புதன், 31 மார்ச், 2010

ஹெல்த் கேர்!

ஹெல்த் கேர்!

குளிர்பானம் அதிகம் குடித்தால்
கணையத்தில் கேன்சர் வருமாம்!

நாம் காபி, டீக்கு அடுத்தப்படியாக தினமும் பருகக்கூடிய பானமாக இருப்பது குளரிபானங்கள் தான்! நீங்கள் குளிர்பானங்கள் அதிகம் குடிப்பவராக இருந்தால், உங்களுக்கு கணையத்தில் கேன்சர் வரவாய்ப்புண்டு என்று ஒரு அதிர்ச்சி தகவலை ஒரு மருத்துவ இதழ் வெளியிட்டுள்ளது.
சிங்கபூரில் குளிர்பானம் பருகும் 60 ஆயிரம் மக்களிடம் ஆய்வு செய்த மினிசொடா பல்கலைகழகத்தின் ஆய்வாளர் மார்க்பெர்ரியா, குளிர்பானங்களில் இருக்கும் சர்க்கரையின் அளவு உடலில் இன்சுலின் அளவை அதிகரித்துவிடுவதாகவும், கணையத்தில் ஏற்படும் கேன்சர் செல்லை அதிகரித்து விடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தள்ளார். மேலும், கணையத்தில் செரிமானத்துக்கான சுரப்பிகள் சுரக்கும் கணைய நீரை குளர்பானங்களில் இருக்கும் சர்க்கரை சோடா செயல் இழக்கச் செய்துவிடும் வேலையை செய்துவருவதால் 87 சதவீதம் கணையத்தில் கேன்சர் வரகூடும் என்றும் கூறியுள்ளார். இனிமே, குளிர்பானம் குடிக்கும் முன் கொஞ்சம் கணையத்தையும் நினைச்சுப்பாருங்க.

சோயா சாப்பிட்டால் லங் கேன்சரை தடுக்கலாம்!

இன்றைக்கு பலருக்கு நுரையீரலில் புற்று நோய் வரவது சகஜமாக உள்ளது. அதுவும் புகைப்பிடிப்பவர்கள் அதிகமாக இந்த நோயால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். பெண்கள் மார்பக புற்று நோய்க்கு உள்ளாகி வருகின்றனர்.
நுரையீரல் புற்று நோயைத் தடுக்க வல்லது எது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்ட டோக்கியோவைச் சேர்ந்த நேஷனல் கேன்சர் சென்டர் டாக்டர் டாய்சி ஷிமாசூ, புகைப்பழக்கம் இல்லாமல் இருந்து, சோயா உணவுப்பொருளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு நுரையீரல் புற்று பாதிப்பு அதிகம் இருக்காது என்கிறார்.
சோயாவில் அடங்கி இருக்கும் ஐசோபுளோவின் கேன்சரைத் தடுக்கும் சக்தியைக் கொண்டுள்ளது. ஹார்மோன் மூலம் வரும் மார்பக புற்றுநோய் செல்லை அழிக்கும் சக்தியையும் சோயா கொண்டிருக்கிறது.
45 முதல் 74 வயதுள்ள 40 ஆயிரம் பேரிடம் பரிசோதனை செய்ததில், அவர்களின் உணவு பழக்கம், புகைபிடித்தல் பழக்கம், வாழ்க்கை முறை இவைகளை கருத்தில் கொண்டு ஆய்வு செய்ததில் சோயா உணவு அதிகம் எடுத்துக்கொண்டவர்களுக்கு நுரையீரல் புற்று நோய் பாதிப்பு ஏற்படவில்லை என்ற மருத்துவ அறிக்கையை டாய்சி ஷிமாசூ வெளியிட்டுள்ளார்.

குண்டா இருக்கீங்களா?
உயரமான இடத்துக்கு போங்க!

குண்டா இருக்கிறவங்க இளைக்கணும் என்றால் டயட்டில் இருக்கணும். வாக்கிங் போகணும். உடற்பயிற்சி செய்யணும். மருந்து மாத்திரை சாப்பிடணும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துவார்கள். ஆனால், லட்விக் மாக்ஸிமில்லியன் யுனிவர்சிடி மருத்துவர் புளோரின் லிபள் என்பவர் காற்றோட்டம் உள்ள உயரமான பகுதியில் இருந்தாலே உடம்பு எடை குறையும் என்கிறார்.
இதற்காக, அவர் சராசரியான எடையுள்ள 20 ஆண்களை சோதனைக்க உட்படுத்தி, தாழ்வான பகுதியில் அவர்களை ஒரு வாரம் தங்க வைத்து, அவர்களின் உணவு, நடைபயணம் போன்ற பழக்கங்களை கருத்தில் கொண்டு வாரமுடிவில் அவர்களின் எடை நிலையும், அடுத்து கடல் மட்டத்திலிருந்து 2,650 மீட்டர் உயரத்தில் அவர்களை தங்க வைத்து ஒரு வாரம் கழித்து அவர்களின் எடை சராசரியாக 1.5 கிலோ குறைந்திருப்பதை கண்டிருக்கிறார்.
உயரமான பகுதியில் இருக்கும் போது வீசும் மென் காற்று உடம்பில் உள்ள கலோரிகளை அதிகம் எரிக்கின்றது .லெப்டின், ஹார்மோன் சுரப்பு ஆகியவை துரிதமாக இருப்பதை அறிந்திருக்கிறார். இவைகளின் காரணமாக உயரமான இடத்தில் இருந்தால் குண்டானவர்கள் இளைக்க வாய்ப்புண்டு என்று டாக்டர் டாய்சி சொல்லியிருப்பதை குண்டானவங்க காதுல போட்டுகுங்க.

கர்ப்பக்கால தொற்று ஏற்பட்டால்
குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும்

தாய் கர்ப்பக்காலத்தில் பிறப்புறுப்பு வழியாக ஏற்படும் தொற்று காரணமாக வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆஸ்துமா நோய் ஏற்படுகின்றது என்பதை வாஷிங்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்விற்காக கலிபோர்னியாவில் 4 லட்சம் கர்ப்பவதிகளை மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய போது, கொரியோமினிட்டிஷ் தொற்றினால் பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா நோய் 8 வயதில் வளர ஆரம்பிப்பதாக கூறுகின்றனர்.

உங்கள் குழந்தை சுத்த அல்பமா
கவலையைவிடுங்க!

குழந்தைகள் பெரியவர்களைப் போல தாராள குணம் படைத்தவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. தொட்டதுக்கெல்லாம் அற்பபுத்திக்கொண்டிருந்தால் நமக்கு அந்த குழந்தைகள் மீது எரிச்சலும், வெறுப்புதான் ஏற்படும். முளைக்கிறச்சேவே இப்படி இருந்தா, பின்னாடி எப்படி உருப்புடும்? என்று நினைக்கத் தோணும். ஆனால், உண்மை அதுவல்ல; இப்படி பட்ட குணம் உள்ள குழந்தைகள் தான் ஒழுக்கமாக இருப்பாங்கன்னு அமெரிக்க ஆய்வாளர்கள் அடித்து சொல்கிறார்கள். குழந்தைகள் இயல்பாக அவர்களுடைய கோபத்தை, உள்ளக்கிடக்கை வெளிபடுத்தவே செய்வார்கள்.அவர்களுக்கு பாசாங்கு, நடிக்க எல்லாம் தெரியாது. எனவே, குழந்தைகளின் குணத்தைப்புரிந்து வழிநடத்தினால், பிற்காலத்தில் அவர்கள் ஜென்டில் மேன்களாக இருப்பார்கள்.

கீழ்வாதமா பெண்கள் உஷார்!
ஹார்ட் அட்டாக் வரும்...

ஆண்களுக்கு வரும் ஹார்ட் அட்டாக் ஆபத்தை விட பெண்களுக்கு கீழ்வாதத்தால் ஏற்படும் ஹார்ட் அட்டாக் ரொம்பவும் ஆபத்தானது என்று ஓர் ஆய்வு குறிப்பு தெரிவிக்கின்றது. கீழ்வாத நோய் ஆண்களுக்கு வரும்நோய். அதிகமாக பெண்களுக்கு வராது. இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக இது பெண்களையும் தாக்குகிறது என்று மருத்துவ ஆய்வு கூறுகிறது. 39 சதவீதம் இந்த உபாதையினால் ஹார்ட் அட்டாக் வந்திருக்கின்றனர். ஆக, எந்த வாதமாக இருந்தாலும் பெண்கள் ரொம்ப உஷாராக இருக்கணும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக