சனி, 21 ஆகஸ்ட், 2010

ராமநாதசுவாமி திருக்கண்ணபுரம்

மூலவர் : ராமநாதசுவாமி
உற்சவர் : நந்தியுடன் சோமாஸ்கந்தர்
அம்மன்/தாயார் : சரிவார்குழலி
தல விருட்சம் : மகிழம், செண்பகம்
தீர்த்தம் : ராம தீர்த்தம்
ஆகமம்/பூஜை : காமீகம்
பழமை : 10002000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : ராமநாதீச்சரம்
ஊர் : திருக்கண்ணபுரம்
மாவட்டம் : திருவாரூர்
மாநிலம் : தமிழ்நாடு



பாடியவர்கள்:

திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

தழைமயி லேறவன் தாதையோதான் மழைபொழி சடையவன் மன்னுகாதில் குழையது இலங்கிய கோலமார்பின் இழையவன் இராமன தீச்சரமே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 77வது தலம்.


திருவிழா:

மகாசிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், கந்தசஷ்டி.

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சுவாமிக்கு தீபாராதனை செய்யும்போது லிங்கத்திருமேனியில் ஜோதி வடிவம் தெரிவது விசேஷம்.

திறக்கும் நேரம்:


காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். இக்கோயிலுக்குச் செல்பவர்கள் முன்னரே போனில் தொடர்பு கொண்டுவிட்டுச் செல்வது நல்லது.

முகவரி:

அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், ராமநாதீச்சரம், திருக்கண்ணபுரம் 609 704. திருவாரூர் மாவட்டம்.

போன்:

+914366 292 300, 291 257, 94431 13025

பொது தகவல்:


பிரகாரத்தில் காசி பைரவருக்கு அருகில் வணங்கிய கோலத்தில் அகத்தியர் காட்சி தருகிறார். இந்த பைரவரை அகத்தியர் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக சொல்கிறார்கள்.

இத்தலத்திலிருந்து சற்று தூரத்தில் திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோயில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் இத்தலமும் ஒன்று.

ராமநாதசுவாமியை தரிசிக்க செல்பவர்கள், சவுரிராஜரையும் வணங்கி திரும்பலாம். தல விநாயகரின் திருநாமம் அனுக்ஞை விநாயகர்.



பிரார்த்தனை

செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டுபவர்களும், ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்களும் சிவனுக்கு ருத்ர ஹோமம் மற்றும் விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

அம்பாளிடம் வேண்டிக்கொள்ள சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.


நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தலாம்.

தலபெருமை:


சரிவார் குழலி: முற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஒருவருக்கு புத்திரப்பேறு இல்லை. சிவபக்தரான அவர் குழந்தை வேண்டி சிவனுக்கு யாகம் நடத்தினார். சிவன், அசரீரியாக அம்பிகையே அவருக்கு மகளாக பிறப்பாள் என்று அருளினார்.

ஒருசமயம் மன்னர் வனத்திற்கு வேட்டையாடச் சென்றபோது ஓரிடத்தில் 4 பெண் குழந்தைகளை கண்டார். குழந்தைகளை எடுத்து வளர்த்தார். அவர்கள் பிறப்பிலேயே சிவபக்தைகளாக திகழ்ந்தனர். தகுந்த பருவத்தில் அவர்களை மணந்து கொள்ளும்படி சிவனிடம் வேண்டினார். சிவனும் மணந்து கொண்டார்.

இந்த அம்பிகையர் நால்வரும் இப்பகுதியிலுள்ள நான்கு தலங்களில் காட்சி தருகின்றனர். இத்தலத்தில் அம்பிகை சரிவார் குழலியாகவும், திருச்செங்காட்டங்குடியில் வாய்த்த திருகுகுழல் நாயகி, திருப்புகலூரில் கருந்தாழ்குழலியம்மை, திருமருகல் தலத்தில் வண்டார்குழலியம்மையாகவும் காட்சி தருகிறாள்.

கரு காத்த அம்பிகை: நான்கு அம்பிகையருக்கும், "சூலிகாம்பாள்' என்ற பொதுப்பெயர் உள்ளது. ஒருசமயம் இப்பகுதியில் வசித்த அம்பாள் பக்தையான ஏழைப்பெண் ஒருத்தி கர்ப்பமடைந்தாள். ஒருநாள் இரவில் அவளது தாயார், ஆற்றைக்கடந்து வெளியில் சென்றுவிட்டாள். அன்றிரவில் பலத்த மழை பெய்யவே, அவளால் கரையைக் கடந்து வீடு திரும்ப முடியவில்லை. அப்போது அம்பிகையே அவளது தாயார் வடிவில் சென்று பிரசவம் பார்த்தாள். எனவே இந்த நான்கு தலங்களிலுள்ள அம்பிகைக்கும் "சூலிகாம்பாள்' என்ற பெயர் ஏற்பட்டது. "சூல்' என்றால் "கரு' என்று பொருள். "கரு காத்த அம்பிகை' என்றும் இவளுக்கு பெயர் உண்டு.

பிரசவம் பார்த்துவிட்டு இரவில் தாமதமாக சென்றதால், அம்பிகை கோயிலுக்குள் செல்லாமல் வெளியிலேயே நின்றுவிட்டாள். எனவே இந்த நான்கு தலங்களிலும் அம்பாள் சன்னதி வெளியில் தனியே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அர்த்தஜாம பூஜையில் மட்டும் அம்பிகைக்கு சம்பா அரிசி, மிளகு, சீரகம், உப்பு, நெய் கலந்த சாத நைவேத்யம் படைப்பது விசேஷம்.

புனர்பூச பூஜை: இங்குள்ள சோமாஸ்கந்தர் (உற்சவ மூர்த்தி) மிக விசேஷமானவர். இச்சிலை ராமர், சிவனை வழிபடுவதற்காக அம்பிகை நந்தியை இழுத்த அமைப்பில் வடிக்கப்பட்டிருக்கிறது. ராமர் கோயில்களில் அவரது திருநட்சத்திரமான புனர்பூசத்தன்று விசேஷ பூஜை நடக்கும். ராமர் வழிபட்ட தலமென்பதால் இங்கு சிவனுக்கு அந்நாளில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது.

தற்போதும் சாயரட்சை பூஜையை ராமரே செய்வதாக ஐதீகம். இவ்வேளையில் சுவாமி தரிசனம் செய்வது விசேஷம்.
சுப்பிரமணியர் தனிச்சன்னதியில் இருக்கிறார். திருச்செந்தூரில் முருகப்பெருமான், வலது கையில் மலர் வைத்தபடி காட்சி தருகிறார். இத்தலத்தில் இவர் இடதுகையில் மலர் வைத்து, வலது கையால் ஆசிர்வதித்த கோலத்தில் காட்சி தருகிறார். உடன் வள்ளி, தெய்வானை இருக்கின்றனர்.

ராமர் வழிபட்ட தலம் என்பதால், "ராமநாதீச்சரம்' என்று அழைக்கப்படுகிறது. ராமரை நந்தி மறைத்ததால், "ராமநந்தீச்சரம்' என்ற பெயரும் உண்டு. சுவாமிக்கு தீபாராதனை செய்யும்போது லிங்கத்திருமேனியில் ஜோதி வடிவம் தெரிவது விசேஷம்.



தல வரலாறு:


ராமர், சீதையை மீட்க இலங்கை சென்றபோது, போரில் ராவணன் உட்பட பல வீரர்களை வீழ்த்தினார். இந்த தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்த அவர், அயோத்தி திரும்பும் வழியில் பல தலங்களில் சிவவழிபாடு செய்தார். அவர் செண்பக வனமான இவ்வழியே திரும்பினார். ஒரு மரத்தின் அடியில் சிவன், சுயம்புலிங்கமாக எழுந்தருளியிருந்ததைக் கண்டார். சிவனுக்கு பூஜை செய்ய ஆயத்தமானார்.

நந்தி தேவர், ராமரை மானிடர் என நினைத்து சிவனை நெருங்கவிடாமல் தடுத்தார். அப்போது அம்பிகை தோன்றி, நந்தியை தன் பக்கமாக இழுத்துக்கொண்டு, ராமர் சிவபூஜை செய்ய உதவினாள். ராமர் சிவவழிபாடு செய்து பின்பு அயோத்தி திரும்பினார். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. ராமரால் வழிபடப்பட்டவர் என்பதால் சுவாமி, "ராமநாதேஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

"அண்டம் கிடுகிடுங்க...

"அண்டம் கிடுகிடுங்க...
லண்டன் நடுநடுங்க...'
பறங்கியரை பதறவைத்த வீர பாடகிகள் தேவராஜன்
( 15.8.10 தினமலர்சுதந்திர தின சிறப்பிதழில் பிரசுரமான கட்டுரை)
ஆங்கிலேயரின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து பாரத மாதா விடுதலை பெற உடல், பொருள், ஆவி தந்தோர் ஒன்றா, இரண்டா? கண்ணீரும், செந்நீரும் சிந்தியர்வர்களை விரல்விட்டு எண்ண இயலாது. ஆங்கிலேயரை எதிர்த்து பல முனை போராட்டங்கள் வெடித்தன.
இதில் பாட்டாலே ஆங்கிலேயரை பயமுறுத்திய பெண்மணிகள்
சுதந்திர போராட்டம் தீவிரமாக நடைபெற்ற காலத்தில், தங்கள் குடும்ப நிகழ்ச்சியிலும், அரசியல் கூட்டங்களிலும் தேசபக்தி பாடல்கள் பாடி மக்கள் மனதில் சுதந்திர எழுச்சியை தட்டி எழுப்பினர்.
அந்நாளில் தேசபக்திப் பாடல்கள் பாடி, சுதந்திரக் கனலை ஊதி வளர்த்த பெருமைக்குரிய, பெயர் பெற்ற பெண்மணிகளில் கோதை நாயகி, கே.பி. சுந்தரம்பாள், டி.கே. பட்டம்மாள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் தங்களின் உணர்சி ததும்பும் குரலில், கணீரெனப்பாடும் தேசபக்தி பாடல்களால் ஈர்க்கப்பட்டு, உந்தப்பட்டு சுதந்திர போராட்டங்களில் குதித்த இளைஞர்கள் பட்டாளம் ஆயிரம்... ஆயிரம்!
பாட்டில் ராஜபாட்டை நடத்தும் பாரதியின் பாடல்களை சிறப்பாக பாடும் வல்லமை பெற்ற கோதை நாயகி காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் இவ்வம்மையார் பெயர் இடம் பெற்றாலே மக்கள் கூட்டம் அலைகடலென கூடும். மதுரகவி பாஸ்கரதாசர் இயற்றிய பாடல்களான "காந்தியோ பரம ஏழை சந்நியாசி' " தாயிடம் அன்பில்லாத ஜென்மம்' "வீணை நம்பிக்கை கொண்டோர் எல்லாம் ராட்டை சுற்றுவோம்' " காந்தி லண்டன் சேர்ந்தார்' போன்ற பாடல்களை கே.பி. சுந்தரம்பாள் அருமையான முறையில் இசைத்தட்டில் பாடி மக்களிடையே கொண்டு சேர்த்தார். பாரதியாரின் பாடல்களை சென்னை அரசு தø ட செய்ததை எதிர்த்து நடத்தப்பட்ட கூட்டங்களில்" இவர் நெஞ்சு பொறுக்குதில்லையே!' என்ற பாடலைப் பாடி மக்களை வீறுகொண்டு எழச் செய்தார்.
உப்பு சத்யாக்கிரத்தை ஒட்டி காந்தி சிறை சென்ற போது" காந்தியோ பரம ஏழை சந்நியாசி' என்ற பாடல் இவரால் பாடப்பட்டு இசை தட்டில் பதிவு செய்து நாடெங்கும் பரப்பப்பட்டது.
1932ம் ஆண்டு பகத்சிங், இராச குரு, சுகதேவ் ஆகியோரை துõக்கிலிட்டு ஆங்கிலேயர் கொன்ற போது, அதை கண்டித்து எழுதப்பட்ட பாடலான "பகத்சிங், ராச குரு, சுகதேவ் சிறைவாயிலில் கண்ணீர் வடித்தாள் பாரத மாதா பெறற்கரிய பகவத் சிங், ராச குரு, சுகதேவைப் பிரிந்தே வருந்துகிறாள் நம் அன்னை' என்ற பாடலை கே.பி. சுந்தரம்பாள் பாடி இசைத்தட்டில் பதிவு செய்துள்ளார். இந்தப்பாடலை அரசு தடை செய்தது. இருப்பினும் தெரு முனை நாடகங்களில், நாடக கலைஞர்கள் மூலம் இந்தப் பாடலை நாடெங்கும் ஒலிக்க வைத்தார்.
எஸ்.ஆர். ரமாமணிபாய் பாடிய "ஆடு ராட்டே மகிழ்தாடு ராட்டே சுய ஆட்சியைக் கண்டோமென்றாடு ராட்டே' என்ற பாடல் மக்களிடையே தேச பக்தியை கிளரச் செய்து, கதராடை உற்பத்தி மூலம் சுய ஆட்சியை பெற முடியும்என்ற கருத்தை வலியுறுத்தியது.
மதுரை கண்ணம்பாள் பாடிய " சத்யமெங்குமே தளராநாடு இந்து தேசமதைப் புகழ்ந்துபாடு' என்று பாடினார்.
பண்டிதை அசலாம்பிகை அம்மையார் இயற்றிய நுõல்களான காந்தி புராணம் மற்றும் திலகர் புராணம் தேபற்றிற்கு உதாரணம் ஆகும்.
புகழ்பெற்ற ஹார்மோனியக் கலைஞரான எம்.ஆர். கமலவேணி பல தேசியப் பாடல்கள் பாடியவர். மக்களின் தேசிய உணர்வை துõண்டிய இவரது பாடல்களில் ஒன்று " அண்டம் கிடுகிடுங்க லண்டன் நடுநடுங்க அகிம்சை போர்த்தொடுத்தார் காந்தி மகான்' என்ற பாடல் வெள்ளையனை கிடுகிடுக்கவைத்தது.
டி.கே. பட்டம்மாள் சிறுவயதிலேய பாரதியின் பாடல்களைப்பாடி தேப்பற்றினை வளர்த்தார். " வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ?'
"கண்ணிரண்டும் விற்றுச்சித்திரம் வாங்கினால் கை கொட்டி சிரியாரோ' என்ற பாடலைப்பாடி இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்டார்.
"ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று' என்று பாரதியின் பாட்டைப் பாடிய எம். எஸ். சுப்புலட்மி அம்மையார் எண்ணற்ற விடுதலை வேட்கையூட்டும் பாடங்களையும், காந்தி புகழ்பாடும் பாடல்களைப் பாடி இந்திய சுதந்திரத்திற்கு உதவினார்.
தேவராஜன்

இந்திய சுதந்திர களத்தில் பெண்கள்! தேவராஜன்

இந்திய சுதந்திர களத்தில் பெண்கள்! தேவராஜன்
( 14.8.10 தினமலர் பெண்கள் மலரில் பிரசுரமான கட்டுரை)

இந்திய விடுதலைக்காக கண்ணீரும், செந்நீரும் சிந்தியவர்களும், இன்னுயிர் தந்தவர்களும் ஏராளம்... ஏராளம்! வரலாற்றில் பெரும்பாலும் ஆண்களின் தியாகத்தைப் பற்றி சிலாகித்துப் பேசப்படுகின்றன. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வீர தீரத்துடன் குதித்த,பெண் தியாகிகள் ஒன்றா, இரண்டா? பட்டியல் போடலாம்! நம்மில் பலரின் கவனத்திற்கு வராத சில பெண் சுதந்திரப் போராட்ட வீராங்கனைகளை இந்த சுதந்திர திருநாளில் நினைவுகூர்வோமாக.
இந்திய சுதரந்திர போராட்டக்களத்தில் பெண் வீராங்கனைகள் பலர் பங்கு கொண்டனர். 1817 முதல் பீமா பாய் ஹோல்கர், ராணி சன்னமா ஆகியோர் முதல்முதலாக கிழக்கிந்திய கம்பெனிகாரர்களுக்கு எதிராக போர்க்கொடி ஏந்தினார்கள்.
ஜான்சி ராணி, சரோஜினி நாயுடு, கஸ்துõரிபா காந்தி, அருணா ஆசாப் அலி, இந்திரகாந்தி, கமலா நேரு, விஜயலட்சுமி பண்டிட், மாடம் கமா, பேகம் ஆசாத் மகால், பத்மஜா நாயுடு, சுசெதா கிர்பாலனி போன்றவர்கள் சுதந்திரத்திற்கு போராடியவர்கள். இவர்களில் சிலரை தெரிந்து கொள்வோம்.
பத்மஜா நாயுடு:
தாயைப் போல பிள்ளை நுõலைப் போல சேலை என்பதற்கு உதாரணமாக இருந்தவர். பத்மஜா நாயுடு. இவர், கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் மகள். தன் அன்னையின் இந்திய சுதந்திர வேட்கையைக் கண்டு தானும் இந்திய சுந்திர போராட்டத்தில் ஈடுபட விரும்பினார். தன்னுடைய 21 வயதில் ஐதராபாத்தில் இந்திய தேசிய காங்கிரசில் இணை நிறுவனராக தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டவர்.
இந்தியர்களிடம் சுதேசி உணர்வை ஊட்ட நம் பொருட்களை நாம் வாங்க வேண்டும் என்ற லட்சிய வேட்கையை த்துõண்டி கதர் இயக்கத்தை ஆரம்பித்தார். இதன் காரணமாக இந்தியர்கள் வெளிநாட்டுப் பொருட்களை வாங்குவதை புறக்கணித்தனர்.
ஒத்துழையாமை இயக்க போராட்டத்தில் கலந்துகொண்டு 1942ல் சிறை சென்றார். இந்திய சுதந்திரத்திற்குப் பின் மேற்கு பெங்காலில் கவர்னராக நியமிக்கப்பட்டார். தன் வாழ்நாளை இந்திய சுதந்திரத்திற்கும், மக்கள் சேவைக்கும் அர்ப்பணித்துக்கொண்ட பத்மஜா நாயுடு ரெட் கிராஸ் சேவையிலும் ஈடுபட்டார்.
சுசேடா கிர்பாலனி:
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சுசேடா கிர்பாலினியின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு பெற்றவர். காந்தியின் தேச பற்றினை பின்பற்றி நாட்டுக்காக உழைத்தவர். 1946 ல் பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1958 முதல் 1960 வரை இந்திய தேசிய காங்கிரசில் பொது செயலாளராகவும், 1963 முதல் 1967 வரை உத்திதரபிரதேச முதல்வராகவும் இருந்தார். 1947 ஆகஸ்ட் 15ல் நாடாளு மன்றத்தில் வந்தே மாதரம் பாடலைப் பாடியவர்.
பேகம் ஹசாத் மகால்:
ராஜபோக வாழ்க்கை வாழ்ந்தவர் பேகம் ஹசாத் மகால். இளவரசியாக உல்லாச வாழ்க்கை வாழ்ந்தவர். அப்படி ஒரு வாழ்க்கை அமைந்தும், ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார் என்பது ஆச்சரியமல்லவா! இந்தியவின் முதல் சுதந்திரப் போரில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இருந்தார். பிரிட்டிஷ் சட்டங்களுக்கும், கப்பம் கட்டுவதற்கும் எதிராகவே செயல்பட்டு தன் வீர தீரத்தைக்காட்டினார்.
1879 ம் ஆண்டு மறைந்த இவருக்கு 1984 மே 10ம் தேதி இந்திய அரசு அவர் உருவம் பொறித்த தபால்தலை வெளியிட்டு பேகம் ஹசாத்தின் தியாகத்தை கவுரவித்தது.
மடாம் கமா:
இந்தியாவின் சுதந்திர தேசியக்கொடி பிறந்து விட்டது. அடுத்து, இந்தியாவுக்கும் சுதந்திரம் பிறந்து விடும் என்று அறைகூவலிட்டவர் மடாம் கமா. இவரின் எழுச்சிமிகு பேச்சுகளும், செயல்பாடுகளும் இளைஞர்களை சுதந்திரப் போராட்ட களத்தில் பெருமளவும் குதிக்க வைத்தது.
அவர் வடிவமைத்த மூவர்ணக்கொடி பச்சை, காவி மற்றும் சிகப்பு நிற பட்டைகளைக் கொண்டிருந்தது. சிகப்பு நிறம் பலத்தையும், காவி வெற்றியையும், பச்சைகம்பீரத்தையும் அர்த்தப்படுத்தியும், எட்டு தாமரைகள் எட்டு மகாணத்தையும் குறித்தது. வந்தே மாதம் என்ற வாசகம் காவி மத்தியில் எழுதப்பட்டிருந்தது. சூரியனும், நிலவும் இந்து முஸ்லீம் ஒற்றுமையையும் கொண்டிருந்தது. இந்த கொடி வீர் சவர்க்கர் உதவியுடன் வடிவமைத்தார்.
வெளிநாடுகளுக்குச் சென்று பிரிட்டீஷாருக்கு எதிரான ஆதரவினை திரட்டியவர் இவர்.
அருணா ஆசாப் அலி:
ஹரியனாவில் பெங்காலி பிரமொ குடும்பத்தில் பிறந்தவர் அருணா. லாகூர் மற்றும் நைனிடலில் கல்வி பயின்று ஆசிரியர் பணிபுரிந்தவர். காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக இருந்த ஆசாப் அலியை சந்தித்த அவர், பொது சேவையில் ஈடுபட்ட அவர்பால் ஈர்க்கப்பட்டு 1928ல் அவரை மணம்முடித்தார். இருவருக்கும் மதம் வேறு. 20 வயதுக்கு மேல் வித்தியாசம் வேறு.
திருமணத்திற்குப்பிறகு, காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட இவர், உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்குகொண்டதால் சிறையில் அடைக்கப்பட்டார்.
திகார் சிறையில் கைதிகளை நடத்தும் முறையில் பாகுபாடு இருப்பதை அறிந்து அதை நீக்க போராடியவர்.
இவருக்கு 1964ல் லெனின் அமைதி விருதும், இந்திய சிறந்த குடிமகள் விருதும், பாரத் ரத்னா விருதும், அவர் உருவ தபால் தலையும் வெளியிட்டு இந்திய அரசு கவுரவப்படுத்தியது.
இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து வெளிநாட்டு பெண்களும் போராடினார்கள். அவர்களில் சிஸ்டர் நிவேதா, மிர்ரா அல்சா, அன்னிபெசன்ட், மீரா பென் மற்றும் சர்ளா பென் ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள்.
தேவராஜன்

புதன், 4 ஆகஸ்ட், 2010

தேவராஜனின் மேஜிக் மேஜிக் பாகம் 2 ( 36 50)

தேவராஜனின் மேஜிக் மேஜிக் பாகம் 2 ( 36 50)
( தினமலர் சிறுவர் மலரில் வெளிவரும் என்னுடைய மேஜிக் தொடர்)
36. எலுமிச்சை பந்தாகும் மேஜிக்!
தேவையானப் பொருள்: எலுமிச்சை

செய்முறை:
டேபிள் முன்பாக நின்று கொண்டு ஒரு எலுமிச்சை எடுத்து பார்வையாளர்களிடம் காட்டி, இந்த எலுமிச்சையை கீழே வீசி, அதை பந்து போல மேலே எழுப்புகிறேன் என்று சொல்லி விட்டு, எலுமிச்சையை கீழே மெல்ல போடவும். சில நொடிகளில் கீழே விழுந்த எலுமிச்சை துள்ளி மேலே வரும். இதைக் கண்டு பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்.
மேஜிக் சீக்ரெட்:
இந்த மேஜிக் செய்யும் போது இடுப்பிலிருந்து உங்கள் பாதம் வரை மறைவாக இருக்க வேண்டும். அதற்கு முன்பக்கம் மறைப்புள்ள டேபிள் முன்பு மேஜிக் செய்ய வேண்டும். எலுமிச்சையை இடது கையில் எடுத்து மெல்ல தரையை நோக்கி கீழே போடும் போது, அந்த எலுமிச்சை கீழே விழும் முன்பாக வலது கையால் பிடித்து, அப்படி மேலே வீச வேண்டும். டேபிளுக்கு மேல் எலுமிச்சை வந்ததும் சட்டென்று இடது கையால் பிடித்துவிடவேண்டும். இந்த மறைமுக ரகசிய செயலை பல முறை ஒத்திகை பார்த்துவிட்டு யாரா வேண்டுமானாலும் செய்யலாம்!

37 . காலி பாட்டிலில் பால் மேஜிக்!

தேவையானப்பொருட்கள்: பால் பாட்டில், பால்
செய்முறை:
சிவப்புநிற பாட்டிஎடுத்து டேபிளில் வைக்கவும். அதில் பார்வையாளர்கள் முன்பாக பாலை ஊற்றவும். பிறகு, அந்தப் பாட்டிலில் இருந்து பாலை ஒரு டம்ளரில் வடிக்கட்டவும். முழுவதும் பால் வடிந்தப்பிறகு, காலியான பாட்டிலை தலைகீழாக கவிழ்த்து பாட்டிலில் சொட்டு பால்கூட இல்லை என்பதை தெளிவுபடுத்துங்கள். அதை அப்படியே சிறிது நேரம் கையில் வைத்திருங்கள். பிறகு உள்ளங்கையில் வைத்து குலுக்கவும். பாட்டிலை அப்படியே பார்வையில் கூர்மையாக பார்த்துக்கொண்டிருங்கள். பிறகு, பாட்டிலை வாய்ப்பக்கம் கொண்டு வந்து, பாட்டிலே ! பாலைக்கொட்டு! என்று சொல்லிவிட்டு பாட்டிலை தலைகீழாக கவிழுங்கள். பாட்டிலிருந்து பால் கொட்டும்! இதைப் பார்த்து பார்வையாளர்கள் வியந்து போவார்கள்!
மேஜிக் சீக்ரெட்: இந்த மேஜிக் செய்யும் முன்பாக பாட்டிலில் கால் பாகம் பாலை ஊற்றி, பிரிட்ஜில் ப்ரீசரில் வைத்து, பால் கட்டியாக ஆகும் வரை வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பாட்டில் கலர் சிவப்பு என்பதால் பால் கட்டியாக உறைந்திருப்பது யாருக்கும் தெரியாது. அதில் பாலை ஊற்றி வடிக்கட்டியதும், தலைக்கீழாக கவிழ்த்தாலும் உறைந்த பால்கட்டி கீழே விழாது. உள்ளங்கையில் வைத்து தேய்க்கும் போது உறைந்திருக்கும் கட்டி உருகிவிடும். இப்படி முழுவதும் உருகியதும் கவிழ்த்தால் பால் பாட்டிலிருந்து கொட்டும். இதில் ஹைலைட் பால் ஐஸ் ஆகி இருப்பதுதான்!

38 . உடல் நீளும் பூனை!
தேவையானப் பொருட்கள்: தீப் பெட்டி, பசை, கலர் ஸ்கெட்ச் பென்
செய்முறை: ஒரு தீப்பெட்டியை எடுத்து அதன் ஒரு பக்கத்தைக் காட்டுங்கள். அதில் பூனையின் தலைப் பகுதி மட்டும் இருப்பதை காட்டுங்கள். பின்னர், இந்தப் பூனையின் உடல் பகுதியை மேஜிக்கினால் காட்டுகிறேன் என்று சொல்லி தீப் பெட்டியை உள்ளங்கையில் வைத்து கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் பூனையின் கழுத்து பகுதியில் வைத்து அப்படியே நீளவாக்கில் நகர்த்துங்கள். நீங்கள் விரலை நகர்த்த நகர்த்த பூனையின் உடல் பாகம் நீண்டு கொண்டு வரும். இதைப் பார்த்து பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்.
மேஜிக் சீக்ரெட்:
தீப்பெட்டியில் வெளிப்புறத்தில் பூனையின் முகப்பகுதியை வரையவும். அதன் உட்புறம் உள்ள அட்டையின் அடிபாகத்தில் மேல் புறத்திற்கு இணையாக பூனையின் உடல் பாகத்தை வரையவும். மேஜிக் செய்யும் போது தீப் பெட்டியை உள்ளங்கையில்வைத்து இடது கை பெருவிரலால் உள்ள புற பெட்டியை தள்ளவும். அப்படி தள்ளும்போது உள் புற பெட்டி வெளியே நீளும் அதை வலது கை கட்டை விரல் மற்றும் ஆள்காட்டிவிரலால் இழுத்துக் கொண்டே அதே சமயம் பூனையின் படத்தை தவிர மீதி இடத்தை மறைத்துக்கொண்டே இழுத்தால் தீப்பெட்டியின் வெளிபுற படத்தோடு உள்புறத்தில் வரைந்து பெட்டியின் உடல் பாகமும் இணையும். விரலால் உள் பெட்டியை இழுக்க இதனால் பூனையின் உடல் பாகம் நீளுவதுபோல மாயா காட்சியை காட்டும். இதுதான் மேஜிக் சீக்ரெட்!


39 . பறக்கும் காகித பலுõன்!

தேவையானப்பொருட்கள்: பட்டர் சீட், மெல்லிய கம்பி, பசை, நுõல்கண்டு, தீப்பெட்டி, ரிப்பன் துணி
செய்முறை:
பட்டர் சீட்டை படத்தில் காட்டியவாறு வெட்டிக்கொள்ளவும். பிறகு பசை கொண்டு படத்தில் இருப்பது போல பலுõன் வடிவம் வருமாறு ஒட்டி, காயவிடவும்.
அடுத்து, கம்பியை எடுத்து வளைத்து குறுக்கும் நெடுக்குமாக இணைக்கவும். கம்பியின் மையப்பகுதியில் ரிப்பன் துணியை தீபந்தம் போல் சுருட்டவும். இந்த வளைய செட்டப்பில் நீங்கள் செய்த பேப்பர் பலுõனை சுற்றி ஒட்டவும். ஈரம் காய்ந்தப்பின், நண்பரின் உதவியுடன், தீக்குச்சியால் தீப்பந்தத்தை கொளுத்துங்கள்.
இப்பொழுது பலுõன் உப்பலாக விரிவடையும், நன்றாக விரிந்தப்பின் பலுõனிலிருந்து கையை விட்டு விடுங்கள். பலுõன் மாயமாய் சர்ர் என்று மேலே சென்று பறக்கும்! பார்த்து ரசியுங்கள்!
மேஜிக் சீக்ரெட்: காகித பலுõனின் வெற்றிடத்தில் தீ பந்தம் எரியும் போது, அது விரிவடைகிறது. விரியடையும் போது வெப்பம் கீழ்நோக்கி அழுத்தமாக வெளியேறும் போது பலுõன் மேல் நோக்கிச் செல்கிறது. தீ வெப்பம் முழுமையாக வெளியேறியதும் வெளிக்காற்று பலுõனில் உட் சென்று நிலையாக பறக்க வைக்கிறது.

40 . மாயமாகும் கிளாஸ்!

தேவையானப் பொருட்கள்: கண்ணாடி டம்ளர், பேப்பர்

செய்முறை: டேபிளில் கண்ணாடி டம்ளரை ஒன்றை வைக்கவும். அந்த டம்ளரில் மேல் பேப்பரை மூடி அழுத்தவும். அப்படியே இடது புறமும் வலது புறமும் நகர்த்தவும். பின்னர், ""இந்த பேப்பரில் இருக்கும் டம்ளர் மாயமாய் போகும் பாருல்கள் என்று'' சொல்லிவிட்டு, பேப்பர் மீது கையை வைத்து அழுத்துங்கள் பேப்பரில் மறைக்கப்பட்ட டம்ளர் மாயமாய் மறைத்திருக்கும்.
மேஜிக் சீக்ரெட்:
தடிமனான பேப்பரை டம்ளரில் வைத்து அழுத்தும் போது பேப்பரில் டம்ளரின் உருவம் பதியும். அதை டேபிளில் நகர்த்தும் போது லாவகமாக டேபிளின் முனைக்கு கொண்டுவந்து டம்ளரை மட்டும் எடுத்துவிடவேண்டும். பின்னர் டம்ளர் உருவத்தில் இருக்கும் பேப்பரை கண்ணாடி டம்ளர் இருப்பது போல நகர்த்தவேண்டும். பேப்பரை கையால் அழுத்தும் போது பேப்பரில் பதிந்துள்ள உருவம் நசுங்கிவிடும். இந்த செய்கையால் பேப்பரில் மறைத்து வைக்கப்பட்ட கிளாஸ் மாயமாய் மறைந்து விட்டது போல ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட வேண்டும்.

41 . மேஜிக் பணம்!
தேவையான பொருட்கள்:
10 ரூபாய் பணம்2, ஆப்பிள், கர்சீப், குத்துõசி, கத்தி
செய்முறை: 10 ரூபாயை பார்வையாளர்களிடம் காட்டி, ரூபாயில்"மேஜிக்' என்று எழுதி, அதையும் காட்டுங்கள். பிறகு கர்சீப்பில் பணத்தை வைத்து நான்காக மடியுங்கள். டேபிளில் அப்படியே வைத்துவிடுங்கள்.
பிறகு, ஒரு ஆப்பிள் எடுத்து,"" கர்சீப்பில் உள்ள 10 ரூபாய் இந்த ஆப்பிளில் எடுத்துக்காட்டுகிறேன்'' என்று கூறி ஆப்பிளை டேபிளில் வையுங்கள்.
கர்சீப்பை எடுத்து பார்வையாளர்களிடம் உதறிகாட்டுங்கள். அதில் இருந்த பணம் மாயமாய் மறைந்திருக்கும். பிறகு, ஆப்பிளை எடுத்து கத்தியால் வெட்டுங்கள். ஆப்பிளின் மத்தியில் 10 ரூபாய் இருக்கும். அதை எடுத்து அதில் எழுதியிருக்கும் "மேஜிக்' எழுத்தையும் காட்டுங்கள். பார்வையாளர்கள் வியந்துபோவார்கள்.
சீக்ரெட் மேஜிக்: முன் கூட்டியே கர்சீப்பில் ஓரத்தில் ஒரு செ.மீ. அளவுக்கு மடக்கி தைத்துக்கொள்ளவும். அதில் பணம் நுழையும் அளவுக்கு தையலைப் பிரித்துகொள்ளவேண்டும். குத்துõசியில் பணத்தை இறுக சுற்றி, ஆப்பிளின் அடிபாகம் வழியாக உள்ளே நுழைத்து, பிறகு ஊசியை மட்டும் வெளியே இழுத்துவிடவும்.
மேஜிக் செய்யும் போது கர்சீப்பில் பணத்தை வைத்து மடிக்கும் போதே பணத்தை கர்சீப் ஓரத்தில் செருகிவிடவேண்டும். இதனால் கர்சீப்பை எடுத்து உதறும் போது பணம் மாயமாய் மறைந்திருப்பதை பார்ப்பவர்கள் காண்பர். கர்சீப்பில் பணம் மறைத்து வைப்பதும், ஆப்பிளில் பணம் குத்துõசியால் நுழைப்பதும் பிறருக்கு தெரியாதவரை வெற்றிதான்!

42 . காபி குடிக்கும் காசு!
தேவையானப்பொருட்கள்: தட்டு, கண்ணாடி கிளாஸ், மெழுகு வர்த்தி, தீப் பெட்டி, ஒரு ரூபாய் காசு, காபி
செய்முறை:
ஒரு தட்டில் கொஞ்சம் காபியை ஊற்றவும். ஊற்றிய காபியில் ஒரு ரூபாய் காசு விடவும். காசுக்கு அருகில் ஒரு மெழுகு வர்த்தியை எரியவிடவும்.
இப்போது பார்வையாளர்களிடம் இந்த ஒரு ரூபாய் காசுக்கு ரொம்ப டயர்டா இருக்கு. இந்த தட்டில் இருக்கும் காபி யைஒரே மூச்சில் ஊறிஞ்சி குடிக்கும் பாருங்கள்'' என்று சொல்லி விட்டு, எரியும் மெழுவர்த்தி மீது கண்ணாடி கிளாசை வைத்து மூடுங்கள். சில நிமிடங்களில் தட்டில் இருந்த காபியை காசு முழுவதுமாக குடித்திருக்கும். கண் எதிரிலேயே தட்டில் இருந்த காபி மாயமாய் மறைந்தததை பார்த்து பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்.
மேஜிக் சீக்ரெட்: தட்டில் எரியும் மெழுகு வர்த்தியை கண்ணாடி கிளாசால் மூடிவிடுவதால் காற்று இல்லாமல் மெழுகு வர்த்தி அணைந்து அங்கே காற்றில்லாத வெற்றிடத்தை உருவாக்கிடும். அப்போது வெளியில் இருக்கும் காற்றை கண்ணாடி டம்ளரில் காற்றில்லா வெற்றிடம் உறியத்தொடங்கும் அப்போது காற்றுடன் காபியும் கண்ணாடி டம்ளருக்கும் சென்றுவிடும் இது தான் சீக்ரெட். கண்ணாடி டம்ளருக்குள் சென்ற காபியை காசு குடித்துவிட்டதாக நீங்கள் கதைவிடவேண்டும் அதா
ன் இந்த மேஜிக்கின் சாமர்த்தியம்!



43 . மேஜிக் காபி!

தேவையான பொருட்கள்

தண்ணீர், தண்ணீர் பாட்டில், காபி துõள், ஒயிட் நெயில் பாலீஷ்

செய்முறை:

ஒரு காலி பாட்டில் நண்பர்களிடம் காட்டுங்கள். அவர்கள் எதிரிலேயே அதில் பாதியளவு தண்ணீரை ஊற்றுங்கள். அதை நண்பர்களிடம் காட்டுங்கள். "" இந்த பாட்டிலில் இருக்கும் தண்ணீர் இப்போது மேஜிக் காபியாக மாறும். பாருங்கள்'' என்று சொல்லி விட்டு, பாட்டிலை தலைகீழாக சில நிமிடங்கள் கவிழ்துக்கொள்ளவும். பிறகு, பாட்டிலை நன்றாக குலுக்குங்கள்! நீங்கள் பாட்டிலை குலுக்க குலுக்க தண்ணீர் கொஞ்ச கொஞ்சமாக காபியாக மாறும். மூடியைத்திறந்து அந்த காபியை முகர்ந்து பார்க்கச் சொல்லுங்கள். காபி மணம் இருக்கும். பருகினாலும் காபி ருசியாக இருக்கும். இந்த மேஜிக் காபியை பார்த்து நண்பர்கள் அசந்துபோவார்கள்!
மேஜிக் சீக்ரெட்:
மேஜிக் செய்வதற்கு முன்பாக காபித்துõளை தண்ணீரில் குழைத்து கெட்டியாக பாட்டில் மூடியில் கால் வாசி உள்ளே பூசுங்கள். பிறகு வெயிலில் நன்றாக உலரவிட்டு, அதன் முகப்பகுதியில் ஒயிட் நெயில் பாலீசை மேற்பரப்பில் பூசுங்கள். இப்படி செய்தால் காபி துõள் இருப்பதாகவே தெரியாது. இயல்பான மூடி போலவே தெரியும்.
பாட்டிலில் தண்ணீரை நிரப்பி குலுக்கும் போது மூடியில் உள்ள காபி துõள் கரைந்து தண்ணீரில் கலக்கும் போது காபியாக மாறிவிடும்! இதில் மூடியில் மறைக்கப்பட்டிருக்கும் காபிதுõள் தான் சீக்ரெட்! இந்த ரகசியம் தெரியாத வரை மேஜிக் வெற்றிதான்!


44 . தண்ணீர் ஐஸ் கட்டியாகும் மேஜிக்!

தேவையான பொருட்கள்: காபி கப், ஸ்பான்ஞ், தண்ணீர், ஐஸ் கட்டி
செய்முறை: ஒரு கப் எடுத்து பார்வையாளர்களிடம் காட்டுங்கள். பிறகு, அதை தலைகீழாக கவிழ்த்துக் காட்டி, கப்பில் ஒன்றுமில்லை என்பதை தெளிவுபடுத்தவும். அடுத்ததாக, கப்பில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றவும். கை விரலால் கலக்கவும்.
ஒரு சில விநாடிகள் கழித்து, "இந்த கப்பில் ஊற்றிய தண்ணீர் மாயமாய் மறைத்து அதை ஐஸ் கட்டியாக மாற்றிகாட்டுகிறேன்' என்று சொல்லிவிட்டு கப்பை தலைக்கீழாக கவிழ்க்கவும். கப்பில் இருந்து தண்ணீர் கொட்டாது. பின்னர் கப்பை நிமிர்த்தினால் உள்ளே ஐ கட்டி இருக்கும். இதைக் கண்டு பார்வையாளர்கள் வியந்துபோவார்கள்.
மேஜிக் சீக்ரெட்:
மேஜிக் செய்யும் முன்பாக கப்பில் கொஞ்சம் ஐஸ் கட்டியை வைத்து, அதன் மேல் ஸ்பான்ஞ் வைத்து அழுத்தமாக திணித்துக்கொள்ள வேண்டும். கப்பை கவிழ்க்கும் போது ஸ்பான்ஞ் கீழே விழாது. அடுத்து தண்ணீர் ஊற்றும் போது அந்தத் தண்ணீரை ஸ்பான்ஞ் உறிஞ்சுவிடுவதால் கப்பில் தண்ணீர் இருக்காது. விரலால் கலக்கும் போது ஸ்பான்ஞ் கொஞ்சம்விலக்கி விடவும். கப்பை கவிழ்க்கும் போது ஐஸ் கட்டி கீழே விழுந்து விடும். இந்த மேஜிக்கை கவனமாக செய்தால் நீங்களும் அசத்திக்காட்டலாம்!


45 . வெட்டிய படம் ஒன்று சேர்க்கும் மேஜிக்
தேவையானப்பொருட்கள்: பேப்பர், ஒரு சிறுமி படம், கத்திரிகோல்
செய்முறை: மடிக்கப்பட்ட ஒரு பேப்பரை எடுத்து பார்வையாளர்களிடம் காட்டுங்கள். அடுத்து ஒரு சிறுமி படத்தை எடுத்து பார்வையாளர்கள் கண் முன்பாக அதை மடிக்கப்பட்ட தாளில் உள்ளே செலுத்துங்கள். பின்னர் கத்திரி கோலால் குறுக்கு வசத்தில் வெட்டுங்கள். "" இந்த பேப்பரில் இருக்கும் சிறுமி படத்தையும் சேர்த்து தான் வெட்டுகிறேன். ஆனால் இந்த மேஜிக் கத்திரிகோலால் சிறுமி படம் வெட்டப்பட்டாலும் உடனே ஒன்று சேர்ந்துவிடும் பாருங்கள்'' என்று சொல்லிவிட்டு பாதியாக வெட்டிய பேப்பரை விலக்கி விட்டு, உள்ளே சிறுமி படத்தை வெளியே எடுத்துக்காட்டுங்கள். சிறுமி படம் குறுக்கே வெட்டப்படாமல் இருப்பது கண்டு எல்லாரும் ஆச்சரியப்படுவார்கள்.
மேஜிக் சீக்ரெட்:படம்2ல் காட்டியவாறு ஒரு பேப்பரை எடுத்து ரோலாக வெட்டிக்கொள்ளவும்.படம் 3ல் காட்டியவாறு குறுக்கு வசமாக மடித்து மத்தியில் ஒரு அங்குல இடைவெளியில் இருபுறமும் பாதி வெட்டிக்கொள்ளவும். படம் 4ல் காட்டியவாறு வெட்டப்பட்ட துளையில் சிறுமி படத்தை நுழைக்கவும். படம் 5ல் இருப்பது போல பின்புறம் இருக்க வேண்டும். படம் 6 ல் காட்டியவாறு கத்திரகோலால் வெட்டவும். இவ்வாறு கத்திரி கோலால் வெட்டும் போது நடுவில் இருக்கும் சிறுமி படம் வெட்டப்படாமல் இருக்கும். இதில் மடிக்கப்பட்ட தாளின் அடிபக்கத்தில் வெட்டப்பட்ட இடை வெளியில் கவனமாக சிறுமி படத்தை நுழைப்பது தான் மேஜிக் சீக்ரெட்!



46 . பெரிது சிறிதாகும்; சிறிது பெரிதாகும் மேஜிக்

தேவையானப்பொருட்கள்: தடிமனான இரு அட்டை. ஸ்கெட்ச் பென், ஸ்கேல், பேப்பர்

செய்முறை: சம அளவில் இரு கோடுகள் வரைந்து கொள்ளவும். இருகோடுகளுக்கு வேறு வேறு வண்ணம் தீட்டவும். 1 முதல் கோட்டுக்கு "எ' என்றும் 2 வது கோட்டுக்கு "பி ' என்று குறிப்பிடவும். படத்தில் உள்ளது போல 1 வது கோட்டின் இரு முனைகளில் விரிந்திருக்கும்படி ஆரோ வரையவும். 2 வது கோட்டின் இருமுனையிலும் குவிந்திருக்கும் ஆரோ வரையவும். இரண்டையும் உங்கள் நண்பர்களிடம் காட்டி "" இதில் எ கோடு நீளமா? பி கோடு நீளமா'' என்று கேளுங்கள். அவர்கள் எல்லாரும்' எ' தான் நீளமான கோடு என்பார்கள். அதுபோல "இதில் எந்த கோடு சிறியது?'' என்று கேளுங்கள் "பி' கோடுதான் சிறியது என்பார்கள். நீங்கள் இருபதிலுமே தவறு. இந்த இரு கோடுகளும் சம நீளம் கொண்டவை என்று சொல்லிவிட்டு இருகோடுகளில் உள்ள அம்பு குறிகளை மறைத்து கிடைமட்ட கோட்டை மட்டும் காட்டுங்கள். இரண்டு கோடுகளும் சம அளவில் இருப்பதை பார்த்து வியப்பார்கள்.
மேஜிக் சீக்ரெட்:
முதல் கோட்டில் போடப்பட்டுள்ள அம்பு குறி விரிந்த நிலையில் இருப்பதால் நீளமானது போல மாய தோன்றத்தை ஏற்படுத்திவிடுகிறது. 2 வது கோட்டில் உள்ளடங்கிய அம்பு குறி அமைப்பு நீளம் குறைவான போல மாய தோற்றத்தை தந்துவிடுகிறது. இதில் பார்வையை கிடைமட்ட கோட்டில் கூர்ந்து கவனம் செலுத்தினால் இரண்டு கோடுகளும் சமமானதுதான் என்பது விளங்கும்.



47 . மாயமாய் மறையும் காசு!
தேவையான பொருள்: 25 பைசா காசு

செய்முறை: பார்வையாளர்களிடம் <உங்கள் இருகைகளையும் படம் 1 உள்ளது போல விரித்து காட்டுங்கள். "" கையில் எதாவது இருக்கிறதா?'' என்று கேட்கவும். அவர்கள் ஒன்றுமில்லை என்பர். பின்னர் படம்2 இருப்பது போல புறங்கையை காட்டுங்கள். ""இப்போதும் கையில் எதாவது உள்ளதா'' என கேட்கவும். பதில் இல்லை என்றுதான் வரும். பிறகு அப்படியே இருகைகளின் விரல்களை மடக்கிக்கொள்ளவும். முதலில் இடது கை விரல்களை விரியுங்கள்."" உள்ளங்கையில் எதாவது இருக்கிறது?'' என்று கேளுங்கள். அவர்கள் ஒன்றுமில்லை என்பர். அடுத்து, வலது உள்ளங்கை விரங்களை விரியுங்கள். உள்ளங்கையில் 25 பைசா காசு இருக்கும். அதைப்பார்த்து பார்வையாளர்கள் வியந்துபோவார்கள்.
மேஜிக் சீக்ரெட்: இந்த மேஜிக் ஒரு தந்திர வித்தை. மேஜிக் செய்யும் முன் ஆள்காட்டி விரல், நடுவிரலுக்கு இடையில் 25பைசாவை வைத்து அதன் விளிம்பு பகுதியில் இறுக்கமாக அணைத்துக்கொள்ளவேண்டும்.இப்போது காசு புறங்கை பக்கம் நீண்டு இருக்கும். நீங்கள் காட்ட வேண்டிய பகுதி உள்ளங்கை பக்கம். புறம் கையை திருப்பும்போது லாவகமாக விரல்களை மெல்ல விலக்கி காசை உள்பக்கம் கொண்டுவந்துவிடவேண்டும். இப்போது காசு உள்ளங்கை பக்கம் நீண்டு இருக்கும். இப்போது நீங்கள் காட்டுவது புறங்கை பக்கம். புறங்கையை மடக்கும் போது விரலுக்கு இடையில் உள்ள காசை உள்ளங்கைக்கு கொண்டு வந்துவிடவேண்டும்.


48 . பூனையை ஏமாற்றும் எலி!
தேவையானப் பொருட்கள்: தீப் பெட்டி, பசை, எலி படம், பூனை படம்
செய்முறை: படத்தில் காட்டியுள்ளது போல் தீப்பெட்டியின் மேல் பகுதியில் பூனையின் படத்தை ஒட்டிக்கொள்வும். பிறகு, தீப்பெட்டியின் உள்ளே இருக்கு டிராயரை வெளியே எடுத்து அதன் அடிப்பகுதியில் எலியின் படத்தை ஒட்டவும். எலி, பூனை படம் எதிரும் புதிருமாக இருக்குமாக படத்தில் உள்ளதுபோல கவனமாக ஒட்டவேண்டும்.
இந்த செயல்கள் முடிந்ததும், பார்வையாளர்களிடம் தீப்பெட்டியைக்காட்டி, " இந்த தீப்பெட்டியில் இருக்கும் பூனை இப்போது ஒரு எலியை பிடிக்கப் போகுது பாருங்கள்' என்று சொல்லி தீப்பெட்டியின் டிராயரை வலது புறம் தள்ளுங்கள். பூனைக்கு எதிராக ஒரு எலி வந்து நிற்கும். பார்வையாளர்கள் ஆச்சரியபடும் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, "இப்போது பாருங்கள் எமகாதக எலி பூனையை ஏமாற்றி ஓடிவிடும்' என்று சொல்லி தீப்பெட்டியின் டிராயரை இடது புறம் தள்ளுங்கள். எலி பூனையின் வால் பகுதியில் இருக்கும். பார்வையாளர்கள் இதைப் பார்த்து வியந்துபோவார்கள்.

மேஜிக் சீக்ரெட்: இந்த மேஜிக் செய்வது மிக சுலபமானது. இதில் மேஜிக் சீக்ரெட் தீப்பெட்டியில் ஒட்டப்படும் பூனை, எலி படத்தின் திசை தான்! பூனையும் எலியும் நேருக்கு நேர் பார்க்கும்படி ஒட்டியிருப்பதால் வலது புறம் தள்ளும் போது பூனையும் எலியும் நேரு நேர் தெரியும். இடது புறம் தள்ளும் போது எலி இடது புறம் நகருவதால் பூனையின் வால் பக்கம் சென்றுவிடும்.

49 . தண்ணீரில் தெரியும் மேஜிக் ஸ்டார்!

தேவையான பொருட்கள்:
ஒரு சில்வர் தட்டு அல்லது கப், மிளகு துõள், கொஞ்சம் தண்ணீர், குளியல் சோப்

செய்முறை: சில்வர் தட்டில் கால் பகுதி தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும். அந்த தண்ணீரில் மிளகு துõள் ஒரு டீஸ்பூன் அளவு துõவ வேண்டும். இவ்வாறு செய்தப்பிறகு, நண்பர்களிடம், ""இப்போது பாருங்கள் இந்த தட்டின் தண்ணீர் மேல் பரப்பில் சட்டென்று ஒரு மேஜிக் ஸ்டார் வரும் பாருங்கள்'' என்று சொல்லிவிட்டு, பக்கத்தில் இருக்கும் சோப்பில் கை விரலை தேய்த்து விட்டு, அதே விரலால் தட்டில் இருக்கும் தண்ணீரில் நனைத்து விட்டு விரலை எடுத்து விடுங்கள். நீங்கள் விரலை எடுத்ததும், தட்டில் உள்ள தண்ணீர் பரப்பில் மாயமாய் ஒருஸ்டார் உருவாகி பின்பு களைவதைப் பார்க்கலாம். தண்ணீரில் மாயமாய் தோன்றி மறைந்த ஸ்டாரைப் பார்த்து நண்பர்கள் மகிழ்வார்கள்!

மேஜிக் சீக்ரெட்:
மிளகில் இருக்கும் வேதிப்பொருட்கள் சோப்புடன் சேரும்போது தண்ணீருக்கும் மிளகு துõளுக்கும் இடையே இருக்கும் ஒட்டும் தன்மை குறைத்து விடுகிறது. சோப்பில் இருக்கும் வேதிப்பொருள் தண்ணீரின் மேற்பரப்புடென்ஷனை தள்ளுகிறது இந்த தள்ளு விசையால் சோப்பை விட்டு மிளகுதுõள் தண்ணீர் பரப்பில் தத்தி ஓடுகிறது. தண்ணீர் தட்டில் வட்ட அமைப்பில் இருப்பதால் தண்ணீரின் மேற்பரப்பில் ஸ்டார் போன்ற தோற்றம் ஏற்படுகிறது.


50 . பென்சில் மேஜிக்
தேவையான பொருட்கள்: பென்சில்
செய்முறை:
பார்வையாளர்களிடம் கை விரித்து காட்டுங்கள். பிறகு இருகையும் சேர்த்து கை தட்டுங்கள். பின்னர், ஒரு பென்சிலை எடுத்துக்காட்டுங்கள். ""இந்த பென்சில் இப்போது எந்தபிடிமானமும் இல்லாமல் உள்ளங்கையில் நிற்கும் பாருங்கள்'' என்று சொல்லிவிட்டு பென்சிலை உள்ளங்கையில் வைத்து இறுக்கிபிடியுங்கள். பிறகு திரும்பிக்கொண்டு ஒவ்வொரு விரலாக விரியுங்கள், முடிவில் எல்லா விரலையும் விரித்துவிடுங்கள். பென்சில் கீழே விழாமல் உள்ளங்கையில் ஒட்டிக்கொண்டு நிற்பதைப் பார்த்து பார்வையாளர்கள் வியந்து போவார்கள்.
மேஜிக் சீக்ரெட்: வலதுஉள்ளங்கையில் பென்சிலை வைத்து அழுத்தும் போதே மெதுவாக வலது கை மணிகட்டில் இடதுகை வைத்து பிடிமானம் கொடுத்து ஆள் காட்டி விரலை மட்டும் வலது உள்ளங்கையில் உள்ள பென்சில் மேல் அழுத்திபிடித்துக்கொள்ள வேண்டும். நாம் திரும்பி நின்று மேஜிக் செய்வதால் உள்ளங்கை பகுதி தெரியாது. அத்துடன் ஆள்காட்டி விரல் பென்சிலை பிடித்திருப்பதும் தெரியாது. இது தெரியாமல் இருப்பது தான் இந்த மேஜிக்கின் ஹைலைட் சீக்ரெட்!

கதையை கேளு விடையை யோசி பாகம் 2 (21 32)

கதையை கேளு விடையை யோசி பாகம் 2 (21 32)

(தினமலர் சிறுவர் மலரில் வெளிவந்துக்கொண்டிருக்கும் என்னுடைய தொடர்)

21. " செம்மொழி மாநாடுக்காக ஸ்கூல் லீவுவிட்டாங்க. கோவையில் செம்மொழிமாநாடு எல்லாம் நடந்தது. தமிழ் மொழி தெரியும். அதென்ன செம்மொழி?'' என்று தாத்தாவிடம் சந்தேகம் கேட்டாள் சாயிபவித்ரா.
பேத்தியின் தலைவருடியவர் "" செம்மொழி என்றால் மிக பழமையான மொழின்னு அர்த்தம். நம் தமிழ்மொழி கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது. அதனாலதான் முன்தோன்றி மூத்தமொழி தமிழ்ன்னு சொல்வாங்க'' என்றார் தாத்தா.
""ரொம்ப பழமையான மொழி எல்லாம் செம்மொழியா தாத்தா?'' என்றாள் திவ்யா.
"" அப்படியில்ல. பழமையுடன் அந்த மொழியின் இலக்கியம் கருத்து வளம் மிகுந்ததாகவும் அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும்.'' என்றதாத்தாவிடம், "" தாத்தா கொஞ்சம் புரியும்படி சொல்றீங்களா?'' என்றாள் அனுஷா.
""ஒரு மொழியின் சிறப்பிற்கு முதல் அடையாளமாக இருப்பது அம்மொழியின் பழமை வாய்ந்தஇலக்கியங்கள்தான். அத்துடன்
அந்த மொழி சார்ந்த பகுதிகளில் உருவாக்கப்பட்ட கலைப்படைப்புகளான கட்டிடக்கலை, சிற்பக்கலை போன்றவை அந்த மொழியின் பழமையை உணர்த்தும் கலைச்சான்றுகளாக இருக்கவேண்டும். இவை எல்லாம் இருந்தால் மட்டுமே அது செம்மொழி என கருதப்படுகிறது'' என்றார் தாத்தா.
"" தமிழுக்கு செம்மொழி தகுதி தந்த பழமையான இலக்கியங்கள் எனென்ன தாத்தா?'' என்றாள் பிரியா.
"" தமிழின் செம்மொழி தகுதிக்கு சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்கணக்கு நுõல்கள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் போன்றவை உள்ளன.'' என்றார் தாத்தா.
"" வேறு என்ன மொழிகள் செம்மொழின்னு தகுதி பெற்றிருக்கிறது?'' என்று கேட்டான் மூர்த்தி.
"" உலகில் 8 மொழிகள் செம்மொழி தகுதி பெற்றிருக்கிறது. கிரேக்கம், சமஸ்கிருதம், லத்தீன், அரபு, எபிரேயம், தமிழ், சீன மொழியாகும்'' என்றார் தாத்தா
"" தமிழை செம்மொழின்னு அறிவிக்க ஏன் 100 வருஷமா போராடணும்?'' என்று கேட்டாள் திவ்யா.
"" கிரேக்கம், லத்தீன், சீனம் பாரசீகம் போன்ற மொழிகளைக்காட்டிலும் தமிழ் பழமையானதும் கருத்துவளமும் உடையதுதான். ஆனால் அவற்றிற்கு இருந்த சிறப்பு வாய்ந்த கட்டிடக்கலை சான்றாக உள்ளது. தமிழுக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பு தரையில் புதையுண்ட மொகஞ்சாதரா, ஹரப்பா கட்டிடக்கலைகள் ஆரிய கலையா, திராவிடக்கலையா? என்பதில் குழப்பம் நீடித்ததால் இப்படி ஒரு குழப்பம் வந்தது என்றார் தாத்தா.
குட்டீஸ் கதை வாசித்தீங்களா? இப்ப 2 கேள்விக்கு விடை யோசிக்கங்க.
1. செம்மொழி மாநாடு எங்கு நடைபெற்றது?
2. உலக செம் மொழிகள் எண்ணிக்கை எத்தனை?
விடை: 1.கோவை 2. 8



22 . ""தாத்தா வீட்டில் இருக்க போரடிக்குது. எங்கேயாவது கூட்டிட்டு போறீங்களா?'' என்றாள் சாயிபவித்ரா.
"" சரி, கிளம்புங்க நம்ம தோப்புக்குப் போகலாம்.'' தாத்தா சொன்னதும் பேரப்பிள்ளைகள் "ஹை ஜாலி!' என்று சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தனர்.
தாத்தா வயக்காட்டுப்பக்கம் இருக்கும் தோப்புக்குப் பேரப்பிள்ளைகளை அழைத்துச் சென்றார்.
"" ஆஹா! என்ன ஜில்லுன்னு காற்று! எங்கு பார்த்தாலும் பச்சைபசேள்ன்னு இருக்கே!'' என்று அனுஷா வியக்க.
"" ஏ, திவ்வா! அங்க பாரு அந்த மரத்தில் குயில்!'' ஆச்சரியத்தில் குரல்கொடுத்தான் மூர்த்தி.
""மரம்னா என்ன? அது எப்படி வளருது?'' என்று கேட்டாள் பிரியா.
மரம் என்பது அளவிற் பெரிய பல்லாண்டுத் தாவரம் . இது நிலத்தில் ஒரு விதையிலிருந்து தோன்றி, இடம்விட்டு தானே நகராது, நிலைத்து வளரக்கூடிய ஒரு நிலைத்திணை வகை.
பொதுவாக முதிர்ந்த நிலையில் 4.5 மீட்டர் உயரமிருக்கும். ஒருமரத்தின் கிளைகள்,இலைகள், பூக்கள் நிலத்தோற்றத்திற்கு அழகை தரக்கூடியது. '' என்றார் தாத்தா.
""கல் மரம்னு சொல்றாங்களே அப்படின்னா என்ன?'' என்று அருண் கேட்டான்.
"" மரங்கள் நீண்டகாலம் வாழக்கூடியவை. சில வகை மரங்கள் 100 மீட்டர் வரை உயரம் வரை வளரக்கூடியவை. சில ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலும் வாழக்கூடியவை. அபூர்வமாக சில மரங்கள் பல்லாண்டுகள் இருந்து காலபோக்கில் கல்லாகிப்போவதுண்டு. அதைதான் கல் மரம்ன்னு சொல்றாங்க.'' என்றார் தாத்தா.
"" மரத்துக்கு இலைகள், கிளைகள், வேர்கள் எதுக்கு இருக்கு?'' என்றாள் சாயிபவித்ரா.
""சிறுகிளைகள், இலைகள் என்பவை மரத்தின் பகுதி. மரத்தண்டு, தாங்குவதற்கும், நீர் உணவு முதலியவற்றை கடத்துவதற்கும் உதவும். இதில் மரம் வளரும்போது ஆண்டு வளையங்கள் உருவாகுகின்றது. இந்த வளையங்களை எண்ணுவதன் மூலம் மரத்தின் வயதைக்கணிக்க முடியும். மரத்தின் வேர்கள் நிலத்தடியிலேயே காணப்படும். இவை மரம் நிலத்தைப் பற்றி பிடித்துக்கொள்ள உதவுவதுடன் மண்ணிலிருந்து நீர் மற்றும் போஷாக்குகளை உறிஞ்சவும் பயன்படுகிறது.'' என்றார் தாத்தா.
""மரம் பத்தி வேறு எதாவது செய்தியிருக்கா தாத்தா?''
"" பனை, தென்னை, பாக்கு போன்ற மரங்களுக்கு கிளைகள் கிடையாது.
வாழை, மூங்கில் மரம் என்றாலும் அது தாவர இனம். சில மரம் பூப்பதில்லை. சிலமரம் காய்ப்பதில்லை. சில மரம் கிளைகளை வெட்டி ஊன்றினால் வளரக்கூடியது'' என்றார் தாத்தா.
"" தோப்புக்கும் காடுக்கும் என்ன வித்தியாசம்?'' என்றாள் திவ்யா.
ஒன்றாக வளரும் சிறு கூட்டம் மரங்கள் தோப்பு. பெரியதொரு நிலப்பரப்பில் மரங்கள் அடர்ந்திருக்கும் போது அது காடு'' என்று சொல்லி முடித்தார் தாத்தா.
குட்டீஸ் கதை வாசித்தாச்சு. இப்ப கேட்கிற கேள்விக்கு பதில் கண்டுபிடிக்கலாமா?
1. கிளை இல்லாத மரங்கள் எவை?
2. மரம் என்ற தாவரம் எது?
விடை:1. பனை, தென்னை, பாக்கு மரம் 2. வாழை, மூங்கில்


23. கும்பகோணம் சென்றுவந்த தாத்தா, விசிறி வாங்கிவந்தார். அந்த விசிறி கலை நயத்துடன் அழகாக இருந்தது.
"" தாத்தா, இந்த விசிறி ரொம்ப அழகா இருக்கே?'' என்றாள் சாயிபவித்ரா.
"" மதுரைன்னா மல்லி. நெல்லைன்னா அல்வா. திருப்பாச்சின்னா அருவா மாதிரி திருபனந்தாள் என்றால் விசிறிக்கு பிரசித்தி. இதை திருபனந்தாள் விசிறின்னு சொல்வாங்க.'' என்றார் தாத்தா.
"" இதன் விலை என்ன?'' என்று கேட்டாள் அனுஷா.
"" அந்தக்காலத்துல நாலணா, எட்டணாவுக்கு வாங்கலாம். இப்ப இருக்கிற விலைவாசியில ஒரு விசிறி 5 ரூபாய் ஆயிட்டு'' என்றார் தாத்தா.
"" நாலணா, எட்டணாவா அப்படின்னா என்ன?'' புரியாமல் கேட்டான் மூர்த்தி.
"" எங்க காலத்துல அதாவது 1957 க்கு முன்பு 192 காசு ஒரு ரூபாய்ன்னு இருந்தது. அப்ப இருந்த வழக்குபடி அரையணா, 1 அணா. 2 அணா, 4 அணா, 8 அணா, 12 அணா, 16 அணான்னு சொல்வாங்க. 16 அணா ஒரு ரூபாய். ஒரு அணா= 6பைசா. 1 பைசா = 3 காசு. இப்ப 100 பைசா 1 ரூபாய்.'' என்றார் தாத்தா.
"" அணா பழக்கம் ஏன் போச்சு? பைசா பழக்கம் எப்ப வந்தது?'' ஆர்வமாய் கேட்டாய் திவ்யா.
""ஏப்ரல் 1,1957ல் எல்லா அளவீடுகளும் டெசிமலிசேசன் ஆக்கினாங்க. அதன்படி ஒரு ரூபாயை 100 நயா பைசாவா பிரிச்சாங்க. இதில் நயா போய் 1967க்கு பின் பைசா மட்டும் பெயராச்சு.'' என்றார் தாத்தா.
"" ரூபாய் நோட்டு அப்ப இல்லையா?'' என்று கேட்டாள் பிரியா.
""முதல்ல ரூபாய் நோட்டு பேங்க் ஆப் பெங்கால்தான் பிரிண்ட் பண்ணாங்க. ஒருபக்கம் மட்டும் அச்சிடப்பட்ட 100, 250, 500 ரூபாய் நோட்டுகள்வெளிவந்தது.
1867ல் பிரிட்டீஷ் இந்தியாவின் 5,10,20,50, 100, 500, 1000, 10,000 ரூபாய் நோட்டுகள் பிரிண்ட் பண்ணாங்க.அந்த நோட்டுகளில் விக்டோரியா ராணி படம் இருந்தது.
கல்கத்தாவில் 1935 ஏப்ரல்1ல் ரிசர்வ் பேங்க ஆப் இண்டியா ஆரம்பிக்கப்பட்டது. இது முதல்முதலாக 5 ரூபாய் அச்சிட்டது. ஜார்ஜ் 6 படத்துடன் 1938 ல் 10, 100, 1000,1000,10000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. 1940களில் செகண்ட் கவர்னர் சர் ஜேம்ஸ் டைலர் கையெழுத்திட்டப்பட்ட நோட்டுகள் வெளிவந்தது.
குடியரசு இந்தியாவில் 1949ல் மகாத்மா காந்தி படமும் அசோக முத்திரையும் கவர்னர் கையெழுத்திடப்பட்டு வெளிவந்தது. 16இந்திய மொழிகள் நோட்டுகளில் அச்சடிக்கப்பட்டிருந்தன.'' என்றார் தாத்தா.
குட்டீஸ் கதை வாசித்தாச்சு. 2 கேள்விக்கு விடை என்ன யோசிக்கிறீங்களா?
1. இப்ப 8அணா மதிப்புஎன்ன?
2. ரூபாய் நோட்டில் எத்தனை இந்திய மொழிகள் இடம் பெற்றுள்ளன?
விடை : 1. 50 பைசா 2. 16

24 . மாலைப்பொழுதில் பேரப்பிள்ளைகளை நஞ்சை, புஞ்சை வயல் வெளிக்கு அழைத்து வந்தார் தாத்தா. பார்க்கும் துõரம் வரை பசுமையாக இருந்தது.
""தாத்தா தமிழரின் பாரம்பரிய தொழில் விவசாயம் தானே! எதுக்கு இந்த தொழிலைவிட்டு எல்லாரும் நகரத்திற்கு போறாங்க?'' என்று ஆரம்பித்தான் மூர்த்தி.
"" பாருக்கெல்லாம் பசிபோக்கும் தொழில் விவசாயம். இந்தக்காலத்து இளைஞர்கள் படிச்சு பட்டமெல்லாம் வாங்கிட்டதாலும், சரியாக காவிரி தண்ணீர் வரத்து இல்லாததாலும், விவசாயத்தை விட்டுட்டு வேற தொழிலுக்கு போயிடறாங்க'' என்றார் வருத்தமுடன் தாத்தா.
""தமிழர் நாகரீகம் பற்றி சொல்லுங்க தாத்தா'' என்றாள் திவ்யா.
""தமிழர் நாகரீகம் மிக பழமையானது. அது லெமூரியா கண்டத்தில் தொடங்கி, பின்னர் வடக்கு நோக்கி கபாடபுரத்தில் இடைச்சங்கத் தொல்காப்பியமாக வளர்ந்தது. கி.மு. 2 ஆயிரத்தில் மீண்டும் கடல்கொண்டதால் வடக்கு நோக்கி மதுரைவரை வளர்ந்தது. இப்படி வழிவழியாக வந்த தமிழர்கள் 7 கோடிக்கும் மேல் தமிழகத்திலும், ஈழத்திலும் என 75 நாடுகளில் வாழ்கிறார்கள்'' என்றார் தாத்தா.
""தமிழரின் பண்பாடு கலாசாரம் எது தாத்தா?'' என்றாள் அனுஷா.
"" 2 ஆயிரம் ஆண்டுக்கு முன்பே "எல்லா ஊரும் எனது ஊரே; எல்லாரும் எனது <உறவினர்' என்பது தமிழன் பண்பாடு என்று பாடிவைத்திருக்கிறார்கள். வீரமும் காதலும் அதாவது அகம் புறம் என்று கொள்கையில் தமிழர்கள் வாழ்ந்திருக்காங்க.'' என்றார் தாத்தா.
""தமிழருக்குன்னு நடனம் , இசை, கலை, சமயம் எல்லாம் இருக்கா தாத்தா?'' என்றாள் சாயிபவித்ரா.
"" சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட கூத்துதான் தமிழரின் பாரம்பரிய நடனம். சிலம்பிலும், தொல்காப்பியத்திலும் கூறப்பட்டுள்ள தமிழ் மரபிசை, இலக்கணங்கள் தான் தமிழிசை. இறைவனை உருவகப்படுத்தும் தமிழ்கலைஞனின் சிவ நடராச வடிவம்தான் கலை. திருக்குறள் காட்டும் உள்ளிருக்கும் இறைமையை, உள்ளொளியை உணர செய்யும் அனைத்து வழிபாடு முறைகளும் தமிழரின் சமயம்'' என்றார் தாத்தா.
""தமிழரின் நுõல் எது?'' என்று கேட்டாள் பிரியா.
"" கி.மு. 2 ஆயிரம் ஆண்டுக்கு முன்பே எழுதப்பட்ட தமிழரது வாழ்வுக்கும் மொழிக்கும் ஒருங்கே இலக்கணம் தந்த தொல்காப்பியமும், திருக்குறளும்தான் நமக்கான நுõல்'' என்றதும், "" நல்ல விஷயங்கள் எல்லாம் எங்களுக்கு சொல்லியிருக்கீங்க. நன்றி தாத்தா'' என்று அருணுடன் சேர்ந்து குரல்கொடுத்த பேரப்பிள்ளைகளை ஆசையாக அனைத்துக்கொண்டார் தாத்தா.
குட்டீஸ் கதை படிச்சாச்சு. 2 கேள்விகளுக்கு விடையை யோசிக்கலாமா?
1. தமிழ் நாகரீகம் தொடங்கிய முதல் இடம் எது?
2. தமிழரின் பழந்தமிழ் நுõல்கள் எது?
விடை: 1. லெமூரியா கண்டம் 2. தொல்காப்பியம், திருக்குறள்.

25 . தன் பேரக்குழந்தைகளிடம் அந்தக்காலத்தில் இருந்த கல்வி முறையை விளக்கிக்கொண்டிருந்தார் தாத்தா.
"" நாங்க எல்லாம் திண்ணை பள்ளிக்கூடத்தில் தான் படிச்சோம். முதல்ல படிக்க சேரும் போது தரையில் நெல் பரப்பி அதில் கையைப் பிடித்து "அ' எழுதவைச்சு சொல்லிக்கொடுக்க ஆரம்பிப்பார் உபாத்தியார்.உங்களை போல நோட்டு, பேனா எல்லாம் பயன்படுத்தியதில்லை.'' என்றார் தாத்தா.
"" அந்தக்காலத்தில் பள்ளிக்கூடம் கிடையாதா தாத்தா?'' என்று கேட்டாள் சாயிபவித்தரா. பக்கத்தில் இருந்த அனுஷா, "" குருகுலக்கல்வின்னா என்ன?'' என்றாள்.
"" அந்தக்காலத்தில் பள்ளிகூடம் அதிகம் கிடையாது. குருகுலகல்வியில் கல்வி போதிக்கும் குருவின் வீட்டிலேயே படிப்பவர் தங்கி சகல கலைகளையும் கற்றுக்கொள்வதாகும்.'' என்றார் தாத்தா.
""தமிழகத்தில் முதல் முதலா எங்கே பள்ளிக்கூடம் ஆரம்பிச்சாங்க தாத்தா?'' என்று கேட்டாள் திவ்யா.
"" நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் தான் 1707ல் முதல் பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டது.'' என்றபோது முந்திரிக்கொட்டையாய் மூர்த்தி, "" அந்தப் பள்ளிக்கூடத்தில் என்ன சொல்லிக்கொடுத்தாங்க?'' என்றான்.
"" தமிழ், கணிதம், சமயப்பாடங்கள் சொல்லிக்கொடுத்தாங்க. 500க்கு மேல் மாணவர்கள் படித்தாங்க. அப்போதே பெண்களுக்கான தனி பள்ளிக்கூடமும் தொடங்கப்பட்டது. அதில் பாடத்துடன் தையற்கல்வியும் போதிக்கப்பட்டது.'' என்றார் தாத்தா.
"" இந்த பள்ளிக்கூடத்தை யார் தாத்தா ஆரம்பிச்சது?'' என்று கேட்டாள் பிரியா.
"" டென்மார்க் மன்னன் 4ம் பிரடெரிக்கு டேனியலுக்கு சொந்தமான தரங்கம்பாடி மக்களுக்கு சீர்திருத்த கிருஷ்தவ சமயத்தை அறிமுகப்படுத்த ஆசை. அதற்காக ஜெர்மனி ஹலே பல்கலைகழக மாணவர்களான சீசன்பால்க், புளூசோவை 1706ல் ஜெர்மன் செலவில் தரங்கம்பாடிக்கு அனுப்பி வைத்தார். அவர்கள்தான் அந்தப் பள்ளிக்கூடத்தை தொடங்கினார்கள்.'' என்றார் தாத்தா.
"" டேனியல் கோட்டை பற்றி சொல்லேன்?'' என்று கெஞ்சினான் அருண்.
""இந்தியாவுக்கு வணிகம் செய்யவந்த டேனியர்கள் 1620ல் தஞ்சை மன்னன் ரகுநாத நாயக்கரிடம் ஆண்டுக்கு 3111 ரூபாய்க்கு தரங்கம் பாடியை குத்தகைக்கு எடுத்தனர். பொறையார் உட்பட 16 கிராமங்கள் சேர்ந்த தரங்கம்பாடி 1624க்குபின் டேனியலுக்கே சொந்தமானது. அப்போது அவன் கட்டிய கோட்டைதான் டேனியல் கோட்டைன்னு சொல்றோம்'' என்றார்.
டியர் குட்டீஸ் கதை படித்தீர்களா? இப்ப கேட்கிற 2 கேள்விக்கு பதில் சொல்றீங்களா?
1. முதல் பள்ளிக்கூடம் எங்கு தொடங்கப்பட்டது?
2. தரங்கம்பாடியை குத்தகைக்கு எடுத்தவர் யார்?
பதில்: 1. தரங்கம்பாடி 2. டேனியல்


26 . இருள் வந்துவிட்டதால் பேரப்பிள்ளைகளை தோப்பில் இருந்து வீட்டுக்குக்கிளம்பச் சொன்னார் தாத்தா.
தோப்புக்கு வெளியே மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அதை விரட்டுவதற்கு கீழே கிடந்த குச்சியைக்காட்டி, "" மூர்த்தி, அந்த கம்பை எடுத்து வா. மாடு விரட்டலாம்'' என்றார் தாத்தா.
"" தாத்தா, நகரத்தில் இதை கொம்புன்னு சொல்றாங்க. நீங்க கம்புன்னு சொல்றீங்களே. இதுக்கு பெயர் கம்பா, கொம்பா?'' என்றான் மூர்த்தி.
"" இதை கொம்பு என்றால் மாட்டுக்கு இருக்கும் கொம்பை எப்படி சொல்வதாம்? சில பொருள்களுக்கு வட்டார வழக்குபடி வேறு பெயர் இருக்கும். இங்கே இதை கம்புன்னு சொல்றாங்க. அதே போல மாட்டுத்தீவனமான ஒன்றையும் கம்புன்னு தான் சொல்றாங்க'' என்றார் தாத்தா.
"" அப்ப ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு பெயர் இருக்குதா தாத்தா?'' என்றாள் அனுஷா.
"" ஆமாம். இப்ப இருக்கிற பல பொருள்களின் உண்மையான தமிழ் பெயர் வழக்கொழிந்து விட்டது.'' என்றார் தாத்தா.
"" பெயர்கள் பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்க தாத்தா'' என்று அடம்பிடித்தாள் சாயிபவித்ரா.
"" இப்ப நாம் தோப்பில் நிறைய மரங்கள், கொடிகள், செடிகள், பயிர்கள் எல்லாம் பார்த்தோம்தானே! பொதுவாக மரம், செடி, கொடி, பூண்டுகளின் இலைகள் எல்லாம் இலைகள் என்றே சொல்லக்கூடாது. அததுக்கு ஒரு பெயர் இருக்கு'' என்றார் தாத்தா.
"" அப்படியா? அது என்னென்ன?'' என்றாள் திவ்யா.
""அத்தி, மா, பலா, வாழை, ஆல், அரசு, வேம்பு, பூவரசு இன்னம்பல மரங்களில் இருக்கும் இலைகளுக்கு மட்டும்தான் இலை என்று பெயர். அதே சமயம் அகத்தி, பசலை, வல்லாரை, முருங்கை போன்றவற்றின் இலைகளை இலை என்று சொல்லக்கூடாது. அதற்கு பெயர் கீரை. மண்ணில் படருகின்ற கொடிவகைகளில் இருக்கும் இலைகளுக்கு பூண்டு என்று பெயர். அருகு, கோரை முதலியவற்றின் இலைகளுக்கு புல் என்று பெயர். மலையில் விளைகின்ற உசிலை, சப்பாத்தி, கள்ளி, தாழை இனங்களின் இலைகளுக்கு பெயர் மடல். கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகளுக்கு தோகை என்று பெயர். தென்னை, பாக்கு, பனை முதலியவற்றின் இலைகள் ஓலைகள் என்று சொல்லப்படுகின்றன.'' என்றார் தாத்தா.
"" ஏன் தாத்தா எல்லாத்தையுமே பொதுவா இலை சொல்லிட வேண்டியதுதானே! மாவிலை, முருங்கையிலை, சப்பாத்தி இலை, தென்னை இலைன்னு இனத்தோட பெயர் சொல்லிட்டா ஈஸியாக இருக்குமே!'' என்றாள் பிரியா.
"" உங்க காலத்தில் அப்படிதான் ஆகப்போகுதோ என்னவோ?'' என்று சிரித்தார் தாத்தா.
"" நம் மூதாதையர்கள் ஒவ்வொன்னும்க்கும் ஒரு பெயர் வைத்திருப்பது ரொம்ப ஆச்சரியமா இருக்கு'' என்றார் அருண்.
"" அது நம் தமிழின் பெருமை!'' என்றார் தாத்தா.
குட்டீஸ் கதை படிச்சாச்சு. இப்ப 2 கேள்விக்கு விடை தேடலாமா?
1. எந்த தாவரத்தின் இலைக்கு தோகை என்று பெயர்?
2. எந்தமரங்களின் இலைக்கு ஓலை என்று பெயர்?
விடை: 1. கரும்பு, நாணல் 2. தென்னை, பனை, பாக்கு


27 . இன்று வெள்ளிக்கிழமை என்பதால் பூஜைக்கு வேண்டிய பூ வாங்க, பூ கொண்டு வந்த பெண்மணியிடம் பாட்டி மூணு முழம் பூ கொடு என்று கேட்டார்.
இதை கவனித்த அனுஷா, "" பாட்டி முழம்ன்னா என்ன?'' என்று கேட்டாள்.
பூவை வாங்கிய பாட்டி, "" இது பழைய கணக்கு முறை. இப்ப நீங்க மீட்டர்ல சொல்றதை அப்ப நாங்க அங்குலம், சாண், முழம், அடின்னு சொல்லுவோம்'' என்றார் பாட்டி.
"" மில்லி மீட்டர், சென்டி மீட்டர், மீட்டர், கிலோ மீட்டர்ன்னு இப்ப சொல்றோம். உங்க காலத்துல எப்படி அளவு இருந்தது?'' என்றாள் சாயிபவித்ரா.
"" 12 பெருவிரல் ஒரு சாண். 2 சாண் ஒரு முழம். 3 முழம் ஒரு அடின்னும் கோல், காதம், பர்லாங், மைல்ன்னு நீள அளவு கணக்கீடுவோம்'' என்றார் பாட்டி.
"" முகத்தல் அளவை எப்படி சொல்வீங்க?'' என்று கேட்டாள் திவ்யா.
"" நீர்மப்பொருளுக்கு சேர் கணக்கு. கால் சேர், அரை சேர்ன்னு சொல்லுவோம் ஒரு சேர்ன்னா இப்ப 750 மில்லி. தானியப் பொருளுக்கு சுண்டு,கால் படி, அரைபடி, படி, மரக்கால், கலம், மூட்டைன்னு சொல்றது வழக்கம்'' என்றார் பாட்டி.
"" எடையை எப்படி சொல்வீங்க?'' என்று கேட்டான் மூர்த்தி.
"" தங்கம் போன்ற மதிப்பான பொருள்களுக்கு குன்றிமணி, மஞ்சாடி, பணவெடை, கழஞ்சு, வராகனெடை சொல்றது வழக்கம். பண்டமாக இருந்தா வீசை,துõலம், மணங்கு, பாரம்ன்னு சொல்லுவோம். சிலர் பவுண்டு கணக்கிலும் சொல்லுவாங்க.'' என்றார் பாட்டி.
"" எப்பப்பா தமிழில் இவ்வளவு பழயை முறைகள் எல்லாம் இருக்கா? ஆச்சரியமா இருக்கே?'' என்றாள் பிரியா.
"" தமிழர் கண்டுபிடிக்காத விஷயங்களே இல்லை... நீங்க அதை எல்லாம் புறம் தள்ளிவிட்டு இப்ப மாடர்ன் முறைக்கு வந்துட்டீங்க'' என்றார் பாட்டி.
"" பாட்டி இப்ப துõரத்தை கி.மீட்டர்ல சொல்றோம் அப்ப நீங்க எப்படி சொன்னீங்க?'' என்றாள் சாயிபவித்ரா.
"" காதம், கல், பர்லாங், மைல்ன்னு சொல்லுவோம். ஒரு மைல் என்பது முக்கால் கிலோ மீட்டர்'' என்றார் பாட்டி.
"" பாட்டி, 1,2,3... எண்ணில் எழுதுறோமே, தமிழில் அதற்குண்டான எழுத்து இருக்கா?'' என்றாள் திவ்யா.
"" இல்லாமலா, என்ன?'' என்று சொல்லிய பாட்டி, 1,2,3க்குரிய எழுத்துக்களை எழுதிகாட்டினார். அதுமட்டுமல்லாமல் நாள், தேதி, ஆண்டுக்குரிய எழுத்துக்களையும் எழுதி காட்டினார்.
அந்தக்காலத்து பழைய முறைகளை எல்லாம் பாட்டியிடம் கேட்டு தெரிந்துக்கொண்ட பேரப்பிள்ளைகள் வியந்து போனார்கள்.
சரி, கதையை கேட்டீங்க. இதிலிருந்து 2 கேள்விக்கு பதில் சொல்றீங்களா குட்டீஸ்?
1. படி, மரக்கால் அளவை எதை அளவீட பயன்படுகிறது?
2. க, உ, ரு, எ ஆகிய எழுத்துக்கள் குறிக்கும் எண் எவை?
விடை: 1.தானியப் பொருள்களை அளக்க பயன்பட்ட அளவீடு
2. 1, 2, 5, 7.



28 . தாத்தாவுடன் பேரப்பிள்ளைகள் பூம்புகார் சென்றனர். மாலை வேளை கடல்கரையில் அமர்ந்து காற்று வாங்கிக்கொண்டிருந்தனர்.
""தாத்தா, எங்க தமிழாசிரியர் ஐந்திணைகள் பற்றி சொல்லித்தந்தபோது நெய்தல் பற்றி சொன்னார். கடலும் கடல்சார்ந்த இடம் நெய்தல் என்றார். அப்படின்னா நாம் இப்ப இருப்பது நெய்தல் நிலத்தில் தானே!'' என்று சந்தேகம் கேட்க ஆரம்பித்தாள் சாயிபவித்ரா.
"" பழந்தமிழர் அவர்கள் வசித்தப் பகுதியின் இயற்கை வளத்தை வைத்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ,பாலை என்று பெயரிட்டனர். அதன்படி பார்த்தா இப்ப நாம இருப்பது நெய்தல் நிலம்தான்'' என்றார் தாத்தா.
"" கடல் என்றால் என்ன தாத்தா?'' என்றான் மூர்த்தி.
""கடல் என்பது உப்பு நீர் நிரம்பிய மிகப்பெரிய அல்லது பரந்த நீர்நிலை. பொதுவாக கடலானது பெருங்கடலுடன் இணைந்தோ அல்லது தனித்த நீர்நிலையாகவோ இருக்கலாம்.'' என்று தாத்தா சொல்லி முடிக்கும் முன்பாக,
"" ஏன் தாத்தா கடல் நிலம் என்று சொல்லாம நெய்தல் நிலம்ன்னு சொல்றாங்க?'' என்றாள் அனுஷா.
"" நெய்தல் என்பதும் கடலைக்குறிக்கிற பெயர்தான். தமிழ்கழக அகராதியில கடலைக்குறிக்கும் நாற்பது பெயர்கள் சொல்லப்பட்டுள்ளது. அதில் எந்தப் பெயர் சொன்னாலும் கடல் என்றுதான் அர்த்தம்'' என்றார் தாத்தா.
""கடலுக்கு சொல்லப்படும் அந்த நாற்பது பெயர்கள் எனென்ன தாத்தா?'' என்றாள் பிரியா.
"" சொல்றேன் கேட்டுக்குங்க. அவை,அப்பு, அரலை, அழுவம், ஆழி, அளக்கர், ஆர்கழி, ஆழி, சலதி, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தென்னீர், தோயம், தோழம், நரலை, நிலைநீர், நீத்தம், நீரதி, நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு, பரவை, பாரி, பாழி, பானல், பிரம்பு, புணரி, பெருங்குழி, பெருநீர், மழு, முந்நீர், வரி, வாரி, வாரிதி, வலயம், வீரை, வெண்டிரை, வேலை, அளம், கடல், கார்மலி, மாறாநீர், வாலாவலையம்'' என்று நிதானமாக தாத்தா சொல்லி முடித்தார்.
""தாத்தா, இந்த உலகத்தில் எத்தனை கடல்கள் இருக்கு?'' என்றான் அருண்.
"" நிறைய இருக்கு. குறிப்பாக அட்லாண்டிக் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், தென்னகப் பெருங்கடல், நிலம் சூழ் கடல்கள் என்று பல இருக்கு.
இந்தியப் பெருங்கடலில் செங்கடல், ஏடென் குடா, பாரசீக வளைகுடா, ஓமான் வளைகுடா,, அரபிக்கடல், வங்காள விரிகுடா, அந்தமான் கடல், தீமோர் கடல் இருப்பது போல ஒவ்வொரு பெருங்கடலில் பல கடல்கள் சங்கமிக்கின்றன.'' என்றார் தாத்தா.
குட்டீஸ் இந்த கதையில் இருந்து 2 கேள்வி. பதில் சொல்ல நீங்க ரெடியா?
1. ஐந்துவகை நிலம் எவை?
2. தாத்தா கடலுக்கு எத்தனை பெயர் இருப்பதாக கூறினார்?
விடை: 1.குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை. 2. 40 பெயர்கள்


29. காலையில் வீட்டின் முற்றத்தில் தன் பேரப்பிள்ளைகள் தெளித்த தானியங்களை குருவிகள் கொத்தித் தின்பதை ரசித்தார் தாத்தா.
""தாத்தா குள்ளமா, உயரமா நாம இருப்பது போல பறவைகளிலும் பெரிசு, சின்னதுன்னு இருக்கா?'' என்றாள் சாயிபவித்ரா.
"" 5 செ.மீ நீளமும் 1.8 கிராம் எடையுள்ள சிறிய பறவையான ஒருவகை தாரிச்சிட்டு (ஹம்மிங் பறவை)களிலிருந்து 9 அடி உயரமும் 156 கிலோ எடையுள்ள பறக்காத பெரிய தீக்கோழி மற்றும் ஈமியூ வரை பறவைகள் உள்ளன. அதிக எடையுள்ள பறக்கும் பறவையான கானல் மயில் 18 கிலோ வரை பெருக்கும்.'' என்றார் தாத்தா.
"" ரொம்ப உயரத்தில் பறக்கும் பறவை எது தாத்தா?'' கேட்டாள் அனுஷா.
"" வல்லுõறு இனத்தைச் சேர்ந்த பறவைகள் மிக உயரத்தில் பறக்கக்கூடியவை. சில பறவைகள் மணிக்கு 160 கி.மீ வேகத்தில்பறக்கும் . நிலம், நீர், வானம் இவற்றில் விரைந்து நகரக்கூடியது அலையும் வல்லுõறு. சில பறவைகள் நெடுந்தொலைவு 17 ஆயிரம் கி.மீ வரை செல்லவல்லது.'' என்றார் தாத்தா.
""பறக்காத பறவைகள் இருக்கா தாத்தா?'' என்று கேட்டாள் திவ்யா.
"" பறக்க முடியாத பறவைகள் பென்குயின்கள், தீக்கோழிகள், கிவிகள்'' என்றார் தாத்தா.
"" பறவைக்கு சிறகு வளர்ந்து கிட்டே இருக்குமா?'' என்றான் மூர்த்தி.
"" நமது தலைமுடி, விரல் நகம் ஆகியவற்றில் உள்ள அதே கெரோட்டின் பறவை சிறகில் இருக்கு. நமது தலைமுடி, நகங்களைப் போல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போகாமல் ஓர் அளவுடன் நின்றுவிடும். வளர்ந்த பறவைகள் வருடம் ஒரு முறையாவது சிறகுகளை உதிர்த்து புதுப்பித்துக்கொள்ளும்.'' என்றார் தாத்தா.
"" பறவைக்கு பார்வை கூர்மையானதாமே?'' என்றாள் பிரியா.
"" ஆமாம். இன்னொரு விஷயம் தெரிஞ்சுக்க. பறவையின் ஒரு கண்ணுக்கு மூன்று இமைகள் இருக்கும். மேல் இமை நம் கண் இமை போன்றது. கீழ் இமை துõங்குபோது மட்டும் மூடிக்கொள்ளும். இது தவிர பக்கவாட்டில் அலகின் அருகிலிருந்து துவங்கும் ஒரு மெலிதான தோல் உண்டு இது ஒளி ஊடுருவக்கூடிய தோல், கண்களை ஈரப்படுத்தவும், காற்று, அதிக வெளிச்சத்திலிருந்து காக்கவும் உதவுகிறது.'' என்றார் தாத்தா.
"" பறவைகள் உணவு பற்றி சொல்லேன் தாத்தா'' என்றாள் திவ்யா.
""பறவைகளில் சைவமும் அசைவமும் உண்டு. காக்கை இரண்டையும் தின்கின்றன.'' என்றதும், அருண் கேட்டான்: "" பறவைகள் ஏன் நாடு விட்டு நாடு இடப்பெயர்ச்சி செய்கிறது?'' என்றான்.
உணவுத் தேவைகளுக்கும் மிக வெப்பம்,குளிர் கால நிலைகளை தவிர்ப்பதற்கும் பறவைகள் வருடாந்திர இடப்பயர்ச்சி செய்கின்றன. இதற்காக கடல் பறவைகள் 32 ஆயிரம் கி.மீ வரை பறக்கின்றன.'' என்றார்.
கதை கேட்ட குட்டீஸ், இப்ப 2 கேள்விக்கு பதில் தேடுறீங்களா?
1. பறவைக்கு எத்தனை இமைகள் உண்டு?
2. சைவம், அசைவம் உண்ணும் பறவை எது?
பதில்: 1. மூன்று 2. காக்கை

30 . வரலாற்று பெருமைகளையும், பழந்தமிழகத்தின் கலை பொக்கிஷத்தை அறிந்து கொள்ள பேரப்பிள்ளைகளை சித்தனவாசல் அழைத்து வந்தார் தாத்தா.
""பெயரே வித்தியாசமாக இருக்கே! சித்தனவாசல்ன்னு பெயர் எப்படி வந்தது தாத்தா?'' என்றாள் அனுஷா.
""உலகப்புகழ் குகை ஓவியங்களை உடையது சித்தனவாசல். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இந்த ஊர் அன்னவாயிலுக்கு அடுத்த சிற்றுõராக இருந்ததாலும், சித்தர்கள் வாழ்ந்து வந்ததாலும் சித்தர் அன்னவாயில்லானது மறுவி சித்தன்ன வாசல் என தற்போது அழைக்கப்படுகிறது.'' என்று விளக்கினார் தாத்தா.
"" இந்த ஊருக்கு அப்படி என்ன சிறப்பு?'' என்றாள் சாயிபவித்ரா.
""இந்த ஊரில் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லறைகள், முதுமக்கள் தாழிகள், கிமு 2ம் நுõற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டு, ஓவியங்கள் தீட்டப்பட்ட குகைக்கோயில் இந்த ஊருக்கு சிறப்பு'' என்றவர் பேரப்பிள்ளைகளை அழைத்துக் கொண்டு குகை கோயிலுக்கு வந்தார். ""அதோ தெரியுதே அதுதான் ஏழடிப்பட்டம் குகை.'' என்று காட்டினார் தாத்தா.
"" ஏழடிப்பட்டம்ன்னா என்ன?'' என்று கேட்டாள் திவ்யா.
"" ஆரவார உலகை வெறுத்து அமைதியை நாடிய சமணர்கள் குகை வாயிலில் உள்ள ஏழு படிக்கட்டுகளை கடந்து குகைக்கு நுழைவதால் இந்த இடம் ஏழடிபட்டம் என்றும், உலக வாழ்வைத் துறந்து 7 விதமான ஆன்மிக உறுதிகளை மேற்கொண்டு உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த சமண முனிவர்கள் வாழ்ந்த இடம் என்றும் சொல்லப்படுவதுண்டு.'' என்ற தாத்தா முகப்பு மண்டபத்தைக்காட்டி, "" நல்ல பாருங்க
இது சமண ஆசிரியரின் சிற்பம், அது 23 சமண தீர்த்தங்கரர், பார்சுவநாதர் சிற்பங்கள் '' என்றார்.
"" இந்த குகை ஓவியங்கள் எப்படி தீட்டினாங்க ?'' என்றாள் ப்ரியா.
""கருங்கல் பரப்பை சமப்படுத்தி, சுண்ணாம்பு சாந்து பூசி, அதன் மீது வெண்சுண்ணாம்பு பூச்சிட்டு வழுவழுப்பாக தேய்த்து அப்பரப்பில் ஓவியங்களும் வண்ணங்களும் தீட்டினார்கள்'' என்றார் தாத்தா.
"" முன் மண்டபத்தை அண்ணாந்து பார்த்து ஆஹா! எத்தனை அழகான ஓவியம்!'' என்றான் அருண்.
முன் மண்டபத்தின் விதானத்தில் சித்திரிக்கப்பட்ட தாமரை தடாகம் அதில் பசுமையான இலைகள், தாமரை, அல்லி பூத்திருக்க, பலவிதமான மீன்கள் விளையாடுகின்றன. யானைகள் நீரை கலக்கி களிக்கின்றன.
அன்னம், வாத்து பறவைகள் குஞ்சுகளுடன் குலாவுகின்றன. எருமை மாடுகள் அசைப்போட்டுக்கொண்டிருக்கின்ற காட்சி அவர்களை ஆச்சரியப்படவைத்தது.
குட்டீஸ் கதை கேட்டீங்க. இப்ப 2 கேள்விக்கு பதில் சொல்ல ரெடியாகுங்க!
1. மண்டபத்தில் தீட்டப்பட்டுள்ள தடாக படத்தில் இருக்கும் பூக்கள் எவை?
2. தடாகம் என்பதை இப்போது நீங்கள் என்ன சொல்லி அழைக்கிறீர்கள்?
விடை : 1. தாமரை பூ, அல்லி பூ 2. குளம்

31 .

""தாத்தா, என் கூட படிக்கிற பிரண்டுக்கு சொந்த ஊரு குஜராத்தாம். அவள் நாங்க சொராஷ்டிரம் இனத்தைச் சேர்ந்தவங்க என்று சொன்னாள். சொராஷ்டிரம்ன்னா என்ன?'' என்று சந்தேகம் கேட்டாள் அனுஷா.
"" பார்ஸி இனத்தைச் சேர்ந்தவங்களை சொராஷ்ரம் என்று சொல்வாங்க'' என்றார் தாத்தா
"" நம்மள மாதிரி அவங்க நிறைய பேரு எங்கெல்லாம் இருக்காங்க?'' என்றாள் சாயிபவித்தரா.
"" இந்தியாவில கிட்டதட்ட ஒன்னரை லட்சம் பேரு இருக்காங்க. மும்பைய சுத்தி மட்டும் பல ஆயிரம் பேருக்கு மேல வசிக்கிறாங்க. குஜராத்தில் பல ஆயிரம் பேரு வசிக்கிறாங்க. தமிழகத்தில் தஞ்சாவூருக்கு சரபோஜி மன்னர் காலத்தில் பல பேரு வந்திருக்காங்க. அவங்களோட பரம்பரை இப்பவும் இங்கே இருக்கு'' என்றார் தாத்தா.
"" அவங்க என்ன மொழியில பேசுவாங்க?'' என்றாள் திவ்யா.
"" அவங்க சொராஷ்டிரம் என்ற பேச்சு மொழியில் பேசுவாங்க. அந்த மொழிக்கு எழுத்து வடிவம் இல்ல. பொதுவாக பலர் குஜராத்தியில பேசறாங்க. அத்துடன் அவங்க வசிக்கும் இடத்தில் உள்ள மொழியும் பேசுவாங்க'' என்றார் தாத்தா.
"" இந்த இன மக்கள் எப்படி இந்தியாவுக்கு வந்தாங்க?'' என்றான் மூர்த்தி

"" புராதான காலத்து பார்ஸியன் மதத்திலிருந்து வந்த இவர்கள் 7 மற்றும் 8ம் நுõற்றாண்டின் இடையில் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்தாங்க. அதில் ஒரு குழு மும்பைக்கு வந்தாங்க. அப்போ ஆட்சி செய்த ஜடி ராணா என்ற மன்னர் பார்ஸி இனத்துக்காக ஒரு கோயிலை அமைத்து தந்தார்.'' என்றார் தாத்தா
"" அவங்க எந்த தெய்வத்தை வழிபடுவாங்க?'' என்று கேட்டான் அருண்.
""அக்னியை தெய்வமாக பாவித்து வழிபாடு செய்றாங்க. அவங்களுக்கு அக்னி புனிதமான ஒன்றாகவும், பூஜிக்கத்தக்கதாகவும் அவை நம் பாவங்களை கழுவி, புண்ணியம் சேர்ப்பதாக பார்ஸி மதத்தினர் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களின் பிரார்த்தனைக்கு "அவஸ்தா' என்று பெயர்.'' என்றார் தாத்தா.
"" பார்ஸி இனத்தில் முக்கியமான விஐபி இருக்காங்களா, தாத்தா?'' என்று கேட்டாள் ப்ரியா.
"" தாதாபாய் நெரோஜி மற்றும் ஜேம்சேட்ஜி டாடா இவங்க மிகச் சிறந்த தேசபக்தர்கள்! நம்மூர் பாடகர் டி.எம். சவுந்தர்ராஜனும் முக்கியமான விஐபிகள்'' என்றார் தாத்தா.
"" அவங்களுக்கு பிரதான தொழில் என்ன?'' என்றாள் அனுஷா.
"" பட்டு புடவைகளில் பல வகை டிசைன்கள் பாடர்கள், பல வண்ணங்களில் எம்ராய்டிங் செய்வது அவங்க தொழில்.'' என்றார் தாத்தா.
குட்டீஸ் கதை படிச்சாச்சுல. இப்ப 2 கேள்விக்கு பதில் சொல்றீங்களா?
1. பார்ஸி இனத்தவர் வழிபடும் தெய்வம் எது?
2. பார்ஸி இனத்தைச் சேர்ந்த தமிழக வி.ஐ.பி?
விடை: 1.அக்னி 2. டி.எம். சவுந்தர்ராஜன்

32 . "" ஏ, சாயி, திவ்யா ஓடி வாங்க! டவுணுக்குப் போன ராஜா சித்தப்பா நமக்கெல்லாம் பிஸா வாங்கி வந்திருக்காங்க'' என்று ஓங்கிகுரல் கொடுத்தாள் அனுஷா.
தன் பேரப்பிள்ளைகள் பிஸாவை ஆர்வமாய் ருசித்து சாப்பிடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார், தாத்தா.
"" இந்த பிஸா, நல்லா காரமும் மசாலாவுமா ரொம்ப நல்லா இருக்கே! இது எந்த நாட்டு உணவு தாத்தா?'' என்று கேட்டாள் திவ்யா.
""இது இத்தாலி நாட்டு உணவுவகையில் ஒண்ணு. இன்னொரு விசயம் தெரியுமா, உனக்கு?இந்தியாவில சமையலுக்காக பயன்படுத்தற சில காரமான உணவுப்பண்டங்கள் நம்மோடதே இல்லை.'' என்றார் தாத்தா.
""என்ன சொல்றீங்க தாத்தா? காரம்,சாரமா மணக்க மணக்க செய்யறதுதானே நம்மோட சமையல்.'' என்றாள் சாயிபவித்ரா.
""ஆமா ம்! சாம்பார், பொரியல், காரகுழம்பு எல்லாம் செய்ய மிளகாய் இல்லாம இருந்தா எப்படி இருக்கும்?பண்டைய இந்தியர்களுக்கு பச்சை மிளகாய் பத்தியோ சிவப்பு மிளகாய்பத்தியோ தெரியாதாம். நம்ம முன்னோர்கள் எல்லாம் காரம் அதிகம் இல்லாமதான் சாப்பிட்டிருக்காங்க. அவங்க காரத்துக்காக உபயோகப்படுத்தின ஒரு பொருள் கேரளா, அஸ்ஸாம் மாநிலத்துல பயிரிடப்படற "மிளகு"மட்டும் தானாம்.'' என்றார் தாத்தா.
"" அப்படின்னா நாம் இப்ப பயன்படுத்துற மிளகாய் இங்கே எப்படி வந்தது?'' என்றான் மூர்த்தி
""கடல் வழி வியாபாரம் எப்போ இந்தியால ஆரம்பிச்சதோ, அப்பதான் மிளகாய் இந்தியர்களுக்கு அறிமுகம் ஆச்சு. இந்தியர்களும் தங்களிடமிருந்த இருந்த இஞ்சி, மிளகு மற்றும் ஏலக்காய்
போன்ற பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி பகிர்ந்துகிட்டாங்க.'' என்றார் தாத்தா.
"" இந்த மிளகாய் எங்கே அதிகமா பயிரிடப்பட்டது தாத்தா?'' என்றாள் ப்ரியா.
""7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அமெரிக்காவின் மத்திய, தெற்குப்பகுதிகளில் அதிகமாக மிளகாய்கள் பயிரிடப்பட்டு வந்ததாம். அதனால, நம்ம சமையலோட முக்கிய பொருளான "மிளகாய்" உலகில் மறு பகுதிலேர்ந்து தான் கிடைச்சிருக்கு.'' என்றார் தாத்தா.
பிஸாவை உண்டு முடித்த அருண், ""மதியானம் ஆத்தா சமைச்ச காரசாரமாக மணக்கும் காரக்குழம்பு நாம எல்லாம் நாக்கு சொட்ட சொட்ட சாப்பிடும்போது, யார் முதன் முதலா மத்திய அமெரிக்காவில மிளகாய பயிர் செஞ்சாங்களோ அவங்கள நன்றியோட நினைச்சுக்கோணும்!'' என்று சொல்லி சிரித்தான் அருண்.
டியர் குட்டீஸ் கதை படித்துவிட்டீர்கள் தானே! இப்ப இந்த கதையில் இருந்து 2 கேள்வி. பதில் சொல்லுங்க பார்க்கலாம்!
1. பண்டைய இந்தியர் காரத்திற்கு எந்தப் பொருளைப் ப யன்படுத்தினாங்க?
2. மிளகாயின் பூர்வீகம் எந்த நாடு?
விடை: 1. மிளகு 2. மத்திய அமெரிக்கா