செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

குட்டீஸ் கேள்வி- பதில்/ தேவராஜன்/

குட்டீஸ் கேள்வி- பதில்/ தேவராஜன்/ *டிவிடி என்றால் என்ன? - ஆர். கோகுல், பள்ளூர். டிவிடி (ஈடிஞ்டிtச்டூ ஙஞுணூண்ச்tடிடூஞு ஈடிண்ஞி) என்பது சிடிக்களின் அடுத்த நிலை. சி.டி.க்களில் (இணிட்ணீச்ஞிt ஈடிண்டு) 600 எம்.பி. அளவுள்ள டேட்டாக்களை மட்டுமே பதிந்து கொள்ள முடியும். ஆனால் டிவிடிக்களில் 4 ஜி.பி. அளவு டேட்டாக்களை பதிந்து கொள்ள முடியும். இது சிடியை காட்டிலும் 5 மடங்கிற்கு மேல் ஆகும். இப்போது சிடியைக் காட்டிலும் டிவிடிக்களைத்தான் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சிடிக்களின் விலையை விட டிவிடிகளின் விலையும் சற்றுதான் அதிகம். *சிம்கார்டு கண்டுபிடித்தது யார்? - ரா. வீரபாண்டியன், புதுக்கோட்டை. செல்போன்களில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள சர்வீஸ் புரொவைடர்களால் வழங்கப்படும் ஒரு சிறிய அட்டைக்குப் பெயர் தான் சிம்கார்டு. சிம் என்பதன் விரிவாக்கம் குதஞண்ஞிணூடிஞஞுணூ ஐஞீஞுணtடிtதூ Mணிஞீதடூஞு (குஐM). முதல் சிம் கார்டு 1991ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த சிம் கார்டை முனிச் ஸ்மார்ட் கார்டு தயாரிப்பாளர் கீய்செக்கெ - டெவ்ரியன்ட் உருவாக்கினார். முதல் 300 சிம் கார்டுகளை, பின்லாந்து கம்பியற்ற நெட்வொர்க் வழங்குனர் ரேடியோலின் ஜாவுக்கு விற்றார். * வலிப்பு வந்தவர்களுக்கு சாவிகொத்தைக் கொடுப்பது ஏன்? - அருள்மொழி, நாகை. வலிப்பு வந்தவர்களுக்கு சாவி கொத்து கொடுப்பது, இரும்பு கம்பிகளைப் பிடிக்கக் கொடுப்பது, முகத்தில் குளிர்ந்த தண்ணீரைத் தெளிப்பது எல்லாம் மருத்துவ ரீதியான செயல்பாடுகள் இல்லை. வலிப்பு வந்தவர்களின் ஆடைகளைத் தளர்த்திவிட வேண்டும். நல்ல காற்றைச் சுவாசிக்க வழி செய்ய வேண்டும். காற்றை அடைத்துக்கொண்டு நிற்கக் கூடாது. வலிப்பு நோயாளியை ஒருக்களித்துபடுக்கும்படி செய்ய வேண்டும். இதனால் வாயிலிருந்து வழியும் கோழை வெளியேறும். தொண்டையை அடைத்துக் கொள்ளாது. வாயில் பற்களுக்கு இடையில் ஒரு துணியைச் சுருட்டி வைக்க வேண்டும். இதன் மூலம் நாக்கைக் கடித்துக் கொள்ளாமல் தடுக்கலாம்.வலிப்பு நோயாளிகளுக்குச் செய்யும் முதல் உதவிகள் இவை. பின்னர் அவருக்கு தெளிவு ஏற்பட்டதும் நன்றாகத் துõங்கச் செய்ய வேண்டும். *********************** *புரை ஏறுதல் எப்படி ஏற்படுகிறது? - பா.கிருத்திகா, அரையபுரம். உணவுக்குழலும் மூச்சுக்குழலும் வாய்க்குக் கீழ்புறம் அடுத்தடுத்து உள்ளன. உணவை விழுங்கும்போது, மூச்சுக் குழல் தானாக மூடிக்கொள்ளும். உணவு மூச்சுக் குழலில் போய்விடாமல் இருக்கவே இயற்கையாக அமைந்துள்ள ஏற்பாடு இது. சில சமயம் தப்பித் தவறி உணவுத் துணுக்கு அல்லது நீர்த்துளி மூச்சுக்குழலில் சென்று விடுகிறது. அப்போது மூச்சுக்குழலின் தசைகள் அதை வெளியேற்றத் தீவிரமாக இயங்குகின்றன. இதைத்தான் புரை ஏறுதல் என்கிறோம். புரை ஏறினால் யாரோ நினைத்துக் கொள்கிறார்கள் என்று தலையில் தட்டுவார்கள். யாரோ நினைத்துக் கொள்வதற்கும் இதற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை. * போலீஸ் துறையின் முன்னோடி ரோமாபுரியை ஆட்சி செய்த அகஸ்டஸ் சீசர் தான் போலீஸ் துறையின் முன்னோடி என்று கூறலாம். இவர் தனது நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக தனியாக ஒரு படையை முதன் முதலாக ஏற்படுத்தினார். இந்த முறை ஏழாம் நுõற்றாண்டிற்கு பிறகு இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலும் பரவியது. இந்தியாவில் 1792 ம் ஆண்டு டிசம்பர் 7 ம் தேதி கிழக்கிந்திய கம்பெனியரால் காவல்துறை ஆரம்பிக்கப்பட்டது. அப்போது முக்கியமான ஊர்களில் காவல் நிலையம் அமைக்கப்பட்டது. அந்த காவல் நிலையத்தில் சப் - இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு உதவி இன்ஸ்பெக்டரும் 10 போலீசரும் ஒரு எழுத்தரும் இருந்தனர். இவர்கள் அனைவரும் இணைந்த குழுவிற்கு காவல்குழு என்று பெயர் வைத்தனர். 1867 ல் முதலாவது காவல் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன்படி காவலர்களின் சீருடை, சம்பளம், மற்றும் பணி தொடர்பான விதி முறைகள் வகுக்கப்பட்டன. *யானையை ஜம்போ என்று சொல்லக்காரணம் என்ன? / டிச.23/ - எஸ். தையல்நாயகி, ராமந்தீஸ்வரம். மிகப் பெரியனவற்றை ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றபோது ஜம்போ என்பர். மிகப்பிரபலமான ஒரு யானையின் பெயர்‘ஜம்போ’ சூடானிலிருந்து இந்த ஜம்போ யானை பாரிஸ் மிருகக்காட்சி சாலைக்கு கொண்டுவரப்பட்டு, பின்னர் 1865ம் ஆண்டு லண்டன் மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்டது. இது ஆப்பிரிக்க யானை. இந்த யானையின் எடை 6.5 டன். லண்டன் மிருகக்காட்சி சாலையில் இருந்தபோது இந்த யானை எல்லாரையும் கவர்ந்தது. குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் இதற்கு அமோக வரவேற்பு இருந்தது.இந்த யானை மிகவும் அழகாகவும், எல்லோராலும் விரும்பப்பட்டதாகவும் இருந்ததாம். இந்த யானை, 1882ம் ஆண்டு சர்க்கஸ் நிறுவனமொன்றுக்கு விற்கப்பட்டது. இயல்பிலேயே குறும்புக்கார குணம் கொண்ட ஜம்போ யானை சர்க்கசில் பல சாகசங்கள் செய்து ரசிகர்களையும் , குழந்தைகளையும் கொள்ளை கொண்டது . ஜம்போ யானை மிகவும் பிரபலமானதால், ஒரு பணக்காரர் அதைப் பணம் கொடுத்து வாங்க முன்வந்தார் . ஆனால் அது தடுக்கப்பட்டுவிட்டது. 1885ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி, இந்த யானையை ரயிலில் ஏற்றிச் சென்றபோது விபத்தில் இறந்தது. ஜம்போ இறந்த பிறகு, அதன் நினைவாக ஒரு சிலை இங்கிலாந்தில் நிறுவப்பட்டது. ***************************** மனித இனத்தைச் சேர்ந்ததா மனித குரங்கு? - பிரபு, கள்ளக்குறிச்சி மனிதக் குரங்கு என்பது ஹொமினோய்டியே இனம் சேர்ந்த ஒரு உயர் விலங்கினம். பொதுவாக இது மனித இனத்தைச் சேர்ந்தது என்று கருதுவதில்லை. எனினும், அறிவியல் வகைப்பாட்டு அடிப்படையில் மனிதரும் இவ்வகையுள் அடங்குபவர். மனித குரங்கு இனத்தில் இரண்டு ஹொமினோய்டு உள்ளன ஹைலோபட்டிடே குடும்பம்: லார் கிப்பன் , சியாமாங் என்னும் குரங்கினம் குறிப்பிடத்தக்கவை. இந்த குரங்கினத்தை ‘குறைந்த மனிதக் குரங்குகள்‘ என அழைப்பர். ஹொமினிடே குடும்பம்: இது ஒராங்குட்டான்கள், கொரில்லாக்கள் சிம்ப்பன்சிகள் என்பவற்றுடன் மனிதர்களையும் உள்ளடக்கும். இவை பெரு மனிதக் குரங்குகள் . பார்பேரி மனிதக் குரங்குகள் போன்ற சில உயர் விலங்குகளில் வாலில்லாத் தன்மையை வைத்து மனிதக் குரங்குகள் எனப்பட்டாலும், இவை உண்மையான மனிதக் குரங்குகள் அல்ல. மனிதரையும், கொரில்லாக்களையும் தவிர்த்துப் பிற உண்மையான மனிதக் குரங்கு இனத்து விலங்குகள் அனைத்தும் சுறுசுறுப்பாக மரம் ஏறும். இவை விதைகள், இலைகள், பழங்கள் பல சந்தர்ப்பங்களில் முதுகெலும்பிலிகளின் ஓரளவு இறைச்சி, எளிதில் செரிமானம் அடையக்கூடிய எல்லாவற்றையும் உண்ணும். ஆபிரிக்காவும் ஆசியாவும் இவற்றின் தாயகம் . * ஜி.யு. போப், வீரமாமுனிவர் போன்றவர்கள் தமிழ் இலக்கியம் எழுதியுள்ளார்கள். நம் இந்தியர்கள் ஆங்கில இலக்கியம் எழுதியிருக்கிறார்களா? - விமலா, திருச்சேரை. பலர் எழுதி இருங்காங்க விமலா. ஆர்.கே.நாராயணன், புக்கர் பரிசு வென்ற அரவிந்த் அடிகா, விக்ரம் சேத். சஷி தரூர், அருந்ததி ராய், குஷ்வந்த் சிங், அனிதா தேசாய், இந்திய வம்சாவளியினரான சல்மான் ருஷ்டி, வி.எஸ்.நேய்பால், போன்றவர்கள் இந்தியர்கள் தான்! இன்னும் சிலர் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ****************** அடிக்கடி தாகம் எடுப்பது எதனால்? /6.1.12/ - ஆர். பாலா, பள்ளூர். உடலில் திரவப்பொருட்கள் குறையும்போதோ, உப்பின் அடர்த்தி அதிகமாகும் போதோ தாக உணர்வு ஏற்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளின்போது மூளை வேகமாக செயல்பட்டு தாக உணர்வை ஏற்படுத்துகிறது. உடலில் தொடர்ந்து நீரிழப்பு இருக்குமானால் அது பலவகையான சிக்கல்களின் அறிகுறியாக இருக்கலாம். மேலும் நரம்பியல் கோளாறுகளின் விளைவாக மூளையின் செயல்திறன் குறையும்; சிறுநீரக பாதிப்புகள் ஏற்படும். அளவுக்கதிகமான தாக உணர்வை பாலிடிஸ்பிசியா என்றும் அதிகப்படியாக சிறுநீர் போதலை பாலியூரியா என்றும் கூறுகின்றனர். தாக உணர்வு மைய நரம்பு மண்டலத்தினால் உணரப்படுகிறது. எக்ஸ்ட்ரா செல்லுõலர் தர்ஸ்ட் என்பது உடலில் நீரின் அளவு குறைவதால் ஏற்படும் தாக உணர்வு ஆகும். இன்ட்ரா செல்லுõலர் தர்ஸ்ட் என்பது உடலில் உப்பின் அடர்த்தி அதிகரிப்பதால் ஏற்படும் தாக உணர்வு ஆகும். இரண்டுவகையான தாக உணர்வுகளுமே மூளையின் மைய நரம்புமண்டலத்தால்தான் உணரப்படுகின்றன. மீன் தண்ணீரில் அசைவற்று நிற்பது எப்படி? - டி. சிவகாம சுந்தரி, ஈரோடு. அசைவற்று நிற்கக்கூடிய திறமை மீனுக்கு உண்டு. மீன்கள் இப்படி தண்ணீரில் நிலையாக நிற்பதற்கு, அவற்றின் உடலுக்குள்ளே உள்ள பிரத்யேகமான வாயு பை உதவி செய்கிறது. ஒரு பலுõனின் வடிவில் உள்ள இந்த வாயு பை, மீனின் வயிற்றுக்கும், குடலுக்கும் மேலே அமைந்திருக்கிறது. மீனின் மொத்த உடற்பரப்பில் 5-லிருந்து 6 சதவீதம் வரை இந்தப் பை இருக்கும். ஆக்சிஜன், கார்பன்டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆகிய வாயுக்களின் கலவை இந்தப் பையில் நிறைந்திருக்கும். பைக்குள் உள்ள வாயுவின் பரப்பை அதிகரிப்பதாலும், குறைப்பதாலும் தன் உடல் எடையை முறைப்படுத்துகிறது. அதனால், தண்ணீருக்குள் அசைவற்று ஆழ்ந்திருக்கிறது. வாயுப்பை முழுமையாக நிறைந்திருக்கும்போது, மீன் தண்ணீரின் மேல் தளத்தில் மிதந்துகொண்டிருக்கும். ஓரளவு வாயுவை வெளியே விடும்போது கீழே வந்து தண்ணீருக்குள் தங்கி நிற்க மீனால் முடியும். தண்ணீரின் ஆழத்திற்கு ஏற்ற வகையில் வாயு பையின் பருமனையும், அதில் அடங்கியுள்ள வாயுவின் அளவையும் முறைப்படுத்துவதற்கான தன்மைகள் மீனின் உடலில் உண்டு. மோட்டார் வைக்காமலேயே மரத்தின் அவ்வளவு உயரத்திற்குத் தண்ணீர் ஏறுகிறதே, அது எப்படி? - எஸ். தையல்நாயகி, வடக்காலத்துõர். மரங்கள் மற்றும் தாவரங்களில் உள்ள வேர் முடிச்சுகளில் சர்க்கரைக் கரைசலும், உப்புப் பொருட்களும் இருக்கும். இதனால், வேர்களின் உள்ளே அழுத்தத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக, வெளியே இருக்கும் தண்ணீர் வேருக்குள் செல்கிறது. இதற்கு சவ்வூடு பரவல் என்று பெயர். இப்படி வேர் முடிச்சுகளில் தண்ணீர் சேர்ந்துகொண்டே இருக்கும். இதனால் அதிகரிக்கும் தண்ணீரின் அழுத்தம் காரணமாக, தண்ணீர் மேல் நோக்கி உயரும். அடி மரம் வழியாக, கிளை வழியாக இலைகளுக்கு, ஒரு செல்லில் இருந்து மற்றொரு செல் வழியாகத் தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது. அத்துடன் ஊட்டச் சத்துக்களும் சென்று சேர்கின்றன. மரங்கள், வளரும் காலத்தில் இலைகள் மூலமாக ‘டன்’ கணக்கான தண்ணீரை வளி மண்டலத்தில் வெளியேற்றுகின்றன. ஆவியாதல் எனும் செயல்பாடு மூலமாக இப்படிப் பல மடங்கு தண்ணீர் வெளியேறுகிறது. இதன் காரணமாக, இலைகளில் ஏற்படும் தற்காலிக வெற்றிடத்தை அடியிலிருந்து வேர் வழியாக வரும் தண்ணீர் நிரப்புகிறது. தண்ணீர் மூலக்கூறுகள் எப்போதும் நெருக்கமாகப் பிணைந்து கிடக்கும். ஆவியாதலால் தண்ணீர் மூலக்கூறு வெளியேறும் நிலையில், கீழ்ப்படியிலிருந்து மேல் படிக்கு இழுக்கப்படுவது போல்,புதிய தண்ணீர் மூலக்கூறுகள் சங்கிலித் தொடர்போல மேலே வந்து சேர்கின்றன. இப்படித்தான் மரத்தினுள் தண்ணீர் கீழிருந்து மேலே வருகிறது. இப்படிப் பல அடி துõரம் மேலே ஏறிய தண்ணீர்தான் இளநீராகவும் பதநீராகவும் நம்மை வந்தடைகின்றன. ******************** பிப்.24/ *பாம்பு போல் தோலுரிக்கும் விலங்கு உண்டா? ஏன் தோலுரிக்க வேண்டும்? -ஜெயகவிதா, மயிலாடுதுறை. பாச்சை, வெட்டுக்கிளி, தேள் போன்ற சில பூச்சிகள் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் கெட்டி அடைந்த தோலின் புறச் செல்களிலிருந்து நாம் சட்டையைக் கழற்றி விடுவது போல வெளியே எடுத்துவிடுகின்றன. நீங்கள் குறிப்பிட்டது போல பாம்பும் அவ்வப் போது தன் சட்டையைக் கழற்றிப் போடும். பாம்பு சட்டை உரிப்பது அதனுடைய வளர்ச்சிக்காக அல்ல. மேல் தோலினைக் கடித்து அதில் உள்ள சத்தினை உறிஞ்சும் பூச்சிகளிடமிருந்தும், வேறு பல கிருமிகளிடமிருந்தும் விடுதலை பெறவும், கீறல்கள், காயங்கள் மிகுந்த மற்றும் இறந்து போன வெளி செல்களை விட்டெறியவும் பாம்பு தன் தோலை உரிக்கின்றன. பாம்பு சட்டை உரிக்கும் நேரம் வந்தால், வெளிப்புறச் செல்களுக்கு உள்ளாக அருகில் இருக்கும் செல்கள் திரவமாக மாறி வழுக்கலை அளிக்கிறது. சட்டையின் வால் பக்கத்தை சொரசொரப்பான குச்சிகளில் ஒட்டச் செய்து அதிலிருந்து தன் உடலை மெல்ல வெளியே இழுத்துக் கொள்கிறது. மணிபர்ஸ், பெல்ட் இவை செய்வதற்காக சிலர் பாம்பின் தோலை உரிப்பதும் உண்டு. *தீயிலோ, கொதிக்கும் நீரிலோ கைப்பட்டால் படக் என்று எடுத்து விடுகிறோமே, அது எப்படி? - பழ. வீரபாண்டியன், பேரளம். உடலில் பெருமூளையின் முடிவு இல்லாமலேயே நிகழும் செயல்களை அனிச்சைச் செயல்கள் என்பார்கள். உணர்ச்சி நரம்புகளுக்கும், தண்டுவடத்துக்கும் இணைப்பு ஏற்படுவதால் இத்தகைய அனிச்சைச் செயல்கள் நிகழ்கின்றன. உடலின் அனிச்சைச் செயல்கள் பல, உடலுடன் கூடப் பிறந்தவையாகும். அதாவது அவை இயல்பாக, பயிற்சி இல்லாமல் நிகழ்கின்றன. மேலும் பயிற்சியின் மூலம் அனிச்சைச் செயல்களை உடல் கற்றுக்கொள்ளும். துõங்கும் போது கொசு கடிக்கிறது. உடனே கை கொசுவை அடிக்கிறது. இந்த செயல் துõக்கத்திலேயே நடைபெறுகிறது. இதுவும் அனிச்சைச் செயல் தான். இந்த அனிச்சைச் செயல் செயல்படும் விதம் எப்படி எனில், கொதிநீரில் விரலை வைத்த செய்தி பெருமூளைக்குச் சென்று, அது நரம்புகள் மூலம் கைத்தசைகளை ஏவிவிட்ட பிறகு கையை எடுப்பது மூளையின் கட்டளைப்படி நடப்பதாகும். ஆனால், நீரின் சூடு விரல்களில் பட்டதுமே நரம்புகள் அச்செய்தியைத் தண்டுவடத்துக்கு அனுப்புகின்றன. தண்டுவடத்தில் இருந்து நரம்புகள் மூலம் கைத்தசைகளுக்குக் கட்டளை போகிறது. உடனே கைத்தசைகள் சுருங்கிக் கரத்தை நீரில் இருந்து எடுத்துவிடுகின்றன. *நம் நாட்டின் தேசிய கீதம், தேசிய பாடல் இவற்றுக்கு உள்ள வித்தியாசம் என்ன? - எஸ். தங்மிஸ்தான், திருவேட்டக்குடி. தேசிய கீதத்தை எழுதியவர் ரவீந்திர நாத் தாகூர். தேசியப் பாடலை எழுதியவர் பங்கிம் சந்திர சட்டர்ஜி. தேசிய கீதம் 19ம் நுõற்றாண்டில் எழுதப்பட்டது. தேசிய பாடல் 18ம் நுõற்றாண்டில் எழுதப்பட்டது. இந்திய அரசியலமைப்பு குழு 1950 ஜனவரி 24 ல் ‘ஜன கண மன’ பாடலை நாட்டின் தேசிய கீதமாக அங்கீகரித்தது. 1911 டிசம்பர் 27ல் கோல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாகப் பாடப்பட்டது. 1912ல் தாகூரின் ‘தத்துவ போதினி’ பத்திரிகையில் பாரத விதாதா என்னும் தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டது. இந்த பாடலை ஏறக்குறைய 52 விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும். தேசிய கீதத்தை விட ‘வந்தே மாதரம்’ எனத் தொடங்கும் தேசியப்பாடல் பழமையானது. 1882 ல் பங்கிம் சந்திர சட்டர்ஜியின் ‘ஆனந்த மடம்’ நுõல் வெளியானது. எனவே அதற்கு முன்பே இது எழுதப்பட்டிருக்க வேண்டும். 1896 ல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இது முதன்முதலாகப் பாடப்பட்டது. இதற்கு இசையமைத்தவர் ரவீந்திர நாத் தாகூர். ******************* மார்ச்2 இந்தியாவின் முதல் தியேட்டர், முதல் திரைப்படம் எது? - டி.சி.சிவசண்முகம், அங்கம்பாக்கம். இந்தியாவில் தயாரான முதல் படம் ‘அரிச்சந்திரா’ 1913ல் வெளிவந்தது. மேல் நாட்டில் தயாரான ஊமைப்படங்கள், இந்தியாவிலும் திரையிடப்பட்டன. இந்தியாவில் ரிலீஸ் செய்யப்பட்ட முதல் திரைப்படத்தின் பெயர் ‘ஏசுவின் வாழ்க்கை.’ இந்த ஊமைப்படம், 1896ம் ஆண்டு மும்பையில் திரையிடப்பட்டது. இந்தப் படத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர் டுபான்ட் என்ற பிரெஞ்சுக்காரர். அவர், இந்தியாவில் ஒவ்வொரு நகரமாக அந்த பிலிம் பிரதியைக் கொண்டு வந்து திரையிட்டார். டுபான்ட், திருச்சிக்கு வந்து அப்படத்தை திரையிட்டார். அங்கு அப்படத்துக்கு ஏக வரவேற்பு. டுபான்டிடம் இருந்து ரூ.2 ஆயிரம் கொடுத்து ‘ஏசுவின் வாழ்க்கை’ திரைப்பட பிரதியையும், படம் காட்டும் கருவியையும் வின்சென்ட் என்பவர் வாங்கிக்கொண்டார். வசூல் குவிந்தது. வடநாட்டுக்கும் சென்று, இப்படத்தை திரையிட்டார். இதற்கிடையே, மேல் நாட்டில் இருந்து மேலும் பல சார்லி சாப்ளின் படங்களும் வரலாயின. இதனால் படங்களைத் திரையிட வின்சென்ட், அவருடைய சொந்த ஊரான கோவையில் 1914ம் ஆண்டு நிரந்தர சினிமா கொட்டகையை கட்டினார். அந்த தியேட்டரின் பெயர் ‘வெரைட்டி ஹால்.’ தென் இந்தியாவின் முதல் நிரந்தர சினிமா கொட்டகை இதுதான். இப்போது ‘டிலைட்’ என்ற பெயரில் உள்ளது. இதன்பின் சென்னையிலும், மற்ற இடங்களிலும் தியேட்டர்கள் தோன்றின. சென்னையில் கட்டப்பட்ட முதல் தியேட்டர் ‘கெயிட்டி’. *இரும்பு சத்தின் அவசியம் என்ன, அதிகம் சேர்ந்தால் உயிருக்கு ஆபத்தா? - வை. காமாட்சி, திருவிடைமருதுõர். இரும்பு சத்து குறைவால் வரும் நோய்கள் தான், உலகில் உண்ணும் பழக்கத்தால் வரும் நோய்களில் முதன்மையானவை என்று உலக சுகாதார மைய தகவல்கள் கூறுகின்றன. உலகின் 80% மக்கள் இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் என்றும், அதில் 30% மக்கள் இரும்பு சத்து குறைவால் வரும் ரத்தசோகை கொண்டவர்கள் என்றும் கூறுகிறார்கள். பெரும்பான்மையான புரதங்கள், நொதியங்கள் போன்றவற்றிற்கு இரும்புசத்து ஒரு இன்றியமையாத மூலப்பொருள். ஆக்சிஜனை ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு உடலில் எடுத்து செல்லும் ஹீமோகுளோபின், மயோகுளோபின் என்பவற்றின் உள்ளடக்கமாக இரும்பு சத்து உள்ளது. உடலில் மூன்றில் இரண்டு பகுதி இரும்பு சத்து ஹீமோகுளோபின் ஆக ரத்தச் சிவப்பணுக்களில் இருக்கிறது. இவை ஆக்சிஜனை திசுக்களுக்கு எடுத்து செல்லும். அதேபோல தசைகளில் உள்ள மயோகுளோபின் என்பது ஆக்சிஜனை தசைகளுக்கு மாற்றும். உயிரணுக்களின் பெருக்கம், வளர்ச்சி போன்றவற்றிற்கு இரும்பு சத்து முக்கியமான மூலப்பொருள். இரும்புச்சத்து குறைவால் போதிய ஆக்சிஜன் இல்லாமல் தளர்ச்சி, வேலை செய்ய திறமை இல்லாமை, நோய் எதிர்ப்பாற்றல் முறையில் குறைபாடு ஏற்படும். ஒரு நாளைக்கு எவ்வளவு இரும்பு சத்து அவசியம்? மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட மூன்று வகையான அளவு உண்டு. ஒன்று போதுமான அளவு. இரண்டாவது அதிகமான அளவு. மூன்றாவது இதற்கு மேலே இருந்தால் நச்சுப்பொருளாக மாறிவிடக்கூடிய அபாயத்தைக் குறிக்கும் அளவு என்று உள்ளது. * சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள்? - ஆர். ஸ்ரீநிஜா, ஸ்ரீரங்கம் சாம்பிராணியானது பாஸ்வெல்லியா செர்ராட் எனப்படும் தாவர குடும்பத்தை சேர்ந்த பிரங்கின்சென்ஸ் எனப்படும் மரத்திலிருந்து வடியும் பால் ஆகும். இது மிக மெதுவாக கடினமாகி ஒளிபுகும் தன்மையும் எளிதில் எரியும் தன்மையுடைய சாம்பிராணியாக மாறுகிறது. இவை எரிந்தால் மிகுந்த மணத்தை பரப்பும். பிரங்கின்சென்ஸ் மரங்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவில் குஜராத், அஸ்ஸாம், ராஜஸ்தான், பீகார், ஒரிசா மற்றும் தமிழகத்தில் கல்வராயன், சேர்வராயன் மலைச்சரிவுகளில் அதிகம் காணப்படுகிறது. சாம்பிராணியிலிருந்து ஒருவகை எண்ணை எடுக்கப்படுகிறது. அந்த எண்ணையிலிருந்து வார்னிஷ் மற்றும் சோப்பு உருவாக்கப்படுகிறது. ******************** மார்ச்16 பிக் பேங் தியரி என்பது என்ன? விளக்கம் சொல்லுங்க அங்கிள்! - ஜி. ஸ்ரீநிதி, ஸ்ரீரங்கம் பெரு வெடிப்புக் கோட்பாடு என்பது இதன் பொருள். உலகம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடு. இதுவரை முன்வைக்கப்பட்ட உலகின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது இதுதான். இந்தக் கோட்பாடு 20ம் நுõற்றாண்டுத் தொடக்கத்தில் வெளியான இரண்டு முக்கிய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் உருவானது. ஒன்று ஐன்ஸ்டீனுடைய பொதுச்சார்புக் கோட்பாடு, மற்றது அண்டவியற் கொள்கை. பொதுச்சார்புக் கோட்பாடு, உலக வெளியில் உள்ள பொருட்களிடையே காணப்படும் ஈர்ப்புத் தோற்றப்பாடானது மேற்படி பொருட்களின் திணிவுகளினால் பாதிக்கப்பட்டு வெளியும், காலமும் திரிபடைந்த ஒரு நிலையே என்று கூறுகின்றது. உலக வெளியில் உள்ள பொருள்கள் வெளியில் ஒரே சீராகப் பரவியிருக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டது அண்டவியற் கொள்கை. பெரு வெடிப்புக் கொள்கையின்படி உலக வெளியில் உள்ள பொருட்கள் அனைத்தும் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மிக அதிகமான அடர்த்தியுடன் கூடிய, சிறிய அளவிலான தீப்பிழம்பாக இருந்திருக்கிறது. இன்று அறியப்படுகின்ற உலகத்திலுள்ள பொருட்கள் அனைத்தும் சில மில்லி மீட்டர்கள் அளவுக்குள் அடங்கி இருந்திருக்கும் எனக் கணிப்பிடப்படுகின்றது. இத்தீப்பிழம்பானது, இன்று அறியப்படாத ஏதோ ஒரு காரணத்தினால் மிக வேகமாக விரிவடையத் தொடங்கிற்று. இதுவே பெரு வெடிப்பு எனப்படுகின்றது. ஒவ்வொரு விநாடியும் பல மடங்காக இவ் விரிவாக்கம் நடந்ததாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு விரிவடைந்தபோது வெப்பம் தணிந்த வாயுக்கள் ஆங்காங்கே நட்சத்திரக் கூட்டங்களாக உருவாகி இருக்கக்கூடும் என அவர்கள் கூறுகிறார்கள். * பனை வெல்லம் எப்படி தயாரிக்கப்படுகிறது? - கணேசன், காரைக்கால். கரும்பு அல்லது பனையிலிருந்து வெல்லம் தயாரிக்கப்படுகிறது. கரும்புச் சாறோ பனம்பாலோ ஒரு பெரிய அகண்ட வாணலியில், திறந்தவண்ணம், 200 டிகிரி சென்டிகிரேட் சூட்டில் வெகு நேரம் கொதிக்க வைக்கப்படுகிறது. இதனால் கரும்புச்சாறில் அல்லது பனம்பாலில் உள்ள நீர் ஆவியாகி பாகு போன்ற பதம் பெறப்படுகிறது. கொதி நிலையில் உள்ள பாகை அச்சில் ஊற்றி, உலர வைத்த பின், வெவ்வேறு வடிவங்களில் விற்பனை செய்யப்படுகிறது. கைகளால் பிடித்து உருட்டப்பட்ட வெல்லம், மண்டை வெல்லம் எனவும் அச்சுக்களில் ஊற்றி வடிவமைக்கப்பட்ட வெல்லம், அச்சு வெல்லம் எனவும் அழைக்கப்படுகிறது. * அங்கிள்,கோபப்படும்போது சிலருக்கு கண்கள் சிவப்பது ஏன்? - எஸ். செந்தில்குமார், தண்டராம்பட்டு. செந்தில், உங்கள் கேள்விக்கான பதில் இதோ! நம் உடலில் அட்ரினலின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் அவசர காலத்தில் அதாவது சண்டையிடுதல்,கோபப்படுதல், பயப்படுதல், ஓடுதல், அதிக எடையுள்ள பொருட்களை மூச்சைப் பிடித்து துõக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடும்போது, அதிக அளவில் ரத்தத்தில் இருந்து விடுவிக்கப்படுகின்றது. இதன் விளைவாக நம் உடல் துரிதமாக செயல்படும். அப்போது இதயத்துடிப்பு அதிகரிக்கும். ரத்தக்குழாய்கள் சுருங்கி, அழுத்தம் அதிகரிக்கும். இந்த சமயத்தில் காதுமடல், கண், மூக்கு நுனி, முகப்பரு அனைத்தும் சிவப்பேறி காணப்படும். ****************** மார்ச்9/ பேஸ் புக் என்றால் என்ன? - ஏ. முத்து, வாழைப்பந்தல். பேஸ்புக் 2004ல் தொடங்கப்பட்ட இணையவழி சமூக வலையமைப்பு. 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களின் பெயரைப் பதிவு செய்து கொண்டு பேஸ்புக்கில் உள்ள மற்றவர்களை நண்பர்களாக்கிக் கொண்டு தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம். இதை மார்க் சக்கர்பர்க் தன் நண்பர்களான எடுடாரோ சாவ்ரின், டஸ்டின் மாஸ்கோவிட் போன்ற ஹார்வர்ட் பல்கலை நண்பர்களுடன் தொடங்கினார். பிறகு ஐவி லீக், ஸ்டான்போர்டு பல்கலைக்கழக மாணவர்களும் பேஸ்புக்கில் சேர்ந்தனர். 2008ல், பேஸ்புக்கின் தலைமையகம் அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் தொடங்கப்பட்டது. 2010ல், பேஸ்புக்கின் மதிப்பு 41 மில்லியன் டாலராக உயர்ந்து, கூகுள் , அமேசானைத் தொடர்ந்து அமெரிக்காவின் மூன்றாவது பெரிய இணைய தள நிறுவனமாக உயர்ந்தது. 2011ல் பேஸ்புக் தலைமையகம் மென்லோ பார்க், கலிபோர்னியாவிற்கு மாற்றப்பட்டது. பேஸ்புக் உபயோகிப்பாளர்கள் தங்களுடைய புகைப்படம், சொந்த விருப்பங்கள், தொடர்பு கொள்ளும் விவரம் போன்ற தகவல்களைக் கோப்புகளாக இத்தளத்தில் பதிவு செய்யலாம். ஏப்ரல் 2011ல் பேஸ்புக்கில் அரட்டை அடிப்பதை நேரடிக் குரல் அழைப்பு மூலம் உலகெங்கும் உள்ள நண்பர்களுடன் பேசும் முறை கொண்டு வரப்பட்டது. ஜூலை 2011ல், ஸ்கைபை என்ற நிறுவனத்தின் உதவியுடன் நேரடி ஒளிப்பதிவாக ஒருவருக்கொருவர் பேசுவதைப் பார்க்கும் முறையைக் கொண்டு வந்தனர். * கரப்பான் பூச்சிக்கு ரத்தம் வெள்ளையாக இருக்கும் என்பது உண்மையா? - ரா. வீரபாண்டியன், புதுக்கோட்டை. ஆமாம்! கரப்பான் பூச்சிகள் எதையும் உண்ணக் கூடிய ஒரு அனைத்துண்ணி இனம். இதன் உடலில் ஓடும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் இல்லாததால் இவற்றின் ரத்தம் வெள்ளை நிறமாக இருக்கும். * நாம் துõங்கும் போது ஏன் கனவு வருகிறது? கனவு பற்றிய நம்பிக்கைகள் உண்மையா? - கே. விக்னேஷ், ஆரணி. கனவு என்பது மனிதனின் துõக்கத்தில் உலாவரும் உள்மன வெளிப்பாடு. கனவு காணாத மனிதனே இல்லை என்னும் அளவிற்கு மனிதனின் இயல்பான செயலாய் இது இருக்கிறது. கனவு என்பது ஒருவர் துõங்கும் பொழுது அவரது மனத்தில் எழும் மனப் படிமங்கள், காட்சிகள், ஓசைகள், உணர்வுகள், நிகழ்வுகளைக் குறிக்கிறது. ஒருவர் கனவு காணும் பொழுது அவரது கண்களின் அசைவுகள் காணப்படுவதும் உண்டு. கனவு என்றால் என்ன என்பது தொடர்பாக இதுவரை ஒரு நிச்சயமான அறிவியல் புரிதல் இல்லை. இருப்பினும், வாழ்வில் பின்னர் நிகழப்போவதைக் குறிப்பால் உணர்த்தும் ஒன்றாகக் கனவு நம்பப்படுகிறது. கனவில் வரும் நிகழ்வின் அடிப்படையில் நல்ல கனவு, கெட்ட கனவு என்றும் கருதப்படுகிறது. கனவில் நல்லது நிகழ்ந்தால் வாழ்க்கையில் அதற்கு நேர்மாறாகத் தீயது நடக்கும். கனவில் தீயது நிகழ்ந்தால் வாழ்க்கையில் நல்லது நடக்கும். இது கனவு நம்பிக்கைகளுக்கு மட்டுமே உரிய சிறப்புத் தன்மை. இப்படி நாட்டுப்புற மக்களிடம் கனவு குறித்த நம்பிக்கைகள் நிறைய காணப்படுகின்றன. கனவு நிகழ்வுகளோடு நனவு நிகழ்வுகளைப் பொருத்திப் பார்த்து வியந்து பேசும் வழக்கமும் மக்களிடம் உள்ளது. உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டின் கனவுகள் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார். கனவு பற்றிய நம்பிக்கைகள் சில: ஏர் உழுவதாகக் கனவு கண்டால் எடுத்த காரியங்கள் தாமதமாகும். திருமணம் பற்றிக் கனவு கண்டால் தீயது நடக்கும். கனவில் தாமே இறந்துவிட்டதாகக் கனவு கண்டால் ஆயுள் பெருகும். மரணத்தைக் கனவில் கண்டால் சுகமாகும். இறந்தோர் கனவில் வந்து அழைத்தால் மரணம் வரும். அதிகாலையில் காணும் கனவு பலிக்கும். ****************** குட்டீஸ் கேள்வி பதில் மார்ச்23 *அக்னி நட்சத்திரம் என்றால் என்ன? - எம். நிகேஷ் குமார், காட்டூர். பொதுவாக சித்திரை, வைகாசி மாதங்களில் பூமிக்கும், சூரியனுக்கும் இடைப்பட்ட துõரம் சற்று குறையும். அதனால் சூரியனிடம் இருந்து வரும் கதிர் வீச்சு பூமியில் செங்குத்தாக விழும். இதனால் சாதாரண நாட்களை விட இந்த இரு மாதங்களில் பூமியில் சூரிய வெப்பம் சற்று கூடுதலாக இருக்கும். பெரும்பாலும் சித்திரை மாத இறுதி பத்து நாட்களும் வைகாசி மாத முதல் பத்து நாட்களும் இணைந்த கடும் கோடை பகுதியாகும். இந்நாட்களில் முதல் ஏழு நாட்கள் சுமாராகவும் இடையில் ஏழு நாட்கள் மிக அதிகமாகவும் கடைசி ஏழு நாட்கள் சுமாராகவும் வெப்பம் தகிக்கும். இப்படி தகிக்கும் காலத்தை அக்னி நட்சத்திர காலம் என்பது நடைமுறை. இந்த ஆண்டு மே 3ம் தேதியிலிருந்து மே 28ம் தேதி வரை அக்னி நட்சத்திர காலமாகும். *பனி மழை பொழிவது எப்படி? - எஸ். சரண்குமார், கோபி. வானத்தில் வெப்பநிலை மிக குறைவாக இருக்கும் போது மழை பனியாகிறது. அந்தப் பனி பூமி வரும் வரை வெப்பநிலை குறைவாகவே இருந்தால் மழை பனியாக பொழிகிறது. வெப்பநிலை, நீர் உறையும் அளவோ, அதைவிட குறைவாகவோ (மைனஸில்) இருந்தால் மழை பனியாக பொழிய வாய்ப்புண்டு, இந்த வெப்பநிலை கூணூணிணீணிண்ணீடஞுணூஞு முழுவதும் நிலவ வேண்டும் . மேலே சொன்ன அதேப்பனி காற்று மண்டலத்தில் ஏற்படும் வெப்ப மாற்றம் காரணமாக சிறு பனி கட்டி மழையாக பெய்யும். பனியாக ஆரம்பிக்கும் மழை காற்றில் புகுந்து பூமிக்கு வரும் வழியில், காற்று மண்டலத்தில் எங்காவது வெப்பம், உறையும் வெப்ப நிலையை விட அதிகமாக இருக்கும் போது மீண்டும் நீராகி, நிலத்தை நெருங்கும் முன் மீண்டும் குறைந்த வெப்பம் காரணமாக சிறு ஐஸ் கட்டிகளாக விழும். இந்த கட்டிகள் சிறு கற்கண்டு அளவிலோ இல்லை அதை விட கொஞ்சம் பெரியதாகவோ இருக்கும். * விமானம் பறப்பது எவ்வாறு என்பதை விளக்குங்க. - ஆர். கோகுல், பாலா, பள்ளூர். ஒரு பறக்கும் பொருளில் நான்கு விதமான விசைகள் உண்டு. < அவை மேல்நோக்கி இழுக்கும் லிப்ட், முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட், கீழ்நோக்கி இழுக்கும் எடை , பின்னோக்கி இழுக்கும் டிராக். ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க வெயிட்= லிப்ட் டிராக்= த்ரஸ்ட் சமமானதாக இருக்க வேண்டும். த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும். டிராக், த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும். விமானத்தின் எடை, லிப்ட் விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும். விமானத்தின் லிப்ட் விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும். விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது விமானத்தின் எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை. விமானத்தின் மேல் நோக்கு துõக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணி . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் துõக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது. ஒரு டெயில் பீஸ்: இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி விண்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது ******************** மார்ச்30/ *உலகின் மிக நீளமான பாம்பு எது, எங்கு உள்ளது? - கே. எழிலரசன், ஆற்காடு. உலகில் இப்போது உயிருடன் உள்ள பாம்புகளில் மிக நீளமான பாம்பு என்ற சாதனையை, அமெரிக்காவின் ஓகைய்யோ மாநிலத்தின் தலைநகரான கொலம்பஸ்சில் (இணிடூதட்ஞதண் -Oடடிணி) உள்ள மிருகக்காட்சி சாலையில் வளர்க்கப்பட்டு வரும் ஒரு மலைப்பாம்பு பெற்றுள்ளது. இந்தப் பாம்பு 300 பவுண்டு எடையும், 24 அடி நீளமும் கொண்டதாக காணப்படுகிறது. 15 வயதுடைய இந்த மலைப்பாம்பு ஊடூதஞூஞூதூ என அழைக்கப்படுகிறது. கடந்த 2005ம் ஆண்டில் உலகின் மிக நீளமான பாம்பாக 32 அடி நீளம் கொண்ட ஒரு மலைப்பாம்பு காணப்பட்டது. இந்தப்பாம்பு இந்தோனேசியாவில் கொல்லப்பட்டது. இதன் பின்னர் உலகில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் மிக நீளமான பாம்பு என்ற சாதனை இந்தப் பாம்புக்கு கிடைத்துள்ளது. இது 2011ம் ஆண்டிற்கான உலகசாதனை புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. *மருந்து சீட்டுகளில் ஆர்எஸ் என குறிப்பிடுவதேன்? - ராம. மம்தாராம், டால்மியாபுரம். சமீபத்தில் டாக்டரை பார்த்து வந்திருக்கீங்களா மம்தாராம்? இப்ப உங்க ஆரோக்கியம் எப்படி இருக்கு? சரி, நீங்கள் கேட்ட சந்தேகத்திற்கு வருகிறேன். பொதுவாக எல்லா டாக்டர்களும், தாங்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை எழுதும் சீட்டில் கீது என்று எழுதுவது வழக்கம். சில டாக்டருடைய மருந்து சீட்டில் கீது அச்சிடப்பட்டிருக்கும். உயிர் காக்கும் மருத்துவம், தொழில் மட்டுமல்ல அது... கடவுளுக்கு நிகரானவர்களாக டாக்டர்களை ஜீபிடர் கடவுளாக பாவித்தனர் பண்டைய ரோமானியர்கள். கீ என்பது லத்தீன் சொல்லான ணூஞுஞிடிணீணூஞு என்பதிலிருந்து வருகிறது. அதாவது, இதை பரிந்துரைக்கிறேன் எடுத்து கொள்ளலாம் என்பதாகும். சின்ன து, கடவுளின் அரசர் அதை ஏற்பதற்கான குறீயீடு. அதாவது அந்த ஜீபிடர் கடவுளே மருத்து சீட்டை எழுதுவதாகும். அவரின் கருணையோடு நோய் குணமாகும் என்பது அவர்களது ஐதீகம். இது இன்று வரை தொடர்ந்தும் வருகிறது. * அமரர் கல்கி பற்றி சொல்லுங்க அங்கிள்! -எம். நிகேஷ்குமார், காட்டூர் புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் கல்கி. இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள் , கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நுõல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகவும் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமிபுதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. கல்கி, 1899ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புட்டமங்கலம் என்னும் ஊரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பப் பள்ளி படிப்பைத் தனது கிராமத்தில் முடித்த அவர், திருச்சியில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். ஒத்துழையாமை இயக்கம் துவங்கிய போது, அதன் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட கல்கி, தனது பள்ளிப்படிப்பைப் பாதியில் துறந்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். அவர், ‘நவசக்தி’ என்னும் பத்திரிகையின் துணை ஆசிரியராக பணியாற்றினார். அவருடைய முதல் புத்தகம் 1927ல் வெளியானது. சமஸ்கிருதமும், தியாகராஜரின் தெலுங்கு கீர்த்தனைகளும் பிரபலமாக இருந்து வந்த அக்காலக்கட்டத்தில் தமிழிசைக்காக, சதாசிவம் மற்றும் எம். எஸ். சுப்புலட்சுமியுடன் இணைந்து பாடுபட்டார் கல்கி. தமிழ் இசை குறித்த கல்கியின் சிந்தனைகள், ‘தரம் குறையுமா’ எனும் புத்தக வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. ************** * கூடங்குளம் அணு உலை வி.வி.இ.ஆர் 1000 தொழில் நுட்பம் கொண்டது என்று படித்தேன். அதுபற்றி விளக்குங்க அங்கிள்! - எஸ். திலகவதி, திருவாரூர். நல்ல கேள்வி கேட்டு இருக்கீங்க. சபாஷ்! கூடங்குளம் அணு உலை ரஷ்ய நாட்டின் வி.வி.இ.ஆர் 1000 என்ற தொழில் நுட்பத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. இதில் யுரேனியம் என்ற தனிமம் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் அணு பிளக்கப்படும் போது 2000 டிகிரி செல்சியஸ் வெப்பம் உருவாகிறது. இது நீரின் கொதி நிலையான 100 டிகிரி செல்சியஸ்-ஐ விட 20 மடங்கு அதிகம். இந்த வெப்பத்தைப் பயன்படுத்தி நீராவி உருவாக்கப்பட்டு, அந்த நீராவி மூலம் டைனமோக்கள் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது. மிக அதிக வெப்பம் உருவாவதால், இந்த அணு உலையைக் குளிர்விக்க கடலிலிருந்து நீர் பெறப்பட்டு, சுத்திகரித்து உப்பு அகற்றி, நன்னீராக மாற்றி இந்த உலையில் பயன்படுத்தப்படுகிறது. விவிஇஆர் 1000 என்ற தொழில் நுட்பத்தை தமிழில் நீர்-நீர் ஆற்றல் அணுஉலை என்று கூறலாம். ஙணிஞீணி-ஙணிஞீதூச்ணணிடி உணஞுணூஞ்ஞுtடிஞிடஞுண்டுதூ கீஞுச்ஞிtணிணூ; ஙிச்tஞுணூ-ஙிச்tஞுணூ உணஞுணூஞ்ஞுtடிஞி கீஞுச்ஞிtணிணூ என்பதின் சுருக்கம் தான் விவிஈஆர் (ஙஙஉகீ) அல்லது ஙிஙிஉகீ. இந்த தொழில் நுட்பம் அழுத்த நீர் அணுஉலை வடிவமைப்பில் அமைந்த ரஷ்ய அணுக்கரு உலைகளாகும். முன்னாள் சோவியத் யூனியன், இந்நாள் ரஷ்யாவில் உள்ள ஓகேபி கிட்ரோபிரெஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டவை. இவற்றின் ஆற்றல்திறன் 440 Mஙிஞு முதல் 1200 Mஙிஞு வரை உள்ளன. இவ்வகை அணுமின் நிலையங்கள் ஆர்மீனியா , பல்கேரியா , சீனா , செக் குடியரசு, பின்லாந்து , அங்கேரி, இந்தியா, ஸ்லோவேக்கியா , உக்ரைன், மற்றும் ரஷ்யக் கூட்டமைப்பு நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. விவிஈஆர்-1000 தொழில் நுட்பம் 1975ம் ஆண்டில் உருவாக்கப்படது; இதில் கதிர்வீச்சுக் காப்புக் கட்டிடத்தில் நான்கு சுற்று அமைப்பும் நீராவி தெளிப்பு அடக்கு முறைமைகளும் இருந்தன. மேலும் மேற்கத்திய மூன்றாம் தலைமுறை அணுக்கரு உலைகள் போன்று தானியங்கி கட்டுப்பாடு, இயக்கியற்ற பாதுகாப்பு மற்றும் காப்புக் கட்டிட அமைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. *கங்காரு எவ்வளவு நாட்கள் குட்டியை தன் பையில் வைத்திருக்கும்? - அ. முத்துமீனாள், திருச்சி. கங்காரு பாலுõட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. இவை பொதுவாக ஆஸ்திரேலியா மற்றும் அதன் அருகில் உள்ள தீவுகளில் காணப்படுகின்றன. இயற்கை அமைப்பின்படி கங்காரு குட்டி முழுமையாக வளர்ச்சியடைவதற்கு முன்பே பிறந்துவிடுகின்றது. மீதி வளர்ச்சி எல்லாம் கங்காருவின் வயிற்றுப் பகுதியில்தான் நடக்கும். குட்டி, பிறந்த உடனேயே வயிறு வழியாக ஊர்ந்து பைக்குள் வந்துவிடும். அம்மாவின் பாலைத்தவிர மற்ற உணவை செரிக்கக்கூடிய திறன் வரும்போதுதான் உட்கொள்ளும். இத்திறன் வரும் வரை குட்டி அம்மாவின் பைக்குள்ளேயே தான் இருக்கும். குட்டியின் உடற் பகுதிகள் எல்லாம் முழுமையாக வளர்ச்சியடைந்த பிறகுதான் கங்காரு, தன் குட்டியை கீழே இறக்கிவிடும். எப்போதாவது நரியோ, கழுகோ மற்ற விலங்குகளேமா பிடிக்க வரும்போது குட்டி ஓடி வந்து தன் தாயின் பைக்குள் ஒளிந்துகொள்ளும். குறைந்தது கங்காரு குட்டி ஒன்பது மாதங்கள் வரை தாயின் பையில் வளர்கிறது. பின்னர் தாயின் வயிற்று பையில் இருந்து வெளிவருகின்றது. குதிரை நின்று கொண்டுதான் துõங்குமாமே! உண்மையா? - எம். சுபலேகா, சத்தியமங்கலம். உண்மை தான்! குதிரைகள் எப்போதும் நின்றவாறேதான் துõங்கும். நின்று கொண்டே துõங்குவதால் அவற்றின் உறுதியான கால் தசைநார்கள் களைப்படைந்து போகும் நேரத்தில் அவை சுதாரித்துக் கொண்டு விடும். குதிரைகள் நின்றுகொண்டே துõங்கினால்தான் அவைகளுக்கு நிம்மதியான துõக்கம் கிடைக்கிறது என்று விலங்கியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ********************* ஏப்ரல்13/ *கப்பல் மிதப்பது எப்படி? - ரா. வீரபாண்டியன், புதுக்கோட்டை. கப்பல் தண்ணீரில் மிதப்பது ஆர்க்கிமடிஸ் விதி படியாகும். ஒரு கப்பல் தண்ணீரில் இருக்கும்போது அதன் உடற்பகுதி ஓரளவு வரை தண்ணீரில் அமிழ்ந்திருக்கும். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும் வரை அதன் உடற்பகுதி தண்ணீரில் அமிழும். 10 ஆயிரம் டன் எடையுள்ள ஒரு கப்பலின் உடற்பகுதி, அதே எடையுள்ள தண்ணீரை இடம்பெயரச் செய்யும். பொதுவாக ஒரு கப்பலின் எடையைக் கூறுவதற்கு, அது இடம்பெயரச் செய்யும் தண்ணீரின் எடையைக் கூறுகிறார்கள். அதாவது ஒரு கப்பலின் டிஸ்பிளேஸ்மென்ட் 10 ஆயிரம் டன் என்று கூறுவார்கள். அமிழ்ந்துள்ள கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் தண்ணீர் அழுத்துகிறது. தண்ணீரில் கிடப்பு நிலையில் இருந்து ஏற்படும் அழுத்தங்கள் கப்பலின் உடற்பகுதியை அழுத்துகின்றன. ஒன்றையொன்று அமிழ்த்தி சமநிலையை ஏற்படுத்துகின்றன. இதனால் கப்பல் தண்ணீரில் மிதக்கிறது. *சிவப்பு மலர் நீல நிறக்கண்ணாடியில் பார்த்தால் கறுப்பாகத் தோன்றுவது எவ்வாறு? சிவப்பு மலரிலிருந்து சிவப்பு ஒளிதான் வெளிப்படும். இந்த ஒளியை நீலநிறக்கண்ணாடி உட்கவர்ந்துவடும். ஏனெனில் நீலக்கண்ணாடி வழியாக நீலநிற ஒளி மட்டுமே ஊடுருவிச் செல்ல முடியும். சிவப்புநிற ஒளியை நீலநிறக்கண்ணாடி தடுத்துவிடுவதால் மலர் கருப்பாகத் தெரியும். *துõக்கத்தில் நடப்பது எப்படி? - ச. சரண்ராஜ், ஊத்துக்குளி. -வி. சுப்ரமணியம், பி. கொமாரபாளையம். துõக்கத்தில் மூன்று நிலைகள் இருக்கிறது. விழிப்பு நிலை, விழி அசைவுகளில்லாத துõக்க நிலை, விழி அசைவு துõக்க நிலை( இது பெரும்பாலும் கனவுகளுடன் தொடர்புடைய நிலை!). துõக்கத்தில் நடப்பது என்பது ‘மனிதர்களின் ஒருவகையான துõண்டப்பட்ட, குழப்பமான மனநிலை’ என மருத்துவர்கள் கருதுகிறார்கள். அறிவியல்பூர்வமா சொல்வது என்றால், துõக்கத்தில் நடப்பது விழிப்பு நிலை மற்றும் விழி அசைகளில்லாத துõக்க நிலையில் நடைபெறும் ஒரு செயல். சிலர் மட்டும் ஏன் துõக்கத்தில் நடக்கிறாங்க மத்தவங்க ஏன் நடக்கிறதில்லைங்கிற கேள்விக்கு இன்னும் திட்டவட்டமான பதில் இல்லை! பொதுவா துõக்கத்தில் நடப்பதற்க்கு, குடும்ப மரபணுவியல் சம்பந்தமான காரணங்களாக இருக்கலாமாம். பெரியவங்கள விட, குழந்தைங்கதான் பெரும்பாலும் துõக்கத்துல நடப்பாங்களாம். அதுக்கு காரணம், குழந்தைங்க துõங்கும்போது, ஆழமான விழி அசைவுகளில்லாத துõக்க நிலை நிலையில்தான் இருப்பாங்களாம். இந்த நிலையிலதான் துõக்கத்துல நடக்கிற செயல் நடக்கிறது. சரியான துõக்கமின்மை, ஜூரம், மன உளைச்சல், ஊக்க மருந்துகள் சாப்பிடுதல் காரணங்களால் துõக்கத்தில் நடப்பது சாத்தியமாகலாம். சரியான நேரத்தில் உறங்குவது, அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்காமல் இருப்பது. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உறங்குவது போன்றவற்றை கடைபிடித்தால் தவிர்க்கலாம். மிகவும் மோசமான நிலையில் உள்ளவர்களுக்கு மருந்துகளும் கொடுக்கப்படுகிறது! *லாப்ராடர் நாய் இனத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க, அங்கிள்! -ந. விக்னேஷ், வேலுõர். நாய் இனங்களில் லாப்ரடர் நாய் ஒரு வகை. கனடா, ஆஸ்திரேலியாவில் இந்த நாய்கள் மிக பிரபலம். ஆண் நாய் 27 முதல் 40 கி.கி எடையும் 56 முதல் 63 செ.மீ. நீளமும் கொண்டிருக்கும். பெண் நாய் 27 முதல் 35 கி.கி. எடையும் 54 முதல் 60 செ.மீ. நீளமும் கொண்டிருக்கும். கறுப்பு, மஞ்சள், சாக்லேட் நிறங்களில் இருக்கும். பழங்குடி இனத்தினர் வேட்டையாடுவதற்கும், மீன்பிடி தொழிலுக்கும் இந்த நாயை பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் நுரையீரல் புற்று நோயை கண்டறிய இவ்வகை நாய்களை பயன்படுத்தும் முயற்சிகளில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். ஜெர்மனியில் உள்ள ஸ்கில்லர் ஜோக் ஆஸ்பத்திரியின் நிபுணர்கள் இந்த ஆய்வு மேற்கொண்டனர். அவை தனது மோப்ப சக்தி மூலம் மனிதர்களின் மூக்கு வழியாக வெளியேறும் சுவாசத்தின் மூலம் நுரையீரல் புற்று நோயை கண்டறிய முடியும் என கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் நோய் அறிகுறி தொடங்கும் நிலையில் உள்ள 71 சதவீதம் பேரின் நுரையீரல் புற்று நோயை தெரிந்து கொள்ள முடியும். நுரையீரல் புற்று நோயை கண்டுபிடிக்க 2 ஜெர்மன்ஷெப்பர்டு, ஆஸ்திரேலியன் ஷெப்பர்டு, மற்றும் லாப்ராடர் ரக நாய்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். *********************** ஏப்20 *வாயில் உமிழ்நீர் சுரப்பது ஏன்? அதன் பயன் என்ன? - ஆர். ஸ்ரீஜா, ஸ்ரீரங்கம். புளிப்பு, இனிப்பு இவற்றின் சுவையை உணர்ந்தால் வாயில் உமிழ்நீர் தானாக ஊறும். உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகின்ற உணவுகளை சாப்பிட்டாலும் உமிழ்நீர் அதிகம் சுரக்கும். உமிழ்நீர் அதிக என்சைம்களைக் கொண்டது. இதில் ஆன்ட்டிபயாடிக் அதிகம் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உமிழ்நீர் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1,500 மி.லி. அளவு சுரக்கிறது. உமிழ்நீர் சுரப்பு அளவு உண்ணும் உணவின் அளவைப் பொறுத்தும் மன எண்ணத்திற்கும் ஏற்றவாறும் மாறுபடுகிறது. உமிழ் நீரின் முக்கிய பணி ஜீரணமாக்குவது. உணவை மெல்லும்போது உமிழ்நீர் உணவுடன் நன்கு கலந்து அதில் உள்ள என்சைம்கள் உணவின் நச்சுத்தன்மையைப் போக்கி உணவுக் குழலுக்குச் செல்ல ஏதுவாகிறது. மேலும் இதில் கலந்துள்ள நொதி உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. பொதுவாகவே அஜீரணம், வாந்தி, தலைச்சுற்றல் உண்டானால் கூட உமிழ்நீர் அதிகம் சுரந்து உடலை சீர்படுத்துகிறது. வாய்ப்புண்ணை ஆற்ற உதவுவதும் உமிழ்நீர்தான். * நட்சத்திரம் என்றால் என்ன? அவை எப்படி மின்னுகின்றன? - எம். கோகுல், பசுபதிபாளையம். நட்சத்திரம் என்பது பல வாயுக்கள் கலந்த மேகம் போன்ற ஒரு தொகுப்பு. இந்த மேகத்திற்குள் ஹைட்ரஜன் வாயு இருக்கும். வாயுத் துகள்கள் ஒன்றுடன் ஒன்று கொஞ்சம் கொஞ்சமாக இணைந்து ஒரு பெரிய வாயுக் கூட்டமாக மாறிவிடும். அதன் அளவு கூடும்போது வெப்பமும் கூடுகிறது. அது ஒரு வெடிகுண்டைப்போல வெடிக்கும் வரை சேர்ந்துகொண்டே இருக்கும். அது வெடிக்கும்போது, எரியும் தன்மைகொண்ட ஹீலியம் வாயு வெளியிடப்படும். நட்சத்திரங்கள் வெளியிடும் ஒளியும் வெப்பமும் மிக நீண்ட தொலைவைக் கடந்து வருகின்றன. அப்படி வரும்போது மிகச் சொற்பமான வெளிச்சமே தொடர்ச்சியாக நம்மை வந்தடைகிறது. அப்படி, நம்மை வந்தடையும் முன் பூமியின் வளி மண்டலம் வழியாக அந்த ஒளி பயணிக்கிறது. வளி மண்டலத்தில் உள்ள துõசுகள் அவ்வப்போது அந்த ஒளி பயணிக்கும் பாதையின் இடையே செல்கின்றன. எனவே நட்சத்திரங்கள் சில நேரம் நமக்குத் தெரிகின்றன. துõசு அதிகமாக இருக்கும்போது தெரிவதில்லை. இது வேகமாகவும் தொடர்ந்தும் மாறி மாறி நடப்பதால்தான் நட்சத்திரங்கள் மின்னுவதுபோன்ற ஒரு மாயத் தோற்றம் ஏற்படுகிறது. நட்சத்திரம் எல்லா நேரமும் மின்னுவதில்லை. மேலும் சில நட்சத்திரங்கள் எப்போதுமே மின்னுவதில்லை. இதற்குக் காரணம் அவை நட்சத்திரங்கள் அல்ல, கோள்கள். கோள்கள் மின்னுவதில்லை. *செல்போனில் புளுடூத் என்ற ஒன்று இருக்கிறதே, புளுடூத் என்றால் என்ன? - அ.தனுஷ், பள்ளூர். புளுடூத் தொழில் நுட்பம் செயல்படும் விதத்திற்கும், இந்த பெயர் தரும் பொருளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. டென்மார்க், ஸ்வீடன், நார்வே மற்றும் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கினார்கள். இந்த விஞ்ஞானிகளுக்கு சரித்திரத்தில் புகழ் பெற்ற டென்மார்க் அரசர் மீது மதிப்பும், மரியாதையும் பிரியமும் இருந்தது. அந்த மன்னர் பெயர் ஹெரால்ட் புளுடூத். அவரின் நினைவாகவே இந்த தொழில் நுட்பத்திற்கு புளுடூத் எனப் பெயரிட்டனர். அவர் அப்படி என்ன சாதனை செய்தார்? என்று கேள்வி எழுகிறதா, தனுஷ்? 900ம் ஆண்டில் ஹெரால்ட் புளுடூத் மன்னர் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும் நார்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்தார். பின்னர், கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார். 986ல் போரில் மரணமடைந்தார். நாடுகளை இணைத்தது, கிறித்தவ மதத்தை அறிமுகப்படுத்தியது, நினைவுச் சின்னம் அமைத்தது போன்ற செயல்களால் புகழடைந்தார். *********************** *அணில் ஏன் தன் முன் பற்களைக் கொரித்துக்கொண்டே இருக்கிறது? - ம. முரளிதரன், மல்லசமுத்திரம். அணில்கள் கொரிக்கும் பாலுõட்டி இனத்தை சேர்ந்தவை. இதன் வாயின் முன்பக்கத்தில் மேலும் கீழுமாக இரண்டிரண்டு உளிப்பற்கள் இருக்கும். இவை தினமும் வளரும். அதனால் கடின ஓடுகள், மரக் கிளைகள் இவைகளை எலிகளைப் போலவே துருவும். எதுவும் கிடைக்கவில்லை என்றால், மேலும் கீழுமாக அதுவே பற்களை அரைத்துக் கரைத்துக் கொள்ளும். இப்படிப் செய்யவில்லையாயின் உளிப்பற்கள், நீளமாக வளர்ந்து எதுவும் சாப்பிட முடியாமல் இவை இறந்து விடும். உலகெங்கிலும் 250வகையான அணில்கள் உள்ளன. ஆஸ்திரேலியா, அண்டார்டிகா பகுதிகளில் இவை காணப்படுவதில்லை. மர அணில் ,தரை அணில், பறக்கும் அணில் போன்றவை நாம் அன்றாடம் பார்க்கும் வகைகளில் சில. ஆப்ரிக்க பிக்மி அணில்கள் உருவில் மிகச் சிறியவை. இவை 7 முதல்10 செ.மீ நீளமும், 10 கிராம் எடையும் கொண்டவை. நீர் நாய் வகை அணில்கள் 5 முதல் 8 கிலோ எடையும், 50--70 செ.மீ நீளமும் கொண்டதாக உள்ளன. *இடிதாங்கி பற்றி விளக்கமா சொல்லுங்க அங்கிள்! - ஏ. சந்திரசேகர், பசுபதிபாளையம். இடிதாங்கி என்பது கட்டடத்தின் உயர்ந்த பகுதியில் இடி, மின்னல் தாக்காமல் இருப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட கருவி. இதன் முனைப்பகுதி காந்தச் சக்தியால் ஆனது. இந்தக் கருவியைக் கட்டடத்தின் உயர்ந்த பகுதியில் வைத்து தடித்த காப்பர் பட்டையின் மூலம் பூமியில் எர்த் செய்து விடுவார்கள். இடி தாக்கும்போது இடிதாங்கி, மின்னலை ஈர்த்து பட்டை வழியாக பூமியைச் சென்றடைய செய்கிறது. இதனால், கட்டடங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அதோடு சேர்ந்து நாமும் பாதுகாக்கப்படுகிறோம். இடி, மின்னலில் உண்டாகும் மின்சாரம் பல லட்சக்கணக்கான வோல்ட் அழுத்தமுடையது. இந்த உயர்ந்த அழுத்த மின்சாரம் நம்மையும், கட்டடங்களையும் தாக்குவதால் பேரிழப்பு ஏற்படுகிறது. இடிதாங்கி கூர்மையான அம்பு போன்ற அமைப்பு உடையதாகக் காணப்படுகிறது. கூர்மையானப் பகுதியில் எலக்ட்ரான், புரோட்டான்கள் மிக வேகமாக தயார் நிலையில் இருக்கும். தட்டையான வடிவமுடையதாக இருந்தால் எலக்ட்ரான், புரோட்டான் சிதறிய நிலையில் காணப்படும். இடி தாக்கும்போது இடிதாங்கி கூர்மையான பகுதியாக இருந்தால் எலக்ட்ரான், புரோட்டான்கள் வேகமாக செயல்பட்டு தன்னகத்தே இழுத்து பூமிக்குச் செலுத்த வசதியாக இருக்கிறது. அதனால்தான் கூரிய அமைப்பைக் கொண்டதாக இடிதாங்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. *சோலார் சக்தி, அதில் இயங்கக்கூடிய மின்சாதனங்கள் எவை பற்றி கூறுங்கள். -ஆர். சண்முகம், ராமநந்தீஸ்வரம். மின்சாரத்துக்கு மாற்றாக சோலார் பவர் பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டில் 300 நாட்கள் சூரிய ஒளி கிடைக்கிறது. இப்படிக் கிடைக்கும் அபரிமிதமான சூரிய சக்தியைக் கொண்டு ஆண்டு முழுவதும் தடை இல்லாமல் மின்சாரம் கிடைக்கும்படி செய்யலாம். ஆனால் நம் நாட்டில் ஒரு சதவிகிதம் சூரிய சக்தியைத்தான் உபயோகிக்கிறோம். சூரிய சக்தியைக்கொண்டு நாம் மிகப் பெரிய அளவில் மின்சாரம் தயாரிக்கலாம். நாட்டிற்கும் வீட்டிற்கும் தேவையான மின்சாரம் மிகச் சுலபமாக கிடைக்கும்படி செய்யலாம். வீடுகளில் சிறிய கருவிகளைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இவ்வளவு இருந்தும், மக்களிடையே சூரிய சக்தி மூலம் மின்சாரம் எடுப்பது பற்றிய போதுமான விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. சோலார் பவர் மூலம் வாட்டர் ஹீட்டர்கள், மின் விளக்குகள், மின் விசிறி, கணினி, வாஷிங் மெஷின், ஏ. சி. முதலியவற்றை இயக்கலாம். சோலார் சாதனங்களை அமைக்க ஆரம்ப செலவு அதிகம் என்றாலும், நாளடைவில் நாம் உபயோகிக்கும் மின்சாரக் கட்டணத்தை விட செலவு குறைவு தான். *********************** *ஆறறிவு என்றால் என்ன? அவை எவை? மே11 -கே.அபிஜித், ஸ்ரீரங்கம். ஆறறிவு என்பவை பார்க்கும் அறிவு, கேட்கும் அறிவு, தொடும் அறிவு, நுகரும் அறிவு, ருசிக்கும் அறிவு மற்றும் பகுத்தறியும் அறிவு போன்றவையாகும். விலங்கினத்திற்கு ஐந்தறிவு மட்டுமே உள்ளன என்றும், மனிதனுக்கு அதனையும் விட ஒரு சிறப்பு அறிவான பகுத்தறிவையும் கொண்டு பார்க்கப்படுகின்றது. மனிதனுக்கு இருக்கும் இப்பகுத்தறிவே மற்றைய விலங்கினத்தில் இருந்து வேறுபட்டும், உயர்ந்தும் இருப்பதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. 1. உடலால் மட்டும் உணர்வது ஓரறிவு - இது தாவரங்களுக்கு. 2. உடல், நாக்கால் உணர்வது ஈரறிவு - இது கடல்வாழ் உயிரினங்களுக்கு. 3. உடல், நாக்கு, மூக்கால் உணர்வது மூன்றறிவு- இது ஊர்வனங்களுக்கு. 4. உடல், நாக்கு, மூக்கு, கண்ணால் உணர்வது நான்கறிவு- இது பூச்சி இனங்களுக்கு. 5. உடல், நாக்கு, மூக்கு, கண், காது ஆகிய ஐந்தால் உணர்வது ஐந்தறிவு- இது விலங்கினங்களுக்கு. 6. உடல், நாக்கு, மூக்கு, கண், காது, மூளை ஆகியவற்றால் அறிவது ஆறறிவு- இது மனிதர்களுக்கு. * அக்னி ஏவுகணை பற்றி விரிவாக சொல்லுங்க அங்கிள்! - எம். நிகேஷ்குமார், காட்டூர். அக்னி ஏவுகணை இந்தியாவினால் அமைக்கப்பட்ட குறுகிய முதல் நடுத்தர துõர ஏவுகணை வகைகளைக் குறிக்கும். 2007ம் ஆண்டு வரையில் அக்னி திட்டத்தில் பின்வரும் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டன: அக்கினி தாக்குகணை - எல்லாவற்றையும் விடப் பேராற்றல் கொண்ட இடைத்துõர ஏவுகணை , அக்கினித் தாக்கு கணைகளின் நீட்சித் துõரம் : 2,500 கி.மீ. உலகிலேயே இது போன்ற தாக்குகணையைப் பெற்ற ஐந்து நாடாக அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, இந்தியா கருதப்படுகிறது. 1989ல் அக்கினி-1 ஏவுகணையின் சோதனைப் பயிற்சி வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டது. 2007 ஏப்ரல் 12 ம் தேதி 3000 கி.மீ. பயணம் செய்யும் அக்கினி-3 பரிசோதிக்கப்பட்டது. 2012 ஏப்ரல் 12 ம் தேதி 3,000 கி.மீ. பயணம் செய்யும் அக்கினி-5 பரிசோதிக்கப்பட்டதன் மூலம், இந்திய வரலாற்றில் ஒரு மைல் கல்லை நட்டது. அக்னி-1 குறுகிய துõரம் பாயும் துõரம்: 700- 800 கிமீ. அக்னி-2 நடுத்தர துõரம் பாயும் துõரம்: 2000- 2,500 கிமீ. அக்னி-3 இடைத்தர துõரம் பாயும் துõரம்: 3,500- 5,000 கிமீ. அக்னி-4 இடைத்தர துõரம் பாயும் துõரம்: 3,000 கிமீ. அக்னி-5 கண்டம் விட்டுக் கண்டம் பாயும் துõரம்: 5,000- 6,000 கிமீ. அக்னி- 1 மற்றும் அக்னி-2 சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றைக் குறி பார்த்து ஏவக்கூடியவை. அக்னி-2 சீனாவின் மேற்கு, நடு, மற்றும் தெற்குப் பகுதிகளை சென்றடையக்கூடியன. அக்னி- 3 இது சீனாவின் முக்கிய நகரங்களான பெய்ஜிங் , மற்றும் ஷங்காய் ஆகியவற்றை தாக்கக்கூடியன. அக்னி-5 மே19, 2012ல் ஏவப்பட்டது. இது பாயும் துõரம்: 5,000 முதல் 7,000 கி.மீ வரை. *கொட்டாவி எப்படி உருவாகிறது? -ஆர். எம். ராமகிருஷ்ணா, திருச்செங்கோடு. நமது மூளையில் துõக்கம் வருவதற்கான அறிகுறிகள் தொடங்கிய உடனேயே இதயம் மூச்சுவிடும் வேகத்தை சற்று குறைத்துக்கொள்கிறது. இதை ஈடுசெய்து மூளைக்கு அதிக ரத்தத்தை ஏற்றுவதற்கு பிராணவாயு வேகமாக உள் எடுக்கப்பட்டு, கரியமில வாயு வெளியேறி இதயம் சுருங்கி விரிந்து ரத்தம் சுத்திகரிக்கவேண்டும். இதற்கு வசதியாக நமது வாய் அகல திறந்து காற்றினை உள்ளே இழுத்துக்கொள்கிறது. இந்த செயல்பாடு தான் கொட்டாவி. கொட்டாவி விலங்குக்கும் வரும். ******************* மே18 *நிபுரூ என்று ஒரு கோள் இருக்கிறதா, அந்தக்கோள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் உலகத்தை அழிக்கும் என்பது உண்மையா? -சு. ஸ்ரீப்ரதா, மேட்டூர். நிபுரூ என்று ஒரு கோள் இல்லை. அப்படி இருக்க, அந்தக்கோள் எப்படி டிசம்பர் 2012ல் உலகத்தை அழிக்க முடியும்? என்று விண்வெளி விஞ்ஞானிகள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதனால் ஸ்ரீப்ரதா அச்சப்படவேண்டாம். நிபுரூ கோள் பற்றி பல வதந்திகள் உலாவருகின்றன. அவை: நிபுரூ என்பது நாசா நிறுவனம் அனுப்பிய கபுள் என்ற செயற்கைக் கோள் தொலைநோக்கியால் கண்டறியப்பட்டதாக சொல்லப்படும் கருஞ்சிவப்பு கோள். இதற்கான போதிய அறிவியல் ஆதாரங்கள் இல்லை. நிபிரூ கோளானது பிளானட் எக்சு எனவும் அறியப்படுகிறது. இது பூமியை நோக்கி வந்து கொண்டு இருப்பதாகவும் அது 2012 ல் பூமியை நெருங்கும் எனவும் சொல்லப்படுகிறது. இது ஒளியற்ற கோள் என்பதால் நம் கண்களுக்கு தெரிவதில்லை என்றும் நம்புகின்றனர். இந்தக் கோள் இருக்கும் நிலையில், சாதாரண தொலைநோக்கிகளால் இது நமக்கு தெரிவதற்கு சாத்தியமில்லாத துõரத்தில் இருப்பதாகவே பலர் கருதுகிறார்கள். 1984ம் ஆண்டு நாசா ஒரு செய்தியை வெளியிட்டது. 50 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு மிகப்பெரிய மர்மபொருள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக. மீண்டும் 1992 ம் ஆண்டு நாசா இன்னொரு செய்தியை வெளியிட்டது.7 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு கோள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக. இதற்கு அப்புறம் நாசா இதைப் பற்றி எதுவும் கூறவில்லை. நாசாவின் டெலஸ்கோப்புகளில் காணப்பட்ட மர்மகோள் முன்பெல்லாம் பெரும் அழிவை உண்டாக்கிய “நிபுரூ” தான் என்கின்றனர். *அணுக்கடிகாரம் பற்றி சொல்லுங்க அங்கிள்! - ஏ. சந்திரசேகர், செல்லாண்டிபாளையம். அணுக் கடிகாரம் என்பது நேரத்தைக் காட்ட அணு சார்ந்த ஒத்ததிர்வு அலைவரிசையை ஒப்பிட்டு மாதிரியாகக் கொண்டு இயங்கும் கடிகாரம் . நேரம், அலை வரிசை ஆகியவற்றுக்கான மிகத் துல்லியமான தரம் வாய்ந்த கடிகாரமாக அணுக் கடிகாரமே உள்ளது. சர்வதேச நேரக் கட்டுப்பாட்டுக்கும், தொலைக்காட்சி போன்றவற்றின் அலைவரிசை ஒப்பீட்டுக்கும் அணுக் கடிகாரமே அடிப்படையாக உள்ளது. அணுக்கடிகாரங்கள் கதிரியக்கத்தைப் பயன்படுத்தி இயங்குவது கிடையாது. ஒரு பொருளின் கட்டமைப்பில் இலத்திரன்கள் பல வட்டப் பாதைகளில் சுழன்று கொண்டிருக்கும். அவ்வாறு கழன்று கொண்டிருக்கும் இலத்திரன்கள் வட்டம் விட்டு வட்டம் தாவவும் செய்யும். அப்போதெல்லாம் அந்தக் தாவலுக்கு இலத்திரன்கள் செலவழித்து வெளியிடும் சக்தியை மட்டுமே பலமாகக் கொண்டு அணுக்கடிகாரங்கள் இயங்குகின்றன. நடுக்கடலில் பல நாட்கள் பயணமாகும் கப்பல்களில் நேரம் அறிவது, கதோட்டுக் கதிர்களைக் கொண்டு இயங்கும் தொலைக்காட்சி போன்ற நவீன உபகரணங்களின் அலைவரிசைகள், ரேடியோ அலைவரிசைகள் சார்ந்த பிரபஞ்சக் கதிர்களின் ஆய்வு, விண்வெளி ஆய்வு போன்றவற்றில் எல்லாம் அணுக்கடிகாரம் பயன்படுத்தப்படுகிறது. *மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது? -ச. பாவனா, ராமநந்தீஸ்வரம். உலகெங்கும் மின்சாரம் என்பது ஒரே ஒரு முறையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. நமது சைக்கிள் டைனமோவில் பயன்படுத்தப்படும் மின் காந்தப் புலம் தொழில் நுட்பம் தான். பெரிய டைனமோக்களை சுற்றுவதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அணையில் நீரைத் தேக்கி மேலிருந்து கீழே வரும் நீரின் விசையால் டைனமோவைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது நீர் மின்சாரம். காற்றின் மூலம் விசிறியைச் சுற்றச் செய்து தயாரிக்கப்படுவது காற்றாலை மின்சாரம். நீரைக் கொதிக்க வைத்து, நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது அனல் மின்சாரம். (இதற்கு நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது). டீசல், பெட்ரோல், எரிவாயு மூலமும் சுழலச் செய்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. யுரேனியம் போன்ற சில தனிமங்கள் பிளக்கப்படுவதால் அதிக வெப்பமும் ஆற்றலும் கிடைக்கின்றன. அவற்றை முறைப்படுத்தி அதைத் தொடர் நிகழ்வாக மாற்றி நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழல வைத்துப் பெறப்படுவது தான் அணு மின்சாரம். ********************* மே 25/ *சிம் கார்டுகளில் 16 ‘கே’ என்று முன்பு குறிப்பிடுவார்கள். இப்போது 64 ‘கே’ என்று குறிப்பிடுகிறார்கள். இந்த கே எதை குறிக்கிறது? - ஆர். செல்வேந்திரன், காரைக்கால். சிம் கார்டுகளில் ‘கே’ (ஓ), அதன் அளவைக் குறிக்கும் சொல்லாகும். ‘கே’ என்பது கிலோ பைட்டின் சுருக்கம். 16ஓ கொண்ட சிம் கார்டுகளில் 125 போன் நம்பர் அதன் பெயர்களை ஸ்டோர் செய்யலாம். அதே போல் 64ஓ என்றால் 500 நம்பர்களை ஸ்டோர் செய்துகொள்ளலாம். இந்த அளவுகளைப் பொறுத்துதான் எஸ்எம்எஸ்கள், போன் புக், செக்யூரிட்டி கீக்களை பயன்படுத்த முடியும். மேலும் இப்போது வரும் போன்களில் இவற்றை ஸ்டோர் செய்வதற்கு சிம் கார்டுகள் தவிர போன்களில் உள்ள மெமரிகள் மற்றும் தனியாக இணைத்து பயன்படுத்தும் ‘மெமரி கார்ட்’களிலும் ஸ்டோர் செய்யலாம். இதனால் இப்போது சிம் கார்டில் கொடுக்கப்படும் ‘கே’ அளவுகளை யாரும் பார்ப்பது இல்லை. *பாலுõட்டிகளில் மிகச் சிறியவை எது? - எம். திருப்பதி, கிருஷ்ணகிரி. உலகில் உள்ள பாலுõட்டிகளில் மிகச்சிறியது பம்பல்பீ வவ்வால்.இது மூன்று செ.மீ நீளம் கொண்டது. இது தன் உடல் எடையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக உண்ணக்கூடிய அதிசய உயிரினம். மேலும் இவைகளின் உணவு முறைகளை வைத்தும் இரண்டு பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்று பழங்கள், பூக்கள் மற்றும் பூக்களின் குளுகோஸ், மகரந்தத் துõள் ஆகியவற்றை உண்டு வாழக்கூடியவை. மற்றது சிறிய பூச்சிகள் வண்டுகள் சிறிய வகை பாலுõட்டிகள் சிறிய பறவைகள் ஈக்கள் கொசுக்கள் தவளை மற்றும் மீன்கள் ஆகியவற்றை உண்டு வாழுகின்றன. * மனித மூளையின் எடை என்ன? சராசரியாக எவ்வளவு இருக்க வேண்டும்? -ப. ஜெயப்பிரியா, புவியரசி, வரிச்சிக்குடி. ஒவ்வொருவருக்கும் மூளையின் எடை சற்று மாறுபடும். சராசரியாக ஒரு ஆணின் மூளை 1.5 கிலோகிராம் எடை உடையது. பெண்ணின் மூளை ஆணின் மூளையின் எடையை விட குறைவாகவே இருக்கும். மனிதன் உயிருடன் இருக்கும்போது, மூளையின் வெளிப்பரப்பு அடர்த்தியான சாம்பல் நிறத்திலும், உட்பகுதி மஞ்சள், வெள்ளை நிறமாகவும் காணப்படுகிறது. கோடிக்கணக்கான நரம்பிழைகள் வெண்பொருளையும், பெருமூளைப் புறணியையும் இணைக்கின்றன. 20 வயதான ஆணின் மூளையில் உள்ள நரம்பிழைகளின் மொத்த நீளம் 1,76,000 கிலோமீட்டர். அதே வயதில் பெண்ணின் மூளையில் உள்ள நரம்பிழைகளின் நீளம் 1,49,000 கிலோமீட்டர் இருக்குமாம்! **************** ஜூன்1 *கிரிக்கெட்டில் சில தடவை கேட்ச் பிடித்தவர்களை ‘சப்’ என்று சொல்கிறார்களே. ‘சப்’ என்றால் என்ன என்று சொல்லுங்கள் அங்கிள்? -ஸ்ரீகர்.ர.ராவ், திருச்சி. ‘சப்’ என்பதன் முழுமை‘சப்ஸ்ட்டியூட்’ ஆகும். அதற்கு ‘மாற்று’ என்று பொருள். கிரிக்கெட் போட்டியின் போது 11 வீரர்கள் இருப்பர். ஆட்டத்தின் போது ஆடும் 11 வீரர்களில் யாரேனும் ஒருவருக்கு அடிபட்டாலோ (அ) சோர்வுடன் விளையாட முடியாதவர்களுக்கு பதிலாக மாற்று வீரராக ஒருவர் களமிறக்கப்படுவார். அவரை நாம் ‘சப்’ என்று அழைக்கிறோம். அவரை பீல்டிங் மற்றும் பைரன்னராகப் பயன்படுத்துவர். அவரால் பந்து வீசவோ, பேட்டிங் செய்யவோ முடியாது. இந்த மாதிரி ‘சப்ஸ்ட்டியூட்’ வீரர்கள் அனைத்து விளையாட்டுகளிலும் இருப்பர். *வியர்ப்பது ஏன்? வியர்வை சுரபிகள் பற்றி சொல்லுங்க அங்கிள்! - ஆர். ஜெயப்பிரியா, கோபி. வியர்வை என்பது, வியர்த்தல் செயல் மூலம் உடலிலிருந்து தோல் வழியாக வெளியேற்றப்படும் ஒரு திரவம். < மனிதர்களைப் பொறுத்தவரை வியர்த்தல் என்பது உடற் தோலின் மேற்பரப்பில் இருந்து வியர்வை ஆவியாகும்போது, அது ஆவியாவதற்குத் தேவையான வெப்பத்தை உடலிலிருந்து எடுத்துக் கொள்வதால் உடல் குளிர்ச்சியடைகிறது. இதனால், கோடை காலத்தில் அல்லது வேலை செய்வதன் மூலம் உடற் தசைகள் சூடேறும் போது வெப்பம் உயராமல் தடுப்பதற்காக கூடுதலான வியர்வை சுரக்கப்படுகின்றது. தோலில் நுண்ணிய துவாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு துவாரத்தின் கீழும் ஒரு வியர்வை சுரப்பி இருக்கிறது. இதைத் தவிர அபாக்ரின், செபாஷயஸ் சுரப்பிகளும் உள்ளன. அபாக்ரின் சுரப்பிகள் அக்குள்களிலும், ரோமம் வளரும் பகுதிகளிலும் உள்ளன. இவை ஒரு வித திரவங்களை ரோமங்கள் மூலம் சுரக்கும். செபாஷயஸ் சுரப்பிகள் உள்ளங்கை, கால் தவிர எல்லா இடத்திலும் இருக்கிறது. தலையில் உள்ள வியர்வை சுரப்பிகள் சிபம் எனும் எண்ணை திரவத்தை சுரக்கின்றன. *சுமோக் டிடெக்டர் எப்படி தீ யை கண்டுபிடிக்கிறது? - அபிராமி, மயிலாடுதுறை. சுமோக் டிடெக்டர் ( ண்ட்ணிடுஞு ஞீஞுtஞுஞிtணிணூ) என்பது குறிப்பிட்ட பகுதியில் புகை இருப்பதைக் கண்டறியப் பயன்படும் ஒரு கருவி ஆகும். இக்கருவி புகையை உணர்ந்தறிவதன் மூலம் தீப்பிடித்திருப்பதைக் கண்டறிகிறது. அலுவலகங்கள் , வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்ற பொதுக் கட்டடங்களில் பொருத்தப்படும் சுமோக் டிடெக்டர் கருவி புகையை உணர்ந்தவுடன் அக் கட்டிடத்தின் தீத்தடுப்புத் தொகுதிக்கு மின் குறிப்பலைகளை அனுப்பும். இதன் மூலம் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு கட்டடத்தில் உள்ளவர்கள் உடனடியாகவே கட்டிடத்தை விட்டு வெளியேற உதவுகிறது. சிறிய வட்டத்தட்டுப் போலிருக்கும் இக்கருவி கட்டடங்களின் உட்கூரைகளில் குறிப்பிட்ட இடங்களில் பொருத்தப்படுகின்றன. தீ பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமன்றி, புகைத்தல் தடை செய்யப்பட்டுள்ள இடங்களில், புகைப்பவர்களைக் கண்டுபிடித்துத் தடுப்பதற்கும் இக்கருவிகள் உதவுகின்றன. இது உயிர்களின் பாதுகாப்புத் தொடர்பான விஷயம் என்பதால் , இக்கருவிகளுக்கு தொடர்ச்சியான மின்சாரம் வழங்கப்பட வேண்டும். ****************** ஜூன்8/ *ஸ்னுõக்கர் விளையாட்டுபற்றி சொல்லுங்க அங்கிள்! - வி. சுப்ரமணியம், பி.கொமாரபாளையம். ஸ்னுõக்கர் என்னும் மேடைக் கோல்பந்தாட்டம் என்பது ஒரு கம்பள விரிப்பு கொண்டு மூடப்பட்டுள்ள, நான்கு புறங்களிலும் பக்கவாட்டில் துளைகளைக் கொண்டுள்ள, ஒரு பச்சை நிற மேசையின் மீது விளையாடும் ஒரு கோல் விளையாட்டாகும். இந்த விளையாட்டில் ஒரு கோல் கொண்டு பந்துகளை வீழ்த்த வேண்டும். ஒரு வெள்ளை மற்றும், ஒரு மதிப்பெண் கொண்ட பதினைந்து சிவப்பு பந்துகள், வெவ்வேறான கலரில் ஆறு பந்துகள், மஞ்சள் (2 மதிப்பெண்கள்), பச்சை (3), பழுப்பு (4), நீலம் (5), இளஞ்சிவப்பு (6) மற்றும் கறுப்பு (7)ஆகியவற்றைக் கொண்டது. ஒரு விளையாட்டு வீரர் மேடைக் கோல்பந்தாட்டத்தில், கோல்பந்தைப் பயன்படுத்தி, சிவப்பு மற்றும் வண்ணப் பந்துகளைச் செலுத்தி, எதிராளியை விடவும் அதிகமான மதிப்பெண்கள் எடுத்தால் வெற்றி பெற்றவராவார். பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளால் இந்தியாவில் <கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொதுவாகக் கருதப்படும் விளையாட்டு இது. சீனாவில் <இந்த விளையாட்டு புகழ் பெற்று வருகிறது.19ம் நுõற்றாண்டின் பிற்பகுதியில்தான் மேடைக் கோல்பந்தாட்டம் உருவானதாகப் பொதுவாக கருதப்படுகிறது. *கம்ப்யூட்டர் கீ போர்டில் எழுத்துகள் வரிசைப்படி இல்லையே, ஏன்? - டி. சிவகாமசுந்தரி, ஈரோடு. கீ போர்டில் எழுத்துகள் டைப் செய்ய வசதிக்கேற்றவாறு அமைக்கப்பட்டுள்ளன. அதிகமாக பயன்படும் எழுத்துகள் விரைவாகவும், எளிதாகவும் டைப் செய்ய விரல்களுக்கு எட்டும்படிஅமைத்திருக்கிறார்கள். அதிகமாக பயன்படும் எழுத்துகள் கீ போர்டில் இரண்டாவது வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வரிசை எழுத்துகள் மீதுதான் டைப் செய்யும் விரல் முனை சாதாரண நிலையில் இருக்கும். அதிகம் பயன்படாத எழுத்துகள் மேல் வரிசையிலும், அரிதாக பயன்படும் எழுத்துகள் கீழ் வரிசையிலும் அமைக்கப்பட்டுள்ளன. டைப் செய்வோர் எல்லாம் இந்த வகை அமைப்பில் பழக்கப்பட்டுவிட்டதால் பழைய முறையே பயன்பாட்டில் இருந்துவருகிறது. எதிர்காலத்தில் திருத்தம்பெற்ற புது கீ போர்டுகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. *கண்ணாடிப் பொருட்கள் கீழே போட்டால் உடைந்து விடுவது எதனால்? -எஸ்.எம். முகேஷ், அரையபுரம். ஒரு பொருளில் அடங்கி இருக்கும் அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளின் பிணைப்பு ஆற்றலுக்கு ஏற்ப அப் பொரும் கடினமாக அல்லது மென்மையாக இருக்கும். ஒரு பொருளின் இருக்கும் அணுக்கள், மூலக்கூறுகள் தமக்குள்ளே இருக்கும் இணைப்புகளை விட்டுவிடாமல் இணைந்தபடியே இடப்பெயர்ச்சியாகும் தன்மை கொண்டிருந்தால், அப்பொருள் மீது செலுத்தப்படும் வெளிவிசையைத் தாங்கிக் கொள்ளும். அதனால் உடையாமல் இருக்கும். கண்ணாடிப் பொருட்களைப் பொறுத்தவரை அதில் பலவகைப்பட்ட அணுக்கள் இருக்கின்றன. அந்த அணுக்கள் ஒன்றுடன் ஒன்றாக உறுதியுடன் பிணைக்கப்பட்டுள்ளன. இந்த அணு பிணைப்புகள் வெளிவிசை அல்லது அழுத்தத்தின் காரணமாக சிதைந்தால், அந்த அணுக்கள் இடம் பெயர்ந்து மற்ற அணுக்களுடன் மீண்டும் இணைப்பைப் பெறமுடிவதில்லை. எனவேதான் கண்ணாடிப் பொருள்கள் எளிதில் உடைந்து விடுகின்றன. ******************* ஜூன்22 மெட்டல் டிடெக்டர் எப்படி செயல்படுகிறது? - கா. தாமரைச்செல்வன், திட்டை. முக்கியமான அரசு அலுவலகங்கள், பஸ், ரயில், விமான நிலையங்களில் நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தி இருப்பார்கள். இந்த வழியின் வழியே செல்பவர்கள் வெடிகுண்டுகளையோ, ஆயுதங்களையோ வைத்திருந்தால் கண்டுபிடித்துவிடலாம். போலீசார் கையில் நீள்வட்டவடிவமான கருவி வைத்திருப்பார்கள். இதுவும் ஒருவகை மெட்டல் டிடெக்டர் கருவிதான். இதை ஒருவரின் உடல் அருகில் கொண்டு சென்றால், அவர் வைத்திருக்கும் பைகளின் மீது காட்டுவதன் மூலம் அவரிடம் ஆபத்தான பொருட்கள் ஏதும் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்கலாம். ஒருவர் மறைத்து வைத்திருக்கும் உலோகத்தை மெட்டல் டிடெக்டர் எப்படி கண்டுபிடிக்கிறது என்றால், ஒரு காந்தத்துண்டின் அருகே குண்டூ சியோ இரும்பு பொருளோ அருகே கொண்டு சென்றால் அதை காந்தம் ஈர்க்கும். காந்தத்தின் சுற்றுப்புறத்தில் உருவாகும் காந்தப்புலத்தால் இந்த ஈர்ப்புத்தன்மை உருவாகிறது. மெட்டல் டிடெக்டர் கருவிகளில் மின்சாரம் செல்லும் சர்க்யூட் பாதைகள் மிகவும் நுட்பமான வகையில் அமைக்கப்பட்டிருக்கும். காந்தப்புலங்களில் மிகவும் நுணுக்கமாக ஏற்படும் பாதிப்புகளைக்கூட உணர்ந்து எச்சரிக்கை ஒலி எழுப்பும் வகையில் அந்தக்கருவி தயார் செய்யப்பட்டிருக்கும். கையடக்கமாக உள்ள மெட்டல் டிடெக்டரில் காயில் எனப்படும் இரண்டு கம்பி சுருள்கள் இருக்கும். இவை இரண்டும் ஒரே சக்திகொண்ட காந்தப்புலங்களை உருவாக்கும் திறன்கொண்டிருக்கும். இந்தக்கருவியின் அருகே ஒரு உலோகப்பொருள் வந்தால், ஒரே வகையான ஈர்ப்புத்தன்மையை கொண்டு அந்தக் காந்தப் புலங்களின் சமநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. அது மின்கம்பிச் சுருளுக்குக் கடத்தப்பட்டு எச்சரிக்கை ஒலி எழுப்பும். *நம் உடலில் எத்தனை ஆயிரம் வியர்வை சுரப்பிகள் உள்ளன? - மதி. தேவதர்ஷன், கயத்துõர். நம் உடலில் வெப்பம் அதிகமானால், அதை கட்டுப்படுத்தி ஒரே சீராக வைத்துக்கொள்ள ஏற்படுவதுதான் வியர்வை. உடலின் வெப்பத்தை 85 சதவீதம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது இந்த வியர்வைதான். உடலில் எங்கெல்லாம் சருமம் இருக்கிறதோ அங்கெல்லாம் வியர்வை சுரப்பிகளும் இருக்கும். வியர்வை என்பது பெரும்பாலும் தண்ணீர்தான். அதனுடன் சில ரசாயனங்களையும் கழிவுப் பொருட்களையும் உடல் வெளியே தள்ளுகிறது. இந்த வியர்வை, சருமத்தில் 20 லட்சத்தில் இருந்து 50 லட்சம் <நுட்பமான துவாரங்கள் மூலம் வழிகிறது. இந்த நுண்ணிய துவாரங்கள் உடல் முழுவதும் பரவியுள்ளன. *ரயில் செல்லும் வழியில் ஙி/ஃ என்று ஒரு போர்டு எழுதிவைத்துள்ளார்களே, ஏன்? முகமது அசாருதீன், வல்லம். ரயில் பயணங்களில் வேடிக்கைப் பார்ப்பது எல்லாருக்கும் பிடிக்கும். அந்த வேடிக்கை பார்த்ததில் அர்த்தமுள்ள ஒரு கேள்வியை கேட்டிருக்கும் அசாருதீனுக்கு ஒரு பாராட்டு! தண்டவாளம் செல்லும் பாதையில் இரு பக்கங்களில் இரும்பு கம்பியில் மஞ்சள் நிறத்தில் சதுரவடிவில் ஒரு போர்டை பொருத்தி அதில் ஙி அல்லதுஙி/ஃ என்று எழுதி இருப்பார்கள்.இதில் ஙி என்பது விசில் ஒலி எழுப்பவும் என்ற பொருள் தரும். ஃ என்பது லெவல் கிராசிங் என்று பொருள் தரும். அதாவது லெவல் கிராசிங் வருகிறது, ஆதலால், இந்த இடத்தில் இருந்தே ஹாரன் எழுப்பவும் என்று பொருள். இந்த போர்டு லெவல் கிராசிங் இருக்கும் துõரத்தில் இருந்து 250 மீட்டர் துõரத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருக்கும். *************** *சுனாமி வருவதை முன்கூட்டியே விலங்குகள் அறியும் என்பது உண்மையா? - கு.ரம்யா கலைவாணி, திருச்சி. சுனாமி, பூகம்பம் போன்றவற்றை பறவைகளும் விலங்குகளும் உணர்ந்துகொள்கின்றன என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இவற்றிற்கு எல்லாம் விஞ்ஞானப்பூர்வமான ஆதாரம் இல்லை. சீனா, ஜப்பான், இந்தோனிஷியா போன்ற நில நடுக்கம் அதிகம் ஏற்படக்கூடிய நாடுகள் பூகம்பம் வருவதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் ஆற்றல் விலங்குகளுக்கு உண்டு என்று நம்புகின்றன. விலங்குகள் உண்பது உறங்குவது எல்லாம் தரையில்தான். அவை தரைமீதுதான் காதை வைத்துக்கொண்டு உறங்கும். அதனால் பூமியில் ஏற்படும் மெல்லிய அதிர்வுகளைக்கூட அவற்றால் உணர்ந்துகொள்ள முடிகிறது என்கிறார்கள். ரயில் தண்டவாளத்தில் காதை வைத்துக்கொண்டு கேட்கிறபோது துõரத்தில் வரும் ரயிலின் ஓசையைக் கேட்க முடிகிறது போல் தொலைவில் ஏற்படும் நிலநடுக்க ஓசையை விலங்குகளால் அறியமுடிகிறது என்று சொல்லப்படுகிறது. இந்த விலங்குகளைப்போலவே கற்கால மனிதனும், இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே அறிந்து கொண்டு இடம்மாற்றம் செய்தான் என்றும் கூறப்படுகிறது. *விசிறி கொண்டு விசுறும்போது காற்று நன்றாக வீசுவது எப்படி? - எஸ். ஆகாஷ், திருப்பூர். அடிக்கடி கரன்ட் கட் ஆவதால் மின் விசிறி இயங்காமல், புழுக்கத்தில் விசிறி காற்றில் இளைப்பாறும் போது இப்படி ஒரு கேள்வி கேட்க நினைத்தாயா, ஆகாஷ்! நாம் கையில் விசிறியை வைத்துக்கொண்டு அப்படியும் இப்படியுமாக அசைக்கும் போது நம்மை சுற்றி உள்ள குறைந்த அளவுள்ள காற்று அகற்றப்படுகிறது. அதாவது வெளியேற்றப்படுகிறது. அதனால் நம்மை சுற்றி காற்று இல்லாத வெற்றிடம் ஏற்படுகிறது. அந்த வெற்றிடத்தை நோக்கி, அதிக அளவு உள்ள காற்று வேகமாகப் பாய்ந்து வருகிறது. அவ்வாறு வருகிற காற்றின் குளுமையில்தான் அப்பாடா காற்று சுகமாக இருக்கு என்கிறோம்! பொதுவாக வெற்றிடத்தை நோக்கிக் காற்று வீசும் என்பது விதி! *விமானத்தில் பயணம் செய்வோரின் பேனாவிலிருந்து மை தானாகவே வெளியேறுவது எப்படி? - த. திவ்யா, பாண்டமங்கலம். பூமியிலிருந்து உயரமான இடத்துக்குச் செல்ல செல்ல பேனாவில் இருந்து மை கசியத்தான் செய்யும். இதற்கு காரணம் உயரம் கூட கூட அங்கு நிகழும் அழுத்தம் குறையும். ஒரு குறிப்பிட்ட அளவில் அடைக்கப்படும் ஒரு பொருளின் திண்மை, அந்தந்த இடத்தில் இருக்கும் அழுத்தத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பது விஞ்ஞான கோட்பாடு. எனவே கீழே அதிக அழுத்தத்தில் நிரப்பப்பட்ட பேனாவின் மை, உயரத்தில் குறைந்த அழுத்தத்தில். திண்மை குறைந்து கசிகிறது. **************** ஜூலை6 *கனமான பொருள் தண்ணீருக்கு அடியில் கனம் குறைந்து காணப்படுவது எதனால்? - ஆர். ஸ்ரீநிதி ராம்குமார், ஸ்ரீரங்கம். நீருக்கு அடியில் ஒரு பொருள் இருந்தால் அதன் எடையில் மாற்றங்கள் இருக்கத்தான் செய்யும். காற்றின் அடர்த்தியைவிட நீரின் அடர்த்தி அதிகம். நீருக்கு மேலே தள்ளும் ஆற்றல் உண்டு. அதாவது மிதப்பு ஆற்றல் இயல்பாக இருக்கும். இதனால் கனமான பொருள் லேசாகத் தெரியும். குளத்தில் கழுத்தளவு தண்ணீரில் நிற்கும் போது உடல் முழுவதும் தண்ணீரில் இருக்கும். தலை மட்டும் மேலே இருக்கும். இந்நிலையில் உடல் பாகத்தை தண்ணீர் மேல் நோக்கி தள்ளும். இதனால் நம் உடல் லேசாகத் தெரியும். *இரவு நேரத்தில் மட்டும் துõக்கம் வருவது ஏன்? - எஸ். ஐஸ்வர்யா, கோபி. இயற்கையாகவே இரவு நேரத்தில் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள்தான் இதற்குக் காரணம். அதாவது, மனித உடலில் உறக்க – விழிப்புச் சுழற்சியைக் கட்டுப்படுத்தும் ‘மெலட்டோனின்’ எனப்படும் ஹார்மோன் இருள் கவிழும் இரவு நேரத்தில்தான் அதிகமாகச் சுரக்க ஆரம்பிக்கிறது. காலையில் சூரிய வெளிச்சம் பரவ ஆரம்பித்ததும், இந்த ‘மெலட் டோனின்’ சுரக்கும் அளவும் தானாகவே குறைய ஆரம்பித்து விடுவதால், பகற்பொழுதில் நல்ல விழிப்பு நிலையுடன் கூடிய புத்துணர்வு தொடர்கிறது. ஆனால், இதைத் தவிர்த்தும் பகல் வேளையில் துõக்கம் வருவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. உட ல் களைப்பாக இருக்கும் சமயத்திலோ அல்லது நன்றாகச் சாப்பிட்டு முடித்த பிறகோ, சுகமான துõக்க உணர்வு ஏற்படும். ஆரோக்கியமான உடல்வாகு கொண்ட அனைவருக்கும் ஏற்படும் இயல்பான நிலைதான் இது. *போனை எடுத்தவுடன் ஹலோ எனக் கூறுவது ஏன்? - பா. கவிபாரதி, அந்தியூர். எல்லாரும் போனில் உரையாடும் போது முதல் வார்த்தை ஹலோ சொல்வது பழக்கமாகிவிட்டது. ஆனால், இந்த சொல் எப்படி வந்தது என்பதற்கு ஒரு சம்பவம் இருக்கிறது. கிரகாம் பெல் போனை உருவாக்கி இருந்தாலும், இந்த சொல்லிற்கு சொந்தக்காரர் எடிசன் . கிரகம் பெல்லின் அல்லது தொலைபேசியில் உரையாடிய முதல் வார்த்தை ‘Mணூ. ஙிச்tண்ணிண, ஞிணிட்ஞு டஞுணூஞு. ஐ தீச்ணt tணி ண்ஞுஞு தூணித.‘ வாட்சன் உன்னை பார்க்க வேண்டும் இங்கே வா என்பதே.’ பணிபுரியும் ஓரிடத்தில் இருவர் பேச எண்ணும் போது எப்படி மற்றொருவருக்கு புரியும். ஒருவர் அழைப்பை ஏற்படுத்தும் போது ஒரு மணி போல சத்தமிடும் அமைப்பை திட்டமிட்டிருந்தனர் . ஆனால், எடிசன் தொலைபேசி இணைப்புகள் வழங்க இருந்த நிறுவன அதிபருக்கு ஒரு கடிதம் எழுதினார். அழைப்பு மணிக்கு மாற்றாக ஹலோ என்ற வார்த்தையை ஏன் பாவிக்க கூடாது? அது 10 ல் இருந்து 20 அடிகள் வரை கேட்க கூடியது எனக் கூறியிருந்தார். அது முதல் ‘ஹலோ’ வார்த்தை பிரபலமானது. அகோய் என்ற சொல்லே ஹலோ வர முதல் பாவனையில் இருந்தது . ஆனால் ஆதி காலங்களில் ஹெலோ சொல் பலரை சத்தமாக அழைப்பதற்கு பாவிக்கப்பட்டுள்ளது. *************** *பாப் கார்ன் பொரிக்கும் போது மிஷினில் ஒவ்வொன்றும் துள்ளி துள்ளி குதிக்கிறதே, எப்படி? - எஸ். ராம்மோகன், தஞ்சாவூர். பாப் கார்ன் வாங்கினோமா, சாப்பிட்டோமா என்று இல்லாமல் அதை கூர்ந்து கவனித்து இப்படி ஒரு கேள்வி கேட்டிருக்கும் ராம்மோகனுக்கு பாராட்டு! இப்படிப்பட்ட சந்தேகங்கள் அறிவு வளர்ச்சிக்கு உதவும். கீப் இட் அப்! பாப் கார்ன் செய்ய பயன்படும் பொருள் நம்மூர் சோளம். சோளம் ஒரு மாவுப்பொருள். சோளம் கடினத் தன்மை அதிகமாக கொண்டிருக்கும். ஒரு சோளப் பொரியின் மையத்தில் கொஞ்சம் பருப்பும், அதைச் சுற்றி கடினமான மாவுப்பொருளும் இருக்கும். கொஞ்சம் ஈரப்பசையும் இருக்கும். இதை மிஷினில் சூடு ஏற்றும்போது, சோளத்தில் இருக்கும் ஈரப்பசை சூடாகி ஆவியாகும். அதே சமயம் விரிவடையும். மாவுப்பொருளைப் பிளந்துக்கொண்டு விரிவடையும்போது அந்த உந்து விசையினால் சோளம் வெடிக்கும். அதாவது துள்ளிக் குதிக்கும். *பாம்பு பால் குடிக்கும் என்பது உண்மையா, அங்கிள்? - ஆர். கவுசல்யா, நாமக்கல். பாம்புகள் பற்றிய பல நம்பிக்கைகள் உள்ளன. அதில் ஒன்று பாம்பு பால்குடிக்கும் என்பது. எப்போதாவது தாகம் எடுக்கும் போது பாம்புக்கு நீர் அருந்தும் பழக்கம் உண்டு. அப்படி ஒரு சமயத்தில் வேண்டுமானால் சிறிதளவு பாலை பருகலாம். மற்றபடி இயற்கையில் பாம்பு பால் குடிப்பது இல்லை. காரணம் பாம்புகளுக்கு நாக்கு பிளவுபட்டு இருக்கும். எனவே, பாம்பு பாலையோ நீரையோ நக்கிக் குடித்திட முடியாது. பாம்புக்கு அதன் தலையின் நுனிப் பகுதியில் மூக்கு உள்ளது. அது நீர்மப்பொருளில் வாயை வைக்கும் போது முதலில் நுழைவது மூக்காகத்தான் இருக்கும். மூக்கை நீரிலோ, பாலிலோ நுழைத்தாலே பாம்பு மூச்சுத் திணறிச் செத்துவிடும். பாம்பு இரையை எலி, தவளை போன்றவற்றை அப்படியே விழுங்குமேயன்றி மென்று சாப்பிடக் கூடிய அமைப்பு கிடையாது. அதனால் முட்டையையும் பாம்பு விழுங்குகிறதேயன்றி உடைத்து உறிஞ்சி குடிக்காது. *பிளாஸ்டிக் எதில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது? -நெடுஞ்செழியன், நெய்க்குப்பை. முதலில் பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டது தாவரங்களில் இருந்துதான். தாவர செல்லுளோஸ் சங்கிலி மூலக் கூறுகளிலிருந்து தயாரிக்கப்பட்டது. 1862ல் அலெக்சாண்டர் பார்க்ஸ் தயாரித்த பிளாஸ்டிக் பார்க்சைன் எனப்பட்டது. 1909ல் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது.1930ல் லியோ பேக்லேன்ட் என்ற பவுதிகவியலாளர் பெட்ரோலில் இருந்து பிரித்தெடுக்கும் முறையை கண்டார். அதை பேக்லைட் என்பர். பின் பாலிதீன், நைலான் அக்ரிலிக் கண்டுபிடிக்கப்பட்டு, இன்றுவரை நடைமுறையிலுள்ளது. 1941 ல் பாலிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்டது. பிளாஸ்டிக்கின் தனிச்சிறப்பு அதை எந்த வடிவத்திலும் உருவாக்கம் செய்ய முடியும். நடைமுறை வாழ்வில் பிளாஸ்டிக், விமானம் முதல் மனித உடல்பாகங்கள் வரை பயன் மேம்பாட்டிலிருக்கிறது. பிளாஸ்டிக் பொருட்களால் பூமிக்கும், நம் உடலுக்கும் கேடு ஏற்படும். பிளாஸ்டிக் பைகள் மக்குவதற்கு 100-1000 ஆண்டுகள் ஆகுமாம். எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ளுங்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. *************** ஜூலை20 *தண்ணீரில் இருக்கும் மீனை தரையில் போட்டால் துடிதுடித்து இறந்துவிடுவது ஏன்? - கூ. சீனிவாசன், திருச்சி. ஒவ்வொரு உயிரினமும் உயிர்வாழ இயற்கையாகவே சில உடலமைப்புடன் படைக்கப்பட்டுள்ளன. தரையில் ஒரு உயிரினம் உயிர்வாழ சுவாசிக்க வேண்டும். சுவாசிப்பதற்கு நுரையீரல் உறுப்பு வேண்டும். மீனுக்கு நுரையீரல் கிடையாது. அதனால் தரையில் மீனைப்போட்டால் சுவாசிக்க முடியாமல் இறந்துவிடுகிறது. ஒரு பூனையைப் பிடித்து நீரில் மூழ்கடித்தால் அது தண்னீரில் சுவாசிக்க முடியாமல் இறந்து விடும். ஒரு செடியை நிலத்திலிருந்து பிடிங்கி தரையில் போட்டால் அது விலங்குகள் போல உணவை தேடிசெல்ல முடியாமல் இறந்து விடும். இப்படி ஒரு மாற்றுச் சூழ்நிலையை சந்திக்கும் போது தாக்குப்பிடிக்க முடியாமல் விலங்குகளும் தாவரங்களும் இறந்துவிடுவது இயற்கை. *மழைக்காலங்களில் மட்டும் மரங்கள் அதிகம் துளிர்விடுவது எப்படி? - ச. சந்தானகிருஷ்ணன், ஓசூர். தாவரங்கள் உயிர்வாழ பூமியில் இருந்து நீரை உறிஞ்சுகின்றன. அப்படி உறிஞ்சும் நீரின் அளவை சம நிலையில் வைத்துக் கொள்வதற்காக, நீராவிப்போக்கு என்னும் செயலைச் செய்கின்றன. அப்படி சம நிலையில் வைத்து கொள்ளவில்லை என்றால் தாவரங்கள், மரங்கள் அழுகி இறந்துவிடும். மரங்கள் உறிஞ்சும் நீரை நீராவிப்போக்கை இலைகளின் வழியாக செய்கின்றன. வெயில் காலத்தில் மரத்தைச் சுற்றி எவ்வளவு நீர் ஊற்றினாலும் சுற்றுப்புறத்திலுள்ள வெப்பத்தின் காரணமாக, நீரின் அளவு அதைப் பாதிப்பதில்லை. அதோடு அதிக இலைகள் இருந்தால் இருக்கின்ற நீரையும் அவை வெளியேற்றிவிடும். ஆனால் மழைக்காலத்தில் சுற்றுப்புறத்திலும், வேருக்கு அடியிலும் தேங்கி நிற்கும் தண்ணீரை அவை வெளியேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. எனவே விரைவில் துளிர்த்து இலைகளின் வழியாக நீரை வெளியேற்றுகின்றன.அதனால் தான் வெயில் காலத்தைவிட மழைக் காலத்தில் மரங்கள் விரைவாகத் துளிர்க்கின்றன. *சாப்பிட்டப்பிறகு துõக்கம் வருவது ஏன்? எம்.சுப்ரமணி, அசநல்லிகுப்பம். பொதுவாக நம் உடலின் ரத்த ஓட்டத்தில் 40 சதவீதம் மூளைக்கு, அதாவது தலைப்பகுதிக்கு போய்விடும். சாப்பிட்டவுடன், செறிமானம், மற்றும் உட்கிரகித்தலுக்குகாக அதிக ரத்தஓட்டம் வயிற்றின் பக்கம் திருப்பப்படும். எனவே மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறையும். இதனால் ஒரு மந்தமான நிலை ஏற்படும். அதுவே துõக்கத்திற்கு அழைத்துச் செல்லும். சாப்பிட்ட பிறகு துõக்கம் வருவது இயல்பு. ஆனால் அதன் செரிமானத்தின் இறுதியில் உற்சாகம் சுறுசுறுப்பு போன்றவை வரவேண்டும். ஆனால், தினமும் சாப்பிட்டப்பிறகு துõக்கம் வரும் பழக்கம் இருந்தால் உடல் அளவில் சிறுகுறைபாடு இருப்பதாக அர்த்தம். சாப்பிட்டப்பிறகு, அரை ஸ்பூன் சீரகம், ஓமம், சோம்பு, ஏலக்காய் விதை, கிராம்பு ஆகியவற்றை கொஞ்சம் வாயில் போட்டு மென்று அதிலிருந்து வரும் சாற்றை எச்சிலுடன் விழுங்கினால் இவற்றிலுள்ள சூடான வீரீயம் உணவை வயிற்றில் அதிக நேரம் தேங்கவிடாமல் விரைவாக செரிக்க செய்துவிடும். அதனால் துõக்கம் வருவது தடுக்கப்படும். ************************ 27.7.2012 *சிறு எடை உள்ள ஆணி நீரில் மூழ்கிவிடுகிறது. அதிக எடையுள்ள கப்பல் எப்படி மிதக்கிறது? - பி. ஆபித், கிருஷ்ணகிரி. தண்ணீரில் விழும் ஒரு பொருள் தனது எடைக்கு சமமான நீரை இடம் மாற்றினால், அது மிதக்கும் ; ஒரு பொருளின் எடை அது இடம்மாற்றும் நீரின் எடையைவிடக் குறைவாக இருந்தால், அது மூழ்கிவிடும். இது ஒரு அறிவியல் விதி. தண்ணீரைவிட காற்றின் அடர்த்தி குறைவு . எனவே, காற்றைக் கொண்டிருக்கும் பொருட்களும் தண்ணீரில் மிதக்கும் . கப்பலின் வடிவமைப்பு, அது தனது எடைக்கு சமமான கடல் நீரை இடம்மாற்றும் வகையில் உள்ளது . அதோடு , கப்பலுக்குள் காற்றோட்டமும் உள்ளது . இதனால் , கடலில் கப்பல் மிதக்கிறது . சிறிய இரும்பு ஆணி தமது எடைக்கு சமமான நீரை இடம்மாற்றும் வகையில் இல்லை . அவை தமது எடையை விடக் குறைந்த எடையிலான நீரையே இடம் மாற்றுகின்றன . அவற்றுக்குள் காற்றோட்டமும் இல்லை . இதனால் , அவை கடலில் மூழ்கிவிடுகின்றன. *ஆன் லைன் ஷாப்பிங் என்றால் என்ன? -எல். ஸ்ரீராம், திருச்சி. இணையம் மூலம் ஒரு பொருளை வாங்குவதும், விற்பதும் இன்றைய தேதியில் ஒரு ஆச்சரியகரமான விஷயமே அல்ல! தினம் ஒரு ஷாப்பிங் தளம் புதியதாய் உருவாகிக் கொண்டிருக்கிறது! ரயில் ,பிளைட் டிக்கெட் புக்கிங் முதல், காலணிகள், ஆடைகள், கண்ணாடிகள், கம்ப்யூட்டர் பாகங்கள், சுற்றுலா பயணங்கள், பூக்கள், மளிகை சாமான்கள், மொபைல்கள், புத்தகங்கள், பர்னிச்சர்கள் இப்படி ஆன் லைனில் ஷாப்பிங் பண்ணலாம். இச்சேவைகளை வழங்கும் அனைத்து தளங்களும் நம்பத்தகுந்தவைதானா? அவ்வாறு வாங்கிடும் அனைத்து சேவைகளும், பொருட்களும் சிறந்தவைதானா? இணையத்தில் கிடைக்கும் கவர்ச்சிகர சலுகைகள் நிஜம்தானா? இணையம் மூலம் பண பரிமாற்றம் செய்வது பாதுகாப்பானதுதானா? என்பதை எல்லாம் நீங்கள்தான் தீர்மானித்து கொள்ள வேண்டும். *நாக்கில் நரம்பு இல்லாம பேசாதே! என்கிறார்களே, நாக்கிற்கு நரம்பு உண்டா, இல்லை? -ஆர். நிஜா ராம்குமார், ஸ்ரீரங்கம். நம்முடைய நாக்கு என்பது, வாயின் அடியில் எலும்போடு இணைக்கப்பட்ட எலும்புத்தசை என்னும் வகையைச் சேர்ந்த இளஞ்சிவப்பு நிறத் தசை. இது வாயில் இடும் உணவை பற்கள் மெல்லுவதற்குத் ஏற்றார்போல் நகர்த்தியும், புரட்டியும், திருப்பியும் தரும் உறுப்பு. உணவின் சுவையை உணரும் முதன்மையான உறுப்பு நாக்கு. நாக்கு பலவாறு வளையவல்லது, எனவே பேசுவதற்கும் துணை செய்கின்றது. வாயில் ஊறும் உமிழ்ந்நீரினால் நாக்கு எப்பொழுதும் ஈரமாக இருக்கும். நாக்கின் மேற்புறத்தில் உள்ள நுண்புடைப்புகளில் நான்கு வகையான நுண்புடைப்புகள் உள்ளன. சுவையுணர் நுண்புடைப்புகளுக்கு நாமுடிப்பு என்று பெயர். நாவின் நுண்புடைப்புகளாகிய நாமுடிப்புகளின் நான்கு வகைகளில் ஒருவகையான நாமுடிப்பு மெல்லிய இழைபோல் உள்ளது ( டிடூடிஞூணிணூட்) , இன்னொருவகையான நாமுடிப்பு, நாய்க்குடை அல்லது காளான் போல் தலைப்பகுதி பருத்து உள்ளது (ஞூதணஞ்டிஞூணிணூட்). மூன்றாவது வகை நாமுடிப்பு ஒரு வளையம் போன்ற வடிவில் உள்ளது. இதுவே நாமுடிப்புகளில் பெரியது (ஞிடிணூஞிதட்திச்டூடூச்tஞு). நான்காவது வகை தட்டையாக உள்ளது (ஞூணிடூடிச்tஞு).மற்றபடி நாக்கில் நரம்புகள் கிடையாது. ****************** *பறவைகளுக்கு பற்கள் இல்லை. ஆனால் எப்படி உண்கின்றன? 3/8/2012 - வே. பழனிவேல், காட்டூர். கோழி, புறா,குருவி, வாத்து, வான்கோழி, ஈமு போன்ற பறவைகள் விதைகள், தானியங்கள் போன்ற கடினமான உணவுப் பொருட்களை சாப்பிடுகின்றன என்பது உண்மைதான். ஆனால்,அவை பற்கள் உதவிகொண்டு கூழாக்கிச் சாப்பிடாமல், கடினமான உணவுகளை வேறுவகையில் ஜீரணிக்கின்றன. உடற்கூற்றின்படி, பறவைகளின் வயிற்றின் கீழ்ப்பகுதியில் கிஷார்ட் (எடித்த்ச்ணூஞீ) என்ற விஷேச உறுப்பு அமைப்பு இருக்கிறது. மனிதர்களின் வாயில் பற்களின் உதவியால் கடித்து, அரைத்து கூழாக்கி விழுங்குவதற்கு இணையான, உணவைக் கூழாக்கி செரிமானத்துக்கு தயார் செய்வது இந்த உறுப்பின் வேலையாகும். கடைவாய்ப் பற்களின் பணியைச் செய்யும் கிஷார்ட் பகுதி பறவைகள் விழுங்கும் சிறுசிறு கூழாங்கற்களையும், மணற்துகள்களையும் பயன்படுத்தி கடினமான உணவுகளை உடைத்து செரிமானத்திற்கு தயார்ப்படுத்துகிறது. சில நாட்களுக்கு ஒருமுறை தேய்மானமான கற்களைக் கழிவாக கழித்துவிட்டு, புதிதாக கற்களையும், மணலையும் உணவுடன் எடுத்துக் கொள்கிறது. இந்த கிஷார்ட் பகுதி தடிமனான தசைகளால் ஆனது. இதன் உட்புறத்தைப் பாதுகாக்கவும், செரிமானத்திற்கும் என்சைம்ஸ் இருக்கும். ஒரு சில பூச்சியினங்களின் பகுதியில் கடினமான செதில்களும், சிறு சிறு பற்கள் போன்ற அமைப்பும் இருப்பதுண்டு. எனவே பறவைகளுக்கு கிஷார்ட் உறுப்புதான் பற்களாக செயல்பட்டு உணவு செரிமாணத்துக்கு உதவுகின்றது. *கத்தரிக்காய், காயா அல்லது பழமா ? - ஆர். கீதாவாணி, நாமக்கல். எவை எல்லாம் விதைகளைக் கொண்டிருக்கிறதோ அவை எல்லாம் பழம் வகையைச் சார்ந்தது என்பது தாவரவியல் கோட்பாடு . எனவே, இந்த வரையறைப்படி பார்த்தால் கத்திரி பழம்தான். அது போல தக்காளி, வெள்ளரி ஆகியவையும் பழம்தான். கத்தரிக்காய், தக்காளிக்காய், வெள்ளரிக்காய் என்று சொல்வதே பழக்கமாக இருப்பதால், இவற்றைப் பழம் என்று சொல்லும் பழக்கம் பரவலாகயில்லை. *கிரிக்கெட்டில் ‘டாஸ்’ போடும் பழக்கம் எப்படி வந்தது? - வ.கி. நாகராஜன், வடக்காலத்துõர். கிரிக்கெட் நம் நாட்டு பாரம்பரிய விளையாட்டு இல்லை. அது இங்கிலாந்துகாரர்கள் கண்டுபிடித்த விளையாட்டு. இந்த விளையாட்டில் யார் முதலில் விளையாடுவது என்பதை தீர்மானிக்க பூவா, தலையா- டாஸ் போட்டு பார்க்கும் பழக்கம் கிரிக்கெட்டில் இருந்து வருகிறது. ஜூலியஸ் சீசர் காலத்தில் உபயோகத்தில் இருந்த நாணயத்தில் அவரின் தலை ஒரு பக்கத்தில் பொறிக்கப்பட்டு இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்கும் சூழ்நிலை வந்தால் அப்போது பேரரசர் இல்லாத போது அவரின் சார்பாகவும், கடவுளின் சாட்சியாகவும் நாணயத்தைத் துõக்கிப் போட்டு மேல் பாகத்தில் தலை பக்கம் விழுந்தால் சரியா ? தவறா ? என இவர்கள் கேட்ட கேள்வியின் பதிலாக எடுத்துக் கொண்டார்கள். அந்த பழக்கம் தொடர்ந்து கடைசியில் கிரிக்கெட் விளையாட்டு வரை வந்து விட்டது. ************** *யார் ரத்த தானம் செய்யக்கூடாது? 9.8.2012 - சி. சுகுமார், காரைக்கால். உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் ஆகியோர் ரத்ததானம் செய்யக்கூடாது. *பான் கார்டு என்பதன் பொருள் என்ன? அதன் பயன்பாடு பற்றி சொல்லுங்க அங்கிள்! -ஒய்.எல். ஸ்ரீரவிராகுல், அவ்வையார்பாளையம். பான் (கஅN) என்பது நிரந்தரக் கணக்கு எண் (கஞுணூட்ச்ணஞுணt அஞிஞிணிதணt Nதட்ஞஞுணூ) என்ற பத்து இலக்க எண் என்பதை குறிக்கும். இந்திய வருமான வரி செலுத்தும் ஒவ்வொரு இந்தியரும் இந்த எண்ணைப் பெற்றிருப்பது அவசியம். வங்கிக் கணக்கு தொடங்க, தொலைபேசி இணைப்பு பெற, வங்கிக் கணக்கில் 50 ஆயிரத்துக்கு மேல் பணம் போடவோ எடுக்கவோ, பான் எண் வேண் டும். மியூச்சுவல் பண்ட், பங்குச் சந்தை முதலீடு போன்றவற்றிற்கு பான் எண் அவசியம். இந்த பான் கார்டை பெற நாடு முழுக்க உள்ள ஐ.டி. பான் சேவை மையங்களில் ஏதாவது ஒன்றில் நீங்கள் விண்ணப்பிக்கலாம். கட்டணம் 94 ரூபாய். ஆன்லைன் மூலமும் (டttணீ://தீதீதீ.தtடிடிண்டூ.ஞிணி.டிண/) விண்ணப்பிக்கலாம்! உங்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணம் ஒன்றின் நகல், பாஸ் போர்ட் அளவு புகைப்படம் ஒன்றையும் இணைத்து, படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால், 15 நாட்களில் பதிவுத் தபாலில் பான் கார்டு வீடு தேடி வந்து விடும்.! *இரும்பு எவ்வாறு துருபிடிக்கிறது? மற்ற உலோகங்களும் துருப்பிடிக்குமா? - அ.ஆரிமுத்து, வாழைப்பந்தல். ஒவ்வொரு பொருளும் இயற்கையில் வேறு வடிவத்தில் கிடைக்கிறது, குறிப்பாக உலோகங்கள் அதன் தாதுக்களாக தான் கிடைக்கிறது , இரும்புத்தாது (டஞுட்ச்tடிtஞு)., அலுமினியத்தாது (ஞணிதுடிtஞு). தாமிரத்தாது (ஞிதணீணீணூடிtஞு) போன்றவைகளாகும். இப்படி கிடைக்கும் தாதுக்களில் உலோகம் தனித்து இல்லாமல் அதன் ஆக்ஸைட் வடிவத்தில் இருக்கிறது. இப்படி இருக்கும் உலோகம் அதன் இயற்கை வடிவத்தில் இருந்து தனியே பிரித்து எடுக்கப்படுகிறது, இப்படி தனித்து எடுக்கப்படும் உலோகம் மீண்டும் அதன் இயற்கை வடிவதிற்க்கு மாறும் வேதியல் மாற்றம் தான் துருப்பிடித்தல். அலுமினியம் பாத்திரத்தில் அலுமினியம் ஆக்ஸைட் இயற்கையிலே படர்ந்து விடுவதால் அது மேலும் துருப்பிடிப்பதில்லை. நாம் வீடுகளில் பயன்படுத்தும் பூஜை பாத்திரங்கள் பித்தளையில் (அது தாமிரம் உலோகம் கலந்த கலவை) தாமிரம் இருப்பதால், அதில் காப்பர் ஆக்ஸைட் ஆக நம் கண்களுக்கு தெரியும் பச்சை நிறமாக படியும் படற்கையும் துரு தான். தங்கம் இயற்கையில் தனி தனிமம் ஆக கிடைக்கிறது, ஆதலால் அது ஆக்ஸைட் வடிவம் மாறாமல் துருப்பிடிக்காமல் இருக்கிறது. *******************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக