சனி, 19 ஜனவரி, 2013

குட்டீஸ்÷ கள்வி பதில் 12

குட்டீஸ்÷ கள்வி பதில் 12 ஏப்ரல்13/ *கப்பல் மிதப்பது எப்படி? - ரா. வீரபாண்டியன், புதுக்கோட்டை. கப்பல் தண்ணீரில் மிதப்பது ஆர்க்கிமடிஸ் விதி படியாகும். ஒரு கப்பல் தண்ணீரில் இருக்கும்போது அதன் உடற்பகுதி ஓரளவு வரை தண்ணீரில் அமிழ்ந்திருக்கும். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும் வரை அதன் உடற்பகுதி தண்ணீரில் அமிழும். 10 ஆயிரம் டன் எடையுள்ள ஒரு கப்பலின் உடற்பகுதி, அதே எடையுள்ள தண்ணீரை இடம்பெயரச் செய்யும். பொதுவாக ஒரு கப்பலின் எடையைக் கூறுவதற்கு, அது இடம்பெயரச் செய்யும் தண்ணீரின் எடையைக் கூறுகிறார்கள். அதாவது ஒரு கப்பலின் டிஸ்பிளேஸ்மென்ட் 10 ஆயிரம் டன் என்று கூறுவார்கள். அமிழ்ந்துள்ள கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் தண்ணீர் அழுத்துகிறது. தண்ணீரில் கிடப்பு நிலையில் இருந்து ஏற்படும் அழுத்தங்கள் கப்பலின் உடற்பகுதியை அழுத்துகின்றன. ஒன்றையொன்று அமிழ்த்தி சமநிலையை ஏற்படுத்துகின்றன. இதனால் கப்பல் தண்ணீரில் மிதக்கிறது. *சிவப்பு மலர் நீல நிறக்கண்ணாடியில் பார்த்தால் கறுப்பாகத் தோன்றுவது எவ்வாறு? சிவப்பு மலரிலிருந்து சிவப்பு ஒளிதான் வெளிப்படும். இந்த ஒளியை நீலநிறக்கண்ணாடி உட்கவர்ந்துவடும். ஏனெனில் நீலக்கண்ணாடி வழியாக நீலநிற ஒளி மட்டுமே ஊடுருவிச் செல்ல முடியும். சிவப்புநிற ஒளியை நீலநிறக்கண்ணாடி தடுத்துவிடுவதால் மலர் கருப்பாகத் தெரியும். *துõக்கத்தில் நடப்பது எப்படி? - ச. சரண்ராஜ், ஊத்துக்குளி. -வி. சுப்ரமணியம், பி. கொமாரபாளையம். துõக்கத்தில் மூன்று நிலைகள் இருக்கிறது. விழிப்பு நிலை, விழி அசைவுகளில்லாத துõக்க நிலை, விழி அசைவு துõக்க நிலை( இது பெரும்பாலும் கனவுகளுடன் தொடர்புடைய நிலை!). துõக்கத்தில் நடப்பது என்பது ‘மனிதர்களின் ஒருவகையான துõண்டப்பட்ட, குழப்பமான மனநிலை’ என மருத்துவர்கள் கருதுகிறார்கள். அறிவியல்பூர்வமா சொல்வது என்றால், துõக்கத்தில் நடப்பது விழிப்பு நிலை மற்றும் விழி அசைகளில்லாத துõக்க நிலையில் நடைபெறும் ஒரு செயல். சிலர் மட்டும் ஏன் துõக்கத்தில் நடக்கிறாங்க மத்தவங்க ஏன் நடக்கிறதில்லைங்கிற கேள்விக்கு இன்னும் திட்டவட்டமான பதில் இல்லை! பொதுவா துõக்கத்தில் நடப்பதற்க்கு, குடும்ப மரபணுவியல் சம்பந்தமான காரணங்களாக இருக்கலாமாம். பெரியவங்கள விட, குழந்தைங்கதான் பெரும்பாலும் துõக்கத்துல நடப்பாங்களாம். அதுக்கு காரணம், குழந்தைங்க துõங்கும்போது, ஆழமான விழி அசைவுகளில்லாத துõக்க நிலை நிலையில்தான் இருப்பாங்களாம். இந்த நிலையிலதான் துõக்கத்துல நடக்கிற செயல் நடக்கிறது. சரியான துõக்கமின்மை, ஜூரம், மன உளைச்சல், ஊக்க மருந்துகள் சாப்பிடுதல் காரணங்களால் துõக்கத்தில் நடப்பது சாத்தியமாகலாம். சரியான நேரத்தில் உறங்குவது, அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்காமல் இருப்பது. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உறங்குவது போன்றவற்றை கடைபிடித்தால் தவிர்க்கலாம். மிகவும் மோசமான நிலையில் உள்ளவர்களுக்கு மருந்துகளும் கொடுக்கப்படுகிறது! *லாப்ராடர் நாய் இனத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க, அங்கிள்! -ந. விக்னேஷ், வேலுõர். நாய் இனங்களில் லாப்ரடர் நாய் ஒரு வகை. கனடா, ஆஸ்திரேலியாவில் இந்த நாய்கள் மிக பிரபலம். ஆண் நாய் 27 முதல் 40 கி.கி எடையும் 56 முதல் 63 செ.மீ. நீளமும் கொண்டிருக்கும். பெண் நாய் 27 முதல் 35 கி.கி. எடையும் 54 முதல் 60 செ.மீ. நீளமும் கொண்டிருக்கும். கறுப்பு, மஞ்சள், சாக்லேட் நிறங்களில் இருக்கும். பழங்குடி இனத்தினர் வேட்டையாடுவதற்கும், மீன்பிடி தொழிலுக்கும் இந்த நாயை பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் நுரையீரல் புற்று நோயை கண்டறிய இவ்வகை நாய்களை பயன்படுத்தும் முயற்சிகளில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். ஜெர்மனியில் உள்ள ஸ்கில்லர் ஜோக் ஆஸ்பத்திரியின் நிபுணர்கள் இந்த ஆய்வு மேற்கொண்டனர். அவை தனது மோப்ப சக்தி மூலம் மனிதர்களின் மூக்கு வழியாக வெளியேறும் சுவாசத்தின் மூலம் நுரையீரல் புற்று நோயை கண்டறிய முடியும் என கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் நோய் அறிகுறி தொடங்கும் நிலையில் உள்ள 71 சதவீதம் பேரின் நுரையீரல் புற்று நோயை தெரிந்து கொள்ள முடியும். நுரையீரல் புற்று நோயை கண்டுபிடிக்க 2 ஜெர்மன்ஷெப்பர்டு, ஆஸ்திரேலியன் ஷெப்பர்டு, மற்றும் லாப்ராடர் ரக நாய்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். *******************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக