திங்கள், 21 ஜனவரி, 2013

சுவரா(ஹா)ஸ்யம் பக்கம் /பாகம்-2/

************************************************* *********************************** சுவரா(ஹா)ஸ்யம் பக்கம் /பாகம்-2/ (தினமலர்- சிறுவர் மலரில் 7.9.2012 முதல் நான் எழுதி வரும் தொடர்கட்டுரைகளின் பாகம் இரண்டு.) சுவாரஸ்யம்/18/ 4.01.2013/ ஆயிரம் அர்ச்சுனர்கள் காந்திஜி எங்கிருந்தாலும் கடிதம் எழுதும் பழக்கத்தை விடவே மாட்டார். தினசரி சபர்மதி ஆசிரமத்துக்கு வரும் கடிதங்கள் அனைத்தையும் படித்துவிட்டு, பதில் தரவேண்டிய கடிதங்களுக்கு உடனுக்குடன் பதில் கடிதம் எழுதி அனுப்பிவிடுவார். ஒருசமயம் காந்திஜி சிறையில் இருக்கும் போதும் சபர்மதி ஆசிரமத்திலிருந்த சிறுவர் சிறுமியர்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை கடிதம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆசிரம சிறுவர்கள் எழுதி அனுப்பும் கடிதங்களுக்கு காந்திஜியும் நகைச்சுவையோடு சுருக்கமாக பதில்களை எழுதி அனுப்பி வைப்பார். அவருடைய சுருக்கமான பதில்கள் சிறுவர், சிறுமியர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. அவர்கள் காந்திஜிக்கு, “காந்திஜி அவர்களே, பகவான் கிருஷ்ணன், அர்ச்சுனன் கேட்ட சிறு சிறு கேள்விகளுக்குக் கூட அத்தியாயம் அத்தியாயமாய் பதில் அளித்தார். ஆனால் உங்கள் பதில்கள் ஓரிரு வார்த்தைகளாகவே இருக்கிறதே! ஏன் அப்படி?” என்று கேட்டு கடிதம் அனுப்பினார்கள். அதற்கு காந்திஜியும் பதில் அனுப்பினார். “குழந்தைகளே, பகவான் கிருஷ்ணருக்கு ஒரு அர்ச்சுனர் மட்டும்தான் கேள்வி கேட்பவராக இருந்தார். ஆனால், எனக்கு உங்களைப் போல் பல ஆயிரம் பேர் கடிதம் எழுதுகிறார்கள், கேள்வி கேட்கிறார்கள். எல்லாருக்கும் பதில் எழுத வேண்டியதிருக்கிறதே...” என்று நகைச்சுவையாகப் பதில் எழுதி அனுப்பினார். சிறுவர், சிறுமியர்கள் காந்திஜியின் விளக்கம் படித்து, அவரின் சுருக்கமான பதிலைப் படித்து மகிழ்ந்து போனார்கள். தாத்தா- பேரன் இருவர் ஒரு ஓட்டலுக்கு சாப்பிட போனார்கள். அங்கே ஒரு பலகையில் ‘இங்கே நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். பணத்தை உங்கள் பேரப்பிள்ளைகள் செலுத்தினால் போதும்’ என்று அறிவிக்கப் பட்டிருந்தது. சாப்பிட போன அந்த இருவரும் அந்த அறிவிப்பை படித்து மகிழ்ந்தார்கள். நாம சாப்பிடறதுக்கு நம்ம பேரன்கள் அல்லவா காசு கொடுக்கப் போகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு அந்த ஓட்டலில் சாப்பாட்டை வெளுத்து கட்டினார்கள். பெரிய ஏப்பத்துடன் கையை கழுவி விட்டு வந்தவுடன், சர்வர் ஒரு பெரிய தொகையை பில்லாக கொடுத்தார். சாப்பிட்ட இருவருக்கும் கோபம்னா அப்படி ஒரு கோபம், “என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க? என்ன எழுதி போட்டு இருக்கு? என்ன இது பில்லு?” என்று கத்தினார்கள். சர்வர் அமைதியாக சொன்னார் “எல்லாம் சரிதான். ஆனா, இது உங்க தாத்தா சாப்பிட்ட பில்லாச்சே....” என்றார். .......................................................... ***************************************************************************************************** சுவாரஸ்யம்/19/ 11.01.2013/.................................................. விவேகானந்தரின் துணிச்சல்!..................................................... ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் சென்றிருந்தார். நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன. ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். கூடவே, நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்து விட்டார். அதைக் கண்டதும் விவேகானந்தரும், அவரது நண்பரும் துணுக்குற்றனர். மனைவியைத் துõக்க நண்பர் முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார். பாய்ந்து வந்த மாடு, கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதைக் கண்ட நண்பர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினார். மாடும் விடாமல் அவரைத் துரத்தியது. ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடிவந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப் போட்டனர். விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே ஆச்சரியம். அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார். “சிறிதுகூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார். ..................................................... *************************************************************************************************************** கோணமண்டையா/20/ 18.01.13........................................................... அந்தச் சிறுவன் ஓஹையோ நகரத்தில் மிலான் என்ற ஊரில், பிப்ரவரி11, 1847ம் ஆண்டு பிறந்தான். அவன் பெற்றோருக்கு 7 வது குழந்தை. அதுவும் கடைசி குழந்தை. அந்தச் சிறுவனுக்குச் சிறுவயதிலேயே காது செவிடாய் போய்விட்டது. அதுமட்டுமா? அவனுக்கு பிறக்கும் போதே பின்னந்தலை பின்புறம் சற்று நீட்டிய நிலையில் இருந்தது. அவன் வளர்ந்த பிறகும் மண்டையின் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவன் பள்ளியில் சேர்க்கப்பட்டான். ஒரு சில நாட்கள் பள்ளிச் சென்றவன், திடீரென்று இனி பள்ளிக்குச் செல்லமாட்டேன் என்று அடம்பிடித்தான். ஏனென்று காரணம் கேட்டார் தாய். அதற்கு, அவன், “பள்ளியில் எல்லாரும் என்னை ‘கோணமண்டையா கோண மண்டையா” என்று கேலி செய்வதாகக் கூறினான். தாய் சமாதானப்படுத்தி பள்ளிக்கு அனுப்பி வைத்தார். பள்ளிக்குச் சென்று வந்தான் அவன். மீண்டும் ஒரு நாள் பள்ளிக்குச் செல்லமாட்டேன் என்று அடம்பிடித்தான். இம்முறை காரணமாக அவன் சொல்லியது: “ என்னை வகுப்பில் எல்லார் முன்னாடியும் மூளைக்கோளாறு உள்ளவன்” என்று ஆசிரியர் திட்டிவிட்டதாகக் கூறினான். மீண்டும் சமாதானப்படுத்தி பள்ளிக்கு அனுப்பப்பட்டான். வழக்கம் போல மீண்டும் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்தான். கடுப்பான தாய், “உனக்கு கோணமண்டை, அதான் படிப்பு ஏறவில்லை” என்றார். அன்றுடன் அவன் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. உலகத்தில் அதிக கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி சாதித்தவர்களின் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருக்கிறார் அந்தச் சிறுவன். அவர்தான் தாமஸ் ஆல்வா எடிசன். எடிசன் இறந்த பிறகு, அவரின் தலையை ஆராய்ச்சி செய்த மருத்துவர்கள் நமக்கு இருக்கும் அதே அளவு மூளை எடிசனுக்கும் இருக்கிறது. ஆனால், பின்புறத்தலையின் நீண்டப் பகுதியில்தான் ஏதோ கண்டறிய இயலாத மிகப்பெரிய மர்மம் மறைந்து இருப்பதாக அறிக்கை சமர்ப்பித்தார்களாம்! * பிரிட்டிஷ் ராஜாவையே கவுத்துட்டியே! வேலைக்காரரை அழைத்து, ‘தபால் தலையை ஒட்டிக் கொண்டுவா’ என்றார் ராஜாஜி. பிரிட்டிஷ் மன்னர் தலையிட்ட தபால்தலையைத் தலைகீழாக ஒட்டிக்கொண்டு வந்தார் வேலைக்காரர். இந்தச் செயலுக்கு நாமாக இருந்தால் கோபப்பட்டிருப்போம். ராஜாஜி சொன்னார்: “பரவாயில்லையே! நாங்களெல்லாம் செய்ய முடியாத காரியத்தை நீ செஞ்சுட்டியே, பிரிட்டிஷ் ராஜாவையே கவுத்துட்டியே!” என்றாராம். ................................ ******************************************************************************************************************************************* எட்டேகால் லட்சணம்/21/ 25.01.13/........................................................... ஒரு நாள் அரசவைக்கு வருகை தந்தார். அப்பொழுது புலவர் ஒருவர் அவ்வையாரை நோக்கி ஆரைக் கீரைக்கும் அவ்வைக்கும் சிலேடையாக அதாவது இரு பொருள்படும் படியாக ஒப்பிட்டு, ‘ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ‘ என்று கூறினார். இதற்கு அவ்வையார், ‘எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க் கூறையில்லா வீடே, குலராமன் துõதுவனே ஆரையடா சொன்னாயது.’ என்று பதில் பாட்டு கொடுத்தார். தமிழில் ‘அ‘ அன்பது எண் 8 ஐக் குறிக்கும் ‘வ‘ 1/4 ஐக் குறிக்கும். 8, 1/4 இரண்டையும் சேர்த்தால் ‘அவ‘ என வரும். எட்டேகால் லட்சணமே என்றால் ‘அவ லட்சணமே‘ எனப் பொருள்படும். எமனேறும் பரி எருமை. எமனேறும் பரியே என்றால் ‘எருமையே‘ எனப் பொருள் படும். மட்டில் பெரியம்மை வாகனமே என்றால் ‘மூதேவியின் வாகனமே‘ என்று பொருள். கூரையில்லா வீடு குட்டிச் சுவர். கூரையில்லா வீடே என்றால் ‘குட்டிச் சுவரே‘ என்று பொருள். ‘குலராமன் துõதுவனே‘ என்றால், ராமாயணத்தை எழுதியவனே என்றும், ராமனுக்குத் துõது சென்ற அனுமானான ‘குரங்கே‘ என்றும் பொருள் படும். ‘ஆரையடா சொன்னாயது‘ என்றால் நீ சொன்னதன் பொருள் ஆரக்கீரை யென்றும் யாரைப் பார்த்து இப்படிச் சொன்னாய் என்றும் இருபொருள் படும். இத்துடன் ‘அடா‘ என்ற அடைமொழி சேர்த்துத் தன்னை ‘அடி‘ என்றதற்குப் பதிலடி கொடுத்தார். * எங்கே விழுது? கி.வா.ஜகன்நாதன் அவர்கள் திருப்பனந்தாள் கோயிலுக்குப் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். பிரசங்கம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படும் முன் அவருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவை இடம் பெற்றன. இலை போட்டபின்பு கி.வா.ஜ.வும் அவருடன் வந்தவர்களும் இலையில் அமர்ந்தனர். பரிமாறுபவன் முதலில் கி.வா.ஜ. வின் இலையில் பொங்கலை வைத்தான். பின்னர் ஒரு சிப்பந்தி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, கி.வா.ஜ.வின் இலையில் வைத்துள்ள பொங்கல் மேல் கவிழ்த்தான். ஆனால் ஒன்றும் விழவில்லை. கி.வா.ஜ அவனை நோக்கி, ‘என்ன?‘ என்று கேட்க, ‘நெய்ங்க...‘ உருகாமல் விழுதாக இருக்கிறது, சீக்கிரமே விழமாட்டேங்குது‘ என்று சொன்னான். கி.வா.ஜ அவர்கள் நகைச்சுவையாக, ‘விழுதா, எங்கே விழுது? விழக் காணோமே!‘ என்று சொல்ல உடனிருந்தவர்கள் அவரது சிலேடையைக் கேட்டு ரசித்துச் சிரித்தனர். .......................................................................................................... ******************************************************************************************************************************** அதிர்ச்சி நகைச்சுவை/22/ 1.02.2013/........................................................................... கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் நகைச்சுவையாக பேசக்கூடியவர். அவர் பேச்சுகள் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கும். இதோ ஒரு அதிர்ச்சி நகைச்சுவை. என்.எஸ். கிருஷ்ணன் குடும்பமும் பக்கத்து வீட்டு குடும்பமும் திருப்பதிக்கு செல்வதாக திட்டுமிட்டு இருந்தனர். இது தொடர்பாக பக்கத்து வீட்டு பெண்மணி, என்எஸ் கிருஷ்ணனை பார்த்து பேச வந்தார். அந்தப் பெண்மணி , என் எஸ் கிருஷ்ணனைப்பார்த்துக் கேட்டாங்க ...... “நாம நாளானிக்கு திருப்பதி போறதா ஒரு பிளான் வச்சிருந்தோமே!, யார், யார் போறோம்னு முடிவு பண்ணியாச்சா?” என்று கேட்டார். அதற்கு, என்எஸ் கிருஷ்ணன் சிலேடையாக அந்த பெண்மணியைப் பார்க்காமலேயே....“அதெல்லாம் எனக்குத் தெரியாது , நா ஓம் புருஷன் , நீ என் பொண்டாட்டி ..... அவ்வளவு தான்”என்றார் . இப்படி அவர் சொல்லி முடித்ததும்,அந்தப் பெண்மணி அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டு வாயடச்சுப் போயி இருந்தாங்க. பிறகு, கொஞ்சம் நேரம் கழித்து அவர் சொன்னதை ஆழமாக யோசிச்ச போது தான் அந்தப் பெண்மணிக்கு வாய் நிறைய சிரிப்பு வந்து சிரிச்சாங்க. என் எஸ் கிருஷ்ணன் சொன்னதின் அர்த்தம்- நான் ஓம் புருஷன் என்பது நானும், உன் புருஷனும். நீ என் பொண்டாட்டி என்பது நீயும் என் பொண்டாட்டியும் திருப்பதி போறோம் என்று இரட்டை அர்த்தம் வரும்படி பேசினார். ** நானா பொய்யன்? அமெரிக்காவில் 1961ம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் நிக்சனும், ஜான் எப். கென்னடியும் போட்டி யிட்டனர். பொதுக் கூட்டத்தில் பேசிய நிக்சன், “கென்னடி நம்பிக்கைக்குரியவர் அல்லர்; அவர் மகா பொய்யர்” என்று பேசினார். இதனைக் கேட்ட கென்னடி, “நண்பர் நிக்சன் என்னை ஒரு பொய்யர் என்று குறிப்பிட்டுப் பேசினார். நான் பொய்யன் என்று நீங்கள் நம்புகிறீர்களா? இப்போது இந்தக் கூட்டத் தில் நான் பேசுபவை பொய் என்றால் தைரியமாகக் கூறுங்கள். இப்போது நான் சொல்கிறேன், இந்தக் கூட்டத்திலிருக்கும் ஆண்கள் அனைவரும் சிறந்த அறிவாளிகள்; அதேபோல் இங்கே கூடியிருக்கும் பெண்கள் அனைவரும் சிறந்த அழகுடையவர்கள். நான் சொன்னது பொய்யெனில், இப்போதே தைரியமாக மறுத்துக் கூறுங்கள்” என்று சாதுரியமாகப் பேசினார். கூட்டத்திலிருந்த அனைவரும் கைதட்டி ஆரவாரித்தனர். தேர்தலில் வெற்றிபெற்று, குறைந்த வயதிலேயே குடியரசுத் தலைவரானவர் என்ற பெருமையையும் பெற்றார் கென்னடி. ****************************

குட்டீஸ் கேள்வி பதில் 51

குட்டீஸ் கேள்வி பதில் 51 25.01.2013 உலகளாவிய வலைப்பின்னல் எப்படி தோன்றியது? - மு. கலைவாணன், களம்பூர். ஙிணிணூடூஞீ ஙிடிஞீஞு ஙிஞுஞ என்பது அலுவலகரீதியாக இடையில் இணைக்கோடு எதுவும் இன்றி, மூன்று தனித்தனி சொற்களாக, ஒவ்வொன்றும் பேரெழுத்தாகக் குறிக்கப்படுகிறது. உலகளாவிய வலை (ஙிணிணூடூஞீ ஙிடிஞீஞு ஙிஞுஞ, தீதீதீ, பொதுவாக ’வலை‘ எனச் சுருக்கமாக அழைக்கப்படுவது) என்பது இணையத்தின் வழியாக அணுகப்படும், ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்ட ஆவணங்களைக் கொண்டுள்ள அமைப்பாகும். ஓர் வலை உலாவியைக் கொண்டு செய்திகள், படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற பல்லுõடகக் கூறுகளை வலைப் பக்கங்களைக் காணவும், இணைப்புகளைப் பயன்படுத்தி அவற்றில் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு செல்லவும் முடியும். இதற்கு முன் உள்ள அடிப்படைகளைப் பயன்படுத்தி, 1989ம் ஆண்டு ஆங்கில இயற்பியல் ஆய்வாளரும் உலகளாவிய வலைச் சங்கத்தின் இயக்குநருமான சர் டிம் பெர்னெர்ஸ்-லீ என்பவர் உலகளாவிய வலையைக் கண்டறிந்தார். பின்னாளில் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள இஉகீN நிறுவனத்தில் இவருடன் ஒன்றாகப் பணிபுரிந்த ராபர்ட் கயில்லியவ் என்ற பெல்ஜிய கணினி விஞ்ஞானி இதற்கு உதவியாளராக இருந்தார். இவர்கள் 1990ம் ஆண்டு ஒரு இணையத்தில் ‘உலாவிகள்‘ மூலமாகக் காணக்கூடிய வகையில் ஏற்கனவே எடுத்த தகவல்களையும் சேகரித்து வைக்கக்கூடிய ‘வெப் ஆஃப் நோட்ஸ்‘ என்னும் அமைப்பிற்கான திட்டத்தை உருவாக்கி, வெளியிட்டனர். உலகளாவிய வலையில், தகவல்களை இணையத்தின் வழியே, பயன்படுத்த எளியதாக வடிவமைப்புகளின் மூலம் பரப்புவதைச் சாத்தியமாக்கியது. இவ்வாறாக, உலகளாவிய வலையானது இணையத்தின் பயன்பாட்டைப் பிரபலமாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தது. உலகளாவிய வலை மற்றும் இணையம் ஆகிய இரண்டு சொற்களும் வழக்கில் ஒரே பொருள்படக்கூடியவையாகப் பயன்படுத்தப்பட்டாலும், உலகளாவிய வலை என்பது இணையம் என்ற சொல்லுக்குப் பொருள் ஆகாது. வலை என்பது இணையத்தில் உருவாக்கப்பட்ட ஓர் பயன்பாடாகும். * ஜம்போ என்ற பெயர் யானைக்கு வந்தது எப்படி? - எஸ். அருண்குமார், திருவையாறு. மிகப் பெரியனவற்றை ஆங்கிலத்தில் ஜம்போ என்பர். மிகப்பிரபலமான ஒரு யானையின் பெயர்‘ஜம்போ’ . சூடானிலிருந்து இந்த ஜம்போ யானை பாரிஸ் மிருகக்காட்சி சாலைக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் 1865ம் ஆண்டு லண்டன் மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்டது. இது ஆப்பிரிக்க யானை. இந்த யானையின் எடை 6.5 டன். லண்டன் மிருகக்காட்சி சாலையில் இருந்தபோது இந்த யானை எல்லாரையும் கவர்ந்தது. குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் இதற்கு அமோக வரவேற்பு இருந்தது.இந்த யானை மிகவும் அழகாகவும், எல்லாராலும் விரும்பப்பட்டதாகவும் இருந்தது. இந்த யானை, 1882ம் ஆண்டு சர்க்கஸ் நிறுவனமொன்றுக்கு விற்கப்பட்டது. இயல்பிலேயே குறும்புக்கார குணம் கொண்ட ஜம்போ யானை சர்க்கசில் பல சாகசங்கள் செய்து ரசிகர்களையும் , குழந்தைகளையும் கொள்ளை கொண்டது . ஜம்போ யானை மிகவும் பிரபலமானதால், ஒரு பணக்காரர் அதைப் பணம் கொடுத்து வாங்க முன்வந்தார் . ஆனால் அது தடுக்கப்பட்டுவிட்டது. 1885ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி, இந்த யானையை ரயிலில் ஏற்றிச் சென்றபோது விபத்தில் இறந்தது. ஜம்போ இறந்த பிறகு, அதன் நினைவாக ஒரு சிலை இங்கிலாந்தில் நிறுவப்பட்டது. ****************************************************************

குட்டீஸ் கேள்வி பதில் 50

குட்டீஸ் கேள்வி பதில் 50 *பலுõன் மேலே பறப்பது எப்படி? 18/01/03/ - எஸ்.ஏ. காவேரி, தம்மம்பட்டி. ஒரு பொருள், அது தனது பருமனுக்குச் சமமான எடையைவிட லேசாக இருந்தால் பறக்கும். இது பலுõன் மேலே பறப்பதற்கான அறிவியல் காரணமாகும். மேலே செல்லச் செல்ல காற்றின் அடர்த்தி குறைவாகின்றது. அதனால் மேலே சென்ற பலுõனின் உள்ளே இருக்கும் வாயுவின் அடர்த்திக்கு சமமான காற்று வெளியே இருக்கும் வரை பலுõன் மேலே செல்லும். நாம் வாயால் ஊதும் பலுõன் குறிப்பிட்ட உயரம் வரைதான் செல்லும். காரணம் பலுõலினுள் இருப்பது சாதாரண காற்று. அதனால் அதன் எடையும் அது ஏற்படுத்தும் இடத்தின் காற்றின் எடையும் சமமாகிறது. பலுõன்களில் காற்றைவிட அடர்த்தி (எடை) குறைவான ஹீலியம் வாயுவால் நிரப்பப் படுகின்றது. ஹீலியம் நிரப்பப்பட்ட பலுõன் வெளிக்காற்றின் எடையைவிடக் குறைவான காற்றைக் கொண்டிருப்பதால் மேலே பறக்கிறது. *நாம் அழும்போது கண்களில் நீர் சுரந்து வருவது எப்படி? - தேஷ்ராஜ், சத்திரம்புதுõர். கண்ணீர் என்பது நம் கண்களில் அமைந்துள்ள கண்ணீர் சுரப்பிகளிலிருந்து உண்டாகிறது. கண்ணீரில் மூன்று விதம் உண்டு. அடிப்படை கண்ணீர்: (ஆச்ண்ச்டூ tஞுச்ணூண்) இது நமது கண்களை ஈரப்பசையுடன் வைக்கவும், துõசியை அகற்றவும் உதவுகிறது. எதிர்வினைக் கண்ணீர்: (கீஞுடூஞுது tஞுச்ணூண்) கண்களில் ஏதாவது விழுந்து விட்டாலோ, அதிக நெடியினால் கண்கள் பாதிக்கப்பட்டாலோ அல்லது இருமும்போதும், தும்மும்போதும், வெங்காயம் நறுக்கும்போதும் வருவது இந்தவகைக் கண்ணீர். உணர்வுசார் கண்ணீர்: (ஞுட்ணிtடிணிணச்டூ tஞுச்ணூண்) பலமான உணர்ச்சிக் கொந்தளிப்பு, கோபம், பயம், மன அழுத்தம், துக்கம், சில சமயம் மித மிஞ்சிய சந்தோஷம் இவை இந்த வகைக் கண்ணீருக்குக் காரணம். கடைசியாக சொன்ன உணர்வுசார் கண்ணீர்தான் நாம் அழும்போது கண்களில் கண்ணீராக வருகிறது. உணர்வுசார் கண்ணீர் நம் உடலில் மன அழுத்தத்தாலும், கவலையினாலும் சேர்ந்து இருக்கும் வேண்டாத நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. உணர்வுசார் கண்ணீர் வருவதற்கு மிகப் பலமான, உணர்வுபூர்வமான துõண்டுதல் இருக்க வேண்டும். அழுகையோ, சிரிப்போ உணர்வுபூர்வமான சூழலை மூளை உணர வேண்டும். அதனால் ஒருவர் அழும்போது மூளையின் பல பகுதிகள் வேலை செய்கின்றன. இதன் காரணமாக, உடல்ரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. * மண்வாசனை எப்படி வருகிறது? - எஸ். அருண்குமார், திருவையாறு. காய்ந்த நிலத்தில் மழை பொழிந்த உடன் ஒரு மணம் வெளிப்படுகின்றது. இதனை மண்வாசனை என்பர். நிலத்தில் ஸ்ட்ராப்டோமைசிஸ் , ஆக்டினோமைசிஸ் போன்ற எண்ணற்ற பாக்டீரியாக்களும், பிற நுண்ணுயிர்களும் உள்ளன. இவை வறண்ட நிலத்தில் அதிக அளவு உள்ளன. ஒரு கிராம் நிலத்தில் பத்து லட்சத்துக்கும் அதிகமான நுண்ணுயிர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. வறண்ட நிலத்தில் மழை பொழிந்தவுடன் இந்த நுண்ணுயிர்கள் ஜியோஸ்மின் மற்றும் டை - மிதைல் ப்ரோமியால் போன்ற எளிதில் ஆவியாகக் கூடிய வேதியல் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இந்த வேதியல் பொருட்கள் காரணமாகவே, காய்ந்த நிலத்தில் மழை பொழிந்தவுடன் மணம் கிளம்புகின்றது. ...................................................********************************************************************************

குட்டீஸ் கேள்வி பதில்49

குட்டீஸ் கேள்வி பதில்49 / 11.01.2013/ கறுப்புப் பெட்டிபற்றி சொல்லுங்க அங்கிள்! - பா. பார்வதி, பேரளம். ‘கறுப்புப் பெட்டி’ என்பது விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு முக்கிய கருவி. விமானம் இயங்கிக் கொண்டிருக்கும்போது விமானிகளுக்கும், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையே நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை இந்தக் கறுப்புப் பெட்டி பதிவு செய்து கொண்டே இருக்கும். இந்த கறுப்புப் பெட்டி பெரும்பாலும் விமானத்தின் வால் பகுதியில் அல்லது மேற்கூரையில் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு விமானத்தில் 2 கறுப்புப் பெட்டிகள் இருக்கும். பெரிய கறுப்புப் பெட்டிக்குப் பெயர் ‘பிளைட் டேட்டா ரெகார்டர்.’ இது விமானம் பறக்கும் நேரம், வேகம், உயரம் ஆகிய விவரங்களை பதிவு செய்யும். சிறிய கறுப்புப் பெட்டிக்குப் பெயர் ‘வாய்ஸ் ரெகார்டர்.’ இது விமானியின் அறையில் நடக்கும் உரையாடல்களைப் பதிவு செய்யும். கறுப்புப் பெட்டியை 1953ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வாரன் என்பவர் கண்டுபிடித்தார். கறுப்புப் பெட்டியின் நிறம் கறுப்பு அல்ல, ஆரஞ்சு நிறம். ஒரு கறுப்புப் பெட்டி கடைசியாக நடந்த 25 மணி நேர விமானத் தகவல்களையும், 30 நிமிட விமானிகளின் உரையாடல்களையும் கொண்டிருக்கும். விபத்து நடந்த பிறகு கறுப்புப் பெட்டியிலிருந்து ‘பீப்’ சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இது பெட்டியை கண்டுபிடிக்க உதவுகிறது. *நாய், படுக்கும் முன் அந்த இடத்தை இரண்டு அல்லது மூன்றுமுறை சுற்றி வந்த பிறகே படுக்கிறது, ஏன்? - ஆர். கோகுல், அரக்கோணம். நாய் ஒரு இடத்தைச் சுற்றும்போதே காற்று எந்த திசையிலிருந்து வீசுகிறது என்பதை உணர்கிறது. அதைத் தொடர்ந்து காற்று வீசும் திசைக்கு எதிராக உட்கார்கிறது; அல்லது படுக்கிறது. இச்செயல் மூலம், நாய் தன் அற்புதமான முகரும் திறன் காரணமாக தன் எதிரிகளின் நடமாட்டத்தை விரைவில் உணர்ந்து கொள்கிறது. அதனால் எதிரியின் தாக்குதலில் இருந்து எளிதில் தப்பிக்கவும் முடிகிறது. வெப்பச் சலனம் என்றால் என்ன? -ஆர். ஸ்ரீநிஜா, ஸ்ரீரங்கம். அதிகமாக வெயில் அடிக்கும்போது கடல் காற்று உள்ளே வந்தால் காற்றில் ஈரப்பதம் சேர்ந்து ஆங்காங்கே மேக கூட்டம் உருவாகும். இதைத் தான் வெப்பச் சலனம் என்கிறார்கள். இந்த மேகக்கூட்டங்கள் எல்லா இடத்திலும் இருக்காது. அதனால்தான் ஓரிடத்தில் மழை பெய்தால் இன்னொரு இடத்தில் மழை இருக்காது. கோடை சமயங்களில் வெப்ப சலனம் அதிகம் ஏற்படும். சூரியன் பூமியை சூடாக்குகின்றது. பூமி உள்வாங்கிய வெப்பத்தை வெளியிடுவதன் மூலம் அருகிலுள்ள காற்றை சூடாக்குகின்றது. சூட்டினால் காற்றினுடைய அடர்த்தி குறைவடைவதனால் புவியீர்ப்பு திசைக்கு எதிர் திசையில் சூடான காற்று மேலெழும்பும். இதை வெப்ப நீரோட்டம் அல்லது வெப்ப சலனம் என்று கூறுவர். பூமியின் மேற்பரப்பானது புல் தரை, கட்டாந்தரை, மணல்வெளி, நீர்நிலை என மாறுபடுவதால் ஒரே சூட்டில் இருப்பதில்லை. இதனால் காற்றும் வெவ்வேறு உஷ்ணத்தில் சூடேற்றப்பட்டு பல இடங்களில் வேகமாகவும், சில இடங்களில் மெதுவாகவும் மேலெழும்புகின்றது. இவ்வாறு குறைந்த அழுத்த மண்டலத்தினுள் செல்லும் காற்று விரிந்து குளிர்கின்றது. இதனால் காற்றினுள் இருக்கும் நீராவியும் குளிர்ந்து வளிமண்டலத்திலுள்ள துõசு துணிக்கைகள், உப்பு ஆகியவற்றின் மீது மையம் கொண்டு திரண்டு, பரவி திரவமாகவும், ஆவியாகவும் மிதக்கின்றது. இவ்வாறே நிறைய சிறு நீர்த்துளிகள் சேர்ந்து மேகம் உருவாகின்றது. இவ்வாறு உருவாக்கப்படும் மேகங்கள் காற்றின் உதவியுடன் ஒன்று திரட்டப்பட்டு சில படிமுறைகளுக்குப் பின் மேகங்களிலுள்ள நீர் ஒடுங்கி மழையாக பூமிக்கு வந்து விழுகின்றது. ..................................................................********************************************************************************

குட்டீஸ் கேள்வி பதில்48

குட்டீஸ் கேள்வி பதில்48 *காலண்டர் எவ்வாறு உருவானது?/ 4.01.2013/ - வீ. பவானி, மலைக்குடிப்பட்டி. குட்டீஸ்! நம் வீடுகளில் புது ஆண்டின் விதவிதமான வடிவமைப்புகளில் காலண்டர்கள் வாங்கி மகிழும் வேளையில் காலண்டர்கள் எப்படி உருவானது என்று கேள்வி கேட்டிருக்கும் வீ. பவானிக்கு பாராட்டு! கணக்கு கூட்டுவது எனும் பொருள் தரும் ‘கலண்டே’ எனும் லத்தீன் உச்சரிப்பிலிருந்து உருவானதுதான் காலண்டர் (இச்டூஞுணஞீஞுணூ) எனும் ஆங்கிலச் சொல். புவியியல் மற்றும் கால நிலைகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களே துவக்ககால காலண்டர்களுக்கு அடிப்படையாக அமைந்தன. நைல் நதியில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கை அடிப்படையாகக் கொண்டு புராதன எகிப்தியர் உருவாக்கிய காலண்டர் இதற்குச் சான்று. இன்று நம் முன்னே இருக்கும் காலண்டரின் அடிப்படை கி.மு. 45ல் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியன் காலண்டரே. இன்று உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படும் காலண்டரே முறையே கிரிகோரியன் காலண்டர். பதிமூன்றாம் போப் ஆண்டவராக இருந்த போப் கிரிகோரியின் ஆணைப்படி, அலோயிஷியஸ் என்னும் மருத்துவரே 1582 பிப்ரவரி 24 ல் ஜூலியன் காலண்டரில் காணப்பட்ட குறைபாடுகளைத் திருத்தியமைத்து கிரிகோரியன் காலண்டரை உருவாக்கினார். இந்திய தேசியக் காலண்டர்: கி.பி. 78ல் துவங்கும் சக காலண்டரே இந்தியாவின் தேசியக் காலண்டராக கருதப்படுகிறது. சாதவாஹன மன்னரான சாலிவாஹன் உஜ்ஜைனி மன்னர் விக்ரமாதித்தனை போரில் வென்றதையடுத்து சக ஆண்டு துவங்கியது. இந்தியாவில் கிரிகோரியன் காலண்டரும் சக ஆண்டு காலண்டரும் அதிகாரப் பூர்வமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்க் காலண்டர்: சூரியனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. கிரிகோரியனைப் போன்றே சித்திரை முதல் பங்குனி வரையிலான 12 மாதங்கள் இதிலும் உண்டு. இஸ்லாமியக் காலண்டர்: முகமது நபி மெக்காவிலிருந்து மதினாவுக்குச் சென்ற நாளிலிருந்துதான் இஸ்லாமியக் காலண்டரின் ஆண்டு துவங்குகிறது. கி.பி. 622ல் நிகழ்ந்தது நபியின் பயணம். சந்திரனை அடிப்படையாகக் கொண்ட இது 12 மாதங்கள் கொண்டது. ஜூலியன் காலண்டர் கி.மு.45 ல் பிரபல வானியல் நிபுணராக இருந்த கோஸிஜின்ஸி என்பவரின் அறிவுரைப்படி இக்காலண்டரை நடைமுறைப்படுத்தியவர் ஜூலியஸ் சீசரே. இப்போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் கிரிகோரியன் காலண்டரின் முன்னோடி இது. *அடுப்பில் இருக்கும் பாத்திரத்தில் கொதிக்கும் பாலை துழாவிக்கொண்டே இருந்தால் பால் பொங்கி வழிவதில்லை ஏன்? - எஸ். கமலா, திருச்சேறை. கொதிக்கும் பாலை ஒரு கரண்டியால் தொடர்ந்து துழாவிக் கொண்டே இருந்தால், பாலின் மேற்பரப்பில் ஏடு படிவது தடுக்கப்படுகிறது. எனவே, கொதிக்கும் போது தோன்றும் காற்றுக் குமிழ்கள் ஆவியாக வெளியேறிவிடும். ஆதலால் பால் பொங்கி வழிவது தடுக்கப்படுகிறது. *துõய நீரில் மின்சாரம் பாயாது என்பது உண்மையா? -டி.சி. சீனு, ராமநந்தீஸ்வரம். மிகவும் சுத்தமான தண்ணீரில் மின்சாரம் பாயாது என்பது சரிதான். அதாவது, பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் தண்ணீரைப் போல, பலமடங்கு சுத்தமான தண்ணீரில் மின்சாரம் பாயாது. தண்ணீரில் இரு மடங்கு ஹைட்ரஜனும் ஒரு மடங்கு ஆக்சிஜனும் உள்ளது. ஆனால், சாதாரண தண்ணீரில் அயனிகள் எனப்படும் மின்காந்தத் துகள்கள் இருக்கும். அதில் எலக்ட்ரான்களும் இருக்கும். அணுத்துகள்களில் உள்ள எலக்ட்ரான்கள், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு பாயும்போது, மின்சாரம் ஏற்படும். மிகவும் சுத்தப்படுத்தப்பட்ட தண்ணீரில், எலக்ட்ரான்கள் இருப்பதில்லை என்பதால், அவை மின்சாரத்தைக் கடத்துவதில்லை. ..............................................**************************************************************************************

குட்டீஸ் கேள்வி பதில்47

*** குட்டீஸ் கேள்வி பதில்47 28/12/2012/ உலகத்தில் இருக்கும் தண்ணீர் 97 சதவீதம் உப்பு நீர் என்கிறார்களே, அப்படியா? - எஸ். முத்துராமன், ராமநந்தீஸ்வரம். பூமியில் உள்ள 97 சதவீதம் உப்பு தண்ணீரால் ஆனது. மீதமுள்ள 3 சதவீதம் துõய்மையான நீர் என குறிப்பிடப்படுகிறது. அவற்றில் 2 சதவீதம் பனிக்கட்டிகளாகவும் பனிப்பாறைகளாகவும் காணப்படுகிறது. இதன் மூலம் 3 ல் 1 சதவீதம் துõய்மையான தண்ணீர்தான் ஆறுகள், ஏரிகள் மற்றும் பூமிக்கு அடியிலும் காணப்படுகிறது. பூமியின் பரப்பளவில் 10 ல் ஒரு பங்கு பனிக்கட்டிகளால் ஆனது. பனிக்கட்டிகளில் 90 சதவீதம் அண்டார்டிகாவில் உள்ளது. பனிக்கட்டிகள் உப்பு தண்ணீரால் ஆனாலும், எவ்வித உப்பையும் பெற்றிருக்காது. எஸ்கிமோஸ் போன்றப் பனிப் பிரதேசங்களில் வாழும் மக்கள் உணவுகளை சமைக்கவும் குடிக்கவும் பனிக்கட்டிகளை உறையவைத்து தான் பயன்படுத்துகிறார்கள். மேலும் இது மிகவும் துõய்மையான தண்ணீராகத்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உப்பு தண்ணீரில் 96 சதவீதம் துõய்மையானதும், 3 சதவீதம் உப்பாகவும், மீதமுள்ள 1 சதவீதத்தில் சல்பேட், மெக்னீசியம், புரோமைட், கால்சியம், பொட்டாசியம், ஸ்ட்ரோன்டியம், போரான், புலுரைடு, தங்கம் உள்ளிட்ட 80 தனிமங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது * குளிரில் காது அடைத்துக்கொள்வது ஏன்? - வெ. அருள்மொழி, நாகப்பட்டினம். பருவ நிலை மாறும்போது நம் உடல் நிலையிலும் மாறுதல்கள் ஏற்படுகின்றன. அதிக குளிர், குளிர் காற்று, பனி இவை பலருக்கு பலவிதமான தொந்தரவுகளைக் கொடுக்கின்றன. பனியினால் மூட்டுவலி, வீக்கம் முதலியவை வரக்கூடும். பனிக்கு நம் எலும்புகளில் நெகிழ்வுத் தன்மை குறைவதால் இந்த குளிர் காலத்தில் பல வலிகள் ஏற்படுகின்றன. குளிர்ந்த காற்று நம் காதுகளைத் தாக்கும் போது ஒரு வகை வலியும் உண்டாவதால் பலருக்குக் குளிர் காலம் என்பது பயத்தை ஏற்படுத்துகிறது.வெளியில் போகும்போது காதுகளை ஸ்கார்ப் அல்லது இப்போது கிடைக்கும் காது மூடிகளை கொண்டு நன்றாக மூடவும். இதனால் காது துளைகள் வெதுவெதுப்பாகவும் உலர்ந்தும் இருக்கும். * தொப்பை எப்படி உருவாகிறது? - மு. மனோகரன், வடக்காலத்துõர். கட்டுப்பாடில்லாத உணவு பழக்கவழக்கம் மற்றும் உடற்பயிற்சியில்லாத வாழ்க்கை முறைகளால் தான் மனிதர்களுக்கு இந்த தொப்பை ஏற்படுகிறது. நமது உடல் என்கின்ற இயந்திரம் இயங்க கலோரி தேவை, அந்த கலோரியை நமது உடல், நாம் தினந்தோறும் உண்கின்ற உணவின் வழியாக பெற்றுக்கொள்கிறது. அப்படி உணவின் வழியாக பெறப்படும் கலோரிகள் தேவையான அளவையும் தாண்டி கிடைக்கும் போது அந்த கலோரிகளை அவசர காலத்தில் பயன்படுத்திக் கொள்ள எஞ்சியிருக்கும் கலோரிகளை கொழுப்பாக மாற்றி உடலின் ஒரு பகுதியில் சேமிக்க உத்தரவிடுகிறது மூளை. உடம்பில் கொழுப்பு சேர ஆரம்பித்ததும் 24 மணிநேரமும் செயல்படும் உறுப்புகளான மூளை, இதயம், சிறுநீரகம் உறுப்புகள் தவிர்த்து, உடலின் அதிக வேலையின்றி இருக்கும் அடிவயிற்றில் மூளையின் உத்தரவின் பேரில் நமது உடலின் வயிற்று தோலின் அடிப்பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாய் கொழுப்பை சேர்த்துவைக்கும் வேலை துவங்குகிறது. அடிவயிற்றில் கொழுப்பு கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து வயிறை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக்கி இறுதியில் ஒரு பானையின் அளவிற்கு பெரிதாக்கிவிடுகிறது. ......................................................*******************************************************************************

குட்டீஸ் கேள்வி பதில்48

குட்டீஸ் கேள்வி பதில்48 21.12.12 *கறுப்பு நிறம் வெப்பத்தை அதிக நேரம் தக்க வைத்துக் கொள்ளுமா? - எஸ். சவுமியா, தேவனாங்குறிச்சி. நிறத்துக்கும் வெப்பத்தை ஈர்க்கும் தன்மைக்கும் தொடர்பு உண்டு. உதாரணமாக வெள்ளை நிறமானது வெப்பத்தை அதிகமாக ஈர்ப்பது இல்லை. வெண்மையான பரப்பின் மீது வெயில் பட்டால் அது தன் மீது படுகின்ற வெப்பத்தை திருப்பிப் பிரதிபலித்து விடும். வெப்பத்தை ஈர்க்கும் தன்மை நிறத்துக்கு நிறம் மாறுபடும். கறுப்பு நிறமானது வெப்பத்தை நன்கு ஈர்த்து வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. விவரம் தெரிந்தவர்கள் யாரும் கோடைக் காலத்தில் கறுப்பு நிற சட்டை அல்லது கறுப்பு நிற பேன்ட் அணிய மாட்டார்கள். அப்படி அணிந்து வெயிலில் சென்றால் உடல் தகிக்கும். வெயிலை, அதாவது வெப்பத்தை, ஈர்த்துக்கொள்வதில் கறுப்பு நிறம் முதலிடம் வகிப்பதாகச் சொல்லலாம். ஆகவே தான் கிராமப்புறங்களில் அந்த நாட்களில் பாரம்பரிய உடையாக வெள்ளைச் சட்டையும் வெள்ளை வேட்டியும் அணிந்து வந்தனர். *பெங்குவின் பறவை வாழ்க்கைப்பற்றி விரிவாக சொல்லுங்கள்! - மு. கலைவாணன், களம்பூர். பெங்குவின் அண்டார்டிகாவில் அதிகம் காணப்படுகிறது. இது பறவை இனத்தைச் சேர்ந்தது. ஆனால், பறக்காது; நீந்த முடியும்! தினமும் பதினைந்திலிருந்து ஐம்பது கிலோ மீட்டர் உணவுக்காக நீருக்கடியில் நீந்தும். நீந்தும்போது இறக்கைகளைத் துடுப்பு போல் பயன்படுத்தும். இவற்றின் உடல் எண்ணை பசையோடு இருக்கும். பெண் பெங்குவின்கள் பனிப் பரப்பில் முட்டையிடும். ஆண் பெங்குவின்கள் அந்த முட்டையின்மேல் அமர்ந்தோ அல்லது கால்களுக்கு இடையில் வைத்தோ அடைகாக்கும். உலகில் நுõறு மில்லியன் பெங்குவின்கள் வரை இருக்கும். இவை பனிப் பிரதேசத்தில் இருப்பதால், இவற்றுக்கு அதிக அபாயம் இல்லை. பெங்குவின்கள் தங்கள் வாழ்க்கையில் 75 சதவீதத்தை நீருக்கடியில்தான் கழிக்கின்றன. பெங்குவின்களில் மிகப் பெரியவை எம்பரர் மற்றும் கிங் பெங்குவின்கள். இவை நான்கடி உயரமிருக்கும். எடை எழுபத்தைந்து பவுண்டுகள் இருக்கும். மிகச் சிறியவை நியூஸிலாந்து, ஆஸ்திரேலியாவில் காணப்படும் சின்ன நீல பெங்குவின்கள். இவை 33 செ.மீ. உயரம்தான் இருக்கும். இவற்றின் முக்கிய உணவு சிறிய மீன்கள். இவை பெரிய பெரிய கூட்டங்களாக வாழும். * மகேந்திரசிங் தோனி பற்றி கூறுங்கள் அங்கிள் - கா. தாமரைச் செல்வன், திட்டை. மகேந்திர சிங் தோனி 1981ம் ஆண்டு ஜூலை 7 ராஞ்சி, (ஜார்கண்ட்) பிறந்தார். இவரின் பெற்றோர் பான் சிங்-தேவகி தேவி. தோனிக்கு ஜெயந்தி என்ற சகோதரியும் நரேந்திரா என்ற சகோதரரும் உள்ளனர். இவர் இந்திய கிரிக்கெட் வீரரும் இப்போது இந்திய அணிக்கு கேப்டனாகவும் இருக்கிறார். இந்திய ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கு தலைமையேற்றதிலேயே மென்மையான கேப்டன்களில் ஒருவராக குறிப்பிடப்படுகிறார். இவரது தலைமையின்கீழ் இந்தியா 2007 ஐசிசி வேர்ல்டு டிவென்டி20, உலகக் கோப்பையை வென்றது. ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் 2009ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பல விருதுகளையும் தோனி பெற்றிருக்கிறார். .........................................*

சனி, 19 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்வி பதில்45

குட்டீஸ் கேள்வி பதில்45 வாயில் அடிக்கடி உமிழ்நீர் சுரக்கிறது. அதனால் என்ன நன்மை? - அ. விமல்நாத், விருதுவிளங்கினான். ஒரு மனிதனின் வாயில், அவன் வாழ்நாளில் மொத்தம் 30 ஆயிரம் லிட்டர் எச்சில் உற்பத்தி ஆகிறது . உணவுக்கு குழைவைச் சேர்த்து, அதைச் சுலபமாக வயிற்றுக்குள் அனுப்புவது எச்சில்தான் . எச்சில் இல்லையேல், உங்களால் சரளமாகப் பேச முடியாமல், வாய் ஒட்டிக்கொள்ளும் . வாயில்தான் ஜீரணம் துவங்குகிறது . அதைச் செயல்படுத்தும் ணீtதூச்டூடிண பையாலின் என்கிற ’ என்ஸைம் ’ எச்சிலில்தான் இருக்கிறது . எச்சிலில் உள்ள தற்காப்பு புரோட்டீன்கள் வாயில் ரணங்கள் வராமல் தடுத்துக் காப்பாற்றுகிறது . இந்தியா மட்டும் இல்லை ; ஆசியா முழுவதும் பொது இடங்களில் எச்சில் துப்பும் பழக்கம் பரவலாக உண்டு . அமெரிக்காவில் 19 ம் நுõற்றாண்டு முடியும் வரை, யாரைப் பார்த்தாலும், எல்லா இடங்களிலும் எச்சில் துப்பிக்கொண்டே இருப்பார்கள் . அப்போது முக்கால்வாசி அமெரிக்கர்களுக்குப் புகையிலை மெல்லும் பழக்கம் இருந்தது . துப்புவதற்கான கிண்ணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள்கூட அங்கே நிறைய இருந்தன . ’ மேஜை, நாற்காலிகள் மீது மட்டும் எச்சில் துப்பாதீர்கள் ! ’ என்று எழுதப்பட்ட போர்டுகள் பல கட்டடங்களில் வைக்கப்பட்டன. அடிக்கடி எச்சில் துப்புவது ஆரோக்கியமான செயல் அல்ல. *********************************************************************************************************

குட்டீஸ் கேள்வி பதில்44

குட்டீஸ் கேள்வி பதில்44 பரிணமாம வளர்ச்சி என்றால் என்ன? - ஆர்.ஸ்ரீநிஜா, ஸ்ரீரங்கம். *பரிணாமம் என்றால் மாற்றம் என சொல்லலாம், வளர்ச்சி என்பது எல்லாவற்றிலும் உண்டு, ஆனால் உள்ளது சிறத்தல் என்பதே பரிணாம வளர்ச்சியின் முக்கிய கோட்பாடு! பரிணாம வளர்ச்சி என்பது உயிரினத்தில் மட்டுமல்ல; எல்லாவற்றிலும் பரிணாம வளர்ச்சி உண்டு. எவையெல்லாம் முன்னை விட சிறப்பான தோற்றமோ, மாற்றமோ பெறுகிறதோ அவைகளின் பரிணாம வளர்ச்சி! உதாரணத்திற்கு துõரத்தில் இருக்கும் எதிரியையோ, உணவையோ தாக்க முதன் முதலில் மனிதன் கல் என்னும் ஆயுதத்தை பயன்படுத்தினான், அதை விட சரியான இலக்கை தாக்க ஈட்டி, அதைவிட வேகமாக தாக்க வில், பின் துப்பாக்கி, இயந்திரதுப்பாக்கி, ஏவுகணை இவையெல்லாம் என்ன காட்டுகிறது! கல் என்னும் ஆயுதம் சிறப்பு பெற்று பயன்படுத்த இலகுவான ஆயுதமாக மாறி ஆயுத பரிணாமத்தின் வளர்ச்சியை காட்டுகிறது அல்லவா? வங்கிகளில் ஆர்.டி.ஜி.எஸ்/ என்.இ.எப்.டி வசதிகள் உள்ளது என எழுதியிருக்கிறார்களே அப்படி என்றால் என்ன? 14.12.12 - பி. சிவப்பிரகாசம், திருவையாறு. வங்கிகளில் பணம் மாற்றம் பரிவர்த்தனைகள் எல்லாம் செக், டிமாண்ட் டிராப்ட் மூலமாக நடைபெறும். இக்காலத்தில் இணையதள பயன்பாடு வந்தப்பிறகு வங்கிகளில் இணையதள சேவைகள் நடைமுறைக்கு வந்தன. அவற்றில் ஒன்றுதான் நீங்கள் கேட்டிருக்கும் வசதிகள். இது ஆன்லைன் இணையதள பணம் மாற்றல் பரிவர்த்தனையாகும். ஆன் லைன் வாயிலாக மேற்கொள்ளப்படும் பண பரிமாற்றங்களில், தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை (என்.இ.எப்.டி.)பெரும் பங்கை வகிக்கிறது. இதுபோன்ற இன்னொரு வசதிதான் ஆர்டிஜிஎஸ். ஆர்டிஜிஎஸ் சேவையில் 2 லட்சம் முதல் அதிகபட்சம் 5 லட்சம் வரை பணம் பரிமாற்றம் செய்யலாம். என்இஎப்டி சேவையில் குறைந்தபட்சம் இல்லை.அதிகபட்சம் 5 லட்சம். 2முதல்5 லட்சம் வரை பணம் பரிவர்த்தனைக்கு கமிஷன் ரூ.25 5 லட்சம் மேல் என்றால் ரூ.50. 12 மணிக்கு மேல் சனிக்கிழமைகளில் கூடுதலாக ரூ.1. என்இஎப்டிக்கு 1லட்சம் வரை ரூ.5. 1முதல் 2 லட்சம்வரை ரூ.15 2 லட்சத்திற்குமேல் ரூ. 25. சோப்புகளில் டிஎப் எம் 76 % என்று குறிப்பிட்டிருக்கிறதே, அதன் அர்த்தம் என்ன? - எஸ். சிவகாமசுந்தரி, நெடுங்காடு. டோட்டல் பேட்டி மேட்டர் என்பதன் சுருக்கமே டிஎப்எம் . அதாவது குளியல் சோப்பில் இருக்கக்கூடிய கொழுப்பின் சதவீதத்தை குறிப்பதாகும். நல்ல தரமான, நீடித்து உழைக்கக்கூடிய, நன்கு அழுக்கு நீக்கக்கூடிய ஒரு குளியல் சோப்பின் தரம் அதில் அடங்கி உள்ள கொழுப்பு அளவு 76 சதவீதம் இருக்கவேண்டும் . இப்படி சோப்பில் டிஎப்எம் 76 சதவீதம் என்ற குறிப்பு இருந்தால் அது தரமான நம்பர் ஒன் சோப்பு என்று பொருள் கொள்ள வேண்டும் . சோப்பில் 60 சதவீதம் மற்றும் அதற்கு கீழ்க் கொழுப்பு சதவிகிதம் இருந்தால் அதன் கிரேடு 3 ஆகும். *********************************************************************************************************

குட்டீஸ் கேள்வி பதில்43

குட்டீஸ் கேள்வி பதில்43 7.12.2012 *போக்குவரத்து சிக்னல் எந்த நாட்டில் அறிமுகமானது? - ஆர். கோவிந்தராஜ், நீர்முள்ளி. போக்குவரத்து சிக்னல் அமைப்பு முதலில் லண்டன் நகரத்தில் அறிமுகமானது. இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அக்காலக்கட்டத்தில் லண்டனில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் எதுவும் கிடையாது. குதிரைகள் இழுத்துச் செல்லும் வாகனங்கள் மட்டுமே இயங்கின. அமெரிக்காவில் 1890ம் ஆண்டு இறுதி வாக்கில் தான் கார்கள் அறிமுகமாயின. முதல் தானியங்கி போக்குவரத்து சிக்னல் ஓகியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லாண்ட் நகரில் 1920ம் ஆண்டு பொருத்தப்பட்டது. * இடதுகை பழக்கம் உள்ளவர்கள் அறிவாளிகளா? - மு. கலைவாணன், களம்பூர். உலகின் மொத்த மக்கள் தொகையில், 13 சதவீதம் பேர், இடது கை பழக்கம் உடையவர்களாக உள்ளனர் என்று ஐ.நா., அறிக்கை தெரிவிக்கிறது. <இவர்களது சாதனைகளை பாராட்டும் விதத்திலும், சமூகத்தில் சிறுபான்மையாக உள்ள இவர்களின் பயன்பாட்டுக்கு தக்கவாறான, பொருட்களை தயாரிக்க வலியுறுத்தியும், ஆக., 13ம் தேதி, சர்வதேச இடது கை பழக்கம் உடையோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இடது கை பழக்கம் என்பது, இயற்கையிலே ஒருவருக்கு அமைந்து விடுகிறது. சிறு வயதிலேயே மூளை வளர்ச்சியை பொறுத்து, இப்பழக்கம் அமைகிறது.< உலக மக்கள் தொகையில், வலது கை பழக்கம் உடையவர்களே அதிகம் உள்ளனர். இதனால் கார், கம்ப்யூட்டர், பாத்ரூம் குழாய் என அனைத்து தொழில்நுட்ப பொருட்களும் இவர்களுக்கு ஏற்றவாறே தயாரிக்கப்படுகின்றன. இதனால் இத்தகைய பொருட்களை பயன்படுத்தும் போது, இடது கை பழக்கம் உள்ளவர்கள், சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, இவர்களுக்கு தகுந்தவாறும் பொருட்களை நிறுவனங்களும், அரசும் அமைத்து தர வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது. மேலும், இவர்களுக்கு சமூகத்தில் உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும். < <இடது கை பிரபலங்கள்:முன்னாள் அமெரிக்க அதிபர்களான ரொனால்டு ரீகன், கிளின்டன், புஷ், தற்போதைய அதிபர் ஒபாமா, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில் கேட்ஸ் உள்ளிட்ட பலர், இடது கை பழக்கம் உடையவர்கள். ********************************************************************************************************

குட்டீஸ் கேள்வி பதில்42

குட்டீஸ் கேள்வி பதில்42 30.11.2012 மடிக்கணினி என்பது என்ன? அதை உருவாக்கியவர் யார்? - கே. ராணி, ஈரோடு. மடிக்கணினி என்பது மடியில் வைத்து பயன்படுத்தும் வசதியில் அதன் அளவிலும் வடிவத்திலும் வடிவமைக்கப்பட்ட, இடத்து இடம் கொண்டு செல்லப்படக்கூடிய சாதனம். இதில் திரையை மடித்து மூடிவைக்கக்கூடிய வசதி இருப்பதாலும் இதற்கு மடிக்கணி என்று பெயர் பெற்றது. முதல் மடிக்கணினியை பில் மாக்ரிட்ஜ் 1979 ல் வடிவமைத்தார். 70களின் தொடக்கத்தில் ஆலம் கே என்பவர் டைனாபுக் என்ற ஐடியாபடி முதன்முதலில் விற்பனைக்கு வந்த மடிக்கணினி 1981 ல் அறிமுகமானது. இதன் பெயர் ஒஸ்போர்ன் 1. மடிக்கணினிகள் 2.3 கி.கி. எடை முதல் 1.3 கி.கி.அளவு குறைந்த எடை உள்ள மடிக்கணினிகள் இருக்கின்றன. கணித்திரையின் அளவு பெரும்பாலும் 35 செமீ முதல் 39 செ.மீ. அளவு கொண்டிருக்கும். சிறிய திரைகள் 30.7 செமீ உண்டு. இடத்துக்கு இடம் எடுத்துச் செல்வதால், தனியாக ஒரு மின்கலம் தேவைப்படும். இவை பெரும்பாலும் குறைந்த எடையில் அதிக மின்னாற்றல் தரக்கூடிய லித்தியம்-மின்மவணு வகை மின்கலங்களாக இருக்கும். *தவளை தன்னுடைய கண்ணினால் பார்க்கவும் கேட்கவும் முடியுமாமே, அப்படியா? - ம. கதிரேசன், புதுக்கோட்டை. கேள்வியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும் கதிரேசன் சொல்வது ஆச்சரியம் மட்டுமல்ல, அது உண்மையும் கூட. தவளையே ஒரு ஆச்சிரியமான உயினம்தான்! தவளைகள் நீரிலும் நிலத்திலும் வாழும் இயல்புடையவை. இயற்கையாகவே தவளைகள் தமது கண்களால் கேட்கவும் செய்கின்றன. தவளைகளின் கண்களே காதுகளாகவும் இயங்குகிறது. தவளைகளுக்கு அதனுடைய கண்களுக்குப் பின்புறம் மூளையிலிருந்து வரும் நுண்ணிய நரம்பு அமைந்துள்ளது. அந்த நரம்புகள்தான் காதுகளின் பணியினைச்செய்கிறது. * கண்ணாடி கப்பில் சூடான பானங்களை விடும்போது, சில சமயம் சூட்டினால் கப் உடைகிறதே ஏன்? - எஸ். சந்திரன், மன்னார்குடி. பொதுவாக எந்தப் பொருளும் வெப்பத்தால் விரிவடையும். குளிர்ச்சியில் சுருங்கும். இயற்கை விதி. கண்ணாடியில் ஆன பொருளில் அதிகம் சூடான திரவத்தையோ, சூடான பானங்களை ஊற்றும்போது, அதில் உள்ள வெப்பம் கண்ணாடி பாத்திரத்தில் பரவும். அப்படி பரவும் வெப்பம் முதலில் கண்ணாடி பாத்திரத்தின் உள்பகுதியில் பரவி, பாத்திரத்தை முதலில் வெப்பத்தால் விரிவடைய செய்கிறது. பின்னர், வெப்பம் சிறிது சிறிதாகப் பரவி சற்று தாமதமாகவே வெளிப்பகுதியை விரிவடை செய்யும். சில சமயம் வெப்பம் அதிகம் இருந்தால், உட்பரப்பு முதலில் விரிவடைந்து , வெளிப்பரப்பு விரிவடைய தாமதமாகும்போது பாத்திரம் உடைந்து விடுகிறது. ********************************************************************************************************

குட்டீஸ் கேள்வி பதில் 41

குட்டீஸ் கேள்வி பதில் 41 23.11.2012 *ஐஸ் கட்டியைக் காற்றில் திறந்து வைத்தால் அதிலிருந்து புகை கிளம்புகிறது. ஏன்? - தேச. சீனு, ராமநந்தீஸ்வரம். நெருப்பு இல்லாமல் புகை வருமா ? என்பது போல் இருக்கிறது சீனுவின் கேள்வி. உண்மையில் ஐஸ் கட்டியிலிருந்து புகை எல்லாம் வெளியேறுவதில்லை. திறந்த வெளியில் ஐஸ் கட்டியை திறந்து வைக்கும்போது ஐஸ்ஸைச் சுற்றியுள்ள காற்று குளிர்வடைகிறது. ஒரு அளவிற்கு மேல் குளிர்வடையும்போது அந்தக் காற்றிலுள்ள ஈரப்பதம் மிக நுண்ணிய நீர்த்திவலைகளாக உருமாறுகிறது. மேலும் காற்றின் நகர்வுக்கு ஏற்ப அதாவது காற்று மேலும் கீழுமாக நகரும்போது, இந்த நீர்த்திவலைகள் அங்கும் இங்கும் நகரும். அது பார்ப்பதற்கு புகைப்போல தெரியும் அவ்வளவுதான். பனிக்கட்டியில் இருந்து நீர் தான் வரும். புகை எல்லாம் வராது. *பாலைக் காய்ச்சும்போது பொங்குகிறது? தண்ணீரைக் காய்ச்சும்போது பொங்குவதில்லை, ஏன்? - ம. குமார், வாழைப்பந்தல். பால் என்பது தண்ணீர், புரதம் , மாவுச்சத்து, கொழுப்பு மற்றும் பல தாதுப் பொருட்கள் அடங்கிய கலவை. பாலில் உள்ள கொழுப்பின் அடர்த்தி தண்ணீரின் அடர்த்தியைவிட குறைவாக இருப்பதால் பாலின் மேற்ப்பரப்பில் அவை மிதக்கின்றன. தண்ணீரின் 100 டிகிரி. பாலில் உள்ள கொழுப்பு 50 டிகிரியில் உருக ஆரம்பித்துவிடும். பாலை காய்ச்சும்போது 50 டிகிரி நிலை வரும்போதே பாலில் உள்ள கொழுப்பு உருகி, மேற்ப்பரப்பில் வந்து ஒரு மெல்லிய படலமாகப் படர்ந்து நிற்கிறது. எந்த ஒரு திரவத்தைக் கொதிக்க வைத்தாலும் அந்தத் திரவத்திலிருந்து காற்றுக் குமிழ்கள் தோன்றி மேலே கிளம்பி வரும். பால் சூடாகும் போதும் காற்றுக் குமிழ்கள் உருவாகி மேலே வரும். மேற்ப்பரப்பில் கொழுப்புப் படலம் ஏடாகப் படிந்து இந்தக் குமிழ்கள் வெளியேறுவதை தடை செய்வதால், சிறு சிறு குமிழ்கள் ஒன்றாக இணைந்து பெரிய காற்றுக் குமிழ்களாக மாறி அந்த ஏட்டுப் படலத்தோடு மேலெழும்பி பொங்கி வழிகிறது. தண்ணீரில் கொழுப்போ, மாவுச்சத்தோ, புரதங்களோ இல்லை. எனவே மேற்ப்பரப்பில் ஏடு எதுவும் படிவதில்லை. காற்றுக் குமிழ்கள் தடையின்றி வெளியேறலாம். எனவே நீரை கொதிக்க வைக்கும்போது அது பொங்குவதில்லை. *பனிமலையின் மீது செல்ல பனிச்சறுக்கு மட்டைகள் எப்படி உதவுகின்றன? -ஆர். கோகுல், கும்பகோணம். பனிச் சறுக்கு மட்டைகள் அமைப்பைப் பார்த்திருக்கிறாயா, கோகுல்? அதனுடைய அமைப்புதான் நம் உடல் எடையை சமநிலைப்படுத்துகிறது. அதனால் பனிமலையில் செல்லும்போது நான் தடுமாறுவதில்லை. பனிச்சறுக்கு மட்டைகளை அணிந்துகொள்ளும்போது உடல் எடை அதிகப் பரப்பின் மீது பரவியுள்ளது. மட்டைகளின் பரப்பு, நமது உள்ளங்கால்களின் பரப்பை விட 20 மடங்கு அதிகமாயிருக்கிறது என்று வைத்துக்கொண்டால், மட்டைகள் அணிந்திருக்கும்போது பனியின் மீது நாம் செலுத்தும் அழுத்தம், அவை இல்லாமல் இருக்கும்போது செலுத்தும் அழுத்தத்தை விட 20 மடங்கு குறைவாக இருக்கும். ஏற்கனவே பனிச்சறுக்கு மட்டைகளை நாம் அணிந்துகொண்டால்தான் பனி நம்மைத் தாங்கும். அவை இல்லாவிட்டால், பனியினுள் நாம்புதைய வேண்டியதுதான். ******************************************************************************************************

குட்டீஸ் கேள்வி பதில்40

குட்டீஸ் கேள்வி பதில்40 16.11.2012 *சீனப்பெருஞ்சுவரை கட்டியவர், காலம், அதன் நீளம் பற்றி விளக்கமா சொல்லுங்க. - பெ. காவியா, செம்மாண்டப்பட்டி. ஜி.கே. மோகன சுந்தரன், பெரணமல்லுõர். ஆறாம் நுõற்றாண்டிலிருந்து மங்கோலியாவில் இருந்தும், மஞ்சூரியாவில் இருந்தும் வந்த ’சியோங்னு’களின் படை எடுப்புகளிலிருந்து சீனப் பேரரசைக் காப்பதற்காக, சீனாவின் வடக்கு எல்லையில் கட்டப்பட்ட நீண்டஅரணே சீனப் பெருஞ்சுவர் என்று சொல்லப்படுகிறது. இந்த பெருஞ்சுவர் ஒரே காலக்கட்டத்தில், ஒருவரால் கட்டப்பட்டது அல்ல. பல காலப்பகுதிகளில், கல்லாலும் மண்ணாலும், பல பகுதிகளாகக் கட்டப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த சுவரின் முக்கிய நோக்கம் ஆட்கள் நுழைவதைத் தடுப்பது அல்ல; எதிரிகள் குதிரைகளைக் கொண்டுவராமல் தடுப்பதே ஆகும். பெருஞ்சுவர் என்று பெயரிட்டு அழைக்கப்பட்ட பல சுவர்கள் காலத்துக்குக் காலம் கட்டப்பட்டிருந்தாலும், கிமு 220-200 காலப்பகுதியில், சீனப் பேரரசர் சின் சி ஹுவாங்கினால் கட்டப்பட்ட சுவரே மிகப் பெயர் பெற்றது. இதன் மிகச் சிறு பகுதியே இப்போது எஞ்சியுள்ளது. இது மிங் வம்சக் காலத்தில் கட்டப்பட்ட தற்போதுள்ள சுவருக்கும் வடக்கே அமைந்திருந்தது. சீனப் பெருஞ்சுவர் யாலு நதியிலுள்ள, கொரியாவுடனான எல்லையிலிருந்து கோபி பாலைவனம் வரை 6,400 கிமீ அளவுக்கு நீண்டு செல்கிறது. மிங் வம்சக் காலத்தில், இதன் உச்சநிலைப் பயன்பாட்டின்போது இந்த சுவர்ப்பகுதியில் 10 லட்சம் படையினர் வரை காவலில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. பல நுõற்றாண்டுகளாக இடம் பெற்ற இந்த சுவரின் கட்டுமானப் பணிகளின்போது 30 லட்சம் பேர் இறந்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. *ஈசல் பற்றி சொல்லுங்க அங்கிள்! - ஆர். ஸ்ரீஜாராம்குமார், ஸ்ரீரங்கம். மழைக்காலத்தில், வயது முதிர்ந்த கறையான்கள் இறக்கை முளைத்து, ஈசல்களாக வெளியில் வந்து, கொஞ்ச நேரத்திலேயே இறக்கையை இழந்து, ஒரே நாளில் உயிரை விட்டுவிடும். கறையான்கள் கூட்டமாக வாழும் இயல்புடைய ஒரு சமுதாய பூச்சி வகையாகும். இவை தனித்து வாழாமல், கூட்டமாக வாழும் இயல்புடையது. கறையான் கூட்டத்தில் 500 முதல் 5 லட்சம் வரை கறையான்கள் இருக்கும். கறையான்கள் முதிர்வடையும் போது, ஈசல்கள் எனப்படுகின்றன. ஈசல்களின் முன்பின் இறக்கைகள் வேறுபாடு இல்லாமல் ஒரே மாதிரியாக இருப்பதால், இவைகளைச் சமஇறகிகள் என்ற உயிரினவரிசையில் தொகுத்துள்ளனர். இவை எறும்புகளைப் போல காணப்பட்டாலும், உயிரின வகைப்பாட்டின் கறையான்கள், எறும்புகளிலிருந்து முற்றிலும் வேறுபடுகின்றன. *வவ்வால்கள் தலைக் கீழாகத் தொங்குவது ஏன்? - எஸ். தையல்நாயகி, வடக்காலத்துõர். வவ்வால்களின் இறக்கைகள் 6 அங்குலம் முதல் 6 அடி வரை நீண்டிருக்கும். அவற்றின் கால்களுக்கு போதிய வலிமைக் கிடையாது. அதனால், வவ்வால்களால் நீண்ட நேரம் நிற்கவோ நடக்கவோ முடியாது. மற்ற பறவைகளைப் போல் இவற்றால் பூமியில் இருந்து மேலெழும்பி பறக்க முடியாது. தலைக் கீழாகத் தொங்குவது வவ்வால்களுக்கு வசதியாக இருக்கிறது. ஆபத்தில் இருந்து தப்பிக்க உதவுகிறது. தொங்கும் போது அதிக அளவு சக்தி தேவைப்படுவதில்லை. உடனடியாகப் பறப்பதும் எளிதான விஷயமாக உள்ளது. *******************************************************************************************************

குட்டீஸ் கேள்வி பதில்39

குட்டீஸ் கேள்வி பதில்39 * சி.எப்.எல். பல்பு மின்சாரத்தை மிச்சப்படுத்தும் என்கிறார்களே, உண்மையா? 2.11.12 - ஆர். ஸ்ரீநிஜாராம்குமார், ஸ்ரீரங்கம். சி.எப்.எல். (காம்பாக்ட் புளோரசண்ட் விளக்குகள்) மிகக்குறைவான மின்சாரத்தை எடுத்துக்கொள்வதால், மின்சார செலவைக் குறைக்கின்றன. அத்துடன் அதிக அளவு வெப்பத்தையும் வெளியிடுவதில்லை. ஒரு சி.எப்.எல். பல்பு, வழக்கமான பல்பைக் காட்டிலும் ஐந்து மடங்கு வெளிச்சத்தைத் தருகிறது. சி.எப்.எல். எரியும் நேரம் சாதாரண பல்பைவிட எட்டு மடங்கு அதிகம். நீங்கள் 60 வாட்ஸ் சாதாரண பல்புக்கு பதிலாக 15 வாட்ஸ் சி.எப்.எல். பல்புகளை உபயோகித்தால், குறைந்தபட்சம் ஒரு மணிநேரத்திற்கு 45 வாட்ஸ் மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும். ஒரு மாதத்திற்கு 11 யூனிட் மின்சக்தியைச் சேமிக்க முடியும். செலவையும் குறைக்க முடியும். சி.எப்.எல். பல்புகள் 5 முதல் 8 மாதங்கள் வரை உழைக்கும். ஆனால் சி.எப்.எல் பல்புகளை தயாரிப்பதிலும், பயன்படுத்தியபிறகு அழிப்பதிலும் அதிகமான பாதரச நச்சு காற்றில் கலந்துவிடுகின்றன. பாதரச நச்சு வளிமண்டலத்தில் கலந்துவிடும் ஆபத்து இருப்பதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ***************************************************************************************************** *புயல் எப்படி உருவாகிறது, அங்கிள்! 9/11/12/ - ஆர். பாலா, அரக்கோணம். இது மழைக்காலம். புயல் உருவாக சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு. பொதுவாக, புயல் உருவாவதற்கு முக்கிய காரணம் பூமியின் அமைப்புதான். ஒரு ஆரஞ்சுப்பழம் போல அமைப்புடைய பூமி, அதன் அச்சில் நேர் செங்குத்தாக நிற்காமல் ஒருபக்கமாக அதாவது 23 அரை டிகிரி சாய்ந்து சுற்றுகிறது. இதனால், சூரியனிடமிருந்து வரும் வெப்ப கதிர்கள் பூமியின் எல்லாப் பரப்பின் மேலும் ஒரே சீராகப்படுவதில்லை. இதன் காரணமாக பூமியின் ஒரு பகுதி அதிக வெப்பமாகவும், இன்னொரு பகுதி குறைவான வெப்பமாகவும் இருக்கும். வெப்பம் அதிகமாக உள்ள பகுதிகளில் காற்று விரிவடைந்து மேலே செல்கிறது. அப்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்து ஒரு வெற்றிடம் உண்டாகிறது. அந்த வெற்றிடத்தை நோக்கி காற்றின் அழுத்தம் அதிகமாக உள்ள பகுதியிலிருந்து காற்று வேகமாய் வீச ஆரம்பிக்கிறது. அப்போது பூமியின் சுழற்சியின் காரணமாக காற்று அலைக்கழிக்கப்பட்டு சூறாவளியாக மாறி புயலாய் அதாவது குறைந்த காற்று அழுத்த மண்டலமாக உருவாகிறது. இதுதான் புயல் உருவாவதற்கான காரணங்கள். *சிலரின் கண்கள் நீல நிறத்தில் இருக்கிறதே! கண்களின் நிறத்தில் வேறுபாடு இருக்க காரணம் என்ன? - எஸ். சந்திரிக்கா, நடுகாவேரி. கண்களின் நிறம் கறுப்பு நிறத்தில் இருந்து மிக மென்மையான நீல நிறம் வரை வெவ்வேறாக வேறுபடுகிறது என்பது சரிதான்! கண் நிறம் ஒரு பாலிஜெனிக் கூறு ஆகும். கண்களின் நிறம் கண்களில் உள்ள கருவிழியில் உள்ள நிறப்பொருட்களில் அளவை பொருத்து அமைகிறது. மனிதர்களில் கண்களின் நிறம் கருவிழியின் மெலனோசைட்டுகளால் உற்பத்தி செய்யப்படும். மெலனின் என்ற நிறப்பொருளின் வேறுபடும் விகிதாசாரத்தினால் நிற வேற்றுமைகள் ஏற்படுகின்றது . மனிதர்களின் கண்ணில் ஒளி புகுந்து செல்லக்கூடிய விழிவெண்படலம் முன்னாலும், அதற்குப் பின்னால் கருவிழிப் படலம் (டிணூடிண்) என்ற தசையாலான திரையும் உள்ளன. கருவிழிப் படலம், ஒளி உள்ளே செல்வதைக் கட்டுப்படுத்துவது; மெலனின் என்ற நிறமிப் பொருளுடன் கூடிய உயிரணுக்களால் அமைந்தது. கண்களின் நிறத்திற்குக் காரணமாக அமைவது இந்நிறமிப் பொருளே. கருவிழிப்படலத்தில் மெலனின் என்ற நிறமிப் பொருள் இல்லாமற் போகுமானால் கண் நீல நிறமாகத் தோன்றும். இதற்குக் காரணம் கண்ணின் விழிப்படலத்திற்கும் ஒளி வில்லைக்கும் இடையேயுள்ள கண்முன்நீர் என்ற திரவப் பகுதியில் ஒளிக்கதிர் ஊடுருவிச் சென்று நீல நிறத்தை உண்டாக்குவதாகும். *குண்டூசிகளை கண்டுபிடித்தவர் யார்? அதன் பயன்கள் என்ன? - ஏ. முத்து, வாழைப்பந்தல். நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே குண்டூசிகள் பயன்பாடு இருந்து வருகிறது. இரும்பால் ஆன குண்டூசிகள் பயன்பாடு சுமேரியன் காலத்தில் இருந்தே இருந்துள்ளது. ஆகையால் முதலில் குண்டூசிகளை கண்டறிந்தவர் யார் என்பதை திட்டவட்டமாக அறியமுடியவில்லை. குண்டூசிகள் காகிதம், ஆடை போன்ற இணைப்புகளுக்கு உதவுகிறது. பிளாஸ்டிக்களான குண்டூசியை 1903ம்ஆண்டில் எட்வின் மூர் என்பவர் கண்டுபிடித்தார். அதன் பெயர் தம்டேக் என்று பெயர். ‘சேப்டி பின்’ என்பதை வால்டர் ஹன்ட் கண்டுபிடித்தார். *****************************************************************************************************

குட்டீஸ் கேள்வி பதில்38

குட்டீஸ் கேள்வி பதில்38 *26.10.2012 கழுகுப் பார்வை என்கிறார்களே, ஏன்? - எஸ். சவுமியா, தேவனாங்குறிச்சி. கூர்மையான பார்வைத்திறன் கொண்டவரை அவருக்கு கழுகுப் பார்வை என்று சொல்வதுண்டு. கோல்டன் ஈகிள் என்ற பொன் கழுகு ஒரு முயலின் அசைவை 2 கி.மீ. உயரத்திலிருந்து கூடகண்டு கொண்டுவிடும் என்று தி கின்னஸ் புக் ஒப்ஸ் அனிமல் ரெக்கார்ட்ஸ் விளக்குகிறது. கழுகினால் அந்தளவுக்கு கூர்மையாக பார்க்க காரணமாக இருப்பது கோல்டன் ஈகிளின் இரண்டு பெரிய கொட்டைக் கண்கள் அதன் தலையில் பெரும் பகுதியை ஆக்கிரமித்து விடுகின்றன. கோல்டன் ஈகிளின் கண்கள் எந்தளவுக்கு பெரியதாக இருக்க முடியுமோ அந்தளவுக்கு பெரிதாக இருக்கின்றன. அதே சமயம் இடைஞ்சல் உண்டாக்கும் அளவுக்கு அவை பெரிதாக இருக்கவில்லை என்று புக் ஒப் பிரிட்டிஷ்குறிப்பிடுகின்றது. மேலும் நமக்குள்ளததை விட ஐந்து மடங்கு அதிகமான ஒளி உணர்வு செல்கள் கழுகின் கண்களில் உள்ளன. நமக்கு ஒரு சதுர மில்லி மீட்டரில் 2லட்சம் கூம்பு செல்களே இருக்கின்றன. கழுகிற்கு ஒரு கோடி கூம்பு செல்கள் உள்ளன. ஒவ்வொரு உள்வாங்கியும் ஒரு நியுரோனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் கண்களிலிருந்து மூளைக்கு செய்திகளை சுமந்து செல்லும் கழுகினுடைய பார்வை நரம்பில் மனிதனுக்கு உள்ளதை விட இரண்டு மடங்கு அதிகமான நார்கள் காணப்படுகின்றன. மேலும் சக்திவாய்ந்த லென்ஸ் உண்டு. இதனால் ஒரு அங்குலம் துõரமுள்ள பொருட்களில்இருந்து வெகு தொலைவில் உள்ள பொருட்கள் வரை எதையும் சட்டென ஜூம் செய்து பார்க்கக்கூடிய திறன் கழுகுக்கு உள்ளது. *கண் சிமிட்டு ஏற்படுவது எதனால்? - எஸ். திலகவதி, திருவாரூர். கண்கள் உலர்ந்து போகாமல் இருக்க ஈரம் தேவைப்படுகிறது. கண் இமைகள்தான் கண்கள் உலர்ந்து போவதில் காக்கின்றன. இமைகளின் விளிம்பில் 20முதல் 30 வரை சுரப்பிகள் உள்ளன. கண் சிமிட்டும் போதெல்லாம் கண் விழியை இவை ஈரப்படுத்துகின்றன. கண்ணில் துõசு படியும்போது அதனை நீக்கவும் சிமிட்டல் தேவைப்படுகிறது. கண்ணீர் விடும்போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளில் இருந்து கண்ணீர் வருகிறது. இவைகளை நீக்கவும் கண் சிமிட்டல் தேவைப்படுகிறது. ***********************

குட்டீஸ் கேள்வி பதில்37

குட்டீஸ் கேள்வி பதில்37 கிறிஸ்துமஸ் தீவு எங்குள்ளது? அதைப்பற்றி சொல்லுங்க அங்கிள்! - எஸ். சவுமியா, தேவனாங்குறிச்சி. 19/10.12 கிறிஸ்துமஸ் தீவு இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஆஸ்திரேலியாவின் ஒரு சிறிய ஆட்சிப்பகுதி. இது பெர்த் நகரிலிருந்து 2600 கி.மீ. வடமேற்கில் ஜாகார்த்தா நகரிலிருந்து 500 கி.மீ. தெற்காகவும் அமைந்துள்ளது. இந்த தீவில் காணப்படும் சில குடியேற்றங்களில் 1600 பேர் வரை வசிக்கின்றனர். இத்தீவிற்கே உரிய பல உயிரினங்கள் காணப்படுகின்றன. இத்தீவு 135 ச.கி.மீ. கொண்டிருக்கிறது. அந்த பரப்பளவில் பரப்பில் 65% மழைக்காடுகளாகக் காணப்படுகின்றது. 1643 ம் ஆண்டில் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த ரோயல் மேரி கப்பலின் கேப்டன் வில்லியம் மைனர்சு, கிறிஸ்துமஸ் நாளில் இத்தீவைக் கடந்த போது கிறிஸ்துமசு தீவு எனப் பெயரிட்டார். தகவல் அறியும் சட்டம் என்பது என்ன? அதன் மூலம் என்ன தகவல் பெறலாம்? - எல். ஸ்ரீமதி, திருச்சி. அரசு அலுவலகங்கள் பொது மக்களுக்கு தகவல் சொல்லக் கடமைப்பட்டிருந்தாலும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நீங்கள் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற இயலாது. 2005 ம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு பொதுமக்கள் கேட்கும் தகவலைத் தர மறுத்தால் அரசு ஊழியர் சட்டத்தை மீறியவராகக் கருதப்படுவார். அவருக்கு தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தால் தகவல் கிடைக்கும் வாய்ப்பு உறுதியாகிறது. இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி மத்திய மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிதி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து நீங்கள் அறிய விரும்பும் தகவலைப் பெறலாம். நமது மாவட்ட எம்.பிக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் ( 5 கோடி ரூபாய் ) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ? நமது தொகுதி எம்.எல்.ஏ.க்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் ( 2 கோடி ரூபாய் ) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ? நம் ஊரில் எத்தனை குளங்கள், வாய்க்கால்கள் உள்ளன ? அதில் ஏதும் துõர்வாரப்பட்டு உள்ளதா ? ஆக்கிரமிப்புகள் எதுவும் உள்ளதா ? நம் ஊரில் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் எப்பொழுது ஆரம்பமாகும் ? இப்பணிகள் எப்பொழுது நிறைவு பெரும் ? இப்படி பல தகவல்களை நீங்களும் கீழ்கண்ட சம்பந்தப்பட்ட மாநில, மத்திய பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து கேட்டுப்பெறலாம். மாநில அரசு தகவல்கள் பெற :- எஸ். இராம கிருட்டிணன், ( இ. ஆ. ப, ஓய்வு ) மாநில தலைமை தகவல் ஆணையர், காமதேனு கூட்டுறவு பல்பொருள் அங்காடி கட்டடம், முதல் மாடி, ( வானவில் அருகில் ) பழைய எண் : 273, புதிய எண் : 378 , அண்ணா சாலை, ( தபால் பெட்டி எண் : 6405 ) தேனாம்பேட்டை, சென்னை -18 * சங்கை காதில் வைத்தால் அலை ஓசை சத்தம் வருகிறதே, எப்படி? -டி.சி. சீனு, ராமநந்தீஸ்வரம். சங்கை எடுத்து காதில் வைத்துக் கேட்டால் அதில் இருந்து அலை ஓசை சத்தம் வருவதுபோல கேட்கும். அதை கடல் அலையின் ஓசை என்று நினைப்பார்கள். உண்மை அதுவல்ல. காதுகளில் உள்ள ரத்தக் குழாயில் ரத்தம் பாய்ந்து செல்லும் சத்தம்தான் சங்கில் எதிரொலித்து நமக்கு கடலலை ஓசையாகக் கேட்கிறது. *********************************************************************************************************

குட்டீஸ் கேள்வி பதில்36

குட்டீஸ் கேள்வி பதில்36 ஹெலிகாப்டர் அந்தரத்தில் ஒரே இடத்தில் நிற்கிறதே, எப்படி? - எஸ். எம். முகேஷ், அரையபுரம். 12.10.2012 ஹெலிகாப்டர் அந்தரத்தில் ஒரே இடத்தில் குறிப்பிட்ட நேரம் நிலையாக நிற்க முடியும். அவ்வாறு நிற்பதற்கு ஹெலிகாப்டர் பெற்றுள்ள சிறப்பு தன்மைகள் சில உண்டு. ஹெலிகாப்டர் மேலே ஒரு பெரிய விசிறி இருக்கும். அந்த விசிறி சுழலும் போது ஹெலிகாப்டர் மேல் நோக்கி எழும்பும். ஹெலிகாப்டரில் உள்ள விசிறி சுழலும் போது அது காற்றைக் குடைகிறது. அப்படி காற்று குடையும் போது ஹெலிகாப்டர் மேலே இழுக்கப்படுகிறது. அதாவது திருகாணியைச் சுழற்றினால் அது மரத்துக்குள் போகிறதல்லவா? அதேபோல, திருகு வடிவத்தில் காற்றைக் குடையும் படி அந்த விசிறிகள் அமைந்திருக்கின்றன. விசிறிகள் மேலே துõக்கப்படும்போது ஹெலிகாப்டரும் மேலே உயர்த்தப்படும். அப்போது மேலே உயர்த்துக்கிற விசை ஹெலிகாப்டரின் எடைக்குச் சமமாக இருக்கும்போது ஹெலிகாப்டர் அந்தரத்தில் அசையாமல் நிற்கும். விசிறியோடு சேர்ந்து ஹெலிகாப்டரும் சுழலாமலிக்க அதன் வால்பகுதியில் ஒரு விசிறி எதிர்த்திசையில் சுழன்று கொண்டிருக்கும். * துணியில் கூரான ஊசியை செலுத்தினால் ஈஸியாக நுழைகிறது, ஏன்? - பிரசாந்த், சீர்காழி. கூரான ஊசியை துணியில் செலுத்தும்போது முழுச் சக்தியும் அதன் முனை மீது செலுத்தப்படுகிறது. அதனால் ஊசி துணியில் எளிதாக நுழைய முடிகிறது. மழுங்கலான ஆணியின் முனையின் பரப்பு அதிகமாயிருப்பதால் அதே சக்தி அதிகப் பரப்பின் மீது செயல்பட வேண்டியிருக்கிறது. எனவே, அதே சக்தியைச் செலுத்தினாலும், மழுங்கலான ஆணியால் எளிதாக துளைத்துச் செல்ல முடிவதில்லை. அழுத்தத்தைக் குறிக்கும்போது சக்தியின் அளவை மட்டுமின்றி, அது செயல்படும் பரப்பின் அளவையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும். ஒரு சக்தியின் செயல், அது ஒரு சதுர சென்டிமீட்டர் மீது பரவியுள்ளதா, ஒரு சதுர மில்லி மீட்டரில் நுõறில் ஒரு பங்குப் பரப்பின் மீது பரவியுள்ளதா என்பதைச் சார்ந்திருக்கிறது. * பாம்புக்கு கால்கள் இல்லை. பிறகு எப்படி ஓடுகிறது? - ஆர். கார்த்திகேயன், திருவண்ணாமலை. கார்த்திக்கு என்ன வயசு என்று தெரியவில்லை. எப்படி எல்லாம் யோசிக்கிறாய்! கால்கள் இருந்தால்தான் ஓடமுடியுமா, என்ன? பாம்புக்குக் கால்கள் கிடையாது என்பது உண்மைதான். ஆனால், பாம்பின் வயிற்று பகுதி புறச் செதில்களால் அமைந்திருக்கும். அந்த புறச் செதில்கள் உதவியால் பாம்பு தரையைப் பற்றி ஓடுகிறது. அந்தச்செதில்கள் பின்புறமாகத் தரையில் பிடிக்கும்படி அமைந்துள்ளது. எனவே பாம்பு முன்னோக்கி நகர்ந்து, பின்னர் பின்னோக்கி நகரும் போது, செதில்கள் தரையில் உராய்ந்துக்கொள்வதால் அந்த உராய்வு பிடிப்பின் மூலம் உந்திக் கொண்டு மறுபடியும் முன்னோக்கி நகர்ந்து, இப்படித்தொடர்ந்து செல்கிறது. ******************************************************************************************************

குட்டீஸ் கேள்வி பதில்35

குட்டீஸ் கேள்வி பதில்35 6.10.2012 மலைகளின் மீது இருக்கும்போது வெப்பம் குறைவாக இருப்பது ஏன்? - ஏ. முத்து, வாழைப்பந்தல். கோடைக்காலத்தில் கடும் வெயில் வீசுகிற நேரத்தில் ஊட்டியில் சுகமாக குளுகுளு என்று இருக்கிறது. மணாலி, சிம்லா, டார்ஜிலிங் போன்ற மலை உச்சிகளில் உள்ள இடங்களில் எல்லாம் குளிர் வீசுகிறது. இதற்கு காரணம் காற்று அழுத்தக் குறைவுதான். கடல் மட்டத்தில் காற்று அழுத்தம் 1000 மில்லி பார் அளவில் உள்ளது. தரையிலிருந்து உயரே செல்லச் செல்ல காற்று அழுத்தம் குறைகிறது. அதே போல காற்று அடர்த்தியும் குறைகிறது. ஓரிடத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது காற்று மூலக் கூறுகள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதுகின்றன. அவை இவ்விதம் வேகமாக முட்டி மோதுகிற நிலையில் தான் வெப்பம் அதிகமாக உணரப்படுகிறது. தரையிலிருந்து உயரே செல்லச் செல்ல காற்று மூலக்கூறுகள் குறைகிறது. அவற்றின் இடையே மோதலும் குறைகிறது. ஆகவே வெப்பம் குறைகிறது. தரையிலிருந்து உயரே செல்லச் செல்ல 1000 அடிக்கு 3.6 டிகிரி பாரன்ஹீட் வீதம் வெப்பம் குறைவதாக நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். பொதுவாக மலைபிரதேசங்கள் உயரத்தில் உள்ளதால் அங்கு காற்று அழுத்தம் குறைவாகவும் அதன் விளைவாக வெப்பம் குறைவாக - அதாவது குளுகுளு என்று இருக்கிறது. ஓடும்போது இதய துடிப்பு அதிகரிப்பது ஏன்? -வி.என். மல்லீஸ்வரன், நாமக்கல். உடலுக்குத் தேவையான ரத்தத்தை இதயம் சீராக பம்ப் செய்தபடி இருக்கும். இதன் மூலம் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும். ஓடும் போதும் அதிக ஆக்ஸிஜனுக்காக அதிகமாக மூச்சு இழுக்க வேண்டியிருக்கும். அதிகமாக மூச்சு இழுக்கும் போது இதய துடிப்பும் அதிகமாக துடிக்க வேண்டியிருக்கும். இதுதான் ஓடும்போது இதய துடிப்பு அதிகரிக்க காரணம். இதயத் துடிப்பு பலகாரணங்களால்அதிகரிக்கக்கூடும். ஆனால், உடலியல் காரணங்களால் ஏற்படும் அதிகப்படியான இதயத் துடிப்பு, தானாகவே மீண்டும் பழைய நிலையை அடையும். ஆனால், நோய்கள் காரணமாக இதயத் துடிப்பு அதிகரித்தால், அந்தந்த நோய்க்கு உரிய சிகிச்சை அளித்தால்தான் இதயத் துடிப்பு சீராகும். உடற்பயிற்சி செய்யும்போது, கோபம், அதிர்ச்சி போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகும்போது, உடலில் வெப்பநிலை அதிகரிக்கும்போதும் இதயத் துடிப்பு அதிகமாகும். பிறகு தானாகக் குறைந்து விடும். *புரை ஏறினால் யாரோ நினைக்கிறார்கள் என்கிறார்களே, உண்மையா? - ச. தையல்நாயகி, ராமநந்தீஸ்வரம். உணவுக்குழாயும் மூச்சுக்குழாயும் வாய்க்குக் கீழ்புறம் அடுத்தடுத்து உள்ளன. உணவு சாப்பிடும் போது மூச்சுக் குழாய் தானாக மூடிக்கொள்ளும். உணவு மூச்சுக் குழாயில் போய்விடாமல் இருக்க இயற்கையாக அமைந்துள்ள ஏற்பாடு இது. சில சமயம் தப்பித் தவறி உணவுத் துணுக்கு அல்லது நீர்த்துளி மூச்சுக்குழாய்க்குச் சென்று விடுகிறது. அப்போது மூச்சுக்குழாயின் தசைகள் அதை வெளியேற்றத் தீவிரமாக இயங்குகின்றன. இதைத்தான் புரை ஏறுதல். புரை ஏறினால் யாரோ நினைக்கிறார்கள் என்பதற்கும் இதற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை. ******************************************************************************************************

குட்டீஸ் கேள்வி பதில்34

குட்டீஸ் கேள்வி பதில்34 28.9.2012 ஐ.நா. சபையின் தோற்றம், அதன் பணிகள் என்ன? - ச. திருநாவ், ப. குமாரபாளையம். ஐக்கிய நாடுகள் என்பது, நாடுகளைக் கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்பு. உலகின் அனைத்து நாடுகளும்(ஒருசில நாடுகளைத்தவிர) இதில் உறுப்பினராக இருக்கின்றன. இது, வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மாநாட்டைத் தொடர்ந்து அக்டோபர் 24, 1945ல், கலிபோர்னியாவிலுள்ள, சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்டது. ஐநா அங்கத்தினர் தகுதி, ஐநா சாசனத்தில் உள்ள நிபந்தனைகளை ஏற்று, அந்நிபந்தனைகளை செயல்படுத்த முடியும் என ஐநாவினால் நம்பத்தகுந்த எல்லா ’சமாதான விரும்பி’ நாடுகளுக்கும் உண்டு. செப்டம்பர் 2010 நிலைவரப்படி, 192 உறுப்புநாடுகள் உள்ளன. ஐ.நா தனது சமாதானம் மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கிறது. உலக அமைதி மற்றும் உலகநாடுகளின் பாதுகாப்பு முக்கியமான நோக்கமாகவும், உலகநாடுகளுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்துதல், பொருளாதார சமூக பண்பாடு மற்றும் மனிதாபிமான பிரச்னைகளை தீர்த்து வைப்பதில் ஒத்துழைத்தல், சுதந்திரம் மற்றும் உரிமைகளை மதித்து அவைகளுக்கு ஆதரவு தருதல் ஆகியன இவற்றின் குறிப்பிடத்தக்க பணிகளாகும். கிரகணம் என்றால் என்ன? - எல். ஸ்ரீமதி, திருச்சி. இது ஒரு வானவியல் நிகழ்வு. வானில் பல பொருட்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவை நகர்ந்து செல்லும்போது சில சமயம் ஒன்றின்பாதையில் மற்றொன்று குறுக்கிட நேரிடும். அப்போது அந்த வான்பொருள் நம் பார்வையிலிருந்து மறைக்கப்படும். இந்நிகழ்வு, சூரிய குடும்பத்துக்குள் நிகழும்போது மறைக்கப்படும் பொருளின் பெயரை வைத்து, அதன் கிரகணம் என்று சொல்லப்படுகிறது. சந்திரன் பூமியைச் சுற்றி வரும் போது 29 1/2 நாட்களுக்கு ஒருமுறை பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயும், சூரியனுக்கு எதிர் திசையிலும் வருகின்றது. அதனால் பூமியில் இருப்போருக்கு இருட்டாக அமாவாசையாகவும் சூரிய ஒளிவெளிச்சம் பெற்று பிரகாசமாக பவுர்ணமியாகவும் சந்திரன் தோற்றமளிக்கின்றது. இதற்கான காரணம் சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் குறித்த தினங்களில் ஒரே நேர் கோட்டில் வருவதே. பவுர்ணமி தினத்தில் பிரகாசமாக தோற்றமளிக்க வேண்டிய சந்திரன் சில சமயங்களில் பூமியின் நிழலால் மறைக்கப்பட்டும், அமாவாசை தினத்தில் சூரியன் சந்திரனின் நிழலால் மறைக்கப்பட்டும் விடுகின்றது. இவ் நிகழ்வையே சந்திர, சூரிய கிரகணம் என்று அழைக்கின்றோம். வெட்டி வேர் வாசனையாக இருப்பது எப்படி? - சுதாகர், ஈரோடு. ஒரு வகை புல் இனத்தை சேர்ந்த வெட்டிவேர் மருத்துவ குணம் நிறைந்தது. நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும். வேர் கொத்துக் கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால் வெட்டி வேர் என வழங்கப்படுகிறது. இதில் ரெசின், நிறமி, அமிலம், லைம், உப்பு, இரும்பு ஆக்சைடு, எளிதில் ஆவியாகும் எண்ணெய் உள்ளது.இதனால் வெட்டி வேர் குளிர்ச்சியைத் தருவதுடன் நல்ல நறு மணத்தையும், உச்சாகத்தையும் தரக்கூடியதாக இருக்கிறது. வெட்டி வேரைக்கொண்டு செய்யப்படும். விசிறியைக் கொண்டு வீசி வர உடல் எரிச்சல், நாவறட்சி தாகம், இவை நீங்கும். *****************************************************************************************************

குட்டீஸ் கேள்வி பதில்33

குட்டீஸ் கேள்வி பதில்33 21.9.2012 *நிலவில் முதலில் கால்பதித்த ஆம்ஸ்ட்ராங் நம்மைவிட்டு பிரிந்துவிட்டாரே! அவரைப்பற்றி கூறுங்கள் அங்கிள்! - எல். ஸ்ரீமதி, திருச்சி. நிலவில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தவர் என்ற பெருமை கொண்டிருந்த அமெரிக்க விஞ்ஞானி நீல் ஆம்ஸ்ட்ராங் தனது 82வது வயதில் காலமானார். அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தில்உள்ள வாபா கோனெட்டா என்ற சிறிய நகரில் பிறந்த ஆம்ஸ்ட்ராங், புருடியூ பல்கலைகழகத்தில் இன்ஜினியரிங் படிப்பை முடித்தார். பின்னர் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி விமானியாக பணியில் சேர்ந்தார். நாசா விண்வெளி ஆராய்ச்சிமையம் நிலவு குறித்த பல சோதனைகள் மேற்கொண்டு வந்தது. இதற்காக அப்பல்லோ விண்கலம் தயார் செய்யப்பட்டது. அப்பல்லோ 11 என்ற விண்கலம் மூலம் விண்ணில்பறந்தார். நிலவில் இறங்கி நடக்க துவங்கியதை அடுத்து 20 நிமிடங்களுக்கு பின்னர் தன்னுடைய சக விஞ்ஞானியான புஷ் ஆல்ட்ரின் உடன் இணைந்து கொண்டுநடந்து சென்று நிலவின் ஈர்ப்பு சக்தி மற்றும்பாறை மாதிரிகள் மற்றும் போட்டோக்களை எடுத்து கொண்டார். பூமிக்கு திரும்பிய ஆம்ஸ்ட்ராங் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சிமற்றும்தொழில் நுட்பபிரிவில் ஆலோசகராக பணிபுரிந்தார். சின்சினாட்டி பல்கலை கழகத்தில் இன்ஜினியரிங் பாட பரிவில் பேராசிரியராக பணிபுரிந்தார். * பெண்களுக்கு தலையில் வழுக்கை விழுவதில்லை, ஏன்? - ஏ. சந்தான லட்சுமி, வாழைப்பந்தல். பெரும்பாலும் வழுக்கை ஆண்களுக்கே விழுகிறது. பெண்களுக்கும் வழுக்கை விழுவதில்லை என்று உங்களைப்போல பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு வழுக்கை விழுவதில்லை என்று சொல்வது தவறு. ஆண்களுக்கு வழுக்கை விழுவது போல, பெண்களுக்கும் வழுக்கை விழவே செய்கிறது. அதில் என்ன வித்தியாசம் என்றால் பெண்களுக்கு விழும் வழுக்கை ஆண்களுக்கு விழும் வழுக்கை போல இருக்காது. ஆண்களுக்கு வழுக்கை விழுந்தால் தலையச் சுற்றி மட்டும் முடி இருக்கும். மற்றபடி உச்சிமண்டையில் முடியில்லாமல் வழுக்கையாக இருக்கும். ஆனால், பெண்களுக்கு முன்னாடி கொஞ்சம் முடி இருக்கும். நடுவில் காலியாகிவிடும். பின்னாடி கொஞ்சம் முடி இருக்கும். பார்த்தால் வழுக்கை இருப்பது வெளியே தெரியாது. அவ்வளவுதான்! ரத்த வகையில் ஆர் எச் வகைப்பிரிவு ரத்தம் பற்றி சொல்லுங்க அங்கிள்! - எஸ். சவுமியா, தேவனாங்குறிச்சி. ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு அதே ரத்தபிரிவு வகையை செலுத்திய போதும் சில பிரச்னைகளும் பல எதிர்விளைவுகளும் ஏற்பட்டன. இதை கண்டுபிடித்த மருத்துவ அறிஞர்கள் ரத்தம் சம்பந்தமான தொடர் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர். அப்படி கண்டுபிடிக்கப்பட்டதுதான். ஆர்எச்(கீட) ரத்த வகைகள். அ, ஆ, அஆ, O ரத்த வகைகள் 1900லும், ஆர்எச் ரத்த வகைகள் 1940லும் கண்டுபிடிக்கப்பட்டன. ஆர்எச் புதிய ரத்த வகையானது கீடஞுண்தண் என்ற குரங்கிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் ஆர் எச் குரூப் என்று பெயரிடப்பட்டது. இது ஆர்எச் பாசிட்டிவ் குரூப் என்றும் ஆர்எச் நெகட்டிவ் குரூப் என்றும் பிரிக்கப்பட்டது. இதன் பின்னர், ஏ வகை ரத்தம் உள்ள ஒருவருக்கு ஏ வகை ரத்தம் செலுத்தும்போது ஆர்எச்வகையும் ஒற்றுமையாக அமைய வேண்டும் என்ற புதிய அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டது. அதாவது அ வகையினர் கீட+ ஆக இருந்தால் அவர்களுக்கு அ வகை கீட+ ரத்தம் தான் கொடுக்க வேண்டும். கீட நெகடிவ் உள்ளவருக்கு கீட நெகடிவ் ரத்தமே சேரும். ****************************************************************************************************

குட்டீஸ் கேள்வி பதில் 32

குட்டீஸ் கேள்வி பதில் 32 * சுண்ணாம்பில் நீர் ஊற்றினால் புகை வருவதேன்? 14/9/12/ - மதி தேவதர்ஷன், கயத்துõர். நாம் பயன்படுத்தும் சுண்ணாம்பு சுட்ட சுண்ணாம்பு. இதன் அறிவியல் பெயர் கால்ஷியம் ஆக்ஸைடு. சுட்ட சுண்ணாம்பில் தண்ணீரை ஊற்றும் போது, கால்ஷியம் ஆக்ஸைடும் நீரும் சேர்கிறது. இதனால் கால்ஷியம் ஹைட்ராக்ஸைடு உண்டாகிறது. கால்சியம் ஆக்ஸைடும் நீரும் சேரும்போது நிகழும் வேதிவினையில் வெப்பம் வெளிப்படுகிறது. அப்போது நீரின் ஒரு பகுதி நீராவியாக மாறும். கூடவே சுட்ட சுண்ணாம்புத் துõள்களும், நீராவியோடு கலந்து வருவதால் புகை மண்டலம் போல் காட்சி தருகிறது. இது தான் சுண்ணாம்பில் தண்ணீர் ஊற்றினால் புகைபோல வருகிறது. இந்த கால்ஷியம் ஹைட்ராக்ஸைடு நீர்மத்தை சுவரில் பூசிய பின், அது காற்றிலுள்ள கார்பன் டை ஆக்ஸைடு உடன் வினை புரிந்து கால்ஷியம் கார்பனேட்டாக மாறுகிறது. இது சுவருக்கு வெண்மையைக் கொடுக்கும். * பியானோவை கண்டுபிடித்தவர் யார்? அதன் விவரங்கள் தேவை. - ஜே. கிருத்திகா, திருவெறும்பூர். பியானோ இசைக்கருவி முதன் முதலில் இத்தாலியில் தோன்றியது. கடிச்ணணி என்கிற ஆங்கில சொல் இத்தாலிய மொழியிலிருந்து வந்தது. பியானோ என்பது பியானோபோர்டே என்பதன் சுருக்கம். பியானோ முதன்முதலில் 1700ல் கிறிஸ்திபோரி என்கிற இத்தாலியரால் உருவாக்கப்பட்டது. இவர் வடிவமைப்பில் இசைக்கருவியின் நரம்புகள் சுத்தியல்களால் அடிக்கப்பட்டு விடப்பட்டன. 1790 லிருந்து 1860க்குள் பியானோவில் பயன்படுத்தும் நரம்புகளின் தரம் மிகவும் உயர்ந்தது. நரம்புகள் எஃகினால் கட்டப்பட்டது. பியானோவில் உள்ள இரும்புச் சட்டங்கள் துல்லியமாக வார்ப்படமிடப்பட்டது. ஒலிநீடிப்பும் மேம்படுத்தப்பட்டது. 1821ல் எரார்டு இரட்டை விடுவிப்பு முறையை (ஞீணிதஞடூஞு ஞுண்ஞிச்ணீஞுட்ஞுணt) உருவாக்கினார். இதனால் ஒரு சுரத்தின் மறுவிசைவு மற்றும் வாசிக்கும் வேகம் அதிகப்பட்டது. 1820க்குள் பியானோவில் 7 சுரங்கள் வருமாறு உருவாக்கப்பட்டன. * பிறக்கும் போதே தலையில் கொம்புடன் பிறக்கும் விலங்கு உண்டா? - எஸ். சவுமியா, தேவனாங்குறிச்சி. பொதுவாக விலங்குகளுக்கு பிறந்த பிறகுதான் கொம்பு முளைக்கின்றது. விதிவிலக்காக ஒட்டசிவிங்கிகளுக்கு பிறந்தபோதே கொம்புகள் காணப்படுகின்றது. ஆண், பெண் என பேதம் இல்லாமல் ஒட்டசிவிங்கிகளுக்கு இரண்டு எலும்பினால்ஆன குட்டை கொம்புகள் தோலால் போர்த்தப்பட்டு காணப்படுகின்றன. ஆண் ஒட்டகசிவிங்கிக்கு பெரிய கொம்பு, அதில் குஞ்சம் இருக்காது! பெண் ஒட்டகசிவிங்கிக்கு சிறிய கொம்பு! அதில் குஞ்சம் போல் முடி அலங்காரம் இருக்கும். பிறக்கும் போதே கொம்புகளோடு தோன்றும் விலங்கினம் என்ற பெருமை ஒட்டசிவிங்களுக்கு இருக்கிறது. ********************************************************************************************************

குட்டீஸ் கேள்வி பதில் 31

குட்டீஸ் கேள்வி பதில் 31 சிலர் பேசும்போது திக்குகிறார்கள். திக்கு எதனால் ஏற்படுகிறது? எனக்கும் இந்தப் பிரச்னை உள்ளது. - சூ. ரேவதி, நாகப்பட்டினம். 7.9.12 தட்டுத்தடங்கல்களோடு சரளமாக பேச முடியாத குறைதான் திக்குவாயாகும். திக்குவாய் உடல்ரீதியான பிரச்சனை இல்லை. திக்கித்திக்கி பேசுவது மனரீதியான பிரச்சனை. உச்சரிக்க வேண்டிய அல்லது சொல்ல வேண்டிய சொற்களை தெளிவாகவும், சீராகவும், கோர்வையாக வும் சொல் ல இயலாதநிலையை திக்குவாய் என்று கூறுவதுண்டு. குழந்தைகள் பேசக் கற்கும் காலத்தை பொதுவாக மருத்துவர்கள் 2 முதல் 5 வயது வரை என கணித்துள்ளார்கள். இந்த கால கட்டத்தில் தான் பெரும்பான்மையான குழந்தைகளுக்கு திக்குவாய் முதன் முத லாக தோன்றுவது வழக்கமாகும். பேசும் ஒலியைக் கேட்பதில் ஏற்படும் காலதாமதத்தின் விளைவாக திக்கு வாய் ஏற்படுகின்றது . நலமான நிலையில் நாம் பேசும் ஒலியை காதானது, 17 மில்லி செகண்ட் நேரத்தில் கிரகித்துக் கொள்வது வழக்கம். ஆனால் திக்குவாயினால் அவதியுறுவோர்களுக்கு பேசும் ஒலியை காதானது ஈர்க்கும் நேரமானது, வழக்கத்திற்கு மாறாகவும், இயற்கைக்கு மாறாகவும் மிகவும் அதி கமாகின்றது. இந்த இடைவெளி அதிகமாதலால் உச்சரிக்கும் சொல்லை கேட்க இயலாததால் இவர்கள் சொன்ன சொற்களை திரும்பத் திரும்ப சொல்லி அவதியுற வேண்டியநிலை ஏற்படுகின்றது. மூளைத் தாக்கம், சிறு மூளை பாதிப்பு, மூளையில் ஏற்படும் பலவகையான காயங்கள் போன்ற நோய் காரணங்கள் சில சமயங்களில் இதற்கு வழி வகு க்கக் கூடும். காது, மூக்கு, தொண்டைப் பிரிவிலுள்ள சிறப்பு மருத்து வரை அணுகினால், அவர் வழிகாட்டுதலின் பேரில், திக்குவாயை சரிசெய்ய இதற் கென சிறப்புப் பயிற்சி பெற்ற திக்குவாயை சரிசெய்யும் சிறப்புப் பயிற்சியாளர்கள் உங்களுக்கு தினம்பயிற்சி அளித்து திக்குவாயைச் சரிசெய்வார். கிரிக்கெட்டில் பவர் பிளே என்றால் என்ன? - ஏ. திருமலைவாசன், ஆர்.பி.புதுõர். ஒருநாள் போட்டிகளில் விறுவிறுப்பை அதிகரிக்க, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கொண்டு வந்த மாற்றங்களில் ஒன்றுதான் ‘பவர் பிளே.’ இந்த மாற்றத்தால் ஒரு நாள் போட்டிகளில் மக்களுக்கு ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியது. பவர்பிளே ஓவர்களில் அதிவிரைவாக ரன் சேர்க்கும் போது போட்டியின் நிலைமை தலைகீழாக மாறிவிடுகிறது. ஆரம்ப காலத்தில் ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பர் உட்பட அனைத்து வீரர்களையும் களத்தடுப்பின் எல்லைக் கோட்டுக்கு அருகே கூட நிறுத்தலாம். இதனால் பேட் மேன் ரன் குவிப்பது சிரமமாகிவிடும். போட்டிகளில் விறுவிறுப்பை அதிகரிக்க நினைத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ. சி. சி) களத்தடுப்பில் சில கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது. முதல் 15 ஓவர்களில் 9 பீல்டர்கள் ஆடுகளத்தை சுற்றியுள்ள 27 மீட்டர் துõர, வட்டத்துக்குள் தான் நிற்க வேண்டும். 2 பீல்டர்கள் இந்த வட்டத்துக்கு வெளியே நிற்கலாம். இதன் பேட்ஸ் மேன்அதிக பவுண்டரிகள், சிக்சர்கள் அடிக்க முடியும். முதன் முதலாக 1996ல் நடந்த உலக கோப்பை தொடரில், இந்த ‘களத்தடுப்பு கட்டுப்பாடுகள்’ அறிமுகம் செய்யப்பட்டது. பவர் பிளே விதிகள்: ‘பவர் பிளே-1’ (முதல் 10 ஓவர்கள் கட்டாயம்). ‘பவர் பிளே-2’ (5 ஓவர்கள்) ‘பவர் பிளே – 3’ (5 ஓவர்கள்) என அழைக்கப்பட்டது. பீல்டிங்கில் ஈடுபடும் கேப்டன் போட்டியின் தன்மைக்கு ஏற்ப இந்த இரண்டு, மூன்றாவது ‘பவர் பிளேயை’ தேர்வு செய்து கொள்ளலாம். அப்போது 3 பீல்டர்கள் உள் வட்டத்துக்கு வெளியே நிற்க வேண்டும். இந்த விதிமுறை கடந்த 2005 ஜூலை 7ல் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டது. மூன்றாவது ‘பவர் பிளேயை’ தேர்வு செய்யும் உரிமை பேட்டிங் செய்யும் அணிக்கு கொடுக்கப்பட்டது. கடந்த 2008ல் நடந்த நியூசிலாந்து பங்களாதேஷ் அணிகள் பங்கேற்ற ஒருநாள் தொடரில் நடைமுறைப்படுத்த ப்பட்டது. இப்போது வரை இதுதான் நடைமுறையில் இருந்து வருகிறது. ****************************************************************************************************

குட்டீஸ் கேள்வி பதில்30

குட்டீஸ் கேள்வி பதில்30 விலங்குகளுக்கு வேர்க்குமா அங்கிள்? 31/8/12 - ஜே. டேவிட், தரங்கம்பாடி மனிதர்களைப்போல விலங்குகளுக்கும் வேர்க்கும். மனிதனை போன்று விலங்குகளுக்கு வியர்வை சுரப்பி உடல் முழுவதும் பரந்து இருக்காது. விலங்குகளுக்கு சில பகுதிகளில் மட்டுமே வியர்க்கும். பொதுவாக விலங்குகளின் மூக்கும் வாய்ப்பகுதியும் இணைந்த உறுப்பு ‘மசில்’ என்று பெயர். ஆடு,மாடு, ஒட்டகம், மான், நாய் போன்ற விலங்குகளுக்கு இந்த மசிலை சுற்றியும் கறுப்பாக இருக்கும். அந்தப்பகுதியில் வேர்க்கும். மற்ற விலங்குகளைவிட நாய்க்கு இந்தக்கறுப்பு வட்டம் குறைவாக இருக்கும். அதனால் வியர்ப்பதும் குறைவுதான். அதை ஈடுகட்ட நாக்கில் அதிகமாக நீர் சுரக்கும். ஓஸோன் என்றால் என்ன? அதுபற்றி விளக்கம் வேண்டும்? - ஆர். எம். ராமகிருஷ்ணா, திருச்செங்கோடு. ஓஸோன் என்பது ஆக்ஸிஜனின் ஒரு வடிவம். ஆனால், ஆக்ஸிஜன் போல் அல்லாமல் இது ஒரு விஷ வாயு. ஒவ்வொரு ஓஸோன் மூலக்கூறும் மூன்று ஆக்ஸிஜன் அணுக்களைக் கொண்டது. இதனுடைய வேதியியல் சூத்திரம் 03. பூமியின் மேற்பரப்பிலிருந்து 15-50 கி.மீ துõரத்தில் ஸ்ட்ரேடாஸ்பியர் படலம் உள்ளது. இப்படலத்தில்தான் இயற்கையாகவே ஓஸோன் படலம் அமைந்துள்ளது. இது சூரியனின் புற ஊதாக் கதிர்கள் பூமிக்கு வந்து சேராமல் தடுக்கிறது. அதன் மூலம் உயிர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கின்றன. பூமியின் மேற்பரப்புக்கு மிகவும் நெருக்கமாக உள்ள வாயு மண்டலப் படலம் வாகனங்களினால் உண்டாகும் புகை, நைட்ரஜன் ஆக்ஸைடுகள் மற்றும் ஹைட்ரோ கார்பன்கள் இவற்றின் அளவுகள் அதிகரிப்பதால் மாசு படுகிறது. சூரிய ஒளி இருக்கும் போது, இந்த வேதிப்பொருட்கள் ஓஸோனை உருவாக்குகின்றன. இந்த ஓஸோன், இருமல், தொண்டை எரிச்சல், ஆஸ்துமா, போன்ற நோய்களை உண்டாக்குகின்றன. என் அப்பா டிஸ்கவரி சேனல் பாரு என்கிறார். டிஸ்கவரி எப்போது உருவாக்கப்பட்டது. அதன் நிகழ்ச்சிகள் பற்றி சொல்லுங்க அங்கிள்! - பா.மணிமாறன், குடவாசல். டிஸ்கவரி நிறுவனம் 1985ம் ஆண்டு அமெரிக்காவில் துவங்கப்பட்டது. இப்போது 170 நாடுகளில் 40 மொழிகளில் தன் சேவையை வழங்கிக் கொண்டிருக்கிறது. இதில் நம் தமிழ் மொழியும் அடங்கும். இந்தியாவில் இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் மட்டுமே தனியாக டிஸ்கவரி அலைவரிசை உள்ளது. தமிழில் தனி அலைவரிசை 15.8.2011 முதல் ஒளிபரப்பப்படுகிறது. டிஸ்கவரி தமிழ் சேனலின் நிகழ்ச்சிகள் அனைத்துமே பெரியவர் முதல் சிறியவர் வரை அவரவர் ரசனைக்கேற்றவாறு ரசிக்கும்படி இருக்கின்றன. உலக அளவில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளை இவர்கள் தொகுத்து வழங்கும் விதம் பிரமிப்பாக இருக்கும். லைப், ஜாய் ஆப் த டிஸ்கவரி, டிஸ்கவர் மோர், பாக்ட்ரி மேட், டர்ட்டி ஜாப்ஸ்,சர்வய்வர் மேன்,டுயல் சர்வய்வர், மென், வுமன் விசஸ் வைல்ட்,வொர்ஸ்ட் கேஸ்ட் செனாரியோ,கன்டர் இப்படி எண்ணற்ற நிகழ்ச்சிகளை பட்டியலிட்டுக் கொண்டிருக்கலாம். அனைத்துமே இயற்கையின் எழிலையும் ,கோபத்தையும் நமக்கு உணர்த்துகிறது. ********************************************************************************************************

குட்டீஸ் கேள்வி பதில்29

குட்டீஸ் கேள்வி பதில்29 பாலைவனத் தாவரம் நீர் இன்றி எப்படி வளர்கிறது? ஆக.24.12 - கு. பாஸ்கரன், பொறையார். தாவரங்கள் ஈரப்பதமான மற்றும் வறண்ட இடங்களிலும் வளர்கின்றன. ஈரப்பதமான இடங்களில் வளரும் தாவரங்களுக்கு நீர் வேண்டிய அளவு கிடைக்கும். ஆனால், பாலைவனத் தாவரங்களுக்கு நீர் அப்படிக் கிடைப்பதில்லை. இருந்தாலும் தாவரங்கள் வளர்கின்றன. இதற்கு ஏற்ற அமைப்பு அத்தாவரங்களுக்கு இருக்கிறது. கிடைத்த நீரை வீணாக்காமல் வைத்துக்கொள்ள உதவும் அமைப்புதான் அது. தாவரங்களில் உள்ள நீர் பெரும்பாலும் அவற்றின் இலைகளின் வழியாகவே ஆவியாகிறது. பாலைவனத் தாவரங்களுக்கு இலைகள் அதிகம் இருப்பதில்லை. சில தாவரங்களுக்கு மிகவும் சிறிய இலைகளே இருக்கின்றன. இதனால் இலைகள் மூலம் நீர் ஆவியாவது குறைக்கப்படுகிறது. இது தவிர அந்த இலைகளில் மேற்பகுதி தடிப்பாக அல்லது மெழுகு போல இருக்கிறது. தாவரங்களின் தண்டு திரண்டு இருக்கும். முட்கள் தான் உண்டு. இவையெல்லாம் நீர் ஆவியாவதைக் குறைக்கும். இவ்வாறு அந்த இடத்திற்கு ஏற்ப தாவரங்கள் அமைந்திருப்பதால் பாலைவனங்களில் அவை உயிர் வாழ முடிகிறது. * முத்து எப்படி உருவாகிறது? - அ. செழியன், வந்தவாசி. முத்து என்பது ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் ஒருவகைப் பொருளாகும். இது இயற்கையில் நீரில் வாழுகின்ற முசெல் வகையைச் சேர்ந்த முத்துச்சிப்பி போன்ற சில உயிரினங்களிலிருந்து பெறப்படுகின்றது. கடலில் உள்ள சில புல்லுருவிகள் , சிலநேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச் சென்று விடுகின்றன. அப்போது சிப்பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, நாக்கர் திரவத்தை அதன் மீது பொழியும். அவ்வாறு பொழியும்போது அந்தப் புல்லுருவி மடிந்துவிடும். அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட, அது முத்தாக மாறிவிடுகிறது. இம்முறையிலேயே சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அது முத்தாகிவிடுகிறது. பூமியில் முதன் முதலில் தோன்றிய உயிரினம் எது? -சேவ. ஜம்புகேஸ்வரன், கரூர். உலகம் தோன்றியபொழுது முதல் முதலில் தோன்றிய உயிரினம் நீரில்தான் என்பதனால் முதல் முதலாக இறைவன் மச்ச அவதாரம் என்ற ஒரு அவதாரத்தை எடுத்தார் என்று சமய நிபுணர்கள் சொல்கிறார்கள். மனிதனின் மூதாதையர் மீன்களாக கூட இருக்கலாம். டார்வின்னும் உலகின் முதல் உயிரினம் கடல் மார்க்கமாக வந்தது என்கிறார். உலகின் முதல் ஒரு செல் உயிரினம் 57 கோடி ஆண்டுகளுக்கு முன் கடலில் உருவாகியிருக்க முடியும் என்பது அறிவியலாளர்கள் கருத்தாக உள்ளது. பூமியில் எந்த ஒரு ஜீவராசிகளுமற்ற கால கட்டத்தை பிரிகேம்ப்ரியன் யுகம் என்பார்கள். 57 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் முதல் உயிரினம் உருவான பிறகு, இன்று வரையுள்ள காலத்தை அறிவியல் வல்லுனர்கள் பேலியோசோயிக், மீசாசோயிக் , சீனோசோயிக் என மூன்று யுகங்களாகப் பிரித்துள்ளனர். ஒரு செல் நுண்ணுயிரிகள் பல செல் உயிரினங்களாகிப் பின்னர் அவைகள் தாவரங்கள், பிராணிகள் எனப் பரிணாம வளர்ச்சி அடைந்தன. அதன் பயனாக 51 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் முதல் முதுகெலும்புள்ள பிராணி தோன்றியது. உலகின் முதல் தாவர இனம் தோன்றியது 40 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் என்றும் உலகின் முதல் தரையில் வாழும் உயிரினம் தோன்றியது 37 கோடி ஆண்டுகளுக்கு முன் என்றும் கணகிட்டுள்ளனர். *******************************************************************************************************

குட்டீஸ் கேள்வி பதில் 28

குட்டீஸ் கேள்வி பதில் 28 தேநீர் அருந்தும் பழக்கம் எங்கிருந்து வந்தது?/ஆக.17/ - செ. சிவசூர்யா, தாராசுரம். தேநீர் உலகில் பல நாடுகளில் விரும்பி அருந்தப்படும் ஒரு பானம். தேயிலைச் செடியிலுள்ள இலைகள், தளிர்கள் மற்றும் மொட்டுக்களில் இருந்து தேநீர் தயாரிக்கப்படுகிறது. தேயிலைகளை சூடான நீரில் வடித்துப் பின் அவரவர் விருப்பத்திற்கிணங்க பால் மற்றும் சர்க்கரையைக் கலந்தோ கலக்காமலோ அருந்துகின்றனர். சிலர் தேநீரைக் குளிர்வித்தும் அருந்துகின்றனர். தேயிலை, தென்கிழக்கு ஆசியாவில் வடகிழக்கு இந்தியா, வடக்கு பர்மா, தென்மேற்கு சீனா, திபெத் அடங்கிய பகுதியிலேயே தோன்றியதாகக் கூறப்படுகிறது. இந்தப் பகுதியிலிருந்து இத்தேயிலைச் செடி 52 நாடுகளுக்கு அறிமுகமானது. சீனாவின் யுனான் மாகாணமே தேநீரின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. அதாவது, இங்கேயே முதன் முதலில் தேயிலையை உண்பது அல்லது நீரில் ஊறவைத்துக் குடிப்பது சுவையானது என்பதை மனிதன் அறிந்து கொண்டான். நள்ளிரவில் மற்றும் நாள் முழுவதும் சூரியன் உதிக்கும் இடம் இருக்கிறதாமே, விரிவாக விளக்கம் கொடுங்க அங்கிள்! - ஏ. விஷ்ணுபதி, திருச்சி. நள்ளிரவிலும் சூரியன் ஒரு வட்டத் தட்டு போலத் தோன்றி ஜொலிக்கும் பகுதி வட தென் துருவ வட்டங்கள் ஆகும். இந்த இரு துருவங்களைச் சுற்றி 90 கி. மீ. வரையிலும் கோடையில் நடு இரவிலும் சூரியன் ஜொலிக்கிறது. பூமியின் வட பகுதி முடிந்து விடும் இடத்திற்கு ஆர்டிக் என்று பெயர். நார்வேயின் சவால்பார்ட் என்ற இடத்தில், ஏப்ரல் 13 முதல் ஆகஸ்ட் 23 வரை 24 மணி நேரமும் சூரியன் மறையாமலே, அந்த ஊரிலேயே சுற்றிக்கொண்டு காட்சி தருகிறது. அதற்கும் மேல் உள்ள பகுதிகளில் ஆண்டில் பாதி மாதங்கள் சூரியன் நாள் முழுவதும் காட்சி கொடுக்கும். அப்போது அப்பகுதியில் இரவே இருக்காது! துருவப் பகுதிகளில் 60 பாகை அட்ச ரேகைகளுக்கு மேல் இருக்கும் ஆர்டிக் பகுதியில் ஆர்டிக் பெருங்கடல், கனடா நாட்டில் சில பகுதிகள், ரஷ்யா, கிரீன்லாந்து, வட அமெரிக்கா (அலாஸ்கா), நார்வே, சுவீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து மக்கள் வாழும் இடங்களும் உள்ளன. அந்தப் பகுதியில் நடுநிசி நேரத்திலும் சூரியன் ஒளி வீசி கொண்டிருக்கும் அதிசயத்தைக் காணலாம். ஆர்டிக் வட்டப் பகுதிக்குள் குளிர் காலத்தில் சூரியனையே காணமுடியாத 24 மணி நேரமும் இரவும், கோடையில் 24 மணி நேரமும் சூரியன் மறையாது பிரகாசிக்கும் பகலும் காணப்படும். பின்லாந்தின் கால் பகுதி வட ஆர்டிக் வட்டத்தில் உள்ளதால் அதன் வடக்கு முனையில், கோடையில் 60 நாட்கள் சூரியன் அந்த ஊரை விட்டு நகராமல் மறையவே மறையாத நாட்களாக வியப்பூட்டும் . அறுசுவையில் எதை முதலில் சாப்பிடணும் ? -ஆர். சண்முகம், ராமநந்தீஸ்வரம். முதலில் இனிப்பையும், பிறகு வரிசையாக புளிப்பு, உப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவை கொண்டவற்றையும் சாப்பிட வேண்டும் . நிறைவாக, தயிரில் சிறிது உப்பு கலந்து சாப்பிட்டால் உணவு நன்கு செரிக்கும் . இந்த அறுசுவைகளும் அன்றாட உணவில் சமச்சீராக இருப்பதே ஆரோக்கியம். *********************************************************************************************************

குட்டீஸ் கேள்வி பதில்27

குட்டீஸ் கேள்வி பதில்27 *யார் ரத்த தானம் செய்யக்கூடாது? 9.8.2012 - சி. சுகுமார், காரைக்கால். உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் ஆகியோர் ரத்ததானம் செய்யக்கூடாது. *பான் கார்டு என்பதன் பொருள் என்ன? அதன் பயன்பாடு பற்றி சொல்லுங்க அங்கிள்! -ஒய்.எல். ஸ்ரீரவிராகுல், அவ்வையார்பாளையம். பான் (கஅN) என்பது நிரந்தரக் கணக்கு எண் (கஞுணூட்ச்ணஞுணt அஞிஞிணிதணt Nதட்ஞஞுணூ) என்ற பத்து இலக்க எண் என்பதை குறிக்கும். இந்திய வருமான வரி செலுத்தும் ஒவ்வொரு இந்தியரும் இந்த எண்ணைப் பெற்றிருப்பது அவசியம். வங்கிக் கணக்கு தொடங்க, தொலைபேசி இணைப்பு பெற, வங்கிக் கணக்கில் 50 ஆயிரத்துக்கு மேல் பணம் போடவோ எடுக்கவோ, பான் எண் வேண் டும். மியூச்சுவல் பண்ட், பங்குச் சந்தை முதலீடு போன்றவற்றிற்கு பான் எண் அவசியம். இந்த பான் கார்டை பெற நாடு முழுக்க உள்ள ஐ.டி. பான் சேவை மையங்களில் ஏதாவது ஒன்றில் நீங்கள் விண்ணப்பிக்கலாம். கட்டணம் 94 ரூபாய். ஆன்லைன் மூலமும் (டttணீ://தீதீதீ.தtடிடிண்டூ.ஞிணி.டிண/) விண்ணப்பிக்கலாம்! உங்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணம் ஒன்றின் நகல், பாஸ் போர்ட் அளவு புகைப்படம் ஒன்றையும் இணைத்து, படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால், 15 நாட்களில் பதிவுத் தபாலில் பான் கார்டு வீடு தேடி வந்து விடும்.! *இரும்பு எவ்வாறு துருபிடிக்கிறது? மற்ற உலோகங்களும் துருப்பிடிக்குமா? - அ.ஆரிமுத்து, வாழைப்பந்தல். ஒவ்வொரு பொருளும் இயற்கையில் வேறு வடிவத்தில் கிடைக்கிறது, குறிப்பாக உலோகங்கள் அதன் தாதுக்களாக தான் கிடைக்கிறது , இரும்புத்தாது (டஞுட்ச்tடிtஞு)., அலுமினியத்தாது (ஞணிதுடிtஞு). தாமிரத்தாது (ஞிதணீணீணூடிtஞு) போன்றவைகளாகும். இப்படி கிடைக்கும் தாதுக்களில் உலோகம் தனித்து இல்லாமல் அதன் ஆக்ஸைட் வடிவத்தில் இருக்கிறது. இப்படி இருக்கும் உலோகம் அதன் இயற்கை வடிவத்தில் இருந்து தனியே பிரித்து எடுக்கப்படுகிறது, இப்படி தனித்து எடுக்கப்படும் உலோகம் மீண்டும் அதன் இயற்கை வடிவதிற்க்கு மாறும் வேதியல் மாற்றம் தான் துருப்பிடித்தல். அலுமினியம் பாத்திரத்தில் அலுமினியம் ஆக்ஸைட் இயற்கையிலே படர்ந்து விடுவதால் அது மேலும் துருப்பிடிப்பதில்லை. நாம் வீடுகளில் பயன்படுத்தும் பூஜை பாத்திரங்கள் பித்தளையில் (அது தாமிரம் உலோகம் கலந்த கலவை) தாமிரம் இருப்பதால், அதில் காப்பர் ஆக்ஸைட் ஆக நம் கண்களுக்கு தெரியும் பச்சை நிறமாக படியும் படற்கையும் துரு தான். தங்கம் இயற்கையில் தனி தனிமம் ஆக கிடைக்கிறது, ஆதலால் அது ஆக்ஸைட் வடிவம் மாறாமல் துருப்பிடிக்காமல் இருக்கிறது. ****************************************************************************************************** *********

குட்டீஸ் கேள்வி பதில் 26

குட்டீஸ் கேள்வி பதில் 26 *பறவைகளுக்கு பற்கள் இல்லை. ஆனால் எப்படி உண்கின்றன? 3/8/2012 - வே. பழனிவேல், காட்டூர். கோழி, புறா,குருவி, வாத்து, வான்கோழி, ஈமு போன்ற பறவைகள் விதைகள், தானியங்கள் போன்ற கடினமான உணவுப் பொருட்களை சாப்பிடுகின்றன என்பது உண்மைதான். ஆனால்,அவை பற்கள் உதவிகொண்டு கூழாக்கிச் சாப்பிடாமல், கடினமான உணவுகளை வேறுவகையில் ஜீரணிக்கின்றன. உடற்கூற்றின்படி, பறவைகளின் வயிற்றின் கீழ்ப்பகுதியில் கிஷார்ட் (எடித்த்ச்ணூஞீ) என்ற விஷேச உறுப்பு அமைப்பு இருக்கிறது. மனிதர்களின் வாயில் பற்களின் உதவியால் கடித்து, அரைத்து கூழாக்கி விழுங்குவதற்கு இணையான, உணவைக் கூழாக்கி செரிமானத்துக்கு தயார் செய்வது இந்த உறுப்பின் வேலையாகும். கடைவாய்ப் பற்களின் பணியைச் செய்யும் கிஷார்ட் பகுதி பறவைகள் விழுங்கும் சிறுசிறு கூழாங்கற்களையும், மணற்துகள்களையும் பயன்படுத்தி கடினமான உணவுகளை உடைத்து செரிமானத்திற்கு தயார்ப்படுத்துகிறது. சில நாட்களுக்கு ஒருமுறை தேய்மானமான கற்களைக் கழிவாக கழித்துவிட்டு, புதிதாக கற்களையும், மணலையும் உணவுடன் எடுத்துக் கொள்கிறது. இந்த கிஷார்ட் பகுதி தடிமனான தசைகளால் ஆனது. இதன் உட்புறத்தைப் பாதுகாக்கவும், செரிமானத்திற்கும் என்சைம்ஸ் இருக்கும். ஒரு சில பூச்சியினங்களின் பகுதியில் கடினமான செதில்களும், சிறு சிறு பற்கள் போன்ற அமைப்பும் இருப்பதுண்டு. எனவே பறவைகளுக்கு கிஷார்ட் உறுப்புதான் பற்களாக செயல்பட்டு உணவு செரிமாணத்துக்கு உதவுகின்றது. *கத்தரிக்காய், காயா அல்லது பழமா ? - ஆர். கீதாவாணி, நாமக்கல். எவை எல்லாம் விதைகளைக் கொண்டிருக்கிறதோ அவை எல்லாம் பழம் வகையைச் சார்ந்தது என்பது தாவரவியல் கோட்பாடு . எனவே, இந்த வரையறைப்படி பார்த்தால் கத்திரி பழம்தான். அது போல தக்காளி, வெள்ளரி ஆகியவையும் பழம்தான். கத்தரிக்காய், தக்காளிக்காய், வெள்ளரிக்காய் என்று சொல்வதே பழக்கமாக இருப்பதால், இவற்றைப் பழம் என்று சொல்லும் பழக்கம் பரவலாகயில்லை. *கிரிக்கெட்டில் ‘டாஸ்’ போடும் பழக்கம் எப்படி வந்தது? - வ.கி. நாகராஜன், வடக்காலத்துõர். கிரிக்கெட் நம் நாட்டு பாரம்பரிய விளையாட்டு இல்லை. அது இங்கிலாந்துகாரர்கள் கண்டுபிடித்த விளையாட்டு. இந்த விளையாட்டில் யார் முதலில் விளையாடுவது என்பதை தீர்மானிக்க பூவா, தலையா- டாஸ் போட்டு பார்க்கும் பழக்கம் கிரிக்கெட்டில் இருந்து வருகிறது. ஜூலியஸ் சீசர் காலத்தில் உபயோகத்தில் இருந்த நாணயத்தில் அவரின் தலை ஒரு பக்கத்தில் பொறிக்கப்பட்டு இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்கும் சூழ்நிலை வந்தால் அப்போது பேரரசர் இல்லாத போது அவரின் சார்பாகவும், கடவுளின் சாட்சியாகவும் நாணயத்தைத் துõக்கிப் போட்டு மேல் பாகத்தில் தலை பக்கம் விழுந்தால் சரியா ? தவறா ? என இவர்கள் கேட்ட கேள்வியின் பதிலாக எடுத்துக் கொண்டார்கள். அந்த பழக்கம் தொடர்ந்து கடைசியில் கிரிக்கெட் விளையாட்டு வரை வந்து விட்டது. ******************************************************************************************************

குட்டீஸ் கேள்வி பதில் 25

27.7.2012 *சிறு எடை உள்ள ஆணி நீரில் மூழ்கிவிடுகிறது. அதிக எடையுள்ள கப்பல் எப்படி மிதக்கிறது? - பி. ஆபித், கிருஷ்ணகிரி. தண்ணீரில் விழும் ஒரு பொருள் தனது எடைக்கு சமமான நீரை இடம் மாற்றினால், அது மிதக்கும் ; ஒரு பொருளின் எடை அது இடம்மாற்றும் நீரின் எடையைவிடக் குறைவாக இருந்தால், அது மூழ்கிவிடும். இது ஒரு அறிவியல் விதி. தண்ணீரைவிட காற்றின் அடர்த்தி குறைவு . எனவே, காற்றைக் கொண்டிருக்கும் பொருட்களும் தண்ணீரில் மிதக்கும் . கப்பலின் வடிவமைப்பு, அது தனது எடைக்கு சமமான கடல் நீரை இடம்மாற்றும் வகையில் உள்ளது . அதோடு , கப்பலுக்குள் காற்றோட்டமும் உள்ளது . இதனால் , கடலில் கப்பல் மிதக்கிறது . சிறிய இரும்பு ஆணி தமது எடைக்கு சமமான நீரை இடம்மாற்றும் வகையில் இல்லை . அவை தமது எடையை விடக் குறைந்த எடையிலான நீரையே இடம் மாற்றுகின்றன . அவற்றுக்குள் காற்றோட்டமும் இல்லை . இதனால் , அவை கடலில் மூழ்கிவிடுகின்றன. *ஆன் லைன் ஷாப்பிங் என்றால் என்ன? -எல். ஸ்ரீராம், திருச்சி. இணையம் மூலம் ஒரு பொருளை வாங்குவதும், விற்பதும் இன்றைய தேதியில் ஒரு ஆச்சரியகரமான விஷயமே அல்ல! தினம் ஒரு ஷாப்பிங் தளம் புதியதாய் உருவாகிக் கொண்டிருக்கிறது! ரயில் ,பிளைட் டிக்கெட் புக்கிங் முதல், காலணிகள், ஆடைகள், கண்ணாடிகள், கம்ப்யூட்டர் பாகங்கள், சுற்றுலா பயணங்கள், பூக்கள், மளிகை சாமான்கள், மொபைல்கள், புத்தகங்கள், பர்னிச்சர்கள் இப்படி ஆன் லைனில் ஷாப்பிங் பண்ணலாம். இச்சேவைகளை வழங்கும் அனைத்து தளங்களும் நம்பத்தகுந்தவைதானா? அவ்வாறு வாங்கிடும் அனைத்து சேவைகளும், பொருட்களும் சிறந்தவைதானா? இணையத்தில் கிடைக்கும் கவர்ச்சிகர சலுகைகள் நிஜம்தானா? இணையம் மூலம் பண பரிமாற்றம் செய்வது பாதுகாப்பானதுதானா? என்பதை எல்லாம் நீங்கள்தான் தீர்மானித்து கொள்ள வேண்டும். *நாக்கில் நரம்பு இல்லாம பேசாதே! என்கிறார்களே, நாக்கிற்கு நரம்பு உண்டா, இல்லை? -ஆர். நிஜா ராம்குமார், ஸ்ரீரங்கம். நம்முடைய நாக்கு என்பது, வாயின் அடியில் எலும்போடு இணைக்கப்பட்ட எலும்புத்தசை என்னும் வகையைச் சேர்ந்த இளஞ்சிவப்பு நிறத் தசை. இது வாயில் இடும் உணவை பற்கள் மெல்லுவதற்குத் ஏற்றார்போல் நகர்த்தியும், புரட்டியும், திருப்பியும் தரும் உறுப்பு. உணவின் சுவையை உணரும் முதன்மையான உறுப்பு நாக்கு. நாக்கு பலவாறு வளையவல்லது, எனவே பேசுவதற்கும் துணை செய்கின்றது. வாயில் ஊறும் உமிழ்ந்நீரினால் நாக்கு எப்பொழுதும் ஈரமாக இருக்கும். நாக்கின் மேற்புறத்தில் உள்ள நுண்புடைப்புகளில் நான்கு வகையான நுண்புடைப்புகள் உள்ளன. சுவையுணர் நுண்புடைப்புகளுக்கு நாமுடிப்பு என்று பெயர். நாவின் நுண்புடைப்புகளாகிய நாமுடிப்புகளின் நான்கு வகைகளில் ஒருவகையான நாமுடிப்பு மெல்லிய இழைபோல் உள்ளது ( டிடூடிஞூணிணூட்) , இன்னொருவகையான நாமுடிப்பு, நாய்க்குடை அல்லது காளான் போல் தலைப்பகுதி பருத்து உள்ளது (ஞூதணஞ்டிஞூணிணூட்). மூன்றாவது வகை நாமுடிப்பு ஒரு வளையம் போன்ற வடிவில் உள்ளது. இதுவே நாமுடிப்புகளில் பெரியது (ஞிடிணூஞிதட்திச்டூடூச்tஞு). நான்காவது வகை தட்டையாக உள்ளது (ஞூணிடூடிச்tஞு).மற்றபடி நாக்கில் நரம்புகள் கிடையாது. ****************************************************************************************************

குட்டீஸ் கேள்வி பதில் 24

குட்டீஸ் கேள்வி பதில் 24 ஜூலை20 *தண்ணீரில் இருக்கும் மீனை தரையில் போட்டால் துடிதுடித்து இறந்துவிடுவது ஏன்? - கூ. சீனிவாசன், திருச்சி. ஒவ்வொரு உயிரினமும் உயிர்வாழ இயற்கையாகவே சில உடலமைப்புடன் படைக்கப்பட்டுள்ளன. தரையில் ஒரு உயிரினம் உயிர்வாழ சுவாசிக்க வேண்டும். சுவாசிப்பதற்கு நுரையீரல் உறுப்பு வேண்டும். மீனுக்கு நுரையீரல் கிடையாது. அதனால் தரையில் மீனைப்போட்டால் சுவாசிக்க முடியாமல் இறந்துவிடுகிறது. ஒரு பூனையைப் பிடித்து நீரில் மூழ்கடித்தால் அது தண்னீரில் சுவாசிக்க முடியாமல் இறந்து விடும். ஒரு செடியை நிலத்திலிருந்து பிடிங்கி தரையில் போட்டால் அது விலங்குகள் போல உணவை தேடிசெல்ல முடியாமல் இறந்து விடும். இப்படி ஒரு மாற்றுச் சூழ்நிலையை சந்திக்கும் போது தாக்குப்பிடிக்க முடியாமல் விலங்குகளும் தாவரங்களும் இறந்துவிடுவது இயற்கை. *மழைக்காலங்களில் மட்டும் மரங்கள் அதிகம் துளிர்விடுவது எப்படி? - ச. சந்தானகிருஷ்ணன், ஓசூர். தாவரங்கள் உயிர்வாழ பூமியில் இருந்து நீரை உறிஞ்சுகின்றன. அப்படி உறிஞ்சும் நீரின் அளவை சம நிலையில் வைத்துக் கொள்வதற்காக, நீராவிப்போக்கு என்னும் செயலைச் செய்கின்றன. அப்படி சம நிலையில் வைத்து கொள்ளவில்லை என்றால் தாவரங்கள், மரங்கள் அழுகி இறந்துவிடும். மரங்கள் உறிஞ்சும் நீரை நீராவிப்போக்கை இலைகளின் வழியாக செய்கின்றன. வெயில் காலத்தில் மரத்தைச் சுற்றி எவ்வளவு நீர் ஊற்றினாலும் சுற்றுப்புறத்திலுள்ள வெப்பத்தின் காரணமாக, நீரின் அளவு அதைப் பாதிப்பதில்லை. அதோடு அதிக இலைகள் இருந்தால் இருக்கின்ற நீரையும் அவை வெளியேற்றிவிடும். ஆனால் மழைக்காலத்தில் சுற்றுப்புறத்திலும், வேருக்கு அடியிலும் தேங்கி நிற்கும் தண்ணீரை அவை வெளியேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. எனவே விரைவில் துளிர்த்து இலைகளின் வழியாக நீரை வெளியேற்றுகின்றன.அதனால் தான் வெயில் காலத்தைவிட மழைக் காலத்தில் மரங்கள் விரைவாகத் துளிர்க்கின்றன. *சாப்பிட்டப்பிறகு துõக்கம் வருவது ஏன்? எம்.சுப்ரமணி, அசநல்லிகுப்பம். பொதுவாக நம் உடலின் ரத்த ஓட்டத்தில் 40 சதவீதம் மூளைக்கு, அதாவது தலைப்பகுதிக்கு போய்விடும். சாப்பிட்டவுடன், செறிமானம், மற்றும் உட்கிரகித்தலுக்குகாக அதிக ரத்தஓட்டம் வயிற்றின் பக்கம் திருப்பப்படும். எனவே மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறையும். இதனால் ஒரு மந்தமான நிலை ஏற்படும். அதுவே துõக்கத்திற்கு அழைத்துச் செல்லும். சாப்பிட்ட பிறகு துõக்கம் வருவது இயல்பு. ஆனால் அதன் செரிமானத்தின் இறுதியில் உற்சாகம் சுறுசுறுப்பு போன்றவை வரவேண்டும். ஆனால், தினமும் சாப்பிட்டப்பிறகு துõக்கம் வரும் பழக்கம் இருந்தால் உடல் அளவில் சிறுகுறைபாடு இருப்பதாக அர்த்தம். சாப்பிட்டப்பிறகு, அரை ஸ்பூன் சீரகம், ஓமம், சோம்பு, ஏலக்காய் விதை, கிராம்பு ஆகியவற்றை கொஞ்சம் வாயில் போட்டு மென்று அதிலிருந்து வரும் சாற்றை எச்சிலுடன் விழுங்கினால் இவற்றிலுள்ள சூடான வீரீயம் உணவை வயிற்றில் அதிக நேரம் தேங்கவிடாமல் விரைவாக செரிக்க செய்துவிடும். அதனால் துõக்கம் வருவது தடுக்கப்படும். *******************************************************************************************************

குட்டீஸ் கேள்வி பதில் 23

குட்டீஸ் கேள்வி பதில் 23 *பாப் கார்ன் பொரிக்கும் போது மிஷினில் ஒவ்வொன்றும் துள்ளி துள்ளி குதிக்கிறதே, எப்படி? - எஸ். ராம்மோகன், தஞ்சாவூர். பாப் கார்ன் வாங்கினோமா, சாப்பிட்டோமா என்று இல்லாமல் அதை கூர்ந்து கவனித்து இப்படி ஒரு கேள்வி கேட்டிருக்கும் ராம்மோகனுக்கு பாராட்டு! இப்படிப்பட்ட சந்தேகங்கள் அறிவு வளர்ச்சிக்கு உதவும். கீப் இட் அப்! பாப் கார்ன் செய்ய பயன்படும் பொருள் நம்மூர் சோளம். சோளம் ஒரு மாவுப்பொருள். சோளம் கடினத் தன்மை அதிகமாக கொண்டிருக்கும். ஒரு சோளப் பொரியின் மையத்தில் கொஞ்சம் பருப்பும், அதைச் சுற்றி கடினமான மாவுப்பொருளும் இருக்கும். கொஞ்சம் ஈரப்பசையும் இருக்கும். இதை மிஷினில் சூடு ஏற்றும்போது, சோளத்தில் இருக்கும் ஈரப்பசை சூடாகி ஆவியாகும். அதே சமயம் விரிவடையும். மாவுப்பொருளைப் பிளந்துக்கொண்டு விரிவடையும்போது அந்த உந்து விசையினால் சோளம் வெடிக்கும். அதாவது துள்ளிக் குதிக்கும். *பாம்பு பால் குடிக்கும் என்பது உண்மையா, அங்கிள்? - ஆர். கவுசல்யா, நாமக்கல். பாம்புகள் பற்றிய பல நம்பிக்கைகள் உள்ளன. அதில் ஒன்று பாம்பு பால்குடிக்கும் என்பது. எப்போதாவது தாகம் எடுக்கும் போது பாம்புக்கு நீர் அருந்தும் பழக்கம் உண்டு. அப்படி ஒரு சமயத்தில் வேண்டுமானால் சிறிதளவு பாலை பருகலாம். மற்றபடி இயற்கையில் பாம்பு பால் குடிப்பது இல்லை. காரணம் பாம்புகளுக்கு நாக்கு பிளவுபட்டு இருக்கும். எனவே, பாம்பு பாலையோ நீரையோ நக்கிக் குடித்திட முடியாது. பாம்புக்கு அதன் தலையின் நுனிப் பகுதியில் மூக்கு உள்ளது. அது நீர்மப்பொருளில் வாயை வைக்கும் போது முதலில் நுழைவது மூக்காகத்தான் இருக்கும். மூக்கை நீரிலோ, பாலிலோ நுழைத்தாலே பாம்பு மூச்சுத் திணறிச் செத்துவிடும். பாம்பு இரையை எலி, தவளை போன்றவற்றை அப்படியே விழுங்குமேயன்றி மென்று சாப்பிடக் கூடிய அமைப்பு கிடையாது. அதனால் முட்டையையும் பாம்பு விழுங்குகிறதேயன்றி உடைத்து உறிஞ்சி குடிக்காது. *பிளாஸ்டிக் எதில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது? -நெடுஞ்செழியன், நெய்க்குப்பை. முதலில் பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டது தாவரங்களில் இருந்துதான். தாவர செல்லுளோஸ் சங்கிலி மூலக் கூறுகளிலிருந்து தயாரிக்கப்பட்டது. 1862ல் அலெக்சாண்டர் பார்க்ஸ் தயாரித்த பிளாஸ்டிக் பார்க்சைன் எனப்பட்டது. 1909ல் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது.1930ல் லியோ பேக்லேன்ட் என்ற பவுதிகவியலாளர் பெட்ரோலில் இருந்து பிரித்தெடுக்கும் முறையை கண்டார். அதை பேக்லைட் என்பர். பின் பாலிதீன், நைலான் அக்ரிலிக் கண்டுபிடிக்கப்பட்டு, இன்றுவரை நடைமுறையிலுள்ளது. 1941 ல் பாலிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்டது. பிளாஸ்டிக்கின் தனிச்சிறப்பு அதை எந்த வடிவத்திலும் உருவாக்கம் செய்ய முடியும். நடைமுறை வாழ்வில் பிளாஸ்டிக், விமானம் முதல் மனித உடல்பாகங்கள் வரை பயன் மேம்பாட்டிலிருக்கிறது. பிளாஸ்டிக் பொருட்களால் பூமிக்கும், நம் உடலுக்கும் கேடு ஏற்படும். பிளாஸ்டிக் பைகள் மக்குவதற்கு 100-1000 ஆண்டுகள் ஆகுமாம். எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ளுங்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. ***********************************************************************************************

குட்டீஸ் கேள்வி பதில் 22

குட்டீஸ் கேள்வி பதில் 22 ஜூலை6 *கனமான பொருள் தண்ணீருக்கு அடியில் கனம் குறைந்து காணப்படுவது எதனால்? - ஆர். ஸ்ரீநிதி ராம்குமார், ஸ்ரீரங்கம். நீருக்கு அடியில் ஒரு பொருள் இருந்தால் அதன் எடையில் மாற்றங்கள் இருக்கத்தான் செய்யும். காற்றின் அடர்த்தியைவிட நீரின் அடர்த்தி அதிகம். நீருக்கு மேலே தள்ளும் ஆற்றல் உண்டு. அதாவது மிதப்பு ஆற்றல் இயல்பாக இருக்கும். இதனால் கனமான பொருள் லேசாகத் தெரியும். குளத்தில் கழுத்தளவு தண்ணீரில் நிற்கும் போது உடல் முழுவதும் தண்ணீரில் இருக்கும். தலை மட்டும் மேலே இருக்கும். இந்நிலையில் உடல் பாகத்தை தண்ணீர் மேல் நோக்கி தள்ளும். இதனால் நம் உடல் லேசாகத் தெரியும். *இரவு நேரத்தில் மட்டும் துõக்கம் வருவது ஏன்? - எஸ். ஐஸ்வர்யா, கோபி. இயற்கையாகவே இரவு நேரத்தில் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள்தான் இதற்குக் காரணம். அதாவது, மனித உடலில் உறக்க – விழிப்புச் சுழற்சியைக் கட்டுப்படுத்தும் ‘மெலட்டோனின்’ எனப்படும் ஹார்மோன் இருள் கவிழும் இரவு நேரத்தில்தான் அதிகமாகச் சுரக்க ஆரம்பிக்கிறது. காலையில் சூரிய வெளிச்சம் பரவ ஆரம்பித்ததும், இந்த ‘மெலட் டோனின்’ சுரக்கும் அளவும் தானாகவே குறைய ஆரம்பித்து விடுவதால், பகற்பொழுதில் நல்ல விழிப்பு நிலையுடன் கூடிய புத்துணர்வு தொடர்கிறது. ஆனால், இதைத் தவிர்த்தும் பகல் வேளையில் துõக்கம் வருவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. உட ல் களைப்பாக இருக்கும் சமயத்திலோ அல்லது நன்றாகச் சாப்பிட்டு முடித்த பிறகோ, சுகமான துõக்க உணர்வு ஏற்படும். ஆரோக்கியமான உடல்வாகு கொண்ட அனைவருக்கும் ஏற்படும் இயல்பான நிலைதான் இது. *போனை எடுத்தவுடன் ஹலோ எனக் கூறுவது ஏன்? - பா. கவிபாரதி, அந்தியூர். எல்லாரும் போனில் உரையாடும் போது முதல் வார்த்தை ஹலோ சொல்வது பழக்கமாகிவிட்டது. ஆனால், இந்த சொல் எப்படி வந்தது என்பதற்கு ஒரு சம்பவம் இருக்கிறது. கிரகாம் பெல் போனை உருவாக்கி இருந்தாலும், இந்த சொல்லிற்கு சொந்தக்காரர் எடிசன் . கிரகம் பெல்லின் அல்லது தொலைபேசியில் உரையாடிய முதல் வார்த்தை ‘Mணூ. ஙிச்tண்ணிண, ஞிணிட்ஞு டஞுணூஞு. ஐ தீச்ணt tணி ண்ஞுஞு தூணித.‘ வாட்சன் உன்னை பார்க்க வேண்டும் இங்கே வா என்பதே.’ பணிபுரியும் ஓரிடத்தில் இருவர் பேச எண்ணும் போது எப்படி மற்றொருவருக்கு புரியும். ஒருவர் அழைப்பை ஏற்படுத்தும் போது ஒரு மணி போல சத்தமிடும் அமைப்பை திட்டமிட்டிருந்தனர் . ஆனால், எடிசன் தொலைபேசி இணைப்புகள் வழங்க இருந்த நிறுவன அதிபருக்கு ஒரு கடிதம் எழுதினார். அழைப்பு மணிக்கு மாற்றாக ஹலோ என்ற வார்த்தையை ஏன் பாவிக்க கூடாது? அது 10 ல் இருந்து 20 அடிகள் வரை கேட்க கூடியது எனக் கூறியிருந்தார். அது முதல் ‘ஹலோ’ வார்த்தை பிரபலமானது. அகோய் என்ற சொல்லே ஹலோ வர முதல் பாவனையில் இருந்தது . ஆனால் ஆதி காலங்களில் ஹெலோ சொல் பலரை சத்தமாக அழைப்பதற்கு பாவிக்கப்பட்டுள்ளது. ********************************************************************************************************

குட்டீஸ் கேள்வி பதில் 21

குட்டீஸ் கேள்வி பதில் 21 *சுனாமி வருவதை முன்கூட்டியே விலங்குகள் அறியும் என்பது உண்மையா? - கு.ரம்யா கலைவாணி, திருச்சி. சுனாமி, பூகம்பம் போன்றவற்றை பறவைகளும் விலங்குகளும் உணர்ந்துகொள்கின்றன என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இவற்றிற்கு எல்லாம் விஞ்ஞானப்பூர்வமான ஆதாரம் இல்லை. சீனா, ஜப்பான், இந்தோனிஷியா போன்ற நில நடுக்கம் அதிகம் ஏற்படக்கூடிய நாடுகள் பூகம்பம் வருவதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் ஆற்றல் விலங்குகளுக்கு உண்டு என்று நம்புகின்றன. விலங்குகள் உண்பது உறங்குவது எல்லாம் தரையில்தான். அவை தரைமீதுதான் காதை வைத்துக்கொண்டு உறங்கும். அதனால் பூமியில் ஏற்படும் மெல்லிய அதிர்வுகளைக்கூட அவற்றால் உணர்ந்துகொள்ள முடிகிறது என்கிறார்கள். ரயில் தண்டவாளத்தில் காதை வைத்துக்கொண்டு கேட்கிறபோது துõரத்தில் வரும் ரயிலின் ஓசையைக் கேட்க முடிகிறது போல் தொலைவில் ஏற்படும் நிலநடுக்க ஓசையை விலங்குகளால் அறியமுடிகிறது என்று சொல்லப்படுகிறது. இந்த விலங்குகளைப்போலவே கற்கால மனிதனும், இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே அறிந்து கொண்டு இடம்மாற்றம் செய்தான் என்றும் கூறப்படுகிறது. *விசிறி கொண்டு விசுறும்போது காற்று நன்றாக வீசுவது எப்படி? - எஸ். ஆகாஷ், திருப்பூர். அடிக்கடி கரன்ட் கட் ஆவதால் மின் விசிறி இயங்காமல், புழுக்கத்தில் விசிறி காற்றில் இளைப்பாறும் போது இப்படி ஒரு கேள்வி கேட்க நினைத்தாயா, ஆகாஷ்! நாம் கையில் விசிறியை வைத்துக்கொண்டு அப்படியும் இப்படியுமாக அசைக்கும் போது நம்மை சுற்றி உள்ள குறைந்த அளவுள்ள காற்று அகற்றப்படுகிறது. அதாவது வெளியேற்றப்படுகிறது. அதனால் நம்மை சுற்றி காற்று இல்லாத வெற்றிடம் ஏற்படுகிறது. அந்த வெற்றிடத்தை நோக்கி, அதிக அளவு உள்ள காற்று வேகமாகப் பாய்ந்து வருகிறது. அவ்வாறு வருகிற காற்றின் குளுமையில்தான் அப்பாடா காற்று சுகமாக இருக்கு என்கிறோம்! பொதுவாக வெற்றிடத்தை நோக்கிக் காற்று வீசும் என்பது விதி! *விமானத்தில் பயணம் செய்வோரின் பேனாவிலிருந்து மை தானாகவே வெளியேறுவது எப்படி? - த. திவ்யா, பாண்டமங்கலம். பூமியிலிருந்து உயரமான இடத்துக்குச் செல்ல செல்ல பேனாவில் இருந்து மை கசியத்தான் செய்யும். இதற்கு காரணம் உயரம் கூட கூட அங்கு நிகழும் அழுத்தம் குறையும். ஒரு குறிப்பிட்ட அளவில் அடைக்கப்படும் ஒரு பொருளின் திண்மை, அந்தந்த இடத்தில் இருக்கும் அழுத்தத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பது விஞ்ஞான கோட்பாடு. எனவே கீழே அதிக அழுத்தத்தில் நிரப்பப்பட்ட பேனாவின் மை, உயரத்தில் குறைந்த அழுத்தத்தில். திண்மை குறைந்து கசிகிறது. ********************************************************************************************************

20

20 ஜூன்22 மெட்டல் டிடெக்டர் எப்படி செயல்படுகிறது? - கா. தாமரைச்செல்வன், திட்டை. முக்கியமான அரசு அலுவலகங்கள், பஸ், ரயில், விமான நிலையங்களில் நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தி இருப்பார்கள். இந்த வழியின் வழியே செல்பவர்கள் வெடிகுண்டுகளையோ, ஆயுதங்களையோ வைத்திருந்தால் கண்டுபிடித்துவிடலாம். போலீசார் கையில் நீள்வட்டவடிவமான கருவி வைத்திருப்பார்கள். இதுவும் ஒருவகை மெட்டல் டிடெக்டர் கருவிதான். இதை ஒருவரின் உடல் அருகில் கொண்டு சென்றால், அவர் வைத்திருக்கும் பைகளின் மீது காட்டுவதன் மூலம் அவரிடம் ஆபத்தான பொருட்கள் ஏதும் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்கலாம். ஒருவர் மறைத்து வைத்திருக்கும் உலோகத்தை மெட்டல் டிடெக்டர் எப்படி கண்டுபிடிக்கிறது என்றால், ஒரு காந்தத்துண்டின் அருகே குண்டூ சியோ இரும்பு பொருளோ அருகே கொண்டு சென்றால் அதை காந்தம் ஈர்க்கும். காந்தத்தின் சுற்றுப்புறத்தில் உருவாகும் காந்தப்புலத்தால் இந்த ஈர்ப்புத்தன்மை உருவாகிறது. மெட்டல் டிடெக்டர் கருவிகளில் மின்சாரம் செல்லும் சர்க்யூட் பாதைகள் மிகவும் நுட்பமான வகையில் அமைக்கப்பட்டிருக்கும். காந்தப்புலங்களில் மிகவும் நுணுக்கமாக ஏற்படும் பாதிப்புகளைக்கூட உணர்ந்து எச்சரிக்கை ஒலி எழுப்பும் வகையில் அந்தக்கருவி தயார் செய்யப்பட்டிருக்கும். கையடக்கமாக உள்ள மெட்டல் டிடெக்டரில் காயில் எனப்படும் இரண்டு கம்பி சுருள்கள் இருக்கும். இவை இரண்டும் ஒரே சக்திகொண்ட காந்தப்புலங்களை உருவாக்கும் திறன்கொண்டிருக்கும். இந்தக்கருவியின் அருகே ஒரு உலோகப்பொருள் வந்தால், ஒரே வகையான ஈர்ப்புத்தன்மையை கொண்டு அந்தக் காந்தப் புலங்களின் சமநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. அது மின்கம்பிச் சுருளுக்குக் கடத்தப்பட்டு எச்சரிக்கை ஒலி எழுப்பும். *நம் உடலில் எத்தனை ஆயிரம் வியர்வை சுரப்பிகள் உள்ளன? - மதி. தேவதர்ஷன், கயத்துõர். நம் உடலில் வெப்பம் அதிகமானால், அதை கட்டுப்படுத்தி ஒரே சீராக வைத்துக்கொள்ள ஏற்படுவதுதான் வியர்வை. உடலின் வெப்பத்தை 85 சதவீதம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது இந்த வியர்வைதான். உடலில் எங்கெல்லாம் சருமம் இருக்கிறதோ அங்கெல்லாம் வியர்வை சுரப்பிகளும் இருக்கும். வியர்வை என்பது பெரும்பாலும் தண்ணீர்தான். அதனுடன் சில ரசாயனங்களையும் கழிவுப் பொருட்களையும் உடல் வெளியே தள்ளுகிறது. இந்த வியர்வை, சருமத்தில் 20 லட்சத்தில் இருந்து 50 லட்சம் <நுட்பமான துவாரங்கள் மூலம் வழிகிறது. இந்த நுண்ணிய துவாரங்கள் உடல் முழுவதும் பரவியுள்ளன. *ரயில் செல்லும் வழியில் ஙி/ஃ என்று ஒரு போர்டு எழுதிவைத்துள்ளார்களே, ஏன்? முகமது அசாருதீன், வல்லம். ரயில் பயணங்களில் வேடிக்கைப் பார்ப்பது எல்லாருக்கும் பிடிக்கும். அந்த வேடிக்கை பார்த்ததில் அர்த்தமுள்ள ஒரு கேள்வியை கேட்டிருக்கும் அசாருதீனுக்கு ஒரு பாராட்டு! தண்டவாளம் செல்லும் பாதையில் இரு பக்கங்களில் இரும்பு கம்பியில் மஞ்சள் நிறத்தில் சதுரவடிவில் ஒரு போர்டை பொருத்தி அதில் ஙி அல்லதுஙி/ஃ என்று எழுதி இருப்பார்கள்.இதில் ஙி என்பது விசில் ஒலி எழுப்பவும் என்ற பொருள் தரும். ஃ என்பது லெவல் கிராசிங் என்று பொருள் தரும். அதாவது லெவல் கிராசிங் வருகிறது, ஆதலால், இந்த இடத்தில் இருந்தே ஹாரன் எழுப்பவும் என்று பொருள். இந்த போர்டு லெவல் கிராசிங் இருக்கும் துõரத்தில் இருந்து 250 மீட்டர் துõரத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருக்கும். ****************************

19

19 ஜூன்8/ *ஸ்னுõக்கர் விளையாட்டுபற்றி சொல்லுங்க அங்கிள்! - வி. சுப்ரமணியம், பி.கொமாரபாளையம். ஸ்னுõக்கர் என்னும் மேடைக் கோல்பந்தாட்டம் என்பது ஒரு கம்பள விரிப்பு கொண்டு மூடப்பட்டுள்ள, நான்கு புறங்களிலும் பக்கவாட்டில் துளைகளைக் கொண்டுள்ள, ஒரு பச்சை நிற மேசையின் மீது விளையாடும் ஒரு கோல் விளையாட்டாகும். இந்த விளையாட்டில் ஒரு கோல் கொண்டு பந்துகளை வீழ்த்த வேண்டும். ஒரு வெள்ளை மற்றும், ஒரு மதிப்பெண் கொண்ட பதினைந்து சிவப்பு பந்துகள், வெவ்வேறான கலரில் ஆறு பந்துகள், மஞ்சள் (2 மதிப்பெண்கள்), பச்சை (3), பழுப்பு (4), நீலம் (5), இளஞ்சிவப்பு (6) மற்றும் கறுப்பு (7)ஆகியவற்றைக் கொண்டது. ஒரு விளையாட்டு வீரர் மேடைக் கோல்பந்தாட்டத்தில், கோல்பந்தைப் பயன்படுத்தி, சிவப்பு மற்றும் வண்ணப் பந்துகளைச் செலுத்தி, எதிராளியை விடவும் அதிகமான மதிப்பெண்கள் எடுத்தால் வெற்றி பெற்றவராவார். பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளால் இந்தியாவில் <கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொதுவாகக் கருதப்படும் விளையாட்டு இது. சீனாவில் <இந்த விளையாட்டு புகழ் பெற்று வருகிறது.19ம் நுõற்றாண்டின் பிற்பகுதியில்தான் மேடைக் கோல்பந்தாட்டம் உருவானதாகப் பொதுவாக கருதப்படுகிறது. *கம்ப்யூட்டர் கீ போர்டில் எழுத்துகள் வரிசைப்படி இல்லையே, ஏன்? - டி. சிவகாமசுந்தரி, ஈரோடு. கீ போர்டில் எழுத்துகள் டைப் செய்ய வசதிக்கேற்றவாறு அமைக்கப்பட்டுள்ளன. அதிகமாக பயன்படும் எழுத்துகள் விரைவாகவும், எளிதாகவும் டைப் செய்ய விரல்களுக்கு எட்டும்படிஅமைத்திருக்கிறார்கள். அதிகமாக பயன்படும் எழுத்துகள் கீ போர்டில் இரண்டாவது வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வரிசை எழுத்துகள் மீதுதான் டைப் செய்யும் விரல் முனை சாதாரண நிலையில் இருக்கும். அதிகம் பயன்படாத எழுத்துகள் மேல் வரிசையிலும், அரிதாக பயன்படும் எழுத்துகள் கீழ் வரிசையிலும் அமைக்கப்பட்டுள்ளன. டைப் செய்வோர் எல்லாம் இந்த வகை அமைப்பில் பழக்கப்பட்டுவிட்டதால் பழைய முறையே பயன்பாட்டில் இருந்துவருகிறது. எதிர்காலத்தில் திருத்தம்பெற்ற புது கீ போர்டுகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. *கண்ணாடிப் பொருட்கள் கீழே போட்டால் உடைந்து விடுவது எதனால்? -எஸ்.எம். முகேஷ், அரையபுரம். ஒரு பொருளில் அடங்கி இருக்கும் அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளின் பிணைப்பு ஆற்றலுக்கு ஏற்ப அப் பொரும் கடினமாக அல்லது மென்மையாக இருக்கும். ஒரு பொருளின் இருக்கும் அணுக்கள், மூலக்கூறுகள் தமக்குள்ளே இருக்கும் இணைப்புகளை விட்டுவிடாமல் இணைந்தபடியே இடப்பெயர்ச்சியாகும் தன்மை கொண்டிருந்தால், அப்பொருள் மீது செலுத்தப்படும் வெளிவிசையைத் தாங்கிக் கொள்ளும். அதனால் உடையாமல் இருக்கும். கண்ணாடிப் பொருட்களைப் பொறுத்தவரை அதில் பலவகைப்பட்ட அணுக்கள் இருக்கின்றன. அந்த அணுக்கள் ஒன்றுடன் ஒன்றாக உறுதியுடன் பிணைக்கப்பட்டுள்ளன. இந்த அணு பிணைப்புகள் வெளிவிசை அல்லது அழுத்தத்தின் காரணமாக சிதைந்தால், அந்த அணுக்கள் இடம் பெயர்ந்து மற்ற அணுக்களுடன் மீண்டும் இணைப்பைப் பெறமுடிவதில்லை. எனவேதான் கண்ணாடிப் பொருள்கள் எளிதில் உடைந்து விடுகின்றன. *******************************************************************

18

18 ஜூன்1 *கிரிக்கெட்டில் சில தடவை கேட்ச் பிடித்தவர்களை ‘சப்’ என்று சொல்கிறார்களே. ‘சப்’ என்றால் என்ன என்று சொல்லுங்கள் அங்கிள்? -ஸ்ரீகர்.ர.ராவ், திருச்சி. ‘சப்’ என்பதன் முழுமை‘சப்ஸ்ட்டியூட்’ ஆகும். அதற்கு ‘மாற்று’ என்று பொருள். கிரிக்கெட் போட்டியின் போது 11 வீரர்கள் இருப்பர். ஆட்டத்தின் போது ஆடும் 11 வீரர்களில் யாரேனும் ஒருவருக்கு அடிபட்டாலோ (அ) சோர்வுடன் விளையாட முடியாதவர்களுக்கு பதிலாக மாற்று வீரராக ஒருவர் களமிறக்கப்படுவார். அவரை நாம் ‘சப்’ என்று அழைக்கிறோம். அவரை பீல்டிங் மற்றும் பைரன்னராகப் பயன்படுத்துவர். அவரால் பந்து வீசவோ, பேட்டிங் செய்யவோ முடியாது. இந்த மாதிரி ‘சப்ஸ்ட்டியூட்’ வீரர்கள் அனைத்து விளையாட்டுகளிலும் இருப்பர். *வியர்ப்பது ஏன்? வியர்வை சுரபிகள் பற்றி சொல்லுங்க அங்கிள்! - ஆர். ஜெயப்பிரியா, கோபி. வியர்வை என்பது, வியர்த்தல் செயல் மூலம் உடலிலிருந்து தோல் வழியாக வெளியேற்றப்படும் ஒரு திரவம். < மனிதர்களைப் பொறுத்தவரை வியர்த்தல் என்பது உடற் தோலின் மேற்பரப்பில் இருந்து வியர்வை ஆவியாகும்போது, அது ஆவியாவதற்குத் தேவையான வெப்பத்தை உடலிலிருந்து எடுத்துக் கொள்வதால் உடல் குளிர்ச்சியடைகிறது. இதனால், கோடை காலத்தில் அல்லது வேலை செய்வதன் மூலம் உடற் தசைகள் சூடேறும் போது வெப்பம் உயராமல் தடுப்பதற்காக கூடுதலான வியர்வை சுரக்கப்படுகின்றது. தோலில் நுண்ணிய துவாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு துவாரத்தின் கீழும் ஒரு வியர்வை சுரப்பி இருக்கிறது. இதைத் தவிர அபாக்ரின், செபாஷயஸ் சுரப்பிகளும் உள்ளன. அபாக்ரின் சுரப்பிகள் அக்குள்களிலும், ரோமம் வளரும் பகுதிகளிலும் உள்ளன. இவை ஒரு வித திரவங்களை ரோமங்கள் மூலம் சுரக்கும். செபாஷயஸ் சுரப்பிகள் உள்ளங்கை, கால் தவிர எல்லா இடத்திலும் இருக்கிறது. தலையில் உள்ள வியர்வை சுரப்பிகள் சிபம் எனும் எண்ணை திரவத்தை சுரக்கின்றன. *சுமோக் டிடெக்டர் எப்படி தீ யை கண்டுபிடிக்கிறது? - அபிராமி, மயிலாடுதுறை. சுமோக் டிடெக்டர் ( ண்ட்ணிடுஞு ஞீஞுtஞுஞிtணிணூ) என்பது குறிப்பிட்ட பகுதியில் புகை இருப்பதைக் கண்டறியப் பயன்படும் ஒரு கருவி ஆகும். இக்கருவி புகையை உணர்ந்தறிவதன் மூலம் தீப்பிடித்திருப்பதைக் கண்டறிகிறது. அலுவலகங்கள் , வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்ற பொதுக் கட்டடங்களில் பொருத்தப்படும் சுமோக் டிடெக்டர் கருவி புகையை உணர்ந்தவுடன் அக் கட்டிடத்தின் தீத்தடுப்புத் தொகுதிக்கு மின் குறிப்பலைகளை அனுப்பும். இதன் மூலம் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு கட்டடத்தில் உள்ளவர்கள் உடனடியாகவே கட்டிடத்தை விட்டு வெளியேற உதவுகிறது. சிறிய வட்டத்தட்டுப் போலிருக்கும் இக்கருவி கட்டடங்களின் உட்கூரைகளில் குறிப்பிட்ட இடங்களில் பொருத்தப்படுகின்றன. தீ பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமன்றி, புகைத்தல் தடை செய்யப்பட்டுள்ள இடங்களில், புகைப்பவர்களைக் கண்டுபிடித்துத் தடுப்பதற்கும் இக்கருவிகள் உதவுகின்றன. இது உயிர்களின் பாதுகாப்புத் தொடர்பான விஷயம் என்பதால் , இக்கருவிகளுக்கு தொடர்ச்சியான மின்சாரம் வழங்கப்பட வேண்டும். ***********************************************************************************

குட்டீஸ் கேள்வி பதில் 17

குட்டீஸ் கேள்வி பதில் 17 மே 25/ *சிம் கார்டுகளில் 16 ‘கே’ என்று முன்பு குறிப்பிடுவார்கள். இப்போது 64 ‘கே’ என்று குறிப்பிடுகிறார்கள். இந்த கே எதை குறிக்கிறது? - ஆர். செல்வேந்திரன், காரைக்கால். சிம் கார்டுகளில் ‘கே’ (ஓ), அதன் அளவைக் குறிக்கும் சொல்லாகும். ‘கே’ என்பது கிலோ பைட்டின் சுருக்கம். 16ஓ கொண்ட சிம் கார்டுகளில் 125 போன் நம்பர் அதன் பெயர்களை ஸ்டோர் செய்யலாம். அதே போல் 64ஓ என்றால் 500 நம்பர்களை ஸ்டோர் செய்துகொள்ளலாம். இந்த அளவுகளைப் பொறுத்துதான் எஸ்எம்எஸ்கள், போன் புக், செக்யூரிட்டி கீக்களை பயன்படுத்த முடியும். மேலும் இப்போது வரும் போன்களில் இவற்றை ஸ்டோர் செய்வதற்கு சிம் கார்டுகள் தவிர போன்களில் உள்ள மெமரிகள் மற்றும் தனியாக இணைத்து பயன்படுத்தும் ‘மெமரி கார்ட்’களிலும் ஸ்டோர் செய்யலாம். இதனால் இப்போது சிம் கார்டில் கொடுக்கப்படும் ‘கே’ அளவுகளை யாரும் பார்ப்பது இல்லை. *பாலுõட்டிகளில் மிகச் சிறியவை எது? - எம். திருப்பதி, கிருஷ்ணகிரி. உலகில் உள்ள பாலுõட்டிகளில் மிகச்சிறியது பம்பல்பீ வவ்வால்.இது மூன்று செ.மீ நீளம் கொண்டது. இது தன் உடல் எடையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக உண்ணக்கூடிய அதிசய உயிரினம். மேலும் இவைகளின் உணவு முறைகளை வைத்தும் இரண்டு பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்று பழங்கள், பூக்கள் மற்றும் பூக்களின் குளுகோஸ், மகரந்தத் துõள் ஆகியவற்றை உண்டு வாழக்கூடியவை. மற்றது சிறிய பூச்சிகள் வண்டுகள் சிறிய வகை பாலுõட்டிகள் சிறிய பறவைகள் ஈக்கள் கொசுக்கள் தவளை மற்றும் மீன்கள் ஆகியவற்றை உண்டு வாழுகின்றன. * மனித மூளையின் எடை என்ன? சராசரியாக எவ்வளவு இருக்க வேண்டும்? -ப. ஜெயப்பிரியா, புவியரசி, வரிச்சிக்குடி. ஒவ்வொருவருக்கும் மூளையின் எடை சற்று மாறுபடும். சராசரியாக ஒரு ஆணின் மூளை 1.5 கிலோகிராம் எடை உடையது. பெண்ணின் மூளை ஆணின் மூளையின் எடையை விட குறைவாகவே இருக்கும். மனிதன் உயிருடன் இருக்கும்போது, மூளையின் வெளிப்பரப்பு அடர்த்தியான சாம்பல் நிறத்திலும், உட்பகுதி மஞ்சள், வெள்ளை நிறமாகவும் காணப்படுகிறது. கோடிக்கணக்கான நரம்பிழைகள் வெண்பொருளையும், பெருமூளைப் புறணியையும் இணைக்கின்றன. 20 வயதான ஆணின் மூளையில் உள்ள நரம்பிழைகளின் மொத்த நீளம் 1,76,000 கிலோமீட்டர். அதே வயதில் பெண்ணின் மூளையில் உள்ள நரம்பிழைகளின் நீளம் 1,49,000 கிலோமீட்டர் இருக்குமாம்! ********************************************************************************************