திங்கள், 28 பிப்ரவரி, 2011

மலேசியா வாசுதேவனின் கடைசி பேட்டி... தேவராஜன்

மலேசியா பொங்கல்!
மலரும் நினைவில் மலேசியவாசுதேவன்
( 15.01. 2011 தினமலர் பொங்கல் மலரில் பிரசுரமான என்னுடைய பேட்டி கட்டுரை)

மலேசியாவில் தான் கழித்த பால்யகால நினைவுகளையும், மலேசியாவில் கொண்டாடப்படும் தமிழர் பொங்கல் பண்டிகையின் சிறப்பு பற்றியும் சொல்கிறார், மலேசியா வாசுதேவன்.
இனி அவர் பேட்டி...

மலேசியாவில் இருந்த வாசுதேவனைப்பற்றி சொல்லுங்கள்?
ஒரு காலத்தில் பிழைப்புக்காக இந்தியாவிலிருந்து கப்பலில் மலேசியாவுக்குக்குடியேறியவர்கள் மலேசிய தமிழர்கள். அப்படிதான் என்குடும்பமும் கிளாங்கில் குடியேறியது. அப்பா சாத்துநாயர், அம்மா அம்மாளு அம்மை. என் உடன் பிறந்தவர்கள் 5 சகோதரர்கள், 2 சகோதரிகள். ஒரு ரப்பர் தோட்டத்தில் தகப்பனார் வேலை செய்தார். குழந்தைப்பருவத்தையும், பள்ளிப்பருவத்தையும் ரப்பர் எஸ்டேட்டில்தான் கழித்தேன்.
உங்கள் இளமைக்காலம் எப்படி இருந்தது?
என் அப்பாவுக்கு நல்ல இசைஞானம் உண்டு. அவர் ஆர்மோனியத்தை வைத்துக்கொண்டு நன்றாக பாடுவார். அப்போது நான் எட்டு வயதுசிறுவன். ஆர்மோனியத்திற்கு பெல்லோஸ் தள்ளிவிடுவேன். அப்போதே என்னுடைய கலையார்வத்துக்கு பிள்ளையார்சுழி போட்டு விட்டார் அவர். பிற்பாடு பள்ளிப்படிப்பில் கவனம் செல்லவில்லை. கலையில்தான் மனம் லயத்தது.
தமிழகத்தைப்போலவே மலேசியாவிலும் அதிகளவு நாடகக்கலை வளர்ந்துவந்த காலக்கட்டம் அது. நானும் என் சகோதரர்களும் நாடகக்குழுவில் சேர்ந்து ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வந்தோம்.
முரளிமோகன ஞான சபா, தேவர் நாடக கம்பெனி, ஆர்.பி.எஸ் .மணியம்நாடக கம்பெனி, முபன் புரடக்ஷன் நாடக கம்பெனிகள் இருந்தன. இவைகள் எல்லாம் எங்களை ஊக்கப்படுத்தின.
பின்னர் நானும் சகோதரர்களும் சேர்ந்து "எம்.எஸ்.வி' நாடகக்குழு மற்றும் இசைக்குழு நடத்திவந்தோம். மலேசியா முழுவதும் நாடகம் மற்றும் இசைக்கச்சேரி நடத்தி வந்
மலேசியாவில் பொங்கல் பண்டிகை எப்படி கொண்டாடப்படுகிறது?
தமிழகத்தில் உள்ள பண்பாடு ,கலாசாரம், பழக்க வழக்க சடங்குகளைத்தான் மலேசிய தமிழர்களும் பின்பற்றுகிறார்கள். மலேசியாவில் தமிழர்களுக்கு பொங்கல் பண்டிகை என்றால் கொள்ளைப்பிரியம். பொதுவாக பொங்கல் பண்டிகை என்றால் விவசாயிகள், உழவர்கள் கொண்டாடக்கூடியவிழா. தமிழகத்தைப் போல் மலேசியாவில் விவசாயமோ, உழவர்களோ அதிகம் கிடையாது.அவர்கள் தமிழக உழவர்களை மனதில் வைத்துதான் கொண்டாடுகிறார்கள். தமிழகத்தில் குடும்பத்துக்குள் கொண்டுகிறார்கள். கிராமத்தில் அதிகம் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, ஏனோ பட்டணங்களில் அவ்வளவு விமர்சையாகக்கொண்டாடப்படுவதில்லை. ஆனால், மலேசியாவில் பட்டணத்தில்தான் அதிகம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஊர்மக்கள் எல்லாம் ஒரு பொது இடத்தில் ஒன்று கூடி பொங்கல் வைத்து கூட்டாக மகிழ்சியாக சேர்ந்து கொண்டாடுவார்கள். அன்று விருந்து, உபச்சாரம், புத்தாடைகள் என தடபுடலாக இருக்கும். மலேசியாவில் பொங்களை தமிழர் பண்டிகையாகத்தான் கொண்டாடுகிறார்கள். நான் சிறுவயதில் கொண்டாடிய பொங்கல் திருநாளைப் போல் ஒரு நாள் எங்கும் கண்டதில்லை. அந்தப் பூரிப்பான பொங்கல் பண்டிகை சந்தோஷங்கள் இன்றும் என் நெஞ்சில் பசுமையாக இருக்கிறது. மலேசிய பொங்களைப் போல் தமிழகத்தில் மட்டுமல்ல எங்கும் கண்டதில்லை. காணப்போவதுமில்லை.
தமிழகத்திற்கு வந்தது எப்படி?
எனக்குள் தீரா ஆசை ஒன்று இருந்தது. தமிழ் சினிமாவில் ஒரு பாடலாவது பாட வேண்டும் என்று.
1968ல் முபன் புரடக்ஷன் நாடகக்குழு தமிழகத்தில் அண்ணாத்துரை தலைமையில் நாடகம் நடத்தவும்,"ரத்தபேய்' என்ற படம் எடுக்கவும் தமிழகத்துக்கு வந்தது. ரத்தப் பேயில் நானும் நடித்தேன். அந்தப்படத்தில் ஜி.கே. வெங்கடேஷ் இசையில் "பொல்லாத உலகில் போராட்டம்' என்று ஒருபாடலும் பாடினேன். அதுதான் என் சினிமாவுக்கான முதல்பாடல். அந்தப்படம் அப்போது எதிர்ப்பார்த்தளவு போகவில்லை.
அதன் பின்னர் 10 ஆண்டுகள் சிரமப்பட்டேன். இளையராஜா, கங்கைஅமரன், பாஸ்கர் இசைக்குழுவில் பாடிவந்தேன். ஆரம்பகட்டத்தில் இளையராஜாதான் ஒவ்வொரு கம்பெனியாக எனக்கு வாய்ப்பு வாங்கிதந்தார். எம்.எஸ்.வி., சங்கர் கணேஷ் ஆகியோர் எனக்குப் பெரிதும் உதவினர்.
சினிமாத்துறையில் உங்கள் பங்கு?
5 ஆயிரம் பாடல்களுக்கு மேல் சினிமாவில் பாடியிருக்கேன்,6 படங்களுக்குமேல் இசையமைத்து இருக்கேன். " நீ சிரித்தால் தீபாவளி' என்றஒருபடத்தை கதை,வசனம் எழுதி, இயக்கி இருக்கேன். 85 படங்களுக்கு மேல் நடித்து இருக்கேன்." எண்ணம் தோன்றியது எழுத்த துõண்டியது' கவிதை நுõல் எழுதியிருக்கேன்.
மறக்க முடியாத அனுபவம்?
என்றும் மறக்க முடியாத சில அனுபவங்கள் எனக்கும் உண்டு. அது 1970ம் ஆண்டு. அப்ப நான் சினிமாவில் ஒரே ஒரு பாட்டுத்தான் பாடியிருக்கேன். இசைக்குழுவில் பாடிவந்த காலம். ஒரு நாள் மயிலாப்பூரில் ஒரு இசைக்கச்சேரி. நானும் கங்கை அமரன் குழுவும் ரிகர்சல் பார்த்துக்கிட்டு இருந்தோம். மாலை ஆறுமணிக்கு கச்சேரிக்கு போகணும். ரூமுக்கு வந்து குளித்து, உடையணிந்து வெளியே வந்ததுபோது என் பெயருக்கு ஒரு தந்தி வந்தது. வாங்கிப்பார்த்தேன். என்னை பெற்ற அம்மா காலமாகிவிட்டார் என்று இருந்தது. என்ன செய்வது என்று புரியவில்லை. கச்சேரிக்கும் என்னைவிட்டால் வேறு ஆள் இல்லை. தந்தியை வாங்கி மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு கச்சேரியில் பாடப்போனேன். கச்சேரி முடிந்ததும் கங்கை அமரனிடம் தந்தியைக்காட்டி விவரம் சொல்லியழுதேன். கங்கை அமரன், "" இவ்வளவு பெரிய துக்கத்தை சுமந்துக்கொண்டு எப்படி பாடினாய்?'' என்று வாரியணைத்து அழுதார். உடனே மலேசியா சென்று அம்மாவைப் பார்க்கும் சூழ்நிலைஇல்லை. அதுபோல் மலேசியாவில் இருக்கும் என் சகோதரர்கள் இறப்பு ஒன்றுக்குக் கூட போனதில்லை. இந்த துயரம் இன்னமும் என் நெஞ்சில் நீங்காதமனப்புண்ணாய் இருக்கிறது.
இன்னொரு சம்பவம் மலேசியாவில் நடந்தது. ஒரு மேடையில் நான் பாடிக்கொண்டிருந்தேன். சகோதரர்கள் ஆர்மோனியமும், மிருதங்கமும் வாசித்துக்கொண்டிருந்தார்கள். பாடும் போது ஒருவரியில் தாளம் தவறிபாடிவிட்டேன். என் அண்ணன் எழுந்து வந்து மேடையிலேயே விட்டார் கன்னத்தில் ஒரு அறை. அந்த அறைதான் இன்று என்னை இந்தளவுக்கு உயர்த்திருக்கிறது. அந்த சம்பவம் என்னால் மறக்க முடியாதவை.
உங்கள் குடும்பம் பற்றி?
வாத நோய் வந்து படுத்தப்படுக்கையில் இருந்தபோது ஒரு குழந்தையாக என்னைப் பார்த்துக்கொண்ட அன்பு மனைவி உஷா. எங்கள் இருவருக்கும் பிறந்த இரு மகள்; ஒரு மகன். பெரியவள் மலேசியாவில். சின்னவள் என் இசையின் அடுத்தவாரி. மகனும் சினிமா, டி.வி என்று கலைத்துறையில் முன்னேறிகொண்டிருக்கிறார்.
உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் சொல்லிக்கொள்ள விரும்புவது?
என்னை பெற்றது மலேசியா. தத்து எடுத்தது தமிழகம். வாழவைத்தது தமிழ் மொழி. என்னை இந்தளவுக்கு இசை ஏணியில் உயர்த்திய தமிழர்களை வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் நினைத்துக்கொண்டேயிருப்பேன். எல்லோருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!
தேவராஜன்

MALESIYA VASUDEVAN LAST INTERVIEW- DEVARAJAN

MALESIYA VASUDEVAN LAST INTERVIEW- DEVARAJAN
மலேசியா பொங்கல்!
மலரும் நினைவில் மலேசியவாசுதேவன்
( 15.01. 2011 தினமலர் பொங்கல் மலரில் பிரசுரமான என்னுடைய பேட்டி கட்டுரை)

மலேசியாவில் தான் கழித்த பால்யகால நினைவுகளையும், மலேசியாவில் கொண்டாடப்படும் தமிழர் பொங்கல் பண்டிகையின் சிறப்பு பற்றியும் சொல்கிறார், மலேசியா வாசுதேவன்.
இனி அவர் பேட்டி...

மலேசியாவில் இருந்த வாசுதேவனைப்பற்றி சொல்லுங்கள்?
ஒரு காலத்தில் பிழைப்புக்காக இந்தியாவிலிருந்து கப்பலில் மலேசியாவுக்குக்குடியேறியவர்கள் மலேசிய தமிழர்கள். அப்படிதான் என்குடும்பமும் கிளாங்கில் குடியேறியது. அப்பா சாத்துநாயர், அம்மா அம்மாளு அம்மை. என் உடன் பிறந்தவர்கள் 5 சகோதரர்கள், 2 சகோதரிகள். ஒரு ரப்பர் தோட்டத்தில் தகப்பனார் வேலை செய்தார். குழந்தைப்பருவத்தையும், பள்ளிப்பருவத்தையும் ரப்பர் எஸ்டேட்டில்தான் கழித்தேன்.
உங்கள் இளமைக்காலம் எப்படி இருந்தது?
என் அப்பாவுக்கு நல்ல இசைஞானம் உண்டு. அவர் ஆர்மோனியத்தை வைத்துக்கொண்டு நன்றாக பாடுவார். அப்போது நான் எட்டு வயதுசிறுவன். ஆர்மோனியத்திற்கு பெல்லோஸ் தள்ளிவிடுவேன். அப்போதே என்னுடைய கலையார்வத்துக்கு பிள்ளையார்சுழி போட்டு விட்டார் அவர். பிற்பாடு பள்ளிப்படிப்பில் கவனம் செல்லவில்லை. கலையில்தான் மனம் லயத்தது.
தமிழகத்தைப்போலவே மலேசியாவிலும் அதிகளவு நாடகக்கலை வளர்ந்துவந்த காலக்கட்டம் அது. நானும் என் சகோதரர்களும் நாடகக்குழுவில் சேர்ந்து ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வந்தோம்.
முரளிமோகன ஞான சபா, தேவர் நாடக கம்பெனி, ஆர்.பி.எஸ் .மணியம்நாடக கம்பெனி, முபன் புரடக்ஷன் நாடக கம்பெனிகள் இருந்தன. இவைகள் எல்லாம் எங்களை ஊக்கப்படுத்தின.
பின்னர் நானும் சகோதரர்களும் சேர்ந்து "எம்.எஸ்.வி' நாடகக்குழு மற்றும் இசைக்குழு நடத்திவந்தோம். மலேசியா முழுவதும் நாடகம் மற்றும் இசைக்கச்சேரி நடத்தி வந்
மலேசியாவில் பொங்கல் பண்டிகை எப்படி கொண்டாடப்படுகிறது?
தமிழகத்தில் உள்ள பண்பாடு ,கலாசாரம், பழக்க வழக்க சடங்குகளைத்தான் மலேசிய தமிழர்களும் பின்பற்றுகிறார்கள். மலேசியாவில் தமிழர்களுக்கு பொங்கல் பண்டிகை என்றால் கொள்ளைப்பிரியம். பொதுவாக பொங்கல் பண்டிகை என்றால் விவசாயிகள், உழவர்கள் கொண்டாடக்கூடியவிழா. தமிழகத்தைப் போல் மலேசியாவில் விவசாயமோ, உழவர்களோ அதிகம் கிடையாது.அவர்கள் தமிழக உழவர்களை மனதில் வைத்துதான் கொண்டாடுகிறார்கள். தமிழகத்தில் குடும்பத்துக்குள் கொண்டுகிறார்கள். கிராமத்தில் அதிகம் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, ஏனோ பட்டணங்களில் அவ்வளவு விமர்சையாகக்கொண்டாடப்படுவதில்லை. ஆனால், மலேசியாவில் பட்டணத்தில்தான் அதிகம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஊர்மக்கள் எல்லாம் ஒரு பொது இடத்தில் ஒன்று கூடி பொங்கல் வைத்து கூட்டாக மகிழ்சியாக சேர்ந்து கொண்டாடுவார்கள். அன்று விருந்து, உபச்சாரம், புத்தாடைகள் என தடபுடலாக இருக்கும். மலேசியாவில் பொங்களை தமிழர் பண்டிகையாகத்தான் கொண்டாடுகிறார்கள். நான் சிறுவயதில் கொண்டாடிய பொங்கல் திருநாளைப் போல் ஒரு நாள் எங்கும் கண்டதில்லை. அந்தப் பூரிப்பான பொங்கல் பண்டிகை சந்தோஷங்கள் இன்றும் என் நெஞ்சில் பசுமையாக இருக்கிறது. மலேசிய பொங்களைப் போல் தமிழகத்தில் மட்டுமல்ல எங்கும் கண்டதில்லை. காணப்போவதுமில்லை.
தமிழகத்திற்கு வந்தது எப்படி?
எனக்குள் தீரா ஆசை ஒன்று இருந்தது. தமிழ் சினிமாவில் ஒரு பாடலாவது பாட வேண்டும் என்று.
1968ல் முபன் புரடக்ஷன் நாடகக்குழு தமிழகத்தில் அண்ணாத்துரை தலைமையில் நாடகம் நடத்தவும்,"ரத்தபேய்' என்ற படம் எடுக்கவும் தமிழகத்துக்கு வந்தது. ரத்தப் பேயில் நானும் நடித்தேன். அந்தப்படத்தில் ஜி.கே. வெங்கடேஷ் இசையில் "பொல்லாத உலகில் போராட்டம்' என்று ஒருபாடலும் பாடினேன். அதுதான் என் சினிமாவுக்கான முதல்பாடல். அந்தப்படம் அப்போது எதிர்ப்பார்த்தளவு போகவில்லை.
அதன் பின்னர் 10 ஆண்டுகள் சிரமப்பட்டேன். இளையராஜா, கங்கைஅமரன், பாஸ்கர் இசைக்குழுவில் பாடிவந்தேன். ஆரம்பகட்டத்தில் இளையராஜாதான் ஒவ்வொரு கம்பெனியாக எனக்கு வாய்ப்பு வாங்கிதந்தார். எம்.எஸ்.வி., சங்கர் கணேஷ் ஆகியோர் எனக்குப் பெரிதும் உதவினர்.
சினிமாத்துறையில் உங்கள் பங்கு?
5 ஆயிரம் பாடல்களுக்கு மேல் சினிமாவில் பாடியிருக்கேன்,6 படங்களுக்குமேல் இசையமைத்து இருக்கேன். " நீ சிரித்தால் தீபாவளி' என்றஒருபடத்தை கதை,வசனம் எழுதி, இயக்கி இருக்கேன். 85 படங்களுக்கு மேல் நடித்து இருக்கேன்." எண்ணம் தோன்றியது எழுத்த துõண்டியது' கவிதை நுõல் எழுதியிருக்கேன்.
மறக்க முடியாத அனுபவம்?
என்றும் மறக்க முடியாத சில அனுபவங்கள் எனக்கும் உண்டு. அது 1970ம் ஆண்டு. அப்ப நான் சினிமாவில் ஒரே ஒரு பாட்டுத்தான் பாடியிருக்கேன். இசைக்குழுவில் பாடிவந்த காலம். ஒரு நாள் மயிலாப்பூரில் ஒரு இசைக்கச்சேரி. நானும் கங்கை அமரன் குழுவும் ரிகர்சல் பார்த்துக்கிட்டு இருந்தோம். மாலை ஆறுமணிக்கு கச்சேரிக்கு போகணும். ரூமுக்கு வந்து குளித்து, உடையணிந்து வெளியே வந்ததுபோது என் பெயருக்கு ஒரு தந்தி வந்தது. வாங்கிப்பார்த்தேன். என்னை பெற்ற அம்மா காலமாகிவிட்டார் என்று இருந்தது. என்ன செய்வது என்று புரியவில்லை. கச்சேரிக்கும் என்னைவிட்டால் வேறு ஆள் இல்லை. தந்தியை வாங்கி மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு கச்சேரியில் பாடப்போனேன். கச்சேரி முடிந்ததும் கங்கை அமரனிடம் தந்தியைக்காட்டி விவரம் சொல்லியழுதேன். கங்கை அமரன், "" இவ்வளவு பெரிய துக்கத்தை சுமந்துக்கொண்டு எப்படி பாடினாய்?'' என்று வாரியணைத்து அழுதார். உடனே மலேசியா சென்று அம்மாவைப் பார்க்கும் சூழ்நிலைஇல்லை. அதுபோல் மலேசியாவில் இருக்கும் என் சகோதரர்கள் இறப்பு ஒன்றுக்குக் கூட போனதில்லை. இந்த துயரம் இன்னமும் என் நெஞ்சில் நீங்காதமனப்புண்ணாய் இருக்கிறது.
இன்னொரு சம்பவம் மலேசியாவில் நடந்தது. ஒரு மேடையில் நான் பாடிக்கொண்டிருந்தேன். சகோதரர்கள் ஆர்மோனியமும், மிருதங்கமும் வாசித்துக்கொண்டிருந்தார்கள். பாடும் போது ஒருவரியில் தாளம் தவறிபாடிவிட்டேன். என் அண்ணன் எழுந்து வந்து மேடையிலேயே விட்டார் கன்னத்தில் ஒரு அறை. அந்த அறைதான் இன்று என்னை இந்தளவுக்கு உயர்த்திருக்கிறது. அந்த சம்பவம் என்னால் மறக்க முடியாதவை.
உங்கள் குடும்பம் பற்றி?
வாத நோய் வந்து படுத்தப்படுக்கையில் இருந்தபோது ஒரு குழந்தையாக என்னைப் பார்த்துக்கொண்ட அன்பு மனைவி உஷா. எங்கள் இருவருக்கும் பிறந்த இரு மகள்; ஒரு மகன். பெரியவள் மலேசியாவில். சின்னவள் என் இசையின் அடுத்தவாரி. மகனும் சினிமா, டி.வி என்று கலைத்துறையில் முன்னேறிகொண்டிருக்கிறார்.
உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் சொல்லிக்கொள்ள விரும்புவது?
என்னை பெற்றது மலேசியா. தத்து எடுத்தது தமிழகம். வாழவைத்தது தமிழ் மொழி. என்னை இந்தளவுக்கு இசை ஏணியில் உயர்த்திய தமிழர்களை வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் நினைத்துக்கொண்டேயிருப்பேன். எல்லோருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!
தேவராஜன்