வியாழன், 9 மே, 2013

15 வகை திதிகள்/ 91/


15 வகை திதிகள்/ 91/ 2.6.2013/ இன்றைய தலைமுறை தமிழ் வருடப்பிறப்பு நாளில் பஞ்சாங்கம் படிக்கும் பழக்கம் கொண்டிருப்பதில்லை. அவர்களுக்கு பஞ்சாங்கத்தில் திதி பார்க்கத் தெரிவதில்லை. திதி எத்தனை, அவைகளை எப்படி தெரிந்து கொள்வது என்பதை தெரிந்து கொள்வதும் பக்தியின் ஓர் வகைதான்! திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள துõரம். அம்மாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சந்திரன், சூரியனிடம் இருந்து விலகி செல்வார். ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும். திதியை பவுர்ணமி அல்லது அமாவாசை நாளில் இருந்து கணக்கிடலாம். பிரதமை: அமாவாசை நாளிற்கு அடுத்த நாள் (திதி). பிரதம எனும் சொல் முதலாவது எனப் பொருள்படும். துவிதியை: ‘துவி’ என்றால், இரண்டு. இது அமாவாசை நாளிலிருந்து இரண்டாவது நாள் (திதி). திரிதியை: என்றால், மூன்று. அமாவாசை நாளிலிருந்து மூன்றாவது நாள் (திதி). சதுர்த்திதி: சதுர் என்றால் நான்கு. கடவுளின் நான்கு கரங்களை, சதுர்புஜம் என்பர். அமாவாசை நாளிலிருந்து நான்காவது நாள் (திதி). இது விநாயகருக்குரிய சிறப்பு நாளாகும். பஞ்சமி: பாஞ்ச் என்றால், ஐந்து. அமாவாசை நாளிலிருந்து ஐந்தாவது நாள் (திதி). சஷ்டி: சஷ்டி என்றால், ஆறு. முருகனுக்குரிய திதி. இதனால் தான் அவருக்கு ஆறு முகம்இருக்கிறது.அமாவாசை நாளிலிருந்து ஆறாவது நாள் (திதி). சப்தமி: சப்தம் என்றால், ஏழு. அமாவாசை நாளிலிருந்து ஏழாவது நாள் (திதி). அஷ்டமி: அஷ்ட என்றால், எட்டு. அமாவாசை நாளிலிருந்து அல்லது பவுர்ணமி நாளிலிருந்து எட்டாவது நாள் (திதி). திருமாலின் அவதாரமான கண்ணன் அஷ்டமி நாளில் அவதரித்ததால் இந்நாள் ஜென்மாஷ்டமி அல்லது கோகுலாஷ்டமி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. நவமி: ஒன்பதாம் திதி. அமாவாசை நாளிலிருந்து ஒன்பதாவது நாள் (திதி). ராமபிரான் நவமி திதியில் பிறந்ததால் அவருடைய பிறந்த நாள் ராம நவமி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. தசமி: தசம் என்றால், பத்து. ராவணனை, தசமுகன் என்பர். அம்மாவாசை நாளில் இருந்து 10 வது நாள் திதி. ஏகாதசி: ஏகம் – தசம் என பிரிக்க வேண்டும். ஏகம் என்றால் ஒன்று. தசம் என்பது, பத்து. இரண்டையும் கூட்டினால், 11. இது, 11ம் திதி. அமாவாசையிலிருந்து மற்றும் பவுர்ணமியிலிருந்து 11வது நாளாகும். மற்ற விரதங்களை விட ஏகாதசி விரதம் கடைபிடிப்பது நல்லது. துவாதசி:அமாவாசை நாளிலிருந்து 12வது நாள் (திதி). திரயோதசி:அமாவாசை நாளிலிருந்து 13வது நாள் (திதி). சதுர்த்தசி: அமாவாசை நாளிலிருந்து 14வது நாள் (திதி). பூர்ணமான அமாவாசை அல்லது பவுர்ணமி ஆகியவை, 15ம் திதி. - தேவராஜன். *******************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக