வெள்ளி, 8 அக்டோபர், 2010

தினமலர் பெண்கள் மலரில் வெளிவரும் மருத்துவத் தொடர்:

தினமலர் பெண்கள் மலரில் வெளிவரும் மருத்துவத் தொடர்:
டாக்டர் வேல்விழி நேர்காணல் மருத்துவக் கட்டுரைகள்:
தொகுப்பு தேவராஜன் பாகம் ... 3 ( 38ல் இருந்து 47 வரை)

சகல நோய் நிவாரணி பப்பாளி!

இது ஒரு பழந்தரும் மரமாகும். முருங்கை மரத்தைப் போன்று அதிக பலம் இல்லாத மரவகையைச் சேர்ந்தது. இதன் பூர்வீகம் மெக்சிக்கோ. தற்போது மேற்கிந்தியத் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது. இதன் விளைச்சல் காலம் பிப்ரவரி, மார்ச் மாதங்களும், மே முதல் அக்டோபர் வரையான மாதங்களும் என சொல்லப்படுகிறது. பப்பாளி காயாக இருக்கும் போது பச்சையாகவும், நன்கு கனிந்ததும் மஞ்சளாகவும் தோற்றமளிக்கும். விதைகள் கசப்பாக இருக்குமும். பார்ப்பதற்கு கரு மிளகு போன்றிருக்கும்.
இது மத்திய அமெரிக்காவிலிருந்து 16ம் நுõற்றாண்டில் டச்சு வணிகர்களால் இந்தியாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
மற்றவகை பழங்களைக்காட்டிலும் பப்பாளியில் குறைந்த அளவு கலோரி உள்ளது. மேலும் ஆப்பிள் ஆரஞ்சு பழங்களைவிட அதிகபடியான உயிர்ச்சத்துக்கள் பப்பாளியில் அதிகம் உள்ளது. இருப்பினும் ஏனோ மற்ற பழங்கள் பெறும் மதிப்பை அதிக சத்து இருந்தும், விலை மலிவாக இருந்தும் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் மதிப்பை பெறாமல் இருக்கிறது.
இதன் கனிகள், காய், விதைகள், இலை ,பால் மருத்துவ பயன் உடையது.
காய், பால் ருது உண்டாக்கி, சிறுநீர்ப் பெருக்கி, மலமிளக்கி.
பழம்: உரமாக்கி, சிறுநீர்ப்பெருக்கி, மலமிளக்கி.
100 கிராம் பப்பாளியில் உள்ள சத்துகள்:
39 கலோரி, கார்போஹைட்ரேட் 9.81 கிராம், சர்க்கரை சத்து 5.90 கிராம், நார்சத்து 1.8 கிராம், கொழுப்பு 0.14 கிராம்,புரதச்சத்து 0.61 கிராம், விட்டமின் எ 55 மி.கிராம், பி.கரோட்டீன் 276 மி.கிராம், தையமின் 0.04 மி.கிராம், ரிபோப்ளோவின் 0.05 மி.கிராம், நியாசின் 0.338 மி.கிராம், விட்டமின் பி6 0.1 மி.கிராம், கால்சியம் 24 மி.கிராம், இரும்பு சத்து 0.10 மி.கிராம், மெக்னீசியம் 10 மி.கிராம், பாஸ்பரஸ் 5 மி.கிராம், பொட்õசியம் 257 மி.கிராம், சோடியம் 3 மி.கிராம்.
மேலும் இதில் புரதங்களை சிதைக்கும் நொதி ( என்சைம்கள்) பப்பைன் இருக்கிறது. மாலிக் அமிலும், அஸ்கார்பின் அமிலம் உள்ளது. உடலுக்கு தேவையான அனைத்து உயிர்சத்துக்களும் நிறைந்த கொழுப்பு அற்றி உணவுப்பொருளமாகும்.
பப்பாளியினால் குணமாகும் நோய்கள்:
செரியாமையை நீக்கும்.
வயிற்றுப் புழுவை அழிக்கும்.
எலும்பு மூட்டுகள் வலியை ( அர்த்ரிட்டிஸ்) குணப்படுத்தும்.
ரத்தம் உறைதலை அகற்றும்.
தீப்பட்ட புண்ணை ஆற்றும்.
ரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்தும்.
மலச்சிக்கலை நீக்கும்.
மன அழுத்த நோயை குணப்படுத்தும்.
வீங்கிய நிணநீர் சுரப்பினை கரைக்கிறது.
கண்நோய்களை நீக்கும்.
பித்தப்பை கல்லை கரைக்கும்.
வாயு தொல்லையை போக்கும்.
ரத்த குழாய் தடிப்பை நீக்கும்.
இதயநோயைத் தடுக்கும்.
மூலநோயை போக்கும்.
தோல் நோயான காளான்சக பபையை குணமாக்கும்.
சுவாச கோளாரை போக்கும். கட்டிகள், புண்கள் குணமாகும்.
சிறுநீர்பை தாபிதம் குணமாகும்.
முகப்பொலிவை உண்டாக்கும்.
உடல்கொழுப்பை குறைத்து உடல் பருமனை குறைக்கும்.
பப்பாளியும் மருத்துவ குணங்களும்:
பப்பாளியில் விட்டமின் இ இருப்பதால் வயது முதிர்ச்சியினால் ஏற்படும் தோல் சுருக்கத்தை தடுத்து இளமையை தருகிறது.
பப்பாளியின் அதிக அளவு விட்டமின் சி இருப்பதால் மூட்டுவலி, இடுப்புவலி வராமல் தடுக்கிறது.
ப்பாளியின் நார்சத்து அதிகளவு இருப்பதால் தொடர்ந்து 4 வாரம் பப்பாளியை உண்டால் உடலில் மொத்த கொழுப்பில் 19.2 சதவீதத்தைக் குறைத்து அதிக உடல் எடையை குறைக்கிறது.
பப்பாளிச்சாறு கல்லீரல் புற்று நோயை தடுக்கிறது.
பப்பாளியில் நார்ச்சத்து, இரும்பு சத்து, விட்டமின் சி, பி கரோட்டீன், விட்டமின் இ இருப்பதால் புற்று நோய் தடுக்கிறது.
பப்பாளி விதையில் இருந்து எடுக்கப்படும் சத்து சிறுநீரக செயலிழப்பை தடுக்கிறது.
விட்டமின்கள் எ,சி, இ இருப்பதால் இதயநோயை வராமல் தடுக்கும்.
நரம்புகளை பலப்படுத்தி ஆண்மை தன்மையை அதிகரிக்கும்.
உடலில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். ஞாபகசக்தியை அதிகரிக்கும்.
பப்பாளியை தொடர்ந்து சாப்பிட நோய் எதிர்ப்ப சக்தியை அதிகரிக்கும். எந்த தொற்று நோயும் உடலை தாக்காது.
பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது. பப்பாளி மரத்தோலானது கயிறு தயாரிக்கவும், இலைகள் சோப்புக்கு மாற்றாகவும் சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஜாவா தீவு மக்கள் பப்பாளி பூக்களை சாப்பிடுகின்றனர்.
தேவராஜன்

வலிப்பைக் கட்டுப்படுத்தும் கொ ய்யா!


கொய்யா, இந்தியா முழுவதும் பயிராகும் சிறு மரம். இதில் வெள்ளை கொய்யா, சிவப்பு கொய்யா என்று இரு வகையுண்டு. இரண்டின் பயன், மருத்துவ குணங்களும் ஒன்றேயாகும்.
கொய்யா மரத்தின் இலை,காய், பழம், பட்டை, வேர் ஆகியவை மருத்துவ பயன் உடையவை.

* 100 கிராம் கொய்யாவில் உள்ள சத்துக்கள்

ஈரப்பதம் 77 முதல் 86 கிராம்
நார்ச்சத்து 2.8 முதல் 5.5 கிராம்
புரதம் 0.9 முதல் 1 கிராம்
கொழுப்பு 0.1 முதல் 0.5 கிராம்
சாம்பல் சத்து 0.43 முதல் 0.7 கிராம்
கார்போஹைட்ரேட் 10 கிராம்
கால்சியம் 9.1 முதல் 17 மி.கிராம்
பாஸ்பரஸ் 17.8 முதல் 30 மி.கிராம்
இரும்புசத்து 0.30 முதல் 0.70 மி.கிராம்
கரோட்டீன் 200 முதல் 400 ஐ.யு.
தையமின் 0.046 மி.கிராம்
ரிபோப்ளேவின் 0.03 முதல் 0.04 மி.கிராம்
நியாசின் 0.6 முதல் 1.068 மி.கிராம்
விட்டமின் பி3 40 ஐ.யு
விட்டமின் பி4 35 ஐ.யு
மேலும் இதில் டெர்பினாய்டுகளும் கேலிக் அமிலமும் உள்ளன.

மருத்துவ பயன்கள்

* கனிகள் : மல மிளக்கி. குளுமையுடன் வலிமை தரும். குடல் மற்றும் ஈறுகளின் ரத்தக்கசிவை தடுக்கும். தற்காலிக உணர்வின்மை, தலைசுற்றல், இளைப்பு ஆகியவற்றைக் குணப்படுத்தும். விந்து உற்பத்தியை அதிகப்படுத்தும். உடலில் உள்ள புழுக்களைப் போக்கும்.
* பட்டை : உடலில் உள்ள பாக்டீரியாவை போக்கும். காய்ச்சலை நீக்கும்.
குழந்தைகளின் வயிற்றுப் போக்கை நீக்கும்.
* இலை : இலையைக் குடிநீரில் போட்டுவைத்து அருந்த, மூளையில் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும். வலிப்பு நோயைப் போக்கும்.
இலையைக் கடித்து உண்ண பல்வலி தீரும். இலையை அரைத்து பற்றிட மூட்டுவலி, வாதம், புண் அடிப்பட்ட காயம் நீங்கும். இதன் இலையுடன் ஆடாதோடை இலை, மிளகு சேர்த்து குடிநீரில் இட்டு அருந்தினால் இருமல், ஆஸ்துமா தீரும்.

பயன்படுத்தும் முறை

கொய்யாப் பழத்தை கொட்டை நீக்கி வெல்லம் சேர்த்து அப்பம், தோசை, ரொட்டியுடன் உண்ணலாம்.
மலச்சிக்கல் தீர ஒரு துண்டு கொய்யாப் பழமே போதுமானது.
இலை பொடியை தேனுடன் சேர்த்து சாப்பிட வாந்தி தீரும்.
இதன் பட்டை, அதிக உதிரப்போக்கை தடுக்கும்.
மூளையில் நரம்பு மண்டல பாதிப்பால் தோன்றும் வலிப்பு நோயைக் குணப்படுத்த கொய்யாவைப் பயன்படுத்தலாம்.
காயை வாரம் இரண்டு முறை உண்ண மலச்சிக்கல் தீரும்.
உடல் பருமனை நீக்கவும், கொழுப்பு சத்தைக் குறைக்கவும் தினம் ஒரு கொய்யாவைத் தொடர்ந்து சாப்பிட ஒரு மாதத்தில் நல்ல பலனை பெறலாம்.
சீறுநீர நோயாளிகள் கொய்யாவைத் தவிர்ப்பது நலம்.

புற்றுநோய் வராமல் தடுக்கும் கேரட்!

தாவர தங்கம் என்று சிறப்பு பெயர் கொண்டது கேரட். இது சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கிழங்கு வகைகளில் ஒன்று. இதை பச்சையாகவும், சமைத்தும் உண்ணலாம். தென்மேற்கு ஆசியா, ஐரோப்பாவில் காடுகளில் காணப்பட்ட கிழங்கு வகை தாவரம் இந்த கேரட். இது இந்தியாவிலும் பயிரப்படுகிறது. இதில் சிவப்பு, வெள்ளை, மஞ்சள் நிறவகைகளும் உண்டு.
வேர், கிழங்கு உறுப்புகள் மருந்துவக்குணம் கொண்டவையாக உள்ளன.

ஊட்டச்சத்து மதிப்பு:
100 கிராம் கேரட்டில் அடங்கியுள்ள சத்துகள்:
சக்தி 41 கலோரி
கார்போஹைட்ரேட் 9 கிராம்
சர்க்கரை சத்து 5 கிராம்
நார்சத்து 3கிராம்
கொழுப்பு 0.2 கிராம்
புரதச்சத்து 1கிராம்
விட்டமின் ஏ 835 மி.கிராம்
பீட்டா கெரொடீன் 8285 மி.கிராம்
தையாமின் 0.04 மி.கிராம்
ரிபோளேவின் 0.05மி.கிராம்
நியாசின் 1.2 மி.கிராம்
விட்டமின் பி6 0.1மி.கிராம்
இரும்புசத்து 19 மி.கிராம்
விட்டமின்சி 7 மி.கிராம்
கால்சியம் 33 மி.கிராம்
மெக்னீசியம் 18 மி.கிராம்
பாஸ்பரஸ் 35 மி.கிராம்
பொட்டாசியம் 240 மி.கிராம்
சோடியம் 2.4 மி.கிராம்
மேலும் இதில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான அனைத்து உயிர்சத்துகளும் உள்ளது.
கேரட் வாங்கும் போது நல்ல ஆரஞ்சு நிறமான கேரட்டை வாங்குவது சிறந்தது. கேரட்டின் ஆரஞ்சு நிறத்திற்கு காரணம் அதிலுள்ள பீட்டா கெரோட்டீனாகும்.
மருத்துவ பயன்கள்:
கண்பார்வை கோளாறுகளுக்கு சிறந்தது.
கேரட் புற்றுநோயை வராமல் தடுக்கும். புற்று நோய் கிருமியை அழிக்கும்.
தோல் நோய்களான கரப்பான், உலர்ந்த தோல், காளாஞ்சகப்படை நோய்களில் தோலை பாதுகாக்கும்.
கேரட்டில் பீட்டா கெரோட்டீன் இருப்பதால் உடல் செல்கள் முதிர்ச்சியை தடுக்கும். எனவே வயது முதிர்தலை தடுத்து இளமையை தரும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு தினமும் 2 டம்ளர் கேரட் சாறு தொடர்ந்து தர அவர்களது நோய் எதிர்ப்ப சக்தி 70 சதவீதம் அதிகரிப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
இதய நோய்களை போக்கும்.
கேரட்டும் அதனால் தீரும் நோய்களும்:
அமிலத்தன்மை:
நெஞ்செரிச்சல், புளிஏப்பம் போக்கும். ரத்தத்தில் அமிலத் தன்மை, சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
முகப்பரு:
ரத்தத்தை சுத்திகரிக்கும். கல்லீரல் நஞ்சுகளை அகற்றி ரத்த அணுக்களை பலப்படுத்தும்.
ரத்தசோகை:
கேரட்டில் உள்ள மூலக்கூறுகள் மனித உடலின் ஹீமோகுளோபினை ஒத்துள்ளதால் ரத்தசோகையை தடுக்கும்.
ரத்தக்குழாய் சுவர் தடிப்பு:
ரத்தக்குழாய் சுவர்களில் அதிக அளவு கொழுப்பு படிவதால் இதயநோய், பக்கவாதம் ஏற்படுகிறது. ரத்தக்குழாய் சுவர்களில் படிந்துள்ள கொழுப்பை படியாமல் தடுக்கிறது. எனவே இதயநோய், பக்கவாதம் வரமால் தடுக்கப்படுகிறது.
புற்றுநோய்:
தினமும் உணவில் குறைந்தது ஒரு கேரட் உண்டு வந்தால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
கொலஸ்டிரால்:
கேரட்டில் பெக்டின் இருப்பதால் ரத்தத்தில் உள்ள கொழுப்புசத்தை குறைக்கிறது.
கண்நோய்கள்:
இதில் பீட்டா கெரோட்டீன் மற்றும் கண் நோய்களைத் தடுக்கும் எதிர்பு சக்திகள் இருப்பதால் கண்நோய்களுக்கு கேரட் சிறந்த உணவு பொருள்.
தோல் நோய்கள்:
கேரட்டில் விட்டமின் சி இருப்பதால் தோலை பலப்படுத்தி, பளபளப்பாக்கும்
கல்லீரல் நோய்கள்:
மஞ்சள்காமாலை, கல்லீரல் செயல் இழப்பு நோய்களுக்கு சிறந்த உணவாகும்.
பயன்படுத்தும் முறைகள்:
கேரட் சமைத்து பொரியல், கூட்டாக உண்ணலாம்.
கேரட் சாறு சிறந்த டானிக். வயதானவர்கள், குழந்தைகளுக்கு தினமும் ஒரு டம்ளர் öõடுக்க ஒரு மாதக்காலத்தில் உடல் பலப்படும்.
கேரட் ஊறுகாய், துவையலாக சாப்பிடலாம்.
வாரம் 2 முறை சிறுவர்களுக்கு சுண்டலில் கேரட் துருவல் சேர்த்து தரலாம்.
பச்சையாக கேரட்டை உண்பதால் ஒரு சதவீதம் பிடீட்டா கெரோட்டீன் தான் கிடைக்கம். ஆனால் கேரட்டை சாறாக்கி பருக நுõறு சதவீதம் பீட்டா கெரோட்டீன் உடலில் சேரும்.
உடற்பருமன் குறைய தினமும் வெறும் கேரட் சாறு சர்ககரை இல்லாமல் 3 மாதம் பயன்படுத்த உடல் மெலிவதுடன், முகம் பளபளப்பு தோல் பளபளப்பு பெறலாம்.
சர்க்கரை நோயாளிகள் இதை வாரம் ஒரு முறை பயன்படுத்தினால் மட்டும் போதும்.
அதிகளவு கேரட் பயன்படுத்தினால் தோல் ஆரஞ்சு நிறமடையும். அதிகளவு என்பது உடலுக்கு நல்லது என்பதற்காக 3 வேளையும் கேரட் உண்பது அல்லது வருடக்கணக்கில் அதிகம் உண்ணக்கூடாது. வாரம் 3 முறை உண்பது சிறந்தது.அளவாக உண்டு இதன் அதிக பயன்களை பெறலாம்.
கேரட் தீர்க்கும் நோய்கள்:
மலச்சிக்கல், கழிச்சல், கரப்பான், வலிப்பு நோய், வயிற்று பொருமல், இளநரை, முடி உதிரல், செரியாமை, மூட்டுவலி, கல்லடைப்பு, மஞ்சட்காமாலை, அதிக உடற்பருமன், வயிற்று புண், நடுக்குவாதம், கக்குவான், தோல் சுருக்கம், அம்மை, சிறுநீரக தாபிதம், வாய்க்குமட்டல், கல்லீரல் வீக்கம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, உயிர்சத்து குறைவு மேலும் கண்நோய்களை போக்கும்.
தேவராஜன்


சீறுநீரக கல்லை கரைக்கும் முள்ளங்கி!

இது கிழங்கு வகையைச் சேர்ந்தது. பொது வெப்ப நாடுகளில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் எல்லா பகுதியிலும் பயிரிடப்படுகிறது.
வகைகள்:
இதில் அளவு, நிறம், விளையும்காலம் பொருத்து வகைப்படுத்தப்படுகிறது. வெள்ளை, சிவப்பு, மஞ்சள் ந்த மூன்று வகைகள் தான் அதிகம் பயிரிடப்படுகிறது. ஆனால் இதன் பண்புகள் இந்த மூன்று வகைக்கும் ஒன்றேயாகும்.
பயன்படும் உறுப்புகள்:
இலை, கிழங்கு, விதை. இதில் இலை, கிழங்கு கார்ப்பு சுவையுடையது. விதை இனிப்பு சுவையுடையது.
ஊட்டச்சத்து மதிப்பு:
100 கிராம் முள்ளங்கி கிழங்கில் அடங்கியுள்ள சத்துக்கள்:
கலோரி16 கே, கார்போஹைட்ரேட் 3.40 கிராம், சர்க்கரை1.86 கிராம், நார்ச்சத்து1.6கிராம், கொழுப்புச்சத்து 0.10கிராம், புரதச்சத்து0.68 கிராம், விட்டமின் பி1 0.012மி.கிராம், விட்டமின் பி20.039 மி.கிராம், விட்டமின் பி3 0.254 மி.கிராம், விட்டமின்பி5 0.165 மி.கிராம், விட்டமின்பி6 25 மி.கிராம், விட்டமின்பி914.8 மி.கிராம்,கால்சியம் 25 மி.கிராம், இரும்புசத்து 0.34 மி.கிராம்,மெக்னீசியம்10 மி.கிராம், பாஸ்பரஸ்233மி.கிராம், ஜிங் 0.28 மி.கிராம்.
100 கிராம் உலர்ந்த இலையில்:
கலோரி 287, புரதம்28.7 கிராம், கொழுப்பு5.2 கிராம், கார்போஹைட்ரேட் 49.6 கிராம், நார்ச்சத்து 9.6 கிராம், சாம்பல்சத்து 16.5 கிராம்.
தாது உப்புக்கள்:
கால்சியம் 1913 மி.கிராம், பாஸ்பரஸ் 261 மி.கிராம், இரும்புச்சத்து 35.7 கிராம், சோடியம் 956 மி.கிராம், பொட்டாசியம் 4348 மி.கிராம்.
முள்ளங்கி போக்கும் நோய்கள்:
வாத நோய்கள், கரப்பான், வயிற்றெரிச்சல், குத்தல், குடல் பருமன், இருமல், கபநோய்கள், தலைவலி, நீரேற்றம், பல்போய், குன்மம், இரைப்பு, மூலக்கடுப்பு முதலியன.
முள்ளங்கி இலை:
முள்ளங்கி இலையால் வாதமும், பித்தமும் பெருகும். வயிற்றில் இருக்கும் புழு, மார்பெரிச்சல் உண்டாகும். வயிற்று நோய் தீரும்.
சிறுநீர்ப் பெருக்கி, மலமிளக்கி, கோழையகற்றி.
கிழங்கு:
சிறுநீர்ப்பெருக்கி, இசிவகற்றி, பித்தநீர்ப்பெருக்கி
விதை:
வயிற்றிலுள்ள வாயுவை அகற்றும். சிறுநீர்ப்பெருக்கி, கோழையகற்றி, மலமிளக்கி, ஆண்மை பெருக்கி, வெப்பமுண்டாக்கி, பசித்துõண்டி.
முள்ளங்கியின் மருத்துவப் பயன்கள்:
முள்ளங்கி கிழங்கு இது உடலைப்பலப்படுத்தும்.
சீரணத்தை துõண்டி பசியை அதிகப்படுத்தும்.
பித்தநீர் சுரப்பை அதிகரித்து கல்லீரல், குடலை துõண்டி பசி, சீரணத்தை அதிகப்படுத்துவதுடன் மலமிளக்கியாக செயல்பட்டு மலச்சிக்கலை போக்குகிறது.
முள்ளங்கி சிறுநீரக கல்லை கரைக்கிறது. இதற்கு சிறுநீர்ப்பெருக்கி செய்கை இருப்பதால் கல்லடைப்பை நீக்கி சிறுநீர்ப் பெருக்கை அதிகப்படுத்தி சிறுநீர் தொற்று நோய் போக்குகிறது.
பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று நோய் நுண்கிருமிகளுக்கு எதிராக செயல்பட்டு அவற்றால் ஏற்படும் நோய்களை நீக்குகிறது.
முள்ளங்கி இலை ஆஸ்துமாவை குணப்படுத்தும். இலையை பருப்புடன் சேர்த்து உண்ண சிறுநீர்ப்பெருக்கை அதிகப்படுத்தும். கழிச்சலை போக்கும்.
முள்ளங்கி விதை செரியாமையை போக்கும். வயிற்று உப்பிசத்தை போக்கும். நெஞ்சுசளியை நீக்கும். விந்து ஞூணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும். ஆண்மையை பெருக்கும்.
பயன்படுத்தும் முறைகள்:
முள்ளங்கி இலையை சுத்தம் செய்து இடித்து சாறு பிழிந்து அருந்த இருமல், சளி, மூச்சுத்திணறல் குணமாகும்.
முள்ளங்கி இலையை நீர் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி அருந்த கழிச்சல் நீங்கும்.
முள்ளங்கி இலையை இடித்து சாறுபிழிந்து அதனுடன் சீரகத்துõள் சேர்த்து அருந்த வாயுதொல்லை நீங்கும்.
முள்ளங்கி கிழங்கை இடித்து சாறுபிழிந்து அருந்த கல்லடைப்பு தீரும்.
அதிக உடல் பருமன் உள்ளவர்கள், பெருவயிறு நோயாளிகள், சிறுநீர் சரியாக பிரியாமல் அவதிப்படுபவர்கள் தினமும் முள்ளங்கி சாறை 30 மில்லி முதல் 60 மில்லி வரை ஒரு மாதம் தொடர்ந்து உண்ண நல்ல பலனை பெறலாம்.
முள்ளங்கி விதையை பொடித்து தினமும் ஒரு டஸ்பூன் வீதம் இளநீரில் கலந்து அருந்த விந்து நஷ்டம், ஆண்மையின்மை முதலியன குணமாகும். ஆண்மையை பெருக்கும். உடல் பலப்படும்.
தேவராஜன்


மண்ணீரலைக் காக்கும் உருளைக்கிழங்கு!


பூமியின் கீழ் விளையக்கூடிய ஒரு கிழங்கு வகையைச் சேர்ந்தது உருளைக்கிழங்கு. குளிர்ப்பிரதேசங்களில் நன்றாய் விளையக்கூடியது. இது இந்தியா முழுமைக்கும் கிடைக்கிறது.
பயன்படும் உறுப்பு: இலை, கிழங்கு
செய்கை:
இலை இசிவகற்றி. சுவை இனிப்பு.
கிழங்கு: இது மலத்தை இளகச் செய்வதால் மலமிளக்கி, சிறுநீரை மிகுதியாகப் போக்குவதால் சிறுநீர்ப் பெருக்கி,பாலுõட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகப்படுத்துவதால் பால் பெருக்கி, நரம்புகளுக்கு சிற்றயர்வை உண்டாக்கி, உற்சாகத்தை உண்டு பண்ணுவதால் நரம்பு வெப்பகற்றி.
ஊட்டச்சத்து மதிப்பு:
உருளைக்கிழங்கில் பல இன்றியமையாத உயிர்ச்சத்துக்கள், தாது உப்புக்கள் உள்ளன.
150 கிராம் எடையுள்ள ஒரு உருளைகிழங்கில் தோ லுடன் 27 கிராம் விட்டமின் சி( 45 சதவீதம் ஒரு நாளைக்குத் தேவைப்படுகிறது), 620 மி.கிராம் (18 சதவீதம் தினசரி தேவைப்படுகிறது) விட்டமின் பி6 0.2 மி.கிராம்( ஒரு நாள் தேவை 10 சதவீதம் தேவைப்படுகிறது) கிடைக்கிறது. மேலும் இதில் தையமின், ரிபோலேவின், நியாசின், போலேட், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, நாகச்சத்து கிடைக்கிறது.
தோலுடன் கூடிய 100 கிராம் பச்சை உருளைகிழங்கில் உள்ள சத்துக்கள்:
கலோரி 77, கார்போஹைட்ரேட் 19 கிராம், ஸ்டார்ச் 15 கிராம், நார்சத்து 2.2 கிராம், கொழுப்பு 0.1 கிராம், புரதச்சத்து 2 கிராம், நீர்சத்து 75 கிராம், தையாமின் 0.08 மி.கிராம், ரிபோளேவின் 0.03 மி.கிராம், நியாசின் 1.1 மி.கிராம், விட்டமின் பி6 0.25 மி.கிராம், விட்டமின் சி 20 மி.கிராம், கால்சியம் 12 மி.கிராம், இரும்புசத்து 1.8 மி.கிராம், மெக்னீசியம் 23 மி.கிராம், பாஸ்பரஸ் 57 மி.கிராம், பொட்டாசியம் 421 மி.கிராம், சோடியம் 6 மி.கிராம் உள்ளது.
மருத்துவ பயன்கள்:
இது மண்ணீரலை பலப்படுத்தி உடலை தேற்றும்.
வயிற்றில் உள்ள வாயுவை அகற்றி வயிற்று வலி, வீக்கத்தை போக்கும்.
கிழங்கில் அட்ரோபின் சிறிது உள்ளதால் வயிற்றில் உள்ள அமிலசுரப்பை குறைக்கும். எனவே, வயிற்று எரிச்சல் குறையும்.
இதில் உள்ள ஸ்டார்ச் நார்சத்தாக செயல்படும்.
புற்று நோயை தடுக்கும்.
ரத்தத்தில் கொழுப்புசத்தை குறைக்கும்.
சிறிதளவு உண்டாலே வயிற்றை நிரப்பி, உடற்பருமனை குறைக்கும்.
உடல் பலப்படுத்துவதோடு, வளர்ச்சியை அதிகப்படுத்தும்.
நாட்பட்ட இருமல் நோயால் துõக்கமின்றி அவதிப்படுபவர்கள் இதன் இலைசாற்றை உண்டு வர துõக்கம் வரும்.
இதை வேகவைத்து தோல் நீக்கி நெய்யில் வறுத்து புசிக்க உடல் எடை கூடுவதுடன் முகம் பொலிவடையும், அழகை தரும்.
இது சிறந்த கற்ப மருந்தாகும். இதை தொடர்ந்து ஒரு மண்டலம் புசிக்க நரை, திரை, மூப்பு இன்றி நீண்டகாலம் இளமையாக வாழ்வதுடன் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.
குறிப்பு: சர்க்கரை நோயாளிகள், வாத நோயாளிகள் இதை தவிர்ப்பது நன்று.
தேவராஜன்


கல்லீரலுக்கு கவசம் கத்தரிக்காய்

இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவினைச் சார்ந்த குறுஞ்செடி. வெப்ப மண்டல பகுதிகளில் அதிகமாக பயிரிடப்படுகிறது. குளிரான பகுதிகளில் கண்ணாடி கூரைவேய்ந்த அறைகளில் வளர்க்கப்படுகிறது. இந்தியாவின் எல்லாப் பகுதியிலும் பயிரிடப்படும் முக்கிய சமையல் காய் தாவரமாகும்.
இது எளிதாக கிடைக்கக்கூடியது. எல்லா பருவங்களிலும், எல்லா இடங்களிலும் ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடியது.
ஏழை, பணக்காரர் என இரு தரப்பினரும் பயன்படுத்தக்கூடிய விலை மலிவான காய்ஆகும். ஆனால் இதன் ஊட்டச்சத்து மதிப்போ மிக அதிகம்.
இதில் உயிர் வாழ இன்றியமையாத அனைத்து உயிர்சத்துக்கள் நிரம்பியுள்ளது. இதில் விட்டமின் ஏ2, விட்டமின் பி அதிகம் இருப்பதால் ஏழையின் முக்கிய உணவாக கருதப்படுகிறது.
மருத்துவ பயன் உடைய பகுதிகள்:
இலைகள், கனி, விதை, வேர்.
ஊட்டச்சத்து மதிப்பு:
100 கிராம் பச்சை கத்தரிக்காயில் உள்ள சத்துகள்:
சக்தி 20 கே கலோரி, கார்போஹைட்ரேட் 5.7 கிராம், சர்க்கரைச்சத்து 2.35 கிராம், நார்ச்சத்து3.4 கிராம், கொழுப்புச்சத்து 0.19 கிராம், தையாமின் 0.0039 மி.கிராம், ரிபோளேவின் 0.037 மி.கிராம், நியாசின் 0.649 மி.கிராம், பேன்டோதெனிக்அமிலம் 0.281 மி.கிராம், விட்டமின் பி6 0.084 மி.கிராம்,விட்டமின் பி6 22 மி.கிராம், விட்டமின்சி 2.2மி.கிராம், கால்சியம் 9 மி.கிராம், இரும்புசத்து 0.24 மி.கிராம், மெக்னீசியம் 14 மி.கிராம், பாஸ்பரஸ் 25 மி.கிராம், பொட்டாசியம் 230 மி.கிராம், துத்தநாகம் 0.16 மி.கிராம், மாங்கனீசு 0.25 மி.கிராம்.
மேலும் நிகோடினிக் அமிலம், லுஸைன், அர்ஜினைன், டையோஸ் ஜெனினி, டிரான்ஸ் கெபெய்க் அமிலம், டேடுரடியோஸ், சொலசோடைன் போன்ற மருத்துவ குணங்களுக்கு அடிப்படையான வேதிப்பொருள்கள் உள்ளன.
மருத்துவப் பயன்:
கத்தரியின் இலை ஆஸ்துமா, மூச்சு குழல் நோய்களை போக்குகிறது.
கத்தரியின் இலை சிறுநீர்கழிப்பின் போது ஏற்படும் வலியை குணப்படுத்தும்.
கனிகளில் புரதம், கார்போஹைடிரேட் மற்றும் விட்டமின்கள் ஏ,பி1,பி2,சி காணப்படுகின்றன. விட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கு அழற்சியினைப் போக்க வல்லது.
கனிகள் கொழுப்பு சேர்வதை கரைக்கிறது.
கத்தரிக்காய் கல்லீரல் நோய்களுக்கு நல்ல மருந்தாகும்.
அதிகரித்த ரத்த அழுத்தத்தை கத்தரிக்காய் குறைக்கிறது.
ரத்தத்தில் கொழுப்பு அளவை குறைக்கிறது.
மூல நோய்க்கு மேல் பூச்சாக பயன்படுகிறது.
நசுக்கப்பட்ட கனி வெங்குரு, வெயில் காரணமாக முகம்கன்றி சிவந்திருத்தலை போக்க வல்லது.
வேர் ஆஸ்துமா மற்றும் மூக்கில் தோன்றும் புண்களுக்கு மருந்தாகிறது.
வேரின் சாறு காதுவலி போக்க பயன்படுகிறது.
ஜெர்மனி நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கத்தரியின் மருத்துவப் பயன்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளன. சுத்த ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்க உதவுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
புற்றுநோய்யை தடுக்கும்.
மலேரியாவால் வீக்கமடைந்த மண்ணீரலை கத்தரிக்காய் பலப்படுத்தி வீக்கத்தை குறைக்கும்.
துõக்கமின்மை தீர வேகவைத்த கத்தரிக்காயை தேனுடன் அருந்த நன்கு ஆழ்ந்த நித்திரை கிடைக்கும்.
வாயு தொல்லை, சளி தீர கத்தரிக்காயை வேகவைத்து உப்பு, பெருங்காயம் சேர்த்து அருந்தவும்.
பசியை அதிகரிக்கவும், சீரண சக்தியை துõண்ட வேகவைத்த கத்தரிக்காயை தக்காளியுடன் சூப்பாக்கி மிளகுதுõள், உப்பு சேர்த்து அருந்த பசி அதிகரிக்கும்.
சீனமருத்துவத்தில் கத்தரிக்காயின் எல்லா பகுதிகளும் குடல் ரத்தக்கசிவை நிறுத்த பயன்படுத்தப்படுகிறது.
கத்தரிக்காயில் உள்ள மருத்துவ பயன்மிக்க வேதிப்பொருட்கள் புற்றுநோய், வலிப்பு நோய் வராமல் தடுக்கும் சிறப்பு குணமுடையது.
குறிப்பு: அதிக அமிலத்துவம் உடையவர்கள், கருத்தரித்த பெண்கள், சிறுநீரக கல் நோயாளிகள் கத்தரிக்காயை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
தேவராஜன்


ஆரோக்கிய கருவூலம் பீட்ருட்!

நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பீட் ருட் பயிரிடப்படுகிறது. பாபிலோனியர்களால் முதலில் பயன்படுத்தப்பட்டது. கிரேக்க, ரோமானியர்கள் இதன் வேரை மருத்துவத்திற்காகவும், இலையை காய்கறியாகவும் பயன்படுத்தினர்.
பீட்ருட்டில் பல வகைகள் காணப்படுகிறது. வெள்ளை மற்றும் சிவப்பு வகைகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
பயன்படுத்தப்படும் பகுதி: கிழங்கு, இலை
செய்கை: குளிர்ச்சி உண்டாக்கி, உடல் வலிமையாக்கி, புற்று நோய்க்கு எதிரானது, ருதுஉண்டாக்கி, மலமிளக்கி, பசித்துõண்டி, காமம் பெருக்கி.
தாது உப்புக்கள்: பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், சல்பர், அயோடின், இரும்புச்சத்து,மாங்கனீசு, குளோரின், தாமிரச்சத்து.
உயிர் சத்துகள்: தையாமின், ரிபோளேவின், நியாசின்,விட்டமின் சி,பி6, கரோட்டின், ருபிடகியம், சீசியம், அமினோ அமிலங்கள், பீட்டைன்.
ஊட்டச்சத்து மதிப்பு:
100 கிராம் பச்சை பீட்ருட்டில் அடங்கியுள்ள ஊட்டச்சத்து.
சக்தி43 கலோரி, நீர்சத்து87.58 கிராம், புரதம்1.61 கிராம், கொழுப்பு0.17 கிராம், நார்சத்து 2.8 சதவீதம், கார்போஹைட்ரேட் 9.56 சதவீதம், உயிர்சத்துஏ 2 மி.கிராம், பீட்டா கரோட்டின் 20 மி.கிராம், தையாமின்0.031 மி.கிராம், ரிபோளேவின்0.040 மி.கிராம், நியாசின் 0.334 மி.கிராம், விட்டமின்பி50.155 மி.கிராம், விட்டமின்பி6 0.067மி.கிராம், போலேட் 109 மி.கிராம், விட்டமின்சி 4.9 மி.கிராம், கால்சியம் 16 மி.கிராம், பொட்டாசியம் 325 மி.கிராம், பாஸ்பரஸ் 40 மி.கிராம், இரும்புசத்து 0.80 மி.கிராம், மெக்னீசியம் 23 மி.கிராம், துத்தநாகம் 0.35 மி.கிராம்.
பீட்ருட் தீர்க்கும் நோய்கள்:
முகப்பரு, ரத்தசோகை, புற்றுநோய், மூலம், கழிச்சல், மாதவிடாய் வலி, மஞ்சள்காமாலை, வாய்குமட்டல், மலச்சிக்கல், ரத்தப்புற்றுநோய், உடல் சோர்வு, கல்லடைப்பு, பித்தபைகல், மூச்சுதிணறல், தலைவலி, கண்பார்வை குறைவு, பொடுகு,அதிக ரத்த அழுத்தம், அதிக கொழுப்புசத்து, இதயநோய்கள்.
பயன்படுத்தும் முறைகள்:
வயிற்றுப்புண்: அல்சர் குணமாக தினமும் 30 மில்லி பீட்ருட் சாறை 2 ஸ்பூன் தேனுடன் கலந்து வெறும் வயிற்றில் அருந்த வயிற்றுப்புண், வயிற்று வலி தீரும். தொடர்ந்து ஒரு மாதம் அருந்த முழுவதும் குணமடையலாம்.
வாந்தி: தினமும் பீட்ருட் சாறு 50 மில்லி, எலுமிச்சை சாறு 15 மில்லி சேர்த்து 15 நாட்கள் அருந்த வாந்தி, பித்த வாந்தி, வாய்க்குமட்டல், கழிச்சல் தீரும்.
சிறுநீரக கல்லடைப்பு: பீட்ருட், கேரட், வெள்ளரி சாறு தலா 30 மில்லி எடுத்து தினமும் ஒரு வேளை என ஒரு மாதம் பருக சிறுநீரக, பித்தப்பை கல் கரையும்.
உடல் எடை அதிகரிக்க: பீட்ருட் சாறு 30 மில்லி, கேரட் சாறு 30 மில்லி, பால் 40 மில்லி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து தொடர்ந்து ஒரு மாதம் ஒருவேளை பருகி வந்தால் உடல் எடை ஒரு மாதத்தில் 3 முதல் 4 கிலோ அதிகரிக்கும். உடல் சோர்வு, அசதி நீங்கும். உடலில் ரத்த அணுக்கள் கூடம். தோல், முகம் பொலிவடையும்.
மலச்சிக்கல்: பீட்ருட் வாரம் 3 முறை சாறாக பருகி வர சிறுகுடல், பெருங்குடல் சுருங்கி விரிதல் அதிகரித்து மலச்சிக்கல் போக்கும். ரத்த மூலம் தீரும்.
புற்றுநோய் ஒழிக்கும்: பீட்ருட்டில் ப்ளேவினாய்டு இருப்பதால் புற்றுநோய் அழிக்கும்.
கொழுப்புசத்து குறைய: இதில் நைட்ரேட் இருப்பதால் இதயத்திற்கு செல்லும் ரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து ரத்த குழாய் விரிவடைய செய்து இதயத்தை பலப்படுத்துகிறது.
கல்லீரலை பலப்படுத்த: இதில் பீடெய்ன் இருப்பதால் கல்லீரல் பாதிப்பு, மது அருந்துவோர் இதை உணவில் அதிகம் பயன்படுத்த பீட்டெய்ன் வேதிப்பொருளானது கல்லீரல் செல்களை துõண்டி கல்லீரலை பலப்படுத்தும்.
9.புற்றுநோய்க்கு: இதில் பீட்டாசையனில் வேதிப்பொருள் இருப்பதால் இது உடலில் உள்ள தீங்கு தரும் நச்சுபொருட்களை நீக்கி புற்றுநோயுடன் போராடும்.
உடல் வலிமையாக: பீட்ருட்டில் உள்ள இரும்புசத்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். முகத்தை பொலிவடைய செய்யும். நகங்கள், தோல், முடியை பலப்படுத்தும். வயது முதிர்வை தடுத்து இளவயது தோற்றத்தை தரும்.
பால் உணர்வை அதிகரிக்க: பீட்ருட்டில் போரான் என்ற வேதிப்பொருள் இருப்பதால் மனித உடலில் ஆண் பெண் இருபாலாருக்கும் பால் உ<ணர்வை துõண்டும் ஹார்மோன்கள் உற்பத்தியை அதிகரிக்கும்.
மன அழுத்தம் தீர: மூளையை துõண்டி, மூளையில் உள்ள நச்சு பொருட்களை அகற்றும். இதனால் மன அழுத்தம், குழப்பம் தீர்ந்து புத்துணர்வோடு, சிரித்த முகத்துடன் இனிதாக வாழலாம்.
கண் பார்வைக்கு: விட்டமின் ஏ இருப்பதால் பார்வை குறைவை நீக்கும்.
குறிப்பு: சர்க்கரை நோயாளிகள் வாரம் ஒரு முறை மட்டும் பயன்படுத்தவும்.
தேவராஜன்


முதுமை தடுக்கும் முட்டைக்கோஸ்

உலக முட்டைக் கோஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 17ம் தேதி கொண்டாடப்படுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்திற்கு முட்டைக்கோஸின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது.
இந்தியாவில் மலைப்பாங்கான இடங்களில் அதிகம் வளர்க்கப்படுகிறது.
பயன்படும் உறுப்பு: விதை, இலை
வகைகள்: பச்சை, சிவப்பு என 2 வகை. இரண்டுமே மருத்துவப்பயன் உடையது.
செய்கை: புற்று நோய்க்கு எதிரானது.
கிருமி நாசினி.
வயது முதிர்வை தடுக்கும்.
மலமிளக்கி.
100 கிராம் முட்டைக்கோசில் உள்ள ஊட்டச்சத்துகள்:
சக்தி 25 கலோரி, கார்போஹைட்ரேட் 5.8 கிராம், சர்க்கரை 3.2 கிராம், நார்சத்து2.5 கிராம், கொழுப்பு0.1 கிராம், புரதம்1.28 கிராம், தையாமின் 0.061 மி.கிராம், ரிபோளேவின் 0.040 மி.கிராம், நியாசின் 0.234 மி.கிராம், பான்டோதெனிக் அமிலம் 0.212 மி.கிராம், விட்டமின் பி6 0.124 மி.கிராம், போலேட் 53 மி.கிராம், விட்டமின்சி 36.6 மி.கிராம், கால்சியம் 40 மி.கிராம், இரும்புசத்து 0.47 மி.கிராம், மெக்னீசியம்12 மி.கிராம், பாஸ்பரஸ் 26 மி.கிராம், பொட்õசியம் 170 மி.கிராம், துத்தநாகம் 0.18 மி.கிராம் என்று முட்டைக்கோசில் உடல் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் இன்றியமையாத அனைத்து தாது உப்புக்கள், உயிர்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.
மருத்துவப் பயன்கள்:
முட்டைக்கோசில் அதிகளவு கந்தகசத்து மற்றும் குளோரின் சத்து இருப்பதால் இதற்கு வயிறு, உணவு பாதையின் சவ்வு மற்றும் சுவரில் உள்ள நஞ்சை அகற்றி குடலை சுத்தப்படுத்தும். ஆனால், முட்டைக்கோசை பச்சையாக உப்பின்றி உண்ண மட்டுமே இந்தப் பலனை பெறலாம்.
முட்டைக்கோசில் குடல் புண்ணுக்கு எதிரான உயிர்சத்து இருப்பதால் வயிற்று புண்ணை குணப்படுத்தும். சமைத்து உண்டால் விட்டமின் சத்து அழிந்துவிடும்.
முட்டைக்கோசில் டார்ட்ரானிக் அமிலம் இருப்பதால் அதிக உடல் பருமனை குறைக்கிறது. டார்ட்ரானிக் அமிலமானது நாம் உண்ணும் சர்க்கரை மற்றும் மாவுப் பொருள் கொழுப்பாக மாறுவதை தடுத்து உடல் பருமனை குறைக்கிறது.
முட்டைக்கோசில் அதிகளவு பீட்டாகரோட்டின் இருப்பதால் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள கண்ணில் புரை வளர்தல் தடுக்கப்படுகிறது.
முட்டைக்கோசை கர்ப்பிணிகள் தவறாது வாரம் 2 முறை உணவில் சேர்த்துக்கொள்ள குழந்தையின் தண்டுவடம் எவ்வித குறையுமின்றி குழந்தை பிறக்கும்.
முட்டைக்கோசில் உள்ள போலிக் அமிலம் தண்டுவட என்புகள் வளர்ச்சியை பலப்படுத்தும்.
முட்டைக்கோசில் அதிகளவு பீட்டாரோட்டில் இருப்பதால் இவை நம் உடலில் ரத்த ஓட்டத்தில் தீங்கு விளைவிக்கும் வயது முதிர்வுவை அதிகப்படுத்தும் செல்லை அகற்றி இளமை தரும். எனவே வயது முதிர்வு, நரை, உடல் சோர்வை தடுக்க உணவில் அதிகளவு முட்டைக்கோசை பயன்படுத்தணும்.
முட்டைக்கோசில் உள்ள கந்தகசத்து, ஹிஸ்டிடின், கரோட்டின் இவை மூன்றுமே புற்று நோய் நம் உடலில் அணுகாதவாறு தடுக்கும்.
முட்டைக்கோசில் உள்ள இண்டோல்3 கார்பினால் புற்றுநோய் செல்கள் வராமல் தடுக்கிறது.
முட்டைக்கோஸ் மூட்டுவலி, வாத நோய்களை நீக்குகிறது. இதில் உள்ள குளுட்டாமிக் அமிலம் மூட்டுகளை பலப்படுத்துகிறது.
பயன்படுத்தும் முறைகள்:
வயிற்றுபுண் தீர: முட்டைக்கோஸ் சாறு 2550 மில்லி பச்சையாக தினமும் அருந்த வயிற்றுவலி, அமிலத்தன்மை குணமாகும்.
இரைப்பிருமல் தீர: முட்டைக்கோஸ் சாறு, துளசி இலை, தேன் சேர்த்து அருந்த ஆஸ்துமா குணமாகும்.
கல்லீரலை பலப்படுத்த: மது குடிப்பதால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பை நீக்க முட்டைக்கோசை வாரம் 2 அல்லது 3 முறை கரிசலா ங்கண்ணி சாறுடன் சேர்த்து அருந்த குடிப்பதால் ஏற்படும் நஞ்சை அகற்றுவதோடு கல்லீரலை பலப்படுத்தும்.
பால்சுரப்பை அதிகரிக்க: பால் ஊட்டும் தாய்மார்களுக்கு போதிய அளவு பால் சுரக்க வில்லை என்றால் வாரம் 3 முறை பருப்புடன் சேர்த்து சமைத்து உண்ண பால் சுரப்பை அதிகப்படுத்தும்.
புற்றுநோய் வராமல் தடுக்க:
முட்டைக்கோஸ் இலையை வாரத்தில் 3 நாட்கள் வீதம் தொடர்ந்து உண்பவர்களுக்கு மார்பகம், வயிறு, பெருங்குடலில் புற்று நோய் வராமல் தடுப்பதாக அறிவியல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.
தசைகளை பலப்படுத்த: தசைகள் பலமின்றி காணும் குழந்தைகளுக்கு பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து தர தசைகளை பலப்படுத்தும். முட்டைக்கோசில் அதிகஅளவு உள்ள அயோடின் சத்து தசை வளர்ச்சியை பலப்படுத்துகிறது.
தலைவலி நீங்க: இதன் இலையை நெற்றிப் பொட்டில் அரைத்து பற்றிட ஒற்றை தலைவலி, தலைவலி தீரும்.
கட்டி, வீக்கம் நீங்க: முட்டைக்கோஸ் இலையை அரைத்து மஞ்சளுடன் சேர்த்து பற்றிட வீக்கம், கட்டி, புண் நீங்கும்.
தோல் பளபளப்பாக: முட்டைக்கோஸ் சாறுடன், தேன் அல்லது பன்னீர் சேர்த்து முகத்தில் தடவி 30 நிமிடம் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ தோல் பளபளப்பாகும். தோல் சுருக்கம் நீங்கும்.
குறிப்பு: தைராய்டு நோயாளிகள் முட்டைக்கோஸ் தவிர்ப்பது நல்லது.
சிவப்பு முட்டைக்கோஸ்:
சிவப்பு முட்டைக்கோசில் ஆன்த்தோசயனின் வேதிப்பொருள் அதிகளவில் இருப்பதால் மூளை செல்களை பாதுகாத்து வயோதிக ஞாபகமறதியை போக்குகிறது.
இந்த வகை முட்டைக்கோசில் நார்சத்து, உயிர்சத்து, கால்சியம், இரும்பு சத்து, பொட்õசியம் இருப்பதால் குழந்தைகள், வயதானவர்கள், உடல்பலவீனமானவர்கள் இதை அதிகம் பயன்படுத்தினால் ஆரோக்கியமாக வாழலாம்.
தேவராஜன்


எலும்பை பலப்படுத்தும் பச்சை பட்டாணி!

இந்தியாவில் வெப்பமண்டல பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. உத்திர பிரதேசத்திலும், வங்காள தேசத்திலும் அதிகம் பயிரிடப்படுகிறது.
சுவை: விதை இனிப்பு சுவையுடையது.
செய்கை: பசித்துõண்டி, குளிர்ச்சி உண்டாக்கி, உடல் வலிமை ஏற்றி.
ஊட்டச்சத்துகள்:
பச்சை பட்டாணியில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. 8 விதமான உயிர்சத்துக்களும், 6 விதமான தாது உப்புகளும் மற்றும் நார்சத்து, புரதம் அதிகம் உள்ளது. புரதம் அதிகளவாக 15.5 முதல் 39.7 சதவீதம் வரை காணப்படுகிறது.
எனவே வளரும் குழந்தைகளுக்கு இதை உணவாக சமைத்து தர உடல் வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி ஏற்படும்.
100 கிராம் பச்சை பட்டாணியில் உள்ள சத்துக்கள்:
சக்தி 44 கலோரி, நீர்ச்சத்து 75.6 சதவீதம், புரதம் 6.2 கிராம், கொழுப்புச்சத்து 0.4 கிராம், கார்போஹைட்ரேட் 16.9 கிராம், நார்சத்து 2.4 கிராம், சாம்பல் சத்து 0.9 கிராம், கால்சியம் 32 மில்லி கிராம், பாஸ்பரஸ் 102 மி.கிராம், இரும்புசத்து 1.2 மி.கிராம், சோடியம் 6 மி.கிராம், பொட்டாசியம் 350 மி.கிராம், பீட்டாகரோட்டீன் 450 மி.கிராம், தையாமின் 34 மி.கிராம்,ரிபோளேவின் 16 மி.கிராம், நியாசின் 2.7 மி.கிராம், அஸ்கார்பிக் அமிலம் 26 மி.கிராம், விட்டமின்ஏ 680 ஐயு.
மருத்துவ பயன்கள்:
பச்சை பட்டாணியில் நிகோடினிக் அமிலம் என்ற வேதிப்பொருள் இருப்பதால் இது ரத்தத்தில் அதிகளவு கொலஸ்டீரால் இருந்தால் அதை குறைக்கிறது.
பச்சை பட்டாணியில் லேக்டின் என்ற புரதப்பொருள் இருப்பதால் ரத்த சிவப்பு அணுக்கள் உறைந்து ரத்தக் கட்டுகளாக மாறுவதை தடுக்கிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் வராமல் தடுக்கலாம்.
பச்சை பட்டாணியில் அதிகளவு விட்டமின்லு, விட்டமின் சி இருப்பதால் எல்லா வகையான புற்று நோய்களால் நாம் பாதிக்காதவாறு பாதுகாக்கிறது.
பச்சை பட்டாணியில் கரையாத நார்சத்து இருப்பதால், கொழுப்பு சத்தை குறைத்து இதயநோய், பக்கவாதம் வராமல் தடுக்கிறது.
பச்சை பட்டாணியில் லுõட்டின் என்ற கரோட்டீனாய்டு இருப்பதால் வயதானவர்களுக்கு கண்ணில் ஏற்படு புரை வளர்தலை குறைக்கிறது.
பச்சை பட்டாணியில் அதிகளவு இரும்புசத்து இருப்பதால் நம் உடலில் ரத்த அணுக்கள் உற்பத்தியை அதிகரித்து ரத்த சோகையை போக்கி உடல் சோர்வு, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், கவனக்குறைவு ஆகியவற்றை போக்குகிறது.
விட்டமின் கே இருப்பதால் எலும்புகளை பலப்படுத்தி, பாதுகாக்கிறது.
பச்சை பட்டாணியில் விட்டமின் சி இருப்பதால் ரத்த புற்று, நுரையீரல் புற்று, ஆசனவாய் புற்று போன்ற எல்லா புற்று நோய் வராமல் தடுக்கிறது.
பச்சைபட்டாணியில் உள்ள விட்டமின் பி6 ரத்த குழாய் சுவர் சுருங்குதலைத் தடுத்து, இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

பச்சை பட்டாணியும் தீரும் நோய்களும்:
பச்சைபட்டாணியில் விட்டமின் பி6, இரும்பு சத்து இருக்கிறது. இவை இரண்டுமே ஹோமோசிஸ்டைன் என்ற ஆபத்தை விளைவிக்கும் வேதிப் பொருள் உடலில் உருவாவதை தடுக்கிறது. இந்த வேதிப்பொருள் தான் மாதவிடாய் நின்ற பெண்களுக்கும், வயதானவர்களுக்கும் எலும்பு பலம் குன்றல் ஏற்பட காரணமான மூலப்பொருள். எனனே மாதவிடாய் நின்ற பெண்கள், வயதானவர்கள் பச்சை பட்டாணியை உட்கொண்டால் எலம்பு பலமடையும். மூட்டு வலி, எலும்பு முறிவு வராமல் தடுக்கலாம்.
மேலும் இந்த ஹோமோசிஸ்டைன் ரத்த குழாய் சுவர் சுருங்குதல் ஏற்படவும் காரணமான மூலப்பொருள் எனவே ரத்த குழாய் சுவரை பாதுகாத்து மாரடைப்பை தடுக்க பச்சை பட்டாணியை வாரம் 2 முறை உட்கொள்ள வேண்டும்.
மேலும், ரத்த சோகை தீர, புற்றுநோய் தடுக்க, ரத்தத்தில் உள்ள கொலஸ்டீராலை குறைக்க பச்சைபட்டாணி உதவுகிறது.
பயன்படுத்தும் முறைகள்:
பச்சை பட்டாணியை வேகவைத்து உப்பு, மிளகு சேர்த்து வாரம் 2 முறை வளரும் குழந்தைகளுக்கு தர உடல், மனம் பலப்பட்டு ஆரோக்கியமாக காணப்படுவர்.
பச்சை பட்டாணி, கேரட், புதினா, பீன்ஸ் சேர்த்து வேகவைத்து உப்பு சேர்த்து சூப்பாக சிற்றுண்டிக்கு பதில் குழந்தைகளுக்குத் தரலாம்.
உடல் எடை அதிகரிக்க இதனுடன் உருளைகிழங்கு சேர்த்து சமைத்து தரலாம்.
குறிப்பு: பச்சை பட்டாணியில் ப்யூரின் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. ப்யூரின் பொதுவாக தாவரங்கள், விலங்குகள், மனித உடலிலும் காணப்படும். ப்யூரின் தொடர்பான கோளாறு உள்ளவர்கள், சிறுநீரக நோயினர் இதை பயன்படுத்தக்கூடாது.
தேவராஜன்

தேவராஜனின் மேஜிக் மேஜிக் மூன்றாம் பாகம்

தேவராஜனின் மேஜிக் மேஜிக் மூன்றாம் பாகம் (51 முதல் 55 வரை)
( தினமலர் சிறுவர் மலரில் வெளிவந்து கொண்டிருக்கும் என்னுடைய மேஜிக் தொடர்)
51. அறுந்த நுõல் ஒன்றாகும் மேஜிக்

தேவையானப் பொருட்கள்: ஸ்டிரா, நுõல், கத்தரிக்கோல்
செய்முறை: ஒரு ஸ்டிராவை எடுத்து பார்வையாளர்களிடம் காட்டி அதில் ஒன்றுமில்லை என்பதை தெளிவு படுத்துங்கள். பின்னர் அந்த ஸ்டிராவில் ஒரு நுõலை நுழையுங்கள். பிறகு அதை அப்படியே இரண்டாக மடியுங்கள். மடித்த முனையை கத்தரிக்கோலால் வெட்டுங்கள். பார்வையாளர்களிடம், "" இந்த ஸ்டிராவில் உள்ள நுõலோடு இரண்டாக வெட்டி விட்டேன். நுõலும் இரண்டு துண்டாக வெட்டியாகிவிட்டது. இப்போது மேஜிக் செய்து வெட்டப்பட்ட நுõலை ஒன்றாக வெளியே எடுக்கிறேன்' என்று சொல்லி வெட்டப்பட்ட ஒரு ஸ்டிராவிலிருந்து நுõலை இழுக்கவும். நுõல் வெளியே முழுமையாக வந்துவிடும். பிறகு நுõலை இழுத்து காட்டுங்கள் அது வெட்டப்பட்டது இணைந்து இருக்கும். பார்த்த பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்.
மேஜிக் சீக்ரெட்:
மேஜிக் செய்யும் முன்பாக ஸ்டிராவின் மத்தியில் இரண்டு சென்டிமீட்டர் அளவு நீளவாக்கில் கத்தியால் கிழித்து கொள்ள வேண்டும். மேஜிக் செய்யும் போது இரண்டாக மடக்கி, ஸ்டிராவின் இரண்டு முனையிலும் தொங்கும் நுõலை இழுத்தால் வெட்டப்பட்ட பகுதியிலிருந்து நுõல் கீழே இறங்கி விடும். அந்த இடத்தில் நுõல் இருக்காது. ஆதலால் நீங்கள் கத்தரிக்கோலால் வெட்டும் போது நுõல் வெட்டுப்படாது. இது தான் மேஜிக் சீக்ரெட்!

52. மாயமாகும் ஓட்டை!
தேவையான பொருள்: காகிதம்
செய்முறை: நீள் சதுர காகிதத்தை எடுத்து, இரண்டாக மடிக்கவும், அடுத்த அதை இரண்டாக மடிக்கவும். இப்போது சதுர வடிவில் இருக்கும் காகிதத்தை பார்வையாளர்களிடம் காட்டி, அதன் ஒரு முனையை சிறிது கிழித்து கிள்ளி எடுக்கவும். கிள்ளி எடுக்கப்பட்டதுடன் காகித சதுரத்தை பார்வையாளர்களிடம் காட்டி,"" இந்த காகிதத்தில் ஒரு முனையை கிள்ளி எடுத்துவிட்டேன். இதனால் காகிதத்தில் நடுவில் ஓட்டை விழும் பாருங்கள்' என்று சொல்லிவிட்டு, காகிதத்தை விரித்துக்காட்டுங்கள். காகிதத்தின் நடுவில் ஓட்டை இருக்கும்.
பிறகு, இன்னொரு காகிதத்தை எடுத்து முன்பு போலவே இரண்டாக மடிக்கவும். அடுத்தும் இரண்டாக மடித்து அதன் ஒரு முனையை சிறிது கிழித்துவிட்டு, கிள்ளி எடுத்துவிடவும். பின்னர் பார்வையாளர்களிடம், "" இந்த காகிதத்தில் கிள்ளி எடுத்த பகுதியில் ஓட்டை விழாமல் இருக்கும் பாருங்கள்!'' என்று சொல்லிவிட்டு காகிதத்தை விரித்து காட்டுங்கள்! காகிதத்தின் நடுவில் ஓட்டை இல்லாதிருப்பது கண்டு பார்ப்பவர்கள் ஆச்சரியமடைவார்கள்!
மேஜிக் சீக்ரெட்: நான்காக மடிக்கப்பட்ட காகிதத்தில் ஒரு முனையை சிறிய அளவு கிழிக்கும் போதே, அதை இடது கை ஆள்காட்டி விரலால் பின்பக்கமாக மடித்து கொள்ளவும். ஆனால்வலது கை விரலால் கிள்ளி எறிந்தது போல பாவனைக்காட்டவும். இது தான் மேஜிக் சீக்ரெட்!

53. தண்ணீரில் காசு முளைக்கும்!

தேவையான பொருட்கள்: 50 காசு, தண்ணீர் கிளாஸ், கைக்குட்டை

செய்முறை: இடது கை உள்ளங்கையை விரித்துக்காட்டி கையில் காசு இல்லை என்பதை பார்வையாளர்களிடம் தெளிவுபடுத்தவும். பிறகு ஒரு கை குட்டையை எடுத்து நன்றாக உதறி அதிலும் காசு இல்லை என்பதை தெளிவுபடுத்தவும். அடுத்து, ஒரு தண்ணீருடன் உள்ள கிளாசை காட்டி அதிலும் காசு இல்லை என்பதை தெளிவு படுத்தவும்.
பின்னர், இடது உள்ளங்கையில் தண்ணீர் கிளாசை வைக்கவும். தண்ணீர் கிளாசின் மீது கைகுட்டையை போட்டு மூடவும். பார்வையாளர்களிடம், "" இப்போது கைகுட்டை எடுத்தால் தண்ணீர் கிளாசில் காசு இருக்கும் பாருங்கள்!'' என்று சொல்லி விட்டு கைகுட்டையை எடுங்கள். தண்ணீர் கிளாசை காட்டுங்கள் அதில் காசு இருக்கும். அதைப் பார்த்து பார்வையாளர்கள் வியந்து போவார்கள்!
மேஜிக் சீக்ரெட்:
இந்த மேஜிக் மிக தந்திரமாக செய்து பார்வையாளர்களை ஏமாற்றக்கூடிய மேஜிக் என்பதால் நீங்கள் புத்திசாலித்தனமாக செய்ய வேண்டும். மேஜிக் செய்வதற்கு முன்பு இடது கையின் நடுவிரல், மோதிர விரலுக்கு இடையில் காசு வைத்து காசின் விளிம்பு கால் பகுதி மட்டும் விரல் இடுக்கில் வைத்து மறைத்து கொள்ள வேண்டும். இப்படி மறைத்து வைக்கும் காசு புறங்கை பக்கம் தான் 90 சதவீதம் இருக்கும். உள்ளங்கை பக்கம் தெரியாது.உள்ளங்கையில் கிளாசை வைத்து, அதன் மீது கைகுட்டையை மூடிவிட்டு, விரல் இடுக்கில் இருக்கும் காசை புறங்கை பக்கத்திலிருந்து வலது கையால் தள்ளி, உள்ளங்கைக்கு கொண்டு வந்து, காசின் மீது கிளாஸ் இருக்குமாறு வைத்து கொள்ள வேண்டும். கண்ணாடி கிளாஸ் என்பதால் அடியில் இருக்கும் காசு கண்ணாடி கிளாசில் இருப்பது போல பிம்பத்தைத் தரும். மறைத்திருக்கும் காசை, கண்ணாடி கிளாசின் அடியில் கொண்டுச் சேர்ப்பதுதான் மேஜிக் சீக்ரெட்!


54. பத்து ரூபாய் பிட்டிங் மேஜிக்!

தேவையான பொருட்கள்: பத்து ரூபாய் பணம் இரண்டு

செய்முறை: பத்து ரூபாய் பணத்தை நெடுக்கு வசத்தில் படத்தில் உள்ளது போல மடித்துக்கொள்ளவும். அதே போல் இன்னொரு பணத்தையும் நெடுக்கு வசத்தில் மடித்துகொள்ளவும்.
பிறகு, படத்தில் காட்டியவாறு முதல் பத்து ரூபாயை நெடுக்கு வசத்தில் மடிக்கப்பட்டதை சரிபாதியாக மடிக்கவும்.
நெடுக்கு வசத்தில் மடிக்கப்பட்ட பணத்தில், சரி பாதியாக மடிக்கப்பட்ட பணத்தை நுழைக்கவும். பிறகு, பார்வையாளர்களிடம் படத்தில் காட்டியவாறு நன்றாக இழுத்துக்காட்டவும்.
சரிபாதியாக மடிக்கப்பட்ட பணம் நெடுக்கு வசத்தில் மடிக்கப்பட்ட பணத்தில் இருந்து வெளியே வராது.
பின்னர் நெடுக்கு வசத்தில் உள்ள பணத்தின் இரு முறையிலும் கை இருவிரலை வைத்து அடைத்துக்கொண்டு சரிபாதியாக உள்ள பணத்தை"வந்துடு வந்துடு வெளியே வந்துடு...' என்று சொல்லிவிட்டு இழுக்கவும். சரிபாதியாக மடிக்கப்பட்ட பணம் வெளியே வந்து விடும். இதைப் பார்த்து பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்.

55. மேஜிக் எழுத்து!
தேவையான பொருட்கள்: வெள்ளை காகிதம், பேனா
செய்முறை: ஒரு அ4 காகிதத்தை படத்தில் காட்டியவாறு நான்கு பாகமாக மடித்துக்கொள்ளவும். நான்கு பாகத்திற்கு 1,2,3,4 என்று பெயரிட்டுக்கொள்ளவும்.
2 மற்றும் 3 ம் பாகத்தின் மத்தியில் மேலிருந்து கீழாக ஆ,ஈ,இ,அ என்று எழுதிக்கொள்ளவும். அடுத்து, படத்தில் காட்டியவாறு 1,2 பாகத்தின் நடுவும் 3, 4ம் பாகத்தின் நடுவும் இணையுமாறு மடிக்கவும். மடித்த பகுதியில் மேலிருந்து கீழாக அ,ஆ,இ,ஈ என்று எழுதவும். பின்னர், பார்வையாளர்கள் முன்பு 1 மற்றும் 4ம் பாகத்தை படத்தில் இருப்பது போல உள்புறமாக மடித்துக்காட்டி, அதில் வரிசை மாறி எழுதப்பட்டிருக்கும் எழுத்தைக் காட்டவும். பிறகு, "" இதில் எழுதப்பட்டிருக்கும் வரிசை மாறிய எழுத்துக்கள் இப்போது வரிசைபடி தோன்றும் பாருங்கள்!'' என்று கூறி இரண்டாக மடிக்கவும். பிறகு பிரித்துக்காட்டுங்கள். எழுத்துக்கள் வரிசைபடி இருக்கும். இதைப் பார்த்து பார்வையாளர்கள் வியப்பர்.
மேஜிக் சீக்ரெட்: 2 மற்றும் 3ம் பாகத்தை பார்வையாளர்களிடம் காட்டியிருப்பதை இரண்டாக மடிக்கும் போது மேல் பக்கம் 4ம் பாகமும் கீழ் பக்கம் 1 ம்பாகமும் இருக்கும். அதை பிரித்துக்காட்டும் போது 2,3, உள் மடித்தும் 1ம் பாகம் 4ம் பாகம் மேல் பக்கமாக விரித்துக்காட்ட வேண்டும்.
மேஜிக் சீக்ரெட்:
மேஜிக் செய்யும் முன் படத்தில் காட்டியவாறு நெடுக்கு வசத்தில் மடிக்கப்பட்ட பணத்தில் மத்தியில் அரை சென்டி மீட்டர் அகலத்தில் ஜிக்ஜாக் வருமாறு மடித்து கொள்ள வேண்டும். அதை விரலால் மறைத்து கொள்ள வேண்டும். மேஜிக் செய்யும் போது, சரிபாதியாக மடிக்கப்பட்ட பணத்தை நெடுக்கு வசமாக மடிக்கப்பட்ட பணத்தில் நுழைக்கும் போது ஜிக்ஜாக்காக மடிக்கப்பட்ட பகுதியில் நுழைத்து விடவேண்டும். ஆனால் பார்ப்பதற்கு பணத்தில் முழுமையாக நுழைப்பது போலவே பாவ்லா கட்ட வேண்டும். இதில் ஜிக்ஜாக் பகுதியில் பணத்தை நுழைத்து எடுப்பது தான் சீக்ரெட்!

மேஜிக் மேஜிக்
56 . மாயமாய் வந்து போகும் ஒயர்!

தேவையான பொருட்கள்: சிறிய ஒயர் துண்டு, செல்லோ டேப்

செய்முறை: இந்த மேஜிக் செய்வது மிக சுலபம். ஆனால், பார்வையாளர்களை தந்திரமாக ஏமாற்றுவது ரொம்ப கடினம். ஆதலால் மேஜிக் சீக்ரெட்டை தந்திரமாக கையாள வேண்டும்.
பார்வையாளர்களிடம் உங்கள் வலது கை உள்ளங்கையை படத்தில் இருப்பது போல காட்டுங்கள். ""கையில் ஏதாவது இருக்கிறதா?'' என்று கேளுங்கள். பார்வையாளர்களிடமிருந்து ""இல்லை!'' என்று பதில். அடுத்து மின்னல் வேகத்தில் விரல்களை குவியுங்கள். குவித்த விரல்களுக்கு இடையில் ஒரு ஒயர் நீண்டு இருக்கும். அதைப் பார்த்து பார்வையாளர்கள் வியந்துகொண்டிருக்கும் போது, மீண்டும் சட்டென்று குவித்த விரல்களை விரியுங்கள். இப்போது அந்த மாயமாய் மறைந்து இருக்கும். அதைப் பார்த்து பார்வையாளர்கள் வியப்பின் உச்சத்துக்குப் போவார்கள்!
சீக்ரெட்:
படத்தில் இருப்பது போல வலது புறங்கை கட்டை விரல் நகப் பகுதியில் துண்டு ஒயரை செல்லோ டேப்பால் ஒட்டிக் கொள்ளவும். புறங்கை பக்கம் இருப்பதால் உள்ளங்கைப் பக்கம் தெரியாது. விரலை குவிக்கும் போது கட்டை விரலில் உள்ள ஒயர் செங்குத்தாக தெரியும். விரல்களை விரிக்கும் போது கட்டை விரலில் உள்ள ஒயர் புறங்கை பக்கம் இருப்பதால் பார்வையாளர்களுக்கு ஒயர் மாயமாய் மறைந்தது போன்ற பிரம்மையை ஏற்படுத்தும்.

57 . கண்ணை ஏமாற்றும் பூமாராங்!

தேவையான பொருட்கள்: அட்டை, காம்பஸ், பென்சில், கத்தரிக்கோல், கலர் ஸ்கெட்ச் பென்.
செய்முறை:
சற்று தடிமனான இரு அட்டையை எடுத்து, ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கவும். பிறகு, காம்பஸ் உதவியுடன் பென்சிலால் ஒரு ஆர்க் வரையவும். அடுத்து, ஒரு செ.மீ கீழ் நோக்கி இன்னொரு ஆர்க் வரையவும். ஆர்க் கோடு மீது கத்தரி வைத்து நறுக்கிக்கொள்ளவும். நறுக்கிய ஆர்க் பகுதியை தனியே எடுத்தால் அது படத்தில் காட்டியுள்ளவாறு இருக்கும். மேலே உள்ள அட்டைக்கு சிகப்பு வண்ணமும், கீழே உள்ள அட்டைக்கு மஞ்சள் வண்ணமும் பூசவும்.
வண்ணம் பூசப்பட்ட அட்டை களை படத்தில் காட்டியவாறு ஒரு டேபிளில் முதலில் சிகப்பு அட்டையும் அதன் கீழ் மஞ்சள் அட்டையை வைக்கவும். பார்வையாளர்களிடம் ""இந்த சிவப்பு மற்றும் மஞ்சள் அட்டையில் எது பெரியது?'' என்று கேளுங்கள். பார்வையாளர்கள் சிகப்பு அட்டைதான் பெரியது என்பர். பின்னர், மஞ்சள் அட்டைய மேலே வைத்து அதன் கீழ் சிவப்பு அட்டையை வைத்து, "" இப்போது எந்த அட்டை பெரியது?'' என்று கேளுங்கள். பார்வையாளர்களிடமிருந்து ""மஞ்சள் அட்டை'' என்று பதில் வரும். முடிவில் இரண்டு அட்டையையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து அதை பார்வையாளர்களிடம் காட்டிவிட்டு, இரண்டு ஒரே அளவு உள்ள அட்டை தான் என்று சொல்லுங்கள். பார்வையாளர்கள் தங்கள் கண்களை ஏமாற்றிய பூமாராங் அட்டையை நினைத்து ஆச்சரியப்படுவார்கள்!

சீக்ரெட்: சம அளவு உள்ள அட்டை என்ற போதிலும் ஒன்றன்கீழ் ஒன்றாக வைக்கும் போது பார்ப்பவர்கள் கண்கள் மேலே உள்ள அட்டையின் உள் வட்டத்தோடு கீழே உள்ள அட்டையின் வெளி விட்டத்தை ஒப்பீடு செய்வதால் தோன்றும் மாயபிம்பம் தான் பெரிது, சிறிது என்று சொல்ல வைக்கும் சீக்ரெட்!

கதையை கேளு விடையை யோசி பாகம்: 3

கதையை கேளு விடையை யோசி பாகம்: 3
( தினமலர் சிறுவர்மலரில் "கதையை கேளு விடையை யோசி' என்ற தலைப்பில் வெளிவந்து கொண்டிருக்கும் நான் எழுதும் தொடர்)

33 . மாலை வீட்டுத் தோட்டத்தில் பேரப்பிள்ளைகளோடு தாத்தா நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.
""தாத்தா சமீபத்தில் செய்தி தாளில் ஒரு அரசு அலுவலக கட்டடத்தில் சுதந்திர தின நாளில் ஏற்றிய தேசியக்கொடியை மாலையில் இறக்கவில்லை. அது தேசியக்கொடி அவமதிப்பு குற்றம் என்று செய்தி வந்திருக்கே.'' என்று கேட்டாள் அனுஷா.
"" அந்தச் செய்தி சரிதான். சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரைதான் தேசியக்கொடியை பறக்கவிடவேண்டும். சூரியன் மறைவுக்குப்பின் கொடியை இறக்கிவிடவேண்டும்.'' என்றார் தாத்தா.
"" தேசியக்கொடியைப் பயன்படுத்த விதிமுறைகள் இருக்குதா?'' என்றாள் சாயிபவித்ரா.
"" இருக்கே! .'' என்று சொல்ல ஆரம்பித்தார்.
""தேசியத்திருவிழா நாட்களில் மட்டும்பொதுமக்கள் வீடுகளில், கார்களில் தேசியக்கொடியை பறக்கவிடலாம். தேசியக்கொடியில் எந்த வாசகத்தையும் எழுதக்கூடாது.
கொடி கிழிந்துவிட்டால் அதை குப்பைத்தொட்டியில் போடவோ, ஜன்னல்திரையாக, மேஜைவிரிப்பாக, கைக்குட்டையாக பயன்படுத்தக்கூடாது. இதெல்லாம் அடிப்படை விதிகள். இதை மீறினா அது கொடி அவமதிப்பு குற்றம்.'' என்றார் தாத்தா.
"" தாத்தா, தேசியக்கொடியை எங்க எல்லாம் பறக்கவிடணும்ணு கட்டாயம் ஏதாவது இருக்கா?'' என்றாள் திவ்யா.
""முக்கியமாக தலைமைச் செயலகம், கலெக்டர் அலுவலகம், உயர்நீதிமன்றம், மாநகராட்சிக்கட்டடம், மத்திய, மாநில அரசு கட்டடங்கள், சிறைச்சாலை போன்ற இடங்களில் தேசியக்கொடியை கட்டாயம் பறக்க விடவேண்டும்.'' என்றார், தாத்தா.
"" இந்தியா தவிர வேறு எங்கு நம் கொடியை பறக்கவிடலாம்?'' என்று மூர்த்தி கேட்டான்.
""அயல்நாடுகளில் உள்ள இந்தியத்துõதர் அலுவலகங்களிலும், அவர்கள் பயன்படுத்தும் கார்களிலும் கொடி பறக்கவேண்டும்.
மற்ற நாட்டு தேசியக்கொடியுடன் நம்கொடியை பறக்கவிட்டால், இந்திய தேசியக்கொடியின் இடது புறத்திலேயே மற்ற கொடிகளைப் பறக்கவிடவேண்டும்.'' என்றார் தாத்தா.
"" தாத்தா கொடி பற்றி வேறு ஏதாவது செய்தி இருக்கிறதா?'' என்று வியப்புடன் கேட்டான் அருண்.
""ஊர்வலத்தில் தேசியக்கொடியை வலதுதோளில் உயர்த்திப்பிடித்துச் செல்லவேண்டும்.
மத்திய, மாநில அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், சபாநயகர் ஆகியோரது கார்களிலும் கொடி பறக்கவேண்டும்.'' என்றார் தாத்தா.
"" கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடறது ஏன்?'' என்றாள் ப்ரியா.
""தேசத்தின் பெருந்தலைவர்கள் மறைவு துக்கத்தை அறிவிக்க, கொடிமரத்தின் பாதியில் கொடியை பறக்கவிடவேண்டும்.'' என்று கூறி முடித்தார் தாத்தா.
குட்டீஸ் கதை கேட்டாச்சு. இப்ப 2 கேள்விக்கு பதில் சொல்லலாமா?
1. தேசியக்கொடியை எப்போது எல்லாரும் பறக்கவிடலாம்?
2. அரைக்கம்பத்தில் கொடி பறக்கவிடுவது எதற்காக?
விடை: தேசிய திருவிழா நாட்களில் 2. தேசிய துக்க சம்பவத்தை அறிவிக்க


34 .தாத்தா தன் பேரப்பிள்ளைகளுக்கு பாரம்பரியகிராமிய விளையாட்டுகளான பரமபதம், தாயம், ஆடுபுலி ஆட்டம், பல்லாங்குழி விளையாட்டுகள் எப்படி விளையாடுவது என்று கற்றுக்கொடுத்தார்.
""தாத்தா,உங்களுக்கு செஸ் விளையாட்டு தெரியுமா? அது ரஷ்யர்களோட விளையாட்டாமே?'' என்று அனுஷா கேட்டாள்.
"" செஸ் விளையாட்டின் பூர்வீகம் இந்தியாதான்! அது அப்போ சதுரங்க விளையாட்டா இருந்தது. அதை அரசர்களின் விளையாட்டுன்னு சொல்லுவாங்க.'' என்றார் தாத்தா.
"" என்ன செஸ் விளையாட்டு இந்தியர்களுடையதா?'' என வியந்த சாயிபவித்ரா,""தாத்தா புரியும்படி சொல்றீங்களா?'' என கேட்டாள்.
"" இந்த விளையாட்டு குறித்து பல கருத்துகள் இருந்தாலும், 7ம் நுõற்றாண்டில் இந்தியாவில் விளையாடப்பட்ட சதுரங்கம் விளையாட்டின் வளர்ச்சிதான் செஸ். இது இந்தியாவிலிருந்து மேற்கே ஐரோப்பாவுக்கும், கிழக்கே கொரியா வரையிலும் பல மாற்றங்களுடன் பரவியது. மங்கோலியா வழியாக ரஷ்யாவுக்கும் பரவியது. பாரசீகத்துக்கும் போனது. பாரசீகத்தை இஸ்லாமியர் கைப்பற்றியப்பிறகு, இந்த விளையாட்டு இஸ்லாமிய நாடுகளில் பரவியது. 11ம் நுõற்றாண்டில் இங்கிலாந்தில் பரவியது. இப்படிதான் உலகம் முழுவதும் பரவிய நம் சதுரங்க விளையாட்டு இப்ப செஸ் என்று பெயர் மாறி நம்மகிட்டேயே வந்திருக்கு'' என்றார் தாத்தா.
"" தாத்தா, செஸ் விளையாட்டுமுறைபற்றி சொல்லுங்க தாத்தா?'' என்று கெஞ்சினாள் திவ்யா.
"" மதியூகமும் தந்திரமும் கலந்தது இந்த விளையாட்டு. ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் என 32 காய்கள் உடையது. இது 8க்கு 8 என்ற சதுர அளவில் 64 சதுரங்களை உடையது. இந்த விளையாட்டு ஆட இருவர் வேண்டும்.'' என்றார் தாத்தா.
"" 32 காய்களின் பெயர்கள் என்ன தாத்தா?'' என்றான் ஆர்வமாய் மூர்த்தி.
""ஒவ்வொரு படையிலும் ஒரு அரசன், ஒரு அரசி, இரு மந்திரி, இரு குதிரைகள், இரு கோட்டைகள், எட்டு படைவீரர்கள் என பெயர் பெற்றிருக்கும்.இதே போல எதிர் படையில் இருக்கும் காய்களுக்கும் அதே பெயர்தான்'' என்றார் தாத்தா.
"" தாத்தா, இந்த விளையாட்டில் வெற்றியை எப்படி தீர்மானிக்கிறது?'' என்றான் அருண்.
"" தனது அரசனை பாதுகாத்துக்கொண்டு, எதிரியின் அரசனைப் பிடிப்பவரே வென்றவர் ஆவார்'' என்றார் தாத்தா.
"" நம்ம நாட்டில் இந்த விளையாட்டில் சிறப்பா விளையாடறது யார் தாத்தா?'' என்றாள் ப்ரியா.
"" நம்ப தமிழ்நாட்டுக்காரரான விஸ்வநாதன் ஆனந்த் செஸ் விளையாட்லயே உலகத்திலேயே ரொம்ப சிறந்தவர்." என்றார் தாத்தா.
குட்டீஸ் கதை படிச்சாச்சு. இப்ப 2 கேள்விக்கு பதில் சொல்றீங்களா?
1. செஸ் பலகையில் எத்தனை சதுரங்கள் இருக்கும்?
2. எந்த விளையாட்டின் மறுவி செஸ் விளையாட்டு?
விடை: 1. 64 சதுரங்கள் 2. சதுரங்கம்

35 .கதைவாசி விடையோசி

"தாத்தா பஞ்சாங்கம் பார்த்துக்கொண்டிருந்தார்.
""தாத்தா, இது என்ன புக்?'' என்றுகேட்டாள் அனுஷா.
"" இதுக்கு பஞ்சாங்கம் என்று பெயர்'' என்றார் தாத்தா.
"" பஞ்சாங்கம்னா என்ன?'' என்றாள் சாயிபவித்ரா.
பஞ்சாங்கம் என்பது வடமொழிச் சொல். தமிழில் ஐந்து உறுப்புகள் கொண்ட அட்டவணை என்று பொருள் படும்'' என்றார் தாத்தா.
"" அதென்ன ஐந்து உறுப்புகள்?'' என்று அவசரமாய் கேட்டாள் திவ்யா.
"" வாரம், திதி,கரணம், நட்சத்திரம், யோகம் இவை தான் ஐந்து உறுப்புகள்'' என்றார் தாத்தா.
"" இந்த ஐந்து உறுப்புகள் பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க?'' என்று கேட்டான் மூர்த்தி.
"" ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என ஏழுகிழமைகள்தான் வாரம்.
திதி என்பது சந்திரனின் பூமிசுற்றுப் பாதையின் 30 சமகோணப்பிரிவுகள் ஒவ்வொன்றையும் சந்திரன் கடக்கும் காலத்தைக் குறிக்கும். அமாவாசையில் இருந்து பூரணை வரையான வளர்பிறைக் காலத்தில் 14 திதிகளும், பூரணை தொடக்கம் மீண்டும் அமாவாசை வரும் வரையான காலத்தில் இன்னும்14 திதிகளும் வரும். முதற்தொகுதி சுக்கில பட்சத் திதி. இரண்டாம் தொகுதி கிருஷ்ண பட்சத் திதி.
அமாவாசை,பிரதமை,துதியை, திருதியை,சதுர்த்தி, பஞ்மி, சஷ்டி, சப்தமி, அட்டமி, நவமி, தசமி, ஏகாதசி,துவாதசி, திரயோதசி, சதுர்த்தி,பூரணை. இவைகள் தான் திதி.
கரணம் என்பது திதியின் அரைபங்கு. அதாவது 30 திதிகளுக்கு60 கரணங்கள்.
நட்சத்திரம் என்பது ராசிக்சக்கரத்தை ஒவ்வொன்றும் 13.33 பாகை அளவு கொண்ட 27 பகுதிகளைக் குறிக்கும். சந்திரன் பூமியைச் சுற்றி வரும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தப் பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குகுரிய நட்சத்திரம் அந்த நேரத்தில் நடப்பதாகச் சொல்லப்படுகிறது.
"" 27 நட்சத்திரங்கள் என்னென்ன தாத்தா?'' என்று சந்தேகம் கேட்டான் அருண்.
""அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை,புனர்பூசம்,ஆயில்யம்,மகம்,பூரம்,உத்தரம், அத்தம்,சித்திரை, சுவாதி, விசாகம்,அனுஷம்,கேட்டை, மூலம்,பூராடம்,உத்திராடம்,திருவோணம்,அவிட்டம்,சதயம்,பூரட்டாதி, ரேவதி ஆகிய 27 நட்சத்திரப்பெயர்கள்'' என்றார் தாத்தா.
"" இதெல்லாம் எப்படி பார்த்து தெரிஞ்சுக்கிறது?'' என்று கேட்டாள் பிரியா.
"" கொஞ்சம் பழகின வந்துடும். நீங்க எல்லாம் கம்யூட்டரை தலையில் வைச்சுக்கிட்டு திரியறீங்க. ஆனா, காலண்டர், கடிகாரம் எல்லாம் இந்த பஞ்சாங்க கணக்கை அடிப்படையாக வைத்து தான் உருவாக்கப்பட்டிருக்கு. இதன் அருமை உங்களுக்குத்தெரியவா போகுது?'' என்று வருத்தப்பட்டார் தாத்தா.
குட்டீஸ் கதை படிச்சாச்சு! 2 கேள்விக்குப் பதில் சொல்றீங்களா?
1. பஞ்சாங்க உறுப்புகள் எத்தனை?
2. ராசி சக்கரத்தில் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன?
விடை: 1. ஐந்து 2. 27

36 . "" தாத்தா, பள்ளிகளில், அரசு விழாக்களில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், முடிவில் தேசிய கீதமும் பாடறாங்களே, ஏன்?'' என்று சந்தேகம் கேட்டாள் அனுஷா.
"" ஒரு நாட்டின் மக்கள் தம் நாட்டின் மீது அன்பும் பற்றுணர்வும் தோன்றுவிக்கும் நாட்டுணர்ச்சி மிக்க ஓர் இசைப்பாடல் தான் தேசியகீதம். இப்பாடலைப்பாடும் போது தம் நாட்டின் பழக்க வழக்கங்களும், வரலாறும், உயர்வாகத் தாம் கொள்ளும் கொள்கைகளும், நாட்டிற்காக உயிரிழந்த, உழைத்த பெருமக்களின் நினைவும், பொதுவாக நாட்டுப்பற்று மேலெழும்புவதற்காக பாடப்படுகிறது'' என்றார் தாத்தா.
"" ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு நாட்டுப்பாடல் இருக்குமா தாத்தா?'' என்றாள் சாயிபவித்ரா.
"" ஆமாம். நாட்டுவணக்கப்பாடல் ஐரோப்பாவில் 19வது நுõற்றாண்டுகளில் பரவலாக ஏற்பட்ட ஒரு வழக்கம். 1568க்கும் 1572க்குச் இடையே எழுதப்பட்டதாகக் கருதப்படும் டச் மக்களின் ஹெட்வில்லெமுஸ் என்னும் நாட்டுவணக்கப்பாடல்தான் உலகிலேயே பழையது என்று கருதப்படுகிறது.'' என்றார் தாத்தா.
"" தமிழில் பலபாடல்கள் இருந்தும் மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை பாடலை மட்டும் ஏன் தமிழ்தாய் வாழ்த்தாக பாடுகிறார்கள்?'' என்று கேட்டாள் திவ்யா.
""சுந்தரம்பிள்ளை தமிழின் பெருமைகளை அனைத்தையும் 15 பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார். அதில் முதல்பாட்டினை மட்டும் எடுத்துக்கொண்டு, 2வது பாடலின் கடைசி வரியையும் சேர்த்து தமிழ்தாய் வாழ்த்தாக ஏற்றுகொள்ளப்பட்டிருக்கிறது. இறைவனுக்கு அடுத்து தமிழே தெய்வம் என்றும், தமிழின் பெருமைகளை அனைவரும் அறிந்து, மதித்து போற்றவேண்டும் என்பதற்காகவே பாடப்படுகிறது.'' என்றார் தாத்தா.
"" ரவீந்திரநாத் தாகூர் எழுதிய "ஜனகனமண' வங்கப்பாடலை மட்டும்
ஏன் தேசியக்கீதமாக பாடுகிறார்கள்?'' என்று கேள்வி தொடுத்தான் மூர்த்தி.
""இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்கøள்க் கணிக்கின்ற நீயே எல்லாருடைய மனதிலும் ஆட்சி செய்கிறாய் என்பது முதல்வரி பொருள்.
பாடலின் முடிவில் இந்தியாவின் இன்பத் துன்பங்களை கணிக்கின் தாயே உனக்கு வெற்றி வெற்றி வெற்றி என்று இந்தியாவில் உள்ள அனைத்து மொழி பேசும் மக்களை ஒன்றிணைத்து இந்திய தேசத்தின் ஒருமைபாட்டை வலியுறுத்துவதால் இது தேசியகீதமாக பாடப்படுகிறது'' என்றார் தாத்தா.
"" தமிழ்தாய் வாழ்த்துப் பாடலையும், தேசிய கீதத்தையும் எப்படி வேண்டுமானாலும் பாடலாமா தாத்தா?'' என்றனர் பிரியாவும் அருணும்.
"" மோகன ராகத்தில் தமிழ் தாய் வாழ்த்துப்பாடலை பாடணும். தேசியகீதத்தை 52 வினாடிக்கும் பாடி முடித்துவிடணும்.
பாடும் போது கூனாமல், குனியாமல், ஆடாமல், அசையாமல் நேராக நின்று தலையை நிமிர்த்தி பாட வேண்டும்.'' என்றார் தாத்தா.
குட்டீஸ் கதை கேட்டாச்சு. இப்ப 2 கேள்விக்கு பதில் சொல்றீங்களா?
1. தேசிய கீதம் பாடிமுடிக்கவேண்டிய நேர அளவு?
2. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர்?
விடை: 1. 52 வினாடிகள். 2. மீனாட்ஷி சுந்தரம்பிள்ளை


37 .""தாத்தா,மனுஷங்கள ஆண்மகனை ஆனந்த் என்றும், பெண்ணை ஆனந்தி என்று குறிப்பிட்டு சொல்றோம்ல. அதுமாதிரி விலங்குகளுக்கும் ஆண், பெண் வேறுபடுத்திக்காட்டுற பெயர் இருக்குதா?'' என்று கேட்டாள் அனுஷா.
"" எல்லா விலங்குகளுக்கும் ஆண், பெண் பெயர் உண்டு. நாம் அதை எல்லாம் மறந்துவிட்டு பொது பெயரில் சொல்றோம். இதைப் பற்றி தமிழின் தொன்மையான நுõலான தொல்காப்பியத்தில் மரபியல் பகுதியில் விரிவாக சொல்லப்பட்டிருக்கு. உனக்கு ஆர்வம் இருந்தால் படித்து தெரிஞ்சுக்கலாம்.'' என்றார் தாத்தா
"" தாத்தா, நீங்களே சொல்லுங்களேன்'' என்று கெஞ்சினாள் சாயிபவித்ரா.
""சரி. கேட்டுகுங்க. ஆடு,மாடுகளை கடா, பகடு என்ற ஆண் பெயரில் தான் சொல்லணும்.
செம்மறியாட்டுக்கு தகர் என்றும் குரங்கு, முயலை கடுவன் என்ற ஆண்பெயர் சுட்டித்தான் கூப்பிடணும். அது போல,
மா குதிரைக்கும், அப்பர் குரங்குக்கும், ஒருத்தல் என்பது கரடி,பன்றி, யானை, புலிக்குரிய ஆண்பெயராகும்.
புலியை போத்து என்றும், மானை கலை என்றும் எருமையை ஏறு என்று சொல்லணும். வாத்துக்கு வரடம், குதிரைக்கு சலகு என்பது ஆண் பெயர்.'' என்றார் தாத்தா.
""விலங்குகளைக் குறிக்கும் பெண் பெயர்கள் என்னென்ன?'' என்று கேட்டாள் திவ்யா.
ஒட்டகம், யானை, கவரிமானுக்கு பெண் பெயர் பிடி.
பேடை, பெடை, பெட்டைஎன்பன கழுதை, சிங்கத்துக்கான பெண் பெயர்.
குரங்குக்கு மந்தி என்றும், ஆ என்பது எருமைக்கான பெண் பெயர்கள்.
பாட்டி, மோழல் , முடுவல் என்பன நரி, பன்றி,நாய், ஓநாய்க்கான பெண் பெயர்கள். அளகு என்பது மயிலுக்கும், கிடாரி என்பது கன்று ஈனாத பெண் விலங்குகளைக்குறிக்கும்.'' என்றார் தாத்தா.
"" விலங்குகளின் இளமை பெயர்கள் எவைன்னு சொல்லுங்க தாத்தா?'' என்றான் மூர்த்தி.
""ஆடு, பூனை,நாய்,கழுதை, குதிரை,கரடிகளைக் குட்டி என்று கூப்பிடணும்.
மாடு, எருமை, முதலை, ஒட்டகம் இவற்றின் இளமை பருவப் பெயர் கன்று.
ஒட்டகம், யானைக்கு இளமை பெயர் கயந்தலை.
கீரிக்கு பிள்ளை, வெருகு, நாவி என்பன அணிலுக்கு உரிய இளமை பெயர்.
புலி, அரிமா, ஓநாயின் இளமை பெயர் குருளை. மீனுக்கும் தேளுக்கும் குஞ்சு என்றும், பார்ப்பு என்பது நண்டுக்கும், வண்டுக்கும், புழுவுக்கும் உரிய இளமை பெயர்கள். கொக்கை பிள்ளை என்றும் முயலை பறழ் என்ற இளமை பெயரால் குறிக்கப்படுகிறது.'' என்றார் தாத்தா.
இதைக் கேட்ட அருணும் பிரியாவும்,"" அப்பாடா! '' என்று வியந்து போனார்கள்.
என்ன குட்டீஸ் கதை கேட்டாச்சா! இப்ப 2 கேள்விக்கு பதில் சொல்ல ரெடியா?
1.ஒட்டகம், யானையைக் குறிக்கும் பெண்பால் பெயர் என்ன?
2. குட்டி என்ற இளமை பெயர் எந்த விலங்குகளுக்குப் பொருந்தும்?
விடை: 1. பிடி 2. ஆடு,பூனை,நாய், கழுதை, குதிரை, கரடி.


38 . தாத்தாவிடம் பேரப்பிள்ளைகள் சதுப்பு நிலக்காடுகள் பற்றி விளக்கம் கேட்டனர். இதற்கு வார்த்தைகளில் விளக்குவதைவிட சதுப்பு நிலக்காட்டிற்கே பேரப்பிள்ளைகளைஅழைத்துச் சென்றார் தாத்தா.
""தாத்தா, இந்த இடத்திற்குப் பெயர் என்ன?'' என்றாம் அனுஷா.
"" இந்த இடத்திற்குப் பெயர் பிச்சாவரம். உலகின் 2வதுபெரிய சதுப்புநிலக்காடு இது'' என்றார் தாத்தா.
""சதுப்புநிலக்காடுன்னா என்ன தாத்தா?'' என்றாள் சாயிபவித்ரா.
"" கடலின் கரையோரங்களில் உள்ள நிலப்பரப்புகளில் உவர் நீரில் அதாவது நிலமும் கடலும் சேரும் பகுதிகள் மண்ணும் நீரும் சேர்ந்து சேற்றுப் பகுதியாக சில அடி உயரத்திற்கு நீர்நிறைந்து இருக்கும். இந்தப் பகுதியில் வளரும் மரங்களடர்ந்த பரப்பைதான் சதுப்புநிலக்காடுன்னு சொல்றாங்க'' என்றார் தாத்தா.
"" தரையில காடுகள் பார்த்திருக்கேன். இங்கே தண்ணிமேல காடு இருக்கே!'' என்று ஆச்சரியப்பட்ட திவ்யா, "" தாத்தா, இந்த மரங்களின் பெயர் என்ன?'' என்றாள்.
"" இந்த வகை மரங்களை ஏவிசினியா, மாங்க் ரோவ் என்றும் சொல்வாங்க. தமிழில் சுரபுன்னை,அலையாத்தி மரங்கள் என்று சொல்வாங்க!'' என்றார் தாத்தா.
"" இந்த மரங்கள் தண்ணி மேலத்தான் வளருமா?'' என்றான் மூர்த்தி.
"" பொதுவாக மரங்கள் வேர் பூமிக்குள்ளதான் இருக்கும். மாங்க்ரோவ் மரவேர்கள் தண்ணீர் பரப்புக்கு மேல் விரல்களைப்போல நீண்டுகொண்டிருக்கும். அதுக்கு மேல தான் இலைகள், கிளைகள் இருக்கும். பார்ப்பதற்கு புதர்போல இருக்கும். இந்த மரங்கள் வேர்கள் மூலமாகதான் சுவாசிக்கும். வேர்களில் ஆங்காங்கே துளைகள் எல்லாம் இருக்கும். இதை சுவாசிக்கும் வேர்கள்(கீஞுண்ணீடிணூச்tணிணூதூ ணூணிணிtண்) என்று சொல்வாங்க.'' என்றார் தாத்தா.
"" இது குளம், ஏரி மாதிரியோ கடல் மாதிரியோ இல்ல இதை எப்படி சொல்றது?'' என்று சந்தேகம் கேட்டான் அருண்.
"" கடல்முகத்துவாரம் என்று சொல்லலாம். இங்கிருந்து ஆயிரக்கணக்கான கால்வாய்கள் பிரிந்து கடல் நோக்கிச் செல்கின்றன. இந்த சதுப்பு நிலக்காடு மூவாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதுபோல கொல்கத்தா அருகேஉள்ள சுந்தர்வன காடுதான் உலகின் பெரிய சதுப்புநிலக்காடு'' என்றார் தாத்தா.
"" இந்த சதுப்பு நிலக்காடுகளால் என்ன நன்மை?'' என்று ஆர்வமாய் கேட்டாள் பிரியா.
"" புயல், மண் அரிப்பு, கடல்நீர் புகுதல், இயற்கை சீற்றங்களில் இருந்து இந்த காடுகள் காக்கும். மாங்க்ரோவ் என்ற அலையாத்தி மரம் வேகமாக வரக்கூடிய அலைகளை தடுத்து, அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தும். சுனாமி மாதிரி பெரிய அலை வெள்ளம் வந்தா இந்த காடுகள் அந்த ராட்சச அலைகளை தடுத்து நிலப்பரப்புக்கும் ஊடுறுவாம செய்துடும்.'' என்றார் தாத்தா.
குட்டீஸ் கதை கேட்டாச்சு. இப்ப 2 கேள்விக்கு பதில் சொல்லுங்க!
1. உலகின் பெரிய சதுப்பு நிலக்காடு எது?
2. சுவாசிக்கும் வேர்கள் கொண்ட மரம் எது?
விடை: சுந்தர்வன காடு. 2. மாங்க்ரோவ் மரம்.

39 . மாலை வேளை பொழுது போக தாத்தா விடுகதை சொல்ல, அதற்கு பேரப்பிள்ளைகள் பதில்சொல்லிக்கொண்டிருந்தனர்.
கிச்சனில் பாட்டி சிற்றுண்டி செய்து கொண்டிருந்தார்.
""ம்ம்ம்... ஆ... மணக்கும் வாசனையே பசிய துõண்டுதே!'' என்று குதுõகலித்தாள் அனுஷா.
பாட்டி கிச்சனில் இருந்து சிற்றுண்டியுடன் வந்தார்.
""ஆஹா...! என்ன மணம்! சுட... சுட... ஆவி பறக்குதே! என்ன பாட்டி அது?'' என்றாள் ஆசையாய் திவ்யா.
""உங்களுக்குப் பிடிச்ச ஐட்டம் தான் எங்கே கண்டுபிடி?'' என்றார் பாட்டி.
""எனக்குத் தெரியுமே! நுõடூல்ஸ் தானே! ஆ... நாக்குல எச்சில் ஊறுதே!'' என்றாள் சாய்பவித்ரா.
"" பாட்டி, இந்த நுõடூல்ஸ் நீங்க எங்களை மாதிரி இருந்தப்ப இருந்துச்சா, நீங்க சாப்பிட்டு இருக்கீங்களா?'' என்று கேட்டான் மூர்த்தி.
"" அந்தக்காலத்தில் இருந்ததான்னு எனக்குத் தெரியல. ஆனால் நான் சிறுவயதில் சாப்பிட்டதில்லை'' என்றார் பாட்டி.
இதைக்கேட்டு தாத்தா சிரித்துக்கொண்டே பாட்டியைப் பார்த்து,"" காலம் மாறிப்போச்சு... சாப்பிடற சாப்பாடும் மாறிபோச்சு! நாம சாப்பிட்ட இடியாப்பம் மாதிரி தானே இந்த நுõடூல்ஸ் இருக்கு?'' என்றார் தாத்தா.
""தாத்தா, நுõடூல் பத்தி கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன்...''
என்று கெஞ்சினாள் பிரியா.
"" உங்க கையில இருக்கற உணவுக்குப் பேரு, நுõடூல்ஸ்! இது ஒரு லத்தீன் வார்த்தை. இதற்கு முடிச்சு என்று அர்த்தம். இது சுவையுள்ள இன்ஸ்டன்ட் உணவு வகைகளில் ஒன்று. மாவு பொருட்களால் ஆனது. இந்த நுõடூல்ஸ் 5ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலமாக இருந்தது.'' என்றார் தாத்தா.
"" இந்த சுவையான உணவைக் கண்டுபிடிச்சது யாரு தாத்தா?'' என்று கேட்டா ன் அருண்.
""நுõடூல்ஸ்சின் பூர்வீகம் சீனா, இத்தாலி, அரபு நாடுகள் என்று சொல்பவர்களும் இருக்காங்க.
சீனாவில் நுõடூல்ஸ் தானியங்களில் இருந்து உருவாக்கினாங்க. அப்புறம், சீனாகிட்டேயிருந்து கத்துக்கிட்டு ஜப்பான்காரங்க உருவாக்கி உலக அளவில் பரப்பினாங்க. 13ம் நுõற்றாண்டுல சீனாவுக்கு போன மார்க்கோபோலோ என்பவர் அந்த நாட்டில் இருந்த நுõடூல்சை சாப்பிட்டிருக்கிறார். அதன் இதமும், ருசியும் அவரை கவர்ந்து விட அங்கிருந்து நுõடூல்சை இத்தாலிக்கு கொண்டு வந்தாரு. இத்தாலியில் இருந்து மற்ற நாடுகளுக்கு நுõடூல்ஸ் உணவு பரவி, ரொம்ப பிரபலமானது.
இப்போ ஆசிய நாடுகளில் நுõடூல்ஸ் சுவையான, சீக்கிரம் சமைத்து சாப்பிடும் உணவா இருக்கு. அதுவும் உங்களைப் போல குட்டீஸ்களுக்கு பேவரைட் உணவு இதுதான்!'' என்றார் தாத்தா.
குட்டீஸ் கதை படிச்சாச்சு! இப்ப 2 கேள்விக்கு பதில் சொல்லுங்க!
1. நுõடூல்ஸ் போல இருக்கும் ஒரு இந்திய உணவு எது?
2. ஜப்பான் எந்த நாட்டிலிருந்து நுõடூல்ஸ் செய்ய கற்றுக்கிட்டாங்க?
விடை: 1. இடியாப்பம் 2. சீனா


40 . ""தாத்தா, நவராத்திரி விழாவுக்கு நம்ம வீட்ல கொலு வைச்சோம்ல அது எதுக்காக தாத்தா?'' என்றாள் அனுஷா.
"" நவராத்திரி கொலு?உணர்த்தும் உண்மையை குழந்தைகளாகிய நீங்க கண்டிப்பாக தெரிஞ்சுக்கணும்'' என்றார் தாத்தா.
"" என்ன தாத்தா சொல்றீங்க? நாங்க எல்லாம் பொம்மை வைச்சு விளையாடற மாதிரி, பெரியவங்க விளையாடும் பொம்மை விளையாட்டுதான் கொலுன்னு நினைச்சேன்!'' என்றாள் சாயிபவித்ரா.
சாயி அப்படி சொன்தும் சிரித்த தாத்தா, "" ஒவ்வொரு மனிதனும் எந்த வகையிலாவது தன்னை படிப்படியாக உயர்த்திக்கணும் அதை ஞாபகப்படுத்தறது தான் கொலு'' என்றார் தாத்தா.
"" அதைப்பற்றி விவரமா சொல்லுங்க கேட்டுக்கிறோம்'' என்றாள் திவ்யா.
"" நவராத்திரி என்றால் ஒன்பது இரவு. ஒவ்வொரு இரவுக்கும் ஒருபடி என்று விளக்கும் பொருட்டுதான் கொலு காட்சியில் 9 படிகள் வைக்கிறாங்க'' என்றார் தாத்தா.
"" ஒவ்வொரு படியிலும் என்னென்ன பொம்மைகள் வைக்கணும்னு ஏதாவது முறையிருக்கா தாத்தா?'' என்றான் மூர்த்தி.
"" இருக்கே. அதை சுருக்கமா சொல்றேன்'' என்றவர் சொல்ல ஆரம்பித்தார்:
""முதல்படியில் ஓரறிவு உயிர்ப்பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகளும்,
2வது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகளும்,
3வது படியில் மூவறிவு உயிர்களான கரையான், எறும்பு போன்ற பொம்மைகளும்,
4வது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களான நண்டு, வண்டு பொம்மைகளும்,
5வது படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகள், பறவைகள், பொம்மைகளும்,
6வது படியில் ஆறறிவு கொண்ட உயர்ந்த மனிதர்களின் பொம்மைகளும்,
7வது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகள் பொம்மைகளும்,
8வது படியில் தேவர்களின் உருவங்கள், நவநக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்ட திக்கு பாலகர்களும்,
9வது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகளும் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் ஆதிபராசக்தி நடு நாயகமாக வைக்க வேண்டும்.'' என்றார் தாத்தா.
"" பல வீடுகளில் நீங்க சொன்ன வரிசைப்படி பொம்மைகள் வைத்திருக்க வில்லையே?'' என்றான் அருண்.
"" கொலுபடி தத்துவம் தெரியாதவங்க தெரியாம அப்படி வைச்சிருக்கலாம். நம்ம வீட்ல வைத்த முறைபடி உள்ள கொலுதான் சரின்னு தெரிஞ்சுக்குங்க'' என்றார் தாத்தா.
"" இந்த கொலுபடி பொம்மைகள் என்ன உணர்த்துது தாத்தா?'' என்றாள் பிரியா.
மனிதன் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று கடைசியில் தெய்வநிலையடையணும் என்பதை உணர்த்துவதுதான் கொலு காட்சி'' என்றார் தாத்தா.
குட்டீஸ் கதைப் படிச்சாச்சு. இதில் 2 கேள்விக்கு பதில் சொல்றீங்களா?
1. கொலுகாட்சியில் எத்தனை படிகள் இருக்கணும்?
2. நான்காவது படியில் என்னவகை பொம்மைகள் இருக்கணும்?
விடை: 9 படிகள். 2. வண்டு, நண்டு போன்ற பொம்மைகள்