புதன், 4 ஜனவரி, 2012

பாப்பா முதல் பாட்டி வரை பல் பாதுகாப்பு

பாப்பா முதல் பாட்டி வரை பல் பாதுகாப்பு (19.2.2011)

பால் பற்கள்
***

டாக்டர் தாரணி ஹரிநாத் மருத்துவ தம்பதியினர். டாக்டர் ஹரிநாத் சென்னை எஸ்.ஆர்.எம் பல் மருத்துவக்கல்லுõரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். டாக்டர் தாரணி காஸ்மெடிக் சர்ஜனாக 12 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார்.
பெண்கள் மலர் வாசகிகளுக்கு பல் ஆரோக்கியம், பாதுகாப்பு தொடர்பான சந்தேகங்கள்,விழிப்புணர்வுகள் பற்றி தொடர் எழுதுகிறார்கள்.
பேட்டி,கட்டுரை தொகுப்பு: தேவராஜன்
***
குழந்தைகளின் வளர்ச்சிப் பருவத்தில் பற்களின் பாதுகாப்பு மிக முக்கியம். பால் பற்கள் விழுந்தவுடன் நிலையான பற்கள் வரப்போகிற நிலையில், பால் பற்களுக்கு ஏன் அத்தனை அக்கறை எடுக்க வேண்டும்? என்று சிலர் நினைக்கலாம். ஆனால் பால் பற்களுக்கும் நிலையான பற்களுக்கு இணையான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனெனில் பால் பற்கள் குழந்தைப்பருவத்தில் நல்ல சத்தான உணவை உண்பதற்கு வழிவகுக்கிறது.
நிலையான பற்கள் வரும்வரை பால்பற்கள் அந்த நிலையான பற்களுக்கு உண்டான இருப்பிடத்தைத் தக்கவைக்கும் ஸ்பேஸ் மெயின்டெயினர்ஸ் ஆக செயலாற்றுகின்றன. சிறுவயதில் சரியான பேச்சு அமைவதற்கு இந்த பால் பற்கள் உறுதுணையாக இருக்கின்றன. இளம்வயது குழந்தைகளுக்கு நல்ல பல் மற்றும் வாய் ஆரோக்கியம் மிக முக்கியம். இளம் வயதில் பல் இழந்த குழந்தைகள் தன் சகவயதினருடன் பழகுவதற்கு வெட்கப்படுவர். தான் அசிங்கமான தோற்றத்தைக்கொண்டிருப்பதாக எண்ணிக்கொள்வர். "பொக்கை பல்" என்று பிறர் கேலி செய்வார்களோ என்று அஞ்சுவர்.

பால் புட்டியினால் வரும் பல் சொத்தை:
குழந்தைகளுக்கு அதிக சொத்தை வருவதற்கு முதற்காரணம் பால்புட்டியினால் வரும் நர்சிங் பாட்டில் கேரிங். இது குழந்தைகள் துõங்கும் போது பாலுடன் கூடிய பால்புட்டி அதன்வாயில் இருப்பதால், குழந்தையின் வாயிலுள்ள பாக்டீரியாக்கள் பாலில் உள்ள சர்க்கரையை ஆசிடாக மாற்றி அந்த ஆசிட்டால் பல் சொத்தை ஏற்படுத்துகிறது.
இந்த சொத்தையினால் அதிகம் பாதிக்கப்படுவது மேல் தாடையின் முன்பற்கள். காரணம், இப்பற்கள் குழந்தைக்கு முதன்முதலில் வரும் பற்களாகவும், நீண்ட நாள் வாயில் தங்குபவையாகவும் இருக்கின்றன. நாக்கானது கீழ்த்தாடையின் முன் பற்களை மறைத்துக்கொள்வதால், அவை அதிகமாக பாதிப்படைவதில்லை. இதனால் மிகவும் மோசமடைந்த மேல் தாடையின் முன்பற்களை முன்கூட்டியே எடுத்துவிடுவதால் குழந்தையின் ஊட்டச்சத்து மற்றும் உடல் நலம் பாதிப்படைகிறது. மேலும், பல் இல்லாமையால் குழந்தையின் பேசும் திறனும் பாதிக்கப்படும்.

இதைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள்:
*தினமும் குழந்தைகளின் பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும்.
*பால் அல்லது பழரசம் குழந்தைக்குப் பாட்டிலில் புகட்டியப்பின் சிறிது தண்ணீரைப் பருகச்செய்ய வேண்டும்.
* குழந்தைக்குத் தேவையான அளவு ப்ளோரைடு கிடைக்கிறதா என கண்காணிக்க வேண்டும்.
* குழந்தைக்கு பல் முளைக்க ஆரம்பித்த உடன் பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனைகள் பெறவேண்டும்.

பால் பற்களுக்கு வேர் சிகிச்சை:
பற்சொத்தை மிக ஆழமாகச் சென்று பல்லின் உள்ளே உள்ள பல்ப் எனப்படும் நரம்பை பாதிக்கும் பொழுது பல்லில் வலி உண்டாகிறது. இம்முறையில் பல் எடுக்காமல் காப்பாற்ற வேர்சிகிச்சை செய்யலாம்.

ஸ்பேஸ் மெயின்டெயினர்ஸ்:
இது குழந்தையின் வாயில் எடுத்து மாட்டக்கூடியதாகவோ, நிலையாக பொருத்தக்கூடியதாகவோ இருக்கும். ஆரம்பக்கட்டத்தில் முன்கூட்டியே பல் சொத்தையினால் பல்லை எடுத்துவிடுவதால் வரக்கூடிய நிலையான பற்கள் முன்னும் பின்னுமாகவோ, தாறுமாறாகவோ வளரக்கூடும். இதைத் தவிர்ப்பதற்கு பல் எடுத்த இடத்தில் இந்த ஸ்பேஸ் மெயின்டெயினர்ஸ் புதிய பல் முளைக்கும் வரை பொருத்தப்படுகின்றன.

ப்ளோரைடு வார்னிஷ்:
பால் பற்களை சொத்தையிலிருந்து பாதுகாக்க, பற்களின் உறுதியை அதிகரிக்க பால் பற்களுக்கு ப்ளோரைடு வார்னிஷ் செய்யலாம். இதனால் வாயில் உருவாகும் ஆஸிடில் இருந்து பால் பற்கள் பாதுகாக்கப்படும். குழந்தைகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ப்ளோரைடு வார்னிஷ் செய்யவேண்டும். வீட்டிலும் ப்ளோரைடு உள்ள பேஸ்ட் உபயோகிக்கலாம்.

வாய் தொடர்பான பழக்க வழக்கங்கள்:
குழந்தைகள் அறிந்தோ, தன்னை அறியாமலோ விரல் சூப்புதல், வாய்வழியாக மூச்சுவிடுதல், நகம் கடித்தல், உதட்டைக் கடித்தல், நாக்கை உந்துதல் போன்ற பழக்கங்களைச் செய்கின்றனர். இதனால்,பற்களும் அதைனைச்சார்ந்த பகுதிகளும் பாதிப்படைகின்றன.
இப்பழக்கங்களை நீக்க பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் குழந்தைகளுக்கு அதிகம் தேவை. இந்தப்பழக்கத்திலிருந்து குழந்தைகளை மீட்க பல் மருத்துவரின் உதவியை நாடலாம். அவர் ஹேபிட் பிரேக்கிங் அப்ளையன்ஸ்(ஏச்ஞடிt ஞணூஞுச்டுடிணஞ் ச்ணீணீடூடிச்ணஞிஞு) இவ்வகையான பழக்கங்களை நீக்க உதவுவார்.

பல்குழி அடைத்தல்:
பற்களின் கடிக்கும் பகுதியில் குழிகள் இருந்தால் சாப்பிடும் உணவுப் பொருட்களிலிருந்து சர்க்கரை முதல் பல பொருட்கள் அதில் தேக்கமடைந்து சொத்தையை உண்டாக்குகின்றன. இதைத் தவிர்க்க ணீடிt ச்ணஞீ ஞூடிண்ண்தணூஞு ண்ஞுச்டூச்ணtஐ பற்களின் குழியில் அடைப்பதன் மூலம் பல்சொத்தை உருவாவதைத்தவிர்க்க முடியும்.
தொடரும்.
தொகுப்பு: தேவராஜன்



பாப்பா முதல் பாட்டி வரை (2.3.2011)
பல் பாதுகாப்பு

பெண்களும் ஈறுநோய்களும் 2

ஆண்களைவிட பெண்கள் ஈறு நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோனல் மாற்றம்தான். முக்கியமாக பெண்கள் பருவமடைதல், குழந்தைப்பேறு, மாதவிடாய் நிறுத்தம் போன்ற காலங்களில் பெண்களின் வாய் ஆரோக்கியம் அதிகம் பாதிக்கப்படுகிறது. 30 வயதிலிருந்து 54 வயதிலிருப்பவர்கள் பற்புறத்திசு நோயினால் பாதிப்படைகின்றனர். இந்த பற்புறத்திசு நோய் எந்த விதமான அறிகுறியும் இல்லாமல் இருப்பதால் ஆரம்ப நிலையில் கண்டறிவது கடினம்.
பருவமடைதல் பருவத்தில் ஈறுகளில் மாற்றம்:
பருவமடைதல் பருவத்தில் ப்ரோஜெஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் அளவு அதிகமாவதால், ஈறுகளின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன. இதனால் ஈறுகளானது மிகவும் மிருதுவானதாகவும், சற்று வீங்கிய நிலையிலும் காணப்படும். இந்நிலையில் உணவுப்பொருட்களின் தாக்குதல், பற்காறையின் தாக்குதலினாலோ ஈறுகள் எளிதில் ரத்தம் வடிபவையாகவும், வலி உள்ளவையாகவும் இருக்கும்.

தவிர்க்கும் முறை:
பருவமடைதல் பருவத்தில் வாயின் ஆரோக்கியத்தைப் பேணுவது மிகவும் முக்கியம்.
நன்றாக பல் துலக்குதல், ப்ளாசிங் செய்தல் மற்றும் பல் மருத்துவரிடம் ஆலோசனைப் பெறுதல் வேண்டும்.

மாதவிடாயின் போது ஈறுகளில் மாற்றம்:
சில பெண்கள் மாதவிடாயின் போது ஈறு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், அவர்களது ஈறானது சிவப்பாகவும், வீக்கமாகவும், எளிதில் ரத்தம் வடியக்கூடியதாகவும் இருக்கும். வாய் உலர்ந்து போதல், வாயில் எரிச்சல் அதிகரித்தல், சுவையில் மாற்றம் வருதல் என இருக்கும். கன்னத்தின் உட்புறப்பகுதியில் வாய்ப்புண் ஏற்படும். இந்த மாற்றங்கள் மாதவிடாய் வருவதற்கு முன் ஏற்பட்டு, மாதவிøடாய் ஆரம்பித்தவுடன் மறைய ஆரம்பிக்கின்றன. இந்த சமயத்தில் பெண்களுக்கு எலும்பு கரைதல் அதிகமாக இருக்கும்.

தவிர்க்கும் முறை: ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபீ பரிந்துரைக்கப்படுகிறது.

மகப்பேறு சமயத்தில் ஈறுகளில் மாற்றம்:
மகப்பேறு காலத்தில் ப்ரெக்னென்ஸி ஜின்ஜைவிடிஸ் என்ற ஈறு நோய் ஏற்படுகிறது. இது மகப்பேறு காலத்தில் இரண்டு அல்லது மூன்றாவது மாதத்தில் தொடங்கி, எட்டாவது மாதம் வரைக்கும் ஈறுகளில் வீக்கம் அதிகரித்துக்கொண்டு இருக்கும். இந்நிலையில், ஈறு வீங்குதல், ஈறுகளில் இருந்து ரத்தம் வடிதல், ஈறு வலித்தல் அறிகுறிகள் காணப்படும்.
வீங்கிய நிலையில் உள்ள ஈறானது பற்காறையின் காரணமாக பெரிய கட்டியாகவும் மாற வாய்ப்புள்ளது. அவ்வாறு ஏற்பட்டால் பல் மருத்துவரிடம் காண்பித்து அதை அகற்றிக்கொள்வது நல்லது.
பற்புறத்திசு நோய் உள்ள தாய்மார்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் குறை மாதத்தில் பிறப்பவையாகவும், குறைந்த எடை கொண்டதாகவும் இருக்கலாம்.
கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளும் பெண்களுக்கு ஈறுநோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு.

சர்க்கரை நோய் இருந்தால் ஈறுகளில் மாற்றம்:
சர்க்கரை நோய் இருந்தால் பற்புறத்திசு நோய் தாக்கம் அதிகம் இருக்கும். இந்த நோய் தாக்கத்தால் பற்கள் விழுந்து விடும் நிலையும் ஏற்படலாம். பற்புறத்திசு நோயில் ஏற்படும் பாக்டீரியல் தொற்றினால் பற்களை சுற்றியுள்ள ஈறுகளையும் மற்றும் பல்லுக்கு உறுதியை தரும் எலும்பையும் பாதிப்படைய செய்து விடும்.
காரணங்கள்:
சர்க்கரை நோயானது ரத்த ஓட்டத்தை குறைப்பதால் ஈறுகளானது எளிதில் பாதிப்படைகின்றன.
சர்ககரையினால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் ஈறுகளும் ஆரோக்கியமற்றதாக இருக்கின்றன.
உமிழ் நீரில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் நுண்கிருமிகள் ஈறுநோயை உருவாக்குகின்றன.
சர்க்கரை நோயாளிகள் வாய் ஆரோக்கியத்தை சரியாக பேணாதிருந்தலால் ஈறுநோய் உருவாகிறது.

ஈறு நோயின் அறிகுறிகள்:
* வீங்கிய, சிவப்பான ஈறுகள்
*ஈறுகளில் இருந்து எளிதில் ரத்தம் கசிதல்
*ஈறானது பல்லிலிருந்து பிரிந்து இருப்பது
*ஆடக்கூடிய நிலையில் பற்கள் இருத்தல்
*வாய் துர்நாற்றமாக இருத்தல்
*மேல் தாடையும், கீழ்தாடையும் சேரும் போது பற்கள் சரியான முறையில் பொருந்தாது இருத்தல்.

நோய் தடுப்பதற்கான வழிமுறைகள்:
* ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
* புகை, புகையிலைப் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
*சரியான, சீரான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
* அவ்வப்போது பல் மருத்துவரை அணுகி, வாய் ஆரோக்கியத்திற்கான ஆலோசனைகளைப் பெறவேண்டும்.
தொடரும்




வயதானவர்களின் பல் பாதுகாப்பு3 (12.3.2011)


வயதானவர்களின் பால் பாதுகாப்புக்கு "ஜூரியாட்ரிக் டென்டிஸ்ட்ரி' என்று பெயர். 60 வயதைக் கடந்தவர்களுக்கு இவ்வகை பல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பல் தொந்தரவுகள்:
பற்புறத்திசு நோய்.
வேரில் சொத்தை வருதல்.
பல் தேய்மானம்.
சரியாக கட்டப்படாத எடுத்து போடக்கூடிய செயற்கை பல் செட்டுகளில் ஏற்படும் தொந்தரவுகள்.
பல் ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணங்கள்:
பற்காறையைச் சரியாக சுத்தம் செய்யாமை.
பல்லின் வேர் ஈறுகளின் இறக்கத்தால் வெளியே தெரிவது.
உமிழ் நீர் சரியாக சுரக்காமல் இருப்பது.
சரியாகப் பொருத்தப்படாத பல் செட்டுகள்.
பற்புறத்திசு நோய்:
ஈறுநோய், பல் நகருதல், பல்லின் வேர் உடைந்து போதல்.
பற்காறை மற்றும் வாயின் ஆரோக்கியத்தை சரிவரப் பேணாமை.
வயதின் முதிர்ச்சியால் பல் சார்ந்த அமைப்புகளில் ஏற்படும் மாற்றம்.
வயது முதிர்ச்சி காரணமாக ஏற்படும் மன அழுத்தம். புகைபிடித்தல்.
நோயின் அறிகுறிகள்:
வீங்கிய, ரத்தம் வடிந்த, வலிதரும் ஈறுபகுதி.
ஈறு இறங்குதல் மற்றும் பல் சார்ந்த அமைப்புகள் மற்றும் எலும்புகளில் ஏற்படும் மாற்றத்தினால் பல் நகருதல்.
பல் நகருவதால் பற்களுக்கு இடையில் இடைவெளி வருதல்.
காக்கும் வழிமுறைகள்:
வாயின் ஆரோக்கியத்தை நன்றாக பேணிக்காத்தல். அதாவது பல் துலக்குதல், ப்ளீச்சிங் செய்தல்.
பல் மருத்துவரை அணுகி,பற்காறையைச் சுத்து செய்து கொள்ளுதல்.
உமிழ்நீர்ச் சுரப்பு குறைவாக இருந்தால் அதற்கு மருந்து எடுத்துகொள்ளுதல்.
பல் சொத்தை:
வயது முதிர்வில் பலருக்கு வரும் பல் நோய்களில் ஒன்று பல் சொத்தை.
பல் சொத்தைக்கான காரணங்கள்:
ஈறுகளின் இறக்கத்தால் பல்லின் வேர்ப்பகுதி தெரிவது.
குறைவான உமிழ் நீர்ச்சுரப்பு.
குறைவான ஊட்டச்சத்து.
வாய் ஆரோக்கியம் பேணாமை.
ப்ளூரைட் குறைபாடு.
அதிக நுண்கிரிமிகள்.
பல் சொத்தையை கட்டுப்படுத்தும் முறைகள்:
பற்காறைகளைச் சுத்தப்படுத்தி வாய் ஆரோக்கியத்தைப் பேணுதல்.
கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவை உட் கொள்ளல்.
உமிழ் நீர்ச் சுரப்பை அதிகரிப்பது.
வாய் கொப்பளிப்பான்களைப் பயன்படுத்துவது.
பல்லின் மேல் ப்ளூரைட் அப்ளை செய்வது.
பல் சொத்தைக்கான சிகிச்சை முறைகள்:
பற்சொத்தை ஆரம்ப நிலையில் இருந்தால், ப்ளூரைட் ஜெல் அப்ளை செய்யலாம்.
சொத்தை அடுத்த நிலைக்கு போகும் பொழுது டென்டல் சிமெண்ட் போட்டு நிரப்பி கொள்ள வேண்டும்.
அதையும் தாண்டி சொத்தையானது பல்லின் நரம்பு பகுதியை அடையும் பொழுது, பல்லுக்கு வேர் சிகிச்சை செய்து பல்குப்பி பொருத்திக் கொள்ள வேண்டும்.
பல் தேய்மானத்தைத் தடுக்கும் முறை:
பல்லுடன் பல் உராயும் போது பற்களிடையை தேய்மானம் ஏற்படும். இதனால் பல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்துவிடும். இதைத் தடுக்க நைட் கார்டு பயன்படுத்தலாம்.

செயற்கை பல் கட்டுதல்:
வயது முதிர்ச்சியின் காரணமாக சிலருக்கு பல் விழுந்து விடுவது இயல்பான செயல். இப்படி பல் விழுந்தவர்களுக்கு செயற்கை பல், பல் செட் கட்டப்படுகிறது. செயற்கை வேர் பொருத்தும் சிகிச்சையின் மூலம் இழந்த இயற்கையான பற்களுக்கு இணையாக செயற்கை பற்கள் கட்டிக்கொள்ள முடியும். இந்தச் சிகிச்சை மூலம் பக்கத்தில் <உள்ள பற்களை தொந்தரவு செய்ய வேண்டியதில்லை.
செயற்கை வேரின் நன்மைகள்:
மற்ற பற்களின் துணையின்றி எந்தப் பல் இல்லையோ அந்தப் பல்லை மட்டும் கட்டிக்கொள்ளலாம்.
கழற்றி மாட்டும் பகுதி பல் செட்டுக்கு அவசியமில்லாமல் செயற்கை வேரின் துணையோடு ப்ரிட்ஜ் போட்டுக்கொள்ள முடியும்.
முழு பல் செட் மாட்டிக் கொள்ளும் போது அதற்குத் தேவையான சப்போர்ட்டை செயற்கை வேர் தந்து, பல் செட் கழன்று வராமல் காக்கும்.
செயற்கை வேரின் வகைகள்:
தாடை எலும்பினுள் பொருத்தப்படும் செயற்கை வேர் தான் அதிக புழக்கத்தில் உள்ளது. இதில், ஸ்க்ரூஸ், சிலிண்டர்ஸ், ப்ளேட்ஸ் வகைகள் உள்ளன. இவையாவும் அறுவை சிகிச்சை மூலமாக தாடை எலும்பில் பொருத்தப்படுகிறது.
செயற்கை வேர் பொருத்த தகுதிகள்:
உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும்.
பற்புறத்திசு நோய் தாக்கம் இருக்கக்கூடாது.
தேவையான அளவு தாடை எலும்பு இருக்க வேண்டும்.
செயற்கை வேர் சிகிச்சை மூலம் செயற்கை பல் பொருத்துவதிலும் கட்டுபாடுகள் உள்ளன. டைப்2 டையாபிடிஸ் உள்ளவர்கள், நீண்ட காலமாக புகைபிடிப்பவர்கள், பிஸ்பாஸ்போனேட்ஸ் மருத்து உட்கொள்பவர்கள், பற்களை அடிக்கடி கடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு செயற்கை வேர் சிகிச்சை ஏற்புடையதல்ல.


பல் நோய் பாதிப்பால் வரும் நோய்கள் (19.3.2011)


பற்புறத்திசு நோயும் சுவாசக்கோளாறும்:
பற்புறத்திசு நோய்க்கும் சுவாசக் கோளாறுக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. பற்புறத்திசு நோயினால் சுவாசக்கோளாறு மேலும் மோசமடையும். நிமோனியா,ப்ராங்கைடிஸ்,எம்பைசீமா போன்ற நோய்கள் உருவாகி சுவாசக் கோளாறு நோயினை தீவிரமடைய செய்யும்.
பற்புறத்திசு நோய் என்பது ஒரு பாக்டீரியா தொற்று நோயாகும். இந்நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் ஈறுகளின் மேல்படிய ஆரம்பித்து ஈறுகளையும், பற்களைச் சுற்றியுள்ள எலும்பையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. இந்த நோய்க்கு சரியான நேரத்தில் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், பற்களானது உறுதியை இழந்து ஆட ஆரம்பித்துவிடும். இறுதியில் பற்கள் விழக்கூடும்.
பொதுவாக பாக்டீரியாவால் ஏற்படும் சுவாச நோய் வாயில் உள்ள பாக்டீரியா துகள்களை சுவாசிப்பதால் ஏற்படுகிறது.
வாயில் பற்புறத்திசு நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் கீழ்ப்புற சுவாசக் குழாய்க்குச் சென்று நுரையீரலைச் சுற்றி வளர ஆரம்பிக்கின்றன. இவை நிமோனியா போன்ற நோய்களை உருவாக்குகின்றன.
சுவாசக்கோளாறு உடையவர்களுக்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது குறைவாக இருக்கும். இக்குறைவின் காரணமாக வாயில் ஈறுகளின் மேல்புறத்திலும், உள்புறத்திலும் பாக்டீரியாக்கள் வளர ஆரம்பித்து, அவற்றை சுவாசிக்க நேரிடும் பொழுது சுவாசக் கோளாறுகளான எம்பைசீமா, நிமோனியா போன்றவை மேலும் மோசமடைகின்றன.
புகைபிடித்தல் சுவாசநோய்க்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. புகையிலைபோடுதல் வாய் ஆரோக்கியத்தை முக்கியமாக பாதிக்கிறது. இவ்வகை பாதிப்புகளால் சுவாசக் குழாய்களும் பாதிப்டைகின்றன.
பற்புறத்திசு நோயானது ஈறுகளையும் பல்லைச்சுற்றியுள்ள எலும்பையும் பாதிப்பதால் நுரையீரலின் உட்புறச்சுவரைப்பாதித்து அதன் வழியே காற்றானது எளிதாக சுவாசக் குழாய் வழியே போய்வருவதை பாதிக்கிறது.
எனவே, ஈறுநோய் மற்றும் சுவாசநோய் இரண்டும் உள்ளவர்கள் பல் மருத்துவர் மற்றும் பொதுமருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பல் மருத்துவர் ஈறுநோய்க்கு பல்லைச்சுத்தம் செய்தல், ரூட் ப்ளேனிங் முறையில் வாயில் உள்ள பாக்டீரியாக்களை நீக்குவார். வாயை சுத்தம்ö சய்தப்பிறகு, தொற்றுகளை நீக்கி பாக்கெட் எனப்படும் பகுதியில் மீண்டும் தொற்று ஏற்படாமல் இருக்க வழிசெய்வார். இதன் மூலம் பாக்டீரியாக்கள் சுவாசத்தில் சுவாசப்பாதைக்குச் செல்வதைத் தடுக்க முடியும்.

பற்புறத்திசு நோயும் இதயக்கோளாறும்:
வாயில் உள்ள பாக்டீரியாக்கள் ரத்த ஓட்டத்தில் கலந்து ரத்தக் குழாய்களிலுள்ள கொழுப்புத் துகள்களுடன் சேர்ந்து சிறு ரத்தக் கட்டிகளை உருவாக்குகின்றன.
இதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அளவுக்கு மீறி கொழுப்புப் புரதங்கள் படிவதாலும் இந்த ரத்தக் கட்டிகள் அந்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துவதாலும் இதயம் சரிவர இயங்க முடியாமல் ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது.
மேலும் ஏற்கனவே இதய நோய் உள்ளவர்கள் வாயை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதுவும் செயற்கை இதய வால்வுகள் பொருத்திக் கொண்டவர்கள், இன்பெக்டிவ் என்டோ கார்டைடிஸ் உள்ளவர்கள், பிறப்பு முதல் உள்ள இதய மற்றும் வால்வு கோளாறுகள் கொண்டவர்கள், ருமேடிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இதய வால்வுகள் கொண்டவர்கள் வாய் ஆரோக்கியத்தை கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.

புகையிலை போடுவதால் பாதிப்புகள்:
புகையிலை போடுதல், புகைபிடித்தல் பல், ஈறுகளை பாதிக்கும். புகையிலையில் உள்ள கார்சினோஜன்ஸ் மூலம் 25 வகையான கேன்சர் உருவாகக்கூடும்.
புகையிலை போடுவதால் வாய், தொண்டை, சுவாசப்பாதை ஆகியவற்றில் கேன்சர் ஏற்படுகிறது. வாயில் ஏற்படும் கேன்சரினால் உதடு, பல், ஈறுகள், கன்னப்பகுதி, நாக்கு போன்ற பகுதிகள் பெரிதும் பாதிப்படைகின்றன.
புகையிலை போடுவதால் வெள்ளை நிற தடிப்புகள் வாயில், நாக்கு, ஈறுகளில், கன்னப்பகுதிகளில் காணப்படும். இவை வலியற்றவையாக இருந்தபோதிலும், சில உணவுப் பொருட்கள் உண்ணும் போது எரிச்சலை ஏற்படுத்தும். இத்தகைய வெள்ளை தடிப்புகள் அருகாமையில் கேன்சர் கட்டிகள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
புகையிலை போடும் பழக்கத்தினால் பற்களைச்சுற்றியுள்ள ஈறுகளை பெருமளவில் பாதித்து அவற்றை பற்களில் இருந்து விலகிவிட செய்கின்றன. மேலும், புகையிலையின் கசப்புத்தன்மையைப் போக்க அதனுடன் சர்க்கரை சேர்க்கப்படுவதால் அவற்றை வாயிலேயே வைத்து கொள்வதாலும், மெல்லுவதாலும் பல் சொத்தை ஏற்படுகிறது. மேலும், புகையிலையில் நிகோடின் இருப்பதால் பற்கள் அனைத்தும் காறை படிந்து காணப்படுகின்றன. இதனால் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது.
தொடரும்
தொகுப்பு: தேவராஜன்



பாப்பா முதல் பாட்டி வரை பல் பாதுகாப்பு
பல் தொடர்பான பிரச்னைகள்5 (26.3.2011)

பல் கூச்சம்:
சிலருக்கு பல் கூச்சம் பிரச்னை தொந்தரவு தரக்கூடியதாக இருக்கும். இதனால் உணவு பொருட்களை மென்று விழுங்க முடியாத நிலைவரும்.
பல் கூச்சம் ஏற்பட காரணங்கள்:
பற்சொத்தை, பல் அடைப்பில் விரிசல் ஏற்பட்டிருத்தல், ஈறுநோய்களினால் ஏற்படும் ஈறு இறக்கம், அடிக்கடி பிளீச்சிங் செய்து கொள்ளல், தினமும் அதிகபடியான அமிலம் கலந்து உணவு மற்றும் பானங்களை எடுத்துகொள்ளுதல் போன்ற காரணங்களால் பல் கூச்சம் ஏற்படுகிறது.

பல் கூச்சம் அதிகரிக்க காரணம்:
எப்பொழுதும் மிகக் குளிர்ச்சியான உணவு உண்ணும்போதெல்லாம் பல் கூச்சம் அதிகரிக்கும்.
மிக சூடான உணவு அல்லது பானம் அருந்தும் போதும், இனிப்பு வகைகள் சாப்பிடும் போதும், பல்லுடன் பல் சேரும்போதும் பல் கூச்சம் அதிகரிக்கும்.

பல் கூச்சம் வராமல் தடுப்பது எப்படி?
தினமும் இருமுறை பல் துலக்க வேண்டும்.
எதை உண்டப்பிறகு வாய் கொப்பளிக்க வேண்டும்.
மீடியம் பிரஷ் உபயோகித்து, சரியா முறையில் பல்துலக்க வேண்டும்.
புளோரைடு உள்ள பேஸ்ட்களையும், மவுத் வாஷ் உபயோகிப்பதன் மூலம் பல் கூச்சம் வராமல் தடுக்கலாம்.

பல் எடுத்தல்:
எந்த நிலையில் பல் எடுக்க வேண்டும் என்பதில் எச்சரிக்கை வேண்டும். மிக மோசமாக ஆடும் பற்கள், பற்சொத்தையினால் பாதிப்படைந்து வேர் சிகிச்சை செய்து காப்பாற்ற முடியாத பற்கள், உடைந்த பற்கள், வேர் துண்டுகள், விழாத பால் பற்கள், அதிகபடியாக வளர்ந்த பற்கள், கோணலாக வளர்ந்து வெளியில் வரமுடியாமல் மாட்டிக்கொண்டிருக்கும் ஞானப்பற்கள், சொத்தை பற்கள் என இப்படி பற்களை எடுக்கலாம்.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் பல் எடுக்கலாம். ஆனால், பல் எடுக்கும் போது அவரின் சர்க்கரை அளவு நிலையாக இருப்பின் மாத்திரை அல்லது இன்சுலின் போட்டு சர்க்கரை அளவு குறைத்தப் பின்னரே பல் எடுக்க வேண்டும்.

இதயநோய் உள்ளவர்களுக்கு:
இதயக்கோளாறு உள்ளவர்கள், செயற்கை வால்வு பொருத்தப்பட்டவர்கள் அல்லது இன்பெக்டிவ் என்டோகார்டிடிஸ் உள்ளவர்கள், பிறப்பு முதலே இதயக் கோளாறு உள்ளவர்கள் பொது மருத்துவரின் ஆலோசனைப்படி தான் பல் எடுக்க வேண்டும்.

கர்ப்பிணி பெண்களுக்கு:
கர்ப்பிணிப் பெண்களுக்கு பல் வலி வந்தால் அந்த நிலையில் பல் எடுக்கலாம் என்பதுபற்றி தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். கர்ப்பிணிப் பெண்கள் முதல் மூன்று மாதம் மற்றும் கடைசி மூன்று மாதங்களில் எந்தவிதமான பல் மருத்துவமும் செய்துக்கொள்வது நல்லதல்ல. 4,5 மற்றும் 6வது மாதங்களில் மிகவும் வலி தராத பல் சுத்தம் செய்தங், பல் அடைத்தல் போன்ற சிகிச்சை செய்துகொள்ளலாம். முடிந்த வரை பல் எடுக்காமல் வேர் சிகிச்சை மூலம் பல்லை பாதுகாத்துக் கொள்ளுதலே நல்லது.

பல் வலி:
பல் எடுத்தப்பிறகு பல் எடுத்த இடத்தில் வலி இருக்கும். இவ்வகையான பல் வலி இருப்பதற்கான காரணங்கள் சில:
பல் எடுக்கப்படும்போது விடப்படும் வேர் துண்டுகள், எலும்பு துருத்திக்கொண்டிருத்தல், பல் எடுத்த நிலையில் புகைப்பிடித்தல், புகையிலை மெல்லுதல், டிரை சாக்கெட் எனப்படும் நிலை உருவாகுதல், மருத்துவர் சொன்ன அறிவுரைகளை பின்பற்றாமல் இருத்தல் போன்ற காரணங்களால் பல்வலி இருக்கும்.

ஞானப்பல் தொந்தரவு:
பொதுவாக 18 வயதுக்குப் பிறகு ஞானப்பல் முளைத்து வெளியே வரும். மேல் வரிசையில் கடைசியிலும், கீழ்த்தாடை பல் வரிசையில் கடைசியிலும் தலா இரண்டு பற்கள் முளைக்கும். இந்தப் பல் முழுமையாக, சரியான கோணத்தில் வந்துவிட்டால் பிரச்னையில்லை. அந்தப்பல்லை எடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், கோணலாக முளைத்து, எலும்புக்கும் மாட்டிக் கொண்டிருந்தால், சுற்றியுள்ள ஈறுகளில் ரணமாகி அல்லது முன் பற்களில் சொத்தை ஏற்படுத்துதல் போன்ற விளைவுகள் இருந்தால் சிறிய அறுவை சிகிச்சை மூலம் அந்தப் பல்லை அகற்றிவிட வேண்டும்.

பல் எடுத்தப்பின் என்ன செய்ய வேண்டும்?
பல் எடுத்த இடத்தில் வைக்கப்பட்ட பஞ்சை அரை மணிநேரம் கடித்து வைத்துக்கொள்ள வேண்டும். அரை மணிநேரம் கழித்து பஞ்சை எடுத்துவிட்டு ஐஸ்கிரீம் சாப்பிடலாம். அடுத்த நாள் பல் துலக்கும் வரை வாய் கொப்பளிக்கக்கூடாது. இரண்டு தினங்களுக்கு சூடாக சாப்பிடக்கூடாது. மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தொகுப்பு: தேவராஜன்


பாப்பா முதல் பாட்டிவரை பல் பாதுகாப்பு
ஈறுகளும் செயற்கை பல்லும் 6 (2.4.2011)


ஈறுகளில் ரத்தம் வடிதல்:
சிலர் பல் துலக்கும்பொழுது ஈறுகளில் இருந்து ரத்தம் வடிவதுண்டு. இதற்குக்காரணம் பற்களில் பற்காறை படிவதால் அதனைச்சுற்றியுள்ள ஈறுகள் வீங்கிய நிலையிலும், மிருதுவானதாகவும் எளிதில் ரத்தக்கசிவு ஏற்படக்கூடியதாக இருக்கும். அப்படி உள்ள ஈறுகள் மீது பிரஷ் படும்போது ஈறிகளில் இருந்து ரத்தம் கசியும். இதைத் தடுப்பதற்கு நாள் ஒன்றுக்கு இருமுறை பல்துலக்குதல் அவசியம். ஆண்டுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் ஸ்கேலிங் செய்து கொள்ளுதல் நல்லது.

வாய் துர்நாற்றம்:
பேசும் பொழுதோ, சாதாரணமாக வாயில் இருந்து துர்நாற்றம் வருவதுண்டு. இதற்கு தற்காலிகமாக மவுத் வாஷ் செய்தல், வாசனைப் பொருட்களை வாயில் மெல்லுதல் இவைகளால் நிவர்த்தியாகும். இருப்பினும், அடிக்கடி மவுத் வாஷ் செய்வது சரியான தீர்வல்ல. துர்நாற்றத்திற்கு காரணம் என்னவென்று கண்டறிய வேண்டும்.
பொதுவாக பற்காறை படிதல், நாக்கின் மேற்புறம் மாவு போன்று படிவம் படிதல், ஈறில் ரத்தம் வடிதல், பற்களுக்கிடையே உணவுப் பொருட்கள் சிக்கிக்கொண்டிருத்தல், பல் ஈறுநோய் இருத்தல், தொண்டை மூக்கு தொடர்பான பிரச்னைகள், குடல் நோய்கள், சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறுகள், ஈரல் தொடர்பான பிரச்னைகள், மது அருந்துதல், புகைபிடித்தல் இவைகளினாலும் வாய் துர்நாற்றம் ஏற்படுவதுண்டு. பொது மருத்துவர் மற்றும் பல் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை பெறுவது நல்லது.
பல் கறை:
சிலருக்கு பல் வெள்ளை நிறம் மங்கி செம்பழுப்ப மற்றும் சாம்பல் நிறத்தில் இருப்பதுண்டு. இது பல்கறை எனப்படும். இதற்குக்காரணமாக சொல்லப்படுபவை: சரியான பல் துலக்கும் முறையை பின்பற்றாமை, மிக மிருதுவான பல்துலக்கி பயன்படுத்துதல், புகைபிடித்தல், வெற்றிலை பாக்கு போடுதல், செயற்கை வண்ணங்கள் கொண்ட <உணவை அதிகம் உண்டுவருதல், மவுத்வாஷ் உபயோகித்தல், உபயோகிக்கும் தண்ணீர் ப்ளூரைட் மற்றும் அயர்ன் சத்து அதிகமாக இருத்தல், ரெட் வைன் அருந்துதல். இவைகளை நீக்கினால் பல் கறை நீங்கும்.
கறைபடிந்த பற்களுக்கு வெண்மை நிறம் ஏற்பட, பற்களை சுத்தம் செய்தல், சுத்தம் செய்தப்பின் பிளீச்சிங் எனப்படும் பற்களை வெண்மைப்படுத்துதல் முறையை பின்பற்றுதல், பிளீசிங் செய்தப்பிறகு அதனால் ஏற்பட்ட வெண்மை நிறத்தை தக்க வைத்துக்கொள்ள மருத்துவர் ஆலோசனைப்படி பற்பசைகளை உபயோகிக்க வேண்டும்.
குறிப்பு: பற்களை அடிக்கடி வெண்மை படுத்துவதற்கு செய்யப்படும் ப்ளீச்சிங் செய்வதால் பல் கூச்சம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ப்ளீச்சிங் செய்து கொண்டால் போதுமானது.
பல் இடை வெளி:
ஏற்கெனவே அழகாக, வரிசையாக, நெருக்கமாக பல் அமைப்பு கொண்டவர்ளுக்கு நாளாக நாளாக பற்களுக்கு இடையே புதிதாக இடைவெளி ஏற்பட்டு பல் அழகை கெடுத்துவிடும். இதற்கு காரணமாக அமைவது பல் ஈறுநோய். இந்த நோய் காரணமாக பற்களை சுற்றியுள்ள எலும்பு அதன் உறுதியை இழப்பதனால் மற்றும் துõங்கும் போது வாய்வழியே சுவாசிப்பதாலும், மேல் கீழ் உதடுகள் முழுமையாக மூடாதிருத்தல் போன்ற காரணங்கள் இந்தப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இதற்கு பல் ஈறுநோய் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். துõங்கும் போது வாயால் சுவாசிக்கும் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.
அதிகபடியான ஈறுவளர்ச்சி:
சிலருக்கு அதிகப்படியான ஈறுவளர்ச்சி ஏற்பட்டு பல் முன் துருத்திக்கொண்டு இருக்கும். இப்படி ஏற்படக்காரணம் வலிப்பு நோய்க்குத் தரப்படும் மருந்துகள், ரத்தக்கொதிப்பு நோய்க்குத் தரப்படும் மருந்துகள், மகப்பேறு காலத்தின்பொழுது, சிலருக்கு மாதவிடாயின் பொழுது ஈறுவளர்ச்சி நோய் அதிகப்படியாக காணப்படும்.
ஈறுகளில் சீழ்வடிதல்:
சர்க்கரை நோய், பற்சொத்தை, ஈறுநோய், ஞானப்பல் பிரச்னைகள், மீன் முள் ஈறுகளில் குத்தி சீழ்கட்டி உருவாகும். அந்தக்கட்டி உடையும்போது சீழ்வடியும். இதற்கு உரிய சிக்கிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பல் சுத்தம் செய்தல்,பல் ஈறு சுத்தம் செய்தல், பல் ஈறு அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். நவீன சிகிச்சை முறைகளான ஈறுகளில் ஆன்டிபயாடிக் செலுத்துதல், லேசர் சிகிச்சை முறையில் செயற்கை எலும்பு வைத்தல், இழந்த ஈறுகளை மீண்டும் வளர வைத்தல் ஆகியனவாகும்.
வாய் எரிச்சல்:
வாய்ப்புண், உமிழ்நீர் குறைவாக சுரப்பதனால் வாய் உலர்ந்து போதல், சரும நோய்களால் வாயில் ஏற்படும் மாற்றங்கள், சர்ககரை நோயாளிகளுக்கு மற்றும் புற்று நோய் உள்ளவர்களுக்கு வாய் எரிச்சல் ஏற்படும்.
வாய்புற்று:
பற்களினாலும் வாய் புற்று ஏற்படவாய்ப்புண்டு. அதாவது செயற்கை பற்களால் ஏற்படும் நாள்பட்ட புண்கள், பரம்பரை வாயிலாக வரும் புற்றுநோய்கள், ஜீன்கள் தொடர்புடைய பிரச்னைகள், புகையிலை மெல்லுதல், வெற்றிலை பாக்கு உபயோகிக்தல் இவைகளினாலும் வாயில் புற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.


பாப்பா முதல் பாட்டிவரை பல் பாதுகாப்பு

செயற்கை பல் பிரச்னைகள் 7 (9.4.2011)


செயற்கை வேர் பொருத்துதல்:
பல் இழந்த இடத்தில் செயற்கையாக பல் பொருத்த செயற்கை வேர் பொருத்துதல் சிகிச்சை செய்யப்படுகிறது.
இம்பிளான்ட் என்பது டைட்டானியம் உலோகத்தினால் ஆன ஒரு செயற்கை வேர். இதனை ஒரு சிறு அறுவை சிகிச்சை மூலம் வலியில்லாமல் பல் இழந்தப்பகுதியில் பொருத்தி, அதன் மீது செராமிக் பல் பொருத்தினால் நிஜ பல் இருந்த தோற்றத்தைத் தரும்.
வயதானவர்களுக்கு பல் பொருத்துதல்:
முதுமை வந்தாலே உடல் உறுப்புகள் பல கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழக்கவோ திறன் குறையவோ நேரிடும். இது இயற்கை. பொதுவாக முதுமையை நெருங்கினால் வாயில் <உள்ள பற்கள் சில வலுவிழந்துவிடும். அல்லது பல் கொட்டிவிடும்.
இதனால் வயதானவர்கள் கடைவாய் பற்கள் இல்லாமல் உணவுப் பொருட்களை கடித்து, மென்று தின்ன முடியாமல் இருப்பர். எதையும் சாப்பிட சிரமப்படுவர். இப்படி இருப்பவர்கள் எம்முறையில் செயற்கை பல் கட்டிலாம் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். வயதானவர்கள் பல் இழந்த நிலையில் உள்ளர்கள் இழந்தப் பற்களுக்கு மாற்றாக செயற்கை பல் கட்டிக்கொள்ளலாம். வாயில் உள்ள வலுவிழந்த பற்களை முற்றிலுமாக எடுத்துவிட்டு, முழு பல் செட் பொருத்திக்கொள்ளலாம். இளம் வயது என்றால் இழந்த பல்லை மட்டும் அகற்றிவிட்டு அந்த இடத்தில் செயற்கை பல் கட்டிக்கொள்ளலாம். செயற்கை பல் பொருத்துவதில் சில வகைகள் உள்ளன. அவை: இம்ளன்ட் முறை, ப்ரிட்ஜ் முறை, கழற்றி மாட்டும் பல் செட்.
பல் செட் கழன்றுவிழும் பிரச்னை:
முழு பல் செட் அணிந்தவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளில் ஒன்று பல் செட் தானாகவே கழன்றுவிழும். இதனை சரிசெய்ய நிலையாக பொருத்துவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. இம்ளான்ட் எனப்படும் செயற்கை வேரைத் தேவையான எண்ணிக்கையில் இரண்டோ அல்லது நான்கோ மேல் தாடையிலும், கீழ்த்தாடையிலும் பொருத்தி அதனுடன் பல் செட்டை இணைத்துவிடுவதன் மூலம் பல் செட் அடிக்கடி கழன்று விடாமல் செய்ய முடியும்.
எடுத்துப் போடும் பல்/ நிலையாக பொருத்தும் பல்:
இழந்தப் பற்களுக்கு மாற்றாக பொருத்தப்படுவது செயற்கை பல். இந்த செயற்கை பல் கழற்றி மாட்டும் முறையிலும், நிலையாக பொருத்தும் முறையிலும் பொருத்தப்படுகிறது. இந்த இரு முறைகளில் எது சிறந்தது என்றால், நிலையாக பொருத்தும் முறைதான் உகந்தது. இம்ளன்ட் அல்லது பிரிட்ஜ் எனப்படும் முறையில் நிலையாக பல் பொருத்தலாம். எடுத்துப் போடப்படும் பல் செட்டில் சாப்பிடும் பொழுதும், பேசும் பொழுதும் அசவுகரியங்கள் ஏற்படும். மேலும் பல் செட்டை கழற்றி கழற்றி மாட்டுவதால் பக்கத்து பற்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.
முழுபல் செட் அணிந்தவர்கள் கவனிக்க வேண்டியவை:
முழுபல் செட் அணிந்தவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் சில உண்டு. ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்பும் பல் செட்டைக் கழற்றி வாய் கொப்பளித்தல் அவசியம். இரவில் பல் செட்டை கண்டிப்பாக கழற்றிவிட வேண்டும். அதனை தண்ணீரில் மூழ்கி இருக்குமாறு ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும். காலையில் பல் செட்டை பல் சுத்தம் செய்தப்பின்னரே மீண்டும் வாயில் பொருத்திக்கொள்ளவேண்டும். அவ்வப்போது பல் மருத்துவரை அணுகி, பல் செட் லுõசாக உள்ளதா, உடையாமல் இருக்கிறதா என்பதை கண்டறிந்து மருத்துவர் பரிந்துரைபடி பல் செட்டை சரிசெய்து கொள்ள வேண்டும்.
பற்களை சீராக்க கம்பி கட்டுதல்:
சிலருக்கு பற்கள் முன்பின், துருத்தலாக, எத்துபல்லாக இருக்கும். இதனால் தோற்றத்தில் அழகு குறையும். இதனை சரிசெய்ய பற்களை சீராக்க பற்களுக்கு கம்பி கட்டப்படுகிறது.
பற்களை சீராக்க கம்பி கட்டுதல் எந்த வயதிலும் மேற்கொள்ளலாம். இருப்பினும், ஆண்களுக்கு 13 முதல் 17 வயதுக்குள்ளும், பெண்களுக்கு 12 முதல் 16 வயதுக்குள் இந்த வைத்திய முறை செய்து கொள்ளவது நல்ல பலனைத் தரும். ஆர்த்தோ அப்ளையன்ஸ், வெனீர் மற்றும் கிரவுன் அண்ட் பிரிட்ஜ் ஆகிய முறைகளில் சிகிச்சை எடுத்துகொள்ளலாம்.
வாய்ப்புண்:
சிலருக்கு வாய்ப்புண் அடிக்கடி ஏற்படும். வாய் உலர்ந்துபோதல், விட்டமின் குறைபாடுகள், பற்கள் சீரான வரிசையில் இல்லாதிருத்தல், புகைபிடித்தல், வாயில் உடைந்த, கூரான பற்கள் இருத்தல், மன அழுத்தம் மற்றும் சில வைரஸ் நோய்களினாலும் வாய்ப்புண் அடிக்கடி ஏற்படலாம்.
வாய் எரிச்சல்:
வாயில் சற்று காரமான உணவு உண்ணும் போது கன்னத்தின் உட்பகுதியில் எரிச்சல் ஏற்படும். இதற்கு காரணமாக இருப்பவை: சர்க்கரை நோய், அல்சர் எனப்படும் வாய்ப்புண், ண்தஞட்தடூணிதண் ஞூடிஞணூணிணூடிணூ, டூடிஞிடஞுண ணீடூச்ணதண், டூஞுதஞிடுணிணீடூச்டுடிச் போன்ற நோய்களாலும் வாயில் எரிச்சல் ஏற்படும்
இதை தவிர, நீண்ட நாட்களாக பிடிப்பதால் வாயில் துர்நாற்றம், பற்களில் கறை படிதல், வாய் உலர்ந்து போதல், மற்றும் வாய்புற்று நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இதனாலும் வாய் எரிச்சல் ஏற்படலாம்.
தொகுப்பு: தேவராஜன்


பாப்பா முதல் பாட்டி வரை பல் பாதுகாப்பு

எப்படி பல் துலக்குவது? 8


பல் துலக்குதல் என்பது தினசரி வாழ்வில் அத்தியாவசியமான கடமை. காலைக்கடன்களில் பல்துலக்குதலும் ஒன்றாகவே எல்லோராலும் கடைபிடிக்கப்படுகிறது.

பல்துலக்குவதால் வாயின் சுகாதாரத்தை பாதுகாப்பது மட்டுமல்லாமல் பற் சிதைவையும், ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் மற்றும் வாய் துர்நாற்றத்தையும் தவிர்க்கலாம்.
நம் வாயிலும் பற்களிலும் உள்ள அழுக்கை நீக்குவதற்கு பல் துலக்க வேண்டும். பல்லில் சேரும் அழுக்கு என்பது பல் ஈறுகளில் நீக்கப்படாத உணவுத்துகள்களும், கிருமி கூட்டங்களும் கலந்த கலவையாகும். பல் துலக்கிய இரண்டு அல்லது மூன்று மணிக்குள்ளே இந்த அழுக்கு பல் ஈறுகளில் படியத் துவங்கும். இந்த அழுக்கானது பல்லையும் பல் ஈறுகளையும் பாதிக்கும். சிலசமயம் பற்களை இழக்கவும் செய்யும்.
அதனால், பற்களை இருமுறை துலக்குதுல், உணவு உண்டப்பின் ஒவ்வொரு முறையும் நன்றாக வாய் கொப்பளித்தல் அவசியம். இதற்கு தண்ணீரோ, திரவமோ பயன்படுத்தலாம்.

பல் துலக்கும் முறை:
பல்துலக்குதலில் எது சரியான முறை, அதன் நுட்பம் அறிந்து பல் துலக்கினால் நல்ல பலனை அடையளாம்.
பல்துலக்குவதற்கு ஒரே ஒரு முறைதான் உள்ளது என்ற நிலையில்லை. ஒவ்வொருவரின் வாய், தாடையில் பற்கள் அமைந்துள்ள தன்மையைப் பொருத்து மாறுபடும்.
பல் துலக்கும் பிரஷ்ஷை 45 டிகிரி கோணத்தில் ஈறுகளில் மேல் சாய்த்து பிடித்து, ஒவ்வொரு முறையும் மூன்று பற்களின் மேல் முன்னும், பின்னும் நகர்த்தி சிறிது அதிர்வுடன் கூடிய சுழற்றும் முறையிலும் தேய்க்க வேண்டும்.
இம் முறையை கடைவாய் பற்களில் துவக்கி, முன்பற்கள் வரை மூன்று மூன்று பற்களாக முன்னேற வேண்டும். மேல் தாடையின் வலது, இடது, உள், வெளி பக்கங்களிலும், அதே போல் கீழ்தாடையிலும் வலது, இடது, உள், வெளி பக்கங்களில் தேய்க்க வேண்டும்.
இவ்வாறு 15 முதல் 20 முறைகள் ஒவ்வொர் இடத்திலும் மேற்கொள்ள வேண்டும்.
முன் பற்களுக்கு மட்டும் பிரஷ்ஷை செங்குத்தாக பிடித்து 45 டிகிரி கோணத்தில் மேலும் கீழும், நகர்த்தி உள்ளும் வெளியும் தேய்த்து விட வேண்டும்.
கடைவாய் பற்களில் பக்கவாட்டில் மேலும், கீழும் மற்றும் மேல் புறத்தில் சமதளமாக சீராக தேய்க்க வேண்டும்.
சிறியவர்கள் பிரஷ்ஷினால் சுழற்சி முறையில் தேய்க்க வேண்டும்.

எவ்வகை பிரஷ் பயன்படுத்தலாம்?
மிருதுவான, கூர்முனை இல்லாத, வட்ட வழுவழுப்பான முனைகள் கொண்ட நைலான் குச்சுகளுடன் கூடிய பிரஷ் பல் துலக்க ஏற்றது. கூர்முனை குச்சுகளைத் தவிர்க்க வேண்டும். கடினமான, விரைப்பான பிரஷ்களை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவை பல்லின் எனாமலையும் இறுகளையும் சேதப்படுத்திவிடும்.
பல் துலக்குவதற்கு பற்சிதைவை தடுக்கும் தன்மை கொண்ட புளூரைடு கொண்ட பற்பசைகளை உபயோகித்தல் நல்லது.
மூன்று மாதத்துக்கு ஒரு முறை பிரஷ் மாற்ற வேண்டும்.
ஏதாவது தொற்று நோய் பாதிக்கப்பட்டால் அதன்பின் அந்த பிரஷ் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.
பற்பசை:
பற்பசைகளை பயன்படுத்தும் போது டெண்டல் அசோசியேஷன் சான்று வழங்கப்பட்டிருக்கிறதா என்பதையும், அதில் புளோரைடு இருக்கிறதா என்பதையும் பார்த்து வாங்க வேண்டும்,
பல்லில் <உள்ள பாக்டீரியாக்களை நீக்கும் சக்தி பற்பசைக்கு இருப்பதால் பற்பசை படுத்துவது நல்லது.

பல் ஆரோக்கிய குறிப்புகள்:
அதிக நேரம் பல்துலக்க தேவையில்லை. 3 நிமிடங்கள் துலக்கினால் போதுமானது.
நிறைய தண்ணீர் குடிப்பது பற்கள் சுத்தமாக வைத்திருக்க உதவும்.
கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டால் பல் ஆரோக்கியம் பெருகும்.
குறைந்தளவு சர்க்கரையை பயன்படுத்துவது பற்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது.
குழந்தைகள் பல்துலக்கும் போது கண்ணாடி பார்த்து துலக்க சொல்லவும். அது அவர்கள் ஈஸியாக பல் துலக்கு உதவும்.
பற்களை துலக்கியப்பின் ஈறுகளை சுட்டு விரலால் மெதுவாக மூன்று நிமிடம் மசாஜ் பண்ணுவது நல்லது. கடைவாய் பற்களில் கடிக்கும் பகுதிகளில் பிரஷ்ஷை நன்றாக அழுத்திப்பிடித்தி முன்னும் பின்னும் சமமாக தேய்க்க வேண்டும். நாக்கையும் டங் கிளீனரால் சுத்தப்படுத்த வேண்டும்.
தொகுப்பு: தேவராஜன்


பாப்பா முதல் பாட்டிவரை பல் பாதுகாப்பு

நோய் உணர்த்தும் கண்ணாடி பல் 9


எல்லோருக்கும் எல்லா பல்லும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அது எல்லோருக்கும் இருக்கும் என்று சொல்ல முடியாது. வாயில் உள்ளமொத்தம் 32 பற்களில் பொதுவாக பலருக்கு 25லிருந்து 30க்குள்தான் இருக்கும். இருப்பதையாவது நாம் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதே சிறப்பு!

உடல் உறுப்புகளில் பல் முக்கியமான ஒன்று. இது
முகத்திற்கு அழகு சேர்க்கவும், அழகான, திருத்தமான <உச்சரிப்புக்கும், சிறந்த சிரிப்புக்கும், உணவை நன்றாக மென்று உண்பதற்கும் பற்கள்பயன்படுகிறது.

பற்களில் வெட்டுபற்கள், சிங்கப்பல், முதல் முன்கடைவாய்ப்பல், இரண்டாம் முன் கடைவாய்ப்பல், முதல்கடைவாய்ப்பல், இரண்டாம் கடைவாய்ப்பல், மூன்றாம் கடைவாய்ப்பல் என செயல்பாடு மற்றும் அமைப்பு <வடிவத்தைக் கொண்டு இவ்வாறு அழைக்கப்படுகிறது.

பல்நோய்கள் வரக்காரணம்:
ஆரோக்கியமற்ற உணவுபழக்கங்கள்,
அதிகமான இனிப்பு உண்பது,
சுத்தமில்லாத உணவு வகைள், தவறான வேலைகளுக்கு பற்களை பயன்படுத்துவது (பல்லால் பாட்டில் திறப்பது உட்பட),
விபத்தால் பல் முன்பற்கள் உடைந்துபோவது,
உடலில் வரும் மற்ற நோய்கள் மற்றும் நிலைகளினால் பல்லில் ஏற்படும் பாதிப்பு.

ஆரம்ப நிலை சிகிச்சைகள்:
சொத்தை வருவதற்கு முன்பாக பற்களை சுத்தம் செய்து, சொத்தை வராமல் அடைத்தல்.

நோய்முற்றிய நிலையில் செய்ய வேண்டிய சிகிச்சைகள்:

பல்லை எடுத்தல், செயற்கை பல்லை அந்த இடத்தில் பொருத்துதல், வேர் சிகிச்சை, வேர் அறுவை சிகிச்சை, ஈறுஅறுவை சிகிச்சை.

நோய் உணர்த்தும் கண்ணாடி பல்:
ஒருவருடைய பற்களின் தன்மையை வைத்து அவரது ஆரோக்கியத்தைச் சொல்லிவிடமுடியும்.
நகங்கள்,பற்கள் உடலின் உள்பகுதியை படம்பிடித்துக்காட்டும் கண்ணாடி போன்றவை. உடலின் உள்ளே என்ன மாற்றங்கள் நடக்கிறது என்பதை வெளியில் தெரியும் பற்களை வைத்தே கண்டுபிடித்து விடலாம்.
உதாரணமாக ஒருவருக்கு ஈறுகளில் பாதிப்பு இருந்தால், அவருக்கு இதயநோய் வரும் ஆபத்து அதிகம் என்று கணிக்கலாம். பற்களில் பாக்டீரியா நோய்த் தொற்று இருந்தால், இதயத்தின் உட்சுவர்களில் அழற்சி ஏற்படலாம் என்று நம்பலாம்.
பற்களிலும், ஈறுகளிலும் தேங்கியுள்ள பாக்டீரியாக்கள் ஒரு கட்டத்தில் ரத்தத்தில் கலந்துவிடும். இதன்காரணமாக தமணிகளில் கொலஸ்ட்ரால் அதிக அளவில் சேரும். அதனால் ஆந்ரோஸ்க்ளீரோஸிஸ் என்ற அசாதாரணநிலை ஏற்படும். இதன் காரணமாக மாரடைப்பு உண்டாகும்.
பற்சிதைவு நோய் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் புரோட்டீனின் (சிபிஆர்) அளவு கூடுதலாக இருக்கும். இதனால் இதயத்தில் அழற்சி ஏற்படும்.
சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு பற்களிலும் பாதிப்பு உண்டாகும். இவர்களுக்கு அடிக்கடி இன்பெக்ஷன் ஏற்படும்.
ஈறுகளில் உண்டாகும் பாதிப்புக்கு உடனடியாக சிகிச்சை எடுப்பது அவசியம். இல்லை என்றால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவது கடினமாகிவிடும்.
சிலருக்கு வாய் நாற்றமெடுக்கும். என்னதான் மவுத் பிரெஷ்னர்கள் பயன்படுத்தினாலும் நாற்றம் நிற்காது. இதற்கு வாய்ப்பகுதியில் பாக்டீரியாக்கள் படிந்திருப்து தான் காரணம். இதனை கட்டுப்படுத்த உடனே சிக்கிச்சை எடுக்க வேண்டியது அவசியம். கண்டுகொள்ளாமல் விட்டால், நுரையீரல் பாதிப்படையும் ஆபத்து உண்டு.

இதர நோயினால் ஏற்படும் பல் நோய்:
புகைப்பது, புகையிலைப்போடுவது போன்ற பழக்கங்களாலும் பற்களில் ஏற்படும் நோய்களுக்கு முக்கிய காரணமாக உள்ளன.
ரத்தப்புற்றுநோய் அல்லது எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் ஈறுகளில் அதிக பாதிப்பு உண்டாகும். இதற்கு அவர்களிடம் ஏற்பட்டுள்ள மன அழுத்தமும் முக்கிய காரணம்.
சில நோய்களுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போது, ஈறுகளில் நோய்வரும் ஆபத்து உண்டு. குறிப்பாக, உயர் ரத்த அழுத்தத்துக்கு சிபாரிசு செய்யப்படும் கால்சியம்கானல், பிளாங்கர்ஸ், அலர்ஜிக்குரிய ஆன்டிஹிட்மின்கள், ரேடியேஷன் தெரபி போன்ற சிகிச்சைகளின் போதும் பற்களின் நோய்கள் வரும். வாய்ப்பு அதிகம். போதுமான அளவு தண்ணீர் அருந்துவதன் மூலம் இந்தப் பாதிப்பை குறைக்கலாம்.

பல் நோய் பரம்பரை நோயா?
பல் நோய் பரம்பரைபரம்பரையாக வரும் வாய்ப்பு குறைவுதான். பெரும்பாலும் சந்தோஷமின்றி இருந்தாலும், பற்களை பராமரிக்காமல் இருப்பதுதான் நோய் ஏற்பட அடிப்படைக்காரணம். இவற்றை தவிர்ப்பதன் மூலம் இதயபாதிப்பை தடுக்க முடியும்.
முற்றும்.
தேவராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக