திங்கள், 6 ஆகஸ்ட், 2012

ஆச்சரியம்! அதிசயம்! அபூர்வம் (133 தகவல்கள் ) பாகம் மூன்று/ தேவராஜன்/

ஆச்சரியம்! அதிசயம்! அபூர்வம் (133 தகவல்கள் ) பாகம் மூன்று/ தேவராஜன்/ 1*நினைவூட்டும் மோதிரம்! பிறந்த நாள் போன்ற முக்கியமான சில நாட்களைக் கூட மறந்துவிட்டு, ‘ஆஹா மறந்து போச்சே!’ என்று புலம்புவோர் நம்மில் பலருண்டு. இவர்களுக்கு உதவுவதற்காக வந்துள்ளது, ‘நினைவூட்டும் மோதிரம்’. இந்த மோதிரத்தின் உள்ளே உள்ள அமைப்பில், ஆண்டில் ஒரு முக்கிய நாளை நாம் பதிவு செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட தினத்துக்கு முந்தைய நாள், இந்த ’நினைவூட்டும் மோதிரத்தின்’ ஒரு பகுதி 120 டிகிரி பாரன்ஹீட் அளவுக்குச் சூடாகி, 10 நொடிகள் நமது மோதிர விரலைச் சுடுமாம். அந்த நாள் முழுவதும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ’சுட்டு’க் கொண்டே இருக்குமாம்! 2*ஆ... ஆச்சரியம்! *ஆஸ்திரேலியாவில் இருக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும். *கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே துõங்கும். *பச்சோந்தியின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும். *குவாரின் என்ற பறவை மல்லாந்து துõங்கும். *புறா ஓய்வெடுக்காமல் ஆயிரம் கி.மீட்டர் வரை பறக்கும் திறன் படைத்தது. *ஒரே சமயத்தில் நுõற்றுக்கும் அதிகமான முட்டைகளை இடும் பறவை நெருப்புக் கோழி. *வான்கோழிகள் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை. *நியூசிலாந்து நாட்டில் காக்கைகள் கிடையாது. 3*‘நறுக்’ கதை ஒரு மன்னர், ஜென் துறவியிடம் பவுத்தக் கொள்கைகளைக் கற்கப் போனார். துறவியிடம் அவருக்கான அனைத்து மரியாதையும் கிடைத்தது. பாடம் கற்றுக்கொள்ளும் போதுமட்டும் இருவருக்கும் மாணவன், ஆசிரியர் என்கிற அணுகுமுறை கறாராக இருந்தது. மன்னர் ஒருநாள் துறவியிடம் ‘கர்வம் என்றால் என்ன’ என்று கேட்டார். துறவி முகம் சிவந்து கோபத்தோடு ‘ மன்னனே, உனக்கு அறிவில்லையா இதென்ன சிறுபிள்ளைத்தனமான கேள்வி ?’ என்று பதில் சொன்னார். ‘துறவியே என்ன? என்னையே அவமதிக்கிறீர்கள்,நான் யார் தெரியுமா ?’ என்று மன்னர் கோபப்பட்டாராம். உடனே துறவி சாந்தமாக ‘அன்பான மன்னரே இதுதான் கர்வம்’ என்று சொன்னாராம். 4*விண்வெளி ஓட்டல்! *விண்வெளியில் ஓட்டல் ஒன்றை அமைக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. பூமியிலிருந்து 250 மைல் உயரத்தில் அமையவிருக்கும் இந்த ஓட்டலில் ஒரே நேரத்தில் 7 பேர் தங்கும் வகையில் நான்கு அறைகள் மற்றும் பூமி கீழே சுற்றுவதை பார்க்கும் வகையில் அமைந்த பெரிய ஜன்னல்கள் ஆகியவை இடம் பெறும். ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் உதவியுடன் 2 நாட்கள் பயணம் செய்து இதனை அடையலாம். விண்வெளி சுற்றுலா செல்ல விரும்பும் பணக்காரர்கள், விண்வெளி ஆராய்ச்சி மேற்கொள்வோர் ஆகியோருக்கு ஏற்ற வகையில் உருவாகும் இதில் 5 நாட்கள் தங்குவதற்கு 1 லட்சம் முதல் 5 லட்சம் பவுண்டுகள் வரை செலவாகும். மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரியும் விண்வெளி வீரர்கள் அவசர காலத்தில் பூமிக்கு திரும்புவதற்கு பதிலாக தங்குமிடமாகவும் இந்த ஓட்டல் இருக்கும். இதனை ஆர்பிடல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் உருவாக்குகிறது. வரும் 2016ம் ஆண்டிற்குள் இதன் பணிகள் முடிவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5* ‘கடி’ தகவல்! வாயில் எதையாவது போட்டு கடக் மடக் எனக் கடிக்கிறோம் அல்லவா? அவ்வாறு கடிக்கும்போது நாம் எவ்வளவு அழுத்தம் கொடுத்துக் கடிக்கிறோம் என்பது யாருக்காவது தெரியுமா? முன்பற்களால் கடிக்கும் போது 24 கிலோ அழுத்தத்தையும், கடைவாய்ப் பற்களால் கடிக்கும்போது 90 கிலோ அழுத்தத்தையும் கொடுக்கிறோம். சில சமயம் 120 கிலோவுக்கும் மேலான அழுத்தம் கொடுத்தும் கடிப்பதும் உண்டு. **************************** 6*‘நறுக்’ கதை! ஆசிரியர் : சூரியனுக்கு நிகரான ஒரு பொருள் உலகத்தில் கிடையவே கிடையாது. மாணவன் : இருக்கு சார்! ஆசிரியர் : அப்படியா! அது என்ன பொருள்? மாணவன் : விளக்கு. ஆசிரியர் : எப்படி விளக்கு ஒரு பெரிய விஷயமாகும்? மாணவன் : சூரியனால் செய்ய முடியாத ஒரு விஷயத்தை விளக்கு செய்கிறதே! ஆசிரியர் :அப்படி என்ன செய்கிறது? மாணவன் :இரவில் வெளிச்சம் தருகிறதே! அது சூரியனால் இயலாதே! எந்தப் பொருளையும் அதன் அளவை வைத்து மதிப்பிடாமல், அதன் பயன்பாட்டை வைத்துத்தான் மதிப்பிட வேண்டும் என்பதுதான் இந்த நறுக்கதையின் கருத்து. 7*பயன்படுத்தும் இடத்திற்கேற்ப ஒரு சில வார்த்தைகள் பல அர்த்தங்களைக் கொடுக்கும். அவை: திங்கள்: மாதம், நிலவு, கிழமை. ஆறு: நதி, எண்ணின் பெயர். இசை: சம்மதித்தல், சங்கீதம். மாலை: பூமாலை, பொழுது. நகை: புன்சிரிப்பு, அணிகலன். மதி: அறிவு, நிலவு, மதித்தல். மெய்: உண்மை, உடம்பு. உடுக்கை: ஆடை, இசைக்கருவி. அன்னம்: சோறு, பறவை. நாண்: கயிறு, வெட்கப்படுதல். வேங்கை: புலி, ஒரு வகை மரம். ஞாயிறு : கிழமை, சூரியன் 8* மைக்ரோவேவ் ஓவன் வந்த கதை இரண்டாம் உலகப் போரின்போது விமானங்களையும், கப்பல்களையும் கண்டறிய உதவும் ரேடார்களில் மேக்னட்ரான் என்ற பொருள் பயன்படுத்தப்படுத்தப்பட்டது. அதன் அருகில் கைகளைக் கொண்டு சென்றால் குளிருக்கு இதமாக, வெதுவெதுப்பாக இருக்கும். பெர்சி ஸ்பென்சர் என்ற அமெரிக்கர் அப்படி அடிக்கடி குளிர் காய்வார். ஒருநாள் ஸ்பென்சர் குளிர்காய்ந்து கொண்டிருந்தபோது, அவரது சட்டைப் பாக்கெட்டில் இருந்த மிட்டாய் உருகிவிட்டது. அப்போதுதான் அவருக்கு, இதைச் சமையல் உபகரணமாகப் பயன்படுத்தலாமே! என்று தோன்றியது. ஸ்பென்சரும், அவரது உதவியாளர்களும் தங்கள் ஆராய்ச்சியைத் தொடர்ந்தனர். பாப்கார்ன், பன்றி இறைச்சி போன்றவற்றைக் கொண்டு பரிசோதித்தார்கள். ஓவனுக்குள் வைக்கப்பட்ட அவை, நன்றாகச் சமைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, வர்த்தகரீதியாக மைக்ரோவேவ் ஓவன்கள் தயாரிக்கத் தொடங்கப்பட்டது. 1953-ம் ஆண்டில் உரிமம் பதிவு செய்யப்பட்டு, ஏழே ஆண்டுகளில் உலகின் வசதிமிக்க சமையலறைகளில் நுழைந்துவிட்டது மைக்ரோவேவ் ஓவன். 9*நிலாவில் கார் ஓட்ட முடியுமா? கண்டிப்பாக முடியும். நிலாவில் கார் ஓட்டி நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு ஓட்டியது பெட்ரோல் வண்டியோ அல்லது டீசல் வண்டியோ கிடையாது. காரணம் நிலாவில் காற்று இல்லாததால் இவ்வகை வண்டிகளை இயக்க முடியாது. பெட்ரோல் எஞ்சின் இயங்க ஆக்சிஜன் தேவை. அங்கு ஓட்டப்பட்டது மின்சார வண்டிதான். வண்டியின் பெயர் அப்போலோ நுõனார் ரோவிங் வெகிக்கிள். இதை இயக்கியது ஒரு ரோபோட்தான். இது நடந்தது 1971ம் ஆண்டு. ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில் இந்த கார் நிலாவில் இயங்கியுள்ளது. 10* ஆ... அப்படியா! வாத்துக்கள் நீரில் வட்டமடித்துக் கொண்டே துõங்கும். ராபின் இனப்பறவை பாடிக் கொண்டே துõங்கும். பாம்புகள் கண்களைத் திறந்து கொண்டேக் கூட துõங்கும். டால்பின்கள் ஒரு கண்ணை மட்டும் திறந்து கொண்டே துõங்கும். வரிக்குதிரை நின்று கொண்டேத் துõங்கும். மாடுகள், ஒட்டகங்கள் அசை போட்டுக் கொண்டேத் துõங்கும். கோழிகள் நின்று கொண்டேத் துõங்கும். குரங்குகள் மரத்தில் தொங்கியபடியேத் துõங்கும். 11*பிரசவிக்கும் ஆண் மீன்! மீன் இனத்தைச் சேர்ந்த உயிரினம் கடல்குதிரை. முதலைக் குட்டியைப் போலிருக்கும். ஆண் கடல் குதிரையின் வாலின் கீழே பை போன்ற அமைப்பு இருக்கும். ஆண் கடல் குதிரைகளின் இந்தப் பையில்தான் பெண் கடல் குதிரைகள் முட்டையிடுகின்றன. முட்டைகள் பொரிவதும் வெளிவரும் குஞ்சுகள் சிறிது காலம் வளர்வதும் இந்தப் பையில்தான். முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும் நேரத்தில் ஆண் கடற்குதிரைக்கு பிரசவ வலி வரும். அப்போது அது நீருக்கடியில் உள்ள புதற்களுக்கிடையே கிடந்து மிகவும் சிரமப்படும். உடலை முன்னும் பின்னுமாக அசைத்து வளைக்கும். இப்படி வளையும்போது பையின் தசைகள் விரிவடையும். ஒவ்வொரு முறை வளையும்போதும் ஒவ்வொரு குஞ்சு வெளிவரும். 12*மயில் சிலந்தி: மயில் சிலந்தி இனம் ஒன்று ஆஸ்திரேலியாவில் உள்ளது. இதன் உயரம் 4 முதல் 5 மி.மீ. இதன் உடற்பகுதியில் கருப்பு, சிவப்பு, ப்ரவுன் நிறக்கோடுகளும், வயிறுப்பகுதியில் பச்சை, சிவப்பு, நீல நிற கோடுகளுடன் இருக்கும். ஆண் சிலந்தியின் வயிறு இரண்டு மடிப்புகளும், பக்கவாட்டு தோல்களுக்குள் மூடியிருக்கும். இது செங்குத்தாக நின்று தன் அடிவயிற்று மடிப்புகளை விரிக்கும் போது மயில் தன் இறக்கைøயை விரித்து இருப்பது போன்று காட்சியளிக்கும். இதற்கு பறக்கும் சிலந்தி, ஊர்ந்து செல்லும் சிலந்தி என வேறு பெயர்களும் உண்டு. ************* 13*இரண்டு காலில் நடக்கும் பன்றி! பொதுவாக பன்றிகளுக்கு நான்கு கால்கள் இருக்கும். நான்கு கால்களால் தான் நடக்கும். ஆனால் சீனாவில் அனுஷி மாகாணத்தில் உள்ள ஷிஷான் என்ற குக்கிராமத்தில் அதிய பன்றி ஒன்று பிறந்திருக்கிறதாம்! இந்த பன்றிக்கு இரண்டு கால்கள் மட்டுமே உள்ளது. இருப்பினும் இரண்டு கால்களால் எப்படி நடப்பது என்பதை இந்தப் பன்றி கற்றுத் தேர்ந்துள்ளது. ஜார்ஜ் ஓர்வெல் என்ற விலங்குப் பண்ணையில் இந்த பன்றி இருக்கிறது. இந்த பன்றியின் உரிமையாளர் ஜி சிங்பிங் கொடுத்த பயிற்சியினால் முன்னங் கால்களின் உதவியுடன் நடக்க கற்றுக் கொண்டுள்ளது. 14* உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் என்பவரின் 15 மாத ஆண்குழந்தை அக்ஷித் சக்சேனா என்ற சிறுவனுக்கு 34 விரல்கள் உள்ளன. பிறக்கும்போதே அக்ஷித்துக்கு கைகளிலும் கால்களிலும் இயற்கைக்கு மாறாக அதிகளவிலான விரல்கள் இருந்தன. இந்த சிறுவனுக்கு இரண்டு கைகளிலும் தலா 7 விரல்கள் வீதம் 14 விரல்களும் கால்களில் தலா 10 விரல்கள் வீதம் 20 விரல்களும் ஆக முப்பத்து நான்கு விரல்கள் உள்ளன. பிறக்கும்போதே சாதனையுடன் பிறந்த அக்ஷித் கின்னஸ் சாதனை படைத்துள்ளான். விரல்கள் அசாதாரண எண்ணிக்கையில் இருப்பதால் அக்ஷித்தால் நிற்கக்கூட முடியவில்லை. இதனால் அதிகமான விரல்களை அறுவைச் சிகிச்சை செய்து அகற்றும்பொருட்டு டில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை நாடி இருக்கிறார்கள். 15*உலகிலேயே செங்குத்தான நேரான நீளமான படிகள் தான் நீங்கள் படத்தில் பார்ப்பது. மிக நீளமான இந்தப் படிகள் செயின்ட் ஹெலெனா என்ற தீவுப் பகுதியில் இடம்பெற்றுள்ளன. 1829ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் படிகள் தற்போதும் அப்படியே இருக்கின்றன. 699 படிகளையும் 200 மீட்டர் உயரத்தையும் கொண்ட இந்த நீளமான படிகளைப் பார்க்கவே இந்த தீவுக்கு சுற்றுலாப் பயணிகள் நிறைய பேர் வருகிறார்களாம்! 16*அதிசய கடல் பறவை கடல் பறவை என்று அழைக்கப்படும் ஒருவகை பறவை அல்ப்ட்ராஸ். இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் முட்டையிடுகிறது. இந்த முட்டையை அதிகபட்சமாக 70 நாட்கள் வரை அடைகாக்கிறது. அதிக நாட்கள் அடைகாக்கும் பறவைகளில் இதுவும் ஒன்றாகும். இதுபோன்று மொத்தம் 13 வகையான பறவைகள் உள்ளன. இவற்றில் நீண்ட இறக்கை கொண்டது அல்ப்ட்ராஸ். இது வானில் மிக நீண்ட நேரம், கழுகு போல் காற்றில் இறக்கையை அசைக்காமலேயே மிதந்து கொண்டிருக்கும். 17*அதிவேகமாக நீந்தும் மீன் ‘சாயில் பிஷ்’ என்றழைக்கப்படும் இவ்வகை மீன் தான் உலகிலேயே அதிவேகமாக நீந்தும் மீன். இந்த மீன்கள் கடலில் 75 எம்பிஎச் வேகத்தில் நீந்தும் தன்மை கொண்டவை. மீன்கள் வேட்டையாடுவதிலும் வல்லமை மிக்கவை. உலகின் வேகமான மீன்களான இவற்றை ஜெர்மனியைச் சேர்ந்த 47 வயதான ரெய்ன்ஹார்டு டெர்ஷெர்ல் என்பவர் நுட்பமான முறையில் படம் பிடித்துள்ளார். ஏனெனில் இவ்வகை மீன்களை புகைப்படம் எடுப்பது என்பது இயலாத காரியம். இந்த மீன்கள் எப்போதும் குழுவாக சேர்ந்து நீந்தும் தன்மை கொண்டவை. 18*மிகப் பெரிய துளை! மத்திய அமெரிக்காவில் இருக்கும் பெலீஸ் தீவில், உலகின் மிகப் பெரிய துளை உருவான பகுதி உள்ளது. இதற்கு பெயர் ‘கிரேட் ப்ளூ ஹோல்’. இந்த துளை 70 கிலோமீட்டர் பரப்பளவிலும், 124 கிலோமீட்டர் ஆழத்திலும் உள்ளது. கடல் சீற்றம் ஏற்படும் போது பூமியில் துளை ஏற்பட்டுள்ளது, ஏற்கனவே இங்கிருந்த குகைகள் இப்போது மிகப் பெரிய துளையாக மாறியுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். யுனெஸ்கோ அமைப்பால் உலகின் சிறந்த பாரம்பரிய இடமாக இது தேர்வாகியுள்ளது. ... 19* ஒலிம்பிக் 2012 லண்டனில் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகிறது. லண்டன் நகரில் எந்த பக்கம் திரும்பினாலும் ஒலிம்பிக் போட்டிக்கான சின்னங்கள், அறிவிப்புகள் தான். போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்களுக்குத் தேவையான தங்கும் விடுதி, படுக்கை விரிப்புகள் தயார் நிலையில் உள்ளன. லண்டன் ஹைட் பார்க் விடுதிக்கு 16 ஆயிரம் படுக்கை விரிப்புகள், விளையாட்டு சின்னங்கள் வந்துள்ளன. படத்தில் இங்கிலாந்து நாட்டு படகு சவாரி வீரர் மேத்யூ பின்சென்ட் தன் அறைக்கு உதவியாளருடன் பெட்டை எடுத்துச் செல்கிறார். 20* குடலைக் காட்டி தப்பிக்கும் மீன் எதிரிகளிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள, தன் குடலையே கொடுத்து விட்டு தப்பிக்கும் கடல் வெள்ளரி மீன் இனங்கள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன. உணவிற்கும், உயிர் பிழைக்கவும், இனப்பெருக்கம் செய்வதிலும் பல வினோதங்கள் மீன் இனங்களிடம் உண்டு. உணவு, இடம் பாதுகாப்புக்கு ஒன்றையொன்று சார்ந்திருத்தல், இருபாலரும் உறவால் பலன் பெறுதல் என எத்தனையோ உறவு மலர்கள். அவற்றுள் சற்று வித்தியாசமானது கடல் வெள்ளரி. இவை தன் உடலினுள் மீனொன்று பதுங்கி வாழ அடைக்கலம் தருகிறது. சேற்றின் அழுக்கை தின்று, சுத்தப்படுத்தும் இயல்பு கொண்டது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கடல் வெள்ளரி, ஆள் விழுங்கி மீன்களிடமிருந்து தப்பிக்க பல தந்திரங்களை கையாள்கிறது. அவற்றுள் ஒன்றுதான் தனது குடலையே வெளியேற்றி விடுவது. தாக்க வரும் இனம் அதை தின்று விட்டு போய்விடும். குடலில்லாத வெள்ளரி மீனுக்கு மீண்டும் குடல் உருவாகிவிடும். இவை மன்னார் வளைகுடா பகுதி கடலடியில் காணப்படும் ஒரு அரிய வகை உயிரினம். 21* அசைவ பாண்டா கரடி இயற்கை சூழல் மற்றும் வனவிலங்குகளின் நடவடிக்கைகளை ஆராய, அடர்ந்த வனப்பகுதிகளில் கேமரா பொருத்தி பல நாடுகள் கண்காணித்து வருகின்றன. சீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சிசுவான் மாகாணம் வேங்லாங் வனப்பகுதியில் பொருத்தப்பட்ட கேமராவில், பாண்டா கரடி அசைவத்தை சுவைக்கும் அரிய காட்சி பதிவாகி உள்ளது. பொதுவாக பாண்டா கரடிகள் மிகவும் அமைதியானவை. இலை, பழங்கள், மூங்கில்களை தின்று வாழ்பவை. ஆனால், அசைவம் உண்பதை பார்த்து வன ஆர்வலர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். வனவிலங்குகளின் இறப்பு மற்றும் அவற்றின் உடலில் காணப்பட்ட தழும்புகளுக்கும் பாண்டா காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பொதுவாக பாண்டா கரடிகள் ஒரு நாளைக்கு 14 கிலோ மூங்கிலை உண்ணும். இவற்றின் உடல் மற்றும் செரிமான அமைப்பு சைவம், அசைவம் இரண்டையும் தின்ன ஏதுவாக உள்ளதாக முந்தைய ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன. 22* குளோனிங் பூனைகள் உலகில் முதன் முறையாக குளோனிங் முறையில் ஆடுகள் உருவாக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து இப்போது பூனைகள் உருவாகியுள்ளன. அமெரிக்காவில் மின்னெ சோபாவில் உள்ள மயோ கிளினிக் மருத்துவக் கல்லுõரி விஞ்ஞானிகள் இச்சாதனை படைத்துள்ளனர். இந்த பூனைகளின் பச்சை நிறம், ஒளிரும் ஜெல்லி மீன்களில் இருந்து எடுத்து செலுத்தப்பட்ட மரபணுவாகும். இதுதான் பூனைகளின் உடலில் பச்சை நிறத்திலான புரோட்டீனை உருவாக்கி ஒளிர செய்கின்றன. இந்த பூனைகள் மரபணு மாற்றப்பட்டுள்ளன. இவற்றில் உள்ள பெரும்பாலான மரபணு குரங்கில் இருந்து எடுத்து செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு ‘டிரிம்ஷிப்’ என்று பெயர். இவை விலங்குகளை தாக்கும் ‘எப்.ஐ.வி.’ எனப்படும் வைரஸ் தொற்றுநோயில் இருந்து இவற்றை பாதுகாக்கும். குளோனிங் முறையில் 3 பூனைகள் பிறந்துள்ளன. அவற்றுக்கு டிஜிகேட்1, டிஜிகேட்2, டிஜி கேட் 3 என பெயரிடப்பட்டுள்ளன. அவை பச்சை நிறத்தில் உள்ளன. 23*தண்ணீர் பீய்ச்சும் நட்சத்திரங்கள் நெதர்லாந்தில் உள்ள வெஸ்டன் பல்கலைகக்கழக விஞ்ஞானிகள் விண்வெளியில் உள்ள சூரிய குடும்பம் குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சூரியனை சுற்றி அளவில் சிறியதாக உள்ள நட்சத்திர கூட்டம் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இவை பூமியில் இருந்து 750 ஒளி ஆண்டுகள் துõரத்தில் உள்ளது. இவை கடந்த 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும் என கருதப்படுகிறது. இவை வாயுவினால் ஆன மேக மூட்டத்துக்குள் துõசி போன்று காணப்படுகின்றன. இந்த மேக மூட்டத்தை அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய டெலஸ்கோப் மூலம் ஆய்வு செய்தனர். அப்போது அந்த நட்சத்திர கூட்டத்தை சுற்றிலும் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயுக்கள் படர்ந்து இருப்பதை கண்டறிந்தனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், பல ஆயிரம் டிகிரி வெப்ப நிலை மாற்றத்தின் மூலம் ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் ஒன்று சேர்ந்து அது தண்ணீராக மாறுகிறது. அந்த தண்ணீரை நட்சத்திர கூட்டத்தின் வடக்கு மற்றும் தெற்கு துருவங்களில் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. 2 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் அந்த தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. இந்த தகவலை வெஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானி லார்ஸ் கிறிஸ்டென்சென் தெரிவித்துள்ளார். *********** 24*உலகின் மிகச் சிறிய குதிரை உலகின் மிகச் சிறிய குதிரை அமெரிக்காவின் நியூ ஆம்ஸ்யர் நகரில் கண்டறியப்பட்டுள்ளது. அதன் பெயர் ‘ஐன்ஸ்டீன்.’ இதன் எடை 2.7 கிலோ. உயரம் 35.5 செ.மீ . ‘இது பிறக்கும் போதே மிகக் குறைந்த எடையில் பிறந்ததால் உலக சாதனைக்கு பரிந்துரைக்கப்பட்டது’ என அதன் உரிமையாளர் ரேய்ச்சல் வாக்னர் கூறுகிறார். இதற்கு முன்னர் 2006ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் ‘தம்பளீனா’ என்ற குதிரை இடம்பிடித்திருந்தது. அதன் உயரம் 44.5 செ.மீ. எடை 3.85 கிலோவாக இருந்தது. 25* உலகின் உயரமான கட்டடம் 2010ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 828 மீட்டர் உயரம் கொண்ட ‘பேர்ஜ் கலிபா’ என்ற கட்டடமே மற்ற கட்டடங்களுக்கு போட்டியாக இருந்தது. ஆனால், இப்போது சவுதி அரேபியாவில் கட்டப்பட்டு வரும் 1,050 மீட்டர் உயரமான இந்த ‘அசர்பைஜான்’ உலகின் மிக உயரமான கட்டடம் என்ற பெயரைத் தட்டிச் செல்ல உள்ளது. இந்தக் கட்டடத்தை நிர்மானிப்பதற்கு 2 ஆயிரம் ஹெக்டர் நிலம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. 189 மாடிகளை கொண்ட இக்கட்டடத்தை வரும் 2022ம் ஆண்டில் கட்டிமுடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்! 26* தண்ணீரிலும் தரையிலும் செல்லும் வாகனம் வாகனங்களை அறிமுகப்படுத்தும் போது பொதுவாக தரைவழி, நீர்வழி, வான்வழி என்று பிரித்துத்தான் அறிமுகப்படுத்துவார்கள். ஏற்கெனவே ஆகாயத்திலும், நீரிலும் செல்லக்கூடிய ‘சீ பிளேன்கள்’ அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. இப்பொழுது அவற்றையெல்லாம் தாண்டி தரையிலும் தண்ணீரிலும் பாய்ந்து செல்லக்கூடிய புதிய வகை டிரக் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீரிலும் தரையிலும் பயணம் செய்யும் ஆற்றலை கொண்டுள்ளதால் அதற்கு அட்ணீடடிtணூதஞிடுண் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த டிரக் நீரில் மணிக்கு 48 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 12 பயணிகள் ஒரே நேரத்தில் பயணம் செல்லக்கூடிய இந்த டிரக்குகளின் எடை 1,500 கிலோ. 27* கழுகு ஓட்டல் நேபாளத்தின் காத்மாண்டு பகுதியில் காணப்படும் இந்த உணவு விடுதியில் தினந்தோறும் பலவகையான விலங்குகளை கழுகுகளுக்கு உணவாக போடுவார்களாம். இந்த உணவு விடுதி கடந்த 2006ம் ஆண்டிலிருந்து இயங்கி வருகின்றது. 28* மேகமே நுழைவு வாயில் சிகாகோவில் உள்ள மில்லினியம் பூங்காவில் அமைந்துள்ளது இந்த மேக நுழைவுவாயில். இந்நுழைவாயிலை பிரிட்டனில் வசிக்கும் இந்தியரான கலைஞர் அனிஷ் கபூர் வடிவமைத்துள்ளார். மேகத்தை பிரதிபலிக்கும் இந்த நுழைவாயில், கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளதால் இதில் சிகாகோ நகரமே அழகாக காட்சியளிக்கிறது. 29* ஆச்சரிய விலங்குகள் தென் ஆப்பிரிக்காவின் சுரினாம் நாட்டில் அடர்ந்த காட்டுப்பகுதிகள் அதிகம் உள்ளன. இங்கு மற்ற நாடுகளில் இல்லாத ஏராளமான உயிரினங்கள் வாழ்கின்றன. இது தொடர்பாக சர்வதேச உயிரியல் குழு ஒன்று ஆய்வு நடத்தியது. அப்போது இதுவரை கண்டுபிடிக்கப்படாத 40 விதமான உயிரினங்களை கண்டுபிடித்து உள்ளனர். தவளை, மீன், வண்ணத்துபூச்சி போன்றவற்றில் பல புதிய வகை உயிரினங்கள் அங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதில் வித்தியாசமான தவளை, பல வண்ணங்களை கொண்ட வெட்டுக்கிளி , கைகள் போன்ற அமைப்பு உள்ள கெளுத்தி மீன் போன்றவை முக்கியமானதாகும். தொடர்ந்து அங்கு ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதுவரை கண்டுபிடிக்கப்படாத இன்னும் ஏராளமான உயிரினங்கள் அங்கு இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். ********* 30*கோபுரங்களில் தேசத்தலைவர்கள் *கோயில் கோபுரங்களில் பல கடவுள் சிற்பங்கள் இருப்பதைப் பார்த்திருப் போம். ஆனால், மதுரை மேலமாசி வீதி- வடக்கு மாசி வீதி சந்திப்பில் உள்ள நவநீத கிருஷ்ணன் கோயில் கோபுரத்தில் மகாத்மா காந்தி, கஸ்துõரிபாய், ஜவஹர்லால் நேரு, நேதாஜி ஆகியோரின் சிலைகள் இடம் பெற்றுள்ளன. * ஐயன்பாளையம் முத்தாலம்மன் கோயில் கோபுரத்திலும் காந்தி, நேரு ஆகியோரின் சிலைகளைக் காணலாம். * புதுச்சேரி உப்பளத்திலுள்ள நேதாஜிநகர் தேசமுத்து மாரியம்மன் கோயில் முகப்பில் பாரதியாருக்கு சிலை வைத்துள்ளனர். பாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்தபோது அடிக்கடி இக்கோயிலுக்கு வந்து செல்வாராம். இக்கோயில் அம்மனைப் போற்றி பல பாடல்களையும் பாரதியார் பாடியுள்ளார். * மயிலாப்பூர் கோயிலில் வள்ளுவன்- வாசுகி சிலைகள் உள்ளன. * ஒவ்வொரு ஆண்டும் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15ம் தேதி காலையில், சிதம்பரம் நடராசர் கோயிலில் நம் தேசியக் கொடியை ஒரு வெள்ளித் தட்டில் வைத்து, அதை நடராசர் முன் வைத்து பூஜை செய்வார்கள். பின் அக்கொடியை அர்ச்சகர் எடுத்து வர மேளதாளத்துடன் சென்று கோயில் கிழக்கு கோபுரத்தில் கோயில் தீட்சிதர் அக்கொடியை ஏற்றுவார். அப்போது கோயிலுக்கு வருவோர் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செய்வார்கள். * 31*சாய்வு கட்டடம் *முதன்மையான சாய்ந்த நிலை கோபுரம் என்ற சிறப்பை அபுதாபியில் கட்டப்பட்டுள்ள’கெபிட்டல் கேட்’ என்ற 160 மீட்டர் உயரமுடைய கட்டடம் பெற்றுள்ளது. இத்தாலியில் உள்ள பைசா கோபுரம்தான், உலகிலேயே மிகவும் சாய்வாக உள்ள கோபுரம் என்ற பெருமை பெற்றது. இந்தச் சாதனையை முறியடிக்கும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள அபுதாபியில், அபுதாபி நேஷனல் எக்ஸிபிஷன் நிறுவனம் சார்பில், சாய்ந்த நிலையிலான கட்டடத்தை கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதற்கு ’கெபிட்டல் கேட்’ எனப் பெயரிடப்பட்டது. 160 மீட்டர் உயரமுடைய இந்த கட்டடம், 35 மாடிகளை கொண்டது. இந்தக் கட்டடம், 18 டிகிரி அளவுக்கு சாய்ந்த நிலையில் கட்டப்பட்டுள்ளது. இது, பைசா கோபுரத்தின் சாய்மானத்தை விட நான்கு மடங்கு அதிகம். (பைசா கோபுரத்தின் சாய்மானம் 3.99 டிகிரி). இந்த கட்டடத்தின் 12 மாடிகள் செங்குத்தாக உள்ளன. அதற்கு அடுத்த நிலையில் உள்ள மாடிகள், படிப்படியாக சிறிய அளவில், சாய்ந்த அளவில் கட்டப்பட்டுள்ளன. இக்கட்டடம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 32*ஊதா நிறத்தில் ஒரு பசு கன்று வீட்டு விலங்குகளில் ஒன்றாக கருதப்படும் கன்றுகுட்டி ஒன்று ஊதா நிறத்தில் பிறந்து காண்பவரை ஆச்சரியப்படுத்துகிறது. சேர்பியா நாட்டில் ஹகாக் நகரிலுள்ள கிராமத்தில் ஆறு ஆண்டுகள் நிரம்பிய பசு ஒன்றிற்கு இந்த அற்புத கன்றுக்குட்டி பிறந்துள்ளது. பொதுவாக பசு கன்றுகள் கறுப்பு, வெள்ளை, பழுப்பு நிறங்களிலேயே பிறக்கும். ஆனால், இந்த அதிசய கன்றுக்குட்டியின் மூலம் இனிவரும் காலங்களில் இதே நிறத்தையுடைய கன்றுகள் பிறப்பதற்கு சாத்தியம் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 33*காசு வடிவில் கட்டடம்! தொழில்நுட்ப வளர்ச்சியையும், கட்டிடக்கலையின் வளர்ச்சியையும் கலந்து படைக்கப்படும் பிரம்மாண்டங்களுக்கு பஞ்சமே இல்லை! இதை மெய்ப்பிக்கும் விதமாக சீனாவின் குவாங்கோ பகுதியில் பிறிதொரு பிரமாண்டமான கட்டிடம் அமைக்கப்படுகின்றது. லக்கி காயின் (டூதஞிடுதூ ஞிணிடிண) என பெயரிடப்பட்டுள்ள இந்த கட்டிடத்தினை ஒரு நாணயத்தின் வடிவில் நிர்மாணித்து வருகின்றனர். 34*நாய்களுக்கான ஐஸ்கிரீம் நாய்களுக்காக விஷேச ஐஸ்கிரீம் விற்பனை வேன் ஒன்று பிரிட்டனில் உருவாக்கப்பட்டுள்ளது. நாய்களுக்கான பல விதமான ஐஸ்கிரீம்கள் இதில் விற்பனை செய்யப்படுகின்றன. உலகின் நாய்களுக்கான முதலாவது ஐஸ்கிரீம் வேன் இதுவாகும். பூமாராங் பெட்ஸ் பார்ட்டி எனும் நிறுவனமே இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நாய்களுக்கு பாதிப்பு ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக ஐஸ்கிரீமின் பொருத்தமான கலவை, சுவை, வெப்பநிலை என்பன குறித்து விஞ்ஞானிகள் குழுவொன்று ஆய்வு மேற்கொண்டபின் இந்த ஐஸ்கிரீம்கள் தயாரிக்கப்பட்டுள்ளனவாம். 35*பெரீய்ய பெயர்! ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்த கோடீஸ்வரர் ஹமாத். அவர் அபுதாபி அருகே உள்ள அல்புடய்சி என்ற தீவை விலைக்கு வாங்கினார். அதில் தனது பெயரை 3 கி.மீட்டர் நீளத்துக்கு எழுதி வைத்தார். தனது பெயரின் ஒவ்வொரு எழுத்தையும் 0.5 கி.மீட்டர் நீளத்துக்கு ஆங்கில எழுத்தில் பொறித்து தரையில் பதித்து வைத்துள்ளார். அந்த எழுத்துக்களை விண்ணில் பறந்தபடியே பார்க்க முடிகிறது. இந்த எழுத்துகள் பேஷ்புக் இணைய தளத்தில் இடம்பெற்றுள்ளன. அவற்றை தண்ணீரால் அழிக்க முடியாதபடி எழுதப்பட்டுள்ளது. ************* 36*இ-பேப்பர் *எழுத்துகளை அழித்து திரும்பத் திரும்ப பயன்படுத்தக்கூடிய ‘பேப்பரை’ உருவாக்கியிருப்பதாக தைவான் நாட்டு விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். சூஐ2ஆர் இ-பேப்பர்’ என்ற இந்த பேப்பரில், சூபேக்ஸ்’ இயந்திரத்தில், சூதெர்மல் பிரின்டர்’ கொண்டு அச்சிடப்படுகிறது. 37*மிகப் பெரிய தொங்கும் பாலம் * மெக்ஸிகோ நாட்டில் அமைந்துள்ள தொங்கு பாலம் உலகின் மிக உயரமான பாலம் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த தொங்கு பாலம் 400 மீட்டர் உயரமும், 1000 மீட்டருக்கு அதிகமான நீளத்தையும் கொண்டது. மெக்ஸிகோவின் குடிஞுணூணூச் Mச்ஞீணூஞு Oஞிஞிடிஞீஞுணtச்டூ மலையின் குறுக்காக இந்தப் பாலம் செல்கின்றது. இதைக் கட்டி முடிக்க மில்லியன்கணக்கான ரூபாய்களும், 4 ஆண்டுகளும் ஆனது. 38*அதிசய மரம்! * 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூ பூக்கும் குறிஞ்சிபற்றி கேள்விபட்டிருப்போம். ஆனால், ராட்சத செகுவாயா மரம், பூ பூப்பதற்கு 175 முதல் 200 ஆண்டுகள் வரை ஆகிறது. பூ பூக்க வேறு எந்த மரத்திற்கும் இவ்வளவு காலம் ஆவதில்லை. உலகின் உயரமான மரங்களில் இதுவும் ஒன்று. அதிக பட்சம் 300 அடிகள் வரை வளரும். இந்த மரம் பல கோடிக்கணக்கான விதைகளை உற்பத்தி செய்யக் கூடியது. 39*மிகச் சிறிய மீன்! * சுமத்ரா தீவில் உள்ள பேடோசைபிரிள் என்ற ஒரு வகை மீன், சேற்றுத் தண்ணீரில் வாழ்கிறது. 79 மில்லி மீட்டர் நீளமே உள்ள இந்த மீன், உலகிலேயே முதுகெலும்பு உள்ள உயிரினங்களில் மிகவும் சிறிய உயிரினமாகும். 40*மரத்தில் ஏறும் மீன்! *பிலிப்பைன்ஸ் நாட்டில் அனபாஸ், ஸ்காண்டன்ஸ் என்னும் இரண்டு வகை அபூர்வ மீன்கள் காணப்படுகின்றன. இவை மரத்தில் ஏறக் கூடியவை. பெரும்பாலான நேரங்களில் நீரில் வாழ்ந்தாலும் கூட சிறிது நேரத்திற்கு மரத்தில் ஏறி ஜாலியாக ஓய்வு எடுக்கின்றன. பின்னர் அப்படியே நீருக்குள் பாய்ந்து விடுகின்றன. 41*கரையில்லாத கடல்! * ‘தி ஸார் கேஸோ’ என்ற கடலுக்கு கரையே கிடையாது. காரணம், இந்தக் கடலைச் சுற்றி அட்லாண்டிக் பெருங்கடல் சூழ்ந்திருப்பதால்தான். 42*கடல் யானை * வால்ரஸ் என்னும் கடற்பிராணி யானையைப் போன்ற தோற்றமுடையது. ஆகையால்தான் இதற்கு கடல் யானை என பெயர் வந்தது. இந்த கடல் யானைகளுக்கு ஒரு மீட்டர் நீளமுள்ள இரண்டு பற்கள் நீண்டு கொண்டிருக்கின்றன. இந்த நீண்ட பற்களின் மூலம் சிப்பி மீன்களை குத்தி பிடித்துத் தின்னும். வால்ரஸ்களுக்கு அவற்றின் நீண்ட பற்கள்தான் ஆயுதம். எதிரிகளை பற்களைக் காட்டியே பயமுறுத்தும். 43*சூட்கேஸ் அளவில் அணுமின் நிலையம்! அணுக்கரு பிளவின்போது வெளியாகும் அணுசக்தியை கொண்டு, ஒரு நீராவி எந்திரத்தை இயக்குவதன் மூலம் மின்சாரத்தை தயாரிக்க முடியும். இப்போது பல ஏக்கர் பரப்பளவுகளில் அமைந்திருக்கும் அணுமின் நிலையங்களை, ஒரு சூட்கேஸ்அளவிற்குள் அடைத்துவிடும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்திருக்கிறார் அணு விஞ்ஞானி ஜேம்ஸ் இ.வெர்னர். இந்த சூட்கேஸ் அணுமின் நிலையத்தின் அளவு ஒன்றரை அடியிலிருந்து இரண்டரை அடிகள் வரைதான். அளவில் மிக சிறியதான இந்த சூட்கேஸ் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது. இதனைக் கொண்டு நிலவு, செவ்வாய் அல்லது நாசா நினைக்கும் எந்த இடத்திலும் தொடர்ந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் என்கிறார் வெர்னர். இந்த சூட்கேஸ் அணுமின் நிலையத்தைக் கொண்டு நிலவில் 40 டுடிடூணி தீச்ttண் (அதாவது 8 வீடுகளுக்கு தேவையான மின்சாரம்) அல்லது அதற்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்! எரிமலைவாய், மலைக்குன்றுகள் மற்றும் குகைகள் என பலதரப்பட்ட இடங்களில் இந்த சூட்கேஸ் அணுமின் நிலையத்தை பயன்படுத்தலாம். 44*ஹை டெக் கிராமம்! இது சீனாவில் உள்ள ஒரு கிராமம். இதன் பெயர் ஹுவாக்ஸிக். இது மிகப் பெரிய பணக்கார கிராமம். இதை உருவாக்கியவர் ரென்பாவு. இக்கிராமத்தில் 328 அடி 60 மாடிக் கட்டிடம் உள்ளது. இக் கட்டிடத்தின் 60-வது மாடியில் உள்ள பசு சிற்பம், ஆயிரம் கிலோ தங்கத்தாலானது. ஹுவாக்ஸியின் மக்கள் பாரம்பரிய விவசாயத்தை நவீனம் சார்ந்த விவசாயத் தொழிலாக மாற்றினார்கள். அதில் வருவாய் குவிந்தது. அதை ஜவுளி, உருக்கு தொழிலில் முதலீடு செய்தனர். ஒன்றுபட்டு கடுமையாக உழைத்தனர். விளைவு? தங்கள் கிராமம் ஹைடெக் கிராமமாகியது. ஆயிரம் கிலோ தங்கப் பசு சிற்பம் செய்ய ரூ. 235 கோடி செலவானது. இப்போது இதன் மதிப்பு இரட்டிப்பு. இந்த கட்டிடம், புதுக் கிராம கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. மூன்று பிரிவுகளாக உயர்ந்து நிற்கிறது. உச்சியில், ஒரு பெரிய தங்கப் பந்து வடிவமும் இடம்பெற்றிருக்கிறது. இந்தக் கட்டிடத்தின் உச்சித் தளத்தில் தங்க சிற்பங்கள் என்றால், இதர தளங்களில் வெள்ளியால் ஆன பெரிய பெரிய விலங்குகளின் சிற்பங்கள் உள்ளன. தங்க இழைகள் அங்குள்ள மார்பிள் தரையில் ஜொலிக்கிறது. 60 மாடிக் கட்டிடத்தை ஒட்டி நீளும் நுõல் பிடித்த மாதிரியான தெருக்களில் மாளிகைகள் உயர்ந்து நிற்கின்றன. இங்கு உற்பத்தியாகும் பொருட்கள், உலகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பங்களா, ஒரு கார், இலவச மருத்துவச் சேவை, சமையல் எண்ணை ஆகியவை இலவசம். * 45*நீ பேச நினைப்பதை கம்ப்யூட்டர் பேசும்! அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாஸாவில் அமிஸ் ரிஸர்ச் சென்டர் என்று ஒரு ஆய்வு மையம் உள்ளது. இதில் சக் ஜோர்கென்ஸன், ஜோர்கென்ஸனும் அவரது குழுவும் ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மனித குரல்வளையில் உள்ள வோகல் கார்ட் எனப்படும் குரல் நாணில் உள்ள நரம்பு செல்களில் உருவாக்கப்படும் சிக்னல்களைப் பிடித்து அதை அப்படியே கம்ப்யூட்டரில் பேச்சாக ஒலிக்கச் செய்யும் முயற்சியே இவர்களது ஆராய்ச்சி! மூளை தரும் சிக்னல்கள் மனித குரல்வளையில் உள்ள குரல் நாண்களை என்ன பேச வேண்டுமோ அதைப் பேச இயக்குகின்றன. இந்த சிக்னல்களை கம்ப்யூட்டர்கள் தெரிந்து கொண்டு பேசும். பேச முடியாதவர்களுக்கு இது பெரிதும் துணை செய்யும். அவர்கள் பேச நினைத்ததை கம்ப்யூட்டர் தனது ஸ்பீக்கர் வாயிலாக ஒலிக்கச் செய்து விடும். * 46*கலர் பிக்கர் பேனா! இதன் பெயர் கலர் பிக்கர். இதனை வடிவமைத்தவர் கொரியாவைச் சேர்ந்த ஜின்சன் பார்க். இந்த பேனாவின் சிறப்பம்சம் கலர் சென்சார் தான். அதை இயக்கும் பட்டன், தேர்ந்தெடுத்த கலரை காட்டும் பகுதி, பேனா முனை, ஆர்.ஜி.பி மையை சேமிக்கும் இடம், ஆர்.ஜி.பி சென்சார் என வியக்கத்தக்க தொழில்நுட்ப பகுதிகள் உள்ளன. விரும்பிய கலரைப் பெற அதற்கான பொருளின் முன், கலர் சென்சாரைக் காட்டி ஸ்கேன் பட்டனை அழுத்த வேண்டும். உதாரணமாக ஆப்பிள் அருகே சென்சாரை காட்டியபடி ஸ்கேன் பட்டனை அழுத்தினால் விநாடியில் ஆப்பிளின் நிறம் ஸ்கேன் ஆகி விடும். கலர் டிஸ்பிளே பகுதியில் அந்த கலர் தெரியும். அதன் பிறகு பேனா முனையில் எழுதினாலோ அல்லது வரைந்தாலோ ஆப்பிள் கலரில் மை வெளிவரும். ஸ்கேன் செய்யப்பட்ட கலரை ஆர்.ஜி.பி கலர் சென்சார் கிரகித்து அதே நிறத்தில் மையை மிக்ஸ் செய்து விடும். இதனால் விரும்பும் கலரை துல்லியமாக பெற முடியும். *********** 47*கொம்பு முளைத்த பாம்பு! ஆப்பிரிக்க நாடான தான்சானியா காட்டு பகுதியில் வனவிலங்கு ஆய்வாளர்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். அப்போது, கொம்பு முளைத்த பாம்பு ஒன்று நடமாடுவதை பார்த்தனர். மேலும், கொம்பு முளைத்த பாம்பை கண்டுபிடித்தது இதுவே முதல் முறையாகும். இந்த பாம்பு 2 அடி நீளம் உள்ளது. கறுப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. கண்ணுக்கு நேராக மேல் பகுதியில் கொம்புகள் முளைத்துள்ளன. எதற்காக பாம்புக்கு கொம்பு இருக்கிறது என்று தெரியவில்லை. கண்ணை பாதுகாப்பதற்கும், இரைகளை கவர்வதற்கும் கொம்புகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் இது, அழியும் இனவகை பாம்பாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதுகுறித்து ஆய்வுகள் தீவிரமாக நடந்து வருகிறது. * 48*மிக வயதான மரம்! இதுதாங்க உலகில் மிகவும் வயதான மரம். மெதுசேலா (மெதுசேலா என்ற கதாபாத்திரம் பைபிளில் வருகிறது. அவர், 969 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் பைபிள் குறிப்பிடுகிறது. ஆகையால் அதிக ஆண்டுகள் வாழும் எதுவும், யாரும் ‘மெதுசேலா’ பெயரில் அழைக்கப்படுகிறது) என்றழைக்கப்படும் இது, பிரிஸ்ட்லீகோன் இனத்தைச் சேர்ந்த பைன் மரம். இதன் வயது 4,768 ஆண்டுகள் என கின்னஸ் சாதனை ஏடு கூறுகிறது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள உலகின் மிகப் பழமையான காடாகக் கருதப்படும் தேசிய வனத்தில்தான் இவ்வகை பைன் மரங்கள் தனித்தனியாக வளர்ந்து நிற்கின்றன. வெள்ளை மலைத்தொடரில் அமைந்துள்ள இந்த பைன் மரக்காட்டில், கிட்டத்தட்ட 11 ஆயிரம் அடி உயரத்தில் மரங்கள் வளர்ந்துள்ளன. இவைதான் உலகில் வயதான மரங்கள் எனப்படுகிறது. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மரங்கள் என்றால், அந்தளவுக்கு வளர்ந்திருக்க வேண்டுமே என்ற சந்தேகம் வருவது இயல்புதான். இங்கு நிலவும் தட்ப வெப்பநிலை மற்றும் மண்ணின் தரம் ஆகியவை இம்மரங்களின் வளர்ச்சியை மட்டுப்படுத்தி வைத்துள்ளன. அதே மண்ணும், நிலவும் தட்பவெப்ப சூழ்நிலையும்தான் இவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளை கடந்தும் நின்றுகொண்டிருக்க காரணமானவை! * 49*குழந்தை அழுவது ஏன்? பிறந்த குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம். இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது? இதற்கான காரணங்கள் என்ன? இதோ தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்போது தாயின் இதயத்துடிப்பை கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில் பத்து மாதங்கள் உறங்கிக் கொண்டிருக்குமாம். இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத் துடிப்பு, திடீரென கேட்காமல் போவதால்தான் குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம். அது மட்டுமல்லாது, அழுகின்ற குழந்தையை துõக்கி நெஞ்சில் வைத்துக்கொள்ளும்போது குழந்தை மீண்டும் அந்த இதயத் துடிப்பை உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது. ** 50*பக்கிங்ஹாம் கால்வாய் சென்னையில் 1876ம் ஆண்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போதைய ஆளுநர் பக்கிங்ஹாம் மக்களுக்கு வேலை கொடுப்பதற்காக அடையாற்றையும் கூவம் ஆற்றையும் இணைக்கும் கால்வாய் ஒன்றை வெட்டினார். அவர் நினைவாக இது பக்கிங்ஹாம் கால்வாய் என்றழைக்கப்படுகிறது. ** 51*தொட்டா சிணுங்கி தொட்டா சிணுங்கி என்பது தரையில் படரும் ஒரு வகைச் செடி. இதன் இலைகளைத் தொட்டால் அவை அசைகின்றன. இவ்வாறு அசையும்போது, காம்பு செல்களில் இருக்கும் நீர் தண்டிற்குள் செல்கிறது. இதனால் செல்கள் சுருங்கி, விரிந்திருந்த இலைகள் மடிந்து ஒட்டிக் கொள்கின்றன. சிறிது நேரத்திற்குப் பின் அவை தானாக சரியாகி இலைகள் மறுபடியும் விரிந்து விடுகின்றன. ** 52*பெயர்கள் சோடா, கார்பன், கால்சியம் கோபால்ட், கோல்ட், லித்தியம், வனடியம், ஓசோன், பொட்டாஷ். இவையெல்லாம் ரசாயன பெயர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அமெரிக்காவில் உள்ள ஊரின் பெயர்கள்தாம் இவை! 53*ஆ... அப்படியா? * நாய்க்கு நிற வேறுபாடு தெரியாது. * யானைக்கு குதிக்கத் தெரியாது. *கண்களை இமைக்காமல் தவளையால் இரையை விழுங்க முடியாது. *கோலா கரடிகள் தினமும் 22 மணி நேரம் துõங்கியே பொழுதைக் கழிக்கின்றன. * பாம்புக்கு கேட்கும் சக்தி இல்லை. * ஈமு, கிவி பறவைகளுக்கு பறக்கும் சக்தி இல்லை. * குதிரைக்கு படுத்து உறங்கத் தெரியாது. * காகம் தனது இடது காலைத்தான் அதிகமாகப் பயன்படுத்தும். ******************************** 54*கடலுக்கடியில் அருங்காட்சியகம்! மெக்சிகோவின் வட பகுதியில் காண்குண் என்னுமிடத்தில் கடலுக்கடியில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்குள் 146 ஓட்டல்களும் அதில் 28,808 அறைகளும் உள்ளன. கடலுக்கடியில் அமைகப்பட்டுள் அருங்காட்சியகத்தில் இதுதான் உலகியே மிகவும் பெரியது. இதன் வடிவம் எண் 7 போல காணப்படுகிறது. காண்குன் மெக்சிகோவின் மிகப்பெரிய சுற்றுலா பகுதியாகும். * 55*இறக்கை இல்லாத கோழி! பொதுவாக பறவைகள் அனைத்துக்குமே இறக்கை இருக்கும். உலகில் இயற்கையாகவே இறக்கை இல்லாத ஒரே ஒரு பறவை இளம் கீவி என்கின்ற பறவையினம் தான். விஞ்ஞானிகள் எப்பொழுதும் இயற்கைக்கு மாறாக சிந்திக்க கூடியவர்கள். இந்த வரிசையில் இறக்கை இல்லாத கோழி இனங்களை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்கள் இஸ்ரேலிய விஞ்ஞானிகள். இவ்வாறான கோழி இனங்கள் வெப்பமான நாடுகளில் சுதந்திரமாக வாழக்கூடியவையாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள். * 56*உயரமான பூ! உலகில் மிக நீளமான பூவாக “ரைரன் அரம்” என்ற பூ வகை உள்ளது. இதன் ரசாயனப் பெயர் அட்ணிணூணீடணிணீடச்டூடூதண் கூடிtச்ணதட் ஆகும். ரைரன் அரம் பூ இந்தோனேசியாவின் சுமத்ரா காடுகளில் பூத்துக் காணப்படும் ஒரு அரிய வகைப் பூ ஆகும். இது 20 அடி நீளம் வரை உள்ளது. * 57*ரோபோ ஆசிரியர்கள்! தென்கொரிய நாட்டில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களுக்குப் பதிலாக ரோபோக்கள் ஆங்கில பாடம் நடத்த ஆரம்பித்து உள்ளன. ஆசிரிய ரோபோக்களில் ஒருவருக்குப் பெயர் இங்கேய். இந்த ரோபோக்கள் முட்டை வடிவத்தில் வெள்ளை நிறத்தில் உள்ளன. டேய்கு நகரத்தில் உள்ள 21 மழலையர் பள்ளிகளில் இந்த ரோபோக்கள் பாடம் நடத்துகின்றன. இதன் உயரம் ஒரு மீட்டர். இந்த ரோபோக்களின் முகத்தில் டிவி ஸ்கிரீன் பொருத்தப்பட்டு உள்ளது. சக்கர கால்கள் நான்கு கை கொண்டிருக்கின்றன. இக்கால்களின் துணையுடன் நடக்கவும் முடியும். இந்த ரோபோக்களுக்கு புத்தகங்களை வாசிப்பது, பாடல்களுக்கு ஏற்ப தலையையும், கைகளையும் அசைப்பது, கால்களை ஆட்டி நடனமாடும் ஆற்றலும் உண்டு. ஆங்கில் ஆசிரியர்கள் இந்த ரோபோக்களை ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்குகின்றனர். 58*நிற ஜாலங்கள்! *தக்காளி சிவப்பு காயாக இருக்கும்போது குளோரோபில் அதிகமாகக் காணப்படும். அதனால் பச்சையாக இருக்கும். கனியாக மாறியவுடன் இந்த நிறமி மறைந்துவிடும். கரோட்டின், ஸாந்தோபில் நிறமிகள் அதிகமாக காணப்படும். குறிப்பாக லைக்கோபின் நிறமியால் சிவப்பாக மாறும். *மருதாணி சிவப்பு! மருதாணியை அரைத்து கையில் போட்டால் தோல் நிறம் சிவந்துவிடும். காரணம் மருதாணி இலையிலுள்ள ஆந்தோசயனின் என்ற நிறமிதான். *தலைமுடி கருப்பு! ரோமக்கால்களின் அடிப்பகுதியில் மெலனோசைட் என்ற சிறப்பு வாய்ந்த செல்கள் காணப்படுகின்றன. இது மெலானின் என்ற நிறமியைச் சுரக்கிறது. இதுதான் கருப்பு நிறத்தைக் கொடுக்கும். *இலை நிறமாறும் பழுப்பு பச்சையான இலைகள் காய்ந்ததும் பழுப்பு நிறம்மாகிவிடும். இலைகளில் பச்சையம் அதிகமாக இருப்பதால் பச்சை வண்ணமாய் இருக்கும். இது காய்ந்துவிடும்போது ஆக்ஸிஜன் ஏற்றத்தால் பச்சையம் மறைந்து ஸாந்தோபில் என்னும் பழுப்பு நிறம் தோன்றும். இதனால் இலை நிறம் மாறிவிடுகிறது. * ******************************* 59*இசையால் அறிவு வளரும்! இசையை சிறுவயது முதல் கற்கும் குழந்தைகளின் ஐகி கOஙிஉகீ மிகவும் அபாரமாக இருப்பதாக அமெரிக்க ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சிறுவயதில் பியானோ, புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளை பயிற்சி பெறும் குழந்தைகள், வயதான காலத்திலும் நல்ல புத்திக் கூர்மையுடன் இருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். இசையை கற்காத குழந்தைகளை விட நன்கு இசையை கற்ற குழந்தைகள் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இசையை கற்கும் குட்டிக் குழந்தைகள் தங்களது சிந்தனைகளை பல முனைகளிலும் ஒரு சேர செலுத்துவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். காரணம், மூளையின் இடது, வலது பாகங்களை ஒரு சேரப் பயன்படுத்தும் ஆற்றல் சாதாரணக் குழந்தைகளை விடவும் இசையை கற்ற குழந்தைகளுக்கு அதிகமாக இருப்பதாக வல்லுனர்களின் ஆராய்ச்சி சொல்கிறது. சிறுவயது இசைப்பயிற்சி மூளையை துடிப்புடன் வைத்திருக்க உதவுகிறது. இதனால், மற்றவர்களை விட இசையை கற்றவர்கள் அறிவு நுணுக்கத்துடன் செயல்படுவதைக் காண முடிகிறது, என வல்லுனர்கள் கருத்து சொல்கிறார்கள். *** 60*குழந்தைகளுக்கான இணையதளங்கள் குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது அவர்களின் இயற்கையோடு இணைந்த ஒன்று. அதன் வழியாகவே அவர்களின் மனவளர்ச்சியை நல்ல முறையில் உருவாக்கலாம். உலக விஷயங்களைக் கற்றுக் கொடுக்கலாம். அதற்கென உள்ள பல இணையதளங்கள் உள்ளன. 1. கல்வி விளையாட்டுக்கள், வேடிக்கையான கேம்ஸ், ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமான தகவல்கள், கலை அம்சம் நிறைந்த பலவற்றிற்கு 20 ஆயிரத்திற்கு மேலான இணைய தொடர்புகள், வண்ணம் தீட்டி பழக தளங்கள், கணக்கு பழக பயிற்சிகள் மற்றும் தரவிறக்கம் செய்து வைத்து விளையாட கேம்ஸ் என அனைத்து வகைகளிலும் குழந்தைகளுக்கான இணையக்களஞ்சியமாக இயங்குகிறது டttணீ://தீதீதீ.டூடிணடுண்4டுடிஞீண்.ஞிணி.தடு/ என்ற முகவரியில் உள்ள தளம். 2. நுõற்றுக்கணக்கில் இன்டர்நெட் இணைப்பில் விளையாட கேம்ஸ், கார்ட்டூன், மூவி கிளிப்கள், மியூசிக் வீடியோ, புதிர்கள், கற்பனைத் திறனை ஊக்கப்படுத்தும் செயல்பாடுகள், பக்கங்களுக்குக் கலர் தீட்டுதல், வேடிக்கை விளையாட்டுகளையும் கல்வி கற்றலையும் இணைத்து தருகிறது டttணீ://ச்டூஞூதூ.ஞிணிட்/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம். 3. டttணீ://தீதீதீ.ண்தணூஞூணஞுtடுடிஞீண்.ஞிணிட்/ என்ற தளத்தில் பல வித்தியாசமான கேம்ஸ், வேடிக்கை விளையாட்டுகள், குழந்தைகளுக்கான தகவல்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தர விரும்பும் விஷயங்கள், நினைவாற்றலை வளர்க்கும் விளையாட்டுகள் எனப் பல வகைகளில் குழந்தைகளுக்கான அனைத்து விஷயங்களும் வித்தியாசமான முறையில் தரப்பட்டுள்ளன. 4.குழந்தைகளுக்கு கணக்குகளைத் தந்து அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்கும் தளமாக விளங்குகிறது டttணீ://தீதீதீ.ஞிணிணிடூட்ச்tட4டுடிஞீண்.ஞிணிட்/ உலக அளவில் இது சிறந்த தளம் என்ற பாராட்டினைப் பல அமைப்புகளில் இருந்து பெற்றது. ** 61*நாய்களுக்கான நான்கு நட்சத்திர விடுதி. பிரான்சில் அமைந்துள்ள ‘அக்ச்சுவல் டாக்ஸ்’ என்னும் விடுதி தான் உலகிலயே முதன்முறையாக சகல வசதிகளுடன் தங்குவதற்கான விடுதி. ஐயோ! மனிதர்களுக்கு இல்லைங்க ! நாய்களுக்கான நான்கு நட்சத்திர விடுதி. தேவி, ஸ்டான் புருன் என்னும் இருவர் இணைந்து இந்த விடுதியினை நிறுவியுள்ளனர். அடுக்குமாடி வீடுகளில் குடியிருப்போர் பலர் தமது நாய்களைக் கவனிக்க முடியாது போய்விடுகிறது. அவர்கள் இங்கு தமது நாய்களை சில நாட்கள் விடுவதால் அந்த நாய்களை சகல வசதிகளுடன் அவர்கள் கவனித்துக் கொள்வார்களாம். நாய்கள் தங்க, உண்ண, மருத்துவ வசதி என அனைத்துமே இங்கு உள்ளது. நாய்கள் பார்ப்பதற்கு என பிரத்யேக எல்சிடி தொலைக்காட்சிகளும் இங்குள்ளது. ஆனால் இங்கு நாய்களை அனுமதிக்கும் முன் அவற்றின் குணங்களை பரிசோதித்துப் பார்க்கலாம், அவற்றில் சரி என்றால் தான் பிற அனுமதி எல்லாம். நாய்கள் தங்குவதற்கு ஒரு நாள் ஆகும் செலவு 26 - 35 யூரோக்கள்( தோராயமாக ரூ.1,600 நம்மூர் மதிப்பு) ஆகுமாம். ** 62*பூமியில் வாழ்ந்த பெரிய விலங்குகள் உலகில் இதுவரை வாழ்ந்த மிகப்பெரிய விலங்கினமாக டைனோசரஸ் கருதப்படுகின்றது. சுவடுகள் மற்றும் கண்டெடுக்கப்பட்டுள்ள எழும்புக் கூடு என்பவற்றின் அடிப்படையில் பெரியதாக அது கருதப்படுகின்றது. அதேபோல பல பெரிய உருவத்திலான விலங்குகளும் இப்பூமியில் வாழ்ந்துள்ளதாக கருதப்படுகின்றன. அவை அழிந்துவிட்டபோதிலும் அவற்றின் சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 1. கொலம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய பாம்பின் சுவடு இப்பாம்பானது அனகோண்டாவைப் போல உலகில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மிகப்பெரிய பாம்பாகும். இவை 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 42 அடி நீளமும், 1,135 கிலோ கொண்டவையாக இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 2. எருமை உருவ கொறிணி (கீணிஞீஞுணt) கொறிணி எனப்படுவது அணில் போன்ற விலங்கினமாகும். உருகுவே நாட்டில் கடந்த 2008ம் ஆண்டு 53 செ. மீ. உயரமுடைய 1000 கிலோ எடையுள்ள கொறிணியின் எழும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. 2- 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. 3. மடகாஸ்கரில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய தவளை உலகில் இதுவரை வாழ்ந்தவற்றில் மிகப்பெரியதாக கருதப்படும் பிரமாண்ட தவளை எச்சத்தினை ஆராய்ச்சியாளர்கள் மடகாஸ்கர் நாட்டில் கண்டுபிடித்தனர். இது 41 செ. மீ. உயரமும், 4.5 கிலோ எடையும் கொண்டிருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 4. பெரு நாட்டில் வாழ்ந்த பிரமாண்ட பெங்குயின்கள் தென் அமெரிக்காவில் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கூறப்படும் பிரமாண்ட பெங்குயின்களே இவை. இவற்றின் சுவடுகள் பெருவுன் அடகாமா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் உயரம் 1.5 மீட்டர்கள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 5. மனிதனை விட பெரிய கடல் தேள் மனிதனைவிட பெரியதும் 8.2 அடி உயரமானதும் 390 மில்லியன் ஆண்டுகள் பழமையானதுமான கடல் தேளின் எச்சங்கள் 2007ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. இவை அக்காலப்பகுதியில் கடலில் வாழ்ந்த மிகப்பெரிய விலங்கினமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ** 63*பாம்பு பறவை! ஏப்11 பாம்பு தாரா என்று ஒரு பறவை. நீர் நிலைகளில் வாழ்ந்திடும் பறவை இது. இப்பறவையை ஆங்கிலத்தில் அனிங்கா அல்லது டார்டர் (அணடடிணஞ்ச் ணிணூ ஈச்ணூtஞுணூ) என்று அழைப்பார்கள். இந்தப் பறவையின் உணவு மீன்கள். இப்பறவை மீன் பிடிப்பதற்கும் மற்ற பறவைகள் மீன் பிடிப்பதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்ற பறவைகள் மரக் கிளைகளில் அமர்ந்து இருந்தும் ஆகாயத்தில் பறந்தபடி இருந்தும் நீரின் மேல் பரப்பிற்கு வரும் மீன்களைக் கொத்திப் பிடிக்கும். ஆனால், இந்தப் பறவைகள் தண்ணீரில் தலையை மட்டும் வெளியே நீட்டியபடி நீந்திக் கொண்டிருக்கும். அப்போது எதிர்ப்படும் மீனைப் பிடித்து தண்ணீரில் இருந்த படியே உண்ணும். இது தன் உடல் முழுவதையும் தண்ணீருக்குள் வைத்துக் கொண்டு நீந்திடும் போது பாம்பு நீரில் நீந்திச் செல்வது போல தோற்றம் தரும். இப்பறவைக்கு பாம்பு தாரா எனப் பெயர் வரக் காரணமும் இதுவே. மீன் ஒன்றைப் பிடித்தவுடன் கழுத்தை மட்டும் தண்ணீருக்கு வெளியே நீட்டி அந்த மீனின் தலை முதலில் வாய்க்குள் செல்லும்படி துõக்கிப் போட்டு பிடித்து பின் விழுங்கும். மற்ற நீர் வாழ் பறவைகள் தண்ணீரில் இருக்கும் போது அவற்றின் உடல் நீரில் மூழ்கிடாது மிதந்திடும். அவற்றின் சிறகுகளில் தண்ணீர் ஒட்டாது. காரணம் அவற்றின் சிறகுகளில் ஒரு வகை எண்ணைப் பசை இருக்கும். சிறகுகளுக்கிடையே இருக்கும் காற்று அப்பறவைகளை மிதக்கச் செய்யும். ஆனால், பாம்பு தாராவின் சிறகுகளில் அந்த எண்ணைப் பசை இல்லாததால் தண்ணீர் சுலபமாக ஒட்டிக் கொண்டு, பளுவாக்கி, அதன் உடலை நீருக்கடியில் கொண்டு செல்லும். வயிறு நிறைய மீன் சாப்பிட்டதும், கஷ்டப்பட்டு மெல்லப் பறந்து அருகில் உள்ள ஒரு கல்லின் மீதோ, கிளையின் மீதோ அமர்ந்து தன் சிறகுகளை விரித்துப் பிடித்துக்கொண்டு வெயிலில் உலர வைத்துக்கொள்ளும். சிறகுகள் உலர்ந்த பின் பறந்து சென்று விடும். இனப் பெருக்கக் காலத்தில் பாம்பு தாரா குடும்பம் நடத்துவது நீர் நிலைகள் அருகே மரக்கிளைகளில் குச்சி சுள்ளிகளைக் கொண்டு கட்டிய கூடுகளில். பாம்பு தாராவை தமிழ்நாட்டில் வேடந்தாங்கல் போன்ற பறவைகள் சரணாலயத்திலும், கர்னாடகாவில் ரங்கன திட்டு பறவைகள் சரணாலயத்திலும் பார்க்கலாம். * 64*கடல் ஓட்டல் மாலத் தீவுகளில் உள்ள ரங்காலி தீவில் அமைந்துள்ள கொன்ராட் ஓட்டல் தனது வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகின்றது. கடல்மட்டத்திலிருந்து 5 மீட்டர் ஆழத்தில் உள்ள இந்த ஓட்டலில் ‘இத்தா’ என்னும் உணவகம் மட்டும் இருந்தது. தனது 5வது ஆண்டுநிறைவை முன்னிட்டு இந்த ‘இத்தா’வினை தங்கும் அறைகளும் அமைத்துள்ளனர். கடலுக்கடியில் இதமான வெளிச்சத்தில் உல்லாசமாகப் பொழுதை கழிப்பதற்கு இந்த ஓட்டலில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. எவருடைய தொந்தரவும் இல்லாமல் மீன்களையும் கடல் நீரினையும் ரசித்தபடி உங்கள் வாழ்க்கையை உற்சாகமாக கொண்டாட முடியும். ஆனால், இங்கு ஒரு நாள் தங்குவதற்கு 2 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டுமாம்! 65*அப்படியா! *பல்லி போன்ற ஊர்ந்து செல்லும் பிராணிகள் தங்களின் நாக்கினால் பூச்சிகளைச் சுண்டி இழுத்துப் பிடிக்கும். சில நேரம் நாக்கில் ஊறும் திரவத்தால் தரையைத் தொட்டு உணவைச் சேகரித்துக் கொள்ளும். பாம்பு, உடும்பு போன்ற பிராணிகளும் உணவு தேடிக்கொள்ள நாக்கை வெளியே சுழற்றிக் கொள்கின்றன. *தென் துருவப் பகுதியின் குளிர் பிரதேசத்தில் வசிக்கும் பெங்குவின் பறவைகள் ஆனந்தமாய் திரியும். மழைக்காலத்தின் மத்தியில் பெண் பெங்குவின் ஒரேயொரு முட்டை மட்டும் போடும். அதை ஆண் பறவைதான் அடைகாக்கும். இரண்டு மாதங்களுக்குப் பின் அந்த முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்கும். * பிளாடிபஸ் என்பது ஒரு நீர் வாழ் உயிரினம். இது முதலில் முட்டையிடும். பிறகு, குஞ்சு பொரித்து பாலுõட்ட ஆரம்பிக்கும். 66*உயரமான ரயில் பாதை! *தென் அமெரிக்காவின் பெரு நாட்டையும் பொலிவியா நாட்டையும் இணைக்கும் ஒரு ரயில்பாதை ‘ஆண்டிஸ்’ மலையில் 4744.7 மீட்டர் உயரத்தில் போடப்பட்டு இருக்கிறது. இதுவே உலகில் உயரமான இடத்தில் அமைந்துள்ள ரயில் பாதையாகும். 67*பெரிய நாடாளுமன்றம்! * உலகிலேயே மிக அதிக உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றம் சீன நாடாளுமன்றம் தான். தேசிய மக்கள் காங்கிரஸ் என்று அழைக்கப்படும் இந்த நாடாளுமன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 2,978 ஆகும். * 68*மீனுக்கு மூன்று இதயங்கள்! கனவாய் (இதttடூஞுஞூடிண்ட) மீன் இனத்திற்கு மூன்று இதயம் உள்ளது. கடல் மீன்களில் இது ராஜா எனவும் கருதப்படுகிறது. இந்த மீன், ஸ்குவிட் மற்றும் ஆக்டோபஸ் குடும்பத்தை சார்ந்ததாகும். கனவாய் மீனுக்கு மிகப் பெரிய இதயம் உள்ளது. உண்மையில் இதற்கு ஒரு இதயம் அல்ல மூன்று இதயங்கள். இரண்டு இதயங்கள் செவுள்களுக்கு (எடிடூடூண்) ரத்தத்தை பம்ப் செய்யவும், மூன்றாவது இதயம் பிற உறுப்புகளுக்கு (Oணூஞ்ச்ணண்) பம்ப் செய்யவும் பயன்படுத்துகிறது. இந்த மீனின் அங்கம் தட்டையாக இருப்பதால் கடலில் வாழ்வதற்கு சுலபமாக உள்ளது. இவை மொலஸ்க்ஸ் மற்றும் சிறிய மீன்களை வேட்டையாடி உண்ணும். கனவாய் மீன்கள் பிற இனத்தின் மீன்களிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள தன் நிறத்தை பின்புல நிறத்திற்கு ஏற்ப மாற்றும் இயல்புடையது. கனவாய் மீனின் ரத்தத்தில் காப்பர் அதிகமாக இருப்பதால் ரத்தத்தின் நிறம் பச்சையும் நீலமும் கலந்த நிறமாக தோன்றும். தன் நிறமிப் பையை சரிப்படுத்துவதன் மூலம் தன் நிறத்தை இதனால் மாற்ற முடிகிறது. நிறமி பைகள் சிறியவை, ஆனாலும் பல வண்ணங்களை கொண்டு காணப்படுகிறது. எதிரி மீன்கள் தன்னை தாக்கும்போது கறுப்பு நிற திரவத்தை வெளியிட்டு, தாக்கவரும் விலங்குகளிடம் இருந்து தற்காலிகமாக தப்பிக்கும் தந்திரம் உடையது இந்த கனவாய் மீன்கள். 69*அப்படியா! *பல்லி போன்ற ஊர்ந்து செல்லும் பிராணிகள் தங்களின் நாக்கினால் பூச்சிகளைச் சுண்டி இழுத்துப் பிடிக்கும். சில நேரம் நாக்கில் ஊறும் திரவத்தால் தரையைத் தொட்டு உணவைச் சேகரித்துக் கொள்ளும். பாம்பு, உடும்பு போன்ற பிராணிகளும் உணவு தேடிக்கொள்ள நாக்கை வெளியே சுழற்றிக் கொள்கின்றன. *தென் துருவப் பகுதியின் குளிர் பிரதேசத்தில் வசிக்கும் பெங்குவின் பறவைகள் ஆனந்தமாய் திரியும். மழைக்காலத்தின் மத்தியில் பெண் பெங்குவின் ஒரேயொரு முட்டை மட்டும் போடும். அதை ஆண் பறவைதான் அடைகாக்கும். இரண்டு மாதங்களுக்குப் பின் அந்த முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்கும். * பிளாடிபஸ் என்பது ஒரு நீர் வாழ் உயிரினம். இது முதலில் முட்டையிடும். பிறகு, குஞ்சு பொரித்து பாலுõட்ட ஆரம்பிக்கும். 70* உயரமான ரயில் பாதை! *தென் அமெரிக்காவின் பெரு நாட்டையும் பொலிவியா நாட்டையும் இணைக்கும் ஒரு ரயில்பாதை ‘ஆண்டிஸ்’ மலையில் 4744.7 மீட்டர் உயரத்தில் போடப்பட்டு இருக்கிறது. இதுவே உலகில் உயரமான இடத்தில் அமைந்துள்ள ரயில் பாதையாகும். 71*பெரிய நாடாளுமன்றம்! * உலகிலேயே மிக அதிக உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றம் சீன நாடாளுமன்றம் தான். தேசிய மக்கள் காங்கிரஸ் என்று அழைக்கப்படும் இந்த நாடாளுமன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 2,978 ஆகும். * 72*மிக புத்தி கூர்மையுள்ள சிறுமி! பிரிட்டனைச் சேர்ந்தவர் ஹெய்டி ஹேன்கின்ஸ் என்ற நான்கு வயது சிறுமி. இந்தச் சிறிமியின் புத்திக்கூர்மை அபாரமானது. இந்தச் சிறுமியின் அறிவுக் குறியீடு ஆனது விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் அறிவுக் குறியீடை விட அதிகமாக இருக்கிறதாம்! ஹெய்டியின் அறிவுக் குறியீடு 159ஆக இருப்பதால், இவர் இரண்டு வயதிலேயே ஏழு வயதினருக்குரிய கணக்குகளைச் செய்வதும், புத்தகங்களை வாசிக்கவும் முடிகிறதாம். ஹெய்டிக்கு முந்தைய சாதனையாளரான கேரல் வோர்டர்மேனின் அறிவுக் குறியீடு 154. ஆக்ஸ்போர்டு பதிப்புகளில் உருவான புத்தகத்தில் உள்ள மரம் பற்றிய 30 புத்தகங்களை ஒரு மணி நேரத்தில் ஹெய்டி வாசித்து விடுகிறாள். இச்சாதனையை இவள் தனது இரண்டு வயதிலேயே நிகழ்த்தி விட்டாள். *************** 73*ஒரே மனிதர்! உலகின் உயரிய விருதுகளாக கருதப்படுபவை: நோபல் பரிசு மற்றும் ஆஸ்கார் விருது. அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் செய்தி ஒன்றுள்ளது. இந்த இரு விருதுகளையும் பெற்றவர் ஒருவர் உள்ளார். அவர்தான் உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னாட்ஷா. இவர், 1925ம் ஆண்டு இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றார். 1938ம் ஆண்டு ‘பிக்மேலியன்’ என்ற திரைப்படத்திற்கு சிறந்த திரைக்கதைக்காக ஆஸ்கர் விருது பெற்றார். 74*கங்காரு எலி! வட அமெரிக்காவில் வாழும் இந்த எலிகள் நீரில்லாமல் பல நாட்கள் உயிர் வாழக்கூடியவை. வெறும் விதைகளை மட்டுமே சாப்பிட்டு வாழும். இதற்கு கங்காரு மாதிரி பைகள் இருக்கிறது. அதில் தன் உணவுகளை சேகரித்து வைக்கப் பயன்படுத்துகிறது. இதற்கு வியர்காது என்பது இன்னொரு விசேஷம். 75*அறுவை சிகிச்சைக்கு பயன்படும் நுõல் நம் உடம்பில் அறுவை சிகிச்சை செய்ததும், அறுபட்ட தசைகளை இணைக்க மருத்துவர்கள் தையல் போடுவார்கள். தையலுக்கு பயன்படுத்தும் நுõலின் பெயர் கேட்-கட். இது நுõல் போல இருக்கும் ஒருவகை நரம்பு. இது மஞ்சள் நிறத்தில் இருக்கும். அறுவை சிகிச்சை செய்து முடித்ததும் இந்த கேட்-கட் நரம்பு நுõலினால்தான் மருத்துவர்கள் தையல் போடுவார்கள். இந்தத் தையலை மீண்டும் பிரிக்க வேண்டியது இல்லை. அறுவை செய்யப்பட்ட காயம் ஆறிக்கொண்டு வரும்போது இந்த நரம்பு நுõலும் உடலோடு சேர்ந்துவிடும். இந்த நுõல் செம்மறியாட்டின் வலுவான குடல்தசை நார்களிலிருந்து தாயாரிக்கப்படுகிறது. 76*சுழலும் கட்டடம்! வித்தியாசமாக ஒரு கட்டடத்தைக் கட்டி, பிரேசில் நாட்டு நிறுவனம் ஒன்று உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. குதடிtஞு ஙணிடூடூச்ணூஞீ என்ற அந்த நிறுவனம் 360 டிகிரியில் சுழலும் குடியிருப்பு கட்டடத்தைக் கட்டியுள்ளது. மொத்தம் 11 மாடிகள் கொண்ட அந்த கட்டடத்தின் ஒவ்வொரு மாடியும் 360 டிகிரியில் சுழலும் தன்மை கொண்டது. ஒரு சுற்று சுற்றுவதற்கு ஒரு மணி நேரம் ஆகிறது. சுற்றும் வேகத்தை அந்தந்த மாடியில் வசிப்பவர்கள் கூட்டவோ, குறைக்கவோ முடியும். சூரிய உதயத்தையும், சூரிய மறைவையும் குடியிருப்புவாசிகள் ரசிக்கும் வகையில் கட்டடத்தின் வெளிச்சுவரில் கண்ணாடி பதிக்கப்பட்டுள்ளது. 77*அமாவாசை, பவுர்ணமி பூமி தன்னை தானே சுற்றிவதற்கு ஒரு நாள் ஆகிறது. இதுவே பகல் - இரவு வருவதற்கான காரணம். சூரியனை நோக்கி உள்ள பகுதி பகலாகவும் அதை விட்டு தள்ளி உள்ள பகுதி இரவாகவும் அதை நாம் அறிகிறோம். பூமியை போலவே நிலவிலும் பகல் இரவு உண்டு. தன்னைத் தானே சுற்றிவர நிலவுக்கு 27 நாட்கள் ஆகிறது. அதாவது நிலவின் ஒரு பகலும் ஒரு இரவும் பூமியின் 27 இரவு-பகல் ஆகும். நிலவின் நடு பகலை பவுர்ணமி என்கிறோம். நிலவின் நடு இரவை அமாவாசை என்கிறோம். * 78*அப்படியா! அட்லான்டிக் பகுதியில் ஆண்டிற்கு ஒரு முறைதான் சூரியன் உதயமாகிறது. முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி. மீன் தன் வாழ்நாள் இறுதி வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும் * 79*புதிய கிரகம்! பூமியில் இருந்து 33 ஒளி ஆண்டுகள் துõரத்தில் ஒரு புதிய கிரகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த கிரகத்தில் பூமியின் வெப்பத்தை விட குறைவாக இருப்பதாகவும், உயிரினங்கள் வாழ ஏற்ற சில சூழ்நிலைகள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த புதிய கிரகத்திற்கு எஒ 667 இ என பெயரிடப்பட்டுள்ளது. ************************** 80*உலகின் மிகப் பெரியவைகள்! பெரிய தகவல் ஒளிபரப்பு கோபுரம் உலகின் மிகப்பெரிய தகவல் ஒளிபரப்பு கோபுரம் ஜப்பானில் அமைந்துள்ளது. இதன் பெயர் ‘ஸ்கைட்ரீ.’ ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரில் உள்ள இந்த உலகின் மிகவும் உயரமான தகவல் தொடர்பு கோபுரத்தின் உயரம் 634 மீட்டர். ஒபாயஷிகி கார்ப்பரேசன் நிறுவனம் இக்கோபுரத்தை கட்டியுள்ளது. உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த கோபுரம் மயும் என எதிர்பார்க்கப்படுகிறது. * 81*பெரிய டைனோசர் அருங்காட்சியகம் உலகில் மிகப்பெரிய டைனோசர் அருங்காட்சியகமாக கிழக்கு சீனாவில் உள்ள டையான்யூ டைனோசர் அருங்காட்சியகம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. சீனாவின் கிழக்கு மாகாணமான ஷெடாங்கில் பிங்கிய் நகரில் உள்ள இந்த டையான்யூ அருங்காட்சியகம் 28 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த 1100-க்கும் அதிகமான டைனோசர்களின் படிவங்கள், எலும்புக்கூடுகள் பராமரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரினங்கள், விலங்கினங்கள், பறவையினங்களின் எலும்புக்கூடுகளும் உள்ளன. * 82*பெரிய தங்க நாணயம் 1000 கிலோ எடையுள்ள உலகின் மிகப் பெரிய தங்க நாணயம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் பர்த் பகுதியில் எடுக்கப்பட்ட 99.99 வீதம் துõய தங்கத்தில் இருந்து இந்த நாணயம் செய்யப்பட்டது. இது, பிரிட்டிஷ் மகாராணி ஆஸ்திரேலியா வந்ததன் நினைவாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் ஒரு பக்கத்தில் மகாராணியின் தலை உருவமும், மறுபக்கத்தில் ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கான கங்காருவின் உருவமும் பதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தங்க நாணயத்தை உருவாக்குவதற்கு 18 மாதங்கள் ஆனதாக கூறப்பட்டுள்ளது. 83* பெரிய ஆம்புலன்ஸ் வண்டி உலகிலேயே மிகப்பெரிய, மிக நீளமான ஆம்புலன்ஸ் வாகனம் ஐக்கிய அரபு நாடான துபாயில் உருவாக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிக நீளமான, பெரிய வண்டி என்ற சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது. 20 மீட்டர் நீளமுள்ள இந்த ஆம்புலன்சில் ஒரே சமயத்தில் 40 நோயாளிகளை ஏற்றிச் செல்ல முடியும். விபத்தின் போது காயமடைந்தவர்களை அதிக அளவில் சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியும். இதில், அவசர சிகிச்சைப்பிரிவும் அமைந்துள்ளது சிறப்பு அம்சமாகும். பெரிய அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்குள்ளேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது வெறும் ஆம்புலன்சாக மட்டுமல்லாமல் நடமாடும் ஆஸ்பத்திரியாகவும் செயல்படுகிறதாம். 84*பெரிய கட்டடம் உலகின் மிகப்பெரிய கட்டடமான புர்ஜ் கலிபா துபாயில் கட்டப்பட்டுள்ளது. இது 124 மாடிகளை கொண்டது. இதில் நட்சத்திர ஓட்டல்கள், அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் மற்றும் நீச்சல் குளங்கள் என அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த கட்டடத்தின் உயரம் 828 மீட்டர். இது முழுவதும் கறுப்பு நிற சலவை கற்கள், எவர்சில்வர் மற்றும் கண்ணாடிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 124 மாடிகளுக்கும் செல்லும் வகையில் நகரும் படிக்கட்டுகள் மற்றும் லிப்ட் வசதிகள் உள்ளன. இந்த கட்டடத்திற்கு அடுத்தபடியாக சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள கிரீன்லேண்ட் குரூப் கட்டடம் 2-வது இடம் வகிக்கிறது. 632 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டு வரும் அக் கட்டடம் வருகிற 2014-ம் ஆண்டு கட்டி முடிக்கப்படுமாம். *** 85*இந்தியாவின் மையப்புள்ளி நகரம் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு இடையேயான துõரம் சாலை வழிகாட்டி பலகையில் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்திருப்போம். இந்தியாவில் எந்த நகரத்தில் இருந்து துõரத்தில் ஆரம்பப்புள்ளி துவங்குகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். இந்தியாவின் மையப்புள்ளி நாக்பூர் நகரம். இந்த நகரத்தில் இருந்துதான் நமது துõரங்களின் கணக்கீடுகள் ஜீரோ மைல் கல் துவங்குகிறது. நாக்பூர் நமது நாட்டின் ஆரஞ்சு நகரம் என்று அழைக்கப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் இங்கு இந்த ஜீரோ எல்லைக்கல் அமைக்கப்பட்டது. இந்த ஜீரோ எல்லைக் கல் சின்னம் நான்கு குதிரைகளும் ஒரு துõணும் கொண்டதாக உள்ளது. உதாரணமாக இங்கிருந்து சில நகரங்களின் துõரம்: நாக்பூரில் இருந்து அகமதாபாத் 851 கி.மீ, பெங்களூர் 1062 கி.மி, சென்னை 1117 கி.மீ, டெல்லி 1029 கி.மீ,ஐதராபாத் 493 கி.மீ, கோல்கத்தா1118 கி.மீ, மும்பை798 கி.மீ. *** 86*உலகின் மிகச்சிறிய மியூசியம் உலகின் மிகச் சிறிய மியூசியம்அமெரிக்காவில் அரிசோனா பகுதியில் அமைந்துள்ளது. இங்கு செயற்கை நீர் அருவிகள், செயற்கை கலைப்பொருட்கள் என பல காட்சிப்பொருட்கள் இடம்பெற்றுள்ளது. இந்த மியூசியம்134 சதுர அடி பரப்பளவு உள்ள கூரையின் கீழ் அமைந்துள்ளது. 87*உலகின் மிகச்சிறிய போலீஸ் நாய் உலகின் மிகச்சிறிய போலீஸ் நாய் என்று லுõசி எனப்பெயர் கொண்ட இந்த போலீஸ் நாய் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதன் எடை 2.5 பவுண்டு . வயது1. தெரபி துறையில் இந்த நாய் பணி செய்கிறது. 88*உலகின் மிகச் சிறிய வீடு அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் ஒரு பகுதியில் இந்த சிறிய வீடு உள்ளது. 16க்கு 18 அடி பரப்பளவில் ஒரு அறை வசதியுடன் இந்த வீடு அமைக்கப்பட்டுள்ளது. ***************************** 89*அப்படியா? *புலிக்கு வெள்ளையாக எதைப் பார்த்தாலும் பயம் ஏற்பட்டுவிடும். புலியின் உறுமல் 3 கி.மீட்டர் துõரம்வரை கேட்கும். * குரல் இல்லாத மிருகம் ஒட்டகச்சிவிங்கி. ஒரு நாளைக்கு அரை மணிநேரமே துõங்கும். * நீர்யானை சிந்தும் வியர்வை சிவப்பாக இருக்கும். நீர்யானையின் குட்டிகள் பிறந்தவுடனேயே நீந்தத் தொடங்கிவிடும். *வாழ்நாள் முழுவதும் தண்ணீர் குடிக்காத விலங்கு கங்காரு. கங்காரு சைவம். *ஓநாய்கள் சமயத்திற்கு தகுந்தாற்போல ஊளையிடும். ஓநாய்கள் ஐந்து விதமாக ஊளையிடும். * சிறுத்தைகள் நீரை கண்டால் கூச்சப்படும். மணிக்கு 110 கி.மீ துõரம்வரை ஓடக்கூடியது. *ஒட்டகம் மாலை வேளையில் உணவு உட்கொள்ளாது. ஒட்டகத்தின் பால் 60 நாட்கள் வரை கெட்டுப் போகாது. ஒரு மைலுக்கு அப்பால் இருக்கும் நீர்நிலைகளை தன் மோப்ப சக்தியால் உணரும் ஆற்றல் கொண்டது. * 90*குண்டு பாப்பா படத்துல இருக்கும் பாப்பா பேரு டான்டான். சொந்த ஊரு சீனா. நல்ல கொழுக் மொழுக் என்று இருக்கும் இந்த பாப்பாவுக்கு வயது 18 மாதங்கள். எடை 16 கிலோ. எடை அதிகமா இருப்பதால பாப்பாவுக்கு நடக்க முடியாம போச்சாம். டாக்டர் கிட்ட போனா உடம்பு நார்மலாத்தான் இருக்கு. இத்தனை எடை கூடுவதற்கு காரணம் கண்டுபிடிக்க முடியலைன்னு சொல்றாங்க. டான்டானுக்கு 5 வயசுல ஒரு அக்கா. அவளோட எடை 13 கிலோ! ... 91* திறந்தவெளி எஸ்கலேட்டர் எஸ்கலேட்டர்களை (நகரும் படிக்கட்டுகள்) பெரிய பெரிய கட்டடங்களில் பார்த்திருப்பீங்க. வெட்ட வெளியில் இயங்கும் எஸ்கலேட்டர் கொலம்பியாவின் போகோடா மலைப்பகுதியில் தொடங்கியிருக்காங்க. போகோட மலைப் பிரதேசத்தில் 12 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இங்கு ரோடுகள் செங்குத்தாக இருக்கும். வயதானவர்கள், சிறுவர்கள் ஏற முடியாது என்பதால் திறந்த வெளி எஸ்கலேட்டர் அமைத்துள்ளனர். மலையடிவாரத்திலிருந்து உச்சிக்கு செல்ல ஆறு எஸ்கலேட்டர்கள் பயன்படுத்துகின்றனர். ஆயிரத்து 260 அடி உயரத்தில் மலை உச்சியில் இருக்கும் பள்ளிக்கு இந்த எஸ்கலேட்டர் மூலம் 6 நிமிடங்களில் சென்று விடுகின்றனர் . ... 92*விமானத்தில் ஓட்டல் உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம் ஏ380 சீனாவில் இயக்கப்படுகிறது. மற்ற விமானத்தில் இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளைவிட இந்த விமானத்தில் பல வசதிகள் உள்ளன. விமானத்தில் 600 சதுர மீட்டர் அளவில் ஒரு குட்டி ஓட்டலை அமைத்துள்ளனர். 18 ஓட்டல் ஊழியர்கள், வரவேற்பரை, சமையலறை, 36 பேர் அமரக்கூடிய டைனிங் டேபிள், இரண்டு பேர் அமரக்கூடிய தனி அறை கொண்ட டைனிங் டேபிளும் உள்ளன. ஓட்டலில் சாப்பிட விரும்புபவர்கள் தனிக் கட்டணம் செலுத்த வேண்டும். 93*பாம்பு தலை விட்டில் பூச்சி! ஹாங்காங்கில் காணப்படும் இந்த மிகப்பெரிய விட்டில் பூச்சியின் உடல் பாம்பு போல் காணப்படுவதால் இந்த பூச்சி பாம்பு தலை விட்டில் பூச்சி என்றழைக்கப்படுகிறது. இந்த விட்டில் பூச்சிகள், விட்டில் புழு நிலையிலிருந்து 1 முதல் 2 வாரத்திற்குள் முழுமையான ஒரு சதுர அங்குலம் வரை வளர்கிறது. * 94*சோசோ எடை 254 கிலோ! படத்தை பார்த்து பயந்துடீங்காளா குட்டீஸ்! பயப்படாதீங்க இந்த ராட்சத புலியோட பேரு சோசோ. மிக அரிதான செர்பிய நாட்டுப் புலி. செர்பியன் புலிகள் உலகில் மொத்தம் 360 இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. சோசோவின் சொந்தக்காரர் அஸ்லே. சோசோ குட்டியாக இருக்கும்போது வாங்கியுள்ளார். சோசோவின் பேவரைட் உணவு மாமிசத்துடன் கலந்த நவதானிய பயிர்கள். சோசோ நடந்தால் 6 அடி, நின்றால் 8 அடி இருக்குமாம். எடை 245 கிலோ! 95*உயரமான அணை இந்தியாவில் மிக உயரமான அணை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது தாகிர் அணை. உத்தரகாண்ட் மாநிலத்தில் பகீரதி நதிக்கரையில் அமைந்துள்ளது தாகிர் அணை. இந்த அணையின் உயரம் 261 மீட்டர், உலகில் 8வது மிக உயரமான அணை என்ற கூடுதல் அந்தஸ்தையும் 2012ம் ஆண்டு முதல் பெற்றுள்ளது. இதன் கரையை கட்டும் பணிகள் 2006ல் தொடங்கப்பட்டது. இரண்டாம் கட்ட பணி தற்போது நடைபெற்று வருகிறது. தாகிர் அணையிலிருந்து நீர்பாசனம், குடிநீர், நீர் மின்சாரம் தயாரிக்க பயன்படுகிறது. நீர்தேக்கத்தின் மூலம் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. 96*பார்வையற்றவர்களுக்கு நுõலகம் சீனாவில் பார்வையற்றோருக்கான பிரெய்லி நுõலகம் தொடங்கப்பட்டுள்ளது. பிரெய்லி முறையில் அச்சிடப்பட்ட 60 ஆயிரம் புத்தகங்கள், 20 ஆயிரம் ஒலி நாடாக்கள் இடம்பெற்றுள்ளன. பிரெய்லி முறை கல்வி, கணினி பயிற்சி போன்றவையும் இலவசமாக வழங்கப்படுகிறது. இ-மெயில் மற்றும் வாய்ஸ் ரெகார்டர் மூலம் புத்தகம் வாங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. நுõலகத்தில் 270 ஊழியர்கள், 500 உதவியாளர்கள் வேலை செய்கிறார்கள். **************** 97*மாம்பழத்து வண்டு (ட்ச்ணஞ்ணி ண்ஞுஞுஞீ தீஞுஞுதிடிடூ) மாம்பழத்தில் உள்ள ஒரு செ.மீ அளவுள்ள ஒருவகை சிறுவண்டு இனம். கோடைக்காலத்தில் காய்பிடிக்கின்ற பருவத்தில்தான் இது தமது இனப்பெருக்கத்தைத் தொடங்கும். அதாவது பூம் பிஞ்சின் மேல் பெண் வண்டு முட்டையிட, சில நாட்கள் வெண்மையில் அது பொரிந்து புழுவாக வெளியே வந்து பிஞ்சுக்காயை துளைத்து நடுப்பகுதிக்குச் சென்று அங்குள்ள சதையை அடைந்து கூட்டுப்புழுவாக இருக்க, காய் அச்சிறு துவாரத்தை மூடி வளர்ந்து பெரிதாகிறது. காய்முற்றி பழுக்கும் போதே உள்ளே புழுவானது முதிர்ந்த வண்டாகிறது. 98*மண்புழு மண்புழுக்கள் வெயிலுக்குள் வந்தால் இறந்துவிடும். காரணம் அது தன் தோலில் உள்ள சுரப்பிகள் சுரக்கும் ஒருவழவழப்பான திரவத்தின் உதவிக்கொண்டுதான் நிலத்தினுள் உள்ள உயிர்வளியை எடுத்துக்கொள்கிறது. இவ்வாறுதான் மண்புழு சுவாசிக்கிறது. ஆனால் வெயிலில் வரும்போது அதன் தோலில் உள்ள திரவம் ஆவியாகி விடுவதால், சுவாசிக்க முடியாமல் இறந்துவிடும். மண்புழுக்களுக்கு கண், காது, மூக்கு கிடையாது. 99*எறும்புகள் எறும்புகள் செல்லும்போது தன் முன்உடற்சுரப்பியில் இருந்து ஒருவித வேதிப்பொருளை விட்டுச் செல்கின்றன. இந்த வேதிப்பொருளின் மணம் பல உத்தரவுகளை இடுகிறது. நீ வேலை செய்! உணவு எடுத்துவா! துõக்கிச் செல்! திரும்பி போ! என்பது போல. இதுவே எறும்பின் மொழி. எறும்புகள் எப்பொழுதும் துõங்குவதில்லை. ஆனால் முழு ஓய்வெடுக்கின்றன. இமையற்ற இவை பிறப்பு முதல் இறப்புவரை ஓய்வின்றி சுறுசுறுப்பாக உழைக்கின்றன. 50 முதல் 100 நாட்கள் வரை உணவின்றி எறும்புகளால் உயிர் வாழ முடியும். எறும்பு தன் எடையைப்போன்று 300 மடங்கு எடையை இழுத்துச் செல்லும் வலிமையுடையது. இதற்கு காரணம் இவற்றறறின் இறுக்கமான 1000 வகையான தசைகள் இருப்பதுதான். மனித உடலில் தசைகளின் எண்ணிக்கை 800 மட்டுமே. எறும்புக்கு மூன்று ஜோடி கால்களுண்டு. இதனால் துõக்கிச் செல்லும் சுமையின் எடையை ஆறுகால்களுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. மனிதனின் இருகால்கள் மட்டுமே முழுஎடையையும் சுமந்து செல்ல வேண்டி உள்ளது. 100*தேனீயின் ரீங்காரம் தேனீயின் ரீங்காரம் என்பது அதன் குரல் ஒலி அல்ல. தேனீ தன் இறகுகளை வினாடிக்கு 400 தடவைக்கு மேல் அசைத்துக் காற்றைக் கடைவதால் ஏற்படும் ஒலியாகும். இது தான் ரீங்காரமாக நமக்கு கேட்கிறது. 101*சாண வண்டுகள் விலங்குகள், மனிதர்களின் கழிவுகளை எடுத்து உருட்டிச் செல்லும் வண்டுகளை சாண வண்டுகள் (ஞீதணஞ் ஞஞுஞுtடூஞு) என்கிறோம். இப்படி இவை ஏன் செய்கின்றன? அவற்றை தங்கள் வங்குகளுக்கு உருட்டிச் செல்லும் ஒரு வண்டு 40 முட்டைகளை சில மணித்துளிகளில் அந்த வண்டுருட்டாம் பழத்தினுள் இட்டு முடிவிடுகிறது. பின்னர் குஞ்சுகள் பொரித்ததும் அக்கழிவு உருண்டையே உடனடி உணவாக அமைகிறது. அதற்கு சாணத்தில் பல புல் மணிகள், பற்பல தாதுப்பொருட்கள் அடங்கியுள்ளன. மண்ணுக்குள் காற்றோட்டம் ஏற்பட உதவும் மண்ணின் நண்பன் சாண வண்டுகள். * 102*‘பேப்பர்‘ சிறுமி படத்தில் இருப்பது பெயின்டிங் இல்லை குட்டீஸ். வண்ண காகிதங்களை வைத்து செய்யப்பட்ட உருவங்கள். இந்தக் கலைக்கு ‘பேப்பர் கிராபிக்ஸ்’ என்று பெயர். இந்தக் கலை சொற்ப நாடுகளில் மட்டுமே அறிமுகமாகியுள்ளது. இந்த அரிதான கலையை மிகச் சிறிய வயதில் கற்றுத்தேர்ந்தவர் ரஷ்யாவைச் சேர்ந்த யூலிகா ப்ரோட்ஸ்கயா என்ற சிறுமி. யூலிகா கற்பனையில் <உருவான டிசைன்களை வாங்க பல முன்னணி கிராபிக்ஸ் நிறுவனங்கள் கியூவில் காத்துக்கிடக்கிறார்களாம். பேப்பர் ஆர்ட், போபோகிராபி, ஓரிகாமி, டெக்ஸ்டைல் பெயின்டிங் போன்ற கலையில் தேர்ச்சி பெற்றவர். ... 103*குட்டி பயில்வான் என்ன படத்தை பார்த்ததும் கிராபிக்ஸ் என்று நினைக்காதீங்க. இது உண்மையான ஒரு சிறுவனின் உடம்புதான். இந்த குட்டிப் பையனின் பெயர் குலியானோ ஸ்டோரி. வயது 7! இவன் 2 வயதிலிருந்தே ஜிம்னாஸ்டிக் பழக ஆரம்பித்தானாம். எவ்வளவு துõரமாக இருந்தாலும் கையாலேயே நடந்துவிடுவானாம். 3 நிமிடத்தில் 90 புஸ்அப்ஸ்(கதண்ட தணீண்) செய்து கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளான். ஹாலிவுட் நடிகர் அர்னால்டு போல் வருவதே தனது லட்சியம் என்கிறான் இந்தக் குட்டி பயில்வான். ... 104*நீர்வீழ்ச்சியில் ஓட்டல் நடுக்கடலில் ஓட்டல், கடலுக்கு அடியில் ஓட்டல், விண்வெளியில் ஓட்டல் என்று கேள்விப்பட்டிருப்பீங்க. நீர்வீழ்ச்சியில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறது. ‘வில்லா எஸ்கட்ரா’ என்ற பிலிப்பைன்ஸ் நிறுவனம். லாபாசின் நீர்வீழ்ச்சியில்அமைந்துள்ளது இந்த ஓட்டல். மூங்கில் கம்பில் செய்த டேபிள், வாழை இலை தட்டு, தென்னை இலை டம்ளர் உபயோகிக்கின்றனர். சுற்றுப்புறச் சூழல் மாசு ஏற்படாமல் இயற்கை முறையில் எல்லாப் பொருட்களையும் பயன்படுத்தி வருவதால் நீழ்வீழ்ச்சி ஓட்டலுக்கு எந்த தடையும் விதிக்காமல் தொடர்ந்து நடத்த பிலிப்பைன்ஸ் அரசு அனுமதியளித்துள்ளது. பிலிப்பைன்சுக்கு வரும் சுற்றுலாவினருக்கிடையே நன்கு வரவேற்பை பெற்றுள்ளதால் 24 மணிநேர ஓட்டலாக மாற்ற திட்டமிட்டுள்ளனர் ஓட்டல் நிர்வாகத்தினர். ... 105*பர்கர் விலை ரூ.16,157 பர்கர் விலையைக் கேட்டதும் தலை சுத்துதா குட்டீஸ்! இது இந்தியாவில் கிடையாது. அமெரிக்க தலைநகரம் நியூயார்க்கில் ஆண்டுதோறும் மே மாதம் பர்கர் திருவிழா கொண்டாடுவாங்க. நேஷனல் ஹம்பர்கர் நிறுவனம் சார்பாக 2012ம் ஆண்டுக்கான பர்கர் திருவிழா நடந்தது. திருவிழாவுக்காக தயாரித்த பர்கர் ரொம்ப ஸ்பெஷல். இதில் இடம்பெற்ற ஒரு பர்கரின் விலை ரூ. 16 ஆயிரத்து 157 விற்பனை செய்துள்ளனர். அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பர்கரில் என்று கேட்கிறீங்களா? ஜப்பானில் வளரும் உயர் ரக மாட்டு கொழுப்பு, பசிபிக் சமுத்திரத்திலிருந்து எடுக்கப்பட்ட மூலிகை இலைகள், உலகிலேயே மிக உயர்ந்த சீஸ் கட்டி, வறுத்த குயில் முட்டை, ப்ரஷ் கிரீம், இன்னும் சில பல விலையுயர்ந்த பருப்பு வகைகள் இறுதியாக சாப்பிடக்கூடிய வைரம் மற்றும் தங்க இலைகள், வெள்ளியில் செய்த டூத் பிக். இந்த ஸ்பெஷல் பர்கர் கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ... 106*பாலத்துக்கு வயது 75 சான் பிரான்சிஸ்கோ விரிகுடா திறக்கும் இடத்தில் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கும் கோல்டன் கேட் பாலத்துக்கு இந்த ஆண்டுடன் 75 வயதாகிறது. வயதானாலும் தன் கம்பீரத்தில் எந்த குறையும் இல்லாமல் நிமிர்ந்து நிற்கிறது. பாலத்தின் மொத்த நீளம் 2.7 கிலோமீட்டர் ஆகும். 1933ம் ஆண்டு தொடங்கி 1937ல் கட்டிமுடிக்கப்பட்டது. அப்போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலமாக இருந்தது. ... 107*குண்டு பூனை நியூயார்க் விலங்குகள் பாதுகாப்பு மையத்தில் வசித்து வரும் பூனை கிரீடி ஸ்பாஜ்சி பாபு. வயது 9 ஆகிறது. எடை 14.5 கிலோ. பூனை எடைக்கு காரணம் தைராய்டு என்று எண்ணிவிடவேண்டாம். டயட்டில் இருக்கும் போதே திடீரென்று எடை அதிகரித்ததாம். பூனை மாமிசம் கூட சாப்பிடுவதில்லை. இருந்தும், வெறும் காய்கறிகளை சாப்பிட்டே இந்த அசுர எடைக்கு காரணம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். ... 108* பணத்தை ஒன்றுக்கு இரண்டு தடவையாக எண்ணிப் பார்க்கும் பழக்கம் நம்மிடையே உண்டு. லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் கட்டுக்கட்டாக பணத்தை சில நிமிடங்களில் மிகச் சரியாக எண்ணி முடிப்பது கஷ்டம். வங்கிகளில் இதற்கென கவுன்ட்டிங் மெஷின்கள் இருக்கும். தனி நபர்களுக்கு அவ்வளவு பெரிய மெஷின்கள் தேவையில்லை. அதற்காக, பணத்தை எண்ணும் ‘கவுன்ட்டிங் ரிங்’ என்ற மோதிரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்ட்டிங் ரிங்கை கட்டை விரலில் மோதிரம் போல மாட்டிக் கொள்ள வேண்டும். மோதிரத்தில் உள்ள பவர் பட்டனை ஆன் செய்து கொண்டால், அதன் டிஸ்பிளேயில் ஜீரோவைக் காட்டும். அடுத்து நீங்கள் பணத்தை வேகமாக மேலிருந்து கீழே அதன்மீது படுமாறு விட்டாலே போதும், மோதிரத்தின் கீழ்ப்பகுதியில் இருக்கும் ரப்பரானது இன்ப்ரா ரெட் தொழில்நுட்பத்தின் மூலம் எத்தனை நோட்டுக்கள் மேலிருந்து கீழே போயிருக்கிறது என்பதை அரை நொடியில் கச்சிதமாகக் கணக்கிட்டுச் சொல்லிவிடும். இதில் சிறிய அளவிலான பேட்டரி ஒன்று இருக்கிறது. உங்கள் வேலை முடிந்த பிறகு பேட்டரியை ஆப் செய்து கொள்ளலாம். பல ஊர்களுக்குச் சென்று பணம் வசூல் செய்து வருபவர்களுக்கு கவுன்ட்டிங் ரிங் நிச்சயம் உதவிகரமாக இருக்கும். இந்த மோதிரம் சுவிட்ஸர்லாந்தில் பயன்படுத்தப்படுகிறது. 109* எலக்ட்ரானிக் மூக்கு வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க மெட்டல் டிடெக்டர் பயன்படுத்தி வந்தனர். இப்போது புதிதாக ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கருவியின் ஒரு ‘சில்‘லில் இரண்டு உலோக படலங்கள் இருக்கும். உலோக படலங்களுக்கிடையே வெடிகுண்டு செய்ய பயன்படும் ஹைட்ரஜன் பெராக்சைடின் வாசனை இருந்தால் போதும். இந்த எலக்ட்ரானிக் மூக்கு வேலை செய்ய ஆரம்பித்துவிடும். செம்பு மற்றும் கோபால்ட் தாலோசையனைன் படலங்களுக்கிடையே எந்த வாயு இருந்தாலும் இரண்டு படலங்களும் ஒரே அளவிலான மின்சாரத்தைக் கடத்தும். ஆனால் வாயுக்களில் ஹைட்ரஜன் பெராக்சைடைச் சேர்த்தால் செம்பு படலத்தில் மின்னோட்ட அளவு அதிகரிக்கும். அதே நேரத்தில் கோபால்ட் படலத்தில் மின்னோட்டத்தின் அளவு குறையும். இரண்டு படலங்களிடையே மின்னோட்ட வேறுபாடு இருந்தால் அங்கே வெடிகுண்டு இருக்கிறது என்று பொருள். காலத்திற்கேற்ற கண்டுபிடிப்பு! 110* எலக்ட்ரானிக் ரேஸ் கார் பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரானிக் ரேஸ் காரை மும்பை ஐஐடி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். இந்த எலக்ட்ரானிக் கார் அதிகபட்சம் மணிக்கு 115 கி.மீ. வேகத்தில் செல்லும். இவோ 1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரேஸ் காரை தயாரிக்க ரூ. 15 லட்சம் செலவாகியுள்ளது. இவோ 1 எலக்ட்ரானிக் காரில் 32 கேவி திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. காரை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 32 கிலோமீட்டர் போகலாம். இவோ 1 இந்திய தயாரிப்பில் உருவான முதல் பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரானிக் கார் என்பது குறிப்பிடத்தக்கது. 111* இ-சைக்கிள் உலகப் புகழ்பெற்ற ஆடி கார் நிறுவனம் இ-சைக்கிள் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் கார், பைக் போல இந்த இ-சைக்கிளை ஓட்ட முடியும். சைக்கிள்ல பெடலிங் இருந்தாலும் மோட்டார் மூலமும்தான் இதை இயக்க முடியும். இதில் உள்ள லித்தியம் பேட்டரி இரண்டரை மணி நேரம் சார்ஜ் செய்தால் போதும். இதன் சக்கரங்கள் பாலிமர் பைபர் பிளேடுகளால் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மொத்த எடை 21 கிலோ. மற்றொரு விசேஷம், இந்த சைக்கிளில் ஹேன்டில் பார் மூலம் உட்காரும் இருக்கையை நம்ம வசதிக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம். ... 112*மர பைக் ஹங்கேரி நாட்டில் வசிக்கும் டிரக் டிரைவர் இஸ்டாவன் புஸ்காஸ். வயது 57. முற்றிலும் மரத்தால் செய்யப்பட்ட பைக் ஒன்றை உருவாக்கியுள்ளார். ஹெல்மெட்டும் லைட் வெயிட் மரத்தில்தான். மர பைக் ஓட்டினால் தசைபிடிப்பு ஏற்படாது என்கிறார். இதை உருவாக்க 2 ஆண்டுகள் ஆனதாம். 113*நீள நாக்கு பெண்! உலகிலேயே நீளமான நாக்கு கொண்ட பெண் என்ற பெருமையை அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் பெற்றுள்ளார். இவர் பெயர் சானல் டேப்பர். வயது 21. கலிபோர்னியாவில் படித்து வரும் இவர் ஒரு புதுமையான கின்னஸ் சாதனை படைத்துள்ளார். லாஸ்ஏஞ்சல் நகரில் ஒரு நிகழ்ச்சியின் போது, கின்னஸ் சாதனை ஆய்வாளர்கள் சானலின் நாக்கை அளந்து பார்த்தனர். அவரது நாக்கின் மொத்த நீளம் 9.8 செ.மீ நீளம் இருந்தது. இது சாதாரண மனிதனின் நாக்கு அளவை விட 2 மடங்கு அதிகமாம்! உனக்கு ரொம்ப நாக்கு நீளம் என்று இவரை சொன்னால் தகும். 114*இரண்டு தலை பூனை! அமெரிக்காவில் ஒரு அபூர்வ பூனை ஒன்று உள்ளது. அதன் பெயர் பிராங் மற்றும் லுõயி. இந்த அதிசய பூனைக்கு உடல் ஒன்று என்றாலும், தலை மட்டும் இரண்டு.இந்தப் பூனை கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த பூனை 2 முகங்களுடன் கடந்த 12 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறது. அதாவது மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும் இவ்வளவு ஆண்டுகள் இதுபோன்ற மாறுபட்ட உருவத்துடன் வாழ்ந்தது இல்லையாம். இதை செல்லமாக வளர்க்கும் அதன் உரிமையாளர் மார்ட்டி ஸ்டிவென்ஸ் இதுகுறித்துக் கூறுகையில், இந்தப் பூனைக்கு 2 முகங்கள் இருந்தாலும், 3 கண்கள் மட்டுமே உள்ளன. இதில் 2 கண்களால் மட்டும் பார்க்க முடியும். ஆனால், எல்லா நாசித் துளைகளாலும் சுவாசிக்க முடியும். இதே உருவத்தை கொண்ட கிரேக்க கடவுளான ஜனஸ்சின் பெயரே இதற்கு பெயராக இடப்பட்டுள்ளது. * 115*575 மீட்டர் துணி! ஆக்ராவின் அடையாளமம் தாஜ்மகால். இதை கட்டிய ஷாஜகானின் 357வது நினைவு தினம் ஜூன் மாதம் அனுசரிக்கப்பட்டது. அவரின் நினைவாக டில்லியைச் சேர்ந்த அமித் குவாலி அமைப்பைச் சேர்ந்தவர்கள் 575 மீட்டர் நீளத்தில் பல வண்ணங்களில் தைக்கப்பட்ட துணிகளை சுமந்துகொண்டு தாஜ்மகாலை சுற்றி வந்தனர். ஷாஜகான் மனைவி மும்தாஜ் சமாதியில் சந்தனம் மற்றும் ரோஜா இதழ்கள் துõவி வழிபட்டனர். ஹாஜகானின் நினைவு தினம் என்பதால் அன்று மட்டும் சுற்றுலாத்துறை சார்பாக தாஜ்மகாலை இலவசமாக காண முடிந்தது. ஐதிராபாதில் இருக்கும் ஷாஜகான் வம்சாவளியினர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ... 116*பெரிய பெயின் பிரஸ்! அஸ்சாம் மாநிலத்தின் மூத்த பாடலாசிரியர் பிஸ்னு பிரசாத் ரப்பா. இவர் சிறந்த எழுத்தாளர், பாடலாசிரியர், சுதந்திர போராட்ட வீரர். ஜூன் மாதம் இவரின் நினைவாக நாடு முழுவதும் ஓவியம், கவிதை மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 28 அடி நீளமான பிரசில் பள்ளி மாணவர்கள் அவரின் உருவப்படத்தை வரைந்துள்ளனர். தற்போது இந்த பிரஸ் உலக கின்னஸ் சாதனையில் இடம்பெறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ... 117*ஜி-20 கடந்த மாதம் மெக்சிகோவில் ஜி-20 கூட்டம் நடந்தது. இந்தியா சார்பாக பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டார். ஜி-20 என்றால் குரூப்-20. ஜி-20 மாநாட்டில் உறுப்பினராக இருக்கும் 20 நாடுகளில் நிதி அமைச்சர்கள் மற்றும் வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள். 2008ம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. முதல் மாநாட்டில் இந்தியா இடம் பெற வில்லை. இரண்டாவதாக இங்கிலாந்தில்(2009) நடந்த கூட்டத்தில் உறுப்பினராக இந்தியா சேர்ந்தது. ஜி-20 நாடுகளில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகள்: ஆஸ்திரேலியா, கனடா, சவுதி அரேபியா, அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா, தென் ஆப்ரிக்கா, துருக்கி, அர்ஜென்டினா, பிரேசில், மெக்சிகோ, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, சீனா, இந்தோனேஷியா, ஜப்பான் மற்றும் தென்கொரியா மற்றும் ஐரோப்பிய யூனியன். ... ************ 118*பாதாளலோகம்! அண்டார்டிகா கடல் பரப்பிலிருந்து எட்டாயிரம் அடிக்குக் கீழே இதுவரை அறியப்படாத ஒரு பாதாள லோகத்தை கண்டுபிடித்திருப்பதாகவும், வெளியுலகம் அறியாத பல புதிரான உயிரினங்கள் இருப்பதாகவும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆக்ஸ்போர்டு, சவுத்தாம்டன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஒரு குழு, பிரிட்டிஷ் அண்டார்டிகா ஆய்வு அமைப்புடன் இணைந்து ஒரு குறிப்பிட்ட ஆய்வில் ஈடுபட்டது. அப்போது தாங்கள் ஒரு புதிய உயிரினத் தொகுப்பைக் கண்டுபிடித்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதில் பலவகை நண்டுகள், புதியவகையான ஆக்டோபஸ், நட்சத்திர மீன் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை, அறிவியல் உலகத்துக்கு முற்றிலும் புதியவை. அவ்வளவு ஆழத்தில் அந்த உரினங்கள் வாழ்வதில் இன்னொரு அசாதாரணமானவிசயமும் உள்ளது. கடலுக்கு அடியில் உள்ள எரிமலைகளுக்கு மேலாக அந்த உயிரினங்கள் காணப்படுகின்றன.அந்த எரிமலைகள் சீறும்போது கரும்புகையைக் கக்குகின்றன. அப்போது 380 டிகிரி அளவுக்கு வெப்பநிலை உயருகிறது. காரீயத்தையே உருக்கிவிடக் கூடியதுதான், இந்த வெப்பநிலை. சூரிய வெளிச்சத்துக்கே முற்றிலும் வாய்ப்பில்லாத நிலையில் இருக்கும் இருட்டில் அந்த உயிரினங்கள் வாழ்வதும் குறிப்பிடத்தக்கது. எரிமலைக் கரும்புகையில் உள்ள அதீத நச்சுத் தன்மை வாய்ந்த வேதிப்பொருட்களை உடைப்பதன் மூலம் அந்த உயிரினங்கள் தங்களுக்குத் தேவையான சக்தியைப் பெறுகின்றன.இந்தப் பாதாள உலகத்தில் காணப்படும் இரு டஜன் புதிய உயிரினங்களில் “யெட்டி கிராப்“ என்ற உயிரினம்தான் அதிகளவில் உள்ளது.16 செ.மீநீளமுடைய இவை. மற்றவகை நண்டுகளைப் போல் இல்லாமல் இவை தங்களின் மார்புப் பகுதியில் ரோமத்தாலான அடர்த்தியான அடுக்கைக் கொண்டிருக்கின்றன. இதில் பாக்டீரியாவை வளர்த்து, இவை உண்ணுகின்றன என்று கருதப்படுகிறது. இங்கு காணப்பட்ட, ஏழு கரம் கொண்ட நட்சத்திர மீன் போன்ற உயிரினங்களும் விஞ்ஞானிகளின் ஆர்வத்தைக் கிளறியுள்ளன. ** 119* நாற்றம் வீசும் பூ! பூக்கள் என்றால் வாசம் மணக்கும். நாற்றம் அடிக்கும் பூ இருக்குமா, என்ன? இருக்கிறது. இந்த பூவின் மணம் இறந்து போன விலங்கு ஒன்றின் உடல் அழுகும் போது வரும் மணத்துக்கு ஒப்பாக இருக்குமாம். பூ இனங்களில் உள்ள பெரிய இன பூக்களில் இதுவும் ஒன்று ஆகும். இணிணூணீண்ஞு ஞூடூணிதீஞுணூ, அட்ணிணூணீடணிணீடச்டூடூதண் tடிtச்ணதட் என்ற பெயர்களின் அழைக்கப்படும் இந்தப் பூ ஆண்டுக்கு மூன்று முறை மட்டுமே பூக்கின்றது ஜெர்மனியின் ஓடிஞுடூ என்ற இடத்தில் உள்ள தாவரவியல் பூங்கா ஒன்றில் இந்த பூ மலர்ந்துள்ளது. *** 120*விநோத நாய்! சீனாவில் இளஞ்சிவப்பு நிறமுள்ள வினோத தோற்றத்தில் ஒரு நாய் உள்ளது. இந்த நாய் அடையாளம்காண முடியாதவாறு ஒரு சிறிய குதிரை போன்றும் பன்றி போன்றும் நாய் போன்றும் தோன்றமளிக்கின்றது. அதனுடைய வால் குதிரையின் வால் போன்றும் உடலமைப்பு பன்றி போன்றும் காணப்படுவதால் அங்குள்ளவர்கள் இது ஒரு மரபணு பிரச்சினையால் தவறான முறையில் பிறந்த நாயாக இருக்கலாம் என கருதுகிறார்கள். *** 121*விண்கல் உருவாக்கிய கிராமம் மும்பை நகரில் இருந்து 800 கி. மீ. தொலைவில் உள்ள புல்தானா மாவட்டத்தில் லோனார் என்னும் அதிசய கிராமம் உள்ளது. இங்கு 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, 60 கிலோ மீட்டர் விட்டமுள்ள ஒரு விண்கல் உடைந்து சிதறி விழுந்ததில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது. விண்கல் தாக்கியதால் ஏற்பட்ட இந்த பள்ளத்தின் விட்டம் 1800மீட்டர். பள்ளத்தின் ஆழம் 170 மீட்டர். இந்த பள்ளத்தை சுற்றி அடர்ந்த காடுகளும், ஒரு ஏரியும் உள்ளது. இப்படியொரு அதிசய பூமி இருப்பதை 1823-ம் ஆண்டு அலெக்சாண்டர் என்ற வெள்ளைக்காரர் கண்டுபிடித்தார். விண்கல் உருவாக்கிய இந்த இடத்தின் மேற்கு திசையில் சுவர் போன்ற நீண்ட பகுதிகளும் காணப்படுகின்றன. கிழக்கு திசை ஏரியை நோக்கிச் செல்வதாக அமைந்துள்ளது. இப்பகுதியில் பண்ணைகளும், தோட்டங்களும் உள்ளன. இங்குள்ள ஏரி பறவைகளின் சரணாலயமாகவும் திகழ்கிறது. லோனர் கிராமத்தில் உள்ள விண்கல் ஏற்படுத்திய பகுதி பல ஆயிரம் ஆண்டுகளாக அப்படியே இருப்பதும் தெரியவந்துள்ளது. இங்குள்ள ஏரியில் உள்ள தண்ணீரில் உப்பு மற்றும் சுண்ணாம்பு கலந்துள்ளது. இந்தியாவில் இப்படிப்பட்ட அதிசயபூமியை புராதன சின்னமாக அறிவிக்கவேண்டும் புவியியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். *** 122*பன்றிகள் வசிக்கும் கிராமம்! சீனமக்கள் விரும்பி உண்ணும் இறைச்சி வகைகளில், பன்றி இறைச்சி. சீனாவில் தொழிற்சாலைகள் அதிகரித்து விட்டதால், பன்றிகளை வளர்ப்பதற்கு தகுந்த சூழல் இல்லை. இந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், ஜாங்குபு என்ற, மரங்கள்சூழ்ந்த குளு, குளு பிரதேசத்தில், பன்றிகளை வளர்ப்பதற்காக, பிரத்யேகமாக ஒரு கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. பன்றிகள் வசிப்பதற்காக இங்கு,கான்கிரீட்டாலான, 600 சிறிய குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும், பத்தாயிரம் ரூபாய் செலவில் அமைக்கப் பட்டுள்ளன. இங்கு பன்றிகள் விளையாடுவதற்காகவும், உற்சாகமாக வலம் வருவதற்காகவும், பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தினமும், காலை 8 மணிக்கு, குடில்களிலஇருந்து திறந்து விடப்படும் பன்றிகள், மாலை 5 மணிவரை, மற்ற பன்றிகளுடன் சேர்ந்து விளையாடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றன. *** 123*அந்தரத்தில் தொங்கும் பாறை பன்னெடுங்காலமாக ஒரு பாறை, தரை மட்டத்தில் படாமல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் அதிசயம் சவுதி அரேபியாவில் உள்ள அல்-கசனா பகுதியில் ஒரு கிராமத்தில் தான் இந்த அதிசய பாறை உள்ளது. அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த பாறையில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1989 ம் ஆண்டு இந்த அதிசயப் பாறையின் பின்புறத்திலிருந்த ஒரு தீவிரவாதி சுட்டுக் கொள்ளப்பட்டான் . இன்றும் கூட அந்த சுடப்பட்டவரின் உடலிலிருந்து சிதறிய இர த்தம் உறையாமல் அப்ப?டியே உள்ளது. இந்த அதிசயப் பாறையின் மற்றொரு அதிசயம் என்னவென்றால், தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப இது மேலும் கீழுமாக அசைவதாகவும் ஒரு அரியத் தகவல் . 124*காசு சொல்லும் ரகசிய மொழி! இந்திய ரூபாய் நோட்டுகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது என்பது தெரிந்த விஷயம். நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பதை தெரிஞ்சுக்கலாமா? இந்தியாவில் நான்கு மாநிலங்களில் நாணயங்கள் தயாரிக்கப்படுகின்றன. உத்தரப்பிரதேசத்தில் உள்ள நொய்டா, மகாராஷ்டிராவில் உள்ள மும்பை, மேற்குவங்கத்தில் உள்ள கோல்கத்தா, ஆந்திராவில் உள்ள ஐதராபாத் ஆகிய நகரங்கள் அவை. எந்த நாணயம் எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள உதவியாக அடையாள குறியீடு நாணயத்தில் இடம்பெற்றிருக்கும். எல்லா நாணயங்களின் அடியில், தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் கீழ் ஒரு குறியீடு இடம்பெற்றிருக்கும். அந்தக் குறியை வைத்து, அந்த நாணயம் எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதை தெரிவிக்கும். நாணயத்தில் உள்ள ஆண்டுக்குக் கீழே ஒரு தடிமனான புள்ளி இருந்தால், அது நொய்டாவிலும், சிறிய புள்ளி அல்லது டைமண்ட் வடிவம் இருந்தால், அது மும்பையிலும், 5 முனை நட்சத்திர வடிவம் இருந்தால், அது ஐதராபாத்திலும், எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கோல்கத்தாவிலும் தயாரிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். குட்டீஸ்! இப்ப உங்ககிட்ட இருக்கிற நாணயத்தை உற்றுப் பாருங்க. எந்த குறி இருக்கிறது என்று பாருங்க. அது எந்த நகரத்தில் தயாரானது என்று இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்குமே! ** 125*செல்போன்களில் தங்கம்! சீனாவில் துõக்கி எறிக்கப்பட்ட 100 மில்லியன் மொபைல் போன்களிலிருந்து ஆயிரத்து 500 கிலோ தங்கம், 1 மில்லியன் கிலோ அளவிற்கு தாமிரம், 30 ஆயிரம் கிலோ அளவிற்கு வெள்ளி உள்ளிட்டவைகள் பிரித்து எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சீனாவிலிருந்து வெளிவரும் பீபிள்ஸ் டெய்லி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியன் அளவிற்கு மொபைல்போன்கள் துõக்கி வீசப்படுவதாகவும், சீனாவில் மட்டும் 100 மில்லியன் மொபைல்போன்கள் துõக்கி எறிக்கப்படுகின்றன. இந்த செல்போன் கழிவிலிருந்து தங்கம்,காப்பர் ,சில்வர் போன்றவைகளும் பிரித்தெடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது 126*குழந்தைகள் நடத்தும் வங்கி டில்லியில் இயங்கி வருகிறது ‘பட்டர்பிளை’ சில்டிரன் டெவலப்மென்ட் கஜானா என்ற வங்கி. இதை நடத்தி வருபவர்கள் பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட குழந்தைகள். ஏப்ரல் 2001ம் ஆண்டு முதன் முதலில் டில்லியில் தொடங்கப்பட்டது. வசதியில்லாத குழந்தைகள் தொடர்ந்து படிக்க முடியாமல் பாதியிலேயே கூலி வேலை செய்கின்றனர். இவர்களின் எதிர்காலம் கருதி ‘பட்டர்பிளை‘ என்ற தொண்டு நிறுவனம் இந்த வங்கியை தொடங்கியது. இங்கு வேலை செய்யும் குழந்தைகளுக்கு வங்கி கணக்கு குறித்த வகுப்பு மற்றும் பயிற்சிகளை அந்த நிறுவனமே செய்து வருகிறது. ஒரு கூட்டுறவு வங்கியாக தொடங்கப்பட்ட இந்த வங்கி 2004ம் ஆண்டு முதல் சர்வதேச வங்கி அந்தஸ்து பெற்றுள்ளது. தற்போது 132 கிளைகளுடன் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபால், இந்தியா, இலங்கை, கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளில் நடத்தி வருகிறது. இந்தியாவில் மட்டும் சென்னை, கோல்கொத்தா உள்பட 106 கிளைகள் உள்ளன. ... 127*சாலையில் விமானநிலையம் சாலையின் குறுக்கே ரன்வே இருக்கும் ஒரே ஏர்போர்ட் பிரிட்டனில் உள்ள கிப்ரால்டர் ஏர்போர்ட். விமானம் வருவதற்கு முன் சாலையில் இருபுறமும் போக்குவரத்தை நிறுத்திவிடுவார்கள். விமானம் சென்ற பிறகு திரும்பவும் சாலையில் வாகனங்கள் செல்லும். ஒரு நாளைக்கு 7 விமானங்கள் சாலையின் குறுக்கே செய்கிறது. அதுவரை மற்ற வாகனங்கள் 10 நிமிடங்கள் வரை நிறுத்தப்படும். ... 128*இளம் பணக்காரன் இங்கிலாந்தின் நார்போக் நகரைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் கிரியோன் வில்லியம்சன். உலகிலேயே இளம் பணக்காரன் அந்தஸ்து பெற்றுள்ளான். 9 வயதிலேயே ரூ. 21.5 லட்சம் சம்பாதித்துள்ளான். கிரயோன் வில்லியம்சன் ஒரு ஓவியன். பள்ளியில் வரைந்த ஓவியத்தை இணையதளத்தில் ஏலம் விட்டுள்ளான். வில்லியம்சின் ஓவியங்கள் ஏலம் அறிவித்த 15வது நிமிடத்திலேயே ரூ. 21.5 லட்சத்துக்கு விற்றுத்தீர்ந்தது. ஒவ்வொரு ஓவியங்களும் குறைந்தது 4 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது. ஓவியங்களில் விற்ற பணத்தில் தன் பெற்றாருக்கு வீடு வாங்கித்த தரப்போவதாக கூறுகிறான் இந்த இளம் பணக்காரன். ************** 129*பூமியைப்போல ஒரு புதிய கோள் விண்வெளியில் பூமியை ஒத்த உயிரினங்கள் வாழக் கூடிய கோள்கள் இருக்கிறதா ஆய்வில் இதுவரை வானியலாளர்களால் 4 புதிய கோள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் நாலாவதாக இருப்பது பூமியில் இருந்து 22 ஒளியாண்டுகள் துõரத்தில் உள்ள எஒ 667இ என்ற குறியீட்டுப் பெயருடைய நட்சத்திரத்தை சுற்றி வரும் கோள் ஆகும். இந்தக் கோள் பூமியை விட பெரிய பருமனுடன் 4.5 மடங்கு அதிக அளவு திணிவை கொண்டிருக்கிறது. 28 பூமி நாட்களில் அதன் சூரியனைச் சுற்றி வருகிறது. இந்தக் கோளிலேயே உயிரினங்கள் வாழக் கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். * 130*தாவரங்கள் இருக்கும் உஷார் குணம் ஒரு தாவரத்திற்கு ஆபத்து நேரும் போது அது அதன் அருகில் உள்ள இதர தாவரங்களை எச்சரித்து விடும் வகையில் கண்ணுக்குப் புலப்படாத ஒரு நச்சு வாயுவை பாதிப்புக்கு உள்ளாகும் தாவரம் சுரந்து விடுவதாக ஆய்வொன்றில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக தாவரங்கள் தாவர உண்ணி விலங்குகளால் தாக்கப்பட்டாலோ அல்லது வேறு வகையில் ஆபத்தை எதிர்கொண்டாலோ இவ்வாறு நடந்து கொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வு உதுஞுtஞுணூ க்ணடிதிஞுணூண்டிtதூ ஆய்வு கூடத்தில் நடத்தப்பட்டுள்ளது. * 131*15 வயதில் பாட்டியான சிறுமி பிரிட்டனில் உள்ள 15 வயது சிறுமிக்குதான் இந்த அதிர்ச்சியான வயோதிக நோய் ஏற்பட்டுள்ளது. இந்தச் சிறுமியின் பெயர் ஜாரா ஹார்ஸ்சன்(ஙூச்ணூச் ஏச்ணூtண்டணிணூண) எல்லாக் குழந்தைகளைப் போலதான் வளர்ந்து வந்தாள் ஜாரா. ஆனால், பருவயதான 15 வயதை தொடும் போது தான், அவர் இயற்கைக்கு மாறான உடல் வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டது. ஒருவையான விநோத தோல் நோய் பாதிப்பால் அவளுடைய உருவம் மாறத்தொடங்கியது. அந்த மாற்றம் அவரை முதுமையாக்கிவிட்டது. வயதில் சிறுமி. தோற்றத்தில் பாட்டியாகிவிட்டாள். இதுவரை இத்தகைய நோயாளிகள் 30 பேர் வரை பிரிட்டனில் இனங்காணப்பட்டுள்ளது. இந்த சிறுமிக்கு சிகிச்சை அளித்துவரும் பிளாஸ்ட்ரிக் சிகிச்சை நிபுணர்கள், இச் சிறுமியை குணப்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். * 132*காற்றில் ஓடும் கார் அழுத்தப் பட்ட காற்றை எரி பொருளாக கொண் டு ஓடும் கார் ஒ ன்றை டொயோட் டா நிறுவனம் கடந்த ஆண்டு உருவாக்கினர். அந்தக் காருக்கு கு-ரின் ( ஓக் கீஐN ) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நவீன வாகனத்தின் சோதனை ஓட்டம் நடை பெற்றது. 80 மைல் வேகத்தில் சென்று கின்னஸ் சாதனை செய்துள்ளது. மிக அதிக வேகத்தில் சென்றாலும் , சில ஆரம்ப கட்ட குறை பாடுகள் உள்ளன. குறிப்பாக இதில் ஒருவர் மட்டும் தான் பயணிக்க முடியும் . இது ஒரு மூன்று சக்கர வாகனம். இரண்டு கிலோ மீட்டருக்கு ஒரு முறை இதற்கு அழுத்தப்பட்ட காற்று நிரப்ப வேண்டும். விரைவில் குறைகள் சரி செய்யப்பட்டு சாலைகளிலும் இந்த கார் ஓடும் நாளை எதிர்பார்க்கலாம். * 133**குண்டு வெடிக்கும் வண்டு இந்த வண்டுகளின் வயிற்று அடிப்பாகத்தில் சிறிய சுரப்பி இருக்கிறது. அந்தச் சுரப்பியில் ஒரு வேதித் திரவமும், ஆக்ஸிஜன் வாயுவும் சுரக்கின்றன. இந்த இரண்டும் சேர்ந்து வெடிக்கும் தன்மை கொண்டவை. சிலந்தி வலையில் இந்த வண்டு மாட்டிக்கொண்டதும், நெபிலியா வகைச் சிலந்தி அதைத் தின்ன உடனே பாய்ந்து போய் கவ்வும். ஆபத்தை அறிந்த வண்டு, தன் வயிற்றுப் பாகத்தைச் சிலந்தியின் பக்கம் திருப்பி, குறிபார்த்துச் சுரப்பியை வெடிக்கச் செய்யும். அந்த வெடிச் சத்தத்தை சிலந்தியால் தாங்க முடியாது. மேலும் காரமான ஒரு திரவமும் அதன் மீது பீய்ச்சப் படும். வெடிச்சத்தம், திரவ முழுக்கில் இருந்து சிலந்தி மீள்வதற்குள் அந்த வண்டு தப்பித்துப் போய்விடும். இந்த வகை ஆற்றல் இருப்பதால் குண்டு வெடிக்கும் வண்டுக்கு ஆபத்தோ, எதிரிகளோ அதிகம் இல்லை. ( தினமலர் சிறுவர் மலரில் நான் எழுதி வரும் துணுக்குத் தொடரின் மூன்றாம் பாகம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக