புதன், 28 ஏப்ரல், 2010

20 . உயிர்திணையும் அஃறிணையும்! தேவராஜன்

18. நாத்திகர் என்று யாரும் இல்லை! தேவராஜன்

கடவுளின் அருளைப் பெற, முக்தியடைய, ஞானம் பெற பல ஆன்மிக மார்க்கங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஞானிமார்களும் தாங்கள் ஏதோ ஒரு மார்க்கத்தை பின்பற்றி முக்திப் பெற்றிருக்கின்றனர். கடவுளின் திருத்தாளை அடைய செல்லும் மார்க்கங்கள், அதற்காக எடுக்கப்படும் முயற்சிகள், அவர்கள் கண்ட அனுபவங்களின் உபதேசங்கள் வெவ்வோறாக இருந்திருக்கின்றன. ஆனால், அது எந்த மார்க்கமாக இருந்தாலும், அது தவறாது நம் ஆன்மாவை கடவுளிடத்தில் சேர்த்துவிடும் என்பது மட்டும் உறுதி.
பூமி தோன்றி எத்தனையோ ஆண்டுகள் உருண்டோடி விட்டன. கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம் என கடந்து இப்போது கலியுகத்தில் நாம் வாழ்கிறோம். ஒவ்வொரு யுகத்திலும் கடவுளையடைய பல வழிமுறைகளில் வழிபாடு செய்துள்ளனர். கிருத யுகத்தில் தவம், தியானம் செய்து கடவுளின் அருளைப் பெற்று இருக்கின்றனர். திரேதாயுகத்தில் வேள்விகள் இயற்றியும், துவாபர யுகத்தில் அர்ச்சனை, மந்திரம் செபித்து கடவுளின் அருளைப் பெற்றிருக்கின்றனர்.
இதெல்லாம் எப்படி அவர்களால் முடிந்தது? அது அவர்கள் வாழ்ந்த யுகத்தின் மகிமை. கலியுகத்திற்கு முந்திய யுகத்தில் வாழ்ந்தவர்களுக்கெல்லாம் ஆயுள் பலம் அதிகம். ஆயிரம், லட்சம் ஆண்டுகள் வாழும் பாக்கியத்தைப் பெற்றிருந்ததால் அவர்களால் ஆண்டாண்டாய் தவமியற்ற முடிந்தது. தன் மேல் புற்று வளரும் அளவுக்கு தவமிருந்திருக்கும் ரிஷிகளைப் பற்றியெல்லாம் புராணங்களில் படித்திருக்கிறோம். கிருதயுகத்தில் வேதம் சொன்னப்படி ஆசார, நியமங்கள் படி வாழ்வதற்கான புறச்சூழலும் நன்றாக அமைந்திருந்தது. திரேதா யுகத்தில் வேள்விக்குண்டான பொருள்கள் எல்லாம் பரிசுத்தமாக கிடைத்தன. ஆதலால், அவர்களால் கடவுளையடைய தவம், தியானம், வேள்வி, மந்திரசெபித்தல் செய்ய முடிந்தது.
இவை எல்லாம் இந்த கலியுகத்தில் இப்படி எல்லாம் செய்பவர்களைக்கூட வேடிக்கைப் பார்க்கக்கூட முடியாது. ஏனென்றால் நாம் வாழும் யுகம் அப்படி இருக்கிறது.
மந்தா: ஸூமந்த மதய: மந்த பாக்யா ஹ் யுபத் ருதா:
பாகண்ட நிரதா: சந்தோ விரக்தா ஸபரிக்ரஹா பாத்ம புராணம் 1:32
இந்த சுலோகத்தின் வழியாக இப்போது நடக்கும் கலியுகத்தைப் பற்றியும், கலியுகத்தில் வாழும் மக்கள் எப்படி இருப்பார்கள் என்பதை அறியலாம். கலியுக மாந்தர்கள் மந்த புத்தி, சோம்பேறிதனம் கொண்டிருப்பார்கள். பாக்யமற்று இருப்பார்கள். உண்மையான வைராக்கியம், எதிலும் உறுதியில்லாமல் இருப்பார்கள் என்கிறது பாத்மபுராணம்.
ஆக, கலியுகத்தில் ஒருவர் ஆன்மிக சாதனைகள் செய்ய ஆசாரம், அனுஷ்டானம், கர்ம யோகம், வைராக்கியம், யோக மார்க்கம், சரணாகதி, நம்பிக்கை இவைகளை எப்படி பின்பற்ற முடியும்?
மேற்கண்ட கடுமையான பல கட்டுபாடுகள், நியமங்கள் இருப்பதால் பலர் நமக்கெல்லாம் ஆன்மிகம் சரிவராது என்று ஒதுங்கிக்கொள்கின்றனர். இன்னும் சிலர் கடவுளை நம்பாத நாத்திகர்களாகிவிட்டனர்.
கடவுளை அடைய மார்க்கம் கடுமையாக இருப்பதால் பக்தி செய்வதை விட்டு விடவா முடியும்? கலியுகத்தில் பெரும்பாலோர் கடவுளிடம் வேண்டிக்கொண்ட மறுநிமிடமே தம் வேண்டுதல் உடனே நடந்து விடவேண்டும் என்று அபிலாசைப் படுகின்றனர். மேலும், பக்தி செய்வதில் எந்த வித கடினமான சாதனைகளும் செய்யாமல் கடவுளை அடைய முடியுமா? என்பது கூடுதல் ஆசை! ஏனென்றால் பூசை, புனஷ்காரம் எல்லாம் செய்ய நேரமில்லை. தியானம் , யோகம் செய்ய உடல் வலிமையோ, மன வலிமையோ இல்லை. திடமான வைராக்கியமும் இல்லை. இப்படி இருப்பதுதான் கலியுக மனிதர்களின் குணம் என்பதும் வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. இப்படி கலியுக மனிதன் இருப்பான் என்பதால், அப்போதே வேதத்தில் அதற்கும் உபாயத்தைச் சொல்லி இருக்கிறது.
ஸாங் கேத்யம் பாரி ஹாஸ்யம் வா
ஸ்தோபம் ஹே லனமேவ வா
வைகுண்ட நாமக்ர ஹணமஷே ஷா க ஹரம் விது ஸ்ரீமத் பாகவத்தில் இடம்பெற்றிருக்கும் இந்தச் சுலோகம் " நீ இறைவனின் நாமத்தை எப்படி வேண்டுமானாலும் சாதாரணமாகவோ, பரிகாசமாகவோ, ஏளனமாகவோ சொன்னாலும் அது தவறாமல் உன்னை இறைவனின் சரணத்திற்கு அழைத்துச் செல்லும். ' என்று வலியுறுத்துகிறது.
ஜாதி, மத, தேச வேறுபாடின்றி எவரும் கால நியமங்கள் இல்லாமல், எப்போதும், எவ்விடத்திலும் இறைவனின் நாமத்தை சொல்லலாம். எவ்வித ஆசார, அனுஷ்டானமும் தேவையில்லை. எந்தவித பொருளோ, விதிமுறையோ, கட்டுப்பாடோ அவசியமில்லை. நம்பிக்கை என்னும் அடிப்படை தேவையும்கூட வேண்டாம்.
கலியுகத்தில் தெரிந்தோ ,தெரியாமலோ; நம்பிக்கையுடனோ, நம்பிக்கை இல்லாமலோ எப்படியோ வாழ்வில் ஒரே ஒரு முறை "ராமா! கிருஷ்ணா! சிவா! சங்கரா! கந்தா! முருகா! விநாயகா!...' என்று இறைவனுடைய நாமத்தை உச்சரித்தாலே போதும். பிறந்த புண்ணியத்தை அடைந்து விடலாம். அப்படிப் பார்த்தால் கலியுகத்தில் எல்லாருமே ஆத்திகர்கள் தான்! நாத்திகர் என்று யாருமே இல்லை!
கலியில் வர்ணம் வண்ணமாச்சு! ஆஸ்ரமம் சோலையாச்சு! இந்த சூழலில் கடவுள் தன்னை நம்புவனுள்ளும் சரி; நம்பாதவனுள்ளும் சரி "மனசாட்சி' என்ற பெயரில் அமர்ந்து கொண்டு வழிநடத்துகிறான்.
நாத்திகம் என்று நீ கடவுளை ஏளனம் செய்யும் போதும், பரிகாசம் செய்யும் போதும், நிந்தனை செய்யும் போதும் தான் அறியாமலேயே கடவுளை நினைப்பதால், அவன் நாமாத்தை உச்சரிப்பதால் எந்த நாத்திகனும் அப்போதே ஆத்திகனாகிவிடுகிறான்.
கலியுகத்தில் ஒரே ஒரு முறை இறைவனின் நாமமான (ராமா, கிருஷ்ணா, சங்கரா, கந்தா, விநாயகா...) என ஏதோ ஒன்றை சொன்னால் போதும். கிருதயுகத்தில் தியானம் செய்து, திரேதாயுகத்தில் வேள்வி செய், துவாபர யுகத்தில் மந்திரம் செபித்து எந்த உயர்நிலையை அடைந்தனரோ, அந்த உன்னத நிலையை இந்த யுகத்தில் ஒரு முறை நாமா சொல்வதினாலேயே அடைந்து விடலாம்! ஆதலால் இந்த யுகத்தில் யாரும் நாத்திகராக இருக்க வாய்பே இல்லை. அப்படியே இருந்தாலும், இந்த கட்டுரை ஒரு முறை படிப்பதன் மூலமே அவரை அறியாமல் இறைவனின் நாமத்தை நினைத்து விடுவதால் ஆத்திகராகி விடுவர்.
தேவராஜன்



20 . உயிர்திணையும் அஃறிணையும்! தேவராஜன்
உலகில் கடவுள் 85 லட்சம் உயிரினங்கள் படைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. கடவுளின் அருள்பார்வையில் எல்லா உயிரினங்களும் ஒன்று தான். எந்த வேறுபாடும் கிடையாது. மனிதனின் பார்வையில் தான் பேதங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது. மனிதன் தன்னை போல சக மனிதர்களிடமே பேதம் கண்டு திரிகிறான். கடவுள் ராஜாங்கத்தில் அனைத்து உ<யிர்களும் சமம். கடவுளை நேசிப்பவர்கள், கடவுளை உணர்ந்தவர்கள் எல்லாம் உலகில் உள்ள சக ஜீவன்களை சமமாகவே பாதிக்கின்றனர்."வாடியப் பயிரை கண்டுபோதெல்லாம் வாடினேன்' என வள்ளலார் வருந்தினாரே, அந்த பரிபக்குவம் கடவுள் உணர்வு நிரம்ப பெற்றவர்களால்தான் இப்படி எல்லாம் சக உயிர்களைக்கண்டு பரிதாப படமுடியும்!
வாழ்வியல் ரீதியாக உலக உயிர்களை இரு வகையாக பிரித்திருக்கிறோம். அவை உயர்திணை, அஃறிணை.ஆறறிவுப் பெற்ற உயிர்கள் எல்லாம் உயர்திணை. அவ்வாறு அல்லாதவை எல்லாம் அஃறிணையாக இலக்கணம் வகுத்துள்ளது. அஃறிணை என்ற சொல்லாவகம்கூட பாராட்டக்கூடியது.
உலக வழக்குப்படி உயர்வு என்றால் தாழ்வு, நன்மை என்றால் தீமை என்று தான் எதிர்பதம் கொள்கிறோம். ஆனால் பாருங்கள் இலக்கணம் வகுத்த தொல்காப்பியன் உயர்திணை என்று சொல்லிவிட்டு அதற்கு எதிர்பதமாக இருப்பது தாழ்வு திணை என்று சொல்லாமல் அஃது அல்லாத திணை அஃறிணை என்று கவுரவப்படுத்தியுள்ளான்.
இதில் இருந்தே அஃறிணைக்கு ஏதோ ஒரு சிறப்பு இருப்பது புலனாகிறது தானே! ஆம்! மனிதர்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு அஃறிணையான உயிரினங்களுக்கு உண்டு என்பதன் சிந்தனைத் தேடல்தான் இந்த கட்டுரையில் சொல் கட்டுமானம்.
மனிதர்கள் ஆறறிவு பெற்றவர்கள். எது நல்லது? எது கெட்டது? என்று பகுத்து உணரும் திறன் பெற்றவர்கள். அது மட்டுமல்ல உயிர் படைப்பில் அரிதான மேன்மையையும் பெற்றவர்கள் ஆவர். பிறவி சுழலில் பாவத்தைவிட, புண்ணியம் சேர்த்த ஆன்மா மனிதப்பிறவி எடுக்கிறது. முன்னம் எடுத்த பிறவியில் அதிகமாக பாவம் செய்த ஆன்மா அஃறிணையாக பிறவி எடுக்கிறது. அஃறிணை என்றால் ஆடு, மாடு, கோழி, ஜந்துக்கள் ஆகும்.
மனிதப்பிறவியில் தான் நல்லது, கெட்டது தெரிகிறது. நல்லவை செய்ய அதற்குண்டான புண்ணியமும், கெட்டது செய்தால் அதற்குண்டான பாவமும் வந்து சேர்கிறது. ஆக, மனிதன் செய்யும் செயலால் விளையும் பாவ, புண்ணியங்கள் எல்லாவற்றிற்கும் மனிதனே பொறுப்பு ஏற்க வேண்டியிருக்கிறது. மனிதப்பிறவி வாய்த்திருப்பதன் பேறு என்னவெனில் முன்னம் செய்த வினையை அனுபவிக்கவும் எடுத்தப் பிறவியில் பாவ செயல்கள் செய்யாது புண்ணியம் தேடிக்கொண்டு பிறவி எடுப்பதை தவிர்த்துக்கொள்ள கொடுக்கப்பட்ட சந்தர்ப்பம் ஆகும். நாம் ஆறறிவைக்கொண்டு, எது பிறவியை தடுக்கவல்ல செயல்கள் என்பதை அறிந்து, கடவுளை பிரார்த்தனை செய்து, கடவுள் ஆணைப்படி நியம, சாஸ்திரங்களை கடைபிடித்து வாழ்ந்து வாழ்வின் இறுதியில் கடவுளின் ராஜாங்கத்தில் தம்மை இணைத்துக்கொள்ளவேண்டும். ஆனால், மனிதப் பிறவி எடுத்ததுமே உயிர் மேல் ஆசை வந்து தொற்றிக்கொள்கிறது. பாசப்பற்று வேறு ஒட்டிக்கொள்கிறது. பொருள் மீதும், பொன் மீதும் இப்படி உலகப் பொருள்கள் மீது ஆசை வந்து படுத்த, புண்ணியம் தேடும் பாதையை மறந்து, பாவத்தைத் தேடிக்கொள்கிறோம்.
ஆனால், அஃ“றிணையான ஆடு, மாடு, கோழி போன்ற விலங்குகளாக பிறவி எடுத்தவை எல்லாம் அவைகள் எடுத்த பிறவியில் புண்ணியம் சேர்த்து கொள்கின்றன. எப்படி எனில், அவைகளுக்கு எது நல்லது, கெட்டது என்பதை பகுத்துணரும் ஆற்றல் இல்லாததால் அவைகள் ஆற்றும் செயல்களால் வரும் விளைவுகளை அவை கொள்வதில்லை! அஃறிணைகளுக்கு மனிதர்களைப்போல பற்று, ஆசை, உயிர் ஆசை எல்லாம் கிடையாது. கடவுள் அருளைப் பெறவும் அவைகளுக்குத் தெரியாது என்பதால், அவைகள் கடவுளைப் புறக்கணித்த குற்றத்திற்கு ஆளாவதில்லை!
மனிதன் இறந்ததும் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நரகமோ, சொர்க்கமோ செல்கிறான். ஆனால், விலங்குகள் எல்லாமே இறந்ததும் சொர்க்கம் மட்டுமே செல்கின்றன. அவைகள் நரகம் புகுவதில்லை. அது மட்டுமல்ல எடுத்த பிறவியில் அவைகள் பாவம் எதையும் தெரிந்தே செய்வதில்லை. அவை வாழும் வரை பற்றற்று இருந்து, முன்னம் செய்த பாவங்களை போக்கிக்கொள்கின்றன. மேலும் பகுத்தறிவு இல்லாத எந்த ஜீவனின் மனதுள் கடவுள் இருந்து அருள்பாலிக்கிறான். இந்த பேறு யாருக்கு வாய்க்கும்?
மனிதப்பிறவி எடுத்து, அல்லற்று பாவம் தேடிக்கொண்டிருப்பதை விட, விலங்குகளாய் பிறப்பு எடுப்பது மேல் தான்! தன்னை மறப்பது தான் மனதின் வேலையாக இருக்க வேண்டும். அது சாதாரண மனிதர்களாகி நமக்கு வாய்க்காது. துறவிகளுக்கும், ஞானிமார்களுக்கும் வேண்டுமானால் அந்த பக்குவம் வரலாம். சிவனேன்னு இருப்பது என்பது விலங்குகளுக்கு வாய்த்த ஒரு பேறாகும். அதுவாய் பிறந்து, அதுவாய் இருந்து, அதுவாய் இறந்து, அது அதுவாய் போய்விடுகின்றன. அதுவாய் இருப்பது பிரம்மம் என்பதால் அவைகள் நேரடியாக பிரம்மத்தோடு சேர்ந்து விடுகின்றன. நாமோ நான் எனும் ஆணவ மலம் கொண்டு, நான் என்று வாழ்ந்து, நான் என்று இறந்து, நான் என்றே எஞ்சிவிடுவதால் மும்மலம் தீராமல் மீண்டும், மீண்டும் பிறப்பெடுக்கிறோம்.
என்னுடை பிரார்த்தனை எல்லாம்"கடவுளே! மீண்டும் பிறவாமை வேண்டும். அவ்வாறு பிறந்து விட்டால் அந்தப் பிறப்பு மனிதப்பிறப்பாக இல்லாமல் அஃறிணையாக இருக்கவேண்டும். ஒரு வேளை அடுத்தப்பிறவியில் ஆடாய், மாடாய், பன்றியாய், நாயாய் பிறந்தால் பாவம் அறியாது, புண்ணியம் மட்டுமே தேடிக்கொண்டு பிறவி சாகரத்தைக் கடக்க அருள்வாயாக!' என்பதாகவே இருக்கிறது.
தேவராஜன்

19. மூன்றுக்குள் முக்தி பெறலாம்! தேவராஜன்

19. மூன்றுக்குள் முக்தி பெறலாம்! தேவராஜன்
சாதாரண மனிதர்களாகிய நமக்கு, பக்தி செய்ய இலக்கணம் எல்லாம் தேவையில்லை! அன்பிருந்தால் போதும். கடவுளிடத்தில் மாறாத நம்பிக்கைக் கொண்டிருந்தால் போதும்.
இதையும் தாண்டி கடவுளிடத்தில் பூரணமான பக்தி பண்ணும் போது, கடவுளை மூன்று நிலைகளில் பாவித்து, பக்தி செய்தோமானால் முக்தி பெறலாம். அந்த மூன்று வகை பக்குவ நிலை கீ÷ ழ சொல்லப்பட்டிருக்கிறது. அதில் நீங்கள் முயன்றால் முக்தி பெறலாம்!
பக்தன் கடவுளிடம் "நான் உன்னுடையவன்' என்று தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்வது. இது முதல் வகை பக்தி நிலையாகும். இந்த உலகைப் படைத்து, உலக உயிர்களைப் படைத்து காப்பது கடவுளின் பொறுப்பு என்று எண்ணிக்கொள்ளும் பக்குவம் ஆகும். அதாவது "மரத்தை வைச்சவன் தண்ணி ஊற்றுவான் என்பதாகும். இந்த நிலையில் இருக்கும் பக்தர்கள் தங்களுடைய வழிபாட்டின் பிரதிபலனாக படைத்தது நீ, காப்பதும் நீ. நான் உனக்கு சொந்தமானவன். உன்னை நம்பினேன்; உன்னடி வீழ்ந்தேன். என்னை எதுவேண்டுமானாலும் செய்து கொள் என்று எண்ணிவிடுவதாகும். இத்தகைய பக்தன் கடவுளிடம் எதையுமே எதிர்பார்க்க மாட்டான். நடந்தது நாராயணன் செயல். நடப்பது ஈசன் செயல் என்று இருந்துவிடுவான். இந்த வகை பக்தியின் அடிப்படை நம்பிக்கை அவனின்றி ஓர் அணும் அசையாது என்பதாகும். இத்தகைய பக்தர்கள் கடவுளுக்கு பிடித்தமானவர்கள். கடவுள் எதிர்பார்த்த பக்குவம் கொண்ட உண்மையான பக்தர்கள்.
"கற்றுõணைக்கட்டி கடலில் போட்டாலும் நற்றுணையாவது நமச்சிவாயமே!' என்றிருந்த திருஞான சம்பந்தர் பக்தி இந்த முதல் நிலையில்தான் ஆரம்பித்தது.

"கடவுள் என்னுடையவர்' என்று பாவித்து வழிபடுவது இரண்டாம் நிலை பக்தியாகும். இந்த வகை பக்தி சக மனிதர்களிடத்தில் காட்டும் அன்பைப் போல, கடவுளிடம் காட்டுவதாகும். எனக்கு மட்டுமே அம்மா, அப்பா என்பது மாதிரியும், தான் நேசிக்கும் பெண் தனக்கு மட்டுமே சொந்தம், தனக்கே உரியவள் என்று நினைப்பது போல, பக்தியிலும் பக்தன் கடவுளை தனக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமையில் கொண்டாடும் பக்குவம் ஆகும். இதில் பக்தன் கடவுளை தன்னுடைய சொந்தம் என்று கருதிவிடுவதால் சாமனிய மனிதர்களைப்போலவே கடவுளையும் கருதி, சுக துக்கங்கள் கடவுளுக்கும் உண்டு என்று எண்ணி விடுகிறான். கடவுளுக்கு பசிக்கும், கடவுளுக்கும் வலிக்கும் என்று எண்ணி வழிபாடு செய்வதாகும். இந்த நிலை பக்திக்கு சிறந்த உதாரண புருஷராக இருந்தவர் கண்ணப்ப நாயனார் ஆவார். கண்ணப்பர் காட்டில் கண்ட ஈசனை தன்னுடை கடவுள் என்றே பாவித்து அவருக்கு சாஸ்திர, சம்பிரதாய, ஆகம விதி எதையும் பின்பற்றாமல் பூஜை செய்து வழிபாடு செய்தவர். கடவுளின் நலன் குறித்து பக்தன் கவலைப்படும் நிலை இந்த வகை பக்தியில் வரும். பக்தனின் இத்தகைய கவலை கடவுளுக்கு ஒரு வேடிக்கை சம்பவமாக இருந்தாலும், பக்தன் தன்னைப்பற்றி இப்படி கவலைபடுகிறானே என எண்ணி அவனது துõய பக்தியை மெச்சி, அவனின் விருப்பத்திற்குக் கட்டுபடுகிறான். தன்னுடைய கடவுள் குளிக்க வேண்டுமே என்று வாயில் தண்ணீர் சுமந்து எச்சில் நீரால் ஈசனுக்கு அபிஷேகம் செய்தான். கடவுளுக்குப் பசிக்குமே என்று பன்றி இறைச்சியை தீயிலிட்டு, அது ருசியாக இருக்கிறதா? பதமாக வெந்து இருக்கிறதா என்று வாயில் போட்டு எச்சில் படுத்தியப் பிறகு அதை ஈசனுக்கு படைத்தான். கடைசியில் ஈசனுக்கு கண்ணில் ரத்தம் கசிந்ததுமே, என் கடவுளுக்கு வலிக்குமே, என் கடவுள் கண்ணில்லாமல் அவதிப்படுவாறே என்று, தன் கண்ணையே பிடிங்கி கடவுளுக்கு கண் கொடுத்தவன் கண்ணப்பன். இப்படி ஒரு பக்குவம், ஞானம் இரண்டாம் நிலை பக்தியாகிய "கடவுள் என்னுடையவர்' என்பதாக வெளிபடுகிறது.
அடுத்ததாக கண்ணபகவானின் சேட்டைகள், வம்பு தும்புகள் பொறுக்க முடியாமல் யசோதா கண்ணணை உரலில் கட்டிப் போட்டதும், கண்ணன் யசோதாவின் கட்டுக்குக் கட்டுப்பட்டுதானே கிடந்தான்? காரணம் கடவுளும் பக்தனின் நம்பிக்கைக்கு கட்டுபடுகிறான் என்பதால்தான்!
"நானே கடவுள்! கடவுளும்நான் ' என்று கடவுளோடு ஒன்றிவிடும் நிலை மூன்றாவது நிலை பக்தி வகையாகும். இந்த நிலை பக்திநிலையில் "மன்னனும் நானே; மக்களும் நானே; மரம், செடி, கொடியும் நானே!' என்று கீதையில் கண்ணன் சொன்னது போல், ஒரு பக்தனும் தானும் கடவுள், தன் முன் இருப்பதெல்லாம் கடவுள் என்று உணரும் பரிபக்குவம் ஆகும்.
இது பக்தியின் இறுதி நிலை என்றுகூட சொல்லலாம். இந்த பக்தி நிலையில் கடவுளைவிட்டு ஒரு கணம்கூட பக்தன் பிரிந்திருக்கப் பிரியப்படமாட்டான். அது அவனால் முடியாத செயலும்கூட. ஏனென்றால் அது அவன் கடவுளோடு ஒன்றிவிட்டதால் ஏற்படும் உறுதி. கடவுளிடமிருந்து தன்னை வேறுபடுத்திப் பார்க்க முடியாத பக்குவநிலை. கடவுளும் தானும் ஒன்று என்றளவுக்கு இறுக்கமான பிணைப்பு அது.
"இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!' என்று மாணிக்க வாசகர் ஈசனை போற்றிப் பாடியதும் மூன்றாம் நிலை பக்தியின் சாரமே ஆகும். இவரையும் விட ஒரு படி மேலே சென்று ஆண்டாளும், மீராவும் கிருஷ்ணனை தன் கணவனாகவே ஏற்று கொண்டவர்கள்.
இந்த மனிதப்பிறவியிலிருந்து எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டேன். பெற வேண்டியவற்றை எல்லாம் பெற்றுவிட்டேன். வேறென்ன வேண்டும்? வேறெதற்கு ஏங்க வேண்டும்? கடவுளிடம் யாசிப்பது போய் தாமே கடவுள் நிலைக்கு உயர்வது என்பது இந்த மூன்றாம் நிலை பக்தியின் உச்சநிலை ஞானமாகும்!
கடவுள் எங்கும் இருக்கிறார் என்பதை ஹிரண்யகசிபுவுக்கும் உலக மக்களுக்கும் உணர்த்த நாராயணன் துõணிலிருந்து நரசிம்மனாக வெளிப்பட்டார். அகோர தோற்றத்தில், பயங்க கோபம் கொப்பளிக்க காட்சி தந்த நாராயணனிடம், பிரகலாதன் கொஞ்சமும் அச்சமின்றி நெருங்கி, நாராயணன் அடிபணிந்தான். இது கண்டு நாராயணன்,"பிரகலாதா, உனக்கு என்ன வேண்டும், கேள்!' என்கிறான். அதற்கு, "எனக்கு எதுவும் வேண்டாம். தாங்களிடம் ஏதேனும் யாசித்துப் பெற்றால் நான் ஒரு வியாபாரி ஆகிவிடுவேன்' என்று கூறி வரமேதும் கேட்கவில்லை. கடவுளின் பாத கமலங்களைவிட ஒரு பக்தனுக்கு என்னவேண்டும்? அதனால் தான் பிரகலாதன் எதுவுமே கேட்கவில்லை. இது சரணாகதி தத்துவம். தன்னையே கடவுளின் ஓர் அங்கமாக எண்ணிவிட்டால், "நான் கடவுள்' என்று என்ற நிலையை எட்டிவிடலாம்!
மேலே சொன்ன மூன்று நிலை பக்தியில் எந்த நிலை பக்தியில் இருந்தாலும் நிச்சயமாக நாம் கடவுளுக்கு பிரியமானவர்களாக ஆகிவிடலாம். பிறந்தப் பிறவிப் பயனையும் அடைந்து விடலாம்!
தேவராஜன்

17. இல்லறமா? துறவறமா? தேவராஜன்

17. இல்லறமா? துறவறமா? தேவராஜன்
இறைவனின் குழந்தைகளான நாம் அனைவரும் நம் மனதை மேம்படுத்தி, எண்ணங்களை வளப்படுத்தி, உயிரை துõய்மைப்படுத்தி, நாம் மீண்டும் இறைவனோடு சேரவேண்டும் என்பது தான் குறிகோளாக இருக்க வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் எவ்வாறு மனதை நல்வழிப்படுத்தி, வாழ்க்கை செம்மையாக வாழ்ந்து கொண்டு, இறைவனோடு இணைவதற்கு இல்லறம் வழியில் செல்வதா? துறவற வழியில் செல்வதா? எவ்வழி சுலபமானது? என்பது தான் எல்லாருக்கும் தேவைப்படும் ஒரு பதிலாகும்.
இல்லறத்திலும் அறம் இருக்கிறது. துறவறத்திலும் அறம் இருக்கிறது. ஆக இருவழியும் சிறந்த வழி என்பதில் மாற்று கருத்து இருக்கப்போவதில்லை. ஆனால், எது சுலபமான வழி என்பதில் தான் கருத்தொற்றுமை இருப்பதில்லை.
நம் முன்னோர்கள் இல்லறம் என்பதை முக்கியமான ஒன்றாகக் கருதினர். இல்லறம் என்றால் என்ன? அதன் பயன் என்ன என்பதைப் பற்றி நன்கு அறிந்திருந்து, அதற்கேற்றவாறு வாழ்ந்தனர். அதனால் தர்மம் செழித்தது. வாழ்க்கை சிறப்பாக இருந்தது.
புதுமணத் தம்பதிகள் முதலில் தம் இல்லத்திலுள்ள பெரியவர்களை மதித்தும், வணங்கியும் அவர்களை அனுசரித்தும், அவர்களுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளைச் செய்து வந்தனர். விருந்தினர்களைப் போற்றியும், அனாதைகள், துறவிகளுக்கு அன்னதானம் அளித்தும் பெரு வாழ்வு வாழ்ந்துவாழ்நாளை கழித்தனர்.
அதனால் தான் பத்தினிப் பெண்கள் "பெய் என்று சொன்னதும் மழை பெய்தது! ஒரு பெரிய தவசியிடம் கூட கொக்கென நினைத்தாயா கொங்கணவா?' கேட்க துணிந்ததற்கு காரணமாக இருந்தது அவர்கள் போற்றி வந்த இல்லற தர்மம்தான்!
இவ்வுலக உயிர்கள் எல்லாவற்றையும் பரம்பொருளாக நேசிக்கவேண்டும் என்பது எல்லாராலும் முடியாத காரியம் என்பதால் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் அவர்கள் சேர்ந்து தமக்குப்பிறக்கும் குழந்தைகளையும், குழந்தைகள் பரஸ்பரம் தாய் தந்தையரிடம் அன்புகாட்டி, உறவு, அண்டை அயலாருக்கு உதவிபுரிந்து, கருணையும், அன்பும் செலுத்தி வாழவேண்டும். இது இல்லற தர்மம் ஆகும்.
எங்கோ பிறந்து, வளர்ந்த ஒரு பெண்ணை மணந்து, அவளிடம் அன்பு செலுத்தி, அரவணைத்து, பிள்ளைகளைப் பெற்று, வளர்த்து, கஷ்ட, நஷ்டங்களை அனுபவித்துக்கொண்டு இதற்கு இடையில் இறைவனை நினைத்து, அவனை அடைய ஆசைக்கொண்டு இருத்தல் என்பது லேசுபட்ட காரியமா, என்ன? இல்லறத்தில் இருப்பதே பெரிய அறம்! ஏனென்றால் தான, தர்மம் செய்ய வேண்டும், அண்டி வந்தோருக்கு உதவி செய்ய வேண்டும். தமக்கு உதவும் வீட்டு விலங்குகளை பராமரிக்க வேண்டும். ஜீவனம் நடத்த உழைக்க வேண்டும். போராட வேண்டும். உழைத்தச் செல்வங்களை தம் குடும்பத்தாருடன், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதையும் தாண்டி
தாம் பெற்ற குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தை முதலில் கற்றுதரவேண்டும். நற்கல்வியை அவர்கள் பெற துணையாக இருக்கவேண்டும். பிறகு, தம் வாரிசுகளுக்குத் தேடிதரவேண்டிய பெரிய சொத்து ஆன்மிகம்! அதை புகட்ட தாம் ஒழுக்க சீலர்களாக, நல்ல பக்திமானாக திகழவேண்டும். இந்த கடமைக்கு இறையருளைச் சேர்ப்பது என்றும் கூறலாம். நாம் பெற்றெடுத்த பிள்ளைகள் இறைவனை அடையும் வழியில் செலுத்திவிட்டால் போதும். நம் வம்சம் படிப்படியாக இறைவனை நோக்கிச் செல்லும் !இத்தகைய ஒருபுண்ணியக்காரியங்களை செய்யத் தொடங்கி விட்டால் ஓர் இல்லறவாசியின் இறை தர்மம் நிறைவு அடைந்து விடும்.
அடுத்து, இளமையில் பொருளைத் தேடி,அதன் மூலம் சகல சுகமும் அனுபவித்து, மத்திம பருவத்தில் மனைவி, மக்களோடு பாசம், அன்பு கொண்டு, முதுமை வந்துற்றதும் பொறுப்புகளை எல்லாம் தம் பிள்ளைகளிடம் ஒப்படைத்து விட்டு, மனைவியோடு ஸ்தலம் , தீர்த்தம், மூர்த்தி என சென்று வந்து, முடிவில் கொஞ்சம் கொஞ்சமாக பந்த பாசங்களிலிருந்து ஒதுங்கி,தாமரை இலை தண்ணீர் போல இல்லறத்தில் இருந்து கொண்டு இறைவனை அடைய சகல வழியிலும் முயற்சி செய்யும் வழியில் இறுதி நாட்களை ஒப்படைத்து விடவேண்டும்.இதுதான் இல்லறத்திலிருந்து கொண்டே இறைவனை அடையும் வழி. இது இன்றைய இல்லறவாசிகளான உங்களுக்கு சாத்தியமா? என்று எண்ணிப்பாருங்கள்! அதை சாத்தியமாக்குவதற்கு முயற்சி செய்யுங்கள்!
இல்லறவாசிகளோடு துறவறவாசிகளை ஒப்பிடும் போது துறவறவாசிகள் சுயநலவாதிகளாகவே இருப்பதாக கருதப்படுகின்றனர். ஏனென்றால் குடும்பம், மனைவி, பிள்ளை என்று எந்த பற்றுதலோ, உறவோ இல்லாமல் இருப்பதால் அவர்களுக்கு பொருள் தேடவேண்டிய அவசியமோ, நிர்பந்தமோ இல்லை. எந்த கஷ்ட, நஷ்டங்கள் இல்லாமல் தவம், தியானம் என இறைமார்க்கத்தில் சென்று இறையருளைப் பெற்று, தான் மட்டுமே நற்கதி அடைந்து விடுவார்கள். சில துறவிகள் ஆசிரமம், மடம் அமைத்து தன்னுடைய சீடர்களை இறைவழியில் கடையேற்றி விடுவர். இன்னும் சில துறவிகள் ரொம்பவும் மேலானவர்கள். அவர்கள் தாம் பெற்ற ஞானத்தை, இறை அனுபவத்தை தம் சீடர்களுக்கும், பொதுமக்களும் போதித்து எல்லாரையும் இறை அருளைப் பெற உதவுவார்கள். இவர்கள் உலகத்தை வீடாகவும், மக்களை தம் குழந்தைகளாகவும் பேணுவர்.
துறவறம் கொள்வது என்பதும் லேசுபட்ட விஷயம் அல்ல. அது இல்லறவாசிகளை விட அநேக கஷ்டங்களைக்கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. ஏனென்றால், துறவிகளுக்கு விதிக்கப்பட்ட அனுஷ்டானங்கள் மிகவும் கடுமையானவை. அவர்களுக்கு மனக்கட்டுபாட்டிலிருந்து உணவு கட்டுபாடுவரை உண்டு. ஒழுக்கம் முதலான பிரம்மச்சாரியங்களை கடைபிடிக்கவேண்டும். மழையோ, குளிரோ, வெயிலோ, புயலோ எல்லாவற்றையும் சமநிலையில் நோக்கும் மனபக்குவம் கொண்டிருக்க வேண்டும். உடல்வருத்திக் கொள்ள வேண்டும். இடைவிடாது வழிபாடு செய்ய வேண்டும். மந்திரங்கள், ஜெபங்கள் அனுதினமும் செய்ய வேண்டும். உலகத்தோர் பாவங்களை ஏற்றுகொண்டு அதை தம் தவ வலிமையால் போக்க வேண்டும்.
தானும், இந்த வையகமும் உய்ய தவம் செய்ய வேண்டும். சுயநலம் அறுத்து பொது நலம் காண வேண்டும்.
ஆக, இல்லறவழி, துறவழி எது சுலபமானது, உயர்வானது என்றால், அது இல்லற வழி தான்! இல்லறவாசி தான் இன்ப துன்பங்களுக்கும், ஆயிரம் பிரச்னைகளுக்கும் இடையே இருந்து கொண்டு மனைவி, பிள்ளைகளை காக்கும் கடமையும் கொண்டு, தானும் இறைவனை நாடி, தம் மனைவி, மக்களையும் இறைவனை நோக்கிச் செல்ல தயார்படுத்தும் இல்லறவாசியே இறைவனுக்குப் பிரியமானவனாக இருப்பான்!
தேவராஜன்

16. கனவில் பிறந்த ஞானம் ! தேவராஜன்

16. கனவில் பிறந்த ஞானம் ! தேவராஜன்

போதிமரத்தில் புத்தனுக்கு ஞானம் பிறந்தது! அப்போது அவரின் சுயதேடலின் வழியாக பெற்ற அறிவாக வெளிப்பட்டது தான்"ஆசையே துன்பத்திற்கு காரணம்' என்பது.
பணப்பெட்டியிலிருந்து பட்டினத்தாருக்கு திடீரென்று ஞானம் பிறந்தது! அவரின் உள்முக தேடலின் காரணமாக "காதறுந்த ஊசியும் வராதுகாண் கடை வழிக்கே' என்றார்.
இப்படி பலர் தன்னை அறிந்து, தன் அறிவில் தெளிந்து, வாழ்வில் எல்லாரும் உய்யும் பொருட்டு தானறிந்து மெய்யுணர்வை உலகோருக்குப் புகட்டிச் சென்ற ஞானிகளை கொண்ட பாரத திருநாட்டை ஞான பூமி என்கின்றனர்.
நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை அல்லது இயற்கையாகவே அமைந்த வாழ்க்கை ஒன்றிருந்தது.அந்த வாழ்க்கையில் சந்தோஷமிருந்தது; அமைதி இருந்தது; நிறைவு இருந்தது; ஆரோக்கியம் இருந்தது. அப்படியான இனிமையான வாழ்க்கையை நாம் தெரிந்தே தொலைத்து விட்டோம்!
நம்மில் எல்லாருமே நமக்கான வாழ்க்கையை யாருமே வாழ்ந்துக்கொண்டிருக்கவில்லை. நமக்குப் பிடித்த அல்லது ஆசைப்பட்ட வாழ்க்கையையும் யாரும் சுகமாக வாழ்ந்துக்கொண்டிருக்க வில்லை. இந்த உண்மை யாருக்குத்தான் தெரியாது? நாம் நினைத்தப்படி எதுவும் நடப்பதில்லை! நடந்த பல விஷயங்கள் நாம் நினைத்ததுமில்லை!அப்படி இருந்தும் எதற்காக செயற்கையான, நமக்கு பிடிக்காத ஏன் இந்தவாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்?
இப்படியான சிந்தனைகளோடு ஓர் இரவு துõக்கத்தில் இருந்தேன். சிந்தனைகள் கனவுகளோடு சேர்ந்து அதற்கான தேடலில் தோய்ந்திருந்தது. முடிவில் கனவு புரிந்தும் புரியாமலிருக்கும் ஞானத்தை விட்டுச் சென்றது. கனவோடு வந்ததை கடை விரிக்கிறேன். கொள்வோர் கொள்க.
மனித ஜாதியில் துயரம் யாவும் மாயை! எல்லாம் கண்கட்டி வித்தை! அக்கரைக்கு இக்கரைமீது கொண்ட மோகம் போல நம் வாழ்வில் ஒரு போர்வைப் போல மூடிக்கொண்டு, ஆட்டம் காண்பிக்கிறது மாய மாயை! அந்த மாயை எது?
அது "யாரோடும் உன்னை ஒப்பிட்டுக்கொள்ளதே! உனக்கு நிகர் சமானம் நீ மட்டுமே என்பதை உணர்ந்து,நீ நீயாகவே இரு. உனக்கமைந்த வாழ்க்கையை வாழு! உன்னை அறி; அறிந்ததும் அந்நெறி தொழு!'இதை யார் பின்பற்றினாலும் அந்த மாயைபிடியிலிருந்து நழுவிக்கொள்ளலாம்!
மனிதர்களுக்குள் ஏற்பட்ட ஒப்பீட்டு குணமும், பிறரைப்போல தாமும் இருக்க வேண்டும் என்ற ஆசையில் போல செய்தல் மோகத்தால்,
அவரைப்போல இருக்க வேண்டும். இவரைப்போல வீடுகட்டவேண்டும். அவர் அதைப் படித்தார். நாமும் அதைப் படிக்கவேண்டும். இப்படி அடுத்தவரைப் பார்த்து, பார்த்து அவர்களின் ஜெராக்ஸ் ஆக நாம் மாறி,நம்முடைய நகல்களை இழந்து, நமக்கான விருப்பங்களை, தேவைகளை விட்டு, அடுத்தவர் கனவுகளை, லட்சியங்களை , ஆசைகளை சுமந்து கொண்டு, பிறர் சென்ற பாதையில் சென்று பிறரின் வாழ்க்கையை நம் வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருந்தால் எப்படி நிம்மதி கிடைக்கும்? எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்? எப்படி வாழ்ந்த திருப்தி கிடைக்கும்?
இந்த இடத்தில் உங்களுக்கு கொஞ்சம் குழப்பமோ, சந்தேகமோ வரலாம். ஏனென்றால் நீங்கள் பெரும் பொருளீட்டுவதே வாழ்வின் பொருள் என்று பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள்!
பிறரைப்போல தானும் இருக்க வேண்டும். அவரைப் போல நாமும் உயர் கல்வி எல்லாம் படிக்க வேண்டும். அடுத்தவர் போல நிறைய சம்பாதிக்க வேண்டும் இதில் என்ன தவறு இருக்கிறது என்று உங்கள் மனசு கேட்கும்!
உண்மையில் புற உலகில் இருக்கும் அறிவு,செல்வம், பொருள், புகழ் , மரியாதை எல்லாம் நீங்கள் தேடிபோக வேண்டியதில்லை. அவைகள் உங்களைத் தேடி தான் வரவேண்டும். பிறரை காப்பியடிக்கும் உங்களுக்குள் எத்தனை சக்தி இருக்கின்றது தெரியுமா? அதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? உங்களில் இருக்கும் ஆன்மா எத்தனையோ பிறவி எடுத்து எத்தனையோ திறமைகளை, கலைகளை, அனுபவங்களை பெற்றிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? முன்னம் எடுத்த ஜென்ம வாசனையை அறிய நீங்கள் நீங்களாக, சுயமாக இருந்தால் தான் அவற்றை அறிந்து, வெளிகொணரமுடியும்! அந்த ஜென்ம வாசனை பெட்டகத்தின் சாவியை கடவுளிடம் இருக்கிறது. அதை கேட்டு வாங்கிக்கொள்ளும் சூட்சமம் புரிந்தால் உங்களை விட உயர்வானவர், சிறந்தவர் எவருமே இவ்வுலகில் இருக்க முடியாது. ஆனால், உங்களை பற்றி தெரியாமலே, அடுத்தவர் போலவே ஒப்பனை செய்து கொண்டால் எப்படி?
நமக்கென ஒருஅருமையான வாழ்க்கையைக்கொடுத்து, இப்படி தான் வாழவேண்டும், இன்னன்னகாலத்தில் இன்னன்னது நடக்கும் என கடவுள் வகுத்து கொடுத்த வாழ்க்கையை நாம் சகித்துக்கொண்டுதான் வாழ வேண்டும்!
அவரவர் வாழ்க்கை என்பது அவரவர் இஷ்டப்படி வாழ்ந்து போவதற்கு அல்ல. கடவுள் கொடுத்த இந்த வாழ்க்கை அவர் விதித்த விதிப்படி, அவர் இஷ்டப்பட்டபடிதான் வாழ வேண்டும். முன்னம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப, இப்பிறப்பை அனுபவிக்க வேண்டும்.
ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையும் தனி தனிதான்! ஒருத்தரைப்போல இன்னொருத்தர் வாழ்க்கை முறை இருக்கலாகாது. உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவனும் அவரவர்களுக்குண்டான கடமைகளை கழிக்கவே பிறந்திருக்கிறார்கள். அம்மா, அப்பா, அண்ணன், தம்பி,சொந்தம், பந்தம், நண்பர்கள் எல்லாம் மாயை. அந்த உறவு வட்டத்தில் இருந்து வெளிவரவேண்டும். நாம் நாமாக மட்டுமே இருக்க வேண்டும். இப்பிறப்பில் உனக்கு இவர்கள் அம்மா, அப்பா என்றால், நீ எடுத்த ஒவ்வொரு பிறப்பிற்கு எத்தனை அம்மாக்கள், அப்பாக்கள், சகோதர, சகோதரிகள், மனைவிகள் இருக்க வேண்டும்? அப்படி பார்த்தால் உன்னுடைய அம்மாக்கள், அப்பாக்கள் எத்தனையோ பேர் இந்த மண்ணில் மீண்டும் பிறந்திருக்கலாமே! எல்லோரையும் நீ கண்டு பிடித்து பந்தம் பாராட்ட முடியுமா?ஆகையால் உடலுக்குண்டான பந்தத்தை அறுத்து, ஆத்மாவுக்கு எந்த ஜென்மத்திலும் உற்ற உறவான கடவுளை மட்டுமே தேட வேண்டும்; சரணடைய வேண்டும்.
அடுத்தபடியாக மண்ணில் ஜனித்த சகல ஜீவன்களையும் தம்முடைய பிம்பமாகவே கருதவேண்டும். இப்படி மெய்மை உணர்ந்து, நான் யார்? என் வாழ்க்கை எது? என்று
வாழ்ந்து வந்தால், நாம் துன்பப்படும் போது கடவுள் அருள்கரம் கொடுப்பான். நாமோ செயற்கையான, அடுத்தவரிடம் காப்பியடித்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! நாமே அமைத்துக்கொண்ட வாழ்க்கையில் கஷ்டமோ, நஷ்டமோ எது வந்தாலும் நாம் தானே பொறுப்பேற்க வேண்டும்? அதான் நீயே முடிவு செய்த வாழ்க்கையில் வரும் விளைவுகளை நீயே சமாளித்துக்கொள் என்று கடவுளும் கை விட்டுவிடுகிறானோ? அதனால்தான் நாட்டில் இத்தனை துன்பங்களும், துயரங்களும் மலிந்துகிடக்கின்றனவா?
நான் நானாக இருக்கிறேன். நீ நீயாக இரு. அவர்கள் அவர்களாக இருக்கட்டும். அவ்வாறு இருந்தால், உங்களுக்கு நிச்சயமாக இயற்கையாலோ, கடவுளாலோ சஞ்சலமோ துயரமோ வராது. அவ்வாறு வந்தாலும், அதை போக்குவதற்கான பக்குவம், மனஉறுதி நிச்சயம் கடவுள் கொடுப்பார். ஆனால், நான் நீயாக, நீ நானாக, அவனைப்போல, இவனைப்போல வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளும் போது தான் தொல்லைகளும், துயரங்களும், போட்டிகளும், பொறாமைகளும் வந்து தொலைக்கின்றன.
ஆதலால், நாம் நாமா இருப்பது; யாரோடும் ஒப்பீடின்றி வாழ்வது; நிகழ்காலத்தில் வசிப்பது என்ற கனவில் வந்த ஞானம் புரிந்து, வாழ்ந்தால்வாழும் போதே நமக்கு நிம்மியை, ஆனந்தத்தைத் தருவதோடு, அதுவே கடவுளை நோக்கிச் செல்ல பாதையும் அமைத்து தரும்!
தேவராஜன்

15. அப்படியா,இப்படியா, எப்படி? தேவராஜன்

15. அப்படியா,இப்படியா, எப்படி? தேவராஜன்
"அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்று மானிடப்பிறப்பின் மகத்துவத்தை சிலாகித்து சொன்னவர், அவ்வையார்.
மானிடப்பிறவி வாய்த்திருப்பது என்பது நாம் கிடைத்தற்கரிய பிறவியாகும்! இப்பிறவி எடுத்திருக்கும் நாம் கடவுள் வகுத்து தந்த பாதையில், சரியான நெறியில் வாழ்ந்தோமானால், நாம் நிச்சயமாக கடவுளை அடையலாம்! ஏன், நாமே தெய்வமும் ஆகலாம்!
ஏனைய பிறவிகளைக்காட்டிலும் மானிடப்பிறவிக்குதான் அனேக சுதந்திரங்கள் உள்ளன. எது சரி, எது தவறு? நாம் பிறந்ததன் லட்சியம் என்ன? வாழ்வின் பொருளென்ன போன்றவற்றை அறியும் அறிவையும், எப்படி வாழவேண்டும்? எப்படி வாழக்கூடாது என்று பகுத்தறியும் சக்தியும் மானிடப்பிறப்புக்குத்தான் பிரத்யேகமாக அமைந்திருக்கிறது! நம் கண் எதிரே மாறுபட்ட இருவேறு பாதைகள் இருக்கின்றன. அப்பாதைகளில் சென்றால் விளையும் பலன்களும், இரு வேறு பாதைகளில் சென்றால் சேரும் இடங்களான சொர்க்கம், நரகம் குறிப்பால் உணர்த்தப்பட்டுள்ளன.
இதில் நம் சுயபுத்தியைக்கொண்டு எப்பாதையில், எப்படி செல்கிறோம் என்பதை கடவுள் மேலிருந்து கண்காணிக்கின்றான்! கொஞ்சம் புத்தி தடுமாறும் போது, ஏதோ ஒரு வழியில் எச்சரிக்கை செய்கிறான். அதை குறிப்பால் உணர்ந்து சுதாரித்துக்கொண்டால் கிடைக்கும் மோட்ஷம். கேட்காவிட்டால் நாம் அடைவோம் மோசம்!
கடவுளின் படைப்பில் மனிதப்பிறவி மட்டும் மிகவும் மேன்மை பொருந்தியது.
கடவுள் படைப்பில் எல்லாம் ஒழுங்கும், நேர்த்தியும் கொண்டிருக்கும். அவை ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளதாகவே இருக்கும். கடவுளின் படைப்பில் மனிதப்பிறவி என்பது துலாக்கோல் போல மத்தியமானது. எப்படி எனில், மனிதபடைப்பிற்கு மேல் படிகள். மனிதப்படைப்பிற்கு கீழ் படிகள் என சீராக அமைந்திருக்கின்றன. மேல்படியில் மனிதர்களைக்காட்டிலும் மேம்பட்டவர்கள் பித்ருக்கள். பித்ருக்களைக்காட்டிலும் உயர்ந்தவர்கள் பூத, பேத, பிரேத, பிசாசுகள். இவை தீய சக்திகளாக இருந்தாலும், மிகவும் பலம் கொண்டவைகள். இவைகளைக்காட்டிலும் சிறப்பானவர்கள் யஷர்கள், கின்னர்கள், சித்தர்கள்,சாரணர்கள். இவர்களைவிட உன்னதமானவர்கள் முப்பத்து முக்கோடி தேவர்கள். முப்பத்து முக்கோடி தேவர்களைக்காட்டிலும் மேலானவர்கள் பிரம்மா போன்ற தேவதைகள். இவர்களுக்கும் மேம்பட்டு மிக உயர்ந்த நிலையில் எட்டா இடத்தில் பரிபூர்ணமாக விளங்ககூடியவர் பரம்பொருளாகிய கடவுள்!
இது மனிதப்பிறவி படியில் இருந்து மேல் செல்லும் அப்படிகள்...
அடுத்ததாக, மனிதப்பிறவியிலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் படிநிலைகள் இப்படிகள் எவை எனில், அறிவில் குறைந்த யானை, சிங்கம், புலி போன்ற விலங்குகள் அறிவில் குறைந்து காணப்பட்டாலும் மனிதர்களை விட பலத்தால் உயர்ந்தவைகள். யானை, புலி, சிங்கம் இவைகளுக்கு கீழே உள்ளவை மாடு, ஒட்டகம், மான், குதிரை போன்றவை. அவற்றுக்கும் கீழே இருப்பவை ஆடு, பன்றி, கோழி, முயல் போன்றவை. அவற்றுக்கும் கீழே உள்ளவை பறவைகள். கடைநிலையாக இருப்பவை புழு முதற்கொண்டு எத்தனையோ கண்ணுக்குத் தெரியாத கிருமிகள்.
மேலே சொன்ன மனிதனிலிருந்து மேம்பட்டவைகளான அப்படிநிலைகளும், மனிதனிலிருந்து கீழ்பட்டவைகளான இப்படி நிலைகளுக்கும் இடையில் இருப்பது நாம் எடுத்திருக்கும் மனிதப்பிறவி!
மனிதப்பிறவியிலிருந்து நாம் மேல் நோக்கியும் செல்லலாம்; கீழ் நோக்கியும் செல்லலாம். ஆரம்ப புள்ளியாக மனிதப்பிறவி எடுத்திருக்கிறோம். கடவுள் நமக்கு இரண்டு வாய்ப்புகளைக் கொடுத்திருக்கிறார். நாம் மேலே செல்லும் அப்படியில் செல்கிறோமா? கீழே செல்லும் இப்படியில் செல்கிறோமா என்பதை பொருத்திருக்கிறது கடவுளுக்கும் நமக்குமான தொடர்பு. கடவுள் இருகரம் நீட்டி தான் படைத்த மனித ஆன்மாவைவரவேற்று, வாரியணைத்து, தடுத்தாட்கொள்ள ஆசையோடு காத்திருக்கிறார்.
மனிதனாகப் பிறந்த நாம் சாத்திர, சம்பிரதாய நியதிகளுக்கு உட்பட்டு, வேத வழிகொள்கைகளுக்கு உடன்பட்டு உலகியல் வாழ்க்கையை நடத்த வேண்டும். பிறந்ததன் நோக்கம் அறிந்து, பாவ, புண்ணிய செயல்கள் எவை, எவை என்பதை பகுத்துணர்ந்து, அன்பு, கருணை, இரக்கம், தர்மம் போன்ற மனித குணங்களை முழுவதுமாக வாழ்க்கையில் கடைப்பிடித்து, தாமரை இலைமேல் தண்ணியாக ஒட்டியும் ஒட்டாமலும் இருந்து, எப்போதும் படைத்த கடவுளை மறவாது நினைத்து, எல்லாம் வல்ல கடவுளை நம்பி, அவனை இறுதியில் சரணடையும் மார்க்கம் எதுவென அறிந்து, ஞானிமார்களும், சித்தர்களும், குருமார்களும் காட்டிய செவ்வழியில் சென்றால், நாம் இப்பிறவியின் முடிவில் தேவர்களும் ஆகலாம்! தெய்வமும் ஆகலாம்!
ஆனால், கடவுள் வகுத்த பாதையிலிருந்து விலகி, வாழ்க்கை கோட்பாட்டிற்கு புறம்பாக நாம் வாழ்க்கை நடத்தினால், பாவம், சூது, கொலை, பொய், புரட்டு என இழி குணங்களை கொண்டிருந்தால், நமக்கு கீழான விலங்குகள், பறவைகள், ஜந்துகளாக பிறவி எடுக்கக்கூடும். அப்படி கீழான பிறவி எடுத்து விட்டால், மீண்டும் மனிதப்பிறவி எடுப்பதற்கு பல யுகங்களாகும். சொல்லொண்ணா துயர் பட வேண்டியிருக்கும். ஆதலால், அப்படியா? இப்படியா?
எப்படி வாழவேண்டும் என்பது நம் கையில் தான் இருக்கிறது. நீங்கள் கடவுளை அடைய வேண்டும் என்று ஆசைப்படுவதைவிட, கடவுள் உங்களை அணைத்துக்கொள்ள ஆசைப்படும்படி நீங்கள் வாழவேண்டும்! கீழான பிறவி எடுக்க வைத்திடும் இழிகுணங்களை எல்லாம் தவிர்த்து, ஒழுக்கத்தோடு, உண்மையாய், கடவுள் சிந்தனையில் வந்தப் பிறவியை அனுபவித்துக்கொண்டிருக்க வேண்டும்.
கடவுள் ஒருவனுக்கு அருள்புரியும் பொழுது, ஒருவனுடைய மதத்தையோ, ஜாதியையோ,கல்வித்தகுதியையோ, செல்வசெழிப்பையோ பார்ப்பதில்லை! யார் எந்த நிலையில் இருந்தாலும், யார் கடவுளுடைய அருள் வேண்டும்; அது கிட்டவேண்டும் என்று நினைந்து, நினைந்து கசிந்துருகி பிரார்த்திக்கின்றார்களோ,அவர்களுக்கு கடவுள் நிச்சயமாக அருள்புரிகிறான்.
தேவராஜன்

14. ஐந்துக்குள் எல்லாம் ஐக்கியம்! தேவராஜன்

14. ஐந்துக்குள் எல்லாம் ஐக்கியம்! தேவராஜன்
இந்த பேரண்டம் ஆகிய உலகம் அணுக்களால் ஆனது. இந்த உலமும் அதில் காணப்படும் ஒவ்வொரு பொருளும் அணுக்களால் ஆனவை. இந்த ஒவ்வொரு அணு துகள்களில் கடவுள் ராஜாங்கம் நடத்துகிறான். ஏழ் உலகத்தில் அடர்ந்திருக்கும் அணு கூட்டங்களை ஒன்று தொகுத்தால் கடவுளின் முப்பரிமாண வடிவத்தை உணரலாம். நாம் காணும் எந்த உயிரிலும் சரி, ஜடப்பொருளிலும் சரி கடவுள் நீக்கமற உறைந்திருக்கிறான். அதை உணர ஊனக்கண்ளை மூடி, ஞானக்கண்ணால் பார்த்தால் புரியும்!
"தெய்வம் மனுஷ ரூபம்' என்பது கூட கடவுளின் பிம்பம் அல்லது கடவுள் கட்டமைப்பான அணு நம் ஒவ்வொரிடமும் இருப்பதால் தான் அப்படி சொல்லப்பட்டிருக்கிறது.
நாதமும் நாமும் ஒன்றானவன் ஈஸ்வரன். நாத வட்டத்தில் தான் இந்த அண்டம் மிதந்துக் கொண்டிருக்கிறது. இந்த உலகம் ஒலிமயம். அந்த ஒலியும் ஓங்காரத்தின் மூலத்தில் இருந்து தான் எங்கும் வியாப்பித்திருக்கிறது.
நாதன் நாமம் "நமசிவாய' ஐந்தெழுத்து. இந்த ஐந்துக்குள் ஐம்பூதங்கள் அடக்கம். அந்த ஐம்பூதங்களுக்குள் எல்லாம் ஐக்கியம்! எப்படி என்பதை சுருக்கமாக அறியலாம்!
மனித ஜென்மம் எடுக்கும் எந்த உயிரும் பிறந்த முதல் மாதத்திலிருந்து பிண்டத்துக்கும் அண்டத்துக்கும் ஆன தொடர்பை புதுப்பித்துக்கொள்கிறது.
எப்படி எனில், ஆகாயம் தன்னுடைய தன்மையான சப்தத்தை, கேட்கும் உணர்ச்சியாக குழந்தையின் கேட்கும் உறுப்பான செவிக்கு அளித்து வளரச்செய்கிறது. மேலும் குழந்தை தன் கை கால்களை அசைத்துக்கொள்வதும் ஆகாயத்தின் தன்மையே! இது ஐந்தின் முதல் படி!
அடுத்தது காற்றாகிய வாயு, உடலில் சுவாசிக்கும் உறுப்புகளை நன்கு இயங்குச் செய்து மூச்சு விட வைக்கிறது. இதனால் சுவாசம் நடைபெறுகிறது. சுவாசத்தால் உயிர்ப்பு உடலில் நிலைகொண்டு தான் வாழும் கூடான உடல் கொண்டகுழந்தையை புரண்டு படுக்கவும், எழவும், தவழவும் உதவுகிறது. இது ஐந்தின் இரண்டாம்படி.
அக்னி எனப்படும் உஷ்ணம் பித்த கோசத்தை நன்கு இயங்கச் செய்வதோடு, குழந்தையின் தோலுக்கு அழகிய நிறத்தையும் தந்து, வயிற்றிலே ஜீரண உறுப்புகளையும் நன்கு செயல்பட வைக்கிறது. உடம்புக்கு தேவையான சூட்டை தந்து, உயிரை ஒரு நீள்வட்ட சுழல் பாதையில் சுழல வைக்கிறது. இது ஐந்தின் மூன்றாம்படி!
நீர் இது குழந்தையின் உடம்பு பையில் முக்கால் விழுக்காடு நிரம்பியிருந்து, சுவையையும் ரத்தத்தையும் தந்து உடலில் உள்ள கழிவுப் பொருட்களை வியர்வையாக , சிறுநீராகவும் வெளிப்படுத்துகிறது. இது ஐந்தின் நான்காம் படி!
பூ வுக்கு மட்டுமல்ல;பூமிக்கும் வாசம் உண்டு. அதை மண் வாசனை என்றழைக்கிறோம். அந்த வாசனையை பூமி தன்னுடையசீதனமாக முகரும் உணர்ச்சியைத் தந்து மூக்கோடு பாலம் அமைத்துக்கொள்கிறது. அத்தோடு நகங்கள், மயிர் முதலான வைவளர்வதற்கும் உதவி செய்கிறது. குழந்தையின் உடல் கனத்துக்கும் பூமியே ஆதாரமாக இருக்கிறது.பூமியில் தான் பொருள்கள் எடையை பெறும். மற்ற கோள்களில் எந்தப் பொருளும் எடையிழக்கும். இது ஐந்தாம் படி!
ஆக, ஒருவனுடைய உடல், பஞ்சபூதங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயத்தால் உண்டாக்கப்பட்டு அவற்றின் தன்மையாலேயே வளர்கிறது என்பதை ஒருவாறாக நாம் அறியமுடிகிறது.
இந்த ஐந்தெழுத்தே ஐம்பூதங்களாக விசாலமாகி பரந்து பட்டு உலகை சூழ்ந்திருக்கிறது. இதில் ஏதேனும் ஒன்று குறைந்தாலும் நாம் வாழமுடியாது.
ஒருவனுடைய உடல் வளர்வதற்கும், உயிர் நீடிப்பதற்கும், இயக்க சக்தி கிடைப்பதற்கும் உணவு முக்கியமானதாக இருக்கிறது. இந்த உணவு வகையும் அறு சுவைகளாக இருக்கிறது. இந்த ஆறு சுவையும்கூட ஐம்பூதங்களோடு அடங்கி விடுகின்றன.
இனிப்பு இது பூமி மற்றும் நீரையும்; கசப்பு வாயு மற்றும் ஆகாயத்தையும்; புளிப்பு நெருப்பு மற்றும் பூமியையும்; உப்பு நீர் மற்றும் நெருப்பையும்; காரம் நெருப்பு மற்றும் வாயுவையும்; துவர்ப்பு பூமி மற்றும் வாயுவையும் ஆதாரமாக கொண்டுள்ளன.
இப்படி ஐந்து பூதங்களை தன்னகத்தே கொண்ட உணவை நாம் சாப்பிடும் போது அவற்றுக்குண்டான மூன்று குணங்கள் உருவாகின்றன. அவை தாமஸ குணம், ராஜச குணம், சாத்வீக குணம்.
தாமஸ குணத்தால் மோகம், கோபம், பயம், சந்தோஷம், பாபம் செய்ய துõண்டல், அறியாமை, சோம்பேறித்தனம், தாகம், பசி, கர்வம், துக்கம் இவை உண்டாகின்றன.
விருப்பம், வீரம், யாகம் முதலிய கர்மாக்கள் செய்வதில் ஆர்வம், தற்புகழ்ச்சி, அலட்சியம் ஆகியவை ஏற்படுகின்றன.
நல்லதையே செய்யும் எண்ணம், உறுதி, அகல பந்தங்களிலிருந்து விடுபட்டு பிறவாப் பேரின்பத்தை அடைவதில் ஆசை, கடவுளிடம் அந்தியந்த பக்தி, இரக்கம், ஒரே லட்சியம் இவை சாத்வீக குணத்தால் உண்டாகின்றன.
நம்மை படைத்த "நமசிவாய' எனும் கடவுள் சக்தி, ஐம்பூதங்களாக எளிமையாகி, அந்த ஐம் பூதங்களும் மேலும் எளிமையாகி நம்முள் எளியோனாய் ஈசனாகி நீக்கமற நிறைந்திருக்கிறான். நம்முள் நிறைந்திருக்கும் ஐந்தெழுத்துக்கு உரியவனான ஈஸ்வரனை அணுக, உணர ஒன்றே ஒன்று செய்தால் போதும். அது ஐந்தெழுத்தான "நமசிவாய' இதை கணந்தோறும் நினைத்துக்கொண்டிருந்தாலே போதும். நாம் கடவுளில் மறைவோம். நம்மில் கடவுள் மறைவார். அக மொத்தம் ஐந்துக்குள் எல்லாம் ஐக்கியமாகிவிடும்!
தேவராஜன்

13. பாவத்திற்கான நரகத் தண்டனைகள்! தேவராஜன்

13. பாவத்திற்கான நரகத் தண்டனைகள்! தேவராஜன்
புண்ணியம் செய்தவர்கள் சொர்க்கத்தில் சுகம் காண்பர்கள். பாவம் செய்தவர்கள் நரகத்தில் சொல்லொண்ணா துயரம் அடைவார்கள் என்று புராணங்கள் எடுத்தியம்புகின்றன. இருந்தும் நாம் பாவங்கள் செய்யாமல் இருப்பதில்லை. சிலர் சொர்க்கம், நரகம் என்பதலாம் சுத்த புரூடா என்கின்றனர்.
உண்மையில் சொர்க்கம், நரகம் இருப்பதை ஏழ்உலகம் சுற்றிவரும் நாரத முனிவரும், நந்திதேவன் அருளால் திருமூலரும், நசிகேதனும் பார்த்ததை புராணச் செய்திகள் மூலம் அறியமுடிகிறது. மேலும்,அந்த செய்திகள் வாயிலாக நரகம் என்பது எண்பது லட்சம் மண்டலங்களைக்கொண்டது என்பதையும் அறிகிறோம்.
சரி, இனி நாம் செய்த பாவங்களுக்கு நரகத்தில் என்னென்ன தண்டனைகள் வழங்கப்படும் என்று தெரிந்துகொள்வோம். இதைத் தெரிந்துக்கொண்டப்பிறகாவது பாவம் செய்வதை தவிர்ப்போம்.
அடுத்தவர் வளர்த்த பசுவை தெரியாமல் திருடியவனுடைய ஆத்மா மகாவசி எனப்படும் நரகத்தில் 100 ஆயிரம் ஆண்டுகள் இருட்டறையில் கிடந்து துன்பத்தை அனுபவிக்க வேண்டும். பிறருடைய நிலத்தை ஏமாற்றி அபகரித்து கொண்டவன், பிரமணனைக் கொன்றவன் ஆகியோர் அமாகும்பம் என்ற நரகத்தில் கடும்வெப்பமண்டலத்தில் வாழவேண்டும்.
சிறுகுழந்தை, பெண், முதியவர், பலமற்றவன் ஆகியோரைக் கொலைசெய்தவன் ரவுரம் என்கிற நரகத்தில் கிடந்து துன்பப்படவேண்டும். இவர்களுக்கு பிரளயம் அழியும் வரை விமோசனம் கிடைக்காது.
தனக்கு வேதம் கற்பித்த குருவின் நிலங்களில் பயிர்களை அழித்தவனும், திருடர்களும் மகா ரவுரவம் எனப்படும் நரகத்தில் ஒரு கல்பகாலம் தீயிலே கிடந்து வெந்துபோக வேண்டும். இந்த தண்டனை முடிந்தப்பிறகு, அந்த காரம் என்கிற நரகத்தில் இருட்டறையில் கிடந்து அவதிப்பட்டவேண்டும். பின்னர் அவர்களை தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு புழுக்கள், அட்டைகள் மற்றும் நீர்வாழ்பூச்சிகளைக்கொண்டு உடலை அரித்துத் தின்னச் செய்வார்கள்.
தாயைக்கொன்றவன் அசிபத்திரவனம் எனப்படும் நரகத்தில் ஒருகல்பகாலம் கிடந்து துன்புற்று, பின்னர் சுடுமணலில் வறுத்தெடுக்கப்படுவான்.
பசியோடு எதிரே ஒருவன் கையேந்தி நிற்கும் போது அவனைப்பார்க்கவைத்து வகைவகையான பலகாரங்களைச் சாப்பிடுபவன் அவன் காகோலம் என்ற நரகத்தில் மலமூத்திர சகதியில் புழுத்துக்கிடக்கும் புழுக்களை புசிக்குமாறு தண்டிக்கப்படுவார்கள்.
நாள்தோறும் கடைபிடிக்க வேண்டிய நித்யகர்மானுஷ்டங்களை கைவிட்டவன் குத்தலம் என்ற நரகத்தில் தள்ளப்பட்டு ரத்தத்தையும் மூத்திரத்தையும் மட்டுமே அருந்துமாறு தண்டிக்கப்படுவார்கள்.
எவை எல்லாம் சாப்பிடக்கூடாது என்று சாஸ்திரம் சொல்லி உள்ளதோ அவைகளை சாப்பிடுபவன் துர்க்கதம் என்ற நரகத்தை அடைந்து உதிரத்தை அருந்துமாறு செய்யப்படுவான்.
தன்னை நம்பிவந்தவனை, அபயம் கேட்டவனை கொலைசெய்தவன், மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளுபவன் நரகத்திலே கொதிக்கும் எண்ணெய் சட்டியில் போட்டு வறுத்தெடுக்கப்படுவான்.
அயோக்கியர்களும், பிறருக்கு துன்பவிளைவிக்கும் முரடர்களும் மகாஜ்வாலம் என்ற நரகத்தில் தீயினால் பொசுக்கப்படுவார்கள்.
மூத்தவர்களுடைய மனைவியை, பிறருடைய மனைவியை, கீழ்தரமான மங்கையரோடு சல்லாபிப்பவர்கள் கிரகசம் என்ற நரகத்தில் சேர்க்கப்பட்டு அவர்களுடைய அவயங்களை ரம்பம் கொண்டு அறுப்பார்கள்.
பிறருடைய நல்ல குணத்துக்கு இழுக்குத் தேடுதல் போன்ற குற்றங்களை செய்பவர்கள் கொதித்துக்கொண்டிருக்கும் வெல்லப்பாகிலே தள்ளப்படுவார்கள்.
விலங்குகளைக் கொன்றவன் நரகத்தில் துõக்கமுடியாத சங்கிலியை பிணைத்து துன்புறுத்தப்படுவார்கள்.
தங்கத்தை திருடியவன் அம்வரிசம் என்ற நரகத்தையும், மரங்களை வெட்டியவன் வஜ்ர சஸ்திரகம் என்ற நரகத்தில் தள்ளப்பட்டு துன்பம் அனுபவிக்க துன்புறுத்தப்படுவர்.
பொய்சாட்சி சொன்னவன், பூதிவக்திரம் என்ற நரகத்தையும், அடுத்தவர் பணத்தை திருடியவன் பரிலுந்தம் நரகத்தையும், மது அருந்திய பிராமணன் விலேபம் என்ற நரகத்தையும், பிறரிடம் துவேஷத்தை உண்டாக்கி அவர்களுடைய நட்பை குலைப்பவன் மகாதாம்ரம் என்ற நரகத்தையும் அடைந்து கொதிக்கும் செம்புக் குழம்பிலே தள்ளப்பட்டு துன்பத்தை அடைவார்கள்.
அடுத்தவர் மனைவியை பலவந்தமாக அடைந்து இன்புற்றவர்கள் நரகத்தில் கொதிக்கும் இரும்புத் துõணையோ, இரும்பாலான பெண் உருவையோ தழுவுமாறு தண்டிக்கப்படுவார்கள். அதுபோல வாழ்க்கையில் பல ஆடவர்களுடன் கூடி இன்பம் அனுபவித்தவள் கூரிய முட்கள் நிறைந்த மரத்தை இரு கைகளாலும் கட்டித் தழுவுமாறு கட்டாயப்படுத்தப்படுவார்கள்.
மதுவைத் திருடியவன் பரிதாபம், பிறர் செல்வத்தை கொள்ளையடிப்பவன் காலசூத்திரம், மாமிசத்தை பெரிதும் விரும்பி உண்பவன் சூச்மலம், பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கர்மாக்களை செய்யாது விட்டவன் உக்கிரகந்தம் ஆகிய நரகங்களில் தள்ளப்பட்டு சொல்லொண்ணா துயரம் காண்பார்கள்.
இப்படி நாம் தவறு என்று தெரிந்தே செய்யும் இன்னும் பல பாவங்களுக்கு ஏகப்பட்ட தண்டனைகள் இருக்கின்றன.
இதையெல்லாம் படித்ததும் உங்கள் மனதில் ஒரு அச்சம் எழுந்திருக்கவேண்டும். அவ்வாறு உங்களுக்கு அச்சம் எழுந்திருந்தால் நீங்கள் பாவத்திலிருந்து விலகி ,கடவுளின் ஆதரவு கரத்தை நோக்கி அடி எடுத்து வைக்க சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது என்று அர்த்தம்.
தேவராஜன்

12. வாங்க,பர்சனல் பக்தி செய்யலாம்! தேவராஜன்

12. வாங்க,பர்சனல் பக்தி செய்யலாம்! தேவராஜன்
இன்று பாஸ்ட்புட் கலாசாரத்தில் எதையுமே துரித கதியில் செய்துகொண்டிருக்கும் நாம்பொருளற்ற வாழ்க்கையில் பொருள் தேடி அலைந்து கொண்டிக்கிறாம்.வாழ்க்கையில் நம்மை படைத்தவனை நினைப்பதைவிட, பணத்தையே சதாகாலமும் நினைத்துக்கொண்டிருக்கிறோம்! என்ன செய்வது? செயற்கையான விருப்பங்களையும், ஆசைகளையும் கட்டமைத்துக்கொண்டு நினைப்பு கெடுக்கும் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் சூழலில் பொருளில்லார்க்கு வாழ்க்கை பொருளற்றதாகிவிட்டது.
சுற்றிக்கொண்டிருக்கும் பூமியில் ஓடிக்கொண்டேயிருக்கும் காலத்தில் நாமும் ஓடிக்கொண்டேயிருக்கிறோம். இப்படிப்பட்டவர்களிடம் பணம் பண்ணும் வழியைச் சொன்னால் காதுகொடுத்து கேட்பார்கள். ஆனால்,பக்தி பண்ணுவது பற்றி சொன்னால் பயனளிக்காது என்பதையும் அறிவேன். பொன்னுக்காகவும், பொருளுக்காகவும் ,பெண்ணுக்காகவும் ,பெருமைக்காகவும், பதவிக்காகவும் இன்னம் எதை எதையோ தேடி தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கும் வாழ்வில் எங்கோ, எப்போதோ இடறி விழுந்து, பலத்த அடிப்பட்டு எழுந்திருக்க முடியாத போது "கடவுளே!' என்று கூக்குரலில் கூப்பாடு போடுவீர்கள்! அப்போதாவது கடவுளை நினைக்கதோன்றும் அப்போதாவது இதை படித்த ஞாபகம் வரும். இனியாவது மனதில் பக்தியை விதைத்து நற்கதியை அறுவடைய செய்ய புத்திவரும் நேரத்தில் இங்கே சொல்லப்படும் வழிமுறை உங்களுக்கு உபயோகப்படும்.
வாழ்வில் கஷ்டம் வரும்போதுதான் கடவுளை நினைப்பேன் என்று கருதாமல் சந்தோஷமாக இருக்கும் போதே நல்ல நிலையில் இருக்கும் போதே கடவுளை நினைத்துக்கொண்டிருக்க பக்தி செய்ய சுலபமான வழி எது? என்பதை இந்த வார ஆன்சிக சிந்தனையாக சிந்திப்போம்!
நமக்காகவோ, பிறருக்காகவோ வெளியிடத்தில் அதாவத கோயில் விக்ரகம் முன்பும், சக்கரம்,யாகம்,ஹோமம் போன்ற வழிபாடுகளை புரியும் புரோகிதர்கள்,சாஸ்திரிகள்,அர்ச்சகர்கள் செய்யும் பூஜையை பரார்த்த பூஜை அதாவது புறவழிபாடு என்கிறோம்.
நம்முடைய பிரார்த்தனையை இன்னொருவர் ஊடகமாக இருந்து இறைவனிடம் சேர்ப்பது ஆகும்.
இது எப்படி என்றால் நமக்கு தேவையான ஒன்றை அரசிடமிருந்து பெற அதிகாரிகள் மூலம் விண்ணப்பித்தது, அதற்கான வழிமுறைகளை பின்பற்றி பெறுவது போன்றது.இதை தான் நாம் செய்துகொண்டிருக்கிறோம்.
இன்றைய அவசர வாழ்க்கையில் காலையில் எழுந்து, குளித்து, சூரியநமஸ்காரம் செய்து, அருகில் இருக்கும் கோயிலுக்குச் சென்று பூஜை,வழிபாடு செய்துவிட்டு, பின்னர் சாப்பிட்டு விட்டு அலுவலகம் செல்வது என்பது நடக்கிற விஷயமா, என்ன? காலையில் எழுந்ததுமே ஆயிரத்தெட்டு வேலை இருக்கும் இதை முடிக்கவே நேரமில்லாதப்போது எப்படி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வதாம்? அப்படி என்றால் வழிபாடு செய்யவேண்டாமா? எப்போது நேரம்,ஓய்வு கிடைக்கிறதோ அப்போது வழிபாடு செய்துகொள்ளலாம் என்றிருபது சரியாகுமா? இப்படி எல்லாம் கேள்விகள் எழும். நீங்கள் காலத்துக்கு ஏற்ப மாறிகொண்டது போல, பக்தி செய்யும் முறையையும் கொஞ்சம் மாற்றிக்கொண்டால் போதும். அதற்கு மிக எளிமையான வழி இருக்கிறது. அது பர்சனல் பக்தி . இதை அகவழிபாடு என்றோ,
ஆன்மார்த்த வழிபாடு என்றோ சொல்லலாம்.இந்த பக்தி முறை அற்புதமானது. சுலபமானது. நமக்குள் நாமே வழிபட்டுகொள்வதாகும். அதாவது இறைவனை நம் மனதில் இருத்திக்கொண்ட தியானம்,மந்திரம் மனதுள் சொல்லிக்கொண்டு வழிபடுவதாகும். இந்த வழியில் நம் தேவைகளை பெற இன்னொருவர் தயவு தேவையில்லை. நம் தாயிடமோ,தந்தையிடமோ, அண்ணன், தம்பியிடமோ தம் குறைகளை, கஷ்டங்களை கூறி பயன் பெறுவது போலாகும். இதற்கு பிறர் கேரண்டியோ,ரெக்கமென்டேஷனோ தேவையில்லை.
கோயில் சென்று வழிபடும் முறையில் உடல் துõய்மை, மனத்துõய்மை, மடி, ஆச்சாரம் எல்லாம் தேவை. எல்லோருமே கருவறைக்குள் சென்று பூஜை செய்ய முடியாது. அதற்கெல்லாம் சாதி,சமய தீட்சை என பல நியமங்கள் உள்ளன.
பர்சனல் பக்தியில் அதெல்லாம் தேவையே இல்லை. நீங்கள் நினைத்த மாத்திரத்தில் மனதில் எந்த கோயில் கருவறையிலும் உங்களுக்குப்பிடித்த கடவுளுக்கு வழிபாடு செய்து சந்தோஷபடலாம்.
புறவழிபாடு செய்பவர்கள் உடல்நலம் இல்லாதபோது வழிபாடு செய்ய முடியாது.
"வாயானை மனத்தானை நின்ற
கருத்தானை கருத்தறிந்து முடிப்பான் தன்னை என்று அப்பர் அடிகள் சொல்வது ஆன்மார்த்த பூஜைபற்றியதே. ஊனக்கண்ணால் காணமுடியாத இறைவனை மனக்கண்ணால் காண இந்த முறை வழிபாடு உதவும்.
"ஓம் நமசிவாய' என்ற மகா மந்திரத்தை மனதுள் நினைப்பதே பர்சனல் பக்தியின் முதல் வழி. இதை செய்தாலே போதும் கோயில் செல்ல முடியலையே, கண்ணார கடவுளை தரிசனம் செய் முடியலையே... இப்படி எல்லாம் ஆதங்கம்பட தேவை இருக்காது. உங்களுக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் "ஓம் நமசிவாய' மகா மந்திரத்தை மனதுள் நினைத்துக்கொண்டிருங்கள். காலையில் படுக்கையில் எழுந்தவுடன் முதல் வேலையாக ஒரு 5 நிமிடம் மகா மந்திரத்தை நினத்துக்கொண்டு பின் மற்ற வேலையை பாருங்கள். கடைக்கு பால் வாங்க செல்லும் நேரத்தில், குளிக்கும் நேரத்தில், பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து செல்லும் நேரத்தில், ஆட்டோவிலோ, பஸ்சிலோ செல்லும் நேரத்தில், லன்ஞ் நேரத்தில், மாலையில் அலுவலகம் விட்டு வீட்டுக்கு திரும்பும் போது பஸ்சில் வரும் நேரத்தில் என இப்படி கிடைக்கும் எந்த நேரத்திலும் மகா மந்திரத்தை மனதுள் சொல்லிக்கொண்டிருங்கள். இப்படி செய்வது தான் பர்சனல் பக்தி!
அடுத்ததாக கொஞ்சம் கூடுதலாக நேரம் கிடைத்தால் குறைந்த பட்சம் பத்துநிமிடம் கிடைத்தால் பர்சனல் பக்தியின் இரண்டாவது வழியை பழகலாம். அந்த வழிமுறையும் எளிமையானது தான். சுலபமானதுதான். இதோ அதையும் தெரிந்து கொள்ளுங்கள்.இரண்டாவது வழியை எப்படி செய்யவேண்டுமென்றால் மூலாதாரத்தில் "ஓம் 'என்றும் சுவாதிட்டானத்தில் "ந' என்றும் மணிபூரகத்தில் "ம' என்றும் அநாகத்தில் "சி' என்றும், விசுத்தியில் "வா' என்றும், ஆக்ஞையில் "ய' என்றும் நினைத்து கீழேயிருந்து மேல் நோக்கி செல்வது கீழ்முறை அல்லது ஏறுமுறை என்று திருமூல ர் திருமந்திரத்தில் கூறியவழிமுறையாகும்.
உங்களுக்கு புரியும்படி எளிதாக சொல்ல வேண்டும் என்றால் முதுகு தண்டின் கீழ் "ஓம்' என்று நினைத்து, அதற்கு மேலே இருக்கும் குறிக்கு சற்றுமேலே "ந' என்று நினைத்து, தொப்புள்கொடி புள்ளியில் "ம' என்று நினைத்தும், இருமார்புகாம்புகளுக்கு மத்தியில் உள்ள குழியில் "சி' என்று நினைத்தும் தொண்டைக்குழி மத்தியில் "வா' என்று நினைத்தும், இரு புருவமத்தியில் "ய' என்று நினத்துக்கொண்டிருப்பது தான் இரண்டாம் படிநிலை. உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் பக்தி செய்யும் முறை தான் மேற் சொன்ன முறை. இதை பின்பற்ற எல்லோருக்கும் முடியும் தானே?
தேவராஜன்

11. துன்பம் வருவது ஏன்? தேவராஜன்

11. துன்பம் வருவது ஏன்? தேவராஜன்

மனிதர்கள் சுயநலவாதிகள்! இன்பமும் சந்தோஷமும்படும் போது, "ஏ, கடவுளே ஏன் எனக்கு இவ்வளவு சந்தோஷத்தை கொடுத்தாய்?'என்று கேட்பதில்லை. சரி, அனுபவிக்கும் சந்தோஷத்தை தந்த கடவுளுக்கு அந்த கணத்தில் நன்றியாவது யாராவது நம்மில் சொல்கிறோமா? ஆனால், துன்பப்படும் போது மட்டும் கண் கண்ட கோயில் எல்லாம் படி ஏறி, வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு "ஏன் எனக்கு இப்படி ஒரு துயரத்தை கொடுத்தாய்?' என்று கேள்விகள் கேட்டு கடவுளிடம் கோரிக்கை வைக்கிறோம்! கொஞ்சம் பக்குவப்பட்டவர்கள் "கடவுளே துயரத்தைக் கொடுப்பதோடு அதை தாங்கும் மன வலிமையையும் கொடு' என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.

நீ சந்தோஷமாக சிரிக்கும் தருணத்தில் கடவுளை நினைத்தால், நீ துன்பத்தில் அழும் போது கடவுளை உன்னை நினைப்பான். இதுகூட தெரியாமல் தான் நாம் கடவுளிடம் சுயநலத்தோடு பக்தி செய்து வருகிறோம்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவகை துன்பம் வருகிறது. அதற்கு காரணங்களும் வெவ்வேறாக இருக்கின்றன. பசிக்கிறதே! உணவில்லையே என்று ஒருவன் துன்பப்படுகிறான். அறுசுவை உணவிருக்கிறது! ஆனால் பசிஇல்லையே... செரிமாணம் ஆவதில்லையே என்று ஒருவன் துன்பப்படுகிறான். இதில் துன்பத்திற்கு காரணம் பசியா? உணவா? எதை சொல்வீர்கள்? எதைச் சொன்னாலும் அவரவர் நிலையில் தவறாகும்.
வாழ்க்கை நெடுகிலும் சந்தோஷமே ஒருவன் அனுபவித்துக்கொண்டிருந்தால், அவன் நினைப்பதெல்லாம் நடந்துகொண்டிருந்தால் அவன் ஒருபோதும் கடவுளை நினைக்கவே மாட்டான். அதுமட்டுமல்ல; ஆணவம் தலைக்கேறி ஆட ஆரம்பித்து விடுவான். எல்லாம் நம் முயற்சியால் மட்டுமே நடக்கிறது என்று இறுமாப்பு கொண்டுவிடுவான்.

அதற்காகத் தான் கடவுள் திடீரென நாம் எதிர்பார்க்காமலேயே துன்பத்தை கொடுக்கிறார்.அந்த துன்பங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அவனை வதைக்கும் போது, அந்த துன்பநிலையிலும் அவன் உண்மை , நேர்மை, தர்மம் போன்ற ஒழுக்க நெறிகளிலிருந்து விலகாமல் இருக்கிறானா? துயரத்தின் ஆரம்பத்தில் அல்லது விளிம்பில் தன்னை நினைத்து, துன்பம் போக்கியருள பிரார்த்திக்கிறானா? என்பதை சோதிக்கவே, துன்பம் கொடுத்து அந்த துன்பத்தின் மூலம் மனம் பக்குவமடைய வைக்கிறார். பக்குவமடைந்த நம் மனதை கடவுள் ஆசீர்வதித்து ஏற்றுகொள்கிறார்.
கடவுளை புரிந்துகொள்ளும்மனத்தடைகளை உங்களுக்கு உணர்த்துவது துன்பமே. மனத்தடைகளில் இருந்து உங்களை விடுவிப்பதும் துன்பமே. உங்களை உங்களில் இருந்து விடுவிப்பதற்காக கடவுள் கொடுக்கும் உதவிகரமே துன்பம். துன்பமே உங்களுக்கு குரு. ஈசனின் திருவிளையாடல்கள் எல்லாம் பக்தர்களுக்கு சோதனைக் கொடுத்து, அவனை ஆட்கொண்ட புராணம் கதைகள் ஒன்றா, இரண்டா? நினைத்துப்பாருங்கள்!

யாருக்கு துன்பம் இல்லை. ரமணருக்கும், பரமஹம்சருக்கும் புற்றுநோய் வந்தது. விவேகானந்தருக்கும் சாயிபாபாவுக்கும் பட்டினி வடிவில் துன்பம் ஏற்பட்டது. அவர்கள் எல்லாம் நம்மை போல புலம்பாமல் துன்பம் வரும்போதெல்லாம் எந்தக்காரணமும் கூறாது ஏற்றுக்கொண்டு அந்தத் துயரை அடிவரை அனுபவித்து அதன் மூலமே மனதில் இருக்கும் அழுக்குதொடர்புடைய மனதடைகளை போக்கிக்கொண்டனர்.

துன்பம் ஏற்படுவதற்கு காரணமான கருவிகளான கோபம், அவசரம், ஆவேசம், பொறாமை,காமம், ஆசை என மனதில் எழும் மன எழுச்சிகள், மனக்குமுறங்கள், மனஅழுத்தங்கள் போன்ற மனமாற்றங்கள் காரணமாக இருக்கின்றன. இதற்கு அடிப்படையாக இருப்பது நாம் நாமாக இல்லாமல் இருப்பதும், நமக்கான வாழ்க்கையை நாம் வாழாமல் இருப்பது தான்.
நீங்கள் ஒவ்வொருவரும் இன்னொருவரைப் போல் வர முயலாமல், நீங்கள் ஒவ்வொருவரும் நீங்களாகவே இருக்க முயலவேண்டும். அது தான் உங்களுக்கு மட்டுமே உரிய பாதை; வாழ்க்கை. அதுவல்லாமல் நீங்கள் அடுத்தவர் பாதையில், அடுத்தவர் வாழ்வை வாழ்வது எல்லாம் வேஷங்கள். வேஷங்கள் தான் துன்பத்தை கொட்டித்தீர்க்கின்றன. நீங்கள் நிஜமாக இருந்து, கடவுள் பக்தியுடன் இருங்கள் பேரானந்தம் கிடைக்கும்.
துன்பங்கள் ஒவ்வொன்றும் வரும்போது அவற்றிலிருந்து தப்பிக்கும் வழியை நீங்களே உங்கள் அறிவினால் ஊகித்து அவற்றிலிருந்து தப்பிக்க முயல்கிறீர்கள். இது செயற்கை தனம் அல்லவா? எப்படிவந்த இன்பத்தை புறந்தள்ளாமல் அதை முழுமையாக அனுபவிக்கிறோமோ, அதை போல வந்த துன்பத்தை அனுபவிப்பதுதான் இயற்கை. அதிலிருந்து தப்பிப்பது எவ்வகையில் நியாயம்?
எந்தத் துன்பத்தையும் முழுமனதோடு ஏற்றுக்கொண்டு அதிலிருந்து தப்பிக்கும் எண்ணத்திலோ, முயற்சியிலோ மனதை செலுத்தாமல் அத்துன்பத்தினால் விளையும் வேதனையை அனுபவித்தால், அத் துன்பத்திற்குக் காரணமான வேர் அறுத்து கடவுள் உங்களை விடுவிப்பார்.
உலகில் உள்ள எவ்வளவோ இன்பங்களை நாடும் நாம் அதே சமயம் கடவுளையும் நாடுகிறோம். கடவுளைமட்டுமே நாடினால் போதும். பிற இன்பங்கள் எல்லாம் தானே வரும் என்ற உண்மையை நாம் அறிவதில்லை. இதனால் நம்முடைய மனம் கடவுளை நாடுவதைவிட அதிகமாகப் பிற இன்பங்களையே நாடுகிறது.
கோயிலுக்குச் சென்றாலோ, சத்சங்கம், பஜனைக்குச் சென்றாலோ,ஆன்மிக சொற்பொழிவு கேட்டாலோ கொஞ்சநேரம் மனம் அமைதியடைகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. கடற்கரை, ஆற்றங்கரை, தோப்பு, நல்ல சினிமா,நாடகம் போனாலும் பிடித்த பாட்டு, பிடித்த புத்தகம் கேட்டாலும் படித்தாலும் கொஞ்சம் அமைதியும் மகிழ்ச்சிøயும் மனதுக்கு கிடைக்கிறது.
இதற்கு எல்லாம் காரணம் சூழல் மாற்றத்தால் ஏற்படும் நம் மனமாற்றம். இந்த மாயை வித்தையை புரிந்து கொள்ளாமல் கடவுளை புறக்கணித்து விட்டு நிலையற்ற சந்தோஷத்திலும், போதையில் இன்பத்திலும், சிற்றின்பதிலும் உழன்று பேரின்ப வெள்ளத்தை பெறமுடியாமல் ஏமாந்து போகிறோம்.
கடவுளை அடைய உதவும் படிகட்டுகள் தான் துயரங்கள்! அந்த துயரங்கள் வருகிறதென்றால் நாம் கடவுளின் சமீபத்தில் நகருகிறோம் என்று அர்த்தம்!
தேவராஜன்.

10. தேடல் ஒரு தவம்! தேவராஜன்

10. தேடல் ஒரு தவம்! தேவராஜன்

தேடல் தான் வாழ்க்கை. தேடல் ஓர் அறிவு முதலாக ஆறறிவு வரை சகல ஜீவராசிகளுக்கும் உரித்தானது. ஒரு விதைக்கூட பூமியில் புதைத்தால் மண்ணை முட்டி வெளியே என்ன இருக்கிறது என்ற தேடலின் முயற்சிதான் அதன் வளர்ச்சி! ஒரு எறும்பு கூட சர்க்கரை இருக்கும் இடத்தை நோக்கிச்செல்லும் இது உணவுக்கான தேடல். இப்படி தேடல் என்பதன் நோக்கம் வெவ்வேறாக இருந்தாலும் எவ்வுயிருக்கும் தேடல் தேவை என்பது புலனாகிறது.
வெளிஉலகையே பாராமல்அரண்மனை,வகையாய் ருசிக்க மது, பழங்கள், உணவுவகைகள், சேவகம் செய்ய ஆயிரம் பணியாளர்கள், அந்தப்புரத்தில் கொஞ்சும் குமரிகள், இனிக்கும் இளமை, அதை அனுபவிக்க அழகான ராஜகுமாரி இப்படி சுகபோகத்தில் மிதந்த ஒரு ராஜகுமாரன், பிணி,முதுமை, சாக்காடு கொண்ட மூன்று மனிதர்களைப் பார்த்ததும் அவனுக்குள் ஒரு தேடல் துளிர்த்தது. அந்த தேடல் ஒரு மன்னனாக இருந்திருக்கவேண்டியவனை மகாஞானியாக்கி, போதிமரத்தில் அவனை புத்தனாக்கியது.
இந்த உலகில் பக்தி செய்பவனும் சரி; பக்தி செய்யாதவனும் சரி சந்தோஷம், நிம்மதி, அமைதியைத் தேடுகிறான். தேடலில் அவன் வாழ்க்கை நம்பிக்கையின் ஈரத்தோடு தொடர்கிறது.
மனிதருக்கு மனிதர் தேடல் பார்வை பல வகையாக உள்ளது. ஒரு துறவியோ, ஞானியோ ஆனந்தத்தை நிலையற்ற உலகவிஷயங்களில் தேடாமல் என்றும் ஜீவித்திருக்கும் இறைவனைத் தேடி ஆனந்தம் அடைகின்றனர்.
நிலையற்ற உலகவிஷயங்களில் நிம்மதி தேடுபவன் கோடி கோடியாய் சம்பாதிக்கிறான்; சொகுசு பங்களா, கார், மனைவி, மக்கள் எல்லாம் இருந்தும் அவன் இறுதியில் போதையில் தான் ஆனந்தம் காண்கிறான்.
நீரின் இயல்பு எவ்வளவு உயரத்தில் இருந்து கொட்டினாலும் அது கீழ் நோக்கித்தான் விழும். தீயின் இயல்பு எப்படி என்றால் அது எங்கே எரிந்தாலும் அதன் சுடர் மேல்நோக்கித்தான் இருக்கும். அதுபோல தேடலில் இரு இயல்புகள் இருக்கிறது. வெளியே என்ன இருக்கிறது? வெளியே என்ன இருக்கிறது? என்ற தேடலில் மனிதன் தனக்கான உணவு, உடை, உறைவிடம், சொந்தம், பந்தம் எல்லாம் தேடிக்கொண்டான்.
அதுமட்டுமல்லாமல் பணமிருந்தால் உறவுகள், சொந்தங்கள், நட்புகள், உலகம் மதிக்கும், தன்னை திரும்பிப்பார்க்கும் என்ற கற்பனை கவுரவத்திற்காக வாழ்நாளை பணம் சம்பாதிக்கவே அடமானம் வைத்துவிடுகிறான். சிலர் பதவி, அதிகாரம், புகழ் இருந்தால் நமக்கு எல்லாரும் அடிமையாக இருப்பார்கள், கொண்டாடுவார்கள் என்ற கீழான நினைப்பில் அதை தேடுவதில் வாழ்நாளை கரைத்துக்கொள்கிறார்கள். இதெல்லாம் வெளியே என்ன இருக்கிறது? என்ற தேடலின் விளைவுகள். இதில் சிலர் தன்னலமற்றுஅபூர்வமாய் தேடியதில் அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்தன.
அடுத்ததாக உள்ளே என்ன இருக்கிறது என்று கண்மூடிக்கொண்டு தேடலில் நுழைந்து,
தனக்குள்ளேயே உள் முகமாக தேடி... தேடி... இந்த பிண்டமே அண்டம்! அந்த அண்டமே இந்த பிண்டம் என்றுஞானம் அடைந்தான்.அதன் பயனாக கடவுளை அறிந்தான்.
ஒரு ஆப்பிள் மரத்திலிருந்து ஒரு ஆப்பிள் விழுகிறது. நாமாக இருந்தால் என்ன செய்வோம் அதை எடுத்து வந்து கழுவி சாப்பிடுவோம். ஆனால், சர்ஐசக் நியூட்டன் அவ்வாறு செய்யவில்லை. இந்த ஆப்பிள் ஏன் மேலே போகாமல் கீழே விழுகிறது என்று கையில் ஆப்பிளை வைத்துக்கொண்டு யோசித்தான்; தேடலில் மூழ்கினான். கடைசியில் புவியீர்ப்பு விசையைஉலகுக்கு அறிமுகப்படுத்தினான். இது ஒருவகை தேடல்.
கடற்கரைக்கு காற்று வாங்க போகிறோம். கடல் அழகை ரசிக்கிறோம். ஆனந்தம் அடைகிறோம். இந்த மகிழ்ச்சியைத் தேடிதானே கடற்கரைக்கு ச் செல்கிறோம். ஆனால், யாராவது கடலின் ஆழம் எவ்வளவு இருக்கும். எங்கு ஆரம்பித்து எங்கே முடிகிறது இந்த கடல்? கடலுக்கடியில் என்னன்ன ஜீவராசிகள் இருக்கும். பாதாளலோகம் கடலுக்கடியிலா இருக்கிறது என்றெல்லாம் நாம் சிந்தித்ததுண்டா? அப்படி ஒரு தேடல் இருந்திருந்தால் ஆராய்ச்சியாளர்கள் ஆகியிருப்போம்.
வானத்தைப் பார்க்கிறோம்; நிலவைப்பார்க்கிறோம்'; மேகத்தைப் பார்க்கிறோம் ரசிக்கிறோம். அதையும் தாண்டி வானத்தின் மறுபக்கம் எப்படி இருக்கும்? வானத்துக்குள்ளே என்ன இருக்கிறது? சொர்க்கம், நரகம் எல்லாம் வானத்தில் எங்கே இருக்கும். என்றாவது ஒரு நாள் வானம் உடைந்து விழுந்து விடுமா? வானம் எதை பிடித்துக்கொண்டு நிற்கிறது? இப்படி எல்லாம் உங்கள் தேடல் விரிந்திருக்கிறதா? இப்படி யோசித்தவர்கள் எல்லாம் விஞ்ஞானிகளாக, ஞானிகளாக ஆகிவிட்டார்கள். அவர்கள் தேடல் உள்முகமாக இருந்துவிட்டது.
வெளிமுக தேடல் கடலலைப் போல ஓயாது மனதில் நச்சரித்துகொண்டே இருக்கும். அது எல்லையில்லாமல் விரிந்துகொண்டேயிருக்கும். ஒன்றைவிட்டு பிறிதொன்றை பற்றியபடியே இருக்கும்.
உதாரணமாக யானை எப்போதும் தன் துதிக்கையை அங்கும் இங்கும் ஆட்டிக்கொண்டே இருக்கும். தரையில் உள்ள குப்பை கூளத்தையெல்லாம் பொறுக்கிக்கொண்டேயிருக்கும். யானையின் துதிக்கை ஆட்டத்தை நிறுத்த, பாகன் ஒரு குச்சியையோ, சங்கிலியையோ கொடுப்பான். அதைப் பிடித்துக்கொண்டு யானை அமைதியாக துதிக்கையை அசைக்காமல் இருக்கும். அதுபோல மனித மனம் வெளிமுக தேடலில் அலைந்து கொண்டேயிருக்கும் திருப்தியில்லாமல். அதற்கு பக்தி என்கிற ஒரு பிடிமானத்தைக் கொடுத்து விட்டால் போதும்.மனம் அலைபாயாமல் இருக்கும். ஒடுங்கிய மனம் உள்முக தேடலில் மூழ்கி ஞானத்தில் திளைக்கும். அல்லது குறைந்தபட்சம் அமைதியையோ, நிம்மதியையோ அடையும்.
தேவராஜன்.

10. தேடல் ஒரு தவம்! தேவராஜன்

10. தேடல் ஒரு தவம்! தேவராஜன்

தேடல் தான் வாழ்க்கை. தேடல் ஓர் அறிவு முதலாக ஆறறிவு வரை சகல ஜீவராசிகளுக்கும் உரித்தானது. ஒரு விதைக்கூட பூமியில் புதைத்தால் மண்ணை முட்டி வெளியே என்ன இருக்கிறது என்ற தேடலின் முயற்சிதான் அதன் வளர்ச்சி! ஒரு எறும்பு கூட சர்க்கரை இருக்கும் இடத்தை நோக்கிச்செல்லும் இது உணவுக்கான தேடல். இப்படி தேடல் என்பதன் நோக்கம் வெவ்வேறாக இருந்தாலும் எவ்வுயிருக்கும் தேடல் தேவை என்பது புலனாகிறது.
வெளிஉலகையே பாராமல்அரண்மனை,வகையாய் ருசிக்க மது, பழங்கள், உணவுவகைகள், சேவகம் செய்ய ஆயிரம் பணியாளர்கள், அந்தப்புரத்தில் கொஞ்சும் குமரிகள், இனிக்கும் இளமை, அதை அனுபவிக்க அழகான ராஜகுமாரி இப்படி சுகபோகத்தில் மிதந்த ஒரு ராஜகுமாரன், பிணி,முதுமை, சாக்காடு கொண்ட மூன்று மனிதர்களைப் பார்த்ததும் அவனுக்குள் ஒரு தேடல் துளிர்த்தது. அந்த தேடல் ஒரு மன்னனாக இருந்திருக்கவேண்டியவனை மகாஞானியாக்கி, போதிமரத்தில் அவனை புத்தனாக்கியது.
இந்த உலகில் பக்தி செய்பவனும் சரி; பக்தி செய்யாதவனும் சரி சந்தோஷம், நிம்மதி, அமைதியைத் தேடுகிறான். தேடலில் அவன் வாழ்க்கை நம்பிக்கையின் ஈரத்தோடு தொடர்கிறது.
மனிதருக்கு மனிதர் தேடல் பார்வை பல வகையாக உள்ளது. ஒரு துறவியோ, ஞானியோ ஆனந்தத்தை நிலையற்ற உலகவிஷயங்களில் தேடாமல் என்றும் ஜீவித்திருக்கும் இறைவனைத் தேடி ஆனந்தம் அடைகின்றனர்.
நிலையற்ற உலகவிஷயங்களில் நிம்மதி தேடுபவன் கோடி கோடியாய் சம்பாதிக்கிறான்; சொகுசு பங்களா, கார், மனைவி, மக்கள் எல்லாம் இருந்தும் அவன் இறுதியில் போதையில் தான் ஆனந்தம் காண்கிறான்.
நீரின் இயல்பு எவ்வளவு உயரத்தில் இருந்து கொட்டினாலும் அது கீழ் நோக்கித்தான் விழும். தீயின் இயல்பு எப்படி என்றால் அது எங்கே எரிந்தாலும் அதன் சுடர் மேல்நோக்கித்தான் இருக்கும். அதுபோல தேடலில் இரு இயல்புகள் இருக்கிறது. வெளியே என்ன இருக்கிறது? வெளியே என்ன இருக்கிறது? என்ற தேடலில் மனிதன் தனக்கான உணவு, உடை, உறைவிடம், சொந்தம், பந்தம் எல்லாம் தேடிக்கொண்டான்.
அதுமட்டுமல்லாமல் பணமிருந்தால் உறவுகள், சொந்தங்கள், நட்புகள், உலகம் மதிக்கும், தன்னை திரும்பிப்பார்க்கும் என்ற கற்பனை கவுரவத்திற்காக வாழ்நாளை பணம் சம்பாதிக்கவே அடமானம் வைத்துவிடுகிறான். சிலர் பதவி, அதிகாரம், புகழ் இருந்தால் நமக்கு எல்லாரும் அடிமையாக இருப்பார்கள், கொண்டாடுவார்கள் என்ற கீழான நினைப்பில் அதை தேடுவதில் வாழ்நாளை கரைத்துக்கொள்கிறார்கள். இதெல்லாம் வெளியே என்ன இருக்கிறது? என்ற தேடலின் விளைவுகள். இதில் சிலர் தன்னலமற்றுஅபூர்வமாய் தேடியதில் அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்தன.
அடுத்ததாக உள்ளே என்ன இருக்கிறது என்று கண்மூடிக்கொண்டு தேடலில் நுழைந்து,
தனக்குள்ளேயே உள் முகமாக தேடி... தேடி... இந்த பிண்டமே அண்டம்! அந்த அண்டமே இந்த பிண்டம் என்றுஞானம் அடைந்தான்.அதன் பயனாக கடவுளை அறிந்தான்.
ஒரு ஆப்பிள் மரத்திலிருந்து ஒரு ஆப்பிள் விழுகிறது. நாமாக இருந்தால் என்ன செய்வோம் அதை எடுத்து வந்து கழுவி சாப்பிடுவோம். ஆனால், சர்ஐசக் நியூட்டன் அவ்வாறு செய்யவில்லை. இந்த ஆப்பிள் ஏன் மேலே போகாமல் கீழே விழுகிறது என்று கையில் ஆப்பிளை வைத்துக்கொண்டு யோசித்தான்; தேடலில் மூழ்கினான். கடைசியில் புவியீர்ப்பு விசையைஉலகுக்கு அறிமுகப்படுத்தினான். இது ஒருவகை தேடல்.
கடற்கரைக்கு காற்று வாங்க போகிறோம். கடல் அழகை ரசிக்கிறோம். ஆனந்தம் அடைகிறோம். இந்த மகிழ்ச்சியைத் தேடிதானே கடற்கரைக்கு ச் செல்கிறோம். ஆனால், யாராவது கடலின் ஆழம் எவ்வளவு இருக்கும். எங்கு ஆரம்பித்து எங்கே முடிகிறது இந்த கடல்? கடலுக்கடியில் என்னன்ன ஜீவராசிகள் இருக்கும். பாதாளலோகம் கடலுக்கடியிலா இருக்கிறது என்றெல்லாம் நாம் சிந்தித்ததுண்டா? அப்படி ஒரு தேடல் இருந்திருந்தால் ஆராய்ச்சியாளர்கள் ஆகியிருப்போம்.
வானத்தைப் பார்க்கிறோம்; நிலவைப்பார்க்கிறோம்'; மேகத்தைப் பார்க்கிறோம் ரசிக்கிறோம். அதையும் தாண்டி வானத்தின் மறுபக்கம் எப்படி இருக்கும்? வானத்துக்குள்ளே என்ன இருக்கிறது? சொர்க்கம், நரகம் எல்லாம் வானத்தில் எங்கே இருக்கும். என்றாவது ஒரு நாள் வானம் உடைந்து விழுந்து விடுமா? வானம் எதை பிடித்துக்கொண்டு நிற்கிறது? இப்படி எல்லாம் உங்கள் தேடல் விரிந்திருக்கிறதா? இப்படி யோசித்தவர்கள் எல்லாம் விஞ்ஞானிகளாக, ஞானிகளாக ஆகிவிட்டார்கள். அவர்கள் தேடல் உள்முகமாக இருந்துவிட்டது.
வெளிமுக தேடல் கடலலைப் போல ஓயாது மனதில் நச்சரித்துகொண்டே இருக்கும். அது எல்லையில்லாமல் விரிந்துகொண்டேயிருக்கும். ஒன்றைவிட்டு பிறிதொன்றை பற்றியபடியே இருக்கும்.
உதாரணமாக யானை எப்போதும் தன் துதிக்கையை அங்கும் இங்கும் ஆட்டிக்கொண்டே இருக்கும். தரையில் உள்ள குப்பை கூளத்தையெல்லாம் பொறுக்கிக்கொண்டேயிருக்கும். யானையின் துதிக்கை ஆட்டத்தை நிறுத்த, பாகன் ஒரு குச்சியையோ, சங்கிலியையோ கொடுப்பான். அதைப் பிடித்துக்கொண்டு யானை அமைதியாக துதிக்கையை அசைக்காமல் இருக்கும். அதுபோல மனித மனம் வெளிமுக தேடலில் அலைந்து கொண்டேயிருக்கும் திருப்தியில்லாமல். அதற்கு பக்தி என்கிற ஒரு பிடிமானத்தைக் கொடுத்து விட்டால் போதும்.மனம் அலைபாயாமல் இருக்கும். ஒடுங்கிய மனம் உள்முக தேடலில் மூழ்கி ஞானத்தில் திளைக்கும். அல்லது குறைந்தபட்சம் அமைதியையோ, நிம்மதியையோ அடையும்.
தேவராஜன்.

9. கடவுளை கட்டிப்போடலாம்! தேவராஜன்

9. கடவுளை கட்டிப்போடலாம்! தேவராஜன்
மனிதன் கடவுளை சரணடைந்ததற்கும், கடவுள் மனிதனின் அன்புக்கும், பக்திக்கும் மெச்சி கடவுள் மனிதனிடம் தஞ்சைமடைந்ததற்கு ம் அநேக உதாரணங்கள் இதிகாசங்களிலும், புராணங்களிலும் நிரம்ப காணக்கிடைக்கின்றன. அவற்றுள் மனிதன் கடவுளை தன்னுள் இருத்திக்கொள்ள என்ன வழிமுறை என்று இந்த வார ஆன்மிக சிந்தனையாக பார்ப்போம்!
மனம், நெஞ்சம்,புத்தி, சித்தம் இவை எல்லாம் மேலோட்டமாக ஒரு பொருளைக் குறிக்கும் சொல்போலவே தெரியும். ஆனால், இவை செய்யும் தொழிலில் வேறுபாடுகளைக்கொண்டது. உதாரணமாக,
மனம் தினம் தினம் புதிது புதிதாக ஆசைப்பட்டுக்கொண்டே இருக்கும்.
நெஞ்சம் எப்போதும் பழைய நினைவுகளை மீண்டும் மீண்டும் நினைத்துகொண்டே இருக்கும். புத்தி என்பது எதையாவது ஆராய்ந்து கொண்டே இருக்கும். சித்தம் அதாவது உள்ளம் என்பது சிந்தித்துக்கொண்டே இருக்கும்.
இதில் சித்தம் செய்யும் தொழிலான சிந்தனை என்பது உயர்வான ஒரு விஷயம். சிந்திப்பது என்றால் ஒன்றைப்பற்றி ஆழ்ந்து, மெய்மறந்து சிந்தித்து அதன் இயல்பை தெளிவாக காண்பதாகும். பொதுவாக ஆழ்ந்து, தன்னைமறந்த சிந்தனை எந்தச் செயலில் ஈடுபடும் போதும் இறையுணர்வை அடிப்படையாக கொண்டே ஈடுபடும். இதனாலேயே கடவுள் சித்தம் இருக்கும் இடத்தில் வந்து புகுந்துகொள்கிறான். தன்னை மறந்து சிந்தித்தல் நிகழ்ந்தால் அது அவனது சிந்தனையாக இல்லாமல் கடவுளின் சிந்தனையாகவே மாறிவிடும். இன்று உலகத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட ஆயிரமாயிரம் கண்டுப்பிடிப்புகள் எல்லாம் விஞ்ஞானிகள் ஆழ்ந்து, அதிலேயே தோய்ந்து ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனையில் இருந்தப்போதுதான் புதிதாக ஒன்றை கண்டுப்பிடித்ததாக சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பார்த்தால் ஆக்கப்பூர்வமான செயல்கள் எல்லாம் கடவுள் சிந்தனையாக இருந்தப்போதுதான் நிகழ்ந்து இருக்கின்றன!
சரி, இதை எல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால், கடவுளைக் கட்டிப்போட தயாராகும் போது, கட்டிப்போடக்கூடிய இடத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா? அதனால் கடவுள் நம் உடம்பில் எங்கே இருக்க முடியும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இப்படி ஒரு விளக்கம். மனம் என்பதன் மறுபகுதி நெஞ்சம்.சித்தம் என்பதன் அடிப்பகுதி உள்ளம். இதில் கடவுள் சித்தத்திற்கும் உள்ளத்திற்கும் இடையேதான் வந்து அமர்கிறான்.
"சிக்கெனப்பிடித்தேன். எங்கு எழுந்து அருளுவது இனி?' என்று ஈஸ்வரனைப்பார்த்து கேட்பார் மாணிக்கவாசகர். மாணிக்கவாசகர் ஈசனை தம் உள்ளத்தில் கட்டிப்போட்டுவிட்டதால்தானே அவ்வாறு கூறமுடிந்தது?
மகாபாரதத்தில் ஒரு சம்பவம்.
யமுனை ஆற்றங்கரையில் பஞ்சபாண்டவர்களுடன் பகவான் கண்ணன் உரையாடிக்கொண்டிருக்கும் போது ஒருசமயத்தில் கண்ணன் சகாதேவனிடம்,""சகாதேவா, நீ தான் ஆருடத்தில் ஞானியாச்சே! நடக்கப்போறதை மிக துல்லியமாக கணிப்பவனாச்சே! எங்கே சொல்லு பார்ப்போம். எப்படி மகாபாரத யுத்தத்தை நிறுத்துவது?'' கண்ணன் சொல்லிவிட்டு சகாதேவனைத் தீர்க்கமாய் பார்த்தான்.
கண்ணன் விஷமக்காரன் மட்டுமல்ல; விவகாரமானவன் என்பது சகாதேவனுக்குத் தெரியாதா என்ன? கண்ணன் தன்னை வம்புக்கிழுக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டு,""ஓ, மகாபாரத யுத்தத்தை நிறுத்தமுடியுமே!'" என்று சகாதேவன் சொன்னதும், "" அதெப்படி முடியும்?'' என்று மறுத்தலித்தான், கண்ணன்.
""ஏன் முடியாது? '' என்றதற்கு, கண்ணன், ""எப்படி முடியும்? என்னவழியிருக்கு சொல்!''என்றான்.
"பாராள வேண்டுமானால் கர்ணனுக்கு முடிசூட்டு
அவனைக்கொல்வேன் என்று சபதமிட்டுத்
திரியும் அருச்சுனனை முன்னதாகவே கொன்று விடு
காரார் குழலை விரித்துத் துரியோதனன்
ரத்தத்தால்தான் முடிப்பேன் என்னும் திரவுபதியின்
தலையை மழுங்கக் குழல் களைந்து விடு... '
இப்படி சகாதேவன் காரணங்களை அடிக்கி வைத்தான்.
""அட, இது செய்துவிட்டால் போதுமா? யுத்தம் வராது தானே, சகாதேவா?'' என்று கண்ணன் கேட்டு முடிக்கும் முன்பாகவே, " நேராக உன்னையும் நான் கட்ட முடிந்தால் யுத்தம் வராமல் காக்கலாம்'' என்றான் சகாதேவன்.
இதைக்கேட்டு ஆச்சரியமடைந்த கண்னன், "" என்னை நீ எப்படி கட்ட முடியும்? எங்கே என்னை முடிந்தால் கட்டிப்பார்!'' என்று கண்னன் மண்ணுக்கும் விண்ணுக்கும் விசுவரூபம் எடுத்தான்.
சகாதேவன் கண்னனின் திருவடியை நினைந்து, அவன் நாமத்தை தியானம் பண்ணிக்கொண்டிருந்தான். அவனின் அன்பெனும் பிடியில் கட்டுண்ட கண்ணன்,""சகாதேவா, போதும்! என்னை கட்டியது போதும்.விட்டுவிடு!'' என்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டான்.
சகாதேவன் போல நீங்களும் கடவுளைக்கட்டிப்போட மிக எளிமையான வழி இருக்கிறது. கீழேயுள்ள கட்டத்தை உற்று கவனித்து, மனதில் பதியுங்கள்...
********
படுக்கை வசமாக 6 கோடுகளும், அவைகளின் மேல் நேர்க்கோடுவசமாக 6 கோடுகளும் சம அளவில் கிழித்தால் 25 அறைகள் கொண்ட ஒரு சதுரம் கிடைக்கும். இந்த சதுரத்தைச்சுற்றி ஒரு வட்டம் போடவேண்டும். இதற்கு திருவம்பல சக்கரம் என்றுபெயர். இந்த திருவம்பல சக்கரத்தை மனதில் கற்பனையாக வரைந்து கொண்டு ஒவ்வொரு கட்டத்திலும் படத்தில் உள்ளது போல 1சி, 2வா, 3ய, 4ந, 5ம, இரண்டாவது அடுக்கில்
1ம, 2சி, 3வா, 4ய, 5ந; என்றும் மூன்றாவது அடுக்கில் 1ந, 2ம, 3சி, 4வா, 5ய; என்றும் நான்காவது அடுக்கில் 1ய, 2ந, 3ம, 4சி, 5வா; என்றும் ஐந்தாவது அடுக்கில் 1வா, 2ய, 3ந, 4ம, 5சி என்று மனதுள் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். ஒவ்வொரு அடுக்குக்கும் ஓம் என்று சொல்லி சதுரத்தை சுற்றி வருமாறு சொல்லிவரவேண்டும்.
இவ்வாறு மனதில் ஐந்தெழுத்தையும் அதைச் சொல்லும் முறையை மட்டுமே திரும்பத்திரும்பச் செய்துவந்தால், மனம் நினைக்கும் செயலை இழந்துவிடும். மனம் இப்படி ஒரு நிலைக்கு வரும்போது மனம் சிவத்தன்மையால் நிறையும். சிவத்தன்மை ஏற, ஏற,சித்தத்தில் ஈசன் வந்து அமர்ந்து விடுவான்.
இதை எப்படி நம்புவது என்று சந்தேகம் எழுந்தால், ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் இருக்கிறது. இருளில் கூட்டத்தில் இருக்கும் ஒருவரை குறிப்பிட்ட பெயர் சொல்லி கூப்பிட்டால் அந்தப்பெயரை உடையவர் உங்களை நோக்கி வருவார் இல்லையா? அது போலதான் கடவுள் எங்கே இருக்கிறான்? எப்படி இருக்கிறான்? அவனை மறைக்கும் கோடிக்கணக்கான பொருள்கள் இருந்தாலும், "நமசிவாய' என்று அவன் நாமம் சொல்லி அழைப்பதை அவன் அறிவான். உங்களில் வந்து குடிபுகுவான் என்று நம்புங்கள்!
தேவராஜன்.

8. நானாக நானில்லை நான்! தேவராஜன்

8. நானாக நானில்லை நான்! தேவராஜன்
கடவுளிடமிருந்து தான் நாம் எல்லோரும் வந்திருக்கிறோம். ஆனால் மீண்டும் எல்லோருமே கடவுளிடம் செல்லுவதில்லை. கடவுள் மனிதர்கள் தம்மை விட்டு விலகக்கூடாது; பிரியக்கூடாது என்று தான் என்றுமே பிரியப்படுகிறான். ஆனால் நாம் அப்படிநினைக்கவில்லையே! பிறந்த முதலாய் கடவுளுக்கும் நமக்கான இடைவெளியை ஏற்படுத்திவிடுகிறோம். அடுத்ததாக கடவுள் அமைத்து தந்த பாதையிலிருந்து விலகி, மாற்றுபாதையில் மனம் மறந்து செல்கிறோம். இதை தடுக்கக்கூட கடவுள் வராதபடி பல தடுப்பு சுவர்களை எழுப்பிவிட்டோம். இப்படி நாம் கடவுளுக்கும் நமக்குமான பல தடுப்பு சுவர்களை மனதில் கட்டிவைத்திருக்கிறோம். அவற்றில் ஒன்றை எப்படி அகற்றுவது என்பதை இந்தவார ஆன்மிக சிந்தனையாக பார்ப்போம்.
மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே மறித்து நிற்கும் ஒரு சுவர்தான் நான்! நான் எனும் மமதை, அகம்பாவம் மனிதனை மனிதனாக இருக்கவிடாமல், மிருகமாக வைத்துள்ளது. வேதங்கள், உபநிஷத்துகள், புராணங்கள் எல்லாமே ஒட்டுமொத்தமாய் தொகுப்பாக குரல் கொடுப்பது என்னவெனில் நான் என்பதை அழித்துவிடு. கொன்றுவிடு என்பதுதான்.
மனிதனின் மனதில் நான் கர்வம் ஓங்கி வேறுõன்றிவிட்டால் மனிதனிடம் அன்பு பரிணமிக்காது; பக்தி திளைக்காது; கருணை பிறக்காது; தியாகம் ஊற்றெடுக்காது. ஆனால், நான் என்னும் அகம்பாவத்திலிருந்து காமம், குரோதம், பேராசை, இழிகுணம், சூது, வன்மை, தீமை எல்லாம் கேட்காமலே மனதில் வந்து அமர்ந்து மனிதனை அரக்கனாக்கிவிடும்.
ஒரு துறவியிடம் ஆசி பெற ஓர் அரசன் வந்தான். அவன், "சுவாமி, நான் அரசன்; நான் மக்களின் துயர் துடைப்பவன்; நான் தலைவன்; நான் ஆட்டிவித்தால் இந்த நாட்டுமக்கள் என் சொல்படி ஆடுவார்கள்.' என்று மமதையோடு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, தனக்கு ஆசி வழங்குங்கள் என்றான்.
துறவி அரசனைப்பார்த்து மென்மையாக சிரித்து விட்டு, " இப்போது சமயமில்லை. பிறகு வா.' என்றார். இதைக்கேட்டு ஆணவத்தில் கொதித்த அரசன், " இப்போது இல்லை என்றால் எப்போது உங்களை வந்து பார்த்து ஆசி கேட்பதாம்?' என்றான்.
அரசனின் கோபத்தைக் கொஞ்சம்கூட பொருட்படுத்தாத துறவி, " நான் செத்தப்பிறகு, வா' என்றார்.
என்ன இந்த துறவி சுத்தமடையனாக இருப்பான் போல இருக்கே என நினைத்த அரசன்," நீங்கள் செத்தப்பிறகு நான் எதற்கு வரவேண்டும்?' என்றான்.
"அடே, மூடனே "நான் செத்தப்பிறகு' என்றால் நான் செத்தப்பிறகு அல்ல. வார்த்தைக்கு வார்த்தை நான்... நான்... நான்... என்று ஆணவத்தோடு சொல்கிறாயே, அந்த நான் என்கிற செருக்கு செத்தப்பிறகு வா என்ற அர்த்தத்தில் சொன்னே. போய் வா' என்றார் துறவி. இதைக்கேட்டு அரசன் வெட்கி தலைகுனிந்தான்.
நான் என்கிற ஆணவமலம் அழிந்தால்தான் மட்டுமே நீ இறைவனுக்கு நீ இணக்கமாவாய்; இறைவனோடு இணையப்படுவாய்; அரவணைக்கப்படுவாய்!
நாடெல்லாம் பல வெற்றிக்கொண்ட மன்னன் அலெக்சாண்டர் வரும் வழியில் ஒரு ஞானி அமர்ந்திருந்தார். ஞானியைக்கடந்து சென்றான் அலெக்சாண்டர். எதைப்பற்றியும் லட்சியம் பண்ணாமல் அந்த ஞானி வானத்தையே நோக்கிக்கொண்டிருந்தார். அலெக்சாண்டருக்கு கோபம் மூக்கின் மேல் வந்து அமர்ந்தது. தான் ஓர் அரசன். அதுவும் மாமன்னன். கொஞ்சம்கூட தம்மை ஒருபொருட்டாக கருதாமல், மிக அலட்சியமாக இருந்து, மரியாதை தராமல் இருக்கிறாரே, என்று மனதுள் கருவிக்கொண்டான். இருந்தாலும், வெளிப்படையாக அதைக்காட்டிக்கொள்ளாமல் அவர் ஒரு ஞானியாச்சே! ஆதலால் வந்த கோபத்தை தணித்துக்கொண்டு, அவரிடம் சென்று, " பெரியவரே, அலெக்சாண்டர் வந்திருக்கேன். உங்கள் முன் நிற்பது உலகத்தையே வெல்லும் வலிமைக்கொண்ட மாமன்னன்! உங்களுக்கு நான் எதாவது செய்ய வேண்டுமா? தயங்காமல் கேளுங்கள். எதுவாக இருந்தாலும் செய்கிறேன்.' என்றான் பெருமிதத்தோடு.
அலெக்சாண்டரை கொஞ்சம் தீர்க்கமாய் பார்த்து விட்டு, மவுனம்காத்தார் அந்த ஞானி. அலெக்சாண்டரோ இவர் நம்மிடம் ஏதோ பெரிதாக கேட்கவேண்டும் என்று யோசிக்கிறார் போலும் என்று மனதில் எண்ணிக்கொண்டான்.
கொஞ்சம் நேரம்கழித்து, அலெக்சாண்டரை நோக்கி, " என்னை தொந்தரவு செய்யாமல், என் மேல் படும் அந்த சூரிய ஒளியை மறைக்காமல் கொஞ்சம் ஒதுங்கி நின்றால் போதும்' என்றார்.
இதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு திகைத்து நின்றான் அலெக்சாண்டர்.
ஞானிக்கு நான் என்கிற மமதையில்லை. அவரைப்பொருத்தவரை கடவுள் தான் மிகப் பெரியவன். அலெக்சாண்டர் அவர்முன் ஒரு பொடியன். "நாமார்க்கும் குடியல்லோம் நமனைக் கண்டு அஞ்சோம்!' என்பதின் இலக்கணமாக அந்த ஞானி யாரைக்கண்டும் அஞ்சாமல், எவர் தயவும் நாடாமல் இருக்கும் பக்குவத்தினால்தான் அலெக்சாண்டரிடம் அவர் எதுவும் கேட்கவில்லை.
"நீரோ, நிலமோ,காற்றோ, நெருப்போ, வானமோ இவையின்றி உன்னால் வாழமுடியாது. இது கடவுள் போட்ட பிச்சை! பிச்சைப் பெற்று வாழும் நீ, நான் என்ற ஆங்காரம் கொண்டு நான் அரசன் என்று கர்ஜனை என்கிற பெயரில் என் முன் கூச்சல்போடுகிறாய். எல்லாம் செய்வேன்! எதுவும் தருவேன்! உலகத்தையே வெல்வேன்! எதையும் நினைத்தால் செய்து முடிப்பேன் என்று வெற்றுரை பேசுகிறாயே, கண்ணில் பார்வையில்லை என்றால் அவன் குருடு. அவனுக்கு உன்னால் பார்வைத்தரமுடியுமா? செவிகள் கேட்காவிட்டால் அவன் செவிடு. அவனுக்கு உன்னால் கேட்கும் திறனை கொடுக்க முடியுமா? நாக்கு பிறழாவிட்டால் அவன் ஊமை. அவனை நீ பேச வைக்கமுடியுமா? கை, கால்கள் செயல்படாவிட்டால் அவன் முடவன் அவனுக்கு உன்னால் வேறு கை,கால்களை ஆணையிட்டு கொண்டு வரமுடியுமா? அடே, கிறுக்கா! ஐந்து புலன்களுக்கும் கட்டளையிடுபவன் கடவுள். இதையெல்லாம் கடவுள் ஒருவன் தான் கொடுக்கமுடியும். நான் அரசன்! நான் எதையும் செய்வேன்! என்று நான் நான் நான் என ஆணவத்தில் பெருமைப்பட்டுக்கொள்ளும் உன்னுள் இருக்கும் நான் என்கிற மமதை ஒரு மாயை. அது ஒரு போதை! அது இருப்பது போல இருக்கும். ஆனால் இல்லாதது. இல்லாததை இருப்பதாக எண்ணி உன் ஆத்மாவை காயப்படுத்திக்கொள்ளாதே!' என்று ஞானி சடசடவென வார்த்தைகளைக்கொட்டியதைக்கேட்டு அலெக்சாண்டர் மனம் தெளிந்தான். மமதையை விட்டொழிக்க விரும்பினான்.
அலெக்சாண்டர் தான் இறந்தப்பிறகு என்னை எரியூட்ட கொண்டும் செல்லும் வழியில் என்இரு கைகளை விரித்து வையுங்கள்! அதைப் பார்க்கும் மக்களுக்கு உலகையே வென்ற வீரன், மாமன்னன் அலெக்சாண்டர்கூட போகும் போது ஒன்றும் கொண்டுச் செல்ல வில்லை. வெறும் கையோடு தான் போகிறான்' என்று என்மூலம் பாடம் கற்றுக்கொள்ளட்டும் என்று சொல்லிவைத்திருந்தானாம். எப்படி அலெக்சாண்டரால் இப்படி கூறமுடிந்தது? காரணம் அவனிடமிருந்து நான் விலகியது ஒரு காரணம், அந்த காரணத்தை உருவாக்கிய ஒரு ஞானியைப் பார்த்ததன் விளைவு!
மனிதனிடம் கோபம், செருக்கு ,சுயநலம், குரோதம், காமம், பேராசை, சூது, பொய் இவை எல்லாம் கலந்த கலவையின் தொகுப்பு தான் "நான்' மமதைக்குணம். இந்த மமதையை ஒழித்தால் உன்னிலிருந்து செருக்கு, குரோதம், சுயநலம், ஆணவம் எல்லாம் கரைந்து விடும். இவை எல்லாம் உன்னிலிருந்து விலகிவிட்டால் "நான்' போய் ஞானம் இருக்கும். சாந்தம் இருக்கும். ஆனந்தம் இருக்கும். கருணையிருக்கும். இறுதியில் கடவுளும் இருப்பார்.
தேவராஜன்

7. பேசா எழுத்து வந்ததெப்படி? தேவராஜன்

7. பேசா எழுத்து வந்ததெப்படி? தேவராஜன்
புதிதாக ஒரு பேனா வாங்கியதும் முதலில் போட்டுப்பார்ப்பது பிள்ளையார் சுழியாக இருக்க வேண்டும் என்பது சம்பிரதாயம். புதிதாக கணக்கு தொடங்கும் நோட்டில் முதலில் பிள்ளையார் சுழி போட்டு விட்டு லாபம் என்று எழுத வேண்டும் என்பது வழிவழியாக வந்த பழக்கம். இப்படி நாம் எதை எழுத வேண்டும் என்றாலும் முதலில் பிள்ளையார் சுழி போடுகிறோமே, அது எதற்காக? அதன் காரணம் என்ன? அந்த தலை எழுத்தின் பெயர் என்ன என்பதை இந்த வார ஆன்மிக சிந்தனையாக சிந்திக்கலாம்!
ஒரு மொழியின் கட்டமைப்பு ஆனது எழுத்து, எழுத்துக்கள் சேர்ந்த சொல், சொல்கள் அடுக்கிய வாக்கியம் என்பதாக இருக்கும். இதில் எழுத்து என்பது மொழியின் அஸ்திவாரம் போன்றது. எழுத்து வரி வடிவம் அதாவது எழுத்து வடிவம் மற்றும் ஒலி வடிவம் அதாவது உச்சரிக்கும் பெயர் வடிவம் எனும் இரு அமைப்புகளை உள்ளடக்கியதாக தான் எந்த ஒரு மொழியின் எழுத்தும் இருக்கும்.
தமிழில் ஒரு எழுத்துக்கு எழுத்து வடிவம் இருக்கிறது. ஆனால், அந்த எழுத்துக்கு ஒலிவடிவம் இல்லை. அதாவது உச்சரிக்கும் முறை எதுவென்று தெரியவில்லை. மேலும் தமிழ் எழுத்துக்கள் 247 களில் இந்த எழுத்து சேர்க்கப்படவில்லை. எந்த மொழியிலும் இந்த எழுத்து மொழிக்குரிய எழுத்தாக கூறப்படவில்லை.
இந்த எழுத்தை பேசா எழுத்து, மவுன எழுத்து, மோன எழுத்து, ஊமை எழுத்து என்று கூறுகின்றனர். மற்ற எழுத்துப்போல இந்த எழுத்துக்கு இன்ன பெயர் என்று எதுவுமில்லை என்பதாலும்,ஒலி வடிவம் இல்லை என்பதாலும் இதை தனி எழுத்து, ஓரெழுத்து என்றும் வடமொழியில் ஏகாட்சரம் என்றும் பெயரிட்டு அழைக்கப்படுகிறது.
இந்த எழுத்தை தமிழின் தலைஎழுத்து என்றும் சமய சான்றோர் சுட்டுகின்றனர்.
இவ்வளவு படித்து வந்த உங்களுக்கு அது என்ன எழுத்து என்று தெரிந்து கொள்ள ஆர்வம் வந்திருக்கும் என்பதால் அந்த எழுத்து எது என்பதை சொல்லி விடுகிறேன்.
அந்த எழுத்தை "உ' என்று வடிவம் கொடுத்து எழுதுகிறோம். இந்த எழுத்தை தெய்வ எழுத்து என்றும் பிள்ளையார் சுழி என்றும் வழக்கில் சொல்லி வருகிறோம். உயிர் எழுத்து 12களில்" உ' போல வடிவம் கொடுத்து எழுதிவந்தாலும் அந்த எழுத்தை "உ' என்று உச்சரிப்பதில்லை. இந்த எழுத்து எதிலுமே சேராததால் அதற்கென்று பெயர் இல்லாமல் ஆதி எழுத்தாக இருக்கிறது. வடிவம் கருதி யாரோ சொல்லி வைத்ததை தான் நாம் பிள்ளையார் சுழி என்கிறோம். அதற்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது.
சகல வேதமந்திரங்களும் பிரணவத்தால் தான் ஆரம்பிக்கப்படுகின்றன. பிரணவம் என்றால் ஓங்காரம் ஆகும். அதுபோல நம்முடைய எல்லா காரியங்களும் முதலில் பிள்ளையார் வணக்கத்துடன் ஆரம்பிக்கப்படுகின்றன. ஏனென்றால் நாம் செய்யப் போகும் செயல்களில் தாமதம், தடை, தோல்வி வரக்கூடாது என்பதற்காக பிள்ளையாரை பிரார்த்தனை செய்து விட்டு தொடங்குகிறோம். பிள்ளையாருக்கு விக்னகங்களை தீர்ப்பதால் விக்னேஷ்வரன் என்ற நாமமும் உண்டு.
நாம் எழுதப்போகும் நுõல், சாசனம் தொடங்கும் முன் பிள்ளையார் சுழிப்போட்டுதான் எழுத தொடங்குகிறோம். எதற்காக பிள்ளையார் சுழி போட்டு ஏன் எழுத தொடங்குகிறோம் என்றால் பிள்ளையார் சுழி போடுவது என்பது பிள்ளையாரை வணங்குவதற்கு சமம் என்று ஒரு நம்பிக்கையில் தான்.
பிள்ளையார் சுழி என்பது இறைவனின் திருவடி நினைவுக்குறி என்றும் சொல்வோர் உண்டு. பிள்ளையாரின் துதிக்கை வடிவம் என்றும் கருதுவோரும் உண்டு. பிரணவம் போல இதுவும் பேசா பிரணவம் என்ற கருத்தும் இருக்கிறது.
சங்ககாலத்தில் பிள்ளையார் வழிபாடு இல்லை என்றும் பிள்ளையாரே இல்லாத போது பிள்ளையார் சுழி மட்டும் வந்தது எப்படி என்று சிலர் ஆராய்ந்திருக்கின்றனர். கணபதி வழிபாடு பல்லவர் காலத்தில் தான் ஏற்பட்டிருக்கிறது. இப்போது நாகை மாவட்டத்தில் இருக்கும் திருசெங்காட்டாங்குடி என்ற ஊரில் முன்பு வாழ்ந்த பரஞ்சோதி, பல்லவ மன்னரின் படைத்தளபதியாக இருந்தபோது வாதாபியில் போரில் வெற்றிப்பெற்றதன் நினைவாக அங்கிருந்து கணபதி கடவுளை சோழநாட்டுக்கு எடுத்து வந்தார் பரஞ்சோதியார். அந்த கணபதியை அவர் ஊரான திருசெங்காட்டாங்குடியில் பிரதிஷ்ட்டை செய்து கணபதி வழிபாடு செய்து வந்திருக்கின்றனர். அவரை பின்பற்றி மக்களும் கணபதியை வழிபாடு செய்து வந்துள்ளனர். ஆக கணபதி வழிபாடு தமிழ் நாட்டிற்கு வரும் முன்பே பிள்ளையார் சுழி போட்டு எழுதும் பழக்கம் இருந்திருக்கிறது. அப்படி பார்த்தால் அது பிள்ளையார் சுழி என்று பின்னர் வந்தவர்கள்தான் பெயரிட்டிருக்க வேண்டும். அது "பேசா எழுத்தாக தான்' இருந்திருக்கிறது.
ஒரு சிலர் முன்பு பனை ஓலையில் எழுத எழுத்தாணி கூராக இருக்கவேண்டும். கூராக இருக்கும் எழுத்தாணியைக் கொண்டு அதிகம் உலராத ஓலையில் எழுத முடியாது. அதனால் எழுதுவதற்கு ஓலை பதமாக இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்க்கவே சும்மா வட்டமிட்டு சுழித்து பார்த்திருக்கிறார்கள். அந்த கிறுக்கலை தான் பிள்ளையார் சுழி என்று கூறிவந்திருக்கிறோம். என்று சொல்வோரும் உண்டு.
எப்படிவேண்டுமானாலும் இருக்கட்டும் அவரவர் கருத்துகள். நம்முடை நம்பிக்கை மற்றும் பழக்கம் எல்லாம் அர்த்தம் கொண்டதாகவே இருக்கும். ஏனெனில் நம் முன்னோர்கள் பரிசீத்துப்பார்த்து, அவர்கள் காரியங்களில் நன்மைகள் ஏற்பட, ஏற்பட தானே அதை படிப்பினையாக கொண்டு எழுத தொடங்கும் முன் பிள்ளையார் சுழி போடும் பழக்கத்தை நமக்கு தந்து சென்று இருக்கிறார்கள்.
எப்படியோ இறைவனை நினைவுகூறும் ஒரு எழுத்தும் இறைவனை ஒத்து பேசாதிருக்கும் குணம் கொண்டு அது வும்"பேசா எழுத்தாக, மோன எழுத்தாக, ஊமை எழுத்தாக' இருக்கிறது என்பது ஆச்சரியம் தானே!
தேவராஜன்

6. ஏகன் அனேகன் இறைவன்! தேவராஜன்

6. ஏகன் அனேகன் இறைவன்! தேவராஜன்
ஈஸ்வரன், கிருஷ்ணன்,ராமன்,முருகன், விநாயகர்,ஆஞ்சநேயர் என பலவாறாக இறைவனாக வழிபடுகிறோம். அவரவர்களுக்கு இஷ்டமான இறைவனை வழிபட்டு இறைஅனுபூதி பெற்றவர்கள் அனேகம். ஈஸ்வரனை வழிப்பட்டு ஈசனுக்கு பிரியமானவர்கள் நாயன்மார்கள். கிருஷ்ணனை வழிபட்டு கிருஷ்ணனின் அருளைப்பெற்றவர்கள் ஆழ்வார்கள். இப்படி ஒவ்வொரு தெய்வத்தையும் நம்பி வழிபாடு செய்து அந்ததந்த இறைவனால் அருள்பெற்றிருப்பதால் எந்த தெய்வத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது.
ஆக, எந்த தெய்வத்தை நம்பி வழிபாடு செய்தாலும் இறையருள் பெறுவது திண்ணம் என்றால் பக்தர்களுக்கு ஒரு சந்தேகம் எழும். எந்த தெய்வம் உசத்தி? எந்த தெய்வத்தை வழிபட்டால் உடனடி விமோசனம் கிடைக்கும்? என்ற கேள்விகள் எழுவதோடு மேலும்,
இறைவன் ஒருவனா? ஒன்றுமேற்பட்டவனா? என்பதில் சிலருக்கு குழப்பம் இருக்கிறது.உலகம் எங்கும் எத்தனை ஆயிரம் கோயில்கள்.எத்தனை ஆயிரம் தெய்வங்கள்.அதற்கு தான் எத்தனை நாமங்கள், உருவங்கள். இதில் எத்தனை மதங்கள், எத்தனை வழிபாடு முறைகள்? இப்படி ஒரு நாட்டுக்கொரு இறைவன், ஒரு மதத்திற்கொரு இறைவன், ஒவ்வொரு மொழி பேசும் மக்களுக்கு ஒரு இறைவன்,குறிப்பிட்ட சாதிக்கொரு இறைவன், ஒவ்வொரு குடும்பத்திற்கு ஒரு குலதெய்வம் என்றெல்லாம் இறைவனை பல வாறாக வழிபடுகிறோமே அப்படி என்றால் இறைவன் ஒருவன் இல்லையா? என்று சந்தேகம் எழுகிறதல்லவா? ஆனால் ,அவதாரபுருஷர்களும் ஞானிகளும் இறைவன் ஒருவனே! என்கின்றனர். சாமானிய மக்களாகிய நமக்கு ஒன்றும் புரியவில்லை. எப்படி ஞானிமார்கள் மட்டும் இறைவன் ஒருவனே என்று உறுதியாக கூறுகின்றனர். எவ்வாறு என்பதை இந்த வார ஆன்மிக சிந்தனையாக சிந்திப்போம்!
இறைவனுக்கு இயல்பாகவே வடிவமில்லை; அவனை மனதாலும்,வாக்காலும் எட்டுவதற்கரியவன் என்று வேதம் சொல்லுகிறது. இருந்தாலும், அவனுடைய வடிவை பலவாறு கோயிலிலும்,வீட்டிலும் பூஜிக்கிறோம். அதற்கு காரணமும் இருக்கிறது. நாம் உண்ணும் உணவு வயிற்றுக்குத்தான் போகிறது. வயிறுபசியை தீர்க்கிறது. அப்படி என்றால் எல்லாரும் ஏதேனும் ஒரு உணவு வகையை மட்டுமே சாப்பிட்டால் என்ன? பிறகு ஏன் பல உணவு வகைகளை சாப்பிடுகிறோம்.மானம் காக்கத்தான் ஆடை. அதற்கு தானே ஆடை அணிகிறோம். அப்படி பார்த்தால் எல்லாருமே ஒரு வகை, ஒரே நிற ஆடையை அணிந்துகொண்டால் என்ன? பதில் சொல்ல முடிகிறதா? ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகை உணவு, உடை பிடித்திருக்கிறது. அது போல ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு வகையான இறைவடிவம் பிடித்திருக்கிறது. அதற்கேற்றார் போல இறைவனும் பல வடிவங்களில் நுழைகிறான்.
"ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க!' என்று மாணிக்க வாசகர் சிவனின் புராணத்தை சொல்லும் போது ஈஸ்வரனை இப்படி அழைத்து வணங்கு கிறார். ஏகம் என்றால் ஒன்று. அனேகம் என்றால் பல. ஆக இறைவனை ஒருவனாக இருப்பவனும், பலவாக இருப்பனும் ஆன ஈஸ்வரா உன் பாதக்கமலம் வாழ்க என்று வழிபடுகிறார். ஆக மாணிக்கவாசகருக்கும் இறைவன் ஒருவனாக மட்டுமல்ல பலவாகவும் இருக்கிறான் என்று நம்புகிறார் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. மாணிக்க வாசகர் இறைவனை ஒருவராகத்தான் பாவித்தார்.
எங்கள் ஊர் கோயிலுக்கு வந்த சமய சொற்பொழிவு செய்த ஒருவர் இறைவன் ஒருவனே என்பதற்கு உதாரணமாக சொல்லும் போது "நாகராசன்' இவர் ஒருவர். ஆனால் நாகராசன் தன் தந்தைக்கு மகன். தன் தம்பிக்கு அண்ணன். மனைவிக்கு கணவன். பிள்ளைகளுக்கு தந்தை. பேரனுக்கு தாத்தா. ஆக, நாகராசன் என்கிற ஒருவர் எப்படி உறவுகளுக்கு ஏற்ப மகனாக,அண்ணனாக,கணவனாக, தந்தையாக, தாத்தாவாக பல பெயர் பெறுகிறார். பல பெயர்கள் ஒருவர் பெறுவதால் அவர் பலரா? என்று விளக்கி, இறைவன் என்பவன் பல நாமங்களில், பல ரூபங்களில் இருந்தாலும் ஒருவனே என்று எளிமையாக விளக்கினார். அவர் சொன்ன உதாரணம் என்னவோ புரியும் படிதான் இருந்தது.
இந்த உதாரணத்தில் கூட கொஞ்சம் குழப்பம் வரத்தான் செய்யும். எப்படி எனில், நாகராசன் என்பவர் ஒருவராக இருந்தப்போதும் அவர்காட்டும் அன்பு உறவுக்கு ஏற்ப மாறக்கூடும். அம்மாவிடமும் மனைவியிடமும் காட்டும் அன்பு ஒன்றுபோல இருக்காது. தன் தம்பியிடம் காட்டும் உரிமைக்கும் தன் மகனிடம் காட்டும் உரிமைக்கும் வித்தியாசம் உண்டு. அப்படி பார்த்தால் இறைவனும் உருவம், நாமங்களுக்கு ஏற்ப பக்தர்களுக்கு அருள்பாலிப்பதில் வேறுபடுவதாக கருதக்கூடும்.
அடுத்ததாக மிகச்சிறந்த இரு உதாரணங்கள் இறைவன் பலவாக தெரிந்தாலும் இறைவன் ஒருவனே என்று எடுத்தியம்புகின்றன.
ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை சில்லு சில்லாக உடைத்து தரையில் பரப்பி வைத்து விட்டு அதை உற்று பாருங்கள். ஒவ்வொரு சில்லிலும் உங்கள் முகம் பிரதிபலிக்கும். உங்களுக்கு இருப்பது ஒரு முகம் தானே! ஆனால் ஒவ்வொரு கண்ணாடி சில்லிலும் ஒரு முகம் தெரிகிறதே! அப்படி என்றால் உங்களுக்கு பல முகங்களா இருக்கிறது?
ஆற்று நீரில் நுரை பொங்கி கரையோரம் ஒதுங்கும். அந்த நுரையில் ஒவ்வொரு குமிழிலும் கரையில் உள்ள மரம் காட்சியாகும். இருப்பது ஒரு மரம். ஆனால் அத்தனை நுரை குமிழிழும் தெரிவதால் பல மரங்கள் என்றா சொல்ல முடியும்?
ஒரு முகம், ஒரு மரம் என்பதும் உண்மை. அதே சமயம் கண்ணாடி சில்லில் தெரியும் பல முகங்களும், நுரையில் காட்சியாகும் பல மரங்களும் உண்மை. ஆக, கண்ணாடி சில்லுவில் தெரியும் முகத்திற்கும், நுரையில் விழுந்த மரம் பிம்பத்திற்கும் ஆதாரமாக இருப்பது உண்மையான ஒன்று. அந்த ஒன்று இல்லாமல் பல இல்லை. ஆதலால் ஒன்று தான் பல வாக தெரிகிறது. பலவானதை தொகுத்தால் ஒன்றாகும். எனவே இறைவன் ஒருவன் என்பதே உண்மையாகும். இறைவன் பல என்பது காட்சிப்பிழை அல்லது மாயபிம்பம் ஆகும். இதை தான் நாட்டுப்புறத்தில் "ஹரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவன் வாயில் மண்ணு' என்பர்.
இதை புரியும் படி சொல்வதென்றால் இறைவன் உருவமில்லாதவன். உருவமில்லாதவனை எந்த உருவத்தில் வழிபட்டாலும் அது எல்லாம்வல்ல ஒருவனைத் தான் சாரும். எந்த நாமங்கள் சொல்லி வழிபட்டாலும் அந்த ஒலியும் ஓசையும் ஒருவனையே சென்றடையும்.
நீங்கள் உலகின் எந்தப் பரப்புகளில் இருந்து தோன்றும் ஆற்றில், நதியில் பயணப்பட்டாலும் முடிவில் கடல் என்கிற பரந்துபட்ட ஒன்றில் தான் சங்கமம் ஆகமுடியும். ஆறும், ஊரும் வேறாக இருந்தால் என்ன? அவை உங்களை கடல் என்கிற ஒன்றில் தானே இணைக்கிறது. அதுபோல தான் நீங்கள் எந்த தெய்வங்களை வழிபட்டாலும் உங்கள் பிரார்த்தனை ஒன்றாகிய இறைவனை தான் சென்றடையும். ஒரு பொருள் குறித்த வார்த்தை மொழிகளுக்கு ஏற்ப ஒலியில் மாறுபடும். ஆனால் அர்த்தத்தில் ஒரு போதும் மாறுபடுவதில்லை. அது போல தான் இறைவனும். ஆதலால் இறைவன் ஒருவனே! என்பதை மனதில் நிறுத்துங்கள். அதே சமயம் நீங்கள் எந்த வடிவில், எந்த பெயரில் இறைவனை வழிபட்டாலும் அது ஒன்றாகி ஈசனை வழிபட்டதாகவே அர்த்தம் ஆகும். நாம் வழிபடுவதுதான் முக்கியம். எந்த தெய்வத்தை என்பதல்ல.
தேவராஜன்

5. சொர்க்கம் செல்ல பெயர் பதிவு செய்துவிட்டீர்களா? தேவராஜன்

5. சொர்க்கம் செல்ல பெயர் பதிவு செய்துவிட்டீர்களா? தேவராஜன்

நாம் இந்தப் பூமியில் பிறந்தவுடன் நமது இருப்புக்கான, வாழ்வுக்கான ஆதாரமாக நமது பெயர் பதிவு செய்யப்படுகிறது. அடுத்ததாக, கல்வி கற்பதற்கு பள்ளிக்கூடம் போகும் போது நம் பெயர் பதிவு செய்யப்படுகிறது. நிலம் வாங்கும் போதும், வீடு வாங்கும் போதும், தண்ணீருக்காகவும் நம் பெயர் பதிவு செய்யப்படுகிறது. வாகனங்களுக்கு உரிமம் வாங்கும் போதும், வாகனம் ஓட்டுவதற்கு லைசன்ஸ் வாங்கும் போதும் நம் பெயர் பதிவு செய்யப்படுகிறது. ரேஷன் கார்டு, கேஸ் இணைப்பு வாங்கும் போதும், வேலை வாய்ப்புக்கு பதிவு செய்யும் போது,வெளிநாடு செல்ல பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை வாங்க என இங்கே தற்காலிகமாக வாழ்வதற்கு ஆயிரத்தெட்டு முறை நம் பெயரை பதிவு செய்துள்ளோம். ஆனால், நம்மை படைத்த இறைவன் வசிக்கும் சொர்க்கத்தில் நாம் வசிக்க, இறைவனின் திருகமலத்தில் இருக்க நம் பெயரை பதிவு செய்து இருக்கிறோமா? என்பதை இந்த வார ஆன்மிக சிந்தனையாக சிந்திப்போம்.
எப்படி நாம் வெளிநாடுகளுக்குச் செல்ல பாஸ்போர்ட், விசா தேவைப்படுகிறதோ, அதுபோல நாம் சொர்க்கம் செல்வதற்கு ஆன்மிகம் என்கிற பாஸ்போட்டும்,பக்தி என்கிற விசாவும் தேவை. இவைகளை பெற பல வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வழிமுறைகளை நமது வேதமும்,மதமும், இதிகாசமும், புராணங்களும் எடுத்துச் சொல்கின்றன. அந்த வழிமுறைகளில் சென்று கோயிலில் இறைவனை தரிசித்து, நாம் இறைவனின் அன்புக்கு ஆளானால், இறைவன் பக்தர்களுக்கு சொர்க்கம் செல்ல விசா கொடுத்தருள்வான்.
பக்தி என்பது மனிதனாக பிறந்த யாவருக்கும் வேண்டிய ஒன்றாகும். பக்தியை குழந்தைப் பருவம் முதல் செய்ய பழக வேண்டும். பக்தியை முதுமையில் தான் செய்ய வேண்டும் ஒரு போதும் கருதகூடாது.
உலகத்தில் பெரும்பாலோர் நல்ல வீடு, கவுரவமான வேலை, திரண்ட செல்வம், அழகான மனைவி, அறிவான குழந்தைகள், ஆரோக்கியம்,சந்தோஷம், நிம்மதி இவைகளைப் பெறுவதற்கு தான் பக்தி என்று எண்ணிக்கொள்கின்றனர். இவைகளை பக்தி செய்தால் பெறலாம் என்பது உண்மை ஒருபுறம் இருந்தாலும், இவைகளைப் பெறுவதற்காக மட்டுமே பக்தி செய்வது என்பது அர்த்தமல்ல.
ஒரு சிலர் "அட, நான் இப்போ சகல வசதிகளுடன் சந்தோஷமாகத்தானே இருக்கிறேன். பாசமுள்ள பெற்றோர், அன்பான மனைவி, அழகான குழந்தைகள், சொகுசு பங்களா, பெரிய கார், கைநிறைய சம்பளம்... இப்படி எல்லாம் நிறைவாக தானே இருக்கிறது! வாழ்க்கை குதுõகலமாக தானே போய்கிட்டு இருக்கு. பின் எதற்கு நான் பக்தி செய்ய வேண்டும்? வாழும் வாழ்வே சொர்க்கமாக இருக்கும் போது, சொர்க்கம், மோட்ஷம், கைலாஷம், வைகுண்டம் எல்லாம் எதற்கு? என்று கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்த வாழ்க்கை இத்துடன் முடிந்து விட்டால் பரவாயில்லை. எடுத்தப்பிறவி மண்ணுலக வாசத்தோடு முற்றுபெற்றுவிட்டால் நீங்கள் நினைப்பது சரிதான். எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து விட்டு போகலாம். ஆனால், நிலைமை அப்படி இல்லையே! இறப்புக்குப் பிறகு, நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப கடவுளின்நியாய தீர்ப்பு ஒன்று இருக்கிறதே. நாம் புரிந்த நல்லது, கெட்டதுக்கு ஏற்ப நரகமோ தண்டனையோ, சொர்க்கம் எனும் வெகுமதியோ கிடைக்க உள்ளதே. அதனால் தான் நரகம் சென்று தண்டனை அனுபவிக்காமல் இருக்கவும், அதே சமயம் சொர்க்கம் செல்ல பக்தி செய்யவேண்டும். சொர்க்கம் செல்வதற்கு பக்தியின் மூலம் நம் பெயரை முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இன்று சந்தோஷமாக இருக்கலாம். நிம்மதியாக இருக்கலாம். சகல வசதிகள் இருக்கலாம்.ஆனால், அது நிச்சயமானது என்று எப்படி உங்களால் நினைக்க முடியும்? நாளை என்ன நடக்கும் என்று உங்களுக்கென்ன தெரியும்? எல்லாம் படைத்தவன் கையில் அல்லவா இருக்கிறது. நாளை உங்களுக்கு எந்த கஷ்டமும் வராது என்று எப்படி முடிவு செய்ய முடியும்? ஆதலால், இப்போது இருக்கும் வசதி,வாய்ப்பு, சந்தோஷங்கள் நிலைத்திருக்க பக்தி செய்துதானே ஆகவேண்டும்?
சிலர் இன்று வறுமையில் இருக்கலாம். கஷ்டப்படலாம். என்னடா இது வாழ்க்கையே நரகமாச்சே! என்று நொந்து கொண்டு என்னத்த பக்தி செய்து என்னத்த ஆகப்போகுது என்று மனம் வெம்பி கடவுளையும் பக்தியையும் புறக்கணித்தல் முட்டாள் தனமான செயலாகும். ஏனென்றால் நாளை என்பது நம் வசம் இல்லையே... ஒரு வேளை நாளை அப்படியே வாழ்க்கை தலைகீழாக மாறலாம். வறுமை அகலலாம்; கஷ்டம் தீரலாம். நம்பிக்கையோடு பக்தி செய்து வந்தால் நல்லது நடக்கும். எனவே கஷ்டத்தில் இருப்பவர்களும் சரி; சந்தோஷத்தில் இருப்பவர்களும் சரி பக்தி செய்துதான் ஆகவேண்டும்.
இந்த இரு சாரார் அல்லாத இன்னொரு பிரிவினரும் இருக்கின்றனர். அவர்கள் தங்களை நாத்திகவாதிகள் என்று சொல்லிக்கொள்வார்கள். அவர்கள் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் புருடா பொய் என்று நம்புகின்றனர். இவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். உங்கள் நம்பிக்கை சரியா, தவறா என்பதை வரும் காலம் உணர்த்தும். ஆனால், சின்ன உபாயம் இருக்கிறது. வானிலை அறிக்கையில் மழை வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. குடை கொண்டு போங்கள் என்று வலியுறுத்துகின்றது. நீங்கள் வீட்டை விட்டு கிளம்பும் போது குடைகொண்டு போங்கள். மழை வந்து விட்டால் குடை கொண்டு நனையாமல் வீடு வந்து சேரலாம். ஒருவேளை மழை வராது போனால் ஒன்றும் மோசமில்லையே... குடையை அப்படியே எடுத்து வந்து விடுங்கள். இந்த குடையை சுமக்கவா உங்களுக்கு சிரமம்? இங்கே நான் குடை என்று குறிப்பிட்டிருப்து பக்தியைத் தான் என்பது உங்களுக்கு விளங்கி இருக்கும்.

3. கோயில் எழுப்பினால் கோடிப்பிறப்பு புண்ணியம்! தேவராஜன்

3. கோயில் எழுப்பினால் கோடிப்பிறப்பு புண்ணியம்! தேவராஜன்

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் தரும் என்பர். தரிசனம் செய்வதற்கே இவ்வளவு புண்ணியம் எனின் கோயில் எழுப்பினால் கேட்கவேண்டுமா என்ன, நிச்சயம் கோடிப்பிறப்பு புண்ணியம் கிடைக்கும்.
இன்று வரை சோழமன்னர்கள் இன்னும் பிற மன்னவர்கள் வரலாற்றில் மட்டுமல்ல, மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே, எப்படி? அவர்கள் வீரர்களாக,அதிகார செல்வாக்குபெற்றிருந்ததினாலா, பல நாடுகள் வெற்றிகண்டதினாலா? தான தர்மம் செய்ததாலா? இவை எல்லாம் ஒரு காரணமாக இருந்தாலும், அவர்கள் காலத்தால் அழியாத பல கோயில்களை எழுப்பியதால்தான் அவர்கள் புண்ணியமும், நீங்கா புகழையும் அடைந்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் மக்கள் மனங்களில்.
அதெல்லாம் சரி, காசே கடவுளாக நினைக்கிற இந்தக் காலத்தில் சாமானியர்களால் கோயில் எழுப்புவதெல்லாம் நடக்கக்கூடிய செயலா என நினைத்து விடவேண்டாம். சிதலமடைந்த கோயில்கள் எழுப்ப உங்களால் முடிந்த நன்கொடைகளை கொடுங்கள். புதிதாக யாராவது கோயில் எழுப்பினால் உங்கள் பங்குக்கு இயன்றளவு உதவுங்கள். அதுபோதும். கோயில் எழுப்ப கோடீஸ்வரரால் மட்டும்தான் முடியும் என எண்ணவேண்டாம்.
கோயில் எழுப்பினால் உண்டாகும் பலன்கள் என்ன என்பதை இந்த வார சிந்தனையாக தெரிந்து கொள்வோம்.
இறைவனுக்கு கோயில் எழுப்ப யாரொருத்தர் முயற்சிகளில் ஈடுபடுகிறார்களோ அவர்களுக்கு, ஆயிரம் பிறப்புகளில் தான் செய்த பாவங்களிலிருந்து விடுபடுகிறார்கள்.
கோயில் எழுப்ப வேண்டும் என்று ஒருவன் ஆசைப்பட்டாலோ, தன் மனதில் எண்ணினால்கூட, அவன் நுõறு பிறப்புகளில் செய்த பாவங்களில் இருந்து விமோசனம் பெறுகிறான்.
கோயில் எழுப்ப ஒருவன் மேற்கொண்ட முயற்சிகளை, திட்டங்களை எவனொருவன் ஆதரிக்கிறானோ, அவன் கூட பாவங்களில் இருந்து விடுபடுகிறான்.
சிவனுக்கு கோயில் எழுப்பிய பல்லவன் காடவர்மன் மன்னனுக்கும், அதே சமயம் நினைவாலேயே கோயில் எழுப்பிய பூசலாருக்கும் ஈசன் அருள்புரிந்தமையை நாம் படித்திருப்போம்.
கோயில் எழுப்பினாலும் சரி, கோயில் எழுப்ப விருப்பப்பட்டாலும் இறைவன் பேதமில்லாமல் ரட்சிக்கிறான் என்பதற்கு ஒரு கதை சொல்கிறேன்:
ஒரு நாட்டில் கண்ணப்புரத்தான் எனும் மன்னன் சோழ தேசத்தை நீதி, நெறி, நேர்மையோடு ஆட்சி செய்து வந்தான். அவன் அரண்மனையில் ஒரு வாயில் காப்போன் மருதன் சேவகம் செய்து வந்தான். நீண்ட நாள் குழந்தைச் செல்வம்இல்லாமல் இருந்த மன்னருக்கு இறைவன் அருளால் ஒரு ஆண் குழந்தைப் பிறந்தது. அதே நாளில், அதே நேரத்தில் வாயில் காப்போனுக்கும் ஒரு ஆண்குழந்தை பிறந்தது.
இருவருமே ஒரே நாளில் பிறந்ததால் மன்னனுக்கு வாயில்காப்போன் மகன் மீதும் பிரியம் உண்டு.
அந்த இரண்டு பிள்ளைகளுமே வளர்ந்து, வாலிப பருவம் எய்தினார்கள். ஒரு அமாவாசை நாளில் மன்னரின் மகனுக்கு திடீரென்று கை,கால் வலிப்பு ஏற்பட்டது. கொஞ்ச கொஞ்சமாய் மேலும் உடல் நிலை பாதிக்கப்பட்டது. அதை சமயத்தில் வாயில்காப்போன் மகனுக்கும் கை,கால் வலிப்பு ஏற்பட்டு அவனும் படுத்த படுக்கையானான். ஆறு மாதங்கள் ஓடின. அரண்மனை வையித்தியரால் மன்னர் மகனை குணப்படுத்த முடியவில்லை. என்ன நோய் என்றும் கண்டுபிடிக்கவில்லை.
வரம்பெற்ற வந்த பிள்ளை இப்படி படுக்கையில் கிடக்கிறானே என மன்னர் புலம்பினார்.
அதே சமயம் வாயில்காப்போன் மகனின் பிறந்த ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அரண்மனை ஜோதிடரிடம் காட்டி மகன் பிழைப்பான? பிழைக்க மாட்டானா என அறிந்து வர ஜோதிடரைக்காண காடு கடந்து சென்றான்.
ஜோதிடர் ஜாதகத்தைப்பார்த்து அதிர்ந்து போனார். இந்த ஜாதகத்துக்கு உள்ள தோஷத்துக் இவனால் பரிகாரம் பண்ணமுடியாதே என நினைத்த ஜோசியர், ""இன்னும் ஒரு மண்டலம் கழித்து வா, பரிகாரம் சொல்கிறேன். இப்போ போய் வா.'' என்றார்.
வாயில்காப்போன் கிளம்பிய கணத்தில், மன்னரும் தன் மகனுக்கு ஜோதிடம் பார்க்க வந்தார்.
ஜோதிடர் மன்னர் மகனின் ஜாதகத்தைப் பார்த்து அதிர்ந்து போனார். காரணம் வாயில்காப்போன் மகனின் ஜாதகமும், மன்னர் மகன் ஜாதகம் ஒன்றுபோலவே இருந்தது. ஜாதகம் கணித்த ஜோதிடர், ""அரசே, இது பிரமஹத்தி தோஷமும்,பித்ரு தோஷமும் இருக்கு. இந்த தோஷம் கழிய நீங்க ஒரு சிதிலமடைந்த கோயிலை புதுப்பித்து ஒரு மண்டல நாளுக்குள் கும்பாபிஷேகம் பண்ணிவிட்டா போதும் உங்க மகன் பிழைத்து விடுவான்'' என்றார்.
அரண்மனை வந்த மன்னர் நாட்டில் சிதிலமடைந்த கோயிலை எல்லாம் புதுபிக்க ஆணையிட்டார். மன்னரின் உத்தரவுபடியே நாட்டில் இருந்த பத்துக்கும் மேலான கோயில் 48 நாட்களுக்குள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது. அடுத்த ஒரு வாரத்தில் மன்னரின் மகன் பிழைத்துவிட்டான். அதே சமயம் வாயில் காப்பவனின் மகனும் உயிர்ப்பிழைத்து விட்டான். அவன் எப்படி பிழைத்தான்?
தேவராஜன்


4. கோயில் எழுப்பினால் கோடி புண்ணியம்2 தேவராஜன்
நம் மகன் தோஷம் கழிக்க கோயில்களுக்கு கும்பாபிஷேகம் பண்ணினோம். மருதன் என்ன செய்தான் அவன் மகன் பிழைத்தது எப்படி? ஒருவேளை ஜோதிடன் பொய் சொல்லிவிட்டானா? அரணமனைக்கு ஜோதிடரை அழைத்துவர மன்னர் உத்தரவிட்டார்.
சபையில் ஜோதிடர் உயிர்பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தார்.
""ஜோதிடரே, என் மகனும், வாயில்காப்பவன் மருதன் மகனும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் பிறந்தவர்கள். ஒரே மாதிரி தோஷமிருந்து நோய்வாய்ப்பட்டார்கள். என்மகனுக்கு கோயில் புதுப்பித்து, கும்பாபிஷேகம் செய்ததினால் தோஷம் கழிந்து மகன் பிழைத்து விட்டான். எந்த கோயிலும் கும்பாபிஷேகம் செய்யாத மருதன் மகன் பிழைத்தது எப்படி? காரணம் சொல்லா விட்டால் உன் தலை <உருளும்'' என்றார்.
ஜோதிடருக்கு ஒண்ணுமே புரியவில்லை. மருதனின் மகன் தோஷம் கழிக்காமல் பிழைத்திருக்க முடியாது என்ற உறுதியில் இருந்த ஜோதிடர், மன்னரிடம் ''அரசே, என் கணிப்பு ஒரு போதும் பொய்ப்பதில்லை. ஆதலால் நிச்சயமாக மருதன் ஒருகோயில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணித்தான் இருக்கவேண்டும்'' என்றார். இதைக்கேட்டு சபையில் உள்ளோர் சிரித்தார்கள்.
மருதனிடம் விசாரித்தனர். எப்படி உன் மகன் பிழைத்தான்? கேள்விகள் மருதனை வட்டமடித்தன. அப்போது தான் மருதனுக்கு ஞாபகம் வந்தது. அன்று நடந்ததை விவரித்தான்.
""ஜோதிடரைப் பார்த்துட்டு வீட்டுக்கு வர காட்டுவழியில வந்துக்கிட்டு இருந்தப்போ திடீர்ன்னு மின்னலும் இடியுமா மழை பெய்தது. மழை விடவேயில்ல. சரி ஒதுங்க இடம் கிடைக்குமான்னு அக்கம் பக்கம் பார்த்தேன். கொஞ்சதுõரத்துல ஒரு பழைய கட்டடம் தெரிஞ்சது. அங்கே போயி பார்த்த அது பாழ் அடைந்த கோயில். இருட்டிவிட்டதால அங்கே தங்கிட்டேன். குளிர்ல கொஞ்சம் கண்ணயர்ந்து இருந்தப்போ. நாம மட்டும் செல்வந்தரா இருந்தா, ஒரு அரசரா இருந்தா இந்த பாழடைந்த கோயிலைக்கட்டி கும்பாபிஷேகம் பண்ணலாம் நாம தான் பஞ்சபரதேசியாச்சே! என்று எண்ணிக்கொண்டேன்.
அந்த நெனப்பிலே படுத்துட்டதால கனவிலேயே நான் ஆசப்பட்டப்படி அந்த கோயில கட்டி கும்பாபிஷேகம் வரை செஞ்சிட்டேன். கனவு முடிந்து பார்த்தா பொழுது விடிந்து விட்டது. வீட்டுக்கு வந்துட்டேன். நடந்தது இது தான்'' மருதன் சொல்லி முடித்தான்.
மருதன் சொல்லியதை வைச்சு சுதாரித்துக்கொண்ட ஜோசியர்,""அரசே, நீங்க செல்வ பலம்,ஆள்பலம்,அதிகார பலம் இருப்பதால சிதிலமடைஞ்ச கோயில புதுப்பித்து கும்பாபிஷேகம் பண்ணிட்டீங்க. ஆனா மருதன் சாமானிய மனுஷன் அவனால அது முடியாமா? இருந்தாலும் அக்னி புராணத்தில கோயில் எழுப்பினாலும், கோயில் எழுப்ப விரும்பினாலே ஆயிரம் பிறப்பு பாவங்கள் போய்விடும்ன்னு சொல்லியிருக்கு. அந்த வகையில தான் மருதன் மகனும் உயிர் பிழைத்திருக்கான்'' என்றார்.
""அப்படியா?'' என ஆச்சரியப்பட்ட மன்னன் ""அக்னி புராணத்தில் கோயில் எழுப்பினால் வரும் பலன்களை சொல்லு'' என்றார்.
ஜோசியர் சொல்ல ஆரம்பித்தார்.
கிருஷ்ணனுக்குக் கோயில் எழுப்பியவனுடைய மூதாதையர்கள் நரகத்தில் இருந்து விடுபடுவர். அவர்கள் சந்தோஷமாய் விஷ்ணு லோகத்தில் வாழ்வார்கள். ஆலயம் எழுப்புவதால் பிருமஹத்தி பாவம் விலகிடும். யாகம் முதலான கர்மாக்களைச் செய்தும் அடையமுடியாத பலன்களை எல்லாம் அடையலாம். தேவர்களுக்காக யுத்தத்திலே ஈடுபட்டு, மரணம் அடைந்து சொர்க்கத்தை அடையும் பலனை, ஆசாரம் உள்ளவனோ, அது இல்லாதவனோ ஒரு கோயில் கட்டுவதன் மூலம் பெறமுடியும்.
ஒரு கோயிலை எழுப்புவதால் ஒரு சொர்க்கத்திற்கு செல்கிறான். 3 கோயிலை எழுப்பியவன் பிரும்மலோகம் செல்கிறான். 5 கோயிலை எழுப்பியவன் கைலாசத்துக்கு செல்வான். 8 கோயிலை எழுப்புவன் வைகுந்தம் செல்வான். 16 கோயிலை எழுப்புவன் சகல சவுபாக்கியங்களை அடைந்து, வாழ்ந்து, பிறவாப் பேரின்பத்தை அடைவான்.
பெரிய கோயிலை எழுப்புபவன் முக்தி அடைகிறான். சாதாரண கோயிலை எழுப்புபவன் சொர்க்க வாசத்தை அடைகிறான். ஒரு ஏழை சிறிய கோயிலையும், செல்வந்தன் பெரிய கோயிலை எழுப்பினாலும் பலன் இருவருக்குமே சமம்தான். ஆயிரமோ, நுõறோ எவ்வளவு பணம் கோயில் எழுப்ப கொடுத்தாலும் விஷ்ணு லோகத்தை அடைகிறான்.
இளம் வயதில் விளையாட்டாக மணலைக்கொண்டு வாசுதேவனுக்கு கோயில் கட்டினாலும் அவன் வைகுந்தத்தையை அடைகிறான்.
கோயிலுக்கு மலர்களும் வாசனைப் பொருள்களும் தருபவன் உத்தம லோகத்தை அடைகிறான். ருத்திரன், சூரியனுக்கு கோயில் எழுப்புபவன் அடையும் புகலுக்கு எல்லையே இல்லை.
எனவே, நாம் வாழும் போதே புண்ணியம் தேடவும், சொர்க்கம் செல்லவும் கிடைத்த ஓர் அரிய வழி, கோயில் எழுப்புவதும், கோயில் எழுப்புபவர்களுக்கு முடிந்த உதவி செய்வதாகும். இப்படிப்பட்ட நல்ல காரியம் ஒன்றை சிந்திப்பதே இந்த வார ஆன்மிக சிந்தனையாக இருக்கட்டுமே!
தேவராஜன்

2. மொட்டை போடுவது எதற்காக? தேவராஜன்

2. மொட்டை போடுவது எதற்காக? தேவராஜன்
பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வயதிலிருந்து மூன்று வயதுக்குள் அவரவர் குலதெய்வ கோயிலில்
முடிகாணிக்கை அதாவது மொட்டை போடும் பழக்கம் இன்றும் வழக்கமாகி பின்பற்றப்படு
கிறது.
"மழித்தலும்; நீட்டலும் வேண்டா' என்று வள்ளுவர் சொல்வதிலிருந்து மொட்டை போடும்
பழக்கம் வள்ளுவன் காலத்துக்கு முன்பே இருந்துள்ளது தெரியவருகிறது. சரி, இந்த மொட்டை
போடும் பழக்கம் எப்படி வந்தது? எதற்காக வந்தது? இது பற்றி இந்த வார ஆன்மிக சிந்தனையாக
சிந்திப்போமா?
மகா பாரதத்தில் பாண்டவர்களின் தர்மபத்தினியான திரவுபதி ஓர் இரவில் தன் ஆசை குழந்தைக
ளோடு உறங்கிக்கொண்டிருக்கிறாள். அஸ்வத்தாமன் திரவுபதியின் வம்சத்தை அழித்தே தீருவேன்
என்று ஆவேசம் கொண்டு திரிகிறான். அன்று பாண்டவர்கள் இல்லை. இது தான் சமயம் என்று
அஸ்வத்தாமன் திரவுபதியின் குழந்தைகளை கொன்றுபோட்டு விட்டு ஓடிவிடுகிறான். இதை
அறிந்த அர்ஜூனன் குழந்தைகளை கொன்றவனை தலைகொய்வேன் என்று சபதமிடுகிறான்.
விசாரித்ததில் தங்கள் குல குருவின் மகன் அஸ்வத்தாமன் தான் இந்த பாதக செயலை செய்தி
ருப்பது அறிந்து அவன் தலையெடுக்க அர்ஜூனன் துடிக்கிறான். திரவுபதிஉடனே, குலகுருவின்
மைந்தனை கொல்வது பாவம் என்று அவனை தடுக்கிறாள். எடுத்த சபதத்தை முடிக்காமல்
அர்ஜூனன் ஓயமாட்டான் என்று அர்ஜூனன் அடம்பிடிக்கிறான். முடிவில் குழப்பம் தீர்த்து
வைக்க கிருஷ்ணன்,"அர்ஜூனா, நீ அஸ்வத்தாமனின் தலையை கொய்வதற்கு பதில் தலையில்
உள்ள முடியை எடுத்துவிடு. அதுவே அவனை கொன்றதற்கு சமம்' என்று உபாயம் சொன்னார்.
அப்படியே அர்ஜூனனும் செய்கிறான். இதிலிருந்து தான் உயிருக்கு பதில் மயிர் கொடுக்கும்
சம்பிரதாயம் வந்தது.
அடுத்ததாக, அந்தக் காலத்தில் கணவன் இறந்துவிட்டால் மனைவியும் அவனோடு தீயில்
உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது. காலமாற்றத்தில் கணவன் இறந்துவிட்டால் அவனோடு
உடன்கட்டை ஏறி உயிர்துறப்பதற்கு பதிலாக, கணவனை பறிக்கொடுத்த மனைவி உயிருக்கு
பதிலாக மயிரைக்கொடுத்து மொட்டையிட்டுக்கொண்டாள். அதிலிருந்து தான் விதவைகள்
மொட்டை போடும் பழக்கம் தொடர்ந்தது. இன்று பெண்கள் கல்வியறிவு பெற்றுவிட்டதால்
கண்மூடிபழக்கம் மண்மூடி போய்விட்டது.
இன்னொரு வகையினரும் மொட்டைபோடுவர். அவர்கள் துறவிகள். துறவு என்பது மறுபிறவி
எடுப்பதாகும். அதனால்தான் எடுத்தப்பிறவி உயிரை விட்டதாக கருதி முடியை மழித்துக்
கொள்கின்றனர்.புதிய நாமம் சூட்டிக்கொள்கின்றனர்.
மேற்சொன்ன காரணம் கருதிய செயல்களுக்காக மொட்டை போட்ட பழக்கத்தை இன்று நம்மவர்கள்
இறைவனிடம்,"இது நடந்துவிட்டால் மொட்டை போடுகிறேன்!' என்று பிரார்த்தனை செய்து
அவர்கள் எண்ணியது நடந்ததும், பிரார்த்தனை ஈடேறியதற்கு இறைவனுக்கு மொட்டை
போடுகின்றனர்.
இதெல்லாம் இருக்கட்டும். "டேய், இந்தியா மட்டும் இந்த மேட்சில் ஜெயிச்சுட்டா நான் மொட்டை
போட்டுக்கிறேன். ஏய்... நீ மட்டும் பரீட்சையில் பாஸ்பண்ணிட்டேனா நான் மொட்டை
அடிச்சிக்கிறேன்' என்று சிலர் குதர்க்கம் செய்கிறார்களே,ஏன்?
இதற்கு அஸ்வத்தாமனும் அர்ஜூனனும் தான் பதில் சொல்லவேண்டும்!

2. மொட்டை போடுவது எதற்காக? தேவராஜன்

2. மொட்டை போடுவது எதற்காக? தேவராஜன்
பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வயதிலிருந்து மூன்று வயதுக்குள் அவரவர் குலதெய்வ கோயிலில்
முடிகாணிக்கை அதாவது மொட்டை போடும் பழக்கம் இன்றும் வழக்கமாகி பின்பற்றப்படு
கிறது.
"மழித்தலும்; நீட்டலும் வேண்டா' என்று வள்ளுவர் சொல்வதிலிருந்து மொட்டை போடும்
பழக்கம் வள்ளுவன் காலத்துக்கு முன்பே இருந்துள்ளது தெரியவருகிறது. சரி, இந்த மொட்டை
போடும் பழக்கம் எப்படி வந்தது? எதற்காக வந்தது? இது பற்றி இந்த வார ஆன்மிக சிந்தனையாக
சிந்திப்போமா?
மகா பாரதத்தில் பாண்டவர்களின் தர்மபத்தினியான திரவுபதி ஓர் இரவில் தன் ஆசை குழந்தைக
ளோடு உறங்கிக்கொண்டிருக்கிறாள். அஸ்வத்தாமன் திரவுபதியின் வம்சத்தை அழித்தே தீருவேன்
என்று ஆவேசம் கொண்டு திரிகிறான். அன்று பாண்டவர்கள் இல்லை. இது தான் சமயம் என்று
அஸ்வத்தாமன் திரவுபதியின் குழந்தைகளை கொன்றுபோட்டு விட்டு ஓடிவிடுகிறான். இதை
அறிந்த அர்ஜூனன் குழந்தைகளை கொன்றவனை தலைகொய்வேன் என்று சபதமிடுகிறான்.
விசாரித்ததில் தங்கள் குல குருவின் மகன் அஸ்வத்தாமன் தான் இந்த பாதக செயலை செய்தி
ருப்பது அறிந்து அவன் தலையெடுக்க அர்ஜூனன் துடிக்கிறான். திரவுபதிஉடனே, குலகுருவின்
மைந்தனை கொல்வது பாவம் என்று அவனை தடுக்கிறாள். எடுத்த சபதத்தை முடிக்காமல்
அர்ஜூனன் ஓயமாட்டான் என்று அர்ஜூனன் அடம்பிடிக்கிறான். முடிவில் குழப்பம் தீர்த்து
வைக்க கிருஷ்ணன்,"அர்ஜூனா, நீ அஸ்வத்தாமனின் தலையை கொய்வதற்கு பதில் தலையில்
உள்ள முடியை எடுத்துவிடு. அதுவே அவனை கொன்றதற்கு சமம்' என்று உபாயம் சொன்னார்.
அப்படியே அர்ஜூனனும் செய்கிறான். இதிலிருந்து தான் உயிருக்கு பதில் மயிர் கொடுக்கும்
சம்பிரதாயம் வந்தது.
அடுத்ததாக, அந்தக் காலத்தில் கணவன் இறந்துவிட்டால் மனைவியும் அவனோடு தீயில்
உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது. காலமாற்றத்தில் கணவன் இறந்துவிட்டால் அவனோடு
உடன்கட்டை ஏறி உயிர்துறப்பதற்கு பதிலாக, கணவனை பறிக்கொடுத்த மனைவி உயிருக்கு
பதிலாக மயிரைக்கொடுத்து மொட்டையிட்டுக்கொண்டாள். அதிலிருந்து தான் விதவைகள்
மொட்டை போடும் பழக்கம் தொடர்ந்தது. இன்று பெண்கள் கல்வியறிவு பெற்றுவிட்டதால்
கண்மூடிபழக்கம் மண்மூடி போய்விட்டது.
இன்னொரு வகையினரும் மொட்டைபோடுவர். அவர்கள் துறவிகள். துறவு என்பது மறுபிறவி
எடுப்பதாகும். அதனால்தான் எடுத்தப்பிறவி உயிரை விட்டதாக கருதி முடியை மழித்துக்
கொள்கின்றனர்.புதிய நாமம் சூட்டிக்கொள்கின்றனர்.
மேற்சொன்ன காரணம் கருதிய செயல்களுக்காக மொட்டை போட்ட பழக்கத்தை இன்று நம்மவர்கள்
இறைவனிடம்,"இது நடந்துவிட்டால் மொட்டை போடுகிறேன்!' என்று பிரார்த்தனை செய்து
அவர்கள் எண்ணியது நடந்ததும், பிரார்த்தனை ஈடேறியதற்கு இறைவனுக்கு மொட்டை
போடுகின்றனர்.
இதெல்லாம் இருக்கட்டும். "டேய், இந்தியா மட்டும் இந்த மேட்சில் ஜெயிச்சுட்டா நான் மொட்டை
போட்டுக்கிறேன். ஏய்... நீ மட்டும் பரீட்சையில் பாஸ்பண்ணிட்டேனா நான் மொட்டை
அடிச்சிக்கிறேன்' என்று சிலர் குதர்க்கம் செய்கிறார்களே,ஏன்?
இதற்கு அஸ்வத்தாமனும் அர்ஜூனனும் தான் பதில் சொல்லவேண்டும்!

இறைவனை அழைப்பது எப்படி? தேவராஜன்

1. இறைவனை அழைப்பது எப்படி? தேவராஜன்

எல்லாம் வல்ல இறைவனை நாம் அனேக நாமங்கள் சொல்லி அழைத்து வழிபடுகிறோம்.
உதாரணமாக இறைவன், பரம்பொருள்,கடவுள், ஆண்டவன், ஈஸ்வரன், இயற்கை, பதி இப்படி
இறைவனின் பெயர் பட்டியல் நீண்டுகொண்டே போகும்...
இறைவன் ஒருவன் என்றால் அவனுக்கு எதற்கு இத்தனை நாமங்கள்? அதுபற்றி கொஞ்சம் இந்த
வார ஆன்மிக சிந்தனையாக சிந்திப்போமா?
முதலில் "இறைவன்' என்ற நாமத்தை எடுத்துக்கொண்டோமானால் அதன் கடைசி எழுத்து "ன்'
என்று முடிகிறது. இலக்கணப்படி "ன்' என்று முடியும் பெயர்ச்சொல்லெல்லாம் ஆண்பாலைக்
குறிப்பவை. அப்படி என்றால்,ஆண்பால் மனிதனை அல்லவா சுட்டும்? அப்படி எனில் இறை
வனுக்கு சமமா மனிதன்? மனிதன்,அண்டசராசரத்தை படைத்த ஒன்றை ஓர் ஆண்மகனாக அழைப்
பது தவறல்லவா?
நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது. அது உயிர் இனத்தை மட்டுமல்ல, உலகையே "நிர்வகிக்
கிறது' என்றால் நிர்வகிக்கிறது என்ற சொல்லின் ஈற்றெழுத்து "து' என்பது இறைவனை அஃறி
ணையாக்கி விடுகிறது. அப்படியானால் இறைவன் மேஜை, நாற்காலி,ஆடு,மாடு களுக்கு இணை
யாகிவிடுகிறான். இது எப்படி சரியாகும்? பிறகு எப்படி தான் இறைவனை அழைப்பதாம்?
கண்ணுக்குத் தெரிவதில்லை. தொட்டு உணரமுடியவில்லை. அறிவுக்கு புலப்படவில்லை.
விஞ்ஞானத்தாலும் அறிந்து கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக ஒன்றுமே இல்லை என
நாத்திகம் பேச முடியுமா என்ன?
இயற்கை என்று அழைப்பது சரியாக இருக்குமா? அப்படியும் அழைக்க முடியாது. ஏனெனில்
அது மரம், செடி, கொடி, சூரியன், நிலவு என அவற்றோடு ஒன்றாகிவிடுமே!
ஓரணு உயிர் முதல் சூரியன், நிலவு வரை படைத்த இறைவனை எப்படி அவற்றிற்கு சமமாக
பாவிக்கமுடியும்?
பரம்பொருள் என்றால் என்ன?
அதுவும் தவறாக முடியும். ஏனெனில் இறைவன் ஒரு சாதாரண பொருள் ஆகிவிடுவான்.
சரி கடவுள் என்கிறார்களே அது சரியோ? கடவுள் என்றால் என்ன பொருளைத்தருகிறது?
உள்+ கட = கடவுள். அதாவது உள்ளத்தைக் கடப்பது கடவுள். முற்றும் துறந்த முனிவன்கூட
உள்ளத்தை கடந்து விடுகிறான். அப்படியானால் முனிவனும் இறைவனும் ஒன்றா?
தெய்வம் என்று அழைக்கலாமா? இது தமிழ் சொல்லா? வடச்சொல்லா? புரியவில்லை.
இலக்கணப்படி இச்சொல்லை பிரித்தால் பொருள் தருவதில்லை. பகாபதமாக இருக்கிறது.
பொருளற்ற சொல்லால் சுட்டினால் இறைவன் பொருளற்றவனாக ஆகிவிடுவானே?
ஆண்டவன் என்று அழைக்கலாமா?
சக மனிதனை ஆண்ட அரசனும் ஆண்டவனே. ஈண்டு அரசன் கடவுளுக்கு இணையாகி விடுவான்.
ஆதலால் ஆண்டவன் என்றழைப்பதும் சரியாகயிருக்காது.
ஈஸ்வரன் என்றழைத்தால் என்ன?
ஈஸ்வரன் வடச்சொல். தமிழில் இதன் பொருள் ஈபவன். ஒன்றை பிறருக்கு கொடுப்பவன் எல்லாம்
இறைவனாகி விடுகிறான். இறைவனோடு ஈபவனை ஒப்பிடுவது சரியாகாது.
சரி, என்ன பெயரிட்டுதான் இறைவனை அழைப்பது?
சுட்டிக்காட்ட முடியாத, சொல்லுக்கும் ஆய்வுக்கும் அப்பாற்பட்ட, ஒப்பற்ற, ஒன்றே பலவாகி,
பலவே ஒன்றாகி,ஊனக்கண்ணால் காணமுடியாத, அறிவுக்கு எட்டாத, ஞானத்துக்கு மட்டுமே
எட்டக் கூடிய இறைவன் எல்லோருக்கும் விளங்க வேண்டும் என்பதற்காகவும் எளியோனாகி,
மனிதனாகி, அவனாகி, அதுவாகி, அஃறிணையாகி, எல்லார் மனிதில், சிந்தனையில், செயலில்,
பொருளில், அர்த்தத்தில் இருந்து இறைவன் அருள்கிறான்.
முடிவாக, இறைவனை ஒருவாறாக இப்படி அழைத்து வழிபடலாமே! அது "இறை' என்ற
நாம் சூட்டி அழைக்கலாமே! எப்படி எனில், அருளை, கருணையை, அன்பை, பக்தியை
உலகத்துக்கு இறைக்க வந்ததினால் இறைவனை இறை என்று அழைத்து அவன் அருளுக்கு
உட்படுகிறேன்.