வியாழன், 9 செப்டம்பர், 2010

ஜீன்ஸ் அணிந்த மாடர்ன் பஞ்சாயத்து தலைவி! தேவராஜன்

ஜீன்ஸ் அணிந்த மாடர்ன் பஞ்சாயத்து தலைவி! தேவராஜன்
( 18.9.10 தினமலர் பெண்கள் மலரில் பிரசுரம் ஆன என் கட்டுரை)
"ஜீன்ஸ், டிசர்ட்டில் நவநாகரீக அழகியாக இருக்கும் ஷ்ஷவி ராஜ்வாட் என்ற இளம் பெண் படித்தது, இரண்டு முதுகலைப் பட்ட படிப்பு . சிட்டியில் வானுயர பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் ஒயிட் காலர் ஜாப். கை நிறை சம்பளம் என்று ஒரு உல்லாச வாழ்கையில் பட்டாம்பூச்சியாய் சிறகடித்தவர்,இன்ஸ்டென்ட் ஞானம் பெற்றவராய் சிட்டி ஸ்டைல் வாழ்க்கை, கார்ப்பரேட் கம்பெனி, கைநிறைய சம்பளம் இவற்றை எல்லாம் உதறி தள்ளிவிட்டு, ஒரு குக்கிராமத்தைத் தேடி சேவை செய்ய போகிறேன் என்று புறப்பட்டு, திடுக்கென அரசியலில் குதித்து ஒரு கிராமத்துக்கு பஞ்சாயத்து தலைவியாகி, அந்தக்கிராமத்துக்கு பல சேவைகள் செய்து அந்தக்கிராமத்தை முன்னேற்றுகிறார் ஒரு மாடர்ன் இளம் பெண்!' இது ஏதோ ஒரு திரைப்படத்தின் ஒன்லைன் ஸ்டோரி என்றோ, ஒரு சமூக நாவலின் கதை கரு என்றோ நினைத்து விடாதீங்க. உண்மையில் இது கதையல்ல நிஜம் தான்!
ராஜஸ்தானில் 1980ல் பிறந்தவர் ஷ்ஷவி ராஜ்வாட். இவர், பெங்களூரில் இருக்கும் ரிஷி வேலி ஸ்கூலில் பள்ளிப்படிப்பும், லேடி ஸ்ரீராம் கல்லுõரியில் எம்பிஏ, ஐஐஎம் பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண் எடுத்து பட்டம் பெற்றவர். ஐந்தாறு கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிந்தவர்.
தன்னுடைய தாத்தாவின் பூர்வீக கிராமத்துக்கு வருகிறார். அந்தக் கிராமம் ஜெய்பூரிலிருந்து 60 கிலோ மீட்டரில் துõரத்தில் இருக்கும் சோடா கிராமமாகும்.
இந்தக்கிராமத்துக்கு நம் தேவை அதிகம் இருக்கிறது என்று எண்ணி, பிப்ரவரி 4, 2010 ல் நடந்த கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு பஞ்சாயத்து தலைவியானார். இந்தியாவில் இரு பட்டப்படிப்பு படித்து, ஜீன்ஸ் டிசர்ட்டில் இந்த இளம் வயதில் பஞசாயத்து தலைவியாக கலக்கும் பெண் இவர் ஒருத்தராகத்தான் இருப்பார் போலும்.
"சமூக சேவைப் புரியும் குணம் அது என் ரத்தத்தில் கலந்திருக்கிறது' என்று பளீச் சென்று சொல்லும் ராஜ்வாட், சோடா கிராமத்திற்கு பஞ்சாயத்து
தலைவியானப்பின் அதிரடியாக அந்தக்கிராமத்திற்கு பல மாற்றங்களை, முன்னேற்றங்களை கொண்டுவர முனைந்தார். அதற்கான சாத்திய கூறுகளை வரையறுத்துக்கொண்டார்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் நுõறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை முழுமையாக தன் கிராமத்தில் செயல்படுத்தினார். அரசு கொண்டுவந்திருக்கும் நுõறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தைபற்றி விளக்கமாக கிராமத்து மக்களிடம் எடுத்துக்கூறி, அவற்றின் நன்மைகள், கிராம முன்னேற்றம் எல்லாம் எடுத்துச் சொல்லி எல்லாரையும் அதில் ஆர்வமாக ஈடுபட வைத்தார்.
ஒரு அலுவலகத்திற்கு செல்வது போல தினமும் காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை கிராமத்தில் வந்து இருந்து மக்கள் குறை கேட்பது, நடக்க÷ வண்டிய பணிகள் பற்றி ஆலோசனை நடத்துவது, திட்டமிடுவது என சுறுசுறுப்பாக இருப்தைக் கண்டுகிராம மக்கள் பாட்டன் 15 ஆண்டில் செய்யாததை இந்தப் பெண் நிச்சயம் செய்வாள் என்று முழுமையாக நம்பினர்.
ராஜ்வாட்டும் கிராமத்திற்கு தேவையான கோரிக்கைகள், செலுகைகள் பெற அந்த மாவட்ட கலெக்டர், பிடிஓ, தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அவ்வப்போது அணுகி, கிராமத்திற்கு தேவையான வசதிகளை பெற்று, கிராம முன்னேற்றத்திற்கு உதவினார். ராஜ்வாட்டின் கிராம சேவையில்
கிராமத்தில் ஊழல் என்று பேச்சுக்கே இடம் இல்லாமல் போனது. அரசு சலுகைகள் முழுமையாக கிராமத்திற்கு கிடைக்க வழிசெய்தார்.

இவர் பஞ்சாயத்து தலைவியாக இருக்கும் சோடா கிராமத்தில் போலீசுக்கு வேலைஇல்லை. கணவன் மனைவியை கொடுமை படுத்துவதில்லை. விவசாயிகளின் குழந்தைகளுக்கு தன் வீட்டுத் தோட்டத்தில் பூங்கா அமைத்துக்கொடுத்துஅவர்களுடன் விளையாடிவருகிறார்.
வீடில்லா மக்களுக்கு இருக்க டென் அமைத்துக்கொடுத்திருக்கிறார். குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல சவ்வாரி குதிரைகள் வாங்கிகொடுதிருக்கிறார்.
கிராமத்தவர்களின் மனப்பாங்கை மாற்றி உள்ளார்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் சுகாதாரமான குடிநீர், வேலைவாய்ப்புகள் பெருக்கித் தந்திருக்கிறார். சாலை வசதி செய்திருக்கிறார். மேலும் தன் கிராம முன்னேற்றத்திற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று திட்டமிட்டுவரும் இவருக்கு தான் படித்து பெற்ற பட்டம் பல வகையிலும் உதவுகிறது என்கிறார்.
ராஜ்வாட்டின் தந்தை நரேந்திரசிங் படித்த தன் மகள் இப்படி ஒரு கிராமத்தில் பஞ்சாயத்துதலைவியாகி விட்டாளே! என்று வருத்தம்கொள்கிறாரா, என்று நாம் நினைத்தால், அவரோ," எனக்கு ஒரே மகள் ராஜ்வாட். அவர் விரும்பம் என்னவோ அதை முழுமையாக, சுதந்திரமாக செய்கிறார். நான் ஏன் தலையிடுகிறேன்? என்பவர் என்னைத்தவிர என் குடும்பத்தில் எல்லாருமே ராணுவத்தில் இருந்தவர்கள். ராஜ்வாட்டின் மாமா கோல்ப் வீரர். என் அக்கா பையன் தேசிய பிட்னஸ் டிரைனர், அக்கா மகள் கராச்சியில் 16 ஸ்கூல் நிர்வகிக்கிறார். இப்படி அவரவர்கள் அவர்கள் விருப்பப்படி இருக்கிறார்கள்' என்கிறார்.
மேலும் ராஜ் வாட் பெங்களூரில் பழைய குருகுலக் கல்வி போல ஒரு பள்ளியில்தான் படித்தாள். அங்கு யூனிபார்ம் கிடையாது. தேர்வு கிடையாது. அங்கு அவள் படித்ததினால் தான் அபார திறமையும் அறிவும் பெற்றாள். ஆன்மிக சக்தியையும் பெற்றாள். அதனால்தான் அவளுக்கு சமூக சேவை என்பது ரத்தத்தில் ஊறியிருக்கிறது என்று பெருமைபடுகிறார்.
தேவராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக