புதன், 25 ஜூன், 2014

புராண விமானங்களின் மர்மங்கள்! -தேவராஜன்


புராண விமானங்களின் மர்மங்கள்! -தேவராஜன். ************************************************************************************************************************************************************************ பழங்கால இந்தியாவில் விமானங்களை உருவாக்குவதற்கான அறிவு இருந்திருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். புறநானூறு,மணிமேகலை, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், பெருங்கதை போன்றவற்றில் வானவூர்தி பற்றிய தகவல் காணப்படுகிறது. புறநானூற்றில் ‘வலவன் ஏவா வான ஊர்தி ’ என்ற வரி, விமானத்தை ஓட்டுபவர் இல்லா வானவூர்தியைக் கொண்டிருந்தான் என்று கூறுகின்றது. சீவகசிந்தாமணியில் வரும் மயில்பொறி வலஞ்சுழி மற்றும் இடஞ்சுழியாக திருகுவதன் மூலம் அம்மயிற் பொறி வானமேகங்களிடையே பறக்கவோ தரையில் இறக்க முடியும் என்ற செய்தி இருக்கிறது. இராமாயணத்தில் இராவணன் புஷ்பக விமானத்தில் பறந்தான். அதை மயன் என்பவன் உருவாக்கினான். குபேரன் மன்னனுக்கே இப்புஷ்பக விமானம் சொந்தமானது. இதை இராவணன் கைப்பற்றினான் என்ற தகவல் இருக்கிறது. இது போல புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் விமானங்கள் பற்றிய தகவல்களை விரிவாக சொல்லும் ஒரு புத்தகம் உண்டு. அதன் பெயöர் வைமானிக சாஸ்த்ரம். இது மகர்ஷி பாரத்வாஜரால் செய்யப்பட்டது. யந்த்ர சர்வஸ்வம் என்ற மூல புத்தகத்தின் ஒரு பகுதியே இந்த வைமானிக சாஸ்த்ரம். இந்த புத்தகம், யந்திரங்கள் என்ற கருவிகள் பற்றிச் சொல்வதாகச் சொல்லப்படுகிறது. பழங்காலத்தில் மனிதனால் இயக்கப்படும் கருவிகளே யந்திரங்கள் என்று அழைக்கப்பட்டு வந்தன. அப்படியான யந்திரங்களைப் பற்றிச் சொல்கையில், விமானங்களைப் பற்றியும் இப்புத்தகம் சொல்வதாகக் கருதப்படுகிறது. வைமானிக சாஸ்த்ரம் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் விமானம் என்ற வார்த்தைக்குப் பொருள் சொல்லப்படுகிறது. “தரைமேலும் கடலின்மேலும் தனது சொந்த சக்தியினால் பறவையைப்போல் காற்றில் சீறிப்பாயும் ஒன்றே விமானம் எனப்படுகிறது”. “விமான சாஸ்திரத்தை நன்கு தெரிந்தவர்கள், காற்றில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்லும் ஒரு பொருளையே விமானம் என்று அழைக்கிறார்கள்” “காற்றில் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கும், ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்கும், ஒரு உலகத்தில் இருந்து மற்றொரு உலகத்துக்கும் செல்லும் திறன் படைத்த ஒன்றையே விமானம் என்று அழைக்கிறார்கள்” என்று மூன்று விளக்கங்களால் விமானம் என்ற பொருளை விளக்குகிறார். விமானத்தை செலுத்தக்கூடிய நபர் எப்படி இருக்கவேண்டும், எந்த உடை அணிந்திருக்கவேண்டும், விமானத்தைப் பற்றி எந்தவிதமான தகவல்கள் அவனுக்குத் தெரிந்திருக்கவேண்டும் ஆகிய விஷயங்களை விளக்குகிறது இப்புத்தகம். ஒரு விமானி உண்ணக்கூடிய உணவு, எந்தெந்த நேரங்களில் விமானி உண்ணவேண்டும் என்பதும் சொல்லப்படுகிறது. விமானத்தின் அங்கமாக இருக்கும் பல உலோக வகைகளையும், அந்த உலோகங்களும் கனிமங்களும் பூமியில் எங்கு கிடைக்கும் என்றும் விளக்கம் தருகிறது. மூன்றாவது அத்தியாயத்தில், ஒரு விமானத்தில் எங்கெல்லாம் கண்ணாடிகள் இருக்கவேண்டும் என்பது சொல்லப்படுகிறது. நான்காவது அத்தியாயத்தில், விமானத்திற்கு எப்படிப் பறப்பதற்கான சக்தி கிடைக்கிறது என்பது சொல்லப்படுகிறது. அச்சக்திகளை உருவாக்கத் தேவையான கருவிகளும் விவரிக்கப்படுகின்றன. ஐந்தாவது அத்தியாயத்தில் இந்தக் கருவிகளை இயக்கும் சூத்திரங்கள் உள்ளன. ஆறாவது அத்தியாயத்தில், பலவகையான விமானங்களைப் பற்றி இருக்கிறது. இப்படியாக அந்தப் புத்தகம் முடிகிறது. இந்தப் புத்தகம் சொல்லும் விமானம் பற்றிய செய்திகள் எல்லாம் உண்மையா பொய்யா என்பது மர்மங்களாகவே இருக்கிறது. பாக்ஸ் செய்தி சக்தி யுகம் : வானத்திலிருந்தே எரிபொருளை சேமித்துக் கொண்டு பல நாட்கள் பறந்து கொண்டே இருக்கும் திறன் படைத்த விமானம். பூதவாஹா : முன்னும் பின்னும் சமவேகத்தில் பறக்கும் விமானம். தூமாயனா : எரிக்கப்பட்ட எரிபொருளையே தாமே புதிய எரிபொருளாகக் கொண்டு இயக்கக் கூடிய விமானம். கிதோகமா : மரங்களை எரித்துப் பெரும் எண்ணையில் இயங்கக் கூடிய விமானம். ஹம் சுவாகா : சூரிய சக்தியின் மூலம் இயங்கும் விமானம். தாரமுஹா : எரிகற்களை எரிபொருளாக்கி இயங்கக் கூடிய விமானம். மாணிவஹா : செயற்கை ரசாயன உப்புகளாலும் செல்லக்கூடிய விமானம். மாராதசாஹா : காற்றை உறிஞ்சி மின்சார சக்தியை எடுத்து இயங்கும் விமானம். மற்றும் ஷக்டிங்கர்ப்பம், விக்யுதம், துருபதம், குண்டலிகம் போன்ற விமானங்கள் இருந்ததாகவும் பரத்வாஜர் கூறியுள்ளார். *சுப்பராய சாஸ்திரி என்பவர், 1914ல் தனது நினைவில் இருந்து இந்த சமஸ்கிருத ஸ்லோகங்களைச் சொன்னதாகவும், அவற்றைப் பிரதி எடுத்து, 20 ஆண்டுகள் மொழிபெயர்க்கப்பட்டு அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து 1973ல் இப்புத்தகம் உருவாக்கப்பட்டதாக இதனைத் தொகுத்த எ.கீ ஜோஸ்யர் என்பவர் புத்தகத்தின் முன்னுரையில் எழுதியிருக்கிறார்.

திங்கள், 16 ஜூன், 2014

பாதாள ஆறு; பறக்கும் ஆறு மர்மங்கள் - தேவராஜன்


30/ பாதாள ஆறு; பறக்கும் ஆறு மர்மங்கள் - தேவராஜன் அமேசான் ஆறு தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ஒரு ஆறு. இது உலகின் இரண்டு நீளமான ஆறுகளில் ஒன்று. மற்றொன்று நைல் ஆறு. இதன் நீளம் 6400 கி.மீ. உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறு இது. அமேசான் ஆறு, உலகில் பெரியதாக இருந்தாலும், நீளத்தை பொறுத்தமட்டில் இது நைல் ஆற்றைவிட சிறிது குறைவுதான். இந்த ஆறு ஆயிரத்திற்கும் மிகுதியான துணையாறுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் 17 ஆறுகள் 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டவை. அமேசான் ஆறும் இதன் நூற்றுக்கணக்கான துணையாறுகளும் மிகவும் மெதுவாக ஓடி பின் கடலில் கலக்கின்றன. பாதாள ஆறு பிரேசில் அமேசான் ஆற்றுக்கு அடியில் அமேசான் ஆற்றைப்போலவே பாதாள பூமியில் 13 ஆயிரம் அடி ஆழத்தில் பிரமாண்டமான ஆறு ஓடுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதைக் கண்டுபிடித்தவர் ஓர் இந்திய ஆராய்ச்சியாளர்தான். வாலியா ஹம்சா என்ற இந்திய ஆராய்ச்சியாளரை கொண்ட பிரேசில் இயற்கை ஆராய்ச்சி மற்றும் தேசிய கண்காணிப்பு குழு மேற் கொண்ட ஆய்வில் இந்த பாதாள ஆறு ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 1970ம் ஆண்டு பிரேசில் பெட்ரோப்ராஸ் எண்ணை நிறுவனம் இங்கு 241 எண்ணை கிணறுகள் தோண்டியது. அந்தக் கிணறுகள் அப்போதே செயல்பாட்டில் இல்லாமல் கைவிடப்பட்டன. இந்தக் கிணறுகள் மற்றும் சீதோஷ்ண நிலை மாறுபாடு குறித்து கடந்த 40 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அமேசான் ஆற்றுக்கு அடியில் இன்னொரு ஆறு ஓடுவது தெரிந்து ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியப்பட்டனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து கருத்து: ‘ஆய்வின் நோக்கம் வேறாக இருந்தாலும், எதிர்பாராத விதமாக கிடைத்த அரிய தகவலின் அடிப்படையில் ஆய்வின் போக்கு மாறியது. அப்போது, அமேசான் ஆற்றுக்கு அடியில் 13 ஆயிரம் அடி ஆழத்தில் பிரமாண்ட ஆறு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் நீளம் 6 ஆயிரம் கிலோ மீட்டர். அதாவது பூமியின் மேல் உள்ள அமேசான் ஆறும் இதன் அளவும் ஒன்றாக உள்ளது. புதிய ஆறுக்கு ‘ஹம்சா’ என்று இந்திய ஆராய்ச்சியாளரின் பெயரே வைக்கப்பட்டுள்ளது. எண்ணைநிறுவனம் பெட்ரோப்ராஸ் தந்த வெப்பம் குறித்த தகவல்கள் அடிப்படையில் அமேசான் பகுதியில் ஆய்வு நடத்திய போது, நீரோட்டம் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் ஆய்வு தீவிரப் படுத்தப்பட்டது. இதில் ஹம்சா ஆறு குறித்து தெரிய வந்தது. இதன் நீரோட்டம் நிமிடத்துக்கு 3ஆயிரம் கன அடியாக உள்ளது. அக்ரி பகுதியில் இருந்து உற்பத்தியாகி சோலிமோயஸ், அமேசோனா, மராஜோ தீவுகள் உள்ளிட்ட பகுதிகளை கடந்து அமேசான் ஆற்றுக்கு அடியில் ஆறு ஓடுவதாக கருதப்படுகிறது. இதன் நீர் மிகக் குறைந்த உப்புத்தன்மை கொண்டதாக இருக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்த தொடர்ந்து தீவிர ஆய்வு நடைபெற்று வருகிறது.’ பறக்கும் ஆறு * தென் அமெரிக்க கண்டத்தின் மையப் பகுதியை வளப்படுத்திக் கொண்டிருக்கும் அமேசான் ஆறு பல அதிசயங்களைக் கொண்டது. உலகிலேயே இரண்டாவது நீளமான ஆறாக இருப்பதும், உலகின் மிகப் பெரிய வடிகாலாக அறியப்படுவதும் அமேசான்தான். உலகின் அனைத்து ஆறுகளில் ஓடும் நீரின் மொத்த அளவில், ஐந்து ஒரு பங்கு நீர் அமேசான் ஆற்றில் ஓடுகிறது. பல்லாயிரம் உயிரினங்கள், மர வகைகள் என உலகின் உயிர்சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி அமேசான். இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அமேசான் ஆற்றில் அதிகம் அறியப்படாத ஒரு அம்சம் உள்ளது. அதுதான் பறக்கும் ஆறு. கண்ணுக்குத் தெரியாத இந்த ஆறு அமேசான் காட்டுப் பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருக்கிறது. முற்றிலும் நீராவியால் உருவாகியுள்ளது, இந்த ஆற்றின் சிறப்பம்சம். தரையில் ஓடும் சாதாரண ஆற்றில் உள்ள நீரோட்டத்தைப் போல, இந்தப் பறக்கும் ஆற்றில் நீராவியோட்டம் இருக்கிறது. அமேசான் ஆற்று நீரை உறிஞ்சும் மரங்கள், அதை நீராவியாக வெளியேற்றுவதால் இப்படியொரு ஆறு உருவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த மரங்கள் ஒரு நாளில் மட்டும் வெளியேற்றும் நீராவியின் மொத்த எடை பல ஆயிரம் கோடி டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அர்ஜென்டினா, உருகுவே, பராகுவே, வெனிசுலா, கயானா, சூரினாம் என பல நாடுகளிலும் பரவியிருக்கிறது இந்தப் பறக்கும் மாய ஆறு. தென் அமெரிக்காவின் ஆன்டிஸ் மலைத் தொடர், இந்த பறக்கும் ஆற்றுக்கு இயற்கையே வகுத்துத் தந்த கரையாக உள்ளது. இதனால், பிரேசில் மட்டுமல்லாமல் தென் அமெரிக்காவின் பல நாடுகளிலும் பெருமளவு மழைப் பொழிவுக்கு அமேசானின் பறக்கும் ஆறே காரணமாக இருக்கிறது. அமேசான் என்ற உலகின் மிகப் பெரிய ஆற்றின் மர்மங்கள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றில் அமேசானின் பாதாள ஆறும், பறக்கும் ஆறும் உலகை திரும்பி பார்க்க வைக்கும் விநோதம் என்றால் மிகையில்லை!

சனி, 7 ஜூன், 2014

29/ கடலுக்குள் ஒரு கோட்டை - தேவராஜன்.


29/ கடலுக்குள் ஒரு கோட்டை - தேவராஜன். ******************************************************************************************************************************************************************** தரங்கம்பாடி போல கடலோர கோட்டைகள் பற்றி நமக்கு தெரியும். கடலுக்குள் ஒரு கோட்டை இருக்கிறது என்பது தெரியுமா உங்களுக்கு? அந்தக் கோட்டை 300 ஆண்டுகள் பழமையானது. அதன் பெயர் கொலாபா கோட்டை. அதைக் கட்டியவர் மராட்டிய மாவீரர் சிவாஜி மஹாராஜா. இந்தக் கோட்டையை கடல்அலை இறக்கம் உள்ள நாட்களில், அலிபாக் கடற்கரையிலிருந்து நடந்தே சென்று பார்க்கலாம். மும்பையில் 98 கி.மீ. தொலைவில் இருப்பது அலிபாக். இந்த அலிபாக் கடற்கரையை ஒட்டிதான் கொலாபா கோட்டை அமைந்துள்ளது . இந்தக் கோட்டை மாவீரர் சிவாஜியின் இறுதிக்காலத்தில் கட்டப்பட்டது. இந்தக் கோட்டைக்குச் செல்ல, மும்பை கேட் வே ஆஃப் இண்டியாவிலிருந்து படகுப்போக்குவரத்தும் உண்டு. இந்த கடல் திடீரென்று உள்வாங்கும். ரெண்டு மூணு கிலோமீட்டர்வரைக்கும் கடல் நீர் உள்ளே போயிடும். பிறகு நாலஞ்சு மணி நேரத்துக்கு அப்புறம் பழையபடி அலையோடு அலைமோதும் காட்சியை ரசிக்கலாம். கரையிலிருந்து பாக்கிறப்ப கடல் கோட்டை பக்கத்துல இருக்கிற மாதிரி இருக்கும். ஆனால், அங்க போக 20 நிமிஷத்துக்கு மேல் ஆகும். மராட்டியத்தில் மன்னர் சிவாஜியின் ஆட்சி காலத்தில் 1698 ல் முதன்மை தளபதியா இருந்த சிடோஜி குஜார் மறைவுக்குப்பின்னால், துணை தளபதியாக இருந்த கங்கோஜி அங்க்ரே என்பவர் முதன்மை தளபதியானார். கங்கோஜி கடற்படை தளபதி. கடற்படையில் அவருக்கு இருந்த திறமை மற்றும் அனுபவத்தின் காரணமாக, கொலாபாவும் மற்ற கடற்புர கோட்டைகளும் அவருடைய கண்காணிப்பில் வந்தன. இந்த கொலாபா கோட்டைக்குள்ள அவருக்குன்னு ஒரு அரண்மனையும் இருந்தது. அவரோட மனைவி பெயரால் மரியாதையா ‘நானி சாகேப் அரண்மனை’ன்னு அழைக்கப்பட்டது. அவரோட மனைவி பேர் லஷ்மிபாய். ஆனா, மக்கள் ஒரு பிரியத்தால நானின்னு கூப்பிடுவாங்களாம். இப்போது இந்தக் கோட்டை சிதிலமடைஞ்சு இருந்தாலும், வரலாற்று நினைவுகளை அது பேசற மாதிரி இருக்கிறது ஒரு ஆச்சரிய அனுபவம்தானே! இந்தக்கோட்டையில் ஒரு காலத்தில் 700 படைவீரர்கள், குதிரைகள், இன்னபிற விலங்குகள் எல்லாம் இருந்ததுண்டு. இப்போ அங்கு இருக்கிற கோயில்களுக்குப் பூஜை செய்ற பண்டிட்டுகளும், அவங்க குடும்பங்களுமா, பத்துப்பதினஞ்சு பேர் கோட்டைக்குள்ளேயே குடியிருக்காங்க அவ்வளவுதான்! கோயிலுக்கு பின்பக்கம் மஹிஷாசுரமர்த்தினி தெய்வமும் முன்புறம் பாதையின் இடது பக்கம் நானிசாகிப்பின் அரண்மனை. இதுக்கு பக்கத்தில்தான் அவரோட மகன் ரகுஜி அங்க்ரே கிபி 1816 ல் இன்னொரு அரண்மனை கட்டியிருக்கார். ஐந்து மாடி கட்டடமா இருந்தது. இப்போது முதல் நிலை வரைமட்டும் எஞ்சி இருக்கு. இந்த அரண்மனைகளுக்கு முன்புறம் குதிரைகள், சண்டை ஆடுகள், செல்லப்பறவைகள் இவையெல்லாம் தங்குறதுக்கான இடமாக இருந்திருக்கு. அரண்மனைக்கு கிழக்குப்பக்கத்தில் கிட்டங்கிகளும் இன்னபிற சின்னச்சின்ன கட்டடங்களும் இருந்திருக்கு. கோட்டையின் நடுவில் பிள்ளையார் கோயில். சித்தி புத்தியோட, வலதுபக்கம் அப்பாவும், இடதுபக்கம் மாமனும், மாமாவோட பின்னால மஹிஷாசுர மர்த்தினியும், அமர்ந்த நிலையில் பிரம்மாவும் காட்சியளிக்கிறார். இந்த கோயிலுக்கு வலதுபுறம் சிவனும் , இடதுபுறம் வாலில் மணிகட்டிய ஆஞ்சனேயரும் தனிக்கோயில்களில் இருக்காங்க. மேற்குப்பக்கத்துல ரெண்டு இடங்களில் அரைவட்ட வடிவமா பதுங்கு குழிகள் இருக்கிறது. கோட்டையின் வடக்குப்பக்கத்தில் கடலைப்பார்த்தமாதிரி ரெண்டு பீரங்கிகள் இருக்கு. இது எதிரிகளை தாக்குறதுக்கு மட்டுமல்ல, மழை மற்றும் புயல் காலங்களில் ஏதாவது கப்பல் தெரியாத்தனமா கோட்டைக்கு பக்கத்துல வந்துட்டா வெடி மூலம் எச்சரிக்கை செய்வாங்களாம். தேசியக்கொடியேத்த கொடிமரம் ஒண்ணு இருக்குது. இந்த கோட்டைக்குள் செல்ல இந்திய தொல்பொருள் துறை நுழைவுக் கட்டணம் வசூலிக்கின்றது. * பாக்ஸ் செய்தி *ஒரு காலத்தில் இந்த கொலாபா கோட்டையில் ஒரு இனிப்பு நீர் கிணறு இருந்துள்ளது *சிவாஜி மஹராஜாவின் இஷ்ட தெய்வமான பவானிக்கு , இங்கே ஒரு கோயில் இருக்கு. எந்த போருக்கு புறப்பட்டாலும் பவானியின் காலடியில் தன்னோட வாளை வெச்சு ஆசிர்வாதம் வாங்கிட்டுத்தான் புறப்படுவாராம். *வடக்குப்பார்த்த பிரதான நுழைவாயில் இரண்டு ஆர்ச்சுகளால் ஆனது. இதை மஹா தர்வாஜான்னு சொல்றாங்க. தர்வாஜான்னா வாசல், கதவு என்று பொருள். கோட்டையின் தெற்குக்கடைசியில் இருக்கும் யஷ்வந்த் அல்லது தர்யா தர்வாஜான்னு சொல்லப்படுற நுழைவாயில், கடலைப்பார்த்தவாறு அமைஞ்சிருக்கு. இது படைவீரர்கள் தற்காலிக ஓய்வுக்கான இடம். *************

ஞாயிறு, 1 ஜூன், 2014

விமானம் எம்எச் 370 மர்மங்கள்! - தேவராஜன்.


விமானம் எம்எச் 370 மர்மங்கள்! - தேவராஜன். மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற விமானம் எம் எச் 370 கடந்த மார்ச் 8ம் தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. சீனக்கடலுக்கு மேலே 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, வியட்நாம் அருகே தோ சூ தீவுக்கு 250 கி.மீ. தொலைவில் கடலில் விழுந்து நொறுங்கியதாக முதல் கட்ட தகவல் வெளியானது. இந்த விமானத்தை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் 25-க்கும் மேற்பட்ட நாடுகள் ஈடுபட்டன. களத்தில் உள்ளன. விமானத்தை தேடுவதற்காக 40க்கும் அதிகமான கப்பல்கள், 30க்கும் அதிகமான விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டும் கூட ஒரு சிறிய தடயத்தையும் கண்டறிய முடியவில்லை. எந்த முன்னேற்றமும் இல்லை. விமானம் மாயமாய் மறைந்த மர்மங்கள் குறித்து பல கோணங்களில் பல தகவல்கள் சொல்லப்பட்டு வருகின்றன. விமானம் மர்மம் குறித்த புத்தகம்: விமானம் எம் எச் 370 மர்மம்(ஊடூடிஞ்டt Mஏ370 கூடஞு Mதூண்tஞுணூதூ) பிளைட் எம்எச் 370 தி மைஸ்ட்ரி என்ற தலைப்பில் ஒரு புத்தகம் ஆஸ்திரேலியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. லன்டனை சேர்ந்த எழுத்தாளர் நைஜல் கோவ்தோன் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தில், மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு என்ன நடந்தது என்று அவர்களின் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்று கிட்டத்தட்ட நிச்சயமாக எதுவும் தெரிந்திருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். மாயமான மலேசிய விமானம் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்ததை அடுத்து சுட்டு வீழ்த்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் மாயமானபோது தெற்கு சீன கடலில் தாய்லாந்து, அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் மற்ற பணியாளர்கள் இணைந்து போர் பயற்சி நடத்தினர்.பயிற்சியின் துப்பாக்கி சூடு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று அந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான பறந்து சென்ற பாதை: மாயமான விமானத்தின் பாதையை கண்டுபிடிக்க உதவிய இங்கிலாந்தின் இன்மார்சாட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட செயற்கைக்கோள் தகவல்களை மலேசிய அரசு வெளியிட்டது. 47 பக்கங்கள் கொண்ட அந்த தகவலில் விமானம் சென்ற பாதைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மலேசிய பிரதமரின் கருத்து: விமானம் மாயமானது குறித்து மலேசிய பிரதமர், “வேண்டுமென்றே யாரோ ஒருவராலோ, சிலராலோ விமானம் திசைதிருப்பி கொண்டு செல்லப்பட்டது என்று புலனாய்வில் இருந்து தெரியவருகிறது. விமானத்தை அதன் வழக்கமான பாதையில் இருந்து திருப்பி, மேற்கு நோக்கி கொண்டு சென்றவர்கள், அதன் தொடர்பு சாதனங்கள் அனைத்தையும் நிறுத்தி விட்டனர்” என்று கூறினார். விமானிகள் மீது சந்தேகம்: ஒரு வேலை விமானிகளே விமானத்தை கடத்தி இருப்பார்களோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடந்தது. விமானியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். விமானி, கேப்டன் ஜகாரி அஹ்மத் ஷா, மலேசியாவின் எதிர்க்கட்சி தலைவர் அன்வார் இப்ராஹிமின் தீவிர ஆதரவாளர் என தெரிந்தது.அன்வர் இப்ராஹிமுக்கு மலேசிய நீதிமன்றம், 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இப்ராஹிமுக்கு தண்டனை வழங்கப்பட்ட தினம், மாயமாக மறைந்த மலேசியன் ஏர்லைன்ஸ் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டுச் சென்ற தினமும் ஒன்று என்பதால் இந்த கோணத்திலும் சந்தேகம் வலுபெற்றது. மங்கோலியாவில் தரை இறங்கியதா? விமானம் மங்கோலியாவில் அல்லது சோமாலியாவில் தரை இறங்கியிருக்கலாம் என்பது இன்னொரு பக்க சந்தேகம். அந்த நாடுகளில் ஒரு விமானத்தை தரையிறக்க முன் அனுமதி பெறத் தேவையில்லாயாம். கார் பார்க்கிங் செய்வது போல் செய்து விட்டு போகலாமாம். மலேசியாவில் இருந்து ஏழு மணிநேர பயண தூரத்தில் இருக்கிறது மங்கோலியா. சோமாலியாவில் முறையான அரசும் இல்லை. அங்குள்ள போராளிகளுக்கும், கொள்ளையர்களுக்கும் பணம் கொடுத்தால் போதும். என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இந்த வகையிலும் சந்தேகம் ஏற்பட்டது. மாயமான விமானம் குறித்து ஒரு திரைப்படம்: எம் எச் 370 விமானம் மாயமானது தொடர்பாக தி வானிசிங் ஆக்ட்: தி அன்டோல்டு ஸ்டோரி ஆப் த மிஸ்சிங் மலேசியன் பிளேன் “கூடஞு ஙச்ணடிண்டடிணஞ் அஞிt: கூடஞு க்ணtணிடூஞீ குtணிணூதூ ணிஞூ tடஞு Mடிண்ண்டிணஞ் Mச்டூச்தூண்டிச்ண கடூச்ணஞு” என்ற பெயரில் திரைபடமாகிறது. கோலாலம்பூரில் இருந்து பீய்ஜிங் செல்லவேண்டிய மலேசிய விமானம் எம் எச் 370, வானில் மாயமானது. அந்த மர்மம் தொடர்பாக பலவித தியரிகள் உள்ளன. மலேசிய விமானம் மாயமானது தொடர்பாக, செய்தியாளர் ஒருவர் தயாரித்த புலனாய்வு ரிப்போர்ட்டை அடிப்படையாக வைத்து, இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க புலனாய்வு: இன்னொரு புறம் அமெரிக்க அரசு அதிகாரிகளோ, அந்த விமானம் காணாமல் போனதில் கொள்ளையர்கள் கைவரிசை இருக்குமோ என்றும் விவாதித்து வருகிறார்கள். ஒரு பயணியில் அதிர்ச்சி எஸ்எம்எஸ்: இந்த விமான மர்மத்தின் உச்ச கட்ட ஆச்சரியமாக ஒரு தகவல் வெளியானதாக சொல்லப்படுகிறது. அந்த மாயமான மலேசிய விமானத்தில் இருந்த ஒரு பயணி, தான் ஒளித்து வைத்திருந்த ஐபோனில் இருந்து விமானம் இருக்கும் இடத்தை படம் பிடித்து, தனது அமெரிக்க நண்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளாராம். மாயமான மலேசிய விமானத்தை அமெரிக்க ராணுவம் கடத்தி, டைஙகா கார்சியா என்ற தீவில் ஒளித்து வைத்திருப்பதாக அந்தச் செய்தி பரவியது. இந்த தீவு இந்திய பெருங்கடலில் உள்ளது. அமெரிக்காவுக்கு சொந்தமான இந்த தீவில் அமெரிக்க போர்விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தீவில்தான் மலேசிய விமானம் இருப்பதாக, அந்த விமானத்தில் பயணம் செய்த அமெரிக்க பயணி பிலிப்வுட் என்பவர் தனது நண்பரும் பத்திரிகையாளருமான ஜிம் ஸ்டோன் என்பவருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளதாக தகவல் பரவியுள்ளதாம். பழங்குடியினரின் சாட்சியங்கள்: மலேசிய நாட்டில் உள்ள கிராமவாசிகளில் சிலர் நாட்டின் வட கிழக்கு பகுதியை நோக்கி மாயமான மலேசிய விமானம் பறந்து சென்றதை தாங்கள் பார்த்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். மலேசியாவின் கெலாண்டன் பகுதியை சேர்ந்த டுனா மீனவர்கள், விவசாயிகள் மற்றும் கிராமத்தினர் என 9 பேர் போலீசாரிடம் கூறுகையில், வானில் வெளிச்சம் தெரிந்ததை நாங்கள் பார்த்தோம் என தெரிவித்துள்ளனர். மேலும், மார்ச் 8ம்தேதி மலேசிய ஏர்லைன்ஸ் அடையாளங்களுடன் கூடிய ஒரு விமானத்தை தாங்கள் பார்த்ததாக மாலத்தீவின் தாலு அடால் பகுதியிலுள்ள சிறிய தீவில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை விமானம் பற்றி முழுமையான ஆதாரங்களுடன் எதுவுமே கண்டுபிடிக்க வில்லை என்பது தான் விஞ்ஞான உலகத்துக்கு ஏற்பட்ட மாபெரிய தலைக்குனிவு! * பாக்ஸ் செய்தி: இதுவரை மாயமான விமானங்கள் * 1937ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த பெண் பைலட் அமெலியா இயர்ஹார்ட், துணை பைலட் நூன்னுடன் விமானத்தில் சென்றார். அட்லான்டிக் கடல் பகுதியில் ஹாவ்லாந்து தீவு பகுதியில் பறந்த விமானம் மாயமானது. * 1945ம் ஆண்டு 14 வீரர்களுடன் சென்ற 5 போர் விமானங்கள் பெர்முடா முக்கோண பகுதிக்கு மேலே பறந்த போது மாயமானது. * 1947ம் ஆண்டு இங்கிலாந்தின் ஸ்டார் டஸ்ட் ரக விமானம் 11 பேரோடு ஆண்டிஸ் மலை பகுதியில் பனிப்புயலில் சிக்கி மாயமானது. * 1962ம் ஆண்டு 107 அமெரிக்க வீரர்களுடன் வியட்நாம் சென்ற விமானத்தின் கதியும் அதே கதிதான். * கடந்த 2009ம் ஆண்டு 228 பேருடன் அட்லான்டிக் கடல் பகுதியில் பறந்த ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் விமானம் மாயமானது. சுமார் 2 ஆண்டுகள் கழித்து அதன் கறுப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து அது விபத்தில் வெடித்து சிதறியது உறுதியானது.