புதன், 31 மார்ச், 2010

இதுவும் செய்திதானுங்க

இதுவும் செய்திதானுங்க!

நாசாவின் புதிய விண்வெளி மையம்

"ஆகாசத்தில் கோட்டைக்கட்ட ஆசைப்படக்கூடாது' என்ரொரு வழக்கு பேச்சு உண்டு. இன்றை நவீன விஞ்ஞானம் அதை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டது. நாசா ஏற்கெனவே விண்வெளியில் விண்வெளி கூடாரம் கட்டி ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது. இப்போது மேலும் ஒரு விண்வெளி கூடாரத்தை விண்வெளியில் அமைத்துள்ளது. இந்த கூடாரத்தை விண்வெளி வீரர்களான ராபர்ட் பென்கன் மற்றும் நிகோலஸ் பேட்டிரிக் இணைந்து அமைத்துள்ளனர். இந்த கூடாரம் ஏழு ஜன்னல் வசதிகளுடன் 400 மில்லியன் டாலர் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விண்வெளி கூடாரத்திற்கு டிரான்குலிட்டி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறதாம்!

2முறை வரும் மார்பு புற்றுநோயை
ஸ்கேன் காட்டிக் கொடுக்காது

மார்பக புற்று நோய்கள் வந்தால் அதன் அறிகுறிகளை சோதனை செய்ய எம்ஆர்ஐ ஸ்கேன் செய்வது பழக்கம். இந்த ஸ்கேன் மூலம் 2வது முறை ஏற்பட்ட மார்பக புற்று நோயை அறிந்து கொள்ள முடியாது என்று கனடாவைச் சேர்ந்த ஹல் யூனிவர்சிடி விஞ்ஞானிகள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். அதனால் ஒரு முறைக்கு மேல் மார்பக புற்று நோய்க்கு ஆபரேஷன் செய்தால் அதற்கு ஸ்கேன் செய்ய வேண்டியதில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

சாக்லெட் சாப்பிட்டா அட்டாக் வராது

சாக்லெட் குழந்தைகள் மட்டும் தான் சாப்பிடணும் என்று நாம் நினைத்து விடுகிறோம். ஆனால், பெரியவர்கள் சாக்லெட் சாப்பிட்டால் லோவர் ஸ்டிரோக் வராது காக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சாக்லெட்டில் அதிகபடியான ஆன்டிஆக்ஸைடன் இருப்பதால் அது ஸ்டிரோக் வருவதிலிருந்து நம்மை காக்கிறது. இந்த விஷயத்தை 44,489 பேரிடம் சாக்லெட் சாப்பிட சொல்லி ஆய்வு செய்ததில் 22 சதவீதம் பேருக்கு மாரடைப்பு தடுக்கப்பட்டிருக்கிறதை கண்டறிந்துள்ளனர். 2வதாக சாக்லெட் சாப்பிடாத ஆயிரத்து169 பேரிடம் ஆய்வு செய்ததில் 46 சதவீதம் பேர் மாரடைப்பால் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. அதனால் மாரடைப்பு வராமல் இருக்க தினமும் ஒரு சாக்லெட் சாப்பிடுங்க! இன்னொரு ஆய்வில் சாக்லெட், திராட்சை,புளுபெரீஸ், பூண்டு, சோயா இவைகள் சாப்பிட்டால் கேன்சர் வராது என்று கண்டுபிடித்துள்ளனர்.

உயில்கள் பலவிதம்
இறப்பதற்கு முன்னால் ஒருவர் எழுதி வைக்கும் சாசனம் உயில். அந்த உயிலில் தான் விருப்பபட்ட ஆசைகளை, பிறர் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் குறித்து எழுதிவைப்பதாகும். பெரும் நம்மில் பலர் சொத்து பற்றிய உயில்கள் தான் அதிகம் எழுதுகின்றனர். இப்படி பட்ட பல விநோதமான உயில்களை
அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் சேகரித்து வைத்துள்ளாராம். அவர் கடந்த 50 ஆண்டுகளாக சேகரித்து வந்த உயில்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் பல விநோதமான உயில்கள் எல்லாம் உள்ளனவாம். ஒரு கோடீஸ்வர பெண்மணி ஒருவர் தன் கணவர் கல்லறைக்கு அருகே தன்னை அடக்கம் செய்யக்கூடாது என்றும், தன் வளர்த்தசெல்லக்கிளியோடு தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று உயில் எழுதி வைத்துள்ளாராம். இப்படி இன்னும் சில சுவாரஸ்யமான உயில்களின் பட்டியல் நீளுகிறதாம். இதில் பல உயில் நிறைவேற்ற முடியாத பல விஷயங்களைக் கொண்டிருக்கிறதாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக