புதன், 31 மார்ச், 2010

எப்படி எல்லாம் யோசிக்கி றாய்ய்ய்ங்க!

எப்படி எல்லாம் யோசிக்கி றாய்ய்ய்ங்க!


ஒலியின் வேகத்தை விட அதிவேகத்தில் குதிக்கும் சாதனை!


சாதனை செய்து பிரபலமடைய நினைக்கும் சில சாதனையாளர்கள் செய்யும் சாதனைகளைப் பட்டியலிட்டால் நமக்கு தலைச்சுற்றும். இதில் எல்லாம்கூட சாதனை செய்வார்களா என்று நினைக்கத்தோன்றும்.
சமீபத்தில் ஒரு சாதனையாளர் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் குதித்து சாதனை செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
அவர் பெயர் பீலிக்ஸ்.ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர். இவர் ஏற்கெனவே குதித்து சாதனை பல செய்துள்ளார். தனது அடுத்த கட்ட சாதனையாக 120,000 அடி உயரத்திலிருந்து பாராசூட்டில் குதிக்க தயாராகி வருகிறார்.
இதே ஒரு சாதனையை 50 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கரான ஜோ கிட்டிங்கர் என்பவர், 102,800 அடி (31 கி.மீ) உயரத்திலிருந்து பலுõனைப் பயன்படுத்தி குதித்து நிறைவேற்றிய சாதனையை இவர் முறியடிக்க உள்ளார். இந்த சாதனையை முறியடிக்க பலரும் முயன்று தோற்றதுடன் சிலர் அந்தச் சாதனை முயற்சியில் இறந்தும் உள்ளனர்.
இருந்தும் பீலிப்ஸ் தான் மேற்கொண்ட சாதனையை செய்து முடிக்க ஆர்வம் கொண்டுள்ளார். அதற்காக,
புவீயிர்ப்பற்ற நிலையில் போதிய அழுத்தத்தை வழங்க கூடிய விசேஷ கவச ஆடையை அணிந்தவாறு ஒலியை விடவும் அதிகமான வேகத்தில் பீலிக்ஸ் குதிக்கவுள்ளார்.
இந்த சாதனையை நிகழ்த்த உள்ள பீலிப்ஸ்,
""நான் என்னால் முயன்ற அளவு, வரையறைகளை உடைத்து சாதனை படைக்க விரும்புகிறேன்''என்று பீலிப் கூறியுள்ளார்.
அத்துடன் அவர் இந்தச் சாதனை முயற்சியின் போது, குதித்த 5 நிமிட நேரத்திற்கு பிறகே பூமியை வந்தடைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பீலிக்ஸ் இந்தச் சாதனையை நிறைவேற்றும் பட்சத்தில், இயந்திரத்தின் துணையின்றி ஒலியை விடவும் அதிகமான வேகத்தில் குதித்த உலகின் முதலாவது நபர் என்ற பெருமையை பீலக்ஸ் பெறுவார்.
இவர், 2003ம் ஆண்டு இறக்கை பொருத்தப்பட்ட ஆடையை அணிந்தபடி ஆங்கிலக் கால்வாயில் குதித்து பீலிக்ஸ் சாதனைப் படைத்திருக்கிறார். அத்துடன் அவர் மலேசிய கோலாம்பூரில் உள்ள பெட்ரோனஸ் கோபுரத்திலிருந்து குதித்து உலகிலேயே மிக உயரமான கட்டிடத்திலிருந்து குதித்து சாதனையை நிறைவேற்றியுள்ளார். அவரது உலக சாதனையை நாஸர் அல் நியாடி மற்றும் ஓமர் அல் ஹெகேலன் ஆகியோர் கடந்த ஆண்டு ஆம்திகடை துபாயிலுள்ள உலகின் அதி உயரமான கட்டிடமான புரூஜ் கஹ்லிபாவிலிருந்து குதித்து முறியடித்திருந்தனர்.
தன் சாதனை முறியடிக்கப் பட்டுவிட்டதால், ஒரு லட்சத்து,20 ஆயிரம் அடி உயரத்திலிருந்து ஒலியின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் அசுரத்தனமாக குதிக்கும் சாதனையை மேற்கொள்கிறாரோ?

இதுவும் செய்திதானுங்க

இதுவும் செய்திதானுங்க!

நாசாவின் புதிய விண்வெளி மையம்

"ஆகாசத்தில் கோட்டைக்கட்ட ஆசைப்படக்கூடாது' என்ரொரு வழக்கு பேச்சு உண்டு. இன்றை நவீன விஞ்ஞானம் அதை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டது. நாசா ஏற்கெனவே விண்வெளியில் விண்வெளி கூடாரம் கட்டி ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது. இப்போது மேலும் ஒரு விண்வெளி கூடாரத்தை விண்வெளியில் அமைத்துள்ளது. இந்த கூடாரத்தை விண்வெளி வீரர்களான ராபர்ட் பென்கன் மற்றும் நிகோலஸ் பேட்டிரிக் இணைந்து அமைத்துள்ளனர். இந்த கூடாரம் ஏழு ஜன்னல் வசதிகளுடன் 400 மில்லியன் டாலர் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விண்வெளி கூடாரத்திற்கு டிரான்குலிட்டி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறதாம்!

2முறை வரும் மார்பு புற்றுநோயை
ஸ்கேன் காட்டிக் கொடுக்காது

மார்பக புற்று நோய்கள் வந்தால் அதன் அறிகுறிகளை சோதனை செய்ய எம்ஆர்ஐ ஸ்கேன் செய்வது பழக்கம். இந்த ஸ்கேன் மூலம் 2வது முறை ஏற்பட்ட மார்பக புற்று நோயை அறிந்து கொள்ள முடியாது என்று கனடாவைச் சேர்ந்த ஹல் யூனிவர்சிடி விஞ்ஞானிகள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். அதனால் ஒரு முறைக்கு மேல் மார்பக புற்று நோய்க்கு ஆபரேஷன் செய்தால் அதற்கு ஸ்கேன் செய்ய வேண்டியதில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

சாக்லெட் சாப்பிட்டா அட்டாக் வராது

சாக்லெட் குழந்தைகள் மட்டும் தான் சாப்பிடணும் என்று நாம் நினைத்து விடுகிறோம். ஆனால், பெரியவர்கள் சாக்லெட் சாப்பிட்டால் லோவர் ஸ்டிரோக் வராது காக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சாக்லெட்டில் அதிகபடியான ஆன்டிஆக்ஸைடன் இருப்பதால் அது ஸ்டிரோக் வருவதிலிருந்து நம்மை காக்கிறது. இந்த விஷயத்தை 44,489 பேரிடம் சாக்லெட் சாப்பிட சொல்லி ஆய்வு செய்ததில் 22 சதவீதம் பேருக்கு மாரடைப்பு தடுக்கப்பட்டிருக்கிறதை கண்டறிந்துள்ளனர். 2வதாக சாக்லெட் சாப்பிடாத ஆயிரத்து169 பேரிடம் ஆய்வு செய்ததில் 46 சதவீதம் பேர் மாரடைப்பால் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. அதனால் மாரடைப்பு வராமல் இருக்க தினமும் ஒரு சாக்லெட் சாப்பிடுங்க! இன்னொரு ஆய்வில் சாக்லெட், திராட்சை,புளுபெரீஸ், பூண்டு, சோயா இவைகள் சாப்பிட்டால் கேன்சர் வராது என்று கண்டுபிடித்துள்ளனர்.

உயில்கள் பலவிதம்
இறப்பதற்கு முன்னால் ஒருவர் எழுதி வைக்கும் சாசனம் உயில். அந்த உயிலில் தான் விருப்பபட்ட ஆசைகளை, பிறர் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் குறித்து எழுதிவைப்பதாகும். பெரும் நம்மில் பலர் சொத்து பற்றிய உயில்கள் தான் அதிகம் எழுதுகின்றனர். இப்படி பட்ட பல விநோதமான உயில்களை
அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் சேகரித்து வைத்துள்ளாராம். அவர் கடந்த 50 ஆண்டுகளாக சேகரித்து வந்த உயில்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் பல விநோதமான உயில்கள் எல்லாம் உள்ளனவாம். ஒரு கோடீஸ்வர பெண்மணி ஒருவர் தன் கணவர் கல்லறைக்கு அருகே தன்னை அடக்கம் செய்யக்கூடாது என்றும், தன் வளர்த்தசெல்லக்கிளியோடு தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று உயில் எழுதி வைத்துள்ளாராம். இப்படி இன்னும் சில சுவாரஸ்யமான உயில்களின் பட்டியல் நீளுகிறதாம். இதில் பல உயில் நிறைவேற்ற முடியாத பல விஷயங்களைக் கொண்டிருக்கிறதாம்!

இப்படி எல்லாம் நடக்குதுங்க

இப்படி எல்லாம் நடக்குதுங்க!


ஹஸ்பண்டை சஸ்பெண்ட் செய்யும் சிறுமி!


பணம் பத்தும் செய்யும். ஆனால், ஒரு குடுகுடு கிழவனுக்கு, 12 வயது சிறுமியை மனைவியாக்குமா என்றால் முடியும் என்றுதான் சொல்ல வேண்டும்.

சவூதி அரேபியாவை சேர்ந்த 12 வயது சிறுமி 80 வயது முதியவருக்கு 85 ஆயிரம் ரியால்களுக்கு மனைவியாக விற்கப்பட்டாள். அந்த சிறுமி இப்போது அந்த முதியவரிடமிருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த சம்பவம் சவுதியை கலங்கடுத்துள்ளது.
விவாகரத்து கோரி மனு செய்துள்ள 12 வயது சிறுமி, அவரது தந்தையின் 80 வயது உறவினருக்கு கடந்த ஆண்டு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இதற்காக வரதட்சணையாக அந்த சிறுமிககு 85 ஆயிரம் ரியால்கள் கொடுக்கப்ட்டது.
இந்த திருமணத்தை எதிர்த்து தனது மகளுக்கு விவாகரத்து அளிக்கும் படி கோரி சிறுமியின் தாயார் மனு செய்திருந்தார்.பின்னர் என்னகாரண மும் கூறாமல் இந்த மாத தொடக்கத்தில் அந்த மனுவை அவர் திரும்ப பெற்றுக்கொண்டார். இந்த நிலையில் தான் 80 வயது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார் அந்த சிறுமி. இந்தசிறுமிக்கு தேவையான சட்ட உதவிகளை அரசு செய்ய உள்ளது.
அரசின் மனித உரிமை ஆணையம் இந்த சிறுமிக்கு வாதாட வழக்கறிஞரை நியமித்து உள்ளது. புரைதா கோர்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வரஉள்ளது. மனித உரிமை ஆணைய வழக்கறிஞர் அலனாட் அல் ஹெஜைலான் கூறுகையில், எங்களது முக்கிய கவலையே அந்தச் சிறுமியின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பது தான். அது கோர்ட்டின் கையில் இருக்கிறது. இருப்பினும் சிறுமிக்கு ஆதரவாக நாங்கள் நிற்கபோகிறோம். என்கிறார்.

காதலுக்கு ஜே! போட்ட ஆஸ்திரேலியா!

காதல், கற்பு எல்லாம் என்னவோ அது இந்தியர்களுக்கு மட்டுமே என்று தானே நினைத்துக்கொண்டிருந்தோம். வெளிநாட்டினர்கள் எல்லாம் கற்பு, காதல் இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று நினைத்த நினைப்பை எல்லாம் பொய்யாக்கும் ஒரு ஆய்வு வந்துள்ளது.
கண்டதும் காதல் எனும் கோட்பாட்டில் ஆஸ்திரேலியர்களுக்கும் அதிக நம்பிக்கை இருப்பது தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய இளைஞர்கள் மத்தியில் சமீபத்தில் காதல் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 56 சதவீதம் பேர் உடல்இன்பத்தைவிட, காதல் உணர்வே பெரிது என்று கருது கின்றனர். இதில் 80 சதவீதத்தினர் தங்கள் காதலியை முதன் முதலில் பார்த்த போதே காதல் கொண்டு மயங்கிவிட்டதாக கூறியுள்ளனர். மேலும் பலருக்கு காதல் வாழ்க்கையில் தான் ஒட்டுமொத்த மகிழ்ச்சியும் இருந்தது என்ற எண்ணம் வந்ததாக குறிப்பிடுகின்றனர். காதல் என்றால் மேம்போக்காக நினைக்கும் மேலை நாட்டினர் மத்தியில் ஆஸ்திரேலியாவில் உள்ள இளைஞர்கள் காதலை உயர்வாக எண்ணியிருப்பது ஆச்சரியப்படவைக்கிறது.



புலி ஆண்டில் திருமணத்துக்கு

தடா போட்டிருக்கும் சீனா

மக்கள் தொகையில் மட்டுமல்ல மூட நம்பிக்கையிலும் சீனா முதலிடம். இத்தனைக்கும் அது ஒரு கம்யூனிஸ கொள்கைகளை பின்பற்றும் நாடு வேறு. நம் நாட்டில் பச்சை புடவை பீதி போல சீனாவிலும் ஒரு லேட்டஸ்ட் பீதி கிளம்பியுள்ளது. அந்த பீதியை கிளப்பி கிலி ஏற்படுத்தியிருப்பது புலி ஆண்டு.
சீனா பொருளாதார வளர்ச்சி பெற்றிருந்தாலும், தொடர்ந்து கம்யூனிசனிச ஆட்சி அமைந்தும் கூட மூட நம்பிக்கை மட்டும் ஒழிந்த பாடில்லை. வரும் புத்தாண்டில் திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்று சீனர்கள் தெரிவித்துள்ளனர். ஏனென்றால் இந்த ஆண்டில் திருமணம் செய்து கொண்டால் கணவருக்கு ஆகாதாம்.
சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு விலங்கின் பெயரால் 12 ஆண்டுகள் கொண்டாடப்பட்டு வருகிறது. திருமணம் செய்து கொள்வதற்கு ,வீடுகட்டுவதற்கு குழந்தைப் பெற்றுகொள்வதற்கு என ஒவ்வொரு ஆண்டையும் ராசியாக நினைக்கின்றனர். இந்த நம்பிக்கையில் தான் வரும் 14 தேதி பிறக்க உள்ள புலிஆண்டில் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. புலி ஆண்டில் திருமணம் செய்து கொண்டால் கணவருக்கு ஆகாது என்று உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் நினைக்கின்றனர். அதுவும் இந்த புலியாண்டில் மதியம் நேரத்தில் குழந்தைகள் பிறந்தால் பஞ்சத்தில் கஷ்டப்படும் என்றும் கருதுகின்றனர்

ஹெல்த் கேர்!

ஹெல்த் கேர்!

குளிர்பானம் அதிகம் குடித்தால்
கணையத்தில் கேன்சர் வருமாம்!

நாம் காபி, டீக்கு அடுத்தப்படியாக தினமும் பருகக்கூடிய பானமாக இருப்பது குளரிபானங்கள் தான்! நீங்கள் குளிர்பானங்கள் அதிகம் குடிப்பவராக இருந்தால், உங்களுக்கு கணையத்தில் கேன்சர் வரவாய்ப்புண்டு என்று ஒரு அதிர்ச்சி தகவலை ஒரு மருத்துவ இதழ் வெளியிட்டுள்ளது.
சிங்கபூரில் குளிர்பானம் பருகும் 60 ஆயிரம் மக்களிடம் ஆய்வு செய்த மினிசொடா பல்கலைகழகத்தின் ஆய்வாளர் மார்க்பெர்ரியா, குளிர்பானங்களில் இருக்கும் சர்க்கரையின் அளவு உடலில் இன்சுலின் அளவை அதிகரித்துவிடுவதாகவும், கணையத்தில் ஏற்படும் கேன்சர் செல்லை அதிகரித்து விடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தள்ளார். மேலும், கணையத்தில் செரிமானத்துக்கான சுரப்பிகள் சுரக்கும் கணைய நீரை குளர்பானங்களில் இருக்கும் சர்க்கரை சோடா செயல் இழக்கச் செய்துவிடும் வேலையை செய்துவருவதால் 87 சதவீதம் கணையத்தில் கேன்சர் வரகூடும் என்றும் கூறியுள்ளார். இனிமே, குளிர்பானம் குடிக்கும் முன் கொஞ்சம் கணையத்தையும் நினைச்சுப்பாருங்க.

சோயா சாப்பிட்டால் லங் கேன்சரை தடுக்கலாம்!

இன்றைக்கு பலருக்கு நுரையீரலில் புற்று நோய் வரவது சகஜமாக உள்ளது. அதுவும் புகைப்பிடிப்பவர்கள் அதிகமாக இந்த நோயால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். பெண்கள் மார்பக புற்று நோய்க்கு உள்ளாகி வருகின்றனர்.
நுரையீரல் புற்று நோயைத் தடுக்க வல்லது எது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்ட டோக்கியோவைச் சேர்ந்த நேஷனல் கேன்சர் சென்டர் டாக்டர் டாய்சி ஷிமாசூ, புகைப்பழக்கம் இல்லாமல் இருந்து, சோயா உணவுப்பொருளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு நுரையீரல் புற்று பாதிப்பு அதிகம் இருக்காது என்கிறார்.
சோயாவில் அடங்கி இருக்கும் ஐசோபுளோவின் கேன்சரைத் தடுக்கும் சக்தியைக் கொண்டுள்ளது. ஹார்மோன் மூலம் வரும் மார்பக புற்றுநோய் செல்லை அழிக்கும் சக்தியையும் சோயா கொண்டிருக்கிறது.
45 முதல் 74 வயதுள்ள 40 ஆயிரம் பேரிடம் பரிசோதனை செய்ததில், அவர்களின் உணவு பழக்கம், புகைபிடித்தல் பழக்கம், வாழ்க்கை முறை இவைகளை கருத்தில் கொண்டு ஆய்வு செய்ததில் சோயா உணவு அதிகம் எடுத்துக்கொண்டவர்களுக்கு நுரையீரல் புற்று நோய் பாதிப்பு ஏற்படவில்லை என்ற மருத்துவ அறிக்கையை டாய்சி ஷிமாசூ வெளியிட்டுள்ளார்.

குண்டா இருக்கீங்களா?
உயரமான இடத்துக்கு போங்க!

குண்டா இருக்கிறவங்க இளைக்கணும் என்றால் டயட்டில் இருக்கணும். வாக்கிங் போகணும். உடற்பயிற்சி செய்யணும். மருந்து மாத்திரை சாப்பிடணும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துவார்கள். ஆனால், லட்விக் மாக்ஸிமில்லியன் யுனிவர்சிடி மருத்துவர் புளோரின் லிபள் என்பவர் காற்றோட்டம் உள்ள உயரமான பகுதியில் இருந்தாலே உடம்பு எடை குறையும் என்கிறார்.
இதற்காக, அவர் சராசரியான எடையுள்ள 20 ஆண்களை சோதனைக்க உட்படுத்தி, தாழ்வான பகுதியில் அவர்களை ஒரு வாரம் தங்க வைத்து, அவர்களின் உணவு, நடைபயணம் போன்ற பழக்கங்களை கருத்தில் கொண்டு வாரமுடிவில் அவர்களின் எடை நிலையும், அடுத்து கடல் மட்டத்திலிருந்து 2,650 மீட்டர் உயரத்தில் அவர்களை தங்க வைத்து ஒரு வாரம் கழித்து அவர்களின் எடை சராசரியாக 1.5 கிலோ குறைந்திருப்பதை கண்டிருக்கிறார்.
உயரமான பகுதியில் இருக்கும் போது வீசும் மென் காற்று உடம்பில் உள்ள கலோரிகளை அதிகம் எரிக்கின்றது .லெப்டின், ஹார்மோன் சுரப்பு ஆகியவை துரிதமாக இருப்பதை அறிந்திருக்கிறார். இவைகளின் காரணமாக உயரமான இடத்தில் இருந்தால் குண்டானவர்கள் இளைக்க வாய்ப்புண்டு என்று டாக்டர் டாய்சி சொல்லியிருப்பதை குண்டானவங்க காதுல போட்டுகுங்க.

கர்ப்பக்கால தொற்று ஏற்பட்டால்
குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும்

தாய் கர்ப்பக்காலத்தில் பிறப்புறுப்பு வழியாக ஏற்படும் தொற்று காரணமாக வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆஸ்துமா நோய் ஏற்படுகின்றது என்பதை வாஷிங்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்விற்காக கலிபோர்னியாவில் 4 லட்சம் கர்ப்பவதிகளை மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய போது, கொரியோமினிட்டிஷ் தொற்றினால் பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா நோய் 8 வயதில் வளர ஆரம்பிப்பதாக கூறுகின்றனர்.

உங்கள் குழந்தை சுத்த அல்பமா
கவலையைவிடுங்க!

குழந்தைகள் பெரியவர்களைப் போல தாராள குணம் படைத்தவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. தொட்டதுக்கெல்லாம் அற்பபுத்திக்கொண்டிருந்தால் நமக்கு அந்த குழந்தைகள் மீது எரிச்சலும், வெறுப்புதான் ஏற்படும். முளைக்கிறச்சேவே இப்படி இருந்தா, பின்னாடி எப்படி உருப்புடும்? என்று நினைக்கத் தோணும். ஆனால், உண்மை அதுவல்ல; இப்படி பட்ட குணம் உள்ள குழந்தைகள் தான் ஒழுக்கமாக இருப்பாங்கன்னு அமெரிக்க ஆய்வாளர்கள் அடித்து சொல்கிறார்கள். குழந்தைகள் இயல்பாக அவர்களுடைய கோபத்தை, உள்ளக்கிடக்கை வெளிபடுத்தவே செய்வார்கள்.அவர்களுக்கு பாசாங்கு, நடிக்க எல்லாம் தெரியாது. எனவே, குழந்தைகளின் குணத்தைப்புரிந்து வழிநடத்தினால், பிற்காலத்தில் அவர்கள் ஜென்டில் மேன்களாக இருப்பார்கள்.

கீழ்வாதமா பெண்கள் உஷார்!
ஹார்ட் அட்டாக் வரும்...

ஆண்களுக்கு வரும் ஹார்ட் அட்டாக் ஆபத்தை விட பெண்களுக்கு கீழ்வாதத்தால் ஏற்படும் ஹார்ட் அட்டாக் ரொம்பவும் ஆபத்தானது என்று ஓர் ஆய்வு குறிப்பு தெரிவிக்கின்றது. கீழ்வாத நோய் ஆண்களுக்கு வரும்நோய். அதிகமாக பெண்களுக்கு வராது. இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக இது பெண்களையும் தாக்குகிறது என்று மருத்துவ ஆய்வு கூறுகிறது. 39 சதவீதம் இந்த உபாதையினால் ஹார்ட் அட்டாக் வந்திருக்கின்றனர். ஆக, எந்த வாதமாக இருந்தாலும் பெண்கள் ரொம்ப உஷாராக இருக்கணும்

பேருந்தில் எனக்கு ஜன்னல் ஓரம்!

பேருந்தில் எனக்கு ஜன்னல் ஓரம்!
தீரா ஆசைகள் நம்மில் பலருக்கு இருக்கத்தான் செய்கிறது. அதில் ஒன்று தான் பேருந்தில், ரயிலில் ஜன்னல் பக்கம் இருக்கை ஆசை! குழந்தையோ, முதியவரோ யாராகட்டும் பேருந்தில் ஏறியதுமே கண்கள் வட்டமடித்து நிலைக்கொள்வது ஜன்னலோர இருக்கை காலியாக இருக்கிறதா என்பதே!
ஏனிந்த ஆசை? இன்னமும் புரிபடாமலே இருக்கிறது எனக்கு. ஒருமுறை இதுபற்றி யோசித்துப் பார்த்தேன். ஜன்னலோர இருக்கை வசதி என்பது நல்லகாற்றோட்டம், வசதியான இருப்புநிலை உள்ளிட்ட பல காரணங்கள் என புரிந்தது. ஆனாலும், இதற்கு மேலும் ஒன்று இருக்கத்தான் செய்கிறது. நாம் வேடிக்கை மனிதர்கள். அதற்கு ஜன்னலோரம் வசதியானது.
தினம் தினம் அதே பேருந்து. அதே வழி. புறப்படும் இடம், சேரும் இடம் வழக்கமானதுதான். இருந்தாலும், தினமும் பயணத்திற்கு பேருந்தில் மனசு ஜன்னலோரத்தைத் தானே தேர்வு செய்கிறது. இதென்ன அல்ப ஆசை! மனதை நெருடினாலும், விட்டக்குறை தொட்டக்குறைபோல... தொட்டில் பழக்கம் போல இந்த ஆசை யாரையும் தொற்றிக்கொண்டுதான் இருக்கிறது.
எனக்கு பேருந்தில் ஜன்னல் ஓரம் என்பது அலாதியானது. அலுத்தப்போகாமல்தான் தொடர்கிறது. தினம் தினம் பழக்கப்பட்ட பாதை எனினும், கண்களில் காட்சிகள் புதிது புதிதாகதான் வந்து போகிறது. நான் பார்க்கிற மனிதர்கள் எல்லாம் ஒவ்வொரு வார்த்தைகளாக எதையோ சொல்லிப்போகிறார்கள் என்பதாக நினைப்பு எழுகிறது.
நகர வாசனை கொஞ்சம்கூட இல்லாத, என்கிராமத்து உறவினர் என்னைப்பார்க்க வந்தபோது, நானும் அவரும் நகரத்தில் பேருந்தில் பயணப்பட்ட போது, சாலைகளில் சிக்னல்களில் மந்தை மந்தையாய் வந்து குவிந்து, கிரீன் லைட் சிக்னல் விழுந்ததும் ஆளாய் பறக்கும் மனிதர்களைப் பார்த்து,"" ஆமாம், இவர்கள் எல்லாம் இப்படி சாரை சாரையாய் எங்குதான் போகிறார்கள்? அப்படி என்ன அவசரம், ஆபத்து? இப்படி தலைத்தெறிக்க வேகமெடுத்து போகிறார்களே!'' என்று அவர் விட்டேந்தியாய் சொல்லியது, இன்றுகூட ஜன்னலோரம் அமர்ந்து செல்லும் பயணத்தில் கண்களில் நுழைந்து, பறக்கும் மனிதர்களைப் பார்க்கும் போது, உறவினரின் அந்த வார்த்தைகள் என் காதில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. அது விடைதெரியாத விடுகதைப்போல.

நாத்திகர் என்று யாரும் இல்லை!

ஆன்மிக சிந்தனை 25

நாத்திகர் என்று யாரும் இல்லை!

கடவுளின் அருளைப் பெற, முக்தியடைய, ஞானம் பெற பல ஆன்மிக மார்க்கங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஞானிமார்களும் தாங்கள் ஏதோ ஒரு மார்க்கத்தை பின்பற்றி முக்திப் பெற்றிருக்கின்றனர். கடவுளின் திருத்தாளை அடைய செல்லும் மார்க்கங்கள், அதற்காக எடுக்கப்படும் முயற்சிகள், அவர்கள் கண்ட அனுபவங்களின் உபதேசங்கள் வெவ்வோறாக இருந்திருக்கின்றன. ஆனால், அது எந்த மார்க்கமாக இருந்தாலும், அது தவறாது நம் ஆன்மாவை கடவுளிடத்தில் சேர்த்துவிடும் என்பது மட்டும் உறுதி.
பூமி தோன்றி எத்தனையோ ஆண்டுகள் உருண்டோடி விட்டன. கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம் என கடந்து இப்போது கலியுகத்தில் நாம் வாழ்கிறோம். ஒவ்வொரு யுகத்திலும் கடவுளையடைய பல வழிமுறைகளில் வழிபாடு செய்துள்ளனர். கிருத யுகத்தில் தவம், தியானம் செய்து கடவுளின் அருளைப் பெற்று இருக்கின்றனர். திரேதாயுகத்தில் வேள்விகள் இயற்றியும், துவாபர யுகத்தில் அர்ச்சனை, மந்திரம் செபித்து கடவுளின் அருளைப் பெற்றிருக்கின்றனர்.
இதெல்லாம் எப்படி அவர்களால் முடிந்தது? அது அவர்கள் வாழ்ந்த யுகத்தின் மகிமை. கலியுகத்திற்கு முந்திய யுகத்தில் வாழ்ந்தவர்களுக்கெல்லாம் ஆயுள் பலம் அதிகம். ஆயிரம், லட்சம் ஆண்டுகள் வாழும் பாக்கியத்தைப் பெற்றிருந்ததால் அவர்களால் ஆண்டாண்டாய் தவமியற்ற முடிந்தது. தன் மேல் புற்று வளரும் அளவுக்கு தவமிருந்திருக்கும் ரிஷிகளைப் பற்றியெல்லாம் புராணங்களில் படித்திருக்கிறோம். கிருதயுகத்தில் வேதம் சொன்னப்படி ஆசார, நியமங்கள் படி வாழ்வதற்கான புறச்சூழலும் நன்றாக அமைந்திருந்தது. திரேதா யுகத்தில் வேள்விக்குண்டான பொருள்கள் எல்லாம் பரிசுத்தமாக கிடைத்தன. ஆதலால், அவர்களால் கடவுளையடைய தவம், தியானம், வேள்வி, மந்திரசெபித்தல் செய்ய முடிந்தது.
இவை எல்லாம் இந்த கலியுகத்தில் இப்படி எல்லாம் செய்பவர்களைக்கூட வேடிக்கைப் பார்க்கக்கூட முடியாது. ஏனென்றால் நாம் வாழும் யுகம் அப்படி இருக்கிறது.
மந்தா: ஸூமந்த மதய: மந்த பாக்யா ஹ் யுபத் ருதா:
பாகண்ட நிரதா: சந்தோ விரக்தா ஸபரிக்ரஹா பாத்ம புராணம் 1:32
இந்த சுலோகத்தின் வழியாக இப்போது நடக்கும் கலியுகத்தைப் பற்றியும், கலியுகத்தில் வாழும் மக்கள் எப்படி இருப்பார்கள் என்பதை அறியலாம். கலியுக மாந்தர்கள் மந்த புத்தி, சோம்பேறிதனம் கொண்டிருப்பார்கள். பாக்யமற்று இருப்பார்கள். உண்மையான வைராக்கியம், எதிலும் உறுதியில்லாமல் இருப்பார்கள் என்கிறது பாத்மபுராணம்.
ஆக, கலியுகத்தில் ஒருவர் ஆன்மிக சாதனைகள் செய்ய ஆசாரம், அனுஷ்டானம், கர்ம யோகம், வைராக்கியம், யோக மார்க்கம், சரணாகதி, நம்பிக்கை இவைகளை எப்படி பின்பற்ற முடியும்?
மேற்கண்ட கடுமையான பல கட்டுபாடுகள், நியமங்கள் இருப்பதால் பலர் நமக்கெல்லாம் ஆன்மிகம் சரிவராது என்று ஒதுங்கிக்கொள்கின்றனர். இன்னும் சிலர் கடவுளை நம்பாத நாத்திகர்களாகிவிட்டனர்.
கடவுளை அடைய மார்க்கம் கடுமையாக இருப்பதால் பக்தி செய்வதை விட்டு விடவா முடியும்? கலியுகத்தில் பெரும்பாலோர் கடவுளிடம் வேண்டிக்கொண்ட மறுநிமிடமே தம் வேண்டுதல் உடனே நடந்து விடவேண்டும் என்று அபிலாசைப் படுகின்றனர். மேலும், பக்தி செய்வதில் எந்த வித கடினமான சாதனைகளும் செய்யாமல் கடவுளை அடைய முடியுமா? என்பது கூடுதல் ஆசை! ஏனென்றால் பூசை, புனஷ்காரம் எல்லாம் செய்ய நேரமில்லை. தியானம் , யோகம் செய்ய உடல் வலிமையோ, மன வலிமையோ இல்லை. திடமான வைராக்கியமும் இல்லை. இப்படி இருப்பதுதான் கலியுக மனிதர்களின் குணம் என்பதும் வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. இப்படி கலியுக மனிதன் இருப்பான் என்பதால், அப்போதே வேதத்தில் அதற்கும் உபாயத்தைச் சொல்லி இருக்கிறது.
ஸாங் கேத்யம் பாரி ஹாஸ்யம் வா
ஸ்தோபம் ஹே லனமேவ வா
வைகுண்ட நாமக்ர ஹணமஷே ஷா க ஹரம் விது ஸ்ரீமத் பாகவத்தில் இடம்பெற்றிருக்கும் இந்தச் சுலோகம் " நீ இறைவனின் நாமத்தை எப்படி வேண்டுமானாலும் சாதாரணமாகவோ, பரிகாசமாகவோ, ஏளனமாகவோ சொன்னாலும் அது தவறாமல் உன்னை இறைவனின் சரணத்திற்கு அழைத்துச் செல்லும். ' என்று வலியுறுத்துகிறது.
ஜாதி, மத, தேச வேறுபாடின்றி எவரும் கால நியமங்கள் இல்லாமல், எப்போதும், எவ்விடத்திலும் இறைவனின் நாமத்தை சொல்லலாம். எவ்வித ஆசார, அனுஷ்டானமும் தேவையில்லை. எந்தவித பொருளோ, விதிமுறையோ, கட்டுப்பாடோ அவசியமில்லை. நம்பிக்கை என்னும் அடிப்படை தேவையும்கூட வேண்டாம்.
கலியுகத்தில் தெரிந்தோ ,தெரியாமலோ; நம்பிக்கையுடனோ, நம்பிக்கை இல்லாமலோ எப்படியோ வாழ்வில் ஒரே ஒரு முறை "ராமா! கிருஷ்ணா! சிவா! சங்கரா! கந்தா! முருகா! விநாயகா!...' என்று இறைவனுடைய நாமத்தை உச்சரித்தாலே போதும். பிறந்த புண்ணியத்தை அடைந்து விடலாம். அப்படிப் பார்த்தால் கலியுகத்தில் எல்லாருமே ஆத்திகர்கள் தான்! நாத்திகர் என்று யாருமே இல்லை!
கலியில் வர்ணம் வண்ணமாச்சு! ஆஸ்ரமம் சோலையாச்சு! இந்த சூழலில் கடவுள் தன்னை நம்புவனுள்ளும் சரி; நம்பாதவனுள்ளும் சரி "மனசாட்சி' என்ற பெயரில் அமர்ந்து கொண்டு வழிநடத்துகிறான்.
நாத்திகம் என்று நீ கடவுளை ஏளனம் செய்யும் போதும், பரிகாசம் செய்யும் போதும், நிந்தனை செய்யும் போதும் தான் அறியாமலேயே கடவுளை நினைப்பதால், அவன் நாமாத்தை உச்சரிப்பதால் எந்த நாத்திகனும் அப்போதே ஆத்திகனாகிவிடுகிறான்.
கலியுகத்தில் ஒரே ஒரு முறை இறைவனின் நாமமான (ராமா, கிருஷ்ணா, சங்கரா, கந்தா, விநாயகா...) என ஏதோ ஒன்றை சொன்னால் போதும். கிருதயுகத்தில் தியானம் செய்து, திரேதாயுகத்தில் வேள்வி செய், துவாபர யுகத்தில் மந்திரம் செபித்து எந்த உயர்நிலையை அடைந்தனரோ, அந்த உன்னத நிலையை இந்த யுகத்தில் ஒரு முறை நாமா சொல்வதினாலேயே அடைந்து விடலாம்! ஆதலால் இந்த யுகத்தில் யாரும் நாத்திகராக இருக்க வாய்பே இல்லை. அப்படியே இருந்தாலும், இந்த கட்டுரை ஒரு முறை படிப்பதன் மூலமே அவரை அறியாமல் இறைவனின் நாமத்தை நினைத்து விடுவதால் ஆத்திகராகி விடுவர்.

ஆன்மிக சிந்தனை 28

ஆன்மிக சிந்தனை 28
ராமன் எத்தனை ராமன்!

ராமன் எத்தனை ராமன்!
இந்தியாவின் இதிகாசங்களாக ராமாயணமும், மகாபாரதமும் போற்றப்படுகின்றன.இதில் ராமாயணக் காவியத்தின் நாயகன் ராமனை கடவுளாகவே இந்தியர்கள் வணங்குகிறார்கள்.
ராமாயணத்தின் அடிப்படை கதைக்கருவாக இருப்பது, சூரியவம்சத்தில் வந்த தசரத மன்னனின் மகனாக ராமன் பிறந்தது, ஜனகனின் மகள் சீதாவை மணந்தது, ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோர் வனவாசம் செய்தது, சீதை கடத்தப்படல், அவளை மீட்க ராவணனைப் போரில் வென்றது ஆகியன எல்லாம் வரலாற்றுச் செய்திகளாகும்.
மேலே சொன்ன அடிப்படைக் கதைக் கருவைக்கொண்டு எழுதப்பட்ட ராமாயணத்தை ஆதாரமாகக்கொண்டு எழுதப்பட்ட ராமாயணங்கள் பல.
அவைகளில் எண்ணற்ற கற்பனைச் சம்பவங்களும், பிற்கால சிந்தனைகளும் வலிய சேர்க்கப்பட்டு எழுதப்பட்டுள்ளன. செவிவழியாக ராமாயணக்கதையைக் கேட்ட மக்களுக்கு பல புதிய ராமாயணங்களில் கூறப்பட்டிருக்கும் கதைகள், சம்பவங்கள் ஆச்சரியத்தையும்,குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. அது மட்டுமல்லாமல் எது அசல், எது போலி என்ற நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறது!
வடமொழியில் வால்மீகி ராமாயணம் மட்டுமல்லாமல் வேறுபல ராமாயணங்களும் உள்ளன.
அத்யாத்ம ராமாயணம், அகஸ்தியராமாயணம், ஆனந்த ராமாயணம், அத்புத ராமாயணம், வஷிஷ்ட ராமாயணம், மகாராமாயணம், காகபுசுண்ட ராமாயணம் இப்படி எண்ணிக்கையில் பல இருக்கின்றன. இப்படி எழுதப்பட்ட ராமாயணங்கள் 140க்கு மேல் உள்ளனவாம். இந்த ராமாயணங்கள் சொல்லும் கதைகளும் அப்படி இப்படி இருக்கின்றன. அந்த கதைகளைக்கொஞ்சம் அறியலாம்.
அத்புத ராமாயணம் சீதையை மகாசக்தியாகவும், அவளே ஆயிரம்தலை ராவணனை வதம் செய்ததாக கூறுகிறது.
ஆத்யாத்ம ராமாயணம் 3643 பாடல்களைக் கொண்டிருக்கிறது. இதில் ராமர் விஷ்ணுவின் அவதாரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. வேதவியாசரால் தொகுக்கப்பட்ட பிரம்மாண்டபுராணத்தின் ஒரு பகுதியாக உள்ள இந்த ராமாயணத்தை ராமானந்தர் எழுதியுள்ளார்.
ஆனந்த ராமாயணம் என்பது பார்வதி மற்றும் நாரதருக்கு சிவன் கூறிய ராமனின் கதையாக சொல்லப்பட்டிருக்கிறது.
காகபுசுண்ட ராமாயணம் வந்த கதை எப்படி என்றால் கருடனுக்கு காகம் சொல்லியதாக கூறப்பட்டுள்ளது.
தத்வ சம்க்ரஹ ராமாயணம் ராமபிரம்மானந்தா என்பவரால் எழுதப்பட்டது. வால்மீகி ராமாயணத்தைப் பின்பற்றி கோஸ்வாமி துளசிதாஸ் என்பவர் இந்தியில் ராமசரித மானஸாவை 1574ம் ஆண்டு எழுதினார். இதிலும் விஷ்ணுவின் அவதாரமாக ராமர் போற்றப்படுகிறார். மேலும் ராவணனால் கடத்தப்பட்டது உண்மையான சீதையல்ல அது போலி சீதை என்று சொல்லப்பட்டிருக்கிறது.
சேஷராமாயணம் இது சீதை தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறப்படும் சம்பவத்தையும், கர்ப்பமாக இருந்த சீதையை ராமன் காட்டுக்கு அனுப்பிய சம்பவங்களை கூறுகிறது.
காளிதாஸரால் பாடப்பெற்றது ரகுவம்சம் ஆகும். மேலே சொன்ன ராமாயணங்களுக்கு எல்லாம் முன்னாடியாக இருந்தது தசரத ஜாதகாவாகும். இது வால்மிகிக்கு முன்பே எழுதப்பட்டதாக கருதப்படுகிறது.
ஜைனராமாயணம், ராமர் ஜைனமுனிவராகி விட்டதால் அவர் போரிடாமல் லட்சுமணனே ராவணனுடன் போரிட்டு வென்றான் என்றும், பின்னர், லட்சுமணனும் ஜைனத் துறவியானதாகவும், சீதை பெண் துறவியானதாகவும் கூறுகிறது.
அத்யாத்ம ராமாயணம் கிளிப்பாட்டாகும். இது மளையாளத்தில் எழுத்தச்சனால் எழுதப்பட்டதாகும்.
அவத் மொழியிலும் ராமசரிதமனஸ் துளசிதாசனால் எழுதப்பட்டுள்ளது. கிரித்திவாசா என்பவர் வங்காள மொழியில் ராமாயணம் பாடியுள்ளார். தமிழில் கம்பன் எழுதியது கம்பராமாயணம், வால்மீகி ராமாயணத்திலிருந்து விலகி,சில இடங்களில் ராமரை அவதாரமாகவே போற்றியுள்ளார்.
தாய்லாந்து தெரவாட புத்த மதத்தினரிடம் வழங்கி வரும் ராமாயணம் ராமகியான் என்று வழங்கப்படுகிறது. அதில் புத்தரின் அவதாரமாக ராமர் கூறப்பட்டுள்ளார்.
இந்தோனேசியாவில், ராஹ்வணா கதை என்ற பெயரால் ராமாயணத்தைப் பொம்மாட்ட கூத்தாக நடத்துகின்றனர்.
மேலே சொன்ன ராமாயணங்களில் மாறுபட்ட கதையம்சம் கொண்ட ராமாயணம் ஒன்றுள்ளது. இது இன்ன பெயர், இன்னாரால் எழுதப்பட்டது என்பன குறிப்பு இல்லாமல் செவிவழிக்கதையாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த ராமாயணத்தின் கதை எப்படி எனில், ராவணனின் மகள் சீதை. சீதை பிறந்த நேரத்தைக் கணித்த ஜோதிடர்கள், சீதையால் லங்கைக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அதனால், சிசுவைக் கொன்றுவிடும் படியும் யோசனைக்கூறினர். குழந்தைப் பாசத்தால் கொல்ல மனமில்லாத ராவணன், அந்தசிசுவான சீதையை ஒரு பெட்டியில் வைத்து, தன் நாட்டு எல்லைக்கு அப்பால் விட்டுவரச் செய்தான். அதனை ஜனக மன்னன் கண்டெடுத்து வளர்த்து வந்தான். பின்னர் ராமனை மணம் செய்தப்பிறகு, சீதைக்கு வனவாசம் செல்ல நேர்ந்தது. இவை அனைத்தையும் தன் ஒற்றர்கள் மூலம் அவ்வப்போது அறிந்து வந்த ராவணன், தன் மகள் சீதை காட்டில் படும் இன்னல்களைக்கேள்விப்பட்டு வேதைனயடைந்தான். அவளை நல்லமுறையில் வாழவைக்க தன் நகருக்குக் கடத்திவந்தான். தானே அவளது தந்தை என்று ராவணன் கூறியதை சீதை நம்ப மறுத்ததால் போர் ஏற்பட்டது. முடிவில், சீதையின் கால்பட்டதால் லங்கா அழிந்தது. ராவணனும் உயிர் இழந்தான் என்று கதை போக்கு போகிறது...
இப்படி பல மொழிகளில் தேசம் கடந்து பல ராமாயணங்கள் இருக்கின்றன.இந்தியாவுக்கு வந்த அந்நிய நாட்டு நாடோடிகள், பயணிகள்,துõதுவர்கள் இப்படி இவர்கள் இங்கு செவிவழியாக கேட்ட ராமாயணக்கதைகளை அவரவர்கள் நாட்டில் கூறி, செவிவழியில் இருந்து எழுத்துக்கு வரும்போது பல புனைவுகளை கொண்டதாக அவை ஒவ்வொன்றும் புதிய செய்திகளைக் கூறுகின்றன. இதிகாச காவியமான ராமாயணம் பெயரில் இத்தனை ராமாயணங்களா என்று ஆச்சரியம் ஏற்படுகிறது!

உயர்திணையும் அஃறிணையும்!

ஆன்மிக சிந்தனை

உயர்திணையும் அஃறிணையும்!
உலகில் கடவுள் 85 லட்சம் உயிரினங்களைப் படைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. கடவுளின் அருள்பார்வையில் எல்லா உயிரினங்களும் ஒன்று தான். எந்த வேறுபாடும் கிடையாது. மனிதனின் பார்வையில் தான் பேதங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது. மனிதன் தன்னை போல சக மனிதர்களிடமே பேதம் கண்டு திரிகிறான். கடவுள் ராஜாங்கத்தில் அனைத்து உ<யிர்களும் சமம். கடவுளை நேசிப்பவர்கள், கடவுளை உணர்ந்தவர்கள் எல்லாம் உலகில் உள்ள சக ஜீவன்களை சமமாகவே பாவிக்கின்றனர்."வாடியப் பயிரை கண்டுபோதெல்லாம் வாடினேன்' என வள்ளலார் வருந்தினாரே, அந்த பரிபக்குவம் கடவுள் உணர்வு நிரம்ப பெற்றவர்களால்தான் இப்படி எல்லாம் சக உயிர்களைக்கண்டு பரிதாபப்படமுடியும்!
வாழ்வியல் ரீதியாக உலக உயிர்களை இரு வகையாக பிரித்திருக்கிறோம். அவை உயர்திணை, அஃறிணை.ஆறறிவுப் பெற்ற உயிர்கள் எல்லாம் உயர்திணை. அவ்வாறு அல்லாதவை எல்லாம் அஃறிணையாக இலக்கணம் வகுத்துள்ளது. அஃறிணை என்ற சொல் லாவகம்கூட பாராட்டக்கூடியது.
உலக வழக்குப்படி உயர்வு என்றால் தாழ்வு, நன்மை என்றால் தீமை என்று தான் எதிர்பதம் கொள்கிறோம். ஆனால் பாருங்கள் இலக்கணம் வகுத்த தொல்காப்பியன் உயர்திணை என்று சொல்லிவிட்டு, அதற்கு எதிர்பதமாக இருப்பது தாழ்வு திணை என்று சொல்லாமல் அஃது அல்லாத திணை அஃறிணை என்று கவுரவப்படுத்தியுள்ளான்.
இதில் இருந்தே அஃறிணைக்கு ஏதோ ஒரு சிறப்பு இருப்பது புலனாகிறது தானே! ஆம்! மனிதர்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு அஃறிணையான உயிரினங்களுக்கு உண்டு என்பதன் சிந்தனைத் தேடல்தான் இந்த கட்டுரையில் சொல் கட்டுமானம்.
மனிதர்கள் ஆறறிவு பெற்றவர்கள். எது நல்லது? எது கெட்டது? என்று பகுத்து உணரும் திறன் பெற்றவர்கள். அது மட்டுமல்ல; உயிர் படைப்பில் அரிதான மேன்மையையும் பெற்றவர்கள் ஆவர். பிறவி சுழலில் பாவத்தைவிட, புண்ணியம் சேர்த்த ஆன்மா மனிதப்பிறவி எடுக்கிறது. முன்னம் எடுத்த பிறவியில் அதிகமாக பாவம் செய்த ஆன்மா அஃறிணையாக பிறவி எடுக்கிறது. அஃறிணை என்றால் ஆடு, மாடு, கோழி, ஜந்துக்கள் ஆகும்.
மனிதப்பிறவியில் தான் நல்லது, கெட்டது தெரிகிறது. நல்லவை செய்ய அதற்குண்டான புண்ணியமும், கெட்டது செய்தால் அதற்குண்டான பாவமும் வந்து சேர்கிறது. ஆக, மனிதன் செய்யும் செயலால் விளையும் பாவ, புண்ணியங்கள் எல்லாவற்றிற்கும் மனிதனே பொறுப்பு ஏற்க வேண்டியிருக்கிறது. மனிதப்பிறவி வாய்த்திருப்பதன் பேறு என்னவெனில், முன்னம் செய்த வினையை அனுபவிக்கவும் எடுத்தப் பிறவியில் பாவ செயல்கள் செய்யாது புண்ணியம் தேடிக்கொண்டு பிறவி எடுப்பதை தவிர்த்துக்கொள்ள கொடுக்கப்பட்ட சந்தர்ப்பம் ஆகும். நாம் ஆறறிவைக்கொண்டு, எது பிறவியை தடுக்கவல்ல செயல்கள் என்பதை அறிந்து, கடவுளை பிரார்த்தனை செய்து, கடவுள் ஆணைப்படி நியம, சாஸ்திரங்களை கடைபிடித்து வாழ்ந்து வாழ்வின் இறுதியில் கடவுளின் ராஜாங்கத்தில் தம்மை இணைத்துக்கொள்ளவேண்டும். ஆனால், மனிதப் பிறவி எடுத்ததுமே உயிர் மேல் ஆசை வந்து தொற்றிக்கொள்கிறது. பாசப்பற்று வேறு ஒட்டிக்கொள்கிறது. பொருள் மீதும், பொன் மீதும் இப்படி உலகப் பொருள்கள் மீது ஆசை வந்து படுத்த, புண்ணியம் தேடும் பாதையை மறந்து, பாவத்தைத் தேடிக்கொள்கிறோம்.
ஆனால், அஃறிணையான ஆடு, மாடு, கோழி போன்ற விலங்குகளாக பிறவி எடுத்தவை எல்லாம் அவைகள் எடுத்த பிறவியில் புண்ணியம் சேர்த்து கொள்கின்றன. எப்படி எனில், அவைகளுக்கு எது நல்லது, கெட்டது என்பதை பகுத்துணரும் ஆற்றல் இல்லாததால் அவைகள் ஆற்றும் செயல்களால் வரும் விளைவுகளை அவை கொள்வதில்லை! அஃறிணைகளுக்கு மனிதர்களைப்போல பற்று, ஆசை, உயிர் ஆசை எல்லாம் கிடையாது. கடவுள் அருளைப் பெறவும் அவைகளுக்குத் தெரியாது என்பதால், அவைகள் கடவுளைப் புறக்கணித்த குற்றத்திற்கு ஆளாவதில்லை!
மனிதன் இறந்ததும் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நரகமோ, சொர்க்கமோ செல்கிறான். ஆனால், விலங்குகள் எல்லாமே இறந்ததும் சொர்க்கம் மட்டுமே செல்கின்றன. அவைகள் நரகம் புகுவதில்லை. அது மட்டுமல்ல; எடுத்த பிறவியில் அவைகள் பாவம் எதையும் தெரிந்தே செய்வதில்லை. அவை வாழும் வரை பற்றற்று இருந்து, முன்னம் செய்த பாவங்களை போக்கிக்கொள்கின்றன. மேலும் பகுத்தறிவு இல்லாத எந்த ஜீவனின் மனதுள் கடவுள் இருந்து அருள்பாலிக்கிறான். இந்த பேறு யாருக்கு வாய்க்கும்?
மனிதப்பிறவி எடுத்து, அல்லற்று பாவம் தேடிக்கொண்டிருப்பதை விட, விலங்குகளாய் பிறப்பு எடுப்பது மேல் தான்! தன்னை மறப்பது தான் மனதின் வேலையாக இருக்க வேண்டும். அது சாதாரண மனிதர்களாகி நமக்கு வாய்க்காது. துறவிகளுக்கும், ஞானிமார்களுக்கும் வேண்டுமானால் அந்த பக்குவம் வரலாம். சிவனேன்னு இருப்பது என்பது விலங்குகளுக்கு வாய்த்த ஒரு பேறாகும். அதுவாய் பிறந்து, அதுவாய் இருந்து, அதுவாய் இறந்து, அது அதுவாய் போய்விடுகின்றன. அதுவாய் இருப்பது பிரம்மம் என்பதால் அவைகள் நேரடியாக பிரம்மத்தோடு சேர்ந்து விடுகின்றன. நாமோ நான் எனும் ஆணவ மலம் கொண்டு, நான் என்று வாழ்ந்து, நான் என்று இறந்து, நான் என்றே எஞ்சிவிடுவதால் மும்மலம் தீராமல் மீண்டும், மீண்டும் பிறப்பெடுக்கிறோம்.
என்னுடை பிரார்த்தனை எல்லாம்"கடவுளே! மீண்டும் பிறவாமை வேண்டும். அவ்வாறு பிறந்து விட்டால் அந்தப் பிறப்பு மனிதப்பிறப்பாக இல்லாமல் அஃறிணையாக இருக்கவேண்டும். ஒரு வேளை அடுத்தப்பிறவியில் ஆடாய், மாடாய், பன்றியாய், நாயாய் பிறவி வாய்த்தால் பாவம் அறியாது, புண்ணியம் மட்டுமே தேடிக்கொண்டு பிறவி சாகரத்தைக் கடக்க அருள்வாயாக!' என்பதாகவே இருக்கிறது.

உயர்திணையும் அஃறிணையும்!

ஆன்மிக சிந்தனை

உயர்திணையும் அஃறிணையும்!
உலகில் கடவுள் 85 லட்சம் உயிரினங்களைப் படைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. கடவுளின் அருள்பார்வையில் எல்லா உயிரினங்களும் ஒன்று தான். எந்த வேறுபாடும் கிடையாது. மனிதனின் பார்வையில் தான் பேதங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது. மனிதன் தன்னை போல சக மனிதர்களிடமே பேதம் கண்டு திரிகிறான். கடவுள் ராஜாங்கத்தில் அனைத்து உ<யிர்களும் சமம். கடவுளை நேசிப்பவர்கள், கடவுளை உணர்ந்தவர்கள் எல்லாம் உலகில் உள்ள சக ஜீவன்களை சமமாகவே பாவிக்கின்றனர்."வாடியப் பயிரை கண்டுபோதெல்லாம் வாடினேன்' என வள்ளலார் வருந்தினாரே, அந்த பரிபக்குவம் கடவுள் உணர்வு நிரம்ப பெற்றவர்களால்தான் இப்படி எல்லாம் சக உயிர்களைக்கண்டு பரிதாபப்படமுடியும்!
வாழ்வியல் ரீதியாக உலக உயிர்களை இரு வகையாக பிரித்திருக்கிறோம். அவை உயர்திணை, அஃறிணை.ஆறறிவுப் பெற்ற உயிர்கள் எல்லாம் உயர்திணை. அவ்வாறு அல்லாதவை எல்லாம் அஃறிணையாக இலக்கணம் வகுத்துள்ளது. அஃறிணை என்ற சொல் லாவகம்கூட பாராட்டக்கூடியது.
உலக வழக்குப்படி உயர்வு என்றால் தாழ்வு, நன்மை என்றால் தீமை என்று தான் எதிர்பதம் கொள்கிறோம். ஆனால் பாருங்கள் இலக்கணம் வகுத்த தொல்காப்பியன் உயர்திணை என்று சொல்லிவிட்டு, அதற்கு எதிர்பதமாக இருப்பது தாழ்வு திணை என்று சொல்லாமல் அஃது அல்லாத திணை அஃறிணை என்று கவுரவப்படுத்தியுள்ளான்.
இதில் இருந்தே அஃறிணைக்கு ஏதோ ஒரு சிறப்பு இருப்பது புலனாகிறது தானே! ஆம்! மனிதர்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு அஃறிணையான உயிரினங்களுக்கு உண்டு என்பதன் சிந்தனைத் தேடல்தான் இந்த கட்டுரையில் சொல் கட்டுமானம்.
மனிதர்கள் ஆறறிவு பெற்றவர்கள். எது நல்லது? எது கெட்டது? என்று பகுத்து உணரும் திறன் பெற்றவர்கள். அது மட்டுமல்ல; உயிர் படைப்பில் அரிதான மேன்மையையும் பெற்றவர்கள் ஆவர். பிறவி சுழலில் பாவத்தைவிட, புண்ணியம் சேர்த்த ஆன்மா மனிதப்பிறவி எடுக்கிறது. முன்னம் எடுத்த பிறவியில் அதிகமாக பாவம் செய்த ஆன்மா அஃறிணையாக பிறவி எடுக்கிறது. அஃறிணை என்றால் ஆடு, மாடு, கோழி, ஜந்துக்கள் ஆகும்.
மனிதப்பிறவியில் தான் நல்லது, கெட்டது தெரிகிறது. நல்லவை செய்ய அதற்குண்டான புண்ணியமும், கெட்டது செய்தால் அதற்குண்டான பாவமும் வந்து சேர்கிறது. ஆக, மனிதன் செய்யும் செயலால் விளையும் பாவ, புண்ணியங்கள் எல்லாவற்றிற்கும் மனிதனே பொறுப்பு ஏற்க வேண்டியிருக்கிறது. மனிதப்பிறவி வாய்த்திருப்பதன் பேறு என்னவெனில், முன்னம் செய்த வினையை அனுபவிக்கவும் எடுத்தப் பிறவியில் பாவ செயல்கள் செய்யாது புண்ணியம் தேடிக்கொண்டு பிறவி எடுப்பதை தவிர்த்துக்கொள்ள கொடுக்கப்பட்ட சந்தர்ப்பம் ஆகும். நாம் ஆறறிவைக்கொண்டு, எது பிறவியை தடுக்கவல்ல செயல்கள் என்பதை அறிந்து, கடவுளை பிரார்த்தனை செய்து, கடவுள் ஆணைப்படி நியம, சாஸ்திரங்களை கடைபிடித்து வாழ்ந்து வாழ்வின் இறுதியில் கடவுளின் ராஜாங்கத்தில் தம்மை இணைத்துக்கொள்ளவேண்டும். ஆனால், மனிதப் பிறவி எடுத்ததுமே உயிர் மேல் ஆசை வந்து தொற்றிக்கொள்கிறது. பாசப்பற்று வேறு ஒட்டிக்கொள்கிறது. பொருள் மீதும், பொன் மீதும் இப்படி உலகப் பொருள்கள் மீது ஆசை வந்து படுத்த, புண்ணியம் தேடும் பாதையை மறந்து, பாவத்தைத் தேடிக்கொள்கிறோம்.
ஆனால், அஃறிணையான ஆடு, மாடு, கோழி போன்ற விலங்குகளாக பிறவி எடுத்தவை எல்லாம் அவைகள் எடுத்த பிறவியில் புண்ணியம் சேர்த்து கொள்கின்றன. எப்படி எனில், அவைகளுக்கு எது நல்லது, கெட்டது என்பதை பகுத்துணரும் ஆற்றல் இல்லாததால் அவைகள் ஆற்றும் செயல்களால் வரும் விளைவுகளை அவை கொள்வதில்லை! அஃறிணைகளுக்கு மனிதர்களைப்போல பற்று, ஆசை, உயிர் ஆசை எல்லாம் கிடையாது. கடவுள் அருளைப் பெறவும் அவைகளுக்குத் தெரியாது என்பதால், அவைகள் கடவுளைப் புறக்கணித்த குற்றத்திற்கு ஆளாவதில்லை!
மனிதன் இறந்ததும் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நரகமோ, சொர்க்கமோ செல்கிறான். ஆனால், விலங்குகள் எல்லாமே இறந்ததும் சொர்க்கம் மட்டுமே செல்கின்றன. அவைகள் நரகம் புகுவதில்லை. அது மட்டுமல்ல; எடுத்த பிறவியில் அவைகள் பாவம் எதையும் தெரிந்தே செய்வதில்லை. அவை வாழும் வரை பற்றற்று இருந்து, முன்னம் செய்த பாவங்களை போக்கிக்கொள்கின்றன. மேலும் பகுத்தறிவு இல்லாத எந்த ஜீவனின் மனதுள் கடவுள் இருந்து அருள்பாலிக்கிறான். இந்த பேறு யாருக்கு வாய்க்கும்?
மனிதப்பிறவி எடுத்து, அல்லற்று பாவம் தேடிக்கொண்டிருப்பதை விட, விலங்குகளாய் பிறப்பு எடுப்பது மேல் தான்! தன்னை மறப்பது தான் மனதின் வேலையாக இருக்க வேண்டும். அது சாதாரண மனிதர்களாகி நமக்கு வாய்க்காது. துறவிகளுக்கும், ஞானிமார்களுக்கும் வேண்டுமானால் அந்த பக்குவம் வரலாம். சிவனேன்னு இருப்பது என்பது விலங்குகளுக்கு வாய்த்த ஒரு பேறாகும். அதுவாய் பிறந்து, அதுவாய் இருந்து, அதுவாய் இறந்து, அது அதுவாய் போய்விடுகின்றன. அதுவாய் இருப்பது பிரம்மம் என்பதால் அவைகள் நேரடியாக பிரம்மத்தோடு சேர்ந்து விடுகின்றன. நாமோ நான் எனும் ஆணவ மலம் கொண்டு, நான் என்று வாழ்ந்து, நான் என்று இறந்து, நான் என்றே எஞ்சிவிடுவதால் மும்மலம் தீராமல் மீண்டும், மீண்டும் பிறப்பெடுக்கிறோம்.
என்னுடை பிரார்த்தனை எல்லாம்"கடவுளே! மீண்டும் பிறவாமை வேண்டும். அவ்வாறு பிறந்து விட்டால் அந்தப் பிறப்பு மனிதப்பிறப்பாக இல்லாமல் அஃறிணையாக இருக்கவேண்டும். ஒரு வேளை அடுத்தப்பிறவியில் ஆடாய், மாடாய், பன்றியாய், நாயாய் பிறவி வாய்த்தால் பாவம் அறியாது, புண்ணியம் மட்டுமே தேடிக்கொண்டு பிறவி சாகரத்தைக் கடக்க அருள்வாயாக!' என்பதாகவே இருக்கிறது.

வெள்ளி, 26 மார்ச், 2010

மறக்க முடியாத வார்த்தைகள்...

மறக்க முடியாத வார்த்தைகள்...
பச்சை வயல் மனசு!
வார்த்தைகள் என்பவை எழுத்துக்களின் தொகுப்பு என்று சர்வசாதாரணமாக சொல்லிவிடுகிறோம். ஆனால், சிலர் எழுதும் வார்த்தைகளும், பேசும் வார்த்தைகளும் இந்த பூமியை புரட்டிப்போடும் நெம்புகோலாக இருந்திருக்கின்றன! வார்த்தைகளுக்கு மயக்கும் சக்தியும்; மந்திர சக்தியும் ,வசீகரிக்கும் சக்தியும் உண்டு.
"செய் அல்லது செத்துமடி' இந்த சாதாரண வார்த்தை காந்தியின் வாயிலிருந்து புறப்பட்டு,இளைஞர்களின் மனதில் சுதந்திர வேட்கையை விதைத்து,இந்தியா சுதந்திரம் பெற காரணமாக இருந்த மந்திரச்சொல்லாக ஆகிவிட்டதை இன்றும் அறிகிறோம்.
"இது எப்படி இருக்கு?'
"அந்த மான் இந்த மானுக்குத் தான் சொந்தம்'
80களில் வெளியான திரைப்படத்தில் வந்த இந்த வார்த்தைகளை இன்று வரை ரசிக்காதவர்கள் உண்டா என்ன? இப்படியான சில மறக்க முடியாத வார்த்தைகள் ஒவ்வொரு மனிதர்களிடமும் இருக்கின்றன. அதை தான் இந்த பக்கத்தில் நீங்கள் ரசிப்பதற்கு தருகிறோம்.
நான் தினமும் அலுவலகத்திற்கு வரும் பஸ்சில் கிரானைட் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மாறன் என்பவர் பஸ்சில் தினமும் எதாவது ஒரு புத்தகம் படித்துக்கொண்டுதான் இருப்பார். அவரிடம் நீங்கள் படித்த எழுத்தாளர் கதையில் உங்களுக்குப்பிடித்த, மறக்க முடியாத வார்த்தை ஒன்றை சொல்லுங்கள் என்றேன்.
அவரோ சிரித்துக்கொண்டே எதை சொல்வேன்... என்று யோசித்தவர். சரி, சொல்றேன் கேட்டுகுங்க. எனக்குப்பிடித்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர் எழுதிய கதையில் வரும் ஒருவார்த்தை மறக்கமுடியாதவை.அது"பச்சை வயல் மனசு' என்ற வார்த்தை. ஒவ்வொருத்தருக்கும் ஒரு மனசு.ஆனா, மனசுல விதைக்கிற விசயம் இருக்கே அது ஆயிரம் ஆயிரம்... ஒரு கூட்டு குடும்பத்துல, அண்ணன், தம்பி, அக்கா ,தங்கைன்னு ஏகப்பட்ட பேர் இருக்கிற குடும்பத்தில இருக்கும் ஒரு முதிர்கன்னியின் மனசில் வந்துப்போகி காதலை அவள் ரசிக்கறா.ஆனா அதை அங்கிகரீக்கமுடியாம கை கழுவிடுறா.இப்படி ஐந்து, ஆறு காதல் அவளைத்தேடி வருகிறது. எல்லாத்தையுமே குடும்பத்துக்கா உதறிவிடுகிறாள். காலம் கடந்து , என்னன்னவோ நடந்து விடுகிறது. ஆனாலும் மனசு எத்தனை காயம் பட்டும், நல்லதுக்கு கெட்டதுக்கு சிரிச்சும் அழுதும் இருந்து கடைசிவரை அவள் மனசு எந்த நிலையிலும் பட்டுபோகாம, பசுமையாகவே இருக்கு. அவளின் மனசு எப்படிபட்டதுன்னு சொல்ல வந்த பாலகுமாரன் அவள் மனசு பச்சை வயல் மனசு... என்று முடித்திருப்பார்.மரம் எத்தனை முறை இலைகளை உதிர்த்தாலும் ,அதுக்கா மரம் பட்டமரமா ஆயிடறதில்லை.மீண்டும் மீண்டும் தளிர்விட்டு மரம் பசுமையாக தான்இருக்கும்.அதை மாதிரி தான் அவள் மனசும் இழந்த காதலை பற்றி கவலைப்படாம, வர்றகாதலை நேசிக்கிட்டு இருக்கான்னு சொல்லியிருப்பாரு.
பொதுவாகவேஒரு மனுஷன் மனசுக்கு எ த்தனை பிரிவுகள், இழப்புகள்,காயங்கள் வருது. ஆனா அதுக்கா மனசு மரத்துபோயிடுதா என்ன? செத்துபோயிடுதா என்ன? அதான் மனசை "பச்சை வயல் மனசு'பாலகுமாரன் எழுதியஅந்த வார்த்தையின் அழுத்தம்; அடர்த்தி; நயம் இப்போதும் மனசில் வட்டமடிச்சிக்கிட்டுதான் இருக்கு என்றார்.

துப்பறியும் கதைகள்

துப்பறியும் கதைகள்3

பேய் கிராமம்!

நகரத்தை ஒட்டி இருந்தது அந்தக் கிராமம். ஒரு மாதமாய் அங்கே எதிர்பாராத விதமாய்
ஒவ்வொரு நாளும் திக்... திக்.. திகில்கள் அரங்கேறி கொண்டிருந்தன. ஒவ்வொரு கணமும்
அடுத்தடுத்து என்ன நடக்கும்? ஏது நடக்குமோ? என்ற அச்சத்தில் கிராம மக்கள் மரணபயத்தில்
இருந்தனர்.
முதலில் அந்தக் கிராமத்திற்கு பத்து போலீசார் காவலுக்கு சென்றனர். பின்னரும் அந்த மர்மம்
தொடரத்தான் செய்தது.
அடுத்ததாக, தெருவுக்கு பத்து போலீசார் காவல் காத்தும் கூட, அந்த அசம்பாவிதனத்தை
தடுத்து நிறுத்த முடிய வில்லை.
இறுதி கட்டமாக ,வீட்டுக்கு வீடு போலீசார் காவல் இருந்தும் தினம் தினம் அரங்கேறும்அந்த
மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்க்க முடியவில்லை. கண்டுபிடிக்கவும் முடியவில்லை.
இன்ஸ்பெக்டர் துப்புராஜ் துப்பறிவதில் திக்கு முக்காடி போனார்.ஒரு மாதமாய் துõக்கம்
கெட்டு, என்னன்னவோ வழியிலும் புலன் விசாரணை செய்தும், அவரால் இந்த சவாலான
கேஸில் ஒரு படிக்கூட முன் செல்ல முடியவில்லை.
விடிய, விடிய கிராமத்தை ரவுண்ட் வந்த துப்புராஜ், அதிகாலையில் தான் ஸ்டேஷனுக்கு
வந்தார்.
கண்கள் பவளம் போல சிவந்திருந்தது. துõக்கம் இமையில் உட்கார்ந்து துப்புராஜியை
நித்திரையில் கொஞ்சம் அக்கறை செலுத்த சொல்லியது.
அப்படியே டேபிளில் கவிழ்ந்து விட்டார் துப்புராஜ்.
பதறியடித்து வந்த கண்ணாயிரம், துப்புராஜியை உழுக்கி, "" சார்,சார்! தெற்கு தெருவுல
தொடர்ந்தாப்ல மூணு வீடுகள் தீப்பற்றி எரியுது சார். தீயணைப்பு காரங்க தீயை அணைச்சுக்
கிட்டு இருக்காங்க.'' என்று சொல்லிய கண்ணாயிரம் பிரம்மை பிடித்திருந்தார்.
தினம் தினம் இந்த செய்தியைக் கேட்டு, கேட்டு துப்புராஜ் உக்கிரத்தின் உச்சத்துக்கே போனார்.
டென்ஷனில் கொதித்துப் போனவர், "" என்னைய்யா இந்த கிராமத்துல நடக்குது? ஒண்ணுமே
புரியமாட்டேங்கிறது! எவனோ ஒருத்தன் என் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டிக்கிட்டு
இருக்கான். சும்மா விடமாட்டேன். பார், பிடிச்சு காட்டுறேன்.'' சொல்லியவர், கொதித்துப்
போனார், "" சரி, வாங்க கண்ணாயிரம் ஸ்பாட்டுக்கு போகலாம்'' என்று துப்புராஜ் சொன்னதும்
பின் தொடர்ந்தார், கண்ணாயிரம்.
அந்த வீடுகள் பாதி எரிந்து சாம்பலாயிருந்தது.
அக்கம் பக்கம் வீடுகளில் இருப்பவர்களையும், அந்தந்த வீடுகளுக்கு காவல் இருந்த போலீசா
ரிடம், "" சந்தேகம் படியான ஆள் நடமாட்டம் இருந்ததா? புதிய மனிதர்கள் யாராவது
வந்தார்களா?'' என்று துப்புராஜ் விசாரித்ததில், எல்லாருமே உதட்டைப் பிதிக்கினர்.
இப்படி எல்லாருமே " தெரியாது' என்று சொன்னதைக்கேட்டு, "" ச்சே! என்னைய்யா மாய
மந்திரமா இருக்குது? ஒரு மாசமா திடீர் திடீர்ன்னு வீடுகள் அதுவா தீப்பிடிச்சு எரிகிறது?
எவனும் தீ வைக்காம எப்படியா இது சாத்தியம்?'' தன் நெஞ்சில் இருந்த ஆத்திரத்தை எல்லாம்
கொட்டித்தீர்த்து விட்டு, கண்ணாயிரத்தை இருந்து விசாரித்து விட்டு வருமாறு சொல்லி விட்டு
ஸ்டேஷனுக்கு கிளம்பினார்.
மதியம். கண்ணாயிரம் ஸ்டேஷனுக்கு வந்தவர், "" சார், ஒரு மாசமா இந்தக் கிராமத்துல வீடுகள்
அதுவா தீப்பிடிச்சு எரிய காரணம் தெரிஞ்சுடுச்சு, சார். இந்த ஊரு பூசாரி மேல பிடாரி அம்மன்
ஏறி குறிசொல்லி இருக்கு. இந்தக் கிராமத்துல இருப்பவங்க தெய்வ குத்தம் செஞ்சுட்டாங்களாம்.
அதனால தான் 48 வகையான பேய், பிசாசுங்க கிராமத்துல இருக்கிற வீட்டை எல்லாம் மர்மமான
முறையில கொளுத்திக்கிட்டு இருக்காம். இதை எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாதுன்னு
அந்த பூசாரி சாமியாடிருக்கான்'' என்ற கண்ணாயிரத்தின் முகத்தில் ஒரு திருப்தி தவழ்ந்தது.
இதைக் கேட்டதும் துப்புராஜ், "" அப்படியா? அப்போ இது பேய்கள் நடமாடும் கிராமமா?
போய்யா... இந்த விஞ்ஞான யுகத்துல பேய்... பிசாசுன்னு'' என்ற துப்புராஜ்,
யோசனையில் ஆழ்ந்தார். கண்ணாயிரம் சொன்னதில் ஏதோ பொறி தட்டியது.சட்டென்று
சுதாரித்துக்கொண்டவர்,"" அப்பாடா இப்பதான்யா சரியான எவிடன்சே
சிக்கி இருக்கு.இப்ப பாரு நான் பூசாரிக்கிட்ட பேய் ஆடி எல்லா மர்மத்துக்கும் முற்றுபுள்ளி
வைக்கிறேன். போய் அவனை கூப்பிட்டு வாங்க.'' என்றார்.
பூசாரி குறிசொன்ன கணத்திலிருந்து கிராம மக்கள் பேய் கிலிபிடித்து திரிந்தனர்.
இரவு எட்டுமணி இருக்கும் ஸ்டேஷனுக்கு பூசாரியை அழைத்து வந்தார், கண்ணாயிரம்.
லாக்கப்பில் பூசாரிக்கு அடி,உதை சரமாரியாக விழுந்தது.வலிதாங்க முடியாமல் முணகிய
பூசாரி, இனியும் விஷயத்தை மறைத்தால் தர்ம அடியில் உயிரே போனாலும் போயிடும் என்று
முடிவுக்கு வந்தவர், அந்த விஷயத்தை கக்கினார்.
பின்னர், துப்புராஜ் துரிதமாக விசாரணையைத் தொடங்கினார்.
"" கண்ணாயிரம், ஆறுமாசத்துக்கு முன்னால இந்த கிராமத்தையே ஒட்டு மொத்த விலைக்கு
வாங்கி, ஏதோ பேக்டரி கட்ட யாரோ வந்து இருந்தாங்களாமே?''
"" ஆமாம் சார். வந்தவங்க ,அடிமாடு விலைக்கு கேட்டா யாரு கொடுப்பாங்க. அதான் வந்த
வழியே போயிட்டாங்க''
""அப்படியா?'' என்ற துப்புராஜ், போனில் அந்த நம்பரை டயல் செய்தார்.
மறுமுனையில்"" ஹலோ! மாதேஷ் பேசறேன்''
"" மாதேஷ், துப்புராஜ் பேசறேன். சின்ன பிராப்ளம்.''என்றவர், கிராமத்தில் நடந்த சம்பவங்களை
சொன்னார்.
""நான் ஒருகெமிஸ்டிரி புரபசர் என்கிற முறையில் சொல்றேன் இது திட்டமிட்ட அறிவியல் பூர்வமான மே
ஜிக்'' என்ற மாதேஷ், தீப்பிடித்து எரியவைக்கும் மெத்தேடை விவரித்தார்.
""கண்ணாயிரம், ஒருவழியாய் இந்த கிராமத்தில் வீடுகளை தீப்பிடிக்க வைத்த பேயை கைது
பண்ண போறோம். வாங்க.'' என்றார்.
கண்ணாயிரத்துக்கு எதுவும் புரியவில்லை. குழப்பத்தோடு ஜீப்பில் ஏறினார்.
ஒரு மனிநேரத்தில் ஜீப் அந்த பங்களாவில் நின்றது.
தட தட வென உள்ளே போன துப்புராஜ், "" நித்யானந்தம். உங்களை இப்போ கைது பண்ணப்
போறேன். வரீங்களா ஸ்டேஷனுக்கு'' என்றவரிடம், "" எதுக்கு?'' என்றார்.
""நீங்க கேட்ட விலைக்கு அந்த கிராம மக்கள் அவங்கவங்க இடத்தைக் கொடுக்கலை என்பதால
ரொம்ப புத்திசாலிதனமா சையின்ஸ் டெக்னிக்கில் பாஸ்பரஸ் ரசாயன பவுடரை சூடத்துடன்
கலந்து, சாணத்தில் பெட்ரோல் கலந்து அதை உருட்டி வீடுகள் மீது போட சொல்லியிருக்கீங்க.
அந்த ரசாயன கலவை வெயில் படபட சூடாகி திடீர்ன்னு தீப்பிடிச்சு எரியும். இப்படி
தினம் தினம் செய்து அந்த மக்களை பயமுறுத்தி, கடைசியா பூசாரி மூலம் இதெல்லாம்
பேயோடு செயல். தெய்வ குத்தம்ன்னு புரளிய விட்டிருக்கீங்க. கடைசியா மக்கள் பேய்க்கு
பயந்த வீட்டையும் இடத்தையும் உங்களிடம் வந்த விலைக்கு கொடுப்பாங்கன்னு
திட்டம் போட்டு நல்ல நாடகம் போட்டு இருக்கீங்க. ஆக,உங்க சுயநலத்துக்காக
வீட்டை கொளுத்துனதுக்காக தான் கைது பண்றேன்.போதுமா? இன்னும் உன்னோட
பித்தலாட்டத்தை சொல்லவா'' என்றார், துப்புராஜ்.
நித்யானந்தம் மவுனமாய் துப்புராஜியை பின் தொடர்ந்தார்.
" அப்பாடா!' என்று கண்ணாயிரம் பெருமூச்சு விட்டார், துப்புராஜியை பார்த்து சிரித்தப்படி.






துப்பறியும் கதைகள் 4
காலடி தடத்தில் ஒரு தடயம்!

அசந்து துõங்கிக் கொண்டிருந்தவரை, துப்புராஜின் மனைவி அகல்யா
பெட் காபியுடன் எழுப்பினாள்.
"" ஏங்க, எழுந்திரிக்க மனசே இல்லையா? இன்னைக்கு என் தங்கச்சிக்கு
நிச்சயதார்த்த பங்ஷனுக்கு போகணும்னு தெரியாதா? மறந்துட்டீங்களா?...ம்...
சீக்கிரம் எழுந்திருச்சி, கிளம்பறதுக்கு வழிய பாருங்க'' என்றவள், காபி கப்பை துப்புராஜ் கையில்
கொடுத்து விட்டு கிச்சனுள் நுழைந்தாள்.
அகல்யா ஞாபக படுத்தியப்பிறகு தான் துப்புராஜிக்கு பங்ஷனுக்கு போகணும் என்ற நினைப்பு
வந்தது. அகல்யா கொடுத்த காபியை பருகிவிட்டு, குளிக்கச் சென்றார்.
டி.வி. ஸ்டாண்டில் இருந்த போன் ரிங் ஆனது. அகல்யாவுக்கு கிச்சனில் ஓடிய கிரைண்டர்
சத்தத்தில் போன் ரிங் ஒலி கேட்கவில்லை.
பாத்ரூமில் இருந்து அவசர அவசரமா வந்த துப்புராஜ் ரிஸிவரை எடுத்தார்.
மறுமுனையில் கண்ணாயிரம் அந்த தகவலைச் சொன்னார். ரிஸிவரை வைத்துவிட்டு, அவசர, அவசரமாய்
யூனிபார்ம்மை போட்டுக்கொண்டு கிளம்பிய துப்புராஜியிடம்,
""என்னாங்க, டிபன் ரெடி சாப்பிட வறீங்களா?'' என்றஅகல்யாவிடம்,
""இல்ல, ஸ்டேஷன் கிளம்பறேன். அர்ஜென்ட் மேட்டர்...'' கிடுகிடுவென ஓட்டமும் நடை
யுமாய் வீட்டிலிருந்து வெளியே வந்தவர் ஜீப்பில் கிளம்பினார்.
ஸ்டேஷனில் கண்ணாயிரத்திடம் பேசிக்கொண்டிருந்தார் நகை கடை அதிபர் அமிர்தலிங்கம்.
துப்புராஜ் உள்ளே நுழைந்ததும், ""வணக்கம், சார்!'' என்றவரை ""உட்காருங்க'' என்று
சொல்லி விட்டு, கண்ணாயிரத்திடம் நீங்க மோப்ப நாயை கூட்டிக்கிட்டு சார் வீட்டுக்கு
போங்க. நான் ஜீப்பில நடந்த சம்பவம் பற்றி விசாரிச்சுக்கிட்டே அங்கு வர்றேன்'' என்றார்.
"" எப்படி இந்த கொள்ளை நடந்தது?''
""கடைசி பெண்ணுக்கு அடுத்தவாரம் திருமணம் வருது. முதல் பத்திரிகையை குலம் தெய்வம்
கோயிலுக்கு போயி வைச்சுட்டு வரலாம்ணு குடும்பத்தோட சொந்த கிராமத்திற்கு போனோம்.
திரும்பி வந்து பார்த்தா ,வீடு பூட்டியபடிதான் இருந்தது. உள்ளே போயி
பார்த்தா பூஜை அறை அலங்கோலமா கிடந்தது. பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.அதில
இருந்த ரொக்க பணம் 3 லட்சமும், நுõறு சவரன் நகையும் திருட்டு போயிருக்கு...''
""சரி, கொள்ளை அடிச்சவங்க எந்த வழியா வந்திருக்காங்க?''
""கிச்சன் பக்கம் இருந்த ஜன்னல் வழியா வந்துருக்காங்க.''
""குறிப்பிட்டு சொல்லும்படியா யார் மேலாவது சந்தேகம் இருக்கா?''
"" சந்தேகப்படும்படியா யாரையும் சொல்லத்தோணலையே..''
""அப்படியா?'' என்று யோசனையில் ஆழ்ந்தார், துப்புராஜ்.
அமிர்தலிங்கம் வீடு வந்தது.
துப்புராஜ் வீட்டை முழுவதுமாக நோட்டமிட்டார்.
""கண்ணாயிரம் மோப்ப நாய் எதாவது துப்பு காட்டிச்சா?''
""இல்ல சார். கொல்லைப்புறம் ஓடிச்சு. இதோ இந்த பேப்பரை மட்டும் கவ்விகிட்டு
வந்தது""
"" சரி, பேப்பரை பத்திரப்படுத்துங்க. கைரேகை எல்லாம் எடுத்தாச்சா?''
""எல்லா பார்மாலிட்டீஸ்சும் முடிச்சாச்சு சார்''
கிச்சனுக்கு வந்து ஜன்னலை கூர்ந்து கவனித்தார் துப்புராஜ்.
கிச்சனில் ஓரமாக சிமென்ட் கலவை உலர்ந்து போய் கிடந்தது.
""அமர்தலிங்கம் சார், கிச்சன் தரைக்கு சிமென்ட் பூச்சு வேலை நடந்ததா என்ன?''
""ஆமாம், சார். கிச்சன்ல தரை அங்கங்க சிமென்ட் பேந்து பள்ளமா போயிட்டு. பூஜை
அறைக்கு டைல்ஸ் பதிச்சபோது இதுக்கும் சேர்ந்து சிமென்ட் போட்டோம். கோயிலுக்கு
போறன்னைக்குத்தான் வேலை முடிஞ்சது.'' என்ற அமர்தலிங்கத்திடம்,
"" அப்படின்னா, தரைக்கு சிமென்ட் போட்டப்பிறகு, யாரும் கிச்சன் பக்கம் போகல அப்படிதானே?''
ஆமாம் என்று தலையை ஆட்டினார், அமர்தலிங்கம்.
""சரி, கவலைப்படாதீங்க. கூடிய சீக்கிரம் கொள்ளையர்களைப் பிடிச்சுடுவோம்'' என்று
சொல்லிவிட்டு, துப்புராஜ் ஸ்வேஷனுக்கு கிளம்பினார்.
ஒரு வாரம் கடந்தது.
கொள்ளை நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட கை ரேகைகள் பழைய குற்றவாளிகளின் எந்த ரேகையுட
னும் சேரவில்லை. சமீபத்தில் ரிலீஸ் ஆன குற்றவாளிகளையும் விசாரணை செய்ததில்கூட
குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்கமுடியவில்லை.
துப்புராஜ் டென்ஷன் ஆனார். " அப்படி என்றால் இந்த கொள்ளையில் புதியவர்களோ,
அல்லது அமிர்தலிங்கத்திற்கு தெரிந்தவர்களோதான் கை வரிசை காட்டியிருக்கிறார்கள்.' என்ற
முடிவுக்கு வந்தார், துப்புராஜ்.
"" கண்ணாயிரம், அன்னைக்கு மோப்ப நாய் துப்பு கொடுத்த லோக்கல் பத்திரிகை பல்லாவரத்தில்
இருந்து வருது. அந்த பத்திரிகையில வெத்தல பாக்கு மடிக்கப்பட்டிருந்ததுக்கு அடையாளமா
சுண்ணாம்பு கறை இருந்தது. அடுத்ததா, அந்த பேப்பர் கிடந்த இடத்துல "ரெங்க விலாஸ்'
லேபிள் போட்ட புகையிலை கவர் கிடந்தது.
அதனால நிச்சயமா குற்றவாளிக்கு வெத்தலை போடும் பழக்கம் இருக்கு. அப்பறம் அந்த
புகையிலை சென்னையில கிடைக்காது. ஏன்னா அது திருவாரூர் மாவட்டம் புலியூர்ல
தயாரிக்கப்படறது. இதை எல்லாம் சேர்த்து பார்த்தா குற்றவாளி வெளியூரில் இருந்து
சென்னையில் தங்கி இருக்கிறான்.
ஸோ, குற்றவாளி அனேகமா பல்லாவரம் பக்கம் தான்தங்கி இருக்கணும். நீங்க,
பல்லாவரம் போயி, அந்த ஊர்ல உள்ள ஒரு கால் ஊனம் உள்ளவங்க அத்தனை பேர் லிஸ்ட்
எடுங்க. அது லசந்தேகப் படும்படி யாராவது இருந்தா, ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வாங்க. என்
உள் மனசு குற்றவாளி அங்க தான் இருக்கணும்ணு சொல்லுது'' என்றார்.
கண்ணாயிரம் விசாரணை செய்ததில் வெத்தல போடும், விந்தி விந்தி நடக்கும் சந்தேகம்
படும்படியான மருதமுத்து என்பவரை கண்ணாயிரம் ஸ்டேஷனுக்கு கூட்டி வந்தார்.
துப்புராஜ் வந்தவனை கூர்ந்து பார்த்தார்.
கொள்ளை போன அந்த ஒருவாரகாலத்தில் அவனின் நடவடிக்கைகள் என்னவென்று
விசாரித்தப்போது, அவன் முன்னுக்கு பின்னாக உளறினான்.
அடுத்து லாக்கப்பில் போட்டு அடித்து, உதைத்தப்போது உண்மையை கக்கினான்.
""சார், அடிக்காதீங்க. எனக்கும் கொள்ளைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான்
அந்த அய்யா வீட்ல கொஞ்ச நாளைக்கு முன்னால பெயிண்டிங் அடிக்கப் போனேன்.
அப்போ டீ கடையில டீ குடிச்சுக்கிட்டு இருந்த போது பக்கத்திலிருந்தவரிடம்
நான் போன இடம் பெரிய இடம். நகை கடைகாரர். இப்போ அவரு பொண்ணுக்கு
கல்யாணம் வைச்சுருக்கிறதால மகராசன் வீட்ல வேலை செஞ்சவுங்களுக்கு எல்லாம்
டிரஸ் எடுத்து கொடுத்தாருன்னு பேசிக்கிட்டு இருந்தேன். அப்போ மூணுபேரு
என்னை தனியா அழைச்சுட்டு போயி கத்தை கத்தையா பணத்தைக் கொடுத்து அந்த வீட்டை
பத்தி விவரம் கேட்டாங்க. நானும் பணத்துக்கு ஆசைப்பட்டு சொன்னேன். கொள்ளை
நடந்தப் போது என்னையும் அந்த வீட்டுக்கு கூட்டிட்டுப் போனாங்க. அவ்வளவுதான்''
என்று கையெடுத்து கும்பிட்டான்.
"" சரி, அந்த மூணுபேரும் இப்ப எங்க இருக்காங்க?'' என்று துப்புராஜ் கேட்டதும். மருத
முத்து அவர்கள் பதுங்கி இருக்கும் இடத்தைச் சொன்னான்.
"" கண்ணாயிரம், இவன் சொன்ன இடத்துக்கு போய் எல்லாரையும் பிடிச்சு, அவங்ககிட்ட
இருக்கிற பணம், நகை எல்லாத்தையும் கொண்டுவாங்க'' என்றார்.
""சார், ஒரு சந்தேகம்''
""என்ன?''
""இந்த கொள்ளைக்கு முக்கியமான எவிடன்சாக இருந்தது குற்றவாளி ஊனமானவன் என்பது.
அந்த க்ளு எப்படிசார் உங்களுக்குத் தெரிஞ்சது?''
""அதுவா, அமிர்தலிங்கம் வீட்டு கிச்சன்ல தரையில சிமென்ட் உலராம இருந்திருக்கு. அதுல
திருடங்களோட காலடி பதிஞ்சு இருக்கு. அதுல ஒருத்தனோட கால் தடத்துல ஒருகால் தடம்
விரல் தடம் மட்டும்தான் பதிஞ்சுருக்கு. ஸோ திருடன்ல ஒருத்தன் ஊனம்னுகெஸ்பண்ணேன்''
என்றார்.
""சூப்பர் சார்'' என்று சொல்லிவிட்டு கண்ணாயிரம் கிளம்பினார்.
அடுத்த இருநாளில் கொள்ளையர்கள் பிடிப்பட்டனர். அவர்களிடம் இருந்து பறிமுதல்
செய்யப்பட்ட பணமும், நகையும் அமிர்த லிங்கத்திடம் ஒப்படைத்தார் துப்புராஜ்.
அமிர்தலிங்கம் துப்புராஜியை பாராட்டி விட்டு விடைபெற்றார்.




துப்பறியும் கதை 5. சவால்!

நகரத்தில் ஊடுருவிய தீவிரவாதிகள் நகரத்தில் முக்கியமான இடங்களில் பாம் வைத்து
தகர்த்து, நகரத்தையே சீர்குலைக்கப் போவதாக உளவுதுறை மூலம் தகவல் வந்ததையடுத்து
துப்புராஜ் ரொம்பவும் அலார்ட்டாக இருந்தார். இரவும் பகலும் நகரத்தை ரவுண்ட் அப்
செய்து கொண்டிருந்தார்.
ஒரு மாதம் முயற்சி செய்ததன் பலனாக ஒருதீவிரவாதி இருக்கும் இடம் துப்புராஜிக்கு ரகசிய
தகவல் வந்தது. அதனையடுத்து துப்புராஜ் போலீஸ் படையுடன் சென்று தீவிரவாதி பதுங்கி
இருந்த இடத்தை ரவுண்டப் செய்து, ரஹமத் என்கிற தீவிரவாதியை அதிரடியாய் கைது
செய்தார்.
கைது செய்யப்பட்ட தீவிரவாதி ரஹமத் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்தான்.
மேலும் துப்புராஜியை வேறு மிரட்டினான்." என்னை விடுவிக்கா விட்டால் என்னுடைய
நண்பர்கள் உங்கள் தமிழ்நாட்டை சுடுகாடாக ஆக்கிவிடுவார்கள்' என்று எச்சரித்தான்.
துப்புராஜ் அவனின் மிரட்டலை எல்லாம் பொருட்படுத்தவில்லை.
இரு வாரங்கள் கழிந்தன.
துப்புராஜி ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். எதிரே டேபிளில் இருந்த போன் பெல்
அடிப்பது கூட உணராமல் சிந்தனையில் இருந்தார்.
அப்போது வெளியிலிருந்து வந்த கண்ணாயிரம் ரிஸிவரை எடுத்து, ""ஹலோ'' என்றார்.
"" என்ன துப்பறியும் புலி துப்புராஜ்! எப்படி இருக்கிறாய்?'' என்று நக்கலாய் மறுமுனையில்
குரல் வந்தது.
இதைக்கேட்டு பதட்டம் அடைந்த கண்ணாயிரம், "" சார், உங்களுக்குத்தான் யாரோ போன்
பண்றாங்க'' என்று சொல்லி முடிக்கும் முன்பாகவே ரிஸிவரை வாங்கி துப்புராஜ் காதில்
வைத்தார்."" யார் பேசறது?'' அதட்டலாய் கேட்டார்.
"" அதை நீ தான் கண்டுபிடிக்கணும். சரி, என்னை உன்னால் ஒரு போதும் கண்டுப்பிடிக்க
முடியாது. இப்போது நான் சொல்லும் தகவலை மட்டும் கேள். குறுக்கே எதுவும் பேசாதே!'' என்ற
கண்டிப்புடன் அந்த ரகசிய குரல் பேச ஆரம்பித்தது.
""சரி, சொல்ல வந்ததை சொல்'' துப்புராஜ் சொன்னார்.
"" இன்னும் ஒரு வாரம் டைம் தருகிறேன். அதற்குள் நீ பிடித்து வைத்திருக்கும் எங்கள் நண்பனை
விடுவிக்கவேண்டும். இல்லாவிட்டால், இந்த நகரத்தின் முக்கிய வணிகவளாகத்தில் குண்டு
வைத்து தகர்ப்போம். இது உறுதி. நன்றாக யோசித்துப்பார்! அங்கே நிமிடத்திற்கு நிமிடம்
ஆயிரக்கணக்கில் மக்கள் கூடும் இடம். நீ புத்திசாலி என்பதை நான் அறிவேன். ஆதலால்,
குண்டு வைப்பதை தடுக்கவோ, அல்லது குண்டு வைத்ததை கண்டுப்பிடித்து அகற்றி எங்களின்
முயற்சியை முறியடிக்க முயலவேண்டாம். எங்களைப் பொறுத்தவரை ஒருஉயிர் இழப்பு.
உன் பக்கம் ஆயிரக்கணக்கில். பி கேர் புல்'' போன் இணைப்பு சட்டென்று துண்டிக்கப்பட்டது.
இதை கேட்டதும் துப்புராஜ் அதிர்ந்தார்.
போனில் சொல்லப்பட்ட வணிகவளாகத்திற்கு புறப்பட்டார்.
அந்த அவன் சொன்னது போல அந்த வணிகவளாகம் ஜன நெருசலில் மூழ்கி இருந்தது.
இருபக்கமும் பல அடுக்கு கட்டடங்கள் வான் நோக்கி உயர்ந்திருந்தது. இங்கே பாம் வைத்தால்
உயிர் சேதம் அதிகமாகதான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டார்.
அடுத்தடுத்து அந்தப் பகுதி முழுவதையும் போலீஸ் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
24 மணி நேரமும் போலீஸ் காவலை நீட்டித்தார். அந்தப் பகுதியை சல்லடை சலிப்பது போல
மோப்ப நாய் துணையுடன் பாம் ஸ்குவார்டும், போலீசும் துரிதமாக தீவிர வேட்டையில்
ஈடுபட்டனர்.
இரண்டு நாள் ஓடின. அந்தப் பகுதியில் எங்கும் பாம் வைக்கப்பட வில்லை என்பது உறுதி
யானது.
"அப்பாடா... என்று பெருமூச்சு விட்டார் துப்புராஜ்.
கண்ணாயிரம் ஸ்டேஷனுக்கு வந்தார். துப்புராஜ் முகத்தில் கொஞ்சம் நிம்மதி படர்ந்து இருப்பதை
உணர்ந்தார்.
""சார், ஒரு தீவிரவாதி உங்க கிட்ட சவால் விட்டுருக்கானே சார்! உங்கள பத்தி அவனுக்கு
முழுசா தெரியாதுன்னு நினைக்கிறேன்.'' என்று கண்ணாயிரம் சொல்லி முடித்தப்போது, போன்
மணி அடித்தது.
போனை துப்புராஜ் எடுத்தார்.
""குட்.வெரி குட். வெல்டன் துப்புராஜ். நான் குறிப்பிட்ட பகுதியை நன்றாக பாதுகாப்பு
வளையத்துக்குள் கொண்டுவந்து விட்டீர்கள். நல்லது. எனக்கும் கூட திரிலிங் பிடிக்கும்.
சவால் பிடிக்கும்! செத்த பாம்பை செருப்பால் அடிக்கும் பழக்கம் எனக்கில்லை. சரி, விஷயத்
திற்கு வருகிறேன். பாம் வைக்கும் இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. அதையும் சொல்லி
விடுகிறேன். குறித்துக்கொள்! அந்த இடத்தில் தான் பாம் வைக்கப்போகிறேன்.முடிந்தால்
தடுத்துப்பார்! இன்னும் இரண்டு நாள் தான் இருக்கிறது என் கெடு முடிவதற்கு.'' சொல்லி
விட்டு போன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
சாலையோர லோக்கல் போன் பூத்திலிருந்து அவன் பேசினான் என்பது தொலைப்பேசி
அலுவலகத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
""கண்ணாயிரம் இன்னும் அவன் பாம் வைக்கவில்லையாம். இனிமேல் தான் வைக்கப் போறா
னாம். அதுவும் வைக்கப்போற இடத்தையும் சொல்லி விட்டு சவால் விடுகிறான்.'' என்று
எரிச்சலடைந்த துப்புராஜ், வணிகவளாகப் பகுதிக்கு சென்றார். இரவும் பகலுமாக அந்தப்
பகுதி கண்காணிக்கப்பட்டது. பாதுகாக்கப்பட்டது. பொதுமக்கள் அங்கு நுழைவதற்கு தடை
செய்யப்பட்டது.
நகரமே என்ன நடக்குமோ என்று பதட்டத்தில் இருந்தது.
தீவிரவாதி விடுத்திருந்த கெடு இன்றுடன் முடிகிறது.
சில போலீஸ் அதிகாரிகள் பிடித்திருக்கும் தீவிரவாதியை விடுவித்துவிடலாம் என்றனர்.
ஆனால், துப்புராஜ் உடன் படவில்லை. ""ஒருவேளை அவன் பாம் வைத்தாலும் அதை
கண்டுபிடிப்பேன். அவனையும் பிடிப்பேன்'' என்று சபதம் செய்து விட்டு,ஸ்பாட்டுக்கு
கிளம்பினார்.
இஞ் பை இஞ்சாக மோப்ப நாய்களின் துணையுடன் அவன் குறிப்பிட்டிருந்த இடத்தை அலசி
னார். எங்குமே பாம் வைக்கப்பட்டிருக்கவில்லை.
"அவன் உண்மையைச் சொன்னானா? இல்லை சும்மா பொய் சொன்னானா?' என்று
யோசனையில் இருந்தப்போது, செல்போன் சிணுங்கியது. எடுத்துப்பேசினார்.
""துப்பறியும் சிங்கமே! பாம் இருக்கும் இடத்தை கண்டுப்பிடித்து விட்டீர்களா? அது உங்களால்
முடியாது. நீ நின்று கொண்டிருக்கும் பகுதியில் தான் பாம் வைக்கப்பட்டிருக்கிறது. அது
இன்னும் 30 நிமிடத்தில் வெடிக்கும்.'' என்று போன் குரல் ஓய்ந்துப்போனது.
துப்புராஜ் அதிர்ச்சி அடைந்தார். டென்ஷனில் தரையை மிதித்துக்கொண்டார். தலையிலிருந்து
தொப்பியைக் கழற்றி, தலைகோதியவர் அண்ணாந்து பார்த்தவரின் பார்வை மேலே அப்படியே
தொக்கி இருந்தது.
சில நிமிடங்கள் அதையே கூர்ந்து கவனித்தவர். திடீரென்று வாவ்... வாவ்.... என்று கத்திக்
கொண்டே பாம் ஸ்குவார்ட் களை அழைத்து, அதோ பாருங்கள்! கை நீட்டி காட்டினார்.
அவர் கை நீட்டிய இடத்தில் ஒரு விளம்பர ராட்சச பலுõன் பறந்து கொண்டிருந்தது.
""இந்த பலுõன் நேற்றில்லையே... அதுக்கு முன்பும் இல்லையே.... இன்னைக்குத் தான்
தொங்க விடப்பட்டிருக்கிறது. கமான்... சர்ச்....'' என்று காட்டுக்கத்தலாய் கத்தினார்.
பாம் ஸ்குவார்ட்ஸ் தப தப வென்று அந்த கட்டடத்தின் மேல் மாடிக்கு ஏறினார்கள். அந்த
ராட்சச பலுõனை கைப்பற்றினார்கள். அந்த வினாடியே அந்த பலுõனை கிழித்துப் பார்த்தப்
போது... அதில் அந்த பாம் இருந்தது. டிஸ்பிளேயில் 20 நிமிடம் 40 வினாடியில் குறைந்து
கொண்டிருந்தது.
ஸ்குவார்டுகள் முனைப்பாக முனைந்து பாம்மை செயல் இழக்கச் செய்தனர்.
தீவிரவாதி விட்ட சவாலில் துப்புராஜ் வெற்றி பெற்றுவிட்டார். சக போலீஸ் அதிகாரிகள்
அவரை பாராட்டினார்கள்.
பின்னர், பிடிப்பட்ட தீவிரவாதியிடம் விசாரணையை முடுக்கிவிட்டார். பிடிப்பட்டவனும்
இனி நாம் விடுதலை ஆக முடியாது என்பதை அறிந்திருந்தான்.துப்புராஜ் அவனின் நண்பர்கள்
வைத்திருந்த பாம்மை கண்டுப்பிடித்து விட்டதை கேள்விப்பட்டு, பிடிப்பட்டவன் அவன்
நண்பர்கள் இருக்கும் ரகசிய இடத்தை காட்டிக்கொடுத்தான்.
துரிதமாக செயல்பட்டு, துப்புராஜ் மற்ற தீவிரவாதிகளையும் விரட்டிப்பிடித்தார்.



துப்புராஜ் 6

ஊரெங்கும் ஒரே பேச்சு. டி.வி., செய்திதாள் எல்லாவற்றிலும் பரபரப்பாக பேசப்படும்
முக்கிய செய்தியும் அதுதான். கோயில், தியேட்டர், பார்க், பஸ்டாண்டு போன்ற மக்கள்
கூடும் முக்கிய இடங்களில் எல்லாம் "காணவில்லை' என்ற அறிவிப்பு ஒட்டிய போஸ்டர்கள்
ஒட்டப்பட்டிருந்தன.
இந்த ஒரு மாதத்தில் இது வரை மூன்று சிறுவர்கள் மாயமாகி விட்டனர். பள்ளியிலிருந்து
ஒரு சிறுவனும், அம்மாவுடன் கோயிலுக்குச் சென்ற சிறுவனும், அப்பாவுடன் பார்க்கில்
விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் என மூன்று சிறுவர்களும் வெவ்வேறு இடங்களில்
யாரோ கடத்தி இருக்கிறார்கள்.
இதுவரை கடத்தியவர்களிடமிருந்து எந்த தொலைபேசி அழைப்புகளும் வரவில்லை.
பொதுவா குழந்தைகளை கடத்துபவர்கள் குழந்தைகளை பணயமாக வைத்து பெற்றோர்களிடம்
பணம் கேட்டு மிரட்டுவார்கள். கேட்ட பணம் கடத்தல்காரர்களின் கைக்குப் போனதும், பின்னர்,
குழந்தைகளை ஏதோ பாழடைந்த மண்டபத்திலோ, ஆள்அரவமற்ற சாலையிலோ விட்டு விட்டு
ஓடிவிடுவார்கள்.
இன்ஸ்பெக்டர் துப்புராஜ் பார்த்தவரையில் இப்படிதான் கடத்தல் கேஸ் முடிவுக்கு வரும்.
ஆனால், இந்த சிறுவர்கள் கடத்தல் கேஸ் முற்றிலும் மாறுபட்டு இருந்தது. இதுவரை கடத்தி
யவர்கள் யார் என்றே தெரியவில்லை. கடத்தியவனும் பணம் கேட்டு பெற்றோர்களை தொடர்பு
கொள்ளவில்லை.
துப்புராஜ் பல கோணத்திலும் புலன் விசாரணை செய்து விட்டார். கடத்தல்காரன் பலே கில்லாடி
எந்த எவிடன்சும் இல்லாமல் கடத்தலை கச்சிதமாக முடித்திருக்கிறான்.
ஒரு மாதம் ஆகியும் கடத்தல்காரன் பணம்கேட்டுமிரட்ட வில்லையே,ஏன்? பணம் தேவை
இல்லை என்றால் எதற்காக கடத்தியிருப்பான்? இல்லை சிறுவர்களிடமிருந்து கிட்னி, இதயம்
போன்ற உடல் உறுப்புகளை எடுத்து விற்பதற்காக இருக்குமோ? ஒருவேளை அப்படி இருந்தால்
கூட, எதோ ஒருமருத்துவமனையில் கையும் களவுமாக சிக்கியிருப்பானே! அட, இவன்
எனக்கே தண்ணிகாட்டுகிறானே! இத்தனை நாளாக என் கண்ணில் மண்ணைத்துõவி சிக்காமல்
இருக்கானே!' பலத்த யோசனையில் இருந்தார், துப்புராஜ்.
சுடச்சுட காபி வாங்கி வந்த கண்ணாயிரம், ""சார், எப்படியும் பொறியில சிக்காமலா போயிடு
வான்? நிச்சயம் சீக்கிரமே பிடிப்படுவான். இப்போ காபியை எடுத்துக்குங்க.'' என்றார்.
"" சரி, கண்ணாயிரம் நீ சொல்றது எப்போதுமே பலித்துவிடும். இந்த முறையும் பலிக்காமலா
போகும்?'' என்ற துப்புராஜ், காபி கப்பை எடுத்து, வாயருகே கொண்டுபோனபோது...
ஸ்டேஷன் வாசலில் சர்ர் என்று வந்த ஆட்டோ குலுங்கி நின்றது. ஆட்டோவிலிருந்து அலறி
அடித்துக்கொண்டு இரு பெண்கள் ஸ்டேஷனுக்குள் நுழைந்தனர்.
""சார்... மோசம்போயிட்டோம் சார்... இப்பதான் என் பிள்ளையோடு ஹோட்டலுக்குப்
போனேன். என் பையன் பக்கத்திலிருந்தான். நான் கை கழுவிவிட்டு வந்து பார்த்தா, அவனைக்
காணும் சார்... அந்த பக்கம் நல்லா தேடிப்பார்த்துட்டேன்... சார்...'' சொல்லிய அந்த பெண்
மணி ஓ என்று அழுதுகொட்டினாள்.
""சரி... சரி... அழாதீங்க. என்னோட உடனே கிளம்புங்க. கண்ணாயிரம் கிளம்புங்க, அந்த
ஹோட்டலுக்குப் போகலாம்.'' என்ற துப்புராஜ் பரபரப்புடன் ஜீப்பில் கிளம்பினார்.

ஆன்மிக சிந்தனை

ஆன்மிக சிந்தனை 7

சொர்க்கம் செல்ல பெயர் பதிவு செய்துவிட்டீர்களா?

நாம் இந்தப் பூமியில் பிறந்தவுடன் நமது இருப்புக்கான, வாழ்வுக்கான ஆதாரமாக நமது பெயர் பதிவு செய்யப்படுகிறது. அடுத்ததாக, கல்வி கற்பதற்கு பள்ளிக்கூடம் போகும் போது நம் பெயர் பதிவு செய்யப்படுகிறது. நிலம் வாங்கும் போதும், வீடு வாங்கும் போதும், தண்ணீருக்காகவும் நம் பெயர் பதிவு செய்யப்படுகிறது. வாகனங்களுக்கு உரிமம் வாங்கும் போதும், வாகனம் ஓட்டுவதற்கு லைசன்ஸ் வாங்கும் போதும் நம் பெயர் பதிவு செய்யப்படுகிறது. ரேஷன் கார்டு, கேஸ் இணைப்பு வாங்கும் போதும், வேலை வாய்ப்புக்கு பதிவு செய்யும் போது,வெளிநாடு செல்ல பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை வாங்க என இங்கே தற்காலிகமாக வாழ்வதற்கு ஆயிரத்தெட்டு முறை நம் பெயரை பதிவு செய்துள்ளோம். ஆனால், நம்மை படைத்த இறைவன் வசிக்கும் சொர்க்கத்தில் நாம் வசிக்க, இறைவனின் திருகமலத்தில் இருக்க நம் பெயரை பதிவு செய்து இருக்கிறோமா? என்பதை இந்த வார ஆன்மிக சிந்தனையாக சிந்திப்போம்.
எப்படி நாம் வெளிநாடுகளுக்குச் செல்ல பாஸ்போர்ட், விசா தேவைப்படுகிறதோ, அதுபோல நாம் சொர்க்கம் செல்வதற்கு ஆன்மிகம் என்கிற பாஸ்போட்டும்,பக்தி என்கிற விசாவும் தேவை. இவைகளை பெற பல வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வழிமுறைகளை நமது வேதமும்,மதமும், இதிகாசமும், புராணங்களும் எடுத்துச் சொல்கின்றன. அந்த வழிமுறைகளில் சென்று கோயிலில் இறைவனை தரிசித்து, நாம் இறைவனின் அன்புக்கு ஆளானால், இறைவன் பக்தர்களுக்கு சொர்க்கம் செல்ல விசா கொடுத்தருள்வான்.
பக்தி என்பது மனிதனாக பிறந்த யாவருக்கும் வேண்டிய ஒன்றாகும். பக்தியை குழந்தைப் பருவம் முதல் செய்ய பழக வேண்டும். பக்தியை முதுமையில் தான் செய்ய வேண்டும் என்று ஒரு போதும் கருதகூடாது.
உலகத்தில் பெரும்பாலோர் நல்ல வீடு, கவுரவமான வேலை, திரண்ட செல்வம், அழகான மனைவி, அறிவான குழந்தைகள், ஆரோக்கியம்,சந்தோஷம், நிம்மதி இவைகளைப் பெறுவதற்கு தான் பக்தி என்று எண்ணிக்கொள்கின்றனர். இவைகளை பக்தி செய்தால் பெறலாம் என்பது உண்மை ஒருபுறம் இருந்தாலும், இவைகளைப் பெறுவதற்காக மட்டுமே பக்தி செய்வது என்பது அர்த்தமல்ல.
ஒரு சிலர் "அட, நான் இப்போ சகல வசதிகளுடன் சந்தோஷமாகத்தானே இருக்கிறேன். பாசமுள்ள பெற்றோர், அன்பான மனைவி, அழகான குழந்தைகள், சொகுசு பங்களா, பெரிய கார், கைநிறைய சம்பளம்... இப்படி எல்லாம் நிறைவாக தானே இருக்கிறது! வாழ்க்கை குதுõகலமாக தானே போய்கிட்டு இருக்கு. பின் எதற்கு நான் பக்தி செய்ய வேண்டும்? வாழும் வாழ்வே சொர்க்கமாக இருக்கும் போது, சொர்க்கம், மோட்ஷம், கைலாஷம், வைகுண்டம் எல்லாம் எதற்கு? என்று கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்த வாழ்க்கை இத்துடன் முடிந்து விட்டால் பரவாயில்லை. எடுத்தப்பிறவி மண்ணுலக வாசத்தோடு முற்றுபெற்றுவிட்டால் நீங்கள் நினைப்பது சரிதான். எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து விட்டு போகலாம். ஆனால், நிலைமை அப்படி இல்லையே! இறப்புக்குப் பிறகு, நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப கடவுளின்நியாய தீர்ப்பு ஒன்று இருக்கிறதே. நாம் புரிந்த நல்லது, கெட்டதுக்கு ஏற்ப நரகமோ தண்டனையோ, சொர்க்கம் எனும் வெகுமதியோ கிடைக்க உள்ளதே. அதனால் தான் நரகம் சென்று தண்டனை அனுபவிக்காமல் இருக்கவும், அதே சமயம் சொர்க்கம் செல்ல பக்தி செய்யவேண்டும். சொர்க்கம் செல்வதற்கு பக்தியின் மூலம் நம் பெயரை முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இன்று சந்தோஷமாக இருக்கலாம். நிம்மதியாக இருக்கலாம். சகல வசதிகள் இருக்கலாம்.ஆனால், அது நிச்சயமானது என்று எப்படி உங்களால் நினைக்க முடியும்? நாளை என்ன நடக்கும் என்று உங்களுக்கென்ன தெரியும்? எல்லாம் படைத்தவன் கையில் அல்லவா இருக்கிறது. நாளை உங்களுக்கு எந்த கஷ்டமும் வராது என்று எப்படி முடிவு செய்ய முடியும்? ஆதலால், இப்போது இருக்கும் வசதி,வாய்ப்பு, சந்தோஷங்கள் நிலைத்திருக்க பக்தி செய்துதானே ஆகவேண்டும்?
சிலர் இன்று வறுமையில் இருக்கலாம். கஷ்டப்படலாம். என்னடா இது வாழ்க்கையே நரகமாச்சே! என்று நொந்து கொண்டு என்னத்த பக்தி செய்து என்னத்த ஆகப்போகுது என்று மனம் வெம்பி கடவுளையும் பக்தியையும் புறக்கணித்தல் முட்டாள் தனமான செயலாகும். ஏனென்றால் நாளை என்பது நம் வசம் இல்லையே... ஒரு வேளை நாளை அப்படியே வாழ்க்கை தலைகீழாக மாறலாம். வறுமை அகலலாம்; கஷ்டம் தீரலாம். நம்பிக்கையோடு பக்தி செய்து வந்தால் நல்லது நடக்கும். எனவே கஷ்டத்தில் இருப்பவர்களும் சரி; சந்தோஷத்தில் இருப்பவர்களும் சரி பக்தி செய்துதான் ஆகவேண்டும்.
இந்த இரு சாரார் அல்லாத இன்னொரு பிரிவினரும் இருக்கின்றனர். அவர்கள் தங்களை நாத்திகவாதிகள் என்று சொல்லிக்கொள்வார்கள். அவர்கள் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் புருடா பொய் என்று நம்புகின்றனர். இவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். உங்கள் நம்பிக்கை சரியா, தவறா என்பதை வரும் காலம் உணர்த்தும். ஆனால், சின்ன உபாயம் இருக்கிறது. வானிலை அறிக்கையில் மழை வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. குடை கொண்டு போங்கள் என்று வலியுறுத்துகின்றது. நீங்கள் வீட்டை விட்டு கிளம்பும் போது குடைகொண்டு போங்கள். மழை வந்து விட்டால் குடை கொண்டு நனையாமல் வீடு வந்து சேரலாம். ஒருவேளை மழை வராது போனால் ஒன்றும் மோசமில்லையே... குடையை அப்படியே எடுத்து வந்து விடுங்கள். இந்த குடையை சுமக்கவா உங்களுக்கு சிரமம்? இங்கே நான் குடை என்று குறிப்பிட்டிருப்து பக்தியைத் தான் என்பது உங்களுக்கு விளங்கி இருக்கும்.
ஆல்கிலத்தில் ஒரு பழமொழியுண்டு. நீ சிரிக்கும் போது இறைவனை நினைத்தால்; நீ அழும் போது இறைவன் உன்னை நினைப்பான்! நாம் இந்தப்பூமிக்கு மனிதர்களாக அனுப்பப்பட்டிருப்பது எதற்கு தெரியுமா? வீடு,வாசல் மனைவி ,மக்கள், சொத்து, சுகம் என்று வாழ்வதற்காக, படிக்கவும், உழைக்கவும் தானா? அப்படி எதுவும் இல்லை. இவையெல்லாம் அன்னத்தால் வளரும் உடம்புக்குத்தான். ஆத்மாவுக்கு அல்ல. ஆத்மாவின் கடமை, யாரால் படைக்கப்பட்டோமோ அவனை நினைக்க வேண்டும். எங்கிருந்து வந்தோமோ அங்கே செல்ல நினைக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதோ, அதை செய்ய வேண்டும். ஆனால், நாம், நாம் உருவாக்கியதில் மயங்கி பக்தி செய்யாமல் இருந்து விடுகிறோம். இந்த தற்காலிக வாழ்வும்; இடமும் பெரிதென்றோ அல்லது நிலையானதென்றோ எண்ணிவிடுகிறோம். இந்த எண்ணப்பிழைக்கும், செயல் பிழைக்கும் தண்டனை உண்டு. அந்த தண்டனை தான் நரக வாசம்.
இந்த தண்டனையிலிரு தப்பிக்க ஒரே வழி ஈசனை உள்ளன்போடு உண்மையாக வணங்கி பக்தி செய்வது தான். வேறு உபாயம் ஏதுமில்லை. அடுத்ததாக சொர்க்க வாசம் செய்ய வேண்டுமானால் நீங்கள் உங்களுக்கான இருக்கையை பதிவு செய்து கொள்ள வேண்டும். எங்கே பதிவு செய்வதென்றால் ஈசன் குடிகொண்டிருக்கும் கோயில்களில். பெயர் பதிவு செய்துக்கொள்ள என்ன கட்டணம் என்றால் அது பக்தி. எந்தளவுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஈசனை நினைக்கிறீர்களோ அந்தளவுக்கு சீக்கரம் உங்களுக்கு சொர்க்கத்திற்கான பதிவு கிடைத்து விடும்.



ஆன்மிக சிந்தனை8

ஏகன் அனேகன் இறைவன்!
ஈஸ்வரன், கிருஷ்ணன்,ராமன்,முருகன், விநாயகர்,ஆஞ்சநேயர் என பலவாறாக இறைவனாக வழிபடுகிறோம். அவரவர்களுக்கு இஷ்டமான இறைவனை வழிபட்டு இறைஅனுபூதி பெற்றவர்கள் அனேகம். ஈஸ்வரனை வழிப்பட்டு ஈசனுக்கு பிரியமானவர்கள் நாயன்மார்கள். கிருஷ்ணனை வழிபட்டு கிருஷ்ணனின் அருளைப்பெற்றவர்கள் ஆழ்வார்கள். இப்படி ஒவ்வொரு தெய்வத்தையும் நம்பி வழிபாடு செய்து அந்ததந்த இறைவனால் அருள்பெற்றிருப்பதால் எந்த தெய்வத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது.
ஆக, எந்த தெய்வத்தை நம்பி வழிபாடு செய்தாலும் இறையருள் பெறுவது திண்ணம் என்றால் பக்தர்களுக்கு ஒரு சந்தேகம் எழும். எந்த தெய்வம் உசத்தி? எந்த தெய்வத்தை வழிபட்டால் உடனடி விமோசனம் கிடைக்கும்? என்ற கேள்விகள் எழுவதோடு மேலும்,
இறைவன் ஒருவனா? ஒன்றுமேற்பட்டவனா? என்பதில் சிலருக்கு குழப்பம் இருக்கிறது.உலகம் எங்கும் எத்தனை ஆயிரம் கோயில்கள்.எத்தனை ஆயிரம் தெய்வங்கள்.அதற்கு தான் எத்தனை நாமங்கள், உருவங்கள். இதில் எத்தனை மதங்கள், எத்தனை வழிபாடு முறைகள்? இப்படி ஒரு நாட்டுக்கொரு இறைவன், ஒரு மதத்திற்கொரு இறைவன், ஒவ்வொரு மொழி பேசும் மக்களுக்கு ஒரு இறைவன்,குறிப்பிட்ட சாதிக்கொரு இறைவன், ஒவ்வொரு குடும்பத்திற்கு ஒரு குலதெய்வம் என்றெல்லாம் இறைவனை பல வாறாக வழிபடுகிறோமே அப்படி என்றால் இறைவன் ஒருவன் இல்லையா? என்று சந்தேகம் எழுகிறதல்லவா? ஆனால் ,அவதாரபுருஷர்களும் ஞானிகளும் இறைவன் ஒருவனே! என்கின்றனர். சாமானிய மக்களாகிய நமக்கு ஒன்றும் புரியவில்லை. எப்படி ஞானிமார்கள் மட்டும் இறைவன் ஒருவனே என்று உறுதியாக கூறுகின்றனர். எவ்வாறு என்பதை இந்த வார ஆன்மிக சிந்தனையாக சிந்திப்போம்!
இறைவனுக்கு இயல்பாகவே வடிவமில்லை; அவனை மனதாலும்,வாக்காலும் எட்டுவதற்கரியவன் என்று வேதம் சொல்லுகிறது. இருந்தாலும், அவனுடைய வடிவை பலவாறு கோயிலிலும்,வீட்டிலும் பூஜிக்கிறோம். அதற்கு காரணமும் இருக்கிறது. நாம் உண்ணும் உணவு வயிற்றுக்குத்தான் போகிறது. வயிறுபசியை தீர்க்கிறது. அப்படி என்றால் எல்லாரும் ஏதேனும் ஒரு உணவு வகையை மட்டுமே சாப்பிட்டால் என்ன? பிறகு ஏன் பல உணவு வகைகளை சாப்பிடுகிறோம்.மானம் காக்கத்தான் ஆடை. அதற்கு தானே ஆடை அணிகிறோம். அப்படி பார்த்தால் எல்லாருமே ஒரு வகை, ஒரே நிற ஆடையை அணிந்துகொண்டால் என்ன? பதில் சொல்ல முடிகிறதா? ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகை உணவு, உடை பிடித்திருக்கிறது. அது போல ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு வகையான இறைவடிவம் பிடித்திருக்கிறது. அதற்கேற்றார் போல இறைவனும் பல வடிவங்களில் நுழைகிறான்.
"ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க!' என்று மாணிக்க வாசகர் சிவனின் புராணத்தை சொல்லும் போது ஈஸ்வரனை இப்படி அழைத்து வணங்கு கிறார். ஏகம் என்றால் ஒன்று. அனேகம் என்றால் பல. ஆக இறைவனை ஒருவனாக இருப்பவனும், பலவாக இருப்பனும் ஆன ஈஸ்வரா உன் பாதக்கமலம் வாழ்க என்று வழிபடுகிறார். ஆக மாணிக்கவாசகருக்கும் இறைவன் ஒருவனாக மட்டுமல்ல பலவாகவும் இருக்கிறான் என்று நம்புகிறார் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. மாணிக்க வாசகர் இறைவனை ஒருவராகத்தான் பாவித்தார்.
எங்கள் ஊர் கோயிலுக்கு வந்த சமய சொற்பொழிவு செய்த ஒருவர் இறைவன் ஒருவனே என்பதற்கு உதாரணமாக சொல்லும் போது "நாகராசன்' இவர் ஒருவர். ஆனால் நாகராசன் தன் தந்தைக்கு மகன். தன் தம்பிக்கு அண்ணன். மனைவிக்கு கணவன். பிள்ளைகளுக்கு தந்தை. பேரனுக்கு தாத்தா. ஆக, நாகராசன் என்கிற ஒருவர் எப்படி உறவுகளுக்கு ஏற்ப மகனாக,அண்ணனாக,கணவனாக, தந்தையாக, தாத்தாவாக பல பெயர் பெறுகிறார். பல பெயர்கள் ஒருவர் பெறுவதால் அவர் பலரா? என்று விளக்கி, இறைவன் என்பவன் பல நாமங்களில், பல ரூபங்களில் இருந்தாலும் ஒருவனே என்று எளிமையாக விளக்கினார். அவர் சொன்ன உதாரணம் என்னவோ புரியும் படிதான் இருந்தது.
இந்த உதாரணத்தில் கூட கொஞ்சம் குழப்பம் வரத்தான் செய்யும். எப்படி எனில், நாகராசன் என்பவர் ஒருவராக இருந்தப்போதும் அவர்காட்டும் அன்பு உறவுக்கு ஏற்ப மாறக்கூடும். அம்மாவிடமும் மனைவியிடமும் காட்டும் அன்பு ஒன்றுபோல இருக்காது. தன் தம்பியிடம் காட்டும் உரிமைக்கும் தன் மகனிடம் காட்டும் உரிமைக்கும் வித்தியாசம் உண்டு. அப்படி பார்த்தால் இறைவனும் உருவம், நாமங்களுக்கு ஏற்ப பக்தர்களுக்கு அருள்பாலிப்பதில் வேறுபடுவதாக கருதக்கூடும்.
அடுத்ததாக மிகச்சிறந்த இரு உதாரணங்கள் இறைவன் பலவாக தெரிந்தாலும் இறைவன் ஒருவனே என்று எடுத்தியம்புகின்றன.
ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை சில்லு சில்லாக உடைத்து தரையில் பரப்பி வைத்து விட்டு அதை உற்று பாருங்கள். ஒவ்வொரு சில்லிலும் உங்கள் முகம் பிரதிபலிக்கும். உங்களுக்கு இருப்பது ஒரு முகம் தானே! ஆனால் ஒவ்வொரு கண்ணாடி சில்லிலும் ஒரு முகம் தெரிகிறதே! அப்படி என்றால் உங்களுக்கு பல முகங்களா இருக்கிறது?
ஆற்று நீரில் நுரை பொங்கி கரையோரம் ஒதுங்கும். அந்த நுரையில் ஒவ்வொரு குமிழிலும் கரையில் உள்ள மரம் காட்சியாகும். இருப்பது ஒரு மரம். ஆனால் அத்தனை நுரை குமிழிழும் தெரிவதால் பல மரங்கள் என்றா சொல்ல முடியும்?
ஒரு முகம், ஒரு மரம் என்பதும் உண்மை. அதே சமயம் கண்ணாடி சில்லில் தெரியும் பல முகங்களும், நுரையில் காட்சியாகும் பல மரங்களும் உண்மை. ஆக, கண்ணாடி சில்லுவில் தெரியும் முகத்திற்கும், நுரையில் விழுந்த மரம் பிம்பத்திற்கும் ஆதாரமாக இருப்பது உண்மையான ஒன்று. அந்த ஒன்று இல்லாமல் பல இல்லை. ஆதலால் ஒன்று தான் பல வாக தெரிகிறது. பலவானதை தொகுத்தால் ஒன்றாகும். எனவே இறைவன் ஒருவன் என்பதே உண்மையாகும். இறைவன் பல என்பது காட்சிப்பிழை அல்லது மாயபிம்பம் ஆகும். இதை தான் நாட்டுப்புறத்தில் "ஹரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவன் வாயில் மண்ணு' என்பர்.
இதை புரியும் படி சொல்வதென்றால் இறைவன் உருவமில்லாதவன். உருவமில்லாதவனை எந்த உருவத்தில் வழிபட்டாலும் அது எல்லாம்வல்ல ஒருவனைத் தான் சாரும். எந்த நாமங்கள் சொல்லி வழிபட்டாலும் அந்த ஒலியும் ஓசையும் ஒருவனையே சென்றடையும்.
நீங்கள் உலகின் எந்தப் பரப்புகளில் இருந்து தோன்றும் ஆற்றில், நதியில் பயணப்பட்டாலும் முடிவில் கடல் என்கிற பரந்துபட்ட ஒன்றில் தான் சங்கமம் ஆகமுடியும். ஆறும், ஊரும் வேறாக இருந்தால் என்ன? அவை உங்களை கடல் என்கிற ஒன்றில் தானே இணைக்கிறது. அதுபோல தான் நீங்கள் எந்த தெய்வங்களை வழிபட்டாலும் உங்கள் பிரார்த்தனை ஒன்றாகிய இறைவனை தான் சென்றடையும். ஒரு பொருள் குறித்த வார்த்தை மொழிகளுக்கு ஏற்ப ஒலியில் மாறுபடும். ஆனால் அர்த்தத்தில் ஒரு போதும் மாறுபடுவதில்லை. அது போல தான் இறைவனும். ஆதலால் இறைவன் ஒருவனே! என்பதை மனதில் நிறுத்துங்கள். அதே சமயம் நீங்கள் எந்த வடிவில், எந்த பெயரில் இறைவனை வழிபட்டாலும் அது ஒன்றாகி ஈசனை வழிபட்டதாகவே அர்த்தம் ஆகும். நாம் வழிபடுவதுதான் முக்கியம். எந்த தெய்வத்தை என்பதல்ல.


ஆன்மிக சிந்தனை 9

பேசா எழுத்து வந்ததெப்படி?
புதிதாக ஒரு பேனா வாங்கியதும் முதலில் போட்டுப்பார்ப்பது பிள்ளையார் சுழியாக இருக்க வேண்டும் என்பது சம்பிரதாயம். புதிதாக கணக்கு தொடங்கும் நோட்டில் முதலில் பிள்ளையார் சுழி போட்டு விட்டு லாபம் என்று எழுத வேண்டும் என்பது வழிவழியாக வந்த பழக்கம். இப்படி நாம் எதை எழுத வேண்டும் என்றாலும் முதலில் பிள்ளையார் சுழி போடுகிறோமே, அது எதற்காக? அதன் காரணம் என்ன? அந்த தலை எழுத்தின் பெயர் என்ன என்பதை இந்த வார ஆன்மிக சிந்தனையாக சிந்திக்கலாம்!
ஒரு மொழியின் கட்டமைப்பு ஆனது எழுத்து, எழுத்துக்கள் சேர்ந்த சொல், சொல்கள் அடுக்கிய வாக்கியம் என்பதாக இருக்கும். இதில் எழுத்து என்பது மொழியின் அஸ்திவாரம் போன்றது. எழுத்து வரி வடிவம் அதாவது எழுத்து வடிவம் மற்றும் ஒலி வடிவம் அதாவது உச்சரிக்கும் பெயர் வடிவம் எனும் இரு அமைப்புகளை உள்ளடக்கியதாக தான் எந்த ஒரு மொழியின் எழுத்தும் இருக்கும்.
தமிழில் ஒரு எழுத்துக்கு எழுத்து வடிவம் இருக்கிறது. ஆனால், அந்த எழுத்துக்கு ஒலிவடிவம் இல்லை. அதாவது உச்சரிக்கும் முறை எதுவென்று தெரியவில்லை. மேலும் தமிழ் எழுத்துக்கள் 247 களில் இந்த எழுத்து சேர்க்கப்படவில்லை. எந்த மொழியிலும் இந்த எழுத்து மொழிக்குரிய எழுத்தாக கூறப்படவில்லை.
இந்த எழுத்தை பேசா எழுத்து, மவுன எழுத்து, மோன எழுத்து, ஊமை எழுத்து என்று கூறுகின்றனர். மற்ற எழுத்துப்போல இந்த எழுத்துக்கு இன்ன பெயர் என்று எதுவுமில்லை என்பதாலும்,ஒலி வடிவம் இல்லை என்பதாலும் இதை தனி எழுத்து, ஓரெழுத்து என்றும் வடமொழியில் ஏகாட்சரம் என்றும் பெயரிட்டு அழைக்கப்படுகிறது.
இந்த எழுத்தை தமிழின் தலைஎழுத்து என்றும் சமய சான்றோர் சுட்டுகின்றனர்.
இவ்வளவு படித்து வந்த உங்களுக்கு அது என்ன எழுத்து என்று தெரிந்து கொள்ள ஆர்வம் வந்திருக்கும் என்பதால் அந்த எழுத்து எது என்பதை சொல்லி விடுகிறேன்.
அந்த எழுத்தை "உ' என்று வடிவம் கொடுத்து எழுதுகிறோம். இந்த எழுத்தை தெய்வ எழுத்து என்றும் பிள்ளையார் சுழி என்றும் வழக்கில் சொல்லி வருகிறோம். உயிர் எழுத்து 12களில்" உ' போல வடிவம் கொடுத்து எழுதிவந்தாலும் அந்த எழுத்தை "உ' என்று உச்சரிப்பதில்லை. இந்த எழுத்து எதிலுமே சேராததால் அதற்கென்று பெயர் இல்லாமல் ஆதி எழுத்தாக இருக்கிறது. வடிவம் கருதி யாரோ சொல்லி வைத்ததை தான் நாம் பிள்ளையார் சுழி என்கிறோம். அதற்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது.
சகல வேதமந்திரங்களும் பிரணவத்தால் தான் ஆரம்பிக்கப்படுகின்றன. பிரணவம் என்றால் ஓங்காரம் ஆகும். அதுபோல நம்முடைய எல்லா காரியங்களும் முதலில் பிள்ளையார் வணக்கத்துடன் ஆரம்பிக்கப்படுகின்றன. ஏனென்றால் நாம் செய்யப் போகும் செயல்களில் தாமதம், தடை, தோல்வி வரக்கூடாது என்பதற்காக பிள்ளையாரை பிரார்த்தனை செய்து விட்டு தொடங்குகிறோம். பிள்ளையாருக்கு விக்னகங்களை தீர்ப்பதால் விக்னேஷ்வரன் என்ற நாமமும் உண்டு.
நாம் எழுதப்போகும் நுõல், சாசனம் தொடங்கும் முன் பிள்ளையார் சுழிப்போட்டுதான் எழுத தொடங்குகிறோம். எதற்காக பிள்ளையார் சுழி போட்டு ஏன் எழுத தொடங்குகிறோம் என்றால் பிள்ளையார் சுழி போடுவது என்பது பிள்ளையாரை வணங்குவதற்கு சமம் என்று ஒரு நம்பிக்கையில் தான்.
பிள்ளையார் சுழி என்பது இறைவனின் திருவடி நினைவுக்குறி என்றும் சொல்வோர் உண்டு. பிள்ளையாரின் துதிக்கை வடிவம் என்றும் கருதுவோரும் உண்டு. பிரணவம் போல இதுவும் பேசா பிரணவம் என்ற கருத்தும் இருக்கிறது.
சங்ககாலத்தில் பிள்ளையார் வழிபாடு இல்லை என்றும் பிள்ளையாரே இல்லாத போது பிள்ளையார் சுழி மட்டும் வந்தது எப்படி என்று சிலர் ஆராய்ந்திருக்கின்றனர். கணபதி வழிபாடு சோழர்காலத்தில் தான் ஏற்பட்டிருக்கிறது. இப்போது நாகை மாவட்டத்தில் இருக்கும் திருசெங்காட்டாங்குடி என்ற ஊரில் முன்பு வாழ்ந்த பரஞ்சோதி, சோழர் மன்னரின் படைத்தளபதியாக இருந்தபோது வாதாபியில் போரில் வெற்றிப்பெற்றதன் நினைவாக அங்கிருந்து கணபதி கடவுளை சோழநாட்டுக்கு எடுத்து வந்தார் பரஞ்சோதியார். அந்த கணபதியை அவர் ஊரான திருசெங்காட்டாங்குடியில் பிரதிஷ்ட்டை செய்து கணபதி வழிபாடு செய்து வந்திருக்கின்றனர். அவரை பின்பற்றி மக்களும் கணபதியை வழிபாடு செய்து வந்துள்ளனர். ஆக கணபதி வழிபாடு தமிழ் நாட்டிற்கு வரும் முன்பே பிள்ளையார் சுழி போட்டு எழுதும் பழக்கம் இருந்திருக்கிறது. அப்படி பார்த்தால் அது பிள்ளையார் சுழி என்று பின்னர் வந்தவர்கள்தான் பெயரிட்டிருக்க வேண்டும். அது "பேசா எழுத்தாக தான்' இருந்திருக்கிறது.
ஒரு சிலர் முன்பு பனை ஓலையில் எழுத எழுத்தாணி கூராக இருக்கவேண்டும். கூராக இருக்கும் எழுத்தாணியைக் கொண்டு அதிகம் உலராத ஓலையில் எழுத முடியாது. அதனால் எழுதுவதற்கு ஓலை பதமாக இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்க்கவே சும்மா வட்டமிட்டு சுழித்து பார்த்திருக்கிறார்கள். அந்த கிறுக்கலை தான் பிள்ளையார் சுழி என்று கூறிவந்திருக்கிறோம். என்று சொல்வோரும் உண்டு.
எப்படிவேண்டுமானாலும் இருக்கட்டும் அவரவர் கருத்துகள். நம்முடை நம்பிக்கை மற்றும் பழக்கம் எல்லாம் அர்த்தம் கொண்டதாகவே இருக்கும். ஏனெனில் நம் முன்னோர்கள் பரிசீத்துப்பார்த்து, அவர்கள் காரியங்களில் நன்மைகள் ஏற்பட, ஏற்பட தானே அதை படிப்பினையாக கொண்டு எழுத தொடங்கும் முன் பிள்ளையார் சுழி போடும் பழக்கத்தை நமக்கு தந்து சென்று இருக்கிறார்கள்.
எப்படியோ இறைவனை நினைவுகூறும் ஒரு எழுத்தும் இறைவனை ஒத்து பேசாதிருக்கும் குணம் கொண்டு அது வும்"பேசா எழுத்தாக, மோன எழுத்தாக, ஊமை எழுத்தாக' இருக்கிறது என்பது ஆச்சரியம் தானே!



ஆன்மிக சிந்தனை10
வாங்க,பர்சனல் பக்தி செய்யலாம்!
இன்று பாஸ்ட்புட் கலாசாரத்தில் எதையுமே துரித கதியில் செய்துகொண்டிருக்கும் நாம்பொருளற்ற வாழ்க்கையில் பொருள் தேடி அலைந்து கொண்டிக்கிறாம்.வாழ்க்கையில் நம்மை படைத்தவனை நினைப்பதைவிட, பணத்தையே சதாகாலமும் நினைத்துக்கொண்டிருக்கிறோம்! என்ன செய்வது? செயற்கையான விருப்பங்களையும், ஆசைகளையும் கட்டமைத்துக்கொண்டு நினைப்பு கெடுக்கும் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் சூழலில் பொருளில்லார்க்கு வாழ்க்கை பொருளற்றதாகிவிட்டது.
சுற்றிக்கொண்டிருக்கும் பூமியில் ஓடிக்கொண்டேயிருக்கும் காலத்தில் நாமும் ஓடிக்கொண்டேயிருக்கிறோம். இப்படிப்பட்டவர்களிடம் பணம் பண்ணும் வழியைச் சொன்னால் காதுகொடுத்து கேட்பார்கள். ஆனால்,பக்தி பண்ணுவது பற்றி சொன்னால் பயனளிக்காது என்பதையும் அறிவேன். பொன்னுக்காகவும், பொருளுக்காகவும் ,பெண்ணுக்காகவும் ,பெருமைக்காகவும், பதவிக்காகவும் இன்னம் எதை எதையோ தேடி தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கும் வாழ்வில் எங்கோ, எப்போதோ இடறி விழுந்து, பலத்த அடிப்பட்டு எழுந்திருக்க முடியாத போது "கடவுளே!' என்று கூக்குரலில் கூப்பாடு போடுவீர்கள்! அப்போதாவது கடவுளை நினைக்கதோன்றும் அப்போதாவது இதை படித்த ஞாபகம் வரும். இனியாவது மனதில் பக்தியை விதைத்து நற்கதியை அறுவடைய செய்ய புத்திவரும் நேரத்தில் இங்கே சொல்லப்படும் வழிமுறை உங்களுக்கு உபயோகப்படும்.
வாழ்வில் கஷ்டம் வரும்போதுதான் கடவுளை நினைப்பேன் என்று கருதாமல் சந்தோஷமாக இருக்கும் போதே நல்ல நிலையில் இருக்கும் போதே கடவுளை நினைத்துக்கொண்டிருக்க பக்தி செய்ய சுலபமான வழி எது? என்பதை இந்த வார ஆன்சிக சிந்தனையாக சிந்திப்போம்!
நமக்காகவோ, பிறருக்காகவோ வெளியிடத்தில் அதாவத கோயில் விக்ரகம் முன்பும், சக்கரம்,யாகம்,ஹோமம் போன்ற வழிபாடுகளை புரியும் புரோகிதர்கள்,சாஸ்திரிகள்,அர்ச்சகர்கள் செய்யும் பூஜையை பரார்த்த பூஜை அதாவது புறவழிபாடு என்கிறோம்.
நம்முடைய பிரார்த்தனையை இன்னொருவர் ஊடகமாக இருந்து இறைவனிடம் சேர்ப்பது ஆகும்.
இது எப்படி என்றால் நமக்கு தேவையான ஒன்றை அரசிடமிருந்து பெற அதிகாரிகள் மூலம் விண்ணப்பித்தது, அதற்கான வழிமுறைகளை பின்பற்றி பெறுவது போன்றது.இதை தான் நாம் செய்துகொண்டிருக்கிறோம்.
இன்றைய அவசர வாழ்க்கையில் காலையில் எழுந்து, குளித்து, சூரியநமஸ்காரம் செய்து, அருகில் இருக்கும் கோயிலுக்குச் சென்று பூஜை,வழிபாடு செய்துவிட்டு, பின்னர் சாப்பிட்டு விட்டு அலுவலகம் செல்வது என்பது நடக்கிற விஷயமா, என்ன? காலையில் எழுந்ததுமே ஆயிரத்தெட்டு வேலை இருக்கும் இதை முடிக்கவே நேரமில்லாதப்போது எப்படி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வதாம்? அப்படி என்றால் வழிபாடு செய்யவேண்டாமா? எப்போது நேரம்,ஓய்வு கிடைக்கிறதோ அப்போது வழிபாடு செய்துகொள்ளலாம் என்றிருபது சரியாகுமா? இப்படி எல்லாம் கேள்விகள் எழும். நீங்கள் காலத்துக்கு ஏற்ப மாறிகொண்டது போல, பக்தி செய்யும் முறையையும் கொஞ்சம் மாற்றிக்கொண்டால் போதும். அதற்கு மிக எளிமையான வழி இருக்கிறது. அது பர்சனல் பக்தி . இதை அகவழிபாடு என்றோ,
ஆன்மார்த்த வழிபாடு என்றோ சொல்லலாம்.இந்த பக்தி முறை அற்புதமானது. சுலபமானது. நமக்குள் நாமே வழிபட்டுகொள்வதாகும். அதாவது இறைவனை நம் மனதில் இருத்திக்கொண்ட தியானம்,மந்திரம் மனதுள் சொல்லிக்கொண்டு வழிபடுவதாகும். இந்த வழியில் நம் தேவைகளை பெற இன்னொருவர் தயவு தேவையில்லை. நம் தாயிடமோ,தந்தையிடமோ, அண்ணன், தம்பியிடமோ தம் குறைகளை, கஷ்டங்களை கூறி பயன் பெறுவது போலாகும். இதற்கு பிறர் கேரண்டியோ,ரெக்கமென்டேஷனோ தேவையில்லை.
கோயில் சென்று வழிபடும் முறையில் உடல் துõய்மை, மனத்துõய்மை, மடி, ஆச்சாரம் எல்லாம் தேவை. எல்லோருமே கருவறைக்குள் சென்று பூஜை செய்ய முடியாது. அதற்கெல்லாம் சாதி,சமய தீட்சை என பல நியமங்கள் உள்ளன.
பர்சனல் பக்தியில் அதெல்லாம் தேவையே இல்லை. நீங்கள் நினைத்த மாத்திரத்தில் மனதில் எந்த கோயில் கருவறையிலும் உங்களுக்குப்பிடித்த கடவுளுக்கு வழிபாடு செய்து சந்தோஷபடலாம்.
புறவழிபாடு செய்பவர்கள் உடல்நலம் இல்லாதபோது வழிபாடு செய்ய முடியாது.
"வாயானை மனத்தானை நின்ற
கருத்தானை கருத்தறிந்து முடிப்பான் தன்னை என்று அப்பர் அடிகள் சொல்வது ஆன்மார்த்த பூஜைபற்றியதே. ஊனக்கண்ணால் காணமுடியாத இறைவனை மனக்கண்ணால் காண இந்த முறை வழிபாடு உதவும்.
"ஓம் நமசிவாய' என்ற மகா மந்திரத்தை மனதுள் நினைப்பதே பர்சனல் பக்தியின் முதல் வழி. இதை செய்தாலே போதும் கோயில் செல்ல முடியலையே, கண்ணார கடவுளை தரிசனம் செய் முடியலையே... இப்படி எல்லாம் ஆதங்கம்பட தேவை இருக்காது. உங்களுக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் "ஓம் நமசிவாய' மகா மந்திரத்தை மனதுள் நினைத்துக்கொண்டிருங்கள். காலையில் படுக்கையில் எழுந்தவுடன் முதல் வேலையாக ஒரு 5 நிமிடம் மகா மந்திரத்தை நினத்துக்கொண்டு பின் மற்ற வேலையை பாருங்கள். கடைக்கு பால் வாங்க செல்லும் நேரத்தில், குளிக்கும் நேரத்தில், பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து செல்லும் நேரத்தில், ஆட்டோவிலோ, பஸ்சிலோ செல்லும் நேரத்தில், லன்ஞ் நேரத்தில், மாலையில் அலுவலகம் விட்டு வீட்டுக்கு திரும்பும் போது பஸ்சில் வரும் நேரத்தில் என இப்படி கிடைக்கும் எந்த நேரத்திலும் மகா மந்திரத்தை மனதுள் சொல்லிக்கொண்டிருங்கள். இப்படி செய்வது தான் பர்சனல் பக்தி!
அடுத்ததாக கொஞ்சம் கூடுதலாக நேரம் கிடைத்தால் குறைந்த பட்சம் பத்துநிமிடம் கிடைத்தால் பர்சனல் பக்தியின் இரண்டாவது வழியை பழகலாம். அந்த வழிமுறையும் எளிமையானது தான். சுலபமானதுதான். இதோ அதையும் தெரிந்து கொள்ளுங்கள்.இரண்டாவது வழியை எப்படி செய்யவேண்டுமென்றால் மூலாதாரத்தில் "ஓம் 'என்றும் சுவாதிட்டானத்தில் "ந' என்றும் மணிபூரகத்தில் "ம' என்றும் அநாகத்தில் "சி' என்றும், விசுத்தியில் "வா' என்றும், ஆக்ஞையில் "ய' என்றும் நினைத்து கீழேயிருந்து மேல் நோக்கி செல்வது கீழ்முறை அல்லது ஏறுமுறை என்று திருமூல ர் திருமந்திரத்தில் கூறியவழிமுறையாகும்.
உங்களுக்கு புரியும்படி எளிதாக சொல்ல வேண்டும் என்றால் முதுகு தண்டின் கீழ் "ஓம்' என்று நினைத்து, அதற்கு மேலே இருக்கும் குறிக்கு சற்றுமேலே "ந' என்று நினைத்து, தொப்புள்கொடி புள்ளியில் "ம' என்று நினைத்தும், இருமார்புகாம்புகளுக்கு மத்தியில் உள்ள குழியில் "சி' என்று நினைத்தும் தொண்டைக்குழி மத்தியில் "வா' என்று நினைத்தும், இரு புருவமத்தியில் "ய' என்று நினத்துக்கொண்டிருப்பது தான் இரண்டாம் படிநிலை. உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் பக்தி செய்யும் முறை தான் மேற் சொன்ன முறை. இதை பின்பற்ற எல்லோருக்கும் முடியும் தானே?

குழந்தைகளை புரிந்து கொள்வோம்

குழந்தைகளை புரிந்து கொள்வோம்! 1

குழந்தைகள் பூக்களை போன்றவர்கள். அவர்களோடு சினேகம் கொள்ள நீங்கள்
வண்ணத்துப்பூச்சிகளாக மாறவேண்டும்.பூக்களுடன் பழக மென்மை அணுகுமுறை வேண்டும்.
குழந்தைகளின் ஒவ்வொரு அசைவுகளும், சிணுங்களும், சிரிப்பும், அழுகையும் சொல்லும்
அர்த்தங்களை உங்களின் மேதாவி தனத்தால் அறிந்துகொள்ளமுடியாது. ஏனெனில் குழந்தை
களின் மொழி கடவுள் மொழி! அதாவது மவுனம். அரவணைப்பு உணர்வுகள் தான் அவர்கள்
அறிந்த தகவல் பரிவர்த்தனை. குழந்தைகளின் உலகம் தனி உலகம். அவர்களின் குணாதிச
யங்கள், இயல்புகள், தேவைகள் எல்லாம் அறிவதற்கு, குழந்தை மனதுடன் அணுகினால் மட்டுமே
புரிந்து கொள்ள முடியும்.
சரி, குழந்தைகளின் உலகத்தில் உள்ள ஆச்சரியங்களை, குழந்தைகளின் வாழ்க்கையில்
லுள்ள அதிசயங்களை புரிந்து கொள்ள என்னோடு வாருங்கள்.
""அம்மா, குழந்தை மல்லாக்க படுத்துக்கிட்டு "வீல்... வீல்...' கத்தறதும்மா. ஏன்னு புரியலை''
தலைபிரசவத்தில் குழந்தைப் பெற்றவள் தன் தாயிடம் கேட்டாள்.
"" ஒண்ணும் பயப்படாத. குழந்தை சிறுநீர்கழிக்க சிரமப்படுது. குழந்தையை அப்படியே
குப்புற கவிழ்த்து போடு, இல்லேன்னா குழந்தையை துõக்கி இடுப்புல வைச்சுக்கோ எல்லாம்
சரியாயிடும்.'' அம்மா சொன்ன கணமே குழந்தையை துõக்கி இடுப்பில் வைத்து கொள்கிறாள்.
சில நிமிடங்களில் குழந்தை சிறுநீர் போகிறது. அதன் அழுகையும் ஓய்கிறது. மகள் ஆச்சரியப்
படுகிறாள்.
அம்மா, எப்படி உனக்கு குழந்தை இதுக்காகத்தான் அழுவுதுன்னு தெரிஞ்சது?'' தாயிடம்
மகள் ஆச்சரியமாய் கேட்டாள்.
அதற்கு, அந்த தாய்""எல்லாம் ஒரு அனுமானம் தான். காலையிலேயே ஒரு குழந்தை விடாம
அழுதா, ஒண்ணு பசிக்காக அழணும்; இல்ல சிறுநீர்கழிக்கதான் அழுவணும்னு ஒரு கணக்கு.
குழந்தை எதையும் சொல்லாது. ஆனா, அது சொல்ல வேண்டியதை குறிப்பா சொல்லி அழும்.
குழந்தையின் ஒவ்வொரு நேரத்துக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப நாம தான் அந்த அழுகையின்
அர்த்தத்தை புரிந்து கொள்ளணும்.'' என்று அந்த தாய் குழந்தையை புரிந்து கொள்ளும் முதல்
பால பாடத்தை தன் மகளுக்கு சொல்லித் தருகிறாள்.
சரி. அந்த தாய் சொன்னது அனுபவ ஞானம். இது பற்றி மருத்துவர் என்ன சொல்கிறார்?
பிரபல குழந்தை நல மருத்துவ நிபுணர் ஒருவரிடம் கேட்ட போது," பொதுவா குழந்தை
களுக்கு உடல் கூறுகள், உறுப்புகள் போதுமான அளவு வளர்ச்சி அடைந்திருக்காது. அது
போல தான் அந்த குழந்தைக்கு சிறுநீர் பை சற்று மேலேயே இருந்திருக்கும். அதனால
குழந்தை சிறுநீர்கழிக்க சிரமப்பட்டு, அதை சொல்லத் தெரியாம அழுது இருக்கும். அதே
நேரம் குழந்தை குப்புற படுத்திருந்தாலோ, குழந்தையை துõக்கி வைச்சிருந்தாலோ
சிறுநீர்பை மேலும் கீழும் ஏறி இறங்கும். அந்த சமயத்தில் குழந்தை சுலபமா சீறுநீர் கழித்திரு“ண
கும். அதனால குழந்தைஅழுவதை நிறுத்திருக்கும்.'' என்று விளக்கம் தருகிறார்.
இப்படிதான் ஆரம்ப காலத்தில் குழந்தைகளின் உடல் அசைவுகளை, அழுகைகளை, சிணுங்கள்
களை புரிந்தும் கொள்ளும்அணுகுமுறைகளை தெரிந்துகொள்ளவேண்டும்.
பசிக்காக அழும் குழந்தைகள் வாயிலிருந்து உமிழ்நீரை வழிய அழும். செரிமானம் ஆகாத
பிரச்னையில் குழந்தைகள் கால், கைகளை உதைத்து கொண்டு விட்டு விட்டு அழும். உடல்
வலி ஏற்பட்டால் அரவணைப்பை தேடி கதறி அழும். ஜன்னி, ஜூரம் வந்தால் குப்புற
கவிழ்ந்து கொண்டு அழுகைக்கு இடையே கொட்டாவி விட்டு அழும்.
இடமாற்றம், சூழ்நிலை மாற்றம், ஒவ்வாமையின் போது,குழந்தைகள் தொடர்ந்து அழுது
அடம்பிடிக்கும். கைகளை இறுக மூடிக்கொள்ளும். 18 மணிநேரத்துக்கு குறைவாக துõக்கம்
இருந்தாலும் நைநை என்று சிணுங்கி அழும்.
ஆக, குழந்தைகள் முதலில் தனது பிரச்னைகளை, தேவைகளை தாய்க்கோ, பிறருக்கோ அதை
எடுத்துச் சொல்லும் விதமாக குறிப்பாக உணர்த்தும் மொழியாக அழுகை ஒன்றையே தகவல்
பரிவர்த்தனையாக கருதுகிறது. அந்த முயற்சியில் அதற்கு வெற்றியும் கிடைத்து விடுவதால்
அழுகையே நமது மொழி என்று கருதிவிடுகிறது. அதனால் தான் குழந்தைகள் தொட்டதுக்
கெல்லாம் அழுது அடம்பிடித்து, களேபரம் செய்கின்றன.
"ச்சே... என்ன குழந்தை இது! எப்பபார்த்தாலும் நைநைன்னு தொணதொணன்னு அழுது
கிட்டே இருக்கே' என்று நம்மில் பலர் அலுத்துகொள்கிறோம். குழந்தைகள் மீது வெறுப்பும்
கொள்கிறோம்.
பொறுமை இழக்கிறோம். குழந்தை மீது கோபம் கொள்கிறோம். குழந்தைகள் அழாமல்
சமத்தாக எப்போதும் துõங்கிகொண்டே இருக்கவேண்டும் என்று பொதுவாக பலரும் ஆசை
படுகிறோம். வேளைக்கு பால் குடித்து விட்டு, ஒருஜடப்பொருள் போல குழந்தைகள்
இருந்தால் நிம்மதி என்று நினைக்கிறோம். நீங்கள் நினைப்பது போல குழந்தைகள்
இருந்தால் அந்தக் குழந்தை இயல்பான, திடக்காத்திரமான, ஆரோக்கியமான குழந்தையாக
இருக்கமுடியாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
குழந்தைகள் என்றால் அழவேண்டும். அடம்பிடிக்க வேண்டும். தொல்லைக் கொடுக்க
வேண்டும். குழந்தைகளை சமாளிக்க, பராமரிக்க, புரிந்துகொள்ள நாம் தான் குழந்தைகள்
நிலைக்கு வரவேண்டும். குழந்தைகள் மென்மையானவர்கள். நாமும் மென்மையானவர்
களாக மாறவேண்டும். பூப்பறிக்க கோடரி வேண்டாமே.
ஆதலால் குழந்தைகளைப் புரிந்துகொள்ள முதல்படியாக இருப்பது அழுகைதான்! ஏனென்றால்
குழந்தை பிறக்கும் போது அழுகையோடுதானே பிறக்கிறது! இடையில் நம்மிடமா அழுகை
கற்றுக்கொள்கிறது? குழந்தையின் சொந்த மொழி
முதல் குறிப்பு மொழி அழுகைதான் என்பதை நான் புரிந்து
கொண்டால் போதும். அந்த அழுகையின் காரண காரியங்களைத் தெரிந்து கொண்டு உடனுக்
குடன் அதன் அழுகைக்கு பின்னர் உள்ள தேவைகளை கவனித்து செய்தால் போதும்.
குழந்தைகளின் உலகில் நாம் குழந்தைகளோடு இருக்கும் ஒவ்வொரு கணமும் விலை
மதிப்பில்லாத சந்தோஷத்தை கொடுக்கும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.


குழந்தைகளை புரிந்து கொள்வோம்!2

குழந்தைகளின் குழந்தைகளாகுவோம்...
" அப்பப்பா... இதுங்க குழந்தைகளா என்ன? என்ன வால்தனம்! சுட்டித்தனம்! செத்த நேரம்
செவனேன்னு ஒரு இடத்தில அடங்கி, ஒடுங்கி இருக்குதா? எப்பபாரு துருதுருன்னு...
ஓடுறதும், குதிக்கறதும்... இதுகல மேய்க்கறதுக்கே நாளு போய்டுது.' என்று அங்கலாய்ப்
பவரா நீங்கள்? அப்படி என்றால் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். குழந்தைகள்
அப்படிதான் இருப்பார்கள். குழந்தைகள் சுதந்திரமானவர்கள்! தீராத விளையாட்டு பிள்ளைகள்!
ஒருகணம், ஒரு இடத்தில் சும்மா இருக்கமாட்டார்கள்.
அதை எடுப்பது, இதை உடைப்பது என்றுதான் இருப்பார்கள். ததக்கா புதக்கா என்று ஓடும்
போது எங்கே கீழே விழுந்து காலை உடைத்துக் கொள்வார்களோ, கட்டிலில் ஏறி, இறங்கும்
போது தடுமாறி விழுந்து, மண்டையை உடைத்து கொள்வார்களோ என்று நமக்கு நெஞ்சம்
பதைபதைக்கும்.
ஆனால் குழந்தைகள் அதைப் பற்றி எல்லாம் கவலை படமாட்டார்கள். இதனால் தான் " இளம்
கன்று பயம் அறியாது' என்கிறோம்.
குழந்தைகள் இப்படி துருதுரு என்று இருப்பதற்கு உளவியல் ரீதியிலான காரணங்கள் இருப்ப
தாக உளவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். ஸ்டெர்ன் பெர் என்பவர், " குழந்தைகளுக்கு
திட்டமிட்ட ஒரு செயலோ, குறிகோளோ கிடையாது. கண் மூலம் ஏதோ ஒன்றை பார்க்கிறது.
காதினால் ஒன்றை கேட்கிறது. தொடு உணர்வு மூலம் எதையோ எடுக்கிறது. இவற்றிலிருந்து
பெறும் அனுபவத்தை குழந்தைகளால் இன்னதென்று அனுமானிக்க முடியாது. அது ஒரு புது
அனுபவமாக இருப்பதால், அந்த அனுபவத்தைப் பெற துரு துரு என எதையாவது
செய்து கொண்டே இருக்கும்" என்கிறார்.
குழந்தைகள் எதை செய்ய நினைக்கிறார்களோ அதை செய்வார்கள். ஏன் செய்கிறோம்?
எதற்கு செய்கிறோம்? சரியா, தவறா? என்று ஆராய்ச்சி, திறனாய்வு செய்யமாட்டார்கள்.
அப்படி செய்யவும் தெரியாது. ஏனென்றால், நம்மை போல அவர்களுக்கு ஆறாவது அறிவு
எல்லாம் வேலை செய்யாது. குழந்தைகள் என்பவர்கள் கிட்டதட்ட ஐந்தறிவு கொண்டவர்
களாகவே இருப்பார்கள்.
குறிப்பிட்ட வயதுக்குப் பிறகுதான் பகுத்தறிவு வேலை செய்ய தொடங்கும். இந்த நிலையில்
நாம் குழந்தைகளை புரிந்துகொள்ள நமக்கு இருக்கும் ஆறாவது அறிவை கொஞ்சம் துõர
வைத்து விட்டு, குழந்தைகளின் பெற்றோர் என்ற தோரணை இல்லாமல், குழந்தைகளின்
குழந்தைகளாக இருந்து அவர்களோடு பழகினால் மட்டுமே அவர்களை புரிந்து கொள்ள
முடியும்.
"" பாப்பா, காலையில டிபன் சாப்பிட்டியா?''
""யசல்லம் இரவு நன்றாக துõங்கினாயா?'' இப்படி எல்லாம் குழந்தைகளிடம் கேட்டால்
பேந்த பேந்த முழிக்கும். ஆனால் அதே குழந்தையிடம், "" செல்லக்குட்டி, பொம்முகுட்டி
மம்மு சாப்பிட்டியா?'' என்று கேட்டால் உடனே , ""மம்ம்மு சாப்பிட்டேன்'' என தலையை
ஆட்டும்.
""என்ன மம்மு சாப்பிட்ட? பப்பு மம்முவா? தையி மம்முவா? அசம் மம்முவா?'' என்று
கேட்டால், அதற்கு அந்தக் குழந்தை "" பப்பு மம்மு சாப்பிட்டேன்'' என்று ஆர்வமாய் பதில்
சொல்லும். அதுபோல, "இரவு துõங்கினாயா?' என்றால் பதில் வராது. அதே சமயம் ""யாத்திக்கு
அம்மாச்சி மடியில தாச்சிக்கினியா?'' என்றால் ஆமாம் என்று சொல்லும்.
இப்படிதான் குழந்தைகளின் தேவைகளை அவர்களின் மழழை மொழியில் பேசி, அவர்களி
டம் இருந்து அவர்கள் மனதில் இருக்கும் எண்ணங்களை, கருத்துகளை தெரிந்து கொள்ள
வேண்டும்.
அடுத்ததாக, குழந்தைகளின் கவனம், நினைவாற்றல் எல்லாம் வானவில் போல வந்து
போகும். ஏதோ ஒன்றை உடும்பு பிடியாக பிடித்துக்கொண்டு பிடிவாதம் பிடிக்கும். அழுது
அலுச்சாட்டியம் பண்ணும். அந்த நேரத்தில் அந்த குழந்தையை சமாதானப்படுத்த ஐ.நா.
சபை நினைத்தாலும் முடியாது.
உதாரணத்துக்கு பக்கத்து வீட்டு பையன் ஒரு பலுõன் வைத்திருப்பதைப் பார்த்து விட்டால்,
அது தனக்கு வேண்டும் என்று அழுது அடம்பிடிக்கும். அந்த நேரத்தில் குழந்தை அடித்தோ,
திட்டியோ கவனத்தை திசை திருப்ப முடியாது. அந்த சமயத்தில் குழந்தையின் கவனத்தை
திசை திருப்ப, திடீரென்று ""நேத்து தாத்தா வீட்டுக்கு எப்படி போனோம் கூக்கூல தானே?''
என்று கேட்டு வைத்தால் "ஆமாம்' என்று தலையை ஆட்டும். அந்த கணத்தில் அதன் ஞாபகம்
பலுõன் மறந்து ரயில் நினைவு வந்து விடும்.
அடுத்து "குழந்தைகளை எடுப்பார் கை பிள்ளை' என்று சொல்வார்கள். குழந்தைகள் எப்போதுமே
அரவணைப்பைத் தேடி ஏங்கும். நம்மை போல பணம், பொருள், நகை என கொடுத்தால்
திருப்பதி அடைந்து விடாது. குழந்தைகளிடம் நாம் குழந்தை மாதிரி நடந்து கொண்டால்
போதும். பின்னர் நம்மை சுற்றியே வரும். நம்மீது ஆசையாக இருக்கும். நம்மிடம் ஒரு
இணக்கம் ஏற்பட்டு சினேகம் கொள்ளும். குழந்தைகளுக்கு நல்லவர்கள், கெட்டவர்கள்;
நன்மை, தீமை என்று பேதம் பிரிக்கத் தெரியாது. குழந்தைகளுக்கு கள்ளம், கபடம் கிடையாது.
உறவுகள் தெரியாது. குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி யார் நடந்து கொள்கிறார்களோ அவர்கள்
தான் குழந்தைகளுக்கு உறவினர். அம்மா, அப்பா எல்லாம் அடுத்தப் படிதான். அதனால் தான்
குழந்தைகளை எடுப்பார் கை பிள்ளை என்கிறோம்.
குழந்தைகள் எப்போதும் பெரியவர்கள் மத்தியிலிருந்து விலகி இருக்கவே விரும்பும்.
தனிமையை விரும்பும். குழந்தைகள் முன்னே அதை விட, குறைவான உருவமுள்ளவை
களிடமே இருக்க ஆசைப் படும். குழந்தைகள், குழந்தைகள் கூட்டத்தில் இருப்பதே அலாதி
பிரியமாகும்.
இன்னொரு விஷயம் குழந்தைகளுக்கு எந்த வித குறுக்கீடோ, தொந்தரவோ தருவது அறவே
பிடிக்காது. இன்னும் சொல்லமானால் குழந்தைகளுக்கு உயர்திணைகளை விட, அஃறிணை
களே இஷ்டம். காரணம் அஃறிணைகள் கேள்வி கேட்காது, செய்யும் செய்யலை தடுக்காது,
குறுக்கீடாது, தொந்தரவு செய்யாது. அதனால் தான் நம்மை விட குழந்தைகளுக்கு நாய், பூனை,
ஆட்டுக்குட்டி, விளையாட்டுப் பொருள்கள் என்றால் ரொம்ப பிடிக்கும்.
குழந்தைகளை அதை செய்! இதை செய்! அதை செய்யாதே! இதை செய்யாதே என்றெல்லாம்
கட்டளையிட்டால் கதைக்கு உதவாது. அது என்ன செய்கிறதோ, அதை அதன் போக்கில்
ஊக்கப்படுத்தினால் மட்டுமே குழந்தைகள் மகிழும்!
பொதுவாக குழந்தைகளுக்கு பிடிவாதம், கோபம், சுயநலம், ஆத்திரம், பயம் எல்லாம்
இருக்கும். காரணம் குழந்தைகள் தங்கள் எண்ணங்களை, கருத்துகளை, விருப்பங்களை
வெளிப்படுத்த மொழியொன்று அறியாததாலும், தம்முடை விருப்பங்கள் அங்கீகரிக்கப்
படாமல் போவதாலும், பாதுகாப்பு இல்லாததாலும், குழந்தைகளை நாம் குழந்தை மனதோடு
அணுகாததாலும் குழந்தைகள் தற்காப்புக்காக, நினைத்ததை சாதித்துக்கொள்ள புத்திசாலித்
தனமாக, குழந்தைகள் கையாளும் ஆயுதங்களாக பிடிவாதத்தையும், கோபத்தையும், அழுவதை
யும் தமக்கான கேடயங்களாக்கிக் கொண்டன.
நாம் குழந்தைகளின் குழந்தை என்ற எண்ணத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்திவிட்டால்
போதும். எந்த குழந்தையும் பிடிவாதம் பிடிக்காது. தொல்லைக் கொடுக்காது.
அடுத்ததாக குழந்தைகள் சுதந்திரத்தை பெரிதும் விரும்புவார்கள். அவர்களுக்கென்று ஒரு
சூழ்நிலை, களம் நாம் தான் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். ஆதலால், நம்மை போலவே
அமைதியாக, அடக்கம் ,ஒடுக்கமாக குழந்தைகள் இருக்கவேண்டும் என்று சிறகொடித்து
கூண்டுக்குள் அடைக்கும் கிளிபோல குழந்தையை ஆக்கிவிடாதீர்கள்!
குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்க விடுங்கள். அதுதான் குழந்தைக்கு சந்தோஷத்தைக்
கொடுக்கும். உங்களுக்கும் சந்தோஷத்தை தரும். உங்களைப் போல குழந்தைகள் இருக்க
வேண்டும் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். அப்படி நினைத்தால் அதை விட வேறு
முட்டாள் தனம் இருக்க முடியாது.


குழந்தைகளை புரிந்து கொள்வோம் 3

நற்பண்புகளை விதைப்போம்!
குழந்தைகள் பார்த்தல், கேட்டல், கவனித்தல் செயல்களில் ஆர்வமாக இருக்கும்.
தனக்கென்று ஒரு அனுபவம் இல்லாததாலும், ஒருவேளை இருந்தாலும் ,அதுதொடர்பாக
சிந்தித்து தெளியும் பக்குவம் இல்லாததால் குழந்தைகள் தங்களை சுற்றி நிகழும் சம்பவங்களில்
தாமாகவே முன்வந்து பங்கேற்கின்றன.
இந்த நிலையில் தான் குழந்தைகளிடம் மிக உஷாராக அணுகவேண்டும். எல்லோரிடமும்
குழந்தைகள் பழகவும், விருப்பங்களை வெளிப்படுத்தவும் மொழி தெரியாததால், குழந்தைகள்
மற்றவர்களை கூர்ந்து கவனிக்கின்றன. மற்றவர்கள் செய்யும் செயலை தாமும் செய்து பார்த்து
மகிழ்கின்றன. இதை போல செய்தல் அதாவது திரும்பசெய்தல் என்று சொல்லப்படும்
இமிடேஷன் முறை தான் கற்றலின் முதல் படியாக இருக்கும்.
""செல்லம் தாத்தா எப்படி இருமுவாங்கன்னு, மாமாவுக்கு செஞ்சுக்காட்டு'' என்றதுமே,
அந்தக் குழந்தை தாத்தா இருமியதை மிமிக்ரி பண்ணிக்காட்டும்.
""பாட்டி எப்படி நடப்பாங்கன்னு சித்திக்கு நடந்துகாட்டுடா செல்லம்'' என்று கொஞ்சினால்
உடனே பாட்டிப்போல முதுகு குனிந்து நடந்துகாட்டும்.
""அப்பா எப்படி நாற்காலியில உட்காந்து இருப்பாங்கன்னு சித்தாவுக்கு செஞ்சு காட்டு''
என்றால் தன் அப்பாவை போல கால் மேல் கால் போட்டு உட்காந்து காட்டும்.
இவை எல்லாம் எப்படி குழந்தைகளால் செய்ய முடிகிறது. அதற்கு காரணம் "போல செய்தல்'
ஆர்வம் மற்றும் பிறரை கவனித்தலால் வருவதாகும்.
இப்படி பட்ட சூழ்நிலையில் கேட்பதை திருப்பி சொல்வதில் சிரமம் இருப்பதால், அதில்
கவனம் செலுத்துவதை விட்டு பார்த்தலில் கூடுதலாக கவனம் செலுத்தும். ஆகையால்
குழந்தைகள் இருக்கும் இடத்தில் நல்ல செயல்களையே செய்யவேண்டும். பிறரின்
செய்கையை அப்படியே காப்பி அடிக்கும் பழக்கம் குழந்தைகளுக்கு இருப்பதால், குழந்தை
யின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒழுக்கமான அணுகுமுறைகளை கடைப்பிடிக்க
வேண்டும்.
குழந்தைகள் முன் கெட்ட பழக்கங்களை ஒருபோதும் செய்ய கூடாது. ஏனென்றால் குழந்தை
களுக்கு எது நல்ல பழக்கம்? எது கெட்டப்பழக்கம்? என்பதெல்லாம் தெரியாது.
குழந்தைகள் இருக்கும் இடத்தில் புகைப்பிடித்தல், வெற்றிலைப் போடுதல், தலைசொரிதல்,
காது குடைதல், மூக்கு நோண்டுதல், வறட்டு வறட்டு என்று உடம்பு சொறிதல், தும்முதல்,
இருமுதல், இடது கை, வலது கை முறைமாற்றி பயன்படுத்த வேண்டியதுக்கு பயன்படுத்துதல்,
கண் கசக்குதல், பிறரை அடித்தல், ஆயுதம் கொண்டு தாக்குதல், கோபப்படுதல் போன்றவற்றை
முற்றிலுமாக தவிர்க்கவேண்டும்.
ஏனென்றால் இந்த செயல்களை எல்லாம் குழந்தைகள் முன்பு செய்தால் அதை அப்படியே
அதுவும் செய்து பழகும்.
அதே சமயம் குழந்தைகளுக்கு அப்ஸர்வேஷன் தன்மை அதிகமாக இருப்பதால். நாம் குழந்தை
களிடம் நல்ல பழக்கங்களை செய்து காட்டி அவர்களையும் அப்படியே செய்ய வைக்கலாம்.
உதாரணமாக வீட்டில் பெரியவர்களை மரியாதையாக நடத்துவது, வணக்கம், நன்றி போன்ற
பண்புகளையும் உறவினர்கள், விருந்தினர்கள், நண்பர்களிடம் பணிவாக நடந்து கொள்ளும்
பண்பை வளர்க்கலாம்.
முறையாக சாப்பிடும் பழக்கம், ஒழுங்காக துõங்கும் பழக்கம், கவனமாக நடக்கும் பழக்கத்தை
நாம் செய்துகாட்டுவதன் மூலம் குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள்.
அடுத்ததாக குழந்தைகளின் கற்றல் திறனும் கவனத்தில் கொள்ளவேண்டும். குழந்தைகள்
மொழியை எப்படி அணுகுகிறார்கள் என்பதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் புரிந்து
கொள்ள வேண்டும்.
குழந்தைகள் முதலில் சொல் சொல்லாகத்தான் பேசும். அதற்கு அ,ஆ, க,ங அரிச்சுவடி,
இலக்கணம் எல்லாம் தெரியாது. பொருள், பண்பு எல்லாம் தெரியாது. "தா, கொடு, போ,'
இப்படிதான் சொல்வடிவில் பேசும். இந்த சொற்களையும் பிறரிடமும், தன்னை சார்ந்துள்ள
வர்களிடமிருந்து தான் கற்றுக்கொள்கிறது.
அதுவும் குழந்தைகள் நிறம் சார்ந்த சொல், எண்கள் சார்ந்த சொல், நேரம் சார்ந்த சொல்,
பணம் சார்ந்த சொல் போன்றவற்றை எளிதில் தெரிந்து கொண்டு பேச பழகுகிறது. இப்போது
ஓரளவு புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டது. தன்னுடை விருப்பத்தை ஓரளவு சொல்ல
முயற்சிக்கிறது.
இந்த நிலையில், குழந்தையை ப்ரீகேஜ், யூகேஜி என்று பள்ளியில் சேர்த்து விடுகிறோம்.
குழந்தைகளோ பார்த்தல், கேட்டல், கவனித்தல் மூலம் முன்கூட்டியே பேச பழகி விட்டது.
ஆனால் பள்ளியில் பேசுவதற்கும், எழுதுவதற்கும் மொழி கட்டமைப்பை போதிக்கும் போது
அனுபவ வழி மொழிக்கும், கற்றலில் வழி மொழிக்கும் வித்தியாசம் கண்டு குழம்பும்.
பள்ளிக்கு போவது என்றால் அது வெறுப்பான ஒரு செயலாக கருதி, போகமாட்டேன்
என்று அடம்பிடிக்கும். காரணம் குழந்தைகள் விரும்பிய கற்றல் வேறாகவும், பள்ளியில்
பயிற்று விக்கும் முறை வேறாகவும் இருப்பதால் தான் குழந்தைகளுக்கு கற்றல் என்பது
இனிமையாக இருப்பதில்லை.
தற்போது செயல் வழி கல்வித்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதில் குழந்தைகள்
இயல்பாக, இயற்கையாக, விளையாட்டு முறையில் கற்பதற்கு இந்த கல்வி முறை உதவுகிறது
என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆதலால், குழந்தைகளுக்கு விருப்பமானதை நாம் செய்வது மட்டுமே குழந்தைகளுக்கு
நாம் காட்டுகின்ற நன்றியாகும்.


குழந்தைகளை புரிந்துகொள்வோம்4

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்!

குழந்தைகள் இயல்பானவர்கள். பாத்திரத்திற்கு ஏற்ப வடிவம் பெறும் தண்ணீர் போல குழந்தைகளும் சூழ்நிலைக்கு ஏற்ப,
பழகும் மனிதர்களுக்கு ஏற்ப குணங்களைப் பெறுகின்றனர். குழந்தைகளின் குணங்களுக்கு முதலில் பொறுப்பேற்க
கடமைபட்டவர்கள் பெற்றோர்கள் தான். குறிப்பாக தாய்க்கு பெரும் பங்கு இருக்கிறது.
குழந்தைகள் அர்த்தம் தெரியாமலே, காரணம் புரியாமலே சில குணங்களை பிரதிபலிக்கின்றனர். கோபம், பிடிவாதம்,
சுயநலம், வெறுப்பு, கீழ்படியாமை போன்ற குணங்களை வெளிப்படுத்துகின்றனர். ஏன் அப்படி வெளிப்படுத்து
கிறார்கள் என்றால், அதற்கு காரணம் நமக்கிருப்பது போல இருக்காது. குழந்தைகள் விருப்பம் முழுமையாக நிறைவேற
இவை எல்லாம் கருவிகள் என்று நினைத்து கொள்வதுதான்.
தெருவில் கலர் கலராக பலுõன் கொண்டு வியாபாரி வருகிறார்.
"" வண்ண பலுõன் ஒருரூபா, பெரிய பலுõன் ரெண்டு ரூபா...'' என்று ஒருபலுõனை உள்ளங்கையில் தேய்த்து
விநோதமான சப்தத்தை எழுப்புகிறான்.
இதைப் பார்த்து குழந்தைகள் பலுõன் வாங்க ஆசை பட்டு, பெற்றோர்களை இம்சை படுத்தும். தெருவில் ஒருத்தர்
ஒரு குழந்தைக்கு பலுõன் வாங்கி கொடுத்து விட்டால், மற்ற குழந்தைகளும் வாங்கித்தரச் சொல்லி பிடிவாதம் பிடிக்கும்.
ஒரு பொருளைப் பிடித்திருக்கிறது என்றால் அதை அடைய பிடிவாதத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்துகிறது.
குழந்தை அடம்பிடிக்கிறதே என எண்ணி நாம் அந்தப் பொருளை வாங்கி கொடுத்தால் மகிழ்கிறது. அதன் தேவை
பூர்த்தியாகிறது.இந்த சம்பவத்தின் மூலம் குழந்தை ஒரு பொருளை நம்மிடமிருந்து பெறவேண்டுமானால் இவர்களிடம்
அடம்பிடிக்கவேண்டும், பிடிவாதம் பிடிக்கவேண்டும் என் தற்குறியாக நினைத்து கொள்கிறது.
அதே சமயம் குழந்தை பிடிவாதம் பிடித்தாலும் கூட, அந்தப் பொருளை கடைசி வரை நாம் வாங்கி கொடுக்காமல்
இருந்தால், முடிவில் அந்தக் குழந்தை பிடிவாதத்தால் இது சாத்தியமில்லை என அனுபவ ரீதியாக உணர்ந்து கொள்ளும்.
அடுத்த முறை பிடிவாதத்திற்கு பதிலாக வேறு உபாயம் உண்டா என தேடும். அதற்கும் நாம் இடம் கொடுக்காமல்
இருந்தால் நாளடைவில் குழந்தைகள் பிடிவாதக்குணத்தையும், கோபத்தையும் விட்டுவிடும்.
"" ஏ, செல்லம், மாமா உனக்கு அஞ்சு பிஸ்கட் பாக்கெட் வாங்கி வந்திருக்கேன் பாரு. எல்லாம் உனக்குத்தான். நீயே
தின்னு. யாருக்கும் கொடுக்காத.'' இப்படி மாமன் சொல்லிக் கொடுக்கிறான்.
உடனே, அம்மா, ""டேய், செல்லம். எனக்கொரு பிஸ்கட் கொடுப்பா'' கெஞ்சுகிறாள்.
குழந்தை கொடுக்கலாமா? வேண்டாமா? என்று யோசிக்கிறது. இந்த சமயம் பார்த்து மாமன் "" தங்கம், யாரு கேட்டாலும்
கொடுக்காத. இது மாமா உனக்கு வாங்கிக் கொடுத்தது.'' என்று விளையாட்டாக சொல்ல, அங்கேதான் வினையாகிறது.
இப்படி கள்ளமில்லா மனதில் நாம் தான் கருத்தேற்றம் செய்கிறோம்.
இதனால் குழந்தைகள் கை நிறைய பிஸ்கட் வைத்திருந்தாலும் கூட, அதிலிருந்து ஒன்றைக் கூட பிறருக்குக் கொடுக்காது.
இது குழந்தைகள் கடைப்பிடிக்கும் சுயநலபோக்கு. இதற்கு காரணம் குழந்தைகள் இல்லை. நாம் தான் பொறுப்பேற்க
வேண்டும். ஏனென்றால் ஆடிக்கு ஒரு நாள், அமாவாசைக்கு ஒரு நாள் குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் வாங்கிக்
கொடுப்பதால், அவ்வளவையும் தானே தின்ன வேண்டும் என்று நினைத்து கொள்கிறது. அதே சமயம் தினம் தினம்
ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கி கொடுத்தால் அந்தப் பொருளின் மீது அலட்சியம் தான் தோன்றுமே தவிர, தனக்கே
வேண்டும் என்ற சுயநல போக்கு ஏற்படாது.
பொதுவாக குழந்தைகள் மீது அதிக அக்கறை, பாசம், கரிசனம் காட்டும் பெற்றோர் மற்றும்
உற்றோராலும் குழந்தைகள் தவறு செய்யும் போது, தண்டனை தரும்போது பிறர் தலையிட்டு அக்குழந்தைக்கு ஆதரவு
கரம் நீட்டும் போதும் சில குழந்தைகள் கீழ்படியாமை குணத்தை வெளிப்படுத்துகின்றனர்.
கிராமபுறத்தில் ஒரு வீட்டில் குழந்தைக்கு அனேக உறவுகள் இருக்கும்.
குழந்தை கீழே தடுமாறி விழுந்து வீல் வீல் என்று அழும் போது, அம்மா ஓடிவந்து துõக்கி, ""அச்சச்சோ, கீழே விழுந்துட்
டியா? அடிப்பட்டுட்டா... இரு சித்தாப்பாவை கூப்பிட்டு இந்த தரை அடிக்க சொல்றேன்... என்று குழந்தையின்
சித்தப்பாவை கூப்பிட்டு. "" இந்த தரை என் செல்லத்தை கீழே தள்ளி விட்டுட்டு. இந்த தரை நாலு சாத்து சாத்துங்க''
என்பாள். உடனே குழந்தைக்கு முன்பாக, சித்தப்பா குச்சியால் தரை நாலு அடி அடிக்க, குழந்தை அழுவதை நிறுத்தும்.
அதுபோல, குழந்தை எதாவது விஷமதனமோ, பிடிவாதமோ பிடித்தால் "" இத பாரு, பக்கத்து வீட்டு மீசை மாமாவ
கூப்பிடவா? மீசை மாமா வந்தா உன் காதை கடிச்சுடுவாரு. அப்பறம் உன் கண்ணை பிடிங்கி காக்காவுக்கு போட்டுடுவாரு
கூப்பிடவா?'' என்று பயம் காட்டியதும் குழந்தை யோசிக்கும்.
""என்ன சமத்தா இருக்கியா? இல்ல, மீசை மாமாவ கூப்பிடவா?''
இப்போது குழந்தை அம்மா சொல்வதை கேட்டும்.
ஒருபுறம் அக்கறை, அன்பும் மறுபுறம் கண்டிப்பும், தண்டனையும் தரும் பெற்றோர் மத்தியில் வளரும் குழந்தைகள்
மரியாதை கலந்த பயத்துடன் இருப்பார்கள்.
அடுத்ததாக, சிறுகுழந்தைகள் மற்றும் பெற்றோரின் பல நடத்தையின் விளைவுகள் பற்றி புரிந்து கொள்வோம்:
"பிரம்பை கையாளாதவன் தன் குழந்தையை கெடுக்கிறான்' என்ற பழமொழிக்கேற்ப, குழந்தைகளை எந்த சமயத்திலும்
சுதந்திரமாக பேசவோ, நடக்கவோ பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை. அதே சமயம் குழந்தைகள் தவறாக நடந்து
கொண்டால் தண்டனை அளிக்கிறார்கள். இருந்தாலும், குழந்தைகள் ஒழுக்கமாக நடந்துகொள்ளும் போது பாராட்டும்,
பரிசும் அளிக்கின்றனர். இது ஒருவகை பெற்றோர் அணுகுமுறை.
"இப்படி இருக்கவேண்டும்; இப்படி செய்ய வேண்டும்; இப்படி பேச வேண்டும் என்று சொல்லிக்கொடுத்து, அவ்வாறு
தாங்களும் நடந்து கொண்டு, குழந்தைகள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்று கண்காணிக்கின்றனர். ஒருவேளை
குழந்தைகள் தவறாக நடந்தால் பிற்பாடு கொஞ்சம் அணுகுமுறையை மாற்றிக்கொள்கின்றனர். இது ஒரு வகை
பெற்றோரின் அணுகுமுறை.
குழந்தைகளுக்கே உரித்த தனித்தன்மையை மதிக்கின்றனர். குழந்தைகள் தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்கின்றனர்.
தவறுகளை அனுமதித்து அதை உணரசெய்கின்றனர்.குழந்தைகள் ஒழுக்கமாக நடந்துகொள்ளும் போது பாராட்டும்,
பரிசும் அளிக்கின்றனர். இது ஒருவகை பெற்றோர் அணுகுமுறை.
மேற்கண்ட மூன்று அணுகுமுறை கொண்ட பெற்றோரின் குழந்தைகள் எவ்வாறு இருக்கின்றனர்?
முதல் அணுகு முறையில் வளரும் குழந்தைகள் சுயநலவாதிகளாகவும், பிறரை மதிக்காமலும், சண்டை, சச்சரவு
செய்பவர்களாக வளருகின்றனர்.
இரண்டாவது அணுகுமுறையில் வளரும் குழந்தைகள் வெளிப்படையாக கீழ்படிபவர்களாகவும், ஒத்த இயல்பு
கொண்டவர்களிடம் பழகும் போது, சண்டையிடுபவர்களாக வளருகின்றனர்.
மூன்றாவது அணுகு முறையில் வளரும் குழந்தைகள் ஒழுக்கமுள்ளவர்களும், எது தவறு என்பதை உணர்ந்தவர்களாகவும்,
மற்றவர்கள் பார்வையில் மனித நேயம் உடையவர்களாகவும் வளருகின்றனர்.
ஆக, நாம் குழந்தைகளை அதிகம் கண்டிக்கும் தோறும் குழந்தையானது எதிர்மறை மற்றும் பிடிவாத குணம் உடையதாக
வளருவதால் நாம் மூன்றாவது அணுகு முறையை கடைப்பிடிக்கும் பெற்றோர் அணுகு முறையை குழந்தைகளிடம்
காட்டுவோம். ஏனென்றால், எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. அவர்கள் நல்லவர்கள்
ஆவதும், தீயவர்கள் ஆவதும் நம் வளர்ப்பினிலே!

...................................................................................................................

குழந்தைகளை புரிந்து கொள்வோம் 5

ஆறு வயது அனுபவங்கள்....

குழந்தை வளர்ப்பு என்பது ஆடு, மாடு, கோழி போலவோ, மரம், செடி, கொடி வளர்ப்பு
போன்று அல்ல. ஆடு, மாடு, கோழி என்றால் அதற்குரிய தீனி போட்டால் போதும். மரம்,
செடி, கொடி என்றால் உரம், தண்ணீர் விட்டால் போதும் அவை வளர்ந்து விடும். ஆனால்,
குழந்தைகளை வளர்ப்பது என்பது சாதாரண விஷயமில்லை.
குழந்தைகள் வாழ்நாளில் ஒரு நாள்கூட அழக்கூடாது என்றும் ஆனந்தமாக, அமோகமாக,
வளமாக வாழவேண்டும். அப்படி நினைத்து வளர்ப்பதுதான் குழந்தை வளர்ப்பாகும்.
குழந்தை பிறந்தது முதலாய் தொட்டில் அமைக்கும் முறை, பாலுõட்டும் முறை, உடையணி
விக்கும் முறை, உணவூட்டும் முறை, நடைபழக்கும் முறை, மருத்துவசோதனைகள், நோய்
தடுக்கும் முறைகள், தடுப்பூசி போடும் முறை,படிக்க வைக்கும் முறை, நற்பண்புகள் வளர்க்கும்
முறை, திருமணம் செய்விக்கும் முறை என ஆயிரத்தெட்டு விஷயங்கள் இருக்கின்றன.
இதை எல்லாம் பார்த்து, பார்த்து வளர்ப்பவர்களுக்குப் பெயர்தான் பெற்றோர்.
குழந்தைகள் ஆறு வயதை எட்டும் வரை அவர்கள் எடுப்பார் கை பிள்ளையாக தான் இருப்
பார்கள். சுய புத்தி என்று குறிப்பிடும்படி ஏதும் இருக்காது. ஆனால், ஆறு வயதுக்குப் பிறகு
அவர்கள் வெளி உலகை கவனிக்கத் தொடங்குவார்கள். தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது
என்பதை அறிய ஆவலாக இருப்பார்கள். சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். இதுவரை
அம்மாவையே சுற்றி சுற்றி வந்தவர்கள் கொஞ்சம் பெற்றோர்களை விட்டு விலகி இருக்க ஆசைப்
படுவார்கள்.
இந்த தருணத்தில் குழந்தைகள் நம் கூடவே இருக்க வேண்டும். எங்கும் வெளியே செல்லக்
கூடாது. நம் சொல்லாமல் எதையும் செய்யக் கூடாது என்று கட்டுப்பாடோ, குறுக்கீடோ
செய்தோமானால், குழந்தைகள் நம்மை வெறுக்கத் தொடங்கி விடும். அதே சமயம் எக்கேடோ
கெட்டுப் போ என்று விட்டேந்தியாகவும் நாம் இருக்கக்கூடாது.
ஆறு வயது பருவம் என்பது குழந்தைகளைப் புரட்டிப் போடும் பருவம். அவர்களுள் பல
மாற்றங்கள் நிகழத்தொடங்கும் காலமாகும்.
மற்றக் குழந்தைகள் சொல்வதையும், செய்வதையும் அவர்கள் கூர்ந்து கவனிப்பார்கள். இதுவரை
அப்பா, அம்மாவின் நடை, உடை, பாவனைகளை கவனித்து வந்தவர்கள் இப்போது, அவற்றில்
எது பிடித்ததோ அதை மட்டுமே ஏற்று கொள்வார்கள்.
முன்பு யார் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாலும், கொஞ்சினாலும் ரசித்தவர்கள் இப்போது
யாராவது அப்படி நடந்து கொண்டால் அதை வெறுக்கத் துணிவார்கள். அடுத்ததாக, ஆண்
குழந்தைகள் ஆண்குழந்தைகளோடும், பெண் குழந்தைகள் குழந்தைகளோடும் இருக்கவும்,
விளையாடவும் விரும்புவார்கள்.
இந்த வயதில் அவர்களின் மூளை குறுகுறுப்பாக இருக்கும். எதையும் எடுத்து ஆராய்தல்,
வரைதல், கணக்குப் போடுதல், பாடுதல், ஆடுதல், மெஷின்களை கழற்றிப் போடுதல், பெரிய
வர்கள் எதையாவது செய்யும் போது, அதை கவனித்த குழந்தைகள் பின்னர் அதே போல
செய்து பார்ப்பார்கள். இந்த தருணத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளின் கவனத்தை கூர்ந்து
கவனித்து ,அதை ஊக்கப்படுத்தினால் அவர்கள் மகிழ்வார்கள். பிற்காலத்தில் அந்த துறையில்
சிறந்த வல்லுனராகவும் அவர்கள் முன்னேற அது ஏணிப்படியாக உதவக்கூடும்.
அடுத்ததாக, இந்த வயதில் வெளித்தோற்றத்தில் பெற்றோர்களை அதிகம் தேடுவதில்லை.
ஆனால் உள்ளுக்குள் பெற்றோர்கள் மீது அதிக அன்பை செலுத்துவார்கள். மேலும் தங்களை
அவர்கள் பெரிய மனிதர்கள் போல பாவித்துக்கொள்வார்கள். அது போல பெரியவர்களை
எப்படி மற்றவர்கள் மதிக்கிறார்களோ, அது போலவே தங்களிடமும் நடக்க வேண்டும் என்று
எதிர்ப்பார்ப்பார்கள்.
வீட்டைத் தவிர, வெளியுலகில் இருப்பவர்களிடம் தங்களுக்குப்பிடித்த மாதிரியே
வெளியில் சந்திக்கும் மனிதர்களில் தங்களுக்குப் பிடித்த விஷயங்களைக்
கொண்டுள்ளவர்களிடம் நெருங்கி பழகுவார்கள். அவர்களின் கருத்துக்களை உள்வாங்கி
கொள்வார்கள். ஒருவேளை வெளியுலக மனிதர்களைப் பிடிக்காவிட்டால் வெறுத்து விடுவார்
கள். பின்னர், யார் சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.
ஆறு வயதில் குழந்தைகள் ஓரளவு கீழ்படிவார்கள். ஓரளவு பிறர் சொல்வதை கேட்பார்கள்.
பல் தேய்க்க, குளிக்க, உடை போட்டுக்கொள்ள, உட்கார்ந்து சாப்பிட, தலைவாரிக்கொள்ள
என சின்ன சின்ன விஷயங்களை நாம் சொல்ல ஆர்வமாக செய்வார்கள்.
இந்த வயதில் சில குழந்தைகள் தங்கள் பொருள்களை, விளையாட்டுச் சாமான்களை
பத்திரமாகவும், சுத்தமாகவும் வைத்துக்கொள்ள விரும்புவார்கள்.
இந்த ஆறு வயதில் இருக்கும் குழந்தைகளிடம் பெற்றோர் அணுகு முறை மிக கவனமாக
கையாளப்படவேண்டும். குழந்தைகளை அதிகம் துன்புறும்படி அடிக்கக்கூடாது. அவர்கள்
பதறி பயப்படும்படி அதட்டக்கூடாது. இதை செய்! அதை செய் என்று அதிகார தோரணையில்
கட்டளையிடக்கூடாது. அதே சமயம் குழந்தைகளை அதிகமாக கொஞ்சக்கூடாது. அதே
சமயம் கோபிக்கவோ, வெறுக்கவோ கூடாது. அவர்கள் செய்யும் தவறுகளை பக்குவமாக
சுட்டிக்காட்டி, அவர்களை உணரச்செய்து திருத்த வேண்டும். அதே சமயம் குழந்தைகள் நல்ல
முறையில் நடந்து கொண்டால் அந்த தருணத்திலே பாராட்டி, சின்ன சின்ன பரிசுகள் தந்து,
குழந்தைகளைப் பொறுப்புள்ளவராக வளர ஊக்கப்படுத்த வேண்டும்.
கடைசியாக இந்தப் பருவத்தில் எதையும் பார்த்து தெரிந்து கொண்டு செய்யும் வேகம் இருப்ப
தால் குழந்தைகளுக்கு சினிமா, டி.வி., போன்றவற்றில் இடம் பெயரும் கொடூரக்காட்சிகளை
பார்க்க வைக்கக் கூடாது. பிறரை துன்புறுத்துவது, அடிப்பது, கொலை செய்வது, திருடுவது,
பொய் சொல்லுவது போன்ற மனதைக் கெடுக்கும் காட்சிகளை அவர்கள் பார்க்காமல்
இருக்கும் படி நாம் கவனித்துக் கொள்ள வேண்டும்.
மேலும் இந்த ஆறு வயது பருவம் என்பது மென்மையான பருவம் ஆகும். இந்த
பருவத்தில் நாம் கற்பிப்பது எதுவும் பசு மரத்தாணி போல பதியும் என்பதால் இந்த
வயதில் நல்ல பழக்கங்கள், பண்புகள், நாட்டுப் பற்று, மொழிப்பற்று, தர்ம சிந்தனை,
நாட்டுக்குழைத்த உத்தமர்கள் வாழ்க்கை வரலாறு, ஆன்மிக பெரியவர்கள் வரலாறு
போன்றவற்றை அவர்கள் அறிய செய்தால் வருங்காலத்தில் குழந்தைகள் உத்தமர்களாக
திகழ்வார்கள் என்பது திண்ணம்!

..........................................................................................