சனி, 1 செப்டம்பர், 2012

இருந்தாலும் இறந்தாலும் புண்ணியம் செய்யலாம்! 51

இருந்தாலும் இறந்தாலும் புண்ணியம் செய்யலாம்! 51/ 26/8/12 தேவராஜன் (தினமலர் வாரமலர்) இந்த உலக வாழ்க்கையில் ஒருவர் நற்செயல்கள் செய்து, புண்ணியம் பெறுவது எல்லாம் அந்த மனிதரின் மரணத்தோடு முடிவடைந்து விடுகின்றன. இது இயற்கை வகுத்த விதி. இந்த இயற்கை விதியை மீறியும் ஒருவர் இறந்தப்பிறகும் நற்செயல்கள் செய்ய இயலும். அதனால் புண்ணியமும் தேடிக்கொள்ள முடியும். ஒருவர் வாழ்கின்ற காலத்தில் அவர் செய்த சில நல்ல செயல்கள் அவர் இறந்தப்பின்னரும் நிரந்தரமாக என்றென்றும் புண்ணியத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். வாழும் போது எந்நோக்கத்துடன் அச்செயல் நிறைவேற்றப்பட்டதோ அந்த நோக்கங்கள் காலகாலமாய் நிலைத்து அவருக்கு நன்மைகள் செய்துகொண்டிருக்கும். உதாரணமாக பசித்தவர்களுக்கு புசி என்று உணவிடும் தர்மசாலைகள், தாகம் தீர்க்க குடி நீர் வசதிகள், அப்பாடா என்று ஓய்வெடுக்க நிழல் தரும் மரங்கள் நடுவது,கோயில்கள் கட்டுவது அல்லது புனரமைப்பது. அதுவும் இயலாவிட்டால் காலம்காலமாக கோயிலில் விளக்கு எரிய உதவுவது, ஏழைகள் இலவசமாக கல்விப்பெற கல்விக்கூடங்கள், இலவசமாக மருத்துவம் பெற மருத்துவமனை, ஆதரவற்றோருக்கு இல்லங்கள், தர்ம ஸ்தாபனங்கள், விஞ்ஞான கண்டுபிடிப்புகள் போன்ற நற்செயல்கள் யார் எல்லாம் செய்கிறார்களோ அவர்களுக்கு இறந்தப்பிறகும் புண்ணியம் கிடைத்தபடியே இருக்கும். தான் அன்புடன்,பண்புடன், ஒழுக்கத்துடன், இறை நம்பிக்கையுடன் இருந்து, தன்னைச் சார்ந்தவர்களையும் தன்னைப் போல மாற்றி வழிநடத்தி செல்பவர்களுக்கு தன்கொள்கைகளைப் பின்பற்றுவர்களால் கிடைக்கும் புண்ணியம் இறந்தப்பிறகும் கிடைத்தபடியே இருக்கும். சாஸ்திர சம்பிரதாயபடியும் மதம் வலியுறுத்தும் நெறிகளை தானும் கடைப்பிடித்து, தன்குடுபத்தினரையும் பின்பற்ற வைத்து அதன்படி தம்மால் வளர்க்கப்பட்ட வாரிசுகள் ஆற்றுகின்ற நற்செயல்கள் யாவும் அவர்களுக்கும், அதை பின்பற்ற வைத்த ஊக்கிகளாக இருந்த மரணமடைந்த பெற்றோர்களுக்கு புண்ணியம் சேர்ப்பனவாகும். நாம் பெற்ற பிள்ளைகள் சிரத்தையுடன் செய்யும் சிராத்த பித்ரு காரியங்கள், அவர்கள் நாளும் செய்யும் இறைவணக்கம், இறைஉணர்வோடு அவர்கள் செய்யும் எந்த ஒரு நற்செயலும் அந்தச் செயல்களால் கிடைக்கும் புண்ணியம் பெற்றோருக்கு மரணத்திற்கு பிறகும் நன்மை கொடுப்பனவாகும். மேலே கூறிய நற்செயல்கள் செய்தால் ஒருவர் தமது வாழ்நாளிலும் அவர் இறந்த பின்பும் புண்ணியத்தை பெற்றுக்கொண்டே இருக்கலாம்! தேவராஜன். *****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக