வெள்ளி, 12 மார்ச், 2010

இப்படியும் பெண்கள்?

சீனாவின் குவாங்க்டோக் மாகாணத்தில் உள்ள குவாங்க்ஷோவ் நகரில் இளம் பெண்களுக்கு திருமணம் ஆவது தாமதமாகிக் கொண்டே போகிறதாம். இதனால் கவலையடைந்த சில பெண்களின் பெற்றோர், `எப்படியாவது உனக்கு பொருத்தமான துணையை தேடிக் கொள்' என்று கூறிவிட்டார்களாம்.

பெற்றோரின் இந்த நிர்ப்பந்தம் காரணமாக 4 நாட்களுக்கு முன்பு 8 இளம் பெண்கள் நீச்சல் உடையில் நடுத்தெருவில் இறங்கி நூதனமான முறையில் மணமகன் வேட்டையில் இறங்கினார்கள். முகத்தை முகமூடியால் மறைத்துக் கொண்டு ஆடிப்பாடியதுடன், `இளைஞர்களே எங்களை திருமணம் செய்து கொள்ளுங்கள். எங்கள் அம்மாக்கள் எங்களை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துகிறார்கள்' என்று எழுதப்பட்ட அட்டைகளையும் காண்பித்தனர்.

தவிர, தெருவில் போவோர் வருவோரிடம் எல்லாம் தங்களைப் பற்றிய தகவல்கள் அடங்கிய நோட்டீசுகளையும் வினியோகித்தனர். `எங்களுக்கு பொருத்தமான துணையை நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம். நிச்சயம் நல்ல கணவன்மார்கள் கிடைப்பார்கள்' என்று இந்த 8 இளம் பெண்களும் அடித்துக் கூறுகிறார்கள். இவர்கள், `கோமாளி அழகிகள்' என்ற அடைமொழியை தங்களுக்குத் தாங்களே சூட்டிக் கொண்டு உள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக