செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

குட்டீஸ் கேள்வி- பதில்/ தேவராஜன்/

குட்டீஸ் கேள்வி- பதில்/ தேவராஜன்/ *டிவிடி என்றால் என்ன? - ஆர். கோகுல், பள்ளூர். டிவிடி (ஈடிஞ்டிtச்டூ ஙஞுணூண்ச்tடிடூஞு ஈடிண்ஞி) என்பது சிடிக்களின் அடுத்த நிலை. சி.டி.க்களில் (இணிட்ணீச்ஞிt ஈடிண்டு) 600 எம்.பி. அளவுள்ள டேட்டாக்களை மட்டுமே பதிந்து கொள்ள முடியும். ஆனால் டிவிடிக்களில் 4 ஜி.பி. அளவு டேட்டாக்களை பதிந்து கொள்ள முடியும். இது சிடியை காட்டிலும் 5 மடங்கிற்கு மேல் ஆகும். இப்போது சிடியைக் காட்டிலும் டிவிடிக்களைத்தான் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சிடிக்களின் விலையை விட டிவிடிகளின் விலையும் சற்றுதான் அதிகம். *சிம்கார்டு கண்டுபிடித்தது யார்? - ரா. வீரபாண்டியன், புதுக்கோட்டை. செல்போன்களில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள சர்வீஸ் புரொவைடர்களால் வழங்கப்படும் ஒரு சிறிய அட்டைக்குப் பெயர் தான் சிம்கார்டு. சிம் என்பதன் விரிவாக்கம் குதஞண்ஞிணூடிஞஞுணூ ஐஞீஞுணtடிtதூ Mணிஞீதடூஞு (குஐM). முதல் சிம் கார்டு 1991ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த சிம் கார்டை முனிச் ஸ்மார்ட் கார்டு தயாரிப்பாளர் கீய்செக்கெ - டெவ்ரியன்ட் உருவாக்கினார். முதல் 300 சிம் கார்டுகளை, பின்லாந்து கம்பியற்ற நெட்வொர்க் வழங்குனர் ரேடியோலின் ஜாவுக்கு விற்றார். * வலிப்பு வந்தவர்களுக்கு சாவிகொத்தைக் கொடுப்பது ஏன்? - அருள்மொழி, நாகை. வலிப்பு வந்தவர்களுக்கு சாவி கொத்து கொடுப்பது, இரும்பு கம்பிகளைப் பிடிக்கக் கொடுப்பது, முகத்தில் குளிர்ந்த தண்ணீரைத் தெளிப்பது எல்லாம் மருத்துவ ரீதியான செயல்பாடுகள் இல்லை. வலிப்பு வந்தவர்களின் ஆடைகளைத் தளர்த்திவிட வேண்டும். நல்ல காற்றைச் சுவாசிக்க வழி செய்ய வேண்டும். காற்றை அடைத்துக்கொண்டு நிற்கக் கூடாது. வலிப்பு நோயாளியை ஒருக்களித்துபடுக்கும்படி செய்ய வேண்டும். இதனால் வாயிலிருந்து வழியும் கோழை வெளியேறும். தொண்டையை அடைத்துக் கொள்ளாது. வாயில் பற்களுக்கு இடையில் ஒரு துணியைச் சுருட்டி வைக்க வேண்டும். இதன் மூலம் நாக்கைக் கடித்துக் கொள்ளாமல் தடுக்கலாம்.வலிப்பு நோயாளிகளுக்குச் செய்யும் முதல் உதவிகள் இவை. பின்னர் அவருக்கு தெளிவு ஏற்பட்டதும் நன்றாகத் துõங்கச் செய்ய வேண்டும். *********************** *புரை ஏறுதல் எப்படி ஏற்படுகிறது? - பா.கிருத்திகா, அரையபுரம். உணவுக்குழலும் மூச்சுக்குழலும் வாய்க்குக் கீழ்புறம் அடுத்தடுத்து உள்ளன. உணவை விழுங்கும்போது, மூச்சுக் குழல் தானாக மூடிக்கொள்ளும். உணவு மூச்சுக் குழலில் போய்விடாமல் இருக்கவே இயற்கையாக அமைந்துள்ள ஏற்பாடு இது. சில சமயம் தப்பித் தவறி உணவுத் துணுக்கு அல்லது நீர்த்துளி மூச்சுக்குழலில் சென்று விடுகிறது. அப்போது மூச்சுக்குழலின் தசைகள் அதை வெளியேற்றத் தீவிரமாக இயங்குகின்றன. இதைத்தான் புரை ஏறுதல் என்கிறோம். புரை ஏறினால் யாரோ நினைத்துக் கொள்கிறார்கள் என்று தலையில் தட்டுவார்கள். யாரோ நினைத்துக் கொள்வதற்கும் இதற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை. * போலீஸ் துறையின் முன்னோடி ரோமாபுரியை ஆட்சி செய்த அகஸ்டஸ் சீசர் தான் போலீஸ் துறையின் முன்னோடி என்று கூறலாம். இவர் தனது நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக தனியாக ஒரு படையை முதன் முதலாக ஏற்படுத்தினார். இந்த முறை ஏழாம் நுõற்றாண்டிற்கு பிறகு இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலும் பரவியது. இந்தியாவில் 1792 ம் ஆண்டு டிசம்பர் 7 ம் தேதி கிழக்கிந்திய கம்பெனியரால் காவல்துறை ஆரம்பிக்கப்பட்டது. அப்போது முக்கியமான ஊர்களில் காவல் நிலையம் அமைக்கப்பட்டது. அந்த காவல் நிலையத்தில் சப் - இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு உதவி இன்ஸ்பெக்டரும் 10 போலீசரும் ஒரு எழுத்தரும் இருந்தனர். இவர்கள் அனைவரும் இணைந்த குழுவிற்கு காவல்குழு என்று பெயர் வைத்தனர். 1867 ல் முதலாவது காவல் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன்படி காவலர்களின் சீருடை, சம்பளம், மற்றும் பணி தொடர்பான விதி முறைகள் வகுக்கப்பட்டன. *யானையை ஜம்போ என்று சொல்லக்காரணம் என்ன? / டிச.23/ - எஸ். தையல்நாயகி, ராமந்தீஸ்வரம். மிகப் பெரியனவற்றை ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றபோது ஜம்போ என்பர். மிகப்பிரபலமான ஒரு யானையின் பெயர்‘ஜம்போ’ சூடானிலிருந்து இந்த ஜம்போ யானை பாரிஸ் மிருகக்காட்சி சாலைக்கு கொண்டுவரப்பட்டு, பின்னர் 1865ம் ஆண்டு லண்டன் மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்டது. இது ஆப்பிரிக்க யானை. இந்த யானையின் எடை 6.5 டன். லண்டன் மிருகக்காட்சி சாலையில் இருந்தபோது இந்த யானை எல்லாரையும் கவர்ந்தது. குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் இதற்கு அமோக வரவேற்பு இருந்தது.இந்த யானை மிகவும் அழகாகவும், எல்லோராலும் விரும்பப்பட்டதாகவும் இருந்ததாம். இந்த யானை, 1882ம் ஆண்டு சர்க்கஸ் நிறுவனமொன்றுக்கு விற்கப்பட்டது. இயல்பிலேயே குறும்புக்கார குணம் கொண்ட ஜம்போ யானை சர்க்கசில் பல சாகசங்கள் செய்து ரசிகர்களையும் , குழந்தைகளையும் கொள்ளை கொண்டது . ஜம்போ யானை மிகவும் பிரபலமானதால், ஒரு பணக்காரர் அதைப் பணம் கொடுத்து வாங்க முன்வந்தார் . ஆனால் அது தடுக்கப்பட்டுவிட்டது. 1885ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி, இந்த யானையை ரயிலில் ஏற்றிச் சென்றபோது விபத்தில் இறந்தது. ஜம்போ இறந்த பிறகு, அதன் நினைவாக ஒரு சிலை இங்கிலாந்தில் நிறுவப்பட்டது. ***************************** மனித இனத்தைச் சேர்ந்ததா மனித குரங்கு? - பிரபு, கள்ளக்குறிச்சி மனிதக் குரங்கு என்பது ஹொமினோய்டியே இனம் சேர்ந்த ஒரு உயர் விலங்கினம். பொதுவாக இது மனித இனத்தைச் சேர்ந்தது என்று கருதுவதில்லை. எனினும், அறிவியல் வகைப்பாட்டு அடிப்படையில் மனிதரும் இவ்வகையுள் அடங்குபவர். மனித குரங்கு இனத்தில் இரண்டு ஹொமினோய்டு உள்ளன ஹைலோபட்டிடே குடும்பம்: லார் கிப்பன் , சியாமாங் என்னும் குரங்கினம் குறிப்பிடத்தக்கவை. இந்த குரங்கினத்தை ‘குறைந்த மனிதக் குரங்குகள்‘ என அழைப்பர். ஹொமினிடே குடும்பம்: இது ஒராங்குட்டான்கள், கொரில்லாக்கள் சிம்ப்பன்சிகள் என்பவற்றுடன் மனிதர்களையும் உள்ளடக்கும். இவை பெரு மனிதக் குரங்குகள் . பார்பேரி மனிதக் குரங்குகள் போன்ற சில உயர் விலங்குகளில் வாலில்லாத் தன்மையை வைத்து மனிதக் குரங்குகள் எனப்பட்டாலும், இவை உண்மையான மனிதக் குரங்குகள் அல்ல. மனிதரையும், கொரில்லாக்களையும் தவிர்த்துப் பிற உண்மையான மனிதக் குரங்கு இனத்து விலங்குகள் அனைத்தும் சுறுசுறுப்பாக மரம் ஏறும். இவை விதைகள், இலைகள், பழங்கள் பல சந்தர்ப்பங்களில் முதுகெலும்பிலிகளின் ஓரளவு இறைச்சி, எளிதில் செரிமானம் அடையக்கூடிய எல்லாவற்றையும் உண்ணும். ஆபிரிக்காவும் ஆசியாவும் இவற்றின் தாயகம் . * ஜி.யு. போப், வீரமாமுனிவர் போன்றவர்கள் தமிழ் இலக்கியம் எழுதியுள்ளார்கள். நம் இந்தியர்கள் ஆங்கில இலக்கியம் எழுதியிருக்கிறார்களா? - விமலா, திருச்சேரை. பலர் எழுதி இருங்காங்க விமலா. ஆர்.கே.நாராயணன், புக்கர் பரிசு வென்ற அரவிந்த் அடிகா, விக்ரம் சேத். சஷி தரூர், அருந்ததி ராய், குஷ்வந்த் சிங், அனிதா தேசாய், இந்திய வம்சாவளியினரான சல்மான் ருஷ்டி, வி.எஸ்.நேய்பால், போன்றவர்கள் இந்தியர்கள் தான்! இன்னும் சிலர் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ****************** அடிக்கடி தாகம் எடுப்பது எதனால்? /6.1.12/ - ஆர். பாலா, பள்ளூர். உடலில் திரவப்பொருட்கள் குறையும்போதோ, உப்பின் அடர்த்தி அதிகமாகும் போதோ தாக உணர்வு ஏற்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளின்போது மூளை வேகமாக செயல்பட்டு தாக உணர்வை ஏற்படுத்துகிறது. உடலில் தொடர்ந்து நீரிழப்பு இருக்குமானால் அது பலவகையான சிக்கல்களின் அறிகுறியாக இருக்கலாம். மேலும் நரம்பியல் கோளாறுகளின் விளைவாக மூளையின் செயல்திறன் குறையும்; சிறுநீரக பாதிப்புகள் ஏற்படும். அளவுக்கதிகமான தாக உணர்வை பாலிடிஸ்பிசியா என்றும் அதிகப்படியாக சிறுநீர் போதலை பாலியூரியா என்றும் கூறுகின்றனர். தாக உணர்வு மைய நரம்பு மண்டலத்தினால் உணரப்படுகிறது. எக்ஸ்ட்ரா செல்லுõலர் தர்ஸ்ட் என்பது உடலில் நீரின் அளவு குறைவதால் ஏற்படும் தாக உணர்வு ஆகும். இன்ட்ரா செல்லுõலர் தர்ஸ்ட் என்பது உடலில் உப்பின் அடர்த்தி அதிகரிப்பதால் ஏற்படும் தாக உணர்வு ஆகும். இரண்டுவகையான தாக உணர்வுகளுமே மூளையின் மைய நரம்புமண்டலத்தால்தான் உணரப்படுகின்றன. மீன் தண்ணீரில் அசைவற்று நிற்பது எப்படி? - டி. சிவகாம சுந்தரி, ஈரோடு. அசைவற்று நிற்கக்கூடிய திறமை மீனுக்கு உண்டு. மீன்கள் இப்படி தண்ணீரில் நிலையாக நிற்பதற்கு, அவற்றின் உடலுக்குள்ளே உள்ள பிரத்யேகமான வாயு பை உதவி செய்கிறது. ஒரு பலுõனின் வடிவில் உள்ள இந்த வாயு பை, மீனின் வயிற்றுக்கும், குடலுக்கும் மேலே அமைந்திருக்கிறது. மீனின் மொத்த உடற்பரப்பில் 5-லிருந்து 6 சதவீதம் வரை இந்தப் பை இருக்கும். ஆக்சிஜன், கார்பன்டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆகிய வாயுக்களின் கலவை இந்தப் பையில் நிறைந்திருக்கும். பைக்குள் உள்ள வாயுவின் பரப்பை அதிகரிப்பதாலும், குறைப்பதாலும் தன் உடல் எடையை முறைப்படுத்துகிறது. அதனால், தண்ணீருக்குள் அசைவற்று ஆழ்ந்திருக்கிறது. வாயுப்பை முழுமையாக நிறைந்திருக்கும்போது, மீன் தண்ணீரின் மேல் தளத்தில் மிதந்துகொண்டிருக்கும். ஓரளவு வாயுவை வெளியே விடும்போது கீழே வந்து தண்ணீருக்குள் தங்கி நிற்க மீனால் முடியும். தண்ணீரின் ஆழத்திற்கு ஏற்ற வகையில் வாயு பையின் பருமனையும், அதில் அடங்கியுள்ள வாயுவின் அளவையும் முறைப்படுத்துவதற்கான தன்மைகள் மீனின் உடலில் உண்டு. மோட்டார் வைக்காமலேயே மரத்தின் அவ்வளவு உயரத்திற்குத் தண்ணீர் ஏறுகிறதே, அது எப்படி? - எஸ். தையல்நாயகி, வடக்காலத்துõர். மரங்கள் மற்றும் தாவரங்களில் உள்ள வேர் முடிச்சுகளில் சர்க்கரைக் கரைசலும், உப்புப் பொருட்களும் இருக்கும். இதனால், வேர்களின் உள்ளே அழுத்தத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக, வெளியே இருக்கும் தண்ணீர் வேருக்குள் செல்கிறது. இதற்கு சவ்வூடு பரவல் என்று பெயர். இப்படி வேர் முடிச்சுகளில் தண்ணீர் சேர்ந்துகொண்டே இருக்கும். இதனால் அதிகரிக்கும் தண்ணீரின் அழுத்தம் காரணமாக, தண்ணீர் மேல் நோக்கி உயரும். அடி மரம் வழியாக, கிளை வழியாக இலைகளுக்கு, ஒரு செல்லில் இருந்து மற்றொரு செல் வழியாகத் தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது. அத்துடன் ஊட்டச் சத்துக்களும் சென்று சேர்கின்றன. மரங்கள், வளரும் காலத்தில் இலைகள் மூலமாக ‘டன்’ கணக்கான தண்ணீரை வளி மண்டலத்தில் வெளியேற்றுகின்றன. ஆவியாதல் எனும் செயல்பாடு மூலமாக இப்படிப் பல மடங்கு தண்ணீர் வெளியேறுகிறது. இதன் காரணமாக, இலைகளில் ஏற்படும் தற்காலிக வெற்றிடத்தை அடியிலிருந்து வேர் வழியாக வரும் தண்ணீர் நிரப்புகிறது. தண்ணீர் மூலக்கூறுகள் எப்போதும் நெருக்கமாகப் பிணைந்து கிடக்கும். ஆவியாதலால் தண்ணீர் மூலக்கூறு வெளியேறும் நிலையில், கீழ்ப்படியிலிருந்து மேல் படிக்கு இழுக்கப்படுவது போல்,புதிய தண்ணீர் மூலக்கூறுகள் சங்கிலித் தொடர்போல மேலே வந்து சேர்கின்றன. இப்படித்தான் மரத்தினுள் தண்ணீர் கீழிருந்து மேலே வருகிறது. இப்படிப் பல அடி துõரம் மேலே ஏறிய தண்ணீர்தான் இளநீராகவும் பதநீராகவும் நம்மை வந்தடைகின்றன. ******************** பிப்.24/ *பாம்பு போல் தோலுரிக்கும் விலங்கு உண்டா? ஏன் தோலுரிக்க வேண்டும்? -ஜெயகவிதா, மயிலாடுதுறை. பாச்சை, வெட்டுக்கிளி, தேள் போன்ற சில பூச்சிகள் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் கெட்டி அடைந்த தோலின் புறச் செல்களிலிருந்து நாம் சட்டையைக் கழற்றி விடுவது போல வெளியே எடுத்துவிடுகின்றன. நீங்கள் குறிப்பிட்டது போல பாம்பும் அவ்வப் போது தன் சட்டையைக் கழற்றிப் போடும். பாம்பு சட்டை உரிப்பது அதனுடைய வளர்ச்சிக்காக அல்ல. மேல் தோலினைக் கடித்து அதில் உள்ள சத்தினை உறிஞ்சும் பூச்சிகளிடமிருந்தும், வேறு பல கிருமிகளிடமிருந்தும் விடுதலை பெறவும், கீறல்கள், காயங்கள் மிகுந்த மற்றும் இறந்து போன வெளி செல்களை விட்டெறியவும் பாம்பு தன் தோலை உரிக்கின்றன. பாம்பு சட்டை உரிக்கும் நேரம் வந்தால், வெளிப்புறச் செல்களுக்கு உள்ளாக அருகில் இருக்கும் செல்கள் திரவமாக மாறி வழுக்கலை அளிக்கிறது. சட்டையின் வால் பக்கத்தை சொரசொரப்பான குச்சிகளில் ஒட்டச் செய்து அதிலிருந்து தன் உடலை மெல்ல வெளியே இழுத்துக் கொள்கிறது. மணிபர்ஸ், பெல்ட் இவை செய்வதற்காக சிலர் பாம்பின் தோலை உரிப்பதும் உண்டு. *தீயிலோ, கொதிக்கும் நீரிலோ கைப்பட்டால் படக் என்று எடுத்து விடுகிறோமே, அது எப்படி? - பழ. வீரபாண்டியன், பேரளம். உடலில் பெருமூளையின் முடிவு இல்லாமலேயே நிகழும் செயல்களை அனிச்சைச் செயல்கள் என்பார்கள். உணர்ச்சி நரம்புகளுக்கும், தண்டுவடத்துக்கும் இணைப்பு ஏற்படுவதால் இத்தகைய அனிச்சைச் செயல்கள் நிகழ்கின்றன. உடலின் அனிச்சைச் செயல்கள் பல, உடலுடன் கூடப் பிறந்தவையாகும். அதாவது அவை இயல்பாக, பயிற்சி இல்லாமல் நிகழ்கின்றன. மேலும் பயிற்சியின் மூலம் அனிச்சைச் செயல்களை உடல் கற்றுக்கொள்ளும். துõங்கும் போது கொசு கடிக்கிறது. உடனே கை கொசுவை அடிக்கிறது. இந்த செயல் துõக்கத்திலேயே நடைபெறுகிறது. இதுவும் அனிச்சைச் செயல் தான். இந்த அனிச்சைச் செயல் செயல்படும் விதம் எப்படி எனில், கொதிநீரில் விரலை வைத்த செய்தி பெருமூளைக்குச் சென்று, அது நரம்புகள் மூலம் கைத்தசைகளை ஏவிவிட்ட பிறகு கையை எடுப்பது மூளையின் கட்டளைப்படி நடப்பதாகும். ஆனால், நீரின் சூடு விரல்களில் பட்டதுமே நரம்புகள் அச்செய்தியைத் தண்டுவடத்துக்கு அனுப்புகின்றன. தண்டுவடத்தில் இருந்து நரம்புகள் மூலம் கைத்தசைகளுக்குக் கட்டளை போகிறது. உடனே கைத்தசைகள் சுருங்கிக் கரத்தை நீரில் இருந்து எடுத்துவிடுகின்றன. *நம் நாட்டின் தேசிய கீதம், தேசிய பாடல் இவற்றுக்கு உள்ள வித்தியாசம் என்ன? - எஸ். தங்மிஸ்தான், திருவேட்டக்குடி. தேசிய கீதத்தை எழுதியவர் ரவீந்திர நாத் தாகூர். தேசியப் பாடலை எழுதியவர் பங்கிம் சந்திர சட்டர்ஜி. தேசிய கீதம் 19ம் நுõற்றாண்டில் எழுதப்பட்டது. தேசிய பாடல் 18ம் நுõற்றாண்டில் எழுதப்பட்டது. இந்திய அரசியலமைப்பு குழு 1950 ஜனவரி 24 ல் ‘ஜன கண மன’ பாடலை நாட்டின் தேசிய கீதமாக அங்கீகரித்தது. 1911 டிசம்பர் 27ல் கோல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாகப் பாடப்பட்டது. 1912ல் தாகூரின் ‘தத்துவ போதினி’ பத்திரிகையில் பாரத விதாதா என்னும் தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டது. இந்த பாடலை ஏறக்குறைய 52 விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும். தேசிய கீதத்தை விட ‘வந்தே மாதரம்’ எனத் தொடங்கும் தேசியப்பாடல் பழமையானது. 1882 ல் பங்கிம் சந்திர சட்டர்ஜியின் ‘ஆனந்த மடம்’ நுõல் வெளியானது. எனவே அதற்கு முன்பே இது எழுதப்பட்டிருக்க வேண்டும். 1896 ல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இது முதன்முதலாகப் பாடப்பட்டது. இதற்கு இசையமைத்தவர் ரவீந்திர நாத் தாகூர். ******************* மார்ச்2 இந்தியாவின் முதல் தியேட்டர், முதல் திரைப்படம் எது? - டி.சி.சிவசண்முகம், அங்கம்பாக்கம். இந்தியாவில் தயாரான முதல் படம் ‘அரிச்சந்திரா’ 1913ல் வெளிவந்தது. மேல் நாட்டில் தயாரான ஊமைப்படங்கள், இந்தியாவிலும் திரையிடப்பட்டன. இந்தியாவில் ரிலீஸ் செய்யப்பட்ட முதல் திரைப்படத்தின் பெயர் ‘ஏசுவின் வாழ்க்கை.’ இந்த ஊமைப்படம், 1896ம் ஆண்டு மும்பையில் திரையிடப்பட்டது. இந்தப் படத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர் டுபான்ட் என்ற பிரெஞ்சுக்காரர். அவர், இந்தியாவில் ஒவ்வொரு நகரமாக அந்த பிலிம் பிரதியைக் கொண்டு வந்து திரையிட்டார். டுபான்ட், திருச்சிக்கு வந்து அப்படத்தை திரையிட்டார். அங்கு அப்படத்துக்கு ஏக வரவேற்பு. டுபான்டிடம் இருந்து ரூ.2 ஆயிரம் கொடுத்து ‘ஏசுவின் வாழ்க்கை’ திரைப்பட பிரதியையும், படம் காட்டும் கருவியையும் வின்சென்ட் என்பவர் வாங்கிக்கொண்டார். வசூல் குவிந்தது. வடநாட்டுக்கும் சென்று, இப்படத்தை திரையிட்டார். இதற்கிடையே, மேல் நாட்டில் இருந்து மேலும் பல சார்லி சாப்ளின் படங்களும் வரலாயின. இதனால் படங்களைத் திரையிட வின்சென்ட், அவருடைய சொந்த ஊரான கோவையில் 1914ம் ஆண்டு நிரந்தர சினிமா கொட்டகையை கட்டினார். அந்த தியேட்டரின் பெயர் ‘வெரைட்டி ஹால்.’ தென் இந்தியாவின் முதல் நிரந்தர சினிமா கொட்டகை இதுதான். இப்போது ‘டிலைட்’ என்ற பெயரில் உள்ளது. இதன்பின் சென்னையிலும், மற்ற இடங்களிலும் தியேட்டர்கள் தோன்றின. சென்னையில் கட்டப்பட்ட முதல் தியேட்டர் ‘கெயிட்டி’. *இரும்பு சத்தின் அவசியம் என்ன, அதிகம் சேர்ந்தால் உயிருக்கு ஆபத்தா? - வை. காமாட்சி, திருவிடைமருதுõர். இரும்பு சத்து குறைவால் வரும் நோய்கள் தான், உலகில் உண்ணும் பழக்கத்தால் வரும் நோய்களில் முதன்மையானவை என்று உலக சுகாதார மைய தகவல்கள் கூறுகின்றன. உலகின் 80% மக்கள் இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் என்றும், அதில் 30% மக்கள் இரும்பு சத்து குறைவால் வரும் ரத்தசோகை கொண்டவர்கள் என்றும் கூறுகிறார்கள். பெரும்பான்மையான புரதங்கள், நொதியங்கள் போன்றவற்றிற்கு இரும்புசத்து ஒரு இன்றியமையாத மூலப்பொருள். ஆக்சிஜனை ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு உடலில் எடுத்து செல்லும் ஹீமோகுளோபின், மயோகுளோபின் என்பவற்றின் உள்ளடக்கமாக இரும்பு சத்து உள்ளது. உடலில் மூன்றில் இரண்டு பகுதி இரும்பு சத்து ஹீமோகுளோபின் ஆக ரத்தச் சிவப்பணுக்களில் இருக்கிறது. இவை ஆக்சிஜனை திசுக்களுக்கு எடுத்து செல்லும். அதேபோல தசைகளில் உள்ள மயோகுளோபின் என்பது ஆக்சிஜனை தசைகளுக்கு மாற்றும். உயிரணுக்களின் பெருக்கம், வளர்ச்சி போன்றவற்றிற்கு இரும்பு சத்து முக்கியமான மூலப்பொருள். இரும்புச்சத்து குறைவால் போதிய ஆக்சிஜன் இல்லாமல் தளர்ச்சி, வேலை செய்ய திறமை இல்லாமை, நோய் எதிர்ப்பாற்றல் முறையில் குறைபாடு ஏற்படும். ஒரு நாளைக்கு எவ்வளவு இரும்பு சத்து அவசியம்? மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட மூன்று வகையான அளவு உண்டு. ஒன்று போதுமான அளவு. இரண்டாவது அதிகமான அளவு. மூன்றாவது இதற்கு மேலே இருந்தால் நச்சுப்பொருளாக மாறிவிடக்கூடிய அபாயத்தைக் குறிக்கும் அளவு என்று உள்ளது. * சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள்? - ஆர். ஸ்ரீநிஜா, ஸ்ரீரங்கம் சாம்பிராணியானது பாஸ்வெல்லியா செர்ராட் எனப்படும் தாவர குடும்பத்தை சேர்ந்த பிரங்கின்சென்ஸ் எனப்படும் மரத்திலிருந்து வடியும் பால் ஆகும். இது மிக மெதுவாக கடினமாகி ஒளிபுகும் தன்மையும் எளிதில் எரியும் தன்மையுடைய சாம்பிராணியாக மாறுகிறது. இவை எரிந்தால் மிகுந்த மணத்தை பரப்பும். பிரங்கின்சென்ஸ் மரங்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவில் குஜராத், அஸ்ஸாம், ராஜஸ்தான், பீகார், ஒரிசா மற்றும் தமிழகத்தில் கல்வராயன், சேர்வராயன் மலைச்சரிவுகளில் அதிகம் காணப்படுகிறது. சாம்பிராணியிலிருந்து ஒருவகை எண்ணை எடுக்கப்படுகிறது. அந்த எண்ணையிலிருந்து வார்னிஷ் மற்றும் சோப்பு உருவாக்கப்படுகிறது. ******************** மார்ச்16 பிக் பேங் தியரி என்பது என்ன? விளக்கம் சொல்லுங்க அங்கிள்! - ஜி. ஸ்ரீநிதி, ஸ்ரீரங்கம் பெரு வெடிப்புக் கோட்பாடு என்பது இதன் பொருள். உலகம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடு. இதுவரை முன்வைக்கப்பட்ட உலகின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது இதுதான். இந்தக் கோட்பாடு 20ம் நுõற்றாண்டுத் தொடக்கத்தில் வெளியான இரண்டு முக்கிய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் உருவானது. ஒன்று ஐன்ஸ்டீனுடைய பொதுச்சார்புக் கோட்பாடு, மற்றது அண்டவியற் கொள்கை. பொதுச்சார்புக் கோட்பாடு, உலக வெளியில் உள்ள பொருட்களிடையே காணப்படும் ஈர்ப்புத் தோற்றப்பாடானது மேற்படி பொருட்களின் திணிவுகளினால் பாதிக்கப்பட்டு வெளியும், காலமும் திரிபடைந்த ஒரு நிலையே என்று கூறுகின்றது. உலக வெளியில் உள்ள பொருள்கள் வெளியில் ஒரே சீராகப் பரவியிருக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டது அண்டவியற் கொள்கை. பெரு வெடிப்புக் கொள்கையின்படி உலக வெளியில் உள்ள பொருட்கள் அனைத்தும் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மிக அதிகமான அடர்த்தியுடன் கூடிய, சிறிய அளவிலான தீப்பிழம்பாக இருந்திருக்கிறது. இன்று அறியப்படுகின்ற உலகத்திலுள்ள பொருட்கள் அனைத்தும் சில மில்லி மீட்டர்கள் அளவுக்குள் அடங்கி இருந்திருக்கும் எனக் கணிப்பிடப்படுகின்றது. இத்தீப்பிழம்பானது, இன்று அறியப்படாத ஏதோ ஒரு காரணத்தினால் மிக வேகமாக விரிவடையத் தொடங்கிற்று. இதுவே பெரு வெடிப்பு எனப்படுகின்றது. ஒவ்வொரு விநாடியும் பல மடங்காக இவ் விரிவாக்கம் நடந்ததாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு விரிவடைந்தபோது வெப்பம் தணிந்த வாயுக்கள் ஆங்காங்கே நட்சத்திரக் கூட்டங்களாக உருவாகி இருக்கக்கூடும் என அவர்கள் கூறுகிறார்கள். * பனை வெல்லம் எப்படி தயாரிக்கப்படுகிறது? - கணேசன், காரைக்கால். கரும்பு அல்லது பனையிலிருந்து வெல்லம் தயாரிக்கப்படுகிறது. கரும்புச் சாறோ பனம்பாலோ ஒரு பெரிய அகண்ட வாணலியில், திறந்தவண்ணம், 200 டிகிரி சென்டிகிரேட் சூட்டில் வெகு நேரம் கொதிக்க வைக்கப்படுகிறது. இதனால் கரும்புச்சாறில் அல்லது பனம்பாலில் உள்ள நீர் ஆவியாகி பாகு போன்ற பதம் பெறப்படுகிறது. கொதி நிலையில் உள்ள பாகை அச்சில் ஊற்றி, உலர வைத்த பின், வெவ்வேறு வடிவங்களில் விற்பனை செய்யப்படுகிறது. கைகளால் பிடித்து உருட்டப்பட்ட வெல்லம், மண்டை வெல்லம் எனவும் அச்சுக்களில் ஊற்றி வடிவமைக்கப்பட்ட வெல்லம், அச்சு வெல்லம் எனவும் அழைக்கப்படுகிறது. * அங்கிள்,கோபப்படும்போது சிலருக்கு கண்கள் சிவப்பது ஏன்? - எஸ். செந்தில்குமார், தண்டராம்பட்டு. செந்தில், உங்கள் கேள்விக்கான பதில் இதோ! நம் உடலில் அட்ரினலின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் அவசர காலத்தில் அதாவது சண்டையிடுதல்,கோபப்படுதல், பயப்படுதல், ஓடுதல், அதிக எடையுள்ள பொருட்களை மூச்சைப் பிடித்து துõக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடும்போது, அதிக அளவில் ரத்தத்தில் இருந்து விடுவிக்கப்படுகின்றது. இதன் விளைவாக நம் உடல் துரிதமாக செயல்படும். அப்போது இதயத்துடிப்பு அதிகரிக்கும். ரத்தக்குழாய்கள் சுருங்கி, அழுத்தம் அதிகரிக்கும். இந்த சமயத்தில் காதுமடல், கண், மூக்கு நுனி, முகப்பரு அனைத்தும் சிவப்பேறி காணப்படும். ****************** மார்ச்9/ பேஸ் புக் என்றால் என்ன? - ஏ. முத்து, வாழைப்பந்தல். பேஸ்புக் 2004ல் தொடங்கப்பட்ட இணையவழி சமூக வலையமைப்பு. 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களின் பெயரைப் பதிவு செய்து கொண்டு பேஸ்புக்கில் உள்ள மற்றவர்களை நண்பர்களாக்கிக் கொண்டு தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம். இதை மார்க் சக்கர்பர்க் தன் நண்பர்களான எடுடாரோ சாவ்ரின், டஸ்டின் மாஸ்கோவிட் போன்ற ஹார்வர்ட் பல்கலை நண்பர்களுடன் தொடங்கினார். பிறகு ஐவி லீக், ஸ்டான்போர்டு பல்கலைக்கழக மாணவர்களும் பேஸ்புக்கில் சேர்ந்தனர். 2008ல், பேஸ்புக்கின் தலைமையகம் அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் தொடங்கப்பட்டது. 2010ல், பேஸ்புக்கின் மதிப்பு 41 மில்லியன் டாலராக உயர்ந்து, கூகுள் , அமேசானைத் தொடர்ந்து அமெரிக்காவின் மூன்றாவது பெரிய இணைய தள நிறுவனமாக உயர்ந்தது. 2011ல் பேஸ்புக் தலைமையகம் மென்லோ பார்க், கலிபோர்னியாவிற்கு மாற்றப்பட்டது. பேஸ்புக் உபயோகிப்பாளர்கள் தங்களுடைய புகைப்படம், சொந்த விருப்பங்கள், தொடர்பு கொள்ளும் விவரம் போன்ற தகவல்களைக் கோப்புகளாக இத்தளத்தில் பதிவு செய்யலாம். ஏப்ரல் 2011ல் பேஸ்புக்கில் அரட்டை அடிப்பதை நேரடிக் குரல் அழைப்பு மூலம் உலகெங்கும் உள்ள நண்பர்களுடன் பேசும் முறை கொண்டு வரப்பட்டது. ஜூலை 2011ல், ஸ்கைபை என்ற நிறுவனத்தின் உதவியுடன் நேரடி ஒளிப்பதிவாக ஒருவருக்கொருவர் பேசுவதைப் பார்க்கும் முறையைக் கொண்டு வந்தனர். * கரப்பான் பூச்சிக்கு ரத்தம் வெள்ளையாக இருக்கும் என்பது உண்மையா? - ரா. வீரபாண்டியன், புதுக்கோட்டை. ஆமாம்! கரப்பான் பூச்சிகள் எதையும் உண்ணக் கூடிய ஒரு அனைத்துண்ணி இனம். இதன் உடலில் ஓடும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் இல்லாததால் இவற்றின் ரத்தம் வெள்ளை நிறமாக இருக்கும். * நாம் துõங்கும் போது ஏன் கனவு வருகிறது? கனவு பற்றிய நம்பிக்கைகள் உண்மையா? - கே. விக்னேஷ், ஆரணி. கனவு என்பது மனிதனின் துõக்கத்தில் உலாவரும் உள்மன வெளிப்பாடு. கனவு காணாத மனிதனே இல்லை என்னும் அளவிற்கு மனிதனின் இயல்பான செயலாய் இது இருக்கிறது. கனவு என்பது ஒருவர் துõங்கும் பொழுது அவரது மனத்தில் எழும் மனப் படிமங்கள், காட்சிகள், ஓசைகள், உணர்வுகள், நிகழ்வுகளைக் குறிக்கிறது. ஒருவர் கனவு காணும் பொழுது அவரது கண்களின் அசைவுகள் காணப்படுவதும் உண்டு. கனவு என்றால் என்ன என்பது தொடர்பாக இதுவரை ஒரு நிச்சயமான அறிவியல் புரிதல் இல்லை. இருப்பினும், வாழ்வில் பின்னர் நிகழப்போவதைக் குறிப்பால் உணர்த்தும் ஒன்றாகக் கனவு நம்பப்படுகிறது. கனவில் வரும் நிகழ்வின் அடிப்படையில் நல்ல கனவு, கெட்ட கனவு என்றும் கருதப்படுகிறது. கனவில் நல்லது நிகழ்ந்தால் வாழ்க்கையில் அதற்கு நேர்மாறாகத் தீயது நடக்கும். கனவில் தீயது நிகழ்ந்தால் வாழ்க்கையில் நல்லது நடக்கும். இது கனவு நம்பிக்கைகளுக்கு மட்டுமே உரிய சிறப்புத் தன்மை. இப்படி நாட்டுப்புற மக்களிடம் கனவு குறித்த நம்பிக்கைகள் நிறைய காணப்படுகின்றன. கனவு நிகழ்வுகளோடு நனவு நிகழ்வுகளைப் பொருத்திப் பார்த்து வியந்து பேசும் வழக்கமும் மக்களிடம் உள்ளது. உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டின் கனவுகள் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார். கனவு பற்றிய நம்பிக்கைகள் சில: ஏர் உழுவதாகக் கனவு கண்டால் எடுத்த காரியங்கள் தாமதமாகும். திருமணம் பற்றிக் கனவு கண்டால் தீயது நடக்கும். கனவில் தாமே இறந்துவிட்டதாகக் கனவு கண்டால் ஆயுள் பெருகும். மரணத்தைக் கனவில் கண்டால் சுகமாகும். இறந்தோர் கனவில் வந்து அழைத்தால் மரணம் வரும். அதிகாலையில் காணும் கனவு பலிக்கும். ****************** குட்டீஸ் கேள்வி பதில் மார்ச்23 *அக்னி நட்சத்திரம் என்றால் என்ன? - எம். நிகேஷ் குமார், காட்டூர். பொதுவாக சித்திரை, வைகாசி மாதங்களில் பூமிக்கும், சூரியனுக்கும் இடைப்பட்ட துõரம் சற்று குறையும். அதனால் சூரியனிடம் இருந்து வரும் கதிர் வீச்சு பூமியில் செங்குத்தாக விழும். இதனால் சாதாரண நாட்களை விட இந்த இரு மாதங்களில் பூமியில் சூரிய வெப்பம் சற்று கூடுதலாக இருக்கும். பெரும்பாலும் சித்திரை மாத இறுதி பத்து நாட்களும் வைகாசி மாத முதல் பத்து நாட்களும் இணைந்த கடும் கோடை பகுதியாகும். இந்நாட்களில் முதல் ஏழு நாட்கள் சுமாராகவும் இடையில் ஏழு நாட்கள் மிக அதிகமாகவும் கடைசி ஏழு நாட்கள் சுமாராகவும் வெப்பம் தகிக்கும். இப்படி தகிக்கும் காலத்தை அக்னி நட்சத்திர காலம் என்பது நடைமுறை. இந்த ஆண்டு மே 3ம் தேதியிலிருந்து மே 28ம் தேதி வரை அக்னி நட்சத்திர காலமாகும். *பனி மழை பொழிவது எப்படி? - எஸ். சரண்குமார், கோபி. வானத்தில் வெப்பநிலை மிக குறைவாக இருக்கும் போது மழை பனியாகிறது. அந்தப் பனி பூமி வரும் வரை வெப்பநிலை குறைவாகவே இருந்தால் மழை பனியாக பொழிகிறது. வெப்பநிலை, நீர் உறையும் அளவோ, அதைவிட குறைவாகவோ (மைனஸில்) இருந்தால் மழை பனியாக பொழிய வாய்ப்புண்டு, இந்த வெப்பநிலை கூணூணிணீணிண்ணீடஞுணூஞு முழுவதும் நிலவ வேண்டும் . மேலே சொன்ன அதேப்பனி காற்று மண்டலத்தில் ஏற்படும் வெப்ப மாற்றம் காரணமாக சிறு பனி கட்டி மழையாக பெய்யும். பனியாக ஆரம்பிக்கும் மழை காற்றில் புகுந்து பூமிக்கு வரும் வழியில், காற்று மண்டலத்தில் எங்காவது வெப்பம், உறையும் வெப்ப நிலையை விட அதிகமாக இருக்கும் போது மீண்டும் நீராகி, நிலத்தை நெருங்கும் முன் மீண்டும் குறைந்த வெப்பம் காரணமாக சிறு ஐஸ் கட்டிகளாக விழும். இந்த கட்டிகள் சிறு கற்கண்டு அளவிலோ இல்லை அதை விட கொஞ்சம் பெரியதாகவோ இருக்கும். * விமானம் பறப்பது எவ்வாறு என்பதை விளக்குங்க. - ஆர். கோகுல், பாலா, பள்ளூர். ஒரு பறக்கும் பொருளில் நான்கு விதமான விசைகள் உண்டு. < அவை மேல்நோக்கி இழுக்கும் லிப்ட், முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட், கீழ்நோக்கி இழுக்கும் எடை , பின்னோக்கி இழுக்கும் டிராக். ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க வெயிட்= லிப்ட் டிராக்= த்ரஸ்ட் சமமானதாக இருக்க வேண்டும். த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும். டிராக், த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும். விமானத்தின் எடை, லிப்ட் விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும். விமானத்தின் லிப்ட் விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும். விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது விமானத்தின் எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை. விமானத்தின் மேல் நோக்கு துõக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணி . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் துõக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது. ஒரு டெயில் பீஸ்: இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி விண்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது ******************** மார்ச்30/ *உலகின் மிக நீளமான பாம்பு எது, எங்கு உள்ளது? - கே. எழிலரசன், ஆற்காடு. உலகில் இப்போது உயிருடன் உள்ள பாம்புகளில் மிக நீளமான பாம்பு என்ற சாதனையை, அமெரிக்காவின் ஓகைய்யோ மாநிலத்தின் தலைநகரான கொலம்பஸ்சில் (இணிடூதட்ஞதண் -Oடடிணி) உள்ள மிருகக்காட்சி சாலையில் வளர்க்கப்பட்டு வரும் ஒரு மலைப்பாம்பு பெற்றுள்ளது. இந்தப் பாம்பு 300 பவுண்டு எடையும், 24 அடி நீளமும் கொண்டதாக காணப்படுகிறது. 15 வயதுடைய இந்த மலைப்பாம்பு ஊடூதஞூஞூதூ என அழைக்கப்படுகிறது. கடந்த 2005ம் ஆண்டில் உலகின் மிக நீளமான பாம்பாக 32 அடி நீளம் கொண்ட ஒரு மலைப்பாம்பு காணப்பட்டது. இந்தப்பாம்பு இந்தோனேசியாவில் கொல்லப்பட்டது. இதன் பின்னர் உலகில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் மிக நீளமான பாம்பு என்ற சாதனை இந்தப் பாம்புக்கு கிடைத்துள்ளது. இது 2011ம் ஆண்டிற்கான உலகசாதனை புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. *மருந்து சீட்டுகளில் ஆர்எஸ் என குறிப்பிடுவதேன்? - ராம. மம்தாராம், டால்மியாபுரம். சமீபத்தில் டாக்டரை பார்த்து வந்திருக்கீங்களா மம்தாராம்? இப்ப உங்க ஆரோக்கியம் எப்படி இருக்கு? சரி, நீங்கள் கேட்ட சந்தேகத்திற்கு வருகிறேன். பொதுவாக எல்லா டாக்டர்களும், தாங்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை எழுதும் சீட்டில் கீது என்று எழுதுவது வழக்கம். சில டாக்டருடைய மருந்து சீட்டில் கீது அச்சிடப்பட்டிருக்கும். உயிர் காக்கும் மருத்துவம், தொழில் மட்டுமல்ல அது... கடவுளுக்கு நிகரானவர்களாக டாக்டர்களை ஜீபிடர் கடவுளாக பாவித்தனர் பண்டைய ரோமானியர்கள். கீ என்பது லத்தீன் சொல்லான ணூஞுஞிடிணீணூஞு என்பதிலிருந்து வருகிறது. அதாவது, இதை பரிந்துரைக்கிறேன் எடுத்து கொள்ளலாம் என்பதாகும். சின்ன து, கடவுளின் அரசர் அதை ஏற்பதற்கான குறீயீடு. அதாவது அந்த ஜீபிடர் கடவுளே மருத்து சீட்டை எழுதுவதாகும். அவரின் கருணையோடு நோய் குணமாகும் என்பது அவர்களது ஐதீகம். இது இன்று வரை தொடர்ந்தும் வருகிறது. * அமரர் கல்கி பற்றி சொல்லுங்க அங்கிள்! -எம். நிகேஷ்குமார், காட்டூர் புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் கல்கி. இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள் , கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நுõல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகவும் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமிபுதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. கல்கி, 1899ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புட்டமங்கலம் என்னும் ஊரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பப் பள்ளி படிப்பைத் தனது கிராமத்தில் முடித்த அவர், திருச்சியில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். ஒத்துழையாமை இயக்கம் துவங்கிய போது, அதன் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட கல்கி, தனது பள்ளிப்படிப்பைப் பாதியில் துறந்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். அவர், ‘நவசக்தி’ என்னும் பத்திரிகையின் துணை ஆசிரியராக பணியாற்றினார். அவருடைய முதல் புத்தகம் 1927ல் வெளியானது. சமஸ்கிருதமும், தியாகராஜரின் தெலுங்கு கீர்த்தனைகளும் பிரபலமாக இருந்து வந்த அக்காலக்கட்டத்தில் தமிழிசைக்காக, சதாசிவம் மற்றும் எம். எஸ். சுப்புலட்சுமியுடன் இணைந்து பாடுபட்டார் கல்கி. தமிழ் இசை குறித்த கல்கியின் சிந்தனைகள், ‘தரம் குறையுமா’ எனும் புத்தக வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. ************** * கூடங்குளம் அணு உலை வி.வி.இ.ஆர் 1000 தொழில் நுட்பம் கொண்டது என்று படித்தேன். அதுபற்றி விளக்குங்க அங்கிள்! - எஸ். திலகவதி, திருவாரூர். நல்ல கேள்வி கேட்டு இருக்கீங்க. சபாஷ்! கூடங்குளம் அணு உலை ரஷ்ய நாட்டின் வி.வி.இ.ஆர் 1000 என்ற தொழில் நுட்பத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. இதில் யுரேனியம் என்ற தனிமம் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் அணு பிளக்கப்படும் போது 2000 டிகிரி செல்சியஸ் வெப்பம் உருவாகிறது. இது நீரின் கொதி நிலையான 100 டிகிரி செல்சியஸ்-ஐ விட 20 மடங்கு அதிகம். இந்த வெப்பத்தைப் பயன்படுத்தி நீராவி உருவாக்கப்பட்டு, அந்த நீராவி மூலம் டைனமோக்கள் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது. மிக அதிக வெப்பம் உருவாவதால், இந்த அணு உலையைக் குளிர்விக்க கடலிலிருந்து நீர் பெறப்பட்டு, சுத்திகரித்து உப்பு அகற்றி, நன்னீராக மாற்றி இந்த உலையில் பயன்படுத்தப்படுகிறது. விவிஇஆர் 1000 என்ற தொழில் நுட்பத்தை தமிழில் நீர்-நீர் ஆற்றல் அணுஉலை என்று கூறலாம். ஙணிஞீணி-ஙணிஞீதூச்ணணிடி உணஞுணூஞ்ஞுtடிஞிடஞுண்டுதூ கீஞுச்ஞிtணிணூ; ஙிச்tஞுணூ-ஙிச்tஞுணூ உணஞுணூஞ்ஞுtடிஞி கீஞுச்ஞிtணிணூ என்பதின் சுருக்கம் தான் விவிஈஆர் (ஙஙஉகீ) அல்லது ஙிஙிஉகீ. இந்த தொழில் நுட்பம் அழுத்த நீர் அணுஉலை வடிவமைப்பில் அமைந்த ரஷ்ய அணுக்கரு உலைகளாகும். முன்னாள் சோவியத் யூனியன், இந்நாள் ரஷ்யாவில் உள்ள ஓகேபி கிட்ரோபிரெஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டவை. இவற்றின் ஆற்றல்திறன் 440 Mஙிஞு முதல் 1200 Mஙிஞு வரை உள்ளன. இவ்வகை அணுமின் நிலையங்கள் ஆர்மீனியா , பல்கேரியா , சீனா , செக் குடியரசு, பின்லாந்து , அங்கேரி, இந்தியா, ஸ்லோவேக்கியா , உக்ரைன், மற்றும் ரஷ்யக் கூட்டமைப்பு நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. விவிஈஆர்-1000 தொழில் நுட்பம் 1975ம் ஆண்டில் உருவாக்கப்படது; இதில் கதிர்வீச்சுக் காப்புக் கட்டிடத்தில் நான்கு சுற்று அமைப்பும் நீராவி தெளிப்பு அடக்கு முறைமைகளும் இருந்தன. மேலும் மேற்கத்திய மூன்றாம் தலைமுறை அணுக்கரு உலைகள் போன்று தானியங்கி கட்டுப்பாடு, இயக்கியற்ற பாதுகாப்பு மற்றும் காப்புக் கட்டிட அமைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. *கங்காரு எவ்வளவு நாட்கள் குட்டியை தன் பையில் வைத்திருக்கும்? - அ. முத்துமீனாள், திருச்சி. கங்காரு பாலுõட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. இவை பொதுவாக ஆஸ்திரேலியா மற்றும் அதன் அருகில் உள்ள தீவுகளில் காணப்படுகின்றன. இயற்கை அமைப்பின்படி கங்காரு குட்டி முழுமையாக வளர்ச்சியடைவதற்கு முன்பே பிறந்துவிடுகின்றது. மீதி வளர்ச்சி எல்லாம் கங்காருவின் வயிற்றுப் பகுதியில்தான் நடக்கும். குட்டி, பிறந்த உடனேயே வயிறு வழியாக ஊர்ந்து பைக்குள் வந்துவிடும். அம்மாவின் பாலைத்தவிர மற்ற உணவை செரிக்கக்கூடிய திறன் வரும்போதுதான் உட்கொள்ளும். இத்திறன் வரும் வரை குட்டி அம்மாவின் பைக்குள்ளேயே தான் இருக்கும். குட்டியின் உடற் பகுதிகள் எல்லாம் முழுமையாக வளர்ச்சியடைந்த பிறகுதான் கங்காரு, தன் குட்டியை கீழே இறக்கிவிடும். எப்போதாவது நரியோ, கழுகோ மற்ற விலங்குகளேமா பிடிக்க வரும்போது குட்டி ஓடி வந்து தன் தாயின் பைக்குள் ஒளிந்துகொள்ளும். குறைந்தது கங்காரு குட்டி ஒன்பது மாதங்கள் வரை தாயின் பையில் வளர்கிறது. பின்னர் தாயின் வயிற்று பையில் இருந்து வெளிவருகின்றது. குதிரை நின்று கொண்டுதான் துõங்குமாமே! உண்மையா? - எம். சுபலேகா, சத்தியமங்கலம். உண்மை தான்! குதிரைகள் எப்போதும் நின்றவாறேதான் துõங்கும். நின்று கொண்டே துõங்குவதால் அவற்றின் உறுதியான கால் தசைநார்கள் களைப்படைந்து போகும் நேரத்தில் அவை சுதாரித்துக் கொண்டு விடும். குதிரைகள் நின்றுகொண்டே துõங்கினால்தான் அவைகளுக்கு நிம்மதியான துõக்கம் கிடைக்கிறது என்று விலங்கியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ********************* ஏப்ரல்13/ *கப்பல் மிதப்பது எப்படி? - ரா. வீரபாண்டியன், புதுக்கோட்டை. கப்பல் தண்ணீரில் மிதப்பது ஆர்க்கிமடிஸ் விதி படியாகும். ஒரு கப்பல் தண்ணீரில் இருக்கும்போது அதன் உடற்பகுதி ஓரளவு வரை தண்ணீரில் அமிழ்ந்திருக்கும். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும் வரை அதன் உடற்பகுதி தண்ணீரில் அமிழும். 10 ஆயிரம் டன் எடையுள்ள ஒரு கப்பலின் உடற்பகுதி, அதே எடையுள்ள தண்ணீரை இடம்பெயரச் செய்யும். பொதுவாக ஒரு கப்பலின் எடையைக் கூறுவதற்கு, அது இடம்பெயரச் செய்யும் தண்ணீரின் எடையைக் கூறுகிறார்கள். அதாவது ஒரு கப்பலின் டிஸ்பிளேஸ்மென்ட் 10 ஆயிரம் டன் என்று கூறுவார்கள். அமிழ்ந்துள்ள கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் தண்ணீர் அழுத்துகிறது. தண்ணீரில் கிடப்பு நிலையில் இருந்து ஏற்படும் அழுத்தங்கள் கப்பலின் உடற்பகுதியை அழுத்துகின்றன. ஒன்றையொன்று அமிழ்த்தி சமநிலையை ஏற்படுத்துகின்றன. இதனால் கப்பல் தண்ணீரில் மிதக்கிறது. *சிவப்பு மலர் நீல நிறக்கண்ணாடியில் பார்த்தால் கறுப்பாகத் தோன்றுவது எவ்வாறு? சிவப்பு மலரிலிருந்து சிவப்பு ஒளிதான் வெளிப்படும். இந்த ஒளியை நீலநிறக்கண்ணாடி உட்கவர்ந்துவடும். ஏனெனில் நீலக்கண்ணாடி வழியாக நீலநிற ஒளி மட்டுமே ஊடுருவிச் செல்ல முடியும். சிவப்புநிற ஒளியை நீலநிறக்கண்ணாடி தடுத்துவிடுவதால் மலர் கருப்பாகத் தெரியும். *துõக்கத்தில் நடப்பது எப்படி? - ச. சரண்ராஜ், ஊத்துக்குளி. -வி. சுப்ரமணியம், பி. கொமாரபாளையம். துõக்கத்தில் மூன்று நிலைகள் இருக்கிறது. விழிப்பு நிலை, விழி அசைவுகளில்லாத துõக்க நிலை, விழி அசைவு துõக்க நிலை( இது பெரும்பாலும் கனவுகளுடன் தொடர்புடைய நிலை!). துõக்கத்தில் நடப்பது என்பது ‘மனிதர்களின் ஒருவகையான துõண்டப்பட்ட, குழப்பமான மனநிலை’ என மருத்துவர்கள் கருதுகிறார்கள். அறிவியல்பூர்வமா சொல்வது என்றால், துõக்கத்தில் நடப்பது விழிப்பு நிலை மற்றும் விழி அசைகளில்லாத துõக்க நிலையில் நடைபெறும் ஒரு செயல். சிலர் மட்டும் ஏன் துõக்கத்தில் நடக்கிறாங்க மத்தவங்க ஏன் நடக்கிறதில்லைங்கிற கேள்விக்கு இன்னும் திட்டவட்டமான பதில் இல்லை! பொதுவா துõக்கத்தில் நடப்பதற்க்கு, குடும்ப மரபணுவியல் சம்பந்தமான காரணங்களாக இருக்கலாமாம். பெரியவங்கள விட, குழந்தைங்கதான் பெரும்பாலும் துõக்கத்துல நடப்பாங்களாம். அதுக்கு காரணம், குழந்தைங்க துõங்கும்போது, ஆழமான விழி அசைவுகளில்லாத துõக்க நிலை நிலையில்தான் இருப்பாங்களாம். இந்த நிலையிலதான் துõக்கத்துல நடக்கிற செயல் நடக்கிறது. சரியான துõக்கமின்மை, ஜூரம், மன உளைச்சல், ஊக்க மருந்துகள் சாப்பிடுதல் காரணங்களால் துõக்கத்தில் நடப்பது சாத்தியமாகலாம். சரியான நேரத்தில் உறங்குவது, அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்காமல் இருப்பது. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உறங்குவது போன்றவற்றை கடைபிடித்தால் தவிர்க்கலாம். மிகவும் மோசமான நிலையில் உள்ளவர்களுக்கு மருந்துகளும் கொடுக்கப்படுகிறது! *லாப்ராடர் நாய் இனத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க, அங்கிள்! -ந. விக்னேஷ், வேலுõர். நாய் இனங்களில் லாப்ரடர் நாய் ஒரு வகை. கனடா, ஆஸ்திரேலியாவில் இந்த நாய்கள் மிக பிரபலம். ஆண் நாய் 27 முதல் 40 கி.கி எடையும் 56 முதல் 63 செ.மீ. நீளமும் கொண்டிருக்கும். பெண் நாய் 27 முதல் 35 கி.கி. எடையும் 54 முதல் 60 செ.மீ. நீளமும் கொண்டிருக்கும். கறுப்பு, மஞ்சள், சாக்லேட் நிறங்களில் இருக்கும். பழங்குடி இனத்தினர் வேட்டையாடுவதற்கும், மீன்பிடி தொழிலுக்கும் இந்த நாயை பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் நுரையீரல் புற்று நோயை கண்டறிய இவ்வகை நாய்களை பயன்படுத்தும் முயற்சிகளில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். ஜெர்மனியில் உள்ள ஸ்கில்லர் ஜோக் ஆஸ்பத்திரியின் நிபுணர்கள் இந்த ஆய்வு மேற்கொண்டனர். அவை தனது மோப்ப சக்தி மூலம் மனிதர்களின் மூக்கு வழியாக வெளியேறும் சுவாசத்தின் மூலம் நுரையீரல் புற்று நோயை கண்டறிய முடியும் என கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் நோய் அறிகுறி தொடங்கும் நிலையில் உள்ள 71 சதவீதம் பேரின் நுரையீரல் புற்று நோயை தெரிந்து கொள்ள முடியும். நுரையீரல் புற்று நோயை கண்டுபிடிக்க 2 ஜெர்மன்ஷெப்பர்டு, ஆஸ்திரேலியன் ஷெப்பர்டு, மற்றும் லாப்ராடர் ரக நாய்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். *********************** ஏப்20 *வாயில் உமிழ்நீர் சுரப்பது ஏன்? அதன் பயன் என்ன? - ஆர். ஸ்ரீஜா, ஸ்ரீரங்கம். புளிப்பு, இனிப்பு இவற்றின் சுவையை உணர்ந்தால் வாயில் உமிழ்நீர் தானாக ஊறும். உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகின்ற உணவுகளை சாப்பிட்டாலும் உமிழ்நீர் அதிகம் சுரக்கும். உமிழ்நீர் அதிக என்சைம்களைக் கொண்டது. இதில் ஆன்ட்டிபயாடிக் அதிகம் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உமிழ்நீர் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1,500 மி.லி. அளவு சுரக்கிறது. உமிழ்நீர் சுரப்பு அளவு உண்ணும் உணவின் அளவைப் பொறுத்தும் மன எண்ணத்திற்கும் ஏற்றவாறும் மாறுபடுகிறது. உமிழ் நீரின் முக்கிய பணி ஜீரணமாக்குவது. உணவை மெல்லும்போது உமிழ்நீர் உணவுடன் நன்கு கலந்து அதில் உள்ள என்சைம்கள் உணவின் நச்சுத்தன்மையைப் போக்கி உணவுக் குழலுக்குச் செல்ல ஏதுவாகிறது. மேலும் இதில் கலந்துள்ள நொதி உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. பொதுவாகவே அஜீரணம், வாந்தி, தலைச்சுற்றல் உண்டானால் கூட உமிழ்நீர் அதிகம் சுரந்து உடலை சீர்படுத்துகிறது. வாய்ப்புண்ணை ஆற்ற உதவுவதும் உமிழ்நீர்தான். * நட்சத்திரம் என்றால் என்ன? அவை எப்படி மின்னுகின்றன? - எம். கோகுல், பசுபதிபாளையம். நட்சத்திரம் என்பது பல வாயுக்கள் கலந்த மேகம் போன்ற ஒரு தொகுப்பு. இந்த மேகத்திற்குள் ஹைட்ரஜன் வாயு இருக்கும். வாயுத் துகள்கள் ஒன்றுடன் ஒன்று கொஞ்சம் கொஞ்சமாக இணைந்து ஒரு பெரிய வாயுக் கூட்டமாக மாறிவிடும். அதன் அளவு கூடும்போது வெப்பமும் கூடுகிறது. அது ஒரு வெடிகுண்டைப்போல வெடிக்கும் வரை சேர்ந்துகொண்டே இருக்கும். அது வெடிக்கும்போது, எரியும் தன்மைகொண்ட ஹீலியம் வாயு வெளியிடப்படும். நட்சத்திரங்கள் வெளியிடும் ஒளியும் வெப்பமும் மிக நீண்ட தொலைவைக் கடந்து வருகின்றன. அப்படி வரும்போது மிகச் சொற்பமான வெளிச்சமே தொடர்ச்சியாக நம்மை வந்தடைகிறது. அப்படி, நம்மை வந்தடையும் முன் பூமியின் வளி மண்டலம் வழியாக அந்த ஒளி பயணிக்கிறது. வளி மண்டலத்தில் உள்ள துõசுகள் அவ்வப்போது அந்த ஒளி பயணிக்கும் பாதையின் இடையே செல்கின்றன. எனவே நட்சத்திரங்கள் சில நேரம் நமக்குத் தெரிகின்றன. துõசு அதிகமாக இருக்கும்போது தெரிவதில்லை. இது வேகமாகவும் தொடர்ந்தும் மாறி மாறி நடப்பதால்தான் நட்சத்திரங்கள் மின்னுவதுபோன்ற ஒரு மாயத் தோற்றம் ஏற்படுகிறது. நட்சத்திரம் எல்லா நேரமும் மின்னுவதில்லை. மேலும் சில நட்சத்திரங்கள் எப்போதுமே மின்னுவதில்லை. இதற்குக் காரணம் அவை நட்சத்திரங்கள் அல்ல, கோள்கள். கோள்கள் மின்னுவதில்லை. *செல்போனில் புளுடூத் என்ற ஒன்று இருக்கிறதே, புளுடூத் என்றால் என்ன? - அ.தனுஷ், பள்ளூர். புளுடூத் தொழில் நுட்பம் செயல்படும் விதத்திற்கும், இந்த பெயர் தரும் பொருளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. டென்மார்க், ஸ்வீடன், நார்வே மற்றும் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கினார்கள். இந்த விஞ்ஞானிகளுக்கு சரித்திரத்தில் புகழ் பெற்ற டென்மார்க் அரசர் மீது மதிப்பும், மரியாதையும் பிரியமும் இருந்தது. அந்த மன்னர் பெயர் ஹெரால்ட் புளுடூத். அவரின் நினைவாகவே இந்த தொழில் நுட்பத்திற்கு புளுடூத் எனப் பெயரிட்டனர். அவர் அப்படி என்ன சாதனை செய்தார்? என்று கேள்வி எழுகிறதா, தனுஷ்? 900ம் ஆண்டில் ஹெரால்ட் புளுடூத் மன்னர் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும் நார்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்தார். பின்னர், கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார். 986ல் போரில் மரணமடைந்தார். நாடுகளை இணைத்தது, கிறித்தவ மதத்தை அறிமுகப்படுத்தியது, நினைவுச் சின்னம் அமைத்தது போன்ற செயல்களால் புகழடைந்தார். *********************** *அணில் ஏன் தன் முன் பற்களைக் கொரித்துக்கொண்டே இருக்கிறது? - ம. முரளிதரன், மல்லசமுத்திரம். அணில்கள் கொரிக்கும் பாலுõட்டி இனத்தை சேர்ந்தவை. இதன் வாயின் முன்பக்கத்தில் மேலும் கீழுமாக இரண்டிரண்டு உளிப்பற்கள் இருக்கும். இவை தினமும் வளரும். அதனால் கடின ஓடுகள், மரக் கிளைகள் இவைகளை எலிகளைப் போலவே துருவும். எதுவும் கிடைக்கவில்லை என்றால், மேலும் கீழுமாக அதுவே பற்களை அரைத்துக் கரைத்துக் கொள்ளும். இப்படிப் செய்யவில்லையாயின் உளிப்பற்கள், நீளமாக வளர்ந்து எதுவும் சாப்பிட முடியாமல் இவை இறந்து விடும். உலகெங்கிலும் 250வகையான அணில்கள் உள்ளன. ஆஸ்திரேலியா, அண்டார்டிகா பகுதிகளில் இவை காணப்படுவதில்லை. மர அணில் ,தரை அணில், பறக்கும் அணில் போன்றவை நாம் அன்றாடம் பார்க்கும் வகைகளில் சில. ஆப்ரிக்க பிக்மி அணில்கள் உருவில் மிகச் சிறியவை. இவை 7 முதல்10 செ.மீ நீளமும், 10 கிராம் எடையும் கொண்டவை. நீர் நாய் வகை அணில்கள் 5 முதல் 8 கிலோ எடையும், 50--70 செ.மீ நீளமும் கொண்டதாக உள்ளன. *இடிதாங்கி பற்றி விளக்கமா சொல்லுங்க அங்கிள்! - ஏ. சந்திரசேகர், பசுபதிபாளையம். இடிதாங்கி என்பது கட்டடத்தின் உயர்ந்த பகுதியில் இடி, மின்னல் தாக்காமல் இருப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட கருவி. இதன் முனைப்பகுதி காந்தச் சக்தியால் ஆனது. இந்தக் கருவியைக் கட்டடத்தின் உயர்ந்த பகுதியில் வைத்து தடித்த காப்பர் பட்டையின் மூலம் பூமியில் எர்த் செய்து விடுவார்கள். இடி தாக்கும்போது இடிதாங்கி, மின்னலை ஈர்த்து பட்டை வழியாக பூமியைச் சென்றடைய செய்கிறது. இதனால், கட்டடங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அதோடு சேர்ந்து நாமும் பாதுகாக்கப்படுகிறோம். இடி, மின்னலில் உண்டாகும் மின்சாரம் பல லட்சக்கணக்கான வோல்ட் அழுத்தமுடையது. இந்த உயர்ந்த அழுத்த மின்சாரம் நம்மையும், கட்டடங்களையும் தாக்குவதால் பேரிழப்பு ஏற்படுகிறது. இடிதாங்கி கூர்மையான அம்பு போன்ற அமைப்பு உடையதாகக் காணப்படுகிறது. கூர்மையானப் பகுதியில் எலக்ட்ரான், புரோட்டான்கள் மிக வேகமாக தயார் நிலையில் இருக்கும். தட்டையான வடிவமுடையதாக இருந்தால் எலக்ட்ரான், புரோட்டான் சிதறிய நிலையில் காணப்படும். இடி தாக்கும்போது இடிதாங்கி கூர்மையான பகுதியாக இருந்தால் எலக்ட்ரான், புரோட்டான்கள் வேகமாக செயல்பட்டு தன்னகத்தே இழுத்து பூமிக்குச் செலுத்த வசதியாக இருக்கிறது. அதனால்தான் கூரிய அமைப்பைக் கொண்டதாக இடிதாங்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. *சோலார் சக்தி, அதில் இயங்கக்கூடிய மின்சாதனங்கள் எவை பற்றி கூறுங்கள். -ஆர். சண்முகம், ராமநந்தீஸ்வரம். மின்சாரத்துக்கு மாற்றாக சோலார் பவர் பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டில் 300 நாட்கள் சூரிய ஒளி கிடைக்கிறது. இப்படிக் கிடைக்கும் அபரிமிதமான சூரிய சக்தியைக் கொண்டு ஆண்டு முழுவதும் தடை இல்லாமல் மின்சாரம் கிடைக்கும்படி செய்யலாம். ஆனால் நம் நாட்டில் ஒரு சதவிகிதம் சூரிய சக்தியைத்தான் உபயோகிக்கிறோம். சூரிய சக்தியைக்கொண்டு நாம் மிகப் பெரிய அளவில் மின்சாரம் தயாரிக்கலாம். நாட்டிற்கும் வீட்டிற்கும் தேவையான மின்சாரம் மிகச் சுலபமாக கிடைக்கும்படி செய்யலாம். வீடுகளில் சிறிய கருவிகளைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இவ்வளவு இருந்தும், மக்களிடையே சூரிய சக்தி மூலம் மின்சாரம் எடுப்பது பற்றிய போதுமான விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. சோலார் பவர் மூலம் வாட்டர் ஹீட்டர்கள், மின் விளக்குகள், மின் விசிறி, கணினி, வாஷிங் மெஷின், ஏ. சி. முதலியவற்றை இயக்கலாம். சோலார் சாதனங்களை அமைக்க ஆரம்ப செலவு அதிகம் என்றாலும், நாளடைவில் நாம் உபயோகிக்கும் மின்சாரக் கட்டணத்தை விட செலவு குறைவு தான். *********************** *ஆறறிவு என்றால் என்ன? அவை எவை? மே11 -கே.அபிஜித், ஸ்ரீரங்கம். ஆறறிவு என்பவை பார்க்கும் அறிவு, கேட்கும் அறிவு, தொடும் அறிவு, நுகரும் அறிவு, ருசிக்கும் அறிவு மற்றும் பகுத்தறியும் அறிவு போன்றவையாகும். விலங்கினத்திற்கு ஐந்தறிவு மட்டுமே உள்ளன என்றும், மனிதனுக்கு அதனையும் விட ஒரு சிறப்பு அறிவான பகுத்தறிவையும் கொண்டு பார்க்கப்படுகின்றது. மனிதனுக்கு இருக்கும் இப்பகுத்தறிவே மற்றைய விலங்கினத்தில் இருந்து வேறுபட்டும், உயர்ந்தும் இருப்பதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. 1. உடலால் மட்டும் உணர்வது ஓரறிவு - இது தாவரங்களுக்கு. 2. உடல், நாக்கால் உணர்வது ஈரறிவு - இது கடல்வாழ் உயிரினங்களுக்கு. 3. உடல், நாக்கு, மூக்கால் உணர்வது மூன்றறிவு- இது ஊர்வனங்களுக்கு. 4. உடல், நாக்கு, மூக்கு, கண்ணால் உணர்வது நான்கறிவு- இது பூச்சி இனங்களுக்கு. 5. உடல், நாக்கு, மூக்கு, கண், காது ஆகிய ஐந்தால் உணர்வது ஐந்தறிவு- இது விலங்கினங்களுக்கு. 6. உடல், நாக்கு, மூக்கு, கண், காது, மூளை ஆகியவற்றால் அறிவது ஆறறிவு- இது மனிதர்களுக்கு. * அக்னி ஏவுகணை பற்றி விரிவாக சொல்லுங்க அங்கிள்! - எம். நிகேஷ்குமார், காட்டூர். அக்னி ஏவுகணை இந்தியாவினால் அமைக்கப்பட்ட குறுகிய முதல் நடுத்தர துõர ஏவுகணை வகைகளைக் குறிக்கும். 2007ம் ஆண்டு வரையில் அக்னி திட்டத்தில் பின்வரும் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டன: அக்கினி தாக்குகணை - எல்லாவற்றையும் விடப் பேராற்றல் கொண்ட இடைத்துõர ஏவுகணை , அக்கினித் தாக்கு கணைகளின் நீட்சித் துõரம் : 2,500 கி.மீ. உலகிலேயே இது போன்ற தாக்குகணையைப் பெற்ற ஐந்து நாடாக அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, இந்தியா கருதப்படுகிறது. 1989ல் அக்கினி-1 ஏவுகணையின் சோதனைப் பயிற்சி வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டது. 2007 ஏப்ரல் 12 ம் தேதி 3000 கி.மீ. பயணம் செய்யும் அக்கினி-3 பரிசோதிக்கப்பட்டது. 2012 ஏப்ரல் 12 ம் தேதி 3,000 கி.மீ. பயணம் செய்யும் அக்கினி-5 பரிசோதிக்கப்பட்டதன் மூலம், இந்திய வரலாற்றில் ஒரு மைல் கல்லை நட்டது. அக்னி-1 குறுகிய துõரம் பாயும் துõரம்: 700- 800 கிமீ. அக்னி-2 நடுத்தர துõரம் பாயும் துõரம்: 2000- 2,500 கிமீ. அக்னி-3 இடைத்தர துõரம் பாயும் துõரம்: 3,500- 5,000 கிமீ. அக்னி-4 இடைத்தர துõரம் பாயும் துõரம்: 3,000 கிமீ. அக்னி-5 கண்டம் விட்டுக் கண்டம் பாயும் துõரம்: 5,000- 6,000 கிமீ. அக்னி- 1 மற்றும் அக்னி-2 சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றைக் குறி பார்த்து ஏவக்கூடியவை. அக்னி-2 சீனாவின் மேற்கு, நடு, மற்றும் தெற்குப் பகுதிகளை சென்றடையக்கூடியன. அக்னி- 3 இது சீனாவின் முக்கிய நகரங்களான பெய்ஜிங் , மற்றும் ஷங்காய் ஆகியவற்றை தாக்கக்கூடியன. அக்னி-5 மே19, 2012ல் ஏவப்பட்டது. இது பாயும் துõரம்: 5,000 முதல் 7,000 கி.மீ வரை. *கொட்டாவி எப்படி உருவாகிறது? -ஆர். எம். ராமகிருஷ்ணா, திருச்செங்கோடு. நமது மூளையில் துõக்கம் வருவதற்கான அறிகுறிகள் தொடங்கிய உடனேயே இதயம் மூச்சுவிடும் வேகத்தை சற்று குறைத்துக்கொள்கிறது. இதை ஈடுசெய்து மூளைக்கு அதிக ரத்தத்தை ஏற்றுவதற்கு பிராணவாயு வேகமாக உள் எடுக்கப்பட்டு, கரியமில வாயு வெளியேறி இதயம் சுருங்கி விரிந்து ரத்தம் சுத்திகரிக்கவேண்டும். இதற்கு வசதியாக நமது வாய் அகல திறந்து காற்றினை உள்ளே இழுத்துக்கொள்கிறது. இந்த செயல்பாடு தான் கொட்டாவி. கொட்டாவி விலங்குக்கும் வரும். ******************* மே18 *நிபுரூ என்று ஒரு கோள் இருக்கிறதா, அந்தக்கோள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் உலகத்தை அழிக்கும் என்பது உண்மையா? -சு. ஸ்ரீப்ரதா, மேட்டூர். நிபுரூ என்று ஒரு கோள் இல்லை. அப்படி இருக்க, அந்தக்கோள் எப்படி டிசம்பர் 2012ல் உலகத்தை அழிக்க முடியும்? என்று விண்வெளி விஞ்ஞானிகள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதனால் ஸ்ரீப்ரதா அச்சப்படவேண்டாம். நிபுரூ கோள் பற்றி பல வதந்திகள் உலாவருகின்றன. அவை: நிபுரூ என்பது நாசா நிறுவனம் அனுப்பிய கபுள் என்ற செயற்கைக் கோள் தொலைநோக்கியால் கண்டறியப்பட்டதாக சொல்லப்படும் கருஞ்சிவப்பு கோள். இதற்கான போதிய அறிவியல் ஆதாரங்கள் இல்லை. நிபிரூ கோளானது பிளானட் எக்சு எனவும் அறியப்படுகிறது. இது பூமியை நோக்கி வந்து கொண்டு இருப்பதாகவும் அது 2012 ல் பூமியை நெருங்கும் எனவும் சொல்லப்படுகிறது. இது ஒளியற்ற கோள் என்பதால் நம் கண்களுக்கு தெரிவதில்லை என்றும் நம்புகின்றனர். இந்தக் கோள் இருக்கும் நிலையில், சாதாரண தொலைநோக்கிகளால் இது நமக்கு தெரிவதற்கு சாத்தியமில்லாத துõரத்தில் இருப்பதாகவே பலர் கருதுகிறார்கள். 1984ம் ஆண்டு நாசா ஒரு செய்தியை வெளியிட்டது. 50 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு மிகப்பெரிய மர்மபொருள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக. மீண்டும் 1992 ம் ஆண்டு நாசா இன்னொரு செய்தியை வெளியிட்டது.7 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு கோள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக. இதற்கு அப்புறம் நாசா இதைப் பற்றி எதுவும் கூறவில்லை. நாசாவின் டெலஸ்கோப்புகளில் காணப்பட்ட மர்மகோள் முன்பெல்லாம் பெரும் அழிவை உண்டாக்கிய “நிபுரூ” தான் என்கின்றனர். *அணுக்கடிகாரம் பற்றி சொல்லுங்க அங்கிள்! - ஏ. சந்திரசேகர், செல்லாண்டிபாளையம். அணுக் கடிகாரம் என்பது நேரத்தைக் காட்ட அணு சார்ந்த ஒத்ததிர்வு அலைவரிசையை ஒப்பிட்டு மாதிரியாகக் கொண்டு இயங்கும் கடிகாரம் . நேரம், அலை வரிசை ஆகியவற்றுக்கான மிகத் துல்லியமான தரம் வாய்ந்த கடிகாரமாக அணுக் கடிகாரமே உள்ளது. சர்வதேச நேரக் கட்டுப்பாட்டுக்கும், தொலைக்காட்சி போன்றவற்றின் அலைவரிசை ஒப்பீட்டுக்கும் அணுக் கடிகாரமே அடிப்படையாக உள்ளது. அணுக்கடிகாரங்கள் கதிரியக்கத்தைப் பயன்படுத்தி இயங்குவது கிடையாது. ஒரு பொருளின் கட்டமைப்பில் இலத்திரன்கள் பல வட்டப் பாதைகளில் சுழன்று கொண்டிருக்கும். அவ்வாறு கழன்று கொண்டிருக்கும் இலத்திரன்கள் வட்டம் விட்டு வட்டம் தாவவும் செய்யும். அப்போதெல்லாம் அந்தக் தாவலுக்கு இலத்திரன்கள் செலவழித்து வெளியிடும் சக்தியை மட்டுமே பலமாகக் கொண்டு அணுக்கடிகாரங்கள் இயங்குகின்றன. நடுக்கடலில் பல நாட்கள் பயணமாகும் கப்பல்களில் நேரம் அறிவது, கதோட்டுக் கதிர்களைக் கொண்டு இயங்கும் தொலைக்காட்சி போன்ற நவீன உபகரணங்களின் அலைவரிசைகள், ரேடியோ அலைவரிசைகள் சார்ந்த பிரபஞ்சக் கதிர்களின் ஆய்வு, விண்வெளி ஆய்வு போன்றவற்றில் எல்லாம் அணுக்கடிகாரம் பயன்படுத்தப்படுகிறது. *மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது? -ச. பாவனா, ராமநந்தீஸ்வரம். உலகெங்கும் மின்சாரம் என்பது ஒரே ஒரு முறையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. நமது சைக்கிள் டைனமோவில் பயன்படுத்தப்படும் மின் காந்தப் புலம் தொழில் நுட்பம் தான். பெரிய டைனமோக்களை சுற்றுவதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அணையில் நீரைத் தேக்கி மேலிருந்து கீழே வரும் நீரின் விசையால் டைனமோவைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது நீர் மின்சாரம். காற்றின் மூலம் விசிறியைச் சுற்றச் செய்து தயாரிக்கப்படுவது காற்றாலை மின்சாரம். நீரைக் கொதிக்க வைத்து, நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது அனல் மின்சாரம். (இதற்கு நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது). டீசல், பெட்ரோல், எரிவாயு மூலமும் சுழலச் செய்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. யுரேனியம் போன்ற சில தனிமங்கள் பிளக்கப்படுவதால் அதிக வெப்பமும் ஆற்றலும் கிடைக்கின்றன. அவற்றை முறைப்படுத்தி அதைத் தொடர் நிகழ்வாக மாற்றி நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழல வைத்துப் பெறப்படுவது தான் அணு மின்சாரம். ********************* மே 25/ *சிம் கார்டுகளில் 16 ‘கே’ என்று முன்பு குறிப்பிடுவார்கள். இப்போது 64 ‘கே’ என்று குறிப்பிடுகிறார்கள். இந்த கே எதை குறிக்கிறது? - ஆர். செல்வேந்திரன், காரைக்கால். சிம் கார்டுகளில் ‘கே’ (ஓ), அதன் அளவைக் குறிக்கும் சொல்லாகும். ‘கே’ என்பது கிலோ பைட்டின் சுருக்கம். 16ஓ கொண்ட சிம் கார்டுகளில் 125 போன் நம்பர் அதன் பெயர்களை ஸ்டோர் செய்யலாம். அதே போல் 64ஓ என்றால் 500 நம்பர்களை ஸ்டோர் செய்துகொள்ளலாம். இந்த அளவுகளைப் பொறுத்துதான் எஸ்எம்எஸ்கள், போன் புக், செக்யூரிட்டி கீக்களை பயன்படுத்த முடியும். மேலும் இப்போது வரும் போன்களில் இவற்றை ஸ்டோர் செய்வதற்கு சிம் கார்டுகள் தவிர போன்களில் உள்ள மெமரிகள் மற்றும் தனியாக இணைத்து பயன்படுத்தும் ‘மெமரி கார்ட்’களிலும் ஸ்டோர் செய்யலாம். இதனால் இப்போது சிம் கார்டில் கொடுக்கப்படும் ‘கே’ அளவுகளை யாரும் பார்ப்பது இல்லை. *பாலுõட்டிகளில் மிகச் சிறியவை எது? - எம். திருப்பதி, கிருஷ்ணகிரி. உலகில் உள்ள பாலுõட்டிகளில் மிகச்சிறியது பம்பல்பீ வவ்வால்.இது மூன்று செ.மீ நீளம் கொண்டது. இது தன் உடல் எடையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக உண்ணக்கூடிய அதிசய உயிரினம். மேலும் இவைகளின் உணவு முறைகளை வைத்தும் இரண்டு பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்று பழங்கள், பூக்கள் மற்றும் பூக்களின் குளுகோஸ், மகரந்தத் துõள் ஆகியவற்றை உண்டு வாழக்கூடியவை. மற்றது சிறிய பூச்சிகள் வண்டுகள் சிறிய வகை பாலுõட்டிகள் சிறிய பறவைகள் ஈக்கள் கொசுக்கள் தவளை மற்றும் மீன்கள் ஆகியவற்றை உண்டு வாழுகின்றன. * மனித மூளையின் எடை என்ன? சராசரியாக எவ்வளவு இருக்க வேண்டும்? -ப. ஜெயப்பிரியா, புவியரசி, வரிச்சிக்குடி. ஒவ்வொருவருக்கும் மூளையின் எடை சற்று மாறுபடும். சராசரியாக ஒரு ஆணின் மூளை 1.5 கிலோகிராம் எடை உடையது. பெண்ணின் மூளை ஆணின் மூளையின் எடையை விட குறைவாகவே இருக்கும். மனிதன் உயிருடன் இருக்கும்போது, மூளையின் வெளிப்பரப்பு அடர்த்தியான சாம்பல் நிறத்திலும், உட்பகுதி மஞ்சள், வெள்ளை நிறமாகவும் காணப்படுகிறது. கோடிக்கணக்கான நரம்பிழைகள் வெண்பொருளையும், பெருமூளைப் புறணியையும் இணைக்கின்றன. 20 வயதான ஆணின் மூளையில் உள்ள நரம்பிழைகளின் மொத்த நீளம் 1,76,000 கிலோமீட்டர். அதே வயதில் பெண்ணின் மூளையில் உள்ள நரம்பிழைகளின் நீளம் 1,49,000 கிலோமீட்டர் இருக்குமாம்! **************** ஜூன்1 *கிரிக்கெட்டில் சில தடவை கேட்ச் பிடித்தவர்களை ‘சப்’ என்று சொல்கிறார்களே. ‘சப்’ என்றால் என்ன என்று சொல்லுங்கள் அங்கிள்? -ஸ்ரீகர்.ர.ராவ், திருச்சி. ‘சப்’ என்பதன் முழுமை‘சப்ஸ்ட்டியூட்’ ஆகும். அதற்கு ‘மாற்று’ என்று பொருள். கிரிக்கெட் போட்டியின் போது 11 வீரர்கள் இருப்பர். ஆட்டத்தின் போது ஆடும் 11 வீரர்களில் யாரேனும் ஒருவருக்கு அடிபட்டாலோ (அ) சோர்வுடன் விளையாட முடியாதவர்களுக்கு பதிலாக மாற்று வீரராக ஒருவர் களமிறக்கப்படுவார். அவரை நாம் ‘சப்’ என்று அழைக்கிறோம். அவரை பீல்டிங் மற்றும் பைரன்னராகப் பயன்படுத்துவர். அவரால் பந்து வீசவோ, பேட்டிங் செய்யவோ முடியாது. இந்த மாதிரி ‘சப்ஸ்ட்டியூட்’ வீரர்கள் அனைத்து விளையாட்டுகளிலும் இருப்பர். *வியர்ப்பது ஏன்? வியர்வை சுரபிகள் பற்றி சொல்லுங்க அங்கிள்! - ஆர். ஜெயப்பிரியா, கோபி. வியர்வை என்பது, வியர்த்தல் செயல் மூலம் உடலிலிருந்து தோல் வழியாக வெளியேற்றப்படும் ஒரு திரவம். < மனிதர்களைப் பொறுத்தவரை வியர்த்தல் என்பது உடற் தோலின் மேற்பரப்பில் இருந்து வியர்வை ஆவியாகும்போது, அது ஆவியாவதற்குத் தேவையான வெப்பத்தை உடலிலிருந்து எடுத்துக் கொள்வதால் உடல் குளிர்ச்சியடைகிறது. இதனால், கோடை காலத்தில் அல்லது வேலை செய்வதன் மூலம் உடற் தசைகள் சூடேறும் போது வெப்பம் உயராமல் தடுப்பதற்காக கூடுதலான வியர்வை சுரக்கப்படுகின்றது. தோலில் நுண்ணிய துவாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு துவாரத்தின் கீழும் ஒரு வியர்வை சுரப்பி இருக்கிறது. இதைத் தவிர அபாக்ரின், செபாஷயஸ் சுரப்பிகளும் உள்ளன. அபாக்ரின் சுரப்பிகள் அக்குள்களிலும், ரோமம் வளரும் பகுதிகளிலும் உள்ளன. இவை ஒரு வித திரவங்களை ரோமங்கள் மூலம் சுரக்கும். செபாஷயஸ் சுரப்பிகள் உள்ளங்கை, கால் தவிர எல்லா இடத்திலும் இருக்கிறது. தலையில் உள்ள வியர்வை சுரப்பிகள் சிபம் எனும் எண்ணை திரவத்தை சுரக்கின்றன. *சுமோக் டிடெக்டர் எப்படி தீ யை கண்டுபிடிக்கிறது? - அபிராமி, மயிலாடுதுறை. சுமோக் டிடெக்டர் ( ண்ட்ணிடுஞு ஞீஞுtஞுஞிtணிணூ) என்பது குறிப்பிட்ட பகுதியில் புகை இருப்பதைக் கண்டறியப் பயன்படும் ஒரு கருவி ஆகும். இக்கருவி புகையை உணர்ந்தறிவதன் மூலம் தீப்பிடித்திருப்பதைக் கண்டறிகிறது. அலுவலகங்கள் , வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்ற பொதுக் கட்டடங்களில் பொருத்தப்படும் சுமோக் டிடெக்டர் கருவி புகையை உணர்ந்தவுடன் அக் கட்டிடத்தின் தீத்தடுப்புத் தொகுதிக்கு மின் குறிப்பலைகளை அனுப்பும். இதன் மூலம் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு கட்டடத்தில் உள்ளவர்கள் உடனடியாகவே கட்டிடத்தை விட்டு வெளியேற உதவுகிறது. சிறிய வட்டத்தட்டுப் போலிருக்கும் இக்கருவி கட்டடங்களின் உட்கூரைகளில் குறிப்பிட்ட இடங்களில் பொருத்தப்படுகின்றன. தீ பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமன்றி, புகைத்தல் தடை செய்யப்பட்டுள்ள இடங்களில், புகைப்பவர்களைக் கண்டுபிடித்துத் தடுப்பதற்கும் இக்கருவிகள் உதவுகின்றன. இது உயிர்களின் பாதுகாப்புத் தொடர்பான விஷயம் என்பதால் , இக்கருவிகளுக்கு தொடர்ச்சியான மின்சாரம் வழங்கப்பட வேண்டும். ****************** ஜூன்8/ *ஸ்னுõக்கர் விளையாட்டுபற்றி சொல்லுங்க அங்கிள்! - வி. சுப்ரமணியம், பி.கொமாரபாளையம். ஸ்னுõக்கர் என்னும் மேடைக் கோல்பந்தாட்டம் என்பது ஒரு கம்பள விரிப்பு கொண்டு மூடப்பட்டுள்ள, நான்கு புறங்களிலும் பக்கவாட்டில் துளைகளைக் கொண்டுள்ள, ஒரு பச்சை நிற மேசையின் மீது விளையாடும் ஒரு கோல் விளையாட்டாகும். இந்த விளையாட்டில் ஒரு கோல் கொண்டு பந்துகளை வீழ்த்த வேண்டும். ஒரு வெள்ளை மற்றும், ஒரு மதிப்பெண் கொண்ட பதினைந்து சிவப்பு பந்துகள், வெவ்வேறான கலரில் ஆறு பந்துகள், மஞ்சள் (2 மதிப்பெண்கள்), பச்சை (3), பழுப்பு (4), நீலம் (5), இளஞ்சிவப்பு (6) மற்றும் கறுப்பு (7)ஆகியவற்றைக் கொண்டது. ஒரு விளையாட்டு வீரர் மேடைக் கோல்பந்தாட்டத்தில், கோல்பந்தைப் பயன்படுத்தி, சிவப்பு மற்றும் வண்ணப் பந்துகளைச் செலுத்தி, எதிராளியை விடவும் அதிகமான மதிப்பெண்கள் எடுத்தால் வெற்றி பெற்றவராவார். பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளால் இந்தியாவில் <கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொதுவாகக் கருதப்படும் விளையாட்டு இது. சீனாவில் <இந்த விளையாட்டு புகழ் பெற்று வருகிறது.19ம் நுõற்றாண்டின் பிற்பகுதியில்தான் மேடைக் கோல்பந்தாட்டம் உருவானதாகப் பொதுவாக கருதப்படுகிறது. *கம்ப்யூட்டர் கீ போர்டில் எழுத்துகள் வரிசைப்படி இல்லையே, ஏன்? - டி. சிவகாமசுந்தரி, ஈரோடு. கீ போர்டில் எழுத்துகள் டைப் செய்ய வசதிக்கேற்றவாறு அமைக்கப்பட்டுள்ளன. அதிகமாக பயன்படும் எழுத்துகள் விரைவாகவும், எளிதாகவும் டைப் செய்ய விரல்களுக்கு எட்டும்படிஅமைத்திருக்கிறார்கள். அதிகமாக பயன்படும் எழுத்துகள் கீ போர்டில் இரண்டாவது வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வரிசை எழுத்துகள் மீதுதான் டைப் செய்யும் விரல் முனை சாதாரண நிலையில் இருக்கும். அதிகம் பயன்படாத எழுத்துகள் மேல் வரிசையிலும், அரிதாக பயன்படும் எழுத்துகள் கீழ் வரிசையிலும் அமைக்கப்பட்டுள்ளன. டைப் செய்வோர் எல்லாம் இந்த வகை அமைப்பில் பழக்கப்பட்டுவிட்டதால் பழைய முறையே பயன்பாட்டில் இருந்துவருகிறது. எதிர்காலத்தில் திருத்தம்பெற்ற புது கீ போர்டுகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. *கண்ணாடிப் பொருட்கள் கீழே போட்டால் உடைந்து விடுவது எதனால்? -எஸ்.எம். முகேஷ், அரையபுரம். ஒரு பொருளில் அடங்கி இருக்கும் அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளின் பிணைப்பு ஆற்றலுக்கு ஏற்ப அப் பொரும் கடினமாக அல்லது மென்மையாக இருக்கும். ஒரு பொருளின் இருக்கும் அணுக்கள், மூலக்கூறுகள் தமக்குள்ளே இருக்கும் இணைப்புகளை விட்டுவிடாமல் இணைந்தபடியே இடப்பெயர்ச்சியாகும் தன்மை கொண்டிருந்தால், அப்பொருள் மீது செலுத்தப்படும் வெளிவிசையைத் தாங்கிக் கொள்ளும். அதனால் உடையாமல் இருக்கும். கண்ணாடிப் பொருட்களைப் பொறுத்தவரை அதில் பலவகைப்பட்ட அணுக்கள் இருக்கின்றன. அந்த அணுக்கள் ஒன்றுடன் ஒன்றாக உறுதியுடன் பிணைக்கப்பட்டுள்ளன. இந்த அணு பிணைப்புகள் வெளிவிசை அல்லது அழுத்தத்தின் காரணமாக சிதைந்தால், அந்த அணுக்கள் இடம் பெயர்ந்து மற்ற அணுக்களுடன் மீண்டும் இணைப்பைப் பெறமுடிவதில்லை. எனவேதான் கண்ணாடிப் பொருள்கள் எளிதில் உடைந்து விடுகின்றன. ******************* ஜூன்22 மெட்டல் டிடெக்டர் எப்படி செயல்படுகிறது? - கா. தாமரைச்செல்வன், திட்டை. முக்கியமான அரசு அலுவலகங்கள், பஸ், ரயில், விமான நிலையங்களில் நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தி இருப்பார்கள். இந்த வழியின் வழியே செல்பவர்கள் வெடிகுண்டுகளையோ, ஆயுதங்களையோ வைத்திருந்தால் கண்டுபிடித்துவிடலாம். போலீசார் கையில் நீள்வட்டவடிவமான கருவி வைத்திருப்பார்கள். இதுவும் ஒருவகை மெட்டல் டிடெக்டர் கருவிதான். இதை ஒருவரின் உடல் அருகில் கொண்டு சென்றால், அவர் வைத்திருக்கும் பைகளின் மீது காட்டுவதன் மூலம் அவரிடம் ஆபத்தான பொருட்கள் ஏதும் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்கலாம். ஒருவர் மறைத்து வைத்திருக்கும் உலோகத்தை மெட்டல் டிடெக்டர் எப்படி கண்டுபிடிக்கிறது என்றால், ஒரு காந்தத்துண்டின் அருகே குண்டூ சியோ இரும்பு பொருளோ அருகே கொண்டு சென்றால் அதை காந்தம் ஈர்க்கும். காந்தத்தின் சுற்றுப்புறத்தில் உருவாகும் காந்தப்புலத்தால் இந்த ஈர்ப்புத்தன்மை உருவாகிறது. மெட்டல் டிடெக்டர் கருவிகளில் மின்சாரம் செல்லும் சர்க்யூட் பாதைகள் மிகவும் நுட்பமான வகையில் அமைக்கப்பட்டிருக்கும். காந்தப்புலங்களில் மிகவும் நுணுக்கமாக ஏற்படும் பாதிப்புகளைக்கூட உணர்ந்து எச்சரிக்கை ஒலி எழுப்பும் வகையில் அந்தக்கருவி தயார் செய்யப்பட்டிருக்கும். கையடக்கமாக உள்ள மெட்டல் டிடெக்டரில் காயில் எனப்படும் இரண்டு கம்பி சுருள்கள் இருக்கும். இவை இரண்டும் ஒரே சக்திகொண்ட காந்தப்புலங்களை உருவாக்கும் திறன்கொண்டிருக்கும். இந்தக்கருவியின் அருகே ஒரு உலோகப்பொருள் வந்தால், ஒரே வகையான ஈர்ப்புத்தன்மையை கொண்டு அந்தக் காந்தப் புலங்களின் சமநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. அது மின்கம்பிச் சுருளுக்குக் கடத்தப்பட்டு எச்சரிக்கை ஒலி எழுப்பும். *நம் உடலில் எத்தனை ஆயிரம் வியர்வை சுரப்பிகள் உள்ளன? - மதி. தேவதர்ஷன், கயத்துõர். நம் உடலில் வெப்பம் அதிகமானால், அதை கட்டுப்படுத்தி ஒரே சீராக வைத்துக்கொள்ள ஏற்படுவதுதான் வியர்வை. உடலின் வெப்பத்தை 85 சதவீதம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது இந்த வியர்வைதான். உடலில் எங்கெல்லாம் சருமம் இருக்கிறதோ அங்கெல்லாம் வியர்வை சுரப்பிகளும் இருக்கும். வியர்வை என்பது பெரும்பாலும் தண்ணீர்தான். அதனுடன் சில ரசாயனங்களையும் கழிவுப் பொருட்களையும் உடல் வெளியே தள்ளுகிறது. இந்த வியர்வை, சருமத்தில் 20 லட்சத்தில் இருந்து 50 லட்சம் <நுட்பமான துவாரங்கள் மூலம் வழிகிறது. இந்த நுண்ணிய துவாரங்கள் உடல் முழுவதும் பரவியுள்ளன. *ரயில் செல்லும் வழியில் ஙி/ஃ என்று ஒரு போர்டு எழுதிவைத்துள்ளார்களே, ஏன்? முகமது அசாருதீன், வல்லம். ரயில் பயணங்களில் வேடிக்கைப் பார்ப்பது எல்லாருக்கும் பிடிக்கும். அந்த வேடிக்கை பார்த்ததில் அர்த்தமுள்ள ஒரு கேள்வியை கேட்டிருக்கும் அசாருதீனுக்கு ஒரு பாராட்டு! தண்டவாளம் செல்லும் பாதையில் இரு பக்கங்களில் இரும்பு கம்பியில் மஞ்சள் நிறத்தில் சதுரவடிவில் ஒரு போர்டை பொருத்தி அதில் ஙி அல்லதுஙி/ஃ என்று எழுதி இருப்பார்கள்.இதில் ஙி என்பது விசில் ஒலி எழுப்பவும் என்ற பொருள் தரும். ஃ என்பது லெவல் கிராசிங் என்று பொருள் தரும். அதாவது லெவல் கிராசிங் வருகிறது, ஆதலால், இந்த இடத்தில் இருந்தே ஹாரன் எழுப்பவும் என்று பொருள். இந்த போர்டு லெவல் கிராசிங் இருக்கும் துõரத்தில் இருந்து 250 மீட்டர் துõரத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருக்கும். *************** *சுனாமி வருவதை முன்கூட்டியே விலங்குகள் அறியும் என்பது உண்மையா? - கு.ரம்யா கலைவாணி, திருச்சி. சுனாமி, பூகம்பம் போன்றவற்றை பறவைகளும் விலங்குகளும் உணர்ந்துகொள்கின்றன என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இவற்றிற்கு எல்லாம் விஞ்ஞானப்பூர்வமான ஆதாரம் இல்லை. சீனா, ஜப்பான், இந்தோனிஷியா போன்ற நில நடுக்கம் அதிகம் ஏற்படக்கூடிய நாடுகள் பூகம்பம் வருவதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் ஆற்றல் விலங்குகளுக்கு உண்டு என்று நம்புகின்றன. விலங்குகள் உண்பது உறங்குவது எல்லாம் தரையில்தான். அவை தரைமீதுதான் காதை வைத்துக்கொண்டு உறங்கும். அதனால் பூமியில் ஏற்படும் மெல்லிய அதிர்வுகளைக்கூட அவற்றால் உணர்ந்துகொள்ள முடிகிறது என்கிறார்கள். ரயில் தண்டவாளத்தில் காதை வைத்துக்கொண்டு கேட்கிறபோது துõரத்தில் வரும் ரயிலின் ஓசையைக் கேட்க முடிகிறது போல் தொலைவில் ஏற்படும் நிலநடுக்க ஓசையை விலங்குகளால் அறியமுடிகிறது என்று சொல்லப்படுகிறது. இந்த விலங்குகளைப்போலவே கற்கால மனிதனும், இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே அறிந்து கொண்டு இடம்மாற்றம் செய்தான் என்றும் கூறப்படுகிறது. *விசிறி கொண்டு விசுறும்போது காற்று நன்றாக வீசுவது எப்படி? - எஸ். ஆகாஷ், திருப்பூர். அடிக்கடி கரன்ட் கட் ஆவதால் மின் விசிறி இயங்காமல், புழுக்கத்தில் விசிறி காற்றில் இளைப்பாறும் போது இப்படி ஒரு கேள்வி கேட்க நினைத்தாயா, ஆகாஷ்! நாம் கையில் விசிறியை வைத்துக்கொண்டு அப்படியும் இப்படியுமாக அசைக்கும் போது நம்மை சுற்றி உள்ள குறைந்த அளவுள்ள காற்று அகற்றப்படுகிறது. அதாவது வெளியேற்றப்படுகிறது. அதனால் நம்மை சுற்றி காற்று இல்லாத வெற்றிடம் ஏற்படுகிறது. அந்த வெற்றிடத்தை நோக்கி, அதிக அளவு உள்ள காற்று வேகமாகப் பாய்ந்து வருகிறது. அவ்வாறு வருகிற காற்றின் குளுமையில்தான் அப்பாடா காற்று சுகமாக இருக்கு என்கிறோம்! பொதுவாக வெற்றிடத்தை நோக்கிக் காற்று வீசும் என்பது விதி! *விமானத்தில் பயணம் செய்வோரின் பேனாவிலிருந்து மை தானாகவே வெளியேறுவது எப்படி? - த. திவ்யா, பாண்டமங்கலம். பூமியிலிருந்து உயரமான இடத்துக்குச் செல்ல செல்ல பேனாவில் இருந்து மை கசியத்தான் செய்யும். இதற்கு காரணம் உயரம் கூட கூட அங்கு நிகழும் அழுத்தம் குறையும். ஒரு குறிப்பிட்ட அளவில் அடைக்கப்படும் ஒரு பொருளின் திண்மை, அந்தந்த இடத்தில் இருக்கும் அழுத்தத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பது விஞ்ஞான கோட்பாடு. எனவே கீழே அதிக அழுத்தத்தில் நிரப்பப்பட்ட பேனாவின் மை, உயரத்தில் குறைந்த அழுத்தத்தில். திண்மை குறைந்து கசிகிறது. **************** ஜூலை6 *கனமான பொருள் தண்ணீருக்கு அடியில் கனம் குறைந்து காணப்படுவது எதனால்? - ஆர். ஸ்ரீநிதி ராம்குமார், ஸ்ரீரங்கம். நீருக்கு அடியில் ஒரு பொருள் இருந்தால் அதன் எடையில் மாற்றங்கள் இருக்கத்தான் செய்யும். காற்றின் அடர்த்தியைவிட நீரின் அடர்த்தி அதிகம். நீருக்கு மேலே தள்ளும் ஆற்றல் உண்டு. அதாவது மிதப்பு ஆற்றல் இயல்பாக இருக்கும். இதனால் கனமான பொருள் லேசாகத் தெரியும். குளத்தில் கழுத்தளவு தண்ணீரில் நிற்கும் போது உடல் முழுவதும் தண்ணீரில் இருக்கும். தலை மட்டும் மேலே இருக்கும். இந்நிலையில் உடல் பாகத்தை தண்ணீர் மேல் நோக்கி தள்ளும். இதனால் நம் உடல் லேசாகத் தெரியும். *இரவு நேரத்தில் மட்டும் துõக்கம் வருவது ஏன்? - எஸ். ஐஸ்வர்யா, கோபி. இயற்கையாகவே இரவு நேரத்தில் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள்தான் இதற்குக் காரணம். அதாவது, மனித உடலில் உறக்க – விழிப்புச் சுழற்சியைக் கட்டுப்படுத்தும் ‘மெலட்டோனின்’ எனப்படும் ஹார்மோன் இருள் கவிழும் இரவு நேரத்தில்தான் அதிகமாகச் சுரக்க ஆரம்பிக்கிறது. காலையில் சூரிய வெளிச்சம் பரவ ஆரம்பித்ததும், இந்த ‘மெலட் டோனின்’ சுரக்கும் அளவும் தானாகவே குறைய ஆரம்பித்து விடுவதால், பகற்பொழுதில் நல்ல விழிப்பு நிலையுடன் கூடிய புத்துணர்வு தொடர்கிறது. ஆனால், இதைத் தவிர்த்தும் பகல் வேளையில் துõக்கம் வருவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. உட ல் களைப்பாக இருக்கும் சமயத்திலோ அல்லது நன்றாகச் சாப்பிட்டு முடித்த பிறகோ, சுகமான துõக்க உணர்வு ஏற்படும். ஆரோக்கியமான உடல்வாகு கொண்ட அனைவருக்கும் ஏற்படும் இயல்பான நிலைதான் இது. *போனை எடுத்தவுடன் ஹலோ எனக் கூறுவது ஏன்? - பா. கவிபாரதி, அந்தியூர். எல்லாரும் போனில் உரையாடும் போது முதல் வார்த்தை ஹலோ சொல்வது பழக்கமாகிவிட்டது. ஆனால், இந்த சொல் எப்படி வந்தது என்பதற்கு ஒரு சம்பவம் இருக்கிறது. கிரகாம் பெல் போனை உருவாக்கி இருந்தாலும், இந்த சொல்லிற்கு சொந்தக்காரர் எடிசன் . கிரகம் பெல்லின் அல்லது தொலைபேசியில் உரையாடிய முதல் வார்த்தை ‘Mணூ. ஙிச்tண்ணிண, ஞிணிட்ஞு டஞுணூஞு. ஐ தீச்ணt tணி ண்ஞுஞு தூணித.‘ வாட்சன் உன்னை பார்க்க வேண்டும் இங்கே வா என்பதே.’ பணிபுரியும் ஓரிடத்தில் இருவர் பேச எண்ணும் போது எப்படி மற்றொருவருக்கு புரியும். ஒருவர் அழைப்பை ஏற்படுத்தும் போது ஒரு மணி போல சத்தமிடும் அமைப்பை திட்டமிட்டிருந்தனர் . ஆனால், எடிசன் தொலைபேசி இணைப்புகள் வழங்க இருந்த நிறுவன அதிபருக்கு ஒரு கடிதம் எழுதினார். அழைப்பு மணிக்கு மாற்றாக ஹலோ என்ற வார்த்தையை ஏன் பாவிக்க கூடாது? அது 10 ல் இருந்து 20 அடிகள் வரை கேட்க கூடியது எனக் கூறியிருந்தார். அது முதல் ‘ஹலோ’ வார்த்தை பிரபலமானது. அகோய் என்ற சொல்லே ஹலோ வர முதல் பாவனையில் இருந்தது . ஆனால் ஆதி காலங்களில் ஹெலோ சொல் பலரை சத்தமாக அழைப்பதற்கு பாவிக்கப்பட்டுள்ளது. *************** *பாப் கார்ன் பொரிக்கும் போது மிஷினில் ஒவ்வொன்றும் துள்ளி துள்ளி குதிக்கிறதே, எப்படி? - எஸ். ராம்மோகன், தஞ்சாவூர். பாப் கார்ன் வாங்கினோமா, சாப்பிட்டோமா என்று இல்லாமல் அதை கூர்ந்து கவனித்து இப்படி ஒரு கேள்வி கேட்டிருக்கும் ராம்மோகனுக்கு பாராட்டு! இப்படிப்பட்ட சந்தேகங்கள் அறிவு வளர்ச்சிக்கு உதவும். கீப் இட் அப்! பாப் கார்ன் செய்ய பயன்படும் பொருள் நம்மூர் சோளம். சோளம் ஒரு மாவுப்பொருள். சோளம் கடினத் தன்மை அதிகமாக கொண்டிருக்கும். ஒரு சோளப் பொரியின் மையத்தில் கொஞ்சம் பருப்பும், அதைச் சுற்றி கடினமான மாவுப்பொருளும் இருக்கும். கொஞ்சம் ஈரப்பசையும் இருக்கும். இதை மிஷினில் சூடு ஏற்றும்போது, சோளத்தில் இருக்கும் ஈரப்பசை சூடாகி ஆவியாகும். அதே சமயம் விரிவடையும். மாவுப்பொருளைப் பிளந்துக்கொண்டு விரிவடையும்போது அந்த உந்து விசையினால் சோளம் வெடிக்கும். அதாவது துள்ளிக் குதிக்கும். *பாம்பு பால் குடிக்கும் என்பது உண்மையா, அங்கிள்? - ஆர். கவுசல்யா, நாமக்கல். பாம்புகள் பற்றிய பல நம்பிக்கைகள் உள்ளன. அதில் ஒன்று பாம்பு பால்குடிக்கும் என்பது. எப்போதாவது தாகம் எடுக்கும் போது பாம்புக்கு நீர் அருந்தும் பழக்கம் உண்டு. அப்படி ஒரு சமயத்தில் வேண்டுமானால் சிறிதளவு பாலை பருகலாம். மற்றபடி இயற்கையில் பாம்பு பால் குடிப்பது இல்லை. காரணம் பாம்புகளுக்கு நாக்கு பிளவுபட்டு இருக்கும். எனவே, பாம்பு பாலையோ நீரையோ நக்கிக் குடித்திட முடியாது. பாம்புக்கு அதன் தலையின் நுனிப் பகுதியில் மூக்கு உள்ளது. அது நீர்மப்பொருளில் வாயை வைக்கும் போது முதலில் நுழைவது மூக்காகத்தான் இருக்கும். மூக்கை நீரிலோ, பாலிலோ நுழைத்தாலே பாம்பு மூச்சுத் திணறிச் செத்துவிடும். பாம்பு இரையை எலி, தவளை போன்றவற்றை அப்படியே விழுங்குமேயன்றி மென்று சாப்பிடக் கூடிய அமைப்பு கிடையாது. அதனால் முட்டையையும் பாம்பு விழுங்குகிறதேயன்றி உடைத்து உறிஞ்சி குடிக்காது. *பிளாஸ்டிக் எதில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது? -நெடுஞ்செழியன், நெய்க்குப்பை. முதலில் பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டது தாவரங்களில் இருந்துதான். தாவர செல்லுளோஸ் சங்கிலி மூலக் கூறுகளிலிருந்து தயாரிக்கப்பட்டது. 1862ல் அலெக்சாண்டர் பார்க்ஸ் தயாரித்த பிளாஸ்டிக் பார்க்சைன் எனப்பட்டது. 1909ல் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது.1930ல் லியோ பேக்லேன்ட் என்ற பவுதிகவியலாளர் பெட்ரோலில் இருந்து பிரித்தெடுக்கும் முறையை கண்டார். அதை பேக்லைட் என்பர். பின் பாலிதீன், நைலான் அக்ரிலிக் கண்டுபிடிக்கப்பட்டு, இன்றுவரை நடைமுறையிலுள்ளது. 1941 ல் பாலிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்டது. பிளாஸ்டிக்கின் தனிச்சிறப்பு அதை எந்த வடிவத்திலும் உருவாக்கம் செய்ய முடியும். நடைமுறை வாழ்வில் பிளாஸ்டிக், விமானம் முதல் மனித உடல்பாகங்கள் வரை பயன் மேம்பாட்டிலிருக்கிறது. பிளாஸ்டிக் பொருட்களால் பூமிக்கும், நம் உடலுக்கும் கேடு ஏற்படும். பிளாஸ்டிக் பைகள் மக்குவதற்கு 100-1000 ஆண்டுகள் ஆகுமாம். எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ளுங்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. *************** ஜூலை20 *தண்ணீரில் இருக்கும் மீனை தரையில் போட்டால் துடிதுடித்து இறந்துவிடுவது ஏன்? - கூ. சீனிவாசன், திருச்சி. ஒவ்வொரு உயிரினமும் உயிர்வாழ இயற்கையாகவே சில உடலமைப்புடன் படைக்கப்பட்டுள்ளன. தரையில் ஒரு உயிரினம் உயிர்வாழ சுவாசிக்க வேண்டும். சுவாசிப்பதற்கு நுரையீரல் உறுப்பு வேண்டும். மீனுக்கு நுரையீரல் கிடையாது. அதனால் தரையில் மீனைப்போட்டால் சுவாசிக்க முடியாமல் இறந்துவிடுகிறது. ஒரு பூனையைப் பிடித்து நீரில் மூழ்கடித்தால் அது தண்னீரில் சுவாசிக்க முடியாமல் இறந்து விடும். ஒரு செடியை நிலத்திலிருந்து பிடிங்கி தரையில் போட்டால் அது விலங்குகள் போல உணவை தேடிசெல்ல முடியாமல் இறந்து விடும். இப்படி ஒரு மாற்றுச் சூழ்நிலையை சந்திக்கும் போது தாக்குப்பிடிக்க முடியாமல் விலங்குகளும் தாவரங்களும் இறந்துவிடுவது இயற்கை. *மழைக்காலங்களில் மட்டும் மரங்கள் அதிகம் துளிர்விடுவது எப்படி? - ச. சந்தானகிருஷ்ணன், ஓசூர். தாவரங்கள் உயிர்வாழ பூமியில் இருந்து நீரை உறிஞ்சுகின்றன. அப்படி உறிஞ்சும் நீரின் அளவை சம நிலையில் வைத்துக் கொள்வதற்காக, நீராவிப்போக்கு என்னும் செயலைச் செய்கின்றன. அப்படி சம நிலையில் வைத்து கொள்ளவில்லை என்றால் தாவரங்கள், மரங்கள் அழுகி இறந்துவிடும். மரங்கள் உறிஞ்சும் நீரை நீராவிப்போக்கை இலைகளின் வழியாக செய்கின்றன. வெயில் காலத்தில் மரத்தைச் சுற்றி எவ்வளவு நீர் ஊற்றினாலும் சுற்றுப்புறத்திலுள்ள வெப்பத்தின் காரணமாக, நீரின் அளவு அதைப் பாதிப்பதில்லை. அதோடு அதிக இலைகள் இருந்தால் இருக்கின்ற நீரையும் அவை வெளியேற்றிவிடும். ஆனால் மழைக்காலத்தில் சுற்றுப்புறத்திலும், வேருக்கு அடியிலும் தேங்கி நிற்கும் தண்ணீரை அவை வெளியேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. எனவே விரைவில் துளிர்த்து இலைகளின் வழியாக நீரை வெளியேற்றுகின்றன.அதனால் தான் வெயில் காலத்தைவிட மழைக் காலத்தில் மரங்கள் விரைவாகத் துளிர்க்கின்றன. *சாப்பிட்டப்பிறகு துõக்கம் வருவது ஏன்? எம்.சுப்ரமணி, அசநல்லிகுப்பம். பொதுவாக நம் உடலின் ரத்த ஓட்டத்தில் 40 சதவீதம் மூளைக்கு, அதாவது தலைப்பகுதிக்கு போய்விடும். சாப்பிட்டவுடன், செறிமானம், மற்றும் உட்கிரகித்தலுக்குகாக அதிக ரத்தஓட்டம் வயிற்றின் பக்கம் திருப்பப்படும். எனவே மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறையும். இதனால் ஒரு மந்தமான நிலை ஏற்படும். அதுவே துõக்கத்திற்கு அழைத்துச் செல்லும். சாப்பிட்ட பிறகு துõக்கம் வருவது இயல்பு. ஆனால் அதன் செரிமானத்தின் இறுதியில் உற்சாகம் சுறுசுறுப்பு போன்றவை வரவேண்டும். ஆனால், தினமும் சாப்பிட்டப்பிறகு துõக்கம் வரும் பழக்கம் இருந்தால் உடல் அளவில் சிறுகுறைபாடு இருப்பதாக அர்த்தம். சாப்பிட்டப்பிறகு, அரை ஸ்பூன் சீரகம், ஓமம், சோம்பு, ஏலக்காய் விதை, கிராம்பு ஆகியவற்றை கொஞ்சம் வாயில் போட்டு மென்று அதிலிருந்து வரும் சாற்றை எச்சிலுடன் விழுங்கினால் இவற்றிலுள்ள சூடான வீரீயம் உணவை வயிற்றில் அதிக நேரம் தேங்கவிடாமல் விரைவாக செரிக்க செய்துவிடும். அதனால் துõக்கம் வருவது தடுக்கப்படும். ************************ 27.7.2012 *சிறு எடை உள்ள ஆணி நீரில் மூழ்கிவிடுகிறது. அதிக எடையுள்ள கப்பல் எப்படி மிதக்கிறது? - பி. ஆபித், கிருஷ்ணகிரி. தண்ணீரில் விழும் ஒரு பொருள் தனது எடைக்கு சமமான நீரை இடம் மாற்றினால், அது மிதக்கும் ; ஒரு பொருளின் எடை அது இடம்மாற்றும் நீரின் எடையைவிடக் குறைவாக இருந்தால், அது மூழ்கிவிடும். இது ஒரு அறிவியல் விதி. தண்ணீரைவிட காற்றின் அடர்த்தி குறைவு . எனவே, காற்றைக் கொண்டிருக்கும் பொருட்களும் தண்ணீரில் மிதக்கும் . கப்பலின் வடிவமைப்பு, அது தனது எடைக்கு சமமான கடல் நீரை இடம்மாற்றும் வகையில் உள்ளது . அதோடு , கப்பலுக்குள் காற்றோட்டமும் உள்ளது . இதனால் , கடலில் கப்பல் மிதக்கிறது . சிறிய இரும்பு ஆணி தமது எடைக்கு சமமான நீரை இடம்மாற்றும் வகையில் இல்லை . அவை தமது எடையை விடக் குறைந்த எடையிலான நீரையே இடம் மாற்றுகின்றன . அவற்றுக்குள் காற்றோட்டமும் இல்லை . இதனால் , அவை கடலில் மூழ்கிவிடுகின்றன. *ஆன் லைன் ஷாப்பிங் என்றால் என்ன? -எல். ஸ்ரீராம், திருச்சி. இணையம் மூலம் ஒரு பொருளை வாங்குவதும், விற்பதும் இன்றைய தேதியில் ஒரு ஆச்சரியகரமான விஷயமே அல்ல! தினம் ஒரு ஷாப்பிங் தளம் புதியதாய் உருவாகிக் கொண்டிருக்கிறது! ரயில் ,பிளைட் டிக்கெட் புக்கிங் முதல், காலணிகள், ஆடைகள், கண்ணாடிகள், கம்ப்யூட்டர் பாகங்கள், சுற்றுலா பயணங்கள், பூக்கள், மளிகை சாமான்கள், மொபைல்கள், புத்தகங்கள், பர்னிச்சர்கள் இப்படி ஆன் லைனில் ஷாப்பிங் பண்ணலாம். இச்சேவைகளை வழங்கும் அனைத்து தளங்களும் நம்பத்தகுந்தவைதானா? அவ்வாறு வாங்கிடும் அனைத்து சேவைகளும், பொருட்களும் சிறந்தவைதானா? இணையத்தில் கிடைக்கும் கவர்ச்சிகர சலுகைகள் நிஜம்தானா? இணையம் மூலம் பண பரிமாற்றம் செய்வது பாதுகாப்பானதுதானா? என்பதை எல்லாம் நீங்கள்தான் தீர்மானித்து கொள்ள வேண்டும். *நாக்கில் நரம்பு இல்லாம பேசாதே! என்கிறார்களே, நாக்கிற்கு நரம்பு உண்டா, இல்லை? -ஆர். நிஜா ராம்குமார், ஸ்ரீரங்கம். நம்முடைய நாக்கு என்பது, வாயின் அடியில் எலும்போடு இணைக்கப்பட்ட எலும்புத்தசை என்னும் வகையைச் சேர்ந்த இளஞ்சிவப்பு நிறத் தசை. இது வாயில் இடும் உணவை பற்கள் மெல்லுவதற்குத் ஏற்றார்போல் நகர்த்தியும், புரட்டியும், திருப்பியும் தரும் உறுப்பு. உணவின் சுவையை உணரும் முதன்மையான உறுப்பு நாக்கு. நாக்கு பலவாறு வளையவல்லது, எனவே பேசுவதற்கும் துணை செய்கின்றது. வாயில் ஊறும் உமிழ்ந்நீரினால் நாக்கு எப்பொழுதும் ஈரமாக இருக்கும். நாக்கின் மேற்புறத்தில் உள்ள நுண்புடைப்புகளில் நான்கு வகையான நுண்புடைப்புகள் உள்ளன. சுவையுணர் நுண்புடைப்புகளுக்கு நாமுடிப்பு என்று பெயர். நாவின் நுண்புடைப்புகளாகிய நாமுடிப்புகளின் நான்கு வகைகளில் ஒருவகையான நாமுடிப்பு மெல்லிய இழைபோல் உள்ளது ( டிடூடிஞூணிணூட்) , இன்னொருவகையான நாமுடிப்பு, நாய்க்குடை அல்லது காளான் போல் தலைப்பகுதி பருத்து உள்ளது (ஞூதணஞ்டிஞூணிணூட்). மூன்றாவது வகை நாமுடிப்பு ஒரு வளையம் போன்ற வடிவில் உள்ளது. இதுவே நாமுடிப்புகளில் பெரியது (ஞிடிணூஞிதட்திச்டூடூச்tஞு). நான்காவது வகை தட்டையாக உள்ளது (ஞூணிடூடிச்tஞு).மற்றபடி நாக்கில் நரம்புகள் கிடையாது. ****************** *பறவைகளுக்கு பற்கள் இல்லை. ஆனால் எப்படி உண்கின்றன? 3/8/2012 - வே. பழனிவேல், காட்டூர். கோழி, புறா,குருவி, வாத்து, வான்கோழி, ஈமு போன்ற பறவைகள் விதைகள், தானியங்கள் போன்ற கடினமான உணவுப் பொருட்களை சாப்பிடுகின்றன என்பது உண்மைதான். ஆனால்,அவை பற்கள் உதவிகொண்டு கூழாக்கிச் சாப்பிடாமல், கடினமான உணவுகளை வேறுவகையில் ஜீரணிக்கின்றன. உடற்கூற்றின்படி, பறவைகளின் வயிற்றின் கீழ்ப்பகுதியில் கிஷார்ட் (எடித்த்ச்ணூஞீ) என்ற விஷேச உறுப்பு அமைப்பு இருக்கிறது. மனிதர்களின் வாயில் பற்களின் உதவியால் கடித்து, அரைத்து கூழாக்கி விழுங்குவதற்கு இணையான, உணவைக் கூழாக்கி செரிமானத்துக்கு தயார் செய்வது இந்த உறுப்பின் வேலையாகும். கடைவாய்ப் பற்களின் பணியைச் செய்யும் கிஷார்ட் பகுதி பறவைகள் விழுங்கும் சிறுசிறு கூழாங்கற்களையும், மணற்துகள்களையும் பயன்படுத்தி கடினமான உணவுகளை உடைத்து செரிமானத்திற்கு தயார்ப்படுத்துகிறது. சில நாட்களுக்கு ஒருமுறை தேய்மானமான கற்களைக் கழிவாக கழித்துவிட்டு, புதிதாக கற்களையும், மணலையும் உணவுடன் எடுத்துக் கொள்கிறது. இந்த கிஷார்ட் பகுதி தடிமனான தசைகளால் ஆனது. இதன் உட்புறத்தைப் பாதுகாக்கவும், செரிமானத்திற்கும் என்சைம்ஸ் இருக்கும். ஒரு சில பூச்சியினங்களின் பகுதியில் கடினமான செதில்களும், சிறு சிறு பற்கள் போன்ற அமைப்பும் இருப்பதுண்டு. எனவே பறவைகளுக்கு கிஷார்ட் உறுப்புதான் பற்களாக செயல்பட்டு உணவு செரிமாணத்துக்கு உதவுகின்றது. *கத்தரிக்காய், காயா அல்லது பழமா ? - ஆர். கீதாவாணி, நாமக்கல். எவை எல்லாம் விதைகளைக் கொண்டிருக்கிறதோ அவை எல்லாம் பழம் வகையைச் சார்ந்தது என்பது தாவரவியல் கோட்பாடு . எனவே, இந்த வரையறைப்படி பார்த்தால் கத்திரி பழம்தான். அது போல தக்காளி, வெள்ளரி ஆகியவையும் பழம்தான். கத்தரிக்காய், தக்காளிக்காய், வெள்ளரிக்காய் என்று சொல்வதே பழக்கமாக இருப்பதால், இவற்றைப் பழம் என்று சொல்லும் பழக்கம் பரவலாகயில்லை. *கிரிக்கெட்டில் ‘டாஸ்’ போடும் பழக்கம் எப்படி வந்தது? - வ.கி. நாகராஜன், வடக்காலத்துõர். கிரிக்கெட் நம் நாட்டு பாரம்பரிய விளையாட்டு இல்லை. அது இங்கிலாந்துகாரர்கள் கண்டுபிடித்த விளையாட்டு. இந்த விளையாட்டில் யார் முதலில் விளையாடுவது என்பதை தீர்மானிக்க பூவா, தலையா- டாஸ் போட்டு பார்க்கும் பழக்கம் கிரிக்கெட்டில் இருந்து வருகிறது. ஜூலியஸ் சீசர் காலத்தில் உபயோகத்தில் இருந்த நாணயத்தில் அவரின் தலை ஒரு பக்கத்தில் பொறிக்கப்பட்டு இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்கும் சூழ்நிலை வந்தால் அப்போது பேரரசர் இல்லாத போது அவரின் சார்பாகவும், கடவுளின் சாட்சியாகவும் நாணயத்தைத் துõக்கிப் போட்டு மேல் பாகத்தில் தலை பக்கம் விழுந்தால் சரியா ? தவறா ? என இவர்கள் கேட்ட கேள்வியின் பதிலாக எடுத்துக் கொண்டார்கள். அந்த பழக்கம் தொடர்ந்து கடைசியில் கிரிக்கெட் விளையாட்டு வரை வந்து விட்டது. ************** *யார் ரத்த தானம் செய்யக்கூடாது? 9.8.2012 - சி. சுகுமார், காரைக்கால். உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் ஆகியோர் ரத்ததானம் செய்யக்கூடாது. *பான் கார்டு என்பதன் பொருள் என்ன? அதன் பயன்பாடு பற்றி சொல்லுங்க அங்கிள்! -ஒய்.எல். ஸ்ரீரவிராகுல், அவ்வையார்பாளையம். பான் (கஅN) என்பது நிரந்தரக் கணக்கு எண் (கஞுணூட்ச்ணஞுணt அஞிஞிணிதணt Nதட்ஞஞுணூ) என்ற பத்து இலக்க எண் என்பதை குறிக்கும். இந்திய வருமான வரி செலுத்தும் ஒவ்வொரு இந்தியரும் இந்த எண்ணைப் பெற்றிருப்பது அவசியம். வங்கிக் கணக்கு தொடங்க, தொலைபேசி இணைப்பு பெற, வங்கிக் கணக்கில் 50 ஆயிரத்துக்கு மேல் பணம் போடவோ எடுக்கவோ, பான் எண் வேண் டும். மியூச்சுவல் பண்ட், பங்குச் சந்தை முதலீடு போன்றவற்றிற்கு பான் எண் அவசியம். இந்த பான் கார்டை பெற நாடு முழுக்க உள்ள ஐ.டி. பான் சேவை மையங்களில் ஏதாவது ஒன்றில் நீங்கள் விண்ணப்பிக்கலாம். கட்டணம் 94 ரூபாய். ஆன்லைன் மூலமும் (டttணீ://தீதீதீ.தtடிடிண்டூ.ஞிணி.டிண/) விண்ணப்பிக்கலாம்! உங்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணம் ஒன்றின் நகல், பாஸ் போர்ட் அளவு புகைப்படம் ஒன்றையும் இணைத்து, படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால், 15 நாட்களில் பதிவுத் தபாலில் பான் கார்டு வீடு தேடி வந்து விடும்.! *இரும்பு எவ்வாறு துருபிடிக்கிறது? மற்ற உலோகங்களும் துருப்பிடிக்குமா? - அ.ஆரிமுத்து, வாழைப்பந்தல். ஒவ்வொரு பொருளும் இயற்கையில் வேறு வடிவத்தில் கிடைக்கிறது, குறிப்பாக உலோகங்கள் அதன் தாதுக்களாக தான் கிடைக்கிறது , இரும்புத்தாது (டஞுட்ச்tடிtஞு)., அலுமினியத்தாது (ஞணிதுடிtஞு). தாமிரத்தாது (ஞிதணீணீணூடிtஞு) போன்றவைகளாகும். இப்படி கிடைக்கும் தாதுக்களில் உலோகம் தனித்து இல்லாமல் அதன் ஆக்ஸைட் வடிவத்தில் இருக்கிறது. இப்படி இருக்கும் உலோகம் அதன் இயற்கை வடிவத்தில் இருந்து தனியே பிரித்து எடுக்கப்படுகிறது, இப்படி தனித்து எடுக்கப்படும் உலோகம் மீண்டும் அதன் இயற்கை வடிவதிற்க்கு மாறும் வேதியல் மாற்றம் தான் துருப்பிடித்தல். அலுமினியம் பாத்திரத்தில் அலுமினியம் ஆக்ஸைட் இயற்கையிலே படர்ந்து விடுவதால் அது மேலும் துருப்பிடிப்பதில்லை. நாம் வீடுகளில் பயன்படுத்தும் பூஜை பாத்திரங்கள் பித்தளையில் (அது தாமிரம் உலோகம் கலந்த கலவை) தாமிரம் இருப்பதால், அதில் காப்பர் ஆக்ஸைட் ஆக நம் கண்களுக்கு தெரியும் பச்சை நிறமாக படியும் படற்கையும் துரு தான். தங்கம் இயற்கையில் தனி தனிமம் ஆக கிடைக்கிறது, ஆதலால் அது ஆக்ஸைட் வடிவம் மாறாமல் துருப்பிடிக்காமல் இருக்கிறது. *******************

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

சிறுவர்களுக்கான விடுகதை விளையாட்டு(பாகம் இரண்டு)/ தேவராஜன்/

சிறுவர்களுக்கான விடுகதை விளையாட்டு(பாகம் இரண்டு)/ தேவராஜன்/ விடுகதை விளையாட்டு/பிப்.23/ இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர், ‘ராஜ்ஜியம் இல்லாத ராஜா ராணி உண்டு கிளை இல்லாத இலைகள் உண்டு ஏ,ஜே, கே, கியூ, 1,2,3 இருக்கும் வாய்ப்பாடு அல்ல உடை, நகைகள் இருக்கும் கடை அல்ல?’ நான் யார்? என்று புதிர் போடுகிறார். உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் ‘அது சீட்டுக்கட்டு!’ என்கிறார். இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர், ‘வெள்ளை வெளேர்னு இருப்பான் கோபம் வந்தால் கறுத்துப்போவான் தன்னையும் அறியாமல் கண்ணீர் சிந்துவான்- அவன் யார்?’ என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர், ‘அது மேகம்!’ என்கிறார். இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும். ‘வளைந்து நெளிந்து செல்வேன் குழாய் அல்ல வழிநெடுக தண்ணீர் தருவேன் மழையும் அல்ல காடு மலை மேடு பள்ளம் சுற்றுவேன் சிங்கம் புலி அல்ல கடைசியில் கடலில் மூழ்கி குளித்துடுவேன்-‘ நான் யார்? என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர். குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடியுங்க! - விடை: நதி ********** விடுகதை விளையாட்டு இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவரை கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர், “இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல; வேகமாய் ஓடும் மான் அல்ல; கால்கள் உண்டு மனிதனல்ல - அது என்ன? ” என்று புதிர் போடுகிறார். உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் “அது சைக்கிள்!” என்கிறார். இப்போது இரண்டாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர், “ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம். அது என்ன ? ” என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர், “அது தேன் கூடு!” என்கிறார். இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும். “ கூரை வீட்டைப் பிரிச்சா ஓட்டு வீடு! ஓட்டு வீட்டுக்குள்ள வெள்ளை மாளிகை! வெள்ளை மாளிகைக்கு நடுவில் குளம் அது என்ன?” என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர். குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடியுங்க! - விடை: தேங்காய் *************** விடுகதை விளையாட்டு இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர், “நாலு உலக்கைக் குத்தி வர இரண்டு முறம் புடைத்து வர துடுப்புத் துழாவி வர துரைமக்கள் ஏறி வர- அது என்ன?” என்று புதிர் போடுகிறார். உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் ‘அது யானை!’ என்கிறார். இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர்,“பொட்டுப்போல் இலை இருக்கும், பொரிபோல் பூப் பூக்கும், தின்னக் காய் காய்க்கும், தின்னாப் பழம் பழுக்கும் அது என்ன?” என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர், “அது முருங்கை மரம்!” என்கிறார். இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும். “ கழுத்துண்டு; கையில்லை நாக்குண்டு; பேச்சில்லை வாயுண்டு; அசைவில்லை தொப்பி உண்டு; தலைமுடியில்லை. அது என்ன? ” என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர். குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடியுங்க! - விடை: பேனா ************* விடுகதை விளையாட்டு இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர், “அந்தரத்தில் பறக்கும் பறவையல்ல; அந்திக்குப் பின் இரைதேடும் ஆந்தையல்ல; தலைகீழாய் நின்றிருக்கும் தவசியுமல்ல அது என்ன?” என்று புதிர் போடுகிறார். உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் ‘அது வவ்வால்!’என்கிறார். இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர், “ பறக்காத பூப்பந்து; விளையாட்டுக்கு உதாவது மஞ்சள் பந்து; பகட்டான சிறுபந்து ,வாயில் இட்டால் தேன்பந்து - அது என்ன?” என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர், “அது லட்டு!” என்கிறார். இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும். “ தண்ணீர், உரம் இல்லாமல் முளைக்கிறான்; கிளை, இலை, பூ,கனி இல்லாமல் இருக்கிறான்; பிச்சு பிச்சு எறிந்தாலும் பின்னாலேயே முளைக்கிறான், வெட்டி வெட்டி எறிந்தாலும் எட்டு நாளில் முளைக்கிறான்; -அவன் யார்?” என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர். குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடியுங்க! - விடை: விரல் நகம் ************** விடுகதை விளையாட்டு ஏப்ரல்6/ இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர், “வயல்வெளியில் வீடு இருக்கும். கடலோரம் ஆற்றோரம் விளையாடுவான்.எட்டு கால் ஊன்றி, இரு கால் படமெடுத்து வட்டக்குடை பிடித்து பக்கவாட்டில் குலுங்கி குலுங்கி வருகின்றவனுக்கு முன்னும், பின்னும் நடக்கத்தெரியாது அவன் யார்?” என்று புதிர் போடுகிறார். உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் ‘அது நண்டு!’என்கிறார். இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர், “செடிக்கு எட்டுக்காய். இலைக்கு எட்டு முள்ளு. முட்டைபோல வயிறு. தலைக்கு குடை பிடித்திருக்கும் மயில் நிறத்து காய் அது என்ன காய்?? ” என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர், “அது கத்தரிக்காய்!” என்கிறார். இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும். “ இறக்கை இல்லை உயர வானில் பறக்கும். அது பறவை இல்லை. சுருள் சுருளான நீண்ட வால் இருக்கும். அது குரங்கும் இல்லை. படமெடுத்து தலையாட்டும். அது பாம்பும் இல்லை. இதை கையில் வைத்திருந்தால் சிறுவனுக்கும் சிறப்பு கிடைக்கு கல்லுõரிக்கு போகாமலே கிடைத்த சிறப்பு? அது என்ன??”என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர். குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடியுங்க! - விடை: பட்டம். ************* விடுகதை விளையாட்டு இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர், “அடிப்பக்கம் மத்தளம். இலையோ ஒரு பாய். குலை பெரிது. காயின் சுவை துவர்ப்பு. பழம் தின்னால் இனிப்பு அது என்ன?” என்று புதிர் போடுகிறார். உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் ‘ அது வாழைமரம்!’என்கிறார். இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர், “ அதற்கு கைகள் உண்டு, ஆனால் எதையும் பிடிக்க முடியாது; கால்கள் இருக்கும் நடக்க முடியாது; பற்கள் உண்டு, ஆனால் கடிக்க முடியாது; வாய் இருக்கும். ஆனால் பேச முடியாது. கண்கள் உண்டு, ஆனால் பார்வை கிடையாது. அது என்ன?” என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர், “ அது பொம்மை!” என்கிறார். இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும். “ என்னால் ஓட முடியும், ஆனால் நடக்க முடியாது; எப்போதாவது பாடுவேன், ஆனால் பேச முடியாது; கைகள் உண்டு, ஆனால் விரல்கள் கிடையாது; தலையில்லை, ஆனால் முகம் உண்டு; நான் யார் தெரியுமா? ” என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர். குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடியுங்க! - விடை: கடிகாரம் *************** விடுகதை விளையாட்டு இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர், “கையுண்டு காலில்லை. கழுத்து உண்டு தலை இல்லை.பல் உண்டு நாக்கு இல்லை. உடல் உண்டு உயிர் இல்லை. அது என்ன” என்று புதிர் போடுகிறார். உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் “சட்டை!” என்கிறார். இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர், ‘கத்திபோல் இலையிருக்கும். கவரிமான் கொம்பு போல பூ பூக்கும். தின்ன பழம் பழுக்கும். தின்னாத காய் காய்க்கும். அது என்ன?” என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர், “ ஈச்சம் பழம்!” என்கிறார். இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும். “ அதிவேகக் குதிரை இரைச்சல் போடும். ஓடிக்கொண்டே ஆடும். கூகூ என்று கத்தும். ஆனால் இந்தக் குதிரை போட்ட கோட்டைத் தாண்டாமல் ஓடும் அது என்ன? ” என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர். குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடியுங்க! - விடை: ரயில். *************** விடுகதை விளையாட்டு 27.4.12 இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர், “குளம் குட்டைக்குளம் பாம்பு ரெட்டைப் பாம்பு குருவி மஞ்சள் குருவி குளம் வத்திப் போச்சு பாம்பு செத்து போச்சு குருவி பறந்து போச்சு அது என்ன” என்று புதிர் போடுகிறார். உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் ‘அது விளக்கு!’என்கிறார். இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர், “ வெற்றிலை வரலாறு : பூக்கவும் செய்யாமல் காய்க்கவும் செய்யாமல் வெற்று இலையாக மட்டுமே இருக்கும் வெற்றிலை தின்னாள். கற்றாழைமடல் நிறத்தாள் . மீனாட்சி கையில் இருப்பாள்.உதடு சிவந்திருப்பாள் அவள் யார்?” என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர், “அது கிளி!” என்கிறார். இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும். “ தலைக் கொண்டைக்காரி கைத்தேர்ந்த கெட்டிக்காரி பால் இல்லாமல் பிள்ளை வளர்ப்பதில் இவள் பலே கெட்டிக்காரி அவள் யார்?”என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர். குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடியுங்க! - விடை: கோழி ************** விடுகதை விளையாட்டு இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர், “ கும்மிருட்டு. நடு ராத்திரி. அடைமழை பெய்து முடிஞ்ச வேளை. எல்லாரும் துõங்கையில, புதுமாம்பிள்ளை வெள்ளை குடை பிடிச்சாராம்! அது என்ன?” என்று புதிர் போடுகிறார். உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் ‘அது காளான்’என்கிறார். இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர், “ பச்சை பசேல் மரம். இலை இருக்கும். கிளை இருக்காது. அது அடுப்பெரிக்க விறகும் ஆகாது. சீப்பு உண்டு. அதை வைத்து தலைவார முடியாது. பூ பூக்கும். அந்தப் பூவை பறித்து கொண்டையிலே சூட முடியாது. அது என்ன மரம்?” என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர், “அது வாழை மரம்!” என்கிறார். இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும். “முதுகிலேயே வீடு கட்டி வைத்திருப்பார். பொடிநடையாக நடப்பார். ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு. இவருக்கு மட்டும் ஒத்தைக்கொம்பு. ஆசையாக கொம்பு பிடிச்சா... அப்படியே மாயமா மறைச்சிடுவார். இவர் யார்? ”என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர். குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடியுங்க! - விடை: நத்தை *********** விடுகதை விளையாட்டு இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர், “ தண்ணியிலே பிறந்ததை எடுத்து வந்து தணலிலே போட்டு வேகவைத்து தண்ணியைத் தெளிச்சா வெண்ணையாகும் அது என்ன?” என்று புதிர் போடுகிறார். உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் ‘ அது சுண்ணாம்பு!’ என்கிறார். இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர், “ கண்ணான கண்ணழகி, கதிர் கம்பி நெட்டழகி, கார்மேகம் தொட்டு இழுக்க கண்சிமிட்டும் ஓர் நொடிக்குள் கடந்து செல்லும் பல துõரம். அது என்ன?” என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர், “ மின்னல்!” என்கிறார். இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும். “ வெள்ளை வெளேர்னு பூவாக மலைப்போல குவிந்து கிடக்குது இந்த அரிசி. இதன் விலையோ சொற்ப காசு. நிறைய விளைஞ்சு கிடக்குது வாங்கி, ஆக்கித் தின்ன ஆள் இல்லை அது என்ன ?” என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர். குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடிங்க! - விடை: உப்பு! ********** விடுகதை விளையாட்டு இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர், “சின்னச் சின்ன அறைகள் உண்டு அது வீடு அல்ல. சிறந்த அழகு கொண்டிருக்கும் அது சித்திரம் அல்ல. காவலுக்கு ஆயிரம் வீரர்கள் உண்டு. அது கோட்டையும் அல்ல. அது என்ன” என்று புதிர் போடுகிறார். உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் “ அது தேன் கூடு!”என்கிறார். இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர், “ஓரிடத்தில் பிறந்த சகோதரர்கள் அவர்கள். எல்லாரும் சிகப்பு தொப்பி அணிந்திருப்பார்கள். ஒற்றுமையாக ஒரே அறையில் இருப்பார்கள். ஒருவர் வீட்டின் சுவற்றில் உரசிகொண்டால் அத்தனை பேரும் எரிந்து விடுவார்கள்! அது என்ன? ” என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர், “ அது தீபெட்டி!” என்கிறார். இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும். “ வானத்தில் பறக்கும் அது பறவை அல்ல. நீண்ட வால் உண்டு அது குரங்கும் அல்ல. வானத்தில் ஆட்டம் போடும் அழகு மயிலும் அல்ல. அது என்ன?”என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர். குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடியுங்க! - விடை: பட்டம். *********** விடுகதை விளையாட்டு இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர், “படபடக்கும். துடிக்கும். நீர் சுரக்கும். அக்கம் பக்கம் சுழலும். அடிக்கடி மூடித்திறக்கும். அருகருகே இருந்தாலும் தொட்டுக்கொள்ளாதது. அது என்ன?” என்று புதிர் போடுகிறார். உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் “அது கண்கள்!” என்கிறார். இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர், “ அருகருகே இருப்பார்கள் இரட்டைப்பிறவிகள். இருவருக்கும் வைக்கும் பங்கு ஒருவருரைவிட ஒருவருக்கு குறைந்தால் போச்சு. அண்ணன் மேலே சென்று ஆடுவான். தம்பி கீழே இருந்து குதித்து ஆடுவான். இருவருக்கும் சமமாக பங்கு வைத்தால் இருவரும் ஆடாமல், குதிக்காமல் இருப்பார்கள். அது எது?” என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர், “ அது தராசு!” என்கிறார். இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும். “ உச்சியிலே குடுமி உண்டு, சிறுமி அல்ல. உருண்டை வடிவம் உண்டு ஆனால் முட்டை அல்ல. நீர் நிறைந்திருக்கும். ஆனால் அது குடம் அல்ல. மூன்று கண் இருக்கும். ஆனால் சிவனும் அல்ல. அது என்ன?” என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர். குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடியுங்க! - விடை: தேங்காய்! ************ விடுகதை விளையாட்டு ஜூன்1 இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர். “ வெட்டரிவாள் இலை இருக்கும். வெள்ளரிவிதை பூ பூக்கும். கசக்கும்படி காய்காய்க்கும். விறலி மஞ்சள் நிறத்தில் பழம் பழுக்கும். அது என்ன?” என்று புதிர் போடுகிறார். உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் “வேப்பம் பழம் ” என்கிறார். இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர், “உயர்ந்த மரத்திலே உச்சாணிக் கொம்பிலே மூணு கண்ணு கருப்பர்கள் பதுக்கி வைத்த மூணு முட்டையை. வெட்டிப் பார்த்தால் மூன்று குழியில் முத்தான முட்டை இருக்கும். சாப்பிட்டால் அத்தனை ருசி. அது என்ன? ” என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர் “ பனம் நுங்கு” என்கிறார். இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும். “பத்து வெள்ளை வேட்டியை சுற்றிக்கொண்டு உள்ளே பதுங்கி இருப்பான். ஒவ்வொரு வேட்டியா எடுத்து விட்டு பார்த்தால், உள்ளுக்குள்ளே ஒளிஞ்சிருப்பான் ஒல்லிக்குச்சி வெள்ளையன். அவன் யார் ?” என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர். குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடியுங்க! - விடை: வாழைத்தண்டு . **************** விடுகதை விளையாட்டு இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர். “ ஆனை போல அசையும். ஆமை போல நடக்கும். மூணு உருளைக் கொண்டிருக்கும். சாலையில் இது உருளாவிட்டால் ஊருக்கு வழி கரடுமுரடாகவே இருக்கும். அது என்ன?” என்று புதிர் போடுகிறார். உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் “ ரோடு ரோலர் வண்டி ” என்கிறார். இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர், “காகிதத்தைப் பார்த்தால் தாரைதாரையாய் கண்ணீர் சிந்தும். தலைக்கு தொப்பி போட்டால் தப்பித்து தலை மறைக்கும் அது என்ன? ” என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர் “ பேனா!” என்கிறார். இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும். “முற்றத்து முன்பு முளைத்த மரம் ஐந்து. அதை மடக்க முடியும். பிடுங்க முடியாது அது என்ன ?” என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர். குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடியுங்க! - விடை: கைவிரல். ************** விடுகதை விளையாட்டு இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர். “ வட்டமான அறையில் அண்ணன் தம்பி இரண்டு பேர். அவர்களைச் சுற்றி பன்னிரண்டு நண்பர்கள். அண்ணன் தம்பி இரண்டு பேரும் நண்பர்களை தொட்டு தொட்டு விளையாடுவார்கள். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அண்ணன் தம்பி இரண்டு பேரும் இணைந்து ஒவ்வொரு நண்பர்களாக தொட்டு பிடிப்பார்கள். அது யார்? ” என்று புதிர் போடுகிறார். உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் “ கடிகாரம்! ” என்கிறார். இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர், “நின்றால் ஒரு பெயர். ஓடினால் ஒரு பெயர். விழுந்தால் ஒரு பெயர். அது எது? அந்தப் பெயர்கள் என்ன” என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர் “ அது தண்ணீர்! நின்றால் குளம். ஓடினால் நதி. விழுந்தால் அருவி!” என்கிறார். இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும். “ ஓடும் கால் நான்கு. <உறிஞ்சும் கால் நான்கு. முட்டும் கால் இரண்டு. உடம்புக்கு விசிறிகொள்ள முடி விசிரி ஒண்ணாம்! அது என்ன?” என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர். குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடியுங்க! - விடை: பசு. ********************** விடுகதை விளையாட்டு இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர், “வீதியில் கொட்டி வைத்து வெள்ளை வெள்ளை பஞ்சுப் பொதிகள் காற்றடித்தால் நகர்ந்து விடும். அங்கும் ஓடித்திரியும். கொஞ்சம் கறுத்துவிட்டால் போச்சு! கண்ணீர் விட்டு அழுதுவிடும். அது என்ன? ” என்று புதிர் போடுகிறார். உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் “ அது மேகம் ” என்கிறார். இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர், “வீட்டு வாசலில் போட்ட பூ ப்போல தடுக்கு இருக்கு. அதை பார்க்கத்தான் முடியுது, கையில் எடுக்க முடியல. துடப்பத்தால் கூட்டிவிட்டால் போச்சு, காணாமல் போய்விடும் அது என்ன?” என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர், “ கோலம்!” என்கிறார். இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும். “அடி மலர்ந்து நுனி மலராத பூ. கறிசமைக்க உதவும் பூ. ஆனால், தலையில் சூடிக்கொள்ள முடியாத பூ. அது என்ன பூ?” என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர். குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடியுங்க! - விடை: வாழைப்பூ! *********** விடுகதை விளையாட்டு ஜூலை13 இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர். “ ஆண்டு தொடக்கத்தில் பெருத்த தொப்பை வயிறுடன் இருப்பான். ஒவ்வொரு நாளும் இளைத்துக் கொண்டிருப்பான். ஆண்டு முடிவில் முழுவதுமாக தொப்பை குறைந்து இருப்பான் அவன் யார்? ” என்று புதிர் போடுகிறார். உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் “ அது தினசரி காலண்டர் ” என்கிறார். இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர், “கடல் அன்னைக்கும் சூரிய தந்தைக்கும் பிறந்தவன். வெள்ளை நிறத்தில் இருப்பான். எல்லார் வீட்டிலும் இவன் இருப்பான். சமையல் அறையில் இவன் இல்லா விட்டால் செய்த உணவு பொருள் அத்தனையும் பாழ்! அது என்ன?” என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர் “ அது உப்பு!” என்கிறார். இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும். “அறிவு இருக்கும் ஆனால் சிந்தனை செய்யாது. கால் இருக்கும் ஆனால் நடக்காது. வாய் இருக்கும் ஆனால் பேசாது. அது என்ன ?” என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர். குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடியுங்க! - விடை: பிறந்த குழந்தை! ********** புதிர் விளையாட்டு இந்த விளையாட்டுக்கு குறைந்தபட்சம் நான்கு பேர் வேண்டும். அதிகபட்சம் உங்கள் விருப்பம். நால்வரில் ஒருவருக்கு கர்ச்சீப்பால் கண்ணை பொத்திவிட வேண்டும். மறைந்துள்ள மற்ற மூன்று பேரை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் விடுகதைக்கு விடை சொல்ல வேண்டும். நான்கு பேரில் முதலாம் நபர் கண்பொத்தி உள்ளார். இரண்டாவது நபர். “ தண்ணீரில் வளர்ந்தவன். தண்ணீரில் வாழ்பவன். இருந்தாலும் தன் மேல் ஒரு சொட்டு தண்ணீர் கூட ஒட்டவிடமாட்டான். அவன் யார்? ” என்று புதிர் போடுகிறார். உடனே, கண்பொத்தி உள்ள முதல் நபர் “ அது தாமரை இலை ! ” என்கிறார். இப்போது இரண்டாவது நபர் கண்பொத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர், “ கமகமக்கும் ருசியான உணவை வாசம் கண்டு வந்தவர் ஒருவர். உணவை கண்டவர்கள் இரண்டு பேர். அதை எடுத்தவர்கள் ஐந்து பேர். சாப்பிட்டவரோ ஒரே ஒருவர். அவர்கள் யார்?” என்று புதிர் போட்டதும், இரண்டாம் நபர் “ மூக்கு, கண்கள், விரல்கள், வாய்!” என்கிறார். இப்ப, மூன்றாவது நபர் கண் பொத்திக்கொள்ள வேண்டும். “ பதுங்கி பதுங்கி வருவார். எதையும் சட்டென்று பாய்ந்து பிடிப்பார். வீட்டுக்குள்ளே திரிவார். ஆளைக்கண்டால் காலடியில் சுற்றுவார். இரவில் இவருக்கு பார்வை தெரியும். யார் இவர்?” என்று புதிர் போட்டுள்ளார் மூன்றாம் நபர். குட்டீஸ்! இதுக்கு என்ன விடை கண்டுபிடியுங்க! - விடை: பூனை! ( தினமலர் -சிறுவர்மலரில் நான் எழுதி வரும் விடுகதை விளையாட்டுத் தொடர் இரண்டாம் பாகம்) ***************

ஆச்சரியம்! அதிசயம்! அபூர்வம் (133 தகவல்கள் ) பாகம் மூன்று/ தேவராஜன்/

ஆச்சரியம்! அதிசயம்! அபூர்வம் (133 தகவல்கள் ) பாகம் மூன்று/ தேவராஜன்/ 1*நினைவூட்டும் மோதிரம்! பிறந்த நாள் போன்ற முக்கியமான சில நாட்களைக் கூட மறந்துவிட்டு, ‘ஆஹா மறந்து போச்சே!’ என்று புலம்புவோர் நம்மில் பலருண்டு. இவர்களுக்கு உதவுவதற்காக வந்துள்ளது, ‘நினைவூட்டும் மோதிரம்’. இந்த மோதிரத்தின் உள்ளே உள்ள அமைப்பில், ஆண்டில் ஒரு முக்கிய நாளை நாம் பதிவு செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட தினத்துக்கு முந்தைய நாள், இந்த ’நினைவூட்டும் மோதிரத்தின்’ ஒரு பகுதி 120 டிகிரி பாரன்ஹீட் அளவுக்குச் சூடாகி, 10 நொடிகள் நமது மோதிர விரலைச் சுடுமாம். அந்த நாள் முழுவதும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ’சுட்டு’க் கொண்டே இருக்குமாம்! 2*ஆ... ஆச்சரியம்! *ஆஸ்திரேலியாவில் இருக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும். *கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே துõங்கும். *பச்சோந்தியின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும். *குவாரின் என்ற பறவை மல்லாந்து துõங்கும். *புறா ஓய்வெடுக்காமல் ஆயிரம் கி.மீட்டர் வரை பறக்கும் திறன் படைத்தது. *ஒரே சமயத்தில் நுõற்றுக்கும் அதிகமான முட்டைகளை இடும் பறவை நெருப்புக் கோழி. *வான்கோழிகள் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை. *நியூசிலாந்து நாட்டில் காக்கைகள் கிடையாது. 3*‘நறுக்’ கதை ஒரு மன்னர், ஜென் துறவியிடம் பவுத்தக் கொள்கைகளைக் கற்கப் போனார். துறவியிடம் அவருக்கான அனைத்து மரியாதையும் கிடைத்தது. பாடம் கற்றுக்கொள்ளும் போதுமட்டும் இருவருக்கும் மாணவன், ஆசிரியர் என்கிற அணுகுமுறை கறாராக இருந்தது. மன்னர் ஒருநாள் துறவியிடம் ‘கர்வம் என்றால் என்ன’ என்று கேட்டார். துறவி முகம் சிவந்து கோபத்தோடு ‘ மன்னனே, உனக்கு அறிவில்லையா இதென்ன சிறுபிள்ளைத்தனமான கேள்வி ?’ என்று பதில் சொன்னார். ‘துறவியே என்ன? என்னையே அவமதிக்கிறீர்கள்,நான் யார் தெரியுமா ?’ என்று மன்னர் கோபப்பட்டாராம். உடனே துறவி சாந்தமாக ‘அன்பான மன்னரே இதுதான் கர்வம்’ என்று சொன்னாராம். 4*விண்வெளி ஓட்டல்! *விண்வெளியில் ஓட்டல் ஒன்றை அமைக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. பூமியிலிருந்து 250 மைல் உயரத்தில் அமையவிருக்கும் இந்த ஓட்டலில் ஒரே நேரத்தில் 7 பேர் தங்கும் வகையில் நான்கு அறைகள் மற்றும் பூமி கீழே சுற்றுவதை பார்க்கும் வகையில் அமைந்த பெரிய ஜன்னல்கள் ஆகியவை இடம் பெறும். ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் உதவியுடன் 2 நாட்கள் பயணம் செய்து இதனை அடையலாம். விண்வெளி சுற்றுலா செல்ல விரும்பும் பணக்காரர்கள், விண்வெளி ஆராய்ச்சி மேற்கொள்வோர் ஆகியோருக்கு ஏற்ற வகையில் உருவாகும் இதில் 5 நாட்கள் தங்குவதற்கு 1 லட்சம் முதல் 5 லட்சம் பவுண்டுகள் வரை செலவாகும். மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரியும் விண்வெளி வீரர்கள் அவசர காலத்தில் பூமிக்கு திரும்புவதற்கு பதிலாக தங்குமிடமாகவும் இந்த ஓட்டல் இருக்கும். இதனை ஆர்பிடல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் உருவாக்குகிறது. வரும் 2016ம் ஆண்டிற்குள் இதன் பணிகள் முடிவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5* ‘கடி’ தகவல்! வாயில் எதையாவது போட்டு கடக் மடக் எனக் கடிக்கிறோம் அல்லவா? அவ்வாறு கடிக்கும்போது நாம் எவ்வளவு அழுத்தம் கொடுத்துக் கடிக்கிறோம் என்பது யாருக்காவது தெரியுமா? முன்பற்களால் கடிக்கும் போது 24 கிலோ அழுத்தத்தையும், கடைவாய்ப் பற்களால் கடிக்கும்போது 90 கிலோ அழுத்தத்தையும் கொடுக்கிறோம். சில சமயம் 120 கிலோவுக்கும் மேலான அழுத்தம் கொடுத்தும் கடிப்பதும் உண்டு. **************************** 6*‘நறுக்’ கதை! ஆசிரியர் : சூரியனுக்கு நிகரான ஒரு பொருள் உலகத்தில் கிடையவே கிடையாது. மாணவன் : இருக்கு சார்! ஆசிரியர் : அப்படியா! அது என்ன பொருள்? மாணவன் : விளக்கு. ஆசிரியர் : எப்படி விளக்கு ஒரு பெரிய விஷயமாகும்? மாணவன் : சூரியனால் செய்ய முடியாத ஒரு விஷயத்தை விளக்கு செய்கிறதே! ஆசிரியர் :அப்படி என்ன செய்கிறது? மாணவன் :இரவில் வெளிச்சம் தருகிறதே! அது சூரியனால் இயலாதே! எந்தப் பொருளையும் அதன் அளவை வைத்து மதிப்பிடாமல், அதன் பயன்பாட்டை வைத்துத்தான் மதிப்பிட வேண்டும் என்பதுதான் இந்த நறுக்கதையின் கருத்து. 7*பயன்படுத்தும் இடத்திற்கேற்ப ஒரு சில வார்த்தைகள் பல அர்த்தங்களைக் கொடுக்கும். அவை: திங்கள்: மாதம், நிலவு, கிழமை. ஆறு: நதி, எண்ணின் பெயர். இசை: சம்மதித்தல், சங்கீதம். மாலை: பூமாலை, பொழுது. நகை: புன்சிரிப்பு, அணிகலன். மதி: அறிவு, நிலவு, மதித்தல். மெய்: உண்மை, உடம்பு. உடுக்கை: ஆடை, இசைக்கருவி. அன்னம்: சோறு, பறவை. நாண்: கயிறு, வெட்கப்படுதல். வேங்கை: புலி, ஒரு வகை மரம். ஞாயிறு : கிழமை, சூரியன் 8* மைக்ரோவேவ் ஓவன் வந்த கதை இரண்டாம் உலகப் போரின்போது விமானங்களையும், கப்பல்களையும் கண்டறிய உதவும் ரேடார்களில் மேக்னட்ரான் என்ற பொருள் பயன்படுத்தப்படுத்தப்பட்டது. அதன் அருகில் கைகளைக் கொண்டு சென்றால் குளிருக்கு இதமாக, வெதுவெதுப்பாக இருக்கும். பெர்சி ஸ்பென்சர் என்ற அமெரிக்கர் அப்படி அடிக்கடி குளிர் காய்வார். ஒருநாள் ஸ்பென்சர் குளிர்காய்ந்து கொண்டிருந்தபோது, அவரது சட்டைப் பாக்கெட்டில் இருந்த மிட்டாய் உருகிவிட்டது. அப்போதுதான் அவருக்கு, இதைச் சமையல் உபகரணமாகப் பயன்படுத்தலாமே! என்று தோன்றியது. ஸ்பென்சரும், அவரது உதவியாளர்களும் தங்கள் ஆராய்ச்சியைத் தொடர்ந்தனர். பாப்கார்ன், பன்றி இறைச்சி போன்றவற்றைக் கொண்டு பரிசோதித்தார்கள். ஓவனுக்குள் வைக்கப்பட்ட அவை, நன்றாகச் சமைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, வர்த்தகரீதியாக மைக்ரோவேவ் ஓவன்கள் தயாரிக்கத் தொடங்கப்பட்டது. 1953-ம் ஆண்டில் உரிமம் பதிவு செய்யப்பட்டு, ஏழே ஆண்டுகளில் உலகின் வசதிமிக்க சமையலறைகளில் நுழைந்துவிட்டது மைக்ரோவேவ் ஓவன். 9*நிலாவில் கார் ஓட்ட முடியுமா? கண்டிப்பாக முடியும். நிலாவில் கார் ஓட்டி நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு ஓட்டியது பெட்ரோல் வண்டியோ அல்லது டீசல் வண்டியோ கிடையாது. காரணம் நிலாவில் காற்று இல்லாததால் இவ்வகை வண்டிகளை இயக்க முடியாது. பெட்ரோல் எஞ்சின் இயங்க ஆக்சிஜன் தேவை. அங்கு ஓட்டப்பட்டது மின்சார வண்டிதான். வண்டியின் பெயர் அப்போலோ நுõனார் ரோவிங் வெகிக்கிள். இதை இயக்கியது ஒரு ரோபோட்தான். இது நடந்தது 1971ம் ஆண்டு. ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில் இந்த கார் நிலாவில் இயங்கியுள்ளது. 10* ஆ... அப்படியா! வாத்துக்கள் நீரில் வட்டமடித்துக் கொண்டே துõங்கும். ராபின் இனப்பறவை பாடிக் கொண்டே துõங்கும். பாம்புகள் கண்களைத் திறந்து கொண்டேக் கூட துõங்கும். டால்பின்கள் ஒரு கண்ணை மட்டும் திறந்து கொண்டே துõங்கும். வரிக்குதிரை நின்று கொண்டேத் துõங்கும். மாடுகள், ஒட்டகங்கள் அசை போட்டுக் கொண்டேத் துõங்கும். கோழிகள் நின்று கொண்டேத் துõங்கும். குரங்குகள் மரத்தில் தொங்கியபடியேத் துõங்கும். 11*பிரசவிக்கும் ஆண் மீன்! மீன் இனத்தைச் சேர்ந்த உயிரினம் கடல்குதிரை. முதலைக் குட்டியைப் போலிருக்கும். ஆண் கடல் குதிரையின் வாலின் கீழே பை போன்ற அமைப்பு இருக்கும். ஆண் கடல் குதிரைகளின் இந்தப் பையில்தான் பெண் கடல் குதிரைகள் முட்டையிடுகின்றன. முட்டைகள் பொரிவதும் வெளிவரும் குஞ்சுகள் சிறிது காலம் வளர்வதும் இந்தப் பையில்தான். முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும் நேரத்தில் ஆண் கடற்குதிரைக்கு பிரசவ வலி வரும். அப்போது அது நீருக்கடியில் உள்ள புதற்களுக்கிடையே கிடந்து மிகவும் சிரமப்படும். உடலை முன்னும் பின்னுமாக அசைத்து வளைக்கும். இப்படி வளையும்போது பையின் தசைகள் விரிவடையும். ஒவ்வொரு முறை வளையும்போதும் ஒவ்வொரு குஞ்சு வெளிவரும். 12*மயில் சிலந்தி: மயில் சிலந்தி இனம் ஒன்று ஆஸ்திரேலியாவில் உள்ளது. இதன் உயரம் 4 முதல் 5 மி.மீ. இதன் உடற்பகுதியில் கருப்பு, சிவப்பு, ப்ரவுன் நிறக்கோடுகளும், வயிறுப்பகுதியில் பச்சை, சிவப்பு, நீல நிற கோடுகளுடன் இருக்கும். ஆண் சிலந்தியின் வயிறு இரண்டு மடிப்புகளும், பக்கவாட்டு தோல்களுக்குள் மூடியிருக்கும். இது செங்குத்தாக நின்று தன் அடிவயிற்று மடிப்புகளை விரிக்கும் போது மயில் தன் இறக்கைøயை விரித்து இருப்பது போன்று காட்சியளிக்கும். இதற்கு பறக்கும் சிலந்தி, ஊர்ந்து செல்லும் சிலந்தி என வேறு பெயர்களும் உண்டு. ************* 13*இரண்டு காலில் நடக்கும் பன்றி! பொதுவாக பன்றிகளுக்கு நான்கு கால்கள் இருக்கும். நான்கு கால்களால் தான் நடக்கும். ஆனால் சீனாவில் அனுஷி மாகாணத்தில் உள்ள ஷிஷான் என்ற குக்கிராமத்தில் அதிய பன்றி ஒன்று பிறந்திருக்கிறதாம்! இந்த பன்றிக்கு இரண்டு கால்கள் மட்டுமே உள்ளது. இருப்பினும் இரண்டு கால்களால் எப்படி நடப்பது என்பதை இந்தப் பன்றி கற்றுத் தேர்ந்துள்ளது. ஜார்ஜ் ஓர்வெல் என்ற விலங்குப் பண்ணையில் இந்த பன்றி இருக்கிறது. இந்த பன்றியின் உரிமையாளர் ஜி சிங்பிங் கொடுத்த பயிற்சியினால் முன்னங் கால்களின் உதவியுடன் நடக்க கற்றுக் கொண்டுள்ளது. 14* உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் என்பவரின் 15 மாத ஆண்குழந்தை அக்ஷித் சக்சேனா என்ற சிறுவனுக்கு 34 விரல்கள் உள்ளன. பிறக்கும்போதே அக்ஷித்துக்கு கைகளிலும் கால்களிலும் இயற்கைக்கு மாறாக அதிகளவிலான விரல்கள் இருந்தன. இந்த சிறுவனுக்கு இரண்டு கைகளிலும் தலா 7 விரல்கள் வீதம் 14 விரல்களும் கால்களில் தலா 10 விரல்கள் வீதம் 20 விரல்களும் ஆக முப்பத்து நான்கு விரல்கள் உள்ளன. பிறக்கும்போதே சாதனையுடன் பிறந்த அக்ஷித் கின்னஸ் சாதனை படைத்துள்ளான். விரல்கள் அசாதாரண எண்ணிக்கையில் இருப்பதால் அக்ஷித்தால் நிற்கக்கூட முடியவில்லை. இதனால் அதிகமான விரல்களை அறுவைச் சிகிச்சை செய்து அகற்றும்பொருட்டு டில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை நாடி இருக்கிறார்கள். 15*உலகிலேயே செங்குத்தான நேரான நீளமான படிகள் தான் நீங்கள் படத்தில் பார்ப்பது. மிக நீளமான இந்தப் படிகள் செயின்ட் ஹெலெனா என்ற தீவுப் பகுதியில் இடம்பெற்றுள்ளன. 1829ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் படிகள் தற்போதும் அப்படியே இருக்கின்றன. 699 படிகளையும் 200 மீட்டர் உயரத்தையும் கொண்ட இந்த நீளமான படிகளைப் பார்க்கவே இந்த தீவுக்கு சுற்றுலாப் பயணிகள் நிறைய பேர் வருகிறார்களாம்! 16*அதிசய கடல் பறவை கடல் பறவை என்று அழைக்கப்படும் ஒருவகை பறவை அல்ப்ட்ராஸ். இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் முட்டையிடுகிறது. இந்த முட்டையை அதிகபட்சமாக 70 நாட்கள் வரை அடைகாக்கிறது. அதிக நாட்கள் அடைகாக்கும் பறவைகளில் இதுவும் ஒன்றாகும். இதுபோன்று மொத்தம் 13 வகையான பறவைகள் உள்ளன. இவற்றில் நீண்ட இறக்கை கொண்டது அல்ப்ட்ராஸ். இது வானில் மிக நீண்ட நேரம், கழுகு போல் காற்றில் இறக்கையை அசைக்காமலேயே மிதந்து கொண்டிருக்கும். 17*அதிவேகமாக நீந்தும் மீன் ‘சாயில் பிஷ்’ என்றழைக்கப்படும் இவ்வகை மீன் தான் உலகிலேயே அதிவேகமாக நீந்தும் மீன். இந்த மீன்கள் கடலில் 75 எம்பிஎச் வேகத்தில் நீந்தும் தன்மை கொண்டவை. மீன்கள் வேட்டையாடுவதிலும் வல்லமை மிக்கவை. உலகின் வேகமான மீன்களான இவற்றை ஜெர்மனியைச் சேர்ந்த 47 வயதான ரெய்ன்ஹார்டு டெர்ஷெர்ல் என்பவர் நுட்பமான முறையில் படம் பிடித்துள்ளார். ஏனெனில் இவ்வகை மீன்களை புகைப்படம் எடுப்பது என்பது இயலாத காரியம். இந்த மீன்கள் எப்போதும் குழுவாக சேர்ந்து நீந்தும் தன்மை கொண்டவை. 18*மிகப் பெரிய துளை! மத்திய அமெரிக்காவில் இருக்கும் பெலீஸ் தீவில், உலகின் மிகப் பெரிய துளை உருவான பகுதி உள்ளது. இதற்கு பெயர் ‘கிரேட் ப்ளூ ஹோல்’. இந்த துளை 70 கிலோமீட்டர் பரப்பளவிலும், 124 கிலோமீட்டர் ஆழத்திலும் உள்ளது. கடல் சீற்றம் ஏற்படும் போது பூமியில் துளை ஏற்பட்டுள்ளது, ஏற்கனவே இங்கிருந்த குகைகள் இப்போது மிகப் பெரிய துளையாக மாறியுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். யுனெஸ்கோ அமைப்பால் உலகின் சிறந்த பாரம்பரிய இடமாக இது தேர்வாகியுள்ளது. ... 19* ஒலிம்பிக் 2012 லண்டனில் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகிறது. லண்டன் நகரில் எந்த பக்கம் திரும்பினாலும் ஒலிம்பிக் போட்டிக்கான சின்னங்கள், அறிவிப்புகள் தான். போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்களுக்குத் தேவையான தங்கும் விடுதி, படுக்கை விரிப்புகள் தயார் நிலையில் உள்ளன. லண்டன் ஹைட் பார்க் விடுதிக்கு 16 ஆயிரம் படுக்கை விரிப்புகள், விளையாட்டு சின்னங்கள் வந்துள்ளன. படத்தில் இங்கிலாந்து நாட்டு படகு சவாரி வீரர் மேத்யூ பின்சென்ட் தன் அறைக்கு உதவியாளருடன் பெட்டை எடுத்துச் செல்கிறார். 20* குடலைக் காட்டி தப்பிக்கும் மீன் எதிரிகளிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள, தன் குடலையே கொடுத்து விட்டு தப்பிக்கும் கடல் வெள்ளரி மீன் இனங்கள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன. உணவிற்கும், உயிர் பிழைக்கவும், இனப்பெருக்கம் செய்வதிலும் பல வினோதங்கள் மீன் இனங்களிடம் உண்டு. உணவு, இடம் பாதுகாப்புக்கு ஒன்றையொன்று சார்ந்திருத்தல், இருபாலரும் உறவால் பலன் பெறுதல் என எத்தனையோ உறவு மலர்கள். அவற்றுள் சற்று வித்தியாசமானது கடல் வெள்ளரி. இவை தன் உடலினுள் மீனொன்று பதுங்கி வாழ அடைக்கலம் தருகிறது. சேற்றின் அழுக்கை தின்று, சுத்தப்படுத்தும் இயல்பு கொண்டது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கடல் வெள்ளரி, ஆள் விழுங்கி மீன்களிடமிருந்து தப்பிக்க பல தந்திரங்களை கையாள்கிறது. அவற்றுள் ஒன்றுதான் தனது குடலையே வெளியேற்றி விடுவது. தாக்க வரும் இனம் அதை தின்று விட்டு போய்விடும். குடலில்லாத வெள்ளரி மீனுக்கு மீண்டும் குடல் உருவாகிவிடும். இவை மன்னார் வளைகுடா பகுதி கடலடியில் காணப்படும் ஒரு அரிய வகை உயிரினம். 21* அசைவ பாண்டா கரடி இயற்கை சூழல் மற்றும் வனவிலங்குகளின் நடவடிக்கைகளை ஆராய, அடர்ந்த வனப்பகுதிகளில் கேமரா பொருத்தி பல நாடுகள் கண்காணித்து வருகின்றன. சீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சிசுவான் மாகாணம் வேங்லாங் வனப்பகுதியில் பொருத்தப்பட்ட கேமராவில், பாண்டா கரடி அசைவத்தை சுவைக்கும் அரிய காட்சி பதிவாகி உள்ளது. பொதுவாக பாண்டா கரடிகள் மிகவும் அமைதியானவை. இலை, பழங்கள், மூங்கில்களை தின்று வாழ்பவை. ஆனால், அசைவம் உண்பதை பார்த்து வன ஆர்வலர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். வனவிலங்குகளின் இறப்பு மற்றும் அவற்றின் உடலில் காணப்பட்ட தழும்புகளுக்கும் பாண்டா காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பொதுவாக பாண்டா கரடிகள் ஒரு நாளைக்கு 14 கிலோ மூங்கிலை உண்ணும். இவற்றின் உடல் மற்றும் செரிமான அமைப்பு சைவம், அசைவம் இரண்டையும் தின்ன ஏதுவாக உள்ளதாக முந்தைய ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன. 22* குளோனிங் பூனைகள் உலகில் முதன் முறையாக குளோனிங் முறையில் ஆடுகள் உருவாக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து இப்போது பூனைகள் உருவாகியுள்ளன. அமெரிக்காவில் மின்னெ சோபாவில் உள்ள மயோ கிளினிக் மருத்துவக் கல்லுõரி விஞ்ஞானிகள் இச்சாதனை படைத்துள்ளனர். இந்த பூனைகளின் பச்சை நிறம், ஒளிரும் ஜெல்லி மீன்களில் இருந்து எடுத்து செலுத்தப்பட்ட மரபணுவாகும். இதுதான் பூனைகளின் உடலில் பச்சை நிறத்திலான புரோட்டீனை உருவாக்கி ஒளிர செய்கின்றன. இந்த பூனைகள் மரபணு மாற்றப்பட்டுள்ளன. இவற்றில் உள்ள பெரும்பாலான மரபணு குரங்கில் இருந்து எடுத்து செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு ‘டிரிம்ஷிப்’ என்று பெயர். இவை விலங்குகளை தாக்கும் ‘எப்.ஐ.வி.’ எனப்படும் வைரஸ் தொற்றுநோயில் இருந்து இவற்றை பாதுகாக்கும். குளோனிங் முறையில் 3 பூனைகள் பிறந்துள்ளன. அவற்றுக்கு டிஜிகேட்1, டிஜிகேட்2, டிஜி கேட் 3 என பெயரிடப்பட்டுள்ளன. அவை பச்சை நிறத்தில் உள்ளன. 23*தண்ணீர் பீய்ச்சும் நட்சத்திரங்கள் நெதர்லாந்தில் உள்ள வெஸ்டன் பல்கலைகக்கழக விஞ்ஞானிகள் விண்வெளியில் உள்ள சூரிய குடும்பம் குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சூரியனை சுற்றி அளவில் சிறியதாக உள்ள நட்சத்திர கூட்டம் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இவை பூமியில் இருந்து 750 ஒளி ஆண்டுகள் துõரத்தில் உள்ளது. இவை கடந்த 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும் என கருதப்படுகிறது. இவை வாயுவினால் ஆன மேக மூட்டத்துக்குள் துõசி போன்று காணப்படுகின்றன. இந்த மேக மூட்டத்தை அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய டெலஸ்கோப் மூலம் ஆய்வு செய்தனர். அப்போது அந்த நட்சத்திர கூட்டத்தை சுற்றிலும் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயுக்கள் படர்ந்து இருப்பதை கண்டறிந்தனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், பல ஆயிரம் டிகிரி வெப்ப நிலை மாற்றத்தின் மூலம் ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் ஒன்று சேர்ந்து அது தண்ணீராக மாறுகிறது. அந்த தண்ணீரை நட்சத்திர கூட்டத்தின் வடக்கு மற்றும் தெற்கு துருவங்களில் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. 2 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் அந்த தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. இந்த தகவலை வெஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானி லார்ஸ் கிறிஸ்டென்சென் தெரிவித்துள்ளார். *********** 24*உலகின் மிகச் சிறிய குதிரை உலகின் மிகச் சிறிய குதிரை அமெரிக்காவின் நியூ ஆம்ஸ்யர் நகரில் கண்டறியப்பட்டுள்ளது. அதன் பெயர் ‘ஐன்ஸ்டீன்.’ இதன் எடை 2.7 கிலோ. உயரம் 35.5 செ.மீ . ‘இது பிறக்கும் போதே மிகக் குறைந்த எடையில் பிறந்ததால் உலக சாதனைக்கு பரிந்துரைக்கப்பட்டது’ என அதன் உரிமையாளர் ரேய்ச்சல் வாக்னர் கூறுகிறார். இதற்கு முன்னர் 2006ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் ‘தம்பளீனா’ என்ற குதிரை இடம்பிடித்திருந்தது. அதன் உயரம் 44.5 செ.மீ. எடை 3.85 கிலோவாக இருந்தது. 25* உலகின் உயரமான கட்டடம் 2010ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 828 மீட்டர் உயரம் கொண்ட ‘பேர்ஜ் கலிபா’ என்ற கட்டடமே மற்ற கட்டடங்களுக்கு போட்டியாக இருந்தது. ஆனால், இப்போது சவுதி அரேபியாவில் கட்டப்பட்டு வரும் 1,050 மீட்டர் உயரமான இந்த ‘அசர்பைஜான்’ உலகின் மிக உயரமான கட்டடம் என்ற பெயரைத் தட்டிச் செல்ல உள்ளது. இந்தக் கட்டடத்தை நிர்மானிப்பதற்கு 2 ஆயிரம் ஹெக்டர் நிலம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. 189 மாடிகளை கொண்ட இக்கட்டடத்தை வரும் 2022ம் ஆண்டில் கட்டிமுடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்! 26* தண்ணீரிலும் தரையிலும் செல்லும் வாகனம் வாகனங்களை அறிமுகப்படுத்தும் போது பொதுவாக தரைவழி, நீர்வழி, வான்வழி என்று பிரித்துத்தான் அறிமுகப்படுத்துவார்கள். ஏற்கெனவே ஆகாயத்திலும், நீரிலும் செல்லக்கூடிய ‘சீ பிளேன்கள்’ அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. இப்பொழுது அவற்றையெல்லாம் தாண்டி தரையிலும் தண்ணீரிலும் பாய்ந்து செல்லக்கூடிய புதிய வகை டிரக் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீரிலும் தரையிலும் பயணம் செய்யும் ஆற்றலை கொண்டுள்ளதால் அதற்கு அட்ணீடடிtணூதஞிடுண் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த டிரக் நீரில் மணிக்கு 48 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 12 பயணிகள் ஒரே நேரத்தில் பயணம் செல்லக்கூடிய இந்த டிரக்குகளின் எடை 1,500 கிலோ. 27* கழுகு ஓட்டல் நேபாளத்தின் காத்மாண்டு பகுதியில் காணப்படும் இந்த உணவு விடுதியில் தினந்தோறும் பலவகையான விலங்குகளை கழுகுகளுக்கு உணவாக போடுவார்களாம். இந்த உணவு விடுதி கடந்த 2006ம் ஆண்டிலிருந்து இயங்கி வருகின்றது. 28* மேகமே நுழைவு வாயில் சிகாகோவில் உள்ள மில்லினியம் பூங்காவில் அமைந்துள்ளது இந்த மேக நுழைவுவாயில். இந்நுழைவாயிலை பிரிட்டனில் வசிக்கும் இந்தியரான கலைஞர் அனிஷ் கபூர் வடிவமைத்துள்ளார். மேகத்தை பிரதிபலிக்கும் இந்த நுழைவாயில், கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளதால் இதில் சிகாகோ நகரமே அழகாக காட்சியளிக்கிறது. 29* ஆச்சரிய விலங்குகள் தென் ஆப்பிரிக்காவின் சுரினாம் நாட்டில் அடர்ந்த காட்டுப்பகுதிகள் அதிகம் உள்ளன. இங்கு மற்ற நாடுகளில் இல்லாத ஏராளமான உயிரினங்கள் வாழ்கின்றன. இது தொடர்பாக சர்வதேச உயிரியல் குழு ஒன்று ஆய்வு நடத்தியது. அப்போது இதுவரை கண்டுபிடிக்கப்படாத 40 விதமான உயிரினங்களை கண்டுபிடித்து உள்ளனர். தவளை, மீன், வண்ணத்துபூச்சி போன்றவற்றில் பல புதிய வகை உயிரினங்கள் அங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதில் வித்தியாசமான தவளை, பல வண்ணங்களை கொண்ட வெட்டுக்கிளி , கைகள் போன்ற அமைப்பு உள்ள கெளுத்தி மீன் போன்றவை முக்கியமானதாகும். தொடர்ந்து அங்கு ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதுவரை கண்டுபிடிக்கப்படாத இன்னும் ஏராளமான உயிரினங்கள் அங்கு இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். ********* 30*கோபுரங்களில் தேசத்தலைவர்கள் *கோயில் கோபுரங்களில் பல கடவுள் சிற்பங்கள் இருப்பதைப் பார்த்திருப் போம். ஆனால், மதுரை மேலமாசி வீதி- வடக்கு மாசி வீதி சந்திப்பில் உள்ள நவநீத கிருஷ்ணன் கோயில் கோபுரத்தில் மகாத்மா காந்தி, கஸ்துõரிபாய், ஜவஹர்லால் நேரு, நேதாஜி ஆகியோரின் சிலைகள் இடம் பெற்றுள்ளன. * ஐயன்பாளையம் முத்தாலம்மன் கோயில் கோபுரத்திலும் காந்தி, நேரு ஆகியோரின் சிலைகளைக் காணலாம். * புதுச்சேரி உப்பளத்திலுள்ள நேதாஜிநகர் தேசமுத்து மாரியம்மன் கோயில் முகப்பில் பாரதியாருக்கு சிலை வைத்துள்ளனர். பாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்தபோது அடிக்கடி இக்கோயிலுக்கு வந்து செல்வாராம். இக்கோயில் அம்மனைப் போற்றி பல பாடல்களையும் பாரதியார் பாடியுள்ளார். * மயிலாப்பூர் கோயிலில் வள்ளுவன்- வாசுகி சிலைகள் உள்ளன. * ஒவ்வொரு ஆண்டும் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15ம் தேதி காலையில், சிதம்பரம் நடராசர் கோயிலில் நம் தேசியக் கொடியை ஒரு வெள்ளித் தட்டில் வைத்து, அதை நடராசர் முன் வைத்து பூஜை செய்வார்கள். பின் அக்கொடியை அர்ச்சகர் எடுத்து வர மேளதாளத்துடன் சென்று கோயில் கிழக்கு கோபுரத்தில் கோயில் தீட்சிதர் அக்கொடியை ஏற்றுவார். அப்போது கோயிலுக்கு வருவோர் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செய்வார்கள். * 31*சாய்வு கட்டடம் *முதன்மையான சாய்ந்த நிலை கோபுரம் என்ற சிறப்பை அபுதாபியில் கட்டப்பட்டுள்ள’கெபிட்டல் கேட்’ என்ற 160 மீட்டர் உயரமுடைய கட்டடம் பெற்றுள்ளது. இத்தாலியில் உள்ள பைசா கோபுரம்தான், உலகிலேயே மிகவும் சாய்வாக உள்ள கோபுரம் என்ற பெருமை பெற்றது. இந்தச் சாதனையை முறியடிக்கும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள அபுதாபியில், அபுதாபி நேஷனல் எக்ஸிபிஷன் நிறுவனம் சார்பில், சாய்ந்த நிலையிலான கட்டடத்தை கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதற்கு ’கெபிட்டல் கேட்’ எனப் பெயரிடப்பட்டது. 160 மீட்டர் உயரமுடைய இந்த கட்டடம், 35 மாடிகளை கொண்டது. இந்தக் கட்டடம், 18 டிகிரி அளவுக்கு சாய்ந்த நிலையில் கட்டப்பட்டுள்ளது. இது, பைசா கோபுரத்தின் சாய்மானத்தை விட நான்கு மடங்கு அதிகம். (பைசா கோபுரத்தின் சாய்மானம் 3.99 டிகிரி). இந்த கட்டடத்தின் 12 மாடிகள் செங்குத்தாக உள்ளன. அதற்கு அடுத்த நிலையில் உள்ள மாடிகள், படிப்படியாக சிறிய அளவில், சாய்ந்த அளவில் கட்டப்பட்டுள்ளன. இக்கட்டடம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 32*ஊதா நிறத்தில் ஒரு பசு கன்று வீட்டு விலங்குகளில் ஒன்றாக கருதப்படும் கன்றுகுட்டி ஒன்று ஊதா நிறத்தில் பிறந்து காண்பவரை ஆச்சரியப்படுத்துகிறது. சேர்பியா நாட்டில் ஹகாக் நகரிலுள்ள கிராமத்தில் ஆறு ஆண்டுகள் நிரம்பிய பசு ஒன்றிற்கு இந்த அற்புத கன்றுக்குட்டி பிறந்துள்ளது. பொதுவாக பசு கன்றுகள் கறுப்பு, வெள்ளை, பழுப்பு நிறங்களிலேயே பிறக்கும். ஆனால், இந்த அதிசய கன்றுக்குட்டியின் மூலம் இனிவரும் காலங்களில் இதே நிறத்தையுடைய கன்றுகள் பிறப்பதற்கு சாத்தியம் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 33*காசு வடிவில் கட்டடம்! தொழில்நுட்ப வளர்ச்சியையும், கட்டிடக்கலையின் வளர்ச்சியையும் கலந்து படைக்கப்படும் பிரம்மாண்டங்களுக்கு பஞ்சமே இல்லை! இதை மெய்ப்பிக்கும் விதமாக சீனாவின் குவாங்கோ பகுதியில் பிறிதொரு பிரமாண்டமான கட்டிடம் அமைக்கப்படுகின்றது. லக்கி காயின் (டூதஞிடுதூ ஞிணிடிண) என பெயரிடப்பட்டுள்ள இந்த கட்டிடத்தினை ஒரு நாணயத்தின் வடிவில் நிர்மாணித்து வருகின்றனர். 34*நாய்களுக்கான ஐஸ்கிரீம் நாய்களுக்காக விஷேச ஐஸ்கிரீம் விற்பனை வேன் ஒன்று பிரிட்டனில் உருவாக்கப்பட்டுள்ளது. நாய்களுக்கான பல விதமான ஐஸ்கிரீம்கள் இதில் விற்பனை செய்யப்படுகின்றன. உலகின் நாய்களுக்கான முதலாவது ஐஸ்கிரீம் வேன் இதுவாகும். பூமாராங் பெட்ஸ் பார்ட்டி எனும் நிறுவனமே இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நாய்களுக்கு பாதிப்பு ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக ஐஸ்கிரீமின் பொருத்தமான கலவை, சுவை, வெப்பநிலை என்பன குறித்து விஞ்ஞானிகள் குழுவொன்று ஆய்வு மேற்கொண்டபின் இந்த ஐஸ்கிரீம்கள் தயாரிக்கப்பட்டுள்ளனவாம். 35*பெரீய்ய பெயர்! ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்த கோடீஸ்வரர் ஹமாத். அவர் அபுதாபி அருகே உள்ள அல்புடய்சி என்ற தீவை விலைக்கு வாங்கினார். அதில் தனது பெயரை 3 கி.மீட்டர் நீளத்துக்கு எழுதி வைத்தார். தனது பெயரின் ஒவ்வொரு எழுத்தையும் 0.5 கி.மீட்டர் நீளத்துக்கு ஆங்கில எழுத்தில் பொறித்து தரையில் பதித்து வைத்துள்ளார். அந்த எழுத்துக்களை விண்ணில் பறந்தபடியே பார்க்க முடிகிறது. இந்த எழுத்துகள் பேஷ்புக் இணைய தளத்தில் இடம்பெற்றுள்ளன. அவற்றை தண்ணீரால் அழிக்க முடியாதபடி எழுதப்பட்டுள்ளது. ************* 36*இ-பேப்பர் *எழுத்துகளை அழித்து திரும்பத் திரும்ப பயன்படுத்தக்கூடிய ‘பேப்பரை’ உருவாக்கியிருப்பதாக தைவான் நாட்டு விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். சூஐ2ஆர் இ-பேப்பர்’ என்ற இந்த பேப்பரில், சூபேக்ஸ்’ இயந்திரத்தில், சூதெர்மல் பிரின்டர்’ கொண்டு அச்சிடப்படுகிறது. 37*மிகப் பெரிய தொங்கும் பாலம் * மெக்ஸிகோ நாட்டில் அமைந்துள்ள தொங்கு பாலம் உலகின் மிக உயரமான பாலம் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த தொங்கு பாலம் 400 மீட்டர் உயரமும், 1000 மீட்டருக்கு அதிகமான நீளத்தையும் கொண்டது. மெக்ஸிகோவின் குடிஞுணூணூச் Mச்ஞீணூஞு Oஞிஞிடிஞீஞுணtச்டூ மலையின் குறுக்காக இந்தப் பாலம் செல்கின்றது. இதைக் கட்டி முடிக்க மில்லியன்கணக்கான ரூபாய்களும், 4 ஆண்டுகளும் ஆனது. 38*அதிசய மரம்! * 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூ பூக்கும் குறிஞ்சிபற்றி கேள்விபட்டிருப்போம். ஆனால், ராட்சத செகுவாயா மரம், பூ பூப்பதற்கு 175 முதல் 200 ஆண்டுகள் வரை ஆகிறது. பூ பூக்க வேறு எந்த மரத்திற்கும் இவ்வளவு காலம் ஆவதில்லை. உலகின் உயரமான மரங்களில் இதுவும் ஒன்று. அதிக பட்சம் 300 அடிகள் வரை வளரும். இந்த மரம் பல கோடிக்கணக்கான விதைகளை உற்பத்தி செய்யக் கூடியது. 39*மிகச் சிறிய மீன்! * சுமத்ரா தீவில் உள்ள பேடோசைபிரிள் என்ற ஒரு வகை மீன், சேற்றுத் தண்ணீரில் வாழ்கிறது. 79 மில்லி மீட்டர் நீளமே உள்ள இந்த மீன், உலகிலேயே முதுகெலும்பு உள்ள உயிரினங்களில் மிகவும் சிறிய உயிரினமாகும். 40*மரத்தில் ஏறும் மீன்! *பிலிப்பைன்ஸ் நாட்டில் அனபாஸ், ஸ்காண்டன்ஸ் என்னும் இரண்டு வகை அபூர்வ மீன்கள் காணப்படுகின்றன. இவை மரத்தில் ஏறக் கூடியவை. பெரும்பாலான நேரங்களில் நீரில் வாழ்ந்தாலும் கூட சிறிது நேரத்திற்கு மரத்தில் ஏறி ஜாலியாக ஓய்வு எடுக்கின்றன. பின்னர் அப்படியே நீருக்குள் பாய்ந்து விடுகின்றன. 41*கரையில்லாத கடல்! * ‘தி ஸார் கேஸோ’ என்ற கடலுக்கு கரையே கிடையாது. காரணம், இந்தக் கடலைச் சுற்றி அட்லாண்டிக் பெருங்கடல் சூழ்ந்திருப்பதால்தான். 42*கடல் யானை * வால்ரஸ் என்னும் கடற்பிராணி யானையைப் போன்ற தோற்றமுடையது. ஆகையால்தான் இதற்கு கடல் யானை என பெயர் வந்தது. இந்த கடல் யானைகளுக்கு ஒரு மீட்டர் நீளமுள்ள இரண்டு பற்கள் நீண்டு கொண்டிருக்கின்றன. இந்த நீண்ட பற்களின் மூலம் சிப்பி மீன்களை குத்தி பிடித்துத் தின்னும். வால்ரஸ்களுக்கு அவற்றின் நீண்ட பற்கள்தான் ஆயுதம். எதிரிகளை பற்களைக் காட்டியே பயமுறுத்தும். 43*சூட்கேஸ் அளவில் அணுமின் நிலையம்! அணுக்கரு பிளவின்போது வெளியாகும் அணுசக்தியை கொண்டு, ஒரு நீராவி எந்திரத்தை இயக்குவதன் மூலம் மின்சாரத்தை தயாரிக்க முடியும். இப்போது பல ஏக்கர் பரப்பளவுகளில் அமைந்திருக்கும் அணுமின் நிலையங்களை, ஒரு சூட்கேஸ்அளவிற்குள் அடைத்துவிடும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்திருக்கிறார் அணு விஞ்ஞானி ஜேம்ஸ் இ.வெர்னர். இந்த சூட்கேஸ் அணுமின் நிலையத்தின் அளவு ஒன்றரை அடியிலிருந்து இரண்டரை அடிகள் வரைதான். அளவில் மிக சிறியதான இந்த சூட்கேஸ் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது. இதனைக் கொண்டு நிலவு, செவ்வாய் அல்லது நாசா நினைக்கும் எந்த இடத்திலும் தொடர்ந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் என்கிறார் வெர்னர். இந்த சூட்கேஸ் அணுமின் நிலையத்தைக் கொண்டு நிலவில் 40 டுடிடூணி தீச்ttண் (அதாவது 8 வீடுகளுக்கு தேவையான மின்சாரம்) அல்லது அதற்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்! எரிமலைவாய், மலைக்குன்றுகள் மற்றும் குகைகள் என பலதரப்பட்ட இடங்களில் இந்த சூட்கேஸ் அணுமின் நிலையத்தை பயன்படுத்தலாம். 44*ஹை டெக் கிராமம்! இது சீனாவில் உள்ள ஒரு கிராமம். இதன் பெயர் ஹுவாக்ஸிக். இது மிகப் பெரிய பணக்கார கிராமம். இதை உருவாக்கியவர் ரென்பாவு. இக்கிராமத்தில் 328 அடி 60 மாடிக் கட்டிடம் உள்ளது. இக் கட்டிடத்தின் 60-வது மாடியில் உள்ள பசு சிற்பம், ஆயிரம் கிலோ தங்கத்தாலானது. ஹுவாக்ஸியின் மக்கள் பாரம்பரிய விவசாயத்தை நவீனம் சார்ந்த விவசாயத் தொழிலாக மாற்றினார்கள். அதில் வருவாய் குவிந்தது. அதை ஜவுளி, உருக்கு தொழிலில் முதலீடு செய்தனர். ஒன்றுபட்டு கடுமையாக உழைத்தனர். விளைவு? தங்கள் கிராமம் ஹைடெக் கிராமமாகியது. ஆயிரம் கிலோ தங்கப் பசு சிற்பம் செய்ய ரூ. 235 கோடி செலவானது. இப்போது இதன் மதிப்பு இரட்டிப்பு. இந்த கட்டிடம், புதுக் கிராம கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. மூன்று பிரிவுகளாக உயர்ந்து நிற்கிறது. உச்சியில், ஒரு பெரிய தங்கப் பந்து வடிவமும் இடம்பெற்றிருக்கிறது. இந்தக் கட்டிடத்தின் உச்சித் தளத்தில் தங்க சிற்பங்கள் என்றால், இதர தளங்களில் வெள்ளியால் ஆன பெரிய பெரிய விலங்குகளின் சிற்பங்கள் உள்ளன. தங்க இழைகள் அங்குள்ள மார்பிள் தரையில் ஜொலிக்கிறது. 60 மாடிக் கட்டிடத்தை ஒட்டி நீளும் நுõல் பிடித்த மாதிரியான தெருக்களில் மாளிகைகள் உயர்ந்து நிற்கின்றன. இங்கு உற்பத்தியாகும் பொருட்கள், உலகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பங்களா, ஒரு கார், இலவச மருத்துவச் சேவை, சமையல் எண்ணை ஆகியவை இலவசம். * 45*நீ பேச நினைப்பதை கம்ப்யூட்டர் பேசும்! அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாஸாவில் அமிஸ் ரிஸர்ச் சென்டர் என்று ஒரு ஆய்வு மையம் உள்ளது. இதில் சக் ஜோர்கென்ஸன், ஜோர்கென்ஸனும் அவரது குழுவும் ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மனித குரல்வளையில் உள்ள வோகல் கார்ட் எனப்படும் குரல் நாணில் உள்ள நரம்பு செல்களில் உருவாக்கப்படும் சிக்னல்களைப் பிடித்து அதை அப்படியே கம்ப்யூட்டரில் பேச்சாக ஒலிக்கச் செய்யும் முயற்சியே இவர்களது ஆராய்ச்சி! மூளை தரும் சிக்னல்கள் மனித குரல்வளையில் உள்ள குரல் நாண்களை என்ன பேச வேண்டுமோ அதைப் பேச இயக்குகின்றன. இந்த சிக்னல்களை கம்ப்யூட்டர்கள் தெரிந்து கொண்டு பேசும். பேச முடியாதவர்களுக்கு இது பெரிதும் துணை செய்யும். அவர்கள் பேச நினைத்ததை கம்ப்யூட்டர் தனது ஸ்பீக்கர் வாயிலாக ஒலிக்கச் செய்து விடும். * 46*கலர் பிக்கர் பேனா! இதன் பெயர் கலர் பிக்கர். இதனை வடிவமைத்தவர் கொரியாவைச் சேர்ந்த ஜின்சன் பார்க். இந்த பேனாவின் சிறப்பம்சம் கலர் சென்சார் தான். அதை இயக்கும் பட்டன், தேர்ந்தெடுத்த கலரை காட்டும் பகுதி, பேனா முனை, ஆர்.ஜி.பி மையை சேமிக்கும் இடம், ஆர்.ஜி.பி சென்சார் என வியக்கத்தக்க தொழில்நுட்ப பகுதிகள் உள்ளன. விரும்பிய கலரைப் பெற அதற்கான பொருளின் முன், கலர் சென்சாரைக் காட்டி ஸ்கேன் பட்டனை அழுத்த வேண்டும். உதாரணமாக ஆப்பிள் அருகே சென்சாரை காட்டியபடி ஸ்கேன் பட்டனை அழுத்தினால் விநாடியில் ஆப்பிளின் நிறம் ஸ்கேன் ஆகி விடும். கலர் டிஸ்பிளே பகுதியில் அந்த கலர் தெரியும். அதன் பிறகு பேனா முனையில் எழுதினாலோ அல்லது வரைந்தாலோ ஆப்பிள் கலரில் மை வெளிவரும். ஸ்கேன் செய்யப்பட்ட கலரை ஆர்.ஜி.பி கலர் சென்சார் கிரகித்து அதே நிறத்தில் மையை மிக்ஸ் செய்து விடும். இதனால் விரும்பும் கலரை துல்லியமாக பெற முடியும். *********** 47*கொம்பு முளைத்த பாம்பு! ஆப்பிரிக்க நாடான தான்சானியா காட்டு பகுதியில் வனவிலங்கு ஆய்வாளர்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். அப்போது, கொம்பு முளைத்த பாம்பு ஒன்று நடமாடுவதை பார்த்தனர். மேலும், கொம்பு முளைத்த பாம்பை கண்டுபிடித்தது இதுவே முதல் முறையாகும். இந்த பாம்பு 2 அடி நீளம் உள்ளது. கறுப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. கண்ணுக்கு நேராக மேல் பகுதியில் கொம்புகள் முளைத்துள்ளன. எதற்காக பாம்புக்கு கொம்பு இருக்கிறது என்று தெரியவில்லை. கண்ணை பாதுகாப்பதற்கும், இரைகளை கவர்வதற்கும் கொம்புகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் இது, அழியும் இனவகை பாம்பாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதுகுறித்து ஆய்வுகள் தீவிரமாக நடந்து வருகிறது. * 48*மிக வயதான மரம்! இதுதாங்க உலகில் மிகவும் வயதான மரம். மெதுசேலா (மெதுசேலா என்ற கதாபாத்திரம் பைபிளில் வருகிறது. அவர், 969 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் பைபிள் குறிப்பிடுகிறது. ஆகையால் அதிக ஆண்டுகள் வாழும் எதுவும், யாரும் ‘மெதுசேலா’ பெயரில் அழைக்கப்படுகிறது) என்றழைக்கப்படும் இது, பிரிஸ்ட்லீகோன் இனத்தைச் சேர்ந்த பைன் மரம். இதன் வயது 4,768 ஆண்டுகள் என கின்னஸ் சாதனை ஏடு கூறுகிறது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள உலகின் மிகப் பழமையான காடாகக் கருதப்படும் தேசிய வனத்தில்தான் இவ்வகை பைன் மரங்கள் தனித்தனியாக வளர்ந்து நிற்கின்றன. வெள்ளை மலைத்தொடரில் அமைந்துள்ள இந்த பைன் மரக்காட்டில், கிட்டத்தட்ட 11 ஆயிரம் அடி உயரத்தில் மரங்கள் வளர்ந்துள்ளன. இவைதான் உலகில் வயதான மரங்கள் எனப்படுகிறது. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மரங்கள் என்றால், அந்தளவுக்கு வளர்ந்திருக்க வேண்டுமே என்ற சந்தேகம் வருவது இயல்புதான். இங்கு நிலவும் தட்ப வெப்பநிலை மற்றும் மண்ணின் தரம் ஆகியவை இம்மரங்களின் வளர்ச்சியை மட்டுப்படுத்தி வைத்துள்ளன. அதே மண்ணும், நிலவும் தட்பவெப்ப சூழ்நிலையும்தான் இவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளை கடந்தும் நின்றுகொண்டிருக்க காரணமானவை! * 49*குழந்தை அழுவது ஏன்? பிறந்த குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம். இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது? இதற்கான காரணங்கள் என்ன? இதோ தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்போது தாயின் இதயத்துடிப்பை கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில் பத்து மாதங்கள் உறங்கிக் கொண்டிருக்குமாம். இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத் துடிப்பு, திடீரென கேட்காமல் போவதால்தான் குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம். அது மட்டுமல்லாது, அழுகின்ற குழந்தையை துõக்கி நெஞ்சில் வைத்துக்கொள்ளும்போது குழந்தை மீண்டும் அந்த இதயத் துடிப்பை உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது. ** 50*பக்கிங்ஹாம் கால்வாய் சென்னையில் 1876ம் ஆண்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போதைய ஆளுநர் பக்கிங்ஹாம் மக்களுக்கு வேலை கொடுப்பதற்காக அடையாற்றையும் கூவம் ஆற்றையும் இணைக்கும் கால்வாய் ஒன்றை வெட்டினார். அவர் நினைவாக இது பக்கிங்ஹாம் கால்வாய் என்றழைக்கப்படுகிறது. ** 51*தொட்டா சிணுங்கி தொட்டா சிணுங்கி என்பது தரையில் படரும் ஒரு வகைச் செடி. இதன் இலைகளைத் தொட்டால் அவை அசைகின்றன. இவ்வாறு அசையும்போது, காம்பு செல்களில் இருக்கும் நீர் தண்டிற்குள் செல்கிறது. இதனால் செல்கள் சுருங்கி, விரிந்திருந்த இலைகள் மடிந்து ஒட்டிக் கொள்கின்றன. சிறிது நேரத்திற்குப் பின் அவை தானாக சரியாகி இலைகள் மறுபடியும் விரிந்து விடுகின்றன. ** 52*பெயர்கள் சோடா, கார்பன், கால்சியம் கோபால்ட், கோல்ட், லித்தியம், வனடியம், ஓசோன், பொட்டாஷ். இவையெல்லாம் ரசாயன பெயர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அமெரிக்காவில் உள்ள ஊரின் பெயர்கள்தாம் இவை! 53*ஆ... அப்படியா? * நாய்க்கு நிற வேறுபாடு தெரியாது. * யானைக்கு குதிக்கத் தெரியாது. *கண்களை இமைக்காமல் தவளையால் இரையை விழுங்க முடியாது. *கோலா கரடிகள் தினமும் 22 மணி நேரம் துõங்கியே பொழுதைக் கழிக்கின்றன. * பாம்புக்கு கேட்கும் சக்தி இல்லை. * ஈமு, கிவி பறவைகளுக்கு பறக்கும் சக்தி இல்லை. * குதிரைக்கு படுத்து உறங்கத் தெரியாது. * காகம் தனது இடது காலைத்தான் அதிகமாகப் பயன்படுத்தும். ******************************** 54*கடலுக்கடியில் அருங்காட்சியகம்! மெக்சிகோவின் வட பகுதியில் காண்குண் என்னுமிடத்தில் கடலுக்கடியில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்குள் 146 ஓட்டல்களும் அதில் 28,808 அறைகளும் உள்ளன. கடலுக்கடியில் அமைகப்பட்டுள் அருங்காட்சியகத்தில் இதுதான் உலகியே மிகவும் பெரியது. இதன் வடிவம் எண் 7 போல காணப்படுகிறது. காண்குன் மெக்சிகோவின் மிகப்பெரிய சுற்றுலா பகுதியாகும். * 55*இறக்கை இல்லாத கோழி! பொதுவாக பறவைகள் அனைத்துக்குமே இறக்கை இருக்கும். உலகில் இயற்கையாகவே இறக்கை இல்லாத ஒரே ஒரு பறவை இளம் கீவி என்கின்ற பறவையினம் தான். விஞ்ஞானிகள் எப்பொழுதும் இயற்கைக்கு மாறாக சிந்திக்க கூடியவர்கள். இந்த வரிசையில் இறக்கை இல்லாத கோழி இனங்களை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்கள் இஸ்ரேலிய விஞ்ஞானிகள். இவ்வாறான கோழி இனங்கள் வெப்பமான நாடுகளில் சுதந்திரமாக வாழக்கூடியவையாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள். * 56*உயரமான பூ! உலகில் மிக நீளமான பூவாக “ரைரன் அரம்” என்ற பூ வகை உள்ளது. இதன் ரசாயனப் பெயர் அட்ணிணூணீடணிணீடச்டூடூதண் கூடிtச்ணதட் ஆகும். ரைரன் அரம் பூ இந்தோனேசியாவின் சுமத்ரா காடுகளில் பூத்துக் காணப்படும் ஒரு அரிய வகைப் பூ ஆகும். இது 20 அடி நீளம் வரை உள்ளது. * 57*ரோபோ ஆசிரியர்கள்! தென்கொரிய நாட்டில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களுக்குப் பதிலாக ரோபோக்கள் ஆங்கில பாடம் நடத்த ஆரம்பித்து உள்ளன. ஆசிரிய ரோபோக்களில் ஒருவருக்குப் பெயர் இங்கேய். இந்த ரோபோக்கள் முட்டை வடிவத்தில் வெள்ளை நிறத்தில் உள்ளன. டேய்கு நகரத்தில் உள்ள 21 மழலையர் பள்ளிகளில் இந்த ரோபோக்கள் பாடம் நடத்துகின்றன. இதன் உயரம் ஒரு மீட்டர். இந்த ரோபோக்களின் முகத்தில் டிவி ஸ்கிரீன் பொருத்தப்பட்டு உள்ளது. சக்கர கால்கள் நான்கு கை கொண்டிருக்கின்றன. இக்கால்களின் துணையுடன் நடக்கவும் முடியும். இந்த ரோபோக்களுக்கு புத்தகங்களை வாசிப்பது, பாடல்களுக்கு ஏற்ப தலையையும், கைகளையும் அசைப்பது, கால்களை ஆட்டி நடனமாடும் ஆற்றலும் உண்டு. ஆங்கில் ஆசிரியர்கள் இந்த ரோபோக்களை ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்குகின்றனர். 58*நிற ஜாலங்கள்! *தக்காளி சிவப்பு காயாக இருக்கும்போது குளோரோபில் அதிகமாகக் காணப்படும். அதனால் பச்சையாக இருக்கும். கனியாக மாறியவுடன் இந்த நிறமி மறைந்துவிடும். கரோட்டின், ஸாந்தோபில் நிறமிகள் அதிகமாக காணப்படும். குறிப்பாக லைக்கோபின் நிறமியால் சிவப்பாக மாறும். *மருதாணி சிவப்பு! மருதாணியை அரைத்து கையில் போட்டால் தோல் நிறம் சிவந்துவிடும். காரணம் மருதாணி இலையிலுள்ள ஆந்தோசயனின் என்ற நிறமிதான். *தலைமுடி கருப்பு! ரோமக்கால்களின் அடிப்பகுதியில் மெலனோசைட் என்ற சிறப்பு வாய்ந்த செல்கள் காணப்படுகின்றன. இது மெலானின் என்ற நிறமியைச் சுரக்கிறது. இதுதான் கருப்பு நிறத்தைக் கொடுக்கும். *இலை நிறமாறும் பழுப்பு பச்சையான இலைகள் காய்ந்ததும் பழுப்பு நிறம்மாகிவிடும். இலைகளில் பச்சையம் அதிகமாக இருப்பதால் பச்சை வண்ணமாய் இருக்கும். இது காய்ந்துவிடும்போது ஆக்ஸிஜன் ஏற்றத்தால் பச்சையம் மறைந்து ஸாந்தோபில் என்னும் பழுப்பு நிறம் தோன்றும். இதனால் இலை நிறம் மாறிவிடுகிறது. * ******************************* 59*இசையால் அறிவு வளரும்! இசையை சிறுவயது முதல் கற்கும் குழந்தைகளின் ஐகி கOஙிஉகீ மிகவும் அபாரமாக இருப்பதாக அமெரிக்க ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சிறுவயதில் பியானோ, புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளை பயிற்சி பெறும் குழந்தைகள், வயதான காலத்திலும் நல்ல புத்திக் கூர்மையுடன் இருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். இசையை கற்காத குழந்தைகளை விட நன்கு இசையை கற்ற குழந்தைகள் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இசையை கற்கும் குட்டிக் குழந்தைகள் தங்களது சிந்தனைகளை பல முனைகளிலும் ஒரு சேர செலுத்துவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். காரணம், மூளையின் இடது, வலது பாகங்களை ஒரு சேரப் பயன்படுத்தும் ஆற்றல் சாதாரணக் குழந்தைகளை விடவும் இசையை கற்ற குழந்தைகளுக்கு அதிகமாக இருப்பதாக வல்லுனர்களின் ஆராய்ச்சி சொல்கிறது. சிறுவயது இசைப்பயிற்சி மூளையை துடிப்புடன் வைத்திருக்க உதவுகிறது. இதனால், மற்றவர்களை விட இசையை கற்றவர்கள் அறிவு நுணுக்கத்துடன் செயல்படுவதைக் காண முடிகிறது, என வல்லுனர்கள் கருத்து சொல்கிறார்கள். *** 60*குழந்தைகளுக்கான இணையதளங்கள் குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது அவர்களின் இயற்கையோடு இணைந்த ஒன்று. அதன் வழியாகவே அவர்களின் மனவளர்ச்சியை நல்ல முறையில் உருவாக்கலாம். உலக விஷயங்களைக் கற்றுக் கொடுக்கலாம். அதற்கென உள்ள பல இணையதளங்கள் உள்ளன. 1. கல்வி விளையாட்டுக்கள், வேடிக்கையான கேம்ஸ், ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமான தகவல்கள், கலை அம்சம் நிறைந்த பலவற்றிற்கு 20 ஆயிரத்திற்கு மேலான இணைய தொடர்புகள், வண்ணம் தீட்டி பழக தளங்கள், கணக்கு பழக பயிற்சிகள் மற்றும் தரவிறக்கம் செய்து வைத்து விளையாட கேம்ஸ் என அனைத்து வகைகளிலும் குழந்தைகளுக்கான இணையக்களஞ்சியமாக இயங்குகிறது டttணீ://தீதீதீ.டூடிணடுண்4டுடிஞீண்.ஞிணி.தடு/ என்ற முகவரியில் உள்ள தளம். 2. நுõற்றுக்கணக்கில் இன்டர்நெட் இணைப்பில் விளையாட கேம்ஸ், கார்ட்டூன், மூவி கிளிப்கள், மியூசிக் வீடியோ, புதிர்கள், கற்பனைத் திறனை ஊக்கப்படுத்தும் செயல்பாடுகள், பக்கங்களுக்குக் கலர் தீட்டுதல், வேடிக்கை விளையாட்டுகளையும் கல்வி கற்றலையும் இணைத்து தருகிறது டttணீ://ச்டூஞூதூ.ஞிணிட்/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம். 3. டttணீ://தீதீதீ.ண்தணூஞூணஞுtடுடிஞீண்.ஞிணிட்/ என்ற தளத்தில் பல வித்தியாசமான கேம்ஸ், வேடிக்கை விளையாட்டுகள், குழந்தைகளுக்கான தகவல்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தர விரும்பும் விஷயங்கள், நினைவாற்றலை வளர்க்கும் விளையாட்டுகள் எனப் பல வகைகளில் குழந்தைகளுக்கான அனைத்து விஷயங்களும் வித்தியாசமான முறையில் தரப்பட்டுள்ளன. 4.குழந்தைகளுக்கு கணக்குகளைத் தந்து அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்கும் தளமாக விளங்குகிறது டttணீ://தீதீதீ.ஞிணிணிடூட்ச்tட4டுடிஞீண்.ஞிணிட்/ உலக அளவில் இது சிறந்த தளம் என்ற பாராட்டினைப் பல அமைப்புகளில் இருந்து பெற்றது. ** 61*நாய்களுக்கான நான்கு நட்சத்திர விடுதி. பிரான்சில் அமைந்துள்ள ‘அக்ச்சுவல் டாக்ஸ்’ என்னும் விடுதி தான் உலகிலயே முதன்முறையாக சகல வசதிகளுடன் தங்குவதற்கான விடுதி. ஐயோ! மனிதர்களுக்கு இல்லைங்க ! நாய்களுக்கான நான்கு நட்சத்திர விடுதி. தேவி, ஸ்டான் புருன் என்னும் இருவர் இணைந்து இந்த விடுதியினை நிறுவியுள்ளனர். அடுக்குமாடி வீடுகளில் குடியிருப்போர் பலர் தமது நாய்களைக் கவனிக்க முடியாது போய்விடுகிறது. அவர்கள் இங்கு தமது நாய்களை சில நாட்கள் விடுவதால் அந்த நாய்களை சகல வசதிகளுடன் அவர்கள் கவனித்துக் கொள்வார்களாம். நாய்கள் தங்க, உண்ண, மருத்துவ வசதி என அனைத்துமே இங்கு உள்ளது. நாய்கள் பார்ப்பதற்கு என பிரத்யேக எல்சிடி தொலைக்காட்சிகளும் இங்குள்ளது. ஆனால் இங்கு நாய்களை அனுமதிக்கும் முன் அவற்றின் குணங்களை பரிசோதித்துப் பார்க்கலாம், அவற்றில் சரி என்றால் தான் பிற அனுமதி எல்லாம். நாய்கள் தங்குவதற்கு ஒரு நாள் ஆகும் செலவு 26 - 35 யூரோக்கள்( தோராயமாக ரூ.1,600 நம்மூர் மதிப்பு) ஆகுமாம். ** 62*பூமியில் வாழ்ந்த பெரிய விலங்குகள் உலகில் இதுவரை வாழ்ந்த மிகப்பெரிய விலங்கினமாக டைனோசரஸ் கருதப்படுகின்றது. சுவடுகள் மற்றும் கண்டெடுக்கப்பட்டுள்ள எழும்புக் கூடு என்பவற்றின் அடிப்படையில் பெரியதாக அது கருதப்படுகின்றது. அதேபோல பல பெரிய உருவத்திலான விலங்குகளும் இப்பூமியில் வாழ்ந்துள்ளதாக கருதப்படுகின்றன. அவை அழிந்துவிட்டபோதிலும் அவற்றின் சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 1. கொலம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய பாம்பின் சுவடு இப்பாம்பானது அனகோண்டாவைப் போல உலகில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மிகப்பெரிய பாம்பாகும். இவை 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 42 அடி நீளமும், 1,135 கிலோ கொண்டவையாக இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 2. எருமை உருவ கொறிணி (கீணிஞீஞுணt) கொறிணி எனப்படுவது அணில் போன்ற விலங்கினமாகும். உருகுவே நாட்டில் கடந்த 2008ம் ஆண்டு 53 செ. மீ. உயரமுடைய 1000 கிலோ எடையுள்ள கொறிணியின் எழும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. 2- 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. 3. மடகாஸ்கரில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய தவளை உலகில் இதுவரை வாழ்ந்தவற்றில் மிகப்பெரியதாக கருதப்படும் பிரமாண்ட தவளை எச்சத்தினை ஆராய்ச்சியாளர்கள் மடகாஸ்கர் நாட்டில் கண்டுபிடித்தனர். இது 41 செ. மீ. உயரமும், 4.5 கிலோ எடையும் கொண்டிருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 4. பெரு நாட்டில் வாழ்ந்த பிரமாண்ட பெங்குயின்கள் தென் அமெரிக்காவில் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கூறப்படும் பிரமாண்ட பெங்குயின்களே இவை. இவற்றின் சுவடுகள் பெருவுன் அடகாமா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் உயரம் 1.5 மீட்டர்கள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 5. மனிதனை விட பெரிய கடல் தேள் மனிதனைவிட பெரியதும் 8.2 அடி உயரமானதும் 390 மில்லியன் ஆண்டுகள் பழமையானதுமான கடல் தேளின் எச்சங்கள் 2007ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. இவை அக்காலப்பகுதியில் கடலில் வாழ்ந்த மிகப்பெரிய விலங்கினமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ** 63*பாம்பு பறவை! ஏப்11 பாம்பு தாரா என்று ஒரு பறவை. நீர் நிலைகளில் வாழ்ந்திடும் பறவை இது. இப்பறவையை ஆங்கிலத்தில் அனிங்கா அல்லது டார்டர் (அணடடிணஞ்ச் ணிணூ ஈச்ணூtஞுணூ) என்று அழைப்பார்கள். இந்தப் பறவையின் உணவு மீன்கள். இப்பறவை மீன் பிடிப்பதற்கும் மற்ற பறவைகள் மீன் பிடிப்பதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்ற பறவைகள் மரக் கிளைகளில் அமர்ந்து இருந்தும் ஆகாயத்தில் பறந்தபடி இருந்தும் நீரின் மேல் பரப்பிற்கு வரும் மீன்களைக் கொத்திப் பிடிக்கும். ஆனால், இந்தப் பறவைகள் தண்ணீரில் தலையை மட்டும் வெளியே நீட்டியபடி நீந்திக் கொண்டிருக்கும். அப்போது எதிர்ப்படும் மீனைப் பிடித்து தண்ணீரில் இருந்த படியே உண்ணும். இது தன் உடல் முழுவதையும் தண்ணீருக்குள் வைத்துக் கொண்டு நீந்திடும் போது பாம்பு நீரில் நீந்திச் செல்வது போல தோற்றம் தரும். இப்பறவைக்கு பாம்பு தாரா எனப் பெயர் வரக் காரணமும் இதுவே. மீன் ஒன்றைப் பிடித்தவுடன் கழுத்தை மட்டும் தண்ணீருக்கு வெளியே நீட்டி அந்த மீனின் தலை முதலில் வாய்க்குள் செல்லும்படி துõக்கிப் போட்டு பிடித்து பின் விழுங்கும். மற்ற நீர் வாழ் பறவைகள் தண்ணீரில் இருக்கும் போது அவற்றின் உடல் நீரில் மூழ்கிடாது மிதந்திடும். அவற்றின் சிறகுகளில் தண்ணீர் ஒட்டாது. காரணம் அவற்றின் சிறகுகளில் ஒரு வகை எண்ணைப் பசை இருக்கும். சிறகுகளுக்கிடையே இருக்கும் காற்று அப்பறவைகளை மிதக்கச் செய்யும். ஆனால், பாம்பு தாராவின் சிறகுகளில் அந்த எண்ணைப் பசை இல்லாததால் தண்ணீர் சுலபமாக ஒட்டிக் கொண்டு, பளுவாக்கி, அதன் உடலை நீருக்கடியில் கொண்டு செல்லும். வயிறு நிறைய மீன் சாப்பிட்டதும், கஷ்டப்பட்டு மெல்லப் பறந்து அருகில் உள்ள ஒரு கல்லின் மீதோ, கிளையின் மீதோ அமர்ந்து தன் சிறகுகளை விரித்துப் பிடித்துக்கொண்டு வெயிலில் உலர வைத்துக்கொள்ளும். சிறகுகள் உலர்ந்த பின் பறந்து சென்று விடும். இனப் பெருக்கக் காலத்தில் பாம்பு தாரா குடும்பம் நடத்துவது நீர் நிலைகள் அருகே மரக்கிளைகளில் குச்சி சுள்ளிகளைக் கொண்டு கட்டிய கூடுகளில். பாம்பு தாராவை தமிழ்நாட்டில் வேடந்தாங்கல் போன்ற பறவைகள் சரணாலயத்திலும், கர்னாடகாவில் ரங்கன திட்டு பறவைகள் சரணாலயத்திலும் பார்க்கலாம். * 64*கடல் ஓட்டல் மாலத் தீவுகளில் உள்ள ரங்காலி தீவில் அமைந்துள்ள கொன்ராட் ஓட்டல் தனது வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகின்றது. கடல்மட்டத்திலிருந்து 5 மீட்டர் ஆழத்தில் உள்ள இந்த ஓட்டலில் ‘இத்தா’ என்னும் உணவகம் மட்டும் இருந்தது. தனது 5வது ஆண்டுநிறைவை முன்னிட்டு இந்த ‘இத்தா’வினை தங்கும் அறைகளும் அமைத்துள்ளனர். கடலுக்கடியில் இதமான வெளிச்சத்தில் உல்லாசமாகப் பொழுதை கழிப்பதற்கு இந்த ஓட்டலில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. எவருடைய தொந்தரவும் இல்லாமல் மீன்களையும் கடல் நீரினையும் ரசித்தபடி உங்கள் வாழ்க்கையை உற்சாகமாக கொண்டாட முடியும். ஆனால், இங்கு ஒரு நாள் தங்குவதற்கு 2 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டுமாம்! 65*அப்படியா! *பல்லி போன்ற ஊர்ந்து செல்லும் பிராணிகள் தங்களின் நாக்கினால் பூச்சிகளைச் சுண்டி இழுத்துப் பிடிக்கும். சில நேரம் நாக்கில் ஊறும் திரவத்தால் தரையைத் தொட்டு உணவைச் சேகரித்துக் கொள்ளும். பாம்பு, உடும்பு போன்ற பிராணிகளும் உணவு தேடிக்கொள்ள நாக்கை வெளியே சுழற்றிக் கொள்கின்றன. *தென் துருவப் பகுதியின் குளிர் பிரதேசத்தில் வசிக்கும் பெங்குவின் பறவைகள் ஆனந்தமாய் திரியும். மழைக்காலத்தின் மத்தியில் பெண் பெங்குவின் ஒரேயொரு முட்டை மட்டும் போடும். அதை ஆண் பறவைதான் அடைகாக்கும். இரண்டு மாதங்களுக்குப் பின் அந்த முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்கும். * பிளாடிபஸ் என்பது ஒரு நீர் வாழ் உயிரினம். இது முதலில் முட்டையிடும். பிறகு, குஞ்சு பொரித்து பாலுõட்ட ஆரம்பிக்கும். 66*உயரமான ரயில் பாதை! *தென் அமெரிக்காவின் பெரு நாட்டையும் பொலிவியா நாட்டையும் இணைக்கும் ஒரு ரயில்பாதை ‘ஆண்டிஸ்’ மலையில் 4744.7 மீட்டர் உயரத்தில் போடப்பட்டு இருக்கிறது. இதுவே உலகில் உயரமான இடத்தில் அமைந்துள்ள ரயில் பாதையாகும். 67*பெரிய நாடாளுமன்றம்! * உலகிலேயே மிக அதிக உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றம் சீன நாடாளுமன்றம் தான். தேசிய மக்கள் காங்கிரஸ் என்று அழைக்கப்படும் இந்த நாடாளுமன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 2,978 ஆகும். * 68*மீனுக்கு மூன்று இதயங்கள்! கனவாய் (இதttடூஞுஞூடிண்ட) மீன் இனத்திற்கு மூன்று இதயம் உள்ளது. கடல் மீன்களில் இது ராஜா எனவும் கருதப்படுகிறது. இந்த மீன், ஸ்குவிட் மற்றும் ஆக்டோபஸ் குடும்பத்தை சார்ந்ததாகும். கனவாய் மீனுக்கு மிகப் பெரிய இதயம் உள்ளது. உண்மையில் இதற்கு ஒரு இதயம் அல்ல மூன்று இதயங்கள். இரண்டு இதயங்கள் செவுள்களுக்கு (எடிடூடூண்) ரத்தத்தை பம்ப் செய்யவும், மூன்றாவது இதயம் பிற உறுப்புகளுக்கு (Oணூஞ்ச்ணண்) பம்ப் செய்யவும் பயன்படுத்துகிறது. இந்த மீனின் அங்கம் தட்டையாக இருப்பதால் கடலில் வாழ்வதற்கு சுலபமாக உள்ளது. இவை மொலஸ்க்ஸ் மற்றும் சிறிய மீன்களை வேட்டையாடி உண்ணும். கனவாய் மீன்கள் பிற இனத்தின் மீன்களிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள தன் நிறத்தை பின்புல நிறத்திற்கு ஏற்ப மாற்றும் இயல்புடையது. கனவாய் மீனின் ரத்தத்தில் காப்பர் அதிகமாக இருப்பதால் ரத்தத்தின் நிறம் பச்சையும் நீலமும் கலந்த நிறமாக தோன்றும். தன் நிறமிப் பையை சரிப்படுத்துவதன் மூலம் தன் நிறத்தை இதனால் மாற்ற முடிகிறது. நிறமி பைகள் சிறியவை, ஆனாலும் பல வண்ணங்களை கொண்டு காணப்படுகிறது. எதிரி மீன்கள் தன்னை தாக்கும்போது கறுப்பு நிற திரவத்தை வெளியிட்டு, தாக்கவரும் விலங்குகளிடம் இருந்து தற்காலிகமாக தப்பிக்கும் தந்திரம் உடையது இந்த கனவாய் மீன்கள். 69*அப்படியா! *பல்லி போன்ற ஊர்ந்து செல்லும் பிராணிகள் தங்களின் நாக்கினால் பூச்சிகளைச் சுண்டி இழுத்துப் பிடிக்கும். சில நேரம் நாக்கில் ஊறும் திரவத்தால் தரையைத் தொட்டு உணவைச் சேகரித்துக் கொள்ளும். பாம்பு, உடும்பு போன்ற பிராணிகளும் உணவு தேடிக்கொள்ள நாக்கை வெளியே சுழற்றிக் கொள்கின்றன. *தென் துருவப் பகுதியின் குளிர் பிரதேசத்தில் வசிக்கும் பெங்குவின் பறவைகள் ஆனந்தமாய் திரியும். மழைக்காலத்தின் மத்தியில் பெண் பெங்குவின் ஒரேயொரு முட்டை மட்டும் போடும். அதை ஆண் பறவைதான் அடைகாக்கும். இரண்டு மாதங்களுக்குப் பின் அந்த முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்கும். * பிளாடிபஸ் என்பது ஒரு நீர் வாழ் உயிரினம். இது முதலில் முட்டையிடும். பிறகு, குஞ்சு பொரித்து பாலுõட்ட ஆரம்பிக்கும். 70* உயரமான ரயில் பாதை! *தென் அமெரிக்காவின் பெரு நாட்டையும் பொலிவியா நாட்டையும் இணைக்கும் ஒரு ரயில்பாதை ‘ஆண்டிஸ்’ மலையில் 4744.7 மீட்டர் உயரத்தில் போடப்பட்டு இருக்கிறது. இதுவே உலகில் உயரமான இடத்தில் அமைந்துள்ள ரயில் பாதையாகும். 71*பெரிய நாடாளுமன்றம்! * உலகிலேயே மிக அதிக உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றம் சீன நாடாளுமன்றம் தான். தேசிய மக்கள் காங்கிரஸ் என்று அழைக்கப்படும் இந்த நாடாளுமன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 2,978 ஆகும். * 72*மிக புத்தி கூர்மையுள்ள சிறுமி! பிரிட்டனைச் சேர்ந்தவர் ஹெய்டி ஹேன்கின்ஸ் என்ற நான்கு வயது சிறுமி. இந்தச் சிறிமியின் புத்திக்கூர்மை அபாரமானது. இந்தச் சிறுமியின் அறிவுக் குறியீடு ஆனது விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் அறிவுக் குறியீடை விட அதிகமாக இருக்கிறதாம்! ஹெய்டியின் அறிவுக் குறியீடு 159ஆக இருப்பதால், இவர் இரண்டு வயதிலேயே ஏழு வயதினருக்குரிய கணக்குகளைச் செய்வதும், புத்தகங்களை வாசிக்கவும் முடிகிறதாம். ஹெய்டிக்கு முந்தைய சாதனையாளரான கேரல் வோர்டர்மேனின் அறிவுக் குறியீடு 154. ஆக்ஸ்போர்டு பதிப்புகளில் உருவான புத்தகத்தில் உள்ள மரம் பற்றிய 30 புத்தகங்களை ஒரு மணி நேரத்தில் ஹெய்டி வாசித்து விடுகிறாள். இச்சாதனையை இவள் தனது இரண்டு வயதிலேயே நிகழ்த்தி விட்டாள். *************** 73*ஒரே மனிதர்! உலகின் உயரிய விருதுகளாக கருதப்படுபவை: நோபல் பரிசு மற்றும் ஆஸ்கார் விருது. அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் செய்தி ஒன்றுள்ளது. இந்த இரு விருதுகளையும் பெற்றவர் ஒருவர் உள்ளார். அவர்தான் உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னாட்ஷா. இவர், 1925ம் ஆண்டு இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றார். 1938ம் ஆண்டு ‘பிக்மேலியன்’ என்ற திரைப்படத்திற்கு சிறந்த திரைக்கதைக்காக ஆஸ்கர் விருது பெற்றார். 74*கங்காரு எலி! வட அமெரிக்காவில் வாழும் இந்த எலிகள் நீரில்லாமல் பல நாட்கள் உயிர் வாழக்கூடியவை. வெறும் விதைகளை மட்டுமே சாப்பிட்டு வாழும். இதற்கு கங்காரு மாதிரி பைகள் இருக்கிறது. அதில் தன் உணவுகளை சேகரித்து வைக்கப் பயன்படுத்துகிறது. இதற்கு வியர்காது என்பது இன்னொரு விசேஷம். 75*அறுவை சிகிச்சைக்கு பயன்படும் நுõல் நம் உடம்பில் அறுவை சிகிச்சை செய்ததும், அறுபட்ட தசைகளை இணைக்க மருத்துவர்கள் தையல் போடுவார்கள். தையலுக்கு பயன்படுத்தும் நுõலின் பெயர் கேட்-கட். இது நுõல் போல இருக்கும் ஒருவகை நரம்பு. இது மஞ்சள் நிறத்தில் இருக்கும். அறுவை சிகிச்சை செய்து முடித்ததும் இந்த கேட்-கட் நரம்பு நுõலினால்தான் மருத்துவர்கள் தையல் போடுவார்கள். இந்தத் தையலை மீண்டும் பிரிக்க வேண்டியது இல்லை. அறுவை செய்யப்பட்ட காயம் ஆறிக்கொண்டு வரும்போது இந்த நரம்பு நுõலும் உடலோடு சேர்ந்துவிடும். இந்த நுõல் செம்மறியாட்டின் வலுவான குடல்தசை நார்களிலிருந்து தாயாரிக்கப்படுகிறது. 76*சுழலும் கட்டடம்! வித்தியாசமாக ஒரு கட்டடத்தைக் கட்டி, பிரேசில் நாட்டு நிறுவனம் ஒன்று உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. குதடிtஞு ஙணிடூடூச்ணூஞீ என்ற அந்த நிறுவனம் 360 டிகிரியில் சுழலும் குடியிருப்பு கட்டடத்தைக் கட்டியுள்ளது. மொத்தம் 11 மாடிகள் கொண்ட அந்த கட்டடத்தின் ஒவ்வொரு மாடியும் 360 டிகிரியில் சுழலும் தன்மை கொண்டது. ஒரு சுற்று சுற்றுவதற்கு ஒரு மணி நேரம் ஆகிறது. சுற்றும் வேகத்தை அந்தந்த மாடியில் வசிப்பவர்கள் கூட்டவோ, குறைக்கவோ முடியும். சூரிய உதயத்தையும், சூரிய மறைவையும் குடியிருப்புவாசிகள் ரசிக்கும் வகையில் கட்டடத்தின் வெளிச்சுவரில் கண்ணாடி பதிக்கப்பட்டுள்ளது. 77*அமாவாசை, பவுர்ணமி பூமி தன்னை தானே சுற்றிவதற்கு ஒரு நாள் ஆகிறது. இதுவே பகல் - இரவு வருவதற்கான காரணம். சூரியனை நோக்கி உள்ள பகுதி பகலாகவும் அதை விட்டு தள்ளி உள்ள பகுதி இரவாகவும் அதை நாம் அறிகிறோம். பூமியை போலவே நிலவிலும் பகல் இரவு உண்டு. தன்னைத் தானே சுற்றிவர நிலவுக்கு 27 நாட்கள் ஆகிறது. அதாவது நிலவின் ஒரு பகலும் ஒரு இரவும் பூமியின் 27 இரவு-பகல் ஆகும். நிலவின் நடு பகலை பவுர்ணமி என்கிறோம். நிலவின் நடு இரவை அமாவாசை என்கிறோம். * 78*அப்படியா! அட்லான்டிக் பகுதியில் ஆண்டிற்கு ஒரு முறைதான் சூரியன் உதயமாகிறது. முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி. மீன் தன் வாழ்நாள் இறுதி வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும் * 79*புதிய கிரகம்! பூமியில் இருந்து 33 ஒளி ஆண்டுகள் துõரத்தில் ஒரு புதிய கிரகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த கிரகத்தில் பூமியின் வெப்பத்தை விட குறைவாக இருப்பதாகவும், உயிரினங்கள் வாழ ஏற்ற சில சூழ்நிலைகள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த புதிய கிரகத்திற்கு எஒ 667 இ என பெயரிடப்பட்டுள்ளது. ************************** 80*உலகின் மிகப் பெரியவைகள்! பெரிய தகவல் ஒளிபரப்பு கோபுரம் உலகின் மிகப்பெரிய தகவல் ஒளிபரப்பு கோபுரம் ஜப்பானில் அமைந்துள்ளது. இதன் பெயர் ‘ஸ்கைட்ரீ.’ ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரில் உள்ள இந்த உலகின் மிகவும் உயரமான தகவல் தொடர்பு கோபுரத்தின் உயரம் 634 மீட்டர். ஒபாயஷிகி கார்ப்பரேசன் நிறுவனம் இக்கோபுரத்தை கட்டியுள்ளது. உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த கோபுரம் மயும் என எதிர்பார்க்கப்படுகிறது. * 81*பெரிய டைனோசர் அருங்காட்சியகம் உலகில் மிகப்பெரிய டைனோசர் அருங்காட்சியகமாக கிழக்கு சீனாவில் உள்ள டையான்யூ டைனோசர் அருங்காட்சியகம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. சீனாவின் கிழக்கு மாகாணமான ஷெடாங்கில் பிங்கிய் நகரில் உள்ள இந்த டையான்யூ அருங்காட்சியகம் 28 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த 1100-க்கும் அதிகமான டைனோசர்களின் படிவங்கள், எலும்புக்கூடுகள் பராமரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரினங்கள், விலங்கினங்கள், பறவையினங்களின் எலும்புக்கூடுகளும் உள்ளன. * 82*பெரிய தங்க நாணயம் 1000 கிலோ எடையுள்ள உலகின் மிகப் பெரிய தங்க நாணயம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் பர்த் பகுதியில் எடுக்கப்பட்ட 99.99 வீதம் துõய தங்கத்தில் இருந்து இந்த நாணயம் செய்யப்பட்டது. இது, பிரிட்டிஷ் மகாராணி ஆஸ்திரேலியா வந்ததன் நினைவாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் ஒரு பக்கத்தில் மகாராணியின் தலை உருவமும், மறுபக்கத்தில் ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கான கங்காருவின் உருவமும் பதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தங்க நாணயத்தை உருவாக்குவதற்கு 18 மாதங்கள் ஆனதாக கூறப்பட்டுள்ளது. 83* பெரிய ஆம்புலன்ஸ் வண்டி உலகிலேயே மிகப்பெரிய, மிக நீளமான ஆம்புலன்ஸ் வாகனம் ஐக்கிய அரபு நாடான துபாயில் உருவாக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிக நீளமான, பெரிய வண்டி என்ற சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது. 20 மீட்டர் நீளமுள்ள இந்த ஆம்புலன்சில் ஒரே சமயத்தில் 40 நோயாளிகளை ஏற்றிச் செல்ல முடியும். விபத்தின் போது காயமடைந்தவர்களை அதிக அளவில் சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியும். இதில், அவசர சிகிச்சைப்பிரிவும் அமைந்துள்ளது சிறப்பு அம்சமாகும். பெரிய அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்குள்ளேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது வெறும் ஆம்புலன்சாக மட்டுமல்லாமல் நடமாடும் ஆஸ்பத்திரியாகவும் செயல்படுகிறதாம். 84*பெரிய கட்டடம் உலகின் மிகப்பெரிய கட்டடமான புர்ஜ் கலிபா துபாயில் கட்டப்பட்டுள்ளது. இது 124 மாடிகளை கொண்டது. இதில் நட்சத்திர ஓட்டல்கள், அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் மற்றும் நீச்சல் குளங்கள் என அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த கட்டடத்தின் உயரம் 828 மீட்டர். இது முழுவதும் கறுப்பு நிற சலவை கற்கள், எவர்சில்வர் மற்றும் கண்ணாடிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 124 மாடிகளுக்கும் செல்லும் வகையில் நகரும் படிக்கட்டுகள் மற்றும் லிப்ட் வசதிகள் உள்ளன. இந்த கட்டடத்திற்கு அடுத்தபடியாக சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள கிரீன்லேண்ட் குரூப் கட்டடம் 2-வது இடம் வகிக்கிறது. 632 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டு வரும் அக் கட்டடம் வருகிற 2014-ம் ஆண்டு கட்டி முடிக்கப்படுமாம். *** 85*இந்தியாவின் மையப்புள்ளி நகரம் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு இடையேயான துõரம் சாலை வழிகாட்டி பலகையில் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்திருப்போம். இந்தியாவில் எந்த நகரத்தில் இருந்து துõரத்தில் ஆரம்பப்புள்ளி துவங்குகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். இந்தியாவின் மையப்புள்ளி நாக்பூர் நகரம். இந்த நகரத்தில் இருந்துதான் நமது துõரங்களின் கணக்கீடுகள் ஜீரோ மைல் கல் துவங்குகிறது. நாக்பூர் நமது நாட்டின் ஆரஞ்சு நகரம் என்று அழைக்கப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் இங்கு இந்த ஜீரோ எல்லைக்கல் அமைக்கப்பட்டது. இந்த ஜீரோ எல்லைக் கல் சின்னம் நான்கு குதிரைகளும் ஒரு துõணும் கொண்டதாக உள்ளது. உதாரணமாக இங்கிருந்து சில நகரங்களின் துõரம்: நாக்பூரில் இருந்து அகமதாபாத் 851 கி.மீ, பெங்களூர் 1062 கி.மி, சென்னை 1117 கி.மீ, டெல்லி 1029 கி.மீ,ஐதராபாத் 493 கி.மீ, கோல்கத்தா1118 கி.மீ, மும்பை798 கி.மீ. *** 86*உலகின் மிகச்சிறிய மியூசியம் உலகின் மிகச் சிறிய மியூசியம்அமெரிக்காவில் அரிசோனா பகுதியில் அமைந்துள்ளது. இங்கு செயற்கை நீர் அருவிகள், செயற்கை கலைப்பொருட்கள் என பல காட்சிப்பொருட்கள் இடம்பெற்றுள்ளது. இந்த மியூசியம்134 சதுர அடி பரப்பளவு உள்ள கூரையின் கீழ் அமைந்துள்ளது. 87*உலகின் மிகச்சிறிய போலீஸ் நாய் உலகின் மிகச்சிறிய போலீஸ் நாய் என்று லுõசி எனப்பெயர் கொண்ட இந்த போலீஸ் நாய் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதன் எடை 2.5 பவுண்டு . வயது1. தெரபி துறையில் இந்த நாய் பணி செய்கிறது. 88*உலகின் மிகச் சிறிய வீடு அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் ஒரு பகுதியில் இந்த சிறிய வீடு உள்ளது. 16க்கு 18 அடி பரப்பளவில் ஒரு அறை வசதியுடன் இந்த வீடு அமைக்கப்பட்டுள்ளது. ***************************** 89*அப்படியா? *புலிக்கு வெள்ளையாக எதைப் பார்த்தாலும் பயம் ஏற்பட்டுவிடும். புலியின் உறுமல் 3 கி.மீட்டர் துõரம்வரை கேட்கும். * குரல் இல்லாத மிருகம் ஒட்டகச்சிவிங்கி. ஒரு நாளைக்கு அரை மணிநேரமே துõங்கும். * நீர்யானை சிந்தும் வியர்வை சிவப்பாக இருக்கும். நீர்யானையின் குட்டிகள் பிறந்தவுடனேயே நீந்தத் தொடங்கிவிடும். *வாழ்நாள் முழுவதும் தண்ணீர் குடிக்காத விலங்கு கங்காரு. கங்காரு சைவம். *ஓநாய்கள் சமயத்திற்கு தகுந்தாற்போல ஊளையிடும். ஓநாய்கள் ஐந்து விதமாக ஊளையிடும். * சிறுத்தைகள் நீரை கண்டால் கூச்சப்படும். மணிக்கு 110 கி.மீ துõரம்வரை ஓடக்கூடியது. *ஒட்டகம் மாலை வேளையில் உணவு உட்கொள்ளாது. ஒட்டகத்தின் பால் 60 நாட்கள் வரை கெட்டுப் போகாது. ஒரு மைலுக்கு அப்பால் இருக்கும் நீர்நிலைகளை தன் மோப்ப சக்தியால் உணரும் ஆற்றல் கொண்டது. * 90*குண்டு பாப்பா படத்துல இருக்கும் பாப்பா பேரு டான்டான். சொந்த ஊரு சீனா. நல்ல கொழுக் மொழுக் என்று இருக்கும் இந்த பாப்பாவுக்கு வயது 18 மாதங்கள். எடை 16 கிலோ. எடை அதிகமா இருப்பதால பாப்பாவுக்கு நடக்க முடியாம போச்சாம். டாக்டர் கிட்ட போனா உடம்பு நார்மலாத்தான் இருக்கு. இத்தனை எடை கூடுவதற்கு காரணம் கண்டுபிடிக்க முடியலைன்னு சொல்றாங்க. டான்டானுக்கு 5 வயசுல ஒரு அக்கா. அவளோட எடை 13 கிலோ! ... 91* திறந்தவெளி எஸ்கலேட்டர் எஸ்கலேட்டர்களை (நகரும் படிக்கட்டுகள்) பெரிய பெரிய கட்டடங்களில் பார்த்திருப்பீங்க. வெட்ட வெளியில் இயங்கும் எஸ்கலேட்டர் கொலம்பியாவின் போகோடா மலைப்பகுதியில் தொடங்கியிருக்காங்க. போகோட மலைப் பிரதேசத்தில் 12 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இங்கு ரோடுகள் செங்குத்தாக இருக்கும். வயதானவர்கள், சிறுவர்கள் ஏற முடியாது என்பதால் திறந்த வெளி எஸ்கலேட்டர் அமைத்துள்ளனர். மலையடிவாரத்திலிருந்து உச்சிக்கு செல்ல ஆறு எஸ்கலேட்டர்கள் பயன்படுத்துகின்றனர். ஆயிரத்து 260 அடி உயரத்தில் மலை உச்சியில் இருக்கும் பள்ளிக்கு இந்த எஸ்கலேட்டர் மூலம் 6 நிமிடங்களில் சென்று விடுகின்றனர் . ... 92*விமானத்தில் ஓட்டல் உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம் ஏ380 சீனாவில் இயக்கப்படுகிறது. மற்ற விமானத்தில் இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளைவிட இந்த விமானத்தில் பல வசதிகள் உள்ளன. விமானத்தில் 600 சதுர மீட்டர் அளவில் ஒரு குட்டி ஓட்டலை அமைத்துள்ளனர். 18 ஓட்டல் ஊழியர்கள், வரவேற்பரை, சமையலறை, 36 பேர் அமரக்கூடிய டைனிங் டேபிள், இரண்டு பேர் அமரக்கூடிய தனி அறை கொண்ட டைனிங் டேபிளும் உள்ளன. ஓட்டலில் சாப்பிட விரும்புபவர்கள் தனிக் கட்டணம் செலுத்த வேண்டும். 93*பாம்பு தலை விட்டில் பூச்சி! ஹாங்காங்கில் காணப்படும் இந்த மிகப்பெரிய விட்டில் பூச்சியின் உடல் பாம்பு போல் காணப்படுவதால் இந்த பூச்சி பாம்பு தலை விட்டில் பூச்சி என்றழைக்கப்படுகிறது. இந்த விட்டில் பூச்சிகள், விட்டில் புழு நிலையிலிருந்து 1 முதல் 2 வாரத்திற்குள் முழுமையான ஒரு சதுர அங்குலம் வரை வளர்கிறது. * 94*சோசோ எடை 254 கிலோ! படத்தை பார்த்து பயந்துடீங்காளா குட்டீஸ்! பயப்படாதீங்க இந்த ராட்சத புலியோட பேரு சோசோ. மிக அரிதான செர்பிய நாட்டுப் புலி. செர்பியன் புலிகள் உலகில் மொத்தம் 360 இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. சோசோவின் சொந்தக்காரர் அஸ்லே. சோசோ குட்டியாக இருக்கும்போது வாங்கியுள்ளார். சோசோவின் பேவரைட் உணவு மாமிசத்துடன் கலந்த நவதானிய பயிர்கள். சோசோ நடந்தால் 6 அடி, நின்றால் 8 அடி இருக்குமாம். எடை 245 கிலோ! 95*உயரமான அணை இந்தியாவில் மிக உயரமான அணை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது தாகிர் அணை. உத்தரகாண்ட் மாநிலத்தில் பகீரதி நதிக்கரையில் அமைந்துள்ளது தாகிர் அணை. இந்த அணையின் உயரம் 261 மீட்டர், உலகில் 8வது மிக உயரமான அணை என்ற கூடுதல் அந்தஸ்தையும் 2012ம் ஆண்டு முதல் பெற்றுள்ளது. இதன் கரையை கட்டும் பணிகள் 2006ல் தொடங்கப்பட்டது. இரண்டாம் கட்ட பணி தற்போது நடைபெற்று வருகிறது. தாகிர் அணையிலிருந்து நீர்பாசனம், குடிநீர், நீர் மின்சாரம் தயாரிக்க பயன்படுகிறது. நீர்தேக்கத்தின் மூலம் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. 96*பார்வையற்றவர்களுக்கு நுõலகம் சீனாவில் பார்வையற்றோருக்கான பிரெய்லி நுõலகம் தொடங்கப்பட்டுள்ளது. பிரெய்லி முறையில் அச்சிடப்பட்ட 60 ஆயிரம் புத்தகங்கள், 20 ஆயிரம் ஒலி நாடாக்கள் இடம்பெற்றுள்ளன. பிரெய்லி முறை கல்வி, கணினி பயிற்சி போன்றவையும் இலவசமாக வழங்கப்படுகிறது. இ-மெயில் மற்றும் வாய்ஸ் ரெகார்டர் மூலம் புத்தகம் வாங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. நுõலகத்தில் 270 ஊழியர்கள், 500 உதவியாளர்கள் வேலை செய்கிறார்கள். **************** 97*மாம்பழத்து வண்டு (ட்ச்ணஞ்ணி ண்ஞுஞுஞீ தீஞுஞுதிடிடூ) மாம்பழத்தில் உள்ள ஒரு செ.மீ அளவுள்ள ஒருவகை சிறுவண்டு இனம். கோடைக்காலத்தில் காய்பிடிக்கின்ற பருவத்தில்தான் இது தமது இனப்பெருக்கத்தைத் தொடங்கும். அதாவது பூம் பிஞ்சின் மேல் பெண் வண்டு முட்டையிட, சில நாட்கள் வெண்மையில் அது பொரிந்து புழுவாக வெளியே வந்து பிஞ்சுக்காயை துளைத்து நடுப்பகுதிக்குச் சென்று அங்குள்ள சதையை அடைந்து கூட்டுப்புழுவாக இருக்க, காய் அச்சிறு துவாரத்தை மூடி வளர்ந்து பெரிதாகிறது. காய்முற்றி பழுக்கும் போதே உள்ளே புழுவானது முதிர்ந்த வண்டாகிறது. 98*மண்புழு மண்புழுக்கள் வெயிலுக்குள் வந்தால் இறந்துவிடும். காரணம் அது தன் தோலில் உள்ள சுரப்பிகள் சுரக்கும் ஒருவழவழப்பான திரவத்தின் உதவிக்கொண்டுதான் நிலத்தினுள் உள்ள உயிர்வளியை எடுத்துக்கொள்கிறது. இவ்வாறுதான் மண்புழு சுவாசிக்கிறது. ஆனால் வெயிலில் வரும்போது அதன் தோலில் உள்ள திரவம் ஆவியாகி விடுவதால், சுவாசிக்க முடியாமல் இறந்துவிடும். மண்புழுக்களுக்கு கண், காது, மூக்கு கிடையாது. 99*எறும்புகள் எறும்புகள் செல்லும்போது தன் முன்உடற்சுரப்பியில் இருந்து ஒருவித வேதிப்பொருளை விட்டுச் செல்கின்றன. இந்த வேதிப்பொருளின் மணம் பல உத்தரவுகளை இடுகிறது. நீ வேலை செய்! உணவு எடுத்துவா! துõக்கிச் செல்! திரும்பி போ! என்பது போல. இதுவே எறும்பின் மொழி. எறும்புகள் எப்பொழுதும் துõங்குவதில்லை. ஆனால் முழு ஓய்வெடுக்கின்றன. இமையற்ற இவை பிறப்பு முதல் இறப்புவரை ஓய்வின்றி சுறுசுறுப்பாக உழைக்கின்றன. 50 முதல் 100 நாட்கள் வரை உணவின்றி எறும்புகளால் உயிர் வாழ முடியும். எறும்பு தன் எடையைப்போன்று 300 மடங்கு எடையை இழுத்துச் செல்லும் வலிமையுடையது. இதற்கு காரணம் இவற்றறறின் இறுக்கமான 1000 வகையான தசைகள் இருப்பதுதான். மனித உடலில் தசைகளின் எண்ணிக்கை 800 மட்டுமே. எறும்புக்கு மூன்று ஜோடி கால்களுண்டு. இதனால் துõக்கிச் செல்லும் சுமையின் எடையை ஆறுகால்களுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. மனிதனின் இருகால்கள் மட்டுமே முழுஎடையையும் சுமந்து செல்ல வேண்டி உள்ளது. 100*தேனீயின் ரீங்காரம் தேனீயின் ரீங்காரம் என்பது அதன் குரல் ஒலி அல்ல. தேனீ தன் இறகுகளை வினாடிக்கு 400 தடவைக்கு மேல் அசைத்துக் காற்றைக் கடைவதால் ஏற்படும் ஒலியாகும். இது தான் ரீங்காரமாக நமக்கு கேட்கிறது. 101*சாண வண்டுகள் விலங்குகள், மனிதர்களின் கழிவுகளை எடுத்து உருட்டிச் செல்லும் வண்டுகளை சாண வண்டுகள் (ஞீதணஞ் ஞஞுஞுtடூஞு) என்கிறோம். இப்படி இவை ஏன் செய்கின்றன? அவற்றை தங்கள் வங்குகளுக்கு உருட்டிச் செல்லும் ஒரு வண்டு 40 முட்டைகளை சில மணித்துளிகளில் அந்த வண்டுருட்டாம் பழத்தினுள் இட்டு முடிவிடுகிறது. பின்னர் குஞ்சுகள் பொரித்ததும் அக்கழிவு உருண்டையே உடனடி உணவாக அமைகிறது. அதற்கு சாணத்தில் பல புல் மணிகள், பற்பல தாதுப்பொருட்கள் அடங்கியுள்ளன. மண்ணுக்குள் காற்றோட்டம் ஏற்பட உதவும் மண்ணின் நண்பன் சாண வண்டுகள். * 102*‘பேப்பர்‘ சிறுமி படத்தில் இருப்பது பெயின்டிங் இல்லை குட்டீஸ். வண்ண காகிதங்களை வைத்து செய்யப்பட்ட உருவங்கள். இந்தக் கலைக்கு ‘பேப்பர் கிராபிக்ஸ்’ என்று பெயர். இந்தக் கலை சொற்ப நாடுகளில் மட்டுமே அறிமுகமாகியுள்ளது. இந்த அரிதான கலையை மிகச் சிறிய வயதில் கற்றுத்தேர்ந்தவர் ரஷ்யாவைச் சேர்ந்த யூலிகா ப்ரோட்ஸ்கயா என்ற சிறுமி. யூலிகா கற்பனையில் <உருவான டிசைன்களை வாங்க பல முன்னணி கிராபிக்ஸ் நிறுவனங்கள் கியூவில் காத்துக்கிடக்கிறார்களாம். பேப்பர் ஆர்ட், போபோகிராபி, ஓரிகாமி, டெக்ஸ்டைல் பெயின்டிங் போன்ற கலையில் தேர்ச்சி பெற்றவர். ... 103*குட்டி பயில்வான் என்ன படத்தை பார்த்ததும் கிராபிக்ஸ் என்று நினைக்காதீங்க. இது உண்மையான ஒரு சிறுவனின் உடம்புதான். இந்த குட்டிப் பையனின் பெயர் குலியானோ ஸ்டோரி. வயது 7! இவன் 2 வயதிலிருந்தே ஜிம்னாஸ்டிக் பழக ஆரம்பித்தானாம். எவ்வளவு துõரமாக இருந்தாலும் கையாலேயே நடந்துவிடுவானாம். 3 நிமிடத்தில் 90 புஸ்அப்ஸ்(கதண்ட தணீண்) செய்து கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளான். ஹாலிவுட் நடிகர் அர்னால்டு போல் வருவதே தனது லட்சியம் என்கிறான் இந்தக் குட்டி பயில்வான். ... 104*நீர்வீழ்ச்சியில் ஓட்டல் நடுக்கடலில் ஓட்டல், கடலுக்கு அடியில் ஓட்டல், விண்வெளியில் ஓட்டல் என்று கேள்விப்பட்டிருப்பீங்க. நீர்வீழ்ச்சியில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறது. ‘வில்லா எஸ்கட்ரா’ என்ற பிலிப்பைன்ஸ் நிறுவனம். லாபாசின் நீர்வீழ்ச்சியில்அமைந்துள்ளது இந்த ஓட்டல். மூங்கில் கம்பில் செய்த டேபிள், வாழை இலை தட்டு, தென்னை இலை டம்ளர் உபயோகிக்கின்றனர். சுற்றுப்புறச் சூழல் மாசு ஏற்படாமல் இயற்கை முறையில் எல்லாப் பொருட்களையும் பயன்படுத்தி வருவதால் நீழ்வீழ்ச்சி ஓட்டலுக்கு எந்த தடையும் விதிக்காமல் தொடர்ந்து நடத்த பிலிப்பைன்ஸ் அரசு அனுமதியளித்துள்ளது. பிலிப்பைன்சுக்கு வரும் சுற்றுலாவினருக்கிடையே நன்கு வரவேற்பை பெற்றுள்ளதால் 24 மணிநேர ஓட்டலாக மாற்ற திட்டமிட்டுள்ளனர் ஓட்டல் நிர்வாகத்தினர். ... 105*பர்கர் விலை ரூ.16,157 பர்கர் விலையைக் கேட்டதும் தலை சுத்துதா குட்டீஸ்! இது இந்தியாவில் கிடையாது. அமெரிக்க தலைநகரம் நியூயார்க்கில் ஆண்டுதோறும் மே மாதம் பர்கர் திருவிழா கொண்டாடுவாங்க. நேஷனல் ஹம்பர்கர் நிறுவனம் சார்பாக 2012ம் ஆண்டுக்கான பர்கர் திருவிழா நடந்தது. திருவிழாவுக்காக தயாரித்த பர்கர் ரொம்ப ஸ்பெஷல். இதில் இடம்பெற்ற ஒரு பர்கரின் விலை ரூ. 16 ஆயிரத்து 157 விற்பனை செய்துள்ளனர். அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பர்கரில் என்று கேட்கிறீங்களா? ஜப்பானில் வளரும் உயர் ரக மாட்டு கொழுப்பு, பசிபிக் சமுத்திரத்திலிருந்து எடுக்கப்பட்ட மூலிகை இலைகள், உலகிலேயே மிக உயர்ந்த சீஸ் கட்டி, வறுத்த குயில் முட்டை, ப்ரஷ் கிரீம், இன்னும் சில பல விலையுயர்ந்த பருப்பு வகைகள் இறுதியாக சாப்பிடக்கூடிய வைரம் மற்றும் தங்க இலைகள், வெள்ளியில் செய்த டூத் பிக். இந்த ஸ்பெஷல் பர்கர் கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ... 106*பாலத்துக்கு வயது 75 சான் பிரான்சிஸ்கோ விரிகுடா திறக்கும் இடத்தில் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கும் கோல்டன் கேட் பாலத்துக்கு இந்த ஆண்டுடன் 75 வயதாகிறது. வயதானாலும் தன் கம்பீரத்தில் எந்த குறையும் இல்லாமல் நிமிர்ந்து நிற்கிறது. பாலத்தின் மொத்த நீளம் 2.7 கிலோமீட்டர் ஆகும். 1933ம் ஆண்டு தொடங்கி 1937ல் கட்டிமுடிக்கப்பட்டது. அப்போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலமாக இருந்தது. ... 107*குண்டு பூனை நியூயார்க் விலங்குகள் பாதுகாப்பு மையத்தில் வசித்து வரும் பூனை கிரீடி ஸ்பாஜ்சி பாபு. வயது 9 ஆகிறது. எடை 14.5 கிலோ. பூனை எடைக்கு காரணம் தைராய்டு என்று எண்ணிவிடவேண்டாம். டயட்டில் இருக்கும் போதே திடீரென்று எடை அதிகரித்ததாம். பூனை மாமிசம் கூட சாப்பிடுவதில்லை. இருந்தும், வெறும் காய்கறிகளை சாப்பிட்டே இந்த அசுர எடைக்கு காரணம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். ... 108* பணத்தை ஒன்றுக்கு இரண்டு தடவையாக எண்ணிப் பார்க்கும் பழக்கம் நம்மிடையே உண்டு. லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் கட்டுக்கட்டாக பணத்தை சில நிமிடங்களில் மிகச் சரியாக எண்ணி முடிப்பது கஷ்டம். வங்கிகளில் இதற்கென கவுன்ட்டிங் மெஷின்கள் இருக்கும். தனி நபர்களுக்கு அவ்வளவு பெரிய மெஷின்கள் தேவையில்லை. அதற்காக, பணத்தை எண்ணும் ‘கவுன்ட்டிங் ரிங்’ என்ற மோதிரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்ட்டிங் ரிங்கை கட்டை விரலில் மோதிரம் போல மாட்டிக் கொள்ள வேண்டும். மோதிரத்தில் உள்ள பவர் பட்டனை ஆன் செய்து கொண்டால், அதன் டிஸ்பிளேயில் ஜீரோவைக் காட்டும். அடுத்து நீங்கள் பணத்தை வேகமாக மேலிருந்து கீழே அதன்மீது படுமாறு விட்டாலே போதும், மோதிரத்தின் கீழ்ப்பகுதியில் இருக்கும் ரப்பரானது இன்ப்ரா ரெட் தொழில்நுட்பத்தின் மூலம் எத்தனை நோட்டுக்கள் மேலிருந்து கீழே போயிருக்கிறது என்பதை அரை நொடியில் கச்சிதமாகக் கணக்கிட்டுச் சொல்லிவிடும். இதில் சிறிய அளவிலான பேட்டரி ஒன்று இருக்கிறது. உங்கள் வேலை முடிந்த பிறகு பேட்டரியை ஆப் செய்து கொள்ளலாம். பல ஊர்களுக்குச் சென்று பணம் வசூல் செய்து வருபவர்களுக்கு கவுன்ட்டிங் ரிங் நிச்சயம் உதவிகரமாக இருக்கும். இந்த மோதிரம் சுவிட்ஸர்லாந்தில் பயன்படுத்தப்படுகிறது. 109* எலக்ட்ரானிக் மூக்கு வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க மெட்டல் டிடெக்டர் பயன்படுத்தி வந்தனர். இப்போது புதிதாக ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கருவியின் ஒரு ‘சில்‘லில் இரண்டு உலோக படலங்கள் இருக்கும். உலோக படலங்களுக்கிடையே வெடிகுண்டு செய்ய பயன்படும் ஹைட்ரஜன் பெராக்சைடின் வாசனை இருந்தால் போதும். இந்த எலக்ட்ரானிக் மூக்கு வேலை செய்ய ஆரம்பித்துவிடும். செம்பு மற்றும் கோபால்ட் தாலோசையனைன் படலங்களுக்கிடையே எந்த வாயு இருந்தாலும் இரண்டு படலங்களும் ஒரே அளவிலான மின்சாரத்தைக் கடத்தும். ஆனால் வாயுக்களில் ஹைட்ரஜன் பெராக்சைடைச் சேர்த்தால் செம்பு படலத்தில் மின்னோட்ட அளவு அதிகரிக்கும். அதே நேரத்தில் கோபால்ட் படலத்தில் மின்னோட்டத்தின் அளவு குறையும். இரண்டு படலங்களிடையே மின்னோட்ட வேறுபாடு இருந்தால் அங்கே வெடிகுண்டு இருக்கிறது என்று பொருள். காலத்திற்கேற்ற கண்டுபிடிப்பு! 110* எலக்ட்ரானிக் ரேஸ் கார் பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரானிக் ரேஸ் காரை மும்பை ஐஐடி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். இந்த எலக்ட்ரானிக் கார் அதிகபட்சம் மணிக்கு 115 கி.மீ. வேகத்தில் செல்லும். இவோ 1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரேஸ் காரை தயாரிக்க ரூ. 15 லட்சம் செலவாகியுள்ளது. இவோ 1 எலக்ட்ரானிக் காரில் 32 கேவி திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. காரை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 32 கிலோமீட்டர் போகலாம். இவோ 1 இந்திய தயாரிப்பில் உருவான முதல் பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரானிக் கார் என்பது குறிப்பிடத்தக்கது. 111* இ-சைக்கிள் உலகப் புகழ்பெற்ற ஆடி கார் நிறுவனம் இ-சைக்கிள் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் கார், பைக் போல இந்த இ-சைக்கிளை ஓட்ட முடியும். சைக்கிள்ல பெடலிங் இருந்தாலும் மோட்டார் மூலமும்தான் இதை இயக்க முடியும். இதில் உள்ள லித்தியம் பேட்டரி இரண்டரை மணி நேரம் சார்ஜ் செய்தால் போதும். இதன் சக்கரங்கள் பாலிமர் பைபர் பிளேடுகளால் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மொத்த எடை 21 கிலோ. மற்றொரு விசேஷம், இந்த சைக்கிளில் ஹேன்டில் பார் மூலம் உட்காரும் இருக்கையை நம்ம வசதிக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம். ... 112*மர பைக் ஹங்கேரி நாட்டில் வசிக்கும் டிரக் டிரைவர் இஸ்டாவன் புஸ்காஸ். வயது 57. முற்றிலும் மரத்தால் செய்யப்பட்ட பைக் ஒன்றை உருவாக்கியுள்ளார். ஹெல்மெட்டும் லைட் வெயிட் மரத்தில்தான். மர பைக் ஓட்டினால் தசைபிடிப்பு ஏற்படாது என்கிறார். இதை உருவாக்க 2 ஆண்டுகள் ஆனதாம். 113*நீள நாக்கு பெண்! உலகிலேயே நீளமான நாக்கு கொண்ட பெண் என்ற பெருமையை அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் பெற்றுள்ளார். இவர் பெயர் சானல் டேப்பர். வயது 21. கலிபோர்னியாவில் படித்து வரும் இவர் ஒரு புதுமையான கின்னஸ் சாதனை படைத்துள்ளார். லாஸ்ஏஞ்சல் நகரில் ஒரு நிகழ்ச்சியின் போது, கின்னஸ் சாதனை ஆய்வாளர்கள் சானலின் நாக்கை அளந்து பார்த்தனர். அவரது நாக்கின் மொத்த நீளம் 9.8 செ.மீ நீளம் இருந்தது. இது சாதாரண மனிதனின் நாக்கு அளவை விட 2 மடங்கு அதிகமாம்! உனக்கு ரொம்ப நாக்கு நீளம் என்று இவரை சொன்னால் தகும். 114*இரண்டு தலை பூனை! அமெரிக்காவில் ஒரு அபூர்வ பூனை ஒன்று உள்ளது. அதன் பெயர் பிராங் மற்றும் லுõயி. இந்த அதிசய பூனைக்கு உடல் ஒன்று என்றாலும், தலை மட்டும் இரண்டு.இந்தப் பூனை கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த பூனை 2 முகங்களுடன் கடந்த 12 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறது. அதாவது மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும் இவ்வளவு ஆண்டுகள் இதுபோன்ற மாறுபட்ட உருவத்துடன் வாழ்ந்தது இல்லையாம். இதை செல்லமாக வளர்க்கும் அதன் உரிமையாளர் மார்ட்டி ஸ்டிவென்ஸ் இதுகுறித்துக் கூறுகையில், இந்தப் பூனைக்கு 2 முகங்கள் இருந்தாலும், 3 கண்கள் மட்டுமே உள்ளன. இதில் 2 கண்களால் மட்டும் பார்க்க முடியும். ஆனால், எல்லா நாசித் துளைகளாலும் சுவாசிக்க முடியும். இதே உருவத்தை கொண்ட கிரேக்க கடவுளான ஜனஸ்சின் பெயரே இதற்கு பெயராக இடப்பட்டுள்ளது. * 115*575 மீட்டர் துணி! ஆக்ராவின் அடையாளமம் தாஜ்மகால். இதை கட்டிய ஷாஜகானின் 357வது நினைவு தினம் ஜூன் மாதம் அனுசரிக்கப்பட்டது. அவரின் நினைவாக டில்லியைச் சேர்ந்த அமித் குவாலி அமைப்பைச் சேர்ந்தவர்கள் 575 மீட்டர் நீளத்தில் பல வண்ணங்களில் தைக்கப்பட்ட துணிகளை சுமந்துகொண்டு தாஜ்மகாலை சுற்றி வந்தனர். ஷாஜகான் மனைவி மும்தாஜ் சமாதியில் சந்தனம் மற்றும் ரோஜா இதழ்கள் துõவி வழிபட்டனர். ஹாஜகானின் நினைவு தினம் என்பதால் அன்று மட்டும் சுற்றுலாத்துறை சார்பாக தாஜ்மகாலை இலவசமாக காண முடிந்தது. ஐதிராபாதில் இருக்கும் ஷாஜகான் வம்சாவளியினர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ... 116*பெரிய பெயின் பிரஸ்! அஸ்சாம் மாநிலத்தின் மூத்த பாடலாசிரியர் பிஸ்னு பிரசாத் ரப்பா. இவர் சிறந்த எழுத்தாளர், பாடலாசிரியர், சுதந்திர போராட்ட வீரர். ஜூன் மாதம் இவரின் நினைவாக நாடு முழுவதும் ஓவியம், கவிதை மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 28 அடி நீளமான பிரசில் பள்ளி மாணவர்கள் அவரின் உருவப்படத்தை வரைந்துள்ளனர். தற்போது இந்த பிரஸ் உலக கின்னஸ் சாதனையில் இடம்பெறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ... 117*ஜி-20 கடந்த மாதம் மெக்சிகோவில் ஜி-20 கூட்டம் நடந்தது. இந்தியா சார்பாக பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டார். ஜி-20 என்றால் குரூப்-20. ஜி-20 மாநாட்டில் உறுப்பினராக இருக்கும் 20 நாடுகளில் நிதி அமைச்சர்கள் மற்றும் வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள். 2008ம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. முதல் மாநாட்டில் இந்தியா இடம் பெற வில்லை. இரண்டாவதாக இங்கிலாந்தில்(2009) நடந்த கூட்டத்தில் உறுப்பினராக இந்தியா சேர்ந்தது. ஜி-20 நாடுகளில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகள்: ஆஸ்திரேலியா, கனடா, சவுதி அரேபியா, அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா, தென் ஆப்ரிக்கா, துருக்கி, அர்ஜென்டினா, பிரேசில், மெக்சிகோ, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, சீனா, இந்தோனேஷியா, ஜப்பான் மற்றும் தென்கொரியா மற்றும் ஐரோப்பிய யூனியன். ... ************ 118*பாதாளலோகம்! அண்டார்டிகா கடல் பரப்பிலிருந்து எட்டாயிரம் அடிக்குக் கீழே இதுவரை அறியப்படாத ஒரு பாதாள லோகத்தை கண்டுபிடித்திருப்பதாகவும், வெளியுலகம் அறியாத பல புதிரான உயிரினங்கள் இருப்பதாகவும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆக்ஸ்போர்டு, சவுத்தாம்டன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஒரு குழு, பிரிட்டிஷ் அண்டார்டிகா ஆய்வு அமைப்புடன் இணைந்து ஒரு குறிப்பிட்ட ஆய்வில் ஈடுபட்டது. அப்போது தாங்கள் ஒரு புதிய உயிரினத் தொகுப்பைக் கண்டுபிடித்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதில் பலவகை நண்டுகள், புதியவகையான ஆக்டோபஸ், நட்சத்திர மீன் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை, அறிவியல் உலகத்துக்கு முற்றிலும் புதியவை. அவ்வளவு ஆழத்தில் அந்த உரினங்கள் வாழ்வதில் இன்னொரு அசாதாரணமானவிசயமும் உள்ளது. கடலுக்கு அடியில் உள்ள எரிமலைகளுக்கு மேலாக அந்த உயிரினங்கள் காணப்படுகின்றன.அந்த எரிமலைகள் சீறும்போது கரும்புகையைக் கக்குகின்றன. அப்போது 380 டிகிரி அளவுக்கு வெப்பநிலை உயருகிறது. காரீயத்தையே உருக்கிவிடக் கூடியதுதான், இந்த வெப்பநிலை. சூரிய வெளிச்சத்துக்கே முற்றிலும் வாய்ப்பில்லாத நிலையில் இருக்கும் இருட்டில் அந்த உயிரினங்கள் வாழ்வதும் குறிப்பிடத்தக்கது. எரிமலைக் கரும்புகையில் உள்ள அதீத நச்சுத் தன்மை வாய்ந்த வேதிப்பொருட்களை உடைப்பதன் மூலம் அந்த உயிரினங்கள் தங்களுக்குத் தேவையான சக்தியைப் பெறுகின்றன.இந்தப் பாதாள உலகத்தில் காணப்படும் இரு டஜன் புதிய உயிரினங்களில் “யெட்டி கிராப்“ என்ற உயிரினம்தான் அதிகளவில் உள்ளது.16 செ.மீநீளமுடைய இவை. மற்றவகை நண்டுகளைப் போல் இல்லாமல் இவை தங்களின் மார்புப் பகுதியில் ரோமத்தாலான அடர்த்தியான அடுக்கைக் கொண்டிருக்கின்றன. இதில் பாக்டீரியாவை வளர்த்து, இவை உண்ணுகின்றன என்று கருதப்படுகிறது. இங்கு காணப்பட்ட, ஏழு கரம் கொண்ட நட்சத்திர மீன் போன்ற உயிரினங்களும் விஞ்ஞானிகளின் ஆர்வத்தைக் கிளறியுள்ளன. ** 119* நாற்றம் வீசும் பூ! பூக்கள் என்றால் வாசம் மணக்கும். நாற்றம் அடிக்கும் பூ இருக்குமா, என்ன? இருக்கிறது. இந்த பூவின் மணம் இறந்து போன விலங்கு ஒன்றின் உடல் அழுகும் போது வரும் மணத்துக்கு ஒப்பாக இருக்குமாம். பூ இனங்களில் உள்ள பெரிய இன பூக்களில் இதுவும் ஒன்று ஆகும். இணிணூணீண்ஞு ஞூடூணிதீஞுணூ, அட்ணிணூணீடணிணீடச்டூடூதண் tடிtச்ணதட் என்ற பெயர்களின் அழைக்கப்படும் இந்தப் பூ ஆண்டுக்கு மூன்று முறை மட்டுமே பூக்கின்றது ஜெர்மனியின் ஓடிஞுடூ என்ற இடத்தில் உள்ள தாவரவியல் பூங்கா ஒன்றில் இந்த பூ மலர்ந்துள்ளது. *** 120*விநோத நாய்! சீனாவில் இளஞ்சிவப்பு நிறமுள்ள வினோத தோற்றத்தில் ஒரு நாய் உள்ளது. இந்த நாய் அடையாளம்காண முடியாதவாறு ஒரு சிறிய குதிரை போன்றும் பன்றி போன்றும் நாய் போன்றும் தோன்றமளிக்கின்றது. அதனுடைய வால் குதிரையின் வால் போன்றும் உடலமைப்பு பன்றி போன்றும் காணப்படுவதால் அங்குள்ளவர்கள் இது ஒரு மரபணு பிரச்சினையால் தவறான முறையில் பிறந்த நாயாக இருக்கலாம் என கருதுகிறார்கள். *** 121*விண்கல் உருவாக்கிய கிராமம் மும்பை நகரில் இருந்து 800 கி. மீ. தொலைவில் உள்ள புல்தானா மாவட்டத்தில் லோனார் என்னும் அதிசய கிராமம் உள்ளது. இங்கு 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, 60 கிலோ மீட்டர் விட்டமுள்ள ஒரு விண்கல் உடைந்து சிதறி விழுந்ததில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது. விண்கல் தாக்கியதால் ஏற்பட்ட இந்த பள்ளத்தின் விட்டம் 1800மீட்டர். பள்ளத்தின் ஆழம் 170 மீட்டர். இந்த பள்ளத்தை சுற்றி அடர்ந்த காடுகளும், ஒரு ஏரியும் உள்ளது. இப்படியொரு அதிசய பூமி இருப்பதை 1823-ம் ஆண்டு அலெக்சாண்டர் என்ற வெள்ளைக்காரர் கண்டுபிடித்தார். விண்கல் உருவாக்கிய இந்த இடத்தின் மேற்கு திசையில் சுவர் போன்ற நீண்ட பகுதிகளும் காணப்படுகின்றன. கிழக்கு திசை ஏரியை நோக்கிச் செல்வதாக அமைந்துள்ளது. இப்பகுதியில் பண்ணைகளும், தோட்டங்களும் உள்ளன. இங்குள்ள ஏரி பறவைகளின் சரணாலயமாகவும் திகழ்கிறது. லோனர் கிராமத்தில் உள்ள விண்கல் ஏற்படுத்திய பகுதி பல ஆயிரம் ஆண்டுகளாக அப்படியே இருப்பதும் தெரியவந்துள்ளது. இங்குள்ள ஏரியில் உள்ள தண்ணீரில் உப்பு மற்றும் சுண்ணாம்பு கலந்துள்ளது. இந்தியாவில் இப்படிப்பட்ட அதிசயபூமியை புராதன சின்னமாக அறிவிக்கவேண்டும் புவியியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். *** 122*பன்றிகள் வசிக்கும் கிராமம்! சீனமக்கள் விரும்பி உண்ணும் இறைச்சி வகைகளில், பன்றி இறைச்சி. சீனாவில் தொழிற்சாலைகள் அதிகரித்து விட்டதால், பன்றிகளை வளர்ப்பதற்கு தகுந்த சூழல் இல்லை. இந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், ஜாங்குபு என்ற, மரங்கள்சூழ்ந்த குளு, குளு பிரதேசத்தில், பன்றிகளை வளர்ப்பதற்காக, பிரத்யேகமாக ஒரு கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. பன்றிகள் வசிப்பதற்காக இங்கு,கான்கிரீட்டாலான, 600 சிறிய குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும், பத்தாயிரம் ரூபாய் செலவில் அமைக்கப் பட்டுள்ளன. இங்கு பன்றிகள் விளையாடுவதற்காகவும், உற்சாகமாக வலம் வருவதற்காகவும், பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தினமும், காலை 8 மணிக்கு, குடில்களிலஇருந்து திறந்து விடப்படும் பன்றிகள், மாலை 5 மணிவரை, மற்ற பன்றிகளுடன் சேர்ந்து விளையாடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றன. *** 123*அந்தரத்தில் தொங்கும் பாறை பன்னெடுங்காலமாக ஒரு பாறை, தரை மட்டத்தில் படாமல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் அதிசயம் சவுதி அரேபியாவில் உள்ள அல்-கசனா பகுதியில் ஒரு கிராமத்தில் தான் இந்த அதிசய பாறை உள்ளது. அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த பாறையில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1989 ம் ஆண்டு இந்த அதிசயப் பாறையின் பின்புறத்திலிருந்த ஒரு தீவிரவாதி சுட்டுக் கொள்ளப்பட்டான் . இன்றும் கூட அந்த சுடப்பட்டவரின் உடலிலிருந்து சிதறிய இர த்தம் உறையாமல் அப்ப?டியே உள்ளது. இந்த அதிசயப் பாறையின் மற்றொரு அதிசயம் என்னவென்றால், தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப இது மேலும் கீழுமாக அசைவதாகவும் ஒரு அரியத் தகவல் . 124*காசு சொல்லும் ரகசிய மொழி! இந்திய ரூபாய் நோட்டுகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது என்பது தெரிந்த விஷயம். நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பதை தெரிஞ்சுக்கலாமா? இந்தியாவில் நான்கு மாநிலங்களில் நாணயங்கள் தயாரிக்கப்படுகின்றன. உத்தரப்பிரதேசத்தில் உள்ள நொய்டா, மகாராஷ்டிராவில் உள்ள மும்பை, மேற்குவங்கத்தில் உள்ள கோல்கத்தா, ஆந்திராவில் உள்ள ஐதராபாத் ஆகிய நகரங்கள் அவை. எந்த நாணயம் எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள உதவியாக அடையாள குறியீடு நாணயத்தில் இடம்பெற்றிருக்கும். எல்லா நாணயங்களின் அடியில், தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் கீழ் ஒரு குறியீடு இடம்பெற்றிருக்கும். அந்தக் குறியை வைத்து, அந்த நாணயம் எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதை தெரிவிக்கும். நாணயத்தில் உள்ள ஆண்டுக்குக் கீழே ஒரு தடிமனான புள்ளி இருந்தால், அது நொய்டாவிலும், சிறிய புள்ளி அல்லது டைமண்ட் வடிவம் இருந்தால், அது மும்பையிலும், 5 முனை நட்சத்திர வடிவம் இருந்தால், அது ஐதராபாத்திலும், எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கோல்கத்தாவிலும் தயாரிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். குட்டீஸ்! இப்ப உங்ககிட்ட இருக்கிற நாணயத்தை உற்றுப் பாருங்க. எந்த குறி இருக்கிறது என்று பாருங்க. அது எந்த நகரத்தில் தயாரானது என்று இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்குமே! ** 125*செல்போன்களில் தங்கம்! சீனாவில் துõக்கி எறிக்கப்பட்ட 100 மில்லியன் மொபைல் போன்களிலிருந்து ஆயிரத்து 500 கிலோ தங்கம், 1 மில்லியன் கிலோ அளவிற்கு தாமிரம், 30 ஆயிரம் கிலோ அளவிற்கு வெள்ளி உள்ளிட்டவைகள் பிரித்து எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சீனாவிலிருந்து வெளிவரும் பீபிள்ஸ் டெய்லி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியன் அளவிற்கு மொபைல்போன்கள் துõக்கி வீசப்படுவதாகவும், சீனாவில் மட்டும் 100 மில்லியன் மொபைல்போன்கள் துõக்கி எறிக்கப்படுகின்றன. இந்த செல்போன் கழிவிலிருந்து தங்கம்,காப்பர் ,சில்வர் போன்றவைகளும் பிரித்தெடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது 126*குழந்தைகள் நடத்தும் வங்கி டில்லியில் இயங்கி வருகிறது ‘பட்டர்பிளை’ சில்டிரன் டெவலப்மென்ட் கஜானா என்ற வங்கி. இதை நடத்தி வருபவர்கள் பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட குழந்தைகள். ஏப்ரல் 2001ம் ஆண்டு முதன் முதலில் டில்லியில் தொடங்கப்பட்டது. வசதியில்லாத குழந்தைகள் தொடர்ந்து படிக்க முடியாமல் பாதியிலேயே கூலி வேலை செய்கின்றனர். இவர்களின் எதிர்காலம் கருதி ‘பட்டர்பிளை‘ என்ற தொண்டு நிறுவனம் இந்த வங்கியை தொடங்கியது. இங்கு வேலை செய்யும் குழந்தைகளுக்கு வங்கி கணக்கு குறித்த வகுப்பு மற்றும் பயிற்சிகளை அந்த நிறுவனமே செய்து வருகிறது. ஒரு கூட்டுறவு வங்கியாக தொடங்கப்பட்ட இந்த வங்கி 2004ம் ஆண்டு முதல் சர்வதேச வங்கி அந்தஸ்து பெற்றுள்ளது. தற்போது 132 கிளைகளுடன் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபால், இந்தியா, இலங்கை, கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளில் நடத்தி வருகிறது. இந்தியாவில் மட்டும் சென்னை, கோல்கொத்தா உள்பட 106 கிளைகள் உள்ளன. ... 127*சாலையில் விமானநிலையம் சாலையின் குறுக்கே ரன்வே இருக்கும் ஒரே ஏர்போர்ட் பிரிட்டனில் உள்ள கிப்ரால்டர் ஏர்போர்ட். விமானம் வருவதற்கு முன் சாலையில் இருபுறமும் போக்குவரத்தை நிறுத்திவிடுவார்கள். விமானம் சென்ற பிறகு திரும்பவும் சாலையில் வாகனங்கள் செல்லும். ஒரு நாளைக்கு 7 விமானங்கள் சாலையின் குறுக்கே செய்கிறது. அதுவரை மற்ற வாகனங்கள் 10 நிமிடங்கள் வரை நிறுத்தப்படும். ... 128*இளம் பணக்காரன் இங்கிலாந்தின் நார்போக் நகரைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் கிரியோன் வில்லியம்சன். உலகிலேயே இளம் பணக்காரன் அந்தஸ்து பெற்றுள்ளான். 9 வயதிலேயே ரூ. 21.5 லட்சம் சம்பாதித்துள்ளான். கிரயோன் வில்லியம்சன் ஒரு ஓவியன். பள்ளியில் வரைந்த ஓவியத்தை இணையதளத்தில் ஏலம் விட்டுள்ளான். வில்லியம்சின் ஓவியங்கள் ஏலம் அறிவித்த 15வது நிமிடத்திலேயே ரூ. 21.5 லட்சத்துக்கு விற்றுத்தீர்ந்தது. ஒவ்வொரு ஓவியங்களும் குறைந்தது 4 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது. ஓவியங்களில் விற்ற பணத்தில் தன் பெற்றாருக்கு வீடு வாங்கித்த தரப்போவதாக கூறுகிறான் இந்த இளம் பணக்காரன். ************** 129*பூமியைப்போல ஒரு புதிய கோள் விண்வெளியில் பூமியை ஒத்த உயிரினங்கள் வாழக் கூடிய கோள்கள் இருக்கிறதா ஆய்வில் இதுவரை வானியலாளர்களால் 4 புதிய கோள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் நாலாவதாக இருப்பது பூமியில் இருந்து 22 ஒளியாண்டுகள் துõரத்தில் உள்ள எஒ 667இ என்ற குறியீட்டுப் பெயருடைய நட்சத்திரத்தை சுற்றி வரும் கோள் ஆகும். இந்தக் கோள் பூமியை விட பெரிய பருமனுடன் 4.5 மடங்கு அதிக அளவு திணிவை கொண்டிருக்கிறது. 28 பூமி நாட்களில் அதன் சூரியனைச் சுற்றி வருகிறது. இந்தக் கோளிலேயே உயிரினங்கள் வாழக் கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். * 130*தாவரங்கள் இருக்கும் உஷார் குணம் ஒரு தாவரத்திற்கு ஆபத்து நேரும் போது அது அதன் அருகில் உள்ள இதர தாவரங்களை எச்சரித்து விடும் வகையில் கண்ணுக்குப் புலப்படாத ஒரு நச்சு வாயுவை பாதிப்புக்கு உள்ளாகும் தாவரம் சுரந்து விடுவதாக ஆய்வொன்றில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக தாவரங்கள் தாவர உண்ணி விலங்குகளால் தாக்கப்பட்டாலோ அல்லது வேறு வகையில் ஆபத்தை எதிர்கொண்டாலோ இவ்வாறு நடந்து கொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வு உதுஞுtஞுணூ க்ணடிதிஞுணூண்டிtதூ ஆய்வு கூடத்தில் நடத்தப்பட்டுள்ளது. * 131*15 வயதில் பாட்டியான சிறுமி பிரிட்டனில் உள்ள 15 வயது சிறுமிக்குதான் இந்த அதிர்ச்சியான வயோதிக நோய் ஏற்பட்டுள்ளது. இந்தச் சிறுமியின் பெயர் ஜாரா ஹார்ஸ்சன்(ஙூச்ணூச் ஏச்ணூtண்டணிணூண) எல்லாக் குழந்தைகளைப் போலதான் வளர்ந்து வந்தாள் ஜாரா. ஆனால், பருவயதான 15 வயதை தொடும் போது தான், அவர் இயற்கைக்கு மாறான உடல் வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டது. ஒருவையான விநோத தோல் நோய் பாதிப்பால் அவளுடைய உருவம் மாறத்தொடங்கியது. அந்த மாற்றம் அவரை முதுமையாக்கிவிட்டது. வயதில் சிறுமி. தோற்றத்தில் பாட்டியாகிவிட்டாள். இதுவரை இத்தகைய நோயாளிகள் 30 பேர் வரை பிரிட்டனில் இனங்காணப்பட்டுள்ளது. இந்த சிறுமிக்கு சிகிச்சை அளித்துவரும் பிளாஸ்ட்ரிக் சிகிச்சை நிபுணர்கள், இச் சிறுமியை குணப்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். * 132*காற்றில் ஓடும் கார் அழுத்தப் பட்ட காற்றை எரி பொருளாக கொண் டு ஓடும் கார் ஒ ன்றை டொயோட் டா நிறுவனம் கடந்த ஆண்டு உருவாக்கினர். அந்தக் காருக்கு கு-ரின் ( ஓக் கீஐN ) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நவீன வாகனத்தின் சோதனை ஓட்டம் நடை பெற்றது. 80 மைல் வேகத்தில் சென்று கின்னஸ் சாதனை செய்துள்ளது. மிக அதிக வேகத்தில் சென்றாலும் , சில ஆரம்ப கட்ட குறை பாடுகள் உள்ளன. குறிப்பாக இதில் ஒருவர் மட்டும் தான் பயணிக்க முடியும் . இது ஒரு மூன்று சக்கர வாகனம். இரண்டு கிலோ மீட்டருக்கு ஒரு முறை இதற்கு அழுத்தப்பட்ட காற்று நிரப்ப வேண்டும். விரைவில் குறைகள் சரி செய்யப்பட்டு சாலைகளிலும் இந்த கார் ஓடும் நாளை எதிர்பார்க்கலாம். * 133**குண்டு வெடிக்கும் வண்டு இந்த வண்டுகளின் வயிற்று அடிப்பாகத்தில் சிறிய சுரப்பி இருக்கிறது. அந்தச் சுரப்பியில் ஒரு வேதித் திரவமும், ஆக்ஸிஜன் வாயுவும் சுரக்கின்றன. இந்த இரண்டும் சேர்ந்து வெடிக்கும் தன்மை கொண்டவை. சிலந்தி வலையில் இந்த வண்டு மாட்டிக்கொண்டதும், நெபிலியா வகைச் சிலந்தி அதைத் தின்ன உடனே பாய்ந்து போய் கவ்வும். ஆபத்தை அறிந்த வண்டு, தன் வயிற்றுப் பாகத்தைச் சிலந்தியின் பக்கம் திருப்பி, குறிபார்த்துச் சுரப்பியை வெடிக்கச் செய்யும். அந்த வெடிச் சத்தத்தை சிலந்தியால் தாங்க முடியாது. மேலும் காரமான ஒரு திரவமும் அதன் மீது பீய்ச்சப் படும். வெடிச்சத்தம், திரவ முழுக்கில் இருந்து சிலந்தி மீள்வதற்குள் அந்த வண்டு தப்பித்துப் போய்விடும். இந்த வகை ஆற்றல் இருப்பதால் குண்டு வெடிக்கும் வண்டுக்கு ஆபத்தோ, எதிரிகளோ அதிகம் இல்லை. ( தினமலர் சிறுவர் மலரில் நான் எழுதி வரும் துணுக்குத் தொடரின் மூன்றாம் பாகம்)