓõu ¦sPÐUS ÁÀ»õøµ Cø» 5&6, ªÍS 5, §sk 1v› Gkzx GÀ»õ® ÷\ºzx Aøµzx Põø» ÷ÁøÍ ©mk® \õ¨¤mk, ÷©õ¸® ÷\õÖ©õP 20&40 |õmPÒEsk Áµ ¦sPÒ BÖ®.
*¯õøÚUPõÀ ÷|õ´US ÁÀ»õøµø¯ Aøµzx Pmi Áµ ¯õøÚUPõÀ, ÂøµÃUP®, Áõ²ÃUP®, Pmi ÃUP® Sn©õS®.
* SÇ¢øuPÐUS HØ£k® PÈa\¾US ÁÀ»õøµ Cø» 3&4 Gkzx, ^µP®, \ºUPøµ Tmi Aøµzx uµ ^uUPÈa\À, S¸v PÈa\À, Á°ØÖPk¨¦ w¸®.
* ÁÀ»õøµ Cø»²hß öÁ¢u¯® ÷\ºzx Si}›mk 1&2 \[S Áøµ SÇ¢øuPÐUS¨ ¦Pmh _µ®, Á°ØÖ ÷PõÍõÖPÒ ÷£õS®.
*ÁÀ»õøµ Cø»²hß ÷Á¨£ Cø», ©g\Ò, xÍ] ÷\ºzx ö£õizx 1•uÀ 2 ì§ß ÷uÛÀ P»¢x 2 ÷ÁøÍ 1 ©õu® \õ¨¤mk Áµ öuõÊ ÷|õ´, ÷uõÀ ÷|õ´PÒ Sn©õS®.
* SÇ¢øuPÐUS EshõS® £øhUS ÁÀ»õøµa \õÖ, £_ÂߣõÀ, Av©xµzxõÒ ÷\ºzx P»¢x öPõkzx Áµ £øhPÒ, S¸vU÷Pk, |µ®¦ ÷|õ´PÒ Sn©õS®. ÷©¾® Cx •vº¢u Á¯xøh÷¯õ¸US EshõS® ÷©P®, _µzøu²® Sn¨£kzx®.
& öuõS¨¦: ÷uÁµõáß
=&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&



28 . ÷Pß\º, íõºm AmhõUøP uºUP
§sk \õ¨¤k[P!

CßÖ ÷©ØPzv¯ |õPŸP® uø»Â›zuõk® {ø»°À |õ® AÁºPÒ EnÄ ÁøPPøÍa \õ¨¤mk Á¸Q÷Óõ®. x›u EnÄ, A¯À EnÄ, öµi÷©k EnÄPøÍ \õ¨¤kÁx Gߣx ö£¸®£õ÷»õºUS £ÇUP©õQÂmhx. CzuøP¯ EnøÁ \õ¨¤kÁuõÀ GvºPõ»zvÀ ÷Pß\º, ©õµøh¨¦ HØ£h Áõ´¨¦ÒÍx. Bu»õÀ, Sk®£zuø»ÂPÒ vÚ•® ÃmiÀ \ø©¯¼À §søh ÷\ºzx E[PÒ Sk®£zøu PõzxU öPõÒÐ[PÒ.
öÁ[Põ¯zøuU Põmi¾® öPõg\® Põµzußø© AvP® öPõshx §sk. uªÌ |õmiÀ }»Q› §skUS ö£¯º ö£ØÓ Ch®. B[Q»zvÀ Põº¼U GßÖ®, \©ìQ¸uzvÀ ö»_Úõ, î¢v°À »åß GßÖ® uªÈÀ EÒÎ, §sk, öÁÒøͨ§sk, öÁÒÍ öÁ[Põ¯®, Põ¯® GÚ CuØS £» ö£¯ºPÒ Esk.
Bµ®£ Põ»zvÀ §sk ©zv¯ B]¯õÂÀ £°›h¨ £mhx. CßÖ E»öP[S® £°›h¨£kQÓx. C¢v¯õ ©mk©À»; E»öP[S® §sk \ø©¯¾US®, ©¸zxÁzvØS® E£÷¯õP¨£mk Á¸QÓx.
§sk QÇ[S ÁøP CÚzøua ÷\º¢u uõÁµ ÁøP. Cx £» £¸Á SÖgö\i¯õS®. Cuß uøµURÌ usk ]ªÌ J¸ «mhº }Í® Á͵UTi¯x. C¢u £_ø©¯õÚz usk E¸øÍ ÁiÂÀ C¸US®. ©»ºPÒ öÁÒøͯõP Søh÷£õ» C¸US®.
uøµ¯iz ushõÚ ]ªÊ®, §Ä® ©¸zxÁ¨ £s¦PÒ öPõsi¸UQßÓÚ.
§siß E»º¢u ÷Áº¨£Sv°À(100 Qµõ®) 360 P÷»õ›, ¦÷µõmjß 13.5, öPõʨ¦ 0.7, íõº÷£õøím÷µm 82 Qµõ®, ø££º 3 Qµõ®, Bì 3.5 Qµõ® Ah[Q EÒÍÚ.
÷©¾® uõx E¨¦UPÍõÚ PõÀ]¯® 65 ª.Q., £õ죵ì 400ª.Q., A¯ß 4.3 ª.Q., ö©UÛ毮 0 ª.Q., ÷\õi¯® 53 ª.Q., ö£õmhõ]¯® 1250ª.Q. Ah[Q EÒÍÚ.
E°º\zxUPÒ (ÂmhªßPÒ) øu¯õªß(¤1) 0.7 ª.Q., ›÷£õ¤øÍÂß (¤2) 0.2 Q., {¯õ]ß 1.25ª. Q., Âmhªß ] 35 ª.Q. EÒÍÚ. ÷©¾® §siÀ P¢uP \zx, Âmhªß6, ©[PÜ_, ö\¼Û¯® BQ¯ \zxPÒ AvP AÍÄ C¸UQÓx.

§siß ©¸zxÁ ö\¯À:
APmkÁõ¯PØÔ: AuõÁx APk GßÓøÇUP¨£k® Á°ØÔÀ EÒÍ Áõ²øÁ APØÔ, Á°ØÖ E¨¤\®, Áõ²÷PõÍõÖPøÍ }US®.
÷PõøǯPØÔ: ~øµ±µ¼À EÒÍ \Îø¯ öÁΨ£kzx®. µzuzvÀ C¸US® öPõʨø£ SøÓUS®. ¦ØÖ÷|õø¯ GvºUS® £s¦® Esk. ¦ÊUöPõÀ¼. ÷|õ´ ~sq°ºPøÍ AÈUS® BØÓÀ Esk.

©¸zxÁ £¯ßPÒ:

§siÀ EÒÍ P¢uP \zx §siØS ©nzøuU öPõkUQÓx. C¢u \zxuõß ÷|õ´ Gvº¨¦ \Uvø¯ öPõkUQÓx. Bu»õÀ uõß ~sq°º Gvº¨¦ ©¸¢xPÒ u¯õ›UP §sk £¯ß£kQÓx. øh£õ´k, i.¤.÷|õ´ BQ¯ÁØøÓ Sn¨£kzuÄ®, •uÀ E»P¨ ÷£õºUPõ»zvÀ Põ¯[PÐUS Pmk¨÷£õhÄ® £¯ß£mhx.

Cu¯ ÷|õ´PÒ:

§søh AvP AÍÂÀ EnÂÀ ÷\ºzxU öPõÒ£ÁºPÐUS AvP µzu AÊzu®, µzuzvÀ AvP AÍÂÀ öPõʨ¦ ÷\¸ÁvÀø»! öuõhº¢x §søh \õ¨¤mk Áµ, ø|m›U BUø\k EØ£zvø¯z xõskÁuõÀ µzuUSÇõ´PÒ _¸[SÁvÀø». CußPõµn©õP µzuUSÇõ´ Aøh¨¦ uºUP¨£kQÓx. \ºUPøµ ÷|õ¯õÎPÐUS HØ£k® Cu¯÷|õ´, £UPÁõu® uºUP¨£kQÓx. §siÀ EÒÍ P¢uPUTmk¨ö£õ¸Ðhß Âmhªß ], Âmhªß 6, ö\¼Û¯®, ©[PÛ]¯® C¸¨£uõÀ öPõ»ìmµõÀ Pmk¨£kzu¨£kQÓx. Cu¯ ÷|õ´, ¦ØÖ ÷|õ´US GvµõPÄ® ö\¯À£kQÓx.
¦Â°¯À ÁÀ¾|ºPÒ B´Ä¨£i Czuõ¼ ©ØÖ® ìö£°ß |õmiÚº EnÂÀ §søh AvP® £¯ß£kzxÁuõÀ µzuUSÇõ´ _¸[SuÀ ÷£õßÓ ÷|õ´PÍõÀ AÁv¨£kÁvÀø» GßÖ öu›¯Á¸QÓx. ìi÷µõU Á¸ÁuØS •uÀPõµn® µzuzvÀ öPõʨ¦ \zx AvP©õQ µzuUSÇõ°À £iÁuõÀ µzuUSÇõ´ _Áº ui©ÚõQ ÂkÁxuõß. Aøu §sk \›ö\´QÓx.

\ºUPøµ ÷|õ¯õÎUS |s£ß §sk:
§sk \ºUPøµ ÷|õ¯õÎPÐUS Áµ¨¤µ\õu©õS®. CÁºPÒ §søh AvP® ÷\ºzxUöPõshõÀ, µzu \ºUPøµ AÍÄ SøÓÁxhß íõºm AmhõUQ¼¸¢x u[PøÍ £õxPõzxUöPõÒÍ»õ®. §sk µzu Kmhzøu AvP›UPa ö\´x \ºUPøµ ÷|õ¯õÎPÐUS HØ£k® EÒÍ[PõÀ, EÒÍ[ øP G›a\À, ©µzx ÷£õuÀ ÷£õßÓ E£õøuPøÍ Sn©õUSQÓx.

£¯ß£kzx® •øÓPÒ:

*µzuzvÀ EÒÍ AvP öPõʨ¦a\zx SøÓ¯, µzuUSÇõ´ Aøh¨¦ SøÓ¯ vÚ•® 20ª. £õ¼À + 30ª.}º+10 §sk £ØPÒ ÷\ºzx ÷ÁPøÁzx vÚ•® öÁÖ® Á°ØÔÀ SizxÁµ»õ®.
*Aãµn®, Áõ²öuõ¢uµÄ }[P öÁÒøͨ§skv›, ªÍS, ^µP®, PÔ÷Á¨¤ø», ]Ôx E¨¦ ÷\ºzx xøÁ¯»õP Áõµ® C¸ •øÓ Esn»õ®.
* §sk\õØøÓ öuõhº¢x 3 ©õu® Áõµ® C¸ •øÓ Ãu® SÇ¢øu •uÀ ö£›÷¯õº Áøµ Esn øÁµì ÷£õßÓ Q¸ªPÍõÀ HØ£k® ~øÓ±µÀ ÷|õ´PÍõÚ Bìx©õ, Põ\÷|õ´US Ax ]Ó¢u uk¨¦ ©¸¢uõP Aø©²®.
* Á°ØÖ Á¼, AÀ\º ÷|õ´PÐUS §sk µ\®, §sk \mÛ, §sk SÇ®ø£ vÚ•® JßÖ Ãu® \õ¨¤h»õ®.
* ‰mkPÎÀ HØ£k® Á¼, |µ®¦ Á¼, •PÁõu®, £UPÁõu®, SÇ¢øuPÐUS HØ£h® Á¼¨¦, uø»Á¼ •u¼¯ E£õøuPÐUS §sk ]Ó¢u ©¸¢x. ‰mk Á¼US Põµn©õÚ Gßø\®PøÍ AÈUQÓx. GÚ÷Á Áõu ÷|õ´PÐUS §søh vÚ•® EnÂÀ ÷\ºzxUöPõÒÍ ÷Ásk®. ÷©¾® Á¼PÐUS §sk Aøµzx A¢u Ch[PÎÀ £ØÓõP ÷£õh»õ®.
* §sk \õØøÓ 1&2 xÎ PõvÀ¤È¯ ö\Âk SøÓ }[S®.
*öuõsøh°À Á͸® \øuUS §sk \õØøÓ xÍ]\õØÖhß ÷\ºzx J¸ ©õu® öuõhº¢x §\ EÒ|õUS ÁͺÁx }[S®.
*§sk\õØøÓ 20&30 xÎ Ãu® vÚ® C¸•øÓ Esn C¸©À, Cøµ¨¦ Sn©õS®.
* PkS AÀ»x ÷u[Põ´ Gsøn²hß §sk ÷\ºzx Põ´a] §]ÚõÀ Søha\À, EhÀÁ¼, |µ®¦ Á¼, Áõu ÷|õ´PÒ w¸®.
* |õÒ£mh ¥Û\® ÷|õ°ÚõÀ uø»Á¼, x®©À C¸¨÷£õº §søh Aøµzx ö|ØÔ°À £ØÔh J¸ÁõµzvÀ uø»£õµ® }[Q Sn©õS®.
*§sk Aøµzx E¨¦hß ÷\ºzu uhÁ _ÐUS Sn©õS®.
*§skhß ªÍS, ^µP® ÷\ºzx xøÁ¯»õP Aøµzx Põø» EnÂØS SÇ¢øuPÐUS öPõkzuõÀ, Á°ØÔÀ EÒÍ ¦ÊUPÒ JȲ®.
*§søh Aøµzx AuÝhß £øÚöÁÀ»® ÷\ºzx Põø» EnÂÀ ÷\ºzxUöPõÒÍ Eh¼À µzu AqUPÒ ö£¸Q µzu ÷\õøP Sn©õS®.
* |õÒ£mh ¦s Sn©õP §skhß ©g\Ò, ÷Á¨¤ø» Aøµzx ÷£õmk Á¢uõÀ J¸ÁõµzvÀ ¦s BÖ®.
*EnÂÀ §søh G¢u ÁÈ°»õÁx vÚ•® 25Qµõ® \õ¨¤h ÷Ásk®. AÆÁõÖ Kµõsk Põ»® EshõÀ ¦ØÖ÷|õ´, ©õµøh¨¦ ÷|õ°¼¸¢x |®ø© PõzxUöPõÒÍ»õ®.
& öuõS¨¦: ÷uÁµõáß
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

29 . £õÀ _µ¨¦ AvP›US® P¼¯õn •¸[øP!

Qµõ©[PÎÀ CßÖ® ©¸zxÁ £¯ß£õmiØS £¯ß£k® ©µ® P¼¯õn •¸[øP. Cuß Cø» EnĨö£õ¸ÍõP¨ £¯ß£kQÓx.
P¼¯õn •¸[øP Á[PõÍzv¾®, C¢v¯õÂß £» Ch[PÎÀ ÷Á¼¯õPÄ®, ÷uõmh[PÎÀ £°›h¨£kQÓx. C¢v¯õÂß Cø»²vº PõkPξ®, A¢u©õß, Ph÷»õµ wÄPÎÀ C¯À£õP ÁͺQÓx. ö£õxÁõP A»[Põµ ©µ©õP ÁͺUP¨£kQÓx. ÷uõmh[PÎÀ öÁØÔø» öPõi, ªÍS öPõi, vµõmø\UöPõi £hº¢x ÁͺÁuØS £°›h¨£kQÓx.
P¼¯õn •¸[øPUS •Ò •¸US, Qg_P® GÚ ÷ÁÖ ö£¯ºPЮ Esk.
P¼¯õn •¸[øP°ß Cø», §, Âøu, £møh ©¸zxÁ¨£¯ß£õmiØS £¯ß£kzu¨£kQßÓÚ.
Cuß _øÁ: øP¨¦, Põº¨¦. ußø©: öÁ¨£®.
ö£õx Sn®: ¤zu©PØÔ, ÷PõøǯPØÔ, öÁ¨£©PØÔ, ¦ÊUöPõÀ¼
]Ó¨¦ Sn®:
Cø»: ]Ö}º¨ö£¸UQ, ©»ªÍUQ, ¸xEshõUQ, £õÀ ö£¸UQ.

P¼¯õn•¸[øP°À EÒÍ µ\õ¯Ú[PÒ: Cø» ©ØÖ® ÂøuPÎÀ G›zµ¼ß, G›z›øÚß, G›÷\õ¨¤ß, G›¤iß, ö£¸¼U Aª»®, P¤°U Aª»®.
©¸zxÁ Sn®:
Cø»: P¼¯õn •¸[øP Cø» Áõ¢v, Á°ØÖ Á¼, ¤zu_µ®, AUPµ®, AÚÀ, Áõ´÷ÁUPõk CøÁPøÍ }UQ Eh¼ØS Áßø©ø¯ u¸®.
§: ö£sPÐUS P¸¨ø£°À Pmi¯ µzu Sß©zøu »US®.
£møh: Cx xÁº¨¦ _øÁ öPõsi¸US®. _µzøu ÷£õUS®, §a]PøÍ APØÖ®, £õ®¦PiUS ©¸¢uõS®, DµÀ ÷|õ´PÐUS®, Ps ÷|õ´PÐUS® ©¸¢uõP £¯ß£k®.
£¯ß£kzx® •øÓPÒ:
Á°ØÖ ¦ÊÄUS:
Cø»\õÖ 1 jì§ß Gkzx J¸ ÷©ø\Pµsi ÂÍUöPsøn´ ÷\ºzx Põø» ©mk® 3 |õÒ \õ¨¤h ÷£v¯õS®. Á°ØÖ ¦ÊUPÒ öÁΨ£k®. Áõuzøu SøÓUS®.
£õÀ _µUP:
Cø»ø¯ ÷u[Põ´ Gsøn°À \ø©zx ¦]zuõÀ ¤Òøͨ ö£ØÓ uõ´©õºPÐUS £õÀ _µ¨¦ AvP©õS®.
}º G›a\À wµ:
Cø» \õÖ 1&2 jì§ß Áøµ Põø» ©õø» 2 ÷ÁøÍ A¸¢u ]Ö}º G›a\À, ]Ö}º öÁίõS® uøh »S®.
EhÀ £¸©ß SøÓ¯:
P¼¯õn •¸[øP Cø»ø¯ öuõhº¢x 2&3 ©õu® Põø», ©õø» EmöPõÒÍ ©õuõ¢vµ `uPzv¾shõS® Á°ØÖÁ¼ø¯ ÷£õUQ, ªP £¸zu Ehø» CøÍUPa ö\´x, ©»mk ÷|õø¯²® }US®.
Sß© ÷|õ´US :
P¼¯õn •¸[øP¨ §øÁ Si}¸mk Sizuõ¾® AÀ»x P¸¨ø£US ÷|µõP AiÁ°ØÔÀ øÁzx PmiÚõÀ µzu Sß©zøu ÷£õUS®. Si }›mk öPõkUP Sß© ÷|õ´ ( Á°ØÖ Á¼) w¸®.
|õhõ¨ ¦ÊUS :
Âøu°ß ÷©À ÷uõÀ ÷|õUQ Põ¯ øÁzx, ö£õizx 65 ªÀ¼ Qµõ® & 130 ªÀ¼ Qµõ® CµÄ £kUS •ß \ºUPøµ ÷\ºzx \õ¨¤mk ©Ö|õÒ Põø» ÂÍUöPsøn´ \õ¨¤h ©»UQ¸ª, |õhõ¨¦Ê AȲ®.
}›ÈÄUS:
÷Áº £møhø¯ Si}›mk A¸¢u \ºUPøµ ÷|õ´ w¸®.
‰mk Á¼US:
Cø»ø¯ Aøh¯õP AÀ»x Røµ¯õP Esn»õ®. Cø»ø¯ ÂÍUöPsøn°À ÁuUQ JØÓhªh ‰mk Á¼ w¸®.
& öuõS¨¦: ÷uÁµõáß
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

31 . ©õºUPs÷h ©¸¢x PØÓõøÇ
S©›, PßÛ GßÖ ]zuºPÍõÀ AøÇUP¨£k® PØÓõøÇ C¢uU ÷PõøhUS EP¢u Ps Psh ©¸¢x.
C¢u PØÓõøÇ QÇUS ©ØÖ® ÷©ØS B¨¤›UPõÂøÚa \õº¢ux. ö£õxÁõP öÁ¨£ ©sh»¨ £SvPÎÀ ÁͺQÓx. C¢v¯õÂÀ öußÛ¢v¯ PhØPøµ Kµ[PÎÀ C¯ØøP¯õP Põn¨£k®. ÷©¾®, BØÓ[Pøµ°¾®, \x¨¦ {»[Pξ®, ÷uõmh[Pξ® £°µõS®. Cx ]ÖPØÓõøÇ, ö£¸[PØÓõøÇ, ÷£´UPØÓõøÇ, P¸[PØÓõøÇ, ö\[PØÓõøÇ GÚ £»ÁøP¯õP C¸¢uõ¾® Cuß ö\´øP •u¼¯Ú \Ø÷ÓÓUSøÓ¯ Jz÷u°¸US®.
£¯ß£k® EÖ¨¦PÒ: £õÀ, ©hØ÷\õÖ, \õÖ, ÷Áº
_øÁ: P\¨¦, ußø© um£®.
ö\´øP: Eµ©õUQ, EhØ÷ÓØÔ, }º©»® ÷£õUQ, ¸x EshõUQ
PØÓõøÇ°À EÒÍ ÷Áv¨ö£õ¸mPÒ:
B¢z÷µõ S°÷ÚõßPÒ& B÷»õ¯ß, B÷»õ& G÷©õiß, öµ]ßPÒ, ÷hÛßPÒ, £õ¼\õUPøµkPÒ, B÷»õUiß ¤.
ö£õxSn®:
Cx J¸ Põ¯PØ£ ‰¼øP¯õS®. GßÖ® CÍø© ÷uõØÓzøu AuõÁx •xø©ø¯ ukzx Ehø» £»¨£kzx® ]Ó¨¦ Sn® PØÓõøÇUS C¸¨£uõÀuõß Cøu "PßÛ' "S©›' GßÖ AøÇUQßÓÚº.
PØÓõøÇø¯ E»ºzv •øÓ¨£i ö£õi ö\´x Esq® ö£õÊx |øµ, vøµ, ‰¨¦ CßÔ CÍø©¯õP Á¾Ähß ~õÓõsk ÁõÇ»õ®.
PØÓõøǯõÀ Áõu÷©P® w¸®, Q¸ª SzuÀ ÷£õS®, P¸÷©P® w¸®, ö£¸Â¯õv, ‰»® w¸®, Sß©® w¸®, ¤zuUQ›a\µ® ÷£õS®.
÷£´UPØÓõøÇ: ªS}øµ ÷£õUS®, EhÀ G›a\ø» Sn¨£kzx®, _µzøu ÷£õUS®.
ö\[PØÓõøÇ: EÒ `møh uoUS®, uõ´US {PµõP Ehø» £õxPõUS®.
©¸zxÁ £¯ßPÒ:
* Cø»°À Põn¨£k® ÷\õÖ(öáÀ) Põ¯[PøÍ Sn¨£kzx®
* ¤zu }º _µ¨¤øÚ FUSÂUS®
* ©»zøu CÍUS®
*ÃUP[PøÍ PøµUS®
*Á°ØÖ¨¦søn BØÖ®
*ö£sPÐUS Põq® öÁÒøÍ£kuø» Sn©õUS®
* EhÀ`møh uoUS®
* w¨¦sPÒ, |õm£mh Põ¯[PÒ BQ¯ÁØÔß «x J¸ £h»®÷£õ» £i¢v¸¢x £õxPõUQÓx. ¦s BÖÁøu x›u¨£kzx®.
*öáÀ¼À Põn¨£k® B÷»õUiß ¤ GÝ® ö£õ¸Ò ÷|õ´ Gvº¨¦ \Uv°øÚz xõsi ö\¯À£kÁuõP B´ÄPÒ öu›ÂUQßÓÚ.
*÷uõ¼øÚ £õxPõzx SÔ¨£õP •PzvøÚ AÇS¨£kzx®.
*÷©ø» |õkPÎÀ 1950US¨ ¤Ó÷P AvP® £¯ß£kzu¨£mkÁ¸QÓx. £õv¨ø£ Esk £sq® Pvº Ãa_¨ ¦sPøÍ BØÖ® \Uv PØÓõøÇUS Esk.
* w¨¦s, ]µõ´¨¦ ¦sPÒ `›¯ J롧 uõUP® BQ¯ÁØÖUS •u¾u¯õP £¯ß£kQÓx. Cø»°øÚ EøhzuõÀ öÁÎ÷¯Ö® öáÀ¼øÚ ¦sPÎß «x uhÁ ÷Ásk®. ÷uõÀ CÖUPzvØS _P©ÎUS® ©¸¢uõS®.
* Cø»°ß Ai¨£Sv°¼¸¢x QøhUS® ©g\Ò Ásna\õÖ ÷\P›UP¨£mk E»ºzu¨£kQÓx. CuøÚ "B÷»õ P\¨¦' GÚ ©¸¢uõP £¯ß£kzxÁº. CvÀ B¢z÷µõS°÷ÚõßPÒ C¸¨£uõÀ ©»ªÍUQ¯õP ö\¯À£kQÓx. ö£¸[Shø» _¸[P øÁzx ©»® öÁÎ÷¯Ó EuÄQÓx.
* C¢v¯ ©¸zxÁzvÀ ÷£v ©¸¢uõPÄ®, ©õuÂhõ´ _ÇØ]ø¯ JÊ[S £kzx® ©¸¢uõPÄ® £¯ß£kzu¨£kQÓx.
* Cø»°ß ÷\õÖ uø»•iUS P¸¨¤hÄ® (øh) uø»•i Áͺa]US £¯ß£kQÓx.
* Cø»²hß öÁÀ»¨£õS P»¢x ‰»÷|õ´US £¯ß£kzu¨£kQÓx.
*}›À Pʯ ÷\õÖ ]Ôx _h¨£mh £iPõµzxhß ÷\ºzx Á¼¨¦ ÷|õ¯õÎUS ©¸¢uõPU öPõkUP¨£kQÓx.
* PØÓõø» \õÖhß £ßܺ P»¢x Ps÷|õ´US uhÁ»õ®.
£¯ß£kzx® •øÓPÒ:
*CÍ©h¾hß ^µP®, PØPsk ÷\ºzx Aøµzx Esn S¸v PÈa\À, ^uUPÈa\À Sn©õS®.
*CÍ©h¾hß ©g\Ò ÷\ºzx Aøµzx uµ Bµ®£ ¤½P Áͺa] Sn©õS®.
*PØÓõøÇ ÷\õØøÓ öÁÖ® Á°ØÔÀ Esn EhÀ `k uo²®
*PØÓõøÇ ÷\õØÖhß öÁ¢u¯® ÷\ºzx A¸¢u ö£sPÐUS Põq® öÁÒøÍ ÷|õ´, ©õuÂhõ´ JÊ[Qßø©ø¯ Sn©õUS®
*÷\õØøÓ |Àö»søn°À Põ´a] uø»°À uhÁ Ps G›a\À }[S®. |À» xõUP® EshõS®. uø»•i |ßS Á͸®.
* ÷uõÀ ÁÓm] }[P, •P® £Í£ÍUP, ÷uõÀ _¸UP® }[P Cuß ÷\õØøÓ Áõµ® 2 •øÓ •PzvÀ uh Sκ¢u }›À PÊÁ •P® ö£õ¼Áøh²®.
Eh¾US B÷µõUQ¯zøu²®, GßÖ® CÍø©ø¯ u¸® PØÓõøÇø¯ ©õºUPs÷h¯ ©¸¢x Gß÷Ó ö\õÀ»»õ®. C¢u ÷Põøh°À PØÓõøÇø¯ AvP® £¯ß£kzvÚõÀ ÷uõÀ, •P® £õxPõUP»õ®. EhÀ `møh uoUP»õ®!
& öuõS¨¦: ÷uÁµõáß
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
32 .]Ö}µP® PõUS® |õÁÀ

|õÁÀ £Çzøu "PhÄÎß £Ç®' Gß÷Ó ö\õÀ»»õ®!
uªÌ C»UQ¯[Pξ®, ¦µõn[Pξ®, öu´Á ÁÈ£õmi¾® Ch® ö£Ö® £Ç® Cx!
ÁÚÁõ\® ö\ßÓ µõ©ß PõmiÀ |õÁÀ £Ç[PøÍ Â¸®¤ \õ¨¤mhuõP Põ¨¤¯zvÀ TÓ¨£kQÓx. Q¸ènÝUS® ¤izu £Ç® Cx! |õÁÀ £Çzøu ¸®¤ \õ¨¤mhuõÀuõß Q¸ènß }» {ÓÁsnÚõP C¸UQÓõß GßÖ TÖÁõ¸® Esk.
AÆøÁ°h® •¸Pß, "_mh¨£Ç® ÷Áq©õ? _hõu £Ç® ÷Áq©õ?' GßÖ ÷Pmhx®,
v¸ÁõøÚUPõÁÀ \º÷ÁìÁµß |õÁÀ ©µzui°À ÃØÔ¸¢x |®ø© GÀ»õ® CøÓ¯õm] ö\´x ÁÈ|hzxQÓõß GßÖ ¦µõn[PÒö\õÀQßÓÚ.
÷©¾®, Â|õ¯Pº \xºv, Q¸èn öᯢv CøÁPÎÀ CßÖ® |õÁÀ £Ç® •UQ¯ Ch® ö£ÖQÓx.

öuß B]¯õ ©ØÖ® Bìv÷µ¼¯õÂøÚa \õº¢ux |õÁÀ ©µ®. C¢v¯õ, B¨¤›UPõ ©ØÖ® C¢÷uõ÷Ú]¯õÂß öÁ¨£ ©sh»¨ £SvPÎÀ ÁͺQßÓÚ. CuÝøh¯ PÛPÐUS Áõo£ Ÿv¯õP ÁͺUP¨£kQÓx.
öÁÒøÍ |õÁÀ, öPõi |õÁÀ, SÈ |õÁÀ, P¸ |õÁÀ, \®£ |õÁÀ GÚ £»ÁøP EÒÍÚ.
|õÁ¼ß GÀ»õ EÖ¨¦PЮ E£÷¯õP¨£kQÓx.

ö£õx Sn®:
_øÁ & xÁº¨¦
ußø© & Sκa]
£Ç®: £]zxõsi, ]Ö}º¨ ö£¸UQ, Eh¾µ©õUQ, S¸v¨ ö£¸UQ
µ\õ¯Ú¨ ö£õ¸mPÒ: ¤ÚõÀPÒ, ÷hÛßPÒ, áõ®÷£õø\ß GßÝ® BÀP»õ´k, ³âÛ¯õ iøµöhº¤Úõ´kPÒ, ©õ¼U Aª¾®, ¤Ó B¯õS® Gsøn´PÒ.
©¸zxÁ Sn® :
£møh : Áõ°À ÷uõßÖ® ÷|õ´PÒ, C¸©À, DøÍ, SÇ¢øuPÐUS HØ£k® ÷|õ´PøÍz wºUS®.
÷Áº: Áõu ÷|õ´PÒ, Pµ¨£õß, ¦s, }›ÈÄ, S¸vUPÈa\À, _µ® CøÁ Sn©õUS®.
£Ç®: |õÁÀ £møh ö£õi²hß £iPõµ® C¢x¨¦ ÷\ºzx Esn ö£¸®£õk w¸®.
©¸zxÁ £¯ßPÒ:
*Cø»PÒ : Á°ØÖ ÷£õUQøÚ Pmk¨£kzx®
* PÛPÎß \õÖ ]µn \Uvø¯ xõsk®
* Á°ØÖ Á¼ w¸®
* ]Ö}º¨÷£õUQøÚ xõsk®
* Pøn¯® Ã[Q ÷|õ´ Á¸uø» ukUS®
* ÂøuPÒ }›ÈÄ ÷|õ°øÚ Sn¨£kzx®. µzuzvß \ºUPøµ AÍøÁ SøÓUS®.
* B²º÷ÁuzvÀ ©õ[Põ´ Âøu²hß ÷\ºzx ö£õi¯õUQ ^u ÷£v, Á°ØÖ ÷£õUS Sn¨£kzu £¯ß£kQÓx.
* ö£õiUP¨£mh Âøu vÚ•® öÁÖ® Á°ØÔÀ J¸ ÷uUPµsi Ãu® }›À Esn }›ÈÄ ÷|õ´, AvÀ HØ£k® AvP ]Ö}º ÷£õUøP ukUS®.
* |ÃÚ B´ÄPÒ |õÁÀ ÂøuPÒ S¸v°ß SÐ÷Põì AÍÂøÚ SøÓ¨£øu EÖv£kzv²ÒÍÚ.
*£møh P\õ¯® H»®, C»Á[P £møh²® ÷\ºzx Esn |õÒ£mh Á°ØÖ ÷£õUøP Pmk¨£kzx®
* öußQÇUS B]¯|õkPÎÀ |õÁÀ ÷Áº øP,PõÀ Á¼¨¦ ÷|õø¯ Sn¨£kzu £¯ß£kQÓx.
* ‰»zöuõ¢uµÄ EÒÍÁºPÒ ÁõÌ|õÒ •ÊÁx® A¢u öuõ¢uµÂÀ C¸¢x Âk£h |õÁÀ £Ç® EuÄQÓx.
* |õÁÀ £Ç® £» ÷|õ´PÐUS ©¸¢uõP EÒÍx. ¤zuzøuz uoUS®, ©»a]UPø»U Sn¨£kzx®, Cu¯zøu ^µõP C¯[Pa ö\´²®. µzu ÷\õøP ÷|õø¯U Sn¨£kzx®. ]Ö}µPzvÀ HØ£k® Á»øø¯²® {Áºzv ö\´²®. ]Ö}µP PÀ Pøµ¯ EuÄ®. öuõÊ÷|õ´, ©spµÀ ÷PõÍõÖPøÍ \› ö\´²®.
& öuõS¨¦: ÷uÁµõáß
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
33 . \Πµmk®Bhõ÷uõøh
Bhõ öuõøh ö\iÁøP uõÁµ®. Caö\i C¢v¯õ •ÊÁx® ö£õxÁõP Põn¨£k®. SÔ¨£õP öÁ¨£©sh» £SvPÎÀ AvP® EÒÍx.
Bhõ÷uõøh, Bhõöuõøh, Áõø\, Áõ\Põ, A¸\õ GÚ £» ö£¯ºPÎÀ AøÇUP¨£k® Cuß Cø» ©õ Cø», ~nõ°ø»PøÍ ÷£õ» ÷uõØÓzvÀ C¸US®. CßÖ® Qµõ©¨¦Ó[PÎÀ øPøÁzv¯zvÀ Bhõöuõøh £¯ß£õmiÀ EÒÍx.
£¯ß£k® EÖ¨¦: Cø», §, £møh, ÷Áº
_øÁ: øP¨¦
ußø©: öÁ¨£®
ö\´øP: C]ÁPØÔ
÷PõøǯPØÔ
~m¦ÊöPõÀ¼
]Ö}ºö£¸UQ
ö\¯ÀvÓß ÷Áv¨ö£õ¸mPÒ:
Bhõ öuõøh°ß GÀ»õ £õP[Pξ® Áõ]]ß Esk. ÷©¾®, AµõUQiUQU, ö£îÛU, ¼U÷Úõ ö\›U, ¼÷Úõ¼U ©ØÖ® J¼°U Aª»[PÒ ÂøuPÎÀ EÒÍÚ.
Áõ]]÷Úõß, ¤. ø\m÷hõìjµõÀ, ö£µõÀ, Bhõ÷uõøhß, AhõÁõ]÷Úõß, Áõ]U÷Põ¼÷Úõß •u¼¯Ú EÒÍÚ.
ö£õxSn®:
\Î, \Îöuõhº£õÚ ¤µaøÚPøÍ ÷£õUP®.
Áõuöuõhº£õÚ ÷|õ´PÒ, £Ø£» _µ®, •¨¤o w¸®
Á°ØÖ ÷|õ´, S¸v¯ÇÀ w¸®
C¸©À, ÷©¼øͨ¦ Sn©õS®
Áõ¢v, ÂUPÀ,`ø», Ash Áõ²øÁ ÷£õUS®
£õhUTi¯ |À» Sµö»õ¼ø¯z u¸®
÷Á›ß ©¸zxÁ Sn®:
C¸©ø» ÷£õUS®
©¢u®, ¤zu® w¸®
PiÚ‰a_, PÊzx Á¼ w¸®
©¸zxÁ £¯ß:
©õº¦a\Îø¯ ÷£õUSÁvÀ Cx ªPÄ® £¯ÝÒÍ ©¸¢uõS®.
PÛ, ©»º, Cø» :
§a]PøÍ APØÖ®
~sQ¸ªPøÍ APØÖ®
Á¼ APØÖ®
P£® öÁÎ÷¯ØÖ®
©¯UP ©¸¢uõP £¯ß£k®
wµõu ©õº¦\Î, C¸©À, ‰a_vnÓÀ, á»÷uõå®, PUSÁõß C¸©À BQ¯ÁØÔØS |À» ©¸¢x
©»º :
Ps]Qaø\, µzu Kmhzøu ^º ö\´uÀ BQ¯ÁØÔÀ £¯ÝÒÍuõP EÒÍx.
Cø»PÒ:
¦s, Põ¯®, ÃUP®, |µ®¦Á¼, PmiPÒ CøÁPÐUS Cø»PÎß ö£õi£ØÓõP £¯ß£kQÓx.
Ahº¢u Påõ¯® ]µ[SPÐUS uhÄ® ©¸¢uõP £¯ß£k®.
Cø»\õÖ Á°ØÖ ÷£õUS, ^u÷£v, ©õuÂhõ´ FUQ¯õP £¯ß£kQÓx.
÷Áº:
Pº¨£ø£US |À» ©¸¢x
Påõ¯® ‰a_ vnÓø» ÷£õUS®
wµõu ©õº¦ \Î, C¸©À, PÖ÷|õ´ ÷£õUS®
÷Áº£møh°¼¸¢x QøhUS® Áõ]]ß GßÓ BÀPÍõ´k BUê÷£õ]ß ©¸¢x ¤ÒøÍ ÷£ØÔß ÷£õx®, P¸a]øuÄ HØ£kÁøu²® ukUS®.
£¯ß£kzx® •øÓ:
Cø»ø¯ E»ºzv _¸mhõP _¸mi ¦øP¤iUP Cøµ¨¦ ÷|õ´ w¸®
Cø», ÷Áº \© AÍÄ Gkzx ªÍS ÷\ºzx FÓÀ Si}º ö\´x öPõkUP Cøµ¨¦, C¸©À, _µ®, E¨¤\® w¸®
§øÁ ÁuUQ PsPÎÀ Pmh Ps G›a\À w¸®
£møhø¯ Si}µõUQ AÀ»x ö£õizx Esn Cøµ¨¦, C¸©À w¸®
Bhõ÷uõøh ÷Áº, Psh[Pzv› ÷Áøµ²® Si}›mk v¨¤¼ ö£õi ÷\ºzx öPõkUP C¸©À }[S®
Bhõ÷uõøh ÷Áº, Psh[Pzv› ÷Áº , _US, öPõÒÐ ÷\ºzu Si}º Cøµ¨¤¸©ø» ÷£õUS®
Bhõ÷uõøh, ªÍS, PاµÁÀ¼, xÍ] ÷\ºzx Påõ¯©õUQ A¸¢u C¸©À, Bìx©õ w¸®.
Bhõ÷uõøh ö£õi ÷uÛÀ ÷\ºzx Esn öÁÒøÍ£kuÀ, PÊzx Á¼, Ck¨¦ Á¼ w¸®.
PUSÁõß C¸©À, Cøͨ¦ ÷|õ²Ò÷Íõº Bhõ÷uõøhø¯ vÚ•® 3 Cø» EskÁ¢uõÀ |À» £»øÚ ö£Ó»õ®
x®©À, ‰UPøh¨¦, uø»Á¼ wµ Bhõ÷uõøh, xÍ] \õÖ ÷uß Tmi A¸¢u Sn©õS®.
|® ÃkPÎÀ, ÷uõmh[PÎÀ, Á¯ÀPõkPÎÀ uõß÷uõßÔ¯õP Á͸® Bhõöuõøhø¯ £¯ß£kzvÚõÀ EhÀ B÷µõUQ¯zøu ö£Ó»õ®.
& öuõS¨¦: ÷uÁµõáß
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


34 . Eh¾US Á¼ø© ÷\ºUS® ¤µsøh!

Qµõ©¨¦Ó[PÎÀ CßÖ® £õmi øÁzv¯zvÀ Ch® ö£ØÔ¸US® EnĨö£õ¸ÎÀ ¤µsøh²® Esk. ""ö\›©õÚ® BPø»¯õ ¤µsøh xøÁ¯À \õ¨¤k. Põx Á¼¯õ ¤µsøhø¯ `k ö\´x \õÖ ¤È¢x PõvÀ FØÖ. \›¯õQk®'' GßÖ øPøÁzv¯® ö\´²® uõ´©õºPÒ C¸UQÓõºPÒ.
öPõÐzx® ÷Põøh°À AvP EènzuõÀ ]»º Áõ´¨¦s, Á°ØÖÁ¼, AÀ\º, ‰»® ÷£õßÓ ÷|õ´PÍõÀ AÁv£kÁxsk. AÁºPÐUS ¤µsøh J¸ Áµ¨¤µ\õu ©¸¢x Gß÷Ó ö\õÀ»»õ®.
C¢v¯õÂÀ öÁ¨£©sh» £SvPÎÀ Põn¨£k® ÷uõmh[PÎÀ, ÷Á¼PÎÀ ¤µsøh ÁͺUP¨£kQÓx.
¤µsøh°À Kø»¨¤µsøh, E¸søh¨ ¤µsøh, •¨¤µsøh, \xµ¨¤µsøh, PΨ¤µsøh, w®¤µsøh, ¦Î¨¤µsøh GÚ ÁøPPÐsk. ö©¼¢u, CøÍzu Ehø» ÷uØÖ® Sn® AuõÁx Áäµõ²u® ÷£õßÓ Á¼ø©ø¯ u¸ÁuõÀ ¤µsøhø¯ Áa]µÁÀ¼ GßÖ® AøǨ£usk.

£¯ß£k® £SvPÒ: usk, ÷Áº.
_øÁ: Põº¨¦
ußø©: öÁ¨£®
©¸zxÁ Sn®: Ehø»z ÷uØÖ®. ¸x EshõUS®. £]ø¯z xõsk®.
¤µsøh°À EÒÍ µ\õ¯Ú¨ ö£õ¸ÒPÒ: i& Aø©›ß, i& Aª÷µõß, ¤ ]m÷hõ]µì, Âmhªß &].
ö£õx Sn®: B\ÚÁõ´ G›a\À, µzu ‰»®, Sß©®, S¸vUPÈa\À BQ¯ÁØøÓU Sn©õUS®. ^uUPÈa\À, P£®, PõÀ Søha\À BQ¯ÁØøÓ }US®. £]ø¯z xõsk®. ãµn¨ ¤µaøÚ, ©õ¢u®, Á°ØÖÁ¼ ¤µaøÚPøÍz wºUS®.
Áa]µÁÀ¼ ¤µsøhø¯ EnÂÀ ÷\ºzuõÀ P£ ÷|õ´PЮ, ö\›¯õø©²® }[S®.
PΨ¤µsøhø¯a \õ¨¤h P£®, Pµ¨£õß, PõnõUPi }[S®. ]»¢v Âå® }[S®. Bsø© EshõS®. Eh¾US Á¼ø© u¸®.
CÛ¨¦ ¤µsøh¯õÀ ö\›¯õ ©õ¢u®, ^uUPÈa\À, Cøµ¨¦, öPõmhõÂ, ÂUPÀ }[S®.
¦Î¨¤µsøh¯õÀ EhÀöÁШ¦, ©õº¦ ÷|õ´, Á°ØÖÁ¼, C¸©À »S®.

©¸zxÁ £¯ßPÒ

Cø»PЮ, CÍ® usk £Sv²® EhÀ |»zøu ÷uØÖ®. Á°ØÖ Á¼ }US®.
Cuß ö£õi ^µn ÷PõÍõÖPÐUS ]Ó¢u ©¸¢uõS®.
usiß \õÖ G¾®¦ •ÔÄPÎÀ ©¸¢uõQÓx.
•øÓ¯ØÓ ©õu»UøP •øÓ¨£kzx®.
Bìx©õøÁ Sn¨£kx®. ÷Á›ß ö£õi G¾®¦ •ÔÂÀ Pmk¨÷£õh EuÄQÓx.

£¯ß£kzx® •øÓPÒ

Cuß CÍ® usøh ö|´Âmk ÁuUQ, Aøµzx xøÁ¯À ö\´x Es£x |õmk ÁÇUS. CuÚõÀ _øÁ°ßø©, Á°ØÖ¨ö£õ¸©À •u¼¯Ú ÷£õS®.
¤µsøhø¯ ö|´Âmk ÁÖzx, Aøµzx öPõmøh¨£õUS AÍÄ 3 |õÒ Põø», ©õø» \õ¨¤mk Áµ B\ÚÁõ´ |ø©a\À, S¸v÷£õUS Sn©õS®.
CÍ® usøh Cø»²hß E»ºzv¨ ö£õizx, _UShß, ªÍSxõÒ ]Ôx ÷\ºzx \õ¨¤h Á°ØÖ ÷|õ´, ö\›¯õø© }[S®. Cøu÷¯ £õ¼À P»¢x ]Ôx PØPsk ÷\ºzx A¸¢u Ehø» ÷uØÔ Á¼ø©ø¯UöPõkUS®.
¤µsøhø¯ ]Ôx w°¼mk ÁuUQ, \õÖ ¤È¢x PõvÀ 2 xÎ Âh Põx ^Ì }[S®. ‰UQÀ Âh ‰UQÀ Ái²® S¸v ©õÖ®. C¢ua \õØøÓ uS¢u AÍÂÀ A¸¢u ©õuÂhõ´ ÷PõÍõøµ \›¯õUS®.
÷Áøµ E»ºzv ö£õizx 2 Qµõ® öPõkzx Áµ •Ô¢u G¾®¦PÒ ^UQµ® Tk®. Cøu öÁ¢}›À SøÇzx ÷©¾US £ØÔh»õ®.
PΨ¤µsøhø¯ Pq }UQ EnÄ ö£õ¸ÍõÚ ªÍS, E¨¦ ÷\ºzx \õ¨¤mk Á¢uõÀ ÷|õ´PÍõÀ CøÍzu EhÀ Á¼ø© ö£Ö®.
Cuß Cø»¨ö£õiø¯ ÷©õ›À 45 |õmPÒ A¸¢u Á°ØÖ ¦s, AÀ\º Sn©õS®.
¤µsøh, ^µP®, PÔ÷Á¨¤ø», E¨¦ ÷\ºzx Aøµzx ÁhP©õUQ vÚ•® 2 Ãu® Esn Aãµn®, ¤zu©¯UP®, £]°ßø© Sn©õS®.
öÁÒøÍ£kuÀ, Á°ØÖÁ¼, Cøͨ¦÷|õ´ •u¼¯ ÷|õ´PÍõÀ EhÀ ö©¼¢uÁºPÒ ¤µsøh xøÁ¯À, ¤µsøh ÁhP®, ¤µsøh ÁØÓÀ, ¤µsøh ö£õi CvÀ GuõÁx JßøÓ öuõhº¢x 3 ©õu® £¯ß£kzvÚõÀ EhÀ £»©øh¢x B÷µõUQ¯zxhß ÁõÇ»õ®.
& öuõS¨¦: ÷uÁµõáß
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
35 . Eh¾US Sκa] u¸® \¢uÚ®!

C¢v¯õÂÀ \¢uÚ® \©¯a\h[SPξ®, ©¸zxÁzv¾® •UQ¯ £[S ÁQUQÓx. SÔ¨£õP uªÇPzvÀ ]Ööu´Á[PÒ, A®©ßPÐUS \¢uÚUPõ¨¦®, ©ØÓ öu´Á[PÐUS A¤÷åP¨ö£õ¸ÍõPÄ® £¯ß£kQÓx. CÓ¢uÁºPÎf Ehø» uPÚ® ö\´¯ \¢uÚ® £¯ß£kQÓx.

\¢uÚ® ©µ® C¢v¯õÂÀ QÇUS¨£Sv¯õÚ Pº|õhP, uªÇP Põmk¨£Sv°¾® Cuµ £SvPξ® Põn¨£kQÓx.
CvÀ ö\®ø©, ©g\Ò, öÁsø© GÚ ‰ßÖ ÁøP Esk.
£¯ß£k® EÖ¨¦: ©µ®, Gsøn´
_øÁ: øP¨¦, ]Ö xÁº¨¦, ußø©: um£®, öÁ¨£®
Sn®:
EhØ÷ÓØÔ, ]Ö}º¨ö£¸UQ, ¯ºøÁ¨ ö£¸UQ, öÁ¨£•shõUQ, AÇPÀ©n©PØÔ, xÁº¨¤, Sκa] EshõUQ.
÷Áv¨ö£õ¸mPÒ:
\¢uÚUPmøh°À 3&6 \uÃu® GÎvÀ B¯õS® Gsøn´, öµ]ß ©ØÖ® ÷£ÛßPÒ EÒÍÚ.
Gsøn°À AÀ£õ, ¤ ÷\ßh»õÀ, ö\éU³ öhº¤ÚõÀPÒ EÒÍÚ.
ÁøP £¯ß£õk:
]Á¨¦& |À»x
©g\Ò& |kzuµ©õÚx
öÁÒøÍ& £¯ÚØÓx
©µ®:
\¢uÚ©µUPmøhø¯ |ß•øÓ°À ÁÇ[Qß AÔÄ®, ©Ú©QÌa]²®, Eh»ÇS®, Jβ®, ©õu›hzx Caø\²® EshõS®. öÁÒøÍ ÷|õ´ }[S®.
\¢uÚ®:
•USØÓ®, ©ÚUP»UP®, Em`k, öÁÒøÍ }[S®. |õÁÓm], |ø©a\À }[S®. EhÀ Á¼ø© ö£Ö®.
©¸zxÁ¨ £¯ßPÒ:
* \¢uÚUPmøh²®, ösøn²® Sκa] u¸£øÁ
* ¯ºøÁ xõsi, EhÀ A\kPøÍ APØÖ®.
*]Ö}º¨ ÷£õUøP AvP¨£kzx®.
*w¨¦s, uø»Á¼, ÷uõÀ ¯õvPÒ, öÁ¨£® ©ØÖ® ¯ºøÁ°ÚõÀ HØ£h® ÷uõÀ ©õØÓ[PøÍ Pmøh°øÚ Aøµzx u¯õ›zu £ø\ ÷£õUSQÓx.
* ‰» ¯õvUS Pmøh°ß P\õ¯zxhß _US ÷\ºzx öPõkUP¨£kQÓx.
*\¢uÚ Gsøn´ £õÀÂøÚ ÷|õ´US |À» ©¸¢x.
* ]Ö}ºUPÈzu¼À HØ£h® öuõÀø»°øÚ²® ÷£õUS®.
* \¢uÚ Gsøn²hß \©AÍÄ PkS Gsøn´ P»¢x ÷©Ø§a\õP ‰UQÀ HØ£k® £¸UPÐUS uhÂÚõÀ ©øÓ²®.
* ^ÚõÂÀ ©õº¦ ©ØÖ® AiÁ°ØÖ Á¼°øÚ ÷£õUP £¯ß£kzu¨£kQÓx.
£¯ß£kzx® •øÓPÒ:
* \¢uÚ Pmøhø¯ ö£õi ö\´x Põ´a]¯ Si}º ©õ¢u®, _µ[P®, ©õº¦xi¨¦ CøÁPøÍ ÷£õUS®.
* \¢uÚ Aøµ¨ø£ P»UQz öu΢u }º 24 Qµõ® ÷uß, \ºUPøµ P»¢x EmöPõÒÍ Á°ØÖ¨ö£õ¸©À, ^uUPÈa\À, öÁ¨£®, }º÷ÁmøP uo²®.
* Pmøhø¯ G¾ªa\® £Ça\õÖ Âmhøµzx |ø©a\À, ö\õÔ, ]Ó[S, AUQ, £hºuõ©øµ, ÷u©À ÃUP® CøÁPÐUS ÷©À §\»õ®.
* _µzvÀ Põq® uø»Á¼, ¦¸Ázvß Á¼ CøÁPÐUS ÷uÛÀ Aøµzu ö|ØÔ°À ÷£õh»õ®.
*\¢uÚzxõøÍ ø©÷£õ»øµzx £õ¼À P»¢x ^Ì öÁÒøÍUS uµ Sn©õS®.
* }º÷ÁmøP }[P CÍ}›À \¢uÚxõøÍ FÓ¨÷£õmk Áizx öPõkUP»õ®.
* \¢uÚ øu»® öÁÒøÍ ÷|õø¯ ÷£õUS®.
*\¢uÚ FÓÀ Si}º ¤zu®, Ps G›a\À }[S®
*\¢uÚ ©n¨£õS SiUP ‰»®, öÁÒøÍ w¸®.
*¯ºøÁ, xº|õØÓ® }[P \¢uÚzxõÒ, Pìxõ› ©g\Ò, öÁmi÷Áº, §»õß QÇ[S ö£õiø¯ SίÀ ö£õi¯õP £¯ß£kzu»õ®.
*£_®£õ¼À Eøµzx¨ ¦Î¯[öPõmøh¯ÍÄ Põø», ©õø» \õ¨¤mkÁµ öÁmøha `k, ÷©P AÚÀ, ]Ö}º¨£õøu, µn®, AÇØ] BQ¯øÁ }[S®.
*Pmøhø¯ G¾ªa\® £Ça\õØÔÀ Eøµzxz uhÁ •P¨£¸, uÁøÍa ö\õÔ, ö\õÔ £hº, uõ©øµ, öÁsSmh®, P¸÷©P®, öÁ¨£UPmiPÒ, wº¢x Á^Pµ® AÇS® EshõS®.

•P¨§a_, |Ö©nz øu»®, ÷\õ¨¦PÒ, FxÁzvPÒ, A»[Põµ ö£õ¸mPÒ, ©õø»PÒ GÚ ©¸zxÁ® \õµõu £SvPÎÀ £¯ß£kzu £mhõ¾®, Q¸ª |õ]Û ö\´øP, EhÀ AÇØ]ø¯ SøÓUS® ußø©ø¯ \¢uÚ® öPõsi¸UQÓx.
& öuõS¨¦: ÷uÁµõáß

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

36 . PÀ½µÀ PõUS® £õPØPõ´!
J¸öPõiø¯ xõUPz xõUP Kµõ°µ® £õÁUPõ´ Gߣx £Çö©õÈ. öPõzxU öPõzuõPU Põ´UPUTi¯x £õPØPõ´.
Cx öÁ¨£¨¤µ÷u\ Põ´.
öußQÇUS B]¯õ Cuß ¤Ó¨¤h®. B]¯ºPÒ ªP AvP©õP \õ¨¤k® EnÄ ö£õ¸ÒCx.
^ÚºPÒ £Ç[Põ»zv¼¸¢÷u £õPØPõ´ \õ¨¤mk Á¢uÚº. •u¼À Cx ußÛaø\¯õP Áͺ¢x Qh¢ux. ÁÓm]UPõ»zvÀ ÷ÁÖ EnÄ QøhUPõu¨÷£õx Cøu EshÚº.
£¯ß£k® EÖ¨¦: Cø», £Ç®, Âøu
©¸zxÁU Sn®:
Cø»: ¦ÊUöPõÀ¼, £õÀ ö£¸UQ
£Ç®: EhÀ £»©õUQ, £]zxõsi, öÁ¨£® EshõUQ, ¤zuzøu \©ß£kzx®, ©»ªÍUS®, Ehø»ö©¸÷PØÖ®.
Âøu: ¦ÊUöPõÀ¼
100Qµõ® £õPØPõ°À C¸US® EnÄa\zx:
P÷»õ› 25, PõÀ]¯® 20 Qµõ®, £õ죵ì 70 ª.Qµõ®, ¦÷µõmiß 1.6 \uÃu®,öPõʨ¦ 0.2 \uÃu®, C¸®¦a\zx 1.8 ª.Qµõ®, ªÚµÀì 0.8 \uÃu®, ¤. Põ®öÍUì 88 ª.Qµõ®, |õºa\zx 0.8 \uÃu®, Põº÷£õøím÷µm 4.2 \uÃu® ]ÔuÍÄ Âmhªß ].
Cø»: AvP›zu Áõu, ¤zu, P£zøu |k{ø»¨£kzx®. PÈa\À EshõUS®. ¦ÊUPøÍ öÁίõUS®.
£Ç®: £ÇzvÚõÀ _µ® }[S®. öÁÒøÍ Sn©õS®. C¸©À, Cøµ¨¦ w¸®. ‰»®, Sèh®, Á°ØÖ¨ ¦Ê }[S®.
öPõ®¦ £õPØPõ´:
Cx |À» ©¸¢xPøÍ •ÔUS®. ¤zu®, Áõu® AvP›US®. ÷uõÀ ÷|õø¯ EshõUS®.
|õ´ £õPØPõ´:
Cx ¥ø\zøu (ø\Üì) }US®.
ªv¨ £õPØPõ´:
Áõu®, ¤zu® AvP›US®.
£õPØPõ°ß £¯ßPÒ:
Cx Á°ØÖ¨ ¦ÊøÁ }US®
µzuzvÀ \ºUPøµ AÍøÁ SøÓUS®
£]ø¯ AvP›US®
Ehø» £»¨£kzx®
C¸©À, Cøµ¨ø£ }US®
÷uõÀ ÷|õ´Pøͨ ÷£õUS®
PÀ½µÀ, ©spµÀ ÃUPzøu SøÓUS®
Áõ²¨ ¤i¨ø£ }US®
µzu Kmhzøu AvP›US®
£¯ß£kzx® •øÓPÒ:
ªÍøP Cuß Cø» \õØÖhß Aøµzx Psøn _ØÔ £ØÔ ÷£õh ©õø»UPs }[S®
øP,PõÀ G›a\¾US Cø»\õØøÓ EÒÍ[PõÀ, EÒÍ[øP°À §\ G›a\À SøÓ²®
Cuß Põø¯ ÁØÓ¼mk Esn ShØ Q¸ª }[S®
Cuß £Çzøu \õÖ ¤È¢x Põ©õø» USz uµ»õ®
£Ça\õØøÓ \ºUPøµ P»¢x SiUP `uPÁ¼ }[S®
Cø»ø¯ E»ºzv ö£õizx öuõÊ÷|õ´ ¦sPÐUS uhÁ»õ®
\ºUPøµ ÷|õ¯õÎPÒ Áõµ® 2 •øÓ ÷\ºzxU öPõÒÍ }›ÈøÁ Pmk¨£kzx®

£õPÀ Cø»a \õØøÓ {øÓ¯USizx Áõ¢v GkzuõÀ Azxhß £õ®¦ Pizu Âå® }[S®.
£õPÀ Cø»a \õÖ Kº AÄßì Aøµ AÄßì |Àö»sønU P»¢x EmöPõshõÀ Põ»µõ }[S®.

÷©ØQ¢v¯ wÄPÎÀ ]Ö}µPU PØPÐUS®,áüµzxUS®, ShÀ ¦s,Áõ²z öuõÀø»PÐUS ©¸¢uõQÓx.
£õPØPõ°ß Âøu°¼¸¢x Gkzu Gsøn Põ¯[PøÍ BØÖ® ©¸¢uõP £¯ß£kQÓx.
ö£¸|õmiÀ £õPØPõø¯ A®ø©US®, ©÷»›¯õÄUS® ©¸¢uõP £¯ß£kzxQÓõºPÒ.

2 jì§ß £õPØPõ´ áü_hß uspº ÷\ºzxU SizuõÀ ©g\Ò Põ©ø» Sn©õS®. Cøua \õ¨¤k® ÷£õx PsoÀ öu›²® ©g\Ò {Ó•® Eh÷Ú ©øÓ²®.
3¼¸¢x 8 Á¯xÒÍ SÇ¢øuPÐUS Aøµ jì§ß £õPØPõ´ áüì öPõkzx Á¢uõÀ ¤ØPõ»zvÀ G¢u PÀ½µÀ £õv¨¦® Áµõx.
vÚ® 2 ÷ÁøÍ 1 jì§ß £õPØPõ´ áü_hß \ºUPøµ P»¢x \õ¨¤mk Á¢uõÀ ‰»÷|õ°ÚõÀ HØ£k® µzu ÷£õUS {ßÖÂk®.
& öuõS¨¦: ÷uÁµõáß
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
37 . ©õº£P ¦ØÖ ÷|õ´ ukUS® uUPõÎ

G¨£i¨£mh ö£sPÎß •Pzøu²® AÇPõP öáõ¼UP øÁUS® Âzøu uUPõÎ Á\® Esk. ö£õ¼ÂÇ¢u, •µmkzuÚ©õÚ, P¸Áøͯ® öPõsh •PzvØS uUPõÎ §]Á¢uõ÷»õ, \õ¨¤mk Á¢uõ÷»õ ÷£õx®. uUPõÎ E[PÒ •Pzøu u[Pö©Ú uPuPöÁÚ öáõ¼UPøÁzxÂk®.
B[Q»zvÀ CuØS ÁÇ[S® ö£¯º öhõ÷©m÷hõ. C¢u¨ ö£¯º |õLSÁõmiÀ ö©õÈa ö\õÀ»õÚ öhõ©õmÀ GߣvÀ C¸¢x Á¢u ÷Áºa ö\õÀ»õS®.
|®‰º Pzv›UPõ´, öÁsøhUPõ´, öPõøh ªÍPõ´ ÷£õßÖ ö\i CÚzøua ÷\º¢ux uUPõÎ. Cøu §sk CÚ® GßÖ P¸x÷Áõ¸® Esk.
uUPõ롧 uõ¯P® öußAö©›UPõ, |k Aö©›UPõ ©ØÖ® Áh Aö©›UPõøÁa ÷\º¢ux. SÔ¨£õP ö£¸, ö©a]U÷PõÂÀ C¸¢x AºöásøhÚõ Áøµ¯õÚ £Sv°À ªSv¯õPUPõn¨£kQÓx. Cx Kµõsk uõÁµ©õS®. 1& 3 «mhº E¯µ® Á͵UTi¯x.
uUPõ롧 _øÁ: CÛ¨¦.
©¸zxÁ Sn®: Ehø» £»¨£kzx®, ]Ö}øµ AvP›US®, ©»zøu Pȯa ö\´²®.
^ø©zuUPõÎ:
Cx Aö©›UPõøÁ ¤Ó¨¤h©õPU öPõshx. Cx Eh¾US Sκa]ø¯z u¸®. Ehø» £»¨£kzx®.
uUPõΰÀ Ah[Q²ÒÍ Fmha\zxUPÒ:
|ßS £Êzu 100 Qµõ® uUPõΰÀ 18 ÷P P÷»õ›, Põº÷£õøím÷µm 4 Qµõ®, \ºUPøµ 2.6 Qµõ®, |õº\zx 1 Qµõ®, öPõʨ¦a\zx 0.2 Qµõ®, ¦µu\zx 1 Qµõ®, }ºa\zx 95 Qµõ®, Âmhªß&] 13 Qµõ®.
ªÚµÀ \zx: PõÀ]¯® 10 ª. Qµõ®, C¸®¦ \zx 0.27 ª.Qµõ®, ö©UÜ]¯® 11 ª.Qµõ®, £õ죵ì 24 ª.Qµõ®, ö£õmhõ]¯®237 ª.Qµõ®, ÷\õi¯® 5 ª.Qµõ®, ©õ[PÜ_ 0.114 ª.Qµõ®.
E°º \zxUPÒ: Âmhªß&] 12.7 ª.Qµõ®, øu¯õªß 0.037 ª.Qµõ®, ›÷£õ÷ÍÂß 0.019 ª.Qµõ®, {¯õ]ß 0.594 ª.Qµõ®, Âmhªß ¤6& 0.080 ª.Qµõ®, ÂmhªßH 42 ª.Qµõ®, P÷µõmjß 449 ª.Qµõ®, ø»÷Põ¥ß 2573 ª.Qµõ®,Âmhªß C 0.54 ª.Qµõ®.
Aª÷Úõ Aª»[PÒ: ¾õ]ß 0.025 Qµõ®, ø»]ß 0.027 Qµõ®, ]ìiß 0.009 Qµõ®, Aì£õºiU Aª»® 0.135 Qµõ®, SÐhõªU Aª»® 0.431 Qµõ®.
ö£õx Sn®:
uUPõΰÀ AvPÍÄ }ºa\zx C¸¨£uõÀ Ehø» Sκa]¯øh¯ ö\´²®.
µzuzøu _zvP›US®.
^µnzøu AvP›US®.
PÀ½µø» _zvP›zx £]ø¯z xõsk®.
Âmhªß ] AvPÍÄ C¸¨£uõÀ ìPºÂ ÷|õø¯ Sn¨£kzx®.
uUPõ롧 £¯ßPÒ:
¦ØÖ÷|õø¯ }US®:
CvÀ ø»÷Põ÷£ß AvPÍÄ C¸¨£uõÀ ¦ØÖ ÷|õø¯ µmk®.
uUPõ롧 ]Á¢u {ÓzvØS Põµn® ø»÷Põ÷£ß BS®.
C¢u ]Á¨¦ {Óª ]Ó¢u Gvº¨¦ \Uv öPõshx. GÚ÷Á, ö£sPÐUS ©õº£P ¦ØÖ, ¦µìu÷PõÍ ¦ØÖ Áµõ©À ukUS®.
¦ØÖ ÷|õ´ Q¸ªPÐUS GvµõP ÷£õµõk® uUPõÎø¯ vÚ•® 100 Qµõ® •uÀ 200 Qµõ® Áøµ EnÂÀ £¯ß£kzvÚõÀ ¦ØÖ ÷|õ´ Áµõ©À ukUP»õ®.
Cx PÊzx, uø» ¦ØÖ ÷|õ´PøÍz ukUS®.
Cu¯ ÷|õ´PÒ }[P:
uUPõΰÀ {¯õ]ß, C¸®¦ \zx, Âmhªß ¤6 C¸¨£uõÀ Cu¯ ÷|õ´ HØ£hõ©À ukUQÓx.
{¯õ]ß µzuzvÀ EÒÍ öPõʨø£ SøÓUQÓx. ö£õmhõ]¯® AvP µzu AÊzu® Áµõ©À ukUQÓx.
£UPÁõu® ukUP:
íº÷Úõø\ìjß C¸¨£uõÀ íõºm AmhõU, ìm÷µõU Áµõ©À ukUQÓx.
•P¨£¸øÁ }US®.
|µ®¦PøÍ £»¨£kzx®.
B\ÚÁõ´ ¦ØøÓ ukUS®.
uUPõβ® Sn©õS® ÷|õ´PЮ:
•P¨£¸ Sn©õS®.
µzu ÷\õøPUS ]Ó¢ux.
‰mk Á¼ø¯ ÷£õUS®.
EhÀ xº|õØÓzøu }US®.
C¸©ø» ÷£õUS®.
öPõʨ¦ \zøu SøÓUS®.
©»a]UPø» }US®.
P¸Áøͯzøu ÷£õUS®.
PÈa\ø» Sn©õUS®.
EhÀ ÷\õºøÁ }US®.
‰»zøu Sn©õUS®.
xõUPªßø©ø¯ ÷£õUS®.
EhÀ £¸©øÚ SøÓUS®.
Á°ØÖ¨ ¦søn BØÖ®.
BP÷Á, ö£sPÒ vÚ•® EnÂÀ uUPõÎ ÷\ºzxUöPõshõÀ AÇS®, B÷µõUQ¯•® Tk®.
& öuõS¨¦: ÷uÁµõáß
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
38 .

µzu ¸zv u¸® Azv!
Azv PΩs {»® ©ØÖ® BØÖ¨£køPPÎÀ |ßS Á͸®. öu´Á A¸Ò £õÂUS® ©µö©ßÖ ©UPÎß |®¤UøP. Cuß §[öPõzx öÁΨ£øh¯õPz öu›¯õx. Cøu, Põnõ©À §¨ §US® Psk Põ´US® GߣuõÀ " Azv¨§zuõØ÷£õ»' GßÖ £Çö©õÈ Azv £ØÔ ö\õÀ»¨£kQÓx.
©µ CÚzøua ÷\º¢ux Azv. Cx C¢v¯õÂÀ G[S® £°µõQÓx. CuØS Au®, AuÄ, Ex®£µ®, ÷PõÎ, _¨¤µuèh® GßÖ ÷ÁÖ ö£¯ºPЮ Esk. ©µzvß ÷©Ø£møh öÁÐzx®, ¤ÍÄ£mk®, _µ_µ¨£õP C¸US®. Ai ©µ® •uÀ Ea]UQøÍPÒ ©mk® ©µzøuö¯õmiU Põ´Põ´US®.
Cuß Põ´ E¸søh¯õ´, £aø\ {Ó©õP, ÁÇÁǨ£õP C¸US®. Põ°ß Ai¨¦Ó® S¢x ©zv°À J¸ ]Ö xøͲ®, Aøu _ØÔ ö\¢{ÓU÷Põk C¸US®. £ÊzuÄhß Ax ö\[PÀ {Ó©õP ©õÖ®. AuÝÒ ]Ö ÂøuPЮ §a]PЮ Ah[Q°¸US®.
öußÛ¢v¯õÂÀ Cuß ¤gø\²® Põø¯²® \ø©zx Es£x ÁÇUP®. ©¸¢x Esq® Põ»[PÎÀ Cøu¨ £zv¯¨ ö£õ¸ÍõP ÁÇ[SÁxsk.
Azv°À ¦÷µõmjß, \ºUPøµ \zx, PõÀ]¯®, £õ죵ì, C¸®¦ \zx,Âmhªß H,Âmhªß ] BQ¯ \zxUPÒ ©ØÓ £Ç[PøÍ Âh Azv¨£ÇzvÀ |õßS ©h[S EÒÍuõP Bµõ´a] ö\´u ÂgbõÛPÒ TÖQßÓÚº.
£¯ß£k® EÖ¨¦:
¤g_, Põ´, £Ç®, £õÀ, £møh
¤g_; xÁº¨¦ _øÁ öPõshx.
¤g]ÚõÀ ‰»Áõ² w¸®. µzu ‰»® Sn©õS®. Á°ØÖUPk¨ø£ ÷£õUS®.
Põ´: xÁº¨¦ _øÁöPõshx.
Põ°ÚõÀ Áõu ÷|õ´ w¸®. `ø»& EhÀ Á¼ w¸®. EhÀ öÁ¨¦, ¦s Sn©õS®. ©»® PȲ®.
£Ç®: CÛ¨¦ _øÁ Eøh¯x.
ö\´øP: S¸v ö£¸UQ, ©»ªÍUQ. CuÚõÀ µzu® ö£¸S®. Pȯa ö\´²®.
Azv¨£õÀ:
_øÁ: xÁº¨¦
Azv¨ £õ»õÀ }›ÈÄ w¸®. öÁÒøÍ Sn©õS®.
Azv¨£møh:
_øÁ: xÁº¨¦.
µzu¨ ÷£õUøP Pmk¨£kzx®. ^uUPÈa\À w¸®.
AzvUPÒ:
Ehø» £»¨£kzx®. Cøͨ¦ ÷|õ´ w¸®. ¤zu ©¯UP® w¸®. EhÀ £¸US®.
Azv°À EÒÍ ÷Áv¨ ö£õ¸mPÒ:
uõÁµìjµõÀ, øíi÷µõ Põº£ß, ìjµõÀ, ¨øµöh¼ß EÒÍx.
©¸zxÁ¨£¯ßPÒ:
Cø»PÒ ö£õi ö\´¯¨£mk ÷uÝhß P»¢x ¤zuzøu SøÓUP £¯ß£kQÓx.
÷»hUì £õÀ Á°ØÖ¨ ÷£õUS ©ØÖ® ‰» ÷|õ´ ÷£õUP £¯ß£kQÓx.
÷Áº ©ØÖ® PÛ }›ÈÄ ÷|õ°À S¸v \UPøµ AÍøÁ SøÓUP £¯ß£kQÓx.
÷Á›ß \õÖ Á°ØÖ¨ ÷£õUQøÚ Pmk¨£kzxÁvÀ ]Ó¢ux.
PÛPÒ uø\PøÍ CÖUS® vÓß £øhzuøÁ.
A^µn®, Á°ØÖ Á¼, ©õuÂhõ´ Põ»zvÀ AvP µzu¨÷£õUøP Pmk¨£kzu £møh Si }º £¯ß£k®.
AzvUPõø¯ £¸¨¦ ÷\ºzx \ø©zx Esn µzu® ö£¸S®.
µzu ‰»® }[P AzvUPõø¯ ö£õizx ÷©õ›À 10 |õÒ öuõhº¢x A¸¢u»õ®.
\ºUPøµ ÷|õ¯õÎPÒ Azv¨£møh, |õÁÀ öPõmøh, ©õxøÍ Kk, PÔ÷Á¨¤ø», öÁ¢u¯® ÁÖzx ö£õizx J¸ ÷uUPµsi Esn \ºUPøµ ÷|õø¯ Pmk¨£kzu»õ®.
öÁÒøÍ wµ AzvUPõø¯ ö£õizx ©õx®£Ça\õØÔÀ A¸¢u öÁÒøÍ Sn©õS®.
µzu ÷\õøP }[P vÚ•® AzvPõø¯ ÁØÓÀ ÷£õmk 2 xsk ÷uÛÀ FÓøÁzx \õ¨¤h»õ®.
Azv¨ £Çzøu E»ºzv ö£õizx J¸ ÷uUPµsi Põø», ©õø» £õ¼À EmöPõÒÍ Cu¯® Á¾ÁõS®. µzu® ö£¸S®.
Azv¨ £Çzøu A¨£i÷¯ vÚ•® 10&20 GßÓ AÍÂÀ \õ¨¤h»õ®. Põø» , ©õø» \õ¨¤mh¨ ¤ß £õÀ A¸¢u ÷Ásk®. £u¨£kzv 5 |õmPÒ {ǼÀ Põ¯øÁzx ÷uÛÀ ÷£õmk® \õ¨¤h»õ®. E»ºzv ö£õizx `µn©õP 10& 15 Qµõ® \õ¨¤h»õ®. CuÚõÀ uõx¸zv, Bsø© BØÓÀ ö£¸S®. Bs©»k AP¾®.
ö£õxÁõP Azv EhÀ£»ÃÚ©õP C¸US® ÷£õx®, ÷|õ´Áõ´¨£mk C¸US® ÷£õx® £µÁ»õP¨ £¯ß£kzu¨£kQÓx.
& öuõS¨¦: ÷uÁµõáß
-&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&





18 . சீரணம் தரும் கொத்து மல்லி

கொத்துமல்லி. இது எல்லாருக்கும் நன்கு அறிமுகமான உணவுப்பொருள். ஆனால், இதன் மருத்துவ குணத்தை நாம் அறியாததால், உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதில்லை! நம் முன்னோர்கள் சமையலில் கூட்டு, சாம்பார், பொரியல் ஆகியவை மணக்க வேண்டும் என்பதற்காக மட்டும் உணவில் சேர்க்க வேண்டும் என தவறாக கருதி, உண்ணும் போது இலையில் ஓரமாக ஒதுக்கிவிடுகிறோம். இதன் பயனை விரிவாக அறியலாம்:
உருள் அரிசி, தனியா என அழைக்கப்படும் கொத்துமல்லி சிறு செடி வகையைச் சார்ந்தது. இது மேற்கு ஆசியாவினைச் சேர்ந்தது. பண்டைய காலம் தொட்டே வளர்க்கப்பட்டு வரும் முக்கிய மருத்துவ தாவரங்களில் ஒன்று கொத்துமல்லி!
ஆசியா, வட ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய இடங்களில் 2 ஆயிரம் ஆண்டுகளாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
100 கி கொத்துமல்லி இலையில் உள்ள சத்து பொருட்கள்:
விட்டமின் சி 160 மி.கி.
விட்டமின் ஏ 12 மி.கி.
விட்டமின் பி12 60 மி.கி.
நார்ச்சத்து 3 மி.கி.
புரத சத்து 2 மி.கி.
கார்போஹைட்ரேட் 1 மி.கி
கொழுப்புச் சத்து 0.5 மி.கி.
கால்சியம் 0.172%
பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம் போன்ற தாது உப்புகள் கொத்து மல்லி இலையிலும், விதையிலும் காணப்படுகிறது. மேலும் மாங்கனிசு, கால்சியம் விதை மற்றும் இலையில் உள்ளது.
கொத்துமல்லி செய்கை:
பசித்துõண்டி, அகட்டுவாயகற்றி, வெப்பமுண்டாக்கி, உடல் தேற்றி, சிறுநீர்ப்பெருக்கி.
பசித்துõண்டி: அசீரணம், வயிற்று உப்புசம் போக்கி, பசியை அதிகப்படுத்தும்.
அகட்டு வாயகற்றி: அகடு என்றழைக்கப்படும் வயிற்றில் உள்ள வாயுவை அகற்றி வயிற்று பொருமலை குணப்படுத்தும்.
சிறுநீர்ப் பெருக்கி: சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள பித்தத்தை தணிக்கும்.

பொது குணம்:
சுவையின்மை தீர்க்கும், பித்தசூட்டை குறைக்கும், உடல் வன்மை, பாலுணர்வை அதிகரிக்கும்.
மருத்துவ பயன்பாடு:
சீரண கோளாறுக்கு கொத்துமல்லி சாறு 12 தேக்கரண்டி மோரில் கலந்து அருந்த அசீரணம், குமட்டல், கழிச்சல், வயிற்று வலி குணமாகும்.
தலைவலி தீர கொத்து மல்லி சாற்றை நெற்றியில் பற்றிட தலைவலி, தலைபாரம் குணமாகும்.
முகப்பரு, கருவளையம் நீங்க, கொத்து மல்லி சாறுடன் மஞ்சள் சேர்த்து முகத்தில் பூச பரு, தழும்பு மாறும்.
நோய் எதிர்ப்பு சக்திக்கு 100கிராம் கொத்து மல்லி சாற்றை அருந்த உடலுக்குத் தேவையான அனைத்து உயிர்ச்சத்துகளை பெருக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
கொத்து மல்லி விதை:
கொத்து மல்லி விதை உடல் சூட்டை தணிக்கும். குளிர்க்காய்ச்சல் போக்கும். வாந்தியைப் போக்கும். விக்கல், தாகம் தீர்க்கும். சிறுநீரில் விந்து போதல் குணப்படுத்தும்.
மருத்துவ பயன்கள்:
வாயுவை அகற்றும். சுரத்தை தணிக்கும். ஒற்றை தலைவலி குணமாகும். மூளைக்கு புத்துணர்ச்சி தரும். பதட்டம் குறைக்கும். தசை இறுக்கம், வாத வலி குணமாகும். மார்பு சளியை அகற்றும்.
பயன்படுத்தும் முறை:
தனியாவை வறுத்து பொடித்து ஒரு ஸ்பூன் மோரில் கலந்து பருகலாம்.
தனியா பொடி,இந்துப்பு, சீரகத்துõள் சம அளவில் கலந்து 3 நாட்கள் வெந்நீரில் அருந்த வாயுக்கோளாறு, அசீரணம் நீங்கும்.
தனியா பொடியை, சாதம் வடித்த கஞ்சியில் கலந்து அருந்த மாதவிடாய் உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.
125 கிராம் தனியா பொடியை 125 கிராம் சர்க்கரைக் கலந்து 500மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து, பாகாக காய்ச்சி அருந்த டென்ஷன், குழப்பம் நீங்கும்.
ஹைபிரசர், கொலஸ்டிரால் நீங்க, வறுத்த தனியா பொடியுடன், வறுத்த சீரகம் கலந்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்த ஒரு மாதகாலம் அருந்தி வர மேலே சொன்ன குறைபாட்டை கட்டுபாட்டில் வைத்துக்கொள்ளலாம்.
கொத்துமல்லி விதை எண்ணைய்:
இந்த எண்ணை வாத வலியைப் போக்கும். கல்லீரலை பாதுகாக்கும். புற்றுநோய் செல்களை அழிக்கும். கொழுப்பைக்கரைக்கும். ரத்தக்குழாய் அடைப்பை கரைக்கும். குடல் புண், தசைப்பிடிப்பு, வயிற்றுவலி போக்கும்.
தொகுப்பு: தேவராஜன்


19 . சர்க்கரைக்கு உகந்தது வெந்தயம்

இது கீரை வகையைச் சேர்ந்தது. காஷ்மீர், பஞ்சாப், மேல் கங்கை சமவெளிகளில் அதிகமாக பயிரிடப்படுகிறது. சென்னையில் வீட்டு உபயோகத்திற்காக வீட்டைச்சார்ந்த காலி மனைகளில் பயிரிடப்படுகிறது.
வெந்தயம் மெந்தியம், மேதி, வெந்தை என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
வெந்தயத்தின் இலை, விதை மருத்துவக்குணம் உடையவை. இது கசப்பு சுவை உடையது.
செய்கை:
கீரை: குளிர்ச்சி உண்டாக்கி, மலமிளக்கி
விதை: உரமாக்கி, சிறுநீர் பெருக்கி, உள்ளழலாற்றி, துவர்ப்பி, வறட்சியகற்றி, காமம் பெருக்கி, அகட்டுவாயகற்றி.
வெந்தயத்திலுள்ள ஊட்டச்சத்துக்கள்:
அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள்
கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், விட்டமின் பி1,பி2,பி3 மற்றும் விட்டமின் சி, துத்தநாகம் இவையுடன் பீட்பா கரோட்டீன், சப்போனின், கனுமாரின், லெசிதின், மீத்தைல்அமைன், டயாஸ்ஜெனின்,பிசைட்டோஸ்பீரால், லுõட்டியோலின் என வெந்தயத்தில் உயிர் வாழ இன்றியமையாத தாது உப்புக்கள், உயர்சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது.

மருத்துவ குணம்:
கீரை: வயிற்றுப் பொருமல், மந்தம், வாதமிகுதி, கபம், இருமல், சுவையின்மை இவைகளை குணப்படுத்தும்.
விதை: குழந்தைகளுக்கு ஏற்படும் கணக்காய்ச்சல்,பேதி,சீதபேதி குணமாகும். மேகம் என்றழைக்கப்படும் வெள்ளை நோயை குணப்படுத்தும்.
மேலும், குருதியழல்,கணம்,அத்திசுரம்,அதிவேட்கை,வேக இருமல்,கயம்,ஆண்மையின்மை குணப்படுத்தும்.
வெந்தயகீரை பயன்படுத்தும் முறை:
* வெந்தயத்துடன் பருப்பு சேர்த்து மிளகு,சீரகம்,குழம்பாக உண்ண அசீரணம், வயிற்று பொருமல் குணமாகும்.
*வெந்தயத்தை பொரியல்,கூட்டு, துவையல் என உண்ண பித்தம் நீங்கி, உடல் குளிர்ச்சி அடையும்.
* பெண்களுக்கு மாதாந்திர பூப்புசுழற்சிமாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி குறைய ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை 100 மில்லி மோருடன் கலந்து உட்கொள்ள வயிற்று வலி குறையும்.
* வெந்தயம், கறிவேப்பிலை சம அளவு எடுத்து உலர்த்தி பொடித்து கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி வீதம் உட்கொள்ள சர்க்கரை நோய் மட்டுபடும்.
*தினமும் ஒரு லிட்டர் நீரில் ஒரு தேக்கரண்டி கொத்துமல்லி,அரை தேக்கரண்டி வெந்தயம்,அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருக குருதி அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
* ஒழுங்கற்ற மாதவிடாய், மாதவிடாயில் அதிகஅளவு குருதிபோக்கு உடைய மகளிர் வெந்தகளி(வெந்தயம்+உளுந்து+ராகி) சேர்த்து சமைத்து உண்ண மாதவிடாய் கோளாறு நீங்கும். இது கர்ப்பப்பையை பலப்படுத்தும். வெந்தயத்தில் ஈஸ்ட்ரோஜன் இருப்பதால் இது பெண்களுக்கு சிறந்த உணவு.
* வெந்தயக்கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து நெய்யுடன் சேர்த்து உண்ண உடல்சூடு தணியும். உடல் எடைகூடும். தோசையில் வெந்தயம் அதிகஅளவில் சேர்த்து உண்ண உடல் பருமன் அதிகரிக்கும்.
* வெந்தயம், கொள்ளு இரண்டையும் சமஅளவு எடுத்து வேக வைத்து தினமும் உண்ண உடலில் உள்ள அதிகமான கொழுப்புசத்து குறைந்து உடல் எடை குறையும்.
*வெந்தயக்கீரையுடன் கோழி முட்டை, தேங்காய் சேர்த்து நெய்யில் சமைத்து உண்ண இடுப்புவலி தீரும்.
* வெந்தயக்கீரையை வேகவைத்து தேன்விட்டு கடைந்து உண்ண இருமல், மார்புவலி, மூலம் குணமாகும்.
*வெந்தயக்கீரையுடன் சீமைப்புளி, அத்திபழம், திராட்சை சேர்த்து குடிநீரிட்டு தேன் சிறிது கலந்து சாப்பிட மூச்சடைப்பு, மார்புவலி தீரும்.
*கீரையுடன் வாதுமை* பருப்பு,கசகசா, கோதுமைபால், நெய்,பால், சர்க்கரை சேர்த்து கிண்டி உட்கொள்ள உடல் வன்மை அதிகரிக்கும். ஆண்மை பெருகும்.
* வெந்தயம் 15 கிராம் பச்சரிசி 300கிராம் சேர்த்து பொங்கி சாப்பிட குருதி பெருகும்.
* வெந்தயம், உளுந்து, அரிசிசேர்த்து கஞ்சியாக காய்ச்சி உண்ண பால்சுரப்பு அதிகரிக்கும்.
*வெந்தயத்தை பாலில் சேர்த்து அரைத்து தலையில் தடவி, குளித்து வந்தால்,பொடுகு நீங்கும், முடி உதிர்வது குறையும்,முடி மினுமினுக்கும்.
* வெந்தயம், மஞ்சள்,கடுகு, காயம் சேர்த்து பொடித்து நெய்விட்டு கலந்து லேகியமாக்கி <உண்ண கல்லீரல் வீக்கம் குறையும்.
*தினமும் வெந்தயத்தை ஒரு தேக்கரண்டி உணவில் சேர்த்துக்கொண்டால், நாட்பட்ட வயிற்றுவலி குணமாகும்.
* வெந்தயத்தை உளறவைத்து, திராட்சையுடன் சேர்த்து உண்ண மலச்சிக்கல் தீரும்,
*வெந்தயம் வறுத்து பொடித்து கறிவேப்பிலை சேர்த்து மோரில் பருக நாட்பட்ட பேதி, கழிச்சல் குணமாகும்.
* வெந்தயக்கீரை அரைத்து சுட்டப்புண்ணில் கட்ட புண் ஆறும்.
இவ்வளவு மருத்துவக்குணம் உள்ள வெந்தயத்தை நாம் வீட்டில் தினமும் சாம்பார்,ரசம்,கூட்டு, பொரியல், என எல்லாவற்றிலும் சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.
தொகுப்பு: தேவராஜன்

20 .தோல் நோய்க்கு கவசம் மஞ்சள்

மங்களகரமான பொருட்களில் ஒன்று மஞ்சள். மக்கள் மஞ்சளுக்கு தரும் மதிப்பு பெரியது. அதனுடைய மகத்துவம் அறிந்தே முன்னோர்கள் அதை மதிப்பான இடத்தில் வைத்திருக்கிறார்கள். மஞ்சளுடைய மருத்து பயன்பாட்டை விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
இது கிழங்கு வகையைச் சேர்ந்த தாவரம். இந்தியா, சீனா, இலங்கை, தைவான், ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் வெப்பமான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. மஞ்சள் தரையடி தண்டு மூலம் வளர்க்கப்படுகிறது.
மஞ்சளுக்கு அரிசனம், கான்சனி, நிசி, பீதம், ஹால்டி, மன்னால், நிஷா, ஹரிடிரா என பலவாறு ஒவ்வொரு மொழியிலும் அழைக்கப்படுகிறது.
மஞ்சளுக்கு ஒருவித மணமுண்டு. மஞ்சள் கப்பு மஞ்சள், கறி மஞ்சள் என இருவகைப்படும்.
கப்பு மஞ்சள் கிழங்கின் பெரும்பாகங்களை எடுத்து உலர்த்தி, நல்லெண்ணையில் பக்குவம் செய்யப்படுகிறது. கறி மஞ்சள் கிழங்கின் பக்கங்களில் கிளைக்கும்.
மஞ்சள் கார்ப்பு, கைப்பு சுவை உடையது. தன்மை வெப்பம்.
செய்கை: அகட்டு வாயுவகற்றி, வெப்ப முண்டாக்கி, ஈரல் தேற்றி, மணமூட்டி.
மஞ்சளின் பொதுகுணம்:
மஞ்சளை உடலில் பூசி குளிக்க உடலுக்கு பொன்னிறம் தரும். புலால் நாற்றத்தை நீக்கும். ஆண்களின் மனத்தை கவரச் செய்யும். பசியை உண்டாக்கும். வாந்தியை போக்கும். பித்தம், வாதம், கபத்தை போக்கும்.
தலைவலி, வீக்கம், வண்டுகடி, பெரும்புண் குணமாகும். வியர்வை நீங்கும். கற்றாழை நாற்றமும், முகத்திலுண்டாகிற நோய்களும் தீரும்.
மஞ்சளில் உள்ள வேதிப்பொருள்கள்:
புரதம் 6.3%, கொழுப்பு சத்து 5%, கனிமங்கள் 3.5%, கார்போஹைட்ரேட் 69.4%, ஈரப்பதம் 13.1%, ஆவியாகும் எண்ணை 5.8%, பிளான்டிரின்1%, சினியோல்1%, போர்னினால் 0.5%.
மருத்துவப் பயன்கள்:
உடலில் உள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்றுகிறது.
வயிற்று வலியை போக்குகிறது.
தோல் நோய்களான முகப்பரு, ஒவ்வாமை, கரப்பான், படையைப் போக்கும்.
வாத நோய்களான ரத்தவாதம், கீல்வாதம், தசைபிடிப்புகளை குணமாக்கும்.
பசியின்மையை குணமாக்கும்.
புற்றுநோயை ஒழிக்கும்
கல்லீரலைப் பாதுகாத்து பலப்படுத்தும்.
வீக்கங்களைப் போக்கும்.
மஞ்சளிலுள்ள கர்குமின் எனும் பொருள் பாக்டிரிய எதிரியாக செயல்படுகிறது.
பித்த நீர் சுரப்பினை உலர்க்குவிக்கக்கூடியது.
வாந்தி, மயக்கத்தினை தடுக்கும்.
ஆயுர்வேதம் மற்றும் சீன மருத்துவத்தில் மஞ்சள் காமாலை, ஜீரண கோளாறுகள், வயிற்றின் அமிலம் ஆகியவற்றை போக்கப் பயன்படுகிறது.
மூல நோயில் மலக்குடல் வெளிவருவதால் ஏற்படும் நோயினைப் போக்க களிம்பு தயாரிக்க பயன்படுகிறது.
கொலாஸ்டிரால் அளவினைக் குறைக்கும் திறன் கொண்டிருக்கிறது.
புற்று நோய் செல்களை தடுக்கும் அரணாக உள்ளது.
குடல் புழுக்களை ஒழிக்கும்.
மலச்சிக்கலை குணப்படுத்தும்.
பயன்படுத்தும் முறைகள்:
மஞ்சள் பொடியில் 520 மிகி 650 மிகி அளவு உட்புகட்ட வயிற்றுப்பொருமல், வயிற்று வலி, சுரம் போக்கும். குடலை படுத்தும்.
மஞ்சள் நீரை அருந்த காமாலை குணமாகும்.
மஞ்சள் அரைப்புடன் சுண்ணாம்பு, பொட்டிலுப்பு கூட்டி சுடவைத்து சுளுக்கு, அடிப்பட்ட புண் இவைகளுக்குப் பூசலாம்.
பச்சை மஞ்சள் ரசத்தை பூச அட்டைக்கடி, நஞ்சு, காயப்புண், புண்வீக்கம் இவை போகும்.
வேப்பிலையுடன் மஞ்சளை சேர்த்தரைத்து அம்மை கொப்புளத்தின் மீது பூச, அவைகள் பழுத்துடைவதுடன் எளிதில் ஆறிப்போகும்.
மஞ்சளை பொடித்து புண்கள் மீது துõவ அவைகள் ஆறும்.
மஞ்சளுடன் ஆடாதொடையிலை சேர்த்து, பசுவின் நீரைவிட்டரைத்து பூச சொறி, சிரங்கு, நமைச்சல் படைகள் தீரும்.
மஞ்சள் பசையுடன் எலுமிச்சை சாறு சேர்த்து சுளுக்கு மற்றும் சிராய்ப்பு காயங்களுக்கு பூசப்படுகிறது.
மஞ்சளை அரைத்து ஒரு வெள்ளைத்துணியில் பூசி நிழலில் உலர்த்தி, அந்தத்துணியில் கண்துடைத்து வந்தால் கண்சிகப்பு, கண்வலி, கண்ணில் நீர்க்கோர்த்தல், கண்வலி போன்றவை தணியும்.
மஞ்சள் மகிமை அடுத்த வாரமும் வரும்.

மஞ்சளும் முக்கிய நோய்களும்:

சீரண கோளாறுகள்:
இந்தியர்கள் மஞ்சட்பொடி ஒரு சிட்டிகை எல்லாவகை கறிவகைகளில் பயன்படுத்துகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மஞ்சள் சிறந்த கிருமிநாசினி மேலும் இது அகட்டுவாய்வு அகற்றியாக செயல்படும். எனவே உணவு பொருட்களில் உள்ள மந்த தன்மையை போக்கும். வாயுவை தடுக்கும். வயிற்று பொருமலை குணமாக்கும்.
உணவு உண்டவுடன் ஒரு சிலருக்கு ஏற்படும் உடற்சோர்வை மஞ்சள் போக்கும்.
சுவாச நோய்கள்:
மஞ்சள் பொடியை மிளகு துõள், பனை வெல்லம் சேர்த்து பாலில் தினம் ஒரு வேளை அருந்த இருமல், சளி, ஆஸ்துமா தீரும்.
ஒரு டீஸ்பூன் மஞ்சள் பொடியுடன் கால் டீஸ்பூன் சீரகத்துõள், தேன் சேர்த்து சுடுநீரில் பருக நாட்பட்ட இருமல், மூச்சு திணறல், வறட்டு இருமல் குணமாகும்.
நீரிழிவு:
ஒரு டீஸ்பூன் மஞ்சள் பொடியை நெல்லிக்காய் சாற்றில் கலந்து தினமும் பருக வேண்டும். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
கொலஸ்டீரால் குறைய:
மஞ்சள் கல்லீரலின் செல்களுடன் செயல்பட்டு கெட்ட கொழுப்பை உடலிலிருந்து அகற்றும். மேலும் மஞ்சளில் குர்குமின் இருப்பதால் அதில் உள்ள விட்டமின் பி6 கொலஸ்டீரால் ஆக்ஸிகரணத்தை தடுத்து இதயத்தில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் வராமல் தற்காத்துக்கொள்ளலாம்.
வாத நோய்கள்:
ரத்த வாதம் குணப்படுத்தும். உடலில் வீக்கம், வலியை ஏற்படுத்தும் புரதத்தை மஞ்சள் தடுக்கிறது. தினமும் உணவில் மஞ்சளை தவறாமல் சேர்த்துக்கொண்டால் மூட்டுக்களின் வீக்கம் குணமாகும்.
உடல் பருமன் குறைய:
மஞ்சள் பித்த நீர் சுரப்பை அதிகரிக்கும். இது கல்லீரலில் பித்த நீர் சுரப்பை அதிகரித்து பித்தப்பையில் பித்தநீரை அனுப்புகிறது. இதனால் உணவில் உள்ள கொழுப்பு முழுவதும் உடைக்கப்பட்டு சீரணிக்கப்படுகிறது. இதனால்,அதிக உடல் பருமன் குறைகிறது.
முகப்பரு நீங்க:
தோலில் எண்ணைப் பசை ஏற்படும் ஸ்பேம் அதிகளவு சுரப்பதை மஞ்சள் தடுக்கிறது. மஞ்சள் பொடியை உட்கொண்டு, வெளிபிரயோகமாக பயன்படுத்த மஞ்சளின் கிருமிநாசினி குணத்தால் முகப்பரு குணமாகும்.
ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை தேங்காய் எண்ணை அல்லது பாலுடன் கலந்து பற்றிட முகப்பரு குணமாகும். மேலும், முகப்பருவால் ஏற்படும் தழும்புகளும் குணமாகும். இந்தியர்கள் தங்கள் தோலை பாதுகாக்கவும், தேவையில்லாத ரோமங்களை அகற்றவும், உடலில் வியர்வை நாற்றம் நீங்கவும், நறுமணம் கமழவும், தோல் நோய்கள் வராமல் தடுக்கவும் நம் நாட்டு பெண்கள் தினமும் மஞ்சள் பூசி நீராடுகின்றனர்.
வெண்படை:
மஞ்சள் பொடியை கடுகு எண்ணையுடன் கலந்து பயன்படுத்த வெண்படை குணமாகும்.
500 கிராம் உலர்ந்த மஞ்சள் வேரை பொடித்து 8 லிட்டர் நீரில் ஒரு இரவு முழுவதும் ஊரவைக்கவும். பின் மறுநாள் அதை கொதிக்க வைத்து 8ல் 1 பங்காக வற்றியவுடன் அதை வடிகட்டி 500 மில்லி கடுகு எண்ணையுடன் சேர்த்து வடிகட்டி அந்த எண்ணையை தினமும் 2 வேளை வெண்படை உள்ள இடங்களில் தடவிவரவும். 3 மாதம் தொடர்ந்து உபயோகிக்க நல்ல பலனைப் பெறலாம்.
வயது முதிர்ந்தோர் தினமும் உணவில் தவறாமல் மஞ்சளை பயன்படுத்தினால் நரம்பு கோளாறு, மூளை பாதிப்பு, நினைவு தடுமாறல், ஞாபகமறதி பாதிப்பு இவற்றிலிருந்து விடுபடலாம்.
காயங்கள்:
இந்தியாவில் அதிகஅளவு அடிப்பட்ட காயங்களுக்கும் ரத்த கசிவு காயங்களுக்கும் மஞ்சள் பொடி தடவப்படுகிறது.
வயிற்று புழுக்கள் நீங்க:
மஞ்சள் பொடியை கறிவேப்பிலை இலையுடன் சேர்த்து தினமும் உண்ண குடல் கிருமிகள் அழியும்.
தோல் அரிப்பு நீங்க:
மஞ்சள் பொடியுடன் வேப்பிலை, துளசி சேர்த்து தினமும் உண்ண தோல் அரிப்பு நீங்கும்.
புற்று நோய்கள்:
பல மருத்துவ ஆய்வு கட்டுரையின் முடிவுகளின்படி மஞ்சள், மார்பக, நுரையீரல், புரஸ்தகோள புற்று நோய்களை குணப்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. மஞ்சள் புற்று நோய் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் புற்று பிற இடங்களில் பரவுவதை மஞ்சள் தடுக்கிறது. பெருகும் புற்று நோய் கிருமிகளை அழித்து, பிற உறுப்புகளில் பரவாமல் காக்கிறது. எனவே. புற்று நோய் பாதித்தவர்கள் அதிக அளவு மஞ்சளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மஞ்சள் சில சுவராஸ்ய தகவல்கள்:

இந்தியாவில் ஈரோட்டில் தான் உலகிலேயே அதிக அளவு மஞ்சள் உற்பத்தி செய்யப்படுகிறது. அதனால் தான் ஈரோட்டிற்கு மஞ்சள் நகர் என்ற சிறப்பு பெயரும் உண்டு.
ஒரு நாளைக்கு மஞ்சள் 100 கிராம் வரை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இந்தியர்கள் ஒரு நாளைக்கு 80200 கிராம் மஞ்சளை பயன்படுத்து கின்றனர்.
இந்தியாவில் ஒரு ஆண்டிற்கு 480,000 டன் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் ஆண்டு ஒன்றிற்கு 600,000 டன் மஞ்சள் உற்பத்தி செய்யப்படுகிறது. இது உலகத்தில் செய்யப்படும் மஞ்சள் உற்பத்தியில் 75 சதவீதம்.
மஞ்சள் குறித்து 1730 ஆய்வு கட்டுரைகள் வெளியாகி உள்ளன. அவற்றில் 599 கட்டுரைகள் புற்று நோய் குறித்தும், 23 கட்டுரைகள் ஆர்திரிட்டீஸ் பற்றியும், 16 கட்டுரைகள்அல்ன்மீர் நோய்பற்றியும், 78 கட்டுரைகள் நீரிழிவு பற்றியதுமாகும்.
தொகுப்பு: தேவராஜன்

21 . காயம் காக்கும் வெங்காயம்!

மனிதர்கள் ஆரோக்கியமாக, நிம்மதியாக இருக்க"டயட், கொயட், மெர்சி' இந்த மூன்றையும் பின்பற்ற வேண்டும் என்பது ஒரு ஆங்கில பழமொழி. டயட் இன் ஹெல்த் என்பார்கள் நல் உணவே நல்மருந்தாகும்.
ஆகவே, நம் ஆரோக்கியத்தைக் காக்க, அன்றாட வாழ்க்கை முறையில் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு முறை மற்றும் உணவு வகைகள் எவை எவை என்பதை வர்மா குருகுலம் சீப்டாக்டர் வேல்விழி "உணவே மருந்து' என்ற இத்தொடரில் பெண்கள் மலர் வாசகிகளுக்கு விரிவாக சொல்ல இருக்கிறார்.



வெங்காயத்தை தமிழில் ஈருள்ளி என்பர். ஆங்கிலத்தில் ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்ததாகும். இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புகள், விட்டமின்கள் உள்ளன. எனவே, வெங்காயம் நம் உடம்புக்குத் தேவையான ஊட்டச்சத்தைத் தருகிறது. பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப்பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம்பிடித்திருக்கிறது.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணை காரணமாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், கண்களில் கண்ணீர் வரவும் காரணமாக இருக்கிறது.
சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. சரி, இனி வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.
வெங்காயத்தில் கந்தகசத்து, நீர் சத்து, அலுமினோக்ஸைடு, ஹார்போஹைட்ரேட் ஆகியன அடங்கி உள்ளன.
வெங்காயத்தின் பகுதி உறுப்புகளாக இருப்பவை பூ, தாள், கிழங்கு, விதை ஆகும்.
வெங்காயத்தின் அடிப்படை மருத்துவ குணங்களாக இருப்பவை வெப்பமுண்டாக்கி, சிறுநீர்ப்பெருக்கி, சூதகமுண்டாக்கி, காமம் பெருக்கி, கோளையகற்றி ஆகும்.
வெங்காயத்தை வினிகருடன் சேர்த்து சமைத்துண்ண காமாலை, ஈரல் வளர்ச்சி குறையும்.
வெங்காயத்துடன் 23 மிளகு சேர்த்துண்ண வயிற்று வலி, டென்ஷன் குறையும்.
நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும். பித்த ஏப்பம் மறையும்.
வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும். வெங்காயத்தை அவித்து, தேன்,கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்பு தளர்ச்சி குணமாகும்.
வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு துõக்கம் வரும்.
வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணை கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுகளில் ஏற்படும் நேரத்தில் தடவி வர வலி நீங்கும்.
வெங்காயத்தை அடரத்து தொண்டையில் புற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.
ஆறு வெங்காயத்தை அரை லிட்டர் நீரிலிட்டு பருகினால் சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும். வாத நோய் குணமாகும்.
வெங்காயத்தோடு, வெற்றிலை அரைத்து நகசுத்திக்கு போட்டு வந்தால் நகசுத்தி குணமாகும்.
சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாக பயன்படுத்த வேண்டும்.
வெங்காயத்தை விளக்கெண்ணையில் வதக்கிச் சாப்பிட மலச்சிக்கல் நீங்கும்.

பெண்களுக்கு உற்ற தோழி வெங்காயம்:

வெங்காயத்தில் கொழுப்பைக்குறைக்கும் குணம் இருப்பதால் குண்டாக இருப்பவர்கள் தொடர்ந்து உணவில் வெங்காயத்தைப் பயன்படுத்தினால் மெலியலாம்.
நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கி, முகத்தில் அழகும், பொலிவும் உண்டாகும்.
தலையில் உள்ள பொடு நீங்க, முடி உதிர்வதை தடுக்க, முடி வளர, முடி போசுக்குடன் பளிச்சிட வெங்காயத்தை அரைத்து தலைக்கு பூசி வரவேண்டும்.
தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் உதிரச்சிக்கல் நீங்கும்.
வெங்காயத்தில் சூதகமுண்டாக்கி செய்கை இருப்பதால் இதனை வயதாகியும் ருதுவாகாத பெண்கள், மாதவிடாய் கோளாறு உடைய பெண்கள் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட மாதவிடாயை துõண்டும்.
குழந்தையில்லாத பெண்களுக்கு வெங்காயத்தில் உள்ள கந்தக சத்து கர்ப்பப்பை புழுவை நீக்கும், மலட்டுதன்மையை நீக்கும்.
வெளி உபயோகம்:
காயம், புண், சீழ் இவைகளுக்கு வெங்காயத்தை மஞ்சள், வேப்பிலையுடன்அரைத்து தடவி வர விரைவில் காயம் நீங்கும்.
வெங்காய சாறு காதுகளில் விட்டால் காது வலி நீங்கும்.
தேமல், படை, சொரி இவைகளுக்கு வெங்காய சாறு பூசிவந்தால் குணமாகும்.
பொதுவாக வெங்காயம் வாத நோய், மூல நோய், குன்ம நோய், இதயநோய்,அல்சர் மலட்டு தன்மை, மாதவிடாய் முதலிய நோய்களுக்கு வெங்காயம் உகுந்த மருந்து பொருளாகும்.
எனவே, தினசரி உணவில் வெங்காயத்தை ரசம், குழம்பு, சாம்பார், பொரியல், வத்தல்,சட்னி இவைகளிலும் தோசை, அடை,வடை என பல வகைளில் உணவில் வெங்காயத்தைச் சேர்த்து வந்தால் உணவே மருந்தாகும்!
தொகுப்பு: தேவராஜன்

22 . மாதவிடாய் வலி நீக்கும் புதினா!

"அருசி யொடுவாந்தி யக்கினி மந்தங்
குருதி யழுக்குமலக் கொட்ட விரியுந்
துதியதன்று சோறிறங்குந் தொல்லுலகில் நாளும்
புதியனல் மூலி புகல்' அகத்தியர் குணவாகடம்
புதினாவின் பெருமை பற்றி கூறும் பாடல் இது. இந்தப் பாடலின் பொருள் புதினா, பசியின்மை, வாந்தி, வயிற்றுமந்தம், செரியாமை, குருதியழுக்கு முதலிய நோய்கள் தீர்க்கும் என்பதாகும்.

புதினா சிறுசெடி வகையைச் சேர்ந்தது. இது இமாலயத்தைச் சேர்ந்த மேற்கு சாரல் நாடுகளிலும், தென்னிந்தியா, வங்காளம் முதலிய இடங்களிலும் பயிரிடப்படுகிறது. புதினாவின் கீரை, இலை என முழுமையும் மருத்துவம் குணம் கொண்டவை. புதினாவின் சுவை கார்ப்பு, துவர்ப்பு.
புதினாவில் உள்ள வேதிப்பொருட்கள்:
அஸ்கார்பிக் அமிலம்
ரிபோபிளவின்
தையமின்
அமினோ அமிலங்கள் மற்றும்
மென்தால்
ஐசோமென்தோன்
மென்தைல் அசிட்டேட்
மென்தோ பியுரான் முதலியன புதினாவில் இருக்கிறது.
செய்கை:
பசித்துõண்டி வயிற்றில் அசீரணத்தை போக்கி பசியை அதிகப்படுத்தும். சிறுநீர்ப்பெருக்கி நீர்ப்பெருக்கி செய்கை இருப்பதால் கல்லடைப்பு நோயினர் பயன்படுத்தலாம்.
வெப்பமுண்டாக்கி உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து வெப்பத்தை உண்டாக்கும்.
அகட்டுவாயகற்றி வயிற்று பொருமலை நீக்கி வாயுவை அகற்றும்.
இசிவகற்றி வயிற்றுவலியை போக்கும்.
மருத்துவ பயன்கள்:
காமாலை நோய்க்கு:
இதனை உலர்த்தி குடிநீரிட்டு 30 மில்லி முதல் 60 மில்லி வீதம் கொடுக்க காமாலை குணமாகும்.
வாந்திக்கு:
புதினா இலை, சீரகம், ஓமம் இவற்றை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அரைத்து, மோரில் அருந்திவர வாந்தி குணமாகும்.
சூதகக்கட்டு நீங்க:
புதினா இலையுடன் பெருங்காயத்தை சேர்த்து அரைத்து விழுதாக்கி ஒரு மாதம் தொடர்ந்து உண்ண சூதககட்டு என்று சொல்லப்படுகின்ற மாதவிடாய் கோளாறு குணமாகும்.
துõக்கத்துக்கு:
புதினா இலை, கற்பூரப்புல் இரண்டும் சம அளவு எடுத்து குடி நீரிட்டு அருந்த நல்ல துõக்கம் ஏற்படும்.
வாய்துர்நாற்றம்:
புதினா இலை, துளசி இலை, ஏலம், கிராம்பு இவை சமஅளவு எடுத்து பொடித்து நீரில் கலந்து ஒரு வாரம் அருந்த வாய்துர்நாற்றம் நீங்கும்.
தோல் நோய் நீங்க:
அருகம்புல், புதினா, இலை, வேம்பு இலை, துளசி இவை 5 கிராம் வீதம் எடுத்து 5 மிளகு இவற்றுடன் 100மில்லி நீருடன் சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு மாதம் வெறும் வயிற்றில் அருந்தி வர ரத்தத்தில் அழக்கு இருப்பதால் ஏற்படும் தோல் அரிப்பு, படை முதலியன நீங்கும். ரத்த சுத்திக்கு இது சிறந்தது.
இருமல், சளி குணமாக:
புதினா இலை, ஆடாதோடை இலை இரண்டும் கசாயமாக்கி ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து 3 நாட்கள் அருந்த இருமல் சளி குணமாகும்.
வயிற்று வலி நீங்க:
புதினா இலை, ஓமம், சீரகம் சேர்த்து கசாயமாக்கி குடித்து வர 30 நிமிடத்தில் வயிறு வலி நீங்கும். இது மாதவிடாய் காலத்தில் வரும் வயிற்று வலிக்கும் மிகச்சிறந்தது. ஏனெனில், இதில் உள்ள புதினா, ஓமம் இரண்டுமே சிறந்த இசிவகற்றி.
முகப்பரு நீங்க:
கருவளையம், பரு நீங்க புதினா இலையை பாலில் கசகசாவுடன் சேர்த்து அரைத்து தொடர்ந்து பற்றிட்டு அரைமணிநேரம் கழித்து முகத்தை சுத்தமான நீரில் கழுவவும்.
புதினாவை உணவில் பயன்படுத்தும் முறை:
புதினாவை கீரையாக சமைத்து உண்ணலாம். இட்லி, தோசை முதலியவற்றுக்கு சட்னியாக பயன்படுத்தலாம். மேலும் ஊறுகாய், துவையல் செய்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இட்லிபொடி, பருப்புபொடி,கறிவேப்பிலை பொடியுடன் புதினாவை பொடித்து இவற்றுடன் சேர்க்கலாம். குழந்தைப் பருவத்தில் இருந்தே புதினாவை கொடுத்து வந்தால் வயிறு தொடர்பான நோய்கள் வராமல் காக்கலாம்.
புதினா சிறந்த கிருமி நாசினி எனவே, சமையலில் சாம்பார், ரசம், எல்லா வகை பொரியல், கூட்டு கொத்தமல்லியுடன் பயன்படுத்தி நோயின்றி நலமாக வாழலாம்.
காபி,டீ அருந்துவதற்கு பதில் மின்ட் டீ அருந்த மூளை புத்துணர்ச்சி பெறும். ஞாபகசக்தியும் பெருகும்.
புதினா எண்ணை:
புதினாவிலிருந்து மணமிக்க தைலம் எடுக்கப்படுகிறது. இதில் மென்த்தால் நிறைந்திருக்கும். இந்த எண்ணை தலைவலியை குணமாக்கும். நரம்பு வலி, இடுப்பு வாத நோய், கீல் வாத நோய்களை குணமாக்கும்.
புதினா எண்ணை தனியாகவோ அல்லது யூகலிப்டஸ் தைலம் மற்றும் கற்பூரம், பாரபின் முதலியவற்றோடு சேர்த்து தலைவலி, மூட்டுவலிக்கு தடவலாம்.
சுரம்,தும்மல் நீங்க புதினா எண்ணையை வெந்நீரில் போட்டு ஆவி பிடிக்கலாம்.
தொகுப்பு: தேவராஜன்

23 . இருமல்,சளி நீக்கும் எலுமிச்சை

எலுமிச்சை என்று நினைத்தாலே நாவில் எச்சில் ஊறும்; உடல் புளிப்புணர்வில் சிலிர்க்கும். அறுசுவையில் ஒன்று புளிப்பு. உணவில் சமச்சீர் சுவை இருக்க வேண்டும். புளிப்பு சுவையைஎலுமிச்சை தருகிறது.எலுமிச்சம் ஊறுகாய் உண்ண பிடிக்கா மல் இருந்தாலும் ஒருபிடிஉணவையும் சாப்பிட வைக்கும். எனவே,அன்றாட உணவில் புளிப்பு சுவை சேர்க்க எலுமிச்சை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வாந்தி,பித்தம்,சுரம் என்றாலே ஒரு துண்டு எலுமிச்சையை சாப்பிடு. தாகமா,உடம்பு சூடுதணிக்க வேண்டுமா ஒரு கிளாஸ் லெமன் ஜூஸ் குடி என்பது பாட்டி வைத்தியம்.

எலுமிச்சை வெப்பமண்டல பகுதிகளில் விளையக்கூடிய ஒரு பயிர்வகை. இது இந்தியாவில் வெப்பமண்டலப்பகுதிகளில் காணப்படுகிறது. குறிப்பாக, மேற்கு வங்காளம்,உத்திரப்பிரதேசம்,பஞ்சாப்,மத்தியபிரதேசம்,மகாராஷ்டிரம்,கர்நாடகம்,ஆந்திரா மற்றும் தமிழகத்தில் அதிகம் பயிரிடப்படுகிறது.
எலுமிச்சை இலை,காய்,பழம்,பழரசம்,எண்ணை மருத்துவ குணம் கொண்டவை. இலை புளிப்பு சுவை கொண்டது. இது குளிர்ச்சி உண்டாக்கியாக செயல்படுகிறது.
காய்,பழம் புளிப்பு சுவை கொண்டவை. இதுவும் குளிர்ச்சி உண்டாக்கி.
தோல் பளிப்பு சுவை உடையது. இது தடிப்புண்டாக்கி,அகட்டுவாயகற்றி.
எலுமிச்சையில் உள்ள சத்துப் பொருட்கள்:
100கிராம் பழத்தில், 28 கலோரி,நீர்சத்து 90%,புரதசத்து0.8கிராம்,கொழுப்புசத்து0.5 கிராம்,கார்போஹைட்ரேட்8.2 கிராம்,நார்ச்சத்து0.6 கிராம்,சாம்பல் சத்து5.4 கிராம்.
தாது உப்புக்கள்:
கால்சியம்33மி.கி.,பாஸ்பரஸ்15மி.கி.,இரும்புசத்து0.5மி.கி., மெக்னீசியம்0,சோடியம்3மி.கி.,பொட்டாசியம்137மி.கி.
உயிர்சத்துக்கள்:
விட்டமின்எ12மி.கி.,விட்டமின்பி10.5மி.கி.,விட்டமின்பி20.02மி.கி.,விட்டமின்சி52மி.கி.,நியாசின்0.1மி.கி. மேலும், இதில் 30க்கும் மேற்பட்ட எளிதில் ஆவியாகும் எண்ணைகளும் இருக்கிறது.
ஆல்கஹால்கள்,ஆல்டிஹைடுகள்,அஸ்டர்கள்,ஹைட்ரோகார்பன்,கீட்போன்கள்,சிட்ரிக் அமிலம்,சிட்ரால்,டெர்பினால்கள் உள்ளன. பழச்சாற்றில் சிட்ரிக் அமிலம் அதிகம் காணப்படுகிறது.
பொது குணம்:
அகத்தியர் குணவாகடம் பாடல் மூலம் எலுமிச்சையில் இது முக்குற்றத்தை போக்கும்,சூலை எனசொல்லப்படுகின்ற கொடிய வலியையும்,வாதகப சூலையையும் குணமாக்கும்.
வாந்தியை போக்கும். குன்மம் என்கிற வயிற்றுவலி, அல்சரை குணமாக்கும். மருந்தீடு என்றழைக்கப்படும் ஈடுமருந்தை போக்கும்.
அழல்பித்தவெப்பு தணிக்கும்.
எலுமிச்சம் பழத்தினால், தாகம்,மயக்கம்,வாந்தி,வாய்குமட்டல்,நீர்வேட்கை,வெறிநோய்,கண்நோய்,காது வலி,நகச்சுற்றை ஆகியவை குணமாகும்.
எலுமிச்சம் பழத்தை ரசமும்,ஊறுகாயுமாக உணவில் பயன்படுத்திவர,திரை,பிடிப்பு.பெருவயிறு,பக்கசூலை,முடம்,வெறிநோய்,மயக்கம்,மனசோர்வு நீங்கும்.
மருத்துவ பயன்கள்:
1. விட்டமின் சி குறைவால் வரும் ஸ்கர்வி நோயை போக்கும். மேலும் வராமல் தடுக்க இது சிறந்த தடுப்பு மருந்து. கனிகளின் சாற்றிலுள்ள சிட்ரிக் அமிலம் ஸ்கர்வி நோயை போக்கும்.
2.பசியை துõண்டும்.
3.வயிற்று வலியை போக்கும்.
4.வாந்தியை,பித்தத்தை நிறுத்தும்.
5.வாய்புண்ணை நீக்கும்.
6.கணையை பெருக்க நோய்களுக்கு சிறந்தது.
7.நுரையீரல் நோய்களை போக்கும்.
பயன்படுத்தும் முறைகள்:
இருமல்,சளி குணமாக: எலுமிச்ச பழச்சாற்றில், தேன் சேர்த்து வெந்நீரில் அருந்த இருமல்,சளியை போக்கும்.
வாந்தி நீங்க: எ<லுமிச்சம் பழச்சாற்றில் நீர்,உப்பு சேர்த்து பருக வாந்தி குணமாகும்.
ஆஸ்துமாவை போக்க:
எலுமிச்சை பழசாறு,ஆடாதோடை இலை,துளசி இலை,இஞ்சி சேர்த்து டீயாக கொதிக்க வைத்து பருக ஆஸ்துமா,மூக்கடைப்பு குணமாகும்.
நாட்பட்ட கழிச்சல் தீர:
சீரகத்தை தேன்விட்டு வறுத்து அதனுடன் பழசாறு சேர்த்து நீர்விட்டு காய்ச்சி தர கழிச்சல் ,வாந்தி குணமாகும்.
பற்களின் ஈறுபலமடைய:
எலுமிச்சம் பழசாற்றில் நீர்,உப்பு சேர்த்து கொப்புளிக்க பற்களின் ஈறு பலப்படுவதோடு ஈறுகளில் குருதிகசிதல் நிற்கும்.
முகம் பொலிவு பெற:
எலுமிச்சம் பழச்சாற்றில் சிறிது தேன் சேர்த்து தடவி,அரை மணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ முகத்தில் எண்ணை வடிதல்,கரும்புள்ளிகள் மறையும். வாரம் ஒரு முறை செய்தால்கூட போதும்.
நீர் வேட்கை தணிய:
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் தாகத்தை போக்க எலுமிச்சம் பழச்சாற்றில் உப்பு சேர்த்து தரலாம்.
இதயபடபடப்பு நீங்க:
தினமும் 10 மில்லி எலுமிச்சம்பழச்சாறு பருக இதய படபடப்பு நீங்கும்.
வாத நோய்களுக்கு:
எலுமிச்சம் சாறு வாதநோய்,நரம்பு வலிகளுக்கு சிறந்தது.
பொடுகு நீங்க:
எலுமிச்ச பழசாற்றை தலையில் ஊறவைத்து பின் தலைமூழ்க பொடுகு நீங்குவதுடன் உடல் வெப்பமும் தணியும்.
ஆகவே, வீட்டுத்தோட்டத்தில் ஒரு எலுமிச்சை மரம் இருந்தாலே, அந்தக்குடும்பத்தில் ஆரோக்கியம் பெருகும்.எலுமிச்சை மரம் தோட்டத்தில் இல்லாதவர்கள் மலிவு விலையில் கிடைக்கும் போது எலுமிச்சையை வாங்கி ஊறுகாய் போட்டு வைத்துக்கொள்ளலாம். எப்படியோ வாரத்தில் ஒரு நாளாவது எலுமிச்சம் பழத்தை உணவில் சேர்த்துக்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் போதும் தொட்டதுக்கெல்லாம் மாத்திரை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
தொகுப்பு: தேவராஜன்

24 . ஞாபக சக்தியை அதிகப்படுத்தும்
வெண்டைக்காய்!


"வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும்' என்று ஒரு பேச்சுக்கு குழந்தைகளிடம் சொல்வோம். வெண்டைக்காயை பச்சையாகக் கூட சாப்பிடலாம். இது கை விரல் போல நீண்டு இருப்பதால் ஆங்கிலத்தில் லேடிஸ் பிங்கர் என்றழைக்கின்றனர். இந்தியில் பிண்டி என்றும், சமஸ்கிருதத்தில் கோஜிவாஹா என்றும் கூறப்படுகிறது.
வெண்டைக்காயின் இலை, காய், விதை எல்லாம் மருத்துவகுணம் கொண்டவையாகும்.
"கண்ட கிராணி வடிய அதிசாரம்
விண்டவெண் சீதரத்தம் மேவுங்காண் ஒண்டொடியே
வண்டற்காம் வெய்யகப வாதமிகும் வாய்க்குணவாம்
வெண்டைக்காய் உண்பார்க்கு விள்'
என்ற இந்த சித்தர் பாடல், நாட்பட்ட கழிச்சல், பெருங்கழிச்சல், குருதிகழிச்சல், வாதமும், கபமும் குணமாகும் என்று கூறுகிறது.
ஊட்டச்சத்துக்கள்:
வெண்டைக்காயில் விட்டமின் சி2, விட்டமின் ஏ, விட்டமின் பி அதிகளவு உள்ளது.
மேலும் இதில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளது. மற்றும் வெண்டைக்காயில் நார் சத்து அதிகமாக இருக்கிறது.
மருத்துவ பயன்:
நீர்ச்சுருக்கு குணமாக:
வெண்டைக்காயை உலர்த்தி வற்றலிட்டு, கஷாயமாக்கி குடிக்க நீர் எரிச்சல் குணமாகும்.
வெள்ளை நோய்க்கு:
பெண்களுக்கு அதிக உடல் சூட்டினால் ஏற்படும் வெள்ளை படுதலை குணமாக்க, வெண்டைக்காயின் வழுவழுப்பான சவ்வுடன் சோற்றுகற்றாழை சேர்த்து இரண்டையும் சமஅளவில் அரைத்து ஒரு தேக்கரண்டி மோருடன் பெரிய நெல்லிக்காய் வீதம் ஒரு மாதம் தொடர்ந்து உண்ண உடல் சூடு தணியும். வெள்ளை நோய் குணமாகும்.
உடல் சூடு தணிய:
வெண்டைக்காய் விதையை பொடித்து சீரகத்துõளுடன் சேர்த்து உண்ண உடல் சூடு தணியும். கண் எரிச்சல் குணமாகும்.
நாட்பட்ட கழிச்சல் குணமாக:
வெண்டைக்காயின் வழுவழுப்பான சவ்வை மாதுளம்பழம் சாற்றில் ஒரு தேக்கரண்டி வெந்தயதுõள் சேர்த்து அருந்த ஏழு நாளில் நாட்பட்ட கழிச்சல் முழுவதுமாக குணமாகிவிடும்.
பால்வினை நோய்க்கு:
ஆண்களுக்கு ஏற்படும் பால்வினை நோய்களான சிபிளிஸ், கோணரியோவுக்கு பிஞ்சு வெண்டைக்காய் சிறந்தது. வெண்டைக்காய் பிஞ்சை சூப்பாக வைத்து பருக நீர்தாரை எரிச்சல் குணமாகும்.
தோல் வறட்சி நீங்க:
வெண்டைக்காயை வாரம் 3 வேளை உணவில் சமைத்து உண்ண தோல் வறட்சி, தோல் வெடிப்பு நீங்கும். தோலுக்கு நல்ல நிறமுண்டாகும்.
நரம்பை வலுப்படுத்த:
வெண்டைகாயை வற்றலிட்டு ஊறுகாயாக பாகம் செய்து உண்ண நரம்பை வலுப்படுத்தும். ஞாபகசக்தியை அதிகப்படுத்தும்.
ஞாபக சக்தியை அதிகரிக்க:
வெண்டைகாய், சிறுகீரை, முறுங்கை கீரை இவை முறையே ஒவ்வொரு நாளாக சமைத்து உண்ண ஞாபகசக்தியை அதிகப்படுத்தும். மூளைக்கு அதிக குருதியை பாயச்செய்து மூளையை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.
பாலுணர்வு அதிகரிக்க:
வெண்டைகாயை ஆண், பெண் இருபாலரும் பொரியல், சாம்பாராக உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள உடல்சூட்டை குறைத்து பாலுணர்வை அதிகரிக்கும்.
தொகுப்பு: தேவராஜன்


25 . நஞ்சு முறிக்கும் துளசி!

துளசியை ஒரு தெய்வீக சின்னமாக எண்ணி வழிபடும் வழக்கம் நமக்கு உண்டு. நம் மூதாதையர்கள் துளசியில் எண்ணரிய பயன்பாடுகள் உள்ளதை அறிந்ததால்தான் அதை மறைமுகமாக தெய்வீக சின்னமாக உருவகப்படுத்தி நமக்கு சொல்லாமல் சில அர்த்தங்களை சொல்லிச் சென்றிருக்கிறார்கள். வீட்டுக்கு ஒரு துளசி செடி இருந்தாலே அது, ஒரு மினி பார்மசிக்கு ஈடாகிடும்.
இது நாடு முழுவதும் பயிராகும் ஒரு மணமுள்ள செடி. இதற்கு காரமும், மணமும் உண்டு. அரி, ராமதுளசி, கிருஷ்ணதுளசி, திருந்துளாய், வனம், விருந்தம், மாலலங்கல், துழாய் என்றும் துளசி அழைக்கப்படுகிறது. துளசியில் நற்றுளசி, கருந்துளசி, செந்துளசி, நிலத்துளசி, கல்துளசி, நாய்த்துளசி, முள்துளசி என பலவகையுண்டு.
துளசி இலை, விதை கொண்ட முழுதாவரம். இதன் சுவை கார்ப்பு.
செய்கை:
இலை: வெப்பமுண்டாக்கி, கோழையகற்றி, வியர்வை பெருக்கி
விதை: உள்ழைலாற்றி
வேதிப் பொருட்கள்: கற்பூரம், பி.கேரியோபில்லீன், சினியோல், டெசில் ஆல்டிஹைடு, யூஜினால், பால்மிடிக் அமிலம், ஸ்டியாரிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், காம்பீன், ஒரியான்டில் மற்றும் இலைகளில் உர்சோலிக் அமிலம் உள்ளது.
துளசியின் பொது மருத்துவ குணம்:
துளசியை உட்கொள்ள, அதுவெறிநோயை போக்கும். மூக்கிலிருந்து நீர்பாயும்(பீனிச) நோயை தடுக்கும். உடலின் வெப்பத்தை அகற்றும். துளசி இலை ரசத்தால் சுரநோய் போகும். வாதம் தொடர்பான நோய்களை அகற்றும்.
நற்துளசி:
கபத்தை போக்கும். வயிற்று வலி குணமாகும். அத்திசுரம் குறையும். தாகத்தை நீக்கும். மந்தத்தை நீக்கும். சுவையின்மையை போக்கும். உடலுக்கு வெப்பத்தை தந்து கபத்தை போக்கும்.
நிலத்துளசி:
தாய்ப்பாலால் குழந்தைகளுக்கு வரும் மாந்தத்தை போக்கும். கணச்சூடு நீக்கும். கபசுரம், பித்த சுரம், குளிர் சுரத்தை போக்கும்.
நாய் துளசி:
கபத்தை நீக்கும். குத்திருமல், சன்னி நோய் போக்கும். துளசியின் ரசம், கற்பம் இவைகளை உட்கொண்டாலும், வேரின் ரசத்தை நல்லெண்ணையுடன் கூட்டி தைலமாய் உபயோகித்தாலும் பயித்தியம், வாதப்பிணி, கபப்பிளி, சன்னி முதலியன நீங்கும்.
கல் துளசி:
இது தீச்சுரம், கட்டி, வண்டுகடி, காணாக்கடி, கோழையைத் தள்ளுகின்ற ஐயசுரத்தை போக்கும்.
முள் துளசி:
எலி நஞ்சு, வெட்டுப்புண், கபம் இவைகளுக்கு முள்துளிசி மருந்தாகும்.
செந்துளசி:
விஷத்தை தீர்க்கும். கபத்தை போக்கும். சைனசை போக்கும்.
கருந்துளசி:
இருமல், இரைப்பு குணமாகும். செருமல் நீங்கும். வயிற்றுபுழு நீங்கும். மார்புசளி, சூலை குணமாகும்.
துளசியின் மருத்துவ பயன்கள்:
துளசியின் இலை சுவாசப் பாதையில் உள்ள தொற்று நோய் கிருமிகளை அழிக்கிறது.
அலர்ஜியினால் வரும் ஒவ்வாமையை நீக்குகிறது.
நுரையீரலைப் பலப்படுத்துகிறது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
வயிற்று வலியை போக்குகிறது. அதிகுருதி அழுத்தம் குறைய உதவுகிறது. இருமல், ஆஸ்துமா உபாதைக்கு தீர்வாக இருக்கிறது. மனஅழுத்தம், அல்சர், தோல் நோய்கள், முகம் பொலிவிழப்பு இவைகள் நீங்க உதவுகிறது.
சுரத்தை போக்கும் அற்புத மூலிகை துளசி.
பயன்படுத்தும் முறை:
துளசி சாறு, இஞ்சி சாறு சம அளவு எடுத்து, அதனுடன் மிளகு துõள் ஒரு சிட்டிகை சேர்த்து தேனில் அருந்த மூக்கடைப்பு, தும்மல், நெஞ்சு சளி குணமாகும்.
ஆஸ்துமா குணமடைய தினமும் துளசி சாறு 15 மில்லி, ஒரு தேக்கரண்டி தேனுடன் அருந்த சுவாசப் பாதையில் உள்ள அடைப்புகளை நீக்கி சுவாசம் நன்கு ஏற்பட உதவும். துளசி விதையை பவுடராக்கி பாலில் அருந்த உடல் உரமடையும். பாம்பு கடி, தேள் கடிக்கு துளசி சாறுடன் வேப்பம் இலை சாறு, மிளகு சேர்த்து அருந்தி, கடிவாயில் பூச நஞ்சு முறிவு ஏற்படும்.
துளசி, சுக்கு, பனை வெல்லம், பால் சேர்த்து தயாரிக்கப்படும் டீயை அருந்த சோர்வு நீங்கும், மூளையை சுறுசுறுப்பாக்கும். துளசி வேரை பொடித்து நெய்யோடு கலந்து அருந்த ஆண்மை அதிகரிக்கும்.
மனசோர்வு நீங்க தினமும் காலையில் 15 துளசி இலை, 3 பாதாம் பருப்புடன் சேர்த்து அருந்த மனசோர்வு நீங்கி உடல்,உள்ளம் பலமடையும். ஆ ழ்ந்த உறக்கம் ஏற்படும். துளசியை பாலிட்டு காய்ச்சி உண்ண கபம் நீங்கும்.
துளசி இலையை நீர் சேர்த்து காய்ச்சி ஆவி பிடிக்க சுரம் நீங்கும். விதையை நீரில் அரைத்து உண்ண குத்திருமல், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோயை போக்கும். கொசுக்கள் ஒழிக்க துளசி புகை சிறந்தது
துளசி இலை கஷாயம் மலேரியாவுக்கு சிறந்தது.
தொகுப்பு: தேவராஜன்

26 . பித்தத்தை போக்கும் நெல்லிக்காய்!

நெல்லிக்கனி என்றதுமே மன்னர் அதியமான், அவ்வையார் நட்பின் பெருமை நம் நினைவுக்கு வந்துவிடும். அவ்வையார் நீடுழி வாழ வேண்டும் öன்று ஆசைப்பட்ட மன்னர் அதியமான் அவ்வையாருக்கு பரிசாக நெல்லிக்கனியைக் கொடுத்தார். இதன் மூலமே ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ நெல்லிக்கனி உதவும் என்பதும்,நெல்லிக்கனி உள்ளத்துக்கு மட்டுமல்ல; உடலுக்கும் ஆரோக்கியமானது என்றும் புரியும். ஒரு ஆப்பிளில் இருக்கும் சத்து ஒரு நெல்லிக்கனியில் இருக்கிறது என்று கூறுவார்கள் மருத்துவர்கள்.
நெல்லிக்கனியின் தாயகம் இந்தியா என்றபோதிலும், இது சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வளர்க்கப்படுகிறது.
நெல்லிக்கனிக்கு ஆமலகம், ஆம்பல், மிறுதுபலா, தாத்தாரி, அமலா என்ற சிறப்பு பெயர்களும் உண்டு.
மருத்துவ பயன்பாடுடைய பாகங்கள்:
இலை, பூ, பட்டை, வேர், காய், விதை எல்லாம் ஒவ்வொரு மருத்துவ குணம் கொண்டவையாகும்.
இதன் புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு சுவை பல விதங்களில் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.
இலை, பட்டை, பழம் துவர்ப்பு சுவைக் கொண்டவை.
பூ: குளிர்ச்சி உண்டாக்கி, மலமிளக்கி.
நெல்லிக்கனியில் உள்ள வேதிப்பொருட்கள்:
பாலிப்பினால், டேனின்கள், பிளேவனாய்டுகள், ஆவியாகும் மற்றும் ஆவியாகாத எண்ணை சத்துக்கள், கரோடின், நிகோடினிக் அமிலம், ரிபோபிளேவின், டி குளுக்கோஸ், பெக்டின் ஆகியவை அடங்கியிருக்கின்றன.
நெல்லிக்கனியால் குணமாகும் நோய்கள்:
பித்தம், பீனிசம், வாய்நீர்கரப்பு, வாந்தி, மயக்கம் முதலியன தீரும். மேலும் நெல்லிக்கனியில் உள்ள இனிப்பு சுவையால் பித்தம் நீங்கும். புளிப்பு சுவையால் வாதம் நீங்கும், துவர்ப்பு சுவையால் கபம் குணமாகும். இதுமட்டுமல்லாமல் மேக நோய்களான மதுமேகம், சர்க்கரை நோய் குணமாகும்.
நெல்லிக்கனி வேர்: நெல்லிமர வேர் வாந்தி, சுவையின்மையை நீக்கும்.
நெல்லி முள்ளி: உலர்ந்த நெல்லிக்காய்க்கு நெல்லி முள்ளி என்று பெயர். இதனால் உடல் சூடு, பித்த வாந்தி குணமாகும்.
என்புருக்கி, இளைப்பு நோய், விந்து நஷ்டம் குணமாகும்.
மருத்துவ பயன்கள்:
* ரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரை அளவைக் குறைக்கும்.
*கொழுப்பை குறைக்கும்
*கல்லீரலை ஊக்குவித்து பலப்படுத்தும்.
* செரிமான சக்தியை அதிகப்படுத்தி பசியை துõண்டும்
*ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும்
*மலச்சிக்கலை போக்கும்
*குளிர்ச்சியைத் தரும்
*மூளையை பலப்படுத்தி அறிவை பெருக்கும்
*இருமல், சளி, ஆஸ்துமாவை குணப்படுத்தும்
*இதயத்துக்கு இதமானது
*தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும்
*தோல் வறட்சியை நீக்கும்
*புற்றுநோய் வராமல் தடுக்கும்
* பற்கள், எலும்புகளை பலப்படுத்தும்
*சுரத்தை போக்கும்
பயன்படுத்தும் முறை:
கண்பார்வை அதிகரிக்க: தினமும் காலையில் ஒரு நெல்லிக்கனியை உண்டு, இரவு நெல்லிக்காய் பவுடர் ஒரு தேக்கரண்டி உண்ண கண்பார்வை அதிகரிக்கும்.
கண் எரிச்சல் நீங்க: நெல்லிக்கனியை பச்சையாக அரைத்து தலையில் தேய்த்து, ஊறவைத்து பின் தலை குளிக்க கண் எரிச்சல், தலைபாரம் நீங்கும்.
அஜீரணம் நீங்க: 2 ஸ்பூன் நெல்லிச் சாற்றில் 30 மில்லி சீரக தண்ணீர் சேர்த்து 10 நாட்கள் பருக அஜீரணம் நீங்கி, பசி அதிகமாகும்.
இருமல், சளி நீங்க: நெல்லிச்சாற்றில் தேன் சேர்த்து 2 வேளை அருந்த கபம் தீரும்.
உடல்வறட்சி நீங்க: டீயில் நெல்லிக்கனி ஒரு துண்டு இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து சர்க்கரை, பால் சேர்த்து தினமும் ஒரு வேளை அருந்த உடல்வறட்சி நீங்கும்.
மூலம் நீங்க: நெல்லி வற்றல், சுண்டை வற்றல் உலர்த்தி பொடி செய்து தினமும் உறங்கு முன் 2 ஸ்பூன் வெந்நீரில் அருந்த மூலம், மலச்சிக்கல் குணமாகும்.
ரத்த சுத்திக்கு: தினமும் பச்சை நெல்லிக்காய் சாற்றை 15 மில்லி 100 மில்லி பாலில் ஒரு மாதம் பருக ரத்தம் சுத்தியாகும்.
மாதவிடாய் வயிற்று வலி குணமாக: நெல்லிக்காயை வேகவைத்து அரைத்து அதனுடன் தேன் சேர்த்து பருக வயிற்று வலி நீங்கும்.
சர்க்கரை நோய் குணமாக: நெல்லிக்காய் வற்றலை வெந்தயம் சேர்த்து தினமும் 2 ஸ்பூன் வெறும் வயிற்றில் உண்ண கணையம் பலப்படும். சர்க்கரை அளவு குறையும்.
மேலும், நெல்லிக்காயை துவையலாக உண்ண மயக்கம் தீரும். நெல்லி இலைகொழுந்தை அரைத்து மோரில் பருக, கழிச்சல் நீங்கும். நெல்லி வற்றலை குடிநீர் செய்து, சர்க்கரை, பால் சேர்த்து சாப்பிட வாந்தி,பிறப்புறுப்பு ண், சூடு தீரும்.
நெல்லிச்சாற்றை பாலுடனும் தேனுடனும் கலந்து பருக உடல் எடை அதிகரிக்கும்.
தொகுப்பு: தேவராஜன்


27 . தொழுநோயை குணப்படுத்தும் வல்லாரை!

வல்லாரை கீரைக்கு "யோசனை வல்லி' என்ற சிறப்பு பெயரும் உண்டு. இது நம்நாட்டில் நீர்நிலைகளிலும், தோட்டங்களிலும் அதிகம் காணப்படும். இது பூண்டு வகையை சேர்ந்தது.
இதன் இலை வடிவமானது மூளை, இதயம், சிறுநீரகத்தின் வடிவை ஒத்து காணப்படும். இதன் அமைப்பிலிருந்தே இதன் மருத்துவப்பயனை அறியலாம். மூளை வடிவில் இருப்பதால் நினைவாற்றல், அறிவை பெருக்கும். இதய வடிவில் இருப்பதால் இதயத்தை பலப்படுத்தி ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். சிறுநீரக வடிவில் இருப்பதால் அதிக யூரியா, பாஸ்பேட் உப்புகளை வெளியேற்றி சிறுநீரக பாதிப்பை தடுக்கும்.

பொதுவான மருத்துவ குணம்:
வாய்ப்புண், கழிச்சல், ரத்தகழிச்சல், வயிற்றுக்கடுப்பு முதலியனவற்றை குணமாக்கும் சக்தியைக் கொண்டிருப்பது வல்லாரையின் அம்சமாகும்.

மருத்துவ பயன் உடைய பகுதிகள்:
இலை, தண்டு, விதைகள் அனைத்தும் மருத்துவ பயன் உடையது.

செய்கை:
உடல்தேற்றி, உடல் உரமாக்கி, சிறுநீர் பெருக்கி, வெப்பமுண்டாக்கி, நரம்புரமாக்கி

மருத்துவ பயன்கள்:
மூளை மற்றும் நரம்பு மண்டலம்:
மூளையின் செயல்திறனை அதிகரித்து, நரம்புகளை துõண்டி நினைவாற்றல், ஆளுமைத்திறனை அதிகரிக்கிறது. மேலும் டென்ஷன், மன உளைச்சல், துõக்கமின்மை ஆகியவற்றை தடுத்து புத்துணர்ச்சியை தருகிறது.
இதயம் மற்றும் ரத்த ஓட்டம்:
ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து இதயத்தை பலப்படுத்தும். இதய படப்படுப்பு, அதிக ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்டிராலை போக்கும்.
வயிறு மற்றும் கல்லீரல்:
பசியைத்துõண்டி கல்லீரலை துரிதப்படுத்தி சீரணத்தை அதிகரிக்கும்.
தோல், நகம் முடி:
இது தோல்களில் உள்ள கழிவை அகற்றி, தோலை பலப்படுத்துகிறது. இதை தொடர்ந்து உண்ண கரப்பான், காளாஞ்சகப்படை வராமல் தடுக்கலாம். வயது முதிர்ச்சி அடையாதவாறு தடுக்கிறது. நகம் மற்றும் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும்.
காயகற்பம்:
இது ஒரு காயகற்பம். இது உடலை ஆரோக்கியமாக வைத்து, நரை,திரை,பிணி,மூப்பு இன்றி நீண்டகாலம் வாழச்செய்கிறது.

பயன்படுத்தும் முறைகள்:
*சுரம் நீங்க வல்லாரை இலை, துளிசி இலை, மிளகு சமஅளவு எடுத்து அரைத்து, மிளகு அளவு உருட்டி காலை,மாலை உண்ண எல்லா வகையான சுரம், ஆஸ்துமா குணமாகும்.
* வயிற்று நோய், நரம்பு நோய் நீங்க வல்லாரை இலைச் சாறு, பசுவின்பால், அதிமதுரத்துõள் சேர்த்து கொடுக்க பலன்கிடைக்கும்.
*கோடைக்காலத்தில் உண்டாகும் வியர்க்குரு,கொப்புளம் தீர வல்லாரை இலையுடன், கருஞ்சீரகம், தேங்காய் எண்ணை சேர்த்து பூச கொப்புளம் மறையும்.
* ஞாபக சக்தியை அதிகரிக்க வல்லாரை இலையை நிழலில் உலர்த்தி, பொடித்து 300 மில்லி பசும்பாலில் கலந்து கொடுக்க மன குழப்பம், டென்ஷன் குறைந்து நல்ல உறக்கம் கிடைக்கும். நல்ல நினைவாற்றல் வரும்.
* கரப்பான், காளாஞ்சகபடை, மதுமேக புண், படுக்கை புண், அடிப்பட்ட புண் குணமாக வல்லாரை இலையை அரைத்து, அதனுடன் மஞ்சள் சேர்த்து, நல்லெண்ணையுடன் தடவலாம். இது தொழுநோய்க்கு நல் மருந்து.
*புற்றுநோய் வராமல் தடுக்க வல்லாரை கீரையை வாரம் 3 முறை உணவில் பொரியலாக, குழம்பாக சேர்த்து கொள்ளலாம்.
*ஆறாத புண்களுக்கு வல்லாரை இலை 56, மிளகு 5, பூண்டு 1திரி எடுத்து எல்லாம் சேர்த்து அரைத்து காலை வேளை மட்டும் சாப்பிட்டு, மோரும் சோறுமாக 2040 நாட்கள்உண்டு வர புண்கள் ஆறும்.
*யானைக்கால் நோய்க்கு வல்லாரையை அரைத்து கட்டி வர யானைக்கால், விரைவீக்கம், வாயுவீக்கம், கட்டி வீக்கம் குணமாகும்.
* குழந்தைகளுக்கு ஏற்படும் கழிச்சலுக்கு வல்லாரை இலை 34 எடுத்து, சீரகம், சர்க்கரை கூட்டி அரைத்து தர சீதக்கழிச்சல், குருதி கழிச்சல், வயிற்றுகடுப்பு தீரும்.
* வல்லாரை இலையுடன் வெந்தயம் சேர்த்து குடிநீரிட்டு 12 சங்கு வரை குழந்தைகளுக்குப் புகட்ட சுரம், வயிற்று கோளாறுகள் போகும்.
*வல்லாரை இலையுடன் வேப்ப இலை, மஞ்சள், துளசி சேர்த்து பொடித்து 1முதல் 2 ஸ்பூன் தேனில் கலந்து 2 வேளை 1 மாதம் சாப்பிட்டு வர தொழு நோய், தோல் நோய்கள் குணமாகும்.
* குழந்தைகளுக்கு உண்டாகும் படைக்கு வல்லாரைச் சாறு, பசுவின்பால், அதிமதுரத்துõள் சேர்த்து கலந்து கொடுத்து வர படைகள், குருதிக்கேடு, நரம்பு நோய்கள் குணமாகும். மேலும் இது முதிர்ந்த வயதுடையோருக்கு உண்டாகும் மேகம், சுரத்தையும் குணப்படுத்தும்.
தொகுப்பு: தேவராஜன்
=



28 . கேன்சர், ஹார்ட் அட்டாக்கை தவிர்க்க
பூண்டு சாப்பிடுங்க!

இன்று மேற்கத்திய நாகரீகம் தலைவிரித்தாடும் நிலையில் நாம் அவர்கள் உணவு வகைகளைச் சாப்பிட்டு வருகிறோம். துரித உணவு, அவியல் உணவு, ரெடிமேடு உணவுகளை சாப்பிடுவது என்பது பெரும்பாலோர்க்கு பழக்கமாகிவிட்டது. இத்தகைய உணவை சாப்பிடுவதால் எதிர்காலத்தில் கேன்சர், மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆதலால், குடும்பத்தலைவிகள் தினமும் வீட்டில் சமையலில் பூண்டை சேர்த்து உங்கள் குடும்பத்தை காத்துக் கொள்ளுங்கள்.
வெங்காயத்தைக் காட்டிலும் கொஞ்சம் காரத்தன்மை அதிகம் கொண்டது பூண்டு. தமிழ் நாட்டில் நீலகிரி பூண்டுக்கு பெயர் பெற்ற இடம். ஆங்கிலத்தில் கார்லிக் என்றும், சமஸ்கிருதத்தில் லெசுனா, ஹிந்தியில் லஷன் என்றும் தமிழில் உள்ளி, பூண்டு, வெள்ளைப்பூண்டு, வெள்ள வெங்காயம், காயம் என இதற்கு பல பெயர்கள் உண்டு.
ஆரம்ப காலத்தில் பூண்டு மத்திய ஆசியாவில் பயிரிடப் பட்டது. இன்று உலகெங்கும் பயிரிடப்படுகிறது. இந்தியா மட்டுமல்ல; உலகெங்கும் பூண்டு சமையலுக்கும், மருத்துவத்திற்கும் உபயோகப்பட்டு வருகிறது.
பூண்டு கிழங்கு வகை இனத்தைச் சேர்ந்த தாவர வகை. இது பல பருவ குறுஞ்செடியாகும். இதன் தரைக்கீழ் தண்டு சிமிழ் ஒரு மீட்டர் நீளம் வளரக்கூடியது. இந்த பசுமையானத் தண்டு உருளை வடிவில் இருக்கும். மலர்கள் வெள்ளையாக குடைபோல இருக்கும்.
தரையடித் தண்டான சிமிழும், பூவும் மருத்துவப் பண்புகள் கொண்டிருக்கின்றன.
பூண்டின் உலர்ந்த வேர்ப்பகுதியில்(100 கிராம்) 360 கலோரி, புரோட்டீன் 13.5, கொழுப்பு 0.7, ஹார்போஹைட்ரேட் 82 கிராம், பைபர் 3 கிராம், ஆஸ் 3.5 கிராம் அடங்கி உள்ளன.
மேலும் தாது உப்புக்களான கால்சியம் 65 மி.கி., பாஸ்பரஸ் 400மி.கி., அயன் 4.3 மி.கி., மெக்னிஷியம் 0 மி.கி., சோடியம் 53 மி.கி., பொட்டாசியம் 1250மி.கி. அடங்கி உள்ளன.
உயிர்சத்துக்கள் (விட்டமின்கள்) தையாமின்(பி1) 0.7 மி.கி., ரிபோபிளைவின் (பி2) 0.2 கி., நியாசின் 1.25மி. கி., விட்டமின் சி 35 மி.கி. உள்ளன. மேலும் பூண்டில் கந்தக சத்து, விட்டமின்6, மங்கனீசு, செலினியம் ஆகிய சத்துகள் அதிக அளவு இருக்கிறது.

பூண்டின் மருத்துவ செயல்:
அகட்டுவாயகற்றி: அதாவது அகடு என்றழைக்கப்படும் வயிற்றில் உள்ள வாயுவை அகற்றி, வயிற்று உப்பிசம், வாயுகோளாறுகளை நீக்கும்.
கோழையகற்றி: நுரையீரலில் உள்ள சளியை வெளிப்படுத்தும். ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கும். புற்றுநோயை எதிர்க்கும் பண்பும் உண்டு. புழுக்கொல்லி. நோய் நுண்ணுயிர்களை அழிக்கும் ஆற்றல் உண்டு.

மருத்துவ பயன்கள்:

பூண்டில் உள்ள கந்தக சத்து பூண்டிற்கு மணத்தைக் கொடுக்கிறது. இந்த சத்துதான் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. ஆதலால் தான் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தயாரிக்க பூண்டு பயன்படுகிறது. டைபாய்டு, டி.பி.நோய் ஆகியவற்றை குணப்படுத்தவும், முதல் உலகப் போர்க்காலத்தில் காயங்களுக்கு கட்டுப்போடவும் பயன்பட்டது.

இதய நோய்கள்:

பூண்டை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக அளவில் கொழுப்பு சேருவதில்லை! தொடர்ந்து பூண்டை சாப்பிட்டு வர, நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியைத் துõண்டுவதால் ரத்தக்குழாய்கள் சுருங்குவதில்லை. இதன்காரணமாக ரத்தக்குழாய் அடைப்பு தவிர்க்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் இதயநோய், பக்கவாதம் தவிர்க்கப்படுகிறது. பூண்டில் உள்ள கந்தகக்கூட்டுப்பொருளுடன் விட்டமின் சி, விட்டமின் 6, செலினியம், மங்கனிசியம் இருப்பதால் கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதய நோய், புற்று நோய்க்கு எதிராகவும் செயல்படுகிறது.
புவியியல் வல்லுநர்கள் ஆய்வுப்படி இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டினர் உணவில் பூண்டை அதிகம் பயன்படுத்துவதால் ரத்தக்குழாய் சுருங்குதல் போன்ற நோய்களால் அவதிப்படுவதில்லை என்று தெரியவருகிறது. ஸ்டிரோக் வருவதற்கு முதல்காரணம் ரத்தத்தில் கொழுப்பு சத்து அதிகமாகி ரத்தக்குழாயில் படிவதால் ரத்தக்குழாய் சுவர் தடிமனாகி விடுவதுதான். அதை பூண்டு சரிசெய்கிறது.

சர்க்கரை நோயாளிக்கு நண்பன் பூண்டு:
பூண்டு சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும். இவர்கள் பூண்டை அதிகம் சேர்த்துக்கொண்டால், ரத்த சர்க்கரை அளவு குறைவதுடன் ஹார்ட் அட்டாக்கிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம். பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் உள்ளங்கால், உள்ளங் கை எரிச்சல், மரத்து போதல் போன்ற உபாதைகளை குணமாக்குகிறது.

பயன்படுத்தும் முறைகள்:

*ரத்தத்தில் உள்ள அதிக கொழுப்புச்சத்து குறைய, ரத்தக்குழாய் அடைப்பு குறைய தினமும் 20மி. பாலில் + 30மி.நீர்+10 பூண்டு பற்கள் சேர்த்து வேகவைத்து தினமும் வெறும் வயிற்றில் குடித்துவரலாம்.
*அஜீரணம், வாயுதொந்தரவு நீங்க வெள்ளைப்பூண்டுதிரி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, சிறிது உப்பு சேர்த்து துவையலாக வாரம் இரு முறை உண்ணலாம்.
* பூண்டுசாற்றை தொடர்ந்து 3 மாதம் வாரம் இரு முறை வீதம் குழந்தை முதல் பெரியோர் வரை உண்ண வைரஸ் போன்ற கிருமிகளால் ஏற்படும் நுறையீரல் நோய்களான ஆஸ்துமா, காசநோய்க்கு அது சிறந்த தடுப்பு மருந்தாக அமையும்.
* வயிற்று வலி, அல்சர் நோய்களுக்கு பூண்டு ரசம், பூண்டு சட்னி, பூண்டு குழம்பை தினமும் ஒன்று வீதம் சாப்பிடலாம்.
* மூட்டுகளில் ஏற்படும் வலி, நரம்பு வலி, முகவாதம், பக்கவாதம், குழந்தைகளுக்கு ஏற்படம் வலிப்பு, தலைவலி முதலிய உபாதைகளுக்கு பூண்டு சிறந்த மருந்து. மூட்டு வலிக்கு காரணமான என்சைம்களை அழிக்கிறது. எனவே வாத நோய்களுக்கு பூண்டை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் வலிகளுக்கு பூண்டு அரைத்து அந்த இடங்களில் பற்றாக போடலாம்.
* பூண்டு சாற்றை 12 துளி காதில்பிழிய செவிடு குறை நீங்கும்.
*தொண்டையில் வளரும் சதைக்கு பூண்டு சாற்றை துளசிசாற்றுடன் சேர்த்து ஒரு மாதம் தொடர்ந்து பூச உள்நாக்கு வளர்வது நீங்கும்.
*பூண்டுசாற்றை 2030 துளி வீதம் தினம் இருமுறை உண்ண இருமல், இரைப்பு குணமாகும்.
* கடுகு அல்லது தேங்காய் எண்ணையுடன் பூண்டு சேர்த்து காய்ச்சி பூசினால் குடைச்சல், உடல்வலி, நரம்பு வலி, வாத நோய்கள் தீரும்.
* நாள்பட்ட பீனிசம் நோயினால் தலைவலி, தும்மல் இருப்போர் பூண்டை அரைத்து நெற்றியில் பற்றிட ஒருவாரத்தில் தலைபாரம் நீங்கி குணமாகும்.
*பூண்டு அரைத்து உப்புடன் சேர்த்த தடவ சுளுக்கு குணமாகும்.
*பூண்டுடன் மிளகு, சீரகம் சேர்த்து துவையலாக அரைத்து காலை உணவிற்கு குழந்தைகளுக்கு கொடுத்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் ஒழியும்.
*பூண்டை அரைத்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து காலை உணவில் சேர்த்துக்கொள்ள உடலில் ரத்த அணுக்கள் பெருகி ரத்த சோகை குணமாகும்.
* நாள்பட்ட புண் குணமாக பூண்டுடன் மஞ்சள், வேப்பிலை அரைத்து போட்டு வந்தால் ஒருவாரத்தில் புண் ஆறும்.
*உணவில் பூண்டை எந்த வழியிலாவது தினமும் 25கிராம் சாப்பிட வேண்டும். அவ்வாறு ஓராண்டு காலம் உண்டால் புற்றுநோய், மாரடைப்பு நோயிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.
தொகுப்பு: தேவராஜன்


29 . பால் சுரப்பு அதிகரிக்கும் கலியாண முருங்கை!

கிராமங்களில் இன்றும் மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படும் மரம் கலியாண முருங்கை. இதன் இலை உணவுப்பொருளாகப் பயன்படுகிறது.
கலியாண முருங்கை வங்காளத்திலும், இந்தியாவின் பல இடங்களில் வேலியாகவும், தோட்டங்களில் பயிரிடப்படுகிறது. இந்தியாவின் இலையுதிர் காடுகளிலும், அந்தமான், கடலோர தீவுகளில் இயல்பாக வளர்கிறது. பொதுவாக அலங்கார மரமாக வளர்க்கப்படுகிறது. தோட்டங்களில் வெற்றிலை கொடி, மிளகு கொடி, திராட்சைக்கொடி படர்ந்து வளர்வதற்கு பயிரிடப்படுகிறது.
கலியாண முருங்கைக்கு முள் முருக்கு, கிஞ்சுகம் என வேறு பெயர்களும் உண்டு.
கலியாண முருங்கையின் இலை, பூ, விதை, பட்டை மருத்துவப்பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகின்றன.
இதன் சுவை: கைப்பு, கார்ப்பு. தன்மை: வெப்பம்.
பொது குணம்: பித்தமகற்றி, கோழையகற்றி, வெப்பமகற்றி, புழுக்கொல்லி
சிறப்பு குணம்:
இலை: சிறுநீர்ப்பெருக்கி, மலமிளக்கி, ருதுஉண்டாக்கி, பால் பெருக்கி.

கலியாணமுருங்கையில் உள்ள ரசாயனங்கள்: இலை மற்றும் விதைகளில் எரித்ரலின், எரித்ரினைன், எரிசோப்பின், எரிபிடின், பெருலிக் அமிலம், கபியிக் அமிலம்.
மருத்துவ குணம்:
இலை: கலியாண முருங்கை இலை வாந்தி, வயிற்று வலி, பித்தசுரம், அக்கரம், அனல், வாய்வேக்காடு இவைகளை நீக்கி உடலிற்கு வன்மையை தரும்.
பூ: பெண்களுக்கு கருப்பையில் கட்டிய ரத்த குன்மத்தை விலக்கும்.
பட்டை: இது துவர்ப்பு சுவை கொண்டிருக்கும். சுரத்தை போக்கும், பூச்சிகளை அகற்றும், பாம்புகடிக்கு மருந்தாகும், ஈரல் நோய்களுக்கும், கண் நோய்களுக்கும் மருந்தாக பயன்படும்.
பயன்படுத்தும் முறைகள்:
வயிற்று புழுவுக்கு:
இலைசாறு 1 டீஸ்பூன் எடுத்து ஒரு மேசைகரண்டி விளக்கெண்ணைய் சேர்த்து காலை மட்டும் 3 நாள் சாப்பிட பேதியாகும். வயிற்று புழுக்கள் வெளிப்படும். வாதத்தை குறைக்கும்.
பால் சுரக்க:
இலையை தேங்காய் எண்ணையில் சமைத்து புசித்தால் பிள்ளைப் பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரப்பு அதிகமாகும்.
நீர் எரிச்சல் தீர:
இலை சாறு 12 டீஸ்பூன் வரை காலை மாலை 2 வேளை அருந்த சிறுநீர் எரிச்சல், சிறுநீர் வெளியாகும் தடை விலகும்.
உடல் பருமன் குறைய:
கலியாண முருங்கை இலையை தொடர்ந்து 23 மாதம் காலை, மாலை உட்கொள்ள மாதாந்திர சூதகத்திலுண்டாகும் வயிற்றுவலியை போக்கி, மிக பருத்த உடலை இளைக்கச் செய்து, மலட்டு நோயையும் நீக்கும்.
குன்ம நோய்க்கு :
கலியாண முருங்கைப் பூவை குடிநீருட்டு குடித்தாலும் அல்லது கருப்பைக்கு நேராக அடிவயிற்றில் வைத்து கட்டினால் ரத்த குன்மத்தை போக்கும். குடி நீரிட்டு கொடுக்க குன்ம நோய் ( வயிற்று வலி) தீரும்.
நாடாப் புழுக்கு :
விதையின் மேல் தோல் நோக்கி காய வைத்து, பொடித்து 65 மில்லி கிராம் 130 மில்லி கிராம் இரவு படுக்கு முன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு மறுநாள் காலை விளக்கெண்ணைய் சாப்பிட மலக்கிருமி, நாடாப்புழு அழியும்.
நீரிழிவுக்கு:
வேர் பட்டையை குடிநீரிட்டு அருந்த சர்க்கரை நோய் தீரும்.
மூட்டு வலிக்கு:
இலையை அடையாக அல்லது கீரையாக உண்ணலாம். இலையை விளக்கெண்ணையில் வதக்கி ஒற்றடமிட மூட்டு வலி தீரும்.
தொகுப்பு: தேவராஜன்


31 . மார்க்கண்டே மருந்து கற்றாழை
குமரி, கன்னி என்று சித்தர்களால் அழைக்கப்படும் கற்றாழை இந்தக் கோடைக்கு உகந்த கண் கண்ட மருந்து.
இந்த கற்றாழை கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவினைச் சார்ந்தது. பொதுவாக வெப்ப மண்டலப் பகுதிகளில் வளர்கிறது. இந்தியாவில் தென்னிந்திய கடற்கரை ஓரங்களில் இயற்கையாக காணப்படும். மேலும், ஆற்றங்கரையிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் பயிராகும். இது சிறுகற்றாழை, பெருங்கற்றாழை, பேய்க்கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை என பலவகையாக இருந்தாலும் இதன் செய்கை முதலியன சற்றேறக்குறைய ஒத்தேயிருக்கும்.
பயன்படும் உறுப்புகள்: பால், மடற்சோறு, சாறு, வேர்
சுவை: கசப்பு, தன்மை தட்பம்.
செய்கை: உரமாக்கி, உடற்றேற்றி, நீர்மலம் போக்கி, ருது உண்டாக்கி
கற்றாழையில் உள்ள வேதிப்பொருட்கள்:
ஆந்த்ரோ குயினோன்கள் ஆலோயன், ஆலோ எமோடின், ரெசின்கள், டேனின்கள், பாலிசாக்கரைடுகள், ஆலோக்டின் பி.
பொதுகுணம்:
இது ஒரு காயகற்ப மூலிகையாகும். என்றும் இளமை தோற்றத்தை அதாவது முதுமையை தடுத்து உடலை பலப்படுத்தும் சிறப்பு குணம் கற்றாழைக்கு இருப்பதால்தான் இதை "கன்னி' "குமரி' என்று அழைக்கின்றனர்.
கற்றாழையை உலர்த்தி முறைப்படி பொடி செய்து உண்ணும் பொழுது நரை, திரை, மூப்பு இன்றி இளமையாக வலுவுடன் நுõறாண்டு வாழலாம்.
கற்றாழையால் வாதமேகம் தீரும், கிருமி குத்தல் போகும், கருமேகம் தீரும், பெருவியாதி, மூலம் தீரும், குன்மம் தீரும், பித்தக்கிரிச்சரம் போகும்.
பேய்க்கற்றாழை: மிகுநீரை போக்கும், உடல் எரிச்சலை குணப்படுத்தும், சுரத்தை போக்கும்.
செங்கற்றாழை: உள் சூட்டை தணிக்கும், தாய்க்கு நிகராக உடலை பாதுகாக்கும்.
மருத்துவ பயன்கள்:
* இலையில் காணப்படும் சோறு(ஜெல்) காயங்களை குணப்படுத்தும்
* பித்த நீர் சுரப்பினை ஊக்குவிக்கும்
* மலத்தை இளக்கும்
*வீக்கங்களை கரைக்கும்
*வயிற்றுப்புண்ணை ஆற்றும்
*பெண்களுக்கு காணும் வெள்ளைபடுதலை குணமாக்கும்
* உடல்சூட்டை தணிக்கும்
* தீப்புண்கள், நாட்பட்ட காயங்கள் ஆகியவற்றின் மீது ஒரு படலம்போல படிந்திருந்து பாதுகாக்கிறது. புண் ஆறுவதை துரிதப்படுத்தும்.
*ஜெல்லில் காணப்படும் ஆலோக்டின் பி எனும் பொருள் நோய் எதிர்ப்பு சக்தியினைத் துõண்டி செயல்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
*தோலினை பாதுகாத்து குறிப்பாக முகத்தினை அழகுப்படுத்தும்.
*மேலை நாடுகளில் 1950க்குப் பிறகே அதிகம் பயன்படுத்தப்பட்டுவருகிறது. பாதிப்பை உண்டு பண்ணும் கதிர் வீச்சுப் புண்களை ஆற்றும் சக்தி கற்றாழைக்கு உண்டு.
* தீப்புண், சிராய்ப்பு புண்கள் சூரிய ஒளியின் தாக்கம் ஆகியவற்றுக்கு முதலுதவியாக பயன்படுகிறது. இலையினை உடைத்தால் வெளியேறும் ஜெல்லினை புண்களின் மீது தடவ வேண்டும். தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகும்.
* இலையின் அடிப்பகுதியிலிருந்து கிடைக்கும் மஞ்சள் வண்ணச்சாறு சேகரிக்கப்பட்டு உலர்த்தப்படுகிறது. இதனை "ஆலோ கசப்பு' என மருந்தாக பயன்படுத்துவர். இதில் ஆந்த்ரோகுயினோன்கள் இருப்பதால் மலமிளக்கியாக செயல்படுகிறது. பெருங்குடலை சுருங்க வைத்து மலம் வெளியேற உதவுகிறது.
* இந்திய மருத்துவத்தில் பேதி மருந்தாகவும், மாதவிடாய் சுழற்சியை ஒழுங்கு படுத்தும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
* இலையின் சோறு தலைமுடிக்கு கருப்பிடவும் (டை) தலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுகிறது.
* இலையுடன் வெல்லப்பாகு கலந்து மூலநோய்க்கு பயன்படுத்தப்படுகிறது.
*நீரில் கழுவிய சோறு சிறிது சுடப்பட்ட படிகாரத்துடன் சேர்த்து வலிப்பு நோயாளிக்கு மருந்தாகக் கொடுக்கப்படுகிறது.
* கற்றாலை சாறுடன் பன்னீர் கலந்து கண்நோய்க்கு தடவலாம்.
பயன்படுத்தும் முறைகள்:
*இளமடலுடன் சீரகம், கற்கண்டு சேர்த்து அரைத்து உண்ண குருதி கழிச்சல், சீதக்கழிச்சல் குணமாகும்.
*இளமடலுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து தர ஆரம்ப பிலீக வளர்ச்சி குணமாகும்.
*கற்றாழை சோற்றை வெறும் வயிற்றில் உண்ண உடல் சூடு தணியும்
*கற்றாழை சோற்றுடன் வெந்தயம் சேர்த்து அருந்த பெண்களுக்கு காணும் வெள்ளை நோய், மாதவிடாய் ஒழுங்கின்மையை குணமாக்கும்
*சோற்றை நல்லெண்ணையில் காய்ச்சி தலையில் தடவ கண் எரிச்சல் நீங்கும். நல்ல துõக்கம் உண்டாகும். தலைமுடி நன்கு வளரும்.
* தோல் வறட்சி நீங்க, முகம் பளபளக்க, தோல் சுருக்கம் நீங்க இதன் சோற்றை வாரம் 2 முறை முகத்தில் தடவி குளிர்ந்த நீரில் கழுவ முகம் பொலிவடையும்.
உடலுக்கு ஆரோக்கியத்தையும், என்றும் இளமையை தரும் கற்றாழையை மார்க்கண்டேய மருந்து என்றே சொல்லலாம். இந்த கோடையில் கற்றாழையை அதிகம் பயன்படுத்தினால் தோல், முகம் பாதுகாக்கலாம். உடல் சூட்டை தணிக்கலாம்!
தொகுப்பு: தேவராஜன்

32 .சிறுநீரகம் காக்கும் நாவல்

நாவல் பழத்தை "கடவுளின் பழம்' என்றே சொல்லலாம்!
தமிழ் இலக்கியங்களிலும், புராணங்களிலும், தெய்வ வழிபாட்டிலும் இடம் பெறும் பழம் இது!
வனவாசம் சென்ற ராமன் காட்டில் நாவல் பழங்களை விரும்பி சாப்பிட்டதாக காப்பியத்தில் கூறப்படுகிறது. கிருஷ்ணனுக்கும் பிடித்த பழம் இது! நாவல் பழத்தை விரும்பி சாப்பிட்டதால்தான் கிருஷ்ணன் நீல நிறவண்ணனாக இருக்கிறான் என்று கூறுவாரும் உண்டு.
அவ்வையிடம் முருகன், "சுட்டப்பழம் வேணுமா? சுடாத பழம் வேணுமா?' என்று கேட்டதும்,
திருவானைக்காவல் சர்வேஸ்வரன் நாவல் மரத்தடியில் வீற்றிருந்து நம்மை எல்லாம் இறையாட்சி செய்து வழிநடத்துகிறான் என்று புராணங்கள்சொல்கின்றன.
மேலும், விநாயகர் சதுர்தி, கிருஷ்ண ஜெயந்தி இவைகளில் இன்றும் நாவல் பழம் முக்கிய இடம் பெறுகிறது.

தென் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவினைச் சார்ந்தது நாவல் மரம். இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் இந்தோனேசியாவின் வெப்ப மண்டலப் பகுதிகளில் வளர்கின்றன. இதனுடைய கனிகளுக்கு வாணிப ரீதியாக வளர்க்கப்படுகிறது.
வெள்ளை நாவல், கொடி நாவல், குழி நாவல், கரு நாவல், சம்ப நாவல் என பலவகை உள்ளன.
நாவலின் எல்லா உறுப்புகளும் உபயோகப்படுகிறது.

பொது குணம்:
சுவை துவர்ப்பு
தன்மை குளிர்ச்சி
பழம்: பசித்துõண்டி, சிறுநீர்ப் பெருக்கி, உடலுரமாக்கி, குருதிப் பெருக்கி
ரசாயனப் பொருட்கள்: பினால்கள், டேனின்கள், ஜாம்போசைன் என்னும் ஆல்கலாய்டு, யூஜினியா டிரைடெர்பினாய்டுகள், மாலிக் அமிலும், பிற ஆவியாகும் எண்ணைய்கள்.
மருத்துவ குணம் :
பட்டை : வாயில் தோன்றும் நோய்கள், இருமல், ஈளை, குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்க்கும்.
வேர்: வாத நோய்கள், கரப்பான், புண், நீரிழிவு, குருதிக்கழிச்சல், சுரம் இவை குணமாக்கும்.
பழம்: நாவல் பட்டை பொடியுடன் படிகாரம் இந்துப்பு சேர்த்து உண்ண பெரும்பாடு தீரும்.
மருத்துவ பயன்கள்:
*இலைகள் : வயிற்று போக்கினை கட்டுப்படுத்தும்
* கனிகளின் சாறு சிரண சக்தியை துõண்டும்
* வயிற்று வலி தீரும்
* சிறுநீர்ப்போக்கினை துõண்டும்
* கணையம் வீங்கி நோய் வருதலை தடுக்கும்
* விதைகள் நீரிழிவு நோயினை குணப்படுத்தும். ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்கும்.
* ஆயுர்வேதத்தில் மாங்காய் விதையுடன் சேர்த்து பொடியாக்கி சீத பேதி, வயிற்று போக்கு குணப்படுத்த பயன்படுகிறது.
* பொடிக்கப்பட்ட விதை தினமும் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி வீதம் நீரில் உண்ண நீரிழிவு நோய், அதில் ஏற்படும் அதிக சிறுநீர் போக்கை தடுக்கும்.
* நவீன ஆய்வுகள் நாவல் விதைகள் குருதியின் குளுகோஸ் அளவினை குறைப்பதை உறுதிபடுத்தியுள்ளன.
*பட்டை கசாயம் ஏலம், இலவங்க பட்டையும் சேர்த்து உண்ண நாள்பட்ட வயிற்று போக்கை கட்டுப்படுத்தும்
* தென்கிழக்கு ஆசியநாடுகளில் நாவல் வேர் கை,கால் வலிப்பு நோயை குணப்படுத்த பயன்படுகிறது.
* மூலத்தொந்தரவு உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த தொந்தரவில் இருந்து விடுபட நாவல் பழம் உதவுகிறது.
* நாவல் பழம் பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது. பித்தத்தைத் தணிக்கும், மலச்சிக்கலைக் குணப்படுத்தும், இதயத்தை சீராக இயங்கச் செய்யும். ரத்த சோகை நோயைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் ஏற்படும் வலøயையும் நிவர்த்தி செய்யும். சிறுநீரக கல் கரைய உதவும். தொழுநோய், மண்ணீரல் கோளாறுகளை சரி செய்யும்.
தொகுப்பு: தேவராஜன்

33 . சளி விரட்டும்ஆடாதோடை
ஆடா தொடை செடிவகை தாவரம். இச்செடி இந்தியா முழுவதும் பொதுவாக காணப்படும். குறிப்பாக வெப்பமண்டல பகுதிகளில் அதிகம் உள்ளது.
ஆடாதோடை, ஆடாதொடை, வாசை, வாசகா, அருசா என பல பெயர்களில் அழைக்கப்படும் இதன் இலை மா இலை, நுணாயிலைகளை போல தோற்றத்தில் இருக்கும். இன்றும் கிராமப்புறங்களில் கைவைத்தியத்தில் ஆடாதொடை பயன்பாட்டில் உள்ளது.
பயன்படும் உறுப்பு: இலை, பூ, பட்டை, வேர்
சுவை: கைப்பு
தன்மை: வெப்பம்
செய்கை: இசிவகற்றி
கோழையகற்றி
நுட்புழுகொல்லி
சிறுநீர்பெருக்கி
செயல்திறன் வேதிப்பொருட்கள்:
ஆடா தொடையின் எல்லா பாகங்களிலும் வாசிசின் உண்டு. மேலும், அராக்கிடிக்கிக், பெஹினிக், லிக்னோ செரிக், லினோலிக் மற்றும் ஒலியிக் அமிலங்கள் விதைகளில் உள்ளன.
வாசிசினோன், பி. சைட்டோஸ்டீரால், பெரால், ஆடாதோடைன், அடாவாசினோன், வாசிக்கோலினோன் முதலியன உள்ளன.
பொதுகுணம்:
சளி, சளிதொடர்பான பிரச்னைகளை போக்கம்.
வாததொடர்பான நோய்கள், பற்பல சுரம், முப்பிணி தீரும்
வயிற்று நோய், குருதியழல் தீரும்
இருமல், மேலிளைப்பு குணமாகும்
வாந்தி, விக்கல்,சூலை, அண்ட வாயுவை போக்கும்
பாடக்கூடிய நல்ல குரலொலியைத் தரும்
வேரின் மருத்துவ குணம்:
இருமலை போக்கும்
மந்தம், பித்தம் தீரும்
கடினமூச்சு, கழுத்து வலி தீரும்
மருத்துவ பயன்:
மார்புச்சளியை போக்குவதில் இது மிகவும் பயனுள்ள மருந்தாகும்.
கனி, மலர், இலை :
பூச்சிகளை அகற்றும்
நுண்கிருமிகளை அகற்றும்
வலி அகற்றும்
கபம் வெளியேற்றும்
மயக்க மருந்தாக பயன்படும்
தீராத மார்புசளி, இருமல், மூச்சுதிணறல், ஜலதோஷம், கக்குவான் இருமல் ஆகியவற்றிற்கு நல்ல மருந்து
மலர் :
கண்சிகிச்சை, ரத்த ஓட்டத்தை சீர் செய்தல் ஆகியவற்றில் பயனுள்ளதாக உள்ளது.
இலைகள்:
புண், காயம், வீக்கம், நரம்புவலி, கட்டிகள் இவைகளுக்கு இலைகளின் பொடிபற்றாக பயன்படுகிறது.
அடர்ந்த கஷாயம் சிரங்குகளுக்கு தடவும் மருந்தாக பயன்படும்.
இலைசாறு வயிற்று போக்கு, சீதபேதி, மாதவிடாய் ஊக்கியாக பயன்படுகிறது.
வேர்:
கர்ப்பபைக்கு நல்ல மருந்து
கஷாயம் மூச்சு திணறலை போக்கும்
தீராத மார்பு சளி, இருமல், கறுநோய் போக்கும்
வேர்பட்டையிலிருந்து கிடைக்கும் வாசிசின் என்ற ஆல்களாய்டு ஆக்ஸிபோசின் மருந்து பிள்ளை பேற்றின் போதும், கருச்சிதைவு ஏற்படுவதையும் தடுக்கும்.
பயன்படுத்தும் முறை:
இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகைபிடிக்க இரைப்பு நோய் தீரும்
இலை, வேர் சம அளவு எடுத்து மிளகு சேர்த்து ஊறல் குடிநீர் செய்து கொடுக்க இரைப்பு, இருமல், சுரம், உப்பிசம் தீரும்
பூவை வதக்கி கண்களில் கட்ட கண் எரிச்சல் தீரும்
பட்டையை குடிநீராக்கி அல்லது பொடித்து உண்ண இரைப்பு, இருமல் தீரும்
ஆடாதோடை வேர், கண்டங்கத்திரி வேரையும் குடிநீரிட்டு திப்பிலி பொடி சேர்த்து கொடுக்க இருமல் நீங்கும்
ஆடாதோடை வேர், கண்டங்கத்திரி வேர் , சுக்கு, கொள்ளு சேர்த்த குடிநீர் இரைப்பிருமலை போக்கும்
ஆடாதோடை, மிளகு, கற்பூரவல்லி, துளசி சேர்த்து கஷாயமாக்கி அருந்த இருமல், ஆஸ்துமா தீரும்.
ஆடாதோடை பொடி தேனில் சேர்த்து உண்ண வெள்ளைபடுதல், கழுத்து வலி, இடுப்பு வலி தீரும்.
கக்குவான் இருமல், இளைப்பு நோயுள்ளோர் ஆடாதோடையை தினமும் 3 இலை உண்டுவந்தால் நல்ல பலனை பெறலாம்
தும்மல், மூக்கடைப்பு, தலைவலி தீர ஆடாதோடை, துளசி சாறு தேன் கூட்டி அருந்த குணமாகும்.
நம் வீடுகளில், தோட்டங்களில், வயல்காடுகளில் தான்தோன்றியாக வளரும் ஆடாதொடையை பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்தை பெறலாம்.
தொகுப்பு: தேவராஜன்



34 . உடலுக்கு வலிமை சேர்க்கும் பிரண்டை!

கிராமப்புறங்களில் இன்றும் பாட்டி வைத்தியத்தில் இடம் பெற்றிருக்கும் உணவுப்பொருளில் பிரண்டையும் உண்டு. ""செரிமானம் ஆகலையா பிரண்டை துவையல் சாப்பிடு. காது வலியா பிரண்டையை சூடு செய்து சாறு பிழிந்து காதில் ஊற்று. சரியாகிடும்'' என்று கைவைத்தியம் செய்யும் தாய்மார்கள் இருக்கிறார்கள்.
கொளுத்தும் கோடையில் அதிக உஷ்ணத்தால் சிலர் வாய்ப்புண், வயிற்றுவலி, அல்சர், மூலம் போன்ற நோய்களால் அவதிபடுவதுண்டு. அவர்களுக்கு பிரண்டை ஒரு வரப்பிரசாத மருந்து என்றே சொல்லலாம்.
இந்தியாவில் வெப்பமண்டல பகுதிகளில் காணப்படும் தோட்டங்களில், வேலிகளில் பிரண்டை வளர்க்கப்படுகிறது.
பிரண்டையில் ஓலைப்பிரண்டை, உருண்டைப் பிரண்டை, முப்பிரண்டை, சதுரப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை என வகைகளுண்டு. மெலிந்த, இளைத்த உடலை தேற்றும் குணம் அதாவது வஜ்ராயுதம் போன்ற வலிமையை தருவதால் பிரண்டையை வச்சிரவல்லி என்றும் அழைப்பதண்டு.

பயன்படும் பகுதிகள்: தண்டு, வேர்.
சுவை: கார்ப்பு
தன்மை: வெப்பம்
மருத்துவ குணம்: உடலைத் தேற்றும். ருது உண்டாக்கும். பசியைத் துõண்டும்.
பிரண்டையில் உள்ள ரசாயனப் பொருள்கள்: டி அமைரின், டி அமிரோன், பி சிட்டோசிரஸ், விட்டமின் சி.
பொது குணம்: ஆசனவாய் எரிச்சல், ரத்த மூலம், குன்மம், குருதிக்கழிச்சல் ஆகியவற்றைக் குணமாக்கும். சீதக்கழிச்சல், கபம், கால் குடைச்சல் ஆகியவற்றை நீக்கும். பசியைத் துõண்டும். ஜீரணப் பிரச்னை, மாந்தம், வயிற்றுவலி பிரச்னைகளைத் தீர்க்கும்.
வச்சிரவல்லி பிரண்டையை உணவில் சேர்த்தால் கப நோய்களும், செரியாமையும் நீங்கும்.
களிப்பிரண்டையைச் சாப்பிட கபம், கரப்பான், காணாக்கடி நீங்கும். சிலந்தி விஷம் நீங்கும். ஆண்மை உண்டாகும். உடலுக்கு வலிமை தரும்.
இனிப்பு பிரண்டையால் செரியா மாந்தம், சீதக்கழிச்சல், இரைப்பு, கொட்டாவி, விக்கல் நீங்கும்.
புளிப்பிரண்டையால் உடல்வெளுப்பு, மார்பு நோய், வயிற்றுவலி, இருமல் விலகும்.

மருத்துவ பயன்கள்

இலைகளும், இளம் தண்டு பகுதியும் உடல் நலத்தை தேற்றும். வயிற்று வலி நீக்கும்.
இதன் பொடி சீரண கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாகும்.
தண்டின் சாறு எலும்பு முறிவுகளில் மருந்தாகிறது.
முறையற்ற மாதவிலக்கை முறைப்படுத்தும்.
ஆஸ்துமாவை குணப்படுதும். வேரின் பொடி எலும்பு முறிவில் கட்டுப்போட உதவுகிறது.

பயன்படுத்தும் முறைகள்

இதன் இளம் தண்டை நெய்விட்டு வதக்கி, அரைத்து துவையல் செய்து உண்பது நாட்டு வழக்கு. இதனால் சுவையின்மை, வயிற்றுப்பொருமல் முதலியன போகும்.
பிரண்டையை நெய்விட்டு வறுத்து, அரைத்து கொட்டைப்பாக்கு அளவு 3 நாள் காலை, மாலை சாப்பிட்டு வர ஆசனவாய் நமைச்சல், குருதிபோக்கு குணமாகும்.
இளம் தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து, சுக்குடன், மிளகுதுõள் சிறிது சேர்த்து சாப்பிட வயிற்று நோய், செரியாமை நீங்கும். இதையே பாலில் கலந்து சிறிது கற்கண்டு சேர்த்து அருந்த உடலை தேற்றி வலிமையைக்கொடுக்கும்.
பிரண்டையை சிறிது தீயிலிட்டு வதக்கி, சாறு பிழிந்து காதில் 2 துளி விட காது சீழ் நீங்கும். மூக்கில் விட மூக்கில் வடியும் குருதி மாறும். இந்தச் சாற்றை தகுந்த அளவில் அருந்த மாதவிடாய் கோளாரை சரியாக்கும்.
வேரை உலர்த்தி பொடித்து 2 கிராம் கொடுத்து வர முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும். இதை வெந்நீரில் குழைத்து மேலுக்கு பற்றிடலாம்.
களிப்பிரண்டையை கணு நீக்கி உணவு பொருளான மிளகு, உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய்களால் இளைத்த உடல் வலிமை பெறும்.
இதன் இலைப்பொடியை மோரில் 45 நாட்கள் அருந்த வயிற்று புண், அல்சர் குணமாகும்.
பிரண்டை, சீரகம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைத்து வடகமாக்கி தினமும் 2 வீதம் உண்ண அஜீரணம், பித்தமயக்கம், பசியின்மை குணமாகும்.
வெள்ளைபடுதல், வயிற்றுவலி, இளைப்புநோய் முதலிய நோய்களால் உடல் மெலிந்தவர்கள் பிரண்டை துவையல், பிரண்டை வடகம், பிரண்டை வற்றல், பிரண்டை பொடி இதில் எதாவது ஒன்றை தொடர்ந்து 3 மாதம் பயன்படுத்தினால் உடல் பலமடைந்து ஆரோக்கியத்துடன் வாழலாம்.
தொகுப்பு: தேவராஜன்

35 . உடலுக்கு குளிர்ச்சி தரும் சந்தனம்!

இந்தியாவில் சந்தனம் சமயச்சடங்குகளிலும், மருத்துவத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் சிறுதெய்வங்கள், அம்மன்களுக்கு சந்தனக்காப்பும், மற்ற தெய்வங்களுக்கு அபிஷேகப்பொருளாகவும் பயன்படுகிறது. இறந்தவர்களிஞூ உடலை தகனம் செய்ய சந்தனம் பயன்படுகிறது.

சந்தனம் மரம் இந்தியாவில் கிழக்குப்பகுதியான கர்நாடக, தமிழக காட்டுப்பகுதியிலும் இதர பகுதிகளிலும் காணப்படுகிறது.
இதில் செம்மை, மஞ்சள், வெண்மை என மூன்று வகை உண்டு.
பயன்படும் உறுப்பு: மரம், எண்ணைய்
சுவை: கைப்பு, சிறு துவர்ப்பு, தன்மை: தட்பம், வெப்பம்
குணம்:
உடற்றேற்றி, சிறுநீர்ப்பெருக்கி, வியர்வைப் பெருக்கி, வெப்பமுண்டாக்கி, அழகல்மணமகற்றி, துவர்ப்பி, குளிர்ச்சி உண்டாக்கி.
வேதிப்பொருட்கள்:
சந்தனக்கட்டையில் 36 சதவீதம் எளிதில் ஆவியாகும் எண்ணைய், ரெசின் மற்றும் பேனின்கள் உள்ளன.
எண்ணையில் அல்பா, பி சேன்டலால், செஸக்யூ டெர்பினால்கள் உள்ளன.
வகை பயன்பாடு:
சிவப்பு நல்லது
மஞ்சள் நடுத்தரமானது
வெள்ளை பயனற்றது
மரம்:
சந்தனமரக்கட்டையை நன்முறையில் வழங்கின் அறிவும், மனமகிழ்ச்சியும், உடலழகும், ஒளியும், மாதரிடத்து இச்சையும் உண்டாகும். வெள்ளை நோய் நீங்கும்.
சந்தனம்:
முக்குற்றம், மனக்கலக்கம், உட்சூடு, வெள்ளை நீங்கும். நாவறட்சி, நமைச்சல் நீங்கும். உடல் வலிமை பெறும்.
மருத்துவப் பயன்கள்:
* சந்தனக்கட்டையும், öண்ணையும் குளிர்ச்சி தருபவை
* வியர்வை துõண்டி, உடல் அசடுகளை அகற்றும்.
*சிறுநீர்ப் போக்கை அதிகப்படுத்தும்.
*தீப்புண், தலைவலி, தோல் வியாதிகள், வெப்பம் மற்றும் வியர்வையினால் ஏற்படம் தோல் மாற்றங்களை கட்டையினை அரைத்து தயாரித்த பசை போக்குகிறது.
* மூல வியாதிக்கு கட்டையின் கசாயத்துடன் சுக்கு சேர்த்து கொடுக்கப்படுகிறது.
*சந்தன எண்ணைய் பால்வினை நோய்க்கு நல்ல மருந்து.
* சிறுநீர்க்கழித்தலில் ஏற்படம் தொல்லையினையும் போக்கும்.
* சந்தன எண்ணையுடன் சமஅளவு கடுகு எண்ணைய் கலந்து மேற்பூச்சாக மூக்கில் ஏற்படும் பருக்களுக்கு தடவினால் மறையும்.
* சீனாவில் மார்பு மற்றும் அடிவயிற்று வலியினை போக்க பயன்படுத்தப்படுகிறது.
பயன்படுத்தும் முறைகள்:
* சந்தன கட்டையை பொடி செய்து காய்ச்சிய குடிநீர் மாந்தம், சுரங்கம், மார்புதுடிப்பு இவைகளை போக்கும்.
* சந்தன அரைப்பை கலக்கித் தெளிந்த நீர் 24 கிராம் தேன், சர்க்கரை கலந்து உட்கொள்ள வயிற்றுப்பொருமல், சீதக்கழிச்சல், வெப்பம், நீர்வேட்கை தணியும்.
* கட்டையை எலுமிச்சம் பழச்சாறு விட்டரைத்து நமைச்சல், சொறி, சிறங்கு, அக்கி, படர்தாமரை, தேமல் வீக்கம் இவைகளுக்கு மேல் பூசலாம்.
* சுரத்தில் காணும் தலைவலி, புருவத்தின் வலி இவைகளுக்கு தேனில் அரைத்த நெற்றியில் போடலாம்.
*சந்தனத்துõளை மைபோலரைத்து பாலில் கலந்து சீழ் வெள்ளைக்கு தர குணமாகும்.
* நீர்வேட்கை நீங்க இளநீரில் சந்தனதுõளை ஊறப்போட்டு வடித்து கொடுக்கலாம்.
* சந்தன தைலம் வெள்ளை நோயை போக்கும்.
*சந்தன ஊறல் குடிநீர் பித்தம், கண் எரிச்சல் நீங்கும்
*சந்தன மணப்பாகு குடிக்க மூலம், வெள்ளை தீரும்.
*வியர்வை, துர்நாற்றம் நீங்க சந்தனத்துõள், கஸ்துõரி மஞ்சள், வெட்டிவேர், பூலான் கிழங்கு பொடியை குளியல் பொடியாக பயன்படுத்தலாம்.
*பசும்பாலில் உரைத்துப் புளியங்கொட்டையளவு காலை, மாலை சாப்பிட்டுவர வெட்டைச் சூடு, மேக அனல், சிறுநீர்ப்பாதை, ரணம், அழற்சி ஆகியவை நீங்கும்.
*கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்துத் தடவ முகப்பரு, தவளைச் சொறி, சொறி படர், தாமரை, வெண்குட்டம், கருமேகம், வெப்பக்கட்டிகள், தீர்ந்து வசீகரம் அழகும் உண்டாகும்.

முகப்பூச்சு, நறுமணத் தைலம், சோப்புகள், ஊதுவத்திகள், அலங்கார பொருட்கள், மாலைகள் என மருத்துவம் சாராத பகுதிகளில் பயன்படுத்த பட்டாலும், கிருமி நாசினி செய்கை, உடல் அழற்சியை குறைக்கும் தன்மையை சந்தனம் கொண்டிருக்கிறது.
தொகுப்பு: தேவராஜன்



36 . கல்லீரல் காக்கும் பாகற்காய்!
ஒருகொடியை துõக்கத் துõக்க ஓராயிரம் பாவக்காய் என்பது பழமொழி. கொத்துக் கொத்தாகக் காய்க்கக்கூடியது பாகற்காய்.
இது வெப்பப்பிரதேச காய்.
தென்கிழக்கு ஆசியா இதன் பிறப்பிடம். ஆசியர்கள் மிக அதிகமாக சாப்பிடும் உணவு பொருள்இது.
சீனர்கள் பழங்காலத்திலிருந்தே பாகற்காய் சாப்பிட்டு வந்தனர். முதலில் இது தன்னிச்சையாக வளர்ந்து கிடந்தது. வறட்சிக்காலத்தில் வேறு உணவு கிடைக்காதப்போது இதை உண்டனர்.
பயன்படும் உறுப்பு: இலை, பழம், விதை
மருத்துவக் குணம்:
இலை: புழுக்கொல்லி, பால் பெருக்கி
பழம்: உடல் பலமாக்கி, பசித்துõண்டி, வெப்பம் உண்டாக்கி, பித்தத்தை சமன்படுத்தும், மலமிளக்கும், உடலைமெருகேற்றும்.
விதை: புழுக்கொல்லி
100கிராம் பாகற்காயில் இருக்கும் உணவுச்சத்து:
கலோரி 25, கால்சியம் 20 கிராம், பாஸ்பரஸ் 70 மி.கிராம், புரோட்டின் 1.6 சதவீதம்,கொழுப்பு 0.2 சதவீதம், இரும்புச்சத்து 1.8 மி.கிராம், மினரல்ஸ் 0.8 சதவீதம், பி. காம்ளெக்ஸ் 88 மி.கிராம், நார்ச்சத்து 0.8 சதவீதம், கார்போஹைட்ரேட் 4.2 சதவீதம் சிறிதளவு விட்டமின் சி.
இலை: அதிகரித்த வாத, பித்த, கபத்தை நடுநிலைப்படுத்தும். கழிச்சல் உண்டாக்கும். புழுக்களை வெளியாக்கும்.
பழம்: பழத்தினால் சுரம் நீங்கும். வெள்ளை குணமாகும். இருமல், இரைப்பு தீரும். மூலம், குஷ்டம், வயிற்றுப் புழு நீங்கும்.
கொம்பு பாகற்காய்:
இது நல்ல மருந்துகளை முறிக்கும். பித்தம், வாதம் அதிகரிக்கும். தோல் நோயை உண்டாக்கும்.
நாய் பாகற்காய்:
இது பீசைத்தை (சைனீஸ்) நீக்கும்.
மிதிப் பாகற்காய்:
வாதம், பித்தம் அதிகரிக்கும்.
பாகற்காயின் பயன்கள்:
இது வயிற்றுப் புழுவை நீக்கும்
ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும்
பசியை அதிகரிக்கும்
உடலை பலப்படுத்தும்
இருமல், இரைப்பை நீக்கும்
தோல் நோய்களைப் போக்கும்
கல்லீரல், மண்ணீரல் வீக்கத்தை குறைக்கும்
வாயுப் பிடிப்பை நீக்கும்
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்
பயன்படுத்தும் முறைகள்:
மிளகை இதன் இலை சாற்றுடன் அரைத்து கண்ணை சுற்றி பற்றி போட மாலைக்கண் நீங்கும்
கை,கால் எரிச்சலுக்கு இலைசாற்றை உள்ளங்கால், உள்ளங்கையில் பூச எரிச்சல் குறையும்
இதன் காயை வற்றலிட்டு உண்ண குடற் கிருமி நீங்கும்
இதன் பழத்தை சாறு பிழிந்து காமாலை க்குத் தரலாம்
பழச்சாற்றை சர்க்கரை கலந்து குடிக்க சூதகவலி நீங்கும்
இலையை உலர்த்தி பொடித்து தொழுநோய் புண்களுக்கு தடவலாம்
சர்க்கரை நோயாளிகள் வாரம் 2 முறை சேர்த்துக் கொள்ள நீரிழிவை கட்டுப்படுத்தும்

பாகல் இலைச் சாற்றை நிறையக்குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு கடித்த விஷம் நீங்கும்.
பாகல் இலைச் சாறு ஓர் அவுன்ஸ் அரை அவுன்ஸ் நல்லெண்ணைக் கலந்து உட்கொண்டால் காலரா நீங்கும்.

மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும்,ஜூரத்துக்கும், குடல் புண்,வாயுத் தொல்லைகளுக்கு மருந்தாகிறது.
பாகற்காயின் விதையிலிருந்து எடுத்த எண்ணை காயங்களை ஆற்றும் மருந்தாக பயன்படுகிறது.
பெருநாட்டில் பாகற்காயை அம்மைக்கும், மலேரியாவுக்கும் மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.

2 டீஸ்பூன் பாகற்காய் ஜூசுடன் தண்ணீர் சேர்த்துக் குடித்தால் மஞ்சள் காமலை குணமாகும். இதைச் சாப்பிடும் போது கண்ணில் தெரியும் மஞ்சள் நிறமும் உடனே மறையும்.
3லிருந்து 8 வயதுள்ள குழந்தைகளுக்கு அரை டீஸ்பூன் பாகற்காய் ஜூஸ் கொடுத்து வந்தால் பிற்காலத்தில் எந்த கல்லீரல் பாதிப்பும் வராது.
தினம் 2 வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜூசுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோயினால் ஏற்படும் ரத்த போக்கு நின்றுவிடும்.
தொகுப்பு: தேவராஜன்

37 . மார்பக புற்று நோய் தடுக்கும் தக்காளி

எப்படிப்பட்ட பெண்களின் முகத்தையும் அழகாக ஜொலிக்க வைக்கும் வித்தை தக்காளி வசம் உண்டு. பொலிவிழந்த, முரட்டுத்தனமான, கருவளையம் கொண்ட முகத்திற்கு தக்காளி பூசிவந்தாலோ, சாப்பிட்டு வந்தாலோ போதும். தக்காளி உங்கள் முகத்தை தங்கமென தகதகவென ஜொலிக்கவைத்துவிடும்.
ஆங்கிலத்தில் இதற்கு வழங்கும் பெயர் டொமேட்டோ. இந்தப் பெயர் நாஃகுவாட்டில் மொழிச் சொல்லான டொமாட்ல் என்பதில் இருந்து வந்த வேர்ச் சொல்லாகும்.
நம்மூர் கத்திரிக்காய், வெண்டைக்காய், கொடை மிளகாய் போன்று செடி இனத்தைச் சேர்ந்தது தக்காளி. இதை பூண்டு இனம் என்று கருதுவோரும் உண்டு.
தக்காளியின் தாயகம் தென்அமெரிக்கா, நடு அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவைச் சேர்ந்தது. குறிப்பாக பெரு, மெச்சிக்கோவில் இருந்து அர்ஜெண்டைனா வரையான பகுதியில் மிகுதியாகக்காணப்படுகிறது. இது ஓராண்டு தாவரமாகும். 1 3 மீட்டர் உயரம் வளரக்கூடியது.
தக்காளியின் சுவை: இனிப்பு.
மருத்துவ குணம்: உடலை பலப்படுத்தும், சிறுநீரை அதிகரிக்கும், மலத்தை கழியச் செய்யும்.
சீமைத்தக்காளி:
இது அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டது. இது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். உடலை பலப்படுத்தும்.
தக்காளியில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்:
நன்கு பழுத்த 100 கிராம் தக்காளியில் 18 கே கலோரி, கார்போஹைட்ரேட் 4 கிராம், சர்க்கரை 2.6 கிராம், நார்சத்து 1 கிராம், கொழுப்புச்சத்து 0.2 கிராம், புரதசத்து 1 கிராம், நீர்ச்சத்து 95 கிராம், விட்டமின்சி 13 கிராம்.
மினரல் சத்து: கால்சியம் 10 மி. கிராம், இரும்பு சத்து 0.27 மி.கிராம், மெக்னீசியம் 11 மி.கிராம், பாஸ்பரஸ் 24 மி.கிராம், பொட்டாசியம்237 மி.கிராம், சோடியம் 5 மி.கிராம், மாங்கனீசு 0.114 மி.கிராம்.
உயிர் சத்துக்கள்: விட்டமின்சி 12.7 மி.கிராம், தையாமின் 0.037 மி.கிராம், ரிபோளேவின் 0.019 மி.கிராம், நியாசின் 0.594 மி.கிராம், விட்டமின் பி6 0.080 மி.கிராம், விட்டமின்ஏ 42 மி.கிராம், கரோட்டீன் 449 மி.கிராம், லைகோபீன் 2573 மி.கிராம்,விட்டமின் இ 0.54 மி.கிராம்.
அமினோ அமிலங்கள்: லுõசின் 0.025 கிராம், லைசின் 0.027 கிராம், சிஸ்டின் 0.009 கிராம், அஸ்பார்டிக் அமிலம் 0.135 கிராம், குளுடாமிக் அமிலம் 0.431 கிராம்.
பொது குணம்:
தக்காளியில் அதிகளவு நீர்ச்சத்து இருப்பதால் உடலை குளிர்ச்சியடைய செய்யும்.
ரத்தத்தை சுத்திகரிக்கும்.
சீரணத்தை அதிகரிக்கும்.
கல்லீரலை சுத்திகரித்து பசியைத் துõண்டும்.
விட்டமின் சி அதிகளவு இருப்பதால் ஸ்கர்வி நோயை குணப்படுத்தும்.
தக்காளியின் பயன்கள்:
புற்றுநோயை நீக்கும்:
இதில் லைகோபேன் அதிகளவு இருப்பதால் புற்று நோயை விரட்டும்.
தக்காளியின் சிவந்த நிறத்திற்கு காரணம் லைகோபேன் ஆகும்.
இந்த சிவப்பு நிறமி சிறந்த எதிர்ப்பு சக்தி கொண்டது. எனவே, பெண்களுக்கு மார்பக புற்று, புரஸ்தகோள புற்று வராமல் தடுக்கும்.
புற்று நோய் கிருமிகளுக்கு எதிராக போராடும் தக்காளியை தினமும் 100 கிராம் முதல் 200 கிராம் வரை உணவில் பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம்.
இது கழுத்து, தலை புற்று நோய்களைத் தடுக்கும்.
இதய நோய்கள் நீங்க:
தக்காளியில் நியாசின், இரும்பு சத்து, விட்டமின் பி6 இருப்பதால் இதய நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
நியாசின் ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. பொட்டாசியம் அதிக ரத்த அழுத்தம் வராமல் தடுக்கிறது.
பக்கவாதம் தடுக்க:
ஹர்னோசைஸ்டீன் இருப்பதால் ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் வராமல் தடுக்கிறது.
முகப்பருவை நீக்கும்.
நரம்புகளை பலப்படுத்தும்.
ஆசனவாய் புற்றை தடுக்கும்.
தக்காளியும் குணமாகும் நோய்களும்:
முகப்பரு குணமாகும்.
ரத்த சோகைக்கு சிறந்தது.
மூட்டு வலியை போக்கும்.
உடல் துர்நாற்றத்தை நீக்கும்.
இருமலை போக்கும்.
கொழுப்பு சத்தை குறைக்கும்.
மலச்சிக்கலை நீக்கும்.
கருவளையத்தை போக்கும்.
கழிச்சலை குணமாக்கும்.
உடல் சோர்வை நீக்கும்.
மூலத்தை குணமாக்கும்.
துõக்கமின்மையை போக்கும்.
உடல் பருமனை குறைக்கும்.
வயிற்றுப் புண்ணை ஆற்றும்.
ஆகவே, பெண்கள் தினமும் உணவில் தக்காளி சேர்த்துக்கொண்டால் அழகும், ஆரோக்கியமும் கூடும்.
தொகுப்பு: தேவராஜன்

38 .

ரத்த விருத்தி தரும் அத்தி!
அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுகைகளில் நன்கு வளரும். தெய்வ அருள் பாவிக்கும் மரமென்று மக்களின் நம்பிக்கை. இதன் பூங்கொத்து வெளிப்படையாகத் தெரியாது. இதை, காணாமல் பூப் பூக்கும் கண்டு காய்க்கும் என்பதால் " அத்திப்பூத்தாற்போல' என்று பழமொழி அத்தி பற்றி சொல்லப்படுகிறது.
மர இனத்தைச் சேர்ந்தது அத்தி. இது இந்தியாவில் எங்கும் பயிராகிறது. இதற்கு அதம், அதவு, உதும்பரம், கோளி, சுப்பிரதஷ்டம் என்று வேறு பெயர்களும் உண்டு. மரத்தின் மேற்பட்டை வெளுத்தும், பிளவுபட்டும், சுரசுரப்பாக இருக்கும். அடி மரம் முதல் உச்சிக்கிளைகள் மட்டும் மரத்தையொட்டிக் காய்காய்க்கும்.
இதன் காய் உருண்டையாய், பச்சை நிறமாக, வழவழப்பாக இருக்கும். காயின் அடிப்புறம் குவிந்து மத்தியில் ஒரு சிறு துளையும், அதை சுற்றி செந்நிறக்கோடு இருக்கும். பழுத்தவுடன் அது செங்கல் நிறமாக மாறும். அதனுள் சிறு விதைகளும் பூச்சிகளும் அடங்கியிருக்கும்.
தென்னிந்தியாவில் இதன் பிஞ்சையும் காயையும் சமைத்து உண்பது வழக்கம். மருந்து உண்ணும் காலங்களில் இதைப் பத்தியப் பொருளாக வழங்குவதுண்டு.
அத்தியில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து,விட்டமின் ஏ,விட்டமின் சி ஆகிய சத்துக்கள் மற்ற பழங்களை விட அத்திப்பழத்தில் நான்கு மடங்கு உள்ளதாக ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பயன்படும் உறுப்பு:
பிஞ்சு, காய், பழம், பால், பட்டை
பிஞ்சு; துவர்ப்பு சுவை கொண்டது.
பிஞ்சினால் மூலவாயு தீரும். ரத்த மூலம் குணமாகும். வயிற்றுக்கடுப்பை போக்கும்.
காய்: துவர்ப்பு சுவைகொண்டது.
காயினால் வாத நோய் தீரும். சூலை உடல் வலி தீரும். உடல் வெப்பு, புண் குணமாகும். மலம் கழியும்.
பழம்: இனிப்பு சுவை உடையது.
செய்கை: குருதி பெருக்கி, மலமிளக்கி. இதனால் ரத்தம் பெருகும். கழியச் செய்யும்.
அத்திப்பால்:
சுவை: துவர்ப்பு
அத்திப் பாலால் நீரிழிவு தீரும். வெள்ளை குணமாகும்.
அத்திப்பட்டை:
சுவை: துவர்ப்பு.
ரத்தப் போக்கை கட்டுப்படுத்தும். சீதக்கழிச்சல் தீரும்.
அத்திக்கள்:
உடலை பலப்படுத்தும். இளைப்பு நோய் தீரும். பித்த மயக்கம் தீரும். உடல் பருக்கும்.
அத்தியில் உள்ள வேதிப் பொருட்கள்:
தாவரஸ்டீரால், ஹைடிரோ கார்பன், ஸ்டீரால், ப்ரைடெலின் உள்ளது.
மருத்துவப்பயன்கள்:
இலைகள் பொடி செய்யப்பட்டு தேனுடன் கலந்து பித்தத்தை குறைக்க பயன்படுகிறது.
லேடக்ஸ் பால் வயிற்றுப் போக்கு மற்றும் மூல நோய் போக்க பயன்படுகிறது.
வேர் மற்றும் கனி நீரிழிவு நோயில் குருதி சக்கரை அளவை குறைக்க பயன்படுகிறது.
வேரின் சாறு வயிற்றுப் போக்கினை கட்டுப்படுத்துவதில் சிறந்தது.
கனிகள் தசைகளை இறுக்கும் திறன் படைத்தவை.
அசீரணம், வயிற்று வலி, மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்த பட்டை குடி நீர் பயன்படும்.
அத்திக்காயை பருப்பு சேர்த்து சமைத்து உண்ண ரத்தம் பெருகும்.
ரத்த மூலம் நீங்க அத்திக்காயை பொடித்து மோரில் 10 நாள் தொடர்ந்து அருந்தலாம்.
சர்க்கரை நோயாளிகள் அத்திப்பட்டை, நாவல் கொட்டை, மாதுளை ஓடு, கறிவேப்பிலை, வெந்தயம் வறுத்து பொடித்து ஒரு தேக்கரண்டி உண்ண சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.
வெள்ளை தீர அத்திக்காயை பொடித்து மாதும்பழச்சாற்றில் அருந்த வெள்ளை குணமாகும்.
ரத்த சோகை நீங்க தினமும் அத்திகாயை வற்றல் போட்டு 2 துண்டு தேனில் ஊறவைத்து சாப்பிடலாம்.
அத்திப் பழத்தை உலர்த்தி பொடித்து ஒரு தேக்கரண்டி காலை, மாலை பாலில் உட்கொள்ள இதயம் வலுவாகும். ரத்தம் பெருகும்.
அத்திப் பழத்தை அப்படியே தினமும் 1020 என்ற அளவில் சாப்பிடலாம். காலை , மாலை சாப்பிட்டப் பின் பால் அருந்த வேண்டும். பதப்படுத்தி 5 நாட்கள் நிழலில் காயவைத்து தேனில் போட்டும் சாப்பிடலாம். உலர்த்தி பொடித்து சூரணமாக 10 15 கிராம் சாப்பிடலாம். இதனால் தாதுவிருத்தி, ஆண்மை ஆற்றல் பெருகும். ஆண்மலடு அகலும்.
பொதுவாக அத்தி உடல்பலவீனமாக இருக்கும் போதும், நோய்வாய்ப்பட்டு இருக்கும் போதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
தொகுப்பு: தேவராஜன்