வெள்ளி, 2 மே, 2014

பறக்கும் தட்டு மர்மங்கள்... - &&&தேவராஜன்.


பறக்கும் தட்டு மர்மங்கள்... - &&&தேவராஜன். வானத்தில் பறக்கும் தட்டுகள் அவ்வப்போது பறந்து வருகின்றன. அதில் வேற்றுகிரக வாசிகள் பூமிக்கு வந்து செல்கின்றனர். வேற்றுகிரக வாசிகள் நம் பூமியை ஆய்வு செய்து வருகின்றனர். இப்படி எல்லாம் பல அதிர்ச்சி தகவல் உலகில் பல பகுதிகளில் இருந்தும் இன்றும் வந்துகொண்டே இருக்கின்றன. வானத்தில் பறப்பதாக சொல்லப்படும் எதுவென்று திட்டவட்டமாக குறிப்பிடமுடியாத இந்த பறக்கும் பொருட்களை ‘அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள்’ (க்ணடிஞீஞுணtடிஞூடிஞுஞீ ஊடூதூடிணஞ் Oஞடீஞுஞிtண்) என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உலகில் பறக்கும் தட்டுகள் பற்றிய சுவாரஸ்யமான சில சம்பவங்களைப் பார்க்கலாமா? 1960ம் ஆண்டில் அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பகுதியில், பறக்கும் தட்டு ஒன்று இறங்கியது அதை அப்பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் பார்த்தனர். பால் ட்ரெண்ட் என்பவர் அதனை படமெடுத்தார். பத்திரிகைகளிலும் அது பற்றிய செய்திகள் வெளியானது. 1973ல் அமெரிக்காவின் நியூ ஆர்லின்ஸ் துறைமுகத்தின் பணிபுரியும் இருவர் பறக்கும் தட்டைக் கண்டனர். இரவு நேரத்தில் வேலை முடித்து அவர்கள் வீடு திரும்பும் போது பறக்கும் தட்டு அவர்கள் முன் தோன்றியது. அதிலிருந்து இறங்கிய சில உருவங்கள் அவர்கள் இருவரையும் பறக்கும் தட்டுக்குள் கொண்டு சென்று, சில ஆய்வுகளைச் செய்தன. அரைகுறை மயக்கத்தில் இருந்த இருவரும் தங்களுக்கு நடப்பனவற்றை உணர முடிந்தாலும் அவர்களால் அந்த பறக்கும் தட்டு மனிதர்களை எதிர்த்து எதுவும் செய்யாத நிலையில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர். 1088ம் ஆண்டின் இடைப்பட்டப் பகுதி. சீன பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷென் குயோ என்பவர் ட்ரீம் பூல் என்ற தலைப்பில் கட்டுரைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த கட்டுரை யில்,சீனாவில் ஒரு கிராமப் பகுதியான யாங்க்சௌ என்ற பகுதியைச் சேர்ந்த அன்ஹூய் மற்றும் ஜியாங்சு விவசாயிகள் தாங்கள் விவசாயப் பணியை மேற்கொண்டிருந்த போது, வானத்தில் இருந்து தட்டு போன்ற ஒரு பெரிய பொருள் பறந்து வந்தது. அந்தப் பொருளில் இருந்த கதவுகள் திறக்கப்பட்டு, உள்ளேயிருந்து கண்கூசத்தக்க ஒளி பாய்ந்து வருவதைக் கண்டதாகவும் அதன் நிழல், பத்து மைல் தூரம் வரை நீண்டு இருந்து இருந்ததாகவும் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். 1878ம் ஆண்டு. வட அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டென்னிசன் என்ற தினசரிபத்திரிகை. ஏ ஸ்ட்ரேன்ஜ் பினோமினா (புதுமையான பெயர் தெரியாத உருவம்) என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டுருந்தது. அந்தச் செய்தியில், டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஜான் மார்ட்டின் என்பவர், தான் வயலில் வேலைபார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு பெரிய கரிய வட்ட வடிவ பறக்கும் பொருள் தான் கண்டதாகவும், அது பலூன் வடிவில் ஒத்திருந்ததாகவும் தன் ஆச்சர்யத்தை வெளியிட்டிருந்தார். 1904ம் ஆண்டு, அமெரிக்காவில் இருந்து சரக்குக் கப்பல் சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து 300 மைல்கள் மேற்கே பயணித்துக்கொண்டிருந்தபோது, மூன்று பிரகாசமான முட்டைவடிவ மற்றும் வட்ட வடிவ பொருள்கள் அணிவரிசையாக வேகமாக பறந்து சென்றதும், பின்னர் தன் போக்கை மாற்றிக்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார் அக்கப்பல் மாலுமி. இப்படி விதவிதமான பறக்கும் தட்டு சம்பவங்கள் பற்றி விஞ்ஞானிகளின் கருத்து எப்படி இருக்கிறது தெரியுமா? ‘பறக்கும் தட்டுக்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை. அவ்வாறு ஒருவேளை இருந்தாலும், ரேடார் போன்ற கருவிகள் அவற்றைத் துல்லியமாகக் கண்டுபிடித்துக் கூறி விடும் என்றும் கூறுகின்றனர். ஒரு சில ஆய்வாளர்களோ பறக்கும் தட்டுக்கள் மிக வேகமாக ஒளியின் அளவிற்கு வேகமாகப்பறப்பவை என்றும் அதனால்தான் ரேடாரின் கண்களுக்குச் சிக்குவதில்லை என்றும் கூறுகின்றனர். பாக்ஸ் செய்தி: *பிரிட்டன் நாடு மட்டும் பறக்கும் தட்டுக்கள் தொடர்பாக தாம் சேகரித்து வைத்துள்ள இரகசிய அறிக்கைகளை வெளியிட்டது. 6ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை 1994 – 2000 வரையான காலப் பகுதியில் பறக்கும் தட்டுக்கள் குறித்து திரட்டப்பட்ட தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது. * அது முதலில் 240 கிமுவில் வானில் அதிசயதக்க ஒரு பொருள் பார்த்ததாகவும் அது ஹாலியின் வால்மீன் என்று சீன வான சாஸ்திர வல்லுநர்களால் பதிவு செய்யப் பட்டுள்ளது. * அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் பற்றி புலனாய்வுகளுக்கு உட் படுத்தப்பட்டு, பல ஆண்டுகள் நோக்கத்தில் பரவலாக ஆய்வுகள் நடத்தப்படு வருகின்றன. அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, யு.கே, ஜப்பான், பெரு, பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்வீடன், பிரேஸில், சிலி, உருகுவே, மெக்ஸிகோ, ஸ்பெயின், மற்றும் சோவியத் யூனியன் போன்ற நாடுகளில் அரசாங்கமோ அல்லது கல்வியியல் சுயேச்சை அமைப்புகளோ அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் பற்றிய அறிக்கைகள் பற்றி பல்வேறு கால கட்டங்களில் புலனாய்வுகள் செய்து கொண்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக