புதன், 26 செப்டம்பர், 2012

முதன்மை பெறும் முன்னோர் வழிபாடு

முதன்மை பெறும் முன்னோர் வழிபாடு நீத்தார் வழிபாடு, குலதெய்வ வழிபாடு, குலகுரு வழிபாடு என்ற மூன்றும் முக்கியமானவை. இவற்றைச் செய்யாமல் மேற்கொள்ளும் எந்த வழிபாட்டாலும் பயன் ஏற்பட்டுவிடாது. முன்னோர் வழிபாடே நீத்தார் வழிபாடு. வாழும் காலத்தில் வயதான பெற்றோரைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். இது அடிப்படைக்கடமை. வாழும் காலத்தில் சோறுபோடாøவ் செத்தபின் செய்யும் வழிபாடு சிரார்த்தமாகாது. நாடகமாகவே அமையும். உள்ளன்புடன் செய்ய வேண்டியது. சிரத்தையுடன் செய்யப்படுவது எனவேதான் திவசத்தை ‘சிரார்த்தம்’ என்றார்கள். தமிழர் நெறி முன்னோர் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தந்தது தமிழரின் நெறியாகும். தன் குலமுன்னோரை மட்டுமல்லாமல் நாடுகாக்க நல்லுயிர் ஈந்த பெரு வீரர்களுக்கும் கல் நட்டு வழிபாடு செய்த வழக்கத்தை புறநானுõறு புலப்படுத்தும். வள்ளுவரும் தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்தான் என்றாங்கு ஐம்புல்தாறு ஓம்பல் தலை - என்ற குறளில் முன்னோர் வழிபாட்டுக்கு முதன்மை தந்திருக்கிறார். முதலில் முன்னோர் வழிபாடு. தெய்வ வழிபாடு. பிறகுதான் திதிதர்ப்பணம் தந்த பின்புதான் நித்யபூஜை செய்வதே முறை. முதலாம் ஆண்டில் மட்டும் இறந்துபோன உடலை எரியூட்டுதல் அக்னி சம்ஸ்காரம் ஒருவகை கேள்விதான். அதனால்தான் அனாதை ப்ரேத சம்ஸ்காரம் ஆயிரம் அசுவமேத பலன் தரக்கூடியது. அனாதைப்ரேத சம்ஸ்காரம் அஸ்வமேத பலம்வபேத் என்கிறது தர்மசாத்திரம். செத்துப்போனவருக்காக குடும்ப வழக்கப்படி அமையும் 10 நாள், 16 நாள் காரியங்களைத் தவறாமல் செய்யவேண்டும். அதனைச் செய்யாவிட்டால் உயிரைப்பற்றியுள்ள பிரேத கரு நீங்காது என்பது கருட புராணத் தகவல். இறந்து போனவனின் உயிர் ஒருவருட காலம் சஞ்சாரத்தில் இருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன. இவற்றில் கருடபுராணம் மிக விரிவாகச் சொல்கிறது. எனவே, அந்த ஆண்டில் மட்டும் மாதச் சிரார்த்தம், ஊனமாசிகம் வருஷாப்தி எனப்பல சிரார்த்தங்கள் தரவேண்டும். எப்படிச் சாத்தியம்? இருப்பவரைக் காப்பாற்றுவது சரி. இறந்துபோனவனுக்குச் சோறு போடுவதும் அது அவனைச் சென்றடைவதும் எப்படி சாத்தியம் என்று சிலர் கேட்கலாம். பையனுக்கு மணியார்டர் அனுப்பவேண்டி உள்ளது. போஸ்ட் ஆபிசுக்குப் போய் பணம் செலுத்துகிறோம். போஸ்ட் மாஸ்டர் நம் பணத்தை வாங்கிக் தன் பெட்டியில் போட்டுக்கொள்கிறார். நாம் கொடுத்த பணம் சென்று சேர வேண்டிய இடத்துக்குப் போய் சேர்கிறது. பையன் வெளிநாட்டில் இருந்தால் இந்திய ரூபாய் டாலராக மாறிச் சேர்கிறது. அதுபோலத்தான், திவசம் கொடுத்தால் இறந்து போனவர் மாடாகப் பிறந்திருந்தால் நாமிட்ட உணவு வைக்கோலாக மாறி அவரைச் சேரும் என்கிறார் காஞ்சி மகாசுவாமிகள். என்றெல்லாம் செய்யலாம்? முன்னோர்களை அவர் இறந்த நாளில் ஆங்கில காலண்டர் நாள் அல்ல. தமிழ் மாதம் வளர்பிறை அல்லது தேய்பிறையில் அவர் இறந்த திதி நாளில் திவசம் தந்து நினைவு கூர்வது கட்டாயமானதாகும். இந்த நாள் மட்டும் அல்லாமல் 96 நாட்கள் முன்னோர் வழிபாட்டுக்கு உரியவை. அவை அமாவாசைகள், மாதப்பிறப்பு, மாளயபட்ச நாட்கள், வியதிபாத யோக நாட்கள் முதலியவை. எப்படி வழிப்படுவது? முன்னோரை வழிபடும் முறையில் குடும்ப பழக்கப்படி உரியவரை அழைத்து உணவிடுதல் ஒருமுறை. உரியவர்க்கு தானியங்கள் தருதல், கொஞ்சம் பணம் கொடுத்தல் என்ற முறைகளும் உண்டு. உரிய நாளில் கொஞ்சம் எள்ளுடன் நீர்வார்த்தல், தர்ப்பணம் தருதல் என்பர். நீர்க்கடன் தருதல் முக்கியம். சுகம் பெறச் சுலபமான வழி முன்னோர் அருள் இருந்தால் போதும் எல்லா நலமும் எளிதில் கிடைக்கும். எனவே நீர்க்கடன் தரவேண்டும். 96 நாட்கள் முடியாவிட்டாலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை யுடன் மாளயபட்ச நாட்கள் எல்லாவற்றிலும் நீர்க்கடன் செய்யலாம். 15 நாட்களில் சிலநாட்கள் முக்கியம். மாளய அமாவாசை மிக முக்கியமான நாள். அன்றாவது திததர்ப்பணம் தர வேண்டும். மகிமை மிகுந்த மாளயபட்சம் புரட்டாசி மாத அமாவாசைக்கு முன்னால் வரும் பட்சம் 15 நாட்கள் மாளய பட்சம் ஆகும். இந்த நாட்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. நாம் ஆண்டு விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வதுண்டல்லவா? இது போல நம் முன்னோர்கள் தாம் வாழ்ந்த ஊருக்குத் தம்மரபினர் உள்ள ஊருக்கு வருடா வருடம் வருகிறார்கள். 15 நாட்கள் இருக்கிறார்கள். அந்த நாட்களே மாளயபட்ச நாட்களாகும். இப்படி வந்தவர்கள் தாம் விரும்பும் வேறிடங்களுக்கும் சென்றுவிட்டு ஐப்பசி அமாவாசையில் தான் பிதுர்லோகம் செல்கிறார்கள். இவ்வகையில் மாளய நாட்கள் மகிமை மிக்கவை. முன்னோரின் ஆசை முன்னோர்களின் ஆசைகளைக் காட்டும் சில பாடல்கள் விஷ்ணுபுராணத்தில் உண்டு. பித்ரு கீதங்கள் என்று பெயர். இவற்றை அவர்கள் பாடுவார்கள். புரட்டாசி மாத கிருஷ்ணபட்சத்திரயோதசி நாளில் செய்யப்படும் திவசம் மாசி அமாவாசையில் செய்யப்படும் திலதர்ப்பணம் எங்களுக்கு இன்பம் தரும் என்று அவர்கள் பாடுவதாக உள்ள ஒரு கீதம். முன்னோரை வழிபட எந்த வகையிலும் வழியில்லாமல் போனவர்கள் சூரியனை மனதாரப் பிரார்த்தனை செய்து தெற்கு நோக்கி இரண்டு கைகளையும் உயரத்துõக்கி மனதாரச் சரணடையுங்கள். மன மகிழ்வோம் என்று சொல்லப்படுவதாக அமைகிறது இன்னொரு பாடல். மாளயபட்சத்தில் இவை முக்கியம் மாளயபட்ச நாட்கள் 15ல் சில நாட்களுக்கு முக்கியத்துவம் உண்டு. இந்த நாட்களிலாவது திதிதர்ப்பணம் முக்கியம். 1. மகாபரணி ( 03-10-2012) மகாளய பட்சத்தில் பரணி நட்சத்திரம் அமையும் நாள். இது மகாபரணி எனப்படும். 2. மகாவியதீபாதம் (06.10.2012) வியதீபாதம் யோகங்களில் ஒன்று. எல்லா வியாதீபாதங்களும் நீர்க்கடன் ஆற்றுவதற்கு உரியவை. மாளய பட்சத்தில் அமையும் வியதிபாத நாள் மகாவியதீ பாதம் எனப்படும். 3. மத்யாஷ்டமி (08.10.2012) மாளயபட்சத்தில் அமையும் அஷ்டமி திதிநாள் மத்யாஷ்டமி. 15 நாட்களுக்கு இடையில் அமைவதால் சிறப்பு பெறுகிறது. நடுநாயகமாகிறது. 4. சன்யஸ்த மாளயம் (12.10.2012) துவாதசி திதிநாள். மற்ற நாட்களில் 7 தலைமுறைக்கு மட்டும் தர்ப்பணம். இந்த நாளில் அதற்கு மேலும் இருப்பவர்க்குத் தர்ப்பணம் தரப்படும். தம் குடும்பத்தைச் சேர்ந்த சந்நியாசிகளுக்கும் தர்ப்பணம் தருவதால் இது யதிமாளயம் எனப்படும். 5. கஜச்சாயா புண்யகாலம் (13.10.2012) மாளய பட்சத்தில் 13வது திதிநாள். இந்த நாளில் செய்யப்படும் சிரார்த்தத்தை சிறப்பானது என்கிறது விஷ்ணுபுராணம். 6. சஸ்த்ர ஹத பித்ருமாளயம் (14.10.2012) சதுர்த்தசி திதி நாள். 7. மாளய அமாவாசை மிக முக்கியமான நாள். வசதி உள்ளவர்கள் முன்னோர் வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டிய நாள். முன்னோரை வழிபட மாதுர் தேவோ பவ: பிதுர் தேவோ பவ: என்ற சாத்திர தொடர் முன்னோர் வழிபாட்டிற்கு பெருமையைக் காட்டுவதாகும். காசி, கயா, திருக்கோகர்ணம், பத்ரிநாத் முதலியன வடநாட்டில் இருக்கும் முன்னோர் வழிபாட்டுத் தலங்கள். ராமேஸ்வரம், காவிரிப்பூம்பட்டினம் உள்ளிட்ட கடல்துறைகள், காவிரிக்கரையில் உள்ள திருவெண்காடு, திலதர்ப்பணபுரி, கும்பகோணத்து மகாமக தீர்த்தம், திருவள்ளூர் முதலான தலங்கள் தமிழகத்தில் உள்ள முன்னோர் வழிபாட்டுத் தலங்களாகும். அருகில் இருக்கும் தலத்திற்குச் சென்று நீராடி, நீர்க்கடன் தந்து தானங்களை மகாளய அமாவாசையில் செய்வது நல்லது. தடைகள் தகரும் ஐயமில்லை ஒரு ஜாதகரின் ஜாதகம் பல யோகங்களை உடையதாக இருந்தாலும் பிதுர் சாபமோ தோஷமோ இல்லாமல் இருந்தால் தான் பலன் கிட்டும். பிதுர் தோஷம் எல்லா யோகங்களையும் முறித்துவிடும். பிதுர்களின் ஆசீர்வாதம் எல்லாத் தடைகளையும் தகர்த்துவிடும். எனவே மாளய நாட்களில் மகாளய அமாவாசையில் நீர்க்கடன் தருவதும் முன்னோர் அருள் பெறுவதும் முக்கியம். மிகமுக்கியம். ***********************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக