வெள்ளி, 8 அக்டோபர், 2010

கதையை கேளு விடையை யோசி பாகம்: 3

கதையை கேளு விடையை யோசி பாகம்: 3
( தினமலர் சிறுவர்மலரில் "கதையை கேளு விடையை யோசி' என்ற தலைப்பில் வெளிவந்து கொண்டிருக்கும் நான் எழுதும் தொடர்)

33 . மாலை வீட்டுத் தோட்டத்தில் பேரப்பிள்ளைகளோடு தாத்தா நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.
""தாத்தா சமீபத்தில் செய்தி தாளில் ஒரு அரசு அலுவலக கட்டடத்தில் சுதந்திர தின நாளில் ஏற்றிய தேசியக்கொடியை மாலையில் இறக்கவில்லை. அது தேசியக்கொடி அவமதிப்பு குற்றம் என்று செய்தி வந்திருக்கே.'' என்று கேட்டாள் அனுஷா.
"" அந்தச் செய்தி சரிதான். சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரைதான் தேசியக்கொடியை பறக்கவிடவேண்டும். சூரியன் மறைவுக்குப்பின் கொடியை இறக்கிவிடவேண்டும்.'' என்றார் தாத்தா.
"" தேசியக்கொடியைப் பயன்படுத்த விதிமுறைகள் இருக்குதா?'' என்றாள் சாயிபவித்ரா.
"" இருக்கே! .'' என்று சொல்ல ஆரம்பித்தார்.
""தேசியத்திருவிழா நாட்களில் மட்டும்பொதுமக்கள் வீடுகளில், கார்களில் தேசியக்கொடியை பறக்கவிடலாம். தேசியக்கொடியில் எந்த வாசகத்தையும் எழுதக்கூடாது.
கொடி கிழிந்துவிட்டால் அதை குப்பைத்தொட்டியில் போடவோ, ஜன்னல்திரையாக, மேஜைவிரிப்பாக, கைக்குட்டையாக பயன்படுத்தக்கூடாது. இதெல்லாம் அடிப்படை விதிகள். இதை மீறினா அது கொடி அவமதிப்பு குற்றம்.'' என்றார் தாத்தா.
"" தாத்தா, தேசியக்கொடியை எங்க எல்லாம் பறக்கவிடணும்ணு கட்டாயம் ஏதாவது இருக்கா?'' என்றாள் திவ்யா.
""முக்கியமாக தலைமைச் செயலகம், கலெக்டர் அலுவலகம், உயர்நீதிமன்றம், மாநகராட்சிக்கட்டடம், மத்திய, மாநில அரசு கட்டடங்கள், சிறைச்சாலை போன்ற இடங்களில் தேசியக்கொடியை கட்டாயம் பறக்க விடவேண்டும்.'' என்றார், தாத்தா.
"" இந்தியா தவிர வேறு எங்கு நம் கொடியை பறக்கவிடலாம்?'' என்று மூர்த்தி கேட்டான்.
""அயல்நாடுகளில் உள்ள இந்தியத்துõதர் அலுவலகங்களிலும், அவர்கள் பயன்படுத்தும் கார்களிலும் கொடி பறக்கவேண்டும்.
மற்ற நாட்டு தேசியக்கொடியுடன் நம்கொடியை பறக்கவிட்டால், இந்திய தேசியக்கொடியின் இடது புறத்திலேயே மற்ற கொடிகளைப் பறக்கவிடவேண்டும்.'' என்றார் தாத்தா.
"" தாத்தா கொடி பற்றி வேறு ஏதாவது செய்தி இருக்கிறதா?'' என்று வியப்புடன் கேட்டான் அருண்.
""ஊர்வலத்தில் தேசியக்கொடியை வலதுதோளில் உயர்த்திப்பிடித்துச் செல்லவேண்டும்.
மத்திய, மாநில அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், சபாநயகர் ஆகியோரது கார்களிலும் கொடி பறக்கவேண்டும்.'' என்றார் தாத்தா.
"" கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடறது ஏன்?'' என்றாள் ப்ரியா.
""தேசத்தின் பெருந்தலைவர்கள் மறைவு துக்கத்தை அறிவிக்க, கொடிமரத்தின் பாதியில் கொடியை பறக்கவிடவேண்டும்.'' என்று கூறி முடித்தார் தாத்தா.
குட்டீஸ் கதை கேட்டாச்சு. இப்ப 2 கேள்விக்கு பதில் சொல்லலாமா?
1. தேசியக்கொடியை எப்போது எல்லாரும் பறக்கவிடலாம்?
2. அரைக்கம்பத்தில் கொடி பறக்கவிடுவது எதற்காக?
விடை: தேசிய திருவிழா நாட்களில் 2. தேசிய துக்க சம்பவத்தை அறிவிக்க


34 .தாத்தா தன் பேரப்பிள்ளைகளுக்கு பாரம்பரியகிராமிய விளையாட்டுகளான பரமபதம், தாயம், ஆடுபுலி ஆட்டம், பல்லாங்குழி விளையாட்டுகள் எப்படி விளையாடுவது என்று கற்றுக்கொடுத்தார்.
""தாத்தா,உங்களுக்கு செஸ் விளையாட்டு தெரியுமா? அது ரஷ்யர்களோட விளையாட்டாமே?'' என்று அனுஷா கேட்டாள்.
"" செஸ் விளையாட்டின் பூர்வீகம் இந்தியாதான்! அது அப்போ சதுரங்க விளையாட்டா இருந்தது. அதை அரசர்களின் விளையாட்டுன்னு சொல்லுவாங்க.'' என்றார் தாத்தா.
"" என்ன செஸ் விளையாட்டு இந்தியர்களுடையதா?'' என வியந்த சாயிபவித்ரா,""தாத்தா புரியும்படி சொல்றீங்களா?'' என கேட்டாள்.
"" இந்த விளையாட்டு குறித்து பல கருத்துகள் இருந்தாலும், 7ம் நுõற்றாண்டில் இந்தியாவில் விளையாடப்பட்ட சதுரங்கம் விளையாட்டின் வளர்ச்சிதான் செஸ். இது இந்தியாவிலிருந்து மேற்கே ஐரோப்பாவுக்கும், கிழக்கே கொரியா வரையிலும் பல மாற்றங்களுடன் பரவியது. மங்கோலியா வழியாக ரஷ்யாவுக்கும் பரவியது. பாரசீகத்துக்கும் போனது. பாரசீகத்தை இஸ்லாமியர் கைப்பற்றியப்பிறகு, இந்த விளையாட்டு இஸ்லாமிய நாடுகளில் பரவியது. 11ம் நுõற்றாண்டில் இங்கிலாந்தில் பரவியது. இப்படிதான் உலகம் முழுவதும் பரவிய நம் சதுரங்க விளையாட்டு இப்ப செஸ் என்று பெயர் மாறி நம்மகிட்டேயே வந்திருக்கு'' என்றார் தாத்தா.
"" தாத்தா, செஸ் விளையாட்டுமுறைபற்றி சொல்லுங்க தாத்தா?'' என்று கெஞ்சினாள் திவ்யா.
"" மதியூகமும் தந்திரமும் கலந்தது இந்த விளையாட்டு. ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் என 32 காய்கள் உடையது. இது 8க்கு 8 என்ற சதுர அளவில் 64 சதுரங்களை உடையது. இந்த விளையாட்டு ஆட இருவர் வேண்டும்.'' என்றார் தாத்தா.
"" 32 காய்களின் பெயர்கள் என்ன தாத்தா?'' என்றான் ஆர்வமாய் மூர்த்தி.
""ஒவ்வொரு படையிலும் ஒரு அரசன், ஒரு அரசி, இரு மந்திரி, இரு குதிரைகள், இரு கோட்டைகள், எட்டு படைவீரர்கள் என பெயர் பெற்றிருக்கும்.இதே போல எதிர் படையில் இருக்கும் காய்களுக்கும் அதே பெயர்தான்'' என்றார் தாத்தா.
"" தாத்தா, இந்த விளையாட்டில் வெற்றியை எப்படி தீர்மானிக்கிறது?'' என்றான் அருண்.
"" தனது அரசனை பாதுகாத்துக்கொண்டு, எதிரியின் அரசனைப் பிடிப்பவரே வென்றவர் ஆவார்'' என்றார் தாத்தா.
"" நம்ம நாட்டில் இந்த விளையாட்டில் சிறப்பா விளையாடறது யார் தாத்தா?'' என்றாள் ப்ரியா.
"" நம்ப தமிழ்நாட்டுக்காரரான விஸ்வநாதன் ஆனந்த் செஸ் விளையாட்லயே உலகத்திலேயே ரொம்ப சிறந்தவர்." என்றார் தாத்தா.
குட்டீஸ் கதை படிச்சாச்சு. இப்ப 2 கேள்விக்கு பதில் சொல்றீங்களா?
1. செஸ் பலகையில் எத்தனை சதுரங்கள் இருக்கும்?
2. எந்த விளையாட்டின் மறுவி செஸ் விளையாட்டு?
விடை: 1. 64 சதுரங்கள் 2. சதுரங்கம்

35 .கதைவாசி விடையோசி

"தாத்தா பஞ்சாங்கம் பார்த்துக்கொண்டிருந்தார்.
""தாத்தா, இது என்ன புக்?'' என்றுகேட்டாள் அனுஷா.
"" இதுக்கு பஞ்சாங்கம் என்று பெயர்'' என்றார் தாத்தா.
"" பஞ்சாங்கம்னா என்ன?'' என்றாள் சாயிபவித்ரா.
பஞ்சாங்கம் என்பது வடமொழிச் சொல். தமிழில் ஐந்து உறுப்புகள் கொண்ட அட்டவணை என்று பொருள் படும்'' என்றார் தாத்தா.
"" அதென்ன ஐந்து உறுப்புகள்?'' என்று அவசரமாய் கேட்டாள் திவ்யா.
"" வாரம், திதி,கரணம், நட்சத்திரம், யோகம் இவை தான் ஐந்து உறுப்புகள்'' என்றார் தாத்தா.
"" இந்த ஐந்து உறுப்புகள் பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க?'' என்று கேட்டான் மூர்த்தி.
"" ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என ஏழுகிழமைகள்தான் வாரம்.
திதி என்பது சந்திரனின் பூமிசுற்றுப் பாதையின் 30 சமகோணப்பிரிவுகள் ஒவ்வொன்றையும் சந்திரன் கடக்கும் காலத்தைக் குறிக்கும். அமாவாசையில் இருந்து பூரணை வரையான வளர்பிறைக் காலத்தில் 14 திதிகளும், பூரணை தொடக்கம் மீண்டும் அமாவாசை வரும் வரையான காலத்தில் இன்னும்14 திதிகளும் வரும். முதற்தொகுதி சுக்கில பட்சத் திதி. இரண்டாம் தொகுதி கிருஷ்ண பட்சத் திதி.
அமாவாசை,பிரதமை,துதியை, திருதியை,சதுர்த்தி, பஞ்மி, சஷ்டி, சப்தமி, அட்டமி, நவமி, தசமி, ஏகாதசி,துவாதசி, திரயோதசி, சதுர்த்தி,பூரணை. இவைகள் தான் திதி.
கரணம் என்பது திதியின் அரைபங்கு. அதாவது 30 திதிகளுக்கு60 கரணங்கள்.
நட்சத்திரம் என்பது ராசிக்சக்கரத்தை ஒவ்வொன்றும் 13.33 பாகை அளவு கொண்ட 27 பகுதிகளைக் குறிக்கும். சந்திரன் பூமியைச் சுற்றி வரும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தப் பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குகுரிய நட்சத்திரம் அந்த நேரத்தில் நடப்பதாகச் சொல்லப்படுகிறது.
"" 27 நட்சத்திரங்கள் என்னென்ன தாத்தா?'' என்று சந்தேகம் கேட்டான் அருண்.
""அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை,புனர்பூசம்,ஆயில்யம்,மகம்,பூரம்,உத்தரம், அத்தம்,சித்திரை, சுவாதி, விசாகம்,அனுஷம்,கேட்டை, மூலம்,பூராடம்,உத்திராடம்,திருவோணம்,அவிட்டம்,சதயம்,பூரட்டாதி, ரேவதி ஆகிய 27 நட்சத்திரப்பெயர்கள்'' என்றார் தாத்தா.
"" இதெல்லாம் எப்படி பார்த்து தெரிஞ்சுக்கிறது?'' என்று கேட்டாள் பிரியா.
"" கொஞ்சம் பழகின வந்துடும். நீங்க எல்லாம் கம்யூட்டரை தலையில் வைச்சுக்கிட்டு திரியறீங்க. ஆனா, காலண்டர், கடிகாரம் எல்லாம் இந்த பஞ்சாங்க கணக்கை அடிப்படையாக வைத்து தான் உருவாக்கப்பட்டிருக்கு. இதன் அருமை உங்களுக்குத்தெரியவா போகுது?'' என்று வருத்தப்பட்டார் தாத்தா.
குட்டீஸ் கதை படிச்சாச்சு! 2 கேள்விக்குப் பதில் சொல்றீங்களா?
1. பஞ்சாங்க உறுப்புகள் எத்தனை?
2. ராசி சக்கரத்தில் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன?
விடை: 1. ஐந்து 2. 27

36 . "" தாத்தா, பள்ளிகளில், அரசு விழாக்களில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், முடிவில் தேசிய கீதமும் பாடறாங்களே, ஏன்?'' என்று சந்தேகம் கேட்டாள் அனுஷா.
"" ஒரு நாட்டின் மக்கள் தம் நாட்டின் மீது அன்பும் பற்றுணர்வும் தோன்றுவிக்கும் நாட்டுணர்ச்சி மிக்க ஓர் இசைப்பாடல் தான் தேசியகீதம். இப்பாடலைப்பாடும் போது தம் நாட்டின் பழக்க வழக்கங்களும், வரலாறும், உயர்வாகத் தாம் கொள்ளும் கொள்கைகளும், நாட்டிற்காக உயிரிழந்த, உழைத்த பெருமக்களின் நினைவும், பொதுவாக நாட்டுப்பற்று மேலெழும்புவதற்காக பாடப்படுகிறது'' என்றார் தாத்தா.
"" ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு நாட்டுப்பாடல் இருக்குமா தாத்தா?'' என்றாள் சாயிபவித்ரா.
"" ஆமாம். நாட்டுவணக்கப்பாடல் ஐரோப்பாவில் 19வது நுõற்றாண்டுகளில் பரவலாக ஏற்பட்ட ஒரு வழக்கம். 1568க்கும் 1572க்குச் இடையே எழுதப்பட்டதாகக் கருதப்படும் டச் மக்களின் ஹெட்வில்லெமுஸ் என்னும் நாட்டுவணக்கப்பாடல்தான் உலகிலேயே பழையது என்று கருதப்படுகிறது.'' என்றார் தாத்தா.
"" தமிழில் பலபாடல்கள் இருந்தும் மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை பாடலை மட்டும் ஏன் தமிழ்தாய் வாழ்த்தாக பாடுகிறார்கள்?'' என்று கேட்டாள் திவ்யா.
""சுந்தரம்பிள்ளை தமிழின் பெருமைகளை அனைத்தையும் 15 பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார். அதில் முதல்பாட்டினை மட்டும் எடுத்துக்கொண்டு, 2வது பாடலின் கடைசி வரியையும் சேர்த்து தமிழ்தாய் வாழ்த்தாக ஏற்றுகொள்ளப்பட்டிருக்கிறது. இறைவனுக்கு அடுத்து தமிழே தெய்வம் என்றும், தமிழின் பெருமைகளை அனைவரும் அறிந்து, மதித்து போற்றவேண்டும் என்பதற்காகவே பாடப்படுகிறது.'' என்றார் தாத்தா.
"" ரவீந்திரநாத் தாகூர் எழுதிய "ஜனகனமண' வங்கப்பாடலை மட்டும்
ஏன் தேசியக்கீதமாக பாடுகிறார்கள்?'' என்று கேள்வி தொடுத்தான் மூர்த்தி.
""இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்கøள்க் கணிக்கின்ற நீயே எல்லாருடைய மனதிலும் ஆட்சி செய்கிறாய் என்பது முதல்வரி பொருள்.
பாடலின் முடிவில் இந்தியாவின் இன்பத் துன்பங்களை கணிக்கின் தாயே உனக்கு வெற்றி வெற்றி வெற்றி என்று இந்தியாவில் உள்ள அனைத்து மொழி பேசும் மக்களை ஒன்றிணைத்து இந்திய தேசத்தின் ஒருமைபாட்டை வலியுறுத்துவதால் இது தேசியகீதமாக பாடப்படுகிறது'' என்றார் தாத்தா.
"" தமிழ்தாய் வாழ்த்துப் பாடலையும், தேசிய கீதத்தையும் எப்படி வேண்டுமானாலும் பாடலாமா தாத்தா?'' என்றனர் பிரியாவும் அருணும்.
"" மோகன ராகத்தில் தமிழ் தாய் வாழ்த்துப்பாடலை பாடணும். தேசியகீதத்தை 52 வினாடிக்கும் பாடி முடித்துவிடணும்.
பாடும் போது கூனாமல், குனியாமல், ஆடாமல், அசையாமல் நேராக நின்று தலையை நிமிர்த்தி பாட வேண்டும்.'' என்றார் தாத்தா.
குட்டீஸ் கதை கேட்டாச்சு. இப்ப 2 கேள்விக்கு பதில் சொல்றீங்களா?
1. தேசிய கீதம் பாடிமுடிக்கவேண்டிய நேர அளவு?
2. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர்?
விடை: 1. 52 வினாடிகள். 2. மீனாட்ஷி சுந்தரம்பிள்ளை


37 .""தாத்தா,மனுஷங்கள ஆண்மகனை ஆனந்த் என்றும், பெண்ணை ஆனந்தி என்று குறிப்பிட்டு சொல்றோம்ல. அதுமாதிரி விலங்குகளுக்கும் ஆண், பெண் வேறுபடுத்திக்காட்டுற பெயர் இருக்குதா?'' என்று கேட்டாள் அனுஷா.
"" எல்லா விலங்குகளுக்கும் ஆண், பெண் பெயர் உண்டு. நாம் அதை எல்லாம் மறந்துவிட்டு பொது பெயரில் சொல்றோம். இதைப் பற்றி தமிழின் தொன்மையான நுõலான தொல்காப்பியத்தில் மரபியல் பகுதியில் விரிவாக சொல்லப்பட்டிருக்கு. உனக்கு ஆர்வம் இருந்தால் படித்து தெரிஞ்சுக்கலாம்.'' என்றார் தாத்தா
"" தாத்தா, நீங்களே சொல்லுங்களேன்'' என்று கெஞ்சினாள் சாயிபவித்ரா.
""சரி. கேட்டுகுங்க. ஆடு,மாடுகளை கடா, பகடு என்ற ஆண் பெயரில் தான் சொல்லணும்.
செம்மறியாட்டுக்கு தகர் என்றும் குரங்கு, முயலை கடுவன் என்ற ஆண்பெயர் சுட்டித்தான் கூப்பிடணும். அது போல,
மா குதிரைக்கும், அப்பர் குரங்குக்கும், ஒருத்தல் என்பது கரடி,பன்றி, யானை, புலிக்குரிய ஆண்பெயராகும்.
புலியை போத்து என்றும், மானை கலை என்றும் எருமையை ஏறு என்று சொல்லணும். வாத்துக்கு வரடம், குதிரைக்கு சலகு என்பது ஆண் பெயர்.'' என்றார் தாத்தா.
""விலங்குகளைக் குறிக்கும் பெண் பெயர்கள் என்னென்ன?'' என்று கேட்டாள் திவ்யா.
ஒட்டகம், யானை, கவரிமானுக்கு பெண் பெயர் பிடி.
பேடை, பெடை, பெட்டைஎன்பன கழுதை, சிங்கத்துக்கான பெண் பெயர்.
குரங்குக்கு மந்தி என்றும், ஆ என்பது எருமைக்கான பெண் பெயர்கள்.
பாட்டி, மோழல் , முடுவல் என்பன நரி, பன்றி,நாய், ஓநாய்க்கான பெண் பெயர்கள். அளகு என்பது மயிலுக்கும், கிடாரி என்பது கன்று ஈனாத பெண் விலங்குகளைக்குறிக்கும்.'' என்றார் தாத்தா.
"" விலங்குகளின் இளமை பெயர்கள் எவைன்னு சொல்லுங்க தாத்தா?'' என்றான் மூர்த்தி.
""ஆடு, பூனை,நாய்,கழுதை, குதிரை,கரடிகளைக் குட்டி என்று கூப்பிடணும்.
மாடு, எருமை, முதலை, ஒட்டகம் இவற்றின் இளமை பருவப் பெயர் கன்று.
ஒட்டகம், யானைக்கு இளமை பெயர் கயந்தலை.
கீரிக்கு பிள்ளை, வெருகு, நாவி என்பன அணிலுக்கு உரிய இளமை பெயர்.
புலி, அரிமா, ஓநாயின் இளமை பெயர் குருளை. மீனுக்கும் தேளுக்கும் குஞ்சு என்றும், பார்ப்பு என்பது நண்டுக்கும், வண்டுக்கும், புழுவுக்கும் உரிய இளமை பெயர்கள். கொக்கை பிள்ளை என்றும் முயலை பறழ் என்ற இளமை பெயரால் குறிக்கப்படுகிறது.'' என்றார் தாத்தா.
இதைக் கேட்ட அருணும் பிரியாவும்,"" அப்பாடா! '' என்று வியந்து போனார்கள்.
என்ன குட்டீஸ் கதை கேட்டாச்சா! இப்ப 2 கேள்விக்கு பதில் சொல்ல ரெடியா?
1.ஒட்டகம், யானையைக் குறிக்கும் பெண்பால் பெயர் என்ன?
2. குட்டி என்ற இளமை பெயர் எந்த விலங்குகளுக்குப் பொருந்தும்?
விடை: 1. பிடி 2. ஆடு,பூனை,நாய், கழுதை, குதிரை, கரடி.


38 . தாத்தாவிடம் பேரப்பிள்ளைகள் சதுப்பு நிலக்காடுகள் பற்றி விளக்கம் கேட்டனர். இதற்கு வார்த்தைகளில் விளக்குவதைவிட சதுப்பு நிலக்காட்டிற்கே பேரப்பிள்ளைகளைஅழைத்துச் சென்றார் தாத்தா.
""தாத்தா, இந்த இடத்திற்குப் பெயர் என்ன?'' என்றாம் அனுஷா.
"" இந்த இடத்திற்குப் பெயர் பிச்சாவரம். உலகின் 2வதுபெரிய சதுப்புநிலக்காடு இது'' என்றார் தாத்தா.
""சதுப்புநிலக்காடுன்னா என்ன தாத்தா?'' என்றாள் சாயிபவித்ரா.
"" கடலின் கரையோரங்களில் உள்ள நிலப்பரப்புகளில் உவர் நீரில் அதாவது நிலமும் கடலும் சேரும் பகுதிகள் மண்ணும் நீரும் சேர்ந்து சேற்றுப் பகுதியாக சில அடி உயரத்திற்கு நீர்நிறைந்து இருக்கும். இந்தப் பகுதியில் வளரும் மரங்களடர்ந்த பரப்பைதான் சதுப்புநிலக்காடுன்னு சொல்றாங்க'' என்றார் தாத்தா.
"" தரையில காடுகள் பார்த்திருக்கேன். இங்கே தண்ணிமேல காடு இருக்கே!'' என்று ஆச்சரியப்பட்ட திவ்யா, "" தாத்தா, இந்த மரங்களின் பெயர் என்ன?'' என்றாள்.
"" இந்த வகை மரங்களை ஏவிசினியா, மாங்க் ரோவ் என்றும் சொல்வாங்க. தமிழில் சுரபுன்னை,அலையாத்தி மரங்கள் என்று சொல்வாங்க!'' என்றார் தாத்தா.
"" இந்த மரங்கள் தண்ணி மேலத்தான் வளருமா?'' என்றான் மூர்த்தி.
"" பொதுவாக மரங்கள் வேர் பூமிக்குள்ளதான் இருக்கும். மாங்க்ரோவ் மரவேர்கள் தண்ணீர் பரப்புக்கு மேல் விரல்களைப்போல நீண்டுகொண்டிருக்கும். அதுக்கு மேல தான் இலைகள், கிளைகள் இருக்கும். பார்ப்பதற்கு புதர்போல இருக்கும். இந்த மரங்கள் வேர்கள் மூலமாகதான் சுவாசிக்கும். வேர்களில் ஆங்காங்கே துளைகள் எல்லாம் இருக்கும். இதை சுவாசிக்கும் வேர்கள்(கீஞுண்ணீடிணூச்tணிணூதூ ணூணிணிtண்) என்று சொல்வாங்க.'' என்றார் தாத்தா.
"" இது குளம், ஏரி மாதிரியோ கடல் மாதிரியோ இல்ல இதை எப்படி சொல்றது?'' என்று சந்தேகம் கேட்டான் அருண்.
"" கடல்முகத்துவாரம் என்று சொல்லலாம். இங்கிருந்து ஆயிரக்கணக்கான கால்வாய்கள் பிரிந்து கடல் நோக்கிச் செல்கின்றன. இந்த சதுப்பு நிலக்காடு மூவாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதுபோல கொல்கத்தா அருகேஉள்ள சுந்தர்வன காடுதான் உலகின் பெரிய சதுப்புநிலக்காடு'' என்றார் தாத்தா.
"" இந்த சதுப்பு நிலக்காடுகளால் என்ன நன்மை?'' என்று ஆர்வமாய் கேட்டாள் பிரியா.
"" புயல், மண் அரிப்பு, கடல்நீர் புகுதல், இயற்கை சீற்றங்களில் இருந்து இந்த காடுகள் காக்கும். மாங்க்ரோவ் என்ற அலையாத்தி மரம் வேகமாக வரக்கூடிய அலைகளை தடுத்து, அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தும். சுனாமி மாதிரி பெரிய அலை வெள்ளம் வந்தா இந்த காடுகள் அந்த ராட்சச அலைகளை தடுத்து நிலப்பரப்புக்கும் ஊடுறுவாம செய்துடும்.'' என்றார் தாத்தா.
குட்டீஸ் கதை கேட்டாச்சு. இப்ப 2 கேள்விக்கு பதில் சொல்லுங்க!
1. உலகின் பெரிய சதுப்பு நிலக்காடு எது?
2. சுவாசிக்கும் வேர்கள் கொண்ட மரம் எது?
விடை: சுந்தர்வன காடு. 2. மாங்க்ரோவ் மரம்.

39 . மாலை வேளை பொழுது போக தாத்தா விடுகதை சொல்ல, அதற்கு பேரப்பிள்ளைகள் பதில்சொல்லிக்கொண்டிருந்தனர்.
கிச்சனில் பாட்டி சிற்றுண்டி செய்து கொண்டிருந்தார்.
""ம்ம்ம்... ஆ... மணக்கும் வாசனையே பசிய துõண்டுதே!'' என்று குதுõகலித்தாள் அனுஷா.
பாட்டி கிச்சனில் இருந்து சிற்றுண்டியுடன் வந்தார்.
""ஆஹா...! என்ன மணம்! சுட... சுட... ஆவி பறக்குதே! என்ன பாட்டி அது?'' என்றாள் ஆசையாய் திவ்யா.
""உங்களுக்குப் பிடிச்ச ஐட்டம் தான் எங்கே கண்டுபிடி?'' என்றார் பாட்டி.
""எனக்குத் தெரியுமே! நுõடூல்ஸ் தானே! ஆ... நாக்குல எச்சில் ஊறுதே!'' என்றாள் சாய்பவித்ரா.
"" பாட்டி, இந்த நுõடூல்ஸ் நீங்க எங்களை மாதிரி இருந்தப்ப இருந்துச்சா, நீங்க சாப்பிட்டு இருக்கீங்களா?'' என்று கேட்டான் மூர்த்தி.
"" அந்தக்காலத்தில் இருந்ததான்னு எனக்குத் தெரியல. ஆனால் நான் சிறுவயதில் சாப்பிட்டதில்லை'' என்றார் பாட்டி.
இதைக்கேட்டு தாத்தா சிரித்துக்கொண்டே பாட்டியைப் பார்த்து,"" காலம் மாறிப்போச்சு... சாப்பிடற சாப்பாடும் மாறிபோச்சு! நாம சாப்பிட்ட இடியாப்பம் மாதிரி தானே இந்த நுõடூல்ஸ் இருக்கு?'' என்றார் தாத்தா.
""தாத்தா, நுõடூல் பத்தி கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன்...''
என்று கெஞ்சினாள் பிரியா.
"" உங்க கையில இருக்கற உணவுக்குப் பேரு, நுõடூல்ஸ்! இது ஒரு லத்தீன் வார்த்தை. இதற்கு முடிச்சு என்று அர்த்தம். இது சுவையுள்ள இன்ஸ்டன்ட் உணவு வகைகளில் ஒன்று. மாவு பொருட்களால் ஆனது. இந்த நுõடூல்ஸ் 5ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலமாக இருந்தது.'' என்றார் தாத்தா.
"" இந்த சுவையான உணவைக் கண்டுபிடிச்சது யாரு தாத்தா?'' என்று கேட்டா ன் அருண்.
""நுõடூல்ஸ்சின் பூர்வீகம் சீனா, இத்தாலி, அரபு நாடுகள் என்று சொல்பவர்களும் இருக்காங்க.
சீனாவில் நுõடூல்ஸ் தானியங்களில் இருந்து உருவாக்கினாங்க. அப்புறம், சீனாகிட்டேயிருந்து கத்துக்கிட்டு ஜப்பான்காரங்க உருவாக்கி உலக அளவில் பரப்பினாங்க. 13ம் நுõற்றாண்டுல சீனாவுக்கு போன மார்க்கோபோலோ என்பவர் அந்த நாட்டில் இருந்த நுõடூல்சை சாப்பிட்டிருக்கிறார். அதன் இதமும், ருசியும் அவரை கவர்ந்து விட அங்கிருந்து நுõடூல்சை இத்தாலிக்கு கொண்டு வந்தாரு. இத்தாலியில் இருந்து மற்ற நாடுகளுக்கு நுõடூல்ஸ் உணவு பரவி, ரொம்ப பிரபலமானது.
இப்போ ஆசிய நாடுகளில் நுõடூல்ஸ் சுவையான, சீக்கிரம் சமைத்து சாப்பிடும் உணவா இருக்கு. அதுவும் உங்களைப் போல குட்டீஸ்களுக்கு பேவரைட் உணவு இதுதான்!'' என்றார் தாத்தா.
குட்டீஸ் கதை படிச்சாச்சு! இப்ப 2 கேள்விக்கு பதில் சொல்லுங்க!
1. நுõடூல்ஸ் போல இருக்கும் ஒரு இந்திய உணவு எது?
2. ஜப்பான் எந்த நாட்டிலிருந்து நுõடூல்ஸ் செய்ய கற்றுக்கிட்டாங்க?
விடை: 1. இடியாப்பம் 2. சீனா


40 . ""தாத்தா, நவராத்திரி விழாவுக்கு நம்ம வீட்ல கொலு வைச்சோம்ல அது எதுக்காக தாத்தா?'' என்றாள் அனுஷா.
"" நவராத்திரி கொலு?உணர்த்தும் உண்மையை குழந்தைகளாகிய நீங்க கண்டிப்பாக தெரிஞ்சுக்கணும்'' என்றார் தாத்தா.
"" என்ன தாத்தா சொல்றீங்க? நாங்க எல்லாம் பொம்மை வைச்சு விளையாடற மாதிரி, பெரியவங்க விளையாடும் பொம்மை விளையாட்டுதான் கொலுன்னு நினைச்சேன்!'' என்றாள் சாயிபவித்ரா.
சாயி அப்படி சொன்தும் சிரித்த தாத்தா, "" ஒவ்வொரு மனிதனும் எந்த வகையிலாவது தன்னை படிப்படியாக உயர்த்திக்கணும் அதை ஞாபகப்படுத்தறது தான் கொலு'' என்றார் தாத்தா.
"" அதைப்பற்றி விவரமா சொல்லுங்க கேட்டுக்கிறோம்'' என்றாள் திவ்யா.
"" நவராத்திரி என்றால் ஒன்பது இரவு. ஒவ்வொரு இரவுக்கும் ஒருபடி என்று விளக்கும் பொருட்டுதான் கொலு காட்சியில் 9 படிகள் வைக்கிறாங்க'' என்றார் தாத்தா.
"" ஒவ்வொரு படியிலும் என்னென்ன பொம்மைகள் வைக்கணும்னு ஏதாவது முறையிருக்கா தாத்தா?'' என்றான் மூர்த்தி.
"" இருக்கே. அதை சுருக்கமா சொல்றேன்'' என்றவர் சொல்ல ஆரம்பித்தார்:
""முதல்படியில் ஓரறிவு உயிர்ப்பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகளும்,
2வது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகளும்,
3வது படியில் மூவறிவு உயிர்களான கரையான், எறும்பு போன்ற பொம்மைகளும்,
4வது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களான நண்டு, வண்டு பொம்மைகளும்,
5வது படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகள், பறவைகள், பொம்மைகளும்,
6வது படியில் ஆறறிவு கொண்ட உயர்ந்த மனிதர்களின் பொம்மைகளும்,
7வது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகள் பொம்மைகளும்,
8வது படியில் தேவர்களின் உருவங்கள், நவநக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்ட திக்கு பாலகர்களும்,
9வது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகளும் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் ஆதிபராசக்தி நடு நாயகமாக வைக்க வேண்டும்.'' என்றார் தாத்தா.
"" பல வீடுகளில் நீங்க சொன்ன வரிசைப்படி பொம்மைகள் வைத்திருக்க வில்லையே?'' என்றான் அருண்.
"" கொலுபடி தத்துவம் தெரியாதவங்க தெரியாம அப்படி வைச்சிருக்கலாம். நம்ம வீட்ல வைத்த முறைபடி உள்ள கொலுதான் சரின்னு தெரிஞ்சுக்குங்க'' என்றார் தாத்தா.
"" இந்த கொலுபடி பொம்மைகள் என்ன உணர்த்துது தாத்தா?'' என்றாள் பிரியா.
மனிதன் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று கடைசியில் தெய்வநிலையடையணும் என்பதை உணர்த்துவதுதான் கொலு காட்சி'' என்றார் தாத்தா.
குட்டீஸ் கதைப் படிச்சாச்சு. இதில் 2 கேள்விக்கு பதில் சொல்றீங்களா?
1. கொலுகாட்சியில் எத்தனை படிகள் இருக்கணும்?
2. நான்காவது படியில் என்னவகை பொம்மைகள் இருக்கணும்?
விடை: 9 படிகள். 2. வண்டு, நண்டு போன்ற பொம்மைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக