சனி, 15 மார்ச், 2014

ஆதி மனிதனின் காலடி தடங்கள்... - தேவராஜன்


ஆதி மனிதனின் காலடி தடங்கள்... - தேவராஜன் ******************************************************************* குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பது டார்வின் கோட்பாடு. டார்வின் கோட்பாட்டை கேள்வி குறி ஆக்கிவிட்டது சமீபத்திய தொல்பொருள் ஆராய்ச்சி! குரங்கு இனம் இருந்ததற்கு முன்னாதாகவே மனித இனம் இருந்திருக்கிறது என்பதை மெய்ப்பிக்கும் ஆதி மனிதனின் காலடி தடங்களை இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்! எட்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் மூதாதையர்களின் காலடித் தடங்களை இங்கிலாந்தின்நார்போக்கில் உள்ள ஹப்பிஸ் பர்க் கடல் பகுதியின் கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் காலடி தடங்கள் வடக்கு ஐரோப்பிய பகுதியில் வாழ்ந்தபழங்குடிகளின் காலடித் தடம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இதுவரை ஹப்பிஸ் பர்க் கடல் பகுதியின் கரையில் விலங்குகளின் எலும்புகளும், கல் ஆயுதங்களும்தான் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. ஆனால், இப்போதுதான் முதன்முறையாக மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம்கிடைத்துள்ளது. இப்போது இருக்கும் இங்கிலாந்து பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய கண்டத்துடன் நிலப்பரப்பில் இணைந்து இருந்துள்ளது. அதன் பிறகே கடல் இடையில் புகுந்து இங்கிலாந்தை, ஐரோப்பாவில் இருந்து துண்டாக்கி விட்டது. இங்கிலாந்தில் வாழ்ந்த பூர்வகுடிகள், முகத்துவாரமாக இருந்த இந்தப் பகுதி வழியாக ஐரோப்பிய கண்டத்துக்கு குடி பெயர்ந்திருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இவர்கள் 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹோமோ ஆன்டஸர் இனத்தை சேர்ந்தவர்கள். 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த இனம் அழிந்து விட் டது” என்கிறார் பிரிட்டன் அருங்காட் சியக ஆராய்சியாளர் ஆஸ்டன். இங்கு அகழாய்வில் கிடைக்கப் பெற்ற மொத்தம் 50 காலடித் தடங்கள். 2 ஆண்கள், 2 பெண்கள், 3 அல்லது 4 குழந்தைகளின் காலடித் தடங்கள். கடல் நீர் பின்வாங்கியதால், இந்தக் காலடித் தடங்கள் வெளியே தெரிய வந்துள்ளன. இவற்றை பிரிட்டன் அருங்காட்சியக ஆய்வளர்கள் முப்பரிமாண (3டி) படங்களாக ஆவணப்படுத்தி உள்ளனர். ‘ஹோமோ அன்டஸர்’ குரங்கில் இருந்து மனிதன் உருவானபோது, வாழ்ந்த இனம் இது. ஏறக்குறைய 12 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த ஆதி மனிதர்களின் உயரம் 5.5 அடி முதல் 6 அடி வரை. எடை 90 கிலோ வரை. இவர்களின் மூளைதான் சற்று சிறியதாக இருந்திருக்கிறது. நமக்கு சராசரியாக 1,350 கியூபிக் செ.மீ. ஆனால் ஹோமோ அன்டஸர் மக்களுக்கு 1000 முதல் 1150 கியூபிக் செ.மீ. வரைதான் இருந்திருக்கிறது. நம்மை போலவே வலதுகை பழக்கம் கொண்டிருந்திருக்கிறார்கள். இதுதான் மனிதக் குரங்கில் இருந்து இவர்களை வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறது. சைகை மொழியை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஐரோப்பாவில் 6 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹோமோ ஹெய்டல் பெர்ஜென்சிஸ் இனத்தவரும் இவர்களும் ஒன்றுதான் என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். நதிக்கரையோரம் காட்டுப் பகுதிகளில் விலங்கோடு விலங்காக ஹோமோ அன்டஸர் இனம் வாழ்ந்திருக்கிறது. குதிரை, யானை, மான், காட்டெருமை, நீர்யானை, காண்டா மிருகம், எலி மற்றும் சில வித்தியாசமான விலங்குகளுடன் வாழ்ந்திருக்கிறான் ஆதி மனிதன். அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ள ஆதாரங்கள் மூலம் இது தெரிய வந்துள்ளது. மம்மத் எனப்படும் மெகாசைஸ் யானைகள், குதிரைகளின் எலும்புகள் இங்கு கிடைத்துள்ளன. கல் ஆயுதங்கள் மற்றும் கூர்மையான மரக் குச்சிகள் மூலம் விலங்குகளை வேட்டையாடி பசியை போக்கி வாழ்ந்திருக்கிறார்கள். மரம், செடி, கொடிகளின் மிச்சங்கள், கிழங்குகள், காய், கனிகள் போன்ற தாவர உணவுப் பழக்கம் இருந்ததை காட்டுகிறது. லிவர்பூல் ஜான்மூர் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் காலடித் தடம் சென்ற வழியை பார்க்கும்போது, அவர்கள் ஐரோப்பிய கண்டத்தை நோக்கி சென்றிருக்கலாம் என்கிறார் அவர். அகழ்வு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளைப் பார்த்தால், ‘கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி’ என்று தமிழில் சொல்லப்படும் ஒரு சொல் வழக்கு உண்மையாக இருக்குமோ? * பாக்ஸ் செய்தி *தன்ஸானியாவின் லாட்டோலி என்ற இடத்தில் கிடைத்த காலடித் தடங்கள் 35 இலட்சம் ஆண்டுகள் பழமையானவை. *கென்யாவில் கூபி போராவில் கிடைத்தவை 15 லட்சம் ஆண்டு பழமையானவை. களிமண் பூமியாக இருந்து பாறையாக மாறிய பகுதி இது. இதனால் மனித காலடித் தடங்கள் தெளிவாக உள்ளன. *மெக்ஸிகோவின் வடகிழக்கு பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த காலடிகள், 10,500 ஆண்டுகள் பழமையானவை. ஆனால் ஆபிரிக்காவுக்கு வெளியே, கண்டறியப்பட்ட காலடித் தடங்களில் இங்கிலாந்தில் இப்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த தடங்கள்தான் மிகவும் பழமையானவை. ******************** ***********************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக