வெள்ளி, 7 மார்ச், 2014

நூறு ஆண்டுகள் சூரியன் பார்க்காத நகரம்! - தேவராஜன்


நூறு ஆண்டுகள் சூரியன் பார்க்காத நகரம்! - தேவராஜன் -------------------------------------------------16------------------------------------------- ************************************************************************************ இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு எத்தனையோ கிராமங்கள் மின்சார வசதியில்லாமல் இருந்தது உண்டு. இப்போதும் சில மலைக்கிராமங்களில் குக்கிராமங்களில் மின்வசதியோ சாலை வசதியோ இருப்பதில்லை. இது ஜனநாயக சாபம்! ஒரு நகரம் முழுதும் சூரிய வெளிச்சமே படாமல் இருக்குமா? அதுவும் நூறாண்டுகளாக? கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? கடந்த நூறாண்டுகளாக சூரிய ஒளியைக்காணாத நகரத்தில் வசிக்கும் மக்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள்? வியப்பாக இருக்கிறதல்லவா? ஐரோப்பிய நாடான நார்வே, கனிமம் மற்றும் பெட்ரோல் வளமிக்க நாடாகும். இங்கு மழை பொழிவும் அதிகம். இந்த நார்வே நாட்டின் தென்பகுதியில் அடர்ந்த மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்குகள் நிறைய இருக்கின்றன. அப்படி ஒரு பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ளது மிக அழகான, பசுமையான, அமைதியான எழில் மிகும் கிராமம் ஒன்று இருக்கிறது. அந்தக் கிராமத்தின் பெயர் ரூஜூக்கான். இந்தப் பள்ளத்தாக்கு கிராமத்தில் சொல்லும்படி பெரிய வசதிகள் ஏதுமில்லைதான்! இந்தக் கிராமத்தில் உள்ள நீராதாரத்தை அடிப்படையாக கொண்டு ஓர் உரத் தொழிற்சாலையும் ரெயில் பாதையும் மட்டும் உண்டு. இந்த உரத்தொழிற்சாலையை நம்பியும் இப்பகுதியில் வளமான மண் வளம் உள்ளதால் விவசாயம் செய்து பிழைத்து கொள்ளலாம் என நம்பி 1900ம் ஆண்டு வாக்கில் கிட்டதட்ட 300 பேர் இங்கு வந்து குடியேறினார். இப்போது கிட்டதட்ட 3500 அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். இந்த கிராமம் ஆண்டில் 6 மாதங்கள் (மழை மற்றும் குளிர் காலம்) சூரியனோ சூரிய ஒளியோ துளிக்கூட படமாமல் இருக்கும். காரணம் இந்த கிராமத்திதைச் சுற்றிலும் உள்ள மலை முகடுகள் தடைக்கற்களாக இருந்து, சூரிய ஒளிக்கதிர்களை நுழையவிடமால் தடுத்துவிடும். இங்குள்ள மக்களின் உடலில் சூரியனின் கதிர்கள் விழ வேண்டும் என்றால் பல மைல்களுக்கு அப்பால் மலையை கடந்து செல்ல வேண்டும். இப்படித்தான் சூரிய வெளிச்சத்தை பார்க்க இயலாமல் இந்தக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் நூறாண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்தக்கிராம மக்களின் சோகத்தை,கவலை போக்க ஒருவர் வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் பாரிசில் இருந்த இங்கு வந்த அவர் பெயர் மார்ட்டின் ஆண்டர்சன். அவர் இந்த கிராமத்தை கவ்வியிருந்த இருளை போக்க ஒரு வழியை கண்டுபிடிக்க தீவிரமாக முயன்றார். அதற்கு இப்போதுள்ள தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாமா என்று யோசித்தார். இந்நகரத்திற்கு சூரிய ஒளியை கொண்டு வருவது குறித்து பலவாறாகதிட்டமிடப்பட்டு வந்தநிலையில் தற்போது சரியான ஒரு தீர்வு கண்டறியப்பட்டுள்ளது. சூரிய காந்தி பூவைப் போல் சூரியன் போகும் திசையில் எல்லாம் அதை பின்தொடர்ந்து செல்லும் தொழில்நுட்பத்துடன் கூடிய கம்ப்யூட்டர்களின் உதவியுடன் இயங்கும் ராட்சத நிலைக் கண்ணாடிகளை மலைகளின் வடக்கு பகுதி உச்சியில் அமைக்க தீர்மானித்தார் மார்ட்டின் ஆண்டர்சன். அதன் படி, அருகில் உள்ள மலையில் 450 மீட்டர் உயரத்தில் மூன்று பெரிய கண்ணாடிகளைப் பொருத்தியுள்ளனர். அக்கண்ணாடிகளில் படும் சூரியவெளிச்சம் எதிரொளிப்பதன் மூலம் நகரின் மத்தியப்பகுதியில் சூரிய வெளிச்சம்படுகின்றது. 8 .5 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்ட இந்த நிலைக்கண்ணாடிகள் மூலமாக இந்த கிராமத்தின் மையப் பகுதியான சுமார் 600 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட மார்க்கெட் பகுதி ஆண்டின் 365 நாட்களிலும் சூரிய ஒளியால் பிரகாசிக்கிறது. கிட்டதட்ட நூறு ஆண்டுகள்சூரிய ஒளியே படாமல் கடந்து விட்ட நார்வேயின் ருஜூகான் நகரம், தற்போது கண்ணாடியை கொண்டு சூரிய வெளிச்சத்தைப்பெற இருக்கிறது. பாக்ஸ் செய்தி *கடந்த 1907ம் ஆண்டு நோர்ஸ்க் ஹைட்ரோ என்ற தொழில் நிறுவனத்தின் இணை இயக்குனரான சாம் அய்டு என்பவரால் ருஜூகான் நகரம் உருவானது. *இந்நகரம் குறுக்கலானபள்ளதாக்கில் அமைந்துள்ளதால், இங்கு சூரிய வெளிச்சம்இயற்கையாக விழுவதற்குவாய்ப்பே இல்லை. ஆகவே, இங்குள்ளமக்கள் குளிர்காலத்தில்கேபிள் கார் மூலம் அருகில் உள்ள மலை உச்சிக்கு சென்றுசூரிய வெளிச்சத்தை அனுபவித்துத் திரும்புவதை வாடிக்கையாகக்கொண்டிருந்தனர். *ரூஜூகான்போஷன் எனும் அழகிய பெரிய நீர்வீழ்ச்சி இந்த மலை நகரத்தில் இருக்கிறது. இது 104 மீட்டர் நீளமான நீர்வீழ்ச்சி. இங்கு இந்த நீர்வீழ்ச்சி மூலமாக மின்சாரம் அதிக அளவில் உருவாக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக