செவ்வாய், 27 மே, 2014

ஆயிரமாயிரம் குகைகள் மர்மங்கள்... - தேவராஜன்.


**************************************************************** 27. ஆயிரமாயிரம் குகைகள் மர்மங்கள்... - தேவராஜன். ************************************************************* மத்திய நேபாளத்தின் வடக்கு பகுதியில் இருக்கும் முஷ்டங் மலைபாங்கான பகுதி. இது பல ஆச்சர்யங்களும் மர்மங்களும் நிறைந்த பகுதியாக இருக்கிறது. இப்பகுதியில் மனிதர்களால் கட்டப்பட்ட வித்தியாசமான குகைகள் நிறைய உள்ளன. இங்கு இருக்கும் ஆயிரமாயிரம் குகைகள் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னதாக முஷ்டங் பற்றி தெரிந்து கொள்வோம்! 700 ஆண்டுகளுக்கு முன்பு வரை முஷ்டாங் பல அரசர்கள் ஆண்ட பகுதி. முஸ்டாங் மாகாணம் பண்டைய திபெத்திய பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. புத்த மத வழிபாட்டிற்கும், கலைக்கும் பெயர் பெற்ற இடமாக இருந்தது. இங்கிருந்து அண்டை நாடுகளுக்கு உப்பு வணிகம் நடைபெற்றது. 17 ம் நூற்றாண்டிற்கு பிறகு, இப்பகுதி பொருளாதாரத்தில் பின் தங்கியது. ஒரு கட்டத்தில் எவ்வித தொடர்பும் அற்றுப்போன பகுதியாகிப் போனது. சில குடும்பங்கள் இன்னும் இந்த குகைகளில் வசிக்கிறார்கள். குளிர் காலங்களில் வெதுவெதுப்பாக இருப்பதாகவும் ; குடி நீர் கிடைப்பது இப்பகுதியில் கடினமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்த முஷ்டாங் பகுதியில் இருக்கும் ஆயிரக்கணக்கான குகைகளுக்கு உள்ளே செல்வதற்கு பாதைகள் கிடையாது. தரைப்பகுதியில் இருந்து சுமார் 155 அடி உயரத்தில் இந்த குகைகள் தென்படுகின்றன. பெரும்பான்மையானவை 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. அகழ்வாராய்சியாளர் ஏறக்குறைய ஒரு லட்சம் குகைகள் இருப்பதாக மதிப்பிடுகிறார். இவற்றில் பெரும்பான்மையானவை ஆராய்சிக்கு உட்படுத்தப் பாடாதவை மட்டுமல்ல; இன்னும் பல குகை இருக்குமிடமே கண்டறியப்படாமல் இருக்கிறது. இவ்வளவு உயரத்தில் இந்த குகைகளை எப்படி உருவாக்கினார்கள் ? எதற்காக, யார் இதை உருவாக்கியது ? இப்படி பல கேள்விகள் முதலில் இந்த ஆய்வு மேற்கொண்ட குழுவிற்கு ஏற்பட்டது. இந்தக் குகைகளை தொல்பொருள் ஆய்வாளர் பீட் எதென்ஸ் என்பவரின் தலைமையில் ஒரு குழு ஆய்வு செய்தது. இவர் முதலில் 1981 ல் இப்பகுதியில் ஆராய்ச்சி மேற்கொண்டார். 2011ம் ஆண்டு எட்டாவது முறையாக இப்பகுதியை மார்க் அலெண்டெர்பெர் (கலிபோர்னிய பல்கலைக்கழகம்) மற்றும் ஜாக்குலின் இங் என்ற பெண் ஆராய்சியாளரும் (வெஸ்டர்ன் மெக்சிகன் யுனிவர்சிட்டி), மோகன் சிங் லாமா என்ற நோபாளிய தொல்பொருள் ஆய்வாளரும் ஆய்வு செய்தனர். மர்ம நிகழ்வுகள் : ஆய்வுக் குழுவினரில் இருவருக்கு குகைகளில் அடுத்தடுத்த ஆய்வின் போது , அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டது. ஆய்வு தடை பட்டது. லிங்கன் எல்ஸ் என்ற விடியோ கிராஃபர் ஹெல்மெட் எடுத்த சமயத்தில், கற்கள் சரிந்து தலையில் விழுந்து மண்டை எழும்பு உடைந்து. ஆபத்தான கட்டத்தில் காத்மாண்டுவில் சிகிச்சை பெற்று பின் நலமடைந்தார். இன்னொருவர் ரிச்சர்ட் (மலை ஏறி மற்றும் போட்டோகிராபர்) விழுந்து அடிபட்டதில் முதுகு எலும்பு முறிவு ஏற்பட்டு ஹெலிஹாப்டரில் மீட்கப்பட்டார். இந்த மோசமான நிகழ்வுகள் அந்த குகைகளை பாதுகாக்கும் ஸ்ப்ரிட்டுகளினால் ஏற்பட்டது என்பது அந்த பகுதியில் வசித்த ஒரு லாமாவின் கணிப்பு. இந்தக்குகைகள் மர்மங்கள் பற்றி விவரிக்கிறார் தொல்பொருள் ஆய்வாளர் பீட் எதென்ஸ்: ‘இமய மலையின் பெரும்பகுதி ஒரு காலத்தில் கடலில் மூழ்கிய நிலையில் இருந்த நிலப்பரப்பு என்கிறார்கள். இமய மலையின் 5ஆயிரம்-6 ஆயிரம் அடி உயரத்தில் கடல் அலையின் அரிப்பின் சுவடுகள், கடல் உயிரினம் படிமம் ஆனவை எல்லாம் கிடைத்துள்ளன. அக்காலத்தில் பெரு வெள்ளம், அல்லது கடல் நீர் அங்கு புகுந்து இருக்கலாம், அதன் விளைவாக உயரமான இடத்தில் குகை அமைத்து தங்கி இருப்பார்கள். இப்படி கடல் நீர் மட்டம் உயர்ந்ததை அப்போது பல வரலாற்று,புராண நூல்களிலும் குறிப்பிட்டு இருக்கிறார்கள், இதனை‘ பெரு வெள்ளக்காலம்’ என்கிறார்கள். வெள்ளத்திற்கு பயந்தே மக்கள் உயரமான இடத்திற்கு குடிப்பெயர்ந்திருக்க வேண்டும்’ என்கிறார் அவர். பாக்ஸ் செய்தி * சாம்ட்ஜோங் குகையில், ஓர் இறந்த உடல் ஒரு சவப் பெட்டியில் இருந்தது. இறந்த உடல் வெறும் எலும்புக்கூடாக இருந்தது. பெட்டி மூடியின் மேல் ஒரு குதிரையின் மீது வீரன் ஒருவன் அமர்ந்திருப்பது போன்ற ஒரு நிழல் சித்திரம் இளஞ்சிகப்பு மையால் வரையப்பட்டிருந்தது. இடதுபுறம் செழிப்பன ஒரு மரம் அதன் வலதுபுறம் காய்ந்து போன மரம். இந்த குகை ஒரு வசதியானவர்களுக்கான மயான குகையாக இருந்திருக்க வேண்டும். மேலே சொன்ன மம்மிகளுடன் 30 சிதைந்த மம்மிகள் கிடைத்தன. மம்மிகள் மரத்தாலான சவப்பெட்டியில் கிடத்தப்பட்டிருந்தன. 2 ஆயிரம் வருடங்கள் பழமையானவை. இவற்றின் உடலில் பட்டையான துணிகளால் சுற்றப்பட்டிருந்தன. தாமிர கை வளையல்கள், கண்ணாடியாலான நீள் பாசிவடிவ மணி மாலைகள்,சங்கு மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தன. ***********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக