ஞாயிறு, 23 மே, 2010

கதையை வாசி விடையை யோசி 1 தேவராஜன்

கதையை வாசி விடையை யோசி 1 தேவராஜன்

அன்று சனி பிரதோஷம். பக்கத்து ஊரில் இருக்கும் சிவன் கோயிலுக்கு ஆகாஷின்அம்மா, அப்பா புறப்பட இருந்தனர். இதை கவனித்த ஆகாஷ்,"" அப்பா , நானும் உங்ககூட கோயிலுக்கு வரட்டுமா?'' என்று கேட்டான்.
"" உனக்கும் பக்தி வந்துடுச்சா! பரவாயில்லையே, சரி,வா'' என்று அப்பா சொன்னதும், ஆகாஷ் இருசக்கர வாகனத்தில் ஏறிக்கொண்டேன்.
அரை மணி நேரத்தில் திருச்செங்காட்டங்குடிஉதித்திராபதிஈஸ்வரர் கோயிலுக்கு வந்தனர். தேரடி வீதியில் பூக்கடைகள் இருந்தன.
ஒரு கடையில் ஆகாஷின் அம்மா நுழைந்தாள். அந்த இடம் பூக்களின் வாசத்தில் கமகமத்தது. அப்போதுதான் மலர்ந்தது போல ஈரம்படிந்த தாமரை, சூரியகாந்தி, சாமந்தி, திருவாட்சி, மல்லிகை, முல்லை, ரோஜா, தாழம்பூ,வாழைப்பூ, செம்பருத்தி என இன்னும் பல பூக்கள் கூடைகூடையாய் இருந்தது.
ஆகாஷ் இவை எல்லாம் பார்த்து பிரமித்துப்போனான்! "பூக்களில் தான் எத்தனை வகை?'
என்று நினைத்துக்கொண்டவன்,"" அப்பா, இந்த தாமரை தானே நம் தேசத்தின் தேசிய மலர்'' என்று ஆகாஷ் கேட்டதற்கு,""ஆமாம்! ஆமாம் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? சொல்றேன் கேட்டுக்க. சூரியன் உதிக்கும் போதும், மறையும் போதும் சூரியனை நோக்கிய திசையில் மலரும் ஒரே பூ அது சூரியகாந்தி தான்! அது மட்டுமல்ல; சூரியனைப் பார்த்ததும் மலரும் பூவும், சந்திரனைப்பார்த்ததும் மலரும் பூவும் இருக்கு. தாமரைப்பூ சூரியனைப்பார்த்ததும் பூக்கும். அல்லிப்பூ நிலா பார்த்ததும் பூக்கும்!'' என்றதும், ஆகாஷ் ஆச்சரியப்பட்டான்.
ஆகாஷின் அம்மா வில்வமாலையும், அருகம்புல் மாலையும் வாங்கிக் கொண்டு கோயிலுக்கு நுழைந்தாள். பின்னால் ஆகாஷூம் அவன் அப்பாவும் பின்தொடர்ந்தனர்.
சரியாக ஆறுமணிக்கு பிரதோஷ பூஜை முடிந்தது. சாமி தரிசனம் முடித்து விட்டு, வீட்டிற்கு கிளம்பினார்கள்.
வரும் வழியில் ஆகாஷ்""அப்பா பூக்களைப்பற்றி இன்னும் எதாவது சொல்லேன்'' என்று கேட்டான்.
""12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பூ குறிஞ்சிப்பூ. சமையலுக்கு உதவும் பூ வாழைப்பூ!'' என்று அப்பா சொன்னதைக்கேட்டு, ஆகாஷ் வியந்தான்!

இந்த கதையைப் படிச்சீங்களா, குட்டீஸ்? இப்போ இந்த கதையில் இரு கேள்வி கேட்கப் போறேன். சரியான பதிலை சொல்லுங்க, பார்ப்போம்!
1. சூரியனைப் பார்த்து பூக்கும் பூ எது? நிலாவைப் பார்த்து பூக்கும் பூ எது?
2. சமையலுக்கு உதவும் பூ எது? 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பூ எது?

விடை: தாமரை, அல்லி
வாழைப்பூ, குறிஞ்சிப்பூ


கதையை வாசி விடையை யோசி 2 தேவராஜன்

அது அழகான மாலைப் பொழுது. மேற்கே சூரியன் செவ்வொளி பரப்பிக்கொண்டிருந்தான். அப்பாவின் நடைபயிற்சியில் ஆகாஷூம் கலந்து கொண்டான். சாலையின் ஓரம் புல்வெளியில் நடந்து கொண்டே வானத்தில் பறக்கும் காக்கைகளைப் பார்த்து வியந்தான்.
"" அப்பா, தினமும் நீ ஏன் நடைப்பயிற்சி செய்யற?'' என்ற ஆகாஷ் கேட்ட கேள்விக்கு,""ஆரோக்கியத்துக்கு நடை பயிற்சி செய்வது நல்லது!' என்றார், ஆகாஷின் அப்பா.
"" அப்படின்னா உடம்பு சரியில்லாம போனா மாத்திரை மருந்து சாப்பிட வேண்டாமா?'' என்று கேட்டான்.
""அப்படி அர்த்தம் இல்ல. இதயநோய், சர்க்கரை நோய், உடல் பருமன் இவைகளுக்கு மருத்து மாத்திரைகளுடன் நடைப் பயிற்சியும் செய்தால் நல்லது'' என்றார்.
இப்படி அவர்கள் உரையாடிக்கொண்டே, ஒரு மைலுக்கு மேல் நடந்து விட்டனர். ஆகாஷ் சோர்வடைந்தான். அதை கவனித்த அவனின் அப்பா,"" வா, அதோ ஜூஸ் கடை இருக்கு. போவோம்.'' என்றார்.
இருவரும் ஜூஸ் கடைக்கு வந்தனர்.
ஆப்பிள், திராட்சை, மாம்பழம்,பலாப்பழம், வாழைப்பழம், செர்ரிப்பழம்,சீத்தாப்பழம், ஆரேஞ் பழம் , பப்பாளி, தர்பூசணி இப்படி பல வகை பழச்சாறு பட்டியல் படித்து பிரம்மித்தான், ஆகாஷ்.
ஆப்பிள் ஜூஸ் அப்பாவும் மகனும் பருகினார்கள்.
அதற்கு உண்டான பணத்தைக் கொடுத்து விட்டு வீட்டுக்கு கிளம்பினார்கள்.
வரும் வழியில் அப்பாவுடன் ஆகாஷ் பேசிக்கொண்டே நடந்தான். ""அப்பா, இவ்வளவு பழம் இருக்கே. இவை எல்லாம் எப்போதுமே கிடைக்குமா?'' என்றான்.
""தர்பூஸ், மாம்பழம்,நாவல்பழம், முந்திரி பழம் எல்லாம் சில சீசன்களில் மட்டும் தான் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து ஸ்டெபெர்ரி, செரிப்பழம் இறக்குமதி செய்யறாங்க. ஆப்பிள் பழம் குளிர் பிரதேசங்களில் விளையக்கூடியது'' என்று சொல்லவும், வீடு வரவும் சரியாக இருந்தது.
குட்டீஸ்! கதையைப் படிச்சீங்களா? இப்ப இரு கேள்வி கேட்பேன். நீங்க பதில் சொல்ல ரெடியா?
1. முக்கனி என்பது எந்தெந்த பழம்?
2.வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் பழங்கள் என்னென்ன?
விடை: மா,பலா, வாழை
ஸ்டாபெர்ரி, செர்ரி

கதையை வாசி விடையை யோசி! 3 தேவராஜன்

ஆகாஷூக்கு பொங்கல் விழாவுக்கு தன் தாத்தா ஊரான மருங்கூர் கிராமத்துக்குச்சென்றான். கிராமத்தில் தன் உறவுகார சிறுவர்களுடன் மூன்றுநாட்கள் ஆறு,குளம், தோப்பு, வயல்காடெல்லாம் திரிந்து குதுõகலித்தான். பொங்கல் முடிந்ததும். அப்பாவுடன் சென்னைக்குப் புறப்பட்டான். அவன்கூடவே சென்னை நகரத்தை சுற்றிப் பார்க்க உறவுக்கார பையன்கள் வந்தார்கள்.
ஆகாஷின் அப்பா அவர்களை எல்லாம் அழைத்துக்கொண்டு, மெரினா பீட்ச், தீம் பார்க் அழைத்துப் போனார்.
மறுநாள், ஆகாஷ் தன் அப்பாவிடம் வண்டலுõரில் இருக்கும் அறிஞர் அண்ணா உயிரியல் அறிவியல் பூங்காவுக்கு அழைத்துச் செல்ல வற்புறுத்தினான். அவரும் கடைசியாக சம்மதித்தார்.
சந்தோஷத்தில் துள்ளிக்குதித்து, உறவுகார நண்பர்களுடன் ஜூவுக்கு வந்தான், ஆகாஷ்.
கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் சிங்கம், புலி களை எல்லாம் பார்த்து பூரித்தான். விதவிதமான பறவைகள், விலங்குகள் பார்த்து எல்லாரும் சந்தோஷப்பட்டார்கள்.
ஆகாஷின் அம்மா,"" பிள்ளைகளா, இங்கே பல அரிய வகை விலங்குகள், பறவைகள் எல்லாம் பார்தீங்கல. இப்போல சில கேள்வி கேட்கிறேன் பதில் சொல்வீங்களா?'' என்றார்.
எல்லாரும் கோரசாக கேளுங்க... கேளுங்க... என்றனர்.
முதல் கேள்வி நீங்கள் பார்த்த எந்த மானிற்கு கொம்பு இல்லை? 2வது கேள்வி நம் நாட்டின் தேசிய விலங்கு எது? 3வது கேள்வி எந்த மிருகத்திலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்தான்?

குட்டீஸ், உங்களுக்கும் பதில் தெரிந்தா ல் சொல்லுங்கள் பார்க்கலாம்!
விடை: பெண் மான், வங்காளம் புலி, குரங்கு


கதையை வாசி விடையை யோசி4 தேவராஜன்
அப்போது தான் ஆகாஷ் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்தான். அம்மா அவனுக்கு காய்கறி சூப் கொடுத்தாள். அதை ரசித்து பருகிவிட்டு ஹாலுக்கு வந்தான்.
அவன் பக்கம் வந்த அம்மா,""ஆகாஷ், பக்கத்து கடைக்கு போயிட்டு வாடா'' என்றாள்.
அதற்கு, அவனோ,""அம்மா, என்னை தொந்தரவு செய்யாதே. எனக்கு நிறைய எழுத வேண்டிய வேலை இருக்கு'' என்றான்.
அவனிடம் கெஞ்சினாள் அம்மா. ""சரி, கொடு. என்ன வேண்டும்?'' என்றான்.
""பால் வாங்கிட்டு வா.'' என்றதும், பணத்தை வாங்கிக்கொண்டு கடைக்குச் சென்றான்.
அப்போது ஆகாஷின் நண்பன் ராஜா வந்தான்.
""ஆன்டீ, ஆகாஷ் எங்க?'' என்றவனுக்கு,""உள்ள வந்து உட்காரு. அவன் கடைக்குப் போயிருக்கான். இப்ப வந்துருவான்'' என்று சொல்லிவிட்டு, சமையல் அறைக்குச் சென்றாள், ஆகாஷ் அம்மா.
கொஞ்ச நேரத்தில் ஆகாஷ் வீட்டிற்கு வந்தான். தன் நண்பனுடன் வீட்டுபாடத்தை எழுதத்தொடங்கினான். அது பறவை இனங்களைப் பற்றியது.
பாலுõட்டும் பறவை என்ற தலைப்பிற்கு வவ்வால் படம் வரைந்தான். அடுத்து, முட்டையிட்டு குஞ்சுப் பொரிக்கத் தெரியாத பறவைக்கு வாத்து வரைந்தான். ஆகாஷ் நண்பன் ராஜா,கூடு கட்டத் தெரியாத பறவை என்ற தலைப்புக்கு குயில் படம் வரைந்தான்.
இடையில் ஆகாஷின் அம்மாவும் வர,""அம்மா உன்னிடம் சில கேள்வி கேட்பேன். பதில் சொல்றீயா?"" என்றான்.
""கேளு. தெரிஞ்சா சொல்றேன்''
""பகலில் கண் தெரியாத பறவை, உயரத்தில் பறக்க முடியாத பறவை,நிஜத்தில் இல்லாத பறவை எது?'' என்று கேள்வி கேட்டான், ஆகாஷ்.
""ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது. கோழி உயரத்தில் பறக்க முடியாது. அன்னப் பறவை நிஜத்தில் இல்லை.''
""அம்மா, சரியா சொல்லிட்டே, சபாஷ்!'' என்றான்,ஆகாஷ்.
""ஆன்டீ, நானும் கேள்வி கேட்காவா?'' என்றான்.
""ம்.கேள்''
""தண்ணீரை உறிஞ்சு குடிக்கும் பறவை எது? நம் நாட்டின் தேசியப்பறவை என்ன?''
""கேட்டுக்க ராஜா. புறா தான் தண்ணீரை உறிஞ்சுக் குடிக்கும். மயில் நம் தேசியப்பறவை'' என்றதும், ஆகாஷூம் ராஜாவும் ஆச்சரியப்பட்டனர்.
குட்டீஸ் இந்த கதையைப் படிச்சிட்டீங்களா? இப்ப உங்களிடம் 2 கேள்வி கேட்கப் போறேன். பதில் என்னன்னு சொல்லுங்க பார்க்கலாம்.
1.கூடு கட்டத் தெரியாத பறவை எது?
2. தண்ணீரை உறிஞ்சு குடிக்கும் பறவை எது?


கதையை வாசி விடையை யோசி 5 தேவராஜன்

அன்று ஞாயிற்றுக்கிழமை. ஆகாஷ் வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தான். அம்மா மீன் மார்கெட்டுக்கு செல்ல ஆயுத்தமானாள். டி.வி. பார்த்துக்கொண்டிருந்த ஆகாஷ்,""அம்மா, எங்கே போற. நானும் கூட வரட்டுமா?'' என்று கேட்டான்.
""ம்ம்ம்... வெளியில போகும் போது இப்படி எல்லாம் கேட்கக்கூடாது.நான் மீன் மார்கெட் போகிறேன். நீ என்கூட வரதா இருந்தா சமத்தா இருக்கணும்.என்ன?'' என்று சொல்லிய ஆகாஷின் அம்மா, ஒயர் பேக் எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
ஆகாஷ், அம்மாவின் கையைப்பிடித்துக்கொண்டு நடந்தான்.
போகும் வழியில் ஆகாஷ்,""அம்மா, இந்த மீன் எல்லாம் எங்கே இருக்குது? எப்படி நமக்கு கிடைக்குது?'' என்று ஆர்வமாய் கேட்டான்.
""மீன் பொதுவாக கடல்,ஆறு,குளம்,ஏரி,கிணறு என்று எல்லா நீர் நிலையிலும் இருக்கும். கிராமப்புறங்களில் ஆறு,குளம்,ஏரியில் இருக்கும் மீனைப் பிடித்து சந்தையில் விற்பாங்க. நகர்புறங்களுக்கு அதிகமாக கடல்மீன்கள் தான் சந்தைக்கு வரும்'' என்றாள்.
""அம்மா, கடலில் மீன் மட்டும் தான் இருக்குமா, இல்ல வேற என்னன்ன இருக்கும்?''
என்று ஆகாஷ் கேட்க, ""கடலில் இருக்கும் உயிரினங்களை எண்ணிமாளாது... குறிப்பா சொல்லணும்னா நண்டு வகைகள்,சங்கு,பவளப்பாறைன்னு பல வகை இருக்குப்பா""
என்றாள்.
மீன் மார்கெட் வந்தார்கள். அங்கு,வஞ்சிரம்,வவ்வால் மீன்,சங்கரா,நெத்திலி,திருக்கை,சுறா,அயிரை,றால் என மீன் வகைகள் ஒவ்வொரு கடையிலும் பரப்பி வைக்கப்பட்டிருந்தன.
வீட்டுக்குத் தேவையான மீன்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினர். மீன்களைப் பார்த்ததும் ஆகாசுக்கு மீன்களைப்பற்றிய ஆச்சரிய தகவல்கள் தெரிந்து கொள்ள ஆசை ஏற்பட்டது. ""அம்மா, மீன் பத்தி விந்தையான விஷயங்கள் இருந்தா சொல்லேன்'' என்றான்.
""செதில் இல்லாத மீன் சுறா. பாலுõட்டும் மீன் திமிங்கலம். இடது,வலதுபுறம் செல்லும் உயிரினம் நண்டு.'' என்று சொல்லி முடிக்கவும் வீடுவந்து சேரவும் சரியாக இருந்தது.

குட்டீஸ்! கதையை வாசித்தீங்களா! வெரிகுட். இப்போ 2 கேள்விக்கு நீங்க பதில் சொல்லுங்க பார்ப்போம்.
1. வலதுபுறமாக,இடதுபுறமாகவே செல்லும் உயிரினம் எது?
2. செதில் இல்லாத மீன் எந்த மீன்?
விடைகள்: நண்டு. சுறா


கதையை வாசி; விடையை யோசி 6 தேவராஜன்

பள்ளிக்குச் செல்ல நேரமாகிவிட்டது. ஆகாஷ் அவசர அவசரமாக வீட்டிலிருந்து கிளம்பினான். கிளை சாலையிலிருந்து, பிரதான சாலைக்கு ஓட்டமும் நடையுமாக வந்தான்.
சாலையின் இடது புறம் உள்ள பாதசாரி பாதையில் நடந்து வந்து கொண்டிருந்தான். முச்சந்திப்புக்கு வந்து நின்றான். அவனுடைய பள்ளிக்கு எதிர் புற சாலையைக் கடக்க வேண்டும். சிக்னல் பக்கம் நின்று பச்சை விளக்கு எரிகிறதா என்று நோக்கினான். அப்போது சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
சாலையில் எதிர் புறம் சர் சர் என பஸ்கள், லாரிகள் சென்றன. ஓரமாய் சைக்கிள்களில் சிலர் சென்று கொண்டிருந்தனர். ஆகாஷ் பின்னால் இரு ஆட்டோக்களும், ரிக்ஷாவும் நின்றிருந்தது. எதிரே ஒரு ஊனமுற்றவர் மூன்று சக்கர வண்டியில் அமர்ந்திருந்தார்.
சில நிமிடங்களில் சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தது. ஆகாஷ் சாலையைக் கடந்து எதிர்ப்பக்கம் வந்து சேர்ந்தான். அங்கே அவனுடை நண்பர்கள் பலர் காத்திருந்தனர். அவர்களுடன் சேர்ந்து விரைவாக பள்ளிக்கு வந்து சேர்ந்தான்.
என்ன குட்டீஸ் கதையைப்படித்தீர்களா? இப்ப நான் கேட்கும் கேள்விக்கு டக் டக் டக் என்று பதில் சொல்லுங்க பார்ப்போம்!
ஆகாஷ் சாலையைக் கடக்க நின்றிருந்த போது பார்த்த 6 சக்கரம்,3 சக்கரம், 2 சக்கரம் கொண்ட வாகனங்களின் பெயர்களைக்கூறு?

1 பஸ், லாரி 6 சக்கரவாகங்கள். சைக்கிள் 2 சக்கர வாகனம்
2 ஆட்டோ, ரிக்ஷா, ஊனமுற்றவர் மிதிவண்டி


கதையை வாசி விடையை யோசி7 தேவராஜன்

காலை வேளை. வகுப்பில் மரங்கள் பற்றி ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்...
"" மாணவர்களே, இந்த வகுப்பில் மரங்கள் பற்றி பல விஷயங்கள் தெரிஞ்சுக்கலாம். மரம் மனிதர்களைவிட அதிக ஆயுள் கொண்டது. பிறந்த குழந்தைக்குத் தொட்டில் கட்டுவதில் இருந்து அவன் இறந்தப்பிறகும் பல்லக்கு செய்வது வரை மரம் பயன்படுகிறது.
இந்த பூமி ஆரோக்கியமாக இருக்க மரமும் ஒரு காரணம். நல்ல காற்று, நல்ல தண்ணீர் கிடைக்க மரம் நமக்கு நல்ல தோழனாக இருக்கு. ஒரு நாட்டில் எந்தளவுக்கு மரங்கள் அதிகமாக இருக்கோ அந்தளவுக்கு பசுமை இருக்கும். பஞ்சம் இருக்காது. வான மண்டலத்தில் ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்படுவதும் தடுக்க மரம் தான் உதவும்.'' என்றார், ஆசிரியர்.
ஆகாஷ் எழுந்து,"" ஆலும் வேலும் பல்லுக்குறுதின்னு ஏன் சொல்றாங்க, சார்?''
""நல்ல கேள்வி. ஆலம் குச்சியில் இருக்கும் சில மருத்துவகுணமுள்ள பொருட்களால் பல், ஈறு வலுபெறும். வேம்பு ஒரு கிரிமி நாசினி. அதனால் தான் பெரியவங்க அப்படி சொல்லி வைச்சுருக்காங்க.'' என்றவர், மரத்தினால் மனிதன் பெறும் நன்மைகள் ஏராளம். வாழை தன்னை தந்து உதவுகிறது. தென்னை, மா, பலா, கொய்யா, எலுமிச்சை என கனிவகைகளைத் தருவது மரம் தானே! மூங்கில் மரம் மற்ற மரங்களைவிட சீக்கிரம் உயரமாக வளரக்கூடியது. ஆலமரம் அடர்ந்து வளரக்கூடியது. ஆப்பிள் மரம் குளிர்பிரதேசங்களில் வளரக்கூடியது. இப்படி மரங்கள் பற்றி சொல்ல ஆயிரம் விஷயங்கள் இருக்கு. மனிதர்களுக்கு நன்மை மட்டுமே செய்யும் மரத்தை உங்களைப் போன்ற வருங்கால தலைமுறைகள் தான் காக்கணும். உங்க வீட்டுக்கு ஒரு மரமாவது நட்டு அதை வளர்க்கணும். வீட்டிலோ,தெருவிலோ, ஊரிலோ வயதான மரங்களை யாராவது வெட்டப்போனா, நீங்க, மரத்தைப்பற்றியும், அதன் பயன், நன்மை பற்றி சொல்லி அவங்களுக்கு விழிப்புணர்வு தரணும்'' என்றார், ஆசிரியார். வகுப்பு நேரம் முடிந்தது.
குட்டீஸ் கதையை வாசித்தீங்களா? இப்ப 2 கேள்வி கேட்பேன் பதில் சொல்லுங்க பார்க்கலாம்!
1. கிருமி நாசினி என்று அழைக்கப்படும் மரம் எது?
2. முக்கனிகள் என்பது எது?
விடைகள்:
1. வேம்பு மரம்
2. மா, பலா, வாழை


கதையை வாசி; விடையை யோசி 8 தேவராஜன்

ஆகாஷூக்கு அடுத்த வாரம் பிறந்த நாள் வருகிறது. அவனுக்கு புது டிரஷ் எடுக்க, ஜவுளிக்கடைக்கு செல்ல இருப்பதாக ஆகாஷ் அப்பா சொன்னதும், ""அப்பா, நானும் வரட்டுமா? இன்னைக்கும், நாளைக்கு ஸ்கூல் லீவு தானே'' என்று கெஞ்சினான், ஆகாஷ்.
""உனக்கு நிறைய ஹோம் வொர்க் இருக்குமே. அதை செய்'' என்று அப்பா சொன்னதற்கு,""அப்பா, நான் எல்லாத்தையும் நாளைக்கு முடிச்சுடுறேன். இப்ப உங்க கூட கடைக்கு நானும் வருவேன்'' என்று அடம்பிடிக்கத் துவங்கினான்.
''சரி, கிளம்பு'' என்று சொல்லிய அவர், வாசலுக்கு வந்து ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தார். குதுõகலத்துடன் "ஹை...' என்று குரல்கொடுத்துக்கொண்டே ஓடி போய் ஸ்கூட்டரில் தாவினான்.
அரை மணி நேரத்தில் ஜவுளிக்கடையை அடைந்தனர். கடை பிரமாண்டமாக இருந்தது. வகை வகையாய், பல வண்ணங்களில் டிரஸ்கள் தொங்கிக்கொண்டிந்தன.
ஆகாஷ் எதை எடுப்பது, எதை ஒதுக்குவது என்று புரியாமல் குழம்பினான். கடைசியாக, தனக்கு பிடித்த டி சர்ட், பேன்ட் எடுத்துக்கொண்டான்.
ஆகாஷ் அப்பா தனக்கு கதர் வேஷ்டி, சட்டையும், அம்மாவுக்கு காட்டன் சாரியும் எடுத்துகொண்டார்.
வீடு திரும்புகையில், ""அப்பா இந்த டிரஸ்களுக்கு தேவையான நுõல் எல்லாம் எங்கே கிடைக்குது? எப்படி டிரஸ் பண்றாங்க?'' என்று கேட்டான்.
""நீ எடுத்த டிரஸ்க்கு தேவையான நுõல் எல்லாம் பருத்தியிலிருந்து எடுக்கறாங்க. பருத்தி விவசாய பயிரா பயிரப்படுகிறது. இயந்திரங்கள் மூலம் பருத்தியிலிருந்து நுõல் எடுத்து, அந்த நுõல் கொண்டு மிஷினில் துணியாக நெய்றாங்க. அந்த துணியை தையல்காரர்கள் நாம் உடுத்திக்கொள்ளும் ஆடையாக வடிவமைத்து தைக்கிறாங்க'' என்றார், ஆகாஷ் அப்பா.
இதை கேட்டு ஆச்சரியப்பட்ட ஆகாஷ்,"" அப்பா, பள பளன்னு இருக்கே பட்டு அதுவும் பருத்தியிலிருந்து தான் கிடைக்குதா?'' என்றான்.
"" பட்டு, பட்டுப்பூச்சியின் கூட்டிலிருந்து எடுக்கப்படுகிறது'' என்று ஆகாஷிடம் சொன்னார்.
""அப்பா, பக்கத்து வீட்டு அங்கிள் ஜீன்ஸ் பேன்ட் போட்டு இருக்காங்களே. அது என்ன துணிப்பா?'' என்று ஆர்வமாய் கேட்டவனிடம்,"" ஜீன்ஸ் என்பது முதலில் ஆடையே இல்லை. அது குளிர்பிரதேசங்களில் தங்கிக்கொள்ள கூடாரம் அமைத்துக்கொள்ளும் பாயாகத்தான் இருந்தது. அப்புறம் குளிர்தாங்கவும், அதிக நாள் உழைக்க வேண்டும் என்பதற்காக அந்த கனமான துணியில் பேன்ட் தைத்துக்கொண்டார்கள். அதை தான் இப்போ பேஷன் என்று எல்லாரும் போட்டுத் திரிகிறார்கள்'' என்று ஆகாஷிடம் அப்பாசொல்லி முடிக்கவும் வீடு வரவும் சரியாக இருந்தது.
குட்டீஸ், கதையை வாசித்தீர்களா? உங்களுக்கு 2 கேள்வி. எங்கே பதில் சொல்லுங்க பார்க்கலாம்!
1. டிரஸ்சில் இருக்கும் நுõல் எதிலிருந்து கிடைக்கிறது?
2. முதலில் யார் ஜீன்ஸ் ஆடை அணிந்தார்கள்?
விடை: பருத்தி 2. குளிர்பிரதேசத்தில் இருப்பவர்கள்.


கதையை வாசி விடையை யோசி 9 தேவராஜன்

மாலை நேரம். கம்ப்யூட்டர் பாட வேளை. ஆகாஷ் கம்ப்யூட்டரில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்தான்.
கம்ப்யூட்டர் ஆசிரியர் ஆகாஷ் பக்கம் வந்தவர்,"" என்ன ஆகாஷ் பண்ற?'' என்று கேட்டார்.
""சார், வீடியோ கேம் விளையாடுறேன்'' என்றான்.
இதை கேட்டு மெல்ல சிரித்த ஆசிரியர்,""ஆகாஷ் கம்ப்யூட்டர் என்பது வீடியோ கேம் விளையாடுவதற்காக உள்ள கருவி அல்ல. கம்ப்யூட்டர் மூலம் எவ்வளவோ விஷயங்கள் தெரிந்துக்கொள்ளலாம். நீ அதை விட்டு விளையாட்டல் மட்டும் கவனம் செலுத்துகிறாயே!'' என்று சொன்னார் ஆசிரியர்.
""மன்னிக்ணும் சார். எனக்கு கம்ப்யூட்டர் பற்றி அவ்வளவாக தெரியாது. கேம் விளையாடுவேன். பெயிண்டிங் பண்ணுவேன் அவ்வளவுதான் தெரியும். நீங்க சொல்லுங்க சார், நான் தெரிஞ்சுகிறேன்.'' என்றான் ஆகாஷ்.
ஆகாஷின் ஆர்வத்தைப் பார்த்த ஆசிரியர், "" உனக்கு கம்ப்யூட்டரில் இருக்கும் உப பொருட்களைப் பற்றி சொல்றேன் தெரிஞ்சுக்க'' என்றவர் தொடர்ந்தார்."" மானிட்டர், கீ போர்டு, கேபினட், மவுஸ், டிராக் பால், வெப் கேமிரா, டிஜிட்டல் பேட், டிஜிட்டல் பென், ஜாய் ஸ்டிக், சிடி ராம், சிடி ராம் டிரைவர், பிளாப்பி டிஷ்க், மெமரி கார்டு'' என்றவரை, ஆகாஷ்,"" சார்... கொஞ்சம் நிறுத்துங்க. இவ்வளவு பொருள்கள் கம்ப்யூட்டருக்கு தேவையா? எப்பாடா!'' என்று ஆச்சரியப்பட்டான்.
"" இது மட்டுமல்ல; இன்னும் இருக்கு ஆகாஷ். சொல்றேன் கவனி'' என்றதும், "" இன்னும் இருக்கா. அப்படின்னா கம்ப்யூட்டர் பெரிய கருவியா?'' என்று கேட்டான், ஆகாஷ்.
"" இந்த நுõற்றாண்டின் பெரிய அறிவியல் சாதனையே கம்ப்யூட்டர்தான். சரி, எங்கே விட்டேன். மெமரிகார்டு சொன்னேன்ல, அப்புறம் ஸ்கேனர், மைக்ரோ போன், லேப் டாப், எல்சிடி யூனிட் இப்படி இன்னும் பல இருக்கு.'' என்றார் ஆசிரியர்.
""சார், இவ்வளவு பெயர் சொன்னீங்களே. அதெல்லாம் கம்ப்யூட்டரில் என்ன செய்யும்?'' என்றான்.
""நல்லா சந்தேகம் கேட்கற. உதாரணமா கீ போர்ட் நாம் டைப் செய்ய உதவுது. மவுசு தேடுபொருளை சுட்டுவதற்கு உதவுது. ஸ்கேனர் படங்களை ஸ்கேன் செய்ய பயன்படுகிறது. வெப் கேமிரா, ஸ்பீக்கர் எல்லாம் கம்ப்யூட்டர் முன் இருப்பவரை படம்பிடித்து இன்னொரு இடத்தில் இருப்பவருக்கு கம்ப்யூட்டரில் காட்ட பயன்படுகிறது.'' என்று முடித்தார், ஆசிரியர்.
குட்டீஸ்! உங்களுக்கு கம்ப்யூட்டர் பற்றி பல விஷயங்கள் தெரிஞ்சுருக்கும். 2 கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லுங்க பார்க்கலாம்.
1. கம்ப்யூட்டரில் இணைக்கப்படும் மூன்று பொருட்களைக்கூறு?
2. கீ போர்டு எதற்கு பயன்படுகிறது?
விடை: 1. ஸ்கேனர், ஹெட் போன், வெப் கேமிரா 2. கீ போர்டு எழுத்துக்களை தட்டச்சு செய்ய உதவுகிறது.


கதையை வாசி விடையை யோசி 10 தேவராஜன்

ஆகாஷ், அப்பாவுடன் நகரத்தில் இருக்கும் மாமா வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான். சாலையில் முன்னும் பின்னும் வாகனங்கள் சர்ர் சர்ர் என்று வேகமாக சென்று கொண்டிருந்தன. பஸ்சின் ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்த ஆகாஷ் வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தான்.
பஸ் சாலையில் சிக்னலில் நின்றது. சிக்னலுக்கு எதிரே ஒரு குறுக்குச் சாலையில் ஒரு மாட்டு வண்டியில் நிறைய்ய மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தது. பாவம் மாடு வாயில் நுரைத்தள்ள மிகச் சிரமப்பட்டு இழுத்துக்கொண்டு வந்தது. வண்டியை ஓட்டுபவன் சாட்டையால் மாட்டை அடித்து ஓட்டினான். இதைக்கவனித்த கவனித்த ஆகாஷ் மனம் வருத்தம் கொண்டான்.
""அப்பா, அதோ பாருங்களேன். பாவம் அந்த மாடு. ரொம்ப சிரமப்பட்டு பொதி இழுக்கிறதே! வண்டிகாரன் அதை அப்படி அடித்து சித்ரவதை செய்றானே! இதை கண்டிக்க முடியாதா?'' ஆதங்கத்துடன் கேட்டான்.
அதற்கு,"" ஏன் முடியாது? இதை எல்லாம் தண்டிக்க ஒரு அமைப்பே இருக்கு . அதற்கு பெயர் "புளூ கிராஸ்'. இதற்கு போன் செய்தால் போதும். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்'' என்றார்.
""அப்பா எனக்கு புரியும் படி சொல்லேன்''
"" அதாவது விலங்குகள், பறவைகள் என ஐந்தறிவு ஜீவராசிகளை மனிதர்கள் துன்புறுத்தினால், அந்த அமைப்பினர் சட்டத்தின் மூலம் தண்டனை வாங்கித் தருவார்கள்'' என்றார், அப்பா.
"" மாடுகளைப் போல பிற விலங்குகளை மனிதர்கள் தங்கள் வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்களா?'' என்று சந்தேகம் கேட்டான், ஆகாஷ்.
""ஒட்டகம், கழுதை, குதிரை,யானை இப்படி சில விலங்குகளைப் பயன்படுத்துகிறார்கள். யானையை சித்ரவதைப்படுத்தி பெரிய மரங்களை இழுக்கவும், துõக்கவும், பிச்சை எடுக்கவும் பயன்படுத்துறாங்க. கழுதையை பொதி சுமக்கவும், குதிரை வண்டியிலும், சவாரி செய்யவும், மாடுகளை வண்டியிழுக்கவும், உழவுக்கும் பயன்படுத்துறாங்க.'' என்றார், அப்பா.
இதைக் கேட்ட ஆகாஷ்,"அடப்பாவிகளா! மிருகங்களை வைத்து இப்படி எல்லாம் கொடுமைப்படுத்துவாங்களா?' என்று நினைத்துக்கொண்டவன், ""அப்பா, போலீஸ்காரங்க திருடர்களைப்பிடிக்க நாயை ஏன் பயன்படுத்துறாங்க?'' என கேட்டான்.
""நாய்க்கு மோப்ப சக்தி அதிகம். திருடனின் வாசனையை வைத்து அவனை கண்டுபிடிக்க நாய் உதவுது'' என, அப்பா சொன்னதும்."" அப்பா, மோட்டார் வாகனத்தின் எஞ்சின் திறனை ஏன் குதிரை திறன் என்று சொல்றாங்க?'' என்கேட்டதும்,'' குதிரையின் ஓடும் திறனை ஒப்பிட்டு அப்படி சொல்றாங்க'' என்றார்.
பஸ் நகரத்தை அடைந்தது. இருவர் இறங்கினர். ஆகாஷ் அப்பா பழக்கடையில் பழங்கள் வாங்கிக்கொண்டு, உறவினர் வீட்டை நோக்கி நடக்கலானார். ஆகாஷ் பின்தொடர்ந்தான்.
குட்டீஸ்! கதைப்படித்தீங்களா? இப்ப, உங்களுக்கு 2 கேள்வி. எங்கே பதில் சொல்லுங்க பார்ப்போம்!
1.மனிதர்கள் தங்கள் வேலைகளுக்குப் பயன்படுத்தும் விலங்குகள் எவை? 2. இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன் என்று எந்த விலங்கை சொல்கிறார்கள்?
விடை: 1.மாடு, கழுதை, குதிரை, யானை, நாய் .2. யானை


கதையை வாசி விடையை யோசி 11 தேவராஜன்

அன்று விடுமுறை தினம். ஆகாஷ், ராஜா மாமாவுடன் விளையாட்டு மைதானத்துக்குச் சென்றான். ராஜா மாமா தன் நண்பர்களுடன் மைதானத்தில் கால் பந்து விளையாட்டு விளையாட போனார்.
ஆகாஷ், அவர்கள் விளையாடுவதை ஆச்சரியமாக பார்த்து ரசித்தான். முடிவில் ராஜா மாமா டீம் தான் வெற்றி பெற்றது.
பொழுதாகி விட்டது. இருவரும் வீட்டை நோக்கி நடந்தனர். மாமாவின் கையைப்பிடித்து கொண்ட நடந்த ஆகாஷ்,"" மாமா, கால் பந்து விளையாட்டு போல இன்னும் எத்தனை விளையாட்டுகள்இருக்கு?'' ஆர்வமாய் கேட்டான்.
"" விளையாட்டுகள் பல இருக்கு ஆகாஷ். இன்டோர் கேம், அவுட்டோர் கேம்ன்னு அதுல பல வகை இருக்கு'' என்று சொல்லி முடிக்கும் முன்பாகவே ஆகாஷ்,"" மாமா, இன்டோர் கேம், அவுட்டோர் கேம் என்றால் என்ன?'' என்றான்.
ஆகாஷின் ஆர்வத்தை பார்த்து அசந்து போன ராஜா,"" இன்டோர் கேம் என்றால் உள் அரங்க விளையாட்டு. கேரம், செஸ் முதலிய விளையாட்டுகள். அவுட்டோர் கேம் என்றால் வெளி அரங்க விளையாட்டுன்னு அர்த்தம். அதாவது கிரிக்கெட், ஹாக்கி, புட் பால் விளையாட்டுகள் போல.'' என்றதும், ""ஓ... விளையாட்டிலும் இப்படி வகை எல்லாம் இருக்கிறதா மாமா, சரி, எல்லாருக்கும் கிரிக்கெட் தானே பிடிக்குது. அப்புறம் ஏன் இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கின்னு சொல்றாங்க?'' என்று வெகுளிதனமாய் கேட்டான்.
"" ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தேசிய விளையாட்டு உண்டு. இந்தியாவுக்கு ஹாக்கி. கிரிக்கெட் விளையாட்டு இங்கிலாந்து விளையாட்டு'' என்றான், ராஜா.
"" மாமா, டி.வி.யில நிறைய விளையாட்டுகள் காட்டுறாங்களே. அதனோட பெயர் என்னன்னு சொல்றீயா?'' என்றான்.
"" துப்பாக்கிச் சுடுதல், குண்டெறிதல், வில்லெறிதல், கார் ரேசிங், ஹாக்கி, கிரிக்கெட், போலோ, புட்பால், தடகளம், பேஸ்கட் பால், டென்னிஸ் இப்படி பிரபலமான விளையாட்டுகளும் கபடி, மஞ்சு விரட்டு, சொக்கட்டான், ஆடு புலி ஆட்டம், பல்லாங்குழி இப்படியும் கரகாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம் என பல பாரம்பரிய நாட்டுறப்புற விளையாட்டுகளும் இருக்கு'' என்று சொல்லி முடித்தான், ராஜா. வீடு அருகே வந்த ஆகாஷ் கிடுகிடு என்று ஓடி வீட்டில் நுழைந்தான்.
குட்டீஸ், உங்களுக்கு 2 கேள்வி. பதில் சொல்லுங்க பார்க்கலாம்.
1. இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?
2. சமீபத்தில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் எடுத்த வீரர் பெயர் என்ன?
விடை: 1. ஹாக்கி விளையாட்டு 2. சச்சின் தெண்டுல்கர்.


கதையை வாசி விடையை யோசி12 தேவராஜன்

"" அப்பா, நானும் உங்க கூட போஸ்ட் ஆபிசுக்கு வரட்டுமா?'' என்று கேட்டதோடு, அப்பாவுக்கு முன்பாகவே ஆகாஷ் தயாராக இருந்தான்.
நாலு நல்ல விஷயங்கள் தெரிஞ்சுக்கடட்டும் என நினைத்த ஆகாஷ் அப்பா, "" சரி, சீக்கிரம் வா'' என்று சொல்லி கிளம்பினார்.
வீட்டு பக்கம் தான் இருந்தது போஸ்ட் ஆபிஸ். ஆகாஷ் போஸ்ட் ஆபிஸ் முன் போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்தான். பக்கத்தில் ஒரு இளைஞர் கடிதம் எழுதி கொண்டிருந்தார். அடுத்த பெஞ்சில் இருந்தவர் கவரில் ஸ்டாம் ஒட்டிக்கொண்டிருந்தார். இதை எல்லாம் கூர்ந்து கவனித்தான் ஆகாஷ்.
தான் பிறந்த ஊரான ராமநந்தீஸ்வரத்தில் இருக்கும் சிதலமடைந்த சிவன் கோயிலைப்புதுபிக்க நன்கொடை கேட்டு வந்திருந்த கடிதத்துக்கு மணி ஆர்டர் அனுப்பினார் ஆகாஷ் அப்பா.
"" இப்ப போஸ்ட் ஆபிஸ் இருக்கு. நாம கடிதம், மணி ஆர்டர் எல்லாம் அனுப்புறோம். போஸ்ட் ஆபீஸ் வராத காலத்தில் மக்கள் என்ன செய்திருப்பாங்க?'' ஆகாஷ் சந்தேகத்தை கேட்க ஆரம்பித்தான்.
'' அந்தக்காலத்தில் புறா மூலம் ஓலை எழுதி துõது அனுப்பியதாக இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கு. மன்னர்கள் காலத்தில் துõதுவர்கள் மூலம் செய்தியை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்தில் உள்ளவங்களுக்கு தெரிவிச்சாங்க. இந்தியாவுக்கு கிழக்கிந்திய கம்பெனிகாரங்க வந்தப்பிறகு, அக்டோபர்.1, 1837 ஆண்டு தி இன்டியன் போஸ்டல் ஆபிஸ் கொண்டுவந்தாங்க. 1854ல் விக்டோரியா மகாராணி உருவம் பொறித்த முதல் ஸ்டாம்பு அறிமுகப்படுத்தினாங்க. இப்போது இந்தியாவில் 1 லட்சத்து 55 ஆயிரம் போஸ்ட் ஆபீஸ்கள் இருக்கு'' என்றார்.
"" கடிதத்தில் பின்கோடு அவசியம் குறிப்பிடவும் போட்டிருக்கே. பின்கோடுக்கு என்ன அர்த்தம்?'' என்றுகேட்டான் ஆகாஷ்.
'' பின்கோடு என்றால் போஸ்டல் இன்டக்ஸ் நெம்பர். அதாவது அஞ்சல் குறியீட்டு எண் என்று அர்த்தம். பின்கோடு குறிப்பிட்டால் முகவரி எந்த இடத்திற்குரியது என்பதை சுலபமாகஅறியலாம். உதாரணமாக 609 704 என்ற பின்கோடு இருந்தால் அதை வைச்சு இந்திய நாடு தமிழ்நாடு மாநிலம் நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் என்ற இடத்திற்கு உரிய முகவரி என்று கண்டறியலாம்.'' என்றார்.
"" அப்பா, போஸ்ட் ஆபிஸின் பணிகள் என்னன்னு சொல்லேன்?'' என்று ஆகாஷ் கேட்டதற்கு, "" கடிதம், ஸ்டாம்பு, மணியார்டர், போஸ்டல் ஆர்டர் விற்பனை செய்வது, தபால், மணியார்டர் பட்டுவாடா செய்வது, தந்தி சேவை, சேமிப்பு இப்படி சில பணிகள் உள்ளது'' என்றார்.
"" அப்பா, எனக்கு மணியார்டர் எப்படி நிரப்பி பணம் அனுப்புனும் என்பதை சொல்லித்தாயேன்'' என்று கேட்டான், ஆகாஷ்.
ஒரு மணியார்டர் பார்ம் வாங்கிய ஆகாசின் அப்பா,"" பணம் பெறுபவர் முகவரின்னு இருக்குல இந்த இடத்தில் நீ யாருக்கு பணம் அனுப்ப இருக்கிறீயோ அவங்க முகவரியை எழுதணும். எவ்வளவுபணம் என்பதை எழுதி, அனுப்பிய தேதி எழுதி,அனுப்புபவரின் கையொப்பம் என்ற இடத்தில் உன் கையெழுத்து போடணும். கடைசியாக பணம் அனுப்பியவர் முகவரியில் உன்னோட முகவரியை எழுதி, 100க்கு 5ரூபாய் கமிஷன் கொடுத்தால் போஸ்ட் மாஸ்டர் அதை வாங்கிக்கொண்டு உனக்கு ரசீது கொடுப்பார்'' என்றார்.
குட்டீஸ் கதையை வாசித்துவிட்டீர்களா? இப்ப 2 கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்!
1. இந்தியாவில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டாம்பில் யார் உருவம் இருந்தது?
2. பின் கோடுக்கு தமிழில் என்ன பொருள்?
விடை: 1. விக்டோரியா மகாராணி 2. அஞ்சல் குறியீட்டு எண்


கதையைவாசி விடையை யோசி 13 தேவராஜன்

கோடை விடுமுறைக்கு ஆகாஷை கிராமத்தில் இருக்கும் தாத்தா வீட்டுக்கு அழைத்துச் செல்ல, ஆகாஷ் அப்பா முன்கூட்டியே பயணச்சீட்டு பதிவு செய்ய கோயம்பேட்டுக்கு புறபட தயாரானார். அப்பாவுடன் தானும் வருவேன் என்று கெஞ்சினான், ஆகாஷ். அவனின் பிடிவாதத்தைப் பார்த்து, ""சரி, வா'' என்றதும், துள்ளி குதித்து, அப்பாவுடன் கிளம்பினான் ஆகாஷ்.
அரைமணிநேரத்தில் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தனர்.
"" அப்பா, ரிசர்வேஷன் எல்லா ஊருக்கும் பண்ணலாமா?'' என்றான், ஆகாஷ். ""எல்லா ஊருக்கும் செய்ய முடியாது. குறிப்பிட்ட டவுண்களுக்கு செய்யலாம். நாம் தாத்தா ஊருக்குப் போக மயிலாடுதுறை, திருவாரூர், நாகை இந்த ஊருக்கு ரிசர்வேஷன் செய்து, அங்கிருந்து லோக்கல் டவுன் பஸ்சில் கிராமத்துக்குப் போகணும்.'' என்ற அப்பாவிடம், "" அரசு பஸ் சர்வீஸ் எப்ப ஆரம்பிச்சாங்க?'' என்றான்.
""தமிழகத்தில் ஆரம்பத்தில் பஸ் சர்வீஸ் தனியார்தான் நடத்திக்கிட்டு இருந்தாங்க. முதலில் தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் தனியார் இயக்கிய பஸ்சர்வீஸ்களை 1972ம் ஆண்டு அரசு வாங்கி, சோழன் போக்குவரத்துக்கழகம் என்று பெயரில் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தொடங்கியது. அப்போது 250 பஸ்கள் வரை இருந்தது. அடுத்தடுத்து சேரன், பாண்டியன், பல்லவன் போக்குவரத்து கழகங்கள் அரசு ஆரம்பித்தது.'' என்றார்.
அப்பா சொன்ன விவரங்கள் எல்லாம் பிரமிப்பை ஏற்படுத்தியது. வித விதமான கலர் பஸ்களைப் பார்த்த ஆகாஷ்,"" எல்லாம் அரசு பஸ்தானே! ஏன் ஒவ்வொன்ணும் வேறமாதிரியாக இருக்கு?'' என்று கேட்டான்.
" அதுவா, செமி டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ், வீடியோ கோச், அல்ரா டீலக்ஸ், ஏசி இப்படி பஸ்சில் வகைகள் இருக்கு. இந்த பஸ்கள் எல்லாம் 250 கி.மீ. அதிகமாக உள்ள நகரங்களுக்குச் செல்லக்கூடியது. இந்த பஸ்களை புறநகர் பேருந்துன்னு சொல்வாங்க. இந்த பஸ்கள் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், வரலாற்று புகழ்மிக்க இடங்கள், வழிபாட்டு தலங்கள் முதலான இடங்களுக்கு இயக்கப்படுகின்றன.'' என்று சொல்லி முடித்ததும், "" முதல்ல திருவள்ளுவர் விரைவுப் போக்குவரத்துக்கழகம் என்று இருந்ததே, அது இப்ப இல்லையே, ஏன்?'' என்று கேட்டான், ஆகாஷ்.
"" தமிழகத்தில் இயங்கும் அனைத்து விரைவுப் பேருந்துகளும் தமிழ்நாடு ஸ்டேட்போர்டு டிரான்ஸ்போர்ட் கார்ப்பொரேஷன்னு பெயர் மாற்றிவிட்டாங்க. அதுபோல சோழன், சேரன், பாண்டியன், சத்யா, மருதுபாண்டியர் போக்கு வரத்து கழகங்களும் அந்தந்த கோட்ட போக்குவரத்து கழகமா மாற்றிட்டாங்க.'' என்றார், ஆகாஷ் அப்பா.
"" தமிழகத்தில் எவ்வளவு பஸ் டெப்போ இருக்கு?'' என்று கேட்டதற்கு, "" சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, கும்பகோணம், துõத்துக்குடி, நாகர்கோயில், கன்யாகுமரி, சேலம் மற்றும் பெங்களுர், திருப்பதிகளில் அரசு டெப்போ உள்ளது. எல்லா டெப்போகளில் இயக்கப்படும் பஸ்கள் போக்கு வரத்து கிட்டதட்ட 1லட்சத்து 70 ஆயிரம் கி.மீ'' என்றார், ஆகாஷ் அப்பா.
"" பள்ளியில் படிக்கும் எங்களுக்கு இலவச பஸ் பாஸ் தந்திருக்காங்களே. இதனால், பஸ்காரங்களுக்கு நஷ்டம் வராதா?'' என்று கேட்டான், ஆகாஷ்.
"" மாணவர்களுக்கு தரும் இலவச பாஸ்களுக்கு உரிய கட்டணத்தை அரசு, போக்குவரத்துக்குக் கொடுத்து விடும்.'' என்றார்.
என்ன குட்டீஸ் கதை படிச்சீங்களா? இப்ப 2 கேள்வி கேட்பேன். பதில் சொல்லுங்க பார்க்கலாம்.
1. டிஎன் எஸ் டி சி என்பதன் விரிவான தமிழ் பெயர் என்ன? 2. பல்லவன் போக்குவரத்து கழகம் இப்போது என்ன பெயரில் உள்ளது? விடை: 1. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம். 2. மாநகராட்சி போக்குவரத்துக் கழகம்.


கதையை வாசி விடையை யோசி 14 தேவராஜன்

கோடை விடுமுறைக்கு தாத்தாவின் ஊரான ராமநந்தீஸ்வரம் வந்து விட்டான் ஆகாஷ். நகரத்தின் இரைச்சலும் ,நெரிசலும், கட்டடங்களை பார்த்துப் பழகியவனுக்கு கிராமத்தின் பசுமையும், ஒற்றையடி பாதைகளும், ஆறு, குளம், தோப்புகளும் பிரமிப்பை ஏற்படுத்தியது.
பாடப்புத்தகத்தில் படமாய் பார்த்த பறவைகளையும், விலங்குகளையும் பக்கத்தில் தொட்டு பார்த்த அனுபவம் ஆகாசுக்கு குதுõகலமூட்டியது.
வீட்டின் முற்றத்தில் ஈசி சேரில் அமர்ந்து, பனை ஓலை விசிறியால் விசிறிக்கொண்டிருந்த தாத்தாவிடம், "" தாத்தா, ஊரெல்லாம் ஒரே கொண்டாட்டாம், விழான்னு இருக்கே. இதெல்லாம் கிராமத்தில் மட்டும்தான் நடக்குமா?'' என்றான்.
'' ஆமாண்டா பேரா! கிராமத்து மனுஷங்க ஆண்டு முழுவதும் ஓடி, ஆடி உழைக்கறவங்க. அறுவடை எல்லாம் முடிஞ்சி, அக்கடான்னு ஓய்ந்திருக்கும் போது மனச சந்தோஷமாக வைத்துக்கொள்ள ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு இருக்கத்தான் திருவிழாக்கள் கொண்டாடுவாங்க. நீ இருக்கும் சிட்டியில மனுஷங்க பணம் பணம்னு அலைவாங்க. இங்க, அப்படி இல்ல.'' என்று கணைத்துக்கொண்டே சொன்னார் தாத்தா.
"" ஆமாம், நேற்று முத்துமாரியம்மன் கோயிலில் தலையில ஒரு பாத்திரம் வைத்துக்கொண்டு ஆடினாங்களே. பக்கத்துல பீப்பி, மேளம் எல்லாம் ரொம்ப சூப்பரா இருந்தது. அது என்ன ஆட்டம்?'' ஆர்வமாய்
இந்தமுறை கோடை விடுமுறைக்கு தாத்தாவின் ஊரான ராமநந்தீஸ்வரம் வந்து விட்டான் ஆகாஷ். நகரத்தின் இரைச்சலும் ,நெரிசலும், கட்டங்களை பார்த்துப் பழகியவனுக்கு கிராமத்தின் பசுமையும், ஒற்றையடி பாதைகளும், ஆறு, குளம், தோப்புகளும் பிரமிப்பை ஏற்படுத்தியது.
பாடப்புத்தகத்தில் படமாய் பார்த்த பறவைகளையும், விலங்குகளையும் பக்கத்தில் தொட்டு பார்த்த அனுபவம் ஆகாசுக்கு குதுõகலமூட்டியது.
வீட்டின் முற்றத்தில் ஈசி சேரில் அமர்ந்து, பனை ஓலை விசிறியால் விசிறிக்கொண்டிருந்த தாத்தாவிடம், "" தாத்தா, ஊரெல்லாம் ஒரே கொண்டாட்டாம், விழான்னு இருக்கே. இதெல்லாம் கிராமத்தில் மட்டும்தான் நடக்குமா?'' என்றான்.
'' ஆமாண்டா பேரா! கிராமத்து மனுஷங்க ஆண்டு முழுவதும் ஓடி, ஆடி உழைக்கறவங்க. அறுவடை எல்லாம் முடிஞ்சி, அக்கடான்னு ஓய்ந்திருக்கும் போது மனச சந்தோஷமாக வைத்துக்கொள்ள ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு இருக்கத்தான் திருவிழாக்கள் கொண்டாடுவாங்க. நீ இருக்கும் சிட்டியில மனுஷங்க பணம் பணம்னு அலைவாங்க. இங்க, அப்படி இல்ல.'' என்று கணைத்துக்கொண்டே சொன்னார் தாத்தா.
"" ஆமாம், நேற்று முத்துமாரியம்மன் கோயிலில் தலையில ஒரு பாத்திரம் வைத்துக்கொண்டு ஆடினாங்களே. பக்கத்துல பீப்பி, மேளம் எல்லாம் ரொம்ப சூப்பரா இருந்தது. அது என்ன ஆட்டம்?'' ஆர்வமாய் கேட்டான் ஆகாஷ்.
"" அது கரகாட்டம். இது போல பல ஆட்டம் இருக்கு. மயிலாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம்,சிலம்பாட்டம், தப்பாட்டம், பொம்மலாட்டம், உருமியாட்டம், வில்லு பாட்டு, பொய்க்கால் குதிரை இப்படி நிறைய இருக்கு. நீ தான் இங்கே இருக்கப்போறீயே பார்த்துக்க.'' என்றார்.
ஆத்தா சுடச்சுட வெங்காய பஜ்ஜியும், கொத்தமல்லிக்காபியும் கொண்டுவந்து கொடுத்தார். ஆகாஷ் சப்புப்கொட்டி சாப்பிட்டான். பிறகு, "" தாத்தா, அதோ மூலையில ஒரு கல்லு இருக்கே அது என்னது?'' என்றான்.
"" அதுக்கு பேரு உரல். அதுலதான் நெல்லு குத்தி அரிசி எடுப்பாங்க. அவல், மாவு போல பல பொருட்கள் உரலில்தான் இடிப்பாங்க. முற்றத்தின் ஓரம் இருக்கே அதுக்கு பேரு ஆட்டுக்கல், அதுலதான் மாவு அரைப்பாங்க. அம்மியில் சட்டினி, துவையல் எல்லாம் அரைப்பாங்க. உங்க ஊரில்தான் கிரைண்டர், மிக்ஸி வைச்சிருக்கீங்களே'' என்றார்.
கொல்லைப்புறத்தில் இருந்து வண்ணத்துப்பூச்சியை பிடித்துகொண்டு வந்த பக்கத்து வீட்டு ராஜா,"" டேய் ஆகாஷ், வாடா மந்தைகரைக்குப் போய் பட்டம் விடலாம்'' என்று கூப்பிட்டான். ராஜாவுடன் பட்டம்விட ஆகாஷ் துள்ளிக்குதித்து கிளம்பினான்.
குட்டீஸ் கதை படித்தீங்களா? இப்ப கேள்வி நேரம்.
1. தாத்தா வீட்டில் ஆகாஷ் பார்த்த பொருட்கள் எவை?
2. முத்துமாரியம்மன் கோயிலில் என்ன ஆட்டம் நடந்தது?
விடை: 1. உரல், ஆட்டுக்கல், அம்மி. 2. கரகாட்டம் கேட்டான் ஆகாஷ்.


கதைவாசி விடை யோசி 15 தேவராஜன்
தாத்தாவீட்டுக்கு வந்து ஒரு வாரம் கழிந்தது. ஆகாஷின் பெரியப்பா, சித்தப்பா, அத்தை வீட்டிலிருந்துஅருண், பிரியா, மூர்த்தி, அனுஷா, திவ்யா, சாயிபவித்திரா எல்லாரும் விடுமுறைக்கு தாத்தா வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.வீடே பண்டிகை கண்டது போலிருந்தது.
மாலையில் தாத்தா சண்முகம் தன் பேரன், பேத்திகளை மாட்டு வண்டியில் அழைத்துக் கொண்டு கிராமத்தை சுற்றிக்காட்ட அழைத்துச்சென்றுகொண்டிருந்தார்.
ஒற்றையடி பாதையின் முடிவில் ஒரு ஓடை இருந்தது. அந்த ஓடைக்கரையில் இருந்த ஒதியம் மரத்தில் நீட்டு நீட்டாக தொங்கிக்கொண்டிருந்ததை சுட்டிக்காட்டிய ஆகாஷ்,""தாத்தா, அதோ தொங்குதே அது என்ன கூடு?'' என்று கேட்டான்.
"" அது துõக்கனாங்குருவி கூடு. பாரப்பா... எத்தனை அழகு! இப்போது படிக்கும் இன்ஜினியர்கூட இது போல வீடு கட்ட முடியுமா? '' என்று தாத்தா ஆச்சரியபடுத்தினார். பின்னர், ஓடைக்கரையில் பக்கம் இருந்த ஊர் எல்லை காவல் தெய்வம் கோயிலுக்குச் சென்றனர்.
அங்கிருந்த தெய்வங்கள் எல்லாம் கம்பீரமாக அம்பு, அரிவாள், வேலுடன் இருந்தன.
ஓடைக்காற்று சில்லென்று வீசியது. தெளிந்த வானமும், துõரத்தில் கூட்டமாய் பறந்து செல்லும் பறவைகளும் காணக்கிடைக்காத காட்சியாக இருந்தது.
""தாத்தா, ஊர்க் காவல் தெய்வம்னா என்ன?'' என்று கேட்டான் மூர்த்தி.
"" ஊருக்கு எந்த தீங்கும் வராம பார்த்துகிற தெய்வம் இது. அது மட்டுமல்லாம விவசாயம் நல்லபடியாக நடக்கவும், திருட்டுபோகாம ஊர் எல்லையில் இருந்து காக்கும் தெய்வம் இது. இந்த தெய்வம் ஊருக்கெல்லாம் பொதுவானது'' என்ற தாத்தா பேரபிள்ளைகளை தேக்கு மர கரை வழியாக சாலைக்கு அழைத்து வந்தார்.
பின்னர் வண்டியைப் பூட்டிக்கொண்டு கிளம்பினர்.
சலங்கை பூட்டிய மாட்டின் சலங்கை ஜல்ஜல் என்று சப்பதமிட்டது. மாட்டு வண்டிபயணம் ஆகாஷூக்கு ஒரு விநோதமாக இருந்துது.
அரைமணி நேரம் பயணத்தில் சாலையோர ஆலமரத்தடியில் வண்டியை நிறுத்தினார் தாத்தா.
பேரப்பிள்ளைகள் வண்டியிலிருந்து இறங்கி, ""ஐ... பெரிய மரம்!'' என்று குரல்கொடுத்து கொண்டு ஒவ்வொருத்தரும் ஆலம் விழுதைத் தொங்கிக்கொண்டு ஊஞ்சல் ஆடினர். அது அவர்களுக்கு ஆனந்தமாக இருந்தது. ஆடிமுடித்ததும் எல்லாருக்கும் பனம் நுங்கு வாங்கித் தந்தார் தாத்தா. பின்னர், எல்லாருக்கும் ஒரு குவளை பதனீர் வாங்கித் தந்தார். அதைப் பருகியதும், ""ஆ... வாவ் என்ன டேஸ்ட்! தாத்தா, இது எப்படி தயாரிக்கிறாங்க?'' என்று கேட்டான் ஆகாஷ்.
"" இது பனமரத்தில் வடியும் பாலில் இருந்து தயார் பண்றாங்க. இது மட்டுமல்லமா பனை வெல்லமும் தயாரிப்பாங்க'' என்றவர், கிளம்புங்க பொழுது சாயப்போகுது நேரா குலதெய்வ கோயிலுக்குப் போயிட்டு வீட்டுக்கு கிளம்பலாம்'' என்று வண்டியை கிளப்பினார்.
"" தாத்தா, குலதெய்வம் என்றால் என்ன ?'' என்று கேட்டான் மூர்த்தி. வண்டியை ஓட்டிக்கொண்டே,
""நம்ம குடும்பத்தை பரம்பரை பரம்பரையாக காக்கிறதெய்வம்தான் குலதெய்வம். நமக்கு குலதெய்வம் பில்லாலி மாரியம்மன். இது மாதிரி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தெய்வம் உண்டு. அதை பெரியவங்ககிட்ட கேட்டா சொல்லுவாங்க.எந்த நல்ல செயலை தொடங்கும்முன்பு குலதெய்வத்தை வேண்டிக்கிட்டுதான் செய்யணும். குடும்பவாரிசுகளுக்கு முதல் முடி இறக்குதல், காது குத்துதல் குலத்தெய்வத்துக்குதான் செய்யணும். உங்களுக்கெல்லாம் குலதெய்வகோயில்லதான் முடிகாணிக்கை, காது குத்து எல்லாம் நடந்தது. கல்யாணம் என்றால் முதல் பத்திரிகை அம்மன்கிட்ட வைச்சுதான் பிறகு சொந்த பந்தங்களுக்கு கொடுக்கணும். அப்புறம் விவசாயத்துக்கு விதை நெல் பூஜை, கஞ்சி ஊற்றல் இப்படி நிறைய வழிபாடு முறை இருக்கு. இதை எல்லாம் நீங்களும் தெரிஞ்சுக்கிட்டு தவறாம வழிவழியாக செய்யணும்'' என்றார் சண்முகம்தாத்தா.
குட்டீஸ் கதையைப் படிச்சீங்களா? இப்போ கேள்வி நேரம்:
1. ஓடைக்கரையில் மரத்தில் இருந்த பறவைக்கூட்டின் பெயர் என்ன?
2. தாத்தா சொன்ன குலதெய்வத்தின் பெயர் என்ன?
விடை: 1. துõக்கனாங்குருவி கூடு. 2. பில்லாலி மாரியம்மன்



கதையை வாசி விடையை யோசி 16 தேவராஜன்

சுள்ளென்று சுட்டு தீர்த்த வெயிலை கோடை மழை வந்து விரட்டிவிட்டது. கிராமம் கொஞ்சம் குளிர்ச்சியாக இருந்தது. கோடை விடுமுறை ஒவ்வொரு நாளும் சென்னையிலிருந்து வந்த இவர்களுக்கு குதுõகலத்தையும், மகிழ்ச்சியையும் கொட்டிக்கொண்டிருந்தது.
வீட்டின் கொல்லைப்புறத்தில் அனுஷாவும், திவ்யாவும் பல்லாங்குழி விளையாடிக்கொண்டிருந்தனர். இடையில்வந்த பிரியாவும், சாயிபவித்திராவும் விளையாட்டில் இணைந்து கொண்டனர்.
பக்கத்தில் இருந்த கிணற்று பக்கம் இருந்த புன்னை மரநிழலில் ஆகாஷூம் முகேஷூம் ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தனர். அதை எப்படி விளையாடுவது என்று சொல்லிக்கொண்டிருந்தான் அருண்.
கொல்லைப்புறம் வந்த ராஜா மாமா, "" பசங்களா, நாம வேன் பிடித்து ஜாலியா டூர் போகலாமா?'' என்று கேட்டதும், எல்லாரும் கோரஸாய் "" ஹாய் ஜாலி! போகலாம்... எப்ப மாமா போகலாம்?'' என்று கேட்டாள் பிரியா.
""நாளைக்கே போகலாம்'' என்று ராஜா சொல்லி முடிக்கும் முன்பாக, "" மாமா, இந்த ஊர்ல சுத்திப்பார்க்க என்னென்ன இருக்கு, சொல்லேன்!'' என்று ஆசையாய் கேட்டான், அருண்.
"" நிறைய இடங்கள் இருக்கு. நாம இருக்கிற இந்த ஊரைச்சுற்றி பல பார்க்க ரசித்து, மகிழ பல இடங்கள் இருக்கு. எப்படி நீங்க இருக்கும் சென்னையில் பல இடங்கள் இருக்குதோ அது போல இந்த கிராமங்களைச் சுற்றியும் சுற்றுலா போக பல இடங்கள் இருக்கு. நீங்க ஊருக்கு புறப்படுவதற்கு முன் எல்லாத்தையும் பார்த்திடலாம்'' என்ற ராஜாவிடம், "" சித்தப்பா, நாம் பார்க்க போற ஊர்களைப் பற்றி கொஞ்சம் சொல்லேன்'' என்று கெஞ்சினாள் திவ்யா.
"" திருவாரூர் போய் தேரழகுப் பார்க்கலாம். திருச்செங்காட்டாங்குடியில் பிள்ளைக்கறி கேட்டு சாப்பிட்ட சிவன் கோயிலை தரிசிக்கலாம். திருப்புகலுõரில் நாவுக்கரசரின் உழவாரப் பணியை காணலாம்.கும்பகோணம் போய் கொழுந்து வெத்திலை தின்று கொண்டே கோயில் நகரத்தை பக்தியோடு சுற்றி வரலாம். பூம்புகாரில் கோவலன், கண்ணகி வாழ்ந்த இடத்தைப் பார்க்கலாம். தரங்கம் பாடியில் டச்சுக்கோட்டைக் கண்டு மகிழலாம். வேடந்தாங்கலில் வெளிநாட்டு பறவை பார்க்கலாம். வேதாரண்யம் போனால் கடலும், உப்பளங்களும் காணலாம். வேளாங்கன்னியில் மாதா சர்ச் பார்க்கலாம். நாகப்பட்டினத்தில் துறை முகம் பார்க்கலாம். நாகூரில் தர்கா பார்க்கலாம். சிதம்பரம் சென்றால் கோயில் பார்க்கலாம் அப்படியே பிச்சாவரம் ஏரியில் படகுசவாரி பண்ணலாம்.'' என்ற ராஜாவிடம், "" ""இவ்வளவு இடங்கள் பக்கத்திலேயே இருக்கா?'' என்று ஆச்சரியமாய் கேட்டாள் ஆகாஷ்.
"" ஆமாம். எல்லாம் நாம இருக்கும் திருக்கண்ணபுரத்தில் இருந்து 30 கி.மீ.க்குள் தான் இருக்கு. அதிக துõரம் போய் பார்க்கணும்னு விருப்பபட்டா, தஞ்சாவூர் போகலாம். தலையாட்டி பொம்மை வாங்கலாம். புதுக்கோட்டை போனால் சித்தனவாசல் குகை சித்திரம் பார்த்து மகிழலாம். திருச்சிக்கு போகலாம் மலைக்கோட்டையும், கல்லணையும் பார்த்து ரசிக்கலாம்.'' என்று ராஜா சொல்லி முடித்ததும், எல்லாரும் ரொம்பவும் ஆச்சரியப்பட்டனர்.


கதையை வாசி விடையை யோசி 17 தேவராஜன்

வீட்டில் புளுக்கம் அதிகமாக இருந்தது. கரன்ட் இல்லாததால் மின்விசிறியும் வேலை செய்ய வில்லை. தன் பேரப்பிள்ளைகளை
கொல்லைப்புறத்திற்கு கூட்டிவந்து கயிற்று கட்டிலில் அமரவைத்து பேரன்களுக்கு பனைஓலை விசிறியால் விசிறினார் தாத்தா.
""எப்பப்பா... என்ன வெயில்! ஏன் இவ்வளவு வெப்பமாக இருக்கு? இதுக்கு முன்னாடி அப்படி இல்லையே?'' என்றான் முகேஷ்.
"" இப்ப அக்னி நட்சத்திரம் நடக்குதுல. அதான் உஷ்ணம் அதிகமாக இருக்கு.'' என்றார் தாத்தா.
"" அக்னி நட்சத்திரமா அப்படின்னா என்ன தாத்தா?'' என்று கேட்டாள் அனுஷா.
"" நீங்க எல்லாம் படிக்கிற புள்ளைங்க. அறிவியல் முறையில் புரியும்படி சொல்றேன். நாம் இருக்கிற பூமி 23.5 பாகை சாய்வான நிலையில் சீராக அச்சில் சூரியனை நீள் வட்டபாதையில் சுற்றுகிறது. அப்படி சுற்றும் பொழுது பூமியின் வடபுலம் 6 மாதங்களும், தென் புலம் 6 மாதங்களும் சூரியனின் ஒளிவிழும் . நேராக சூரியன்ஒளி விழும் காலம் கோடை . சாய்வாக சூரியனின் ஒளி விழும் காலம் குளிர் காலம். சூரியனின் ஒளி நேராக விழும் கோடை காலத்தில் சில நாட்கள் மட்டும் சூரிய கதிர் நேர்கோணத்தில் பூமி மீதுவிழும். இக்காலத்தில் சூரியனின் மிக அதிக பட்ச வெப்பம் பூமி மீது தாக்கும். இதை தான் கத்திரி வெயில், அக்னி நட்சத்திரம் என்று சொல்கிறார்கள்'' என்றார் தாத்தா.
"" ஓ! இதுக்குப் பெயர் தான் அக்னிநட்சத்திரமா? சரி, அக்னி நட்சத்திரம் எப்ப ஆரம்பித்து, எப்ப முடியும்?'' என்று ஆர்வமாய் அருண் கேட்டான்.
"" முந்தாநாளில் இருந்து அதாவது மே 4ல் இருந்து மே 28 வரை அக்னிநட்சத்திரம் இருக்கும். அக்னி நட்சத்திர கால அளவு 21 நாள்.
அக்னிநட்சத்திர உச்சகாலம் மே8 முதல் 21 வரை உஷ்ணம் அதிகமாக இருக்கும்'' என்று விளக்கமளித்தார் தாத்தா.
"" அக்னி நட்சத்திரத்தால் எதாவது ஆபத்து வருமா, தாத்தா?'' என்று திவ்யா கேட்டாள்.
"" பாதுகாப்பா இருந்தா பிரச்னை இல்லை. இருந்தாலும் கிராமப்புறத்தில் இந்த நாளில் மொட்டை அடித்தல், நிலம் தோண்டுதல், வீடுகட்ட துவக்கம், மரங்கள், செடிகள் வெட்டுவது, தோட்டம் அமைப்பது, விதை விதைத்தல், புதிய குடியிருப்பு பகுதி அமைப்பது போன்றவை செய்யக்கூடாதுன்னு சொல்வாங்க'' என்றார்.
"" எங்களுக்கு ஸ்கூலில் கூட இப்படிஎல்லாம் சொல்லிக்கொடுத்ததில்லை. நீங்கதான் தாத்தா அக்னி நட்சத்திரம் பற்றி டீப்பா சொன்னீங்க.'' என்று சாயிபவித்ரா சொல்லி முடித்தபோது
"" செல்லங்களா, வாங்க பானக்கம் செய்திருக்கேன். வந்து வாங்கிட்டுப்போங்க'' என்று பாட்டி குரல் கொடுக்கஎல்லாரும் வீட்டுக்குள் சென்றனர்.
குட்டீஸ் கதை படித்தீர்களா? இதில் 2 கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லுங்க.
1. அக்னி நட்சத்திரம் எப்போது ஆரம்பித்து, முடிகிறது?
2. சூரியக்கதிர் செங்குத்தாக பூமி மீது விழும் காலம் எது?
விடை: 1. மே 4ல் ஆரம்பித்து மே 28ம் தேதி முடியும். 2. கோடை

கதையைவாசி விடையை யோசி 18 தேவராஜன்

வீட்டின் பின்புறத்தில் உள்ள மூங்கில் தோட்டத்தில் பேரப்பிள்ளைகள் தங்கள் பெயரை ஒவ்வொரு மூங்கிலில் எழுதி சந்தோஷப்பட்டுக்கொண்டிருப்பதை துõர நின்று வேடிக்கைப்பார்த்தார் சண்முகம் தாத்தா.
"" ஏ, மூர்த்தி தாத்தா கையில் குச்சி வைத்துக்கொண்டு நம்மை மரங்கொத்தி பறவை மாதிரி பார்த்துக்கிட்டு இருக்கிறாருடா, வாடா போயிடலாம்'' என்றாள் அனுஷா.
"" சரி, வாங்க எல்லாரும் வீட்டுக்குப் போயிடலாம்'' என்ற மூர்த்தி, திவ்யா, சாயிபவித்தாரவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தான்.
வீட்டின் கூடத்தில் ராஜா மாமா புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்.
""மாமா என் கிளாஸ் டீச்சரிடம் சம்மர் ஹாலிடேவுக்கு தாத்தா ஊரான நாகபட்டினத்தில் இருக்கும் வில்லேஜ்க்கு போகப்போறேன்னு சொன்னேன். உடனே டீச்சர், அப்படின்னா அங்கே உள்ள சுனாமி பாதித்த ஊர்களைப் போய் பார்த்துட்டு வாடான்னு சொன்னாங்க. நீ கூட்டிட்டு போறீயா மாமா?'' என்று கேட்டான் அருண்.
பக்கத்தில் இருந்த அனுஷா, "" சுனாமினா என்ன? அது எப்போ வந்தது சித்தப்பா?'' என்று கேட்டாள்.
""கடலுக்கு அடியில் ஏற்படுகிற பயங்கரமான பூகம்பம், எரிமலைவெடிப்பு ஏற்படும் போது அந்த அதிர்வுகளினால் ஏற்படுகிற பேரலைதான் சுனாமி. இது ஜப்பானில் அடிக்கடி துறைமுகங்களில் ஏற்படுவதுண்டு. அதனால், ஜப்பானியர்கள் சுனாமின்னு பெயர்வைத்தாங்க. சுனாமின்னா "துறைமுக அலை' அர்த்தம். இந்தியாவில் டிசம்பர் 26, 2004 சுனாமி வந்து பேரழிவை ஏற்படுத்தியது. குறிப்பாக நாகை பக்கம் உள்ள அக்கரைப்பேட்டை, வேளாங்கன்னி கடலோரப்பகுதியில் பயங்கர உயிர்பலி உண்டாக்கிட்டு. நாளைக்கு உங்களை எல்லாம் அந்த இடத்து அழைத்துப்போகிறேன். நாகை கடற்கரையில் சுனாமி நினைவு ஸ்துõபி கூட வைச்சிருக்காங்க.'' என்றார்.
"" மாமா, இதுக்கு முன்னால சுனாமி வந்ததில்லையா?'' என்று கேட்டாள் பிரியா.
"" வந்திருக்கு. அப்போ அதுக்கு பேரு கடல்கோள். கோவலன், கண்ணகி வாழ்ந்த காவிரிபூம்பட்டினம், பூம்புகார் எல்லாம் அப்போ வந்த சுனாமியால்கடலில் மூழ்கிடுச்சு. கன்னியாகுமரி பக்கம் உள்ள குமரிகோட்டம், பஃறுளி ஆறு எல்லாம் கடலில் மூழ்கிபோய்விட்டதாக ஆய்வாளர்கள் சொல்றாங்க'' என்று ராஜா சொல்லி முடித்தும், "" சுனாமி வருவதை முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியாதா?'' மூர்த்தி கேட்டான்.
"" முடியும். அமெரிக்கா சுனாமி வருவதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் அமைப்பை நடத்தறாங்க அதுக்கு பேர் "பசிபிக் சுனாமி எச்சரிக்கை அமைப்பு' என்று பெயர். இதில் அதிகமா சுனாமிபாதிக்கப்படும் நாடுகள் உறுப்பினர்களாக இருக்காங்க. அந்த அமைப்பு கடலில் நிலநடுக்கம் வந்தா சுனாமி எச்சரிக்கையாக உறுப்பினர் நாடுகளுக்கு உடனே தெரிவிப்பாங்க'' என்ற ராஜாவை ஆர்வமாய்கவனித்துக்கொண்டிருதனர் திவ்யாவும் அனுஷாவும்.
குட்டீஸ் கதை படிச்சீங்களா? இப்ப 2 கேள்விக்கு டக்க டக்ன்னு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.
1. சுனாமி வந்த ஆண்டு எது? 2. சுனாமி எச்சரிக்கை அமைப்பின் பெயர் என்ன?
விடை: 1.டிசம்பர்26, 2004. 2. பசிபிக் சுனாமி எச்சரிக்கை அமைப்பு



கதையைவாசி விடையை யோசி 19 தேவராஜன்
கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்திற்குப் பேரப்பிள்ளைகளை அழைத்துச் செல்ல இருந்தார் தாத்தா.
"" கோடியக்கரை காட்டின் ஓர் இடத்தில் ராமர் பாதம் இருக்காமே'' என்று கேட்டான் மூர்த்தி.
"" ஆமாம். இருக்கு. நான்கூட பார்த்திருக்கேன். நீங்களும் இன்னைக்குப்ப õர்க்கலாம்'' என்றார் தாத்தா.
"" தாத்தா, இந்த ஆண்டு உப்புசத்தியாகிரகத்தின் 80 ஆண்டு விழாவாமே! வேதாரண்யத்தில் கூட உப்புசத்தியாகிரகம் நடந்ததுன்னு டீச்சர் சொன்னாங்க. அங்க போகலாமா?'' துடிப்பாய்கேட்டாள் அனுஷா.
""உப்பு சத்தியாகிரகம்னா என்ன?'' புரியாது கேட்டான் அருண்.
"" இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர் உப்புக்கு வரி போட்டாங்க. நம்ம கடல்பகுதியில் ஆங்கிலேயர் அனுமதியோடத்தான் நாம உப்பு எடுக்கணும்னு சட்டம் போட்டாங்க. இதை எதிர்த்த காந்தி மார்ச்12, 1930ல் சபர்மதி ஆஸ்ரமத்திலிருந்து அரபிக்கடலோர பாதையில்390 கி.மீ. துõரம் நடைபயணமாக தண்டி வந்து ஏப்ரல் 6, 1930 அன்று ஆங்கிலேயர் சட்டத்தை மீறி உப்பு எடுத்தார். இதை தண்டியாத்திரை, உப்புசத்தியாகிரகம்என்று சொல்வாங்க. இந்த யாத்திரையில் 80 ஆயிரத்துக்கும் மேலானோர் சிறை சென்றார்கள்.'' என்றார் தாத்தா.
"" சத்தியாகிரகம் என்பதின் அர்த்தம் என்ன?'' என்று கேட்டாள் திவ்யா.
""சத்தியம் உண்மை; கிரகம் கேட்பது அதாவது நியாயம் கேட்டல் என்று பொருள்'' என்று சொல்லிக்கொண்டிருந்த போது, தாத்தாவின் நெஞ்சுமுடியை நீவியப்படி சாயிபவித்திரா கேட்டாள்: ""தாத்தா, வேதாரண்யத்தில் யாரு உப்புசத்தியாகிரகம் பண்ணது?''
"" அதே ஆண்டு தமிழகத்தில் ராஜாஜி தலைமையில் சர்தார் வேதரத்னம்கூட ஆயிரத்துக்கு மேலானோர் திருச்சி இருந்து திருவையாறு, தஞ்சாவூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, தகட்டூர் வழியாக ஏப்ரல் 30, 1930ல் வேதாரண்யம் வந்த ராஜாஜிஆங்கிலேயர் சட்டத்தை மீறி உப்பு காய்ச்சி எடுத்தார். இதனால் ராஜாஜி உட்பட ஆயிரக்கணக்கானோரை ஆங்கில அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.'' என்றார் தாத்தா.
"" வேதாரண்யத்துக்கும் எங்களை கூட்டிட்டு போறீங்களா?'' என்று பிரியமாய் கேட்டாள் பிரியா.
"" கண்டிப்பாக போகலாம். ஒருவரலாற்று சம்பவம் நடந்த இடத்தை நீங்கள் எல்லாம் பார்க்காம இருக்கலாமா?'' என்று அருணை பார்த்தபடி சொன்னார் தாத்தா.
குட்டீஸ் கதை வாசிச்சாச்சு. இதில் இருந்து 2 கேள்விக்கு பதில் யோசிக்கலாமா?
1. சத்தியாகிரகம் என்பதன் பொருள் என்ன?
2. வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் நடந்தது எப்போது?
பதில் : 1. நியாயம் கேட்டல் 2. ஏப்ரல் 30, 1930

கதைவாசி விடையோசி 19 தேவராஜன்
தகிக்கும் வெயிலுக்கு குளிர்ச்சியாக தயிருடன் கற்றாலை கலந்த பானத்தை தன் பேரப்பிள்ளைகளுக்குக் கொடுத்தார் தாத்தா. பின்னர் திண்ணையில் அமர்ந்து அவர்களுடன் ஆசையாய் பேசிக்கொண்டிருந்தார்.
""தாத்தா, என்னோட தமிழாசிரியர் பூம்புகாரில் மிக சிறப்பாக இந்திர விழா கொண்டாடுவாங்கன்னு சொன்னார். அதைப்பற்றி சொல்றீயா?'' என்று மூர்த்தி கேட்டான்.
உடனே சாயிபவித்திரா,"" தாத்தா... தாத்தா நீங்க எங்களை பூம்புகார் கூட்டிட்டுபோயி இந்திர விழாவைக் காட்டுறீங்களா?'' ஆசை ஆசையாய் கேட்டுவைத்தாள்.
"" பேரப்பிள்ளைகளா! பண்டைய தமிழரின் பண்பாட்டுவிழா அது. நம் முன்னோர்கள் வீரத்தையும் காதலையும் வாழ்க்கை நெறிகளாக கொண்டிருந்தாங்க. அதை போற்றி கொண்டாடும் விதமாக
சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரமும் பவுர்ணமி சேரும் போது நாடும் மக்களும் இடர்நீங்கி, வளமும், ஐஸ்வர்யமும் சிறக்க எடுக்கும் விழா இந்திர விழா.'' என்று பனைஓலை விசிறியை விசிறிக்கொண்டே தாத்தா சொன்னார்.
""தாத்தா, இந்திர விழா பூம்புகாரில் மட்டும் தான் கொண்டாடுவாங்களா? நாங்க இருக்கும் சிட்டியில் ஏன் கொண்டாடறதில்லை?'' என்று திவ்யா கேட்டாள்.
"" இந்திரா விழா மதுரையிலும் கொண்டாடப்பட்டதாக புராணங்கள் சொல்லுது. ஆனால்,இது சோழநாட்டில் சிறப்பாக கொண்டாடப்பட்டது என்று சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் விரிவாக கூறப்பட்டுள்ளது. சோழநாடு சோறுடைத்தது என்று சொல்வாங்க இல்லையா? நெல் விளையற பூமி மருதம். மருதத்திற்கு உரிய தெய்வம் இந்திரன். இந்திரனை வேண்டி வழிபடுவது இவ்விழாவின் முக்கிய குறிகோள்.'' என்று தாத்தா கூறினார்.
பக்கத்தில் இருந்த அனுஷா,"" தாத்தா, பூம்புகாரில் மட்டும் சிறப்பாக கொண்டாடினதாக ஏன் சொல்றாங்க?'' என்று கேட்க,
"" பூம்புகார் நகரம் நெல்வயல்சூழ்ந்த பகுதி. பூம்புகார், மருவூர்பாக்கம், பட்டினப்பாக்கம் பகுதிகளில் அரச மாட மாளிகைகளும், அரண்மனையும் இருந்ததால் அங்கு விழா கொண்டாடி இருக்காங்க.
சோழன் கரிகாலன் வடதிசை படைஎடுத்து வெற்றி வாகை சூடி வந்தான். அவன் வெற்றி சிறக்க ஆண்டுதோறும் இவ்விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழா தொடக்கத்தை யானையில் வந்து முரசுகொட்டி அறிவிப்பாங்க. அதைக்கேட்டு ஊர் மக்கள் தங்கள் இல்லங்களை சுத்தப்படுத்தி, வாயிலில் தோரணம்கட்டி,பெண்கள் பொதுவில் அவரை, துவரை, முல்லை பூ துõவி,பொங்கல் வைத்து துணங்கை கூத்தும், குரவைக்கூத்தும், அணங்கேறியும் ஆடி மன்னன் வாழ்க! என்று மகிழ்வோடு கொண்டாடுவாங்க.
விழாவின் மறுநாள் மக்கள் கடல்துறைக்கும் சென்று கடல்தெய்வமான வருணனை வணங்கி கடலாடிவருவர்.'' என்றார் தாத்தா.
குட்டீஸ் கதை படிச்சீங்களா? இங்கே கேட்கப்படும் 2 கேள்விக்கு பதில் சொல்லுங்க.
1. இந்திரா விழா பற்றி பேசும் இலக்கியங்கள் எது?
2. இந்திரா விழா எங்கே சிறப்பாகக்கொண்டாடப்பட்டது?
விடை: 1.சிலப்பதிகாரம், மணிமேகலை 2. பூம்புகார்

கதையைவாசி விடையை யோசி 20 தேவராஜன்
சிவன் கோயிலுக்கு பேரப்பிள்ளைகளை அழைத்து போனார் தையப்பா பாட்டி. கோயிலில் பிராகாரத்தில் மேளக்கச்சேரி நடந்தது.
"" பாட்டி, நீங்க வீட்டுக்குப் போங்க. நாங்க கச்சேரி கேட்டுட்டு தாத்தாக்கூட வர்றோம்'' என்றாள் சாயிபவித்ரா.
"" ஏ, வாங்க எல்லாரும் தாத்தாக்கிட்ட போயிடலாம்!'' என்று கூப்பிட்டாள் திவ்யா. அனுஷாவும், மூர்த்தியும் தாத்தாவிடம் ஓடிபோய் அமர்ந்து கொண்டனர்.
""தாத்தா, மேள கச்சேரி சூப்பரா இருக்கே! கேட்க கேட்க ஆசையா இருக்கு'' என்றான் பக்கத்தில் இருந்த அருண்.
"" மேளத்துக்கும், மேளக்கச்சேரிக்கு தஞ்சாவூர் பேர் போனது.கேட்க இனிமையாக இருக்காதா, என்ன?'' என்றார் தாத்தா.
""தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று தான்தஞ்சாவூரை சொல்வாங்க. நீங்க என்ன மேளம் என்கிறீங்க?'' என்று சந்தேகம் கேட்டாள் பிரியா.
"" நீ சொல்றதும் கரெட் தான். தஞ்சாவூருக்கு இன்னும் பல சிறப்புகள் இருக்கு.'' என்று தாத்தா சொல்லவே, "" அது என்னன்னு சொல்லுங்க'' என நச்சரித்தாள் அனுஷா.
""முற்காலத்தில் தஞ்சன் என்னும் அசுரன் மக்களை துன்புறுத்தினான். மக்களை காக்க சிவன் அவனை வதம் செய்தார்.அதனால் தஞ்சாவூர் என்று பெயர் வந்தது. இது சோழர்களின் தலைநகரம். ராஜராஜசோழன் உலகப் புகழ் பெற்ற பெரிய கோயில் கட்டினான். மிக அரிய ஓலைச்சுவடிகள், புத்தகங்கள் எல்லாம் சேகரித்து, பாதுகாக்கப்பட்டு வரும் சரஸ்வதி மகால் நுõலகம், உலகில் தமிழுக்கென்று அமைக்கப்பட்ட முதல் தமிழ்ப்பல்கலைக்கழகம் இப்படி பல சிறப்புகள் கொண்டது தஞ்சாவூர்'' என்றார் தாத்தா.
"" தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் கலைத்தட்டுகள், தலையாட்டி பொம்மை, மேளம், வீணை, மிருதங்கம், தபேலா, தம்புரா இவை எல்லாம் தஞ்சாவூர் பெருமை சொல்லும் கலைப்பொருட்கள் என்று படித்தேன். அது உண்மையா தாத்தா?'' என்றாள் சாயிபவித்ரா.
""வேறென்ன தஞ்சாவூருக்கு சிறப்புகள் இருக்கு தாத்தா?'' என்று கேட்டான் மூர்த்தி.
""கலை மற்றும் பண்பாட்டினை வளர்ப்பதற்காக பாதுகாப்பதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள தென்னகப் பண்பாட்டு மையம் தஞ்சாவூரில் தான் அமைந்துள்ளது. முன்பு நாகை, திருவாரூர் மாவட்டங்கள் எல்லாம் சேர்ந்தது தான் தஞ்சை மாவட்டம். இப்ப தஞ்சாவூர் மாவட்டம் 3 மாவட்டங்களாக பிரிந்துடுச்சு!'' என்றார் தாத்தா.
டியர் குட்டீஸ் கதை படித்தாச்சு. இதிலிருந்து 2 கேள்விக்கு பதில் சொல்றீங்களா?
1. தஞ்சை பெரியக்கோயிலைக்கட்டியது யார்?
2. தமிழகத்தின் நெற்களஞ்சியம் எது?
பதில்: 1. ராஜராஜ சோழன் 2. தஞ்சாவூர்

சனி, 22 மே, 2010

21 . நாலு பேர் காட்டிய வழி! தேவராஜன்

21 . நாலு பேர் காட்டிய வழி! தேவராஜன்
வாழ்க்கையில உருப்படணும், முன்னுக்கு வரவேண்டும் என்றால் நாலு பேர் காட்டிய வழியை கடைப்பிடிக்கணும் என்று ஒரு பேச்சுக்கு பெரியோர்கள் சொல்வார்கள். அந்த பேச்சு வழக்கு வாக்கியம் ரொம்ப அர்த்தம் பொதிந்தவை. அது ஆன்மிகம் சார்பானது. நான் யார்? ஏன் பிறந்தேன்? என்ன செய்ய வேண்டும் என்பதை உணர துõண்டுதலாக இருப்பது நாலு பேர் காட்டிய வழி! சரி. அந்த நாலு பேர் யார்? அந்த நாலு பேர் சொன்ன நாலு வழி எது? என்பது பற்றி இந்த வார ஆன்மிக சிந்தனையாக சிந்திப்போமா?
நாம் சிவனைப் பற்றுவதற்கு அவனே நான்கு நெறிகளை அமைத்து கொடுத்துள்ளான். அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பனவாம். அந்த நெறிப் பற்றிச் சென்றால் பாலில் நெய்போல உறைந்திருக்கும் சிவனை அடையலாம்.
சரியை
இறைவனான சிவன் லிங்க உருவத்தில் வீற்றிருந்து அருள் வழங்கும் திருக்கோயிலை நாளும் துõய்மை செய்பவர்கள் (உழவாரப்பணி) , நந்தவனம் சென்று மலர் கொய்து வந்து மாலை தொடுத்து, இறைவனுக்குச் சூட்டி மகிழ்பவர்கள் சரியை நெறிச் செல்லும் வீர சைவர்கள் ஆவர். அவர்கள் உடலால் இறைவனுக்குத் தொண்டு செய்பவர்கள். இந்த சரியை நெறியை கடைப் பிடித்து சிவனின் திருப்பாதம் அடைந்தவர் அப்பர் (நாவுக்கரசர்)பெருமான்.
இவர் "என் கடன் பணி செய்து கிடப்பதே' என்று கூறி சிவாலயங்களில் உழவாரப்பணி செய்து தம்மை இறைவனுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர்.இது முதல் வழி! இந்த வழியில் சென்று இறையனுபவம் பெற்றவர் அப்பர்.
கிரியை
சிவன் அபிஷேகப்பிரியர். அபிஷேகம் செய்து வைத்தால் சிவனுக்கு கொள்ளை இன்பம்.
ஆதலால் இறைவனின் திருமேனி தீண்டி, அபிஷேகம், தீபாராதனை, அர்ச்சனை செய்து வித்துத் திருமுறைப்பாடல்களை மனம் உருக பாடி, சிவனின் திருச்செவிகளைக் குளிரச் செய்து உடலாலும், உள்ளத்தாலும் தொண்டு செய்பவர்கள் கிரியை நெறிச் செல்பவர்கள் ஆவர். அவர்கள் உடலில் திறுநீறு பூசி, கழுத்தில் ருத்ராட்சம் சூடி, உள்ளத்தில் ஐந்தெழுத்து மந்திரமான "சிவாய நம' எப்போதும் ஓதிக்கொண்டே இருப்பார்கள். இப்படி இருப்பவர்கள் கிரியை நெறிச் செல்லும் சைவர் ஆவர். இந்த கிரியை நெறியைக் கடைப்பிடித்து சிவன் உறையும் சிவப்புரத்திற்கு சென்றவர் திருஞானசம்பந்தர். அக வழிபாட்டினாலேயே சிவனருளைப்பெற்றவர் பூசலார். அவர் சிவனை நினைந்து, நினைந்து நினைவாலே கோயில் வடித்தவர். நெஞ்சில் ஓர் ஆலயம் கட்டி அதில் சிவனை உறைய செய்தவர். இது இரண்டாவது வழி. இந்த வழி சென்றவர் திருஞானசம்பந்தர்.
யோகம்
அண்டமே பிண்டம். பிண்டமே அண்டம் என்பர் யோகியர். அகத்துõய்மை, புறந்துõய்மையாகி இயமம், நியமம் முதலாய எட்டு உறுப்புகளைக் கொண்ட அட்டாங்க யோகத்தை, முற்பிறவியின் நற்பயனாய் வாய்த்த குருவின் அருந்துணையால் குற்றமற பயின்று, பின்னர் குற்றமற செய்து பிரணவத்தை தட்டி, குண்டலியை எழுப்பி முடிவில் இறை இன்பத்தில் ஒன்றி சமாதி நிலை கைவரப்பெற் றவர்கள் துõய யோக நெறிச் செல்பவர்கள் ஆவர். இது மூன்றாவது வழி. இந்த வழி சென்றவர் சுந்தரர்.
ஞானம்
ஞானம் என்பது தானே இறைவனாக மாறிவிடும் நிலை. தான் வேறு, இறைவன் வேறு என்று பிரித்து பார்க்க முடியாதபடி இரண்டற கலந்துவிடும் நிலையாகும்.
சிவனைத் தவிர வேறு எண்ணம் இல்லாது, காடு, மலை என்று திரிந்தாலும் கணமும் ஐந்தெழுத்து "நமசிவாய' மந்திரத்தை மறக்காத, உலக இன்பங்களை உதறித் தள்ளிய சிவஞானிகளே சித்தர் பெருமக்கள் ஆவர். சித்தன் போக்கு சிவன் போக்கு என்று சொல்வது கூட இதனால் தான். சிவனையும், சித்தனையும் வேறுபடுத்த முடியாது. சித்தனுள் பித்தனும், பித்தனுள் சித்தனும் இரண்டறக்கலந்த நிலையே ஞான நிலையாகும்.
இது நான்காவது வழியான ஞானம். இந்த வழி சென்றவர் மாணிக்க வாசகர்.
இந்த சரியைஅப்பர்; கிரியைதிருஞான சம்பந்தர்; யோகம்சுந்தரர்; ஞானம் மாணிக்க வாசகர்ஆகிய நான்கு பேர் சென்ற நான்கு வழிகளில் ஏதோ ஒரு வழியை நாம் கடைப்பிடித்து ஒழுகினால் இறைவனை அடைவது உறுதி. அதனால் தான் முன்னோர்கள் மேலோட்டமாக நான்கு பேர் காட்டிய வழி என்று சொல்லி வைத்தார்கள்!
இந்த நான்கு வழியும் ஒத்துவராது எனக்கு என்று நினைப்பவர்களா நீங்கள்? உங்களுக்கு ஒரு உபாயம் சொல்கிறேன். அதுவும் மிக எளிமையானது தான். காலையில் துõக்கத்தில் இருந்து விழித்தவுடனேயே மனதுக்குள் ஈஸ்வரனை நினைத்துக்கொண்டு குறைந்த பட்சம் 18 முறையாவது "ஓம் நமச்சிவாய' என்று மந்திரத்தை ஜெபியுங்கள். அடுத்து, இரவு துõங்கும் முன்பாக கடைசி நினைப்பாக ஈஸ்வரனை நினைத்துக்கொண்டு "ஓம் நமச்சிவாய' என்று 18 முறையாவது ஜெபித்து விட்டு துõங்குங்கள்! உங்களைப் படைத்தற்காக இறைவன் மகிழ்வான்!
தேவராஜன்

22 . இறைவனே மருத்துவர் பிரசாதமே மருந்து தேவராஜன்
னிதர்களுக்கு மூன்று வகையான நோய்கள் வரும். அவற்றிற்கு மூன்று வகையான மருத்துவ முறை உண்டு. மூன்று வகையான மருத்துவர்கள் உண்டு.
உடலுக்கு வருகின்ற நோய்கள் முதல் வகை. அவை காயம்,வலி, ஜூரம் போன்றவை. அடுத்து உயிருக்கு வரும் பாவ நோய்கள் இரண்டாம் வகை. மூன்றாவது மரணம் என்கிற நோய்.
இந்த நோய்களை எல்லாம் குணப்படுத்த மூன்று வகை மருத்துவர்கள் இருக்கிறார்கள். அறிவையும் அறிவியலையும் நம்பி செய்யப்படும் ஆங்கில மருத்துவர். இரண்டாவது மூலிகை கொண்டும் கடவுளின் பிரார்த்தனையுடன் செய்யப்படும் சித்தர் மருத்துவ முறை. மூன்றாவது முறை மாந்திரீக முறை. இவை மந்திர உச்சாடனம் மூலம் குணப்படுத்தும் முறை. இதை செய்பவர்கள் மாந்திரீகர்கள்.
இந்த மூவரும் குணப்படுத்த முடியாத நோய்களை குணப்படுத்த மருந்து உண்டா? மருத்துவர் உண்டா? உண்டு என்றால் யார் அது? அதைப்பற்றி இவ்வார ஆன்மிக சிந்தனையாக சிந்திப்போமா?
"என்னால் ஆனதை செய்துவிட்டேன். இனி, கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்' என்று ஒரு எல்லைக்குமேல், தன் சக்திக்கு அப்பாற்படும்போது, ஒருபடித்த மருத்துவன் தன் இயலாமையை வெளிப்படுத்துவதுண்டு. காரணம்? உடலுக்கு உண்டாகிற நோயைத்தீர்க்க நோய்நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செய்வது மருத்துவம். அப்படி செய்யப்படுகின்ற மருந்துக்கு நோயைத்தீர்க்கும் சக்தி உண்டு. அந்த மருந்து சரியான முறையில் செய்யப்பட்டிருந்தால், அது சரியாக செயல்பட்டால், நோய்தீரும். கொடுத்த மருந்து சரியாக செய்யப்பட்டுள்ளதா என்பதை பரிசோதித்து தெரிந்து கொள்ளலாம். ஆனால், அந்த மருந்து சரியாக செயல்படுமா? நோயை குணப்படுத்துமா? என்பது மருந்தைச் செய்தவன் கையிலும் இல்லை. அந்த மருந்தை உண்டவனின் கையிலும் இல்லை. அதற்காக மருத்துவர்களை குறைசொல்ல முடியாது.
சாதாரணநோய்களை குணப்படுத்தக்கூடியவர்கள் தான் இவ்வகை மருத்துவர்கள். ஆனால், கடவுளால் ஒருமனிதனின் ஆத்மாவுக்கு கொடுக்கப்பட்ட பாவ நோய்களைக் குணப்படுத்த மருந்து கண்டுப்பிடிக்கவில்லை. காரணம் நாம் முற்பிறவியில் செய்த பாவத்திற்கு தண்டனையாக இந்த பாவ நோய்கள் வருகின்றன. ஆதலால் மருந்தை கண்டுப்பிடிக்கமுடியவில்லை.
அப்படி என்றால் பாவ நோய்களை குணப்படுத்தவே முடியாதா? முடியும். அதைக் குணப்படுத்தும் மருத்துவர் இறைவன். "மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித் தீராநோய் தீர்த்தருள வல்லான்' என்பது தேவாரம். குணப்படுத்தும் மருந்து பிரசாதம்!
"ஓம் ஸ்ரீ பவ ரோக வைத்யாய நம' எனும் மந்திரம் தான் அதற்கு சாட்சி.
இன்றும் எத்தனையோ வசதிவந்தும், விஞ்ஞான நுட்பங்கள் இருந்தும் மருத்துவர்களால் இனி தேறாது என, கைவிடப்பட்ட வியாதியஸ்தர்கள் இறுதியில் இறைவனே கதி என சரணடைந்து, அவனின் பிரசாதத்தையே உண்டு வந்து குணமடைந்தவர்களை உலகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. அறிவியல் அதை "ஆச்சரியம்' என்று ஆச்சரியப்படுகிறது. கேன்சர், டி.பி., நீரிழிவு, குஷ்டம் போன்றவைகளுக்கு டாக்டர்களையும் மிஞ்சிய வைத்தியன் இறைவன் தான்! அவன் தான் மருத்துவர்களுக்கு எல்லாம் மருத்துவன்.அவனின் பிரசாதங்களான பூஜைக்குரிய வில்வம், துளசி, வேம்பு, அருகம் புல், பன்னீர் இலை, பூ, எருக்கம்பூ, திருநீறு போன்றவை. இவை மருந்துகளுக்கு எல்லாம் சிறந்த ஆதி மருந்தாகும்.
திருநீற்றை பூசுவதால் பல நோய்கள் தீருகின்றன. நாவுக்கரசருக்கு சூலை நோயும், நின்ற சீர்நெடுமாறன் பாண்டியனுக்கு வெப்புநோயும் குணமாகி இருப்பது புராணச் செய்தி. பக்தர் ஒருவர் எருக்க இலையில் தயிரன்னத்தை வைத்து சாப்பிட்டவருக்கு குட்ட நோய் குணமானது என்பது சூரியனார் கோயில் தலவரலாறு சொல்லும் உண்மை.
திருச்செந்துõர் பன்னீர் இலைத்திருநீறு
திருச்செந்துõர் பன்னீர் இலைத் திருநீறை பூசினாலும், புசித்தாலும் பல நோய்கள் தீருகின்றன. பன்னீர் இலை அர்ச்சனைக்குரியது. திருச்செந்துõரில் பன்னீர்மரங்களாக இருப்பவர்கள் தேவர்கள். பன்னீர் இலைகளாக இருப்பவை வேதங்கள். எனவே தான் பன்னீர் இலைக்கு தெய்வீகத்தன்மையும்,மருத்துவ சக்தியும் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பன்னீர் இலையிலும் 12 நரம்புகள் ஆறுமுகனின் 12 திருக்கரங்களாக இருக்கின்றன. ஆக பன்னீர் இலையில் வைத்து திருநீற்றை ஏற்பது சாட்சாத் ஆறுமுகனே தன் திருக்கரங்களால் அனைவருக்கும் அருள்வதாகும். விசுவாமித்தரரின் காசநோயை பன்னீர்இலைத்திருநீறால் முருகன் குணப்படுத்தியுள்ளதாக தகவல் உண்டு.
வைத்தீஸ்வரன் கோயில் சாத்துருண்டை
சாத்துருண்டை என்பது சந்தனம், மண், திருநீறு ஆகிய கலவை. சாத்துருண்டை சில நியம விதிகளுக்கு உட்பட்டுசெய்யப்படுகின்றன. சுக்லபட்ச நன்னாளில் அங்க சந்தானதீர்த்தத்தில் இருந்து மண்எடுத்து, ஒரு புதுபாத்திரத்தில் வைத்து, சடாயுகுண்டத்தில் உள்ள இயற்கையான திருநீற்றைச் சித்தாமிர்த தீர்த்த நீருடன் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடியே கலந்து, முத்துக்குமாரசுவாமியின் முன் குழி அம்மியில் இட்டு அரைத்து, அதை சிறுசிறு உருண்டையாக உருட்டி, தையல்நாயகி அம்மன் முன் வைத்து அர்ச்சனை செய்து சித்தாமிர்த தீர்த்தத்துடன் உண்டால் நோய்கள் குணமாவதாக நம்பிக்கை உண்டு.
மந்திரமாவது நீறு
மந்திரமாவது நீறு என்று திருநீறுபதிகத்தில் ஞான சம்பந்தர் சுவாமிகள் பாடியுள்ளார்கள். அப்படிப்பட்ட திருநீறு உருவாக்கும் போதும், சம்புடத்தில் மாற்றியபின்பும் மந்திரங்கள் உச்சாடனம் செய்து வைக்கின்றனர். இதனால் திருநீறு மந்திரத்திறனையும், இறை சக்தியையும் பெற்றுவிடுகிறது. இன்றும் கிராமப்புறங்களில் பயம், ஜூரம், விஷக்கடிகளுக்கு கடவுளைப்பிரார்த்தனை செய்து விட்டு திருநீறு பூசும் பழக்கம் இருந்துவருகிறது. அதுமட்டுமல்ல திருநீறு தடவி, பேய்,பிசாசு, கழுப்பு,செய்வினை நோய்களை விரட்டுகின்றனர்.
எனவே தான் இறைவனையே மருத்துவர் என்கிறேன். பிரசாதத்தையே மருந்து என்கிறேன். ஆகவே, பாவநோய்கள் தீர, குணப்படுத்த முடியாத நோய்கள் அகல, மருத்துவர்கள் கைவிரித்துவிட்ட அபாயநோய்கள் விலக இறைவனே மருத்துவர்: பிரசாதமே மருந்து என உள்ளன்போடு ஏற்றுக்கொண்டு, பக்தியுடன், நம்பிக்கையுடன் இறைவனையும் அவன் பிரசாதத்தையும் ஏற்றுக்கொண்டு வாருங்கள். பலன் உண்டு என்பதில் ஐயமில்லை!
தேவராஜன்

23. கடவுளுக்கு ஒரு கடிதம் தேவராஜன்
சுவாமி, நமஸ்காரம். நீங்கள் படைத்த கோடானுகோடி உயிர்களில் ஒன்றுதான் நான்.தங்களின் அனுக்கிரகத்தால் நான் நலம். மற்ற ஜீவராசிகள் எல்லாம் நலம் என்று திட்டவட்டமாக என்னால் கூறமுடியாது. தாங்கள் படைத்த கோடானு கோடி உயிர்கள் சுகமில்லாமல் இருக்கின்றன. எல்லோரும் நலமாக இருக்க அருள்புரிக சுவாமி, அடியேன் உங்களைப்பார்த்ததில்லை.அதனால் என்ன நீங்கள் தான் என்னைப்பார்த்துக்கொண்டிருக்கிறீர்களே! அதுபோதுமே, உங்களுக்கு நான் கடிதம் எழுத.
இறைவா! தினம் தினம் புழு, பூச்சியிலிருந்து பறவைகள், விலங்குகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையில் துன்பப்படுவதைப்பார்த்துக்கொண்டுதானிருக்கிறேன். அடிக்கும் தணலில் புழு, பூச்சிகள் துவண்டு போவதைப்பார்த்ததும் என் கண்களில் சட்டென்று நீர்க்கோர்க்கிறது. இங்கே வீடுகளில், அசைவ ஓட்டல்களில், கோயில்களில் பறவைகளும், விலங்குகளும் கொல்லப்படும் போது அவைகளின் மரணஓலம் கேட்டு என் காதில் ரத்தம் கசிகிறது.
சாலைகளில் மாடுகளும்,குதிரைகளும்,கழுதைகளும் பொதிசுமந்து செல்லும்போது அதுகள் விடும் பெருமூச்சு என் மனதை பதைக்க வைக்கிறது. இவற்றை எல்லாம் பார்க்கையில் என்ன கொடுமை! என்ன கொடுமை! என்று கூக்குரலிட தோன்றுகிறது. இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது? என்று கண்மூடி யோசிக்கையில் ஒருவேளை நானும் ஏதோ ஒருபிறவியில் இப்படி கஷ்டப்பட்டிருப்பேனோ? தெரிந்தோ, தெரியாமலோ நான் செய்கின்ற பாவங்களால் மறுபிறவியில் இதுகள் போல நான் துயரப்படுவேனோ? தெரியவில்லை. நினைக்கவே அச்சமாக இருக்கிறது. மனதை ஏதோ பிசைகிறது.
"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப், பேயாய்க் கணங்களாய்
வல்அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப்பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம் பெருமான்'
என்று மாணிக்க வாசகரே சொல்லி சொல்லி புலம்பி இருக்கிறாரே, நான் எம்மாத்திரம்? என் கண்முன்னே உண்ணஉணவு, உடுக்க உடை, இருக்க இடமில்லாமல் எத்தனை பஞ்சபரதேசிகள் கையேந்தி திரிகிறார்கள்... கால் இல்லாதவன்,கையில்லாதவன், கண்ணில்லாதவன், பெருநோய் கண்டவன், நாதியற்ற எத்தனை அனாதைகள் என ஒருபுறம். மறுபுறம் கொலைக் காரன்,தீவிரவாதி, ஏமாற்றிபிழைக்கும் எத்தன்கள்... எப்பப்பா... என்ன கொடுமையடா சாமி! ஏன் இவர்கள் இப்படி ஒரு ஈனப்பிறப்பெடுத்து அல்லல்படுகிறார்கள்? மனசுக்குள் ஆயிரம் கேள்விமுள் தைக்கின்றன. அதே சமயம் அப்பா டா... நாம் இப்படி ஒரு பிறவி எடுக்கவில்லையே! நாம் சகலவிதத்திலும் நன்றாக இருக்கிறோம்; படித்திருக்கிறோம்; நல்லக்குடும்பத்தில் பிறந்திருக்கிறோம்; <உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் தாராளமாய் இருக்கிறது என்று மனம் ஆறுதல் அடைகிறது. இருந்தாலும் நான் வாழும் உலகத்தில் தினம் எங்கோ கொலை நடக்கிறது. நொடிக்குநொடி எவனோ ஒருவன் ஏமாற்றுகிறான். ஒருவன் வஞ்சிக்கப்படுகிறான். ஜாதி,சமய சண்டையில் கொத்து கொத்தாய் மனிதன் செத்துமடிகிறான். மண் ஆசையில் போர் என்ற பெயரில் ஆயிரம் ஆயிரம் உயிர்களை கொன்று குவிக்கிறான். நாட்டில் ஆங்காங்கே நாத்திகர்களும், வன்முறையாளர்களும், அரசியல்வாதிகளும் மக்களை ஏமாற்றுகிறார்கள். மக்கள் பணத்தை கோடி கோடியாய் சுருட்டுகிறார்கள்.
இறைவா! ஏன் இவர்களின் அட்டூழியங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய்? ஒருவேளை இவர்கள் எல்லாம் அடுத்தப்பிறவியில் ஈனப்பிறவி எடுத்து சொல்லொண்ணா துயர்படப்போகிறார்களோ? இப்படி நாலாப்பக்கமும் பார்த்து,பார்த்து நாம் அப்படி இல்லை. நல்லவனாக இருக்கிறோம். நல்லதே நினைக்கிறோம். நல்லதே செய்கிறோம். உன்னை நினைக்கிறேன். நாளும் பக்தி செய்கிறேன். உனதருளால் காமம்,குரோதம், கோபம், துர்க்குணங்கள் எல்லாம் விட்டொழிக்க விரும்புகிறேன்.
உலகத்தில் சகல உயிர்களும் சுகப்பட, பாவம் தவிர்த்து, புண்ணியம் சேர்க்க நீங்கள் சொன்ன வேதங்களும் அவைகளால் தோன்றிய புராணங்களும் ஒட்டு மொத்தமாக சொல்வது பக்தி செய்யுங்கள்! சத்தியம் தவறாதீர்கள்! தர்மவாழ்க்கை வாழுங்கள்! உத்தமர்களாக இருங்கள்! என்றுசொல்கின்றன. அதை எல்லாம் ஞானிகளும்,சித்தர்களும், சமயகுருமார்களும்,சான்றோர்களும் நாளும் எடுத்துச்சொல்லிக்கொண்டுதானே இருக்கிறார்கள். ஏன் இந்த பாவிமனுஷர்கள் காது கொடுத்து கேட்பதில்லை? உன்னை மறந்து எதையோ தேடி திரிகிறார்களே. இவர்கள் பாவம் கழுவ, அடுத்தப்பிறவி ஈனப்பிறவியாக இல்லாமல் இருக்க என்ன உபாயமிருக்கிறது?
"நாளும் என்னை நினை! எந்நேரமும் பக்தி செய்! என் நாமத்தை எப்போதும் ஓது! ஒழுக்கமாய் இரு! உண்மை பேசு! பிறரை நேசி! சகல ஜீவராசிகளிடம் கருணை கொள்! உனக்குப் பிறவா பேரின்பம் தருகிறேன்!' என்று தானே சொல்வாய். எனக்குத் தெரியும் இறைவா, வேறென்ன சொல்வாய் நீ? அது சரி, இதை இந்த மானிட ஜென்மங்கள் கேட்பார்களா? நீ சொன்னப்படியே நடப்பார்களா? இதுமட்டும் தெரிந்தால் எனக்கு உடனே பதில் கடிதம் எழுதிவிடு. தாமதம் வேண்டாம்.
இப்படிக்கு,
உன்படைப்பில் ஓர் உயிர்.

24. பொருத்தமான இறை தம்பிகள் தேவராஜன்
சபாஷ் சரியான ஜோடி பொருத்தம் என்று நாம் பார்த்து அசந்துபோன தம்பதிகளை சொல்வதுண்டு. பொருத்தம் என்பது கல்வி,ஒத்த குணம், அழகு உள்ளிட்டவை பொருத்தமாக கணவன்,மனைவி கொண்டிருப்பது. ஒரு டாக்டர் ஒரு டாக்டரையோ, ஒரு ஆசிரியர் ஒரு ஆசிரியரையோ மணந்துகொள்வது என்பது ஒத்த தொழில், கருத்து கொண்டிருப்பதன் காரணமாகவே இப்படி ஜோடி பொருத்தம் அமைகிறது. சாதாரண மனிதர்கள் நாமே நட்சத்திரம், ராசி, ரஜ்ஜி என பத்து பொருத்தம் மற்றும் படிப்பு, குணம், குடும்பம் பாரம்பரியம், அந்தஸ்து, குலம், கோத்திரம் என ஆயிரத்தெட்டு பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறோம். நம்மை படைத்து, காத்து,அழிக்கும் கடவுள்களின் மனைவிமார்கள் எப்படி பொருத்தமானவர்களாக இருக்கிறார்கள் என்பதை இந்த வார ஆன்மிக சிந்தனையாக சிந்திப்போம்!
ஒரு சின்ன குண்டூசியிலிருந்து வானில் சீறிபாயும் ராக்கெட் வரை எதை தயாரிப்பதாக இருந்தாலும் அதற்கு முதலில் அறிவுவேண்டும். எதையும் படைக்கவோ, தயாரிக்கவோ அறிவுதான் அடிப்படை மூலதனமாக இருக்கிறது. அதனால் தான் படைக்கும் கடவுளான பிரம்மா, அறிவுக்கடவுளான சரஸ்வதியை மனைவியாக கொண்டுள்ளார். உலகத்தில் சகல ஜீவராசிகளையும் படைக்கும் பொறுப்பு பிரம்மாவுக்கு உரியது என்பதால் படைப்பதற்கு அறிவுதானே வேண்டும்? அதனால் தான் அறிவே வடிவான சரஸ்வதியை தன் துணைøயாக கொண்டிருக்கிறார். அப்படி என்றால் பிரம்மாவுக்கு அறிவுகிடையாதா என்று கேட்டு விடாதீர்கள். பிரம்மாவுக்கு அந்த ஞானம் எல்லாம் பூர்ணமாக உண்டு. பிறகு ஏன் என்றால் இனம் இனத்தைச் தானே சேரும். அதனால் தான் அறிவு, அறிவுடன் ஒன்றிருக்கிறது போலும்!
நம் கலாசாரபடி வெண்மை நிறத்திற்கு பல அர்த்தக்குறியீடுகள் உண்டு. வெண்மை என்றால் துõய்மை, உண்மை, சமாதானம் மற்றும் அமங்கலத்தையும் குறிக்கும். நம் பாட்டிகள் கணவரை இழந்ததும் வெண்மை ஆடையைதான் அணிந்திருக்கிறார்கள். அந்த நிறம் அவர்களுக்கு அமங்கலத்தை சூட்டியது.
கல்வி தேவதையான சரஸ்வதி தேவியும் முத்துபோல பளபளக்கும் வெண்பட்டு புடவை அணிந்து, கையில் வெண்தாமரையுடன் ஞானப்புன்னகையுடன் இருக்கிறார். சரஸ்வதி தேவி அணிந்திருக்கும் வெண்ணிற ஆடை அமங்கலத்தை சுட்டுவதற்காக அல்ல. அவளிடம் இருக்கும் அறிவு கிஞ்சித்தேனும் கசடு,குற்றம் இல்லாது மிக துõய்மையாக இருக்கிறது என்பதை குறிக்கவே. அடுத்ததாக, அவள் கையில் துõய்மையான மிகத்தெளிவான அடுத்ததுகாட்டும் கண்ணாடி போல ஸ்படிக மாலையை கையில் வைத்திருக்கிறார். ஸ்படிகம் போல அவள் குளிர்ச்சியாக,அறிவில் களங்கமில்லாமல் சுத்தமாக இருக்கிறார் என்பதை காட்டவே. அடுத்ததாக கையில் வீணை எனும் இசைக் கருவியை வைத்திருக்கிறார். அது ஏன் என்றால் வீணையில் இருக்கும் தந்திகள் சரியான அளவில் இழுத்துக்கட்டப்பட்டிருக்கவேண்டும். அதிகமாக இறுகியிருந்தாலும், மிக தளர்வாக இருந்தாலும் அந்த தந்திகளால் வீணைக்கு பலன் கொடுக்காது.அதுபோல அறிவும் ஒரு எல்லைக்குட்பட்டே இருந்தால் தான் அதைப்பெற்றவருக்கு நன்மை. அப்படிப்பட்ட சரஸ்வதியைத்தான் பிரம்மா நாக்கில் வைத்துள்ளார்.பிரம்மாவின் தொழில் படைப்பு என்பதால் படைப்புக்குத் தேவையான அறிவை சரஸ்வதியாக துணைவியாக்கிக் கொண்டிருக்கிறார் என்பதும் அர்த்தமுள்ளதாக தானே இருக்கிறது!
அடுத்ததாக அழித்தல் தொழிலை செய்பவர் சிவன். எப்படி படைப்பதற்கு அறிவு அவசியமாக படுகிறதோ, அதுபோல அழிப்பதற்கு சக்தி வேண்டும். சக்தி என்றால் பலம்.
ஒரு சிற்பம் செய்ய அறிவு வேண்டும். அதை துõக்கிப் போட்டு உடைக்க பலம் அதாவது சக்தி வேண்டும். யோசிப்பவன் எதையும் அழிப்பதில்லை. அழிப்பவன் எதையும் யோசிப்பதே இல்லை என்று சொல்வதுண்டு. ஒன்றை அழிப்பதற்கு சூலாயுதம், ஈட்டி, வாள் போன்ற பல ஆயுதங்கள் தேவை. அதனால் தான் அழிக்கும் கடவுளான சிவனும் இத்தகைய ஆயுதங்களைக் கொண்ட சக்தியை துணையாக கொண்டிருக்கிறார்.அழிக்கும் தத்துவத்தை உணர்த்த சுடலையாக மயானத்தில் சாம்பல் பூசி, மண்டையோடுடன் காட்சி தருகிறார். சக்தியானவளும் சூலம், வேல், அம்பு போன்ற ஆயுதங்களை ஏந்திய காளியாகவும் உள்ளாள். சக்தியானது சக்திமானைப்பிரிந்து இயங்காது என்பதால் சக்திமானின் சரீரத்தில் பாதியாகவே சக்தி அர்த்தநாரியாக உள்ளாள். அழிவை உணர்த்தும் சிவப்பு வண்ணத்தை ஆடையாக அணிந்துள்ளாள். ஆக, அழிக்கும் தொழிலைக்கொண்டிருக்கும் சிவனுக்கு அழிப்பதற்கு தேவைப்படும் சக்தியை துணைவியாக கொண்டிருப்பது நியாயம் தானே!
ஆக்கல், அழித்தல் இவற்றிற்கு இடையே காத்தல் என்ற ஒரு தொழிலும் உண்டு. காத்தல் தொழிலை செய்பவர் மகாவிஷ்ணு. காப்பவர் என்றால் வாழவைப்பவர் என்று பொருள்படும். ஒருவர் வாழ்வதற்கு இருக்க இடம், உடுத்த உடை, உண்ண உணவு, பொன்,பொருள், ஐஸ்வர்யம், வீரம், வெற்றி போன்றவைகள் எல்லாம் தேவைப்படுகிறது. இதை காப்பவர் தானே வழங்க வேண்டும். அதனால் தான் இவைகள் எல்லாம் இருக்கும் தனலட்சுமி,தான்யலட்சுமி,விஜயலட்சுமி,வித்யாலட்சுமி,சந்தான லட்சுமி, பாக்யலட்சுமி,கஜலட்சுமி,தைரியலட்சுமி ஆகியவர்கள் மொத்த உருவான மகாலட்சுமியை திருமால் தன் மார்பில் சுமந்திருக்கிறார். காப்பவர் முதலில் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் அல்லவா? அதனால்தான் விஷ்ணு அலங்காரப்பிரியராக இருக்கிறார். அதை உணர்த்தும் வகையில் தான் வைஜயந்தி, பீதாம்பரம் அணிந்து கொண்டு செல்வ செழிப்பாக இருக்கிறார்.
ஆக, காக்கும் கடவுளான திருமாலுக்கு எட்டு செல்வங்களைத் தரும் லட்சுமிகளை தன் துணையாக கொண்டிருப்பது சரிதான் அல்லவா?
இந்த உலகம் முறையாக இயங்க படைத்தல், அழித்தல், காத்தல் ஆகிய தொழில்கள் சரிவர நடக்க வேண்டும்.அந்தந்த தொழில்களை சிறப்பாக செய்ய மூன்று தெய்வங்கள். அந்த தெய்வங்களான பிரம்மாசரஸ்வதி; சிவன்சக்தி; திருமால் மகாலட்சுமி.இந்த இறை தம்பதிகள் பொருத்தம் அர்த்தமுள்ளதாக அமைந்திருப்பதுதான் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.
தேவராஜன்

25. வாழ்வின் பொருளென்ன நாம் வந்த கதையென்ன? தேவராஜன்
நாம் யார்? ஏன் இவ்வுலகத்திற்கு வந்தோம்? நம்மால் என்ன பயன் நடக்கப்போகிறது? நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? இவற்றை எப்படி அறிவது? அதற்கான முயற்சி எது?
இந்த கேள்விகளுக்கான விடை தேடல் தான் வாழ்க்கை. அதைவிட்டு பிறந்தோம், வளர்ந்தோம், படித்தோம், வேலை தேடினோம், நல்ல அழகான ஜோடியை மணம்முடித்தோம், பிள்ளைக்குட்டிகள் பெற்றோம், அவர்களை வளர்த்து, படிக்க வைத்து, நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணி வைத்தோம், இடைப்பட்ட காலத்தில் வீடுகட்டினோம், கார் வாங்கினோம், சொகுசாக வாழ்ந்தோம் என்பது எல்லாம் வாழ்ந்ததின் அர்த்தமோ, வாழ்வின் அர்த்தமோ அல்ல. அப்படி என்றால் உண்மையான வாழ்வின் பொருளென்ன என்பதை இந்த வார ஆன்மிக சிந்தனையாக பார்ப்போம்!
முன்வினைப்பயனாக செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப பிறப்பு உண்டாகிறது. பிறந்த பிறப்பு, விதித்தப்படி பாவமோ, புண்ணியமோ செய்கிறது. நிர்ணயித்த காலத்தில் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு சென்றுவிடுகிறது இந்த உயிர். இந்த ஓரங்க நாடகக்கூத்திற்கு தான் வாழ்க்கை என்று சொல்லிக்கொள்கிறோம்! இதை புரியும்படி உங்களுக்கு விளக்குகிறேன்.
மழையானது வானத்திலிருந்து புறப்பட்டு பூமிக்கு வருகிறது. அந்த மழை ஏரி, ஆறு,குளம்,குட்டை,கடல் என பல வடிவில் நீர் என்ற உருவில் பூமியில் சிலகாலம் இருக்கிறது. மீண்டும் சூரியனின் வெப்பத்தால் ஆவியாகி மீண்டும் வானத்தை நோக்கி சென்று விடுகிறது நீர். அதுபோல கடவுளின் பிரதேசத்திலிருந்து அனுப்பிவைக்கப்படும் உயிர், பூமியில் சிலகாலம் தங்கிவிட்டு, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே சென்று விடும். இந்தச் செயலைத்தான் பிறப்பு இறப்பு என்கிறோம்.
உயிர்களை உலகத்தில் கடவுள் ஏன் மனிதனாகப் படைக்கவேண்டும்? அந்த உயிர் சுகப்படவே. அந்த உயிர் முன் ஊழ்களில் செய்த வினைகளால் ஏற்பட்ட பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப, இன்பத்தையோ, துன்பத்தையோ அனுபவித்து இருக்கும் வரையில் கடவுள் தந்த பரிசான அறிவைக்கொண்டு நல்லதை நினைத்து, நல்லதை செய்து, ஒழுக்கமாக வாழ்ந்து, முன் ஊழ் பாவங்களை இப்பிறவியில் கழுவி, மீண்டும் பரிசுத்தமாக மாறி கடவுளிடம் செல்லத்தான் இந்த பிறப்பும் வாழ்க்கையும் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
அப்படிப்பட்ட வாழ்க்கையில் நமக்கு மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம். உயிர் என்று விழும்? எங்கே விழும்? ஏன் விழும் என்பதெல்லாம் அவ்வுயிருக்கு முன்கூட்டியே தெரியாது. இது தான் வாழ்வின் ரகசியம்!
நாம் எல்லாருமே இந்த நாட்டில் பிறக்கவேண்டும், அதுவும் இன்னாருக்குத் தான் பிறக்க வேண்டும், இந்த பெயரோடு தான் வாழவேண்டும், இன்ன வயது வரைதான் வாழ வேண்டும், ஆணாகவோ,பெண்ணாகவோ என்பது எல்லாம் தீர்மானிக்கப்பட்டு கடவுளின் ஆசிர்வாதத்தோடு தான் நாம் பூமிக்கு வருகிறோம்.
சாட்டை கடவுளின் கையில். சுற்றும் பம்பரம் மட்டுமே நாம்! எல்லாமே விதித்தப்படி தான் நடக்கும். நான் இன்னாருக்கு, இந்த ஊரில், இந்த நேரத்தில், அழகாக, சிவப்பாக, ஆணாக பிறக்கவேண்டும் என்றெல்லாம் நம் விருப்பப்படி பிறப்பெடுக்க முடியாது.
இதை எல்லாம் தெரிந்தோ, தெரியாமலோ நாம் வாழ்வில் ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டுக்கொண்டிருக்கிறோம்.
எதற்காக நாம் பிறந்தோம், ஏன் கடவுள் நம்மை படைத்தார்? நாம் செய்யவேண்டிய கர்மங்கள் எவைஎவை என்பதை அறிந்து கொண்டு அதை செய்து கடவுளுக்கு நாம் பிரியமானவர்களாக நடந்துகொள்ளாமல், அவரவர் எதை எதையோ தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். நம் உழைப்பால், முயற்சியால் தேடிய எதாவது போகும் போது கொண்டுச் செல்ல முடிகிறதா, என்ன?
இது புரிந்த பிறகும் கடவுள் உலகத்தில் வசிக்க ஏதாவது காரியம் செய்கிறோமா? புண்ணியம் செய்கிறோமா? கடவுளை காதலால் கசிந்துருகி, கண்ணீர் மல்க, அவன் திருத்தாளை நினைந்து, நினைந்து, அவன் திருநாமத்தை சொல்லி, சொல்லி என்றேனும் ஒருநாளாவது வாழ்ந்திருக்கிறோமா?
அப்படி எல்லாம் நாம் எதுவும் செய்யாமல் எதற்காக நாம் பிறந்தோமோ அந்த கடமைகளைச் செய்யாமல், பிறவி துன்பத்தைப் போக்க கடவுள் இட்டகட்டளைகளை மறந்து, கடவுளின் ஆணையை மீறி, படைப்பு தத்துவத்துக்கு முரணாக நம் கற்பனைக்கு, ஆசைக்கு, விருப்பத்திற்கு, அறிவுக்கு, சூழ்நிலைக்கு ஏற்ப இந்த உலகத்தைப் பார்க்கிறோம் அல்லது புரிந்துகொள்கிறோம். நாம் அனைவருமே மனதால் உருவாக்கப்பட்ட கற்பனை உலகில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கடவுள் படைத்த உலகத்தில் வாழ்வதில்லை. அந்த உலகத்தில் நீதி, நியாயம் நேர்மை, தர்மம், கருணை, அன்பு, கடவுளின் ஓங்கார சங்கீதம் இன்னம் என்னன்னவோ இருக்கிறது. அதை எல்லாம் விட்டு, நாம் உருவாக்கிய கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருப்பதால், நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் துன்பம் வருகிறது. கவலை வருகிறது. வியாதி வருகிறது. தலைவலி வருகிறது. இவை எல்லாம் வராமலிருக்க போராடவேண்டியிருக்கிறது. பாருங்கள்! எத்தனை தொல்லைகள்... கடவுள் கொடுத்த வாழ்க்கையை அவன் அமைத்த பாதையில் அவன் சொன்ன நெறிபடி வாழாததால் தான் உலகில் ஆயிரமாயிரம் பிரச்னைகள்...
ஆதலால், நாம் வந்த கதையும், வாழ்வின் பொருளும் அறிந்து வாழ்ந்தால் பூவுலக வாழ்க்கையும் நிம்மதி தரும்; வானுலக வாழ்க்கையும் சந்தோஷமாக இருக்கும். அதற்கு முதற்படியாக இன்று முதலாய் கடவுள் தந்த வாழ்க்கை நெறிக்கு மாறத் துவங்குவோம்.
தேவராஜன்

26. எண்சாண் உடம்பின் தத்துவம் தேவராஜன்
ஒவ்வொரு உயிரும் இவ்வுலகில் அர்த்தமுள்ள படைப்பாகவே கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது. ஓர் அறிவு முதல் ஆறறிவு மனிதன் வரை எல்லாம் தெய்வீகச் சாயல் கொண்ட தெய்வத்தை பிரதிபலிக்கும் தன்மையை கொண்டிருக்கின்றன என்பதை, ஆழ்ந்து சிந்திக்கும் போது புலனாகும்.
நம்மில் அவரவர் உயரம் அவரவர் கை அளவில் எண் சாணாக தான் இருக்கும். உலகத்தில் எந்த மனிதரும் அவரவர் கையளவில் எண் சாணை தாண்டி இருப்பதில்லை. ஏன் அப்படி என்று நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா? சிந்தித்துப் பார்த்தால், அதில் பெரிய ஆன்மிக தத்துவம் பொதிந்திருப்பதை அறியலாம்!
எண் சாண் என்பது "ஓம் நமசிவாய' என்பதின் தோற்றமாகும். எப்படி எனில் ஓம் என்பதன் விரிவான அ, உ,ம் இந்த மூன்றெழுத்தோடு நமசிவாய என்ற ஐந்தெழுத்தைக் கூட்டினால், மொத்தம் எட்டெழுத்து வரும். அந்த எட்டெழுத்தே எண்சாண் உடம்பாக நாம் கொண்டிருக்கிறோம். அதனால் தான் "தெய்வம் மனுஷ ரூபாய' என்கிறோமோ?
அடுத்ததாக, இன்னமொரு விரிந்த ஆன்மிக தத்துவமாக இந்த எண் சாண் உடம்பு கொண்டிருக்கிறது. ஒரு சாண் என்பது 12 விரல் அளவாகும். எட்டு சாண் என்பது 96 விரல் அளவாகும். இந்த 96 விரல் அளவுக்கும் 96 வகை ஆன்மிக தத்துவம் இருக்கிறது. அதை உங்களுக்கு புரியும்படியே விளக்குகிறேன்.
நாதம், விந்து, சதாசிவன், ஈச்வரம், சுத்தவித்தை ஆகிய ஐந்தும் சிவதத்துவங்கள்.
கலை, வித்தை, அராகம், காலம், நியதி, புருடன், மாயா இவை ஏழும் வித்யா தத்துவம்
சுவை உணர்தல், ஒளியறிதல், ஓசைகேட்டல், தொடு உணர்வு, மணம் நுகர்தல் இவை ஐந்தும் தன்மாத்திரைகள்.
நிலம், நீர், நெருப்பு,காற்று, ஆகாயம் இவை ஐந்தும் ஐம்பூதங்கள்.
தாமாகவே உணர்வனவான உடல் உறுப்புகளான உடம்பு, வாய், கண் மூக்கு, காது இவை நம் அறிவு துõண்டாமலேயே நாம் கட்டளையிடாமலேயே செய்கையில் ஈடுபடும். இந்த ஐந்து உறுப்புகளுக்கு ஞானேந்திரியங்கள் என்று பெயர்.
நமது அறிவு துõண்டப்பட்டு அல்லது மூளை கட்டளையிட்டப்பிறகு,செயல்படும் உறுப்புகள் கைகள், கால்கள், நாக்கு, மலம்கழிக்கும் வாய், நீர்விடும் குறி .இவை ஏவிய செயல் செய்ய வசதியாக இருப்பதால் இந்த ஐந்து உறுப்புகளுக்கு கன்ம இந்திரியங்கள் என்று பெயர்.
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் இந்த நான்கும் அந்தக்கரணம் என்று பெயர்.
ஆக, வித்யா தத்துவம்7, சிவ தத்துவம்5, தன்மாத்திரை5, மகாபூதங்கள்5,ஞானேந்திரியம்5, கன்மேந்திரம்5, அந்தக்கரணம்4 சேர்ந்த தொகுப்பாக 36 தத்துவங்கள் ஆகும்.
மீதமுள்ள 60 தத்துவம் எவை என்பதை அறியலாம்;
நிலத்தின் கூறுகளாக மயிர், தோல், எலும்பு, நரம்பு, தசை இவை ஐந்தும், நீர்க்கூறாகும்.
சிறுநீர், உதிரம், மூளை, கொழுப்பு, விந்து ஆகிய ஐந்தும், தீயின் கூறாகும்.
ஊண், உறக்கம், பயம், உடலுறவு, சோம்பல் இவை ஐந்தும், வாய்வின் கூறுகளா கும்.
ஓடல், நிறுத்தல், நடத்தல், கிடத்தல், நின்றல் இந்த ஐந்தும், ஆகாயத்தின் கூறுகளா கும்.
காமம், வெகுளி, செருக்கு, பொறாமை, மயக்கம் இவை ஐந்தும், செயற்கருவிகளா கும்.
கூடுதல், பேசல், நடத்தல், உழைத்தல், கழித்தல் ஆகிய ஐந்தும் வாயுக்கள். பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன், நாகன், கூர்மன், கிரிகரன்,தேவதத்தன், தனஞ்செயன் ஆகிய பத்தும், நாடிகள். இடைகலை, பிங்கலை, சுழிமுனை, புருடன், காந்தாரி, ஹஸ்திஜிஹ்வை, பிரீதை,யஷை, ஆலம்புஷை, ஹூஹூ, சங்கினி முதலிய பத்தும் குணத்தின் வகைகள். சத்வகுணம், ரஜோகுணம், தமோ குணம் ஆகிய மூன்றும், வாக்கின் வகைகளான செவியோசை, வாக்கோசை, நினைவோசை, கக்கோசை ஆகிய நான்கும், பற்றுதல் கூறுகளான பொருள்.
பற்று, புத்திரப்பற்று, உலகப்பற்று ஆகிய மூன்றும் சேர்த்து கூட்டினால் மொத் தம் 60 உறுப்புகளாகி 60 தத்துவம் கிடைக்கும். மேலே சொன்ன 36 தத்துவத்தோடு இந்த 60 தத்துவங்களும் சேர 96 தத்துவங்களாகிய நம் எண்சாண் உடம்பாக கடவுள் சிருஷ்டித்துள்ளார்.
இந்த 96 வகை தத்துவங்களான எண்சாண் மனித உடல் எட்டு திசையில் எந்த திசையிலும் பிறக்கலாம்; அஷ்டாங்க யோகம் செய்யலாம்; எட்டு சித்துக்கள் புரியலாம்: கொல்லாமை, ஒற்றுமை, நன்றி, இரக்கம், நல்அறிவு, மெய், தவம், அன்பு ஆகிய எட்டு குணங்களையும் பேணவேண்டும்.
இந்த எண்சாண் உடம்பில் இன்னொரு ஆச்சரியமான தத்துவமும் இருக்கிறது. தமிழில் உயிர் எழுத்து 12; மெய் எழுத்து 18 ஆக 30 எழுத்துகளும் தமிழ் முதல் எழுத்து என்று சுட்டவர்.
சிவதத்துவம்5, வித்யாதத்துவம்7 ஆகிய இரண்டும் சேர்ந்து 12 ஆகும். இது உயிரோடு தொடர்புடையவை. ஆதலால், உயிர் எழுத்து 12க்கும் உயிர் ஒப்புமையாகிறது. அடுத்து மெய் எழுத்து பதினெட்டு. மெய் என்றால் உடல் அதற்கு ஒப்புமையாக அறிவுப்பொறிகள் 5, செயற்பொறிகள் 5, பூதமூலங்கள் 5, மனம், புத்தி, அகங்காரம் 3 ஆகிய பதினெட்டும் உடலுக்கு உரித்தாகிறது. உயிரும் மெய்யும் சேர்ந்தால் 30 எழுத்துகளாகிறது. அதுபோல நம் உடலும் உயிரும் சேர்ந்து 30 தத்துவங்கள் ஆக உள்ளது.
தேவராஜன்

27. வம்சத்தை திளைக்க செய்யும் பித்ரு வழிபாடு தேவராஜன்
இந்தப் பூமியில் பிறந்த மனிதர் யாராக இருந்தாலும் தன் வாழ்நாளில் எதை கடைப்பிடிக்கிறோமோ, இல்லையோ ஆனால் கண்டிப்பாக மூன்று கடமைகளை செய்தே ஆகவேண்டும் என்று இந்து வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அவை தேவயக்ஞம், பித்ருயக்ஞம், பசுயக்ஞம் முதலியனவாகும். இந்த மூன்று கடமைகளை செய்பவர்களே பிறந்ததின் பயனை அடையமுடியும் என்று தர்ம சாஸ்திரங்கள் எடுத்தியம்புகின்றன.
ஸ்தலம், மூர்த்தி, தீர்த்தம் என்று சொல்லப்படும் கோயில், புண்ணிய தீர்த்தங்கள் சென்று கடவுளை வழிபடுவது தேவயக்ஞம் ஆகும். அதாவது வாழ்வில் ஒரு முறையாவது புண்ணியதீர்த்தங்கள், புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டும். காசி, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வரவேண்டும். கங்கை, யமுனை புண்ணிய நதிகளில் நீராடி வரவேண்டும்.
நாம் பெற்றோர் சொற்படி கேட்டு, அவர்கள் மனம் நோகாமல் நடந்துகொண்டு, அவர்களுக்கு பணிவிடைகள் செய்து, காப்பது பிள்ளைகளின் கடமையாகும். இது பெற்றோர்கள் வாழும் போது செய்யப்படவேண்டிய கடமைகள். அடுத்து, அவர்களின் மறைவிற்குப் பின் செய்யப்படும் பூஜைகளை பித்ரு யக்ஞம் என்று கூறப்படுகிறது.
அவரவர் இல்லங்களில் இறந்தவர்களின் படங்களை வைத்து வழிபடும் வழக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இறந்தவர்களும் அவர்களுடைய வம்சத்தை காப்பதாக நம்பிக்கை. இத்தகைய வழிபாடு முறைக்குதான் பித்ரு வழிபாடு.
அடுத்து நம்மை அண்டிபிழைக்கும் மிருகங்களில் சாதுவான விலங்கும், சகல தேவர்களும் குடிகொண்டிருக்கும் பசுவாகிய கோமாதாவுக்குச் செய்யும் பூஜைகளை பசுயக்ஞம் என்கிறோம்.
எவரும் இந்த மூன்று யக்ஞங்களில் பித்ருயக்ஞத்தை (மூதாதையர் வழிபாடு) விட்டு மற்ற எந்த வழிபாடுகளை செய்தாலும், எவ்வளவு தர்மங்கள் செய்தாலும் நம் வழிபட்டதற்கான பலன் முழுமையாக கிட்டாது என்று தர்ம சாஸ்திரங்களில் எழுதிவைக்கப்பட்டுள்ளன.
இருக்கும் போது ஒருவருக்கு உதவுவது, பணிவிடைகள் செய்வதால், அதை பெறுபவர் சந்தோஷப்படுவர். அதை செய்தவர் திருப்தி காண்பர். ஆனால், ஒருவர் இறந்த பின் அவருக்கு தர்ப்பணம், பூஜைகள் செய்வதால் என்ன கிடைத்து விடும் என்று பலர் எண்ணுகின்றனர். ஆனால் இன்று பெற்றோர் இறந்த நாளில் திதி செய்யாமல் அன்று அனாதை ஆசிரமத்துக்குச் சென்று அன்னதானம் செய்து விட்டு, ஏதோ புண்ணியம் செய்து விட்டோம் என்று நினைக்கின்றனர். அனாதைகளுக்கு அன்னதானம் செய்வது புண்ணியம் தான். ஆனால், அந்த புண்ணியத்தால் இறந்தவர்களுக்கு எந்த பலனும் கிட்டுவதில்லை!
பசித்தவர் ஒருவர் இருக்க, பசித்த இன்னொருவருக்கு அன்னமிடுவதால் எப்படி முன்னவர் பசியாற முடியும்? இதை இன்றைய தலைமுறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும். இறந்தவர்களுக்கும், முன்னோர்களுக்கும் சிரத்தையுடன் செய்யப்படும் பூஜையை சிராத்தம் என்று அழைக்கின்றனர்.
சிரார்த்தம் ஏன் செய்யப்பட வேண்டும்?
ஒருவர் இறந்தப் பிறகு, கனனம் (மண்ணில் அடக்கம் செய்தல்), தகனம் (எரியூட்தல்), தியாகம் (புண்ணிய நீர் நிலைகளில் சடலத்தை விடல்) இம் மூன்று காரியங்களுக்குள் ஏதாவது ஒன்றை மந்திர பூர்வமாக மரித்த சரீரத்துக்குச் செய்தால் அந்த ஆத்ம ஜீவனுக்கு தனது ஊழ்வினை மூலம் நேரும் பரலோகப் பிராப்தி ஏற்படும். அதுவும் தானிருந்த கூடான உடலை விட்டுச் செல்ல ஆத்மாவுக்கு பிரியாவிடை தரும்படி சஞ்சயனம், பிண்டதானம் முதலிய காரியங்கள் செய்தால் அந்த ஆத்மா வேறொரு சரீரம் எடுக்க உதவுகிறது.
அது எப்படி என்றால் நாம் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும், பாஸ்போர்ட் கைவசம் இருந்தாலும் நினைத்த மாத்திரத்தில் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட முடியாது. அதற்கு நாம் செல்லும் நாட்டின் அனுமதியான விசா வேண்டும் தானே! அது போல தான் பூமியில் பிறந்து விட்ட ஒரு ஆத்மா, சடலம் உகுத்து தேவலோகம் செல்ல, அந்த ஆத்மாவுக்கு தேவலோக அனுமதிக்கு விசா வேண்டும். அந்த விசா பெறும் முயற்சிதான் சிரார்த்தம்.
அடுத்து சரீரத்தை விட்டு நீங்கிய ஜீவனைக் குறித்து பத்து நாள்கள் செய்யப்படும் பிண்ட தானம், அந்த ஜீவன் அடுத்த சரீரம் எடுக்கும் போது தேவையான உறுப்புகளைப் பெற உதவுகிறது. வீட்டில் ஏதோ ஓரிடத்தில் ஒரு கல்லை வைத்து முதல் நாள் தொடங்கி பத்து நாள் வரை ஒவ்வொரு நாளும் எள்ளு தர்ப்பணமும், பிண்டதானமும் செய்யப்படுகிறது.
நாம் இறந்தவர் குறித்து செய்யப்படும் முதல் நாள் பிண்டதானத்தால் அந்த உயிர் நீத்த ஜீவனுக்கு தலை உண்டாகிறது. 2ம் நாள் பிண்ட தானத்தால் கண்களும், காதுகளும் உண்டாகின்றன. 3ம் நாள் பிண்ட தானத்தால் கைகள், மார்பு, கழுத்து இவை உண்டாகின்றன. 4ம் நாள் பிண்ட தானத்தால் நாபி, குதம், குறி உண்டாகின்றன. 5ம் நாள் பிண்டதானத்தால் தொடை உண்டாகிறது. 6ம் நாள் பிண்ட தானத்தால் தோல் உண்டாகிறது. 7ம் நாள் பிண்டதானத்தால் எல்லா நரம்புகளும் உண்டாகின்றன. 8ம் நாள் பிண்ட தானத்தால் உடம்பிலுள்ள எல்லா ரோமங்களும் உண்டாகின்றன. 9ம் நாள் பிண்ட தானத்தால் வீரியமும், 10ம் நாள் பிண்ட தானத்தால் சரீர திருப்தி உண்டாகிறது.
மேலே சொன்ன சடங்குகளைச் செய்தால் தான் அந்த ஆத்மா சரீரத்தை விட்டதும் மேலோகம் செல்ல அனுமதி கிட்டும். இல்லை என்றால் பூலோகத்திலேயே பேயாய், பிசாசாய் அலையவேண்டி இருக்கும்.
எனவே, ஆண்டுக்கு ஆண்டு அவர்கள் மறைந்த நாளில் அவர்களைக் குறித்து திதி செய்து வரவேண்டும். நம் முன்னோர்கள் அரூபமாய் இருந்து தம் வம்சத்தை கண்காணிக்கின்றனர். வழிநடத்துகின்றனர். மாதந்தோறும் அமாவாசை நாளில் சூக்கும சரீரத்தில் பூவுலகம் வந்து நம்மை பார்க்க வருகின்றனர். வந்தவர்களை வரவேற்று, உபசரித்து, ஆகாரம் கொடுத்து அனுப்பி வைக்கும் செயல் தான் திதி கொடுப்பதன் அர்த்தமாகும்!
நாம் வாழும் வரை வாழ்ந்து சென்றவர்களுக்கு பூஜைகள் செய்தால், சென்றவர்கள் நிம்மதியடைவார்கள். நம்மை எப்போதும் ஆசீர்வதித்துக்கொண்டிருப்பார்கள்!
தேவராஜன்

28. கந்தனுக்கு உகந்த காவடி வழிபாடு தேவராஜன்
நரகாசூரனை கிருஷ்ணன் சம்ஹாரம் செய்த திருநாளை தீபாவளி பண்டிகையாக கொண்டாடி வருகிறோம். தீபாவளிக்கு அடுத்து வரும் திருநாளுக்கு சூரசம்ஹாரம் என்று பெயர். முருகன், சூரன் என்ற அரக்கனை சம்ஹாரம் செய்ததை சூரசம்ஹாரம் என்கிறோம். அந்த சூரன் அழிந்தப் பிறகு, அவனுக்கு குல குருவாக இருந்த இடும்பன் என்பவனின் மூலமாக ஒரு புதிய வழிபாட்டு முறையே உண்டாயிற்று. அது என்னவென்றால் தமிழர்கள் குன்றிருக்கும் இடத்தில் எல்லாம் குமரனாகிய
முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த காவடி எடுக்கும் பழக்கம் தொன்றுதொட்டாக இருந்து வருகிறது. காவடியிலும் பால் காவடி, பன்னீர்காவடி, புஷ்பகாவடி என்று பல இருக்கிறது. இந்த காவடி எடுத்து வழிபடுவதற்குரிய கடவுள் முருகன் மட்டுமே. ஏனைய தெய்வங்களுக்கு பக்தர்கள் காவடி எடுப்பதில்லை. முருகனுக்கு மட்டுமே உரியதாக காவடி வழிபாடு இருக்கிறது. இது பற்றிய அபூர்வமான செய்தி புராண கதை ஒன்றில் இருக்கிறது.
சூரன் முதலிய அசுரர்களுக்கு அஸ்திரவித்தை எனப்படும் வில், பாணம் முதலிய போர்வித்தைகளை கற்றுக்கொடுத்தவன் இடும்பன். அவன் மனைவி இடும்பி.
சூரன் முதலிய அசுரர்களுக்கும் முருகனுக்கும் போர் ஏற்பட்டது. அந்த போரில் சூரனையும் அவன் வம்சத்தையும் அழித்தான் முருககடவுள். சூரனை சம்ஹாரம் செய்ததால்அது சூரசம்ஹாரம் என்றுபெயர். சூரவம்சத்தை முருகன் அழித்தப்பிறகு அஸ்திரவித்தையை இடும்பன் யாருக்கு சொல்லிக்கொடுக்க முடியும்? அவனுக்கு வேலையில்லாமல் போனது. சூரனுக்கும் அவனைச்சேர்ந்த அரக்கர்களுக்கும் அஸ்திர வித்தை கற்றுக்கொடுத்ததால் வந்த பாவம் கழுவ,சதா காலமும் சிவப்பெருமானை நினைத்து தவம் செய்துவந்தான். அவனின் தவத்தை மெச்சி ஈசன் அவனுக்கு காட்சி தந்து, "இடும்பா, உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்!' என்றார். அதற்கு இடும்பன், " குன்றம் எறிந்த குமரனின் அடியனாய் வாழ அருள் புரிய வேண்டும்' என்ற வரத்தைக்கேட்டான்.
சிவனும் இடும்பன் கேட்ட வரத்தை அருளி, "அப்படியே ஆகட்டும்!' என்றார்.
இடும்பன் சிவனை எண்ணி கடுந் தவம் புரிந்த இடம் இடும்பாவனம். இந்த இடம் தற்போது திருவாரூர் முத்துப்பேட்டை ரயில் மார்க்கத்தில் உள்ளது.
சிவகிரி என்பது ஒரு மலைச் சிகரம். சக்திகிரி மற்றொரு மலைச்சிகரம். இந்த இரண்டு சிகரங்களையும் சிவனாகவும் சக்தியாக பாவித்து வழிபாடு செய்தார் அகத்திய முனிவர். இந்நிலையில் இந்த இருசிகரங்களையும் தாமிருக்கும் பொதிகை மலைக்கு எடுத்துச் செல்ல விரும்பினார்.
எப்படி எடுத்துச் செல்வது? அதற்குண்டான உபாயம் எதாவது இருக்கிறதா என்று முருகனிடம் வேண்டினார் அகத்தியர். முருகனும் அதற்கு அருள்புரிந்தார். அகத்தியர் அந்த சிவகிரி, சக்திகிரியை எடுத்துக்கொண்டு வந்தார். வரும் வழியில் திருக்கேதாரத்துக்கு அருகே உள்ள வனத்தில் வைத்து விட்டு அகத்தியர் பொதிகை மலைக்குத் திரும்பிவிட்டார்.
பொதிகைக்கு திரும்பும் வழியில் இடையில் இடும்பனைக்கண்டார். அவர் ஒரு முருக பக்தராச்சே! அகத்தியரை வணங்கினான்." தாங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா?' என்று கேட்டான் இடும்பன்.
அதற்கு அகத்தியர்," திருக்கேதாரத்துக்கு அருகே ஒரு வனத்தில் இருமலைச்சிகரங்களை வைத்துள்ளேன். அவை சாட்சாத் அம்மையும் அப்பனும் உறையும் மலை. அளவற்ற பெருமையை உடைத்தது. அவற்றை நீ பொதிகைக்கு கொண்டு வந்தால், உனக்கு பெருமையும், புகழும் கிடைக்கும்' என்றார். மேலும்," அம்மலைகளை துõக்கி வர சக்தி வேண்டும் அல்லவா? அதற்கு சுப்ரமண்ய மூலமந்திரம்" ஓம் சரவணபவ' சொல்லி வழிபாடு செய்து கொண்டுவந்தால் எளிதாக முருகன் அருளால் அந்த மலைகளை நீ இங்கே கொண்டவந்து விடலாம் என்றும் கூறினார்.
அகத்தியரை வழிபட்டு இடும்பன் மலைகள் இருக்கும் இடத்திற்கு புறப்பட்டான். போகும் வழியில் அகத்தியர் சொன்ன சுப்ரமண்ய மந்திரத்தை சொல்லிக்கொண்டேசென்றான்.
அப்போது வழியில் அஷ்ட நாகங்களும் கயிறுகளாக இடும்பன் அருகே வந்தன. பிரமதண்டம் புஜதண்டமாக வந்தது.
இதைப்பார்த்து ஆச்சரியபட்டான் இடும்பன். அகத்திய முனிவரின் அருளை நினைத்து வியந்தான். உடனே அஷ்ட நாகங்களையும் இரண்டு உறிபோல் செய்தான். இருமலைகளையும் அவற்றில் கட்டி தொங்க விட்டான். பிரமதண்டத்துடன் இணைத்தான். மூல மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே பிரம தண்டத்தை துõக்கி தன் தோள் களில் வைத்து, முழங்காலை மண்ணில் ஊன்றி எழுந்தான்.
தென்திசை நோக்கி பயணப்பட்ட இடம்பன் திருவாவினன்குடியை அடைந்தப்போது காவடியை கீழே இறக்கி வைத்தான். சற்று இளைப்பாறிவிட்டு மீண்டும் காவடியை எடுத்தப்போது எடுக்கமுடியவில்லை.( இன்றும் காவடி எடுப்பவர்கள் கோயிலை அடையும் வரையில் வழியில் எங்கும் காவடியை கீழே வைப்பதில்லை.) அப்போது கந்தன் சிறுவன் போல வந்து இடும்பன் முன் நின்று கைகொட்டிச் சிரித்தான்.
இடும்பன் ஆவேசப்பட்டு அவனைத்தாக்க, சிறுவன் இடும்பனை மாய்த்தான். இந்நிலையில் இடும்பனின் மனைவி முருகனிடம் அழுது, புலம்பி மாங்கல்ய பிச்சைக்கேட்டாள். அவளுக்கிரங்கி மீண்டும் இடும்பனை உயிரெழச்செய்தான் முருகன்.
பின்னர், "இடும்பா, இந்த இருமலைச்சிகரங்கள் இங்கேயே இருக்கட்டும். இந்த மலையில் நான் வாசம் செய்து, உன்னைப்போல என் தந்தை சிவனையும், தாய் சக்தியையும் வழிபட்டு, அவர்கள் அருளை எனக்கு காவடியாக எடுத்து வந்து, என்னை மகிழ்விப்பவர்களை நான் எப்போதும் அருள்பாலிப்பேன்!' என்று முருகன் வரம்கொடுத்தார்.
அதிலிருந்து தான் பக்தர்கள் முருகனுக்கு காவடி எடுத்து வருகிறார்கள். காவடி எடுப்பதின் இன்னொரு நோக்கமும் இருக்கிறது. அது ஞானப்பழத்துக்காக கோபித்துக்கொண்டு ஆண்டியாக கோலம்பூண்டு, அம்மை, அப்பனை பிரிந்து குன்றேறி தன்னந்தனியனாய் இருக்கும் முருகனுக்கு அவனின் தந்தை,தாயான ஈசனையும், ஈஸ்வரியும் காவடி வடிவில் சுமந்து வந்து காட்டுவது அவனை சந்தோஷப்படுத்ததானே! முருகனை சந்தோஷப்படுத்தும் பக்தர்களுக்கு முருகன் பிரதிபலனாக பக்தர்களின் வாழ்க்கை சிறக்க,
உறவு பலப்பட, குடும்ப பிணக்குகள் அகல, ஆயுள்பலம் பெற முருகனை வழிபடுங்கள்.
தேவராஜன்

21 . நாலு பேர் காட்டிய வழி! தேவராஜன்

21 . நாலு பேர் காட்டிய வழி! தேவராஜன்
வாழ்க்கையில உருப்படணும், முன்னுக்கு வரவேண்டும் என்றால் நாலு பேர் காட்டிய வழியை கடைப்பிடிக்கணும் என்று ஒரு பேச்சுக்கு பெரியோர்கள் சொல்வார்கள். அந்த பேச்சு வழக்கு வாக்கியம் ரொம்ப அர்த்தம் பொதிந்தவை. அது ஆன்மிகம் சார்பானது. நான் யார்? ஏன் பிறந்தேன்? என்ன செய்ய வேண்டும் என்பதை உணர துõண்டுதலாக இருப்பது நாலு பேர் காட்டிய வழி! சரி. அந்த நாலு பேர் யார்? அந்த நாலு பேர் சொன்ன நாலு வழி எது? என்பது பற்றி இந்த வார ஆன்மிக சிந்தனையாக சிந்திப்போமா?
நாம் சிவனைப் பற்றுவதற்கு அவனே நான்கு நெறிகளை அமைத்து கொடுத்துள்ளான். அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பனவாம். அந்த நெறிப் பற்றிச் சென்றால் பாலில் நெய்போல உறைந்திருக்கும் சிவனை அடையலாம்.
சரியை
இறைவனான சிவன் லிங்க உருவத்தில் வீற்றிருந்து அருள் வழங்கும் திருக்கோயிலை நாளும் துõய்மை செய்பவர்கள் (உழவாரப்பணி) , நந்தவனம் சென்று மலர் கொய்து வந்து மாலை தொடுத்து, இறைவனுக்குச் சூட்டி மகிழ்பவர்கள் சரியை நெறிச் செல்லும் வீர சைவர்கள் ஆவர். அவர்கள் உடலால் இறைவனுக்குத் தொண்டு செய்பவர்கள். இந்த சரியை நெறியை கடைப் பிடித்து சிவனின் திருப்பாதம் அடைந்தவர் அப்பர் (நாவுக்கரசர்)பெருமான்.
இவர் "என் கடன் பணி செய்து கிடப்பதே' என்று கூறி சிவாலயங்களில் உழவாரப்பணி செய்து தம்மை இறைவனுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர்.இது முதல் வழி! இந்த வழியில் சென்று இறையனுபவம் பெற்றவர் அப்பர்.
கிரியை
சிவன் அபிஷேகப்பிரியர். அபிஷேகம் செய்து வைத்தால் சிவனுக்கு கொள்ளை இன்பம்.
ஆதலால் இறைவனின் திருமேனி தீண்டி, அபிஷேகம், தீபாராதனை, அர்ச்சனை செய்து வித்துத் திருமுறைப்பாடல்களை மனம் உருக பாடி, சிவனின் திருச்செவிகளைக் குளிரச் செய்து உடலாலும், உள்ளத்தாலும் தொண்டு செய்பவர்கள் கிரியை நெறிச் செல்பவர்கள் ஆவர். அவர்கள் உடலில் திறுநீறு பூசி, கழுத்தில் ருத்ராட்சம் சூடி, உள்ளத்தில் ஐந்தெழுத்து மந்திரமான "சிவாய நம' எப்போதும் ஓதிக்கொண்டே இருப்பார்கள். இப்படி இருப்பவர்கள் கிரியை நெறிச் செல்லும் சைவர் ஆவர். இந்த கிரியை நெறியைக் கடைப்பிடித்து சிவன் உறையும் சிவப்புரத்திற்கு சென்றவர் திருஞானசம்பந்தர். அக வழிபாட்டினாலேயே சிவனருளைப்பெற்றவர் பூசலார். அவர் சிவனை நினைந்து, நினைந்து நினைவாலே கோயில் வடித்தவர். நெஞ்சில் ஓர் ஆலயம் கட்டி அதில் சிவனை உறைய செய்தவர். இது இரண்டாவது வழி. இந்த வழி சென்றவர் திருஞானசம்பந்தர்.
யோகம்
அண்டமே பிண்டம். பிண்டமே அண்டம் என்பர் யோகியர். அகத்துõய்மை, புறந்துõய்மையாகி இயமம், நியமம் முதலாய எட்டு உறுப்புகளைக் கொண்ட அட்டாங்க யோகத்தை, முற்பிறவியின் நற்பயனாய் வாய்த்த குருவின் அருந்துணையால் குற்றமற பயின்று, பின்னர் குற்றமற செய்து பிரணவத்தை தட்டி, குண்டலியை எழுப்பி முடிவில் இறை இன்பத்தில் ஒன்றி சமாதி நிலை கைவரப்பெற் றவர்கள் துõய யோக நெறிச் செல்பவர்கள் ஆவர். இது மூன்றாவது வழி. இந்த வழி சென்றவர் சுந்தரர்.
ஞானம்
ஞானம் என்பது தானே இறைவனாக மாறிவிடும் நிலை. தான் வேறு, இறைவன் வேறு என்று பிரித்து பார்க்க முடியாதபடி இரண்டற கலந்துவிடும் நிலையாகும்.
சிவனைத் தவிர வேறு எண்ணம் இல்லாது, காடு, மலை என்று திரிந்தாலும் கணமும் ஐந்தெழுத்து "நமசிவாய' மந்திரத்தை மறக்காத, உலக இன்பங்களை உதறித் தள்ளிய சிவஞானிகளே சித்தர் பெருமக்கள் ஆவர். சித்தன் போக்கு சிவன் போக்கு என்று சொல்வது கூட இதனால் தான். சிவனையும், சித்தனையும் வேறுபடுத்த முடியாது. சித்தனுள் பித்தனும், பித்தனுள் சித்தனும் இரண்டறக்கலந்த நிலையே ஞான நிலையாகும்.
இது நான்காவது வழியான ஞானம். இந்த வழி சென்றவர் மாணிக்க வாசகர்.
இந்த சரியைஅப்பர்; கிரியைதிருஞான சம்பந்தர்; யோகம்சுந்தரர்; ஞானம் மாணிக்க வாசகர்ஆகிய நான்கு பேர் சென்ற நான்கு வழிகளில் ஏதோ ஒரு வழியை நாம் கடைப்பிடித்து ஒழுகினால் இறைவனை அடைவது உறுதி. அதனால் தான் முன்னோர்கள் மேலோட்டமாக நான்கு பேர் காட்டிய வழி என்று சொல்லி வைத்தார்கள்!
இந்த நான்கு வழியும் ஒத்துவராது எனக்கு என்று நினைப்பவர்களா நீங்கள்? உங்களுக்கு ஒரு உபாயம் சொல்கிறேன். அதுவும் மிக எளிமையானது தான். காலையில் துõக்கத்தில் இருந்து விழித்தவுடனேயே மனதுக்குள் ஈஸ்வரனை நினைத்துக்கொண்டு குறைந்த பட்சம் 18 முறையாவது "ஓம் நமச்சிவாய' என்று மந்திரத்தை ஜெபியுங்கள். அடுத்து, இரவு துõங்கும் முன்பாக கடைசி நினைப்பாக ஈஸ்வரனை நினைத்துக்கொண்டு "ஓம் நமச்சிவாய' என்று 18 முறையாவது ஜெபித்து விட்டு துõங்குங்கள்! உங்களைப் படைத்தற்காக இறைவன் மகிழ்வான்!
தேவராஜன்

22 . இறைவனே மருத்துவர் பிரசாதமே மருந்து தேவராஜன்
னிதர்களுக்கு மூன்று வகையான நோய்கள் வரும். அவற்றிற்கு மூன்று வகையான மருத்துவ முறை உண்டு. மூன்று வகையான மருத்துவர்கள் உண்டு.
உடலுக்கு வருகின்ற நோய்கள் முதல் வகை. அவை காயம்,வலி, ஜூரம் போன்றவை. அடுத்து உயிருக்கு வரும் பாவ நோய்கள் இரண்டாம் வகை. மூன்றாவது மரணம் என்கிற நோய்.
இந்த நோய்களை எல்லாம் குணப்படுத்த மூன்று வகை மருத்துவர்கள் இருக்கிறார்கள். அறிவையும் அறிவியலையும் நம்பி செய்யப்படும் ஆங்கில மருத்துவர். இரண்டாவது மூலிகை கொண்டும் கடவுளின் பிரார்த்தனையுடன் செய்யப்படும் சித்தர் மருத்துவ முறை. மூன்றாவது முறை மாந்திரீக முறை. இவை மந்திர உச்சாடனம் மூலம் குணப்படுத்தும் முறை. இதை செய்பவர்கள் மாந்திரீகர்கள்.
இந்த மூவரும் குணப்படுத்த முடியாத நோய்களை குணப்படுத்த மருந்து உண்டா? மருத்துவர் உண்டா? உண்டு என்றால் யார் அது? அதைப்பற்றி இவ்வார ஆன்மிக சிந்தனையாக சிந்திப்போமா?
"என்னால் ஆனதை செய்துவிட்டேன். இனி, கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்' என்று ஒரு எல்லைக்குமேல், தன் சக்திக்கு அப்பாற்படும்போது, ஒருபடித்த மருத்துவன் தன் இயலாமையை வெளிப்படுத்துவதுண்டு. காரணம்? உடலுக்கு உண்டாகிற நோயைத்தீர்க்க நோய்நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செய்வது மருத்துவம். அப்படி செய்யப்படுகின்ற மருந்துக்கு நோயைத்தீர்க்கும் சக்தி உண்டு. அந்த மருந்து சரியான முறையில் செய்யப்பட்டிருந்தால், அது சரியாக செயல்பட்டால், நோய்தீரும். கொடுத்த மருந்து சரியாக செய்யப்பட்டுள்ளதா என்பதை பரிசோதித்து தெரிந்து கொள்ளலாம். ஆனால், அந்த மருந்து சரியாக செயல்படுமா? நோயை குணப்படுத்துமா? என்பது மருந்தைச் செய்தவன் கையிலும் இல்லை. அந்த மருந்தை உண்டவனின் கையிலும் இல்லை. அதற்காக மருத்துவர்களை குறைசொல்ல முடியாது.
சாதாரணநோய்களை குணப்படுத்தக்கூடியவர்கள் தான் இவ்வகை மருத்துவர்கள். ஆனால், கடவுளால் ஒருமனிதனின் ஆத்மாவுக்கு கொடுக்கப்பட்ட பாவ நோய்களைக் குணப்படுத்த மருந்து கண்டுப்பிடிக்கவில்லை. காரணம் நாம் முற்பிறவியில் செய்த பாவத்திற்கு தண்டனையாக இந்த பாவ நோய்கள் வருகின்றன. ஆதலால் மருந்தை கண்டுப்பிடிக்கமுடியவில்லை.
அப்படி என்றால் பாவ நோய்களை குணப்படுத்தவே முடியாதா? முடியும். அதைக் குணப்படுத்தும் மருத்துவர் இறைவன். "மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித் தீராநோய் தீர்த்தருள வல்லான்' என்பது தேவாரம். குணப்படுத்தும் மருந்து பிரசாதம்!
"ஓம் ஸ்ரீ பவ ரோக வைத்யாய நம' எனும் மந்திரம் தான் அதற்கு சாட்சி.
இன்றும் எத்தனையோ வசதிவந்தும், விஞ்ஞான நுட்பங்கள் இருந்தும் மருத்துவர்களால் இனி தேறாது என, கைவிடப்பட்ட வியாதியஸ்தர்கள் இறுதியில் இறைவனே கதி என சரணடைந்து, அவனின் பிரசாதத்தையே உண்டு வந்து குணமடைந்தவர்களை உலகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. அறிவியல் அதை "ஆச்சரியம்' என்று ஆச்சரியப்படுகிறது. கேன்சர், டி.பி., நீரிழிவு, குஷ்டம் போன்றவைகளுக்கு டாக்டர்களையும் மிஞ்சிய வைத்தியன் இறைவன் தான்! அவன் தான் மருத்துவர்களுக்கு எல்லாம் மருத்துவன்.அவனின் பிரசாதங்களான பூஜைக்குரிய வில்வம், துளசி, வேம்பு, அருகம் புல், பன்னீர் இலை, பூ, எருக்கம்பூ, திருநீறு போன்றவை. இவை மருந்துகளுக்கு எல்லாம் சிறந்த ஆதி மருந்தாகும்.
திருநீற்றை பூசுவதால் பல நோய்கள் தீருகின்றன. நாவுக்கரசருக்கு சூலை நோயும், நின்ற சீர்நெடுமாறன் பாண்டியனுக்கு வெப்புநோயும் குணமாகி இருப்பது புராணச் செய்தி. பக்தர் ஒருவர் எருக்க இலையில் தயிரன்னத்தை வைத்து சாப்பிட்டவருக்கு குட்ட நோய் குணமானது என்பது சூரியனார் கோயில் தலவரலாறு சொல்லும் உண்மை.
திருச்செந்துõர் பன்னீர் இலைத்திருநீறு
திருச்செந்துõர் பன்னீர் இலைத் திருநீறை பூசினாலும், புசித்தாலும் பல நோய்கள் தீருகின்றன. பன்னீர் இலை அர்ச்சனைக்குரியது. திருச்செந்துõரில் பன்னீர்மரங்களாக இருப்பவர்கள் தேவர்கள். பன்னீர் இலைகளாக இருப்பவை வேதங்கள். எனவே தான் பன்னீர் இலைக்கு தெய்வீகத்தன்மையும்,மருத்துவ சக்தியும் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பன்னீர் இலையிலும் 12 நரம்புகள் ஆறுமுகனின் 12 திருக்கரங்களாக இருக்கின்றன. ஆக பன்னீர் இலையில் வைத்து திருநீற்றை ஏற்பது சாட்சாத் ஆறுமுகனே தன் திருக்கரங்களால் அனைவருக்கும் அருள்வதாகும். விசுவாமித்தரரின் காசநோயை பன்னீர்இலைத்திருநீறால் முருகன் குணப்படுத்தியுள்ளதாக தகவல் உண்டு.
வைத்தீஸ்வரன் கோயில் சாத்துருண்டை
சாத்துருண்டை என்பது சந்தனம், மண், திருநீறு ஆகிய கலவை. சாத்துருண்டை சில நியம விதிகளுக்கு உட்பட்டுசெய்யப்படுகின்றன. சுக்லபட்ச நன்னாளில் அங்க சந்தானதீர்த்தத்தில் இருந்து மண்எடுத்து, ஒரு புதுபாத்திரத்தில் வைத்து, சடாயுகுண்டத்தில் உள்ள இயற்கையான திருநீற்றைச் சித்தாமிர்த தீர்த்த நீருடன் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடியே கலந்து, முத்துக்குமாரசுவாமியின் முன் குழி அம்மியில் இட்டு அரைத்து, அதை சிறுசிறு உருண்டையாக உருட்டி, தையல்நாயகி அம்மன் முன் வைத்து அர்ச்சனை செய்து சித்தாமிர்த தீர்த்தத்துடன் உண்டால் நோய்கள் குணமாவதாக நம்பிக்கை உண்டு.
மந்திரமாவது நீறு
மந்திரமாவது நீறு என்று திருநீறுபதிகத்தில் ஞான சம்பந்தர் சுவாமிகள் பாடியுள்ளார்கள். அப்படிப்பட்ட திருநீறு உருவாக்கும் போதும், சம்புடத்தில் மாற்றியபின்பும் மந்திரங்கள் உச்சாடனம் செய்து வைக்கின்றனர். இதனால் திருநீறு மந்திரத்திறனையும், இறை சக்தியையும் பெற்றுவிடுகிறது. இன்றும் கிராமப்புறங்களில் பயம், ஜூரம், விஷக்கடிகளுக்கு கடவுளைப்பிரார்த்தனை செய்து விட்டு திருநீறு பூசும் பழக்கம் இருந்துவருகிறது. அதுமட்டுமல்ல திருநீறு தடவி, பேய்,பிசாசு, கழுப்பு,செய்வினை நோய்களை விரட்டுகின்றனர்.
எனவே தான் இறைவனையே மருத்துவர் என்கிறேன். பிரசாதத்தையே மருந்து என்கிறேன். ஆகவே, பாவநோய்கள் தீர, குணப்படுத்த முடியாத நோய்கள் அகல, மருத்துவர்கள் கைவிரித்துவிட்ட அபாயநோய்கள் விலக இறைவனே மருத்துவர்: பிரசாதமே மருந்து என உள்ளன்போடு ஏற்றுக்கொண்டு, பக்தியுடன், நம்பிக்கையுடன் இறைவனையும் அவன் பிரசாதத்தையும் ஏற்றுக்கொண்டு வாருங்கள். பலன் உண்டு என்பதில் ஐயமில்லை!
தேவராஜன்

23. கடவுளுக்கு ஒரு கடிதம் தேவராஜன்
சுவாமி, நமஸ்காரம். நீங்கள் படைத்த கோடானுகோடி உயிர்களில் ஒன்றுதான் நான்.தங்களின் அனுக்கிரகத்தால் நான் நலம். மற்ற ஜீவராசிகள் எல்லாம் நலம் என்று திட்டவட்டமாக என்னால் கூறமுடியாது. தாங்கள் படைத்த கோடானு கோடி உயிர்கள் சுகமில்லாமல் இருக்கின்றன. எல்லோரும் நலமாக இருக்க அருள்புரிக சுவாமி, அடியேன் உங்களைப்பார்த்ததில்லை.அதனால் என்ன நீங்கள் தான் என்னைப்பார்த்துக்கொண்டிருக்கிறீர்களே! அதுபோதுமே, உங்களுக்கு நான் கடிதம் எழுத.
இறைவா! தினம் தினம் புழு, பூச்சியிலிருந்து பறவைகள், விலங்குகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையில் துன்பப்படுவதைப்பார்த்துக்கொண்டுதானிருக்கிறேன். அடிக்கும் தணலில் புழு, பூச்சிகள் துவண்டு போவதைப்பார்த்ததும் என் கண்களில் சட்டென்று நீர்க்கோர்க்கிறது. இங்கே வீடுகளில், அசைவ ஓட்டல்களில், கோயில்களில் பறவைகளும், விலங்குகளும் கொல்லப்படும் போது அவைகளின் மரணஓலம் கேட்டு என் காதில் ரத்தம் கசிகிறது.
சாலைகளில் மாடுகளும்,குதிரைகளும்,கழுதைகளும் பொதிசுமந்து செல்லும்போது அதுகள் விடும் பெருமூச்சு என் மனதை பதைக்க வைக்கிறது. இவற்றை எல்லாம் பார்க்கையில் என்ன கொடுமை! என்ன கொடுமை! என்று கூக்குரலிட தோன்றுகிறது. இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது? என்று கண்மூடி யோசிக்கையில் ஒருவேளை நானும் ஏதோ ஒருபிறவியில் இப்படி கஷ்டப்பட்டிருப்பேனோ? தெரிந்தோ, தெரியாமலோ நான் செய்கின்ற பாவங்களால் மறுபிறவியில் இதுகள் போல நான் துயரப்படுவேனோ? தெரியவில்லை. நினைக்கவே அச்சமாக இருக்கிறது. மனதை ஏதோ பிசைகிறது.
"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப், பேயாய்க் கணங்களாய்
வல்அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப்பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம் பெருமான்'
என்று மாணிக்க வாசகரே சொல்லி சொல்லி புலம்பி இருக்கிறாரே, நான் எம்மாத்திரம்? என் கண்முன்னே உண்ணஉணவு, உடுக்க உடை, இருக்க இடமில்லாமல் எத்தனை பஞ்சபரதேசிகள் கையேந்தி திரிகிறார்கள்... கால் இல்லாதவன்,கையில்லாதவன், கண்ணில்லாதவன், பெருநோய் கண்டவன், நாதியற்ற எத்தனை அனாதைகள் என ஒருபுறம். மறுபுறம் கொலைக் காரன்,தீவிரவாதி, ஏமாற்றிபிழைக்கும் எத்தன்கள்... எப்பப்பா... என்ன கொடுமையடா சாமி! ஏன் இவர்கள் இப்படி ஒரு ஈனப்பிறப்பெடுத்து அல்லல்படுகிறார்கள்? மனசுக்குள் ஆயிரம் கேள்விமுள் தைக்கின்றன. அதே சமயம் அப்பா டா... நாம் இப்படி ஒரு பிறவி எடுக்கவில்லையே! நாம் சகலவிதத்திலும் நன்றாக இருக்கிறோம்; படித்திருக்கிறோம்; நல்லக்குடும்பத்தில் பிறந்திருக்கிறோம்; <உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் தாராளமாய் இருக்கிறது என்று மனம் ஆறுதல் அடைகிறது. இருந்தாலும் நான் வாழும் உலகத்தில் தினம் எங்கோ கொலை நடக்கிறது. நொடிக்குநொடி எவனோ ஒருவன் ஏமாற்றுகிறான். ஒருவன் வஞ்சிக்கப்படுகிறான். ஜாதி,சமய சண்டையில் கொத்து கொத்தாய் மனிதன் செத்துமடிகிறான். மண் ஆசையில் போர் என்ற பெயரில் ஆயிரம் ஆயிரம் உயிர்களை கொன்று குவிக்கிறான். நாட்டில் ஆங்காங்கே நாத்திகர்களும், வன்முறையாளர்களும், அரசியல்வாதிகளும் மக்களை ஏமாற்றுகிறார்கள். மக்கள் பணத்தை கோடி கோடியாய் சுருட்டுகிறார்கள்.
இறைவா! ஏன் இவர்களின் அட்டூழியங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய்? ஒருவேளை இவர்கள் எல்லாம் அடுத்தப்பிறவியில் ஈனப்பிறவி எடுத்து சொல்லொண்ணா துயர்படப்போகிறார்களோ? இப்படி நாலாப்பக்கமும் பார்த்து,பார்த்து நாம் அப்படி இல்லை. நல்லவனாக இருக்கிறோம். நல்லதே நினைக்கிறோம். நல்லதே செய்கிறோம். உன்னை நினைக்கிறேன். நாளும் பக்தி செய்கிறேன். உனதருளால் காமம்,குரோதம், கோபம், துர்க்குணங்கள் எல்லாம் விட்டொழிக்க விரும்புகிறேன்.
உலகத்தில் சகல உயிர்களும் சுகப்பட, பாவம் தவிர்த்து, புண்ணியம் சேர்க்க நீங்கள் சொன்ன வேதங்களும் அவைகளால் தோன்றிய புராணங்களும் ஒட்டு மொத்தமாக சொல்வது பக்தி செய்யுங்கள்! சத்தியம் தவறாதீர்கள்! தர்மவாழ்க்கை வாழுங்கள்! உத்தமர்களாக இருங்கள்! என்றுசொல்கின்றன. அதை எல்லாம் ஞானிகளும்,சித்தர்களும், சமயகுருமார்களும்,சான்றோர்களும் நாளும் எடுத்துச்சொல்லிக்கொண்டுதானே இருக்கிறார்கள். ஏன் இந்த பாவிமனுஷர்கள் காது கொடுத்து கேட்பதில்லை? உன்னை மறந்து எதையோ தேடி திரிகிறார்களே. இவர்கள் பாவம் கழுவ, அடுத்தப்பிறவி ஈனப்பிறவியாக இல்லாமல் இருக்க என்ன உபாயமிருக்கிறது?
"நாளும் என்னை நினை! எந்நேரமும் பக்தி செய்! என் நாமத்தை எப்போதும் ஓது! ஒழுக்கமாய் இரு! உண்மை பேசு! பிறரை நேசி! சகல ஜீவராசிகளிடம் கருணை கொள்! உனக்குப் பிறவா பேரின்பம் தருகிறேன்!' என்று தானே சொல்வாய். எனக்குத் தெரியும் இறைவா, வேறென்ன சொல்வாய் நீ? அது சரி, இதை இந்த மானிட ஜென்மங்கள் கேட்பார்களா? நீ சொன்னப்படியே நடப்பார்களா? இதுமட்டும் தெரிந்தால் எனக்கு உடனே பதில் கடிதம் எழுதிவிடு. தாமதம் வேண்டாம்.
இப்படிக்கு,
உன்படைப்பில் ஓர் உயிர்.

24. பொருத்தமான இறை தம்பிகள் தேவராஜன்
சபாஷ் சரியான ஜோடி பொருத்தம் என்று நாம் பார்த்து அசந்துபோன தம்பதிகளை சொல்வதுண்டு. பொருத்தம் என்பது கல்வி,ஒத்த குணம், அழகு உள்ளிட்டவை பொருத்தமாக கணவன்,மனைவி கொண்டிருப்பது. ஒரு டாக்டர் ஒரு டாக்டரையோ, ஒரு ஆசிரியர் ஒரு ஆசிரியரையோ மணந்துகொள்வது என்பது ஒத்த தொழில், கருத்து கொண்டிருப்பதன் காரணமாகவே இப்படி ஜோடி பொருத்தம் அமைகிறது. சாதாரண மனிதர்கள் நாமே நட்சத்திரம், ராசி, ரஜ்ஜி என பத்து பொருத்தம் மற்றும் படிப்பு, குணம், குடும்பம் பாரம்பரியம், அந்தஸ்து, குலம், கோத்திரம் என ஆயிரத்தெட்டு பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறோம். நம்மை படைத்து, காத்து,அழிக்கும் கடவுள்களின் மனைவிமார்கள் எப்படி பொருத்தமானவர்களாக இருக்கிறார்கள் என்பதை இந்த வார ஆன்மிக சிந்தனையாக சிந்திப்போம்!
ஒரு சின்ன குண்டூசியிலிருந்து வானில் சீறிபாயும் ராக்கெட் வரை எதை தயாரிப்பதாக இருந்தாலும் அதற்கு முதலில் அறிவுவேண்டும். எதையும் படைக்கவோ, தயாரிக்கவோ அறிவுதான் அடிப்படை மூலதனமாக இருக்கிறது. அதனால் தான் படைக்கும் கடவுளான பிரம்மா, அறிவுக்கடவுளான சரஸ்வதியை மனைவியாக கொண்டுள்ளார். உலகத்தில் சகல ஜீவராசிகளையும் படைக்கும் பொறுப்பு பிரம்மாவுக்கு உரியது என்பதால் படைப்பதற்கு அறிவுதானே வேண்டும்? அதனால் தான் அறிவே வடிவான சரஸ்வதியை தன் துணைøயாக கொண்டிருக்கிறார். அப்படி என்றால் பிரம்மாவுக்கு அறிவுகிடையாதா என்று கேட்டு விடாதீர்கள். பிரம்மாவுக்கு அந்த ஞானம் எல்லாம் பூர்ணமாக உண்டு. பிறகு ஏன் என்றால் இனம் இனத்தைச் தானே சேரும். அதனால் தான் அறிவு, அறிவுடன் ஒன்றிருக்கிறது போலும்!
நம் கலாசாரபடி வெண்மை நிறத்திற்கு பல அர்த்தக்குறியீடுகள் உண்டு. வெண்மை என்றால் துõய்மை, உண்மை, சமாதானம் மற்றும் அமங்கலத்தையும் குறிக்கும். நம் பாட்டிகள் கணவரை இழந்ததும் வெண்மை ஆடையைதான் அணிந்திருக்கிறார்கள். அந்த நிறம் அவர்களுக்கு அமங்கலத்தை சூட்டியது.
கல்வி தேவதையான சரஸ்வதி தேவியும் முத்துபோல பளபளக்கும் வெண்பட்டு புடவை அணிந்து, கையில் வெண்தாமரையுடன் ஞானப்புன்னகையுடன் இருக்கிறார். சரஸ்வதி தேவி அணிந்திருக்கும் வெண்ணிற ஆடை அமங்கலத்தை சுட்டுவதற்காக அல்ல. அவளிடம் இருக்கும் அறிவு கிஞ்சித்தேனும் கசடு,குற்றம் இல்லாது மிக துõய்மையாக இருக்கிறது என்பதை குறிக்கவே. அடுத்ததாக, அவள் கையில் துõய்மையான மிகத்தெளிவான அடுத்ததுகாட்டும் கண்ணாடி போல ஸ்படிக மாலையை கையில் வைத்திருக்கிறார். ஸ்படிகம் போல அவள் குளிர்ச்சியாக,அறிவில் களங்கமில்லாமல் சுத்தமாக இருக்கிறார் என்பதை காட்டவே. அடுத்ததாக கையில் வீணை எனும் இசைக் கருவியை வைத்திருக்கிறார். அது ஏன் என்றால் வீணையில் இருக்கும் தந்திகள் சரியான அளவில் இழுத்துக்கட்டப்பட்டிருக்கவேண்டும். அதிகமாக இறுகியிருந்தாலும், மிக தளர்வாக இருந்தாலும் அந்த தந்திகளால் வீணைக்கு பலன் கொடுக்காது.அதுபோல அறிவும் ஒரு எல்லைக்குட்பட்டே இருந்தால் தான் அதைப்பெற்றவருக்கு நன்மை. அப்படிப்பட்ட சரஸ்வதியைத்தான் பிரம்மா நாக்கில் வைத்துள்ளார்.பிரம்மாவின் தொழில் படைப்பு என்பதால் படைப்புக்குத் தேவையான அறிவை சரஸ்வதியாக துணைவியாக்கிக் கொண்டிருக்கிறார் என்பதும் அர்த்தமுள்ளதாக தானே இருக்கிறது!
அடுத்ததாக அழித்தல் தொழிலை செய்பவர் சிவன். எப்படி படைப்பதற்கு அறிவு அவசியமாக படுகிறதோ, அதுபோல அழிப்பதற்கு சக்தி வேண்டும். சக்தி என்றால் பலம்.
ஒரு சிற்பம் செய்ய அறிவு வேண்டும். அதை துõக்கிப் போட்டு உடைக்க பலம் அதாவது சக்தி வேண்டும். யோசிப்பவன் எதையும் அழிப்பதில்லை. அழிப்பவன் எதையும் யோசிப்பதே இல்லை என்று சொல்வதுண்டு. ஒன்றை அழிப்பதற்கு சூலாயுதம், ஈட்டி, வாள் போன்ற பல ஆயுதங்கள் தேவை. அதனால் தான் அழிக்கும் கடவுளான சிவனும் இத்தகைய ஆயுதங்களைக் கொண்ட சக்தியை துணையாக கொண்டிருக்கிறார்.அழிக்கும் தத்துவத்தை உணர்த்த சுடலையாக மயானத்தில் சாம்பல் பூசி, மண்டையோடுடன் காட்சி தருகிறார். சக்தியானவளும் சூலம், வேல், அம்பு போன்ற ஆயுதங்களை ஏந்திய காளியாகவும் உள்ளாள். சக்தியானது சக்திமானைப்பிரிந்து இயங்காது என்பதால் சக்திமானின் சரீரத்தில் பாதியாகவே சக்தி அர்த்தநாரியாக உள்ளாள். அழிவை உணர்த்தும் சிவப்பு வண்ணத்தை ஆடையாக அணிந்துள்ளாள். ஆக, அழிக்கும் தொழிலைக்கொண்டிருக்கும் சிவனுக்கு அழிப்பதற்கு தேவைப்படும் சக்தியை துணைவியாக கொண்டிருப்பது நியாயம் தானே!
ஆக்கல், அழித்தல் இவற்றிற்கு இடையே காத்தல் என்ற ஒரு தொழிலும் உண்டு. காத்தல் தொழிலை செய்பவர் மகாவிஷ்ணு. காப்பவர் என்றால் வாழவைப்பவர் என்று பொருள்படும். ஒருவர் வாழ்வதற்கு இருக்க இடம், உடுத்த உடை, உண்ண உணவு, பொன்,பொருள், ஐஸ்வர்யம், வீரம், வெற்றி போன்றவைகள் எல்லாம் தேவைப்படுகிறது. இதை காப்பவர் தானே வழங்க வேண்டும். அதனால் தான் இவைகள் எல்லாம் இருக்கும் தனலட்சுமி,தான்யலட்சுமி,விஜயலட்சுமி,வித்யாலட்சுமி,சந்தான லட்சுமி, பாக்யலட்சுமி,கஜலட்சுமி,தைரியலட்சுமி ஆகியவர்கள் மொத்த உருவான மகாலட்சுமியை திருமால் தன் மார்பில் சுமந்திருக்கிறார். காப்பவர் முதலில் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் அல்லவா? அதனால்தான் விஷ்ணு அலங்காரப்பிரியராக இருக்கிறார். அதை உணர்த்தும் வகையில் தான் வைஜயந்தி, பீதாம்பரம் அணிந்து கொண்டு செல்வ செழிப்பாக இருக்கிறார்.
ஆக, காக்கும் கடவுளான திருமாலுக்கு எட்டு செல்வங்களைத் தரும் லட்சுமிகளை தன் துணையாக கொண்டிருப்பது சரிதான் அல்லவா?
இந்த உலகம் முறையாக இயங்க படைத்தல், அழித்தல், காத்தல் ஆகிய தொழில்கள் சரிவர நடக்க வேண்டும்.அந்தந்த தொழில்களை சிறப்பாக செய்ய மூன்று தெய்வங்கள். அந்த தெய்வங்களான பிரம்மாசரஸ்வதி; சிவன்சக்தி; திருமால் மகாலட்சுமி.இந்த இறை தம்பதிகள் பொருத்தம் அர்த்தமுள்ளதாக அமைந்திருப்பதுதான் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.
தேவராஜன்

25. வாழ்வின் பொருளென்ன நாம் வந்த கதையென்ன? தேவராஜன்
நாம் யார்? ஏன் இவ்வுலகத்திற்கு வந்தோம்? நம்மால் என்ன பயன் நடக்கப்போகிறது? நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? இவற்றை எப்படி அறிவது? அதற்கான முயற்சி எது?
இந்த கேள்விகளுக்கான விடை தேடல் தான் வாழ்க்கை. அதைவிட்டு பிறந்தோம், வளர்ந்தோம், படித்தோம், வேலை தேடினோம், நல்ல அழகான ஜோடியை மணம்முடித்தோம், பிள்ளைக்குட்டிகள் பெற்றோம், அவர்களை வளர்த்து, படிக்க வைத்து, நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணி வைத்தோம், இடைப்பட்ட காலத்தில் வீடுகட்டினோம், கார் வாங்கினோம், சொகுசாக வாழ்ந்தோம் என்பது எல்லாம் வாழ்ந்ததின் அர்த்தமோ, வாழ்வின் அர்த்தமோ அல்ல. அப்படி என்றால் உண்மையான வாழ்வின் பொருளென்ன என்பதை இந்த வார ஆன்மிக சிந்தனையாக பார்ப்போம்!
முன்வினைப்பயனாக செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப பிறப்பு உண்டாகிறது. பிறந்த பிறப்பு, விதித்தப்படி பாவமோ, புண்ணியமோ செய்கிறது. நிர்ணயித்த காலத்தில் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு சென்றுவிடுகிறது இந்த உயிர். இந்த ஓரங்க நாடகக்கூத்திற்கு தான் வாழ்க்கை என்று சொல்லிக்கொள்கிறோம்! இதை புரியும்படி உங்களுக்கு விளக்குகிறேன்.
மழையானது வானத்திலிருந்து புறப்பட்டு பூமிக்கு வருகிறது. அந்த மழை ஏரி, ஆறு,குளம்,குட்டை,கடல் என பல வடிவில் நீர் என்ற உருவில் பூமியில் சிலகாலம் இருக்கிறது. மீண்டும் சூரியனின் வெப்பத்தால் ஆவியாகி மீண்டும் வானத்தை நோக்கி சென்று விடுகிறது நீர். அதுபோல கடவுளின் பிரதேசத்திலிருந்து அனுப்பிவைக்கப்படும் உயிர், பூமியில் சிலகாலம் தங்கிவிட்டு, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே சென்று விடும். இந்தச் செயலைத்தான் பிறப்பு இறப்பு என்கிறோம்.
உயிர்களை உலகத்தில் கடவுள் ஏன் மனிதனாகப் படைக்கவேண்டும்? அந்த உயிர் சுகப்படவே. அந்த உயிர் முன் ஊழ்களில் செய்த வினைகளால் ஏற்பட்ட பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப, இன்பத்தையோ, துன்பத்தையோ அனுபவித்து இருக்கும் வரையில் கடவுள் தந்த பரிசான அறிவைக்கொண்டு நல்லதை நினைத்து, நல்லதை செய்து, ஒழுக்கமாக வாழ்ந்து, முன் ஊழ் பாவங்களை இப்பிறவியில் கழுவி, மீண்டும் பரிசுத்தமாக மாறி கடவுளிடம் செல்லத்தான் இந்த பிறப்பும் வாழ்க்கையும் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
அப்படிப்பட்ட வாழ்க்கையில் நமக்கு மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம். உயிர் என்று விழும்? எங்கே விழும்? ஏன் விழும் என்பதெல்லாம் அவ்வுயிருக்கு முன்கூட்டியே தெரியாது. இது தான் வாழ்வின் ரகசியம்!
நாம் எல்லாருமே இந்த நாட்டில் பிறக்கவேண்டும், அதுவும் இன்னாருக்குத் தான் பிறக்க வேண்டும், இந்த பெயரோடு தான் வாழவேண்டும், இன்ன வயது வரைதான் வாழ வேண்டும், ஆணாகவோ,பெண்ணாகவோ என்பது எல்லாம் தீர்மானிக்கப்பட்டு கடவுளின் ஆசிர்வாதத்தோடு தான் நாம் பூமிக்கு வருகிறோம்.
சாட்டை கடவுளின் கையில். சுற்றும் பம்பரம் மட்டுமே நாம்! எல்லாமே விதித்தப்படி தான் நடக்கும். நான் இன்னாருக்கு, இந்த ஊரில், இந்த நேரத்தில், அழகாக, சிவப்பாக, ஆணாக பிறக்கவேண்டும் என்றெல்லாம் நம் விருப்பப்படி பிறப்பெடுக்க முடியாது.
இதை எல்லாம் தெரிந்தோ, தெரியாமலோ நாம் வாழ்வில் ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டுக்கொண்டிருக்கிறோம்.
எதற்காக நாம் பிறந்தோம், ஏன் கடவுள் நம்மை படைத்தார்? நாம் செய்யவேண்டிய கர்மங்கள் எவைஎவை என்பதை அறிந்து கொண்டு அதை செய்து கடவுளுக்கு நாம் பிரியமானவர்களாக நடந்துகொள்ளாமல், அவரவர் எதை எதையோ தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். நம் உழைப்பால், முயற்சியால் தேடிய எதாவது போகும் போது கொண்டுச் செல்ல முடிகிறதா, என்ன?
இது புரிந்த பிறகும் கடவுள் உலகத்தில் வசிக்க ஏதாவது காரியம் செய்கிறோமா? புண்ணியம் செய்கிறோமா? கடவுளை காதலால் கசிந்துருகி, கண்ணீர் மல்க, அவன் திருத்தாளை நினைந்து, நினைந்து, அவன் திருநாமத்தை சொல்லி, சொல்லி என்றேனும் ஒருநாளாவது வாழ்ந்திருக்கிறோமா?
அப்படி எல்லாம் நாம் எதுவும் செய்யாமல் எதற்காக நாம் பிறந்தோமோ அந்த கடமைகளைச் செய்யாமல், பிறவி துன்பத்தைப் போக்க கடவுள் இட்டகட்டளைகளை மறந்து, கடவுளின் ஆணையை மீறி, படைப்பு தத்துவத்துக்கு முரணாக நம் கற்பனைக்கு, ஆசைக்கு, விருப்பத்திற்கு, அறிவுக்கு, சூழ்நிலைக்கு ஏற்ப இந்த உலகத்தைப் பார்க்கிறோம் அல்லது புரிந்துகொள்கிறோம். நாம் அனைவருமே மனதால் உருவாக்கப்பட்ட கற்பனை உலகில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கடவுள் படைத்த உலகத்தில் வாழ்வதில்லை. அந்த உலகத்தில் நீதி, நியாயம் நேர்மை, தர்மம், கருணை, அன்பு, கடவுளின் ஓங்கார சங்கீதம் இன்னம் என்னன்னவோ இருக்கிறது. அதை எல்லாம் விட்டு, நாம் உருவாக்கிய கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருப்பதால், நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் துன்பம் வருகிறது. கவலை வருகிறது. வியாதி வருகிறது. தலைவலி வருகிறது. இவை எல்லாம் வராமலிருக்க போராடவேண்டியிருக்கிறது. பாருங்கள்! எத்தனை தொல்லைகள்... கடவுள் கொடுத்த வாழ்க்கையை அவன் அமைத்த பாதையில் அவன் சொன்ன நெறிபடி வாழாததால் தான் உலகில் ஆயிரமாயிரம் பிரச்னைகள்...
ஆதலால், நாம் வந்த கதையும், வாழ்வின் பொருளும் அறிந்து வாழ்ந்தால் பூவுலக வாழ்க்கையும் நிம்மதி தரும்; வானுலக வாழ்க்கையும் சந்தோஷமாக இருக்கும். அதற்கு முதற்படியாக இன்று முதலாய் கடவுள் தந்த வாழ்க்கை நெறிக்கு மாறத் துவங்குவோம்.
தேவராஜன்

26. எண்சாண் உடம்பின் தத்துவம் தேவராஜன்
ஒவ்வொரு உயிரும் இவ்வுலகில் அர்த்தமுள்ள படைப்பாகவே கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது. ஓர் அறிவு முதல் ஆறறிவு மனிதன் வரை எல்லாம் தெய்வீகச் சாயல் கொண்ட தெய்வத்தை பிரதிபலிக்கும் தன்மையை கொண்டிருக்கின்றன என்பதை, ஆழ்ந்து சிந்திக்கும் போது புலனாகும்.
நம்மில் அவரவர் உயரம் அவரவர் கை அளவில் எண் சாணாக தான் இருக்கும். உலகத்தில் எந்த மனிதரும் அவரவர் கையளவில் எண் சாணை தாண்டி இருப்பதில்லை. ஏன் அப்படி என்று நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா? சிந்தித்துப் பார்த்தால், அதில் பெரிய ஆன்மிக தத்துவம் பொதிந்திருப்பதை அறியலாம்!
எண் சாண் என்பது "ஓம் நமசிவாய' என்பதின் தோற்றமாகும். எப்படி எனில் ஓம் என்பதன் விரிவான அ, உ,ம் இந்த மூன்றெழுத்தோடு நமசிவாய என்ற ஐந்தெழுத்தைக் கூட்டினால், மொத்தம் எட்டெழுத்து வரும். அந்த எட்டெழுத்தே எண்சாண் உடம்பாக நாம் கொண்டிருக்கிறோம். அதனால் தான் "தெய்வம் மனுஷ ரூபாய' என்கிறோமோ?
அடுத்ததாக, இன்னமொரு விரிந்த ஆன்மிக தத்துவமாக இந்த எண் சாண் உடம்பு கொண்டிருக்கிறது. ஒரு சாண் என்பது 12 விரல் அளவாகும். எட்டு சாண் என்பது 96 விரல் அளவாகும். இந்த 96 விரல் அளவுக்கும் 96 வகை ஆன்மிக தத்துவம் இருக்கிறது. அதை உங்களுக்கு புரியும்படியே விளக்குகிறேன்.
நாதம், விந்து, சதாசிவன், ஈச்வரம், சுத்தவித்தை ஆகிய ஐந்தும் சிவதத்துவங்கள்.
கலை, வித்தை, அராகம், காலம், நியதி, புருடன், மாயா இவை ஏழும் வித்யா தத்துவம்
சுவை உணர்தல், ஒளியறிதல், ஓசைகேட்டல், தொடு உணர்வு, மணம் நுகர்தல் இவை ஐந்தும் தன்மாத்திரைகள்.
நிலம், நீர், நெருப்பு,காற்று, ஆகாயம் இவை ஐந்தும் ஐம்பூதங்கள்.
தாமாகவே உணர்வனவான உடல் உறுப்புகளான உடம்பு, வாய், கண் மூக்கு, காது இவை நம் அறிவு துõண்டாமலேயே நாம் கட்டளையிடாமலேயே செய்கையில் ஈடுபடும். இந்த ஐந்து உறுப்புகளுக்கு ஞானேந்திரியங்கள் என்று பெயர்.
நமது அறிவு துõண்டப்பட்டு அல்லது மூளை கட்டளையிட்டப்பிறகு,செயல்படும் உறுப்புகள் கைகள், கால்கள், நாக்கு, மலம்கழிக்கும் வாய், நீர்விடும் குறி .இவை ஏவிய செயல் செய்ய வசதியாக இருப்பதால் இந்த ஐந்து உறுப்புகளுக்கு கன்ம இந்திரியங்கள் என்று பெயர்.
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் இந்த நான்கும் அந்தக்கரணம் என்று பெயர்.
ஆக, வித்யா தத்துவம்7, சிவ தத்துவம்5, தன்மாத்திரை5, மகாபூதங்கள்5,ஞானேந்திரியம்5, கன்மேந்திரம்5, அந்தக்கரணம்4 சேர்ந்த தொகுப்பாக 36 தத்துவங்கள் ஆகும்.
மீதமுள்ள 60 தத்துவம் எவை என்பதை அறியலாம்;
நிலத்தின் கூறுகளாக மயிர், தோல், எலும்பு, நரம்பு, தசை இவை ஐந்தும், நீர்க்கூறாகும்.
சிறுநீர், உதிரம், மூளை, கொழுப்பு, விந்து ஆகிய ஐந்தும், தீயின் கூறாகும்.
ஊண், உறக்கம், பயம், உடலுறவு, சோம்பல் இவை ஐந்தும், வாய்வின் கூறுகளா கும்.
ஓடல், நிறுத்தல், நடத்தல், கிடத்தல், நின்றல் இந்த ஐந்தும், ஆகாயத்தின் கூறுகளா கும்.
காமம், வெகுளி, செருக்கு, பொறாமை, மயக்கம் இவை ஐந்தும், செயற்கருவிகளா கும்.
கூடுதல், பேசல், நடத்தல், உழைத்தல், கழித்தல் ஆகிய ஐந்தும் வாயுக்கள். பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன், நாகன், கூர்மன், கிரிகரன்,தேவதத்தன், தனஞ்செயன் ஆகிய பத்தும், நாடிகள். இடைகலை, பிங்கலை, சுழிமுனை, புருடன், காந்தாரி, ஹஸ்திஜிஹ்வை, பிரீதை,யஷை, ஆலம்புஷை, ஹூஹூ, சங்கினி முதலிய பத்தும் குணத்தின் வகைகள். சத்வகுணம், ரஜோகுணம், தமோ குணம் ஆகிய மூன்றும், வாக்கின் வகைகளான செவியோசை, வாக்கோசை, நினைவோசை, கக்கோசை ஆகிய நான்கும், பற்றுதல் கூறுகளான பொருள்.
பற்று, புத்திரப்பற்று, உலகப்பற்று ஆகிய மூன்றும் சேர்த்து கூட்டினால் மொத் தம் 60 உறுப்புகளாகி 60 தத்துவம் கிடைக்கும். மேலே சொன்ன 36 தத்துவத்தோடு இந்த 60 தத்துவங்களும் சேர 96 தத்துவங்களாகிய நம் எண்சாண் உடம்பாக கடவுள் சிருஷ்டித்துள்ளார்.
இந்த 96 வகை தத்துவங்களான எண்சாண் மனித உடல் எட்டு திசையில் எந்த திசையிலும் பிறக்கலாம்; அஷ்டாங்க யோகம் செய்யலாம்; எட்டு சித்துக்கள் புரியலாம்: கொல்லாமை, ஒற்றுமை, நன்றி, இரக்கம், நல்அறிவு, மெய், தவம், அன்பு ஆகிய எட்டு குணங்களையும் பேணவேண்டும்.
இந்த எண்சாண் உடம்பில் இன்னொரு ஆச்சரியமான தத்துவமும் இருக்கிறது. தமிழில் உயிர் எழுத்து 12; மெய் எழுத்து 18 ஆக 30 எழுத்துகளும் தமிழ் முதல் எழுத்து என்று சுட்டவர்.
சிவதத்துவம்5, வித்யாதத்துவம்7 ஆகிய இரண்டும் சேர்ந்து 12 ஆகும். இது உயிரோடு தொடர்புடையவை. ஆதலால், உயிர் எழுத்து 12க்கும் உயிர் ஒப்புமையாகிறது. அடுத்து மெய் எழுத்து பதினெட்டு. மெய் என்றால் உடல் அதற்கு ஒப்புமையாக அறிவுப்பொறிகள் 5, செயற்பொறிகள் 5, பூதமூலங்கள் 5, மனம், புத்தி, அகங்காரம் 3 ஆகிய பதினெட்டும் உடலுக்கு உரித்தாகிறது. உயிரும் மெய்யும் சேர்ந்தால் 30 எழுத்துகளாகிறது. அதுபோல நம் உடலும் உயிரும் சேர்ந்து 30 தத்துவங்கள் ஆக உள்ளது.
தேவராஜன்

27. வம்சத்தை திளைக்க செய்யும் பித்ரு வழிபாடு தேவராஜன்
இந்தப் பூமியில் பிறந்த மனிதர் யாராக இருந்தாலும் தன் வாழ்நாளில் எதை கடைப்பிடிக்கிறோமோ, இல்லையோ ஆனால் கண்டிப்பாக மூன்று கடமைகளை செய்தே ஆகவேண்டும் என்று இந்து வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அவை தேவயக்ஞம், பித்ருயக்ஞம், பசுயக்ஞம் முதலியனவாகும். இந்த மூன்று கடமைகளை செய்பவர்களே பிறந்ததின் பயனை அடையமுடியும் என்று தர்ம சாஸ்திரங்கள் எடுத்தியம்புகின்றன.
ஸ்தலம், மூர்த்தி, தீர்த்தம் என்று சொல்லப்படும் கோயில், புண்ணிய தீர்த்தங்கள் சென்று கடவுளை வழிபடுவது தேவயக்ஞம் ஆகும். அதாவது வாழ்வில் ஒரு முறையாவது புண்ணியதீர்த்தங்கள், புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டும். காசி, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வரவேண்டும். கங்கை, யமுனை புண்ணிய நதிகளில் நீராடி வரவேண்டும்.
நாம் பெற்றோர் சொற்படி கேட்டு, அவர்கள் மனம் நோகாமல் நடந்துகொண்டு, அவர்களுக்கு பணிவிடைகள் செய்து, காப்பது பிள்ளைகளின் கடமையாகும். இது பெற்றோர்கள் வாழும் போது செய்யப்படவேண்டிய கடமைகள். அடுத்து, அவர்களின் மறைவிற்குப் பின் செய்யப்படும் பூஜைகளை பித்ரு யக்ஞம் என்று கூறப்படுகிறது.
அவரவர் இல்லங்களில் இறந்தவர்களின் படங்களை வைத்து வழிபடும் வழக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இறந்தவர்களும் அவர்களுடைய வம்சத்தை காப்பதாக நம்பிக்கை. இத்தகைய வழிபாடு முறைக்குதான் பித்ரு வழிபாடு.
அடுத்து நம்மை அண்டிபிழைக்கும் மிருகங்களில் சாதுவான விலங்கும், சகல தேவர்களும் குடிகொண்டிருக்கும் பசுவாகிய கோமாதாவுக்குச் செய்யும் பூஜைகளை பசுயக்ஞம் என்கிறோம்.
எவரும் இந்த மூன்று யக்ஞங்களில் பித்ருயக்ஞத்தை (மூதாதையர் வழிபாடு) விட்டு மற்ற எந்த வழிபாடுகளை செய்தாலும், எவ்வளவு தர்மங்கள் செய்தாலும் நம் வழிபட்டதற்கான பலன் முழுமையாக கிட்டாது என்று தர்ம சாஸ்திரங்களில் எழுதிவைக்கப்பட்டுள்ளன.
இருக்கும் போது ஒருவருக்கு உதவுவது, பணிவிடைகள் செய்வதால், அதை பெறுபவர் சந்தோஷப்படுவர். அதை செய்தவர் திருப்தி காண்பர். ஆனால், ஒருவர் இறந்த பின் அவருக்கு தர்ப்பணம், பூஜைகள் செய்வதால் என்ன கிடைத்து விடும் என்று பலர் எண்ணுகின்றனர். ஆனால் இன்று பெற்றோர் இறந்த நாளில் திதி செய்யாமல் அன்று அனாதை ஆசிரமத்துக்குச் சென்று அன்னதானம் செய்து விட்டு, ஏதோ புண்ணியம் செய்து விட்டோம் என்று நினைக்கின்றனர். அனாதைகளுக்கு அன்னதானம் செய்வது புண்ணியம் தான். ஆனால், அந்த புண்ணியத்தால் இறந்தவர்களுக்கு எந்த பலனும் கிட்டுவதில்லை!
பசித்தவர் ஒருவர் இருக்க, பசித்த இன்னொருவருக்கு அன்னமிடுவதால் எப்படி முன்னவர் பசியாற முடியும்? இதை இன்றைய தலைமுறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும். இறந்தவர்களுக்கும், முன்னோர்களுக்கும் சிரத்தையுடன் செய்யப்படும் பூஜையை சிராத்தம் என்று அழைக்கின்றனர்.
சிரார்த்தம் ஏன் செய்யப்பட வேண்டும்?
ஒருவர் இறந்தப் பிறகு, கனனம் (மண்ணில் அடக்கம் செய்தல்), தகனம் (எரியூட்தல்), தியாகம் (புண்ணிய நீர் நிலைகளில் சடலத்தை விடல்) இம் மூன்று காரியங்களுக்குள் ஏதாவது ஒன்றை மந்திர பூர்வமாக மரித்த சரீரத்துக்குச் செய்தால் அந்த ஆத்ம ஜீவனுக்கு தனது ஊழ்வினை மூலம் நேரும் பரலோகப் பிராப்தி ஏற்படும். அதுவும் தானிருந்த கூடான உடலை விட்டுச் செல்ல ஆத்மாவுக்கு பிரியாவிடை தரும்படி சஞ்சயனம், பிண்டதானம் முதலிய காரியங்கள் செய்தால் அந்த ஆத்மா வேறொரு சரீரம் எடுக்க உதவுகிறது.
அது எப்படி என்றால் நாம் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும், பாஸ்போர்ட் கைவசம் இருந்தாலும் நினைத்த மாத்திரத்தில் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட முடியாது. அதற்கு நாம் செல்லும் நாட்டின் அனுமதியான விசா வேண்டும் தானே! அது போல தான் பூமியில் பிறந்து விட்ட ஒரு ஆத்மா, சடலம் உகுத்து தேவலோகம் செல்ல, அந்த ஆத்மாவுக்கு தேவலோக அனுமதிக்கு விசா வேண்டும். அந்த விசா பெறும் முயற்சிதான் சிரார்த்தம்.
அடுத்து சரீரத்தை விட்டு நீங்கிய ஜீவனைக் குறித்து பத்து நாள்கள் செய்யப்படும் பிண்ட தானம், அந்த ஜீவன் அடுத்த சரீரம் எடுக்கும் போது தேவையான உறுப்புகளைப் பெற உதவுகிறது. வீட்டில் ஏதோ ஓரிடத்தில் ஒரு கல்லை வைத்து முதல் நாள் தொடங்கி பத்து நாள் வரை ஒவ்வொரு நாளும் எள்ளு தர்ப்பணமும், பிண்டதானமும் செய்யப்படுகிறது.
நாம் இறந்தவர் குறித்து செய்யப்படும் முதல் நாள் பிண்டதானத்தால் அந்த உயிர் நீத்த ஜீவனுக்கு தலை உண்டாகிறது. 2ம் நாள் பிண்ட தானத்தால் கண்களும், காதுகளும் உண்டாகின்றன. 3ம் நாள் பிண்ட தானத்தால் கைகள், மார்பு, கழுத்து இவை உண்டாகின்றன. 4ம் நாள் பிண்ட தானத்தால் நாபி, குதம், குறி உண்டாகின்றன. 5ம் நாள் பிண்டதானத்தால் தொடை உண்டாகிறது. 6ம் நாள் பிண்ட தானத்தால் தோல் உண்டாகிறது. 7ம் நாள் பிண்டதானத்தால் எல்லா நரம்புகளும் உண்டாகின்றன. 8ம் நாள் பிண்ட தானத்தால் உடம்பிலுள்ள எல்லா ரோமங்களும் உண்டாகின்றன. 9ம் நாள் பிண்ட தானத்தால் வீரியமும், 10ம் நாள் பிண்ட தானத்தால் சரீர திருப்தி உண்டாகிறது.
மேலே சொன்ன சடங்குகளைச் செய்தால் தான் அந்த ஆத்மா சரீரத்தை விட்டதும் மேலோகம் செல்ல அனுமதி கிட்டும். இல்லை என்றால் பூலோகத்திலேயே பேயாய், பிசாசாய் அலையவேண்டி இருக்கும்.
எனவே, ஆண்டுக்கு ஆண்டு அவர்கள் மறைந்த நாளில் அவர்களைக் குறித்து திதி செய்து வரவேண்டும். நம் முன்னோர்கள் அரூபமாய் இருந்து தம் வம்சத்தை கண்காணிக்கின்றனர். வழிநடத்துகின்றனர். மாதந்தோறும் அமாவாசை நாளில் சூக்கும சரீரத்தில் பூவுலகம் வந்து நம்மை பார்க்க வருகின்றனர். வந்தவர்களை வரவேற்று, உபசரித்து, ஆகாரம் கொடுத்து அனுப்பி வைக்கும் செயல் தான் திதி கொடுப்பதன் அர்த்தமாகும்!
நாம் வாழும் வரை வாழ்ந்து சென்றவர்களுக்கு பூஜைகள் செய்தால், சென்றவர்கள் நிம்மதியடைவார்கள். நம்மை எப்போதும் ஆசீர்வதித்துக்கொண்டிருப்பார்கள்!
தேவராஜன்

28. கந்தனுக்கு உகந்த காவடி வழிபாடு தேவராஜன்
நரகாசூரனை கிருஷ்ணன் சம்ஹாரம் செய்த திருநாளை தீபாவளி பண்டிகையாக கொண்டாடி வருகிறோம். தீபாவளிக்கு அடுத்து வரும் திருநாளுக்கு சூரசம்ஹாரம் என்று பெயர். முருகன், சூரன் என்ற அரக்கனை சம்ஹாரம் செய்ததை சூரசம்ஹாரம் என்கிறோம். அந்த சூரன் அழிந்தப் பிறகு, அவனுக்கு குல குருவாக இருந்த இடும்பன் என்பவனின் மூலமாக ஒரு புதிய வழிபாட்டு முறையே உண்டாயிற்று. அது என்னவென்றால் தமிழர்கள் குன்றிருக்கும் இடத்தில் எல்லாம் குமரனாகிய
முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த காவடி எடுக்கும் பழக்கம் தொன்றுதொட்டாக இருந்து வருகிறது. காவடியிலும் பால் காவடி, பன்னீர்காவடி, புஷ்பகாவடி என்று பல இருக்கிறது. இந்த காவடி எடுத்து வழிபடுவதற்குரிய கடவுள் முருகன் மட்டுமே. ஏனைய தெய்வங்களுக்கு பக்தர்கள் காவடி எடுப்பதில்லை. முருகனுக்கு மட்டுமே உரியதாக காவடி வழிபாடு இருக்கிறது. இது பற்றிய அபூர்வமான செய்தி புராண கதை ஒன்றில் இருக்கிறது.
சூரன் முதலிய அசுரர்களுக்கு அஸ்திரவித்தை எனப்படும் வில், பாணம் முதலிய போர்வித்தைகளை கற்றுக்கொடுத்தவன் இடும்பன். அவன் மனைவி இடும்பி.
சூரன் முதலிய அசுரர்களுக்கும் முருகனுக்கும் போர் ஏற்பட்டது. அந்த போரில் சூரனையும் அவன் வம்சத்தையும் அழித்தான் முருககடவுள். சூரனை சம்ஹாரம் செய்ததால்அது சூரசம்ஹாரம் என்றுபெயர். சூரவம்சத்தை முருகன் அழித்தப்பிறகு அஸ்திரவித்தையை இடும்பன் யாருக்கு சொல்லிக்கொடுக்க முடியும்? அவனுக்கு வேலையில்லாமல் போனது. சூரனுக்கும் அவனைச்சேர்ந்த அரக்கர்களுக்கும் அஸ்திர வித்தை கற்றுக்கொடுத்ததால் வந்த பாவம் கழுவ,சதா காலமும் சிவப்பெருமானை நினைத்து தவம் செய்துவந்தான். அவனின் தவத்தை மெச்சி ஈசன் அவனுக்கு காட்சி தந்து, "இடும்பா, உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்!' என்றார். அதற்கு இடும்பன், " குன்றம் எறிந்த குமரனின் அடியனாய் வாழ அருள் புரிய வேண்டும்' என்ற வரத்தைக்கேட்டான்.
சிவனும் இடும்பன் கேட்ட வரத்தை அருளி, "அப்படியே ஆகட்டும்!' என்றார்.
இடும்பன் சிவனை எண்ணி கடுந் தவம் புரிந்த இடம் இடும்பாவனம். இந்த இடம் தற்போது திருவாரூர் முத்துப்பேட்டை ரயில் மார்க்கத்தில் உள்ளது.
சிவகிரி என்பது ஒரு மலைச் சிகரம். சக்திகிரி மற்றொரு மலைச்சிகரம். இந்த இரண்டு சிகரங்களையும் சிவனாகவும் சக்தியாக பாவித்து வழிபாடு செய்தார் அகத்திய முனிவர். இந்நிலையில் இந்த இருசிகரங்களையும் தாமிருக்கும் பொதிகை மலைக்கு எடுத்துச் செல்ல விரும்பினார்.
எப்படி எடுத்துச் செல்வது? அதற்குண்டான உபாயம் எதாவது இருக்கிறதா என்று முருகனிடம் வேண்டினார் அகத்தியர். முருகனும் அதற்கு அருள்புரிந்தார். அகத்தியர் அந்த சிவகிரி, சக்திகிரியை எடுத்துக்கொண்டு வந்தார். வரும் வழியில் திருக்கேதாரத்துக்கு அருகே உள்ள வனத்தில் வைத்து விட்டு அகத்தியர் பொதிகை மலைக்குத் திரும்பிவிட்டார்.
பொதிகைக்கு திரும்பும் வழியில் இடையில் இடும்பனைக்கண்டார். அவர் ஒரு முருக பக்தராச்சே! அகத்தியரை வணங்கினான்." தாங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா?' என்று கேட்டான் இடும்பன்.
அதற்கு அகத்தியர்," திருக்கேதாரத்துக்கு அருகே ஒரு வனத்தில் இருமலைச்சிகரங்களை வைத்துள்ளேன். அவை சாட்சாத் அம்மையும் அப்பனும் உறையும் மலை. அளவற்ற பெருமையை உடைத்தது. அவற்றை நீ பொதிகைக்கு கொண்டு வந்தால், உனக்கு பெருமையும், புகழும் கிடைக்கும்' என்றார். மேலும்," அம்மலைகளை துõக்கி வர சக்தி வேண்டும் அல்லவா? அதற்கு சுப்ரமண்ய மூலமந்திரம்" ஓம் சரவணபவ' சொல்லி வழிபாடு செய்து கொண்டுவந்தால் எளிதாக முருகன் அருளால் அந்த மலைகளை நீ இங்கே கொண்டவந்து விடலாம் என்றும் கூறினார்.
அகத்தியரை வழிபட்டு இடும்பன் மலைகள் இருக்கும் இடத்திற்கு புறப்பட்டான். போகும் வழியில் அகத்தியர் சொன்ன சுப்ரமண்ய மந்திரத்தை சொல்லிக்கொண்டேசென்றான்.
அப்போது வழியில் அஷ்ட நாகங்களும் கயிறுகளாக இடும்பன் அருகே வந்தன. பிரமதண்டம் புஜதண்டமாக வந்தது.
இதைப்பார்த்து ஆச்சரியபட்டான் இடும்பன். அகத்திய முனிவரின் அருளை நினைத்து வியந்தான். உடனே அஷ்ட நாகங்களையும் இரண்டு உறிபோல் செய்தான். இருமலைகளையும் அவற்றில் கட்டி தொங்க விட்டான். பிரமதண்டத்துடன் இணைத்தான். மூல மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே பிரம தண்டத்தை துõக்கி தன் தோள் களில் வைத்து, முழங்காலை மண்ணில் ஊன்றி எழுந்தான்.
தென்திசை நோக்கி பயணப்பட்ட இடம்பன் திருவாவினன்குடியை அடைந்தப்போது காவடியை கீழே இறக்கி வைத்தான். சற்று இளைப்பாறிவிட்டு மீண்டும் காவடியை எடுத்தப்போது எடுக்கமுடியவில்லை.( இன்றும் காவடி எடுப்பவர்கள் கோயிலை அடையும் வரையில் வழியில் எங்கும் காவடியை கீழே வைப்பதில்லை.) அப்போது கந்தன் சிறுவன் போல வந்து இடும்பன் முன் நின்று கைகொட்டிச் சிரித்தான்.
இடும்பன் ஆவேசப்பட்டு அவனைத்தாக்க, சிறுவன் இடும்பனை மாய்த்தான். இந்நிலையில் இடும்பனின் மனைவி முருகனிடம் அழுது, புலம்பி மாங்கல்ய பிச்சைக்கேட்டாள். அவளுக்கிரங்கி மீண்டும் இடும்பனை உயிரெழச்செய்தான் முருகன்.
பின்னர், "இடும்பா, இந்த இருமலைச்சிகரங்கள் இங்கேயே இருக்கட்டும். இந்த மலையில் நான் வாசம் செய்து, உன்னைப்போல என் தந்தை சிவனையும், தாய் சக்தியையும் வழிபட்டு, அவர்கள் அருளை எனக்கு காவடியாக எடுத்து வந்து, என்னை மகிழ்விப்பவர்களை நான் எப்போதும் அருள்பாலிப்பேன்!' என்று முருகன் வரம்கொடுத்தார்.
அதிலிருந்து தான் பக்தர்கள் முருகனுக்கு காவடி எடுத்து வருகிறார்கள். காவடி எடுப்பதின் இன்னொரு நோக்கமும் இருக்கிறது. அது ஞானப்பழத்துக்காக கோபித்துக்கொண்டு ஆண்டியாக கோலம்பூண்டு, அம்மை, அப்பனை பிரிந்து குன்றேறி தன்னந்தனியனாய் இருக்கும் முருகனுக்கு அவனின் தந்தை,தாயான ஈசனையும், ஈஸ்வரியும் காவடி வடிவில் சுமந்து வந்து காட்டுவது அவனை சந்தோஷப்படுத்ததானே! முருகனை சந்தோஷப்படுத்தும் பக்தர்களுக்கு முருகன் பிரதிபலனாக பக்தர்களின் வாழ்க்கை சிறக்க,
உறவு பலப்பட, குடும்ப பிணக்குகள் அகல, ஆயுள்பலம் பெற முருகனை வழிபடுங்கள்.
தேவராஜன்