சனி, 19 ஜனவரி, 2013

குட்டீஸ் கேள்வி பதில் 10

குட்டீஸ் கேள்வி பதில் 10 மார்ச்30/ *உலகின் மிக நீளமான பாம்பு எது, எங்கு உள்ளது? - கே. எழிலரசன், ஆற்காடு. உலகில் இப்போது உயிருடன் உள்ள பாம்புகளில் மிக நீளமான பாம்பு என்ற சாதனையை, அமெரிக்காவின் ஓகைய்யோ மாநிலத்தின் தலைநகரான கொலம்பஸ்சில் (இணிடூதட்ஞதண் -Oடடிணி) உள்ள மிருகக்காட்சி சாலையில் வளர்க்கப்பட்டு வரும் ஒரு மலைப்பாம்பு பெற்றுள்ளது. இந்தப் பாம்பு 300 பவுண்டு எடையும், 24 அடி நீளமும் கொண்டதாக காணப்படுகிறது. 15 வயதுடைய இந்த மலைப்பாம்பு ஊடூதஞூஞூதூ என அழைக்கப்படுகிறது. கடந்த 2005ம் ஆண்டில் உலகின் மிக நீளமான பாம்பாக 32 அடி நீளம் கொண்ட ஒரு மலைப்பாம்பு காணப்பட்டது. இந்தப்பாம்பு இந்தோனேசியாவில் கொல்லப்பட்டது. இதன் பின்னர் உலகில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் மிக நீளமான பாம்பு என்ற சாதனை இந்தப் பாம்புக்கு கிடைத்துள்ளது. இது 2011ம் ஆண்டிற்கான உலகசாதனை புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. *மருந்து சீட்டுகளில் ஆர்எஸ் என குறிப்பிடுவதேன்? - ராம. மம்தாராம், டால்மியாபுரம். சமீபத்தில் டாக்டரை பார்த்து வந்திருக்கீங்களா மம்தாராம்? இப்ப உங்க ஆரோக்கியம் எப்படி இருக்கு? சரி, நீங்கள் கேட்ட சந்தேகத்திற்கு வருகிறேன். பொதுவாக எல்லா டாக்டர்களும், தாங்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை எழுதும் சீட்டில் கீது என்று எழுதுவது வழக்கம். சில டாக்டருடைய மருந்து சீட்டில் கீது அச்சிடப்பட்டிருக்கும். உயிர் காக்கும் மருத்துவம், தொழில் மட்டுமல்ல அது... கடவுளுக்கு நிகரானவர்களாக டாக்டர்களை ஜீபிடர் கடவுளாக பாவித்தனர் பண்டைய ரோமானியர்கள். கீ என்பது லத்தீன் சொல்லான ணூஞுஞிடிணீணூஞு என்பதிலிருந்து வருகிறது. அதாவது, இதை பரிந்துரைக்கிறேன் எடுத்து கொள்ளலாம் என்பதாகும். சின்ன து, கடவுளின் அரசர் அதை ஏற்பதற்கான குறீயீடு. அதாவது அந்த ஜீபிடர் கடவுளே மருத்து சீட்டை எழுதுவதாகும். அவரின் கருணையோடு நோய் குணமாகும் என்பது அவர்களது ஐதீகம். இது இன்று வரை தொடர்ந்தும் வருகிறது. * அமரர் கல்கி பற்றி சொல்லுங்க அங்கிள்! -எம். நிகேஷ்குமார், காட்டூர் புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் கல்கி. இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள் , கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நுõல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகவும் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமிபுதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. கல்கி, 1899ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புட்டமங்கலம் என்னும் ஊரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பப் பள்ளி படிப்பைத் தனது கிராமத்தில் முடித்த அவர், திருச்சியில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். ஒத்துழையாமை இயக்கம் துவங்கிய போது, அதன் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட கல்கி, தனது பள்ளிப்படிப்பைப் பாதியில் துறந்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். அவர், ‘நவசக்தி’ என்னும் பத்திரிகையின் துணை ஆசிரியராக பணியாற்றினார். அவருடைய முதல் புத்தகம் 1927ல் வெளியானது. சமஸ்கிருதமும், தியாகராஜரின் தெலுங்கு கீர்த்தனைகளும் பிரபலமாக இருந்து வந்த அக்காலக்கட்டத்தில் தமிழிசைக்காக, சதாசிவம் மற்றும் எம். எஸ். சுப்புலட்சுமியுடன் இணைந்து பாடுபட்டார் கல்கி. தமிழ் இசை குறித்த கல்கியின் சிந்தனைகள், ‘தரம் குறையுமா’ எனும் புத்தக வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. ************************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக